<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Tamil Nadu News Today | சமீபத்திய தமிழ்நாடு செய்திகள் Tamil Nadu Latest News, தமிழ்நாடு செய்திகள் Photos and videos in Tamil</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/tamil-nadu/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu</link>
 <description>Tamil Nadu News (தமிழ் செய்திகள்) - Read all the latest news on Tamil Nadu Politics, National, World, Business, Lifestyle, Health and more at tv9tamilnews.com. இல் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, தேசிய, உலகம், வணிகம், வாழ்க்கை முறை மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகளை தமிழில் பெறுங்கள்</description><lastBuildDate>Sat, 13 Jun 2026 21:14:05 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>கள்ளக்குறிச்சியை உலுக்கிய மெகா கொள்ளை.. ரூ.1 கோடி நகைகளுடன் எஸ்கேப் ஆன மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/jewelry-worth-1-crore-looted-from-a-sovern-shop-in-kallakurichi-84682.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 21:14:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/jewelry-worth-1-crore-looted-from-a-sovern-shop-in-kallakurichi-84682.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kallakurichi Jewelry Looted : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகை அடகு கடையின் பூட்டை உடைத்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகை, பணம், வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/jewell-stolen.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கள்ளக்குறிச்சியை உலுக்கிய மெகா கொள்ளை.. ரூ.1 கோடி நகைகளுடன் எஸ்கேப் ஆன மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!" /></figure>கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் ராமச்சந்திரன். இவர், தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் 2 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ராமச்சந்திரன் வழக்கம் போல நேற்று இரவு பணி முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர், இன்று சனிக்கிழமை காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் கடையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருள்கள் சிதறி கிடந்தன. மேலும், அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.55 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/temple-shops-charging-above-government-rates-will-face-action-says-minister-ramesh-84493.html" target="_blank" rel="noopener">கோயில் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையையே வசூலிக்க வேண்டும்: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு</a>
<h3>கை ரேகை நிபுணர்கள் தடயம் சேகரிப்பு</h3>
அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கடையில் உள்ளே கண்காணிப்பு கேமரா இல்லாததால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டறிவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
<h3>திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு</h3>
இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் கடை வைத்துள்ளவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, நகை அடகு கடையின் உரிமையாளர் ராமச்சந்திரன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தியாகதுருகம் நகரின் மையப் பகுதியில் உள்ள நகை அடகு கடையில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tenkasi-palmyra-worker-shooting-case-enquiry-to-cbcid-madurai-high-court-ordered-84501.html" target="_blank" rel="noopener">“உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது” பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. மதுரை உயர்நீதிமன்றம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கணவனுக்கு உணவு கொண்டு சென்றபோது விபரீதம்.. மகன் கண் முன்னே பைக் சக்கரத்தில் புடவை சிக்கி தாய் துடிதுடித்து பலி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-died-after-falling-off-a-motorcycle-in-vedapatti-village-dindigul-84678.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 20:05:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-died-after-falling-off-a-motorcycle-in-vedapatti-village-dindigul-84678.html</guid>
		            
			

    	<description><![CDATA[Dindigul Accident Women Dies: திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவருக்கு உணவு கொண்டு சென்ற பெண் பைக்கில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் கண் முன்னே இந்தச் சம்பவம் நிகழ்ந்த்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/02/accident-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கணவனுக்கு உணவு கொண்டு சென்றபோது விபரீதம்.. மகன் கண் முன்னே பைக் சக்கரத்தில் புடவை சிக்கி தாய் துடிதுடித்து பலி!" /></figure><a href="http://பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினருக்கு தொடர்பு.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!" target="_blank" rel="noopener">திண்டுக்கல் மாவட்டம்</a>, ஆத்தூர் ஒன்றியம், சித்தையன் கோட்டை பேரூராட்சி, சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லலித் ( 45 வயது). இவரது மனைவி கிருஷ்ணவேணி ( 40 வயது). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், லலித்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக லலித் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் லலித்துக்கு உணவு கொண்டு சென்றனர். <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-died-after-a-car-crashed-on-the-kaveripakkam-flyover-in-ranipet-district-84404.html" target="_blank" rel="noopener">திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில்</a> சென்று கொண்டிருந்தனர். அப்போது, வக்கம்பட்டி அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக கிருஷ்ணவேணி அணிந்திருந்த புடவை பைக்கின் பின் டயரில் சிக்கியது. இதனால், கிருஷ்ணவேணி நிலை தடுமாறி சாலையின் நடுவில் விழுந்தார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
<h3>பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்</h3>
உடனே, இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவரது மகன் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கிருஷ்ணவேணியை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கிருஷ்ணவேணி அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-leader-mk-stalin-sharply-criticized-the-tvk-administration-and-chief-minister-vijay-84589.html" target="_blank" rel="noopener">பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினருக்கு தொடர்பு.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!</a>
<h3>தலையில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழப்பு</h3>
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் அங்கேயே சத்தமிட்டு அழுதார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக லலித்தின் மகன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
<h3>சேடப்பட்டி கிராமத்தில் பெரும் சோகம்</h3>
மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கணவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு உணவு கொண்டு சென்ற மனைவி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும், அந்த கிராமத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/bjp-state-president-nainar-nagendran-criticized-tvk-government-over-the-issue-of-violence-against-women-84667.html" target="_blank" rel="noopener">தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/bjp-state-president-nainar-nagendran-criticized-tvk-government-over-the-issue-of-violence-against-women-84667.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 19:23:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/bjp-state-president-nainar-nagendran-criticized-tvk-government-over-the-issue-of-violence-against-women-84667.html</guid>
		            
			

    	<description><![CDATA[Nainar Nagendran Criticized TVK Govt : தமிழக வெற்றிக் கழக கட்சியை சேர்ந்தவர்களால் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமையை ஆரம்பித்தால் தடுக்காவிட்டால் தமிழ்நாடு மிகப்பெரிய தலைக்குனிவை சந்திக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/nainar-vijay-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!" /></figure>சேலம் மாவட்டத்தில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-tvk-functionary-who-attempted-to-steal-a-laptop-from-a-bus-in-villupuram-84374.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி</a>யான மணிகண்டன் என்பவர் பல்வேறு பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனத்தை முன்வைத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டம், நெய்க்காரன்பட்டியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழகத்தின் ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன் என்பவர்<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-tvk-functionary-who-attempted-to-steal-a-laptop-from-a-bus-in-villupuram-84374.html" target="_blank" rel="noopener"> கடன் வாங்கி தருவதாக கூறி</a> 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அவர்களை ஆபாசமான வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார்.
<h3>பெண்களின் பாதுகாப்பை முதல்வர் எப்படி உறுதி செய்வார்</h3>
மேலும், தனது நண்பர்களின் இச்சைக்கு பலி ஆக்கியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களை வெறும் சதை பிண்டங்களாக மட்டுமே பாவித்து வரும் மனித மிருகங்களுக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியில் பொறுப்பு வழங்கி பாதுகாத்து வரும் முதல்வர் ஜோசப் விஜய், தமிழக பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் என்ற சந்தேகம் எழுகிறது. வெளியில் உள்ள குற்றவாளிகளிடம் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கு சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை அமைத்துள்ளதாக முதல்வர் விஜய் விளம்பரம் தேடுகிறார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/alandur-tvk-secretary-dismissed-for-harassing-a-woman-in-chennai-84401.html" target="_blank" rel="noopener">கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!</a>
<h3>தவெகவினரிடம் இருந்து பெண்களை காக்க என்ன படை வேண்டும்</h3>
ஆனால், தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்க என்ன படை அமைக்கப் போகிறார் முதல்வர் விஜய். மாற்று அரசியல் என்று கூக்குரலிட்ட தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பெரும்பாலான குற்றங்களின் பின்னணியில் தமிழக வெற்றிக் கழகத்தினரின் முகங்களும் தினசரி செய்தித்தாள்களை நிறைத்து வருகிறது. இதனை பார்க்கும் போது கடந்த தீய சக்தியின் நீட்சி தான் தற்போதைய துரோக சக்தி என்பது உறுதியாக தெரிகிறது.
<h3>தமிழகம் மிகப்பெரிய தலைக்குனிவை சந்திக்க நேரிடும்</h3>
தவெக காரன் என்பது குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாகவே மாறி வருவது கண்டிக்கத்தக்கதாக உள்ளது. இது மட்டும் இன்றி ஆபத்தானதும் கூட. இப்படிப்பட்டவர்களை ஆரம்பித்திலேயே கிள்ளி எரிந்து விட வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் தமிழகம் மிகப் பெரிய தலைகுனிவை சந்திக்க நேரிடும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-it-wing-commented-on-the-gang-harassment-of-a-woman-in-srivaikuntam-84395.html" target="_blank" rel="noopener">“தமிழகத்தில் நடப்பது நவீன மனுநீதி சோழன் அரசு” ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகார நடவடிக்கை குறித்து தவெக ஐடி விங் கருத்து!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிடிபட்டபோது பயத்தில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர் &#8211; திருப்பத்தூர் அருகே பரபரப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/fake-doctor-caught-treating-patients-in-tirupathur-without-medical-degree-84627.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 18:14:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinoth V]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/fake-doctor-caught-treating-patients-in-tirupathur-without-medical-degree-84627.html</guid>
		            
			

    	<description><![CDATA[திரருப்பத்தூர் மாவட்டம் கோட்டாவூர் பகுதியைச் சேர்ந்த ‌ பெருமாள் என்பரின் மகன் இளங்கோ (68) என்பவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு மட்டும் முடித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தார். அப்போது அங்கு சோதனையின் போது ஆங்கில மருந்துகளுடன் கையும் களவுமாக பிடிபட்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/fake-doctor-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிடிபட்டபோது பயத்தில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர் &#8211; திருப்பத்தூர் அருகே பரபரப்பு" /></figure><strong>திருப்பத்தூர், ஜூன் 13 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tirupattur-constituency-one-vote-issue-supreme-court-dismisses-former-ministers-urgent-petition-81034.html" target="_blank" rel="noopener">திருப்பத்தூர்</a> மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொட்டாவூர்,பேரம்பட்டடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் அரசு <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/a-man-was-stabbed-to-death-by-a-youth-over-a-dispute-in-coimbatore-medical-college-hospital-36535.html" target="_blank" rel="noopener">மருத்துவமனை</a> மருத்துவர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர் .
<h3>பிடிபட்டபோது பயத்தில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர்</h3>
அப்போது கோட்டாவூர் பகுதியைச் சேர்ந்த ‌ பெருமாள் மகன் இளங்கோ (68) என்பவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு மட்டும் முடித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தார். அப்போது அங்கு சோதனையின் போது ஆங்கில மருந்துகளுடன் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த நிலையில் இளங்கோ பிடிபட்டவுடன் பயத்தில் பேண்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cbi-officials-questioned-the-additional-sp-regarding-the-overcrowding-incident-in-karur-84599.html">கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ வலையில் கூடுதல் எஸ்.பி.- டி.எஸ்.பி.. அதிரடி விசாரணையால் பரபரப்பு!</a></strong>

இதனை செய்தியாளர்கள் வீடியோ எடுக்கும் பொழுது இது கூட வீடியோ எடுப்பீங்களா வீடியோ எடுத்து போடுங்க நான் பிரபலம் ஆகிறேன் என கூறினார் அது மட்டுமல்லாமல் கிருஷ்ணர் எனக்கு தண்டனை கொடுத்து விட்டார். அதனால் இன்று அனுபவிக்கிறேன் எனவும் தத்துவம் பேசினார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் இளங்கோ மருத்துவம் பார்த்து வந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவர் போலி மருத்துவர் என அறியாமலேயே அவசர காலங்களில்  மக்கள் அவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தலைநகரம் படத்தில் வடிவேலுவை நினைவுபடுத்துவது போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அதேபோல பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ்(36) என்பவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததால் அவருடைய கிளினிக்குக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் உதவியுடன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-functionary-manikandan-was-arrested-in-salem-following-a-complaint-of-harassment-lodged-by-a-woman-84506.html">விஜய்க்கு அடுத்தடுத்து தலைவலி.. தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கும் தவெகவினர்.. சேலத்தில் கட்சி நிர்வாகி செய்த அட்டூழியம்!</a></strong>

இந்த சோதனையின் போது மாவட்ட மருந்தக ஆய்வாளர் சுரேஷ்குமார்,அரசு மருந்து ஆளுநர்கள் குரு ராகவேந்திரன், கார்த்திக் ஆகியோர் இருந்தனர். முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இருவர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து இது போல போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெண் காவலர் ஓட ஓட விரட்டி கூட்டு பலாத்கார முயற்சி.. 100-ஐ அழைத்ததால் தப்பித்தார்.. 3 பேரிடம் அதிரடி விசாரணை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/male-friends-attempted-to-harrassed-a-female-armed-reserve-police-constable-in-sivaganga-84628.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 17:54:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/male-friends-attempted-to-harrassed-a-female-armed-reserve-police-constable-in-sivaganga-84628.html</guid>
		            
			

    	<description><![CDATA[Sivaganga Female Police Harassment : சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படை பெண் காவலரை அவரது ஆண் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், தொடர்புடையதாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/police-harassment.png" class="attachment-large size-large wp-post-image" alt="பெண் காவலர் ஓட ஓட விரட்டி கூட்டு பலாத்கார முயற்சி.. 100-ஐ அழைத்ததால் தப்பித்தார்.. 3 பேரிடம் அதிரடி விசாரணை!" /></figure><a href="http://பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினருக்கு தொடர்பு.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!" target="_blank" rel="noopener">சிவகங்கை மாவட்டத்தில்</a> ஆயுதப்படையில் பெண் ஒருவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், தபால் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த பெண் காவலர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் பைக்கில் சிவகங்கை அருகே நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த ஆண் நண்பர் தனது நண்பர்கள் இருவரை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அந்த நபர்கள் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில், மூன்று பேருந்து சேர்ந்து அந்த பெண் காவலரை திடீரென கூட்டு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் காவலர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். அவரை, அந்த நபர்கள் பின் தொடர்ந்து துரத்தி வந்தனர். செல்லும் வழியில் அந்த பெண் காவலர் காவல் அவசர உதவி எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.
<h3>3 பேரை பிடித்து போலீசார் விசாரணை</h3>
அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண் காவலரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, அவரை சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு, அந்த பெண் காவலர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை புகாராக தெரிவித்தார். அதன் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், பெண் காவலரை பாலியல் தொந்தரவு செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-leader-mk-stalin-sharply-criticized-the-tvk-administration-and-chief-minister-vijay-84589.html" target="_blank" rel="noopener">பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினருக்கு தொடர்பு.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!</a>
<h3>பெண் காவருக்கே கூட்டு பாலியல் தொல்லை</h3>
அந்த நபர்கள் குறித்த தகவலை போலீஸ் தரப்பில் இருந்து தற்போது வரை வெளியிடவில்லை. சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
<h3>சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டம்</h3>
இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவருக்கே கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/fake-doctor-caught-treating-patients-in-tirupathur-without-medical-degree-84627.html" target="_blank" rel="noopener">பிடிபட்டபோது பயத்தில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர் – திருப்பத்தூர் அருகே பரபரப்பு</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காக்கி உடையில் ஒரு காமுகன்.. புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தூத்துக்குடி காவலர் சஸ்பெண்ட்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/arumuganeri-police-station-head-constable-agni-muthu-suspended-following-woman-harassing-complaint-84618.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 17:38:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/arumuganeri-police-station-head-constable-agni-muthu-suspended-following-woman-harassing-complaint-84618.html</guid>
		            
			

    	<description><![CDATA[Arumuganeri Constable Suspended : ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக தலைமை காவலர் அக்னி முத்துவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/police-suspend.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காக்கி உடையில் ஒரு காமுகன்.. புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தூத்துக்குடி காவலர் சஸ்பெண்ட்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/heavy-monsoon-rains-trigger-flash-floods-in-south-tamil-nadu-waterfalls-84546.html" target="_blank" rel="noopener">தூத்துக்குடி மாவட்டம்</a>, திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கு தொடர்பாக பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த தலைமை காவலர் அக்னி முத்து அந்த பெண்ணிடம் புகார் தொடர்பான விவரங்களை பெற்றுள்ளார். அத்துடன், புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அந்த பெண்ணிடம் செல்போன் எண்ணையும் கேட்டு பெற்றுள்ளார். இதை தொடர்ந்து, அந்த பெண்ணின் செல்போனுக்கு தலைமை காவலர் அக்னி முத்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அவரது பேச்சில் தவறான எண்ணம் தெரிந்த அந்த பெண் அக்னி முத்துவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால், அதையும் மீறி அந்த பெண்ணுக்கு தலைமை காவலர் அக்னி முத்து தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
<h3>எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் புகார்</h3>
இந்த நிலையில், அந்த பெண்ணின் செல்போன் வாட்ஸ் ஆப்-க்கு தலைமை காவலர் அக்னி முத்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தலைமை காவலர் அக்னி முத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய ஆபாச மெசேஜ் உள்ளிட்ட ஆதாரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் அந்த பெண் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தூத்துக்குடி எஸ் பி துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-chief-mk-stalin-questions-cm-joseph-vijay-over-delhi-visit-84582.html" target="_blank" rel="noopener">கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</a>
<h3>தலைமை காவலர் அதிரடி சஸ்பெண்ட்</h3>
அதன் அடிப்படையில், தலைமை காவலர் அக்னி முத்து மீதான துறை விசாரணை நடைபெற்றது. இதில், புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று அவருக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புகாருக்குள்ளான தலைமை காவலர் அக்னி முத்துவை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி எஸ்பி உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
<h3>ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்</h3>
இதே காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த திலீபன் என்பவர் சக பெண் காவலருக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், அப்போதைய நெல்லை சரக டிஐஜியாக இருந்த தேஷ்முக் சஞ்சய், இன்ஸ்பெக்டர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/they-say-will-bring-the-change-what-more-change-could-one-ask-for-dmk-a-rajas-sharp-retort-84563.html" target="_blank" rel="noopener">“நாங்க மாற்றத்தை கொண்டு வருவோம்-னு சொல்றாங்க”.. இதைவிட என்ன மாற்றம் வேணும்?.. ஆ.ராசா பளீர்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினருக்கு தொடர்பு.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-leader-mk-stalin-sharply-criticized-the-tvk-administration-and-chief-minister-vijay-84589.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 16:49:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-leader-mk-stalin-sharply-criticized-the-tvk-administration-and-chief-minister-vijay-84589.html</guid>
		            
			

    	<description><![CDATA[DMK Leader MK Stalin: தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும்பாலான குற்றங்களில் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் ஈடுபடுவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vijay-14.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினருக்கு தொடர்பு.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!" /></figure>சென்னையில் <a href="http://“இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்”.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!" target="_blank" rel="noopener">திராவிட முன்னேற்ற கழக</a> மகளிர் அணி கூட்டம் இன்று சனிக்கிழமை ( ஜூன் 13) நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் முதல் அமைச்சர் விஜயின் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தமிழக வெற்றி கழகத்திற்கு எதற்காக வாக்களித்தோம் என்றும் மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பாரதிய ஜனதா கட்சியின் ஜெராக்ஸ் போல செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. கான்ஃபிடன்ட்டா இருங்க என்று மக்களிடம் கூறும் விஜய்கே தனது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. இதன் காரணமாகவே பிற கட்சிகளை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
<h3>திமுக ஆட்சியில் மக்களுக்கு திட்டங்களை பார்த்து பார்த்து செய்தோம்</h3>
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவ வழக்கில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக முதல்வர் விஜய் டெல்லி சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஆளும் அரசின் தவறுகளை திமுக பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்து மக்களிடம் சுட்டிக் காட்டும். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பார்த்து பார்த்து பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்தோம். ஆனால், தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நாள்தோறும் ஒவ்வொரு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-will-always-support-the-india-alliance-rahul-gandhi-expresses-confidence-84547.html" target="_blank" rel="noopener">“இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்”.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!</a>
<h3>வரும் தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக அரசு கவிழும்</h3>
இதனால், தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை மக்கள் வாக்களிக்காமல் கவிழ்ப்பார்கள். தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு எதற்காக வாக்களித்தோம் என்று மக்கள் வருந்த தொடங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தவெகவைச் சேர்ந்த இரு நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
<h3>பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் தவெகவினர்</h3>
பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன என்று மு. க. ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தது. திமுக - தவெக இடையே தான் போட்டி என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/they-say-will-bring-the-change-what-more-change-could-one-ask-for-dmk-a-rajas-sharp-retort-84563.html" target="_blank" rel="noopener">“நாங்க மாற்றத்தை கொண்டு வருவோம்-னு சொல்றாங்க”.. இதைவிட என்ன மாற்றம் வேணும்?.. ஆ.ராசா பளீர்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அரசு அதிரடி ஆக்சன்.. 48 சப்-கலெக்டர்களை கூண்டோடு மாற்றிய வருவாய்த்துறை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/revenue-and-disaster-management-department-has-issued-an-order-transferring-48-sub-collectors-in-tamil-nadu-84611.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 16:45:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/revenue-and-disaster-management-department-has-issued-an-order-transferring-48-sub-collectors-in-tamil-nadu-84611.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Sub Collectors Transfer: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணி புரிந்து வரும் 48 சப்- கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் ஆகியோரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tamilnadu-assemply-election.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அரசு அதிரடி ஆக்சன்.. 48 சப்-கலெக்டர்களை கூண்டோடு மாற்றிய வருவாய்த்துறை!" /></figure><a href="http://“இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்”.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> 38 மாவட்டங்களில் பணி புரிந்து வந்த 25 சப் கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை, மண்டல மேலாளர்கள், மாவட்டம் மேலாளர்கள் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் கிழக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரேணுகா இதே மாவட்டத்தில் நில எடுப்பு துறை தகுதி வாய்ப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தமிழ்மணி ஆர். டி. ஓ.வாக பணிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல நீலகிரி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தீப சித்ரா இதே மாவட்டத்தில் தனித்துறை ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துகிருஷ்ணன், மயிலாடுதுறை தனி துணை ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
<h3>கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மாற்றம்</h3>
கோயம்புத்தூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜோதி சங்கர் விழுப்புரம் நில எடுப்பு துணை தாசில்தார் ஆகவும், கோயம்புத்தூர் டாஸ்மாக் பொது மேலாளர் சீனிவாசன் இதே மாவட்டத்தில் மாவட்ட வளங்கள் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கும், சிவகங்கை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுரேஷ் கண்ணன் மதுரை தனித்துறை ஆட்சியராகவும், சென்னை தெற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பிரபு வெங்கடேசன் மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல வாரியத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-will-always-support-the-india-alliance-rahul-gandhi-expresses-confidence-84547.html" target="_blank" rel="noopener">“இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்”.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!</a>
<h3>மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மாற்றம்</h3>
மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரமேஷ், சேலம் மண்டல மேலாளர் சிவில் சப்ளைக்கும், சென்னை சிறப்பு படை துணை ஆட்சியர் ஆனந்தி நெல்லை தனித்துறை ஆட்சியராகவும், திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜகோபால் கரூர் தனித்துறை ஆட்சியர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல, மேலும் பல சப்- கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த நிலையில், அரசு துறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
<h3>அரசு உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்</h3>
அதில், ஒன்றாக அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 48 சப்- கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல, முதல்வரின் தனி செயலாளர்கள் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் என பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-chief-mk-stalin-questions-cm-joseph-vijay-over-delhi-visit-84582.html" target="_blank" rel="noopener">கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ வலையில் கூடுதல் எஸ்.பி.- டி.எஸ்.பி.. அதிரடி விசாரணையால் பரபரப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cbi-officials-questioned-the-additional-sp-regarding-the-overcrowding-incident-in-karur-84599.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 15:57:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cbi-officials-questioned-the-additional-sp-regarding-the-overcrowding-incident-in-karur-84599.html</guid>
		            
			

    	<description><![CDATA[Karur Incident CBI Questioned ASP : கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சி. பி. ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரிடம் 3- ஆவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/karur-stampede.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ வலையில் கூடுதல் எஸ்.பி.- டி.எஸ்.பி.. அதிரடி விசாரணையால் பரபரப்பு!" /></figure>கரூரில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-bjp-leader-annamalai-was-welcomed-by-his-supporters-at-coimbatore-airport-84525.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகத்தின்</a> தலைவரும், தற்போதைய முதல்வருமான ஜோசப் விஜய் கடந்த 2015- ஆம் ஆண்டு செப்டம்பர் 27- ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளாமல் இருந்தனர். தற்போது, தேர்தல் பரபரப்பு முடிவடைந்த நிலையில், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-bjp-leader-annamalai-was-welcomed-by-his-supporters-at-coimbatore-airport-84525.html" target="_blank" rel="noopener">சிபிஐ அதிகாரிகள்</a> தங்களது விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கல் காவல் ஆய்வாளர் சையத் அலி, கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, நெரிசல் சம்பவம் நிகழ்ந்த போது, கரூர் பசுபதி பாளையம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சதீஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
<h3>கூடுதல் எஸ்.பி.யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை</h3>
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த மாவட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேமனந்தத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி அவர், இன்று சனிக்கிழமை ( ஜூன் 13) சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினார். இதே போல, டிஎஸ்பி செல்வராஜூம் விசாரணைக்கு ஆஜராகினார்.  இவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். கரூரில் பொதுப் பணித் துறை அலுவலகத்திற்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-election-defeat-edappadi-palaniswami-holds-disucssion-in-jayalalithaa-style-84536.html" target="_blank" rel="noopener">அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!</a>
<h3>உள்ளூர் போலீசாரிடம் இருந்து சிபிஐ-க்கு மாறிய வழக்கு</h3>
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. மேலும், அப்போதைய திமுக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்றது.
<h3>சிபிஐ விசாரணையை மேற்பார்வை செய்யும் ஓய்வு நீதிபதி</h3>
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தை தமிழக வெற்றி கழகம் நாடிய நிலையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிபிஐயின் விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-chief-mk-stalin-questions-cm-joseph-vijay-over-delhi-visit-84582.html" target="_blank" rel="noopener">கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கடலில் எழும்பும் சூறாவளி: மீனவர்களுக்கான ரெட் அலர்ட் மற்றும் 7 நாட்களுக்கு மழை</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/atmospheric-circulation-brings-heavy-rain-and-thunderstorm-warning-to-tamil-nadu-84591.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 15:18:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/atmospheric-circulation-brings-heavy-rain-and-thunderstorm-warning-to-tamil-nadu-84591.html</guid>
		            
			

    	<description><![CDATA[Thunderstorm Warning to Tamil Nadu: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/rain-11th.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கடலில் எழும்பும் சூறாவளி: மீனவர்களுக்கான ரெட் அலர்ட் மற்றும் 7 நாட்களுக்கு மழை" /></figure>தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட மாவட்டங்களின் மேல் சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இந்த சுழற்சியின் மையப்பகுதி வழியாக அதே வளிமண்டல உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும் (Trough) நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தின் இந்த தொடர் நகர்வுகள் காரணமாகவே கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மேகமூட்டமும், திடீர் மழையும் பதிவாகி வருகின்றன.
<h3>வட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மாவட்ட வாரியான வானிலை விபரம்</h3>
தற்போது நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, வட தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
<h3>டெல்டா மாவட்டங்களில் தீவிரமடையும் மழை: நாளைய வானிலை மாற்றம்</h3>
நாளை (14-06-2026) அன்று மழைப்பொழிவின் பரப்பளவு மற்றும் வேகம் சில மாவட்டங்களில் அதிகரிக்கக்கூடும். அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் சென்னை, புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15-ஆம் தேதி முதல் மழையின் வேகம் சற்று குறைந்து லேசான மழையாக மாறக்கூடும்.
<h3>கடந்த 24 மணி நேர மழை நிலவரம்: நெல்லை நாலுமுக்கில் அதிகபட்ச மழை பதிவு</h3>
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தின் நாலுமுக்கு பகுதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் நெய்யூர் ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி, நாகப்பட்டினத்தின் தலைஞாயிறு, கன்னியாகுமரியின் பாலமோர் மற்றும் திருநெல்வேலியின் ஊத்து ஆகிய பகுதிகளில் தலா 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழையும், காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையும் நிலவியது.
<h3>வெப்பநிலை நிலவரம்: மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவு</h3>
கடந்த சில நாட்களாக நீடித்த வெப்ப அலையின் தாக்கம், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலைய பகுதியில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக கன்னியாகுமரியில் 21.2 டிகிரி செல்சியஸும், மலைப்பிரதேசமான கொடைக்கானலில் 12.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு வட உள் தமிழக மாவட்டங்களில் மட்டும் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-chief-mk-stalin-questions-cm-joseph-vijay-over-delhi-visit-84582.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 14:56:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-chief-mk-stalin-questions-cm-joseph-vijay-over-delhi-visit-84582.html</guid>
		            
			

    	<description><![CDATA[MK Stalin Questions CM: திமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சி மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா? அதிமுக எம்எல்ஏகளை விலைக்கு வாங்குகிறார். பல மாநிலங்களில் பாஜக செய்தது போல தமிழகத்தில் விஜய் செய்து வருகிறார் என்றார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/mk-stalin-questions-cm-joseph-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி" /></figure><strong>சென்னை, ஜூன் 13 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-will-always-support-the-india-alliance-rahul-gandhi-expresses-confidence-84547.html" target="_blank" rel="noopener">திமுக</a> மகளிரணி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 13, 2026 இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmks-election-defeat-allegations-against-sekar-babu-review-committee-reveals-the-truth-84393.html" target="_blank" rel="noopener">மு.க.ஸ்டாலின்</a>, நான் முதல்வராக இருக்கும்போது டெல்லி சென்றபோது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்க போனார் என்று சொன்ன விஜய், இப்போது எதற்கு டெல்லி சென்றார்? கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், அதிமுக எம்எல்ஏகளை விலைக்கு வாங்குகிறார். தவெக ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பினார்.
<h3>முதல்வர் விஜய் மீது திமுக தலைவர் விமர்சனம்</h3>
திமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சி மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா? அதிமுக எம்எல்ஏகளை விலைக்கு வாங்குகிறார். பல மாநிலங்களில் பாஜக செய்தது போல தமிழகத்தில் விஜய் செய்து வருகிறார் என்றார்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-will-always-support-the-india-alliance-rahul-gandhi-expresses-confidence-84547.html"> “இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்”.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!</a></strong>
<h3>மு.க.ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.

"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?

இதற்கிடையில், தொகுதிவாரியாக… <a href="https://t.co/gEhvY7Tcsf">pic.twitter.com/gEhvY7Tcsf</a></p>
— M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2065718548593311976?ref_src=twsrc%5Etfw">June 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக ஆளுங்கட்சியாக மாற இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். 6 மாதம் விமர்சனம் செய்யாமல் இருக்கும் அளவுக்கு இந்த ஆட்சி இருக்குமா என நான் பேசியிருந்தேன். அதை உண்மைக்கு மாறாக திரித்து, ஆட்சியை கவிழ்க்க சதியா என பேச ஆரம்பித்துவிட்டனர். பொறுப்பான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும்; ஆட்சியின் தோல்விகளை சுட்டிக்காட்டும். மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஏன் தவெகவுக்கு வாக்களித்தோம் என மக்கள் நினைக்கின்றனர். இந்த ஆட்சியில் கொடூரமான குற்ற சம்பவங்கள்தான் செய்தியாக வந்து கொண்டிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தவெகவினர் காரணம். அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்ற நிலை இருக்கிறது என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-election-defeat-edappadi-palaniswami-holds-disucssion-in-jayalalithaa-style-84536.html">அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!</a></strong>

மேலும் பேசிய அவர், தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;நாங்க மாற்றத்தை கொண்டு வருவோம்-னு சொல்றாங்க&#8221;.. இதைவிட என்ன மாற்றம் வேணும்?.. ஆ.ராசா பளீர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/they-say-will-bring-the-change-what-more-change-could-one-ask-for-dmk-a-rajas-sharp-retort-84563.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 14:24:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/they-say-will-bring-the-change-what-more-change-could-one-ask-for-dmk-a-rajas-sharp-retort-84563.html</guid>
		            
			

    	<description><![CDATA[75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை, ஒரே போக்குடன் இந்தியாவில் ஏதேனும் ஒரு இயக்கம் தொடர்ந்து கம்பீரமாகச் செயலாற்றுகிறது என்றால், அது தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் அடையாளத்தைக் கொண்ட திராவிட இயக்கம்தான் என்றும், இந்த அடையாளமே நாடாளுமன்றத்தில் தங்களைச் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/a-raja.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;நாங்க மாற்றத்தை கொண்டு வருவோம்-னு சொல்றாங்க&#8221;.. இதைவிட என்ன மாற்றம் வேணும்?.. ஆ.ராசா பளீர்!" /></figure><strong>சென்னை, ஜுன் 13:</strong> நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று புதிய தரப்பினர் கூறி வரும் நிலையில், திராவிட இயக்க மேடைகளில் ஏற்கனவே நிகழ்ந்துள்ள சமூக மாற்றமே உண்மையான மாற்றம் என்று <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-will-always-support-the-india-alliance-rahul-gandhi-expresses-confidence-84547.html" target="_blank" rel="noopener">திமுக</a> நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திராவிடர் கழகப் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், மேடையில் இருந்த பெயர்களைக் குறிப்பிட்டு நகைச்சுவையாகவும், அதே சமயம் அரசியல் ரீதியாகவும் பேசியது அரங்கத்தில் பெரும் சிரிப்பலையையும் கைதட்டலையும் ஏற்படுத்தியது. மணமகன் குடும்பப் பின்னணி மற்றும் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஆ.ராசா, இந்தத் திருமணம் அண்ணாமலை இல்லத்துத் திருமணம். ஆனால் மணமகளின் பெயர்  "தமிழர் தலைவர்" என்று குறிப்பிட்டார். மேலும், தாத்தாவுக்கு அண்ணாமலை என்று ஆன்மீகப் பெயர் இருந்த காலம் மாறி, அவரின் பேரன் இன்றைக்கு 'தமிழர் தலைவர்' (திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் அடையாளம்) என்ற பெயரோடு மணமகனாக வீற்றிருக்கிறார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/are-you-looking-for-lease-house-multi-lakh-rupee-scam-unfolds-in-chennai-beware-everyone-84516.html">‘வீடு லீசுக்கு போறீங்களா?’ சென்னையில் அரங்கேறிய பல லட்ச ரூபாய் நூதன மோசடி.. உஷார் மக்களே!!</a></strong>

இதற்கிடையே இளவழகன் என்ற தந்தை இருந்து, மகனுக்குத் தமிழர் தலைவர் என்று பெயர் சூட்டி, அதற்குத் 'தமிழர் தலைவரே' தலைமை தாங்கி இந்தத் திருமணத்தை நடத்துகிறார் என்றால், இதைவிட சமூகத்தில் என்ன பெரிய மாற்றம் வேண்டும்?. "நாங்க மாற்றத்தைக் கொண்டு வரோம், மாற்றத்தைக் கொண்டு வரோம்னு இப்ப ஒரு புது கோஷ்டி கிளம்பிருக்கு. உண்மையான மாற்றம் எது என்பதை இந்த மணமகனும், தமிழர் தலைவரும் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்" என்று தற்போதைய அரசியல் சூழலை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.
<h3>நாணயத்தின் இரு பக்கங்களும்:</h3>
திராவிடர் கழகமும் (திக), திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக) 'இரட்டைக்குழல் துப்பாக்கி' என்று பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவுகூர்ந்த ஆ.ராசா, பிற்காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அதனை மேலும் செழுமைப்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார். "ஒரு துப்பாக்கியின் ஒரு குழல் வெடித்து, இன்னொரு குழலில் ரவை வராமல் போனாலும் போகலாம். ஆனால், நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இருந்தால்தான் அந்த நாணயம் செல்லும். அதுபோல, திமுக என்ற நாணயம் செல்ல வேண்டும் என்றால், அதற்கு மறுபக்கமாக திராவிடர் கழகம் இருக்க வேண்டும்" என்று கலைஞர் மாற்றியமைத்துக் கூறிய உன்னதக் கொள்கையை மேடையில் விவரித்தார்.

75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை, ஒரே போக்குடன் இந்தியாவில் ஏதேனும் ஒரு இயக்கம் தொடர்ந்து கம்பீரமாகச் செயலாற்றுகிறது என்றால், அது தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் அடையாளத்தைக் கொண்ட திராவிட இயக்கம்தான் என்றும், இந்த அடையாளமே நாடாளுமன்றத்தில் தங்களைச் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
<h3>கொள்கையற்ற புதிய அரசியல் சக்திகள்:</h3>
தற்போதைய அரசியல் கள நிலைவரம் குறித்துப் பேசிய அவர், "முன்பெல்லாம் களத்தில் எதிரிகள் யார் என்று நமக்குத் தெரியும், அவர்களின் கொள்கைகளும் நமக்குத் தெரியும். ஆனால் இப்போது ஒரு அரசியல் சக்தி கிளம்பி இருக்கிறது. கொள்கைத் தலைவர்கள் என்று ஒரு ஐந்து பேரை மட்டும் படம் பிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த முகங்கள் தெரிகிறதே தவிர, அவர்களின் கொள்கை என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. கொள்கையின் பெயரால் மக்களை ஏமாற்ற ஒரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, ஆட்சி அதிகாரத்தைக் குறிவைக்கும் இந்தச் சூழல் மிகவும் ஆபத்தானது" என்று எச்சரித்தார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/15-year-old-girl-suicide-at-sri-lankan-tamil-rehabilitation-camp-in-dindigul-84382.html" target="_blank" rel="noopener">பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!</a></strong>
<h3>மதச்சார்பின்மைக்கு வந்துள்ள ஆபத்து:</h3>
இந்தியாவின் இறையாண்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் பெரிய ஆபத்து வந்துள்ள இந்த அரசியல் குழப்பமான சூழலில், தந்தை பெரியாரின் கொள்கைகள் முன்பை விட இப்போதுதான் மிக வீரியமாகத் தேவைப்படுகின்றன. "சூத்திரப் பட்டம் விலகி, உழைக்கும் மக்கள் சமத்துவம் பெறும் வரை என் கொள்கை உழைப்பை நிறுத்த மாட்டேன்" என்று தனது 93 வது வயதில் பெரியார் முழங்கியதை நினைவு கூர்ந்த ராசா, அதே வழியில் தற்போதைய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும் இந்தச் சமுதாயத்திற்காகத் தொடர்ந்து உழைத்து வருவதாகப் பாராட்டினார். இறுதியாக, கொள்கை ரீதியாகத் தமிழர் தலைவரின் பின்னாலும், அரசியல் ரீதியாகத் தமிழ்நாட்டை வழிநடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்னாலும் அணிவகுத்து நின்று தொடர்ந்து போராடி வெல்வோம் என்று கூறி மணமக்களை வாழ்த்தித் தனது உரையை நிறைவு செய்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மாம்பழ ரசிகர்களுக்கு இனிய விருந்து&#8230; சென்னையில் தொடங்கிய மெகா திருவிழா!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-mango-festival-showcases-25-more-varieties-from-across-india-84551.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 14:12:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-mango-festival-showcases-25-more-varieties-from-across-india-84551.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chennai Mango Festival: சென்னையில் தொடங்கிய மாம்பழ திருவிழாவில் பல மாநிலங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பங்கனப்பள்ளி, மல்கோவா உள்ளிட்ட பிரபல மாம்பழங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோடை சீசனில் இந்த விழாவுக்கு மக்கள் வருகை அதிகரித்து வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/mango-festival.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மாம்பழ ரசிகர்களுக்கு இனிய விருந்து&#8230; சென்னையில் தொடங்கிய மெகா திருவிழா!" /></figure>சென்னையில் கோடை சீசனை முன்னிட்டு மாம்பழ திருவிழா தொடங்கியுள்ளது. தமிழகத்துடன் பல மாநிலங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பங்கனப்பள்ளி, மல்கோவா, இமாம் பசந்த் உள்ளிட்ட பிரபல ரகங்கள் மக்களை கவர்கின்றன. அரிய வகை மாம்பழங்களும் இடம்பெற்றதால் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். விவசாயிகள் நேரடியாக பழங்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு விழாவில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
<h3>மாம்பழ ரசிகர்களை கவரும் சென்னை விழா</h3>
சென்னையில் கோடை காலத்தின் இனிமையை மேலும் அதிகரிக்கும் வகையில் மாம்பழ திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழகத்துடன் சேர்த்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 25-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாம்பழத்தை விரும்பும் பொதுமக்கள் பல்வேறு ருசிகளையும் மணங்களையும் ஒரே இடத்தில் அனுபவிக்க ஆர்வத்துடன் திரண்டுள்ளனர்.
<h3>அரிய ரக மாம்பழங்களுக்கு அதிக வரவேற்பு</h3>
விழாவில் வழக்கமாக சந்தைகளில் கிடைக்கும் பங்கனப்பள்ளி, இமாம் பசந்த், மல்கோவா, நீலம் போன்ற பிரபல ரகங்களுடன், சில அரிய மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் தனித்துவமான மாம்பழங்களும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு மாம்பழத்திற்கும் தனித்துவமான சுவை, நிறம் மற்றும் மணம் இருப்பதால் மக்கள் ஆர்வமாக சுவைத்துப் பார்த்து வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் வந்தவர்கள் குழந்தைகளுக்கு புதிய ரகங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
<h3>விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடி வாய்ப்பு</h3>
இந்த வகை மாம்பழ திருவிழாக்கள் விவசாயிகளுக்கும் விற்பனையாளர்களுக்கும் நேரடி சந்தை வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. இடைத்தரகர்கள் இல்லாமல் தரமான பழங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மேலும், இயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதால், பாதுகாப்பான உணவுப் பழக்கத்திற்கும் இது உதவுகிறது. பலர் மாம்பழத்தின் தரம், இனிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விற்பனையாளர்களிடம் தகவல் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.
<h3>கோடை சீசனில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு</h3>
கோடை காலம் முடிவடையும் நேரத்தில் மாம்பழங்களின் விலை சற்று குறைந்து கிடைப்பதும், பல்வேறு ரகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதும் இந்த விழாவுக்கு கூடுதல் ஈர்ப்பாக உள்ளது. வார இறுதிகளில் மக்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மாம்பழத்தின் இனிப்பை கொண்டாடும் இந்த விழா, உணவு ரசனையையும் விவசாயப் பொருட்களின் பல்வகைமையையும் ஒருசேர மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக மாறியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் நிறுத்தமா?.. ஆவின் நிர்வாகம் கொடுத்த விளக்கம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/are-green-colored-aavin-milk-packets-being-discontinued-aavin-management-issues-a-clarification-84559.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 13:59:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/are-green-colored-aavin-milk-packets-being-discontinued-aavin-management-issues-a-clarification-84559.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்தச் செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் பின்வருவன கூறப்பட்டுள்ளன, ஆவின் நிறுவனத்தின் எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவும் இல்லை, அவற்றின் அளவு கணிசமாகக் குறைக்கப்படவும் இல்லை.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/aavin-green-magic-milk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் நிறுத்தமா?.. ஆவின் நிர்வாகம் கொடுத்த விளக்கம்!" /></figure><strong>சென்னை, ஜுன் 13:</strong> ஆவின் நிறுவனத்தின் 'பச்சை நிற' (கிரீன் மேஜிக்) பால் பாக்கெட்டுகளின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வந்த செய்திகளுக்கு, ஆவின் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தேவைக்காக ஆவின் நிறுவனம் சார்பில் நீலம் (சமன்படுத்திய பால்), பச்சை (நிறைவுற்ற பால்/கிரீன் மேஜிக்), ஆரஞ்சு (நிறை கொழுப்பு பால்) எனப் பல்வேறு வகைகளில் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/15-year-old-girl-suicide-at-sri-lankan-tamil-rehabilitation-camp-in-dindigul-84382.html" target="_blank" rel="noopener">பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!</a></strong>

இந்நிலையில், நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாகவோ அல்லது அதன் சப்ளை கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
<h3>தங்கு தடையின்றி விநியோகம் தொடரும்:</h3>
இந்தச் செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் பின்வருவன கூறப்பட்டுள்ளன, ஆவின் நிறுவனத்தின் எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவும் இல்லை, அவற்றின் அளவு கணிசமாகக் குறைக்கப்படவும் இல்லை.
<h3>வந்திகளை நம்ப வேண்டாம்:</h3>
வழக்கம் போல பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அனைத்துப் பகுதிகளிலும் தங்கு தடையின்றித் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இது போன்ற வதந்திகளையும், தவறான செய்திகளையும் நம்ப வேண்டாம். பொதுமக்களுக்கான பால் விநியோகச் சேவை எந்தவிதப் பாதிப்பும் இன்றித் தொடர்ந்து சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதால், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சப்படவோ அல்லது குழப்பமடையவோ தேவையில்லை என்றும் ஆவின் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
<h3>குற்றஞ்சாட்டிய அன்புமணி ராமதாஸ்:</h3>
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட 'ஆவின் பச்சைப்பால்' விற்பனையை ஆவின் நிறுவனம் பெருமளவில் குறைத்துள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். நஷ்டம் மற்றும் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையைப் பாதிக்கும் வகையில் அரசு செயல்படக்கூடாது என அவர் வலியுறுத்தியிருந்தார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/are-you-looking-for-lease-house-multi-lakh-rupee-scam-unfolds-in-chennai-beware-everyone-84516.html">‘வீடு லீசுக்கு போறீங்களா?’ சென்னையில் அரங்கேறிய பல லட்ச ரூபாய் நூதன மோசடி.. உஷார் மக்களே!!</a></strong>

சென்னையில் மட்டும் ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சராசரியாக 14 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. இதில் 7.5 லட்சம் லிட்டர் பச்சைப்பால் மட்டுமே விற்பனையாகிறது. ஆனால், தற்போது இந்த விற்பனை 3.5 லட்சம் லிட்டராகப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் பால் நிறுவனங்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் பாலின் விலை ஆவினை விட லிட்டருக்கு ரூ.24 வரை அதிகமாக இருப்பதால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் பொருளாதாரச் சுமைக்கு உள்ளாகின்றனர்" என்று கவலை தெரிவித்திருந்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அருவிகளில் ஆர்ப்பரிக்கும் காட்டாற்று வெள்ளம்: பிரபல அருவிகளில் குளிக்க தொடரும் தடை</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/heavy-monsoon-rains-trigger-flash-floods-in-south-tamil-nadu-waterfalls-84546.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 13:17:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/heavy-monsoon-rains-trigger-flash-floods-in-south-tamil-nadu-waterfalls-84546.html</guid>
		            
			

    	<description><![CDATA[South Tamil Nadu Waterfalls: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மிக பலத்த தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் முக்கிய நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக குற்றாலம், மணிமுத்தாறு மற்றும் திற்பரப்பு ஆகிய முக்கிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தற்காலிகத் தடை விதித்துள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/photo-28.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அருவிகளில் ஆர்ப்பரிக்கும் காட்டாற்று வெள்ளம்: பிரபல அருவிகளில் குளிக்க தொடரும் தடை" /></figure>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையினால் நெல்லை மாஞ்சோலையில் 10 செ.மீ மற்றும் ஊத்து பகுதியில் 9 செ.மீ அளவிற்கு பலத்த மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர் பெருமழையின் காரணமாக குற்றாலம், மணிமுத்தாறு மற்றும் திற்பரப்பு ஆகிய தென் மாவட்டங்களின் முக்கிய அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் இறங்கிக் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குற்றாலத்தின் பிரதான அருவிகளில் தடை நீடித்தாலும், நீர்வரத்து தணிந்த ஐந்தருவி மற்றும் புலியருவியில் மட்டும் நேற்று காலை முதல் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளத்தின் வீரியம் குறையாததால் ஒன்பதாவது நாளாக நேற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
<h3>மலைப்பகுதிகளில் தீவிரமடையும் மழைப்பொழிவு</h3>
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள வாழ்விடங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாகப் பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றுடன் தொடர்ச்சியாகப் பெய்து வரும் இந்தச் சாரல் மழையினால், நீர்நிலைகளுக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதியான மாஞ்சோலையில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டரும், அதனைத் தொடர்ந்து ஊத்துப் பகுதியில் 9 சென்டிமீட்டரும் பலத்த மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் பெருமழை காரணமாக, மலைப்பகுதிகளிலிருந்து உருவெடுக்கும் காட்டாறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
<h3>குற்றாலத்தில் தொடரும் கட்டுப்பாடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை</h3>
தென்காசி மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் உள்ள அனைத்து முதன்மை அருவிகளிலும் தண்ணீர் மிக ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளத்தின் வீரியம் அதிகமாக இருந்ததன் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலாப் பயணிகள் நீர்நிலைகளில் இறங்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டது. எனினும், நேற்று காலை 10 மணிக்கு மேல் நீர்வரத்தின் வேகம் ஓரளவு தணிந்ததைத் தொடர்ந்து, ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய பகுதிகளில் மட்டும் பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. தற்போது தென்மேற்கு பருவமழைக்காலச் சூழல் (சாரல் சீசன்) முழுமையாகக் களைகட்டியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

Also Read:<a href="https://www.tv9tamilnews.com/lifestyle/trichy-bird-park-emerges-as-a-new-tourist-attraction-84319.html"> பறவைகளை நெருக்கமாக பார்க்க ஆசையா? திருச்சியில் புதிய ஸ்பெஷல் ஸ்பாட்!</a>
<h3>மணிமுத்தாறு மற்றும் திற்பரப்பில் விதிக்கப்பட்ட கடுமையான தடை</h3>
அதே வேளையில், திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில் வெள்ளத்தின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒன்பதாவது நாளாக நேற்றும் அங்கு குளிப்பதற்கான தடையை வனத்துறை நீட்டித்துள்ளது. இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையாற்றில் ஏற்பட்டுள்ள அபாயகரமான வெள்ளப்பெருக்கு காரணமாக, திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் வழக்கமான அளவைத் தாண்டி பேரிரைச்சலுடன் கொட்டி வருகிறது. சூழலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இங்கும் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்லவும், குளிக்கவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கை எழிலைக் காண வந்த பயணிகள் ஏமாற்றமடைந்தாலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்&#8221;.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-will-always-support-the-india-alliance-rahul-gandhi-expresses-confidence-84547.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 13:10:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-will-always-support-the-india-alliance-rahul-gandhi-expresses-confidence-84547.html</guid>
		            
			

    	<description><![CDATA[திமுக-வின் நிலைப்பாடு குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவின் உன்னதமான தத்துவங்களையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் விஷயம் என்று வரும்போது, இந்த அறையில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து நிற்பார்கள். குறிப்பாக, இதில் திமுக-வின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உறுதியான ஆதரவு குறித்து என்னால் 100 சதவீதம் இப்போதே உறுதியளிக்க முடியும்" என்று மிகவும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/rahul-and-stalin-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்&#8221;.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!" /></figure><strong>டெல்லி, ஜுன் 13:</strong> இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில், திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA) கூட்டணிக்குத் துணையாக நிற்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய ஒரு அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில், டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய உரை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-election-defeat-edappadi-palaniswami-holds-disucssion-in-jayalalithaa-style-84536.html">அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!</a></strong></p>

<h3>திமுக என்றும் ஆதரிக்கும்:</h3>
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தின் போது ராகுல் காந்தி பேசிய உரையின் ஒரு பகுதியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் தற்காலிகமாகப் பிரிவை ஏற்படுத்தியிருந்தாலும், கொள்கை அளவில் 'இந்தியாவை மாற்றுவது மற்றும் பாதுகாப்பது' என்ற பொது நோக்கில் திமுக தங்களுக்கு ஆதரவளிக்கும் என்ற தொனியில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
<h3>பாஜக-வின் பொய் பிரச்சாரத்திற்குப் பதில்:</h3>
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "எதிர்க்கட்சிகளுக்குள் எந்தவித ஒற்றுமையும் இல்லை; அவர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும் தொடர்ந்து பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றன. மக்கள் இந்தத் தவறான கருத்துக்களை முற்றிலும் புறந்தள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
<h3>திமுக மீது 100% உறுதி:</h3>
மேலும், திமுக-வின் நிலைப்பாடு குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவின் உன்னதமான தத்துவங்களையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் விஷயம் என்று வரும்போது, இந்த அறையில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து நிற்பார்கள். குறிப்பாக, இதில் திமுக-வின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உறுதியான ஆதரவு குறித்து என்னால் 100 விழுக்காடு இப்போதே உறுதியளிக்க முடியும்" என்று மிகவும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-visits-karnataka-temple-kannada-groups-attempt-to-wave-black-flags-this-is-the-reason-84500.html">கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..</a></strong>

கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற  இந்த 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் திமுக தரப்பிலிருந்து பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காத போதும், ராகுல் காந்தி திமுக மீது இத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது, தேர்தல் கூட்டணிகளைத் தாண்டி தேசிய அளவில் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான பிணைப்பைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. &#8216;ஜெயலலிதா பாணியில்&#8217; இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-election-defeat-edappadi-palaniswami-holds-disucssion-in-jayalalithaa-style-84536.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 11:54:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-election-defeat-edappadi-palaniswami-holds-disucssion-in-jayalalithaa-style-84536.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்த மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டத்தின் முதற்கட்டமாக, இன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/11/edappadi-palaniswami-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. &#8216;ஜெயலலிதா பாணியில்&#8217; இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!" /></figure><strong>சென்னை, ஜுன் 13:</strong> நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தேர்தல் தோல்வி மற்றும் கட்சியில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் அதிமுக கூட்டணி மொத்தம் 53 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக தனித்து 47 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை அதிமுகவின் வாக்குச் சதவீதம் மிகவும் சரிந்துள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-visits-karnataka-temple-kannada-groups-attempt-to-wave-black-flags-this-is-the-reason-84500.html">கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..</a></strong>
<h3>நெருக்கடியான சூழ்நிலையில் ஆலோசனை:</h3>
அதேவேளையில், இத்தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள சூழலில், அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலரும் தொடர்ந்து விலகி தவெக-வில் இணைந்து வருகின்றனர். இன்று கூட அதிமுகவின் முக்கிய நிர்வாகியான பாலகங்கா உள்ளிட்டோர் தவெக-வில் இணைய உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த மிக நெருக்கடியான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையைத் துவங்கியுள்ளார்.
<h3>ஜெயலலிதா பாணியில் களமிறங்கிய இபிஎஸ்:</h3>
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேர்தல் தோல்வி குறித்து ஆராய புதிய வழிகளைத் திட்டமிட்டுள்ளார். கடந்த காலங்களில் கட்சி தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிமட்டக் கிளை நிர்வாகிகள் வரை நேரில் அழைத்து, தோல்விக்கான காரணங்களை நேரடியாகக் கேட்டறிவார். அதே பாணியை தற்போது எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்துள்ளார்.
<h3>புகார்களைத் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்:</h3>
கிளை, நகரம், பேரூராட்சி, ஒன்றியம், மாவட்டம் என அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களிடம் அவர் நேரடியாகப் பேசுகிறார். கட்சிக்குள்ளான உட்கட்சிப் பூசல்கள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து எந்தவிதத் தயக்கமும் இன்றி தன்னிடம் நேரடியாகப் புகார்களைத் தெரிவிக்கலாம் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
<h3>முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டம்:</h3>
இந்த மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டத்தின் முதற்கட்டமாக, இன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/amit-shah-discussion-with-tamilnadu-bjp-leaders-after-annamalai-exit-shared-positive-words-84510.html">அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன ‘பாசிட்டிவ்’ வார்த்தை..</a></strong>

தொடர்ச்சியான கட்சித் தாவல்கள் மற்றும் தேர்தல் சரிவிலிருந்து அதிமுகவை மீட்டெடுக்க, உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த அதிரடி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை.. கோவையில் உற்சாக வரவேற்பு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-bjp-leader-annamalai-was-welcomed-by-his-supporters-at-coimbatore-airport-84525.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 11:26:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-bjp-leader-annamalai-was-welcomed-by-his-supporters-at-coimbatore-airport-84525.html</guid>
		            
			

    	<description><![CDATA[இன்று விமானம் மூலம் அண்ணாமலை  கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக “We The Leader” என்று முழக்கமிட்டு, பூங்கொத்துகள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் ஆதரவாளர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சிலர் அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/annama.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை.. கோவையில் உற்சாக வரவேற்பு.." /></figure><p data-start="0" data-end="227"><span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal"><strong>ஜூன் 13, 2026:</strong> அண்ணாமலை</span></span> பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக இருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகிய பிறகு இன்று கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவிலிருந்து விலகுவதாக <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">அண்ணாமலை </span></span>கட்சித் தலைமையிடம் கடிதம் வழங்கியிருந்தார். அவரது ராஜினாமா கடிதம் ஜூன் 5ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அதே நாளில் இணையவழி நிகழ்ச்சியில் பேசிய அவர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்தார்.</p>

<h3 data-start="0" data-end="227">அண்ணாமலைக்கு குவியும் ஆதரவு:</h3>
<p data-start="506" data-end="768">அவரது புதிய அரசியல் முயற்சிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பலரும் “We The Leader” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும், அவர் அறிவித்த குறிப்பிட்ட நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் இணையவழி மூலம் அந்த இயக்கத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது.</p>
<p data-start="506" data-end="768">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/why-are-there-frequent-power-cuts-in-chennai-electricity-board-has-revealed-three-key-reasons-84519.html">சென்னையில் தொடர் மின்வெட்டு ஏன்? 3 முக்கியக் காரணங்களை வெளியிட்டது மின்வாரியம்!</a></p>
<p data-start="770" data-end="1048">பாஜகவில் இருந்த சில நிர்வாகிகள் மட்டுமல்லாமல், பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">அண்ணாமலை</span></span>க்கு ஆதரவு தெரிவித்து அவரது புதிய கட்சியில் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>

<h3 data-start="770" data-end="1048">கோவைக்கு வருகை தந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு:</h3>
<p data-start="1050" data-end="1256">இந்நிலையில், இன்று விமானம் மூலம் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">அண்ணாமலை</span></span>  கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
<p data-start="1050" data-end="1256">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/is-vijayadharani-leaving-the-bjp-to-join-tvk-reason-behind-this-bold-move-84532.html">பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் விஜயதரணி.. அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..</a></p>
<p data-start="1258" data-end="1542">குறிப்பாக “We The Leader” என்று முழக்கமிட்டு, பூங்கொத்துகள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் ஆதரவாளர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சிலர் அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர். விமான நிலையம் முழுவதும் அவரது ஆதரவாளர்களின் முழக்கங்கள் ஒலித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.</p>
<p data-start="1544" data-end="1773" data-is-last-node="" data-is-only-node="">அனைவரது வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">அண்ணாமலை</span></span> , பின்னர் தனது இல்லத்திற்குப் புறப்பட்டார். அவரை காண பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் விமான நிலையத்திற்கு திரண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/is-vijayadharani-leaving-the-bjp-to-join-tvk-reason-behind-this-bold-move-84532.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 11:19:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/is-vijayadharani-leaving-the-bjp-to-join-tvk-reason-behind-this-bold-move-84532.html</guid>
		            
			

    	<description><![CDATA[அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளில், விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக விஜயதரணி களம் இறக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் அவர் சுமார் 45,600-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற போதிலும், இறுதியில் தோல்வியைத் தழுவினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vijayadharani-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?.." /></figure><strong>சென்னை, ஜுன் 13:</strong> தமிழக அரசியல் களத்தில் முக்கியத் திருப்பமாக, விளவங்கோடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி, <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/amit-shah-discussion-with-tamilnadu-bjp-leaders-after-annamalai-exit-shared-positive-words-84510.html" target="_blank" rel="noopener">பாரதிய ஜனதா கட்சியிலிருந்து</a> விலகி, நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகத்தில்' இணைந்தார். விஜயதரணி நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் பயணித்தவர் ஆவார். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்குப் போதிய முக்கியத்துவம் மற்றும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டி, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/amit-shah-discussion-with-tamilnadu-bjp-leaders-after-annamalai-exit-shared-positive-words-84510.html">அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன ‘பாசிட்டிவ்’ வார்த்தை..</a></strong>

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது ஈர்க்கப்பட்டு பாஜக-வில் இணைந்த அவருக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கட்சியில் குறிப்பிடத்தக்க அளவிலான முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
<h3>2026 தேர்தல் தோல்வியும் முடிவும்:</h3>
அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளில், விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக விஜயதரணி களம் இறக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் அவர் சுமார் 45,600-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற போதிலும், இறுதியில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாகவும், கட்சியில் முக்கியத்துவம் இல்லாததாலும் பாஜக-விலிருந்து விலக அவர் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
<h3>தவெக-வில் இணைந்த விஜயதரணி:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta">பாஜகவில் இருந்து விலகி <a href="https://x.com/TVKPartyHQ?ref_src=twsrc%5Etfw">@TVKPartyHQ</a> -வில் இணைந்தார் விஜய் தரணி ! 🙏 <a href="https://t.co/owoqVeG1uG">https://t.co/owoqVeG1uG</a> <a href="https://t.co/ilr4yu99i0">pic.twitter.com/ilr4yu99i0</a></p>
— Prakash Vijay (@PrakazVijay_Of) <a href="https://x.com/PrakazVijay_Of/status/2065694993289990220?ref_src=twsrc%5Etfw">June 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
பாஜக-விலிருந்து வெளியேறிய விஜயதரணி, இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அங்கு தவெக-வின் மாநில நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, பாஜக-விலிருந்து விலகியதற்கான காரணங்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்தான தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விஜயதரணி செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான பேட்டி அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-visits-karnataka-temple-kannada-groups-attempt-to-wave-black-flags-this-is-the-reason-84500.html">கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..</a></strong>

காங்கிரஸ், பாஜக ஆகிய தேசியக் கட்சிகளைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்தின் வளர்ந்து வரும் மாநிலக் கட்சியான தவெக-வில் விஜயதரணி இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னையில் தொடர் மின்வெட்டு ஏன்? 3 முக்கியக் காரணங்களை வெளியிட்டது மின்வாரியம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/why-are-there-frequent-power-cuts-in-chennai-electricity-board-has-revealed-three-key-reasons-84519.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 10:42:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/why-are-there-frequent-power-cuts-in-chennai-electricity-board-has-revealed-three-key-reasons-84519.html</guid>
		            
			

    	<description><![CDATA[மின் கேபிள்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மின்வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. பழுதுபார்க்கும் பணிகளில் போதிய தொழிலாளர்கள் இல்லாததே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்றும், இதனால் தான் சில பகுதிகளில் மின்தடை நீண்ட நேரம் நீடிக்கிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tneb.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னையில் தொடர் மின்வெட்டு ஏன்? 3 முக்கியக் காரணங்களை வெளியிட்டது மின்வாரியம்!" /></figure><strong>சென்னை, ஜுன் 13:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issues-rainfall-warning-to-chennai-and-other-districts-and-no-change-in-temperature-84497.html" target="_blank" rel="noopener">சென்னையின்</a> பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், இந்த மின்தடைக்கான முக்கியக் காரணங்கள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. மின்வாரியம் நடத்திய ஆய்வின்படி, சென்னையில் குறிப்பாக மவுண்ட் ரோடு, வேளச்சேரி, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் மற்ற இடங்களை விடக் கூடுதலான அளவில் மின்வெட்டுப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/15-year-old-girl-suicide-at-sri-lankan-tamil-rehabilitation-camp-in-dindigul-84382.html" target="_blank" rel="noopener">பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!</a></strong>
<h3>மின்வெட்டுக்கு  3 முக்கியக் காரணங்கள்:</h3>
சென்னையின் பல பகுதிகளில் தற்போது பல்வேறு துறைகள் சார்பில் சாலைகளைத் தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு சாலைகளைத் தோண்டும்போது, பூமிக்கு அடியில் செல்லும் மின்வாரியத்தின் நிலத்தடி மின் கேபிள்கள் எதிர்பாராதவிதமாகச் சேதமடைகின்றன. இதுவே நகரின் பல இடங்களில் திடீர் மின்தடை ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
<h3>மின்மாற்றிகளுக்கு கூடுதல் சுமை:</h3>
சென்னையில் நடப்பு கோடைக் காலத்தில் மின்சாரத்திற்கான தேவை முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்குக் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நகரின் உச்சபட்ச மின் தேவையானது 5,014 மெகாவாட்டைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன் காரணமாக, ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளில் கூடுதல் சுமை ஏற்பட்டுத் தொழில்நுட்பக் கோளாறுகள் உருவாகின்றன.
<h3>தொழிலாளர்கள் பற்றாக்குறை:</h3>
மின் கேபிள்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மின்வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. பழுதுபார்க்கும் பணிகளில் போதிய தொழிலாளர்கள் இல்லாததே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்றும், இதனால் தான் சில பகுதிகளில் மின்தடை நீண்ட நேரம் நீடிக்கிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நிலவும் மின்தடைப் பிரச்சனையை விரைந்து சரிசெய்து, தடையற்ற மின் விநியோகத்தை வழங்குவதற்கான சீரமைப்புப் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<h3>மின்வெட்டு இருக்கும்னு நான் எதிர்பார்க்கல:</h3>
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்சமயம் மின்வெட்டுப் பிரச்சனை ஒரு கடுமையான விவகாரமாக உருவெடுத்துள்ள நிலையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் நிலவும் மிக மோசமான மின்வெட்டு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்
கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், "இங்கு இவ்வளவு மோசமான முறையில் மின்வெட்டு இருக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நேற்றைய இரவு முழுவதும் மின்சாரம் எப்போது வருகிறது, எப்போது போகிறது என்றே தெரியவில்லை.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-died-after-a-car-crashed-on-the-kaveripakkam-flyover-in-ranipet-district-84404.html">ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!</a></strong>

திடீரென வருகிறது, ஆனால் நீண்ட நேரம் மின்தடை ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி, படாத பாடுபட்டுள்ளனர்" என்று தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கேரளாவில் நிபா வைரஸ் பரவல்.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த உத்தரவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/as-nipah-virus-spreads-in-kerala-precautionary-and-advisory-released-by-by-tamilnadu-public-health-84515.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 10:20:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/as-nipah-virus-spreads-in-kerala-precautionary-and-advisory-released-by-by-tamilnadu-public-health-84515.html</guid>
		            
			

    	<description><![CDATA[மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுச் சுகாதாரத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்று நோயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் தின்னும் வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலமும் இந்த தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/nipah-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கேரளாவில் நிபா வைரஸ் பரவல்.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த உத்தரவு.." /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="" data-turn-id-container="request-WEB:b6fe0bc0-15a7-4543-a2aa-07e1ef06e0d0-4" data-is-intersecting="true"><section class="text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:b6fe0bc0-15a7-4543-a2aa-07e1ef06e0d0-4" data-turn-id-container="request-WEB:b6fe0bc0-15a7-4543-a2aa-07e1ef06e0d0-4" data-testid="conversation-turn-10" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn" data-conversation-screenshot-content="">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="9371c047-8686-49d8-ac7f-d2a897f79eda" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="235"><strong>ஜூன் 13, 2026:</strong> கேரள மாநிலத்தில் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">நிபா வைரஸ்</span></span> பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நபருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதே சமயத்தில், அவருடன் தொடர்பில் இருந்த மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நிபா வைரஸ் பரவல் தொடர்பாக முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p>

<h3 data-start="0" data-end="235">தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்:</h3>
<p data-start="551" data-end="842">இந்த சூழலில், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொதுச் சுகாதாரத்துறை, எல்லையோர மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="551" data-end="842">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/are-you-looking-for-lease-house-multi-lakh-rupee-scam-unfolds-in-chennai-beware-everyone-84516.html">‘வீடு லீசுக்கு போறீங்களா?’ சென்னையில் அரங்கேறிய பல லட்ச ரூபாய் நூதன மோசடி.. உஷார் மக்களே!!</a></p>
<p data-start="844" data-end="1253">மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுச் சுகாதாரத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">நிபா வைரஸ்</span></span> என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்று நோயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் தின்னும் வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலமும் இந்த தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.</p>
<p data-start="1255" data-end="1586">எவருக்கேனும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, சோர்வு, இருமல், சுவாசக்குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு மூளை அழற்சி, மயக்கம் மற்றும் நினைவிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.</p>

<h3 data-start="1255" data-end="1586">தனி அறையில் சிகிச்சை:</h3>
<p data-start="1588" data-end="1826">அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் நபர்களுக்கு உடனுக்குடன் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனி அறைகளில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="1828" data-end="2098">அதேபோல், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
<p data-start="2100" data-end="2413" data-is-last-node="" data-is-only-node="">மேலும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என்றும், அதே நேரத்தில் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. பழங்கள் சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும் என்றும், வெளவால்கள் கடித்த பழங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section></div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>‘வீடு லீசுக்கு போறீங்களா?’ சென்னையில் அரங்கேறிய பல லட்ச ரூபாய் நூதன மோசடி.. உஷார் மக்களே!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/are-you-looking-for-lease-house-multi-lakh-rupee-scam-unfolds-in-chennai-beware-everyone-84516.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 08:49:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/are-you-looking-for-lease-house-multi-lakh-rupee-scam-unfolds-in-chennai-beware-everyone-84516.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்த மோசடி கும்பல் குறித்து 20-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டும் காவல்துறை தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மே 24-ஆம் தேதி வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமரனிடம் முறையிட்டனர். அமைச்சர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/chennai-lease-house-scam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="‘வீடு லீசுக்கு போறீங்களா?’ சென்னையில் அரங்கேறிய பல லட்ச ரூபாய் நூதன மோசடி.. உஷார் மக்களே!!" /></figure><strong>சென்னை, ஜுன் 13:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issues-rainfall-warning-to-chennai-and-other-districts-and-no-change-in-temperature-84497.html" target="_blank" rel="noopener">சென்னையில்</a> வீடு வாடகைக்கு எடுப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அதிகப்படியான வாடகை காரணமாக, நடுத்தர வர்க்கத்தினர் பலரும் வீடுகளை குத்தகைக்கு (லீஸ்) எடுத்து தங்குவதையே பெரிதும் விரும்புகின்றனர். மக்களின் இந்தத் தேவையைச் சாதகமாக்கிக் கொண்டு, ஆன்லைன் தளங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமாக நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்த கும்பலைச் சேர்ந்த இருவரை வேளச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர், வேளச்சேரி பகுதியில் குத்தகைக்கு வீடு தேடியுள்ளார். OLX போன்ற இணையதளம் மூலமாக வேளச்சேரி லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு வீட்டைப் பார்த்துள்ளார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/15-year-old-girl-suicide-at-sri-lankan-tamil-rehabilitation-camp-in-dindigul-84382.html" target="_blank" rel="noopener">பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!</a></strong>

அந்த வீட்டின் உரிமையாளர் அக்பர் ஷரீப், அவரது சகோதரர் முஸாமில் ஷரீஃப் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் வெண்ணிலாவிடம் பேசி, கடந்த ஆண்டு பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பின் அவர்கள் வீட்டை லீசுக்கு வழங்காமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர். இதேபோல் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான விஜய் என்பவரிடமும் இந்த கும்பல் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று பாதிக்கப்பட்ட பலரும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார்களை அடுக்கத் தொடங்கினர்.
<h3>மூன்று ஆண்டுகால நாடகம்:</h3>
போலீசாரின் தொடர் விசாரணையில், அக்பர் ஷரீப், முஸாமில் ஷரீஃப் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் ஒரு போலி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திக்கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்களது மோசடி நெறிமுறைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. ஒரு வீட்டை கட்டுமானப் பணியில் இருக்கும் போதே காட்டி பலரிடம் முன்பணம் வாங்குவது இவர்களின் வழக்கம். மேலும், தங்களது கூட்டாளிகளையே அந்த வீட்டில் வாடகைக்கு அமர்த்தி வைப்பார்கள். வீடு பார்க்க வரும் நபர்களிடம் அந்த கூட்டாளிகள் நல்ல முறையில் பேசி, நம்பகத்தன்மையை உருவாக்கி குத்தகை பணத்தை முழுமையாக வாங்க வைப்பார்கள்.
<h3>சுழற்சி முறையில் ஏமாற்று வேலை:</h3>
வீட்டைப் பெறாமல் ஏமாந்தவர்கள் தங்களது பணத்தைத் திருப்பி கேட்கும்போது, தற்காலிகமாக அந்த வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்தி வீட்டை காலி செய்ய வைப்பார்கள். தொடர்ந்து பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுப்பவர்களுக்கு, தற்காலிகமாக வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொடுத்து, அதற்கான வாடகையை தாங்களே தருவதாகக் கூறுவார்கள். பாதிக்கப்பட்ட மற்றவர்களிடம் வாங்கிய பணத்தைக் கொண்டே, இவர்களுக்கு ஓராண்டு வரை வாடகை செலுத்திவிட்டு, அதன்பின்னர் மீதிப் பணத்தை ஏமாற்றி தலைமறைவாகி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
<h3>அமைச்சர் தலையீடும் போலீஸ் நடவடிக்கையும்:</h3>
இந்த மோசடி கும்பல் குறித்து 20-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டும் காவல்துறை தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மே 24-ஆம் தேதி வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமரனிடம் முறையிட்டனர். அமைச்சர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.

அமைச்சர் தலையிட்டு 15 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவி வந்த சூழலில், தற்போது வேளச்சேரி போலீசார் இந்த வழக்கில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, மோசடி கும்பலைச் சேர்ந்த முஸாமில் ஷரீஃப் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கும்பலின் பின்னணியில் உள்ள முதன்மை குற்றவாளியான அக்பர் ஷரீப் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-died-after-a-car-crashed-on-the-kaveripakkam-flyover-in-ranipet-district-84404.html">ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!</a></strong>

இணையதளங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை குத்தகை பணம் பெற்று இந்த கும்பல் மிகப்பெரிய அளவில் மோசடி செய்திருப்பது சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான பாசனத்தேவை.. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-orders-to-release-water-from-manimutharu-papanasam-and-servalaru-dam-for-agricultural-needs-84511.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 08:00:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-orders-to-release-water-from-manimutharu-papanasam-and-servalaru-dam-for-agricultural-needs-84511.html</guid>
		            
			

    	<description><![CDATA[மேட்டூர் அணை நீர் திறக்க 90 அடி அளவுக்கு நீர் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 79.62 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதேபோல், அணைக்கு வரும் நீர்வரத்து 424 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்த காரணத்தினால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படவில்லை. ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/water-release-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான பாசனத்தேவை.. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு.." /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="" data-turn-id-container="request-WEB:b6fe0bc0-15a7-4543-a2aa-07e1ef06e0d0-3" data-is-intersecting="true"><section class="text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:b6fe0bc0-15a7-4543-a2aa-07e1ef06e0d0-3" data-turn-id-container="request-WEB:b6fe0bc0-15a7-4543-a2aa-07e1ef06e0d0-3" data-testid="conversation-turn-8" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn" data-conversation-screenshot-content="">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="318ab932-737d-4d4b-8e5e-4142c08523e0" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="283"><strong>ஜூன் 13, 2026:</strong> தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசன தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய மூன்று அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:</p>

<h3 data-start="0" data-end="283">அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு:</h3>
<p data-start="366" data-end="1012">தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனப் பகுதிகளில் உள்ள நெல்லை மாவட்டத்தின் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கீழ் உள்ள மருதூர் மேலக்கால்வாய், தென்கால்வாய் மற்றும் வடக்கால்வாய் ஆகிய ஒன்பது கால்வாய்களின் கீழ் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்காக ஜூன் 15 முதல் அக்டோபர் 13 வரை 121 நாட்களுக்கு, 6086.83 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப அணைகளில் உள்ள நீர் இருப்பைப் பொருத்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.</p>
<p data-start="366" data-end="1012">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issues-rainfall-warning-to-chennai-and-other-districts-and-no-change-in-temperature-84497.html">சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?</a></p>
<p data-start="1014" data-end="1311">இதன் மூலம் நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை உள்ளிட்ட வட்டங்கள் மற்றும் கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட வட்டங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள 36 ஆயிரத்து 521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="1014" data-end="1311">மேட்டூர் அணை நீர்திறப்பு - விவசாயிகள் ஏமாற்றம்:</h3>
<p data-start="1313" data-end="1468">இது ஒரு பக்கம் இருக்க, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய நீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை பாசனத்திற்காக நீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் குருவை பாசனத்திற்காக நீர் திறக்கப்படும்.</p>
<p data-start="1313" data-end="1468">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/no-water-release-from-mettur-dam-leaves-delta-farmers-disappointed-84423.html">மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை – லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம்</a></p>
<p data-start="1784" data-end="2056">நீர் திறக்க 90 அடி அளவுக்கு நீர் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 79.62 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதேபோல், அணைக்கு வரும் நீர்வரத்து 424 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்த காரணத்தினால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படவில்லை. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section></div>
</div>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன &#8216;பாசிட்டிவ்&#8217; வார்த்தை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/amit-shah-discussion-with-tamilnadu-bjp-leaders-after-annamalai-exit-shared-positive-words-84510.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 07:56:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/amit-shah-discussion-with-tamilnadu-bjp-leaders-after-annamalai-exit-shared-positive-words-84510.html</guid>
		            
			

    	<description><![CDATA[சட்டமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த தோல்வி என்பது ஒரு தோல்வியே இல்லை. நாம் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வலுவாகத்தான் இருக்கிறோம். பாஜக நீங்கள் நினைப்பது போலத் தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை; மாறாக அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது," என்று பேசி நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/amithsha-discussion.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன &#8216;பாசிட்டிவ்&#8217; வார்த்தை.." /></figure><strong>டெல்லி, ஜுன் 13:</strong> தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/annamalai-told-not-to-use-my-name-and-photo-in-private-organizations-83620.html" target="_blank" rel="noopener">அண்ணாமலை</a> வெளியேறியுள்ள சூழலிலும், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு மத்தியிலும், டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் ஆகியோர் நேற்று முன்தினம் அவசர ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தினர். அண்ணாமலையின் திடீர் விலகலால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்க்கவும், நிர்வாகிகளுக்குப் புதிய உத்வேகம் அளிக்கவும் இந்த முக்கிய கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-visits-karnataka-temple-kannada-groups-attempt-to-wave-black-flags-this-is-the-reason-84500.html">கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..</a></strong>
<h3>‘இது ஒரு தோல்வியே அல்ல’ அமித்ஷா உத்வேகம்:</h3>
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக நிர்வாகிகளிடம் மிகவும் நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த தோல்வி என்பது ஒரு தோல்வியே இல்லை. நாம் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வலுவாகத்தான் இருக்கிறோம். பாஜக நீங்கள் நினைப்பது போலத் தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை; மாறாக அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது," என்று பேசி நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
<h3>பாஜக வாக்கு வங்கி கணக்கு என்ன?</h3>
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது என அமித்ஷா கூறுவதற்குக் குறிப்பிட்ட ஒரு அரசியல் கணக்கை அவர் முன்வைத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 23 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கீழ் வரும் சுமார் 80-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் கட்சியின் வாக்கு சதவீதம் 11 முதல் 12 விழுக்காடாக இருந்தது.

ஆனால் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகக் 27 தொகுதிகளில் போட்டியிட்டது. எனவே ஒட்டுமொத்த தமிழக அளவிலான வாக்கு சதவீதம் (3.66%) குறைவாகத் தெரிந்தாலும், நாம் போட்டியிட்ட தொகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் வாக்கு வங்கி எங்கும் சிதறவில்லை, அப்படியேதான் உள்ளது என்பதை அமித்ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.
<h3>துவண்டு விடாதீர்கள்.. பணியைத் தொடருங்கள்:</h3>
"தேர்தல் முடிவுகளைக் கண்டு யாரும் தொய்வடைந்து விடக் கூடாது. அண்ணாமலை சென்றுவிட்டாரே என்று கவலைப்படாமல், எனர்ஜெடிக்காக அடுத்தடுத்த தேர்தல் பணிகளை நோக்கி நீங்கள் நகர வேண்டும். டெல்லியில் இருந்து உங்களுக்கு முழுமையான ஆதரவு எப்போதும் இருக்கும். பயப்படாமல் களத்திற்குச் செல்லுங்கள். தாமரை மலர்ந்திருப்பதைப் போல மலர்ந்த முகத்துடன் தமிழகத்தில் பாஜாகவை வளர்ப்பதற்கான தேர்தல் அரசியலை முன்னெடுங்கள்," என அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvks-sofa-model-govt-is-slapping-stickers-on-dmks-achievements-udhayanidhi-remark-84406.html">“திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது ‘சோபா மாடல்’ அரசு!”.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!</a></strong>

அண்ணாமலையின் வெளியேற்றத்திற்குப் பிறகு தமிழக பாஜாகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், "அவர் போனால் போயிட்டுப் போறார், துவண்டு விடாமல் உங்கள் வேலையைப் பாருங்கள்" என அமித்ஷா டெல்லியில் இருந்து பாஜக தலைவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விஜய்க்கு அடுத்தடுத்து தலைவலி.. தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கும் தவெகவினர்.. சேலத்தில் கட்சி நிர்வாகி செய்த அட்டூழியம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-functionary-manikandan-was-arrested-in-salem-following-a-complaint-of-harassment-lodged-by-a-woman-84506.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 07:22:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-functionary-manikandan-was-arrested-in-salem-following-a-complaint-of-harassment-lodged-by-a-woman-84506.html</guid>
		            
			

    	<description><![CDATA[Salem TVK Functionary Arrested: சேலத்தில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவரை கொண்டாலம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல, தூத்துக்குடி, சென்னையில் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tvk-administrator-arrest.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விஜய்க்கு அடுத்தடுத்து தலைவலி.. தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கும் தவெகவினர்.. சேலத்தில் கட்சி நிர்வாகி செய்த அட்டூழியம்!" /></figure><a href="http://விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!" target="_blank" rel="noopener">சேலம்</a> மாவட்டம், நெய்க்காரன் பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் ( 40 வயது). இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும், அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் மீது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் சுமத்தியதுடன், இது தொடர்பாக ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில், நான் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறேன். எனது குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்தேன். எனக்கு, போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்தேன். அப்போது, நெய்க்காரன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் எனக்கு அறிமுகமாகினார். அவர் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்து எனக்கு உதவி புரிந்தார். இதனால், அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்து வந்தோம்.
<h3>ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்</h3>
இந்த நிலையில், அவரது செல்போனை பார்த்த போது அதில் பல்வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அதில் இருந்த என்னுடைய வீடியோக்களை அழித்துவிட்டு அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டேன். இதை அறிந்த அந்த நபர் உனது ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் போதெல்லாம் நீ வரவேண்டும். இல்லையெனில், உனது ஆபாச வீடியோக்களை நான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-tvk-functionary-who-attempted-to-steal-a-laptop-from-a-bus-in-villupuram-84374.html" target="_blank" rel="noopener">விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!</a>
<h3>பெண் வெளியிட்ட பரபரப்பு ஆடியோ</h3>
எனவே, இவரால் பல்வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆடியோவில் பேசியிருந்தார். இந்த விவகாரம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரியின் கவனத்துக்கு சென்றது. அவரது உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், பல்வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது.
<h3>தவெக நிர்வாகி அதிரடி கைது</h3>
இதன் மூலம் பல பெண்களிடம் மணிகண்டன் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதன் மூலம் அவர்களை மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மணிகண்டனை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரு தவெக நிர்வாகிகள், சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஒரு தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/school-teacher-arrested-under-pocso-for-sending-obscene-images-to-class-10-students-in-coimbatore-84490.html" target="_blank" rel="noopener">கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் – ஆசிரியர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சாத்தான்குளம் தந்தை &#8211; மகன் கொலை வழக்கு.. &#8216;ஏ கிளாஸ்&#8217; சிறை  கேட்ட முன்னாள் காவலர்கள்..  குட்டு வைத்த நீதிமன்றம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/sathankulam-murder-case-former-police-personnel-sought-a-class-prison-status-court-rebukes-them-84505.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 07:19:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/sathankulam-murder-case-former-police-personnel-sought-a-class-prison-status-court-rebukes-them-84505.html</guid>
		            
			

    	<description><![CDATA[தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்த ஐந்து முன்னாள் காவலர்களும், தங்களுக்கு சிறையில் 'ஏ கிளாஸ்' (முதல் வகுப்பு) சிறை அறை மற்றும் அதற்கான பிரத்யேக வசதிகளை வழங்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். தங்களின் முந்தைய அரசுப் பதவி மற்றும் தகுதியின் அடிப்படையில் இந்த வசதி வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/sathankulam-jail-deaths.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சாத்தான்குளம் தந்தை &#8211; மகன் கொலை வழக்கு.. &#8216;ஏ கிளாஸ்&#8217; சிறை  கேட்ட முன்னாள் காவலர்கள்..  குட்டு வைத்த நீதிமன்றம்!" /></figure><strong>மதுரை, ஜுன் 13:</strong> நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்கள் 5 பேரின் 'ஏ கிளாஸ்' (முதல் வகுப்பு) சிறை வசதி கோரிய மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு காலத்தில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் செல்லத்துரை, சாமதுரை, வெயில்முத்து ஆகிய போலீசார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-visits-karnataka-temple-kannada-groups-attempt-to-wave-black-flags-this-is-the-reason-84500.html">கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..</a></strong></p>

<h3>முன்னாள் காவலர்களின் மனு:</h3>
தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்த ஐந்து முன்னாள் காவலர்களும், தங்களுக்கு சிறையில் 'ஏ கிளாஸ்' (முதல் வகுப்பு) சிறை அறை மற்றும் அதற்கான பிரத்யேக வசதிகளை வழங்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். தங்களின் முந்தைய அரசுப் பதவி மற்றும் தகுதியின் அடிப்படையில் இந்த வசதி வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
<h3>நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:</h3>
இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், முன்னாள் காவலர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. "சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் காவல் அதிகாரிகள் 5 பேருக்கும் சிறையில் 'ஏ-கிளாஸ்' (முதல் வகுப்பு) வசதிகளை வழங்க முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறி, அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த கறாரான உத்தரவு சட்ட வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/alandur-tvk-secretary-dismissed-for-harassing-a-woman-in-chennai-84401.html">கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!</a></strong>
<h3>9 பேருக்கு தூக்குத் தண்டனை:</h3>
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், கடந்த ஏப்.26ம் தேதி இந்திய சட்ட வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு லாக்-அப் மரண வழக்கில் மிகக் கடுமையான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். ஒரு காவல் நிலையத்தின் முழு அதிகாரமும் இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்பதால், நேரடியாகக் குற்றத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்தராஜ், சாமதுரை, செல்லத்துரை, வேலுமுத்து, தாமஸ், முருகன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-visits-karnataka-temple-kannada-groups-attempt-to-wave-black-flags-this-is-the-reason-84500.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 06:44:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-visits-karnataka-temple-kannada-groups-attempt-to-wave-black-flags-this-is-the-reason-84500.html</guid>
		            
			

    	<description><![CDATA[பதவியில் இருக்கும் போது கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபடும் மூன்றாவது தமிழக முதலமைச்சர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் இக்கோவிலுக்குச் சென்று மிகத் தீவிரமாக வழிபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/cm-vijay-karnataka-visit.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?.." /></figure><strong>கர்நாடகா, ஜூன் 13: </strong>தமிழக <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-cm-vijay-offers-prayers-at-kollur-mookambika-temple-in-karnataka-84437.html" target="_blank" rel="noopener">முதலமைச்சர் விஜய்</a> தனது மூன்று நாள் டெல்லி பயணத்தை நிறைவு செய்த கையோடு, கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள உலகப் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார். இதனிடையே, அங்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் கறுப்புக்கொடி காட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கறுப்புக்கொடி காட்ட முயன்றதன் பின்னணி குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-cm-vijay-offers-prayers-at-kollur-mookambika-temple-in-karnataka-84437.html">மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு – வெள்ளி வேல் காணிக்கை</a></strong></p>

<h3>முன்னாள் முதல்வர்களின் ஆன்மீகப் பாதை:</h3>
முதல்வர் விஜய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதன் மூலம், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையையும் தற்போது கொல்லூர் நோக்கி திருப்பியுள்ளது. இதன் மூலம் பதவியில் இருக்கும் போது கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபடும் மூன்றாவது தமிழக முதலமைச்சர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் இக்கோவிலுக்குச் சென்று மிகத் தீவிரமாக வழிபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், கோடசாத்ரி மலையின் அடிவாரத்தில், சௌபர்ணிகா நதிக்கரையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் ஒருங்கிணைந்த வடிவமாக மூகாம்பிகை தேவி இங்கு காட்சி அளிப்பதால், ஆன்மீக ரீதியாக இத்தலம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
<h3>போராட்டப் பின்னணி:</h3>
இதனிடையே, முதல்வர் விஜய்யின் கர்நாடகா சென்றிருந்தபோது, மேகேதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கர்நாடகாவின் தீவிர கன்னட அமைப்பான 'கன்னட ரக்ஷண வேதிகே' (பிரவீன் ஷெட்டி பிரிவு) அமைப்பினர் இந்த கறுப்புக்கொடி போராட்டத்திற்குத் திட்டமிட்டிருந்தனர். உடுப்பி மாவட்டத்தின் உத்யாவர் பகுதியில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், "வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்", "காவேரி நம்மது", "கன்னட விரோதி தமிழக முதலமைச்சருக்குத் திக்காரம்" போன்ற கோஷங்களை எழுப்பினர். அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம், உடுப்பி போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
<h3>கன்னட அமைப்பின் குற்றச்சாட்டு:</h3>
இப்போராட்டம் குறித்துப் பேசிய கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் பிரதிநிதிகள், "மேகேதாது அணைத் திட்டம் என்பது பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையைத் தீர்க்கவும், விவசாயிகளின் பாசனத்திற்காகவும், மின்சாரத் தயாரிப்பிற்காகவும் கொண்டு வரப்படும் மிகவும் அவசியமான திட்டமாகும். ஆனால், தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற இரண்டே நாட்களில், இந்த மேகேதாது திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சட்ட வல்லுநர்கள் குழுவை முதல்வர் விஜய் அவசர அவசரமாகத் தயார் செய்துள்ளார். அவருக்கு கர்நாடக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், இவ்வளவு அவசரமாக இதைச் செய்திருக்கத் தேவையில்லை. இதைக் கண்டித்தே நாங்கள் இன்று கறுப்புக்கொடி காட்டத் திரண்டோம்," என்று கூறினர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/good-news-for-tamil-nadu-farmers-cm-vijay-makes-a-bold-announcement-84381.html">தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!</a></strong>
<h3>தொடரும் மேகேதாது சர்ச்சை:</h3>
மேலும் பேசிய அவர்கள், "முன்னாள் முதலமைச்சர்களைப் போலல்லாமல், புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயாவது இந்த விவகாரத்தில் நல்லதொரு தீர்வைக் காண வேண்டும். கர்நாடகாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் எவ்வித பாகுபாடுமின்றி வாழ்ந்து வருகின்றனர். எனவே, மேகேதாது திட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காமல், இரு மாநிலங்களின் சுமுக உறவைக் கருதி தமிழக அரசு இதற்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டும்," என வலியுறுத்தினர்.

மேகேதாது விவகாரத்தில் கர்நாடகாவில் முதல்வர் விஜய்க்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்ததும், அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டதும் இரு மாநில எல்லைப் பகுதிகளில் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issues-rainfall-warning-to-chennai-and-other-districts-and-no-change-in-temperature-84497.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 06:35:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issues-rainfall-warning-to-chennai-and-other-districts-and-no-change-in-temperature-84497.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதே சமயத்தில், நகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/rain-16th.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?" /></figure><div class="flex h-svh w-screen flex-col">
<div class="relative z-0 flex min-h-0 w-full flex-1">
<div class="relative flex min-h-0 w-full min-w-0 flex-1">
<div class="@container/main relative flex min-w-0 flex-1 flex-col -translate-y-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)] pt-[calc(env(safe-area-inset-bottom,0px)/2)]">
<div class="@w-sm/main:[scrollbar-gutter:var(--stage-scroll-gutter)] touch:[scrollbar-width:none] group/scroll-root relative flex min-h-0 min-w-0 flex-1 flex-col [scrollbar-gutter:stable] not-print:overflow-x-clip not-print:overflow-y-auto group-data-stream-active/scroll-root:[overflow-anchor:none] scroll-pt-(--header-height) [--sticky-padding-top:var(--header-height)] [--sticky-padding-bottom:0px] [--scroll-root-safe-area-inset-top:calc(var(--sticky-padding-top)+env(safe-area-inset-top,0px))] [--scroll-root-safe-area-inset-bottom:calc(var(--sticky-padding-bottom)+var(--screen-keyboard-height,0px)+env(safe-area-inset-bottom,0px))] [--scroll-root-safe-area-height:calc(100lvh-var(--scroll-root-safe-area-inset-top)-var(--scroll-root-safe-area-inset-bottom))] has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xl]:@w-xl/main:[--sticky-padding-top:0px] has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:scroll-pt-0 has-data-[fixed-header=less-than-xxl]:@w-2xl/main:[--sticky-padding-top:0px]" data-scroll-root="" data-scroll-from-top="">
<div class="contents">

&nbsp;
<div id="thread" class="group/thread flex flex-col min-h-full">
<div class="composer-parent flex flex-1 flex-col focus-visible:outline-0" role="presentation">
<div class="relative basis-auto flex-col -mb-(--composer-overlap-px) pb-(--composer-overlap-px) [--composer-overlap-px:28px] grow flex" data-voice-floating-orb-focus-background="">
<div class="flex flex-col text-sm">
<div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="" data-turn-id-container="request-WEB:b6fe0bc0-15a7-4543-a2aa-07e1ef06e0d0-0" data-is-intersecting="true"><section class="text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:b6fe0bc0-15a7-4543-a2aa-07e1ef06e0d0-0" data-turn-id-container="request-WEB:b6fe0bc0-15a7-4543-a2aa-07e1ef06e0d0-0" data-testid="conversation-turn-2" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn" data-conversation-screenshot-content="">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="102fd406-277f-464b-91ce-59fb7ffba5a4" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="248"><strong>ஜூன் 14, 2026:</strong> தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சையில் 38 டிகிரி செல்சியஸ், நாகையில் 39 டிகிரி செல்சியஸ், கடலூரில் 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p>
<p data-start="506" data-end="806">சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 33.5 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 33.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது எனவும், வட உள் தமிழகத்தில் மட்டும் சற்று உயரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="506" data-end="806"> சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:</h3>
<p data-start="808" data-end="1196">சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதே சமயத்தில், நகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="808" data-end="1196">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tasmac-introduces-automatic-empty-bottle-return-machines-how-will-they-work-84495.html">டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம் – எப்படி வேலை செய்யும்?</a></p>
<p data-start="1198" data-end="1504">ஜூன் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகம் முழுவதும் லேசான முதல் மிதமான மழை இருக்கக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="1198" data-end="1504">எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?</h3>
<p data-start="1506" data-end="1801">அதேபோல், ஜூன் 15ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரக்கூடிய ஜூன் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p data-start="1803" data-end="1973" data-is-last-node="" data-is-only-node="">தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை கொட்டி வந்த சூழலில், தற்போது அது படிப்படியாக குறைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.</p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div>
</div>
</div>
</div>
</div>
&nbsp;

</div>
</div>
</div>
</div>
</div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது&#8221; பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. மதுரை உயர்நீதிமன்றம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tenkasi-palmyra-worker-shooting-case-enquiry-to-cbcid-madurai-high-court-ordered-84501.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 06:32:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tenkasi-palmyra-worker-shooting-case-enquiry-to-cbcid-madurai-high-court-ordered-84501.html</guid>
		            
			

    	<description><![CDATA[Palmyra Worker Shooting Case: தென்காசி மாவட்டத்தில் பனை தொழிலாளி மீது எஸ்ஐ இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளூர் போலீசார் விசாரணையில் நியாமிருக்காது என்பதன் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/palm-worker-shooting-case.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது&#8221; பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. மதுரை உயர்நீதிமன்றம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-youths-died-in-a-bike-accident-in-dharmapuri-84367.html" target="_blank" rel="noopener">தென்காசி மாவட்டம்</a>, ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன் மீது ஆலங்குளம் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஆலங்குளம் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசார் எனது மகனை பனந்தோப்புக்கு அழைத்துச் சென்று அங்கு கட்டப்பட்டிருந்த பானைகளில் பதநீர் உள்ளதா கல் உள்ளதா என சொல்லுமாறு கட்டாயப்படுத்தினர். இதில், எனது மகனுக்கும், போலீசாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், எனது மகன் மீது எஸ்ஐ இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
<h3>உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது</h3>
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி பி. புகழேந்தி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்களால் வெளியிடப்பட்ட சில அறிவியல் கட்டுரைகளில் கள்ளில் பல்வேறு நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில், கல் இறக்கியதாக கூறி மனுதாரரின் மகனை தீவிர குற்றவாளியாக கருதி எஸ்ஐ துப்பாக்கி சூடு நடத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் பனைத் தொழிலாளியின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் எஸ் ஐ வரம்பு மீறி செயல்பட்டுள்ளார். இதனால், உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டால் நியாயம் கிடைக்காது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-tvk-functionary-who-attempted-to-steal-a-laptop-from-a-bus-in-villupuram-84374.html" target="_blank" rel="noopener">விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!</a>
<h3>பனை தொழிலாளி துப்பாக்கி சூடு சிபிசிஐடிக்கு மாற்றம்</h3>
எனவே, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்படுகிறது. மேலும், மனுதாரர் மகனுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஒழுங்குபடுத்தப்பட்ட உரிய அமைப்புகளின் கீழ் கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் கல் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. மதுவிலக்கு குற்றங்களை கண்டறிவதிலும், சட்ட விரோத மதுபானங்களை கைப்பற்றுவதிலும், வாகனங்களை பறிமுதல் செய்வதிலும் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
<h3>மாநில அரசின் கொள்கை முடிவு சார்ந்ததாகும்</h3>
மதுவிலக்கு குற்ற விவகாரத்தில் விரிவான கண்காணிப்பு சாத்தியம் என்றால், கள் விற்பனையை ஒழுங்கு படுத்துவதற்கும் இது போன்ற வழிமுறையை பின்பற்றலாம். இருந்தாலும், கல் மீதான தடையை தொடரலாமா அல்லது ஒழுங்குபடுத்த உரிமை கட்டமைப்பின் கீழ் விற்பனைக்கு அனுமதிக்கலாமா என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வரும் கொள்கை முடிவு சார்ந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/15-year-old-girl-suicide-at-sri-lankan-tamil-rehabilitation-camp-in-dindigul-84382.html" target="_blank" rel="noopener">பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம்  &#8211; எப்படி வேலை செய்யும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tasmac-introduces-automatic-empty-bottle-return-machines-how-will-they-work-84495.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 22:17:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Baskar P]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tasmac-introduces-automatic-empty-bottle-return-machines-how-will-they-work-84495.html</guid>
		            
			

    	<description><![CDATA[டாஸ்மாக் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தானியங்கி இயந்திரங்களை நிறுவும் புதிய முன்னெடுப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தானியங்கி பாட்டில் திரும்பப் பெறும் இயந்திரங்கள் சோதனை முறையில் நிறுவப்பட்டுள்ளன .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tasmac-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம்  &#8211; எப்படி வேலை செய்யும்?" /></figure><strong>சென்னை, ஜூன் 12 :</strong> தமிழகத்தில் மதுபானக் காலி பாட்டில்கள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் வீசப்படுவது நீண்டகாலமாக சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வந்தது. இதனைத் தடுப்பதற்கும், பாட்டில்களை முறையாக மறுசுழற்சி செய்வதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதியின்படி, டாஸ்மாக் மதுபானக் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தானியங்கி இயந்திரங்களை நிறுவும் புதிய முன்னெடுப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
<h3>டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம்</h3>
இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய சென்னை மாவட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் தானியங்கி பாட்டில் திரும்பப் பெறும் இயந்திரங்கள் சோதனை முறையில் நிறுவப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் 'reklaim Ace' என்ற நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது பாட்டில்களைத் துல்லியமாக அடையாளம் காணவும், தரம் பிரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம், போலி பாட்டில்கள் அல்லது இதர கழிவுகள் இயந்திரத்திற்குள் செல்வது தடுக்கப்படுகிறது. நுகர்வோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பயனாளர்கள் முதலில் இயந்திரத்தில் உள்ள ஸ்கேனரில் தங்கள் UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

அடுத்து, காலி பாட்டிலில் உள்ள QR குறியீட்டை இயந்திரத்தின் ஸ்கேனரில் காட்ட வேண்டும். பின், பாட்டிலை இயந்திரத்தின் துவாரத்தில் போட வேண்டும். பாட்டிலைச் செலுத்திய பிறகு, திரையில் உள்ள 'Finish &amp; Claim' என்ற பொத்தானை அழுத்தினால், அந்த பாட்டிலுக்கான குறிப்பிட்ட தொகை நேரடியாகப் பயனாளரின் டிஜிட்டல் கணக்கிற்கு வந்து சேரும்.

"Return, Earn, Recycle - For A Sustainable Tomorrow" என்ற முழக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மதுபானக் காலி பாட்டில்கள் சாலை ஓரங்களிலும், நீர்நிலைகளிலும் வீசப்படுவதைத் தடுத்து, அவற்றைச் சேகரித்து முறையாக மறுசுழற்சி செய்வதன் மூலம் நிலம் மற்றும் நீர் மாசடைவதைத் தடுக்கப்படும்.

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் பாட்டில்களைத் திரும்பக் கொடுப்பவர்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்குவதால், பணப்பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. மக்களிடையே பாட்டில்களை வீணாக எறியாமல், அவற்றை ஒரு பொருளாகக் கருதி திரும்ப ஒப்படைக்கும் பொறுப்புணர்வையும், மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல். தற்போது சென்னை அம்பத்தூரில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சோதனை முயற்சி, ஒரு முன்னோடித் திட்டமாகும். இந்த இயந்திரங்களின் செயல்பாடு, மக்களின் பங்களிப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவை முறையாகக் கண்காணிக்கப்படும்.

இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இந்த இயந்திரங்களைப் படிப்படியாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தின் பொது இடங்களில் பாட்டில் கழிவுகள் பெருமளவு குறையும் என்றும், மறுசுழற்சித் துறை மேம்படும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தமிழக அரசின் இந்த நவீன முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோயில் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையையே வசூலிக்க வேண்டும்: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/temple-shops-charging-above-government-rates-will-face-action-says-minister-ramesh-84493.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 22:06:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Baskar P]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/temple-shops-charging-above-government-rates-will-face-action-says-minister-ramesh-84493.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும், கோயிலுக்குள் செயல்படும் வணிக வளாகங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/temple-shops-charging-above-government-rates.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோயில் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையையே வசூலிக்க வேண்டும்: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு" /></figure><strong>சென்னை, ஜூன் 12 :</strong> தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அனைத்துக் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/latest-update-on-tiruchendur-temple-staff-suspended-in-rs-25-lakh-fee-receipt-fraud-case-80062.html" target="_blank" rel="noopener">கோயில்களிலும்,</a> கோயிலுக்குள் செயல்படும் வணிக வளாகங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-ramesh-denies-reports-of-tiruchendur-priest-suspension-81496.html" target="_blank" rel="noopener">அமைச்சர் ரமேஷ்</a> எச்சரித்துள்ளார்.
<h3>அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு</h3>
மதுரை கள்ளழகர் கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கோயிலுக்குள் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் அரசு நிர்ணயம் செய்த விலையை விட பல மடங்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவது அமைச்சரின் கவனத்திற்கு வந்தது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-sarath-kumar-walks-away-without-replying-to-question-on-tvk-functionary-sexual-harassment-case-84450.html"> பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் – செய்தியாளர்களின் பதிலளித்த அமைச்சர்</a></strong>

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்தந்தக் கடைகளில் அரசு அங்கீகரித்த விலைப்பட்டியலை (Price List) பொது மக்கள் காணும் வகையில் பெரிய அளவில் காட்சிப்படுத்த அமைச்சர் உத்தரவிட்டார். அவரது முன்னிலையிலேயே விலைப்பட்டியல் பலகைகள் பொருத்தப்பட்டன.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனை முன்னிறுத்தி அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட முக்கிய உத்தரவில் கூறியிருப்பதாவது, "மதுரை கள்ளழகர் கோயிலில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. பக்தர்களின் வழிபாட்டு உரிமை மற்றும் அவர்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.

எனவே, மதுரை கள்ளழகர் கோயிலில் எடுத்தது போன்ற நடவடிக்கையைத் தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில் வளாகங்களிலும், தங்கும் விடுதிகள், பூஜை பொருட்கள் விற்பனை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் அனைத்திலும், அரசு அங்கீகரித்த விலைப்பட்டியலைத் தெளிவாகத் தெரியும் வகையில் பக்தர்கள் எளிதில் பார்க்கும் இடங்களில் வைக்க வேண்டும்.

இந்த உத்தரவை உடனடியாகச் சுற்றறிக்கையாகத் தயார் செய்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றுவதில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டாலோ அல்லது புகார்கள் எழுந்தாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dge-director-shares-details-on-when-class-10-and-12-students-will-receive-their-original-mark-sheets-84431.html">10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசு தேர்தவுத்துறை இயக்குநர் தகவல்</a></strong>

அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பண்டிகைக் காலங்களிலும், விசேஷ நாட்களிலும் கோயில் கடைகளில் இஷ்டத்திற்கு விலை நிர்ணயித்து விற்பனை செய்வதால் ஏழை பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், இந்த நடவடிக்கை முறையற்ற விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அறநிலையத்துறை இது தொடர்பாக அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. கோயில் நிர்வாகங்கள் இனி வரும் காலங்களில் விலை நிர்ணயம் மற்றும் தரக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம்  &#8211; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/school-teacher-arrested-under-pocso-for-sending-obscene-images-to-class-10-students-in-coimbatore-84490.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 21:34:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/school-teacher-arrested-under-pocso-for-sending-obscene-images-to-class-10-students-in-coimbatore-84490.html</guid>
		            
			

    	<description><![CDATA[கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாட்ஸ-அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரை கோவை கிழக்கு மகளிர் போலீசார் ஜூன் 12, 2026 இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/school-teacher-arrested-under-pocso.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம்  &#8211; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது" /></figure><strong>கோயம்பத்தூர், ஜூன் 12 :</strong> கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாட்ஸ-அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரை கோவை கிழக்கு மகளிர் போலீசார் ஜூன் 12, 2026 இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (34) என்ற நபர், கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்து உள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாத கோடை விடுமுறை காலத்தின் போது, தனது வகுப்பில் படித்து வந்த மற்றும் தன்னுடன் நெருக்கமாக பழகி வந்த சில மாணவர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு இவர் தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
<h3>கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம்</h3>
தற்செயலாக மாணவர்களின் செல்போன்களைச் சோதித்த பெற்றோர்கள், அதில் ஆசிரியர் பாபு அனுப்பி இருந்த ஆபாசப் பதிவுகளைப் பார்த்து அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்து போயினர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு சென்று, சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-died-after-a-car-crashed-on-the-kaveripakkam-flyover-in-ranipet-district-84404.html"> ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!</a></strong>

இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பாபுவின் செல்போனை வாங்கி போலீசார் தீவிர தொழில்நுட்பப் பகுப்பாய்வு செய்த போது, அவர் மாணவர்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியது உறுதியானது. இதை அடுத்து, கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஆசிரியர் பாபு மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவரைச் சிறையில் அடைத்தனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/alandur-tvk-secretary-dismissed-for-harassing-a-woman-in-chennai-84401.html">கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!</a></strong>

இதுகுறித்து போலீசார் தரப்பில் விசாரித்த போது, கோடை விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, தன்னிடம் டியூஷன் மற்றும் வகுப்புகளில் நெருக்கமாக இருந்த மாணவர்களைக் குறிவைத்து இந்த ஆசிரியர் ஆபாசப் படங்களைப் பகிர்ந்து வந்து உள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் வெளிவந்து உள்ளது. மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியரே இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டு போக்சோ கைதியாக மாறி உள்ள இந்தச் சம்பவம் கோவையில் கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது? எம்எல்ஏகளுக்கு 2 நாள் பயிற்சி அறிவித்த சபாநாயகர்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/speaker-jcd-prabhakar-announces-special-training-programme-for-tamil-nadu-mlas-84486.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 20:59:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/speaker-jcd-prabhakar-announces-special-training-programme-for-tamil-nadu-mlas-84486.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழ்நாடு சட்டமன்றத்தில் எப்படி பேச வேண்டும், என்ன பேட வேண்டும்? எப்போது கேள்வி எழுப்ப வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். 2 நாட்கள் நடைபெறும் இந்த புத்தாக்க பயிற்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/jcd-prabhakar-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது? எம்எல்ஏகளுக்கு 2 நாள் பயிற்சி அறிவித்த சபாநாயகர்" /></figure><strong>சென்னை, ஜூன் 12 :</strong> தமிழ்நாடு <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-elections-2026-low-public-support-for-nota-what-do-the-statistics-reveal-76514.html" target="_blank" rel="noopener">சட்டமன்றத்தில்</a> எப்படி பேச வேண்டும், என்ன பேட வேண்டும்? எப்போது கேள்வி எழுப்ப வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஜூன் 12, 2026 இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சபாநாயகர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/jcd-prabhakar-to-elected-as-a-speaker-of-tamil-nadu-assembly-77962.html" target="_blank" rel="noopener">ஜே.சி.டி.பிரபாகர்</a>, 17வது சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 2 நாட்கள் பயிற்சி அளிக்கவுள்ளதாக அறிவித்தார்.
<h3>எம்எல்ஏகளுக்கு 2 நாள் பயிற்சி அறிவித்த சபாநாயகர்</h3>
மேலும் பேசிய அவர், இதுதொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வரும் ஜூன் 16 மற்றும் 17, 2026 ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தாக்க பயிற்சி நடைபெறவுள்ளது என அறிவித்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dge-director-shares-details-on-when-class-10-and-12-students-will-receive-their-original-mark-sheets-84431.html">10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசு தேர்தவுத்துறை இயக்குநர் தகவல்</a></strong>

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் இந்த பயிற்சியை துவக்கி வைக்கிறார். இந்த பயிற்சியின்போது சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், சட்டமன்ற விதிகள், குறித்து பேரவை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற நடைமுறைகளை பற்றி நன்கு அறிந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.

மேலும் சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும், எதை பேசக்கூடாது, பேரவையில் எப்போது கேள்வி எழுப்ப வேண்டும், எப்படிப்பட்ட கேள்வி எழுப்ப வேண்டும் என்பது பற்றி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சட்டமன்ற பேரவைகளின் விதிகளுக்கு உட்பட்ட ஒரு சபையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய முழு விவரங்கள் இந்த புத்தாக்கப் பயிற்சியில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என்றார்.
<h3>'மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளலாம்'</h3>
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பெரிதும் உதவும் இந்த பயிற்சியில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ளலாம் என்றார்.

<strong>இதையும் படிக்க : “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvks-sofa-model-govt-is-slapping-stickers-on-dmks-achievements-udhayanidhi-remark-84406.html">திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது ‘சோபா மாடல்’ அரசு!”.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!</a></strong>

மேலும் பேசிய அவர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த விவதாரத்தில் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக கொறடா நியமிக்கும் பணிகள் ஆய்வில் உள்ளன. சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாத அதிமுக கொறடா யார் என அறிவிக்கப்பட்டும் என்றார்.  வழக்கமாக கடந்த காலங்களில் சட்டப்பேரவை செயல்பாடுகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த முறையும் கண்டிப்பாக நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். நீண்ட நேரம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர் அனைத்தையும் ஒளிபரப்புவதா? என்பது தொடர்பாக முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோவையில் காய்கறி செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்த்த வட மாநில தொழிலாளி &#8211; தட்டி தூக்கிய போலீஸ்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/coimbatore-police-arrest-odisha-man-for-growing-ganja-in-backyard-garden-84476.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 20:04:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/coimbatore-police-arrest-odisha-man-for-growing-ganja-in-backyard-garden-84476.html</guid>
		            
			

    	<description><![CDATA[: கோவை, தடாகம் அருகே பன்னிமடை பகுதியில் உள்ள வாடகை வீட்டின் பின்புறத்தில், காய்கறி செடிகளுக்கு நடுவே ரகசியமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியை தடாகம் போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/odisha-worker-arrested.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவையில் காய்கறி செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்த்த வட மாநில தொழிலாளி &#8211; தட்டி தூக்கிய போலீஸ்" /></figure><strong>கோயம்புத்தூர், ஜூன் 12 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/youth-attacked-with-beer-bottle-while-trying-to-mediate-dispute-in-coimbatore-84104.html" target="_blank" rel="noopener">கோவை</a>, தடாகம் அருகே பன்னிமடை பகுதியில் உள்ள வாடகை வீட்டின் பின்புறத்தில், <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/these-5-vegetables-help-you-get-glowing-skin-beauty-tips-in-tamil-34758.html" target="_blank" rel="noopener">காய்கறி</a> செடிகளுக்கு நடுவே ரகசியமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியை தடாகம் போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த மாதபநந்தா ஜெனா (46) என்ற நபர், கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பன்னிமடை கணேஷ் நகர் பகுதியில் உள்ள சிவகாமி என்பவரது வீட்டில் தனது மனைவியுடன் வாடகைக்குக் குடி வந்து உள்ளார்.
<h3>கோவையில் காய்கறி செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்த்த வட மாநில தொழிலாளி</h3>
இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மாதபநந்தா ஜெனா, தான் குடியிருக்கும் வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் தங்களுக்குத் தேவையான காய்கறி செடிகளை நட்டு வைத்து உள்ளார். அதோடு மட்டுமில்லாமல், தனது சொந்தப் பயன்பாட்டிற்காகப் புகைப்பதற்காக இரண்டு கஞ்சா செடிகளையும் ரகசியமாக நட்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வந்து உள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/no-water-release-from-mettur-dam-leaves-delta-farmers-disappointed-84423.html">மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை – லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம்</a></strong>

​நாளடைவில் அந்த கஞ்சா செடிகள் சுமார் 7 அடி உயரத்திற்கு அசுர வளர்ச்சி பெற்று உள்ளன. குடியிருப்புப் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாகத் தடாகம் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் (Inspector) சுமதி தலைமையிலான தனிப்படை போலீசார் பன்னிமடை நாகவள்ளியம்மன் கோவில் எதிரே உள்ள குறிப்பிட்ட அந்த வீட்டிற்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டின் பின்புறம் சுமார் 7 அடி நீளத்திற்கு செழிப்பாக வளர்ந்து நின்ற 1 கிலோ 445 கிராம் எடை உள்ள 2 கஞ்சா செடிகளைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து, சட்டவிரோதமாகப் போதைச் செடிகளை வளர்த்த குற்றத்திற்காக மாதபநந்தா ஜெனாவை போலீசார் கைது செய்தனர் மேலும் அங்கு இருந்த 7 அடி உயர கஞ்சா செடிகளையும் போலீசார் வேரோடு பிடுங்கி பறிமுதல் செய்தனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-died-after-a-car-crashed-on-the-kaveripakkam-flyover-in-ranipet-district-84404.html">ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!</a></strong>

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தடாகம் காவல் நிலையத்தில் NDPS போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் வீட்டுத் தோட்டத்திலேயே துணிச்சலாகக் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அறிவிக்கப்படாத மின்வெட்டு  &#8211; அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-to-hold-protest-on-june-19-against-power-cuts-84465.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 19:08:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-to-hold-protest-on-june-19-against-power-cuts-84465.html</guid>
		            
			

    	<description><![CDATA[பயிர்க் கடன் சம்பந்தமாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், அறிவிக்கப்படாத மின்வெட்டை சரிசெய்யவும் வலியுறுத்தியும் தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வருகிற ஜூன் 19, 2026 அன்று  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/eps-announced-protest-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அறிவிக்கப்படாத மின்வெட்டு  &#8211; அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிப்பு" /></figure><strong>சென்னை, ஜூன் 12 :</strong> பயிர்க் கடன் சம்பந்தமாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், அறிவிக்கப்படாத மின்வெட்டை சரிசெய்யவும் வலியுறுத்தியும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/7-day-notice-issued-to-aiadmk-rebel-mlas-who-joined-tvk-disqualification-row-intensifies-84291.html" target="_blank" rel="noopener">அதிமுக</a> சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படத மின்வெட்டு இருந்து வருகிறது. இதனையடுத்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அதிமுக சார்பில் வருகிற ஜூன் 19, 2026 அன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-questioned-first-case-registered-by-the-singappenne-special-task-force-was-against-a-tvk-functionary-84235.html" target="_blank" rel="noopener"> எடப்பாடி பழனிசாமி</a> அறிவித்துள்ளார்.
<h3>அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிப்பு</h3>
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் தவெக அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvks-sofa-model-govt-is-slapping-stickers-on-dmks-achievements-udhayanidhi-remark-84406.html">“திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது ‘சோபா மாடல்’ அரசு!”.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!</a></strong>

மேலும் அவர் தனது பதிவில், கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், "கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ.50,000த்திற்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும்; 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்" என்றும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது த.வெ.க. அரசு.
<h3>அதிமுக வெளியிட்ட அறிக்கை</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின்… <a href="https://t.co/eyDCBIULYM">pic.twitter.com/eyDCBIULYM</a></p>
— AIADMK (@AIADMKOfficial) <a href="https://x.com/AIADMKOfficial/status/2065403540034531361?ref_src=twsrc%5Etfw">June 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை த.வெ.க. அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை த.வெ.க. அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.

<strong>இதையும் படிக்க : “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/decisions-on-public-petitions-within-15-days-minister-sengottaiyan-announces-84398.html">பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் முடிவு”.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!</a></strong>

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 19.6.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் தஇரா. பசுபதி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் &#8211; செய்தியாளர்களின் பதிலளித்த அமைச்சர்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-sarath-kumar-walks-away-without-replying-to-question-on-tvk-functionary-sexual-harassment-case-84450.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 18:05:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Baskar P]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-sarath-kumar-walks-away-without-replying-to-question-on-tvk-functionary-sexual-harassment-case-84450.html</guid>
		            
			

    	<description><![CDATA[அமைச்சர் சரத்குமாரிடம் ஆலந்தூர் பகுதியில் சமீபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான பாலியல் தொல்லை சம்பவத்தைக் குறிப்பிட்டு, அது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,  எந்த நிர்வாகியாக இருந்தாலும் தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் என்றார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/minister-sharathkumar-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் &#8211; செய்தியாளர்களின் பதிலளித்த அமைச்சர்" /></figure><strong>சென்னை, ஜூன் 12 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dge-director-shares-details-on-when-class-10-and-12-students-will-receive-their-original-mark-sheets-84431.html" target="_blank" rel="noopener">சென்னை</a> ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணா நிர்வாகப் பயிற்சி மையத்தில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஜூன் 12, 2026 இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகளின் தரம், வருங்காலத்தில் அளிக்கப்பட வேண்டிய மேம்படுத்தப்பட்ட பயிற்சி முறைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசித்தார்.
<h3>செய்தியாளர்களின் பதிலளிக்க திணறிய அமைச்சர்</h3>
குறிப்பாக, தற்போதைய நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப, அரசு ஊழியர்களைத் தயார்படுத்துவது எப்படி என்பது குறித்தும், அதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை எளிய முறையில் கொண்டு சேர்ப்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சரத்குமார், தனது துறையின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்துப் பேசினார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-died-after-a-car-crashed-on-the-kaveripakkam-flyover-in-ranipet-district-84404.html">ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!</a></strong>

அமைச்சரின் விளக்கம் முடிந்ததும், அங்கிருந்த செய்தியாளர்கள் ஆலந்தூர் பகுதியில் சமீபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான பாலியல் தொல்லை சம்பவத்தைக் குறிப்பிட்டு, அது குறித்த கேள்விகளை எழுப்பினர். தவெக (TVK) நிர்வாகி ஒருவர் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் அந்தச் சம்பவம் குறித்து கேள்வி கேட்டதும், அமைச்சர் முகம் சுழித்தார். எவ்விதப் பதிலும் அளிக்காமல், சட்டென்று அங்கிருந்து புறப்பட முயன்றார்.

அமைச்சரின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், அவரை விடாமல் கேள்விகளை அடுக்கினர். அமைச்சரின் வாகனத்தை நோக்கிச் சென்ற செய்தியாளர்கள், "முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்க மறுக்கிறார் என்றால், அமைச்சர்களாகிய நீங்களும் அதே பாணியைப் பின்பற்றுகிறீர்களா?" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களின் விடாத கேள்விகளால் வேறு வழியின்றி மௌனம் கலைத்த அமைச்சர் சரத்குமார், "இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை கட்டாயம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும். எந்த நிர்வாகியாக இருந்தாலும் தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும். தலைவரின் ஆட்சியில் தவறு செய்யும் எவரும் தப்பிக்க முடியாது; அவர்கள் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்" என்று உறுதிபடக் கூறினார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/alandur-tvk-secretary-dismissed-for-harassing-a-woman-in-chennai-84401.html">கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!</a></strong>

மக்கள் பிரதிநிதிகள் இத்தகைய உணர்ச்சிகரமான மற்றும் சமூக பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் பதில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு &#8211; வெள்ளி வேல் காணிக்கை</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-cm-vijay-offers-prayers-at-kollur-mookambika-temple-in-karnataka-84437.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 16:03:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-cm-vijay-offers-prayers-at-kollur-mookambika-temple-in-karnataka-84437.html</guid>
		            
			

    	<description><![CDATA[நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் விஜய் ஜூன் 12, 2026 இன்று தனி விமானம் மூலம் கர்நாடகா வந்தார். பின்னர் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/cm-vijay-at-karnataka.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு &#8211; வெள்ளி வேல் காணிக்கை" /></figure><strong>கர்நாடகா, ஜூன் 12 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-vijay-emphasizes-tamil-nadus-needs-at-the-niti-aayog-meeting-84266.html" target="_blank" rel="noopener">நிதி ஆயோக்</a> கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvks-sofa-model-govt-is-slapping-stickers-on-dmks-achievements-udhayanidhi-remark-84406.html" target="_blank" rel="noopener">முதல்வர் விஜய்</a> ஜூன் 12, 2026 இன்று தனி விமானம் மூலம் கர்நாடகா வந்தார். பின்னர் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு நடத்தினார். முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஜூன் 10, 2026 அன்று டெல்லி சென்றிருந்தார். அப்போது 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

இதனையடுத்து டெல்லி பயணத்தை முடித்துவிட்டு ஜூன் 12, 2026 அன்று கர்நாடகா மாநிலம் மங்களூரு வந்தார். அங்கு புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்தடைந்தார். கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார். இதனையடுத்து கோவில் வளாகத்தில் அர்ச்சகர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/decisions-on-public-petitions-within-15-days-minister-sengottaiyan-announces-84398.html">“பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் முடிவு”.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!</a></strong>
<h3>மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="in">VIDEO | Udupi, Karnataka: Tamil Nadu CM Vijay arrives at Kollur Mookambika Temple. <a href="https://t.co/u7EHEnUPBy">pic.twitter.com/u7EHEnUPBy</a></p>
— Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2065377254759358706?ref_src=twsrc%5Etfw">June 12, 2026</a></blockquote>
பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் விஜய், கோவிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக அளித்ததாக கூறப்படுகிறது. முதல்வரின் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.  முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உடுப்பி மாவட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்திருந்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜானகி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வர்களாக வெற்றிபெற்ற தருணங்களில் கொல்லூர் மூகாம்பிகையை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அவர்கள் வழியில் தற்போதைய முதல்வர் விஜய்யும் மூகாம்பிகையை தரிசனம் செய்துள்ளது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/good-news-for-tamil-nadu-farmers-cm-vijay-makes-a-bold-announcement-84381.html">தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!</a></strong>

கடந்த 1984 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்து வழிபட்டார். அப்போது அம்மனுக்கு 1 கிலோ எடையுள்ள தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தற்போது முதல்வர் விஜய்யும் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கியதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழக அரசியலில் எம்ஜிஆர் பாணியை முதல்வர் விஜய் பின்பற்றுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசு தேர்தவுத்துறை இயக்குநர் தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dge-director-shares-details-on-when-class-10-and-12-students-will-receive-their-original-mark-sheets-84431.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 15:52:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dge-director-shares-details-on-when-class-10-and-12-students-will-receive-their-original-mark-sheets-84431.html</guid>
		            
			

    	<description><![CDATA[பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஜூன் 12, 2026 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அரசு தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா,  10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியிட்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/marksheet-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசு தேர்தவுத்துறை இயக்குநர் தகவல்" /></figure><strong>சென்னை, ஜூன் 12 :</strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/10th-student-died-by-drowning-in-water-in-thiruvallur-scored-495-marks-in-10th-public-examination-79779.html" target="_blank" rel="noopener"> 10 ஆம் வகுப்பு</a> மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-begin-investigation-into-student-who-took-ganja-to-government-school-in-chennai-56096.html" target="_blank" rel="noopener">மாணவர்களுக்கான</a> ஒரிஜினல் மார்க் ஷீட், மறுமதிப்பீடு மற்றும் துணைத் தேர்வுகள் முடிந்த பின்னர் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா தெரிவித்தார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து கடந்த 2026 மே மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதே போல தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வுகளும் அறிவிக்கப்பட்டன. மேலும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவும் மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு அவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் விதமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்பட்டன.
<h3>10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது?</h3>
இந்த நிலையில் கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஜூன் 12, 2026 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அரசு தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/decisions-on-public-petitions-within-15-days-minister-sengottaiyan-announces-84398.html">“பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் முடிவு”.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!</a></strong>
<h3>கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், மார்ச் 2026 நடைபெற்ற 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் மாவட்ட வாரியான பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட்டார்.<a href="https://x.com/hashtag/CMJosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay</a> | <a href="https://x.com/hashtag/TNDIPR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNDIPR</a> | <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> |… <a href="https://t.co/E9m14sqizi">pic.twitter.com/E9m14sqizi</a></p>
— TN DIPR (@TNDIPRNEWS) <a href="https://x.com/TNDIPRNEWS/status/2065352760627990580?ref_src=twsrc%5Etfw">June 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும் பேசிய அவர் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிறந்த தேதியை உறுதிய செய்து, அது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற செய்ய வேண்டும். மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே அவர்களின் விவரங்களை சரி செய்யப்பட வேண்டும் அவர்கள் பள்ளியை விட்டு சென்ற பின் அதனை சரி செய்வது கூடுதல் வேலையாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. என்றார்.

மேலும் மறுமதிப்பீடு கேட்டு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmks-election-defeat-allegations-against-sekar-babu-review-committee-reveals-the-truth-84393.html">திமுக தேர்தல் தோல்வி.. சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. உண்மையை உடைத்த ஆய்வு குழு!!</a></strong>
<h3>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி</h3>
கடந்த 2026 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக நியமனம் செய்யப்பட்ட தேர்வு எழுதும் நபர்கள் சரியாக தேர்வு எழுதவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர் இதனை கருத்தில் கொண்டு இந்தாண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக தேர்வு எழுதுபவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்தவுகளில் இருந்து பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை &#8211;  லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/no-water-release-from-mettur-dam-leaves-delta-farmers-disappointed-84423.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 14:52:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/no-water-release-from-mettur-dam-leaves-delta-farmers-disappointed-84423.html</guid>
		            
			

    	<description><![CDATA[மேட்டூர் அணையின் நீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12, 2026 இன்று நீர் திறக்கப்படாத நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/delta-dam-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை &#8211;  லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம்" /></figure><strong>சேலம், ஜூன் 12 :</strong> மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12, 2026 இன்று நீர் திறக்கப்படாத நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். மேட்டூர் அணையின் நீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12, 2026 முதல் ஜனவரி 28 வரை பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் குறுவை பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவது வழக்கம்.
<h3>மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை</h3>
இந்த நிலையில் ஜூன் 12, 2026 இன்று மேட்டூர் அணையில் இருந்து இந்த 2026 ஆம் ஆண்டுக்கான நீர் திறக்கப்பட வேண்டும் என்ற நிலையில் திறக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது மேட்டூர் அணையில் நீர் திறக்க 90 அடி அளவுக்கு நீர் இருக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது 79.62 அடி மட்டும் நீர் இருந்தது. அதே போல அணைக்கு நீர்வரத்து 424 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து குறைவாக இருந்த காரணத்தால் இந்த 2026 ஆம் ஆண்டுக்கான நீர் ஜூன் 12, 2026 இன்று திறக்கப்படவில்லை. இந்த நிலைில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் விவசாயத்தை நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html">அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!</a></strong>

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர் பகுதிகளில் கனமழை பெய்து கர்நாடக மாநலம் கபினி அணை நிரம்பிய பிறகு அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் தஇறக்கப்படும். ஆனால் இந்த முறை கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படாதது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை நீர் இந்த ஆண்டு திறக்கப்படாததால் விவசாிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளைக்கியுள்ளது.
<h3>எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.

குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது…</p>
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2065319007306321983?ref_src=twsrc%5Etfw">June 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது. ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் ரூ. 10,000 கோடிக்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்துக்குத் தள்ளிவிட்டுள்ள இன்றைய அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/will-the-koyambedu-omni-bus-terminus-reopen-demand-directed-at-the-tamil-nadu-govt-84365.html">மீண்டும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!!</a></strong>

மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணிநேரமாகக் குறைத்து அறிவித்துள்ளது இன்றைய அரசு.

ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம்கூட புரியாமல் இன்றைய அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது &#8216;சோபா மாடல்&#8217; அரசு!&#8221;.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvks-sofa-model-govt-is-slapping-stickers-on-dmks-achievements-udhayanidhi-remark-84406.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 14:02:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvks-sofa-model-govt-is-slapping-stickers-on-dmks-achievements-udhayanidhi-remark-84406.html</guid>
		            
			

    	<description><![CDATA[திமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்களை, தங்களது சாதனைகள் என்பது போல தவெக அரசு சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், "திமுகவின் சாதனைகள் மீது தங்களது லேபிளை ஒட்டிப் பெருமை தேடிக்கொள்ளும் ஒரு 'ஸ்டிக்கர் அரசு' தான் இந்த தவெக அரசு" என்று சாடினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/udhaya.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது &#8216;சோபா மாடல்&#8217; அரசு!&#8221;.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!" /></figure><strong>சென்னை, ஜுன் 12:</strong> டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேசிய உரைக் குறிப்புகள் மற்றும் தவெக அரசின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், "தமிழகத்தில் தவெக அரசு அமைந்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக அரசின் சாதனைகள் என ஒரு நீண்ட பட்டியலை முதல்வர் விஜய் வாசித்துள்ளார். அவர் குறிப்பிட்ட அந்த சாதனைகள் அனைத்தும் கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்" என்று குறிப்பிட்டார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/what-happened-to-the-election-promises-farmers-protests-against-the-tvk-govt-intensify-across-tamil-nadu-84369.html">‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!</a></strong>
<h3>ஒரு மாத 'சோபா மாடல்' சாதனையா?</h3>
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் குறிப்பிட்ட முக்கியப் புள்ளிவிவரங்களை முன்வைத்து உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் (42%) பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் அபார வளர்ச்சி. இவற்றைக் குறிப்பிட்ட உதயநிதி, "இவை எல்லாம் முதல்வர் விஜய்யின் ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, கடந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
<h3>'ஸ்டிக்கர் அரசு' என விமர்சனம்:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.</p>
இந்தியாவிலேயே 2 ஆவது…

— Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2065327872127209954?ref_src=twsrc%5Etfw">June 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

திமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்களை, தங்களது சாதனைகள் என்பது போல தவெக அரசு சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், "திமுகவின் சாதனைகள் மீது தங்களது லேபிளை ஒட்டிப் பெருமை தேடிக்கொள்ளும் ஒரு 'ஸ்டிக்கர் அரசு' தான் இந்த தவெக அரசு" என்று சாடினார். 'சிங்கப்பெண்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தங்களது புதிய திட்டங்கள் போலக் காட்ட முயன்று, அவற்றைச் செயல்படுத்த முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
<h3>மேகதாது விவகாரத்தில் மௌனம் ஏன்?:</h3>
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய் பேசத் தவறிவிட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். குறிப்பாக, தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் குறித்தோ, அது தொடர்பாகத் தங்களது கூட்டணி கூட்டணிக் கட்சிகளிடம் பேச வேண்டிய அழுத்தம் குறித்தோ எந்தவொரு கருத்தையும் முதல்வர் அங்கு பதிவு செய்யவில்லை என்றும், பிரச்சினைகளை எதிர்கொள்ள அஞ்சி அவர் மௌனம் காப்பதாகவும் விமர்சித்தார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html">அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!</a></strong>
<h3>பொய் வெற்றிகள் நிலைக்காது:</h3>
மேலும், "இப்படி போலியான விளம்பரங்கள் மூலமும், அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலமும் பெறப்படும் 'பொய் வெற்றிகள்' அரசியல் களத்தில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்காது. இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். முதல்வர் விஜய் தாங்கள் செய்த உண்மையான சாதனைகள் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-died-after-a-car-crashed-on-the-kaveripakkam-flyover-in-ranipet-district-84404.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 13:39:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-died-after-a-car-crashed-on-the-kaveripakkam-flyover-in-ranipet-district-84404.html</guid>
		            
			

    	<description><![CDATA[Ranipet Accident 3 Died: ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் புதிய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/accident-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/singappen-special-force-arrested-a-man-who-attempted-to-harass-a-woman-in-ayanavaram-chennai-84294.html" target="_blank" rel="noopener">ராணிப்பேட்டை மாவட்டம்</a>, காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஓட்டேரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு ( 59 வயது). இவர், தனது பேரன்களான அஜய், அஸ்வந்த், அனுஷி ஆகியோரை பள்ளியில் விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம் ஆகும். இதேபோல, இன்று வெள்ளிக்கிழமை ( ஜூன் 12- ஆம் தேதி ) தனது இரு சக்கர வாகனத்தில் பேரன், பேத்தியை அழைத்து சென்று கொண்டிருந்தார். இவரது இருசக்கர வாகனம் காவேரிப்பாக்கம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ராணிப்பேட்டை டவுன் பகுதியில் இருந்து அதி வேகமாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக வேலு ஓட்டி சென்ற <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/singappen-special-force-arrested-a-man-who-attempted-to-harass-a-woman-in-ayanavaram-chennai-84294.html" target="_blank" rel="noopener">இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்து</a>க்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் பயணித்த வேலு மற்றும் அவரது பேரன்கள், பேத்தி ஆகியோர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்து கிடந்தனர்.
<h3>3 பேர் பலி - ஒரு பேரனுக்கு தீவிர சிகிச்சை</h3>
ரத்த வெள்ளத்தில் கிடந்த இவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வேலு, அஸ்வந்த், அனுஷி ஆகிய மூவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மூவரின் சடலங்களும் உடல்கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-tvk-functionary-who-attempted-to-steal-a-laptop-from-a-bus-in-villupuram-84374.html" target="_blank" rel="noopener">விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!</a>
<h3>தீவிர சிகிச்சை பிரிவில் மற்றொரு பேரன்</h3>
மற்றொரு பேரனான அஜய் பலத்த காயமடைந்து தீவிர சிகிக்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வேலுவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோவின் ஓட்டுநர் ஜெயசூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரக்கு ஆட்டோவை அதிவேகமாகவும், கவன குறைவாகவும் ஒட்டிய காரணத்தால் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
<h3>சரக்கு ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை</h3>
எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பேரன், பேத்தி மற்றும் தாத்தா ஆகிய மூவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் இவர்களது சடலங்களை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இது பார்ப்போரின் கண்களை கலங்கச் செய்ததாக இருந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/15-year-old-girl-suicide-at-sri-lankan-tamil-rehabilitation-camp-in-dindigul-84382.html" target="_blank" rel="noopener">பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/alandur-tvk-secretary-dismissed-for-harassing-a-woman-in-chennai-84401.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 13:31:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/alandur-tvk-secretary-dismissed-for-harassing-a-woman-in-chennai-84401.html</guid>
		            
			

    	<description><![CDATA[Alandur TVK Secretary Dismissed: சென்னை பரங்கிமலையில் கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றிக் கழக செயலர் வேம்புலி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான நடவடிக்கையை சென்னை புறநகர் மாவட்ட செயலர் சரவணன் எடுத்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tvk-arrest.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-youths-died-in-a-bike-accident-in-dharmapuri-84367.html" target="_blank" rel="noopener">சென்னை</a>, பரங்கிமலை பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இவரின் ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றி கழக கட்சியின் செயலாளர் வேம்புலி என்பவர் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, பெண்கள் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/man-arrested-for-beating-a-worker-to-death-near-the-parthasarathy-temple-in-triplicane-chennai-84364.html" target="_blank" rel="noopener">வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ்</a> போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆலந்தூர் வடக்கு பகுதி செயலர் வேம்புலியை நீக்குவதாக சென்னை புறநகர் தவெக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
<h3>தவெகவில் இருந்து ஆலந்தூர் வடக்கு செயலர் நீக்கம்</h3>
சென்னை புறநகர் மாவட்ட பகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆலந்தூர் வடக்கு பகுதி கழக செயலாளராக வேம்புலி என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். அவர், சமீபகாலமாக கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான வகையில் ஈடுபட்டதாலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html" target="_blank" rel="noopener">அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!</a>
<h3>வேம்புலிக்கும் தவெகவுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது</h3>
எனவே, வேம்புலிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இதனால், கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவருடன் தொடர்பில் இருக்கக் கூடாது. மேலும், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கொடி, சின்னம் மற்றும் நிர்வாக பொறுப்புகள் ஆகியவற்றை எந்த வகையிலும் வேம்புலி பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும், அவரால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான செயல்பாடுகளுக்கும், தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்காது.
<h3>வேம்புலியுடன் கட்சி ரீதியாக தொடர்பில் இருக்கக் கூடாது</h3>
கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் வேம்புலியுடன் கட்சி சார்ந்த எந்த விதமான தொடர்பும் வைக்க கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்ணுக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பாலியல் சீண்டல் தொல்லை அளித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/actor-raghava-lawrence-released-a-video-regarding-his-entry-into-politics-84376.html" target="_blank" rel="noopener">நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா? நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கேள்வி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் முடிவு&#8221;.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/decisions-on-public-petitions-within-15-days-minister-sengottaiyan-announces-84398.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 13:00:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/decisions-on-public-petitions-within-15-days-minister-sengottaiyan-announces-84398.html</guid>
		            
			

    	<description><![CDATA[பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், "பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அனைத்தும் 5 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும். மனு அளித்த 15 நாட்களுக்குள்ளாகவே அதன் மீதான இறுதி முடிவுகள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்று திட்டவட்டமாகக் கூறினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/sengottaiyan-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் முடிவு&#8221;.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!" /></figure><strong>சென்னை, ஜுன் 12:</strong> தமிழக அரசுத் துறைகளின் பணிகள் பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் வணிகவரி - பத்திரப்பதிவுத் துறை ஆகிய மூன்று முக்கியத் துறைகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, மக்கள் விரும்பிய ஆட்சிக்கு பேரும் புகழும் சேர்க்கும் வகையில் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்களது பணிகளை விரைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/what-happened-to-the-election-promises-farmers-protests-against-the-tvk-govt-intensify-across-tamil-nadu-84369.html">‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!</a></strong>
<h3>அரசின் புதிய கூட்டு நடவடிக்கை:</h3>
அதன் ஒரு பகுதியாக, வருவாய், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய மூன்று துறைகளும் இணைந்து எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அதோடு, பத்திரப்பதிவு முடிந்த பிறகு மக்களுக்குப் பட்டா மாறுதல் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில், 'தரவு உள்ளீடு' முறையை முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
<h3>விரைந்து வழங்க நடவடிக்கை:</h3>
பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், இந்த மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து பட்டா வழங்குதல், சான்றிதழ்கள் வழங்குதல், முதியோர் உதவித்தொகை, சமூக நலத் திட்டங்கள் ஆகிய பணிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
<h3>மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு:</h3>
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், "பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அனைத்தும் 5 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும். மனு அளித்த 15 நாட்களுக்குள்ளாகவே அதன் மீதான இறுதி முடிவுகள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html">அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!</a></strong>
<h3>தென்மேற்கு பருவமழை குறித்து விளக்கம்:</h3>
தற்போது நிலவி வரும் தென்மேற்கு பருவமழை குறித்துப் பேசிய அவர், தற்போது மிதமான மழையே பெய்து வருவதாகவும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இன்னும் கூடுதல் மழை தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். எனினும், பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியான முறையில் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;தமிழகத்தில் நடப்பது நவீன மனுநீதி சோழன் அரசு&#8221; ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகார நடவடிக்கை குறித்து தவெக ஐடி விங் கருத்து!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-it-wing-commented-on-the-gang-harassment-of-a-woman-in-srivaikuntam-84395.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 12:49:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-it-wing-commented-on-the-gang-harassment-of-a-woman-in-srivaikuntam-84395.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK IT Wing : தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இரு நிர்வாகிகளால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் ஐடி விங் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tvk-it-wing.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;தமிழகத்தில் நடப்பது நவீன மனுநீதி சோழன் அரசு&#8221; ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகார நடவடிக்கை குறித்து தவெக ஐடி விங் கருத்து!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-vijay-emphasizes-tamil-nadus-needs-at-the-niti-aayog-meeting-84266.html" target="_blank" rel="noopener">தூத்துக்குடி மாவட்டம்</a>, ஸ்ரீவைகுண்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இருவர் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து தமிழக வெற்றிக்கழக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில் ஸ்ரீவைகுண்டம் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புகார் கிடைத்த உடனேயே குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் தப்பிக்க முடியாது. ஏனென்றால் இது மக்களின் விருப்பத்திற்குரிய அரசாங்கம் ஆகும். இன்னும் வெளிப்படையாக கூறினால் நவீன மனுநீதி சோழனின் அரசு. எனவே தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் தண்டனை கிடைப்பது உறுதி. அதே வேளையில் தவறு செய்யாதவர்கள் மீது எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
<h3>அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில்</h3>
நியாயமான நீதியை வழங்க தவறி மனசாட்சியே குப்பை தொட்டியில் வீசிவிட்டு குப்பை கூழத்தில் கிடந்து இந்த பவள விழா பாப்பா நிர்வாகத்தின் அரசு இது கிடையாது. இந்த புளுகு மூட்டை இடத்தில் துளி அளவு கூட உண்மை இருக்காது என்பது தான் கசப்பான உண்மை. அப்படி இருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கொடூரமான சம்பவத்தில் இதற்குப் பின்னணியில் உள்ள சார் யார் என்று கேட்க அந்த புளுகு மூட்டை அல்லது உண்மை பெட்டகம் என்று சொல்லிக் கொள்பவர்கள் தயாராக இருக்கிறார்களா.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/singappen-special-force-arrested-a-man-who-attempted-to-harass-a-woman-in-ayanavaram-chennai-84294.html" target="_blank" rel="noopener">சிங்கப்பெண்கள் படையின் முதல் வேட்டை.. சென்னையில் புகார் அளித்த 1 மணி நேரத்தில் தரமான சம்பவம்!</a>
<h3>பொள்ளாச்சி கொடூர சம்பவத்தின் போது</h3>
பொள்ளாச்சி கொடூரத்தின் போது எங்கள் அரசு பச்சோந்தியை போல நிறம் மாறி நீதியை குழி தோண்டி புதைத்து மங்கிப்போன சக்தியாக மாறிவிடவில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தமிழக வெற்றிக்கழக அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எங்கள் அரசு மீதான மக்களின் இந்த நேர்மறையான புரிதலை கண்டு பொறாமை தாங்க முடியாமல் தீய சக்திகளும் அதில் மங்கிப்போன சக்திகளும் புகா கக்க தொடங்கியுள்ளன. அறிவு சார் மன்றத்தின் அறிக்கைகளை காணாமல் கண்களை இருக்க மூடிக்கொண்டு அந்த மங்கி போன சக்தி கத்திக் கொண்டிருக்கிறது.
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித்…</p>
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) <a href="https://x.com/TVKHQITWingOffl/status/2065319698095575156?ref_src=twsrc%5Etfw">June 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>வீழ்ச்சி காலம் விரைவில் நெருங்கி வருகிறது</h3>
அதிகாரத்தை இழந்ததில் இருந்து சித்தரஞ்சன் சாலை நட்பின் ஆத்திரத்தால் சிலுவை ஏற்றும் நகைச்சுவை அரசியல் மற்றும் பாட்டு அரசியல் ஆகியவற்றின் புலம்பல் சத்தங்கள் சிலுவம்பாளையத்தில் கூட அன்றாட நிகழ்வாகிவிட்டன. இவர்களின் வீழ்ச்சி காலம் மிக விரைவில் நெருங்கி வரும் என்பதில் சந்தேகமே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html" target="_blank" rel="noopener">அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுக தேர்தல் தோல்வி.. சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. உண்மையை உடைத்த ஆய்வு குழு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmks-election-defeat-allegations-against-sekar-babu-review-committee-reveals-the-truth-84393.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 12:41:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmks-election-defeat-allegations-against-sekar-babu-review-committee-reveals-the-truth-84393.html</guid>
		            
			

    	<description><![CDATA[தேர்தல் தோல்விக்குச் சேகர்பாபு மீதான அதிருப்தி மட்டுமின்றி, அரசின் சில திட்டங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளும் முக்கியக் காரணங்களாக அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த பல பெண்களுக்குப் போதிய எண்ணிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போய்ச் சேராததால், பெண்கள் மத்தியில் அரசு மீது பெரும் அதிருப்தி நிலவியது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/dmk-sekar-babu.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுக தேர்தல் தோல்வி.. சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. உண்மையை உடைத்த ஆய்வு குழு!!" /></figure><strong>சென்னை, ஜுன் 12:</strong> நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய திமுக தலைமை அமைத்திருந்த ஆய்வுக்குழு, தனது அதிரடி அறிக்கையைக் கட்சித் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான புகார்களும், கட்சியின் தோல்விக்கான பல்வேறு அதிரடி காரணங்களும் முன்வைக்கப்பட்டுள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆய்வு குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நிலவிய அதிருப்திகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/good-news-for-tamil-nadu-farmers-cm-vijay-makes-a-bold-announcement-84381.html">தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!</a></strong>
<h3>வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்பு:</h3>
கட்சியில் நீண்ட நாட்களாக உழைத்தவர்களை விடுத்து, தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கியதாகச் சேகர்பாபு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அறநிலையத்துறையிலும், கட்சியின் பிற பிரிவுகளிலும் முக்கியப் பொறுப்புகளை வழங்கி முன்னுரிமை அளித்தார் என்ற புகாரும் எழுந்துள்ளது. அரசின் பல்வேறு நியமனப் பொறுப்புகளில், உண்மையாக உழைத்த திமுக கட்சியினருக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
<h3>விஜய்யின் செல்வாக்கை கணிக்காத நிர்வாகிகள்:</h3>
அரசியல் களத்தில் புதிய அலையை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மக்களிடையேயும் குறிப்பாக மகளிர் மத்தியிலும் இருந்த அசுரத்தனமான செல்வாக்கை திமுக மாவட்ட நிர்வாகிகள் தவாறாகக் கணித்துவிட்டனர் அல்லது முற்றிலுமாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் என்று ஆய்வு குழு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
<h3>திமுக தோல்விக்கான பிற முக்கியக் காரணங்கள்:</h3>
தேர்தல் தோல்விக்குச் சேகர்பாபு மீதான அதிருப்தி மட்டுமின்றி, அரசின் சில திட்டங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளும் முக்கியக் காரணங்களாக அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த பல பெண்களுக்குப் போதிய எண்ணிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போய்ச் சேராததால், பெண்கள் மத்தியில் அரசு மீது பெரும் அதிருப்தி நிலவியது. கட்சியில் இருந்த இளைஞர்களின் உழைப்பையும், ஆற்றலையும் போதுமான அளவுக்குத் தேர்தல் பணிகளில் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/what-happened-to-the-election-promises-farmers-protests-against-the-tvk-govt-intensify-across-tamil-nadu-84369.html">‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!</a></strong>
<h3>அமைச்சர்களின் உதவியாளர்கள் முட்டுக்கட்டை:</h3>
பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தங்களது குறைகளை அமைச்சர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்ல முடியாதபடி, அமைச்சர்களின் உதவியாளர்களே பெரும் முட்டுக்கட்டையாகச் செயல்பட்டுள்ளனர். கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்கள் முறைப்படி நடத்தப்படாததால், அடிமட்ட அளவில் இருந்த கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். திமுக தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில், தோல்விக்குக் காரணமான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நிபா வைரஸ் பரவல்.. கேரளம் &#8211; தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-health-department-surveillance-due-to-the-spread-of-the-nipah-virus-in-kerala-84389.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 11:50:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-health-department-surveillance-due-to-the-spread-of-the-nipah-virus-in-kerala-84389.html</guid>
		            
			

    	<description><![CDATA[Nipah Virus Precaution: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, தமிழக எல்லையில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவரப்படுத்தி உள்ளனர். இதனால், கேரளத்தில் இருந்து வரும் மக்களை சோதனை செய்த பின்னரே தமிழகத்துக்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/nipah-virus.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நிபா வைரஸ் பரவல்.. கேரளம் &#8211; தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html" target="_blank" rel="noopener">கேரள மாநிலம்</a>, கோழிக்கோட்டில் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருடன் தொடர்பில் இருந்த சுமார் 77 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழகத்தில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரளம்- <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html" target="_blank" rel="noopener">தமிழ்நாடு</a> எல்லையில் சுகாதாரத் துறை ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் முக கவசம் அணிந்தவாறு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி அதில் பயணிக்கும் நபர்களிடம் காய்ச்சல் தொற்று மற்றும் நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்று சோதனை மேற்கொள்கின்றனர். இதன் பின்னரே, அவர்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
<h3>முதல் முறையாக கண்டறியப்பட்ட நிபா தொற்று</h3>
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புறம் பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று முதல் முதலாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த தொட்டில் 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட சோதனைகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அடிப்படையில், இவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/actor-raghava-lawrence-released-a-video-regarding-his-entry-into-politics-84376.html" target="_blank" rel="noopener">நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா? நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கேள்வி!</a>
<h3>ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் 9 பேர் பாதிப்பு</h3>
இதைத் தொடர்ந்து, அவருக்கு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். <span style="font-size: 16px;">இதனிடையே, கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் தோற்றம் பரவி வருகிறது. இந்த தொற்றால் வயநாடு பகுதியில் ஒரு பள்ளி மாணவி பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையின் அடிப்படையில் தெரிய வந்தது. தற்போது, இந்த மாணவியுடன் சேர்த்து சுமார் 9 பேர் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். </span>
<h3>நிபா வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது</h3>
<span style="font-size: 16px;">இவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 514 மாணவ, மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வவ்வால் மற்றும் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து நிஃபா வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவுகிறது. இதில், வவ்வால் எச்சம் அல்லது உமிழ் நீர் பட்ட பழங்கள் ஆகியவற்றை மனிதர்கள் தெரியாமல் உட்கொண்டாலோ அல்லது வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பன்றிகள், குதிரைகள், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் மூலமும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.</span>
<h3>நிபா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகள்</h3>
<ul>
 	<li>அதிக காய்ச்சல் மற்றும் அதிகமான தலைவலி.</li>
 	<li>தசை வலி மற்றும் தொண்டை வலி.</li>
 	<li>மயக்கம் மற்றும் வாந்தி, மனக்குழப்பம்.</li>
 	<li>மூச்சு திணறல் மற்றும் கடுமையான பாதிப்பால் கோமா நிலை.</li>
</ul>
ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/student-died-while-playing-football-at-a-private-school-in-t-nagar-chennai-84385.html" target="_blank" rel="noopener">கால்பந்து விளையாடியபோது துயரம்.. மைதானத்திலேயே மயங்கி விழுந்து மாணவர் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கால்பந்து விளையாடியபோது துயரம்.. மைதானத்திலேயே மயங்கி விழுந்து மாணவர் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/student-died-while-playing-football-at-a-private-school-in-t-nagar-chennai-84385.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 11:41:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Baskar P]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/student-died-while-playing-football-at-a-private-school-in-t-nagar-chennai-84385.html</guid>
		            
			

    	<description><![CDATA[T Nagar School Student Died : சென்னையில் தனியார் பள்ளியில் கால்பந்து விளையாடியபோது, திடீரென மயங்கி விழுந்து 11- ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். இவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/student-dies.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கால்பந்து விளையாடியபோது துயரம்.. மைதானத்திலேயே மயங்கி விழுந்து மாணவர் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-man-under-the-pocso-act-for-harassing-a-class-12-student-in-namakkal-84334.html" target="_blank" rel="noopener">சென்னை மாவட்டம்</a>, தியாகராய நகர் பகுதியில் பர்கிட் சாலையில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கால்பந்து விளையாடுவது வழக்கமாகும். அதன்படி, அந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவர் சர்வேஷ் உள்ளிட்ட மாணவர்கள் கால்பந்து விளையாடி உள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக மாணவர் சர்வேஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், ஆசிரியர்கள் உடனடியாக மாணவர் சர்வேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
<h3>போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை</h3>
மேலும், மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, மாணவரின் பெற்றோர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் சர்வேசுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற மாணவர்களிடமும், பள்ளி நிர்வாகத்தினர் இடமும் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், மாணவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/actor-raghava-lawrence-released-a-video-regarding-his-entry-into-politics-84376.html" target="_blank" rel="noopener">நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா? நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கேள்வி!</a>
<h3>மாணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில்...</h3>
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது உடல் சார்ந்த பிரச்சனை அல்லது இதயம் தொடர்பான பாதிப்பால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாணவர் சர்வேஷ் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முக்கிய விவரம் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கை வந்த பின்னரே தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
<h3>குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகம்</h3>
பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடிய மாணவன் மர்மமான முறையில் மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மட்டும் இன்றி அவரது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/good-news-for-tamil-nadu-farmers-cm-vijay-makes-a-bold-announcement-84381.html" target="_blank" rel="noopener">தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/good-news-for-tamil-nadu-farmers-cm-vijay-makes-a-bold-announcement-84381.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 11:30:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/good-news-for-tamil-nadu-farmers-cm-vijay-makes-a-bold-announcement-84381.html</guid>
		            
			

    	<description><![CDATA[குறுவைச் சாகுபடிப் பருவம் தற்போதே தொடங்கிவிட்டதால், விவசாயிகளின் நலன் கருதி அடுத்த ஒரு வாரத்திற்குள் இத்திட்டத்திற்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டு, வேளாண்மைத் துறை மூலம் உடனடியாக இத்திட்டம் முழு வீச்சில் அமல்படுத்தப்படும் எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/farmers.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!" /></figure>தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் "குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். இத்திட்டம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>மேட்டூர் அணை திறக்க முடியாத சூழல்:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் ⁰டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் ⁰குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப்விஜய் அவர்களின் அறிவிப்பு<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/EU0YgxAJg4">pic.twitter.com/EU0YgxAJg4</a></p>
— CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2065290229284790325?ref_src=twsrc%5Etfw">June 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

ஆண்டுதோறும் குறுவைச் சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமடைந்துள்ளதாலும், எல் நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு 90% குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 79.56 அடியாக மட்டுமே உள்ளதால், வழக்கம் போல் இன்று (ஜூன் 12) அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/what-happened-to-the-election-promises-farmers-protests-against-the-tvk-govt-intensify-across-tamil-nadu-84369.html">‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!</a></strong></p>
இதனால் டெல்டா மாவட்டங்களில் இயல்பாகச் சாகுபடி செய்யப்படும் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவைச் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் இச்சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
<h3>நிதி ஒதுக்கீடு விவரங்கள்:</h3>
உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மொத்தம் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.134.83 கோடியானது பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்டா மாவட்டங்களுக்கு நிலத்தடி நீர் மூலம் குறுவைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ரூ.77.50 கோடி நிதி ஒதுக்கீடு. டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கு கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடிக்காக ரூ.57.33 கோடி நிதி ஒதுக்கீடு.
<h3>விவசாயிகளுக்கான சலுகைகள்:</h3>
இந்தச் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பல்வேறு உதவிகள் நேரடியாக வழங்கப்படவுள்ளன. குறுவைச் சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள், ரசாயன உரங்கள் போன்றவற்றை மானிய விலையில் வாங்குவதற்கு இந்த நிதி விவசாயிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதற்காக 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகளும், 4.2 லட்சம் மெட்ரிக் டன் உரங்களும் தற்போதே தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பாசனத்திற்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதால், குழாய்க் கிணறுகள் மூலம் நீர் பாய்ச்சும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தினமும் 18 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். பாசனக் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் ஏற்கனவே போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.10 கோடி செலவில் 2,325 கி.மீ நீளமுள்ள C மற்றும் D பிரிவு வாய்க்கால்களும், நீர்வளத்துறை சார்பில் ரூ.100 கோடி செலவில் 4,971 கி.மீ நீளமுள்ள A மற்றும் B பிரிவு வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளன.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html">அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!</a></strong>
<h3>உடனடியாக அமலுக்கு வரும் அரசாணை:</h3>
குறுவைச் சாகுபடிப் பருவம் தற்போதே தொடங்கிவிட்டதால், விவசாயிகளின் நலன் கருதி அடுத்த ஒரு வாரத்திற்குள் இத்திட்டத்திற்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டு, வேளாண்மைத் துறை மூலம் உடனடியாக இத்திட்டம் முழு வீச்சில் அமல்படுத்தப்படும் எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தவும் தற்போதைய அரசு இந்த முக்கியத் துரித நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/15-year-old-girl-suicide-at-sri-lankan-tamil-rehabilitation-camp-in-dindigul-84382.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 11:08:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/15-year-old-girl-suicide-at-sri-lankan-tamil-rehabilitation-camp-in-dindigul-84382.html</guid>
		            
			

    	<description><![CDATA[Dindigul Girl Suicide: திண்டுக்கல் மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்து 15 வயது சிறுமி தனது சகோதரனுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசாரி விசாரித்து வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/death.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-man-under-the-pocso-act-for-harassing-a-class-12-student-in-namakkal-84334.html" target="_blank" rel="noopener">திண்டுக்கல் மாவட்டம்</a>, ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாச்சி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நகுலன். இவருக்கு 15 வயதில் ரிச்சியா என்ற மகள் இருந்தார். 13 வயதில் ரித்திகன் என்ற மகன் உள்ளார். ரிச்சியா, சத்திரப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ரிச்சியாவுக்கும், அவரது சகோதரர் ரித்திகனுக்கும் இடையே பிஸ்கட் சாப்பிடுவதில் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியதுடன் தங்களது காலணிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த நகுலன் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை சமாதானம் செய்துள்ளனர். ஆனால், ரிச்சியா சமாதானம் ஆகாமல் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த மாணவி ரிச்ச்சியா வீட்டின் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
<h3>மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மாணவி</h3>
ஏதோ கோபத்தில் உள்ளே சென்று விட்டதாக அவரது பெற்றோரும் எண்ணி உள்ளனர். ஆனால், வெகு நேரமாகியும் ரிச்சியா வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. உடனே, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மாணவியில் ரிச்சியா வீட்டின் மின்விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/worker-beaten-to-death-with-bricks-outside-chennai-parthasarathy-temple-84345.html" target="_blank" rel="noopener">திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை…</a>
<h3>ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி</h3>
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனே தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, ரிச்சியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தண்ணீர் மல்க கதறி அழுதனர்.
<h3>சத்திரப்பட்ட போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை</h3>
இது பார்ப்போரை கண் கலங்க செய்தது. இதைத் தொடர்ந்து, மாணவியின் சடலம் கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நகுலன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரனுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
<h3>தற்கொலை எண்ணத்தை தவிர்க்க...</h3>
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/man-arrested-for-beating-a-worker-to-death-near-the-parthasarathy-temple-in-triplicane-chennai-84364.html" target="_blank" rel="noopener">சென்னையில் கல்லால் அடித்து தொழிலாளி கொடூர கொலை… பெயிண்டர் அதிரடி கைது!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா? நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கேள்வி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/actor-raghava-lawrence-released-a-video-regarding-his-entry-into-politics-84376.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 10:13:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/actor-raghava-lawrence-released-a-video-regarding-his-entry-into-politics-84376.html</guid>
		            
			

    	<description><![CDATA[Actor Raghava Lawrence Video: தமிழகத்தில் நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார். எனது தாய் அனுமதி அளித்துள்ள நிலையில், ரசிகர்களாகி நீங்கள் கருத்து தெரிவியுங்கள் என்று வீடியோவில் பேசியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/raghava-lawrence-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா? நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கேள்வி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-vijay-emphasizes-tamil-nadus-needs-at-the-niti-aayog-meeting-84266.html" target="_blank" rel="noopener">திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில்</a> நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி வந்தது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவேனா. இல்லையா என்பது தொடர்பான கேள்விகள் எழுந்து வருகிறது. இதில், நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்று கருத்து கூறுங்கள். நீங்கள் வேண்டாம் என்று கூறினால் நான் அரசியலில் நுழைய மாட்டேன். சமூகத்திற்காக எனது தன்னலமற்ற சேவையை தொடர்ந்து செய்வேன். இந்த காணொளியை பார்த்த பிறகு எனது அரசியல் வருகை குறித்து அனைவரும் கருத்து மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்றால் நான் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-questioned-first-case-registered-by-the-singappenne-special-task-force-was-against-a-tvk-functionary-84235.html" target="_blank" rel="noopener">அரசியலுக்கு</a> வர வேண்டும். எந்த பலனையும் எதிர்பாராமல் பல சேவைகளை செய்ய தயாராக உள்ளேன்.
<h3>சீமானால் எனது வாழ்வில் அரசியல் நுழைவு</h3>
எந்த பலனையும் எதிர்பாராமல் பல ஆண்டுகளாக சேவை செய்து வருகிறேன். கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, அதில் பங்கேற்றவர்களுக்கு நான் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்தேன். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என் மீது விமர்சனம் வைத்தார். நானும் பதிலுக்கு விமர்சனம் வைத்தேன். அப்போது முதல் எனது வாழ்வில் அரசியல் நுழைந்தது. இதைத் தொடர்ந்து, ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்து இருந்தார். அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பின்னர், கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசியலில் ஈடுபடவில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/singappen-special-force-arrested-a-man-who-attempted-to-harass-a-woman-in-ayanavaram-chennai-84294.html" target="_blank" rel="noopener">சிங்கப்பெண்கள் படையின் முதல் வேட்டை.. சென்னையில் புகார் அளித்த 1 மணி நேரத்தில் தரமான சம்பவம்!</a>
<h3>வரலாற்று வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம்</h3>
இதை தொடர்ந்து, அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக அரசியல் ஈடுபட போவதாக எனது தாயிடம் நான் தெரிவித்தேன். அதற்கு, அவர் அரசியல் என்பது ஒரு சாக்கடை. அதில் ஈடுபட வேண்டாம் என்றும், விஜயும் ஈடுபட வேண்டாம் என்றும் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு, சட்டமன்றத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகின. இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அந்த கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், வரலாறு மாறியது.
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Do your duty sincerely, without expecting anything in return.</p>
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter… <a href="https://t.co/VwPFjdaUqy">pic.twitter.com/VwPFjdaUqy</a>

— Raghava Lawrence (@offl_Lawrence) <a href="https://x.com/offl_Lawrence/status/2065290498571468831?ref_src=twsrc%5Etfw">June 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>எனது அரசியல் வருகை குறித்து கருத்து தேவை</h3>
இந்த வரலாற்று வெற்றி குறித்து எனது தாயிடம் மீண்டும் தெரிவித்தேன். அப்போது, அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு எனக்கு அனுமதி அளித்தார். தற்போது, தாய் அளித்த அனுமதியை தொடர்ந்து ரசிகர்களாகிய உங்களிடம் நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்று கருத்து கேட்டுள்ளேன். இதற்கு, நீங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/rajya-sabha-mp-praveen-chakravarty-stated-that-he-would-raise-his-voice-for-tamil-nadu-rights-84330.html" target="_blank" rel="noopener">தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்… ராஜ்யசபா புதிய எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை.. பறிபோன 20 சவரன் நகை, பணம்.. நள்ளிரவில் துணிகரம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/home-invasion-and-robbery-at-gunpoint-20-sovereigns-of-gold-and-cash-stolen-daring-midnight-heist-84373.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 10:11:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/home-invasion-and-robbery-at-gunpoint-20-sovereigns-of-gold-and-cash-stolen-daring-midnight-heist-84373.html</guid>
		            
			

    	<description><![CDATA[கொள்ளைச் சம்பவம் நடந்த உடனே, கலைச்செல்வி தனது மகள் வீட்டிற்குத் தகவல் தெரிவித்து, ராசிபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/robbery-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை.. பறிபோன 20 சவரன் நகை, பணம்.. நள்ளிரவில் துணிகரம்.." /></figure><strong>நாமக்கல், ஜுன் 12:</strong> நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தனியாக இருந்த மூதாட்டியைத் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி, 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் அம்மன் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (58). கணவரை இழந்த இவர், தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய கலைச்செல்வி, இரவு 8 மணியளவில் வீட்டில் தனியாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரது மருமகள் சாப்பாடு எடுத்து வருவதற்காகச் சென்றிருந்த வேளையில், திடீரென இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் தோட்டத்திற்குள் புகுந்து வீட்டிற்குள் நுழைந்தது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/what-happened-to-the-election-promises-farmers-protests-against-the-tvk-govt-intensify-across-tamil-nadu-84369.html">‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!</a></strong></p>

<h3>கத்தி, துப்பாக்கியுடன் மிரட்டல்:</h3>
பாதிக்கப்பட்ட மூதாட்டி கலைச்செல்வி தனக்கு நேர்ந்த துயரத்தைக் கூறும்போது, நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு பேர் உள்ளே வந்தனர். ஒருவன் எனது வாயைப் பொத்தி, கழுத்தில் கத்தியை வைத்தான். மற்றொருவன் நீளமான நாட்டுத் துப்பாக்கி போன்ற ஒரு துப்பாக்கியை என் மீது நீட்டி மிரட்டினான். அவர்கள் இருவரும் தங்களின் முகத்தை பிளவுஸ் துணியால் மூடிக்கட்டியிருந்தனர்; கண்கள் மட்டும்தான் தெரிந்தன. 25 வயதிற்குள் இருக்கும் அவர்கள் இருவரும் தமிழில்தான் பேசினார்கள்" என்று அதிர்ச்சியோடு தெரிவித்தார்.
<h3>20 சவரன் நகை, ரூ.20,000 ரொக்கம் கொள்ளை:</h3>
தொடர்ந்து அந்த மர்ம நபர்கள், கலைச்செல்வியை வலுக்கட்டாயமாகத் தள்ளிச் சென்று, வீட்டில் இருந்த பீரோக்களைத் திறக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். பயந்துபோன அவர் பீரோவைத் திறந்துள்ளார். அதில் இருந்த 15 சவரன் நகைகள், கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் செயின் என மொத்தம் 20 சவரன் தங்க நகைகளையும், அங்கிருந்த ரூ.20,000 பணத்தையும் கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-vijay-emphasizes-tamil-nadus-needs-at-the-niti-aayog-meeting-84266.html" target="_blank" rel="noopener">நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது என்ன? முழு விவரம் உள்ளே!</a></strong>
<h3>தனிப்படை அமைத்து தீவிர விசாரணை:</h3>
கொள்ளைச் சம்பவம் நடந்த உடனே, கலைச்செல்வி தனது மகள் வீட்டிற்குத் தகவல் தெரிவித்து, ராசிபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா (CCTV) பதிவுகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய நபர்கள் குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-tvk-functionary-who-attempted-to-steal-a-laptop-from-a-bus-in-villupuram-84374.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 08:51:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-tvk-functionary-who-attempted-to-steal-a-laptop-from-a-bus-in-villupuram-84374.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Functionary Arrest: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்தில் பயணித்த சக பயணியின் ரூ.1 லட்சம் மதிப்புடைய லேப்டாப்பை திருட முயன்ற கள்ளக்குறிச்சியின் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை செயலரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/delivery-boy-arrested.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/six-students-died-in-road-accidents-in-tiruvarur-and-kallakurichi-84250.html" target="_blank" rel="noopener">திருப்பூர் மாவட்டம்</a>, மன்னரை கிராமத்தை சேர்ந்தவர் ஆரோன் மகன் ஜெயக்குமார் ( 39 வயது). சிவில் இன்ஜினியரான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ஜெயக்குமார் வேலை தொடர்பாக சம்பவத்தன்று சென்னையில் இருந்து அரசு பேருந்தில் மதுரைக்கு சென்றுள்ளார். இந்த பேருந்தானது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் பயணிகள் உணவு அருந்துவதற்காக உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, சிவில் இன்ஜினியர் ஜெயக்குமார் தான் கொண்டு வந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பை தான் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் பகுதியில் ஒரு பையில் வைத்து விட்டு உணவு அருந்த சென்றார். பின்னர், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது இருக்கையின் அடியில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பை ஒரு நபர் திருடிவிட்டு தப்பி செல்ல முயன்றார். உஷாரான ஜெயக்குமார் சக பயணிகள் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கி பிடித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
<h3>தமிழக வெற்றிக் கழக கிளை செயலாளர்</h3>
அதன் பேரில், விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த இளைஞர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முருக்கம்பாடி அண்ணா நகரை சேர்ந்த குமார் என்பவரின் மகன் கண்ணப்பன் ( 32 வயது) என்பதும், இவர், தமிழக வெற்றி கழக கட்சியில் கிளை செயலாளராக இருந்து வருவதும் தெரிய வந்தது. மேலும், இவர் திருக்கோவிலூர் டு திருவண்ணாமலை இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருவதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/singappen-special-force-arrested-a-man-who-attempted-to-harass-a-woman-in-ayanavaram-chennai-84294.html" target="_blank" rel="noopener">சிங்கப்பெண்கள் படையின் முதல் வேட்டை.. சென்னையில் புகார் அளித்த 1 மணி நேரத்தில் தரமான சம்பவம்!</a>
<h3>தவெக நிர்வாகி கைது</h3>
இதை தொடர்ந்து, சிவில் இன்ஜினியர் ஜெயக்குமார் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணப்பனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பேருந்தில் சக பயணியின் லேப்டாப்பை திருட முயன்றதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
<h3>தவெக நிர்வாகி கைதானது பரபரப்பு</h3>
மேலும், தமிழகத்தில் நிகழ்ந்து வரும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டம் -ஒழுங்கை சரி செய்வதிலும் அரசியல் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் லேப்டாப் திருடன் முயன்று கைதான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/what-happened-to-the-election-promises-farmers-protests-against-the-tvk-govt-intensify-across-tamil-nadu-84369.html" target="_blank" rel="noopener">‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும்  விவசாயிகள் போராட்டம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/what-happened-to-the-election-promises-farmers-protests-against-the-tvk-govt-intensify-across-tamil-nadu-84369.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 08:25:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/what-happened-to-the-election-promises-farmers-protests-against-the-tvk-govt-intensify-across-tamil-nadu-84369.html</guid>
		            
			

    	<description><![CDATA[தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் பெரிய அளவில் விவசாயிகள் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருவண்ணாமலை சேத்துப்பட்டு அடுத்த ராந்தம் கிராமத்தில், 'மாநில விடிவெள்ளி விவசாயிகள் சங்கம்' சார்பில் திரண்ட திரளான விவசாயிகள், தங்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/farmers-protest-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும்  விவசாயிகள் போராட்டம்!!" /></figure><strong>சென்னை, ஜுன் 12:</strong> தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசு, தங்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html">அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!</a></strong></p>

<h3>வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அரசு?</h3>
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் சமயத்தில் விவசாயிகளுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, சிறு-குறு விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் விஜய் இந்த வாக்குறுதிகள் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து விவசாயிகளை ஏமாற்றி வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
<h3>மாவட்ட வாரியாக வெடித்த போராட்டங்கள்:</h3>
தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்தவகையில், நாகப்பட்டினம் வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதுகுறித்து விவசாயி நிர்மல் குமார் பேசுகையில், "ஆளுங்கட்சியினர் எங்களின் போராட்டத்தை திமுக தூண்டிவிடுவதாகக் கூறி அரசியல் பழிவாங்கல் செய்கிறார்கள். நாங்கள் முந்தைய அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் எங்களின் உரிமைகளுக்காகப் போராடியுள்ளோம். இப்போது தவெக ஆட்சியிலும் போராடுகிறோம். விவசாயிகளை யாரும் தூண்டிவிடத் தேவையில்லை; வேதனையும் ஏமாற்றமும் மிஞ்சும் போதுதான் நாங்கள் வீதிக்கு வருகிறோம்" என்று கொந்தளித்தார்.

திருச்சி துறையூர் அருகே உள்ள சோபனபுரத்தில், 'தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின்' சார்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு திரண்ட விவசாயிகள், "விஜய் சொன்ன வாக்குறுதி என்னாச்சு?" மற்றும் "ஏமாற்றுவோரை ஏற்க மாட்டோம்" என முழக்கமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் பெரிய அளவில் விவசாயிகள் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருவண்ணாமலை சேத்துப்பட்டு அடுத்த ராந்தம் கிராமத்தில், 'மாநில விடிவெள்ளி விவசாயிகள் சங்கம்' சார்பில் திரண்ட திரளான விவசாயிகள், தங்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.
<h3>அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குக் கடும் எதிர்ப்பு:</h3>
இப்போராட்டங்களின் போது, விவசாயிகளைத் தரக்குறைவாகவும் இழிவுபடுத்தும் விதமாகவும் பேசியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது விவசாயிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். "விவசாயத்தோடு விளையாடுவது மிகவும் ஆபத்தானது. விவசாயிகளை இழிவுபடுத்திய அமைச்சர் உடனடியாகத் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் டெல்டா பகுதிக்கு வரும்போது ஒட்டுமொத்த விவசாயிகளும் திரண்டு அவருக்குக் கருப்புக்கொடி காட்டுவோம்" எனத் தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் எச்சரித்தனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-vijay-emphasizes-tamil-nadus-needs-at-the-niti-aayog-meeting-84266.html" target="_blank" rel="noopener">நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது என்ன? முழு விவரம் உள்ளே!</a></strong>

மக்களின் உணவுத் தேவையைத் தங்களின் உழைப்பால் பூர்த்தி செய்து வரும் தங்களுக்கு, முந்தைய அரசுகளைப் போல தற்போதைய அரசும் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்து விவசாயத்தைக் காக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 08:07:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-arunraj-announced-the-launch-of-a-scheme-to-obtain-outpatient-slips-in-government-hospitals-via-a-mobile-app-84370.html</guid>
		            
			

    	<description><![CDATA[Government Hospitals Outpatient Slips: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செல்போன் செயலி வாயிலாக வெளிப்புற நோயாளிகள் சீட்டை பெற்று குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை பெறும் திட்டத்தை ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/govt-hospital-op-slip.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-questioned-first-case-registered-by-the-singappenne-special-task-force-was-against-a-tvk-functionary-84235.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> உள்ள அரசு மருத்துவமனைகளில் காலை புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான பொது மக்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து வெளி நோயாளிகள் சீட்டை பெற்று விட்டு மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் கால் கடுக்க வெகு நேரம் காத்திருக்கும் சூழல் இருந்து வருகிறது. இதனால், வெளிப்புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவு காணப்படுவதாகவும், மருத்துவமனையின் வெளிப்பகுதிகளில் அதிக அளவு கூட்டம் காணப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருவோருக்கு செல்போன் செயலி மூலமாக ஓபி சீட்டு வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-questioned-first-case-registered-by-the-singappenne-special-task-force-was-against-a-tvk-functionary-84235.html" target="_blank" rel="noopener">அமைச்சர்</a> அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
<h3>தினமும் 3 ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்காக வருகின்றனர்</h3>
இது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. இதில். திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை போன்ற நாட்களில் சென்னை ஸ்டான்லி அரச மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் குமார் 3 ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-vijay-emphasizes-tamil-nadus-needs-at-the-niti-aayog-meeting-84266.html" target="_blank" rel="noopener">நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது என்ன? முழு விவரம் உள்ளே!</a>
<h3>செல்போன் செயலி வாயிலாக ஓபி சீட்டு பெறும் முறை</h3>
அவ்வாறு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து வெளிப்புற நோயாளிகள் சீட்டை பெறும் நிலை உள்ளது. அதுவும் வெயில் மற்றும் மழை காலங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் முன்னதாகவே முன்பதிவு செய்து சிகிச்சை பெறுவது போல, அரசு மருத்துவமனைகளில் முன்பதிவு செய்து சிகிச்சை பெறும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
<h3>செயல்பாட்டுக்கு வருகிறது செல்போன் செயலி ஓபி சீட்டு முறை</h3>
அதன்படி, செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்துவிட்டு 8 முதல் 8:30 மணிக்குள் அல்லது 9 மணி முதல் 9:30 மணிக்குள் என ஒரு நேரத்தை தேர்வு செய்து செல்போன் செய்தியில் ஆதார் எண்ணை பயன்படுத்தி முன்பதிவு செய்து சிகிச்சை பெறுவதற்கான ஒரு திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் வெளிப்புற நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் குறைந்த நேரத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்ப வசதியாக இருக்கும் இந்த சட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/rajya-sabha-mp-praveen-chakravarty-stated-that-he-would-raise-his-voice-for-tamil-nadu-rights-84330.html" target="_blank" rel="noopener">தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்… ராஜ்யசபா புதிய எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மீண்டும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/will-the-koyambedu-omni-bus-terminus-reopen-demand-directed-at-the-tamil-nadu-govt-84365.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 07:39:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/will-the-koyambedu-omni-bus-terminus-reopen-demand-directed-at-the-tamil-nadu-govt-84365.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான உள்நுழைவுக் கட்டணத்தை ரூ.150-லிருந்து ரூ.500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இக்கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/cmbt-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மீண்டும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!!" /></figure><strong>சென்னை, ஜுன் 12:</strong> ஆம்னி பேருந்துகளுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளரை நேரில் சந்தித்த அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் தலைவர் அன்பழகன், தங்களது முக்கிய கோரிக்கைகள் மற்றும் தற்போதைய போக்குவரத்து நிலை குறித்து விரிவாகப் பேசினார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/six-students-died-in-road-accidents-in-tiruvarur-and-kallakurichi-84250.html" target="_blank" rel="noopener">கொடூர சாலை விபத்து.. 5 பள்ளி மாணவர்கள் பலி.. திருவாரூர்- கள்ளக்குறிச்சியில் சோகம்!</a></strong>
<h3>கிளாம்பாக்கத்தால் போக்குவரத்து நெரிசல்:</h3>
தமிழக அரசிடம் நாங்கள் முன்வைக்கும் மிக முக்கிய கோரிக்கை, கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்துகளுக்காக மீண்டும் திறக்க வேண்டும் என்பதுதான். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கை தற்போது முற்றிலும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளது.

முன்பு ஒரே ஒரு ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள், இப்போது கிளாம்பாக்கம் வரை செல்வதற்காக 40 தனித்தனி கார்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான உள்நுழைவுக் கட்டணத்தை ரூ.150-லிருந்து ரூ.500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இக்கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
<h3>ஆன்லைனில் பேன்சி எண்கள்:</h3>
வாகனங்களுக்கு பேன்சி எண் வழங்கும் நடைமுறையை மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் பேன்சி எண்களுக்கு விண்ணப்பிக்கவும், விரைவாக எண்களை வாங்கவும் ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை இடைத்தரகர்களுக்கு செலவாகும். ஆனால் இப்போது பேன்சி எண்களுக்காக விண்ணப்பிக்கும்போது இடைத்தரகர்கள் எந்தவித கட்டணமும் பெறுவதில்லை.
<h3>கட்டண விவகாரமும் தனி பெர்மிட் கோரிக்கையும்:</h3>
கடந்த 2023-ம் ஆண்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரங்களை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு டீசல் விலை லிட்டருக்கு ரூ.21 வரை உயர்ந்துள்ள போதிலும், பயணிகள் நலன் கருதி 2023-ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படியே தற்போதும் வசூலித்து வருகிறோம். உதாரணமாக, விசேஷ நாட்கள் இல்லாத சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளில் மதுரைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பேருந்துகளில் ரூ.780 வரை வசூலிக்கப்படுகிறது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/coastal-security-group-has-issued-a-warning-due-to-the-presence-of-jellyfish-in-the-waters-off-tiruchendur-84212.html" target="_blank" rel="noopener">பக்தர்களே கவனம்.. திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்தான மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை!</a></strong>

எனவே, ஆம்னி பேருந்துகளுக்கென அரசு தனியாக பெர்மிட் வழங்க வேண்டும். இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆம்னி பேருந்துகளுக்குத் தனி பெர்மிட் வழங்கப்பட்டால் மட்டுமே, அவற்றின் கட்டண நிர்ணயத்தை அரசாங்கத்தால் முழுமையாகக் கட்டுப்படுத்தவோ அல்லது முறைப்படுத்தவோ முடியும் என்று அவர் கூறினார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்து.. அடுத்தடுத்து பிரிந்த இரு உயிர்கள்.. தருமபுரியில் சோகம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-youths-died-in-a-bike-accident-in-dharmapuri-84367.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 07:39:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-youths-died-in-a-bike-accident-in-dharmapuri-84367.html</guid>
		            
			

    	<description><![CDATA[Dharmapuri Bike Accident: தருமபுரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் அடுத்தடுத்த உயிரிழந்தனர். ஒரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/car-accident.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்து.. அடுத்தடுத்து பிரிந்த இரு உயிர்கள்.. தருமபுரியில் சோகம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/election-commission-of-india-plans-to-hold-by-elections-for-5-constituencies-in-tamil-nadu-in-august-84199.html" target="_blank" rel="noopener">தர்மபுரி மாவட்டம்</a>, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எலந்த கொட்டப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு மகன் விக்னேஷ் ( 23 வயது). இதே ஊரை சேர்ந்தவர்களான முருகேசன் என்பவருடைய மகன் மதன் குமார் ( 19 வயது). சங்கர் மகன் சுந்தரம் ( 23 வயது). இவர்கள் மூவரும் நண்பர்களாவர். இவர்கள் 3 பேரும் நேற்று வியாழக்கிழமை மாலை விக்னேஷின் இருசக்கர வாகனத்தில் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் எலந்த கொட்டப்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை விக்னேஷ் ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். சாமியாபுரம் கூட்டு சாலையில் இருந்து அரூர்- சேலம் நெடுஞ்சாலையில் குமரகோட்டம் என்ற பகுதியில் பைக் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோதுமை மில் அருகே சென்ற போது திடீரென இருசக்கர வாகனம் விக்னேஷின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
<h3>விபத்தில் பலத்த காயமடைந்த 3 இளைஞர்கள்</h3>
இதில், மூவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், இளைஞர்கள் மூன்று பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/coastal-security-group-has-issued-a-warning-due-to-the-presence-of-jellyfish-in-the-waters-off-tiruchendur-84212.html" target="_blank" rel="noopener">பக்தர்களே கவனம்.. திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்தான மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை!</a>
<h3>இரு இளைஞர் அடுத்தடுத்து உயிரிழப்பு</h3>
அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி விக்னேஷ் மற்றும் மதன் குமார் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். சுந்தரம் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக இளைஞர்களின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
<h3>எலந்தகொட்டப்பட்டி கிராமத்தில் பெரும் சோகம்</h3>
மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்து சம்பவம் அந்த பகுதி மட்டும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த மதன்குமார் ஏற்கனவே பெட்டில் சுற்றி காலில் எலும்பு முறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/six-students-died-in-road-accidents-in-tiruvarur-and-kallakurichi-84250.html" target="_blank" rel="noopener">கொடூர சாலை விபத்து.. 5 பள்ளி மாணவர்கள் பலி.. திருவாரூர்- கள்ளக்குறிச்சியில் சோகம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னையில் கல்லால் அடித்து தொழிலாளி கொடூர கொலை&#8230; பெயிண்டர் அதிரடி கைது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/man-arrested-for-beating-a-worker-to-death-near-the-parthasarathy-temple-in-triplicane-chennai-84364.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 07:07:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/man-arrested-for-beating-a-worker-to-death-near-the-parthasarathy-temple-in-triplicane-chennai-84364.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chennai Crime : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கட்டட தொழிலாளியை செங்கலால் தாக்கி பெயிண்டர் கொலை செய்தார். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/crime.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னையில் கல்லால் அடித்து தொழிலாளி கொடூர கொலை&#8230; பெயிண்டர் அதிரடி கைது!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-a-break-from-the-heat-heavy-rain-will-lash-in-6-districts-here-is-the-imd-report-84362.html" target="_blank" rel="noopener">திருவண்ணாமலை மாவட்டம்</a>, புலியூரை சேர்ந்தவர் தேவன் ( 45 வயது). இவர், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-a-break-from-the-heat-heavy-rain-will-lash-in-6-districts-here-is-the-imd-report-84362.html" target="_blank" rel="noopener">சென்னை</a>யில் உள்ள திருவல்லிக்கேணியில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் உள்ள பார்த்தசாரதி கோவில் வாசலில் படுத்து தூங்கி வந்தார். இதேபோல, பூந்தமல்லி சேர்ந்த பெயிண்டர் வேலை பார்த்து வரும் ரபீக் ( 25 வயது) என்பவரும் பார்த்தசாரதி கோவில் வாசல் முன்பு தூங்குவது வழக்கம் ஆகும். அதன் படி, நேற்று வியாழக்கிழமை இரவு இருவரும் பார்த்தசாரதி கோவில் எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென தேவனிடம், ரபீக் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், இருவர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது. கடுமையான ஆத்திரம் அடைந்த ரபீக் செங்கலால் தேவனை தலையில் பலமாக தாக்கினார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
<h3>மற்றொரு தொழிலாளி கல்லால் தாக்கியதில் உயிரிழப்பு</h3>
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த ரபீக் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. பின்னர், தாக்குதலில் காயம் அடைந்த தேவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/coastal-security-group-has-issued-a-warning-due-to-the-presence-of-jellyfish-in-the-waters-off-tiruchendur-84212.html" target="_blank" rel="noopener">பக்தர்களே கவனம்.. திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்தான மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை!</a>
<h3>கொலை குற்றவாளி அதிரடி கைது</h3>
இந்தச் சம்பவம் தொடர்பாக தேவனின் குடும்பத்தினர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய ரபீக்கை தேடி வந்தனர். அவர், திருவல்லிக்கேணி பகுதியில் மறைந்திருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரும் மது போதையில் மோதலில் ஈடுபட்டனரா.
<h3>பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை</h3>
அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/six-students-died-in-road-accidents-in-tiruvarur-and-kallakurichi-84250.html" target="_blank" rel="noopener">கொடூர சாலை விபத்து.. 5 பள்ளி மாணவர்கள் பலி.. திருவாரூர்- கள்ளக்குறிச்சியில் சோகம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெயிலுக்கு ரெஸ்ட்.. தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுக்கும்.. வானிலை ரிப்போர்ட் இதோ..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-a-break-from-the-heat-heavy-rain-will-lash-in-6-districts-here-is-the-imd-report-84362.html</link>	
		<pubDate>Fri, 12 Jun 2026 06:27:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-a-break-from-the-heat-heavy-rain-will-lash-in-6-districts-here-is-the-imd-report-84362.html</guid>
		            
			

    	<description><![CDATA[தொடர்ந்து, நாளை (ஜுன் 13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்திலும், 14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 15 முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tn-heavy-rain.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெயிலுக்கு ரெஸ்ட்.. தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுக்கும்.. வானிலை ரிப்போர்ட் இதோ.." /></figure><strong>Tamilnadu Weather Today:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/lorry-rental-charges-hike-from-june-15-may-increase-essential-goods-prices-84205.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> இன்று நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்து சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/six-students-died-in-road-accidents-in-tiruvarur-and-kallakurichi-84250.html">கொடூர சாலை விபத்து..  5 பள்ளி மாணவர்கள் பலி.. திருவாரூர்- கள்ளக்குறிச்சியில் சோகம்!</a></strong>
<h3>இன்று கனமழைக்கு வாய்ப்பு:</h3>
அந்தவகையில், இன்று (ஜூன் 12) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்
<h3>வரும் நாட்களில் மழை நிலவரம்:</h3>
தொடர்ந்து, நாளை (ஜுன் 13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்திலும், 14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 15 முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
<h3>அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:</h3>
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும். அதோடு, அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கூறியுள்ளது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/fraud-involving-emu-farm-operations-two-sentenced-to-10-years-in-prison-and-fined-rs-1-crore-a-landmark-verdict-84201.html"> ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடி.. இருவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்.. அதிரடி தீர்ப்பு!</a></strong>
<h3>சென்னை வானிலை நிலவரம்:</h3>
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை&#8230;</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/worker-beaten-to-death-with-bricks-outside-chennai-parthasarathy-temple-84345.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 22:18:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Baskar P]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/worker-beaten-to-death-with-bricks-outside-chennai-parthasarathy-temple-84345.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் வாசலில், ஜூன் 11, 2026 இரவு நிகழ்ந்த தகராறில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் செங்கற்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/triplicane-murder-case.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை&#8230;" /></figure><strong>சென்னை, ஜூன் 11 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennais-singappen-special-force-responds-to-social-media-complaints-in-just-3-hours-84329.html" target="_blank" rel="noopener">சென்னை</a> திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி பெருமாள் <a href="https://www.tv9tamilnews.com/religion/the-inspiring-history-of-chennais-besant-nagar-murugan-temple-83679.html" target="_blank" rel="noopener">கோவில்</a> வாசலில், ஜூன் 11, 2026 இரவு நிகழ்ந்த தகராறில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் செங்கற்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், புலியூர் பகுதியைச் சேர்ந்த தேவன் (வயது 45) பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்துள்ளார். பகல் நேரங்களில் கட்டிட வேலைகளைச் செய்து வருகிறார். இரவில் தங்குவதற்கு முறையான வசதி இல்லாததால், இவர் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் வாசலில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
<h3>திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை</h3>
இதேபோல், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ரபீக் (25) என்ற பெயிண்டரும் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அவரும் வேலை முடிந்து இரவு நேரங்களில் கோவில் வாசலிலேயே தூங்கி வந்துள்ளார். இவர்களிருவருக்கும் நீண்ட நாட்களாகவே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல இருவரும் கோவில் வாசலில் படுக்கச் சென்றபோது, இவர்களுக்கு இடையே ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, தகராறாக மாறியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/toddler-dies-in-tragic-accident-caused-by-pothole-ridden-road-84293.html">குண்டும் குழியுமான சாலை… பிஞ்சு உயிரை காவு கொண்ட பரிதாபம்!</a></strong>

இதில் ஆத்திரமடைந்த ரபீக், அருகில் கிடந்த செங்கற்களை எடுத்துத் தேவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த தேவன், உதவிக்கு யாரும் வருவதற்கு முன்பாகவே, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தேவன் உயிரிழந்ததை உறுதி செய்த ரபீக், அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதைக் கவனித்த அருகில் இருந்த கோவில் வாசல் போலீஸ் பூத்தில் பணியில் இருந்த காவலர்கள், சற்றும் தாமதிக்காமல் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

தற்போது ரபீக்கை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் இந்த கொலை நடந்ததா அல்லது முன்விரோதம் ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான பார்த்தசாரதி கோவில் வாசலில், நள்ளிரவில் இத்தகைய கொலைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/singappen-special-force-arrested-a-man-who-attempted-to-harass-a-woman-in-ayanavaram-chennai-84294.html">சிங்கப்பெண்கள் படையின் முதல் வேட்டை.. சென்னையில் புகார் அளித்த 1 மணி நேரத்தில் தரமான சம்பவம்!</a></strong>

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ரபீக் மீது கொலை வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நாமக்கல்லில் பரபரப்பு.. ஆசை வார்த்தை கூறி பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை.. திருவண்ணாமலை இளைஞர் கைது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-man-under-the-pocso-act-for-harassing-a-class-12-student-in-namakkal-84334.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 21:40:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-man-under-the-pocso-act-for-harassing-a-class-12-student-in-namakkal-84334.html</guid>
		            
			

    	<description><![CDATA[Namakkal Student Harassing : நாமக்கல் மாவட்டத்தில் அணையை சுற்றி காண்பிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/harrassing-arrest.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நாமக்கல்லில் பரபரப்பு.. ஆசை வார்த்தை கூறி பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை.. திருவண்ணாமலை இளைஞர் கைது!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-questioned-first-case-registered-by-the-singappenne-special-task-force-was-against-a-tvk-functionary-84235.html" target="_blank" rel="noopener">திருவண்ணாமலை மாவட்டம்</a>, தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர் செக்கடியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கருப்பன் ( 28 வயது). கூலி தொழில் பார்த்து வரும் இவர், இன்ஸ்டாகிராம் வாயிலாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் வாயிலாக தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு தொலைபேசியிலும் பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் கடந்த ஜூன் 8- ஆம் தேதி அந்த சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது பள்ளிக்கு வந்த கருப்பன் தங்களது ஊரில் உள்ள சாத்தனூர் அணையை சுற்றிக் காட்டுவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
<h3>அணையை காட்டுவதாக கூறி சென்று பாலியல் வன்கொடுமை</h3>
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையை சுற்றிக் காட்டுவதாக கூறி அழைத்து சென்ற அந்த சிறுமியை ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால், அந்த சிறுமி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து, அந்த சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று அவரது பள்ளியின் அருகே விட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/toddler-dies-in-tragic-accident-caused-by-pothole-ridden-road-84293.html" target="_blank" rel="noopener">குண்டும் குழியுமான சாலை… பிஞ்சு உயிரை காவு கொண்ட பரிதாபம்!</a>
<h3>ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பு</h3>
அங்கிருந்து, சிறுமி வீட்டுக்கு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வீடு சென்ற சிறுமியிடம் அவரது பெற்றோர் எதற்காக தாமதமாக வந்தாய் என கேட்டுள்ளனர். அதற்கு, தனக்கு நடந்த கொடூர சம்பவத்தை அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமி பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
<h3>போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளைஞர் கைது</h3>
இதில், கருப்பன் தொடர்பாக அனைத்து விவரங்களையும் போலீசார் திரட்டினர். இதைத் தொடர்ந்து, கருப்பன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். முன்னதாக, கருப்பனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-leader-vijay-starring-jananayagan-movie-leak-prime-accused-arrested-84321.html" target="_blank" rel="noopener">ஜனநாயகன் படம் கசிவு விவகாரம்.. அதிரடி வேட்டையில் சைபர் கிரைம்.. முக்கிய நபர் கைது!</a> ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>