<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Tamil Nadu News Today | சமீபத்திய தமிழ்நாடு செய்திகள் Tamil Nadu Latest News, தமிழ்நாடு செய்திகள் Photos and videos in Tamil</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/tamil-nadu/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu</link>
 <description>Tamil Nadu News (தமிழ் செய்திகள்) - Read all the latest news on Tamil Nadu Politics, National, World, Business, Lifestyle, Health and more at tv9tamilnews.com. இல் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, தேசிய, உலகம், வணிகம், வாழ்க்கை முறை மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகளை தமிழில் பெறுங்கள்</description><lastBuildDate>Wed, 29 Apr 2026 20:56:10 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-tamil-nadu-assembly-election-exit-poll-results-2026-75177.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 20:56:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-tamil-nadu-assembly-election-exit-poll-results-2026-75177.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Tamil Nadu Assembly Election Exit Poll Results 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெரும். எவ்வளவு வாக்கு சதவீதம் பெறும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tvk-elections-exit-poll-result.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-vijay-visiting-shirdi-today-plans-for-a-series-of-spiritual-journeys-ahead-of-tamilnadu-election-results-74992.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> பல்வேறு அமைப்புகள் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த முடிவுகள் அனைத்தும் இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) வெளியிடப்பட்டது. இதில், தமிழக அரசியல் களத்துக்கு புதிய வரவான நடிகர் விஜயின் <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-to-hold-important-meeting-with-candidated-regarding-vote-counting-on-4th-may-75108.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றிக் கழகம்</a> எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்த கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தமிழக வெற்றிக் கழகம் சுமார் 4 முதல் 40 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்த முழு விவரத்தை பார்க்கலாம். இதில், சாணக்யா ஸ்டாட்டடிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றி கழகம் 13 முதல் 18 தொகுதிகளிலும், பீப்பிள்ஸ் பல்ஸ் - 18 முதல் 24 தொகுதிகளிலும், என். டி. டி. வி. பீப்பிள்ஸ் பல்ஸ் - 18 முதல் 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
<h3>4 முதல் 40 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு</h3>
இதே போல, மேட்ரிஸ் - 10 முதல் 12 தொகுதிகளிலும், ரிபப்ளிக் பி மார்க் - 16 முதல் 26 தொகுதிகளிலும், அக்னி நியூ சர்வீஸ் - 1 தொகுதியிலும், பீப்புள் இன்சைட் - 30 முதல் 40 தொகுதிகளிலும், பீப்புள் பல்ஸ் 18 முதல் 24 தொகுதிகளிலும், ஜேவிசி டைம்ஸ் நவ் - 8 முதல் 15 தொகுதிகளிலும், வோட் வைப் - 4 முதல் 10 தொகுதிகளிலும், சி.என்.என்.நியூஸ் 18 - 4 முதல் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த விஜய், தனது பெயரிலான மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி கடந்த 2024- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கினார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/vote-counting-training-camp-was-held-for-1000-government-employees-from-234-constituencies-in-chennai-75067.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை… 1,000 அரசு ஊழியர்களுக்குத் தீவிர பயிற்சி!</a>
<h3>சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்த தவெக</h3>
அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்கு என கூறிய விஜய் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டுள்ளது. அத்துடன், இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், விஜய் முதல்வராக வருவார் என்றும் அந்தக் கட்சியினர் கூறி வருகின்றனர். அத்துடன், சுமார் 40 சதவீதம் வாக்கு வங்கியை தமிழக வெற்றிக் கழகம் பெரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
<h3>தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை</h3>
தற்போது, வெளியான கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் குறைந்தது 4 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 40 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-election-results-pay-attention-to-your-childrens-emotional-state-a-crucial-warning-for-parents-74979.html" target="_blank" rel="noopener">தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-elections-2026-exit-poll-results-on-naam-tamilar-party-how-much-vote-percentage-it-will-get-75183.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 20:52:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-elections-2026-exit-poll-results-on-naam-tamilar-party-how-much-vote-percentage-it-will-get-75183.html</guid>
		            
			

    	<description><![CDATA[NTK Exit Poll Results 2026: இந்த கருத்துக்கணிப்புகளின் படி, தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 6 இடங்களில் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/seeman-ntk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?" /></figure><p data-start="0" data-end="166"><strong>ஏப்ரல் 29, 2026:</strong> தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதில் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திமுக</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">அதிமுக</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">நாம் தமிழர் கட்சி</span></span> மற்றும் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">தமிழக வெற்றிக் கழகம்</span></span> ஆகியவை அடங்கும். தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்தித்துள்ளது. நான்கு முனைப் போட்டி இருந்தாலும், பிரதான போட்டி திமுக மற்றும் அதிமுக இடையேதான் உள்ளது.</p>
<p data-start="558" data-end="857">தமிழ்நாடு, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">புதுச்சேரி</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">அசாம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">மேற்குவங்கம்</span></span> மற்றும் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">கேரளம்</span></span> உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.</p>

<h3 data-start="558" data-end="857">நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு எவ்வளவு?</h3>
<p data-start="859" data-end="981">இந்த கருத்துக்கணிப்புகளின் படி, தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 6 இடங்களில் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.</p>
<p data-start="1104" data-end="1359"><span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">சீமான்</span></span> தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தொடங்கியதிலிருந்து இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வருகிறது. கடந்த தேர்தலில், இந்தக் கட்சி சுமார் 8% வரை வாக்கு வங்கியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p data-start="1361" data-end="1536">ஆனால், இந்த தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. சுமார் 4 முதல் 5% வரை மட்டுமே வாக்குகள் கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.</p>
<p data-start="1361" data-end="1536">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/assembly-elections-2026-tv9-exit-poll-results-for-puducherry-west-bengal-kerala-assam-and-tamil-nadu-who-has-the-high-chance-of-winning-75129.html">நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்.. வெற்றி யாருக்கு? வெளியான கருத்து கணிப்பு..</a></p>

<h3 data-start="1361" data-end="1536">எத்தனை இடங்களில் வெற்றி பெரும்?</h3>
<p data-start="1538" data-end="1635">அதே நேரத்தில், அதிகபட்சமாக 6 இடங்கள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.</p>

<ul data-start="1637" data-end="1801">
 	<li data-section-id="dgfk4q" data-start="1637" data-end="1680"><strong data-start="1639" data-end="1660">People’s Insight:</strong> 0 முதல் 4 இடங்கள்</li>
 	<li data-section-id="alz8hm" data-start="1681" data-end="1725"><strong data-start="1683" data-end="1705">PMARQ:</strong> 1 முதல் 6 இடங்கள்</li>
 	<li data-section-id="opcesc" data-start="1726" data-end="1759"><strong data-start="1728" data-end="1739">Matrize:</strong> 0 முதல் 6 இடங்கள்</li>
 	<li data-section-id="1qx4bar" data-start="1760" data-end="1801"><strong data-start="1762" data-end="1781">People’s Pulse:</strong> 2 முதல் 6 இடங்கள்</li>
</ul>
<p data-start="1803" data-end="1979">கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு, இந்த தேர்தலில் சில இடங்களில் வெற்றி கிடைத்தாலும், வாக்கு சதவீதம் கணிசமாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p data-start="1803" data-end="1979">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-elections-2026-tv9-exit-poll-results-on-dmk-aiadmk-tvk-inc-bjp-tvk-75116.html">தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!</a></p>
<p data-start="1981" data-end="2104" data-is-last-node="" data-is-only-node="">இதற்கு முக்கிய காரணமாக <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">தமிழக வெற்றிக் கழகம்</span></span> வருகை கருதப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-elections-2026-tv9-exit-poll-results-will-admk-capture-throne-or-become-opposition-party-75160.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 20:31:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-elections-2026-tv9-exit-poll-results-will-admk-capture-throne-or-become-opposition-party-75160.html</guid>
		            
			

    	<description><![CDATA[ADMK Assembly Election Exit Poll Result: தமிழகத்தைப் பொறுத்தவரையில், மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், சில கருத்துக்கணிப்புகளில் மட்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு சுமார் 50% அளவில் இருக்கலாம் என சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/eps-pol-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?" /></figure><div class="flex h-svh w-screen flex-col">
<div class="relative z-0 flex min-h-0 w-full flex-1">
<div class="relative flex min-h-0 w-full flex-1">
<div class="@container/main relative flex min-w-0 flex-1 flex-col -translate-y-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)] pt-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)]">
<div class="@w-sm/main:[scrollbar-gutter:var(--stage-scroll-gutter)] touch:[scrollbar-width:none] group/scroll-root relative flex min-h-0 min-w-0 flex-1 flex-col [scrollbar-gutter:stable] not-print:overflow-x-clip not-print:overflow-y-auto group-data-stream-active/scroll-root:[overflow-anchor:none] scroll-pt-(--header-height) [--sticky-padding-top:var(--header-height)] [--sticky-padding-bottom:0px] [--scroll-root-safe-area-inset-top:calc(var(--sticky-padding-top)+env(safe-area-inset-top,0px))] [--scroll-root-safe-area-inset-bottom:calc(var(--sticky-padding-bottom)+var(--screen-keyboard-height,0px)+env(safe-area-inset-bottom,0px))] [--scroll-root-safe-area-height:calc(100lvh-var(--scroll-root-safe-area-inset-top)-var(--scroll-root-safe-area-inset-bottom))] has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:[--sticky-padding-top:0px] has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:[--sticky-padding-top:0px]" data-scroll-root="" data-scroll-from-top="">

<strong>ஏப்ரல் 29, 2026:</strong> 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நிறைவடைந்தது. இந்த நிலையில், வருகிற மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மேற்குவங்கத்தின் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில், மாலை 6:30 மணி முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
<h3>மீண்டும் ஆட்சி அமைக்குமா அதிமுக?</h3>
தமிழகத்தைப் பொறுத்தவரையில், மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், சில கருத்துக்கணிப்புகளில் மட்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் இறங்கியிருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகள் பெற்றிருப்பதாகவும், சுமார் 10 முதல் 30 இடங்கள் வரை வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/dmk-tamil-nadu-assembly-elections-exit-poll-result-2026-75168.html">169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!</a>

மேலும், அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு சுமார் 50% அளவில் இருக்கலாம் என சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், அதிமுக 60 முதல் 140 இடங்கள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
<ul>
 	<li>People’s Insight: அதிமுக – 60 முதல் 70 இடங்கள்</li>
 	<li>Axis My India: அதிமுக – 22 முதல் 32 இடங்கள்</li>
 	<li>PMARQ: அதிமுக – 65 முதல் 85 இடங்கள்</li>
 	<li>MATRIZE: அதிமுக – 87 முதல் 110 இடங்கள்</li>
 	<li>Vote Vibe: அதிமுக – 114 முதல் 124 இடங்கள்</li>
 	<li>JVC: அதிமுக – 128 முதல் 147 இடங்கள் (ஆட்சி அமைக்கும் வாய்ப்பு)</li>
 	<li>PEOPLE'S PULSE : அதிமுக – 65 முதல் 80 இடங்கள்</li>
</ul>
இந்த கணிப்புகளின் அடிப்படையில், சில இடங்களில் அதிமுக மீண்டும் எதிர்க்கட்சியாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், Vote Vibe மற்றும் JVC போன்ற சில நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளில் அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மே 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில்தான் மக்கள் யாரை தேர்வு செய்துள்ளனர், அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெளிவாக தெரியும்.
<div id="thread" class="group/thread flex flex-col min-h-full">
<div class="composer-parent flex flex-1 flex-col focus-visible:outline-0" role="presentation">
<div class="relative basis-auto flex-col -mb-(--composer-overlap-px) pb-(--composer-overlap-px) [--composer-overlap-px:28px] grow flex">
<div class="flex flex-col text-sm"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:16edbbbc-c3e7-439c-b305-7b158c88b0ef-4" data-testid="conversation-turn-10" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="f75cc618-887d-4b99-8885-4cba5d37186a" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="1843" data-end="2075" data-is-last-node="" data-is-only-node=""></p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section></div>
</div>
</div>
</div>
&nbsp;

</div>
</div>
</div>
</div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>DMK Exit Poll Results: 169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/dmk-tamil-nadu-assembly-elections-exit-poll-result-2026-75168.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 20:11:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/dmk-tamil-nadu-assembly-elections-exit-poll-result-2026-75168.html</guid>
		            
			

    	<description><![CDATA[DMK Tamil Nadu Assembly Election Exit Poll Results 2026 : தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்களிடம் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/dmk-elections-exit-poll-result.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="DMK Exit Poll Results: 169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/no-leave-for-tamil-nadu-police-ahead-of-vote-counting-says-dgp-74984.html">தமிழகத்தில்</a> விறு விறுப்பாக நடந்த முடிந்த ச<a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-vote-counting-preparations-ias-officers-to-arrive-in-tamil-nadu-on-may-2nd-75032.html" target="_blank" rel="noopener">ட்டமன்ற தேர்தலில்</a> எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பாக வாக்களித்த பின்னர் வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) வெளியிட்டுள்ளன. இதில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், மு. க. ஸ்டாலின் 2- ஆவது முறையாக மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் அடிப்படையில் திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை பார்க்கலாம். இதில், சாணக்யா ஸ்டாட்டடிஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவில் திமுக கூட்டணி - 145 முதல் 160 தொகுதிகளிலும், பீப்பிள்ஸ் பல்ஸ் - 125 முதல் 145 தொகுதிகளிலும், என். டி. டி. வி. பீப்பிள்ஸ் பல்ஸ் - 125 முதல் 145 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
<h3>திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகள் வரை</h3>
இதே போல, மேட்ரிக்ஸ் நிறுவனம் - 122 முதல் 132 தொகுதிகளிலும், ரிபப்ளிக் பி மார்க் - 125 முதல் 145 தொகுதிகளிலும், அக்னி நியூஸ் சர்வீஸ் - 169 தொகுதிகளிலும், பீப்புள் இன்சைட் - 120 முதல் 140 தொகுதிகளிலும், பீப்புள் பல்ஸ் - 125 முதல் 145 தொகுதிகளிலும், ஜே பி சி டைம்ஸ் நவ் - 75 முதல் 95 தொகுதிகளிலும், வோட்டு வைப் - 103 முதல் 113 தொகுதிகளிலும், சி.என்.என்.நியூஸ் 18 - 103 முதல் 113 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-transfers-senthil-balaji-case-to-cbi-over-alleged-power-transformer-scam-75026.html" target="_blank" rel="noopener">செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு</a>
<h3>10 தொகுதிகள் கூடுதலாக திமுக கூட்டணி வெற்றி பெறும்</h3>
தற்போது, வெளியான கருத்துக்கணிப்புகளில் அதிகபட்சமாக 103 முதல் 169 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் திமுக மற்றும் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் 18 இடங்களிலும், பிற கூட்டணி கட்சிகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
<h3>திமுக கூட்டணி 55.4 சதவீதம் வாக்கு வங்கி பெற வாய்ப்பு</h3>
இதில், திமுக கூட்டணி 45.4 சதவீதமும், திமுக மட்டும் 38 சதவீதமும் வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது, வெளியான கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக கூட்டணி கூடுதலாக 10 சதவீதம் வாக்கு வங்கி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 55.4 சதவீத வாக்கு வங்கி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால், தமிழகத்தில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-to-hold-important-meeting-with-candidated-regarding-vote-counting-on-4th-may-75108.html" target="_blank" rel="noopener">தவெக வேட்பாளர்களுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை.. பேசப்படும் விஷயங்கள் என்ன?</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Election Exit Poll Result: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-elections-2026-tv9-exit-poll-results-on-dmk-aiadmk-tvk-inc-bjp-tvk-75116.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 18:37:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-elections-2026-tv9-exit-poll-results-on-dmk-aiadmk-tvk-inc-bjp-tvk-75116.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Assembly Election Exit Poll Results 2026 : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/who-is-the-next-chief-minister-of-tamil-nadu.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Election Exit Poll Result: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!" /></figure>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என 4 முனை போட்டி நிலவியது. 234 தொகுதிகளிலும் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) எண்ணப்பட உள்ளன. இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்ப்பு அனைத்து மக்கள் மனதிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னரும் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கமாகும்.
<h3>வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு</h3>
அதன்படி, தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இதனால், தேர்தல் முடிவடைந்து சுமார் 5 நாள்கள் ஆகியும் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) வெளியானது. இதில்,

<strong>சாணக்யா ஸ்டாட்டடிஸ்:</strong>
<ul>
 	<li>திமுக கூட்டணி 145 முதல் 160 தொகுதிகள்.</li>
 	<li>அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றி கழகம் 13 முதல் 18 தொகுதிகள்.</li>
 	<li>பிற கட்சிகள் 5 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளன.</li>
</ul>
<strong>பீப்பிள்ஸ் பல்ஸ்:</strong>
<ul>
 	<li>திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள்.</li>
 	<li>அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 தொகுதிகள்.</li>
 	<li>பிற கட்சிகள் 2 முதல் 6 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.</li>
</ul>
<strong>என். டி. டி. வி. பீப்பிள்ஸ் பல்ஸ்:</strong>
<ul>
 	<li>திமுக 125 முதல் 145 தொகுதிகள்.</li>
 	<li>அதிமுக 65 முதல் 80 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றி கழகம் 18 முதல் 24 தொகுதிகள்.</li>
 	<li>பிற கட்சிகள் 2 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு.</li>
</ul>
<strong>மேட்ரிஸ்:</strong>
<ul>
 	<li>திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகள்.</li>
 	<li>அதிமுக 87 முதல் 110 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றிக் கழகம் 10 முதல் 12 தொகுதிகள்.</li>
 	<li>பிற கட்சிகள் 0 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு.</li>
</ul>
<strong>ரிபப்ளிக் பி மார்க்:</strong>
<ul>
 	<li>திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள்.</li>
 	<li>அதிமுக கூட்டணி 65 முதல் 85 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றிக் கழகம் 16 முதல் 26 தொகுதிகள்.</li>
 	<li>பிற கட்சிகள் 1 முதல் 6 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு.</li>
</ul>
<strong>அக்னி நியூஸ் சர்வீஸ்:</strong>
<ul>
 	<li>திமுக கூட்டணி 169 தொகுதிகள்.</li>
 	<li>அதிமுக கூட்டணி 64 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றிக் கழகம் 1 தொகுதி.</li>
 	<li>பிற கட்சிகள் 0 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு.</li>
</ul>
<strong>பீப்புள் இன்சைட்:</strong>
<ul>
 	<li>திமுக கூட்டணி 120 முதல் 140 தொகுதிகள்.</li>
 	<li>அதிமுக கூட்டணி 60 முதல் 70 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றிக் கழகம் 30 முதல் 40 தொகுதிகள்.</li>
 	<li>பிற கட்சிகள் 0 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.</li>
</ul>
<strong>பீப்புள் பல்ஸ்:</strong>
<ul>
 	<li>திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள்.</li>
 	<li>திமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றி கழகம் 18 முதல் 24 தொகுதிகள்.</li>
 	<li>பிற கட்சிகள் 0 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.</li>
</ul>
<strong>ஜேவிசி டைம்ஸ் நவ்:</strong>
<ul>
 	<li>அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகள்.</li>
 	<li>திமுக கூட்டணி 75 முதல் 95 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 15 தொகுதிகள்.</li>
 	<li>பிற கட்சிகள் 0 தொகுதிகள்.</li>
</ul>
<strong>வோட் வைப்:</strong>
<ul>
 	<li>திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகள்.</li>
 	<li>அதிமுக கூட்டணி 114 முதல் 124 தொகுதிகள்.</li>
 	<li>தமிழக வெற்றி கழகம் 4 முதல் 10 தொகுதிகள்.</li>
 	<li>பிற கட்சிகள் 0 தொகுதிகள்.</li>
</ul>
<strong>சி.என்.என்.நியூஸ் 18:</strong>
<ul>
 	<li>அதிமுக கூட்டணி 114 முதல் 124.</li>
 	<li>திமுக கூட்டணி 103 முதல் 113.</li>
 	<li>தமிழக வெற்றி கழகம் 4 முதல் 10.</li>
 	<li>பிற கட்சிகள் 0.</li>
</ul>
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதுடன், மு.க.ஸ்டாலின் 2- ஆவது முறையாக ஆட்சி அரியணையில் ஏற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வரலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-has-issued-a-new-order-regarding-the-import-of-4-liters-of-500-ml-liquor-from-puducherry-to-tamil-nadu-75123.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 17:32:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-has-issued-a-new-order-regarding-the-import-of-4-liters-of-500-ml-liquor-from-puducherry-to-tamil-nadu-75123.html</guid>
		            
			

    	<description><![CDATA[Madras High Court : புதுச்சேரி  மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு 4.5 லிட்டர் மது கொண்டு வருவது தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/high-court-has-issued-order-liquor-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வரலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/lives-of-youth-ruined-by-caste-selvaperunthagai-condemns-the-death-of-pudukkottai-hariharan-75048.html" target="_blank" rel="noopener">சென்னை</a> அருகே உள்ள மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் ஆந்திர மாநிலத்தில் இருந்து 3.4 லிட்டர் மதுவை விற்பனைக்காக கொண்டு வந்ததாகவும், அப்போது, ஏழாவூர் சோதனை சாவடியில் கும்பிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அந்த மதுவை பறிமுதல் செய்ததுடன் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தமிழக அரசாணையின் படி, 4.5 லிட்டர் மதுவை சொந்த பயன்பாட்டுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் சொந்த பயன்பாட்டுக்காக மதுவை கொண்டு வந்த காரணத்தால் எங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து இருந்த <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/lives-of-youth-ruined-by-caste-selvaperunthagai-condemns-the-death-of-pudukkottai-hariharan-75048.html" target="_blank" rel="noopener">நீதிமன்றம்</a> புலன் விசாரணைக்கு தடை விதித்திருந்தது.
<h3>எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்</h3>
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில், தமிழக அரசாணையின்படி 4.5 லிட்டர் மதுவை தனிநபர் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவு இருக்கும் நிலையில், நாங்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து 3.4 லிட்டர் மது கொண்டு வந்த காரணத்தால் எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று முறையிட்டனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-has-issued-heavy-rainfall-warning-in-tamilnadu-from-30th-april-and-also-heat-wave-warning-75079.html" target="_blank" rel="noopener">நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..</a>
<h3>பிற மாநில மதுவுக்கு தமிழத்தில் அனுமதியில்லை</h3>
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் தமிழகத்தில் தயார் செய்த மதுவை மட்டுமே 4.5 லிட்டர் தனிநபர் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும், பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரக்கூடிய மதுபானங்கள் எந்த வகையிலும் பொருந்தாது என்று தெரிவித்தார். மேலும், இதற்கான விளக்கங்களை உள்துறை செயலாளரிடம் சமர்ப்பித்திருப்பதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார். முந்தைய தீர்ப்புகளில் இந்த அம்சத்தை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டதாகவும், எனவே, இந்த விவகாரத்தில் பொருந்தாது என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
<h3>புதுச்சேரியில் இருந்து மது கொண்டு வர அனுமதியில்லை</h3>
மேலும், புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வரலாம் என்று உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்து பரவி வருவதாக சுட்டிக்காட்டினார். இந்த விளக்கங்களை கேட்ட நீதிபதி நிர்மல் குமார், தமிழகத்தில் தயார் செய்யப்பட்ட மதுபானங்களை மட்டுமே 4.5 லிட்டர் தனி நபர் பயன்பாட்டுக்காக வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்ததுடன், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து 90 மில்லி அளவு மதுபானம் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டுவர முடியும் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-to-hold-important-meeting-with-candidated-regarding-vote-counting-on-4th-may-75108.html" target="_blank" rel="noopener">தவெக வேட்பாளர்களுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை.. பேசப்படும் விஷயங்கள் என்ன?</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக வேட்பாளர்களுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை.. பேசப்படும் விஷயங்கள் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-to-hold-important-meeting-with-candidated-regarding-vote-counting-on-4th-may-75108.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 17:19:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-to-hold-important-meeting-with-candidated-regarding-vote-counting-on-4th-may-75108.html</guid>
		            
			

    	<description><![CDATA[வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுடன் கட்சி தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்குப்பதிவு மற்றும் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், வாக்குப்பதிவு நாளில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tvk-meet.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக வேட்பாளர்களுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை.. பேசப்படும் விஷயங்கள் என்ன?" /></figure><p data-start="0" data-end="158"><strong>சென்னை, ஏப்ரல் 29, 2026:</strong> தமிழக வெற்றிக் கழக தலைவர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">விஜய்</span></span>, ஏப்ரல் 30ஆம் தேதி (நாளை) தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">அதிமுக</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திமுக</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">நாம் தமிழர் கட்சி</span></span> மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.</p>

<h3 data-start="0" data-end="158">233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக:</h3>
<p data-start="467" data-end="838">இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்தித்துள்ளது. 233 தொகுதிகளில் கட்சி போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜய், <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">பெரம்பூர்</span></span> மற்றும் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திருச்சி கிழக்கு</span></span> ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். மேலும், <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">எடப்பாடி</span></span> பகுதியில் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து கட்சி அறிவிப்பு வெளியிட்டது.</p>
<p data-start="840" data-end="1152">வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுடன் கட்சி தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்குப்பதிவு மற்றும் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், வாக்குப்பதிவு நாளில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.</p>
<p data-start="1154" data-end="1415">இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக விஜய் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். குறிப்பாக, நேற்று <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திருச்செந்தூர் முருகன் கோவில்</span></span> சென்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">ஸ்ரீரடி சாய்பாபா கோவில்</span></span> சென்று தரிசனம் செய்தார்.</p>

<h3 data-start="1154" data-end="1415">நாளை தவெக வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை:</h3>
<p data-start="1417" data-end="1707">இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 30ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">சென்னை</span></span> பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் பொதுச் செயலாளர் என். ஆனந்தன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.</p>
<p data-start="1709" data-end="2049">இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மே 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை விஜய் வழங்க உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும், எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், ஒவ்வொரு வேட்பாளரும் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி இருக்க வேண்டியது போன்ற அம்சங்கள் குறித்து விளக்க உள்ளார்.</p>
<p data-start="1709" data-end="2049">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-has-issued-heavy-rainfall-warning-in-tamilnadu-from-30th-april-and-also-heat-wave-warning-75079.html">நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..</a></p>
<p data-start="2051" data-end="2244" data-is-last-node="" data-is-only-node="">மேலும், ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்பதையும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விரிவான அறிவுரைகளை வழங்க உள்ளார்.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நீலகிரிக்கு சுற்றுலா போறீங்களா? இந்த ரூட்ல போக முடியாது.. போலீசாரின் புதிய டிராப்பிக் ரூல்ஸ் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/traffic-changes-in-nilgiris-district-have-been-made-from-may-1st-police-said-75107.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 16:42:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/traffic-changes-in-nilgiris-district-have-been-made-from-may-1st-police-said-75107.html</guid>
		            
			

    	<description><![CDATA[Nilgiris Traffic Changes : நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மே 1- ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/traffic-changes-in-nilgiris.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நீலகிரிக்கு சுற்றுலா போறீங்களா? இந்த ரூட்ல போக முடியாது.. போலீசாரின் புதிய டிராப்பிக் ரூல்ஸ் இதோ!" /></figure>தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/attention-tourists-new-traffic-restrictions-in-effect-from-may-1st-in-ooty-nilgris-75009.html" target="_blank" rel="noopener">சுற்றுலா தலங்களில்</a> ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/attention-tourists-new-traffic-restrictions-in-effect-from-may-1st-in-ooty-nilgris-75009.html" target="_blank" rel="noopener">நீலகிரி மாவட்டம்</a>, ஊட்டியில் கோடைகால சீசன் தொடங்கியுள்ளது. இங்கு, பொழுதை போக்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வருகிற மே 1- ஆம் தேதி முதல் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் பைக், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் காட்டேரி சந்திப்பு பகுதியில் இருந்து சேலாஸ் மற்றும் லவ்டேல் வழியாக நீலகிரி நகரப் பகுதிக்குள் வர வேண்டும். இதே போல, மேட்டுப்பாளையத்தில் இருந்து கூடலூர் மற்றும் தெப்பக்காடு செல்லும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் லவ்டேல் சந்திப்பு மற்றும் காந்தன் முக்கோணம் வழியாக திருப்பி விடப்பட உள்ளது.
<h3>நீலகிரிக்கு சுற்றுலா வரும் வாகனங்கள்</h3>
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா வேன்கள், சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆவின் வாகன நிறுத்தும் இடம் மற்றும் அரசு கலைக் கல்லூரி மைதானங்களில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அங்கு இருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு அரசு சுற்றுலா பேருந்துகளை சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில், குறிப்பாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். குன்னூர் பர்லியார் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/food-safety-department-warns-of-license-cancellation-and-fine-for-chemically-ripened-mangoes-75041.html" target="_blank" rel="noopener">உஷார் மக்களே! ரசாயன மாம்பழங்களுக்கு இனி இடமில்லை – ரூ.5000 அபராதத்துடன் உரிமம் ரத்து!</a>
<h3>அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள்</h3>
மேலும், அத்தியாவசிய பொருள்களான பால், எரிவாயு உள்ளிட்ட பொருள்களை கொண்டு வரும் வாகனங்கள் தவிர்த்து பிற கனரக வாகனங்கள் அனைத்தும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊட்டி நகருக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்ட காரணத்தால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்துள்ளனர்.
<h3>நிலகிரியில் குவிந்துள்ள சுற்றுலா வாகனங்கள்</h3>
இதனால், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், அவர்களது சுற்றுலா வாகனங்களும் சாலைகளில் சென்று வருவதும், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் வைப்பதற்காக மே 1- ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-has-issued-heavy-rainfall-warning-in-tamilnadu-from-30th-april-and-also-heat-wave-warning-75079.html" target="_blank" rel="noopener">நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா? பெண்கள் மத்தியில் எழும் கேள்வி&#8230; பதில் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/question-has-arisen-whether-women-in-tamil-nadu-will-be-given-the-kalaignar-magalir-urimai-thittam-in-may-75085.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 16:12:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/question-has-arisen-whether-women-in-tamil-nadu-will-be-given-the-kalaignar-magalir-urimai-thittam-in-may-75085.html</guid>
		            
			

    	<description><![CDATA[kalaignar Magalir Urimai Thittam: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தாலும், புதிய அரசு ஆட்சி அமைக்காததாலும் மே மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/kalaignar-magalir-urimai-thittam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா? பெண்கள் மத்தியில் எழும் கேள்வி&#8230; பதில் இதோ!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-temperature-crosses-106-degree-farenheit-and-temperature-likely-to-increase-in-upcoming-days-chennai-imd-report-74827.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், தமிழகத்தில் 1.31 கோடி பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் கீழ், 1.14 கோடியாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது புதிதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் அட்டை பெற்றவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் உள்ளிட்டோர் என 1.31 கோடி பேராக அதிகரித்து மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் <a href="https://www.tv9tamilnews.com/elections/ahead-of-2026-assembly-election-vote-counting-special-training-given-to-election-officials-at-chennai-74849.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்</a> தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காரணத்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாத நிலை இருந்தது.
<h3>முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட ரூ.5 ஆயிரம் உதவித் தொகை</h3>
இதனால், தமிழக அரசு பிப்ரவரி மாதம் அனைத்து மகளிர் வங்கி கணக்கிலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமை தொகையாக ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 அனைத்து மகளிர் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிந்து வருகிற மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கப் போகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-mk-stalin-during-his-vacation-at-kodaikanal-rides-bicycle-and-takes-selfie-with-public-74869.html" target="_blank" rel="noopener">கொடைக்கானலில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிச்சென்ற முதல்வர் ஸ்டாலின்.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த பொது மக்கள்..</a>
<h3>மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா</h3>
அத்துடன், மே மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா என்ற கேள்வியும், சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் வருகிற மே 6- ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, அதன் பின்னரே மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அதிலும், திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மே 2- ஆவது வாரத்தில் மகளிர் உரிமைத்தொகை வழக்கம் போல விநியோகிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
<h3>புதிய கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில்</h3>
ஆனால், வேறு கட்சிகள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் புதிய அரசு அமைந்த பிறகு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். இதனால், புதிய அரசு அமைந்தால் அவர்களின் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெற்று, அதற்கான நிதி தாமதமாகவே விடுவிக்கப்படும் நிலை உள்ளது. ஒரு வேளை திமுக மீண்டும் பொறுப்பேற்றாலும் உடனடியாக மே மாதம் ரூ.2,000 வழங்கப்படாது. ஏற்கனவே, வழங்கப்படுவது போன்று மே மாதம் ரூ.1,000 வழங்கப்படும். அதன் பின்னரே மேலும், ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-election-results-pay-attention-to-your-childrens-emotional-state-a-crucial-warning-for-parents-74979.html" target="_blank" rel="noopener">தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-has-issued-heavy-rainfall-warning-in-tamilnadu-from-30th-april-and-also-heat-wave-warning-75079.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 16:03:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-has-issued-heavy-rainfall-warning-in-tamilnadu-from-30th-april-and-also-heat-wave-warning-75079.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Weather Update: வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக கடலோர தமிழகத்தில் சில இடங்களில் “அசௌகரியம்” (Heat discomfort) ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/wea-29.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:16edbbbc-c3e7-439c-b305-7b158c88b0ef-0" data-testid="conversation-turn-2" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="1b692984-e579-4b71-b14c-68f76328a86a" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="0" data-end="122"><strong>வானிலை நிலவரம், ஏப்ரல் 29, 2026:</strong> தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">சென்னை வானிலை ஆய்வு மையம்</span></span> தெரிவித்துள்ளது.  கிலோமீட்டர் உயரத்தில் வடபகுதி கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தென் கர்நாடகா வழியாக தமிழகம் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 29ஆம் தேதி (இன்று) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p>

<h3 data-start="0" data-end="122">எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?</h3>
<p data-start="478" data-end="877">ஏப்ரல் 30ஆம் தேதி <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">நீலகிரி மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">கோயம்புத்தூர் மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">ஈரோடு மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">சேலம் மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">தர்மபுரி மாவட்டம்</span></span> மற்றும் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">கிருஷ்ணகிரி மாவட்டம்</span></span> ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="879" data-end="1292">மே 1ஆம் தேதி <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">நீலகிரி மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">கோயம்புத்தூர் மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">ஈரோடு மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திருப்பூர் மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திண்டுக்கல் மாவட்டம்</span></span> மற்றும் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">தேனி மாவட்டம்</span></span> ஆகிய பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகலாம்.</p>
<p data-start="1294" data-end="1680">மே 2ஆம் தேதி <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">நீலகிரி மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">கோயம்புத்தூர் மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திருப்பூர் மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திண்டுக்கல் மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">தேனி மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">மதுரை மாவட்டம்</span></span>, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">சிவகங்கை மாவட்டம்</span></span> மற்றும் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">விருதுநகர் மாவட்டம்</span></span> ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.</p>
<p data-start="1682" data-end="1894">மே 3ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதற்கிடையில், தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="1682" data-end="1894">கொளுத்தும் வெயில்:</h3>
<p data-start="1896" data-end="2580">மே 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 40°C-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திருச்சி</span></span> நகரில் 40.5°C பதிவாகியுள்ளது. தொடர்ந்து <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">வேலூர்</span></span> – 39.7°C, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">மதுரை</span></span> – 39°C, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">கரூர்</span></span> – 39.2°C, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">ஈரோடு</span></span> – 39.6°C, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திருத்தணி</span></span> – 38.2°C, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திருப்பத்தூர்</span></span> – 38.6°C, <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">நாமக்கல்</span></span> – 38.3°C மற்றும் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">தர்மபுரி</span></span> – 38.7°C என பதிவாகியுள்ளது.</p>
<p data-start="2582" data-end="2714"><span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">சென்னை</span></span> நகரில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.1°C மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.2°C பதிவாகியுள்ளது.</p>

<h3 data-start="2582" data-end="2714">அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை:</h3>
<p data-start="2716" data-end="2959">வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக கடலோர தமிழகத்தில் சில இடங்களில் “அசௌகரியம்” (Heat discomfort) ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="2961" data-end="3248" data-is-last-node="" data-is-only-node="">சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39°C அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°C அளவிலும் இருக்கக்கூடும். குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக ஈரப்பதத்தால் அசௌகரியமான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை&#8230; 1,000 அரசு ஊழியர்களுக்குத் தீவிர பயிற்சி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/vote-counting-training-camp-was-held-for-1000-government-employees-from-234-constituencies-in-chennai-75067.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 15:36:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/vote-counting-training-camp-was-held-for-1000-government-employees-from-234-constituencies-in-chennai-75067.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vote Counting Training: தமிழகத்தில் மே 4- ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதில், ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குகள் எண்ணுவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 234 தொகுதிகளில் இருந்து சுமார் 1000 பேர் பங்கேற்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/vote-counting-training.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை&#8230; 1,000 அரசு ஊழியர்களுக்குத் தீவிர பயிற்சி!" /></figure>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக <a href="https://www.tv9tamilnews.com/elections/no-leave-for-tamil-nadu-police-ahead-of-vote-counting-says-dgp-74984.html" target="_blank" rel="noopener">சட்டமன்றத் தேர்தல்</a> நடைபெற்றது. இந்த தேர்தலில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-transfers-senthil-balaji-case-to-cbi-over-alleged-power-transformer-scam-75026.html" target="_blank" rel="noopener">திராவிட முன்னேற்ற கழக கூட்டணி</a>, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற மே 4- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 62 மையங்களில் வாக்குகள் எண்ணுவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை 4- ஆம் தேதி என்ன உள்ள நிலையில், வாக்கு எண்னும் மின்னணு இயந்திரங்களின் செயல்பாடுகள் முறையாக கையாள்வதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) நடைபெற்றது.
<h3>234 தொகுதிகளை சேர்ந்த ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பு</h3>
சென்னையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் என சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஞானவேல் என்ற ஊழியர் வாக்கு எண்ணிக்கை செயல்முறைகளை விளக்கி பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி முகாமில் சென்னை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் என்பன உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-vote-counting-preparations-ias-officers-to-arrive-in-tamil-nadu-on-may-2nd-75032.html" target="_blank" rel="noopener">வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!</a>
<h3>வாக்குகள் எண்ணுவது குறித்து பயிற்சி</h3>
இந்த பயிற்சி வகுப்பில் வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டை தொடங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வேட்பாளர்களின் முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தபால் வாக்குகள், ராணுவ வீரர்கள் வாக்குகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எப்படி எண்ண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அத்துடன் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
<h3>தேர்தல் ஆணைய அதிகாரிகள் பலர் பங்கேற்பு</h3>
தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிவஞானம், ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஸ்ரீதர், மனு வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி இருந்தனர். அதன்படி, இந்த தேர்தலில் 85.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த தேர்தல்களை விட அதிகமான வாக்கு சதவீதம் ஆகும். மே 4- ஆம் தேதி எந்த கட்சியை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது தெரிய வரும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/lives-of-youth-ruined-by-caste-selvaperunthagai-condemns-the-death-of-pudukkottai-hariharan-75048.html" target="_blank" rel="noopener">“சாதி வெறியால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கை”.. புதுக்கோட்டை ஹரிஹரன் மரணத்திற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு&#8230; மீண்டும் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. கிரிஷ் ஜோடங்கர் எய்த அம்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/girish-jodankar-says-congress-will-be-asked-to-share-power-in-the-dmk-alliance-75051.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 14:29:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/girish-jodankar-says-congress-will-be-asked-to-share-power-in-the-dmk-alliance-75051.html</guid>
		            
			

    	<description><![CDATA[Girish Jodankar Latest Pressmeet: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக தலைமையிடம் காங்கிரஸ் கட்சிக்கான உரிமைகளை கேட்டு பெறுவோம், அதாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவோம் என்று அந்தக் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிர்ஷ் ஜோடங்கள் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/rahul-and-stalin.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு&#8230; மீண்டும் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. கிரிஷ் ஜோடங்கர் எய்த அம்பு!" /></figure>தமிழகத்தில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-vijay-visiting-shirdi-today-plans-for-a-series-of-spiritual-journeys-ahead-of-tamilnadu-election-results-74992.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்</a> விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், வருகிற மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரலை உயர்த்த தொடங்கி இருக்கிறது. இது அந்த கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-election-results-pay-attention-to-your-childrens-emotional-state-a-crucial-warning-for-parents-74979.html" target="_blank" rel="noopener">தமிழக அரசியலில்</a> இனி ஒருபோதும் நடுநிலை வகிக்க காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறும் நிலையில் உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
<h3>தமிழகம் மறு சீரமைக்கப்பட வேண்டும்</h3>
நிச்சயமாக காங்கிரஸ் கட்சியும் அதன் தொண்டர்களும், உள்ளூர் தலைவர்களும், தேசிய தலைவர்களும் தமிழகம் மறு சீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். கூட்டணிகளுக்கு ஆட்சி அமைக்க சிறந்த வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில், மு. க. ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார். 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைப்பதை தடுப்பதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-transfers-senthil-balaji-case-to-cbi-over-alleged-power-transformer-scam-75026.html" target="_blank" rel="noopener">செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு</a>
<h3>காங்கிரஸ் கட்சி நடுநிலை சக்தியா இருக்காது</h3>
இதன் மூலம் வேறு ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கட்சியினர் இடையே பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முடிவுகளுக்காக நாம் அனைவரும் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ஆனால், இனி காங்கிரஸ் கட்சியால் ஒரு நடுநிலை சக்தியாக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றதும் எங்களுக்கான உரிமையை கேட்டு விடுவோம்.
<h3>காங்கிரஸ் உரிமையை கேட்டுப் பெறுவோம்</h3>
எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறோம் கட்சியை வலுப்படுத்துவதற்காக எங்களது உரிமைகளை கேட்டு பெறுவோம் என்று தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்ர் தெரிவித்தார். திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தது. இதில். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுதல் என்பன உள்ளிட்ட கருத்துக்களை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/lives-of-youth-ruined-by-caste-selvaperunthagai-condemns-the-death-of-pudukkottai-hariharan-75048.html" target="_blank" rel="noopener">“சாதி வெறியால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கை”.. புதுக்கோட்டை ஹரிஹரன் மரணத்திற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;சாதி வெறியால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கை&#8221;.. புதுக்கோட்டை ஹரிஹரன் மரணத்திற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/lives-of-youth-ruined-by-caste-selvaperunthagai-condemns-the-death-of-pudukkottai-hariharan-75048.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 14:17:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/lives-of-youth-ruined-by-caste-selvaperunthagai-condemns-the-death-of-pudukkottai-hariharan-75048.html</guid>
		            
			

    	<description><![CDATA[இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/selvaperunthagai-1-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;சாதி வெறியால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கை&#8221;.. புதுக்கோட்டை ஹரிஹரன் மரணத்திற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 29:</strong> புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் சாதி ரீதியான வன்முறையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சாதியின் பெயரால் இளைஞர்களின் எதிர்காலமும் வாழ்க்கையும் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் திருமலைராயபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் ஹரிஹரன்(20). இவரை, கடந்த 21-ம் தேதியில் இருந்து காணவில்லை என குடும்பத்தினர் தேடி வந்தனர். இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், திருமலைராயபுரம் பகுதியில் உள்ள கல் குவாரியில் சடலமாக கிடந்தது 23-ம் தேதி தெரியவந்தது. அன்றைய தினமே அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரித்து வந்தனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-mk-stalins-comments-on-tamil-nadus-double-digit-economic-growth-74814.html">பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!</a></strong>
<h3>ஹரிஹரன் இறப்பில் மர்மம்:</h3>
இந்நிலையில், இறந்த ஹரிஹரன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பெண்ணின் குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் ஹரிஹரன் இறந்திருக்கலாம் என்பதால் பெண்ணின் குடும்பத்தினரை வழக்கில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஹரிஹரினியின் சடலத்தை வாங்காமல் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஹரிஹரன் உயிரிழந்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
<h3>ஹரிஹரன் மரணம் குறித்த கோரிக்கை:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">நேற்று (28.04.2026) புதுக்கோட்டை மாவட்டம் குலத்தூர் தாலுகா நடுப்பட்டி பகுதியை சேர்ந்த விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் (20) மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடர்பு காரணமாக சமூக மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவர்…</p>
— Selvaperunthagai K (@SPK_TNCC) <a href="https://twitter.com/SPK_TNCC/status/2049366953807261849?ref_src=twsrc%5Etfw">April 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, நேற்று (28.04.2026) புதுக்கோட்டை மாவட்டம் குலத்தூர் தாலுகா நடுப்பட்டி பகுதியை சேர்ந்த விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் (20) மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடர்பு காரணமாக சமூக மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவர் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது. சாதி வேறுபாடு என்ற பெயரில் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவது, மனிதநேயத்திற்கும் சமத்துவக் கொள்கைக்கும் எதிரான கொடூரமான செயலாகும். இத்தகைய சம்பவங்கள் நாகரீக காலத்தில் தற்போதும் நடைபெறுவது நம் சமூகத்தின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது.
<h3>சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவால்:</h3>
இளைஞர்கள் மீது நடத்தப்படும் சாதிய வன்கொடுமைகள், சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-high-court-has-dismissed-the-plea-regarding-liquor-bringing-from-puducherry-and-given-explanation-regarding-government-order-74829.html">புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரும் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..</a></strong>
<h3>ஹரிஹரன் குடும்பத்திற்கு இரங்கல்:</h3>
மேலும், இவ்வாறான சாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொறுப்பு சமுதாயத்திற்கும் அரசுக்கும் உள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த ஹரிஹரனின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-vote-counting-preparations-ias-officers-to-arrive-in-tamil-nadu-on-may-2nd-75032.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 13:31:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-vote-counting-preparations-ias-officers-to-arrive-in-tamil-nadu-on-may-2nd-75032.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு பணிக்காக சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தினமான வருகிற மே 4-ந்தேதி வரை 62 மையங்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/voting-machines.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/topic/tamil-nadu-assembly-election" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான</a> வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது அனைவரும் மே 4-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை பணிகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி வெளிப்படையாக நடத்துவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் வரும் மே 2 ம் தேதி தமிழகம் வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, வெளிமாநிலங்களைச் சேர்ந்த 62 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/student-admissions-in-tamilnadu-government-schools-surge-at-breakneck-74818.html">அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!</a></strong>
<h3>234 தொகுதிகளிலும் மக்கள் திரண்டு வாக்களிப்பு:</h3>
தமிழக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடந்த இந்த வாக்குப்பதிவு முடிவில் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத வகையில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
<h3>'ஸ்டிராங் ரூமில் வாக்குப்பெட்டிகள்:</h3>
அவை அனைத்தும், அங்குள்ள 'ஸ்டிராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பு அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து அந்த அறைகளை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இடங்களுக்கு தகுந்தபடி 3, 4, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு அரணின் முதல் அடுக்கில் எந்திர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் உள்ளனர்.
<h3>62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை:</h3>
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு பணிக்காக சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தினமான வருகிற மே 4-ந்தேதி வரை 62 மையங்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும். வாக்கு எண்ணும் மையங்களுக்குள், செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-exit-poll-results-are-set-to-be-released-this-evening-74975.html">முடிவுக்கு வந்தது 5 மாநில தேர்தல் களம்.. இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!!</a></strong>
<h3>மே.4ல் வாக்கு எண்ணிக்கை:</h3>
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்காக மே 2-ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் தமிழ்நாடு வர உள்ளனர். 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் என வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மே 4ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உஷார் மக்களே! ரசாயன மாம்பழங்களுக்கு இனி இடமில்லை &#8211; ரூ.5000 அபராதத்துடன் உரிமம் ரத்து!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/food-safety-department-warns-of-license-cancellation-and-fine-for-chemically-ripened-mangoes-75041.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 13:17:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/food-safety-department-warns-of-license-cancellation-and-fine-for-chemically-ripened-mangoes-75041.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chemically Ripened Mangoes: செயற்கை முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைக்கும் வியாபாரிகளுக்கு 5,000 ரூபாய் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. அதிக லாபத்திற்காக ரசாயனம் பயன்படுத்துவதைத் தடுக்க மாநிலம் தழுவிய அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/mango-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உஷார் மக்களே! ரசாயன மாம்பழங்களுக்கு இனி இடமில்லை &#8211; ரூ.5000 அபராதத்துடன் உரிமம் ரத்து!" /></figure>தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள சந்தைகள் மற்றும் கடைகளில் தொடர் சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ரசாயனம் பயன்படுத்திப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு முதற்கட்டமாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். விதிமீறல்கள் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
<h3>ரசாயன மாம்பழங்களுக்கு முற்றுப்புள்ளி</h3>
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே சந்தைகளில் மாம்பழங்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கும். இதைப் பயன்படுத்தி, ஒருசில வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டும் நோக்கில், கார்பைடு போன்ற அபாயகரமான ரசாயனங்களைப் பயன்படுத்தி மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை தற்போது மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
<h3>கண்காணிப்பு வளையத்திற்குள் விற்பனை நிலையங்கள்</h3>
மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை அங்காடிகளில் அதிரடி சோதனைகளை மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, ரசாயனக் கற்களைப் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே மக்கள் நுகர்வுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
<h3>கடுமையான அபராதமும் உரிமம் ரத்தும்</h3>
சோதனையின் போது ரசாயனம் கலந்த பழங்கள் கண்டறியப்பட்டால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும். முதற்கட்ட நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதனை மீறித் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் வணிகர்களின் உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வியாபாரிகள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<h3>பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்</h3>
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதால் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் நீண்ட கால அளவில் தீராத உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பழங்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான வகையில் பழங்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாகப் புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் &#8211; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-transfers-senthil-balaji-case-to-cbi-over-alleged-power-transformer-scam-75026.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 11:47:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-transfers-senthil-balaji-case-to-cbi-over-alleged-power-transformer-scam-75026.html</guid>
		            
			

    	<description><![CDATA[செந்தில் பாலாஜி மின் துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு என புகார் எழுந்தது. மேலும், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/senhil-balaji-case-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் &#8211; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 29 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/proper-answers-were-given-to-cbi-on-karur-stampede-says-ex-minister-senthil-balaji-65050.html" target="_blank" rel="noopener">செந்தில் பாலாஜி</a> மின் துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு என புகார் எழுந்தது. மேலும், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது மின்மாற்றி கொள்முதல் செய்த போது முறைக்கேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில்<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-high-court-has-dismissed-the-plea-regarding-liquor-bringing-from-puducherry-and-given-explanation-regarding-government-order-74829.html"> நீதிமன்றம்</a> உத்தரவிட்டுள்ளது.
<h3>செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம்</h3>
தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2023 வரை திமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 48 ஆயிரத்துக்கும் அதிகமாக மின்மாற்றிகள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அரசு ரூ. 397 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நேரத்தில் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இது தொடர்பாக அரப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-high-court-has-dismissed-the-plea-regarding-liquor-bringing-from-puducherry-and-given-explanation-regarding-government-order-74829.html">புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரும் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..</a></strong>

மேலும் இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி சரவணன் உள்ளிட்ட சிலர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஏப்ரல் 29, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. அறப்போர் இயக்கம் சார்பில் பேசிய வழக்கறிஞர், அதிக விலைில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்து ம் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் பகார் தெரிவித்தார்.

இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கூறுகையில், கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் பின்பற்றும் நடைமுறையிலேயே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், ஒப்பந்ததாரர்கள் பல ஆண்டுகளா ஒரே விலையை நிர்ணயித்துள்ளனர். மாநில முழுவுதும் பழுதான மின்மாற்றிகளை மாற்ற முடியாத நிலை ஏற்படும் என்றும் விளக்கம் அளித்தார். பின்னர் பேசிய நீதிபதிகள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நடத்தி வரும் முதற்கட்ட விசாரணை அறிக்கையை கடந்த மார்ச் 9, 2026 அன்று தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டிருந்தது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-perambur-nomination-petition-madras-high-court-dismissed-the-petition-seeking-review-74557.html">விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!</a></strong>

இந்த நிலையில் அறப்போர் இயக்கம் சார்பில் மீண்டும் இந்த வழக்கை சிபிஜைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு ஏப்ரல் 9, 2026 அன்று விசாரணைக்கு வ்த நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஊட்டி போறீங்களா?.. மே 1 முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. இதை தெரிஞ்சுகோங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/attention-tourists-new-traffic-restrictions-in-effect-from-may-1st-in-ooty-nilgris-75009.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 10:53:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/attention-tourists-new-traffic-restrictions-in-effect-from-may-1st-in-ooty-nilgris-75009.html</guid>
		            
			

    	<description><![CDATA[உதகையிலிருந்து சமவெளிப் பகுதிகளுக்குத் திரும்பும் வாகனங்களுக்கு மிக முக்கியமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். ழக்கமான குன்னூர் - பர்லியார் மலைப்பாதையில் இறங்குவதற்குச் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/ooty.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஊட்டி போறீங்களா?.. மே 1 முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. இதை தெரிஞ்சுகோங்க!" /></figure>மலைகளின் அரசியான உதகையில் கோடை சீசன் மற்றும் கோடை விழாக்கள் தொடங்க உள்ளன. இதையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சீரான வாகன மாற்றங்களை உறுதி செய்யவும் நீலகிரி மாவட்ட காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் வரும் மே 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, பால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு மட்டுமே உதகை நகருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர வணிகரீதியான கனரக வாகனங்கள் காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை உதகை நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/religion/chariot-procession-begins-at-the-famous-madurai-meenakshi-temple-74998.html">மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!</a></strong></p>

<h3>வாகனங்கள் செல்ல வேண்டிய வழித்தடங்கள்:</h3>
வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நகருக்குள் நுழையவும் வெளியேறவும் பிரத்யேக வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்பவர்கள்: காட்டேரி சந்திப்பிலிருந்து இடதுபுறமாகத் திரும்பி கேத்தி, லவ்டேல், மஞ்சின கொரை மற்றும் பார்கின்ஹில் வழியாக உதகை நகருக்குள் நுழைய வேண்டும்.
<h3>மேட்டுப்பாளையத்திலிருந்து கூடலூர் செல்பவர்கள்:</h3>
லவ்டேல் ரயில் நிலையம், மஞ்சனக்குறை, காந்தள் முக்கோணம் மற்றும் பிங்கர்போஸ்ட் வழியாக கூடலூருக்குச் செல்லலாம். கூடலூரிலிருந்து உதகை செல்பவர்கள் தலைகுந்தா, மட்டம், புதுமந்து மற்றும் ஸ்டீபன் சர்ச் வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.

உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் திரும்புபவர்கள்: அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும். குன்னூர் - பர்லியார் வழியாகச் செல்ல அனுமதி கிடையாது .
<h3>வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அரசுப் பேருந்து வசதி:</h3>
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:
குன்னூரிலிருந்து வரும் வாகனங்கள் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
கோத்தகிரியிலிருந்து வரும் வாகனங்கள்: உதகை அரசு கலைக்கல்லூரி தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். கூடலூரிலிருந்து வரும் வாகனங்கள் ஹச்பிஎப் (HPF) கோல் சாலை பகுதியில் நிறுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, வாகனங்களை நிறுத்திய பிறகு அங்கிருந்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா போன்ற முக்கிய சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல அரசு சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
<h3>உதகையிலிருந்து வெளியேறும் வாகனங்கள்:</h3>
உதகையிலிருந்து சமவெளிப் பகுதிகளுக்குத் திரும்பும் வாகனங்களுக்கு மிக முக்கியமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். வழக்கமான குன்னூர் - பர்லியார் மலைப்பாதையில் இறங்குவதற்குச் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. இது மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் நெரிசலைத் தவிர்க்க எடுக்கப்பட்ட முடிவாகும்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-mk-stalins-comments-on-tamil-nadus-double-digit-economic-growth-74814.html">பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!</a></strong>
<h3>சுற்றுலாப் பயணிகளுக்கான சில கூடுதல் டிப்ஸ்:</h3>
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் (e-Pass) கட்டாயம் என்பதால், பயணத்திற்கு முன்னரே அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை உள்ளதால், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பைகளைத் தவிர்ப்பது நல்லது. கோடை விழாக்களின் போது தங்கும் விடுதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்வது சிறந்தது.

உள்ளூர் மக்களின் நலன் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் &#8211; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/religion/chariot-procession-begins-at-the-famous-madurai-meenakshi-temple-74998.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 09:30:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/religion/chariot-procession-begins-at-the-famous-madurai-meenakshi-temple-74998.html</guid>
		            
			

    	<description><![CDATA[Madurai Meenakshi Temple: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று அதிகாலை உற்சாகமாகத் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் சுவாமியும் அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/chithirai-festival-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் &#8211; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!" /></figure>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 10 டன் எடையுள்ள வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். "மீனாட்சி சொக்கநாதா" என்ற பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வடம்பிடித்து தேரை மாசி வீதிகளில் இழுத்துச் சென்றனர். திருக்கல்யாணத்தின் போது ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களின் தாலிச் சரடை மாற்றிக்கொண்டு புதிய மங்கல நாண் அணிந்து வழிபாடு செய்தனர்.
<h3><b data-path-to-node="2" data-index-in-node="0">பக்திப் பரவசத்துடன் தொடங்கிய மாபெரும் தேரோட்ட வைபவம்</b></h3>
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் சித்திரை திருவிழா, கடந்த சில நாட்களாக மதுரையை விழாக்கோலம் பூணச் செய்துள்ளது. விழாவின் சிகர நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் இன்று (ஏப்ரல் 29) அதிகாலை மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. முன்னதாக, அதிகாலை 5.30 மணி அளவில் சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை தம்பதியினர் பிரம்மாண்டமான பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரிலும் எழுந்தருளினர். "ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர" மற்றும் "மீனாட்சி சொக்கநாதா" என்ற பக்தர்களின் விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வடம்பிடித்து தேரை இழுத்தனர். மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த தேரினை காணத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தால் மதுரை மாநகரமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.
<h3>பிரம்மாண்ட மலர் மேடையில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம்</h3>
நேற்று காலை விழாவின் மிக முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது. இதற்காக வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதிகள் சந்திக்கும் இடத்தில் சுமார் 10 டன் எடையுள்ள வண்ணமயமான இயற்கை மலர்களைக் கொண்டு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பிரம்மாண்ட மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. சரியாக காலை 8.54 மணிக்கு மிதுன லக்னத்தில், வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இசை முழங்க, சுந்தரேஸ்வரர் சார்பில் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இந்த புனித நிகழ்வின் போது திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள், தங்கள் தாலிச் சரடை மாற்றிக் கொண்டு புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/religion/pradosham-worship-a-powerful-evening-ritual-for-peace-prosperity-and-shivas-blessings-74914.html">பிரதோஷத்தில் இந்த வழிபாடு செய்தால் என்ன நடக்கும்?</a>
<h3>பாதுகாப்பு ஏற்பாடுகளும் பக்தர்களின் வருகையும்</h3>
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். திருக்கல்யாணத்தை அடுத்து நடைபெற்ற தேரோட்டத்தில் கூட்ட நெரிசலைக் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழிநெடுகிலும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் அன்னதானங்கள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டன. தேரோட்டத்தைத் தொடர்ந்து, விழாவின் அடுத்த முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது. இதனால் மதுரையின் முக்கிய வீதிகள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, திருவிழா உற்சாகம் உச்சத்தை எட்டியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாக்கு எண்ணிக்கை: லீவ் கிடையாது &#8211; காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/no-leave-for-tamil-nadu-police-ahead-of-vote-counting-says-dgp-74984.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 08:37:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/no-leave-for-tamil-nadu-police-ahead-of-vote-counting-says-dgp-74984.html</guid>
		            
			

    	<description><![CDATA[சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2, 2026 முதல் மறு உத்தரவு வரும் வரை யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். முறையான காரணங்களு்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/no-leave-for-tamil-nadu-police.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்கு எண்ணிக்கை: லீவ் கிடையாது &#8211; காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 29 :</strong> சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2, 2026 முதல் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் உட்பட்ட மதசார்பற்ற கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக முன்னேற்றக் கழகம், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலாவின் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கட்சி ஆகியவை போட்டியிட்டன.
<h3>காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது</h3>
இதில் விஜய்யின் தமிழக வெற்றிக்க கழகம் புதிததாக களமிறங்கவுள்ளதால் அவர் இந்த தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய அளவில் உருவாகியுள்ளது. அதனால் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனயைடுத்து வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 திங்கட் கிழமை நடைபெறவிருக்கிறது.

இதனயைடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2, 2026 அன்று முதல் மறு உத்தரவு வரும் வரை யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது எனவும், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு என முறையான காரணங்களு்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதிாக  , வாக்கு எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் உள்ள ஊரக பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் அடிப்படை தேவைக்கான குடிநீர் மற்றும் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தொடங்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

அதன் காரணமாகவே வாக்கு எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை ஈடுபடுத்தக் கூடாது. மேலும், ஊரக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில் மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 29, 2026 இன்று மாலை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இன்று சீரடி செல்கிறார் விஜய்?.. தேர்தல் முடிவுகளுக்கு முன்பு அடுத்தடுத்த ஆன்மீகப் பயணத்திற்கு திட்டம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-vijay-visiting-shirdi-today-plans-for-a-series-of-spiritual-journeys-ahead-of-tamilnadu-election-results-74992.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 08:36:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-vijay-visiting-shirdi-today-plans-for-a-series-of-spiritual-journeys-ahead-of-tamilnadu-election-results-74992.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK VIjay Spiritual Journey: Tamilnadu தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 4.7 கோடிக்கும் அதிகமானோர் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த அதீத வாக்குப்பதிவுக்கு நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும் ஒரு முக்கியக் காரணம் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tvk-vijay-3-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இன்று சீரடி செல்கிறார் விஜய்?.. தேர்தல் முடிவுகளுக்கு முன்பு அடுத்தடுத்த ஆன்மீகப் பயணத்திற்கு திட்டம்.." /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/ahead-of-2026-assembly-election-vote-counting-special-training-given-to-election-officials-at-chennai-74849.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றத் தேர்தல்</a> வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மீகப் பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த கையோடு, விஜய் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார். அதன் முதல் கட்டமாக, ஏப்ரல் 28-ம் தேதி அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.

<strong>மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html"> தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..</a></strong>
<h3>விஜய் செய்த 'சத்ரு சம்ஹார' பூஜை:</h3>
அங்கு கடற்கரையில் பாரம்பரிய உடையில் வழிபாடு நடத்திய விஜய்க்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு அவர் எதிரிகளை வெல்லவும் தடைகள் நீங்கவும் செய்யப்படும் 'சத்ரு சம்ஹார' பூஜையில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடக ராசிக்காரரான விஜய், திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் அரசியல் ரீதியான தடைகள் நீங்கி வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
<h3>சீரடி சாய் பாபா தரிசனம்:</h3>
திருச்செந்தூரைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 29) விஜய் மகாராஷ்டிர மாநிலம் சீரடிக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகத் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் அவர், அங்குள்ள சாய் பாபா கோவிலில் தரிசனம் செய்கிறார். முன்னதாக மே 3-ம் தேதி அவர் அங்கு செல்வதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அங்கு செல்கிறார். தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக அவர் மேற்கொள்ளும் இந்தத் தொடர் ஆன்மீகப் பயணங்கள், அவரது அரசியல் வாழ்வின் அடுத்தகட்ட வெற்றிக்கான வேண்டுதலாகவே பார்க்கப்படுகிறது.
<h3> 2026 தேர்தலில் வாக்குப்பதிவு சாதனை:</h3>
தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 4.7 கோடிக்கும் அதிகமானோர் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த அதீத வாக்குப்பதிவுக்கு நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும் ஒரு முக்கியக் காரணம் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர். குறிப்பாக, மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளம்பெண்களின் வாக்குகள் அதிகளவில் தவெக-விற்கு விழுந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-mk-stalins-comments-on-tamil-nadus-double-digit-economic-growth-74814.html">பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!</a></strong>
<h3>அடுத்தடுத்த நகர்வுகள்: 5 முக்கிய கோவில்கள்?</h3>
விஜய் தனது தலைமைப் பண்பை உயர்த்தவும், அரசியல் தடைகளை உடைக்கவும் தமிழகத்தின் மேலும் சில முக்கிய கோவில்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக திருவண்ணாமலை, திருவாரூர், பழனி, மயிலாடுதுறை மற்றும் சென்னையில் உள்ள புகழ்பெற்ற தலங்களுக்கு அவர் செல்லக்கூடும் எனப் பேசப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சித்ரா பௌர்ணமி &#8211;  திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு &#8211; எங்கிருந்து தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/special-buses-to-tiruvannamalai-announced-for-chitra-pournami-festival-74982.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 07:41:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/special-buses-to-tiruvannamalai-announced-for-chitra-pournami-festival-74982.html</guid>
		            
			

    	<description><![CDATA[வருகிற மே 1, 2026 அன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகை தரவுள்ளனர். சித்ரா  பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/special-bus-for-chitra-pournami-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சித்ரா பௌர்ணமி &#8211;  திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு &#8211; எங்கிருந்து தெரியுமா?" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 29 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/religion/chithra-pournami-2026-date-significance-and-spiritual-importance-74566.html">சித்ரா  பௌர்ணமியை</a> முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக <a href="https://www.tv9tamilnews.com/religion/tiruvannamalai-arunachaleswara-temple-chitra-pournami-girivalam-auspicious-time-announcement-74509.html" target="_blank" rel="noopener">திருவண்ணாமலைக்கு</a> சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 1, 2026 அன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகை தரவுள்ளனர். இதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு</h3>
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 30, 2026 முதல் மே 02, 2026 வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மே 30, 2026 அன்று நவியாழக்கிழமை இரவு 9.50 மணி முதல் மே 1. 2026 இரவு 11.07 மணி வரை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டவுள்ளன. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-said-rain-begins-across-tamil-nadu-from-today-temperatures-set-to-gradually-drop-74974.html">வெப்பத்துக்கு குட்பை… தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு</a></strong>

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஏப்ரல் 30, 2026 அன்று 548 பேருந்துகளும், மே 1, 2026 அன்று 565 பேருந்துகளும் மற்றும் மே 2, 2026 அன்று 35 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதே போல சென்னை மாதவரத்திலிருந்து ஏப்ரல் 30, 2026 அன்று 186 பேருந்துகளும், மே 01, 2026 அன்று 174 பேருந்துகளும் மற்றும் சென்னை அடையாரிலிருந்து ஏப்ரல் 30, 2026 அன்று 55 பேருந்துகளும், மே 01, 2026 அன்று 50 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படவுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மே 1, 2026 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-temperature-crosses-106-degree-farenheit-and-temperature-likely-to-increase-in-upcoming-days-chennai-imd-report-74827.html">106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை..</a></strong>

மேலும், முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-election-results-pay-attention-to-your-childrens-emotional-state-a-crucial-warning-for-parents-74979.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 07:12:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-election-results-pay-attention-to-your-childrens-emotional-state-a-crucial-warning-for-parents-74979.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: தேர்தல் முடிவுகளால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது தொண்டர்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கும் ஒரு விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/election-results.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-exit-poll-results-are-set-to-be-released-this-evening-74975.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றத் தேர்தல்</a> வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிவுகளைப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதி கிருபாகரன், தற்போதைய சமூக ஊடகச் சூழல் இளைஞர்களிடையே ஒருவிதமான தீவிரமான மனப்போக்கை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். "தன்னுடைய தலைவர் தான் ஜெயிக்க வேண்டும், தனது கட்சி தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்" என்ற எண்ணம் இளைஞர்களிடையே மிக ஆழமாகப் பதிந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில பதிவுகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/student-admissions-in-tamilnadu-government-schools-surge-at-breakneck-74818.html">அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!</a></strong></p>

<h3>தோல்வி என்பது முடிவல்ல: வரலாற்றுப் பாடம்:</h3>
அரசியலில் வெற்றி, தோல்வி என்பது ஒரு சுழற்சி என்பதை விளக்க அவர் சில வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கையை உதாரணங்களாகக் கூறினார். இந்திரா காந்தி, பேரறிஞர் அண்ணா, மற்றும் செல்வி ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் அனைவரும் தங்களது அரசியல் பயணத்தில் ஒரு கட்டத்தில் தோல்வியைச் சந்தித்தவர்களே. ஆனால், அந்தத் தோல்வியோடு அவர்கள் சோர்ந்து போய்விடாமல், மீண்டும் போராடி வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்கள். எனவே, தோல்வி என்பது ஒரு தற்காலிகமான பின்னடைவுதானே தவிர, அது வாழ்க்கையின் முடிவல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
<h3>அரசியல் தலைவர்களுக்கு வேண்டுகோள்:</h3>
தேர்தல் முடிவுகளால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது தொண்டர்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கும் ஒரு விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட வேண்டும். தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதைச் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், யாரும் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-exit-poll-results-are-set-to-be-released-this-evening-74975.html">முடிவுக்கு வந்தது 5 மாநில தேர்தல் களம்.. இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!!</a></strong>
<h3>பெற்றோர்களுக்கான முக்கிய எச்சரிக்கை:</h3>
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தங்கள் வீட்டு இளைஞர்களும், குழந்தைகளும் தேர்தல் முடிவுகளால் உணர்ச்சிவசப்படுகிறார்களா என்பதைப் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். ஒருவேளை தோல்வியால் அவர்கள் அதீத மன அழுத்தத்திற்கு உள்ளானால், தயக்கமின்றி அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் அல்லது மருத்துவ உதவிகளைப் பெற்றுத்தர வேண்டும். அரசியல் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு சமூகப் பொறுப்போடு இந்த ஆலோசனைகளை வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகம் என்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கும் முடிவுகளை ஏற்கும் பக்குவத்திற்குமான களமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Exit Polls 2026 : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு?.. இன்று வெளியாகிறது Exit Poll!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/exit-poll-results-will-be-released-after-6-pm-on-april-29-2026-74928.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 07:00:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/exit-poll-results-will-be-released-after-6-pm-on-april-29-2026-74928.html</guid>
		            
			

    	<description><![CDATA[2026 Tamil Nadu Assembly Election Exit Poll | தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பான எக்ஸிட் போல் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாக உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/exit-poll.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Exit Polls 2026 : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு?.. இன்று வெளியாகிறது Exit Poll!" /></figure>தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் <strong>(2026 Tamil Nadu Assembly Election)</strong> நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் தமிழ்கத்தில் திருப்புமுணை தேர்தலாக அமையும் என்று கூறப்படுகிறது. காரணம், இந்த தேர்தல் திமுக, அதிமுக, தவெக, நாதக என பலமுனை போட்டியாக நடைபெற்று முடிந்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இன்று (ஏப்ரல் 29, 2026) தேர்தலுக்கு பிந்தைய வாக்குப்பதிவு அதாவது எக்ஸிட் போல்களை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் எக்சிட் போல் வெளியாகும்.
<h3>எக்சிட் போல் என்றால் என்ன?</h3>
எக்சிட் போல் என்பது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும். அதாவது தேர்தல் நாளில் வாக்களித்துவிட்டு, வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்களிடம் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது குறித்து நடத்தப்படும் கருத்துக்கணிப்பு ஆகும். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக இந்த கருத்துக்கணிப்பு வெளியாகும் நிலையில், தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து ஓரளவு கணிக்க முடியும். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து ஊடகங்கள் மற்றும் தனியார் முகமைகளால் நடத்தப்படும் கருத்துக்கணிப்பாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/may-4th-result-day-vote-counting-for-tamil-nadu-assembly-election-2026-begins-with-postal-vote-74686.html">62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. முதலில் தபால் வாக்கு – தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்</a>
<h3>எக்ஸிட் போலுக்கு தற்காலிக தடை விதித்த தேர்தல் ஆணையம்</h3>
பொதுவாக தேர்தல் முடிந்ததுமே எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் முடிந்து சில நாட்கள் ஆகியும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகமல் உள்ளது. காரணம் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்தது தான். தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/election-commission-of-india-issues-guidelines-for-vote-counting-in-tamil-nadu-polls-74637.html">முதலில் தபால் வாக்குகள் – வாக்கு எண்ணும் வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!</a>

இதில் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவடைந்துள்ளது. மேற்கு வங்கத்திற்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், நாளை தான் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணி அளவில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், 6 மணிக்கு மேல் எக்ஸிட் போல் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு பிறகு ஊடகங்கள் மற்றும் தனியார் முகமைகள் எக்ஸிட் போல் விவரங்களை வெளியிட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
<h3>TV9ல் பார்க்கலாம்</h3>
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவின் கடைசி நாளில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும். இருப்பினும், இந்த முறை TV9 ஒரு சிறிய மாற்றத்தைச் செய்துள்ளது. இந்த முறை, ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களை வெல்லும் என்பதைக் கணிக்கும் கருத்துக் கணிப்புகளின் தொகுப்பை நாங்கள் ஒளிபரப்ப உள்ளோம். அதன்படி முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம் ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Exit Polls : Exit Polls துல்லியமாக இருக்குமா? 2021 தேர்தல் அனுபவம் தந்தது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-exit-polls-2026-today-and-how-accurate-were-poll-predictions-in-2021-here-the-full-details-74975.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 06:36:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-exit-polls-2026-today-and-how-accurate-were-poll-predictions-in-2021-here-the-full-details-74975.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: பொதுவாக ஒரு மாநிலத்தில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்ததும், அடுத்த அரை மணி நேரத்தில் (6.30 மணிக்கு) பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை 5 மாநிலங்களிலும் தேர்தல் ஒரே சமயத்தில் நடப்பதால், அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்த பிறகே கணிப்புகளை வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/exit-polls.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Exit Polls : Exit Polls துல்லியமாக இருக்குமா? 2021 தேர்தல் அனுபவம் தந்தது என்ன?" /></figure><strong>Tamilnadu Exit poll 2026:</strong> இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் <a href="https://www.tv9tamilnews.com/elections/as-5-stated-election-polling-ends-tomorrow-exit-polls-will-be-rolled-out-know-who-will-rule-tamil-nadu-for-next-5-years-74920.html" target="_blank" rel="noopener">ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்</a> திருவிழா இன்றுடன் ஒரு முடிவுக்கு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்போடு தொடங்கிய இந்த ஜனநாயகப் பயணம், சுமார் ஒன்றரை மாத கால விறுவிறுப்பிற்குப் பிறகு இன்று மாலை நிறைவடைகிறது. இந்த முறை நடைபெற்ற தேர்தலில் பல மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொதுமக்கள் மிக ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இது தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
<h3>5 மாநில தேர்தல்:</h3>
கடந்த மாதம் 9-ம் தேதியன்று அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அவ்வாறு, அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 722 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு 85.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 140 சட்டமன்றத் தொகுதிகளில் 883 வேட்பாளர்கள் களம் கண்டனர். இங்குப் பதிவான வாக்குகளின் சதவீதம் 78.27% ஆகும். புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதிகப்படியாக 91.23% வாக்குகள் பதிவாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகப்பட்சமாக இந்த முறை 85.10% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.
<h3>தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு:</h3>
மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தல் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அங்குள்ள 294 தொகுதிகளில் மொத்தம் 2,926 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து 93.19% வாக்குகள் பதிவானது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் வெளியான நிலையில், மக்கள் இப்போது பிந்தைய கணிப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
<h3>எக்ஸிட் போல் என்றால் என்ன?</h3>
பொதுவாக ஒரு மாநிலத்தில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்ததும், அடுத்த அரை மணி நேரத்தில் (6.30 மணிக்கு) பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை 5 மாநிலங்களிலும் தேர்தல் ஒரே சமயத்தில் நடப்பதால், அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்த பிறகே கணிப்புகளை வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தின் இறுதி கட்டத் தேர்தல் முடியும் நேரமான இன்று மாலை 6 மணிக்கு மேல் தான் முடிவுகள் வெளியாகும். வாக்களித்துவிட்டு வெளியே வரும் மக்களிடம் நேரடியாகக் கருத்து கேட்டு எடுக்கப்படும் இந்த 'எக்ஸிட் போல்' ஆய்வுகள், தேர்தலுக்கு முன் எடுக்கப்படும் கணிப்புகளை விட மிகவும் துல்லியமானதாகக் கருதப்படுகிறது.
<h3>மக்களின் எதிர்பார்ப்பு:</h3>
வாக்காளர்களின் மனநிலை, தொகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அதிகரித்த வாக்கு சதவீதம் ஆகியவை எந்தக் கட்சிக்குச் சாதகமாக அமையும் என்பதை இந்த எக்ஸிட் போல் முடிவுகள் ஓரளவுக்குப் பிரதிபலிக்கும். குறிப்பாக, தமிழகத்தில் நிலவிய கடும் போட்டி காரணமாக, இன்றைய கருத்துக்கணிப்பு முடிவுகளைக் காண மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சரியான திசையைக் காட்டினாலும், துல்லியமான இடங்களின் எண்ணிக்கையில் சில மாற்றங்கள் இருந்தன. 2021-ல் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் (Times Now-CVoter உட்பட) திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (SPA) எளிதாகப் பெரும்பான்மை பெறும் என்று கணித்தன.
<h3>2021 கணிப்பு vs உண்மை:</h3>
திமுக கூட்டணிக்கு 177 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 49 இடங்களாகக் குறையும் என்றும் கணித்தது. ஆனால், உண்மையான முடிவு  திமுக கூட்டணி 159 இடங்களை வென்றது (திமுக மட்டும் 133 இடங்கள்). அதிமுக தலைமையிலான NDA கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றியது.

கணிப்புகள் சொன்னது போலவே திமுக ஆட்சிக்கு வந்தாலும், அதிமுக எதிர்பார்த்ததை விடக் கூடுதல் இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெப்பத்துக்கு குட்பை&#8230; தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு &#8211; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-said-rain-begins-across-tamil-nadu-from-today-temperatures-set-to-gradually-drop-74974.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 06:13:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-said-rain-begins-across-tamil-nadu-from-today-temperatures-set-to-gradually-drop-74974.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழ்நாட்டில் இன்று முதல் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/rain-alert-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெப்பத்துக்கு குட்பை&#8230; தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு &#8211; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 29:</strong> தமிழ்நாட்டில்  ஏப்ரல் 29, 2026 இன்று முதல் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/palm-nectar-season-boosts-livelihood-in-south-tamil-nadu-74820.html">வெப்பம்</a> படிப்படியாக குறையும் என்றும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/rain-likely-in-parts-of-tamil-nadu-amid-rising-heat-and-humidity-74813.html" target="_blank" rel="noopener">சென்னை வானிலை ஆய்வு மையம்</a> தெரிவித்துள்ளது. தென்கிழக்கு திசையில் இருந்து வீசும் தெற்கு காற்று, மேற்கு நோக்கி பயணித்து திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை அடுத்து தெலங்கானா, கர்நாடகா உள்பகுதிக்கு செல்லும் வாய்ப்புள்ளது.  மேலும் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்தம் காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
<h3>தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு</h3>
உயர் அழுத்தம் மற்றும் தென்திசையின் நீராவிக் காற்றும் இணைந்து கடலோர மாவட்டங்களில் மேகமூட்டமாக காணப்படுகிறது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில்  ஏப்ரல் 28, 2026  அன்று காலை லேசான மழை பெய்தது என்றும் இந்த மேகம் ஏப்ரல் 28, 2026 நண்பகலுக்கு பிறகு டெல்டாவில் இருந்து விலகிச் சென்று தெற்கு கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதி தொடங்கி மேகம் உருவாகி லேசான மழை பெய்தது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கன்னியாகுமரி, தென்காசியிலும் நேற்று லேசான மழை தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்தது. மழை பெய்ய தொடங்க உள்ளதால் வெப்பநிலை குறையவும் வாய்ப்புள்ளது. அதே போல இன்றும் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/palm-nectar-season-boosts-livelihood-in-south-tamil-nadu-74820.html">கோடை வந்தால் பதநீர் தான் ஹீரோ! தென் மாவட்டங்களில் விற்பனை ஜோர்.!</a></strong>

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன் படி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 28, 2026 நேற்று மழை பெய்துள்ளது. பிற இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையில் குறிப்பிட்டத்தக்க மாற்றம் ஏதும் இல்லை என்றாலும், ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் நேற்று 105 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மேலும், வேலூர், ஈரோடு 104 டிகிரி, கரூர், மதுரை, திருப்பத்தூர் 102 டிகிரி வெப்பநிலை நிலவியது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-temperature-crosses-106-degree-farenheit-and-temperature-likely-to-increase-in-upcoming-days-chennai-imd-report-74827.html"> 106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை..</a></strong>

இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு தெலங்கானா முதல் குமரிக் கடல் வரை, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது. அதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை நேற்று பெய்துள்ளது. இது ஏப்ரல் 29, 2026 இன்றும் தொடரும். அதனைத் தொடர்ந்து நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 30, 2026 முதல் மே 2, 2026 அன்றும் வரை கனமழை பெய்யும் என்றும் மே 3, 4, 2026 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தேர்தல் களத்தில் வெற்றி யாருக்கு? நாளை மாலை வெளியாகும் கருத்துக் கணிப்பு.. தமிழகத்தில் நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/as-5-stated-election-polling-ends-tomorrow-exit-polls-will-be-rolled-out-know-who-will-rule-tamil-nadu-for-next-5-years-74920.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 22:03:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/as-5-stated-election-polling-ends-tomorrow-exit-polls-will-be-rolled-out-know-who-will-rule-tamil-nadu-for-next-5-years-74920.html</guid>
		            
			

    	<description><![CDATA[Exit Poll: மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகத்தில் தேர்தல் முடிந்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/exit-poll-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தேர்தல் களத்தில் வெற்றி யாருக்கு? நாளை மாலை வெளியாகும் கருத்துக் கணிப்பு.. தமிழகத்தில் நிலவரம் என்ன?" /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:8cb8f82f-fbad-4a34-8a9b-d1f8770da670-17" data-testid="conversation-turn-36" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="e5171631-80ab-40f2-a079-a495870f6a0d" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="117" data-end="405"><strong>ஏப்ரல் 28, 2026:</strong> இந்தியாவில் ஐந்து மாநிலங்களுக்கான <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election">தேர்தல்</a> நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது.</p>

<h3 data-start="117" data-end="405">தேர்தல் கருத்துக்கணிப்புகள்:</h3>
<p data-start="633" data-end="972">தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என இரண்டு வகையான கணிப்புகள் உள்ளன. பொதுவாக, கருத்துக்கணிப்பு என்பது மக்கள் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை கணிக்கும் ஒரு ஆய்வாகும். பல்வேறு நிறுவனங்கள் இதில் பங்கேற்று தங்களது கணிப்புகளை வெளியிடுகின்றன.</p>
<p data-start="974" data-end="1220">மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகத்தில் தேர்தல் முடிந்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.</p>
<p data-start="974" data-end="1220">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-mk-stalins-comments-on-tamil-nadus-double-digit-economic-growth-74814.html">பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!</a></p>

<h3 data-start="974" data-end="1220">நாளை மாலை வெளியாகும் கருத்துக்கணிப்புகள்:</h3>
<p data-start="1222" data-end="1534">இந்த நிலையில், நாளை மாலை கருத்துக்கணிப்புகள் வெளியாகும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு, வாக்காளர்களின் தற்போதைய மனநிலை, வாக்குறுதிகள் மற்றும் பிரச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது.</p>
<p data-start="1222" data-end="1534">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/ahead-of-2026-assembly-election-vote-counting-special-training-given-to-election-officials-at-chennai-74849.html">மே. 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி..</a></p>
<p data-start="1536" data-end="1664">பொதுவாக, கருத்துக்கணிப்புகள் 100% துல்லியமானவை அல்ல. சில நேரங்களில் தவறுகளும் ஏற்படலாம். எனவே, இது ஒரு தோராயமான கணிப்பு மட்டுமே.</p>
<p data-start="1666" data-end="1867" data-is-last-node="" data-is-only-node="">நாளை மாலை 6:30 மணிக்கு பல்வேறு நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட உள்ளன. தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து உடனுக்குடன் தகவல்களை அறிய tv9 நெட்வொர்க்கை தொடர்ந்து பாருங்கள்.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கொடைக்கானலில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிச்சென்ற முதல்வர் ஸ்டாலின்.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த பொது மக்கள்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-mk-stalin-during-his-vacation-at-kodaikanal-rides-bicycle-and-takes-selfie-with-public-74869.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 17:20:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-mk-stalin-during-his-vacation-at-kodaikanal-rides-bicycle-and-takes-selfie-with-public-74869.html</guid>
		            
			

    	<description><![CDATA[இன்று நட்சத்திர ஏரி பகுதியில் முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டார். தினசரி காலை இங்கு நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அவரைக் காண அதிகாலையிலேயே கட்சி தொண்டர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கரைக்கு திரண்டனர். இதையடுத்து, முதலமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டு, செல்பி எடுத்துக்கொண்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/stalin-cylce-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கொடைக்கானலில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிச்சென்ற முதல்வர் ஸ்டாலின்.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த பொது மக்கள்.." /></figure><div class="flex h-svh w-screen flex-col">
<div class="relative z-0 flex min-h-0 w-full flex-1">
<div class="relative flex min-h-0 w-full flex-1">
<div class="@container/main relative flex min-w-0 flex-1 flex-col -translate-y-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)] pt-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)]">
<div class="@w-sm/main:[scrollbar-gutter:var(--stage-scroll-gutter)] touch:[scrollbar-width:none] group/scroll-root relative flex min-h-0 min-w-0 flex-1 flex-col [scrollbar-gutter:stable] not-print:overflow-x-clip not-print:overflow-y-auto group-data-stream-active/scroll-root:[overflow-anchor:none] scroll-pt-(--header-height) [--sticky-padding-top:var(--header-height)] [--sticky-padding-bottom:0px] [--scroll-root-safe-area-inset-top:calc(var(--sticky-padding-top)+env(safe-area-inset-top,0px))] [--scroll-root-safe-area-inset-bottom:calc(var(--sticky-padding-bottom)+var(--screen-keyboard-height,0px)+env(safe-area-inset-bottom,0px))] [--scroll-root-safe-area-height:calc(100lvh-var(--scroll-root-safe-area-inset-top)-var(--scroll-root-safe-area-inset-bottom))] has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:[--sticky-padding-top:0px] has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:[--sticky-padding-top:0px]" data-scroll-root="" data-scroll-from-top=""><main id="main" class="min-h-0 flex-1">
<div id="thread" class="group/thread flex flex-col min-h-full">
<div class="composer-parent flex flex-1 flex-col focus-visible:outline-0" role="presentation">
<div class="relative basis-auto flex-col -mb-(--composer-overlap-px) pb-(--composer-overlap-px) [--composer-overlap-px:28px] grow flex">
<div class="flex flex-col text-sm"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:8cb8f82f-fbad-4a34-8a9b-d1f8770da670-8" data-testid="conversation-turn-18" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="1e146324-8947-495d-8d1f-041065b61cba" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="117" data-end="448"><strong>கொடைக்கானல், ஏப்ரல் 28, 2026:</strong> தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு வார காலம் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கு இன்று காலை பொதுமக்கள் மத்தியில் செல்பி எடுத்துக்கொண்டு, சைக்கிள் ஓட்டி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒரு மாத காலம் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டம் தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>

<h3 data-start="117" data-end="448">ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்ற முதல்வர் ஸ்டாலின்:</h3>
<p data-start="720" data-end="949">தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கு தினமும் காலை பொதுமக்களுடன் நடைபயிற்சி மேற்கொள்வதும், அவர்களுடன் உரையாடுவதும், செல்பி எடுப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.</p>
<p data-start="720" data-end="949">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/ahead-of-2026-assembly-election-vote-counting-special-training-given-to-election-officials-at-chennai-74849.html">மே. 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி..</a></p>
<p data-start="951" data-end="1193">இந்த நிலையில், இன்று நட்சத்திர ஏரி பகுதியில் முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டார். தினசரி காலை இங்கு நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அவரைக் காண அதிகாலையிலேயே கட்சி தொண்டர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கரைக்கு திரண்டனர்.</p>

<h3 data-start="951" data-end="1193">கொடைக்கானல் ஏரியை சுற்றி சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்:</h3>
<p data-start="1195" data-end="1430" data-is-last-node="" data-is-only-node="">இதையடுத்து, முதலமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டு, செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர் ஏரியைச் சுற்றி சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.</p>
<p data-start="1195" data-end="1430" data-is-last-node="" data-is-only-node="">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-temperature-crosses-106-degree-farenheit-and-temperature-likely-to-increase-in-upcoming-days-chennai-imd-report-74827.html">106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை..</a></p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div>
</div>
</div>
</main></div>
</div>
</div>
</div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மே. 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/ahead-of-2026-assembly-election-vote-counting-special-training-given-to-election-officials-at-chennai-74849.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 16:41:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/ahead-of-2026-assembly-election-vote-counting-special-training-given-to-election-officials-at-chennai-74849.html</guid>
		            
			

    	<description><![CDATA[234 தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கு சென்னையில் நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/training.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மே. 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி.." /></figure><div class="flex h-svh w-screen flex-col">
<div class="relative z-0 flex min-h-0 w-full flex-1">
<div class="relative flex min-h-0 w-full flex-1">
<div class="@container/main relative flex min-w-0 flex-1 flex-col -translate-y-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)] pt-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)]">
<div class="@w-sm/main:[scrollbar-gutter:var(--stage-scroll-gutter)] touch:[scrollbar-width:none] group/scroll-root relative flex min-h-0 min-w-0 flex-1 flex-col [scrollbar-gutter:stable] not-print:overflow-x-clip not-print:overflow-y-auto group-data-stream-active/scroll-root:[overflow-anchor:none] scroll-pt-(--header-height) [--sticky-padding-top:var(--header-height)] [--sticky-padding-bottom:0px] [--scroll-root-safe-area-inset-top:calc(var(--sticky-padding-top)+env(safe-area-inset-top,0px))] [--scroll-root-safe-area-inset-bottom:calc(var(--sticky-padding-bottom)+var(--screen-keyboard-height,0px)+env(safe-area-inset-bottom,0px))] [--scroll-root-safe-area-height:calc(100lvh-var(--scroll-root-safe-area-inset-top)-var(--scroll-root-safe-area-inset-bottom))] has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:[--sticky-padding-top:0px] has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:[--sticky-padding-top:0px]" data-scroll-root="" data-scroll-from-top=""><main id="main" class="min-h-0 flex-1">
<div id="thread" class="group/thread flex flex-col min-h-full">
<div class="composer-parent flex flex-1 flex-col focus-visible:outline-0" role="presentation">
<div class="relative basis-auto flex-col -mb-(--composer-overlap-px) pb-(--composer-overlap-px) [--composer-overlap-px:28px] grow flex">
<div class="flex flex-col text-sm"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:8cb8f82f-fbad-4a34-8a9b-d1f8770da670-7" data-testid="conversation-turn-16" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="4db96262-1845-4002-9571-ddd291f1a88f" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="117" data-end="350"><strong>சென்னை, ஏப்ரல் 28, 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election">சட்டப்பேரவைத்</a> தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் வரலாறு காணாத அளவில் 85.15 சதவீத வாக்குப்பதிவு பதிவானது.</p>

<h3 data-start="117" data-end="350">தமிழகத்தில் 4 முனை போட்டி:</h3>
<p data-start="503" data-end="732">இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எப்போதும் போல இல்லாமல், இந்தத் தேர்தலில் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் சுமார் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.</p>
<p data-start="503" data-end="732">மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html"> தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..</a></p>

<h3 data-start="503" data-end="732">தேர்தல் அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி:</h3>
<p data-start="901" data-end="1159">234 தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கு சென்னையில் நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.</p>
<p data-start="1161" data-end="1346">கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது.</p>
<p data-start="1161" data-end="1346">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-mk-stalins-comments-on-tamil-nadus-double-digit-economic-growth-74814.html">பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!</a></p>

<h3 data-start="1161" data-end="1346">முக்கிய அம்சங்கள் என்ன?</h3>
<p data-start="1348" data-end="1557">பயிற்சி பெறும் அதிகாரிகள் பின்னர் தங்களது மாவட்டங்களுக்கு சென்று, அங்குள்ள பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவார்கள். தேர்தல் ஆணைய விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.</p>
<p data-start="1559" data-end="1727" data-is-last-node="" data-is-only-node="">தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div>
</div>
</div>
</main></div>
</div>
</div>
</div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரும் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-high-court-has-dismissed-the-plea-regarding-liquor-bringing-from-puducherry-and-given-explanation-regarding-government-order-74829.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 15:36:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-high-court-has-dismissed-the-plea-regarding-liquor-bringing-from-puducherry-and-given-explanation-regarding-government-order-74829.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chennai High Court: பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மதுபானங்களை, மிகக் குறைந்த அளவில் இருந்தாலும், உரிய அனுமதி இன்றி வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என அரசு தரப்பில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/py-liquor.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரும் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:8cb8f82f-fbad-4a34-8a9b-d1f8770da670-6" data-testid="conversation-turn-14" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="d6d51645-f336-4c9d-bfe0-4f4ec28556ff" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="134" data-end="398"><strong>சென்னை, ஏப்ரல் 28, 2026:</strong> தனிநபர் 4.5 லிட்டர் அளவுக்கு மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்தவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவில் விளக்கம் கோரி, தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கடலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்தது.</p>

<h3 data-start="134" data-end="398">வழக்கு பின்னணி என்ன?</h3>
<p data-start="671" data-end="875">இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் அளவுக்கு மதுபானம் கொண்டு வர உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்களிடையே சட்டம் குறித்த குழப்பமும் உருவானது.\</p>
<p data-start="671" data-end="875">Also Read:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/student-admissions-in-tamilnadu-government-schools-surge-at-breakneck-74818.html"> அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!</a></p>
<p data-start="877" data-end="1101">இந்த நிலையில், இந்த உத்தரவு குறித்து தெளிவான விளக்கம் அளிக்க கோரிய மனுவை நாளை அவசரமாக விசாரணைக்கு எடுக்கக் கோரி, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிபதி எம். நிர்மல்குமார் முன் முறையீடு செய்தார்.</p>
<p data-start="1103" data-end="1395">அப்போது அவர், நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ள அனுமதியளிக்கும் அரசாணை அனைத்து வகை மதுபானங்களுக்கும் பொருந்தாது என்றும் விளக்கமளித்தார். குறிப்பாக, அந்த அரசாணை குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்தார்.</p>

<h3 data-start="1103" data-end="1395">புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வர தனி சட்டம்:</h3>
<p data-start="1397" data-end="1587">மேலும், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் வாங்கப்படும் மதுபானங்களை தமிழக எல்லைக்குள் கொண்டு வருவதற்கு தனித்த சட்ட விதிமுறைகள் உள்ளன என்றும், அவற்றை மீறுவது குற்றமாகும் என்றும் கூறினார்.</p>
<p data-start="1589" data-end="1845">பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மதுபானங்களை, மிகக் குறைந்த அளவில் இருந்தாலும், உரிய அனுமதி இன்றி வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என அரசு தரப்பில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p data-start="1847" data-end="2051">மேலும், இத்தகைய தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுவது சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நீதிமன்றம் இதற்கு தெளிவான விளக்கம் வழங்க வேண்டியது அவசியம் எனவும் கோரப்பட்டது.</p>
<p data-start="2053" data-end="2365" data-is-last-node="" data-is-only-node="">இதனைத் தொடர்ந்து, தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் முறையீட்டை ஏற்ற நீதிபதி, விளக்கம் கோரிய மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். இந்த வழக்கின் தீர்ப்பு, மாநிலங்களுக்கு இடையிலான மதுபானக் கடத்தல் மற்றும் தனிநபர் வைத்திருக்கும் வரம்பு குறித்து முக்கிய விளக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோடை வந்தால் பதநீர் தான் ஹீரோ! தென் மாவட்டங்களில் விற்பனை ஜோர்.!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/palm-nectar-season-boosts-livelihood-in-south-tamil-nadu-74820.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 14:40:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/palm-nectar-season-boosts-livelihood-in-south-tamil-nadu-74820.html</guid>
		            
			

    	<description><![CDATA[Palm Nectar Season: கோடைக்காலம் காரணமாக தென் மாவட்டங்களில் பதநீர் சீசன் துவங்கியுள்ளது. பனை தொழிலாளர்கள் அதிக அளவில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை குளிர்ச்சி தரும் பானமாக பதநீர் மக்களிடையே அதிக தேவை பெற்றுள்ளது. இதனால் அவர்களின் வருமான வாய்ப்பும் உயர்ந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/palm-water.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோடை வந்தால் பதநீர் தான் ஹீரோ! தென் மாவட்டங்களில் விற்பனை ஜோர்.!" /></figure>திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கோடைக்காலம் தீவிரமடைந்ததுடன் பதநீர் சீசன் தொடங்கியுள்ளது. பனை மரங்களில் இருந்து பெறப்படும் பதநீர் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் பனை தொழிலாளர்கள் அதிகாலை முதல் மாலை வரை தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சீசன் அவர்களுக்கு முக்கியமான வருமான வாய்ப்பாக உள்ளது. பாரம்பரிய முறையில் பதநீர் சேகரிப்பு அனுபவமும் திறமையும் தேவைப்படும் தொழிலாகும். உடலுக்கு குளிர்ச்சி மற்றும் சத்துக்கள் வழங்கும் இயற்கை பானமாக பதநீர் கருதப்படுகிறது. சந்தை தேவையும் அதிகரித்ததால் தொழிலாளர்களின் வருமானமும் உயர்ந்துள்ளது.
<h3>பனை மரங்களை மையமாகக் கொண்ட வாழ்வாதாரம் மீண்டும் சுறுசுறுப்பு</h3>
திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கோடைக்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாரம்பரியமான பதநீர் சீசன் மீண்டும் தொடங்கியுள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில், பனை மரங்களில் இருந்து எடுக்கப்படும் பதநீர் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறுகிறது. இதனால் பனை தொழிலாளர்கள் அதிகாலை நேரத்திலிருந்தே தங்கள் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கியுள்ளனர். பல ஆண்டுகளாக இந்த தொழிலைத் தொடர்ந்து வரும் குடும்பங்களுக்கு, இந்த சீசன் முக்கியமான வருமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இயற்கையான குளிர்ச்சியை தரும் இந்த பானம், வெப்பத்திலிருந்து தற்காப்பாகவும் உடலுக்கு சத்தானதாகவும் பார்க்கப்படுகிறது.
<h3>பாரம்பரியம் மற்றும் உழைப்பின் சங்கமம்</h3>
பதநீர் சேகரிப்பு என்பது எளிதான வேலை அல்ல; அது திறமையும் அனுபவமும் தேவைப்படும் பாரம்பரிய தொழிலாகும். பனை மரங்களில் ஏறி, சரியான முறையில் நீரை சேகரிப்பது உடல் உழைப்பும் கவனமும் வேண்டிய செயல். இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வேலை செய்வதன் மூலம், நீரின் தரத்தையும் சுவையையும் பாதுகாக்கின்றனர். பல இடங்களில், குடும்பம் முழுவதும் இணைந்து இந்த பணிகளில் ஈடுபடுவது காணப்படுகிறது. இத்தொழில் ஒரு வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல், தலைமுறைகளை இணைக்கும் கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/india/desperate-brother-carries-sisters-remains-to-bank-for-savings-74801.html">ரூ.19,300 பணம் எடுக்க இப்படியா? சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு கொண்டு வந்த நபர்.. பரபர சம்பவம்!</a>
<h3>ஆரோக்கியம் மற்றும் சந்தை தேவையின் உயர்வு</h3>
கோடை வெப்பத்தால் மக்கள் இயற்கை பானங்களை விரும்பும் நிலையில், பதநீரின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. உடலுக்கு தண்ணீர் சத்து வழங்குவதோடு, இயற்கை சர்க்கரை மற்றும் சத்துக்கள் நிறைந்ததால் இது ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. நகரப் பகுதிகளிலும் பதநீருக்கு அதிக வரவேற்பு காணப்படுவதால், விற்பனை வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன. இதன் மூலம் பனை தொழிலாளர்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. மொத்தத்தில், கோடைக்காலத்தின் வருகையுடன் பதநீர் சீசன் தொடங்கியது, தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தையும் பாரம்பரியத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-temperature-crosses-106-degree-farenheit-and-temperature-likely-to-increase-in-upcoming-days-chennai-imd-report-74827.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 14:37:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-temperature-crosses-106-degree-farenheit-and-temperature-likely-to-increase-in-upcoming-days-chennai-imd-report-74827.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஏப்ரல் 30ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் மே 1 மற்றும் மே 2ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/summ.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:8cb8f82f-fbad-4a34-8a9b-d1f8770da670-4" data-testid="conversation-turn-10" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="eee3ede6-25e6-480d-b908-d59a297e38b9" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="0" data-end="192"><strong>வானிலை நிலவரம், ஏப்ரல் 28, 2026:</strong> தமிழகத்தில் கோடை <a href="https://www.tv9tamilnews.com/topic/weather-forecast">வெயிலின்</a> தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் 40.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் 40.4 டிகிரி செல்சியஸ், கரூரில் 41 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p>

<h3 data-start="0" data-end="192">கொளுத்தும் வெப்பநிலை:</h3>
<p data-start="459" data-end="752">சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 39.3 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 38.8 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.</p>
<p data-start="459" data-end="752">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/student-admissions-in-tamilnadu-government-schools-surge-at-breakneck-74818.html">அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!</a></p>
<p data-start="754" data-end="942">வரவிருக்கும் நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p>
<p data-start="944" data-end="1131">இதற்கிடையில், மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வடக்கு தெலுங்கானா முதல் குமரி கடல் வரை, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.</p>

<h3 data-start="944" data-end="1131">கனமழை எச்சரிக்கை எங்கே?</h3>
<p data-start="1133" data-end="1326">இதன் காரணமாக, ஏப்ரல் 28ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p>
<p data-start="1328" data-end="1583">ஏப்ரல் 30ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் மே 1 மற்றும் மே 2ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="1328" data-end="1583">சென்னையில் வெப்பநிலை எப்படி இருக்கும்?</h3>
<p data-start="1585" data-end="1835">மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும், வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும் ஈரப்பதமும் நிலவும் நிலையில், சில இடங்களில் உஷ்ண அலை (Heat wave) ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="1837" data-end="2030">சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.</p>
<p data-start="2032" data-end="2176" data-is-last-node="" data-is-only-node="">கோடை வெயில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/student-admissions-in-tamilnadu-government-schools-surge-at-breakneck-74818.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 14:18:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/student-admissions-in-tamilnadu-government-schools-surge-at-breakneck-74818.html</guid>
		            
			

    	<description><![CDATA[தொடர்ந்து மே, ஜூன் மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2025-2026-ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சுமார் 4 லட்சம் எண்ணிக்கை அளவில் இருந்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/govt-school-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!" /></figure>தமிழக அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை இந்த கல்வியாண்டில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 1 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-achieves-milestone-in-economic-growth-double-digit-growth-for-the-second-consecutive-year-74803.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் கடந்த காலங்களை விட மாணவர் சேர்க்கை தற்போது அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் உயர்த்தப்படுவதோடு, அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html" target="_blank" rel="noopener">தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..</a></strong>
<h3>முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்:</h3>
தமிழக அரசின் சார்பில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த காலை உணவுத் திட்டம் வருகிற ஆண்டில் 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், சைக்கிள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் மருத்துவ படிப்பு, தொழில்நுட்பப்படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசு பள்ளிகளில் கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக அனைத்தும் தகுதி, தடையின்றி கிடைப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரிப்பு வருகிறது.
<h3>ஒரு லட்சத்தை கடந்தது:</h3>
அந்த வகையில், வருகிற கல்வி ஆண்டுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகுந்த ஆர்வமுடன் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. வருகிற 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கு மழலையர் வகுப்புகளில் 6,796 பேரும், 1-ம் வகுப்பில் 97,737 பேரும், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 8,178 பேரும் என மொத்தம் 1,12,711 மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர். இன்னும் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆசிரியர்கள் பலர் தேர்தல் பணிக்கு சென்றதால் அரசு பள்ளிகளில் சேர்க்கையில் தொய்வு இருந்தது. தற்போது தேர்தல் பணி முடிவடைந்ததால், மாணவர் சேர்க்கை மீண்டும் வேகமெடுத்துள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-achieves-milestone-in-economic-growth-double-digit-growth-for-the-second-consecutive-year-74803.html" target="_blank" rel="noopener">பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை.. தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி!</a></strong>
<h3>5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இலக்கு:</h3>
தொடர்ந்து மே, ஜூன் மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2025-2026-ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சுமார் 4 லட்சம் எண்ணிக்கை அளவில் இருந்தது. அதனை விட அதிகமாக வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசின் கல்வித்துறை முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தொடரும் வெப்பம்&#8230; தமிழகத்தில் இடியுடன் மழைக்கும் வாய்ப்பு&#8230;</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/rain-likely-in-parts-of-tamil-nadu-amid-rising-heat-and-humidity-74813.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 14:00:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/rain-likely-in-parts-of-tamil-nadu-amid-rising-heat-and-humidity-74813.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Weather: தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 30 ஏப்ரல் முதல் 2 மே வரை பல இடங்களில் காற்றுடன் மழை பெய்யும் நிலையில், சில மாவட்டங்களில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை அதிகமாகவே நீடித்து, கடலோர பகுதிகளில் ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/07/tamil-nadu-weather-6-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தொடரும் வெப்பம்&#8230; தமிழகத்தில் இடியுடன் மழைக்கும் வாய்ப்பு&#8230;" /></figure>வடக்கு தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை பரவியுள்ள வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையின் தாக்கத்தால், அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை, தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது. மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மழை அளவு சற்று குறைந்து, ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யலாம்.
<h3>வெப்பநிலை முன்னறிவிப்பு மற்றும் ஈரப்பதம் தாக்கம்</h3>
ஏப்ரல் 28 முதல் மே 2 வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவாக இருந்தாலும், சில பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகரிக்கலாம். குறிப்பாக கடலோர பகுதிகளில் அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பம் இணைந்து அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
<h3>கடந்த 24 மணி நேர வானிலை நிலவரம்</h3>
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவிய நிலையில், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரியின் சிற்றாறு-I பகுதியில் அதிகபட்சமாக 38.6 மில்லிமீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை இல்லாமல் வறட்சி நிலை தொடர்ந்தது. கோடை வெப்பத்தின் தாக்கம் பல இடங்களில் நிலவியதால், பொதுமக்கள் வெப்பத்தால் சற்று பாதிக்கப்பட்டனர்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/religion/madurai-meenakshi-amman-thirukalyanam-festival-celebrated-with-grandeur-lakhs-of-devotees-immersed-74765.html">மதுரையில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்.. பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!</a>
<h3>வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றங்கள்</h3>
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் பதிவாகவில்லை. எனினும், சில பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிப்பு காணப்பட்டது. வேலூரில் அதிகபட்சமாக 41.5°C வெப்பநிலை பதிவாகி, மாநிலத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியாக இருந்தது. அதேசமயம், அரியலூரில் சமவெளி பகுதிகளில் குறைந்தபட்சமாக 24.2°C மற்றும் மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 11.5°C பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை வேறுபாடுகள் நிலப்பரப்பின் இயல்பை பிரதிபலிக்கின்றன.
<h3>சென்னை மற்றும் புறநகர் வானிலை</h3>
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39°C வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 28°C ஆகவும் இருக்கும். அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் காரணமாக மக்கள் சிரமத்தை உணரக்கூடும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-mk-stalins-comments-on-tamil-nadus-double-digit-economic-growth-74814.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 13:38:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-mk-stalins-comments-on-tamil-nadus-double-digit-economic-growth-74814.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chief Minister MK Stalin: தமிழகம் பொருளாதாரத்தில் தொடர்ந்து 2- ஆவது ஆண்டாக இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமையுடன் கருத்து தெரிவித்துள்ளார். மீண்டும் மக்கள் ஆதரவுடன் வெற்றி தொடரும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/mk-stalin-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!" /></figure>தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-perambur-nomination-petition-madras-high-court-dismissed-the-petition-seeking-review-74557.html" target="_blank" rel="noopener">சட்டமன்றத் தேர்தல்</a> நடைபெற்றது. இந்த தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என 4 முனைப்போட்டி நிலவி வந்தது. கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் தமிழகத்தில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கு காரணம் தங்கள் கட்சி தான் என ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அத்துடன் மே 4- ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் போது, அதில் தங்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், <a href="https://www.tv9tamilnews.com/elections/senior-bjp-leader-tamilisai-soundararajan-criticizes-chief-minister-mk-stalin-and-udhayanidhi-stalin-tour-74532.html" target="_blank" rel="noopener">முதல்வர் மு. க. ஸ்டாலின் தேர்தல் பணிகள் முடிந்து ஓய்வுக்காக கொடைக்கானல்</a> சென்றுள்ளார்.
<h3>மீண்டும் திமுக ஆட்சி அமையும் என முதல்வர் நம்பிக்கை</h3>
அங்கு, காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது, சைக்கிள் ஓட்டுவது, பொதுமக்களை சந்திப்பது, அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, அவ்வப்போது மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சி அமையும் என்று செய்தியாளர்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழகம் 2- ஆவது ஆண்டாக பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html" target="_blank" rel="noopener">தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..</a>
<h3>தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை..</h3>
அதில், தமிழகம் என்றாலே எப்போதும் சாதனை... சாதனை... சாதனை... திராவிட மாடல் என்பது தனித்துவமான மாடல்... நாங்கள் சொன்னதை, எண்களிலும் நிரூபித்து கொண்டிருக்கிறோம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற முதல் 3 ஆண்டுகளில் அடித்தளம் அமைத்தது. தற்போது, தொடர்ந்து 2 ஆண்டுகளாக இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான நிர்வாகத்துக்கு, உழைப்பால் துணை நின்ற தமிழக மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!</p>
திராவிட மாடல் தனித்துவமான மாடல்!

சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!

முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது… <a href="https://t.co/jxlGvdfL0m">https://t.co/jxlGvdfL0m</a> <a href="https://t.co/LchFsI1r8J">pic.twitter.com/LchFsI1r8J</a>

— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/2049020096472039534?ref_src=twsrc%5Etfw">April 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>தெற்காசியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக வேண்டும்</h3>
இது வெறும் தொடக்கம் மட்டுமே. தமிழக மக்கள் துணையோடு இன்னும் பல்வேறு உயரங்களை அடைவது உறுதி...! நம்முடைய போட்டி என்பது மற்ற மாநிலங்களுடன் அல்ல... தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர வேண்டும் என்பதற்காகவே என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், அந்த திட்டங்களால் கிடைத்த வெற்றியையும், மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளையும் விளக்கும் விதமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-achieves-milestone-in-economic-growth-double-digit-growth-for-the-second-consecutive-year-74803.html" target="_blank" rel="noopener">பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை.. தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை.. தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-achieves-milestone-in-economic-growth-double-digit-growth-for-the-second-consecutive-year-74803.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 12:54:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-achieves-milestone-in-economic-growth-double-digit-growth-for-the-second-consecutive-year-74803.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Achieves Milestone in Economic Growth: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தி, முதலீடுகள், புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இலக்கை நோக்கித் தமிழ்நாடு முன்னேறும் என்றும், "தமிழ்நாடு வளர்கிறது, தமிழ்நாடு வழிகாட்டுகிறது" என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tamilnadu-growth.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை.. தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-scorching-heat-to-torment-rain-is-also-in-the-forecast-chennai-imd-alert-74746.html" target="_blank" rel="noopener">தமிழகம்</a> தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை (Double-digit economic growth) எட்டி சாதனை படைத்துள்ளது. இது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதத்துடன் தகவல்களை வெளியிட்டுள்ளார். மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல, அது திட்டமிடப்பட்ட முன்னேற்றம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், திராவிட மாடல் வளர்ச்சியின் பயனாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிங்க:</strong> <strong><a href="https://www.tv9tamilnews.com/business/employee-withdraw-5-lakh-rupees-in-epfo-before-5-years-got-1-5-lakh-tax-74413.html">5 ஆண்டுகளுக்குள் ரூ.5 லட்சம் பிஎஃப் பணத்தை எடுத்தவருக்கு ரூ.1.5 லட்சம் வரி.. விதிகள் கூறுவது என்ன?</a></strong>
<h3>உலக அளவில் அரிய வளர்ச்சி:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Double-digit growth📈
Two years in a row🌟</p>
Not noise. Not propaganda.
Just plain factual Numbers.

Tamil Nadu clocks 10.83% growth in 2025–26 following the 11.19% recorded in the previous year leaving the national average of 7.4% far far behind🔥

While some are busy dividing… <a href="https://t.co/nlybRDrZS2">https://t.co/nlybRDrZS2</a> <a href="https://t.co/KPmR1ZM3T0">pic.twitter.com/KPmR1ZM3T0</a>

— Dr. T R B Rajaa (@TRBRajaa) <a href="https://twitter.com/TRBRajaa/status/2048994768773140903?ref_src=twsrc%5Etfw">April 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஏற்கனவே தொழில் துறையில் உயர்ந்திருக்கும் ஒரு மாநிலம், இவ்வளவு வேகத்தில் மீண்டும் வளர்வது என்பது உலக அளவிலேயே அரிதான ஒரு விஷயம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அளவில் தமிழகத்தின் இந்த வளர்ச்சி விகிதம் மிக முக்கியமானது எனக் கருதப்படுகிறது. இது "திராவிட நாயகன்" முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரவணைப்பிலும், கடின உழைப்பினாலும் கிடைத்த வெற்றி என்று அவர் புகழ்ந்துள்ளார்.
<h3>சீனா, தென்கொரியாவுடன் ஒப்பீடு:</h3>
இந்த வளர்ச்சி குறித்து மேலும் பேசிய அமைச்சர், "இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல; உழைப்பு, உழைப்பு, உழைப்பு - மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. இதே போன்ற வலுவான வளர்ச்சி இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், சீனா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு இணையான பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாட்டிலும் நிச்சயம் சாத்தியப்படுத்த முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிங்க:</strong> <strong><a href="https://www.tv9tamilnews.com/business/spot-fake-money-requests-on-your-upi-app-and-save-yourself-from-online-payment-scam-74197.html">அதிகரிக்கும் யுபிஐ மோசடிகள் – இதையெல்லாம் பண்ணாதீங்க – எச்சரிக்கும் நிபுணர்கள்</a></strong>
<h3>2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் இலக்கு:</h3>
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை உறுதியாகக் கையில் எடுத்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தி, முதலீடுகள், புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இலக்கை நோக்கித் தமிழ்நாடு முன்னேறும் என்றும், "தமிழ்நாடு வளர்கிறது, தமிழ்நாடு வழிகாட்டுகிறது" என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே வெளியாகியுள்ள இந்த முக்கியப் பொருளாதாரச் செய்தி, அரசியல் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சிப்காட் தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்குதல்.. வடமாநில தொழிலாளி பலி.. 4 பேர் உயிருக்கு போராட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/one-worker-dies-4-others-treated-for-poisonous-gas-attack-at-chipcot-factory-in-gummidipoondi-74798.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 12:27:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/one-worker-dies-4-others-treated-for-poisonous-gas-attack-at-chipcot-factory-in-gummidipoondi-74798.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gummidipoondi Poisonous Gas Attack Worker Dies: திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் ஒரு வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 4 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/death.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சிப்காட் தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்குதல்.. வடமாநில தொழிலாளி பலி.. 4 பேர் உயிருக்கு போராட்டம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/4-people-arrested-for-stealing-29-sovereign-of-jewelry-in-munnirpallam-tirunelveli-district-74787.html" target="_blank" rel="noopener">திருவள்ளூர் மாவட்டம்</a>, கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு, தனியாருக்கு சொந்தமான எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், தொழிற்சாலையில் உள்ள <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/is-it-permissible-to-bring-4-5-liters-of-liquor-from-puducherry-police-put-an-end-to-the-confusion-74769.html" target="_blank" rel="noopener">தண்ணீர் தொட்டியை</a> சில தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வட மாநிலத்தை சேர்ந்த தனஞ்ஜெய் என்ற இளைஞர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது, சிறிது நேரத்திலேயே அவர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்பதற்காக உள்ளே இறங்கினர். ஆனால், அவர்களும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இது குறித்து, சிப்காட் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
<h3>விஷ வாயு தாக்கி ஒரு தொழிலாளி உயிரிழப்பு</h3>
அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிப்காட் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த 5 தொழிலாளர்களையும் மீட்டு மஞ்சங்கரணையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், வடமாநில இளைஞர் தனஞ்ஜெய் ஆபத்தான நிலையில் இருப்பதால் தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/one-killed-40-injured-in-government-bus-lorry-collision-near-tindivanam-74793.html" target="_blank" rel="noopener">நொடிப்பொழுதில் நேர்ந்த கோர சம்பவம்.. அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து.. ஓட்டுநர் பலி.. 40 பயணிகள் காயம்!</a>
<h3>உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 தொழிலாளர்கள்</h3>
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பாதிரிவேடு போலீசார் மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த தனஞ்ஜெய்யின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில், மூச்சு திணறல் ஏற்பட்ட சக தொழிலாளர்களாக 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
<h3>உயிரிழப்பு அதிகரிக்குமோ என அச்சம்</h3>
கும்மிடிப்பூண்டி அருகே செயல்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளர்கள் முயன்ற போது விஷவாயு தாக்கி ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மட்டும் இன்றி சக தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், விஷ வாயு தாக்குதலால் உயிரிழப்பு கூடுமோ என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்த வட மாநில தொழிலாளியின் குடும்பத்தினருக்கு போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/shocking-act-by-college-students-daring-robbery-executed-in-cinematic-style-startling-details-revealed-74795.html" target="_blank" rel="noopener">கல்லூரி மாணவிகள் செய்த பகீர் காரியம்.. சினிமா பாணியில் நடந்த துணிகரக் கொள்ளை.. திடுக் தகவல்!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கல்லூரி மாணவிகள் செய்த பகீர் காரியம்.. சினிமா பாணியில் நடந்த துணிகரக் கொள்ளை.. திடுக் தகவல்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/shocking-act-by-college-students-daring-robbery-executed-in-cinematic-style-startling-details-revealed-74795.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 12:12:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/shocking-act-by-college-students-daring-robbery-executed-in-cinematic-style-startling-details-revealed-74795.html</guid>
		            
			

    	<description><![CDATA[பாதிக்கப்பட்ட மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். அதன்படி, செல்போன் சிக்னல் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/chain-snatching-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கல்லூரி மாணவிகள் செய்த பகீர் காரியம்.. சினிமா பாணியில் நடந்த துணிகரக் கொள்ளை.. திடுக் தகவல்!!" /></figure><strong>ராமநாதபுரம், ஏப்ரல் 28:</strong> ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கிராமத்தில், 86 வயது மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 3 பேர் நகை பறித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நரிப்பையூரைச் சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள் (86), கடந்த 23-ஆம் தேதி தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு வந்து, வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரு இளம் பெண்கள் உட்பட மூவர், மூதாட்டியிடம் தங்களுக்குக் குடிக்கத் தாகமாக இருப்பதாகக் கூறி, குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-perambur-nomination-petition-madras-high-court-dismissed-the-petition-seeking-review-74557.html" target="_blank" rel="noopener">விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!</a></strong>
<h3>மூதாட்டியிடம் நகை பறிப்பு:</h3>
அவர்களை நம்பிய மாரியம்மாள், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றார். அந்த சமயம் சற்றும் எதிர்பாராத விதமாக, மூதாட்டியைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த அந்த மர்ம கும்பல், திடீரென மாரியம்மாளின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவியுள்ளது.பின்னாடியே வந்த அந்த கும்பல் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவியுள்ளது. கண்ணெரிச்சலில் மூதாட்டி துடித்தபோது, சற்றும் இரக்கமில்லாமல் அந்த கும்பல் அவரைத் தாக்கியுள்ளது. பின்னர் அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 1 சவரன் மோதிரம் என மொத்தம் 7 சவரன் தங்க நகைகளை அந்த கும்பல் பறித்துக்கொண்டு தப்பியோடியது.
<h3>போலீசார் விசாரணை மற்றும் கைது:</h3>
பாதிக்கப்பட்ட மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். செல்போன் சிக்னல் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும், சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தியபோது, நகை பறிப்பில் ஈடுபட்டது யார் என்பது தெரியவந்தது. அதன்படி, இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 25 வயது இளைஞர் ஒருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html" target="_blank" rel="noopener">தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..</a></strong>
<h3>மீட்கப்பட்ட நகைகள்:</h3>
கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்கள் கொள்ளையடித்த நகைகளைத் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் அடகுக் கடையில் அடகு வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்து 7 சவரன் நகைகளையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். கல்வி கற்க வேண்டிய மாணவிகள், ஆடம்பர வாழ்க்கைக்காகத் திட்டமிட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக, மூதாட்டியை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மூவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நொடிப்பொழுதில் நேர்ந்த கோர சம்பவம்.. அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து.. ஓட்டுநர் பலி.. 40 பயணிகள் காயம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/one-killed-40-injured-in-government-bus-lorry-collision-near-tindivanam-74793.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 11:52:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/one-killed-40-injured-in-government-bus-lorry-collision-near-tindivanam-74793.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tindivanam Bus Lorry Collision : திண்டிவனம் அருகே அரசு விரைவு பேருந்து மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 40- க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். மேலும், லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tindivanam-bus-lorry-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நொடிப்பொழுதில் நேர்ந்த கோர சம்பவம்.. அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து.. ஓட்டுநர் பலி.. 40 பயணிகள் காயம்!" /></figure>நாகர்கோவிலில் இருந்து <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/music-director-james-vasanthan-car-damaged-by-tvk-party-members-police-informs-there-is-no-political-connection-in-this-incident-74692.html" target="_blank" rel="noopener">சென்னைக்கு</a> தினந்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, நேற்று திங்கட்கிழமை இரவு ( ஏப்ரல் 27) நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தவிர்த்து 40- க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்தானது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ( ஏப்ரல் 28) விழுப்புரம் மாவட்டம், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/music-director-james-vasanthan-car-damaged-by-tvk-party-members-police-informs-there-is-no-political-connection-in-this-incident-74692.html" target="_blank" rel="noopener">திண்டிவனம்</a> அருகே உள்ள சலவதி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்து வருவதை கவனிக்காத லாரியின் ஓட்டுநர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். இதில், அதிவேகமாக வந்த லாரி மோதியதில் அரசு பேருந்து தலை குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சென்னையில் இருந்து வந்த மற்றொரு லாரியும் விபத்தில் சிக்கியது.
<h3>சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்</h3>
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 40- க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். உடனே, அந்த வழியாக சென்றவர்கள் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக திண்டிவனம் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில். போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 2- ஆவதாக விபத்தில் சிக்கிய லாரியின் ஓட்டுநரான விழுப்புரம் அருகேயுள்ள கிளியனூரை சேர்ந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html" target="_blank" rel="noopener">தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..</a>
<h3>40- க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்</h3>
இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூராய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், காயமடைந்த 40- க்கும் மேற்பட்ட பயணிகள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
<h3>தப்பி ஓடிய லாரி ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு</h3>
இதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரி மற்றும் தலை குப்புற கவிழ்ந்த அரசுப் பேருந்து ஆகியவற்றை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர், இந்த விபத்து தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/is-it-permissible-to-bring-4-5-liters-of-liquor-from-puducherry-police-put-an-end-to-the-confusion-74769.html" target="_blank" rel="noopener">புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வர அனுமதி?.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வீடு புகுந்து பெண்ணை கட்டி போட்டு நகை கொள்ளை.. 10 நாள் தேடுதல் வேட்டையில் 4 பேர் அதிரடி கைது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/4-people-arrested-for-stealing-29-sovereign-of-jewelry-in-munnirpallam-tirunelveli-district-74787.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 11:02:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/4-people-arrested-for-stealing-29-sovereign-of-jewelry-in-munnirpallam-tirunelveli-district-74787.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tirunelveli Jewelry Theft Arrest : நெல்லை மாவட்டத்தில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி கட்டிப்போட்டு விட்டு 29 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற சிறுவன் உள்பட 4 பேரை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/02/arrest.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வீடு புகுந்து பெண்ணை கட்டி போட்டு நகை கொள்ளை.. 10 நாள் தேடுதல் வேட்டையில் 4 பேர் அதிரடி கைது!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/music-director-james-vasanthan-car-damaged-by-tvk-party-members-police-informs-there-is-no-political-connection-in-this-incident-74692.html" target="_blank" rel="noopener">திருநெல்வேலி மாவட்டம்</a>, முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐ. ஆர். டி. பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, இருந்த பெண்ணை தாக்கி அவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். பின்னர், கட்டி போடப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தினர் அவிழ்த்து விட்டனர். இதைத் தொடர்ந்து, முன்னீர்பள்ளம் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/music-director-james-vasanthan-car-damaged-by-tvk-party-members-police-informs-there-is-no-political-connection-in-this-incident-74692.html" target="_blank" rel="noopener">போலீசாருக்கு தகவல்</a> தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
<h3>தடயங்களை சேகரித்த விரல் ரேகை நிபுணர்கள்</h3>
மேலும், விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக, முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் காட்சியை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். இதில், நகை திருடிய மர்ம கும்பலின் உருவம் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து, சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்டோ ஆரோக்யராஜ் தலைமையில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-scorching-heat-to-torment-rain-is-also-in-the-forecast-chennai-imd-alert-74746.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.. மழையும் இருக்கு.. வானிலை அப்டேட் இதோ..</a>
<h3>தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் கைது</h3>
இதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிவா ( 26 வயது), வீர சங்கிலி ( 20 வயது), இசக்கி முத்து ( 21 வயது), மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 29 சவரன் திருட்டு நகைகளை போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த சிறுவன் மட்டும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.
<h3>போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்</h3>
தூத்துக்குடியை சேர்ந்த இவர்கள் இந்த பகுதியில் கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னீர்பள்ளம் வழியாக சென்ற போது, சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்த பெண் அணிந்திருந்த நகையை நோட்டமிட்டு அந்த நகைகள் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று இரவு திட்டமிட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/is-it-permissible-to-bring-4-5-liters-of-liquor-from-puducherry-police-put-an-end-to-the-confusion-74769.html" target="_blank" rel="noopener">புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வர அனுமதி?.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>புதுச்சேரியில் இருந்து 4.5  லிட்டர் மது கொண்டு வர அனுமதி?.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/is-it-permissible-to-bring-4-5-liters-of-liquor-from-puducherry-police-put-an-end-to-the-confusion-74769.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 10:20:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/is-it-permissible-to-bring-4-5-liters-of-liquor-from-puducherry-police-put-an-end-to-the-confusion-74769.html</guid>
		            
			

    	<description><![CDATA[இதையடுத்தது புதுச்சேரியில் இருந்து 4½ லிட்டர் வரை மதுவாங்கிக் வரலாம் என்ற தகவல் பரவியது. சிலர் புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக மதுபாட்டில்களை கடத்தி வந்தனர். அவர்களை பிடித்த போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இது பற்றி கடலூர் மாவட்ட போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/puducherry-liquor.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="புதுச்சேரியில் இருந்து 4.5  லிட்டர் மது கொண்டு வர அனுமதி?.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை!!" /></figure>புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் வரை மதுபாட்டில்கள் எடுத்து வர அனுமதி உண்டா? என்பதற்கு கடலூர் மாவட்ட போலீஸ் விளக்கம் அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை ஒட்டி உள்ள புதுச்சேரி மாநிலத்தில் மதுபாட்டில்கள் விலை குறைவு என்பதால், மதுப்பிரியர்கள் அங்கு சென்று மது குடித்து விட்டு வருகின்றனர். சிலர் மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். அவ்வாறு மதுபாட்டில்களை கடத்தி வருவோர் மீது கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html" target="_blank" rel="noopener">தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..</a></strong>
<h3>மதுபாட்டில்கள் பறிமுதல்:</h3>
இந்தநிலையில், விருத்தாசலம் அருகே காட்டுப்பரூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லரசு என்பவர், புதுச்சேரியில் இருந்து 750 மி.லி. லிட்டர் 2 பாட்டில், 180 மி.லி. பாட்டில் என்று மொத்தம் 3 பாட்டில்களில், 1.680 மி.லி. லிட்டர் அளவில் மதுவை எடுத்து வந்தார். இந்த மதுபாட்டில்களுடன் கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி வழியாக வந்தார். அப்போது அங்கிருந்த கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது தமிழ்நாடு மது தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
<h3>வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்:</h3>
இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நல்லரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு மது 4.5 லிட்டர் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளலாம் என்ற விதி உள்ளது. ஆனால் மனுதாரர் 1 லிட்டர் 680 மில்லி லிட்டர் தான் மது வைத்துள்ளார் என்று கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
<h3>காட்டுத்தீயாக பரவிய தகவல்:</h3>
இதையடுத்தது புதுச்சேரியில் இருந்து 4½ லிட்டர் வரை மதுவாங்கிக் வரலாம் என்ற தகவல் பரவியது. சிலர் புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக மதுபாட்டில்களை கடத்தி வந்தனர். அவர்களை பிடித்த போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இது பற்றி கடலூர் மாவட்ட போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு, தனிப்பட்ட வழக்கில் வேறு ஒரு தீர்ப்பை காரணம் காட்டி இந்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இது பற்றி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். இந்த விதிமுறை தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாங்கிய மதுவுக்கு மட்டுமே பொருந்தும்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/dmk-resorts-to-thuggery-out-of-fear-of-defeat-tvk-adhav-arjuna-levels-severe-allegation-74404.html" target="_blank" rel="noopener">“தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!</a></strong>
<h3>வழக்கு தொடரப்படும்:</h3>
புதுச்சேரியில் இருந்து 90 மில்லி லிட்டர் மதுபாட்டில் வாங்கி வந்தாலும் வழக்கு தொடரப்படும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து மதுப்பிரியர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அண்ணா பல்கலை. ஸ்ட்ராங் ரூமில் &#8220;ஜனநாயகன் ஷோ&#8221;.. அதிரடியில் இறங்கிய போலீசார்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/man-arrested-for-watching-jana-nayagan-movie-in-anna-university-strong-room-in-chennai-74778.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 10:15:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/man-arrested-for-watching-jana-nayagan-movie-in-anna-university-strong-room-in-chennai-74778.html</guid>
		            
			

    	<description><![CDATA[Strong Room Jana Nayagan Movie: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் படம் பார்த்ததை சமூக வலைதலங்களில் பதிவிட்ட சிசிடிவி கேமரா ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/man-arrested-for-watching-jana-nayagan-movie.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அண்ணா பல்கலை. ஸ்ட்ராங் ரூமில் &#8220;ஜனநாயகன் ஷோ&#8221;.. அதிரடியில் இறங்கிய போலீசார்!" /></figure>தமிழகத்தில் நடைபெற்ற <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தலில்</a> பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், அறையின் உள்ளே 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதே போல, சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/may-4th-result-day-vote-counting-for-tamil-nadu-assembly-election-2026-begins-with-postal-vote-74686.html" target="_blank" rel="noopener">மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்</a> கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த அறைக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தமிழ்நாடு போலீஸ், மத்திய பாதுகாப்பு படை என 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
<h3>ஸ்ட்ராங் ரூமில் ஓடிய ஜனநாயகன் படம்</h3>
இந்த கண்காணிப்பு கேமராக்களை கையாளுவதற்கு தனியாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ட்ராங் ரூமின் உள்ளே பணியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு ஊழியரான ஒருவர் தனது லேப் டாப்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன்படத்தை திருட்டுத்தனமாக பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும், அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "ஓட்டு பெட்டி வர்ற இடத்துல கூட நம்ம தளபதி என்ட்ரி தான்" என்ற வாசகத்தை குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cbi-officials-are-investigating-a-rs-422-crore-scam-at-neyveli-nlc-74760.html" target="_blank" rel="noopener">NLC ஊழல் விவகாரம்.. ரூ.422 கோடி முறைகேடு புகாரில் சிபிஐ அதிரடி விசாரணை.. சிக்கும் முக்கிய அதிகாரிகள்?</a>
<h3>சமூக வலைதளங்களில் வைரலான பதிவு</h3>
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவு காவல்துறை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோரின் கவனத்திற்கு சென்றது. பின்னர், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தல் வழங்கினார். அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா கண்காணிப்பாளரான யுவராஜ் என்பது தெரியவந்தது.
<h3>ஸ்ட்ராங் ரூம் கேமரா ஊழியர் அதிரடி கைது</h3>
இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில், கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜ் என்ற இளைஞரை கைது செய்தனர். ஏற்கனவே, வாக்குப்பதிவு நாளில் தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்துக்கு வாக்களித்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் திருட்டுத்தனமாக ஜனநாயகன் படத்தை பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mother-kills-son-after-attacking-him-with-a-stone-in-madurai-74767.html" target="_blank" rel="noopener">குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு.. மது போதையில் அடிக்கடி தகராறு.. மன வேதனையில் மகனை கொன்ற தாய்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மதுரையில் மீனாட்சி &#8211; சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்.. பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/religion/madurai-meenakshi-amman-thirukalyanam-festival-celebrated-with-grandeur-lakhs-of-devotees-immersed-74765.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 08:36:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/religion/madurai-meenakshi-amman-thirukalyanam-festival-celebrated-with-grandeur-lakhs-of-devotees-immersed-74765.html</guid>
		            
			

    	<description><![CDATA[Madurai Chithirai thiruvizha 2026: திருக்கல்யாணத்தை அடுத்து, இன்று இரவு 7:30 மணிக்கு சுந்தரேஸ்வரர் தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான 'தேரோட்டம்' நாளை காலை மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/madurai-meenakshi-amman-thirukalyanam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மதுரையில் மீனாட்சி &#8211; சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்.. பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!" /></figure>உலகப்புகழ் பெற்ற <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/madurai-meenakshi-divine-wedding-2026-auspicious-timings-and-worship-rituals-photo-gallery-73898.html" target="_blank" rel="noopener">மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</a> சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை பக்தி பரவசத்துடன் மிகச்சிறப்பாக நடந்தது. மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்த இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 8ஆம் நாள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாள் நிகழ்வாக, மீனாட்சி அம்மன் போரில் தேவர்களை வென்று இறுதியில் சிவபெருமானுடன் போர் புரியும் 'திக் விஜயம்' நிகழ்ச்சி (9ம் நாள்) விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மனாக சௌந்தர்யன் மற்றும் சிவபெருமானாக சட்டம் ராஜசேகரன் ஆகியோர் வேடமணிந்து போர் புரிவது போன்று நடித்துக் காட்டினர்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/religion/madurai-meenakshi-thirukalyanam-2026-auspicious-time-for-women-to-change-thaali-thread-announced-74559.html">மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2026: பெண்கள் தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம் அறிவிப்பு</a></strong></p>

<h3>திருக்கல்யாண வைபவம்:</h3>
<div style="position: relative; overflow: hidden; padding-bottom: 56.25%;"><iframe style="position: absolute;" title="மதுரை திருக்கல்யாணம்" src="https://cdn.jwplayer.com/players/TSTsarx3-pXZr05to.html" width="560" height="315" frameborder="0" scrolling="auto" allowfullscreen="allowfullscreen"></iframe></div>
மதுரை சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று காலை, கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வண்ண மலர்களாலும், பட்டுத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினர். அதிகாலை 4 மணி அளவில், சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, ஊர்வலமாகச் சென்று ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினார்கள்.

சரியாக இன்று காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் (திருமாங்கல்யம்)சூட்டப்பட்டது. அப்போது வானில் இருந்து மலர்கள் தூவப்பட்டது போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
<h3>கூடி நின்ற பக்தர்கள்:</h3>
இந்த வைபவத்தைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர். திருக்கல்யாணம் நடந்து முடிந்த தருணத்தில், அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் மாங்கல்யப் பாக்கியம் நிலைக்க வேண்டி, புதிய மாங்கல்யக் கயிற்றை மாற்றிக் கொண்டனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் மிகத் தீவிரமாக மேற்கொண்டிருந்தன.
<h3>முன்னேற்பாடு பணிகள்:</h3>
இந்த விழாவிற்காக கடந்த சில நாட்களாகவே மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னதாக, சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் எல்.இ.டி (LED) திரைகள் அமைக்கப்பட்டு, திருக்கல்யாண நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/madurai-meenakshi-divine-wedding-2026-auspicious-timings-and-worship-rituals-photo-gallery-73898.html">மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2026.. சுப நேரமும், வழிபாட்டு முறைகளும்..</a></strong></p>

<h3>இன்றைய இரவு மற்றும் நாளை நிகழ்வுகள்:</h3>
திருக்கல்யாணத்தை அடுத்து, இன்று இரவு 7:30 மணிக்கு சுந்தரேஸ்வரர் தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான 'தேரோட்டம்' நாளை காலை மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மதுரை மாநகரமே பக்தி வெள்ளத்தில் மூழ்கியுள்ள இந்த சித்திரைத் திருவிழாவிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு.. மது போதையில் அடிக்கடி தகராறு.. மன வேதனையில் மகனை கொன்ற தாய்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/mother-kills-son-after-attacking-him-with-a-stone-in-madurai-74767.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 08:11:02 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/mother-kills-son-after-attacking-him-with-a-stone-in-madurai-74767.html</guid>
		            
			

    	<description><![CDATA[Madurai Crime: மதுரையில் மது போதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த மகனை பெற்ற தாயை அம்மி கல்லை போட்டு துடிக்கதுடிக்க கொலை செய்தார். இந்த சம்பவத்தில் அந்த பெண் கைது செய்யப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/murder-crime.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு.. மது போதையில் அடிக்கடி தகராறு.. மன வேதனையில் மகனை கொன்ற தாய்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-metropolitan-area-traffic-changes-have-been-made-in-the-occasion-of-chithirai-festival-74515.html" target="_blank" rel="noopener">மதுரை பெருங்குடி</a> ஆதிசிவன் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள் ( 30 வயது). இவருக்கு திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் பொற்கொடியுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், மது போதைக்கு அடிமையான சிவபெருமாள், தனது தாய் பொற்கொடியிடம் அடிக்கடி மது அருந்துவதற்கு பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், மது போதையில் வீட்டுக்கு வந்து அடிக்கடி பொற்கொடியுடன், சிவபெருமாள் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல நேற்று சிவபெருமாள் மது போதையில் வீட்டுக்கு வந்ததுடன், தனது தாய் பொற்கொடியிடம் வீண் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மது போதையில் வீட்டிலேயே படுத்து தூங்கி உள்ளார். தினமும் மது போதையில் வந்து தன்னிடம் தகராறு செய்து வருவதை எண்ணி மனவேதனை அடைந்த பொற்கொடி வீட்டில் இருந்த அம்மி கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த சிவபெருமான் தலையில் போட்டார்.
<h3>தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த மகன்</h3>
இதில், தலையில் இருந்து ரத்தம் பிளிரிய நிலையில், துடிக்க துடிக்க சிவபெருமான் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது சிவபெருமாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். அவரது அருகில் தாய் பொற்கொடி கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருந்தார். பின்னர் இது தொடர்பாக பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவபெருமானின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக அமரர் ஊர்தி மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-perambur-nomination-petition-madras-high-court-dismissed-the-petition-seeking-review-74557.html" target="_blank" rel="noopener">விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!</a>
<h3>போலீசாரிடம் பொற்கொடி அளித்த வாக்குமூலம்</h3>
இதைத் தொடர்ந்து, அவரது தாய் பொற்கொடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், எனது மகன் சிவபெருமாள் தினமும் மதுபோதையில் வந்து என்னிடம் தகராறு செய்து வந்தார். குடிப்பதற்காக தினமும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால், மனவேதனை அடைந்த நான் அவரை கொலை செய்ததாக கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்தார்.
<h3>மதுரை பகுதியில் பெரும் பரபரப்பு</h3>
இதைத் தொடர்ந்து, பொற்கொடி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மதுரையில் மது போதையில் தகராறு செய்து வந்த மகனை, பெற்ற தாயே மன வேதனையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html" target="_blank" rel="noopener">தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>NLC ஊழல் விவகாரம்.. ரூ.422 கோடி முறைகேடு புகாரில் சிபிஐ அதிரடி விசாரணை.. சிக்கும் முக்கிய அதிகாரிகள்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cbi-officials-are-investigating-a-rs-422-crore-scam-at-neyveli-nlc-74760.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 07:43:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cbi-officials-are-investigating-a-rs-422-crore-scam-at-neyveli-nlc-74760.html</guid>
		            
			

    	<description><![CDATA[Neyveli NLC Scam CBI Investigating ; கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெய்வேலி என். எல். சி. சுரங்கத்தில் ரூ.422 கோடி ஊழல் நிகழ்ந்தததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/nlc-company-cbi-investigation.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="NLC ஊழல் விவகாரம்.. ரூ.422 கோடி முறைகேடு புகாரில் சிபிஐ அதிரடி விசாரணை.. சிக்கும் முக்கிய அதிகாரிகள்?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/virudhunagar-vanaja-cracker-factory-accident-incident-owner-arrested-74552.html" target="_blank" rel="noopener">கடலூர் மாவட்டம்</a>, நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் ( பழுப்பு நிலக்கரி) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தலபிரா அனல் மின் திட்டத்துக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தங்களில், மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் ஆகியவை மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும், நகர்புற கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்கள் நியமன அடிப்படையில் தன்னிச்சையாக வழங்கப்பட்டதன் காரணமாக அந்த பணிகளுக்கான திட்ட செலவு ரூ.524.50 கோடியாக உயர்ந்தது. மேலும், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/airfares-to-chennai-in-tamil-nadu-have-been-increased-several-times-74538.html" target="_blank" rel="noopener">என்எல்சி நிறுவனத்தில்</a> சேகரமாகும் சாம்பலுக்கு சந்தை மதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், போக்குவரத்து ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஒரு டன் சாம்பலுக்கு ரூ.1 என்ற அடிப்படையில் முறைகேடாக ஒப்பந்தங்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
<h3>என்எல்சி நிறுவனத்தில் ரூ.422 கோடி முறைகேடு</h3>
மேலும், சமூக நலத்திட்டங்களுக்காக செலவு செய்யப்படும் சமூக பொறுப்பு நிதியில் மிகப்பெரிய அளவு மோசடி நிகழ்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்காக போலி அங்கீகார கடிதம் வழங்கப்பட்டதுடன், என்எல்சி நிறுவனத்தின் வங்கி பரிவர்த்தனைகளிலும் ஏராளமான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. என்எல்சி சுரங்க வளாக பகுதியில் சுமார் 73 ஆயிரம் டன் அளவுக்கு சட்ட விரோதமாக செம்மண் வெட்டி எடுத்து கடத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளில் தற்போது வரை என்எல்சி நிறுவனத்தில் ரூ.422 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை சிபிஐ அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-perambur-nomination-petition-madras-high-court-dismissed-the-petition-seeking-review-74557.html" target="_blank" rel="noopener">விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!</a>
<h3>சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு</h3>
இந்த புகார் மனுவானது கடந்த 2025- ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்டிருந்தது. மேலும், இந்த புகார் மனு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதில், தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதே நபர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை அண்மையில் நடைபெற்ற நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு முதல் 2025- ஆம் ஆண்டு வரை என். எல். சி. யில் ஊழல் நடந்திருப்பதாக மனுதாரர் வழக்கு தொடுத்துள்ளார்.
<h3>முதல் கட்ட விசாரணையில் சிபிஐ அதிகாரிகள்</h3>
இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணை மேற்கொண்டு, இதில், முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை என அனைத்து தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html" target="_blank" rel="noopener">தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு &#8216;போட்டா போட்டி&#8217;..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 07:31:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/selvaperunthagai-to-step-down-after-election-results-heavy-competition-for-new-tn-congress-president-post-74756.html</guid>
		            
			

    	<description><![CDATA[இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் மே 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/selvaperunthagai-congress.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு &#8216;போட்டா போட்டி&#8217;.." /></figure><a href="https://www.tv9tamilnews.com/topic/tamil-nadu-assembly-election" target="_blank" rel="noopener">சட்டசபை தேர்தல்</a> முடிவுக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. குறிப்பாக, கூட்டணி இறுதியாவதற்கு முன், கட்சியில் ஒரு தரப்பினர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க அழுத்தம் கொடுத்தது, திமுகவுடன் கடும் மோதல் போக்கை ஏற்படுத்தியது என கூட்டணி அமைப்பதற்கு முன்பு அக்கட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவின. இதற்கிடையே, கடும் இழுபறிக்கு பின்னர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/senior-bjp-leader-tamilisai-soundararajan-criticizes-chief-minister-mk-stalin-and-udhayanidhi-stalin-tour-74532.html">முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!</a></strong></p>

<h3>அதிருப்தியில் காங்கிரஸ் நிர்வாகிகள்:</h3>
இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மீது ஜோதிமணி எம்.பி. கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றிவரும் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் புகார் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
<h3>புதிய தலைவரை நியமிக்க ஆலோசனை:</h3>
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது நிருபர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, ‘தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் பதவியில் இருந்து விலக உள்ளேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. முழுக்க முழுக்க ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்காக பணி செய்ய உள்ளேன். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை’ எனக் கூறினார். செல்வப்பெருந்தகையின் இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்பட்டது. இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் மே 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
<h3>தலைவர் பட்டியலில் யார் யார்?</h3>
மாநில தலைவர் பதவியை பிடிக்க கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு ஆகியோரும் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை பெற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மாநில தலைவர் பதவிக்கு தகுதியான 5 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்ய கிரிஷ் சோடங்கருக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/dmk-resorts-to-thuggery-out-of-fear-of-defeat-tvk-adhav-arjuna-levels-severe-allegation-74404.html" target="_blank" rel="noopener">“தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!</a></strong>
<h3>புதிய நபருக்கே வாய்ப்பு?</h3>
அந்தவகையில், புதியவர்களும், ஏற்கனவே தலைவராக இருந்தவர்களின் சிலரின் பெயர்கள் தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால், கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து செல்லும் ஒரு புதிய நபரை மாநில தலைவராக நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில தலைவரை தேர்வு செய்யும் பணியினை ரகசியமாக மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, மே 15ம் தேதிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாக்கு எண்ணும் பணி.. இந்த துறை ஊழியர்களுக்கு விலக்கு.. தேர்தல் ஆணையம் அதிரடி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/ec-ordered-not-to-involve-rural-development-department-in-tamil-nadu-vote-counting-process-74753.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 07:07:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/ec-ordered-not-to-involve-rural-development-department-in-tamil-nadu-vote-counting-process-74753.html</guid>
		            
			

    	<description><![CDATA[Rural Development Department : தமிழகத்தில் மே 4- ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குகள் எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/02/election-commission-tamilnadu-govt-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்கு எண்ணும் பணி.. இந்த துறை ஊழியர்களுக்கு விலக்கு.. தேர்தல் ஆணையம் அதிரடி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-heavy-rainfall-warning-on-30th-april-and-temperature-to-rise-above-40-degree-celcius-in-certain-districts-74606.html" target="_blank" rel="noopener">தமிழகம்</a> உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், மேற்குவங்க மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 2- ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 4- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/may-4th-result-day-vote-counting-for-tamil-nadu-assembly-election-2026-begins-with-postal-vote-74686.html" target="_blank" rel="noopener">வாக்கு எண்ணும் பணிகளில்</a> ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
<h3>பாதியில் நிறுத்தப்பட்ட ஊரக வளர்ச்சி பணிகள்</h3>
தற்போது தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் உள்ள ஊரக பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் அடிப்படை தேவைக்கான குடிநீர் மற்றும் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தொடங்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வாக்கு எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை ஈடுபடுத்தக் கூடாது. மேலும், ஊரக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/music-director-james-vasanthan-car-damaged-by-tvk-party-members-police-informs-there-is-no-political-connection-in-this-incident-74692.html" target="_blank" rel="noopener">இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரை உடைத்தது த.வெ.கவினரா? போலீஸ் சொன்ன விளக்கம்..</a>
<h3>தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள்</h3>
பொதுவாகவே, ஒரு மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், அந்த தேர்தல் பணிகளில் அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு தேர்தல் ஊழியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். அவர்கள் தங்களது பொதுவான பணிகளை விட தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்துவதற்கான வாக்குச்சாவடி தேர்வு செய்தல், வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல்.
<h3>தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு</h3>
வாக்குச்சாவடி பகுதிகளில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுதல் என்பன உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஊழியர்கள் செய்து வருவர். இதேபோல, வாக்குகள் எண்ணும் பணியிலும் இதே ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி பணிகள் தேர்தல் பணிகள் காரணமாக கிடப்பில் கிடக்கின்றன. எனவே, இந்த பணிகளை தொய்வின்றி துரிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காகவே ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களை வாக்கு எண்ணும் பணிகள் ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-scorching-heat-to-torment-rain-is-also-in-the-forecast-chennai-imd-alert-74746.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.. மழையும் இருக்கு.. வானிலை அப்டேட் இதோ..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விஜய் நள்ளிரவில் திடீர் பயணம்.. திருச்செந்தூரில் அதிகாலை சுவாமி தரிசனம்.. எதிரிகளை வீழ்த்த சிறப்பு யாகம்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-leader-vijay-darshan-subramaniya-swamy-temple-in-thiruchendur-74747.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 06:33:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-leader-vijay-darshan-subramaniya-swamy-temple-in-thiruchendur-74747.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tvk Leader Vijay Swamy Darshan: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அங்கு, அரசியலை எதிரிகளை வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு யாகம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/vijay-dharsan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விஜய் நள்ளிரவில் திடீர் பயணம்.. திருச்செந்தூரில் அதிகாலை சுவாமி தரிசனம்.. எதிரிகளை வீழ்த்த சிறப்பு யாகம்?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijays-tvk-name-appears-on-govt-bus-digital-board-in-nellai-sparks-row-74663.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்</a> முடிவடைந்த நிலையில், மே 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல்வேறு இடங்களில் சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், தேர்தல் மற்றும் தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஓய்வெடுப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijays-tvk-name-appears-on-govt-bus-digital-board-in-nellai-sparks-row-74663.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்</a> ஆன்மீக பயணமாக நேற்று நள்ளிரவு திடீரென திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இதற்காக அவர், தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையத்துக்கு சென்றடைந்தார்.
<h3>பட்டு வேஷ்டி - பட்டு சட்டையில் விஜய் தரிசனம்</h3>
அங்கு, விஜயை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடினர். மேலும், கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு, பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் தவெக தலைவர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 28) அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/may-4th-result-day-vote-counting-for-tamil-nadu-assembly-election-2026-begins-with-postal-vote-74686.html" target="_blank" rel="noopener">62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. முதலில் தபால் வாக்கு – தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்</a>
<h3>எதிரிகளை வீழ்த்த விஜய் சிறப்பு யாகம்</h3>
முன்னதாக, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வேல் வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவும், அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் சத்குரு சம்ஹார யாகம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே, தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்ததாக கூறப்படுகிறது. இந்த யாகத்தில் விஜய் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மேற்கொள்ள உள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta">விஜய் அண்ணனுக்கு திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பாக வேல் பரிசாக வழங்கப்பட்டது 🤩 <a href="https://t.co/iejxEFleIc">pic.twitter.com/iejxEFleIc</a></p>
— KERALA VIJAY FANS CLUB (@KVFC_Official) <a href="https://twitter.com/KVFC_Official/status/2048927947223151052?ref_src=twsrc%5Etfw">April 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>ஜோதிடர்கள் கூறியதன் அடிப்படையில்...</h3>
மேலும், விஜய்க்கு நெருக்கமான சிலர் இந்த யாகத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அந்த கட்சியினர் வட்டாரத்தில் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் இந்து மத சடங்குகள் மீது அதிக நம்பிக்கை உடையவர். இதனால், கட்சி ஆரம்பித்தது முதல் ஜோதிடரின் அனுமதி இல்லாமல் எதையும் செய்தது கிடையாது. இதனாலையே, கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய இடத்துக்கு விஜய் வளர்ந்துள்ளார். தற்போது, ஜோதிடர்கள் கூறியதன் அடிப்படையிலேயே, விஜய் இந்த யாகத்தை நடத்த உள்ளார் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/music-director-james-vasanthan-car-damaged-by-tvk-party-members-police-informs-there-is-no-political-connection-in-this-incident-74692.html" target="_blank" rel="noopener">இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரை உடைத்தது த.வெ.கவினரா? போலீஸ் சொன்ன விளக்கம்..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.. மழையும் இருக்கு.. வானிலை அப்டேட் இதோ..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-scorching-heat-to-torment-rain-is-also-in-the-forecast-chennai-imd-alert-74746.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 06:29:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-scorching-heat-to-torment-rain-is-also-in-the-forecast-chennai-imd-alert-74746.html</guid>
		            
			

    	<description><![CDATA[Weather Update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 1ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/heat-wave-weather.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.. மழையும் இருக்கு.. வானிலை அப்டேட் இதோ.." /></figure><strong>Tamilnadu Weather Today:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-heavy-rainfall-warning-on-30th-april-and-temperature-to-rise-above-40-degree-celcius-in-certain-districts-74606.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகள் முதல் குமரிக்கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொளுத்தும் வெப்பத்திற்கு இடையே மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/centre-imposes-restrictions-on-firecracker-manufacturing-amid-rising-heat-in-tamil-nadu-74458.html">வெயிலின் தாக்கம்: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்</a></strong>
<h3>இன்று மழைக்கு வாய்ப்பு:</h3>
அந்தவகையில், இன்று (ஏப்.6) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
<h3>வரும் நாட்களில் மழை நிலவரம்:</h3>
நாளை (ஏப்.29) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.30 ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மே.1ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மே.2ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
<h3>அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3>
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 1ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-food-safety-department-issues-strict-guidelines-for-ice-cream-manufacturers-amid-summer-heat-74463.html">ஐஸ்கிரீமில் கலப்படம்? உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை – என்ன நடந்தது?</a></strong>
<h3>சென்னை வானிலை நிலவரம்:</h3>
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரை உடைத்தது த.வெ.கவினரா? போலீஸ் சொன்ன விளக்கம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/music-director-james-vasanthan-car-damaged-by-tvk-party-members-police-informs-there-is-no-political-connection-in-this-incident-74692.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 21:48:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/music-director-james-vasanthan-car-damaged-by-tvk-party-members-police-informs-there-is-no-political-connection-in-this-incident-74692.html</guid>
		            
			

    	<description><![CDATA[கார் கண்ணாடியை உடைத்த வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பதிவில், “எனது கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் போலீசார் விசாரித்ததில் எந்த அரசியல் தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/james-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரை உடைத்தது த.வெ.கவினரா? போலீஸ் சொன்ன விளக்கம்.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:e112608c-9c82-45ce-961b-5416ab3b6b34-4" data-testid="conversation-turn-10" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="23d8b385-c5b4-478e-b53a-bada461beb65" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="90" data-end="235"><strong>சென்னை, ஏப்ரல் 27, 2026:</strong> இசையமைப்பாளர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">ஜேம்ஸ் வசந்தன்</span></span> அவர்களின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். சென்னையில் வசித்து வரும் அவர், சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தனது சமூக வலைதளப் பக்கங்களில் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">திராவிட முன்னேற்றக் கழகம்</span></span>-வை ஆதரித்தும், <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">தமிழக வெற்றிக்கழகம்</span></span>-த்தை கடுமையாக விமர்சித்தும் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.</p>
<p data-start="474" data-end="791">இந்த நிலையில், அவர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">கொட்டிவாக்கம்</span></span> பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதனால், இந்தச் சம்பவத்திற்கு அரசியல் பின்னணி இருக்கலாம் என்றும், தமிழக வெற்றிக்கழகத்தினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவின.</p>
<p data-start="474" data-end="791">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-food-safety-and-standards-authority-of-india-to-impose-5000-fine-for-selling-substandard-drinking-water-cans-74688.html">தரமற்ற கேன் தண்ணீர் – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை – என்ன நடந்தது?</a></p>

<h3 data-start="474" data-end="791">கார் தாக்குதலில் அரசியல் பின்னணி இல்லை:</h3>
<p data-start="793" data-end="1052">இதையடுத்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜேம்ஸ் வசந்தன் தனது காரை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர், காரின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.</p>
<p data-start="793" data-end="1052">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/lpg-tanker-lorry-strike-has-been-temporarily-cancelled-after-talks-with-indian-oil-officials-74613.html">சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது.. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்..</a></p>
<p data-start="1054" data-end="1309">இந்த விவகாரத்தில் அரசியல் காரணம் இருக்கலாம் என்று கருதி ஜேம்ஸ் வசந்தன் முதலில் புகார் அளித்திருந்தார். ஆனால், பின்னர் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்பது உறுதியாகியதால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="1311" data-end="1415">இதனைத் தொடர்ந்து, கார் கண்ணாடியை உடைத்த வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பதிவில், “எனது கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் போலீசார் விசாரித்ததில் எந்த அரசியல் தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தரமற்ற கேன் தண்ணீர்  &#8211; சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை &#8211; என்ன நடந்தது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-food-safety-and-standards-authority-of-india-to-impose-5000-fine-for-selling-substandard-drinking-water-cans-74688.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 21:16:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-food-safety-and-standards-authority-of-india-to-impose-5000-fine-for-selling-substandard-drinking-water-cans-74688.html</guid>
		            
			

    	<description><![CDATA[Poor Quality Drinking Water Cans : தமிழ்நாடு முழுவதும் சுமார் 1500க்கும் மேற்பட்ட கேன் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடைகளில் விற்கப்படும் கேன் தண்ணீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/water-can-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தரமற்ற கேன் தண்ணீர்  &#8211; சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை &#8211; என்ன நடந்தது?" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 27 :</strong> தரமற்ற <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/drinking-water-can-prices-hiked-in-tamil-nadu-after-20-years-65719.html" target="_blank" rel="noopener">கேன் தண்ணீர்</a>  விற்கப்படுவது <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-food-safety-department-issues-strict-guidelines-for-ice-cream-manufacturers-amid-summer-heat-74463.html" target="_blank" rel="noopener">உணவு பாதுகாப்புத்துறை</a> அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தண்ணீர் கேன்களை 30 முறைக்கு மேல் மறு சுழற்சி செய்யக்கூடாது, கேன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் தரமில்லாத கேன் குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.5000 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
<h3>உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை</h3>
தமிழகத்தில் கோட வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கிக் குடிப்பது தொடர்கதையாகி வருகிறது. அப்படி விற்கப்படும் ஒரு தண்ணீர் கேன் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப ரூ. 15 முதல் ரூ. 30 வரை விற்பனையாகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijays-tvk-name-appears-on-govt-bus-digital-board-in-nellai-sparks-row-74663.html">மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் – திருநெல்வேலியில் பரபரப்பு – என்ன நடந்தது?</a></strong>

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1500க்கும் மேற்பட்ட கேன் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான வாட்டர் கேன்கள் விற்பனையாகின்றன. இந்த நிலையில் கடைகளில் விற்கப்படும் கேன் தண்ணீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கேன் குடிநீரின் தரத்தை உணவு பாதுகாப்புத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் செயல்படும் குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தரமில்லாத கேன் குடிநீர் விப்னை செய்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள உத்தரவின் படி கேன் வாட்டரில் நிறுவனத்தின் பெயர் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெறுவது அவசியம். என அறிவுறுத்தியுள்ளது.

<strong>இதையும் படிக்க :  <a href="https://www.tv9tamilnews.com/business/is-important-changes-implemented-from-may-2026-for-gas-cylinder-booking-74550.html">கேஸ் சிலிண்டர் முன்பதிவில் அமலுக்கு வரும் மாற்றம்?.. வெளியான முக்கிய தகவல்!</a></strong>

மேலும் கேன் தண்ணீரை சூரிய ஒளிபடும்படி சேமித்து வைக்கக் கூடாது, கேன்களை 30 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் குடிநீரில் கால்சியம் 10 முதல் 75 மி.கி என்ற அளவிலும் மெக்னீசியம் 5 முதல் 30 மில்லி கிராம் என்ற அளவிலும் இருப்பதையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. முதலில் தபால் வாக்கு &#8211; தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/may-4th-result-day-vote-counting-for-tamil-nadu-assembly-election-2026-begins-with-postal-vote-74686.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 21:04:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/may-4th-result-day-vote-counting-for-tamil-nadu-assembly-election-2026-begins-with-postal-vote-74686.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/evm.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. முதலில் தபால் வாக்கு &#8211; தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்" /></figure><p data-start="94" data-end="247"><strong>ஏப்ரல் 27, 2026:</strong> அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், ஏப்ரல் 23ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.</p>
<p data-start="422" data-end="566">இந்த நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:</p>
<p data-start="619" data-end="805">2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும்.</p>
<p data-start="619" data-end="805">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/lpg-tanker-lorry-strike-has-been-temporarily-cancelled-after-talks-with-indian-oil-officials-74613.html">சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது.. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்..</a></p>

<h3 data-section-id="mih8wp" data-start="807" data-end="837">வாக்கு எண்ணும் வழிமுறைகள்:</h3>
<ul data-start="839" data-end="1211">
 	<li data-section-id="18zd8qw" data-start="839" data-end="890">வாக்கு எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு துவங்கும்.</li>
 	<li data-section-id="1093ks4" data-start="891" data-end="959">முதலில் காலை 8:00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.</li>
 	<li data-section-id="1w0jfuq" data-start="960" data-end="1086">30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும்.</li>
 	<li data-section-id="vw94we" data-start="1087" data-end="1211">EVM வாக்குகள் எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்த பின்பே தொடங்கப்படும்.</li>
</ul>
<h3 data-start="1213" data-end="1250">ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும்:</h3>
<ul data-start="1251" data-end="1359">
 	<li data-section-id="193mq1a" data-start="1251" data-end="1285">ஒரு பகுதியில் தபால் வாக்குகள்,</li>
 	<li data-section-id="xo9k4j" data-start="1286" data-end="1359">மற்றொரு பகுதியில் EVM வாக்குகள், தனித்தனியாக மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ARO) மேற்பார்வை மேற்கொள்வார்.</li>
 	<li data-section-id="xo9k4j" data-start="1286" data-end="1359">500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் எண்ணிக்கை நடைபெறும்.</li>
</ul>
<h3 data-section-id="1oigv0f" data-start="1526" data-end="1546">தபால் வாக்குகள்:</h3>
<ul data-start="1548" data-end="1984">
 	<li data-section-id="1908f7s" data-start="1548" data-end="1675">தேர்தல் பணியில் ஈடுபட்ட மொத்த 3.60 இலட்சம் அலுவலர்களில், 2.88 இலட்சம் (80%) பேர் தபால் வாக்குகளின் மூலம் வாக்களித்துள்ளனர்.</li>
 	<li data-section-id="1geqgbv" data-start="1676" data-end="1867">காவல்துறை அலுவலர்கள், Zonal/Sector அலுவலர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சேர்த்து மொத்தம் 3.36 இலட்சம் தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர்.</li>
 	<li data-section-id="12xhr9t" data-start="1868" data-end="1984">மேலும், 1.10 இலட்சம் அலுவலர்கள் ‘Election Duty Certificate’ மூலம் நேரடியாக வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர்.</li>
</ul>
<h3 data-section-id="1pvg3pd" data-start="1986" data-end="2008">சிறப்பு பிரிவுகள்:</h3>
<ul data-start="2010" data-end="2342">
 	<li data-section-id="1uk03ze" data-start="2010" data-end="2174">85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த Form 12D விண்ணப்பங்களின் அடிப்படையில், 1.73 இலட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களித்துள்ளனர்.</li>
 	<li data-section-id="1h5w8iq" data-start="2175" data-end="2342">சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள், வாக்கு எண்ணிக்கை நாளான 04.05.2026 காலை 8:00 மணி வரை பெறப்படும்.</li>
</ul>
<p data-start="2344" data-end="2521">மேலும், வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்தவர்களுடன் கூடுதலாக 6.37 இலட்சம் வாக்காளர்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இதனால், வாக்கு எண்ணிக்கை நாள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, வெளிப்படையான மற்றும் சீரான எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது.. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/lpg-tanker-lorry-strike-has-been-temporarily-cancelled-after-talks-with-indian-oil-officials-74613.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 20:36:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/lpg-tanker-lorry-strike-has-been-temporarily-cancelled-after-talks-with-indian-oil-officials-74613.html</guid>
		            
			

    	<description><![CDATA[இன்று காலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் இயக்கம் பாதிக்கப்பட்டது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tanker-lorry-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது.. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்.." /></figure><div class="relative basis-auto flex-col -mb-(--composer-overlap-px) pb-(--composer-overlap-px) [--composer-overlap-px:28px] grow flex">
<div class="flex flex-col text-sm"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:e112608c-9c82-45ce-961b-5416ab3b6b34-1" data-testid="conversation-turn-4" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="c496278e-602f-4609-986e-b38b16e56cdd" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="43" data-end="259"><strong>ஏப்ரல் 27, 2026:</strong> தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. காலை முதலாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்தப் போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனம் வாடகை நிலுவைத் தொகையை நீண்டநாளாக வழங்காததை எதிர்த்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.</p>

<h3 data-start="43" data-end="259">போராட்டத்தில் ஈடுபட்ட டேங்கர் லாரி:</h3>
<p data-start="592" data-end="903">இன்று காலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் இயக்கம் பாதிக்கப்பட்டது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்தது.</p>
<p data-start="905" data-end="1182">இந்த திடீர் வேலைநிறுத்தத்தால், தென் மாநிலங்கள் முழுவதும் கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவானது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எல்பிஜி சிலிண்டர்கள் மட்டுமின்றி, ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டது.</p>
<p data-start="1184" data-end="1345">மேலும், பல இடங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டர்களின் விநியோகம் தாமதமாகும் நிலையும் உருவானது. இதனால் பொதுமக்கள் இடையே கவலை நிலவும் சூழல் ஏற்பட்டது.</p>

<h3 data-start="1184" data-end="1345">வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்:</h3>
<p data-start="1347" data-end="1658">இந்த நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அவசர பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள வாடகைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் கட்டணங்கள் தாமதமாகாமல் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.</p>
<p data-start="1347" data-end="1658">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijays-tvk-name-appears-on-govt-bus-digital-board-in-nellai-sparks-row-74663.html">மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் – திருநெல்வேலியில் பரபரப்பு – என்ன நடந்தது?</a></p>
<p data-start="1660" data-end="1881">அத்துடன், உரிமையாளர்கள் முன்வைத்த பிற கோரிக்கைகள்—எரிபொருள் செலவுக்கான திருத்தம், பராமரிப்பு செலவுகள் உயர்வு, ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு வசதிகள் போன்றவை—பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.</p>
<p data-start="1883" data-end="2088">இதனைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>

<h3 data-start="1883" data-end="2088">சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது:</h3>
<p data-start="2090" data-end="2312">இதன் விளைவாக, லாரிகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கம் தொடங்கியுள்ளன. எனவே, வரவிருக்கும் நாட்களில் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது எனவும், தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p data-start="2314" data-end="2546" data-is-last-node="" data-is-only-node="">இதே நேரத்தில், நிலுவைத் தொகை வழங்கும் செயல்முறை விரைவில் நிறைவேற்றப்படுமா என்பது மீதான கண்காணிப்பில் சங்கம் தொடர்ந்து இருக்கும் என்றும், வாக்குறுதிகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் வாய்ப்பும் நிராகரிக்கப்படவில்லை.</p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் &#8211; திருநெல்வேலியில் பரபரப்பு &#8211; என்ன நடந்தது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijays-tvk-name-appears-on-govt-bus-digital-board-in-nellai-sparks-row-74663.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 18:44:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijays-tvk-name-appears-on-govt-bus-digital-board-in-nellai-sparks-row-74663.html</guid>
		            
			

    	<description><![CDATA[திருநெல்வேலி மாவட்டம் வழியாக சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்றின் பின்புறம் உள்ள எல்இடி திரையில் வழக்கமாக இருக்க வேண்டிய ஊர் பெயர்களுக்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் டிவிகே என்ற பயெர்கள் மாறி மாறி தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tvk-bus-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் &#8211; திருநெல்வேலியில் பரபரப்பு &#8211; என்ன நடந்தது?" /></figure><strong>திருநெல்வேலி, ஏப்ரல் 27 :</strong> விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் விஜய்யின் தவெக எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் தவெகவின் பெயர் திருநெல்வேலி அரசு பேருந்தின் டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன் திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது பரபரப்பை எஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத நபர்கள் அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையின் மதர்போர்டை ஹேக் செய்து பெயர் மாற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
<h3>மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர்</h3>
திருநெல்வேலி மாவட்டம் வழியாக சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்றின் பின்புறம் உள்ள எல்இடி திரையில் வழக்கமாக இருக்க வேண்டிய ஊர் பெயர்களுக்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் டிவிகே என்ற பயெர்கள் மாறி மாறி தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசு பேருந்தின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் ஒரு அரசியல் கட்சியின் பெயர் எப்படி வந்தது என்பது குறித்து சமூக வலைதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் இடம் பெறுவது இது முதன்முறை அல்ல. கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்திலும் டிஜிட்டல் பெயர் பலகையில் தமிழக வெற்றிக் கழகம் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையினை இயக்கும் மதர்போர்டு சட்ட விரோதமாக ஹேக் செய்யப்பட்டது தெரியுந்தது.

இதனையடுத்து டிஜிட்டல் எல்ஜிடி தவகல பலகையை வழங்கும் நிறுவனத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தொழில்நுட்ப பாதுகாப்பை பலப்படுத்தவும். இது போன்ற சம்வபங்கள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிகரிக்கும் ஹீட் ஸ்டிரோக் &#8211; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் ஸ்பெஷல் வார்டுகள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-prepares-special-wards-for-heatstroke-treatment-amid-rising-heat-74628.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 16:15:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-prepares-special-wards-for-heatstroke-treatment-amid-rising-heat-74628.html</guid>
		            
			

    	<description><![CDATA[Heat wave Alert :  தமிழ்நாட்டில் வருகிற மே 4, 2026 அன்று அக்னி நட்சத்திரம் துவங்கவுள்ளது. இந்த நிலையில்  வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/heat-wave-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிகரிக்கும் ஹீட் ஸ்டிரோக் &#8211; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் ஸ்பெஷல் வார்டுகள்" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 27 :</strong> தமிழ்நாட்டில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-meteorologist-pradeep-john-said-temperature-in-chennai-will-exceed-40-degrees-from-may-1-74378.html" target="_blank" rel="noopener">வெப்ப அலை</a> காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மே 4 முதல் தமிழ்நாட்டில் அக்னி வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடுமையாக இருக்கும் என <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-has-stated-there-will-be-rise-in-temperature-and-heat-wave-warning-74006.html" target="_blank" rel="noopener">வானிலை ஆய்வு மையம்</a> அறிவித்த நிலையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
<h3>தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஹீட் ஸ்டிரோக்</h3>
இதற்காக மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 5 படுக்கைகளும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 10 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெப்ப அலை அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கத்தால் ஏற்படும் ஹீட் ஸ்டிரோக் பாதிப்புக்ளுக்காக சிகிச்சை அளிக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/centre-imposes-restrictions-on-firecracker-manufacturing-amid-rising-heat-in-tamil-nadu-74458.html">வெயிலின் தாக்கம்: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்</a></strong>

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் வந்தால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு மருத்துமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையில் 5 படுக்கைகளும், மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் 10 படுக்கைகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து அனைத்து அரசு பொது மருத்துவமனைகள, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஹீட் ஸ்டிரோக் காரணமாக ஏற்படும் மரணங்களை தவிர்க்க சுகாதாரத்துறை அலுவலர்களு்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க பொதுக்கமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-food-safety-department-issues-strict-guidelines-for-ice-cream-manufacturers-amid-summer-heat-74463.html">ஐஸ்கிரீமில் கலப்படம்? உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை – என்ன நடந்தது?</a></strong>

மேலும் வெப்ப மேலும், வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஓஆர்எஸ் (ORS) கரைசல் வழங்கப்பட்டு வருகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. ஒரு பக்கம் கனமழை எச்சரிக்கை.. வானிலை சொல்வது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-heavy-rainfall-warning-on-30th-april-and-temperature-to-rise-above-40-degree-celcius-in-certain-districts-74606.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 14:48:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-heavy-rainfall-warning-on-30th-april-and-temperature-to-rise-above-40-degree-celcius-in-certain-districts-74606.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஒருபுறம் மழை இருந்தாலும், மறுபுறம் வெப்பநிலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக கடலோர பகுதிகளில் சில இடங்களில் ‘அசௌகரியம்’ ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/weather-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. ஒரு பக்கம் கனமழை எச்சரிக்கை.. வானிலை சொல்வது என்ன?" /></figure><div class="flex h-svh w-screen flex-col">
<div class="relative z-0 flex min-h-0 w-full flex-1">
<div class="relative flex min-h-0 w-full flex-1">
<div class="@container/main relative flex min-w-0 flex-1 flex-col -translate-y-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)] pt-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)]">
<div class="@w-sm/main:[scrollbar-gutter:var(--stage-scroll-gutter)] touch:[scrollbar-width:none] group/scroll-root relative flex min-h-0 min-w-0 flex-1 flex-col [scrollbar-gutter:stable] not-print:overflow-x-clip not-print:overflow-y-auto group-data-stream-active/scroll-root:[overflow-anchor:none] scroll-pt-(--header-height) [--sticky-padding-top:var(--header-height)] [--sticky-padding-bottom:0px] [--scroll-root-safe-area-inset-top:calc(var(--sticky-padding-top)+env(safe-area-inset-top,0px))] [--scroll-root-safe-area-inset-bottom:calc(var(--sticky-padding-bottom)+var(--screen-keyboard-height,0px)+env(safe-area-inset-bottom,0px))] [--scroll-root-safe-area-height:calc(100lvh-var(--scroll-root-safe-area-inset-top)-var(--scroll-root-safe-area-inset-bottom))] has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:[--sticky-padding-top:0px] has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:[--sticky-padding-top:0px]" data-scroll-root="" data-scroll-from-top=""><main id="main" class="min-h-0 flex-1">
<div id="thread" class="group/thread flex flex-col min-h-full">
<div class="composer-parent flex flex-1 flex-col focus-visible:outline-0" role="presentation">
<div class="relative basis-auto flex-col -mb-(--composer-overlap-px) pb-(--composer-overlap-px) [--composer-overlap-px:28px] grow flex">
<div class="flex flex-col text-sm"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:e112608c-9c82-45ce-961b-5416ab3b6b34-0" data-testid="conversation-turn-2" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="46cd3855-f3e2-45d8-a69b-529e816b776a" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="67" data-end="386"><strong>வானிலை நிலவரம், ஏப்ரல் 27, 2026:</strong> தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த சூழலில், அடுத்த ஏழு நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.</p>

<h3 data-start="67" data-end="386">இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:</h3>
<p data-start="653" data-end="881">இதன் காரணமாக, ஏப்ரல் 27ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளின் கடலோர இடங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும்.</p>
<p data-start="883" data-end="1039">அதேபோல், ஏப்ரல் 28ஆம் தேதியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.</p>
<p data-start="1041" data-end="1235">ஏப்ரல் 30ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.</p>
<p data-start="1237" data-end="1397">மே 1 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="1237" data-end="1397">3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:</h3>
<p data-start="1399" data-end="1768">ஒருபுறம் மழை இருந்தாலும், மறுபுறம் வெப்பநிலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக கடலோர பகுதிகளில் சில இடங்களில் ‘அசௌகரியம்’ ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p>
<p data-start="1399" data-end="1768">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/ooty-government-botanical-garden-summer-festival-flower-exhibition-to-begin-soon-74568.html">கண்களை கட்டி இழுக்கும் வண்ண மலர்கள்.. விரைவில் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி!</a></p>
<p data-start="1770" data-end="2045">சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டம் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், சென்னையின் சில பகுதிகளில் அசௌகரியமான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="2047" data-end="2261" data-is-last-node="" data-is-only-node="">வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வெப்ப அலை பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அதிக அளவில் நீர்ச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.</p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div>
</div>
</div>
</main></div>
</div>
</div>
</div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மக்களே கோடை விழாவுக்கு தயாரா.. கண்களை கட்டி இழுக்கும் வண்ண மலர்கள்.. விரைவில் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/ooty-government-botanical-garden-summer-festival-flower-exhibition-to-begin-soon-74568.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 12:55:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/ooty-government-botanical-garden-summer-festival-flower-exhibition-to-begin-soon-74568.html</guid>
		            
			

    	<description><![CDATA[Ooty Botanical Garden Flower Exhibition : ஊட்டியில் கோடை விழாவில் மலர்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்கள் அலங்கரித்து வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/flower-exhibition.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மக்களே கோடை விழாவுக்கு தயாரா.. கண்களை கட்டி இழுக்கும் வண்ண மலர்கள்.. விரைவில் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/kolukku-hill-is-a-major-tourist-destination-in-tamil-nadu-73892.html" target="_blank" rel="noopener">நீலகிரி மாவட்டத்தில்</a> அமைந்துள்ள இயற்கை அழகு மற்றும் அங்கு உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாகும். தற்போது தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக நீலகிரியில் <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/located-near-tamil-nadu-puducherry-has-various-tourist-attractions-photo-gallery-71780.html" target="_blank" rel="noopener">மலர்கண்காட்சி</a>, ரோஜா கண்காட்சி, பழ வகை கண்காட்சி மற்றும் வாசனை திரவிய கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான கண்காட்சிகள் கோடை விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விரைவில் மலர்கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
<h3>40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண வண்ண மலர்கள்</h3>
இந்த கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், பிகோனியா, மேரி கோல்ட், சால்வியா, பேன்சி, டாலியா, டெய்ஸி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூத்து குலுங்கி வருகின்றன. இந்த மலர் செடிகள் அனைத்தும் கண்காட்சி மண்டபங்களில் வரிசையாக ஒழுங்குபடுத்தப்பட உள்ளது. தற்போது, பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் மாடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/siruvani-falls-area-in-kutralam-coimbatore-is-a-great-place-for-summer-tourism-in-tamil-nadu-photo-gallery-74283.html" target="_blank" rel="noopener">கொளுத்தும் கோடை வெயிலுக்கு குட்பை.. சிலிர்க்க வைக்கும் சிறுவாணி நீர் வீழ்ச்சி.. ஒரே நாளில் ஒரு ஜாலி ட்ரிப்!</a>
<h3>மலர்களால் பல்வேறு பொருள்கள் செய்யும் பணி</h3>
இதே போல, மலர்களால் ஆன தொட்டிகள் அலங்காரம் செய்யும் பணி, பூங்காவில் டைல்ஸ் பதிக்கும் மேம்பாட்டு பணிகள் ஆகியவை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டும் இன்றி ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் கோடை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கண்களை பறிக்கும் விதமாக லட்சக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த மலர் செடிகளை பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். மேலும், பூங்கா பகுதியில் உள்ள குளம் செயற்கை நீரூற்றாக மாற்றப்பட்டு வருகிறது.
<h3>விரைவில் தொடங்குகிறது மலர் கண்காட்சி</h3>
இதே போல, இந்திய வரைபடத்தின் வடிவமைப்பில் அமைந்துள்ள பகுதி மற்றும் அந்தப் பகுதியில் உள்ள படிக்கட்டுகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாட்டு பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டுக்கான கோடை விழாவில் மலர்கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட உள்ளதாக தோட்ட கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்துள்ள நிலையில், தற்போது நடைபெற உள்ள கோடை விழா அவர்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்திருக்கும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/catherine-falls-is-one-of-the-most-important-tourist-attractions-in-tamil-nadu-photo-gallery-74390.html" target="_blank" rel="noopener">அடர்ந்த காட்டில் அழகான நீர் வீழ்ச்சி.. ஆர்ப்பரித்து கொட்டும் இரட்டை அருவி.. டால்பின் நோஸ் வியூ பாயிண்ட்.. நீலகிரியில் இப்படியொரு இடமா!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு&#8230; நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-perambur-nomination-petition-madras-high-court-dismissed-the-petition-seeking-review-74557.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 11:37:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-perambur-nomination-petition-madras-high-court-dismissed-the-petition-seeking-review-74557.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vijay Perambur Nomination: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்ப மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களில் முரண்பாடு காரணமாக அந்த மனுவை ஆய்வு செய்யக்கோரி  தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/vijay-nomination-petition.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு&#8230; நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!" /></figure>தமிழக சட்டமன்ற தேர்தலில் <a href="http://“தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!" target="_blank" rel="noopener">தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்</a> திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு  சட்டமன்ற தொகுதி மற்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இதில், சொத்து விவகாரத்தை தவெக தலைவர் விஜய் மறைத்ததாக கூறப்படுகிறது. அதாவது, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-ctr-nirmal-kumar-said-bus-services-were-suspended-on-day-of-polling-for-tn-assembly-elections-74238.html" target="_blank" rel="noopener">வேட்பு மனுக்களில்</a> சுமார் ரூ.100 கோடி வரை சொத்துக்கள் மறைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொள்ள கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
<h3>விஜய் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு</h3>
இது தொடர்பாக அந்த தொகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவருக்கு ரூ.12.60 கோடி வழங்கி உள்ளதாக விஜய் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. இது மட்டும் இன்றி தனியார் கல்வி அறக்கட்டளைக்கு அவர் ரூ.20 கோடி வரை பணம் வழங்கியது தொடர்பாக வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை. இது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வது போன்றது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/dmk-resorts-to-thuggery-out-of-fear-of-defeat-tvk-adhav-arjuna-levels-severe-allegation-74404.html" target="_blank" rel="noopener">“தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!</a>
<h3>விஜய் வேட்பு மனு மறு ஆய்வு செய்யக் கோரி மனு</h3>
எனவே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேட்பு மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று திங்கள்கிழமை தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய்யின் வேட்பு மனுவில் உள்ள முரண்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மனு தாரர் தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டது.
<h3>தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி</h3>
இதைத் தொடர்ந்து, மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, தற்போதும் இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தற்போதைய நிலைக்கு தேவையில்லை. எனவே, இந்த மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/senior-bjp-leader-tamilisai-soundararajan-criticizes-chief-minister-mk-stalin-and-udhayanidhi-stalin-tour-74532.html" target="_blank" rel="noopener">முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விருதுநகர் கொடூர வெடி விபத்து சம்பவம்.. வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் கைது.. தனிப்படை செய்த சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/virudhunagar-vanaja-cracker-factory-accident-incident-owner-arrested-74552.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 11:29:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/virudhunagar-vanaja-cracker-factory-accident-incident-owner-arrested-74552.html</guid>
		            
			

    	<description><![CDATA[Virudhunagar Cracker Factory Accident : விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் தலைமறைவாக இருந்து வந்த ஆலையின் உரிமையாளரை தனிப்படை போலீசார் வலை வீசி கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/firecrackers-accident.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விருதுநகர் கொடூர வெடி விபத்து சம்பவம்.. வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் கைது.. தனிப்படை செய்த சம்பவம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/rain-alert-for-several-parts-of-tamil-nadu-today-on-april-27-2026-74510.html" target="_blank" rel="noopener">விருதுநகர் மாவட்டம்</a>, கட்டினார்பட்டியில் வனஜா என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு, அந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 30 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி பட்டாசு ஆலைகள் வெடி பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சுமார் 25 பட்டாசு தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இந்தச் சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்கு முன்பு விருதுநகரில் மற்றொரு பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cctv-cameras-are-mandatory-in-vehicles-transporting-prisoners-for-interrogation-in-chennai-74337.html" target="_blank" rel="noopener">தேசிய மனித உரிமைகள் ஆணையம்</a> தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
<h3>தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்</h3>
மேலும், வெடி விபத்து உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பட்டாசு ஆலையின் உரிமையாளரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஈஸ்வரி உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், பட்டாசு ஆலை உரிமையாளரின் கணவர் முத்துமாணிக்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/nhrc-issues-notice-to-chief-secretary-and-sp-regarding-virudhunagar-cracker-factory-accident-74353.html" target="_blank" rel="noopener">துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!</a>
<h3>வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் கைது</h3>
மேலும், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மற்றும் பட்டாசு ஆலையின் உள்குத்தகைதாரர் முத்துராஜ் மற்றும் வைரமுத்து ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்து வந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ஈஸ்வரியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த ஈஸ்வரியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து, பட்டாசு தொழிலுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
<h3>பட்டாசு ஆலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்</h3>
அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால், இந்த இடைப்பட்ட நேரத்தில் பட்டாசுகளுக்கு மருந்து வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்த போது, முதலில் 3 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகி இருந்தது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து, நடைபெற்று வந்த நிலையில், அடுத்தடுத்து கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இறுதியாக 25 தொழிலாளர்கள் பலியாகி இருந்தது தெரிய வந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/centre-imposes-restrictions-on-firecracker-manufacturing-amid-rising-heat-in-tamil-nadu-74458.html" target="_blank" rel="noopener">வெயிலின் தாக்கம்: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மத்திய அரசுப் பணியிடங்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்பு&#8230; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/central-government-recruitment-2026-multiple-vacancies-in-ssc-upsc-and-defense-sectors-74526.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 10:30:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/central-government-recruitment-2026-multiple-vacancies-in-ssc-upsc-and-defense-sectors-74526.html</guid>
		            
			

    	<description><![CDATA[Central Government Recruitment 2026: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் எம்.டி.எஸ், ஸ்டெனோகிராபர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட 3,700-க்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 10-வது வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்தத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விரிவாகத் தெரிந்துகொண்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/job-alert.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மத்திய அரசுப் பணியிடங்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்பு&#8230; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?" /></figure>இந்திய மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் இந்த வாரம் வெளியாகியுள்ளன. குறிப்பாக பணியாளர் தேர்வாணையம் (SSC), பணத்தாள் அச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பத்தாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் காலக்கெடு முடிவதற்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
<h3>SSC Phase-XIV: 3003 பல்வேறு வகைப்பட்ட பணியிடங்கள்</h3>
மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் வாய்ப்பாக SSC Phase-XIV/2026 அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 3003 காலியிடங்கள் உள்ளன. எம்.டி.எஸ் (MTS), இளநிலை உதவியாளர், நர்சிங் ஆபீசர், மருந்தாளுநர், ஓட்டுநர் மற்றும் ஆய்வக உதவியாளர் எனப் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்கள் இதில் அடங்கும். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 04, 2026 ஆகும்.
<h3>பணத்தாள் அச்சகத்தில் (Nashik) தொழில்நுட்பப் பணியிடங்கள்</h3>
நாசிக் நகரில் அமைந்துள்ள மத்திய அரசின் பணத்தாள் அச்சடிக்கும் தொழிற்சாலையில் (Currency Note Press) காலியாக உள்ள 534 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் டெக்னீஷியன், சூப்பர்வைசர் மற்றும் ஆர்ட்டிஸ்ட் போன்ற பதவிகளுக்கு ஐடிஐ (ITI), டிப்ளோமா, பி.இ/பி.டெக் மற்றும் கலைத் துறை சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அனுபவம் இல்லாத புதியவர்களுக்கும் (Freshers) இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 19, 2026 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
<h3>ஸ்டெனோகிராபர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பணிகளுக்கான அறிவிப்பு</h3>
பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் ஸ்டெனோகிராபர் கிரேடு ‘C’ &amp; ‘D’ பிரிவில் 731 பணியிடங்களும், இந்தி மொழிபெயர்ப்பாளர் (JHT/JTO) பிரிவில் 84 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 12-ஆம் வகுப்பு முடித்து தட்டச்சுத் தகுதி பெற்றவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கும், முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் மொழிபெயர்ப்பாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்க மே 15 வரையிலும், மொழிபெயர்ப்பாளர் பணிக்கு மே 14  வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-metropolitan-area-traffic-changes-have-been-made-in-the-occasion-of-chithirai-festival-74515.html">சித்திரை திருவிழா.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகளுக்கு புதிய நடைமுறை!</a>
<h3>சென்னை மற்றும் அருவங்காடு பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்புகள்</h3>
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ஆவடி (AVNL) மற்றும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையிலும் (Cordite Factory) வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சென்னையில் மருந்தாளுநர் மற்றும் செவிலியர் உதவியாளர் உள்ளிட்ட 9 பணியிடங்களுக்கும், அருவங்காடில் மனிதவளம் மற்றும் நிதித்துறையில் 12 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எம்பிஏ (MBA) மற்றும் நர்சிங் முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இவை தவிர, UPSC, BEML மற்றும் NMDC நிறுவனங்களிலும் பொறியியல் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்தத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விரிவாகத் தெரிந்துகொண்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விண்ணை தொடும் விமான கட்டணம்.. ராக்கெட் வேகத்தில் எகிறிய டிக்கெட் விலை.. சென்னைக்கு எவ்வளவு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/airfares-to-chennai-in-tamil-nadu-have-been-increased-several-times-74538.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 10:09:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/airfares-to-chennai-in-tamil-nadu-have-been-increased-several-times-74538.html</guid>
		            
			

    	<description><![CDATA[Airfares To Chennai Increased: தமிழகத்தில் சென்னைக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர், தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் வந்த பொது மக்கள் வெளியூர் திரும்பும் நிலையில், இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/airfare-sharply-hike.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விண்ணை தொடும் விமான கட்டணம்.. ராக்கெட் வேகத்தில் எகிறிய டிக்கெட் விலை.. சென்னைக்கு எவ்வளவு தெரியுமா?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-meteorologist-pradeep-john-said-temperature-in-chennai-will-exceed-40-degrees-from-may-1-74378.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளியூர்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வாக்காளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள், தங்களது வாக்கை செலுத்தி விட்டு மீண்டும் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்ல தொடங்கி உள்ளனர். இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-people-including-dmk-executive-died-in-an-accident-when-a-water-truck-hit-a-car-in-coimbatore-74365.html" target="_blank" rel="noopener">பொதுமக்கள்</a> திட்டமிட்ட நாளில் மற்றும் திட்டமிட்ட நேரத்தில் வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான மக்கள் விமான பயணத்தை நாடும் நிலை உள்ளது.
<h3>விமான பயணத்தை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத நிலை</h3>
ஆனால், அந்த விமான பயணத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதன் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. தற்போது, நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) நள்ளிரவு மீண்டும் விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை அந்தந்த நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால், தமிழகத்துக்குள் மதுரை, தூத்துக்குடி, திருச்சி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னை வரும் விமானத்துக்கான கட்டணமும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில்,

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/rain-alert-for-several-parts-of-tamil-nadu-today-on-april-27-2026-74510.html" target="_blank" rel="noopener">தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!</a>
<ul>
 	<li>மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு செல்வதற்கு வழக்கமான நாட்களில் டிக்கெட் கட்டணம் ரூ.5,099- ஆக இருந்தது. தற்போது, அந்த கட்டணம் ரூ.32,508- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</li>
 	<li>தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் செல்வதற்கான டிக்கெட் கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.5,354- ஆக இருந்தது. தற்போது, அந்த கட்டணம் ரூ.17,089- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது,</li>
 	<li>திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு சாதாரண நாட்களில் ரூ.4,551- ஆக இருந்த நிலையில், தற்போது, விமான டிக்கெட் கட்டணம் ரூ.14,310- ஆக உயர்ந்துள்ளது.</li>
 	<li>கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் செல்வதற்கு வழக்கமான கட்டணம் ரூ.4,634- ஆக இருந்த நிலையில், தற்போதைய டிக்கெட் கட்டணம் ரூ.11,149- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</li>
</ul>
<h3>கடும் சிரமத்தை சந்திக்கும் பொது மக்கள்</h3>
தமிழகத்தில் உள் விமான சேவைகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இருந்தாலும், விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/senior-bjp-leader-tamilisai-soundararajan-criticizes-chief-minister-mk-stalin-and-udhayanidhi-stalin-tour-74532.html" target="_blank" rel="noopener">முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>