<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Tamil Nadu News Today | சமீபத்திய தமிழ்நாடு செய்திகள் Tamil Nadu Latest News, தமிழ்நாடு செய்திகள் Photos and videos in Tamil</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/tamil-nadu/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu</link>
 <description>Tamil Nadu News (தமிழ் செய்திகள்) - Read all the latest news on Tamil Nadu Politics, National, World, Business, Lifestyle, Health and more at tv9tamilnews.com. இல் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, தேசிய, உலகம், வணிகம், வாழ்க்கை முறை மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகளை தமிழில் பெறுங்கள்</description><lastBuildDate>Wed, 29 Jul 2026 08:55:46 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை &#8211; பரபரப்பு தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dvac-raids-former-minister-senthil-balajis-house-in-karur-94186.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 08:55:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dvac-raids-former-minister-senthil-balajis-house-in-karur-94186.html</guid>
		            
			

    	<description><![CDATA[கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. மேலும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி, பாஸ்கரன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/senthil-balaji-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை &#8211; பரபரப்பு தகவல்" /></figure><strong>கரூர், ஜூலை 29 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/case-seeking-to-bar-cm-vijay-from-visiting-karur-supreme-court-expresses-strong-displeasure-to-dmk-89460.html" target="_blank" rel="noopener">கரூரில்</a> திமுக முன்னாள் அமைச்சர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senthil-balaji-questioned-for-second-day-regarding-horse-trading-case-involving-tvk-mla-ilaiyaraja-93595.html" target="_blank" rel="noopener">செந்தில் பாலாஜி</a> வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. மேலும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி, பாஸ்கரன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
<h3>செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை</h3>
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன இந்த நிலையில் தவெக எம்எல்ஏகளிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். அவர்களிடம் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான உயர்மட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க : “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/seeman-defamation-case-madurai-bench-slams-police-victoria-gowri-remarks-94163.html">முதல்வர் விஜய்க்கு ஒரு நியாயம்; சீமானுக்கு ஒரு நியாயமா?”.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை கடும் கண்டனம்!</a></strong>

இந்த நிலையில், கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் ஜூலை 29, 2026 இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்ரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் என்பவரது வீடு உட்பட மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையின் முடிவில் எதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

<strong>இதையும் படிக்க <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/k-a-sengottaiyan-minister-for-revenue-and-disaster-management-inaugurated-a-heat-risk-management-workshop-in-chennai-94134.html">: வெப்பத்தைத் தாங்கும் தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை; சென்னையில் பயிலரங்கு தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்..</a></strong>

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா தன்னிடம் பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னணியில், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.  இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பழனி நில மோசடி வழக்கில் திருப்பம்.. சிக்கிய முக்கியப் புள்ளிகள்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/palani-temple-100-crore-land-scam-cbcid-arrests-4-persons-vellaithurai-murugadas-detailed-94171.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 08:46:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/palani-temple-100-crore-land-scam-cbcid-arrests-4-persons-vellaithurai-murugadas-detailed-94171.html</guid>
		            
			

    	<description><![CDATA[Palani Temple Land Scam: பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், வெள்ளைத்துறை மற்றும் முருகதாஸ் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் விடிய விடிய நடத்தி வந்த விசாரணையின் முடிவில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/palani-scam-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பழனி நில மோசடி வழக்கில் திருப்பம்.. சிக்கிய முக்கியப் புள்ளிகள்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி!" /></figure><strong>திண்டுக்கல், ஜூலை 29:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/palani-dandayuthapani-land-irregularity-case-cbcid-police-question-sub-registrar-93835.html" target="_blank" rel="noopener">பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்</a> மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், வெள்ளைத்துறை மற்றும் முருகதாஸ் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, நீதிமன்ற உத்தரவை மீறிப் போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.12 கோடிக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-order-in-government-employee-suspension-case-93956.html">அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!</a></strong>
<h3>சிபிசிஐடி கையில் வழக்கு:</h3>
இச்சம்பவம் தொடர்பாகப் பழனி அடிவாரம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது முதற்கட்டமாக வழக்குப் பதியப்பட்டது. மோசடியின் பரிமாணம் மற்றும் இதில் தொடர்புடை புள்ளிகளின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜூலை 15-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை முழுமையாக சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனி பகுதியில் முகாம் அமைத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
<h3>1882 ஆவணங்கள் தந்த திருப்பம்:</h3>
விசாரணையின் முக்கியத் திருப்பமாக, நிலத்தின் உண்மையான பரம்பரை உரிமையாளர்கள் தரப்பில் 1882-ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வரும் நிலத்திற்கான அசல் பத்திரங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், தற்போது நடைபெற்றுள்ள பத்திரப்பதிவு முற்றிலும் போலி ஆவணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பது உறுதியானது.
<h3>நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை:</h3>
ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், தனிப்படை அமைத்துத் தேடி வந்த சிபிசிஐடி போலீசார், நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வேளையில் வெள்ளத்துறை, முருகதாஸ் உள்ளிட்ட 3 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, சிபிசிஐடி எஸ்பி முன்னிலையில் விடிய விடியத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/scammer-dupes-women-into-shaving-heads-with-false-15000-government-incentive-in-salem-93957.html">மொட்டை அடித்தால் ரூ.15,000 – சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி</a></strong>

அவர்கள் எப்போது, எவ்வாறு இந்த போலி ஆவணங்களை உருவாக்கினார்கள் மற்றும் இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நிறைவடைந்த பின் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனச் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கொளத்தூர் தோல்வி&#8230; மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு &#8211; என்ன நடக்கும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/evm-verification-in-kolathur-scheduled-for-today-following-mk-stalin-complaint-94170.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 07:40:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/evm-verification-in-kolathur-scheduled-for-today-following-mk-stalin-complaint-94170.html</guid>
		            
			

    	<description><![CDATA[கொளத்தூர் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திடம் அவர் புகார் மனு அளித்திருந்தார். அதன்படி கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/evm-verification-in-kolathur.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கொளத்தூர் தோல்வி&#8230; மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு &#8211; என்ன நடக்கும்?" /></figure><strong>சென்னை, ஜூலை 29 :</strong> கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mk-stalin-remarks-talks-with-karnataka-government-regarding-the-cauvery-water-issue-93458.html" target="_blank" rel="noopener">மு.க.ஸ்டாலின்</a> தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் போட்டியிட்டு அதிர்ச்சி தோல்வியடைந்தார். இது <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/opposition-leader-udhayanidhi-stalin-has-criticized-cm-vijay-regarding-mekedatu-dam-issue-94025.html" target="_blank" rel="noopener">திமுகவினர்</a> மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு என்பவரிடம் சுமார் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
<h3>மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு</h3>
கடந்த 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் கொளத்தூர் அவரது கோட்டையாக பார்க்கப்பட்டது. இதனால் அவர் இந்த முறையும் அவர் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் தோல்வியை சந்தித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/opposition-leader-udhayanidhi-stalin-has-criticized-cm-vijay-regarding-mekedatu-dam-issue-94025.html">தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.. மேகதாது விவகாரத்தில் முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின்…</a></strong>

இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திடம் அவர் புகார் மனு அளித்திருந்தார். அதன்படி கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக செல்யபடுத்தப்பட்டதா என ஆய்வு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் ஜூலை 29, 2026 இன்று காலை 9 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அந்த 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படவுள்ளன. இதில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>என்ன  நடக்கும்?</h3>
இந்த ஆய்வில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதன்படி முறையாக செயல்படவில்லை என்றால் தொழில்நுட்பக் கோளாறு உறுதி செய்யப்படும். இதனையடுத்து தனை அடிப்படையாகக் கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கான விண்ணப்பத்தையும் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். தற்போது இந்த ஆய்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-house-should-respect-tamil-thai-valthu-says-minister-nirmal-kumar-93997.html">தவறான விஷயம்… தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்</a></strong>

கொளத்தூரில் மு.க.ஸ்டாலினின் தோல்வியை வைத்து தவெகவினர் விமர்சித்து வந்தனர்.  இந்த நிலையில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில் இன்று நடைபெறவிருக்கும் ஆய்வு அரசியல் ரீதியாக மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.  மற்றொரு பக்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று மீண்டும் எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;பாஜகவின் வீழ்ச்சிக்கு Gen-Z புரட்சியே தொடக்கப்புள்ளி!&#8221;.. NTA-வை உடனடியாகக் கலைக்க திருமாவளவன் வலியுறுத்தல்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/thirumavalavan-parliament-speech-gen-z-protest-bjp-neet-nta-issue-94167.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 07:18:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/thirumavalavan-parliament-speech-gen-z-protest-bjp-neet-nta-issue-94167.html</guid>
		            
			

    	<description><![CDATA[Thirumavalavan MP Speech in Delhi: டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய Gen-Z புரட்சியால் பாஜக அரசு பணியத் தொடங்கியுள்ளது என்றும், ஒன்றிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகப் பேசினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/thirumavalavan-9.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;பாஜகவின் வீழ்ச்சிக்கு Gen-Z புரட்சியே தொடக்கப்புள்ளி!&#8221;.. NTA-வை உடனடியாகக் கலைக்க திருமாவளவன் வலியுறுத்தல்!!" /></figure><strong>டெல்லி, ஜூலை 29:</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/public-examinations-amendment-bill-anti-paper-leak-stricter-penalties-93732.html" target="_blank" rel="noopener">மக்களவையில்</a> பொதுத்தேர்வு திருத்தச் சட்ட மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், பாஜக அரசின் கல்வி மற்றும் தேர்வு நடைமுறைகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதுகுறித்து மக்களவையில் பேசிய தொல். திருமாவளவன், "பாரதிய ஜனதா கட்சியின் வீழ்ச்சிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'Gen-Z' தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் புரட்சியே தொடக்கப் புள்ளியாகும்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-has-posted-in-x-stating-that-tamil-thai-vaazhthu-will-always-be-first-in-every-event-and-condemned-centre-94127.html">தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட விவகாரம்: யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதல் இடம் – த.வெ.க விளக்கம்.</a></strong>
<h3>வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்:</h3>
இதனை மாணவர்கள் நடத்தும் சாதாரணப் போராட்டம் என்று பாஜக அரசு அலட்சியமாகக் கருதியது. ஆனால், அது கட்டுப்பாடற்ற மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியதன் விளைவாகவே, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டிய நெருக்கடி உருவானது. பாஜக அரசு மாணவர்களின் போராட்டத்திற்கு முன்னால் பணிந்து சரணடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டங்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்."
<h3>"NTA-வை உடனடியாகக் கலைக்க வேண்டும்!"</h3>
தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் நீட் தேர்வு முறை குறித்து அவர் மேலும் பேசுகையில், தேசிய அளவில் ஒரே தேர்வை நடத்துவதும், அதற்காக NTA அமைப்பை நிறுவியிருப்பதும் மாநில அரசுகளின் உரிமைகளையும் எளிய மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும். நீட் தேர்வில் வைக்கப்படும் தகுதிப் புள்ளி என்ற நடைமுறையால், போதிய மதிப்பெண் பெறாத பணக்கார மாணவர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது.
<h3>கட்டணக் கொள்ளை சட்டப்பூர்வமாக்கம்:</h3>
முன்பு கேபிடேஷன் பீஸ் என்ற பெயரில் நடந்த கொள்ளையை, நீட் தேர்வு முறை தற்போது சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இதனால் எளிய மாணவர்களுக்கோ, அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே, தேசிய தேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும். மாநில அரசுகளே தங்களின் நுழைவுத் தேர்வுகளை வரையறுக்கவும் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/annamalai-raises-question-against-centre-in-regards-with-cauvery-issue-94084.html"> காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா – அண்ணாமலை கேள்வி..</a></strong>
<h3>"கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுக!"</h3>
நீட் தேர்வில் சீர்திருத்தங்கள் செய்வதோ அல்லது சட்டங்களைக் கடுமையாக்குவதோ தீர்வாகாது என்று சுட்டிக்காட்டிய திருமாவளவன், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பியும் அதை நிராகரித்தது கண்டனத்திற்குரியது என்றார். "தேசிய அளவில் நீட் தேர்வை முற்றாகக் கைவிட வேண்டும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு - ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;முதல்வர் விஜய்க்கு ஒரு நியாயம்; சீமானுக்கு ஒரு நியாயமா?&#8221;.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை கடும் கண்டனம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/seeman-defamation-case-madurai-bench-slams-police-victoria-gowri-remarks-94163.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 06:28:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/seeman-defamation-case-madurai-bench-slams-police-victoria-gowri-remarks-94163.html</guid>
		            
			

    	<description><![CDATA[Seeman Defamation Case: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புவோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. முதல்வர் விஜய் குறித்துப் பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, சீமான் விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்று நீதிபதி விக்டோரியா கெளரி அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/seeman-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;முதல்வர் விஜய்க்கு ஒரு நியாயம்; சீமானுக்கு ஒரு நியாயமா?&#8221;.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை கடும் கண்டனம்!" /></figure><strong>மதுரை, ஜூலை 29:</strong> நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-order-in-government-employee-suspension-case-93956.html" target="_blank" rel="noopener">சென்னை உயர்நீதிமன்ற</a> மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்கள்; ஆனால் சீமான் பற்றி அவதூறு பேசினால் நடவடிக்கை இல்லையா?" என்று விசாரணை அமைப்புகளுக்கு நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-order-in-government-employee-suspension-case-93956.html">அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!</a></strong>
<h3>எந்தவித ஆதாரமின்றி அவதூறு:</h3>
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சினிமா விமர்சகரும் யூடியூபருமான பிஸ்மி மற்றும் 'தமிழன் கோல்' யூடியூப் சேனல் ஆகியவை, "திமுக தலைவர் ஸ்டாலினிடம் இருந்து சீமான் ரூ.100 கோடி பெற்றார்" என்று எந்தவித ஆதாரமுமின்றி அவதூறு பரப்பி வருகின்றன. மேலும், சீமானின் உருவத்தை ஆபாசமாகவும் தவறாகவும் மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாகக் காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனத் கோரப்பட்டிருந்தது.
<h3>"சீமான் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்":</h3>
இந்த மனு நீதிபதி விக்டோரியா கெளரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பின் அலட்சியப் போக்கிற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். "தேர்தலில் வெற்றி தோல்வி என்பது வேறு விஷயம். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சீமான் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்" என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
<h3>இரட்டை நிலைப்பாடு:</h3>
"திமுக எம்.எல்.ஏ ஒருவர் முதல்வர் விஜய் குறித்துப் பேசியதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்கள். பழனி மட நிலப் பத்திரப்பதிவு தொடர்பாக அமைச்சர் ரமேஷ் குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், சீமான் விவகாரத்தில் மட்டும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். "இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது" என்றும் நீதிபதி எச்சரித்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/scammer-dupes-women-into-shaving-heads-with-false-15000-government-incentive-in-salem-93957.html">மொட்டை அடித்தால் ரூ.15,000 – சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி</a></strong>
<h3>சைபர் கிரைம் போலீசாருக்குக் கெடு:</h3>
வாதங்களைக் கேட்ட நீதிபதி விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவில், இணையதளங்களில் சீமான் குறித்துப் பதிவிடப்பட்டுள்ள மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை (இன்றைய தினமே) உடனடியாக அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்து, வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அடுத்த 2 நாட்களுக்கு இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்  &#8211; வானிலை மையம் எச்சரிக்கை</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-forecasts-heavy-rain-in-3-tamil-nadu-districts-for-next-two-days-94162.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 06:16:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-forecasts-heavy-rain-in-3-tamil-nadu-districts-for-next-two-days-94162.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/imd-warns-heavy-rain-alert.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அடுத்த 2 நாட்களுக்கு இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்  &#8211; வானிலை மையம் எச்சரிக்கை" /></figure><strong>சென்னை, ஜூலை 29 : </strong>தமிழ்நாட்டில் ஜூலை 31 2026 மற்றும் ஆகஸ்ட் 1, 2026 ஆகிய 2 நாட்களுக்கு <a href="https://www.tv9tamilnews.com/videos/north-indian-youths-caught-on-cctv-stealing-mobile-phones-in-coimbatore-93981.html" target="_blank" rel="noopener">கோயம்புத்தூர்</a>, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துளளது. இது குறித்து <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-yellow-alert-warning-to-certain-district-ahead-of-heavy-rainfall-and-rise-in-temperature-94020.html" target="_blank" rel="noopener">சென்னை வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
<h3>இந்த 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை</h3>
இதன் காரணமாக ஜூலை 29, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடரந்து ஜூலை 30, 2026 நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/attur-in-salem-district-three-women-shaved-their-heads-after-believing-false-information-that-the-government-would-provide-an-incentive-94108.html">மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் ஊக்கத்தொகை.. சேலத்தில் நடந்த நூதன சம்பவம்.. பெண்களுக்கு காத்திருந்த ஷாக்..</a></strong>

மேலும், ஜூலை 31, 2026 மற்றும் ஆகஸ்ட்1, 2026 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2, 3, 2026 ஆகிய 2 நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 29, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-meenakshi-amman-temple-trust-properties-misappropriation-police-register-a-case-against-19-individuals-93991.html">மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ. 60 கோடி அறக்கட்டளை சொத்து முறைகேடு.. 19 பேர் மீது வழக்கு பதிவு!</a></strong>
<h3>மீனவர்களுக்கு எச்சரிக்கை</h3>
தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதி, ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஜூலை 30-ம் தேதி வரையும், தென் தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆக.1-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெப்பத்தைத் தாங்கும் தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை; சென்னையில் பயிலரங்கு தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/k-a-sengottaiyan-minister-for-revenue-and-disaster-management-inaugurated-a-heat-risk-management-workshop-in-chennai-94134.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 21:55:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/k-a-sengottaiyan-minister-for-revenue-and-disaster-management-inaugurated-a-heat-risk-management-workshop-in-chennai-94134.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை மாநகரில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய வார்டுகளில் கடும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிக்க 'திட்ட மேலாண்மைப் பிரிவு' (PMU) அமைப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/heat-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெப்பத்தைத் தாங்கும் தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை; சென்னையில் பயிலரங்கு தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்.." /></figure><strong>ஜூலை 28, 2026:</strong> சென்னை கிண்டியில் "வெப்பத் தாங்கு திறன் கொண்ட தமிழ்நாட்டை நோக்கி" என்ற தலைப்பில் நடைபெற்ற வெப்ப அபாய மேலாண்மை பயிலரங்கை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, பேரிடர் மேலாண்மையில் முன்னெச்சரிக்கை, ஆயத்தநிலை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர்களிடம் முன்கூட்டியே நிதி இருப்பது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமைக்கு ரூ.50 கோடி சுழற்சி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
<h3>ரூ. 55 கோடி மதிப்பீட்டில் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம்:</h3>
தேவைக்கேற்ப இந்த நிதி மாவட்ட ஆட்சியர்களுக்கு உடனடியாக வழங்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 550 'ஆப்தா மித்ரா'  தன்னார்வலர்களும், 6,034 'யுவா ஆப்தா மித்ரா'  தன்னார்வலர்களும் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/attur-in-salem-district-three-women-shaved-their-heads-after-believing-false-information-that-the-government-would-provide-an-incentive-94108.html">மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் ஊக்கத்தொகை.. சேலத்தில் நடந்த நூதன சம்பவம்.. பெண்களுக்கு காத்திருந்த ஷாக்..</a>

அதேபோல், ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிறுவனம், பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, கொள்கை ஆதரவு மற்றும் அறிவியல் புதுமைகளுக்கான மாநிலத்தின் தலைமை நிறுவனமாக செயல்படும்.
<h3>தமிழ்நாடு மாநில வெப்ப செயல் திட்டம் – 2026:</h3>
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை தயாரித்துள்ள 'தமிழ்நாடு மாநில வெப்ப செயல் திட்டம் – 2026', கடந்த ஜூன் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திட்டம் நாட்டிலேயே மிகவும் விரிவான வெப்ப செயல் திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த பயிலரங்கில், தமிழ்நாட்டிற்கான மாநில வெப்ப செயல் திட்டத்தை செயல்படுத்துவது, வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனுக்கான நிலையான குளிர்விப்பு மற்றும் வெப்பத் தாக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகள், வெப்பத்தைத் தாங்கும் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குதல், தீவிர வெப்பச் சூழலில் எரிசக்தி அமைப்பின் மீள்திறன் மற்றும் தேவை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வல்லுநர்கள் விரிவாக விவாதித்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-has-posted-in-x-stating-that-tamil-thai-vaazhthu-will-always-be-first-in-every-event-and-condemned-centre-94127.html">தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட விவகாரம்: யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதல் இடம் – த.வெ.க விளக்கம்.</a>

மேலும், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை மற்றும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), புனே ஆகியவற்றுக்கு இடையே நகர்ப்புற வானிலை ஆய்வு, தீவிர வானிலை பகுப்பாய்வு, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தொடர்பான ஆய்வுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
<h3>வெப்பத்தை குறைக்க விரிவான திட்ட அறிக்கை:</h3>
அதேபோல், சென்னை மாநகரில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய வார்டுகளில் கடும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிக்க 'திட்ட மேலாண்மைப் பிரிவு' (PMU) அமைப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் (DDGM) வருடாந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டதுடன், தினசரி வானிலை முன்னறிவிப்பு சேவைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட விவகாரம்: யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதல் இடம் &#8211; த.வெ.க விளக்கம்.</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-has-posted-in-x-stating-that-tamil-thai-vaazhthu-will-always-be-first-in-every-event-and-condemned-centre-94127.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 21:14:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-has-posted-in-x-stating-that-tamil-thai-vaazhthu-will-always-be-first-in-every-event-and-condemned-centre-94127.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி, ஆளுநராக இருந்தாலும் சரி, கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்  என தெரிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/tvk-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட விவகாரம்: யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதல் இடம் &#8211; த.வெ.க விளக்கம்." /></figure><strong>ஜூலை 28, 2026:</strong> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவின் போது முதலில் 'வந்தே மாதரம்', பின்னர் தேசிய கீதம், அதன்பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
<h3>3வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து:</h3>
ஏற்கனவே முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டிருந்தது. அப்போது அது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் அவ்வாறு நடைபெற்றதாகவும், இனி தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/annamalai-raises-question-against-centre-in-regards-with-cauvery-issue-94084.html"> காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா – அண்ணாமலை கேள்வி..</a>
<h3>தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும் - த.வெ.க:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta">நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு…</p>
— TVK Party HQ (@TVKPartyHQ) <a href="https://x.com/TVKPartyHQ/status/2082079411579535529?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி, ஆளுநராக இருந்தாலும் சரி, கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/attur-in-salem-district-three-women-shaved-their-heads-after-believing-false-information-that-the-government-would-provide-an-incentive-94108.html">மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் ஊக்கத்தொகை.. சேலத்தில் நடந்த நூதன சம்பவம்.. பெண்களுக்கு காத்திருந்த ஷாக்..</a>

எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்" என தெரிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் ஊக்கத்தொகை.. சேலத்தில் நடந்த நூதன சம்பவம்.. பெண்களுக்கு காத்திருந்த ஷாக்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/attur-in-salem-district-three-women-shaved-their-heads-after-believing-false-information-that-the-government-would-provide-an-incentive-94108.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 19:09:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/attur-in-salem-district-three-women-shaved-their-heads-after-believing-false-information-that-the-government-would-provide-an-incentive-94108.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்த தகவலை உண்மையென நம்பிய சுமார் 20 பேர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்தனர். அவர்களில் காவிரி, இராமாயி, சித்ரா ஆகிய மூன்று பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். பின்னர், தாங்கள் மொட்டை அடித்த புகைப்படங்களை அந்த மர்ம நபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/salem-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் ஊக்கத்தொகை.. சேலத்தில் நடந்த நூதன சம்பவம்.. பெண்களுக்கு காத்திருந்த ஷாக்.." /></figure><strong>ஜூலை 28, 2026:</strong> சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மொட்டை அடித்துக் கொண்டால் அரசு சார்பில் ரூ. 45 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற போலி தகவலை நம்பி மூன்று பெண்கள் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்துள்ளார். அவர், தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

அப்போது, "கொரோனாவைப் போன்ற புதிய வகை நோய் ஒன்று பரவி வருகிறது. அந்த நோய் தலைமுடி வழியாகப் பரவுவதால், வெளிநாடுகளில் மக்கள் மொட்டை அடித்து பாதுகாப்பாக இருக்கின்றனர். அதேபோல் மொட்டை அடித்தால் இந்த நோயிலிருந்து தப்பிக்கலாம்" என்று கூறியுள்ளார்.
<h3>மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் வழங்கப்படும்:</h3>
மேலும், "இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் பங்கேற்பவர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும். பெண்களுக்கு ₹15 ஆயிரம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ₹45 ஆயிரம் மற்றும் ஒரு லேப்டாப், ஆண்களுக்கு ₹6 ஆயிரம் வழங்கப்படும். இந்த கிராமத்திற்கு தற்போது 18 டோக்கன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து, மொட்டை அடிக்கத் தயாராக இருக்கும் நபர்களை அழைத்து வாருங்கள்" என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/opposition-leader-udhayanidhi-stalin-has-criticized-cm-vijay-regarding-mekedatu-dam-issue-94025.html">தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.. மேகதாது விவகாரத்தில் முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின்…</a>

இந்த தகவலை உண்மையென நம்பிய சுமார் 20 பேர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்தனர். அவர்களில் காவிரி, இராமாயி, சித்ரா ஆகிய மூன்று பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். பின்னர், தாங்கள் மொட்டை அடித்த புகைப்படங்களை அந்த மர்ம நபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளனர்.
<h3>ஏமாற்றமடைந்ததை உணர்ந்த பெண்கள்:</h3>
அதன்பிறகு, அவரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது செல்போன் எண் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மூன்று பெண்கள் மொட்டை அடித்த நிலையில், மொட்டை அடிக்கத் தயாராக இருந்த மற்ற 20 பேர் சந்தேகமடைந்து, அதிலிருந்து விலகிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், "புதிய வகை நோயிலிருந்து தப்பிக்க மொட்டை அடித்துக் கொண்டவர்களுக்கு அரசு பணம் வழங்கும் என்று கூறி, ஏற்கனவே மொட்டை அடித்த சிலரின் புகைப்படங்களையும் அனுப்பியிருந்தனர். அதை நம்பித்தான் பலரும் ஏமாந்தனர்" என்றார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/annamalai-raises-question-against-centre-in-regards-with-cauvery-issue-94084.html">காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா – அண்ணாமலை கேள்வி..</a>

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொதுமக்களை ஏமாற்றிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரசு சார்பில் இதுபோன்ற எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்கள் அல்லது தொலைபேசி மூலம் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா &#8211; அண்ணாமலை கேள்வி..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/annamalai-raises-question-against-centre-in-regards-with-cauvery-issue-94084.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 18:08:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/annamalai-raises-question-against-centre-in-regards-with-cauvery-issue-94084.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/anna-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா &#8211; அண்ணாமலை கேள்வி.." /></figure><strong>ஜூலை 28, 2026:</strong> மேகதாது அணை விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
<h3>மத்திய அரசிற்கு அண்ணாமலை கேள்வி:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta">கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று… <a href="https://t.co/kEoqo6VXac">pic.twitter.com/kEoqo6VXac</a></p>
— K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2081990915816878462?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
இந்தச் சூழலில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா?" என்ற கேள்வியை எழுப்பி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "கடந்த 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு, காவிரி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்று மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/opposition-leader-udhayanidhi-stalin-has-criticized-cm-vijay-regarding-mekedatu-dam-issue-94025.html">தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.. மேகதாது விவகாரத்தில் முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின்…</a>
<h3>அனுமதியின்றி அணை கட்ட முடியாது:</h3>
கடந்த 05.08.2021 அன்று, அப்போதைய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடக மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டுச் சட்டத்தின்படி, காவிரியின் கீழ்மட்டத்தில் அமைந்துள்ள மாநிலங்களின், குறிப்பாக தமிழ்நாட்டின், ஒப்புதல் இன்றி நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட எந்தக் கட்டமைப்பையும் அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
<h3>மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா:</h3>
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

Also Read:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-writes-to-pm-urging-no-approval-for-mekedatu-dam-94009.html"> மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது…. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்</a>

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?

தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.. மேகதாது விவகாரத்தில் முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின்&#8230;</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/opposition-leader-udhayanidhi-stalin-has-criticized-cm-vijay-regarding-mekedatu-dam-issue-94025.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 15:03:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/opposition-leader-udhayanidhi-stalin-has-criticized-cm-vijay-regarding-mekedatu-dam-issue-94025.html</guid>
		            
			

    	<description><![CDATA[மேகதாது அணை பிரச்சினையில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் இணைந்து, ஒன்றிய அரசிடம் மேகதாது அணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என சட்டப்பேரவையிலேயே நான் வலியுறுத்தியிருந்தேன்.  இனியும் காலம் தாழ்த்தினால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/meketadu-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.. மேகதாது விவகாரத்தில் முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின்&#8230;" /></figure><strong>ஜூலை 28, 2026: </strong>மேகதாது அணை விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் கூறியதையும் கேட்கவில்லை; விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்கவில்லை. இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
<h3>மேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்:</h3>
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்குச் சென்று, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-house-should-respect-tamil-thai-valthu-says-minister-nirmal-kumar-93997.html"> தவறான விஷயம்… தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்</a>

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
<h3>தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta">மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும்,…</p>
— Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2082005391068852234?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
அந்த பதிவில், "மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவுக்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்றும் நோக்கில் காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-writes-to-pm-urging-no-approval-for-mekedatu-dam-94009.html">மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது…. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்</a>

இந்த பிரச்சினையில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் இணைந்து, ஒன்றிய அரசிடம் மேகதாது அணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என சட்டப்பேரவையிலேயே நான் வலியுறுத்தியிருந்தேன். கர்நாடகாவில் திரைப்பட வசூல் பாதிக்கப்படும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர் எதிர்க்கட்சிகள் கூறியதையும் கேட்கவில்லை; விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.

இனியும் காலம் தாழ்த்தினால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கொளுத்தும் வெயில் ஒருபக்கம்.. கொட்டும் மழை ஒருபக்கம் &#8211; அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-yellow-alert-warning-to-certain-district-ahead-of-heavy-rainfall-and-rise-in-temperature-94020.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 14:40:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-yellow-alert-warning-to-certain-district-ahead-of-heavy-rainfall-and-rise-in-temperature-94020.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/rain-20-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கொளுத்தும் வெயில் ஒருபக்கம்.. கொட்டும் மழை ஒருபக்கம் &#8211; அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?" /></figure><strong>ஜூலை 28, 2026:</strong> தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய ஏழு தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலப் பகுதியில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஏனைய தமிழகம் முழுவதிலும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>எங்கெல்லாம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை?</h3>
ஜூலை 30-ஆம் தேதியைப் பொருத்தவரையில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஏனைய தமிழகம் முழுவதிலும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-writes-to-pm-urging-no-approval-for-mekedatu-dam-94009.html">மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது…. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்</a>

ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிகளைப் பொருத்தவரையில், கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஏனைய தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>4 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை:</h3>
மழை ஒரு பக்கம் இருந்தாலும், வெப்பநிலையின் தாக்கம் பல்வேறு மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/entertainment/new-case-filed-against-jananayagan-movie-in-madurai-bench-of-madras-high-court-94013.html"> மதுரை கிராமம் பற்றி தவறான கருத்து? ஜனநாயகன் படத்துக்கு எதிராக புதிய வழக்கு – இயக்குநருக்கு நோட்டீஸ்</a>

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது&#8230;. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-writes-to-pm-urging-no-approval-for-mekedatu-dam-94009.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 13:31:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-writes-to-pm-urging-no-approval-for-mekedatu-dam-94009.html</guid>
		            
			

    	<description><![CDATA[மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை என்ற ஒன்றிய அமைச்சர் ராஜ் பூசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் மேகதாது அணைக்கு எந்த அனுமதியும் தரக்கூடாது என கேட்டுக்கொண்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/cm-vijay-writes-letter-to-pm.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது&#8230;. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்" /></figure>சென்னை, ஜூலை 28 : மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை என்ற ஒன்றிய அமைச்சர் ராஜ் பூசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் மேகதாது அணைக்கு எந்த அனுமதியும் தரக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
<h3>பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்</h3>
காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு கட்டமைப்பை அமைப்பதற்கு முன்னதாக, ஆற்றின் கீழ்மடைப் பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் கட்டாயம் பெற வேண்டும் என 2018 பிப்ரவரி 16ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்கும்வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கீழ்மடை மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான தற்போதைய சட்ட நிலை மற்றும் நிலைபெற்ற சட்ட விதிகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமலேயே, 'ஜல் சக்தி' துறை இணையமைச்சரின் இந்த ஏமாற்றமளிக்கும் பதில் அளிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தச் சூழலில், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றுக்கு இடையிலான அலமட்டி வழக்கின்போது, ​​ஆற்றின் கீழ்மட்டத்தில் அமைந்துள்ள மாநிலத்தின் ஒப்புதல் மிக அவசியமானது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு அளித்த தீர்ப்பை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த தீர்ப்பில், “ஆற்றைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற அனைத்து மாநிலங்களின் ஒப்புதலும் மத்திய அரசின் அனுமதியும் இன்றி, கர்நாடக மாநிலம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி தீர்ப்பாயமே முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. வெறும் 0.1 டிஎம்சி நுகர்வுப் பயன்பாட்டைக் கொண்ட கேரளாவின் பாம்பார் நீர்மின் திட்ட வழக்கில், கீழ்நிலைப் பாசனத்திற்குப் பாதகமாக பாதிப்பு ஏற்படாத வகையில், நீர் திறப்பு அட்டவணையை கேரளாவும் தமிழ்நாடும் கூட்டாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அது உத்தரவிட்டது. இது, தீர்ப்பாயம் ஆண்டு அளவுகளுக்கு மட்டுமல்லாமல், கீழ்நிலைப் பாசன நலன்களைப் பாதிக்கும் நீர் திறப்புகளின் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறைக்கும் முதன்மையான முக்கியத்துவம் அளித்தது என்பதை நிரூபிக்கிறது. தீர்ப்பின் பதினொன்றாம் பிரிவு, ஒழுங்குமுறை ஆணையத்துடன் பரஸ்பர உடன்பாடு மற்றும் கலந்தாலோசனையின்றி, கீழ்நிலை மாநிலங்களுக்குத் திட்டமிடப்பட்ட விநியோகங்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை எந்தவொரு மேல்நிலை மாநிலமும் எடுப்பதைத் திட்டவட்டமாகத் தடை செய்கிறது. எனவே, முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை வெறும் ஒரு பொறியியல் முன்மொழிவாக மட்டும் மதிப்பிட முடியாது. அதன் சட்டப்பூர்வமான ஏற்புத்தன்மையானது காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் 16 பிப்ரவரி 2018 தேதியிட்ட தீர்ப்பு, கீழ்நிலை மாநிலங்களின் உரிமைகள் அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும்.
<h3>'பிரதமர் தலையிட வேண்டும்'</h3>
இத்திட்டம் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும், ஆற்றின் கீழ்மடைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களின் கவலைகளையும் கருத்தில் கொண்டு, விரிவான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஆய்வுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்.காவிரி ஆறு என்பது வெறும் நீராதாரமாக மட்டுமல்லாமல், தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் குடிமக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நதிகள் தொடர்பான விவகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புச் சார்ந்த நடைமுறைகள் மீதான நம்பிக்கையைத் தக்கவைக்க, தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் மாண்பைக் காப்பது அவசியமாகும். நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை உண்மையாகச் செயல்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்தி, இதில் தங்கள் மேலான தலையீட்டை நான் கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவறான விஷயம்&#8230; தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் &#8211; அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-house-should-respect-tamil-thai-valthu-says-minister-nirmal-kumar-93997.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 13:13:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-house-should-respect-tamil-thai-valthu-says-minister-nirmal-kumar-93997.html</guid>
		            
			

    	<description><![CDATA[நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3வதாக பாடப்பட்டது.  இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் நிர்மல் குமார், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் செய்தது தவறான விஷயம் என்றும் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/minister-nirmalkumar-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவறான விஷயம்&#8230; தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் &#8211; அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்" /></figure><strong>சென்னை, ஜூலை 28 :</strong> நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா ஜூலை 28, 2026 இன்று நடைபெற்றது. இதில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-government-announces-major-ias-reshuffle-across-key-departments-82416.html" target="_blank" rel="noopener">தமிழக ஆளுநர்</a> ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடலும், 2வதாக தேசிய கீதம் மற்றும் 3வதாக <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/marxist-secretary-shanmugam-explained-cm-vijay-comment-regarding-3rd-singing-of-tamil-thai-vazhthu-79806.html" target="_blank" rel="noopener">தமிழ்த்தாய்</a> வாழ்த்தும் பாடப்பட்டது. இது மாபெரும் சர்ச்சையானது. குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயருடைய பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு 3வது இடம் வழங்கப்பட்டிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
<h3>அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்</h3>
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய நிர்மல்குமார், தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு மாறுதலான வழிகாட்டுதல்களை ஆளுநர் அளித்துள்ளதாக கேள்விப்படுகிறோம். இது தவறான விஷயம் என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/notice-against-bribery-pasted-at-the-manamadurai-taluk-office-goes-viral-93971.html">மனுவோடு வாங்க.. பணத்தோடு வராதீங்க.. மானாமதுரையில் இப்படியொரு வட்டாட்சியரா? சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் நோட்டீஸ்!</a></strong>

மேலும் பேசிய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்வதாக உயர்நநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் அடுத்த கட்டமாக இதில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசித்து முடிவெடுப்போம்.

மேகேதாட்டு விவகாரம் குறித்து பல தரப்பினரிடமும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் பின்னர் எந்த நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும் என முதல்வர் முடிவெடுப்பார். தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதில் நிறைய மாறுதலான வழிகாட்டுதல்களை ஆளுநர் மாளிகை அளித்ததாக கேள்விப் படுகிறோம். பாஜக ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகளின் வாழ்த்தே முதலில் பாடப்படுகிறது. தமிழகத்தில் மாறாக செய்வது தவறான விஷயம். எனவே தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்க வேண்டும் என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/transport-department-has-stated-that-loud-music-should-not-be-played-on-government-buses-93960.html">அரசுப் பேருந்துகளில் புதிய ரூல்ஸ்.. பயணிகளே உடனே தெரிஞ்சுக்கோங்க.. போக்குவரத்து துறை உத்தரவு!</a></strong>

இந்த பட்டமளிப்பு விழா குறித்து சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர், “ இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இருப்பதால் விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என ஆளுநர் மாளிகை உறுதியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியிருந்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ. 60 கோடி அறக்கட்டளை சொத்து முறைகேடு.. 19 பேர் மீது வழக்கு பதிவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-meenakshi-amman-temple-trust-properties-misappropriation-police-register-a-case-against-19-individuals-93991.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 12:15:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-meenakshi-amman-temple-trust-properties-misappropriation-police-register-a-case-against-19-individuals-93991.html</guid>
		            
			

    	<description><![CDATA[Meenakshi Amman Temple Trust Properties Case : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளை சொத்து ரூ. 60 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் உள்ளிட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/madurai-meenakshi-amman-temple-case.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ. 60 கோடி அறக்கட்டளை சொத்து முறைகேடு.. 19 பேர் மீது வழக்கு பதிவு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-jagadeeswari-issuing-death-threat-to-virudhunagar-tvk-union-secretary-audio-clip-going-viral-93949.html" target="_blank" rel="noopener">மதுரையில்</a> உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதில், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் மற்றும் முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், ராஜேந்திரன், புஷ்பராஜ், ஜோதி, கீதா, இளையராஜா, அனீஸ், அந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிகுமார், பிரசாந்த், ராமாயி, செந்தமிழ்செல்வன், பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, உள்ளிட்ட 19 பேர் மீது மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர் கோவிலுக்கு சேவை செய்வதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மீனாட்சியம்மன் கோயில் செயல் அலுவலர் செல்லதுரை அளித்த புகாரின் அடிப்படையில் சுமார் 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2021- ஆம் ஆண்டு கோயிலுக்கு சொந்தமான 1.79 ஏக்கர் பரப்பளவு உள்ள சொத்துகள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
<h3>9 நபர்களுக்கு பட்டா அளிப்பு</h3>
அவற்றின் தற்போதைய மதிப்பு ரூ. 60 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதற்கு சட்டபூர்வ வழிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு சொத்துக்களை மீட்போம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் வார்டு 10- இல் உள்ள ஹக்கீம் அஜமல் கான் சாலையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்தின் உரிமை மதுரை வடக்கு வட்டாட்சியரால் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டு 9 நபர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-bill-collector-saravanan-in-the-karaikudi-corporation-93946.html" target="_blank" rel="noopener">காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!</a>

[caption id="attachment_93994" align="alignnone" width="191"]<img class="size-full wp-image-93994" src="https://www.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/screenshot-2026-07-28-124724.jpg" alt="Screenshot 2026 07 28 124724" width="191" height="194" /> மீனாட்சி அம்மன் கோயில் சொத்து முறைகேடு[/caption]
<h3>விஏஓ சஸ்பெண்ட்- வட்டாட்சியரிடம் துறை ரீதியான விசாரணை</h3>
கடந்த 2016 ஜூன் 24- ஆம் தேதி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவர்களது பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் அறப்போர் இயக்கம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
<h3>கோயில் சொத்து உயிலில் கூறியிருப்பது என்ன</h3>
கடந்த 1930- ஆம் ஆண்டு அமைச்சரால் புதுக்கோட்டை ராஜ்குமார் தட்சிணாமூர்த்தி துரைராஜ துரை ராணி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டது. மதுரையில் அழகர் கோவில் சாலையில் உள்ள இந்த சொத்தில் அசோக விலாஸ் என்ற பெயருடைய ஒரு பங்களாவும், அதன் அருகில் ஒரு தோட்டமும் உள்ளன. இந்த சொத்துக்கான உயிலில் அந்த சொத்தையும், தோட்டத்தையும் வாடகைக்கு விடலாம். ஆனால், அதனை யாரும் அடமானம் வைக்கவோ அல்லது விற்கவோ எந்த விதியும் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/gold-worth-5-crore-80-lakh-smuggled-from-singapore-seized-at-chennai-airport-93953.html" target="_blank" rel="noopener">சிங்கப்பூரில் இருந்து ஸ்கெட்ச்.. சென்னையில் தூக்கிய சுங்கத்துறை.. ரூ.5.80 கோடி தங்கம் பறிமுதல் செய்து அதிரடி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி சென்னையில் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும் &#8211; ரூ.530 கோடியில் மாபெரும் திட்டம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-launches-intelligent-transport-system-to-transform-public-transport-93983.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 12:08:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-launches-intelligent-transport-system-to-transform-public-transport-93983.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கவும் சென்னை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  ரூ.530 கோடியில் உருவாகும் இந்த திட்டத்தின் மூலம் சென்னையின் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/chennai-traffic-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி சென்னையில் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும் &#8211; ரூ.530 கோடியில் மாபெரும் திட்டம்" /></figure><strong>சென்னை, ஜூலை 28 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/gold-worth-5-crore-80-lakh-smuggled-from-singapore-seized-at-chennai-airport-93953.html" target="_blank" rel="noopener">சென்னையில்</a> நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலால் தினமும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/school-education-department-ordered-caste-details-of-students-in-government-and-private-schools-be-recorded-91922.html" target="_blank" rel="noopener">பள்ளி</a>, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கவும் சென்னை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
<h3>ரூ.530 கோடியில் மாபெரும் திட்டம்</h3>
அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் அறிவுசார் போக்குவரத்து அமைப்பு எனப்படும் நவீனத் தொழில்நுட்ப திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் ரூ.530 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-order-in-government-employee-suspension-case-93956.html">அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!</a></strong>

அதில் சென்னை போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிகளை மீறுவோரைக் கண்டறியவும் நகரின் முக்கியச் சந்திப்புகளில் பல்வேறு அதிநவீனத் தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
<h3>தானியங்கி சிக்னல் அமைப்பு</h3>
வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிக்னல் நேரத்தை மாற்றியமைக்கும் விதமாக தானியங்கி சிக்னல் அமைப்பு 101 சந்திப்புகளில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுத் தற்காலிகக் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்னலை மீறிச் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் அமைப்பு 25 இடங்களிலும், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்கும் அமைப்பு 3 இடங்களிலும் பொருத்தப்பட்டுச் சலான் அனுப்பும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 7 இடங்களில் இது நிறுவப்படும்.

நகரின் முக்கிய 47 மேம்பாலங்களில் விபத்துகளை உடனடியாய்க் கண்டறிந்து அவசர உதவி வழங்கிடும் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. தகவல் பலகைகள் மாற்றுப் பாதைகள் மற்றும் நேரலைச் செய்திகளைப் பயணிகளுக்குத் தெரிவிக்க 3 இடங்களில் நவீன மின்னணுத் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/scammer-dupes-women-into-shaving-heads-with-false-15000-government-incentive-in-salem-93957.html">மொட்டை அடித்தால் ரூ.15,000 – சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி</a></strong>

சென்னை மக்களுக்குச் சிறந்த பேருந்து போக்குவரத்து அனுபவத்தை வழங்குவதற்காக எம்டிசி பேருந்து சேவைகள் நவீனமாக்கப்படவுள்ளன. மொத்தம் 3,500 மாநகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் சார்ந்த கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. மேலும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் வரும் நேரத்தைக் துல்லியமாகக் காட்டும் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், 32 பேருந்து பணிமனைகளின் செயல்பாடுகள் முழுமையாக கணினிமயமாக்கப்படுகின்றன.

தொழில்நுட்ப ரீதியாகச் சாதனங்களைப் பொருத்துவதில் சிக்கல் உள்ள இடங்களில் மாற்று இடங்கள் கண்டறியப்பட்டு உள்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், மின் இணைப்புகள் வழங்குவது மற்றும் சந்திப்புகளைச் சீரமைப்பது போன்ற பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விழுப்புரத்தில் கோர விபத்து.. பைக், பேருந்து, கார் அடுத்தடுத்து மோதி கொடூரம்.. 2 பேர் உடல் நசுங்கி பலி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-people-died-in-an-accident-where-a-bus-collided-with-a-motorcycle-in-villupuram-93979.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 12:03:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-people-died-in-an-accident-where-a-bus-collided-with-a-motorcycle-in-villupuram-93979.html</guid>
		            
			

    	<description><![CDATA[Villupuram Accident : விழுப்புரம் மாவட்டத்தில் பைக் மீது தனியார் சொகுசு பேருந்து, கார், சரக்கு வாகனம் என அடுத்தடுத்து மோதிய கொடூர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/villupuram-accident.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விழுப்புரத்தில் கோர விபத்து.. பைக், பேருந்து, கார் அடுத்தடுத்து மோதி கொடூரம்.. 2 பேர் உடல் நசுங்கி பலி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/gold-worth-5-crore-80-lakh-smuggled-from-singapore-seized-at-chennai-airport-93953.html" target="_blank" rel="noopener">விழுப்புரம்</a> மாவட்டம், பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் லாசர் ( 26 வயது). இவர், தனது இருசக்கர வாகனத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை முத்தோப்பு நரசிங்கபுரத்தை சேர்ந்த பூபதி ( 45 வயது) என்பவரை அழைத்துக் கொண்டு திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்களது இருசக்கர வாகனமானது விழுப்புரம் அருகே உள்ள அய்யூர் அகரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கு பின்னால் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பின்னல் வந்த வாகனம் லாசர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த வாகனம் நிக்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் சிக்கிய லாசர் மற்றும் பூபதி ஆகியோர் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தனர்.
<h3>விபத்தில் சிக்கியவர்கள் மீது மோதிய தனியார் பேருந்து</h3>
அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று வந்தது. இந்த பேருந்தை ராணிப்பேட்டையில் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் இயக்கி வந்தார். அப்போது விபத்தில் சிக்கிய அந்த இளைஞர்கள் சாலையில் விழுந்து கிடந்த நிலையில், அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால், அதற்குள்ளாகவே பேருந்து சாலையில் விழுந்து கிடந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-died-after-falling-from-the-terrace-of-her-house-in-kanyakumari-93955.html" target="_blank" rel="noopener">கொய்யாப்பழத்துக்கு ஆசைப்பட்ட பெண் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் சோகமான நிகழ்வு!</a>
<h3>அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள்</h3>
அப்போது பின்னால் வந்த கார், அதன் பின்னால் வந்த சரக்கு வாகனம் அடுத்தடுத்து பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பூபதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லாசர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். காரில் பயணித்த சென்னை, முடிச்சூரை சேர்ந்த ஜான் அன்பழகன் ( 50 வயது) என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த சாலமன் மற்றும் ஓட்டுநர் பாலாஜி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
<h3>விழுப்பரம் தாலுகா போலீசார் விசாரணை</h3>
இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். விழுப்புரம் பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்தில் சிக்கியதும், 2 பேர் உயிரிழந்ததும் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-bill-collector-saravanan-in-the-karaikudi-corporation-93946.html" target="_blank" rel="noopener">காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோயம்புத்தூரில் செல்போன் கடையில் திருடிய வட மாநில இளைஞர்கள் &#8211; வெளியான சிசிடிவி காட்சிகள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/north-indian-youths-caught-on-cctv-stealing-mobile-phones-in-coimbatore-93981.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 11:38:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/north-indian-youths-caught-on-cctv-stealing-mobile-phones-in-coimbatore-93981.html</guid>
		            
														<description><![CDATA[கோயம்புத்தூர், க க சாவடி பகுதியில் செல்போன் கடையில் வட மாநில இளைஞர்கள் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/theft-at-coimbatore-shop.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோயம்புத்தூரில் செல்போன் கடையில் திருடிய வட மாநில இளைஞர்கள் &#8211; வெளியான சிசிடிவி காட்சிகள்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/JYIAS0Mn-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோயம்புத்தூர், க க சாவடி பகுதியில் செல்போன் கடையில் வட மாநில இளைஞர்கள் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>மனுவோடு வாங்க.. பணத்தோடு வராதீங்க.. மானாமதுரையில் இப்படியொரு வட்டாட்சியரா? சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் நோட்டீஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/notice-against-bribery-pasted-at-the-manamadurai-taluk-office-goes-viral-93971.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 11:22:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/notice-against-bribery-pasted-at-the-manamadurai-taluk-office-goes-viral-93971.html</guid>
		            
			

    	<description><![CDATA[Manamadurai Taluk office Notice: சிவகங்கை மாவட்டத்தில் லஞ்சத்துக்கு எதிராக மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓட்டப்பட்ட நோட்டீஸ் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வைரல் நோட்டீசில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸுக்கு உத்தரவளித்த வட்டாட்சியர் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/manamadurai-taluk-office.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மனுவோடு வாங்க.. பணத்தோடு வராதீங்க.. மானாமதுரையில் இப்படியொரு வட்டாட்சியரா? சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் நோட்டீஸ்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-special-sub-inspector-in-tirupattur-for-accepting-a-bribe-of-5000-93839.html" target="_blank" rel="noopener">சிவகங்கை</a> மாவட்டம், மானாமதுரையில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வட்டாட்சியர் உத்தரவிட்டதாக கூறி நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தான் தற்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. ஏனென்றால், அந்த நோட்டீசில் "<strong>வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வர வேண்டும், பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை</strong>" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக அரசு அலுவலகங்களில் பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், நில அளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொது மக்களிடம் சிலர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் எதிர்பார்ப்பதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
<h3>அரசு பணிகளில் வெளிப்படைத் தன்மை</h3>
இதனை தடுக்கும் விதமாகவும், அரசு பணிகளில் வெளிப்படுத்தன்மையே உறுதி செய்யும் வகையிலும் இந்த வினோதமான கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக மானாமதுரை வட்டாட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லஞ்சத்துக்கு எதிராக வட்டாட்சியர் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று பலதரப்பட்ட மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சாமானிய மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-special-sub-inspector-in-tirupattur-for-accepting-a-bribe-of-5000-93839.html" target="_blank" rel="noopener">ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!</a>
<h3>ஊழல் - லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கை</h3>
அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், தாலுகா அலுவலகத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

[caption id="attachment_93976" align="alignnone" width="300"]<img class="size-medium wp-image-93976" src="https://www.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/043ed4d2-e21e-46a4-9419-514136410361-300x169.jpg" alt="043ed4d2 E21e 46a4 9419 514136410361" width="300" height="169" /> லஞ்சத்துக்கு எதிரான நோட்டீஸ்[/caption]
<h3>சிவகங்கையில் இப்படியொரு வட்டாட்சியரா</h3>
இதில், கணக்கில் வராத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே பொதுமக்கள் மத்தியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என்றால் லஞ்சம் கொடுத்து தான் தங்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகிறது. தற்போது, அந்த எண்ணத்திற்கு மாற்றாக மானாமதுரை வட்டாட்சியர் எடுத்துள்ள வினோதமான நடவடிக்கை ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சிவகங்கையில் இப்படியொரு வட்டாட்சியரா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-bill-collector-saravanan-in-the-karaikudi-corporation-93946.html" target="_blank" rel="noopener">காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அரசுப் பேருந்துகளில் புதிய ரூல்ஸ்.. பயணிகளே உடனே தெரிஞ்சுக்கோங்க.. போக்குவரத்து துறை உத்தரவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/transport-department-has-stated-that-loud-music-should-not-be-played-on-government-buses-93960.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 10:17:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/transport-department-has-stated-that-loud-music-should-not-be-played-on-government-buses-93960.html</guid>
		            
			

    	<description><![CDATA[Transport Department : தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கு பயணிகள் செல்போனில் சத்தமாக பாடல் இசைக்க கூடாது, பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரும் சத்தமாக பாடல்கள் ஒலிக்க விடக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/special-buses-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அரசுப் பேருந்துகளில் புதிய ரூல்ஸ்.. பயணிகளே உடனே தெரிஞ்சுக்கோங்க.. போக்குவரத்து துறை உத்தரவு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-died-after-falling-from-the-terrace-of-her-house-in-kanyakumari-93955.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> பொதுமக்களின் போக்குவரத்து சேவையில் அரசு பேருந்துகள் முக்கிய பங்காற்றி வருகின்றது. தமிழக முழுவதும் தினந்தோறும் ஏராளமான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும், இதன் காரணமாக பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மத்தியில் இரைச்சல் நிலவுவதாகவும் பயணிகள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதில், குறிப்பாக நீண்ட தொலைவு பயணம் செய்யும் முதியவர்கள் மற்றும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், உடல்நல குறைபாடு உள்ளவர்கள் பாட்டு சத்தத்தின் காரணமாக வெறும் மன உளைச்சலை தருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனுக்கு புகார்கள் சென்றன.
<h3>அரசு பேருந்து பயணிகளுக்கு புதிய நெறிமுறைகள்</h3>
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசு போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல் ராஜ் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அல்லாமல் செல்போன் பயன்படுத்தவும், ஸ்பீக்கர் போனில் பேசுவதும், வீடியோ பார்ப்பது தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-died-after-falling-from-the-terrace-of-her-house-in-kanyakumari-93955.html" target="_blank" rel="noopener">கொய்யாப்பழத்துக்கு ஆசைப்பட்ட பெண் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் சோகமான நிகழ்வு!</a>
<h3>விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்ட அறிவுறுத்தல்</h3>
அத்துடன், அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஹெட் போன் அல்லது இயர் போன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல, அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளில் பாடல்களை சத்தமாக ஒலிக்க விடக்கூடாது. இது தொடர்பாக 24 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 16 சென்டிமீட்டர் அகலம் கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அனைத்து அரசு பேருந்துகளிலும் ஒட்ட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பயணிகளுக்கும், பயணிகளால் சக பயணிகளுக்கும் பயணத்தின் போது தொந்தரவு இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>போக்குவரத்து ஊழியர்கள் வழிமுறைகளை பின்பற்றுக</h3>
மேலும், அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஷிப்ட் ப்ரீபிங் நேரத்தில் மேற்கண்ட வழிமுறைகளை பயணிகளிடம் கட்டாயம் எடுத்துரைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பாட்டு சத்தம் காதை கிழிக்கும் வகையில் ஒளிபரப்புவதும், சக பயணிகள் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்பதும், சத்தமாக செல்போனில் உரையாடுவதும் இருந்து வந்தது. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-order-in-government-employee-suspension-case-93956.html" target="_blank" rel="noopener">அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னையில் கணவருடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. காவல் ஆய்வாளர் அதிரடி கைது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/traffic-police-inspector-arrested-for-harassing-a-woman-in-chennai-93968.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 10:06:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/traffic-police-inspector-arrested-for-harassing-a-woman-in-chennai-93968.html</guid>
		            
			

    	<description><![CDATA[Traffic Police Inspector Arrested: சென்னை அடையாறில் கணவருடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/01/policeman-arrested-for-harassing-a-woman.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னையில் கணவருடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. காவல் ஆய்வாளர் அதிரடி கைது!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/gold-worth-5-crore-80-lakh-smuggled-from-singapore-seized-at-chennai-airport-93953.html" target="_blank" rel="noopener">சென்னை மாவட்டம்</a>, அடையாறு பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன். இவர், ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ராணிப்பேட்டையில் இருந்து போக்குவரத்து ஆய்வாளர் மணிமாறன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 26- ஆம் தேதி) அடையாறில் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர், அன்று இரவு ஆய்வாளர் மணிமாறன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேளச்சேரி பகுதியில் கணவருடன் ஒரு பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மது போதையின் உச்சத்தில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் திடீரென அந்த பெண்ணின் பின்பகுதியில் கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.
<h3>சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை</h3>
அவரது சத்தத்தை கேட்ட காவல் ஆய்வாளர் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விரைந்து சென்று விட்டனர். அவர்களை அந்த பெண்ணின் கணவர் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து, பாலியல் தொல்லைக்கு உள்ளான அந்த பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-order-in-government-employee-suspension-case-93956.html" target="_blank" rel="noopener">அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!</a>
<h3>போக்குவரத்து காவல் ஆய்வாளர் அதிரடி கைது</h3>
இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண் பதிவாகி இருந்தது. அந்த எண்ணின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த இருசக்கர வாகனத்தின் எண்ணின் முகவரியை கண்டுபிடித்த போலீசார், அந்த முகவரிக்கு சென்று மணிமாறனை அதிரடியாக கைது செய்தனர். அவரை, அடையாறு காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
<h3>போலீசார் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி</h3>
இதை கேட்டு அடையாறு போலீசார் சற்று அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், காவல்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவரே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/transport-department-has-stated-that-loud-music-should-not-be-played-on-government-buses-93960.html" target="_blank" rel="noopener">அரசுப் பேருந்துகளில் புதிய ரூல்ஸ்.. பயணிகளே உடனே தெரிஞ்சுக்கோங்க.. போக்குவரத்து துறை உத்தரவு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-order-in-government-employee-suspension-case-93956.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 08:56:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-order-in-government-employee-suspension-case-93956.html</guid>
		            
			

    	<description><![CDATA[Madras High Court Order Suspension Case: அரசு ஊழியர்கள் நீண்ட காலம் பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது எனவும், அதே வேளையில் பணியிடை நீக்கம் மாதக்கணக்கில் தொடர்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/chennai-high-court.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-special-sub-inspector-in-tirupattur-for-accepting-a-bribe-of-5000-93839.html" target="_blank" rel="noopener">கிருஷ்ணகிரி மாவட்டத்தில்</a> கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் ராமச்சந்திரன். இவர், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக இருந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் கடந்த 2025- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தன்னை பணியிட நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன்னை பணியிட நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான உயர் நீதிமன்ற நீதிபதி பி. டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
<h3>பணியிடை நீக்கம் மீது வழக்கு விவாதம்</h3>
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை முடிவடைந்து 7 மாதங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும், தற்போது வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், துறை ரீதியான விசாரணைக்கு ஆஜராக கோரி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனுக்கு எந்த விதமான குறிப்பாணையையும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, மனுதாரர் ராமச்சந்திரன் மீதான பணியிடை நீக்க உத்தரவு கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-special-sub-inspector-in-tirupattur-for-accepting-a-bribe-of-5000-93839.html" target="_blank" rel="noopener">ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!</a>
<h3>நிலுவையில் இருக்கும் லஞ்ச வழக்கு</h3>
ஒரு அரசு ஊழியரை இவ்வாறு தொடர்ந்து சட்டபூர்வமாக பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது என்று வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மனுதாரர் ராமச்சந்திரனுக்கு எதிரான லஞ்சம் முறைகேடு தொடர்பான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. அவரும் பணியிடை நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா, ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை மற்றும் துறை ரீதியான விசாரணை ஆகிய இரண்டையும் ஒன்றாக பொருத்திப் பார்க்க முடியாது.
<h3>அரசு ஊழியரை நீண்ட காலம் சஸ்பெண்டில் வைத்திருக்க முடியாது</h3>
உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், ஒரு அரசு ஊழியரை நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதே வேளையில் பணியிடை நீக்கத்தை மாத கணக்கில் தொடர்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதி, விஏஓ ராமச்சந்திரன் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, அவரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-bill-collector-saravanan-in-the-karaikudi-corporation-93946.html" target="_blank" rel="noopener">காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மொட்டை அடித்தால் ரூ.15,000 &#8211; சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/scammer-dupes-women-into-shaving-heads-with-false-15000-government-incentive-in-salem-93957.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 08:49:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/scammer-dupes-women-into-shaving-heads-with-false-15000-government-incentive-in-salem-93957.html</guid>
		            
			

    	<description><![CDATA[சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மொட்டை அடித்தால் ரூ.15 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, பெண்களை மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மொட்டை அடித்தால் ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/shaving-head-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மொட்டை அடித்தால் ரூ.15,000 &#8211; சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி" /></figure><strong>சேலம், ஜூலை 28:</strong> <a href="https://www.tv9tamilnews.com/videos/salem-drunk-drive-luxury-car-accident-man-leg-severed-sparks-flying-news-91989.html" target="_blank" rel="noopener">சேலம்</a> மாவட்டம் ஆத்தூர் அருகே மொட்டை அடித்தால் ரூ.15 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, பெண்களை <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-inspector-sheela-mary-arrested-in-fraud-case-involving-police-families-93137.html" target="_blank" rel="noopener">மோசடி</a> செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கொத்தாம்பாடி என்ற பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
<h3>சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி</h3>
மேலும், மொட்டை அடித்தால் ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது. பெண்களை நம்ப வைக்க, பெண்கள் சிலர் மொட்டை அடித்தது போன்ற படங்களையும் அவர் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். இதை நம்பி 20 பேர் மொட்டை அடிக்க தயாரான நிலையில், 3 பெண்கள் மொட்டையும் போட்டுள்ளனர். பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்களை ஏமாற்றிய நபரை தேடி வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-jagadeeswari-issuing-death-threat-to-virudhunagar-tvk-union-secretary-audio-clip-going-viral-93949.html">அடித்து கொலை செய்து விடுவேன்.. தவெக நிர்வாகிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கொலை மிரட்டல்.. வைரலாகும் ஆடியோ!</a></strong>
<h3>பல ஆன்லைன் மோசடிகளில் சிக்கிய பெண்</h3>
இதே போல சில நாட்களுக்கு முன் வீட்டிலிருந்தே வேலை என்று கூறி ஒரு கும்பல் தன்னை ஏமாற்றியதாக மதுரையைச் சேர்ந்த பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமிருன்னிசா பேகம் என்பவர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இவர், ரூ. 6,08,956 பணத்தை இழந்ததாக மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், கடந்த ஏப்ரல் மாதம் பிஎம் முத்ரா ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ்ஆப் மூலம் சில நபர்கள் அமிருன்னிசாவை தொடர்பு கொண்டு, ரூ. 1 லட்சம் கடன் வழங்குவதாக கூறியுள்ளனர். அதற்காக செயலாக்க கட்டணம் என்ற பெயரில் பல தவணைகளாக பணமும் பெற்றுள்ளனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-bill-collector-saravanan-in-the-karaikudi-corporation-93946.html">காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!</a></strong>

இதற்கிடையில் வெளிநாட்டில் வசிக்கும் பிரபல யூடியூபர் எனக் கூறி ஒருவர் அமிருன்னிசாவை தொடர்பு கொண்டுள்ளார். அவர் 5,600 அமெரிக்க டாலர் அனுப்பியுள்ளதாகவும், அதை பெற ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். இதனை அமிருன்னிசாவும் நம்பி, அவர் கூறிய வழிகாட்டு முறைகளை பின்பற்றியுள்ளார். அதன்படி, டாலரை இந்திய ரூபாயாக மாற்றுவதற்கும், வங்கிக் கணக்கை மாற்றுவதற்கும் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிகேஷன் என்ற நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறலாம் என ஆசை காட்டி பணம் வசூலித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அமிருன்னிசா பேகம், தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் அளித்ததுடன், மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் செய்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கொய்யாப்பழத்துக்கு ஆசைப்பட்ட பெண் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் சோகமான நிகழ்வு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-died-after-falling-from-the-terrace-of-her-house-in-kanyakumari-93955.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 08:29:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-died-after-falling-from-the-terrace-of-her-house-in-kanyakumari-93955.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kanyakumari Woman Died : கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கொய்யா பழம் பறித்துக் கொண்டிருந்த பெண் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/chennai-child-death-case.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கொய்யாப்பழத்துக்கு ஆசைப்பட்ட பெண் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் சோகமான நிகழ்வு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/karur-government-appointments-cancellation-appeal-would-be-filed-supreme-court-says-ctr-nirmal-kumar-93866.html" target="_blank" rel="noopener">கன்னியாகுமரி</a> மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு கொய்யா பழங்களை பறித்து கொண்டிருந்த பெண் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமுதா ( 55 வயது). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கொய்யா மரத்தில் இருந்து பழங்களை பறிப்பதற்காக தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு, அமுதா கொய்யா பழங்களை பறித்துக் கொண்டிருந்தபோது, மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டின் விளிம்பில் மிதித்துள்ளார். அப்போது, அவரது பாரம் தாங்காமல் ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்து அமுதா கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
<h3>பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவி சிகிச்சை</h3>
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த அமுதாவின் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, அவர் தீவிர சிகிச்சைக்காக கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமுதா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/karur-government-appointments-cancellation-appeal-would-be-filed-supreme-court-says-ctr-nirmal-kumar-93866.html" target="_blank" rel="noopener">கரூர் அரசுப் பணி ரத்து உத்தரவு.. உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு.. நாளை மேல்முறையீடு செய்ய திட்டம்.. அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்!</a>
<h3>களியக்காவிளை போலீசார் விசாரணை</h3>
இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது சடலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அமுதாவின் கணவர் முருகன் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
<h3>பெண் உயிரிழந்த சம்பவத்தால் பெரும் சோகம்</h3>
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் கொய்யாப்பழம் பறிப்பதற்காக வீட்டின் மொட்டை மாடியில் இருந்து எதிர்பாராதமாக பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-high-court-quashed-government-job-appointment-orders-issued-by-the-tvk-government-regarding-the-karur-stampede-incident-93854.html" target="_blank" rel="noopener">கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து.. மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சிங்கப்பூரில் இருந்து ஸ்கெட்ச்.. சென்னையில் தூக்கிய சுங்கத்துறை.. ரூ.5.80 கோடி தங்கம் பறிமுதல் செய்து அதிரடி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/gold-worth-5-crore-80-lakh-smuggled-from-singapore-seized-at-chennai-airport-93953.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 08:03:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/gold-worth-5-crore-80-lakh-smuggled-from-singapore-seized-at-chennai-airport-93953.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chennai Airport Gold Seized: சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடியை 80 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்தவரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/chennai-airport.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சிங்கப்பூரில் இருந்து ஸ்கெட்ச்.. சென்னையில் தூக்கிய சுங்கத்துறை.. ரூ.5.80 கோடி தங்கம் பறிமுதல் செய்து அதிரடி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/metro-rail-corridor-in-chennai-extended-to-chengalpattu-and-wimco-nagar-93807.html" target="_blank" rel="noopener">சென்னை</a> மாவட்டத்தில் மீனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்திச் செல்வதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.5.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று விட்டு சென்னை திரும்பியது தெரிய வந்தது.
<h3>வடமாநில இளைஞர் சூட்கேசில் தங்கம் கடத்தல்</h3>
அவர் மீது சந்தேகம் அடைந்தார் இலாக அதிகாரிகள் அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால், மேலும் சந்தேகம் அடைந்த இலாகா அதிகாரிகள் அவரிடமும், அவரது உடைமைகளையும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த இளைஞரின் சூட்கேஸில் மேல் பகுதியில் ரகசிய அறை இருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த ரகசிய அறையே பிரித்து பார்த்தபோது, அதில், தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/palani-dandayuthapani-land-irregularity-case-cbcid-police-question-sub-registrar-93835.html" target="_blank" rel="noopener">பழனி நில முறைகேடு வழக்கு.. சஸ்பெண்ட் சார்-பதிவாளரிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை!</a>
<h3>ரூ.5.8 கோடி மதிப்பிலான 3.9 கிலோ தங்கம்</h3>
உடனே, தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை எடை போட்டு பார்த்தனர். இதில், 3 கிலோ 960 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடியே 80 லட்சமாகும் என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த தங்கக் கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த இளைஞரையும் அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
<h3>தங்க கடத்தல் பின்னணி குறித்த தீவிர விசாரணை</h3>
இதில், வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வருவதற்காக அந்த இளைஞரை சிங்கப்பூர் அனுப்பி வைத்தது யார். இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பன உள்ளிட்டவை குறித்து அந்த இளைஞரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது இது போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது நிகழ்ந்து வருகிறது. தற்போது, ரூ.5.80 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-corporation-mayor-r-priya-complaint-lodged-with-police-commissioner-amalraj-regarding-harassment-93824.html" target="_blank" rel="noopener">சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜல்லி கற்கள், எம் சாண்ட் கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை &#8211; தமிழக அரசு அதிரடி  &#8211; காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-bans-export-of-m-sand-jelly-stones-and-granite-to-neighbouring-states-for-3-months-93950.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 07:40:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-bans-export-of-m-sand-jelly-stones-and-granite-to-neighbouring-states-for-3-months-93950.html</guid>
		            
			

    	<description><![CDATA[எம் சாண்ட், ஜல்லி கற்கள், கருங்கல் உள்ளிட்ட கனிமங்களை தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கனிம வளங்கள் குறைவாக உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/m-sand-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜல்லி கற்கள், எம் சாண்ட் கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை &#8211; தமிழக அரசு அதிரடி  &#8211; காரணம் என்ன?" /></figure><strong>சென்னை, ஜூலை 28 :</strong> எம் சாண்ட், ஜல்லி கற்கள், கருங்கல் உள்ளிட்ட <a href="https://www.tv9tamilnews.com/business/budget/mineral-resource-centre-to-be-formed-in-tamil-nadu-nirmala-sitharaman-announced-in-union-budget-2026-55584.html" target="_blank" rel="noopener">கனிமங்களை</a> தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்து <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/it-is-officially-stated-that-chief-minister-office-is-shifted-to-namakkal-kavignar-maligai-at-secretariat-93935.html" target="_blank" rel="noopener">தமிழக அரசு</a> உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கனிம வளங்கள் குறைவாக உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
<h3>அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை</h3>
மேலும் இந்தப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீடு கட்டும் மக்கள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீடு என்பது பலரின் கனவு என்பதால், இந்த கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பலருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-milk-production-company-has-hiked-milk-and-curd-price-for-the-second-time-this-year-93939.html">பால், தயிர் விலை மீண்டும் உயர்வு.. தனியார் நிறுவனங்களின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..</a></strong>

இந்த நிலையில் வீடு கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எம் சாண்ட், ஜல்லி கற்கள் மற்றும் சாதாரன கற்கள் உள்ளிட்டவற்ற அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின் பெயரில் அமைச்சர் பிரபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
<h3>அமைச்சர் பிரபுவின் எக்ஸ் பதிவு</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

இயற்கை வளங்களைப் பாதுகாத்து, நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில்… <a href="https://t.co/1CAnCEywt7">pic.twitter.com/1CAnCEywt7</a></p>
— Dr.Tk.Prabhu (@drtkprabhu_TVK) <a href="https://x.com/drtkprabhu_TVK/status/2081760053120598435?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கனிம வளங்கள் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிமங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது, தமிழ்நாட்டில் இருந்து கனிமங்களை ஏற்றுமதி செய்ய 3 மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/it-is-officially-stated-that-chief-minister-office-is-shifted-to-namakkal-kavignar-maligai-at-secretariat-93935.html">புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் முதலமைச்சர் அலுவலகம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..</a></strong>

இது தொடர்பாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு தனது எக்ஸ் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஜூலை 27, 2026 தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். இயற்கை வளங்களைப் பாதுகாத்து, நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அடித்து கொலை செய்து விடுவேன்.. தவெக நிர்வாகிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கொலை மிரட்டல்.. வைரலாகும் ஆடியோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-jagadeeswari-issuing-death-threat-to-virudhunagar-tvk-union-secretary-audio-clip-going-viral-93949.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 07:28:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-jagadeeswari-issuing-death-threat-to-virudhunagar-tvk-union-secretary-audio-clip-going-viral-93949.html</guid>
		            
			

    	<description><![CDATA[Minister Jagadeeswari Threat TVK Secretary: விருதுநகர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளருக்கு ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஜெகதீஸ்வரி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/minister-threat-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அடித்து கொலை செய்து விடுவேன்.. தவெக நிர்வாகிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கொலை மிரட்டல்.. வைரலாகும் ஆடியோ!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/palani-dandayuthapani-land-irregularity-case-cbcid-police-question-sub-registrar-93835.html" target="_blank" rel="noopener">விருதுநகர் மாவட்டம்</a>, சத்திரப்பட்டி வ. உ. சி. நகரை சேர்ந்தவர் ராஜகுரு. இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் சாத்தூர் தொகுதி மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். அத்துடன் ஊராட்சி ஒன்றியங்களில் அரசு சார்பில் விடுக்கப்படும் ஒப்பந்தங்களை எடுத்து அந்த பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக நிர்வாகி ராஜகுருவுடன், ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஜெகதீஸ்வரி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அந்த ஆடியோவில், அமைச்சர் ஜெகதீஸ்வரி, சாத்தூரை சேர்ந்த மற்றொரு ஒன்றிய செயலாளர் லட்சுமணனுக்கு ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வந்து லட்டு கொடுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்புகிறார். அத்துடன் ஒன்றியம் 3 மற்றும் 4 பிரிவுகளாக உள்ளது.
<h3>புகார் அளித்து தொலைத்து கட்டிவிடுவேன்</h3>
அதனை ஒன்றாக இணைத்து அந்த ஒன்றியங்களில் வழங்கப்படும் ஒப்பந்தங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று நீங்கள் கேட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. என் தொகுதியில் அதிகாரிகளிடம் எது பேசினாலும் காவல் நிலையத்தில் புகார் அளித்து தொலைத்து கட்டி விடுவேன் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறுகிறார். மேலும், என்னை ஆரம்பத்தில் இருந்தே அவர் தொல்லை கொடுத்து வருகிறார். ஏற்கனவே, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் எச்சரித்துள்ளார். எனது தொகுதிக்குள் அந்தப் பையன் வருவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-corporation-mayor-r-priya-complaint-lodged-with-police-commissioner-amalraj-regarding-harassment-93824.html" target="_blank" rel="noopener">சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!</a>
<h3>அடித்து கொலை செய்து விடுவேன்</h3>
அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து ஜட்டியோடு அடித்துக் கொன்று விடுவேன் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுகிறார். இருக்கும் போதே என்னிடம் வேலைக்கு ஆகாது. என்னை பார்த்தால் எப்படி பைத்தியக்காரி மாதிரி தெரிகிறதா. அவனை எனது பகுதிக்குள் கால் வைக்க விடமாட்டேன். சாத்தூர் தொகுதி காரர்களை எனது தொகுதிக்குள் வர விட மாட்டேன் என்று ஆக்ரோஷமாக அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.
<h3>அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்</h3>
இந்த விவகாரம் தொடர்பாக பேசி அமைச்சர் ஜெகதீஸ்வரி, சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவி வரும் தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் ஒவ்வொரு நாளும் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இந்த ஆடியோவானது ராஜபாளையம் எம்எல்ஏவாக வெற்றி பெறுவதற்கு முன்னதாக அவரிடம் பேசிய ஆடியோ என்று கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஜூன் மாதம் ராஜகுரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-inspects-the-chennai-koyambedu-sewage-treatment-plant-93848.html" target="_blank" rel="noopener">கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-bill-collector-saravanan-in-the-karaikudi-corporation-93946.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 06:58:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-bill-collector-saravanan-in-the-karaikudi-corporation-93946.html</guid>
		            
			

    	<description><![CDATA[Karaikudi Bill Collector Arrested: காரைக்குடி மாநகராட்சியில் புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக அதன் உரிமையாளரான ஒரு பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக பில் கலெக்டரை சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/bill-collector-arrest.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-high-court-quashed-government-job-appointment-orders-issued-by-the-tvk-government-regarding-the-karur-stampede-incident-93854.html" target="_blank" rel="noopener">சிவகங்கை மாவட்டம்</a>, காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சரவணன் ( 45 வயது) என்பவர் பில் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், காரைக்குடி மாநகராட்சி வார்டு 4 மற்றும் 5 மற்றும் இலுப்பக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் வரி வசூல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், பேயன்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு சொத்து வரி செலுத்துவது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் பில் கலெக்டர் சரவணனிடம் தகவல் கேட்டுள்ளார். அதற்கு, சரவணன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது, பில் கலெக்டர் சரவணன் இரு தொகையாக பிரித்து வழங்குமாறு தெரிவித்துள்ளார். இதனால், கட்டாயத்தின் பேரில் அந்த பெண் ரூ.10 ஆயிரத்தை இரு தவணைகளாக வழங்க ஒப்பு கொண்டதாக தெரிகிறது.
<h3>லஞ்ச பணத்தை தருமாறு பெண்ணை வற்புறுத்தல்</h3>
அதன்படி, முதல் கட்டமாக ரூ.6 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக அந்த பெண் செலுத்தியுள்ளார். மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தை வழங்கினால் தான் புது வீட்டுக்கான வரியை நிர்ணயம் செய்ய முடியும் என்று பில் கலெக்டர் சரவணன் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால், அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-high-court-quashed-government-job-appointment-orders-issued-by-the-tvk-government-regarding-the-karur-stampede-incident-93854.html" target="_blank" rel="noopener">கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து.. மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!</a>
<h3>பில் கலெக்டரை கைது செய்த போலீசார்</h3>
அந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ் தலைமையிலான போலீசார் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த பெண்ணிடம் அளித்து, பில் கலெக்டர் சரவணனிடம் வழங்குமாறு கூறினர். அதன்படி, அந்த பெண்ணும், சரவணனிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளார். இதனை, பில் கலெக்டர் பெற்றபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
<h3>வங்கி கணக்கு- ஆன்லைன் பரிவர்த்தனைகள் ஆய்வு</h3>
இதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பில் கலெக்டரின் வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்குடி மாநகராட்சி பொறியாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டிருந்த நிலையில், மீண்டும் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-special-sub-inspector-in-tirupattur-for-accepting-a-bribe-of-5000-93839.html" target="_blank" rel="noopener">ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்தின் வருவாயை பெருக்க மெகா பிளான்.. மான்டேக் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட அதிரடிக் குழு அமைப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/government-appointed-6-member-committee-headed-by-montek-singh-to-increase-tamil-nadu-revenue-93943.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 06:26:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/government-appointed-6-member-committee-headed-by-montek-singh-to-increase-tamil-nadu-revenue-93943.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Revenue Increase Committee Formed: தமிழகத்தின் வருவாயை பெருக்குவதற்காக பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த குழுவானது வருவாய் தொடர்பான அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/tn-govt-income.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்தின் வருவாயை பெருக்க மெகா பிளான்.. மான்டேக் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட அதிரடிக் குழு அமைப்பு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-local-body-election-postponed-due-to-extension-of-state-finance-commission-term-based-on-sources-93828.html" target="_blank" rel="noopener">தமிழகத்தின்</a> மாநில வருவாயை அதிகரிப்பதற்காக மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மான்டேக் சிங் அலுவாலியா பொருளாதார நிபுணர் ஆவார். மத்திய திட்டக் குழுவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழக அரசின் முழு நிதிநிலை அறிக்கை வருகிற ஆகஸ்ட் 5- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவானது தமிழகத்தின் வருவாய் ஆதாரங்களை பெருக்கவும், அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மான்டேக் சிங் தலைமையிலான குழு வரி மற்றும் வரியில்லா வருவாயை பெருக்குவதற்காக கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-local-body-election-postponed-due-to-extension-of-state-finance-commission-term-based-on-sources-93828.html" target="_blank" rel="noopener">தமிழக அரசுக்கு</a> வழங்கி அறிவுறுத்த உள்ளது.
<h3>3 மாதங்களில் அரசிடம் அறிக்கை சமர்பிக்க உத்தரவு</h3>
மேலும், தமிழகத்துக்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மான்டேக் தலைமையிலான குழு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த குழுவானது 3 மாதங்களுக்குள் தமிழ்நாட்டி வருவாயை பெருக்குவதற்கான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்,

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-inspects-the-chennai-koyambedu-sewage-treatment-plant-93848.html" target="_blank" rel="noopener">கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!</a>
<ul>
 	<li>கே. பி. கிருஷ்ணன்.</li>
 	<li>அரபிந்த் மோடி.</li>
 	<li>நஜிப் ஷா ( ஐ. ஆர். எஸ். ஓய்வு).</li>
 	<li>எம். ஏ. சித்திக் ஐ. ஏ. எஸ்.</li>
 	<li>சுரேஷ் பாபு ஆகியோர் அடங்குவர்.</li>
</ul>
<h3>தமிழகத்தின் மொத்த வருவாயை அதிகரிக்க</h3>
மாநிலத்தின் மொத்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அதனை மேம்படுத்துவது குறித்தும் கொள்கை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்க உள்ளது. மேலும், தமிழகத்தில் வரி ஏய்ப்பு, அரசின் நிர்வாக செயல் திறனில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள், மதுபானங்கள் மீதான ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்பு கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடர்ந்து, அதன் மூலமாக கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசுக்கு இந்த குழுவானது பரிந்துரை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/nainar-nagendran-questioned-it-is-true-that-717-tasmac-shops-have-been-closed-in-tamil-nadu-93875.html" target="_blank" rel="noopener">717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா? RTI ஆதாரத்தை கேக்கும் நயினார் நாகேந்திரன்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு, 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை &#8211; வானிலை மையம் அறிவிப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-weather-update-rain-expected-in-a-few-places-till-august-2-93942.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 06:14:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-weather-update-rain-expected-in-a-few-places-till-august-2-93942.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை 28, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 2, 2026 தேதி வரை 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/rain-alert-og-1-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு, 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை &#8211; வானிலை மையம் அறிவிப்பு" /></figure><strong>சென்னை, ஜூலை 28 :</strong> தமிழகத்தில் ஜூலை 28, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 2, 2026 தேதி வரை 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-heavy-rainfall-warning-to-many-districts-in-tamilnadu-from-today-till-2nd-august-93815.html" target="_blank" rel="noopener">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-update-moderate-rain-forecast-heatwave-12-places-century-93728.html" target="_blank" rel="noopener">சென்னை வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 31, 2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
<h3>5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு</h3>
மேலும், ஆகஸ்ட் 1, 2026 உள் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tiruvannamalai-idukku-pillaiyar-temple-new-advisory-and-restrictions-implemented-93912.html">பக்தர்கள் கவனத்திற்கு..! திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..</a></strong>
<h3>வானிலை மையத்தின் எக்ஸ் பதிவு</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான
தினசரி வானிலை அறிக்கை<a href="https://t.co/467dVuULiL">https://t.co/467dVuULiL</a> <a href="https://t.co/5grdROS0jJ">pic.twitter.com/5grdROS0jJ</a></p>
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) <a href="https://x.com/ChennaiRmc/status/2081678209490542793?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை</h3>
மேலும், தமிழகத்தில் ஜூலை 30, 2026 அன்று முதல் நீலகிரி மாவட்டத்திலும், ஜூலை 31, 2026 மற்றும் ஆகஸ்ட் 1, 2026 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த மழை எச்சரிக்கை மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ஒருசில இடங்களில் வெப்பநிலையும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையத்தின் அறிக்கையில், தமிழகத்தில் ஜூலை 28, 2026 இன்று முதல் ஜூலை 30, 2026 தேதி வரை 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/the-tamil-nadu-poultry-traders-federation-has-announced-that-broiler-chicken-sales-will-be-suspended-in-tamil-nadu-and-puducherry-starting-july-31-93846.html">சிக்கன் பிரியர்களுக்கு அதிர்ச்சி.. வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கோழ்க்கறி விற்பனை நிறுத்தம்..</a></strong>

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 28, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பால், தயிர் விலை மீண்டும் உயர்வு.. தனியார் நிறுவனங்களின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-milk-production-company-has-hiked-milk-and-curd-price-for-the-second-time-this-year-93939.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 22:43:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-milk-production-company-has-hiked-milk-and-curd-price-for-the-second-time-this-year-93939.html</guid>
		            
			

    	<description><![CDATA[Milk and Curd Price Hike: இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், குறைந்த விலையில் கிடைக்கும் ஆவின் பாலுக்கு பொதுமக்கள் அதிகளவில் மாறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/milk-curd-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பால், தயிர் விலை மீண்டும் உயர்வு.. தனியார் நிறுவனங்களின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.." /></figure><strong>ஜூலை 27, 2026:</strong> தனியார் பால் நிறுவனங்கள் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கடந்த ஓராண்டாக பால் உற்பத்தி குறைவு நிலவி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் ஆவின் பாலை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாக ஆவின் பால் விற்பனையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பலர் தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.
<h3>பால், தயிர் விலை உயர்வு:</h3>
இந்தச் சூழலில், பால் வணிகத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலை வழங்க தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. இதன் காரணமாக, நடப்பாண்டில் இரண்டாவது முறையாக தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தியுள்ளன.

அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்கரா உள்ளிட்ட நிறுவனங்கள், பால் மற்றும் தயிரின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/it-is-officially-stated-that-chief-minister-office-is-shifted-to-namakkal-kavignar-maligai-at-secretariat-93935.html">புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் முதலமைச்சர் அலுவலகம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..</a>

பால் மற்றும் தயிர் அன்றாட உணவில் முக்கிய இடம் பெறும் அத்தியாவசியப் பொருட்களாக இருப்பதால், மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
<h3>ரூ. 6 வரை உயர்த்தப்பட்ட பாலின் விலை:</h3>
பால் உற்பத்தி குறைவு, பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் விலை உயர்வு செய்யப்பட்டதாக நிறுவனங்கள் தெரிவித்தாலும், பால் முகவர்களின் கமிஷன் மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்துவதில் தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/leader-of-the-opposition-udhayanidhi-criticized-the-tvk-government-and-chief-minister-vijay-93908.html">திமுகவை பழிவாங்குவதே தவெகவின் ஒரே பணியாக உள்ளது.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!</a>

இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், குறைந்த விலையில் கிடைக்கும் ஆவின் பாலுக்கு பொதுமக்கள் அதிகளவில் மாறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் வலியுறுத்தியுள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் முதலமைச்சர் அலுவலகம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/it-is-officially-stated-that-chief-minister-office-is-shifted-to-namakkal-kavignar-maligai-at-secretariat-93935.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 22:13:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/it-is-officially-stated-that-chief-minister-office-is-shifted-to-namakkal-kavignar-maligai-at-secretariat-93935.html</guid>
		            
			

    	<description><![CDATA[தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  முதலமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதால், தற்போது அந்தத் தளத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் தற்காலிகமாக மாற்றப்படுகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/nkm.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் முதலமைச்சர் அலுவலகம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.." /></figure><strong>ஜூலை 27, 2026:</strong> தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் செயல்பட்டு வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பல்வேறு பிரிவுகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>இடமாற்றம் செய்யப்படும் முதல்வர் அலுவலகம்:</h3>
அதன்படி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் வரவு-செலவுப் பிரிவு, பொருட்காட்சி அனுமதிப் பிரிவு, முதலமைச்சரின் சமூக ஊடகப் பிரிவு (CMO Social Media), கட்டுப்பாட்டுப் பிரிவு, இயக்குநர் அருள் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்புத் துறை, செய்தித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பாஸ்கரன், இரவிச்சந்திரன், அ.வே. சுரேந்திரன், த. கலைச்செல்வன் ஆகியோரின் அலுவலகங்கள், எழுத்துப்பொருள் அறை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் உடனடியாக சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்படுகின்றன.

இந்த அலுவலகங்கள் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கின் தரைத்தளம் (500 சதுர அடி), இரண்டாவது தளம் (400 சதுர அடி), மூன்றாவது தளம் (2,000 சதுர அடி) ஆகிய காலியாக உள்ள பகுதிகளில் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், காலியாக உள்ள இடங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்குத் தேவையான இடங்களை ஒதுக்கி, அவர்கள் பணிபுரிய தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
<h3>உடனடியாக மாற்ற நடவடிக்கை:</h3>
மேலும், பொதுப்பணித் துறையின் கோட்டப் பொறியாளர், மேஜை, நாற்காலி, சோபா, கணினி, கோப்புகள் உள்ளிட்ட அனைத்து அலுவலக உபகரணங்களையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திலிருந்து சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதால், தற்போது அந்தத் தளத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் தற்காலிகமாக மாற்றப்படுகின்றன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpi-secretary-veerapandian-started-tvk-government-should-withdraw-the-government-jobs-appointment-order-in-karur-93918.html">கரூர் அரசு பணிகளை தவெக அரசு திரும்ப பெற வேண்டும்.. இந்திய கம்யூ. வீரபாண்டியன்!</a>

அதன்படி, அரசு துணைச் செயலாளர் கே. வெங்கடேசன் (உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை – குண்டர் தடுப்புக் காவல் பிரிவு) ஆகியோரின் அலுவலகம் 8-வது தளத்தில் உள்ள உணவு அருந்தும் அறை எண் 7 மற்றும் கூட்ட அரங்கத்திற்கு மாற்றப்படுகிறது.
<h3>மாற்றப்படும் அலுவலகங்களின் விவரங்கள்:</h3>
அரசு இணைச் செயலாளர் நாராயணி மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் 7-வது தள கூட்ட அரங்கத்திற்கு மாற்றப்படுகின்றன. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் துணைச் செயலாளர்கள் க. கருப்பையா, நீ. ராஜேஸ்வரி ஆகியோரின் அலுவலகங்கள் 5-வது தள கூட்ட அரங்கத்திற்கு மாற்றப்படுகின்றன. வணிகவரித்துறையின் பிரிவுகள் மற்றும் அரசு சார்புச் செயலாளர்களின் அறைகள் 5-வது தள உணவு அருந்தும் அறை எண் 1 மற்றும் முதல் தள கூட்ட அரங்கத்திற்கு மாற்றப்படுகின்றன.

மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 1, 3, 5, 7 மற்றும் 8-வது தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளை உடனடியாக பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக அகற்றியும் பாதுகாத்தும் வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/leader-of-the-opposition-udhayanidhi-criticized-the-tvk-government-and-chief-minister-vijay-93908.html">திமுகவை பழிவாங்குவதே தவெகவின் ஒரே பணியாக உள்ளது.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!</a>

பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் (கட்டடங்கள்), இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலகங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும், உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) புதிய அலுவலகங்களில் மின்சார வசதிகளை உடனடியாக ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அதேபோல், பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-II பிரிவு புதிய இடங்களில் இணைய வசதி ஏற்படுத்தவும், தொலைபேசி பிரிவு ஏற்கனவே இருந்தபடி தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கரூர் அரசு பணிகளை தவெக அரசு திரும்ப பெற வேண்டும்.. இந்திய கம்யூ. வீரபாண்டியன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpi-secretary-veerapandian-started-tvk-government-should-withdraw-the-government-jobs-appointment-order-in-karur-93918.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 21:47:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpi-secretary-veerapandian-started-tvk-government-should-withdraw-the-government-jobs-appointment-order-in-karur-93918.html</guid>
		            
			

    	<description><![CDATA[CPI Secretary Veerapandian : சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை ஏற்று கரூரில் வழங்கப்பட்ட அரசுப் பணிகளை தமிழக வெற்றிக் கழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/cpi-veerapandiyan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கரூர் அரசு பணிகளை தவெக அரசு திரும்ப பெற வேண்டும்.. இந்திய கம்யூ. வீரபாண்டியன்!" /></figure>கரூர் அரசு பணிகளை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-local-body-election-postponed-due-to-extension-of-state-finance-commission-term-based-on-sources-93828.html" target="_blank" rel="noopener">சென்னை</a> உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் வேலை கருணை அடிப்படையில் என்றாலும், இது சட்டத்துக்கு புறம்பானதாகும். அத்துடன், தவறான முன்னுதாரணம் ஆகும். எனவே, இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தரப்பினராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த எதிர்ப்பை தமிழக வெற்றிக் கழக அரசு கவனத்தில் கொள்ளாமல் மேற்கண்ட 31 பேருக்கு அரசு வேலையை வழங்கி இருந்தது. தற்போது, அந்த அரசு பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
<h3>அரசு பணிகளை தவெக அரசு திரும்ப பெற வேண்டும்</h3>
எனவே, மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அரசு பணி வழங்கியதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதே வேளையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தேவையான வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார உதவிகளை தமிழக வெற்றி கழகம் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-local-body-election-postponed-due-to-extension-of-state-finance-commission-term-based-on-sources-93828.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில் இந்தாண்டும் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியமில்லை? ஏன் இந்த தாமதம்!</a>
<h3>அரசு பணி வழங்கலுக்கு எதிராக வழக்கு தாக்கல்</h3>
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு தமிழக முதல்வர் கடந்த ஜூலை 10- ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலையிலான பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
<h3>அரசு பணி ஆணைகளை ரத்து செய்த நீதிமன்றம்</h3>
அப்போது, வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சாதாரண அரசு பணி என்றாலும் அது பணி ஆகும். தமிழகத்தில் அரசு பேருந்து விபத்து, சிவகாசி வெடி விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியதுடன், கரூரில் அரசு பணி வழங்கியதற்கான ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-corporation-mayor-r-priya-complaint-lodged-with-police-commissioner-amalraj-regarding-harassment-93824.html" target="_blank" rel="noopener">சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுகவை பழிவாங்குவதே தவெகவின் ஒரே பணியாக உள்ளது.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/leader-of-the-opposition-udhayanidhi-criticized-the-tvk-government-and-chief-minister-vijay-93908.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 20:52:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/leader-of-the-opposition-udhayanidhi-criticized-the-tvk-government-and-chief-minister-vijay-93908.html</guid>
		            
			

    	<description><![CDATA[Udhayanidhi criticized TVK government: திமுகவை பழிவாங்குவதே தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே வேலையாக இருப்பதாக முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்க் கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/vijay-udayanidhi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுகவை பழிவாங்குவதே தவெகவின் ஒரே பணியாக உள்ளது.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-special-sub-inspector-in-tirupattur-for-accepting-a-bribe-of-5000-93839.html" target="_blank" rel="noopener">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விராலிமலை தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மார்க்கண்டேயன் எம். எல். ஏ. வை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்திருந்தனர். அவரை முன்னாள் துணை முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருந்தார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசை தவறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து மிரட்டும் வகையில் திராவிட முன்னேற்ற கழக எம்எல்ஏ மார்க்கண்டயனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர், சிறையில் தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறார்.
<h3>திமுகவை பழி வாங்குவதே தவெக அரசின் ஒரே பணி</h3>
திராவிட முன்னேற்ற கழகத்தை பழிவாங்குவது தான் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் ஒரே பணியாக இருக்கிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்தவர்களே பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர். அந்த புகாரின் மீது தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. திராவிட முன்னேற்ற கழக எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக எம்எல்ஏக்களை ஷோபா கொடுத்து வாங்கும் பணிகளை தான் தமிழக வெற்றிக் கழகம் 24 மணி நேரமும் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-special-sub-inspector-in-tirupattur-for-accepting-a-bribe-of-5000-93839.html" target="_blank" rel="noopener">ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!</a>
<h3>திமுக கூட்டணி கட்சிகளுக்கு சோபா செட்டுகள்</h3>
தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களை தங்களது கூட்டணியில் இணைத்தது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி, சி.வி சண்முகம் தலைமையிலான குழுவினர், இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் சோபாக்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை மையமாக வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் சோபா செட்டுகள் வழங்கி அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
<h3>முதல்வரை மிரட்டல் விடுத்ததாக எம்எல்ஏ கைது</h3>
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை எலும்பை முறிப்பேன் என்று விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/nainar-nagendran-questioned-it-is-true-that-717-tasmac-shops-have-been-closed-in-tamil-nadu-93875.html" target="_blank" rel="noopener">717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா? RTI ஆதாரத்தை கேக்கும் நயினார் நாகேந்திரன்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பக்தர்கள் கவனத்திற்கு..! திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tiruvannamalai-idukku-pillaiyar-temple-new-advisory-and-restrictions-implemented-93912.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 20:38:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tiruvannamalai-idukku-pillaiyar-temple-new-advisory-and-restrictions-implemented-93912.html</guid>
		            
			

    	<description><![CDATA[புதிய அறிவிப்பின்படி, உடல் பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் இடுக்குப் பிள்ளையார் கோயிலின் குறுகலான பாதைக்குள் சென்று வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/idukku-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பக்தர்கள் கவனத்திற்கு..! திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.." /></figure><strong>ஜூலை 27, 2026:</strong> திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருணகிரி இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இந்தக் கோயில், சிறிய குகை போன்ற தோற்றத்தில் உள்ளது. பக்தர்கள் அதன் குறுகிய பாதை வழியாக உள்ளே நுழைந்து, மறுபுறம் வெளியே வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால், இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள்.
<h3>இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு சென்ற பக்தர் உயிரிழப்பு:</h3>
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். அப்போது, இடுக்குப் பிள்ளையார் கோயிலின் குறுகிய குகைக்குள் நுழைந்து வெளியே வர முயன்றபோது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட பக்தர்கள் அவரை உடனடியாக வெளியே மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/nainar-nagendran-questioned-it-is-true-that-717-tasmac-shops-have-been-closed-in-tamil-nadu-93875.html"> 717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா? RTI ஆதாரத்தை கேக்கும் நயினார் நாகேந்திரன்!</a>

இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
<h3>வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு:</h3>
இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலான அமைப்பைக் கொண்டுள்ளதால், அங்கு செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாவதைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, உடல் பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் இடுக்குப் பிள்ளையார் கோயிலின் குறுகலான பாதைக்குள் சென்று வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/karur-government-appointments-cancellation-appeal-would-be-filed-supreme-court-says-ctr-nirmal-kumar-93866.html">கரூர் அரசுப் பணி ரத்து உத்தரவு.. உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு.. நாளை மேல்முறையீடு செய்ய திட்டம்!</a>

பக்தர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா? RTI ஆதாரத்தை கேக்கும் நயினார் நாகேந்திரன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/nainar-nagendran-questioned-it-is-true-that-717-tasmac-shops-have-been-closed-in-tamil-nadu-93875.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 19:57:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/nainar-nagendran-questioned-it-is-true-that-717-tasmac-shops-have-been-closed-in-tamil-nadu-93875.html</guid>
		            
			

    	<description><![CDATA[Nainar Nagendran Questioned TASMAC Shops Closed: தமிழகத்தில் உண்ணையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா, அது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/nainar-nagendran-tvk-temple-land-scam-karur.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா? RTI ஆதாரத்தை கேக்கும் நயினார் நாகேந்திரன்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/metro-rail-corridor-in-chennai-extended-to-chengalpattu-and-wimco-nagar-93807.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டனவா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடி விட்டதாக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முகவரிகள் உள்ளிட்ட விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தற்போது வரை வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் மூடப்பட்டதாக கூறப்படும் டாஸ்மாக் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் இல்லை. ஜோசப் விஜய் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பான கேள்விக்கான பதிலையும் தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது வரை தெரிவிக்கவில்லை.
<h3>மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்த விவரம்</h3>
தமிழகத்தில், மொத்தத்தில் மூடப்பட்டதாக கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எந்த தகவல் கேட்டாலும் அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்ற ஒரே பதில் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இருந்து வருகிறது. குறிப்பிட்ட மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களிடம் தரவுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒன்றாக சேர்த்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மக்களின் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/metro-rail-corridor-in-chennai-extended-to-chengalpattu-and-wimco-nagar-93807.html" target="_blank" rel="noopener">சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி… விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?</a>
<h3>டாஸ்மாக் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக</h3>
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தற்போது வரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்கள் மற்றும் முகவரிகள், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று பணிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும். இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு தமிழக வெற்றிக் கழக அரசு எதற்காக தயங்குகிறது. உண்மையிலேயே தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக அரசு இந்த புரளியை கிளப்பியதா என்பன உள்ளிட்ட மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.
<h3>வெட்டி வசனம்- வீண் விளம்பரம் கதைக்கு ஆகாது</h3>
வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்கு ஆகாது என்று அதில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்ற சிறிது நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றின் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-local-body-election-postponed-due-to-extension-of-state-finance-commission-term-based-on-sources-93828.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில் இந்தாண்டும் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியமில்லை? ஏன் இந்த தாமதம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கரூர் அரசுப் பணி ரத்து உத்தரவு.. உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு.. நாளை மேல்முறையீடு செய்ய திட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/karur-government-appointments-cancellation-appeal-would-be-filed-supreme-court-says-ctr-nirmal-kumar-93866.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 18:25:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/karur-government-appointments-cancellation-appeal-would-be-filed-supreme-court-says-ctr-nirmal-kumar-93866.html</guid>
		            
			

    	<description><![CDATA[Karur Government Appointments Cancellation: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ரத்து உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/karur-job-suprime-court.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கரூர் அரசுப் பணி ரத்து உத்தரவு.. உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு.. நாளை மேல்முறையீடு செய்ய திட்டம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-high-court-quashed-government-job-appointment-orders-issued-by-the-tvk-government-regarding-the-karur-stampede-incident-93854.html" target="_blank" rel="noopener">கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்</a> மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில், 31 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் அரசுப் பணி வழங்கி இருந்தார். இந்த பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலையில் உள்ள பணி இடங்கள் ஆகும். இந்த பணி நியமனங்களை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேட ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கிய அனைத்து அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும், இது தொடர்பாக இன்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் குறிப்பிட்டுள்ளார்.
<h3>அரசு பணி வழங்கிய விவகாரத்தில் நீதிமன்றம் கருத்து</h3>
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் வழங்கியிருந்தார். இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதில், சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அப்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க முடியுமா. கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றால், அவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து உதவி செய்யலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-inspects-the-chennai-koyambedu-sewage-treatment-plant-93848.html" target="_blank" rel="noopener">கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!</a>
<h3>ஜூலை 10 ஆம் தேதி பணி ஆணைகள் வழங்கல்</h3>
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கடந்த ஜூலை 10- ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் கரூர் சென்றிருந்தார். அங்கு, அரசு நிகழ்ச்சியாக நடைபெற்ற நிகழ்வில் 31 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கி இருந்தார். ஒருவருக்கு மட்டும் அரசு பணி வழங்க முடியாத சில காரணங்களால் ரூ.10 லட்சத்தை உதவித் தொகையாக முதல்வர் வழங்கி இருந்தார்.
<h3>பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு</h3>
அப்போதே, அரசு பணி வழங்கியதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. இதை போல, அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர். தற்போது, அந்த பணி நியமன ஆணைகளை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்கும் பட்சத்தில், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் தெரியவரும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-high-court-quashed-government-job-appointment-orders-issued-by-the-tvk-government-regarding-the-karur-stampede-incident-93854.html" target="_blank" rel="noopener">கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து.. மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து.. மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-high-court-quashed-government-job-appointment-orders-issued-by-the-tvk-government-regarding-the-karur-stampede-incident-93854.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 17:23:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-high-court-quashed-government-job-appointment-orders-issued-by-the-tvk-government-regarding-the-karur-stampede-incident-93854.html</guid>
		            
			

    	<description><![CDATA[Karur Govet Job Order Cancelled : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணைகளை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது. இதில், நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/govt-job-order-cancelled.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து.. மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!" /></figure>கரூரில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-inspects-the-chennai-koyambedu-sewage-treatment-plant-93848.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழக</a>த்தின் தலைவரும், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-inspects-the-chennai-koyambedu-sewage-treatment-plant-93848.html" target="_blank" rel="noopener">முதல்வருமான ஜோசப் விஜய்</a> மேற்கொண்டிருந்த பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பணிகளுக்கான ஆணைகளை வழங்கி இருந்தனர். இந்த பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலையில் உள்ள பணிகள் ஆகும். இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வீரன் திருமுருகன் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி அகமது, வேடசந்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று திங்கள்கிழமை ( ஜூலை 27) நடைபெற்றது. மனுக்களை விசாரித்த நீதிபதி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
<h3>அரசுப் பணி விவகாரத்தில் நீதிபதிகள் காட்டமான கேள்வி</h3>
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதில், அரசு தரப்பில் சாதாரணமாக பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த பணியும் சாதாரண பணி கிடையாது, அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணி ஆகும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்குவது என்றால் அரசு பேருந்து விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகள் வழங்க முடியுமா. இதே போல, சிவகாசியில் அடிக்கடி விடுவிபத்து சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.  அவர்களுக்கு அரசு பணி வழங்க கோரினால் என்ன செய்வது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-corporation-mayor-r-priya-complaint-lodged-with-police-commissioner-amalraj-regarding-harassment-93824.html" target="_blank" rel="noopener">சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!</a>
<h3>அனைவருக்கும் அரசுப் பணி வழங்க முடியுமா</h3>
தமிழகத்தில் இது போன்று பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவர்களுக்கெல்லாம் அரசு பணி வழங்க முடியுமா என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதி எழுப்பி இருந்தார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்கு பதிலாக திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு உதவலாம் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அரசுப் பணிக்கான ஆணைகள் அனைத்தையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
<h3>முதல் ஊதியம் வாங்குவதற்கு முன்னதாக தீர்ப்பு</h3>
அரசு பணி ஆணைகளை முதல்வர் வழங்கிய நாளன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றிருந்தது. அப்போது, பணி நியமன ஆணைகள் பெற்றவர்கள் முதல் ஊதியம் பெறுவதற்கு முன்னதாகவே இந்த வழக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/metro-rail-corridor-in-chennai-extended-to-chengalpattu-and-wimco-nagar-93807.html" target="_blank" rel="noopener">சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி… விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சிக்கன் பிரியர்களுக்கு அதிர்ச்சி.. வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கோழ்க்கறி விற்பனை நிறுத்தம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/the-tamil-nadu-poultry-traders-federation-has-announced-that-broiler-chicken-sales-will-be-suspended-in-tamil-nadu-and-puducherry-starting-july-31-93846.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 17:16:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/the-tamil-nadu-poultry-traders-federation-has-announced-that-broiler-chicken-sales-will-be-suspended-in-tamil-nadu-and-puducherry-starting-july-31-93846.html</guid>
		            
			

    	<description><![CDATA[கறிக்கோழிகளுக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை உற்பத்தியாளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 31ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/broler-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சிக்கன் பிரியர்களுக்கு அதிர்ச்சி.. வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கோழ்க்கறி விற்பனை நிறுத்தம்.." /></figure><strong>ஜலை 27, 2026:</strong> வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை செய்யப்படாது என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 60,000 கறிக்கோழி இறைச்சிக் கடைகள் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறிக்கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனம் தொடர்பான கட்டுப்பாட்டு நெறிமுறைகள் முறையாகச் செயல்படுத்தப்படாததை கண்டித்து, ஜூலை 31ஆம் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கோழி வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
<h3>தீவன கட்டுப்பாடு நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்:</h3>
தஞ்சாவூரில் நடைபெற்ற கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், தமிழகம் முழுவதிலுமிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கறிக்கோழிகளுக்கு தீவனம் வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகளுக்கும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-local-body-election-postponed-due-to-extension-of-state-finance-commission-term-based-on-sources-93828.html">தமிழகத்தில் இந்தாண்டும் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியமில்லை? ஏன் இந்த தாமதம்!</a>

மேலும், கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
<h3>ஜூலை 31ஆம் தேதி முதல் கோழிக்கறி விற்பனை நிறுத்தம்:</h3>
விற்பனைக்கு முன்பு கோழிகளுக்கு தீவனம் வழங்குவதால் அவற்றின் எடை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் கோழிகளின் உடலில் தீவனம் தங்கி அஜீரணம் மற்றும் கழிவுகள் வெளியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுவதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/palani-dandayuthapani-land-irregularity-case-cbcid-police-question-sub-registrar-93835.html">பழனி நில முறைகேடு வழக்கு.. சஸ்பெண்ட் சார்-பதிவாளரிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை!</a>

இந்த நெறிமுறைகளை உற்பத்தியாளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 31ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-special-sub-inspector-in-tirupattur-for-accepting-a-bribe-of-5000-93839.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 17:13:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/anti-corruption-police-arrested-special-sub-inspector-in-tirupattur-for-accepting-a-bribe-of-5000-93839.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tirupattur Anti Corruption Police Arrested SSI: திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்ச வாங்கியதாக ஆலாங்காயம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/ssi-arrestt.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-central-college-students-fight-pachaiyappa-college-students-attacked-93801.html" target="_blank" rel="noopener">திருப்பத்தூர்</a> மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஆலாங்காயம் பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என சுமார் 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு, ராமகிருஷ்ணன் என்பவர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் லஞ்சம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்துக்கு புகார் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலாங்காயம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வாகன விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. விபத்தில் சிக்கிய அந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆலாங்காயம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
<h3>விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க லஞ்சம்</h3>
அந்த வாகனத்தின் உரிமையாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையம் சென்று தனது வாகனத்தை விடுவிக்குமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது, அவரிடம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் திருப்பத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், போலீசார் சம்பந்தப்பட்ட ஆலாங்காயம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கண்காணித்து வந்துள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-central-college-students-fight-pachaiyappa-college-students-attacked-93801.html" target="_blank" rel="noopener">சென்னையில் பயங்கரம்.. கத்திகளுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.. 2 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம்</a>
<h3>ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற எஸ்எஸ்ஐ கைது</h3>
அதன்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை விடுவிப்பதற்காக அதன் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை, அங்கு மறைந்து இருந்து கண்காணித்து வந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக அதிரடியாக கைது செய்தனர்.
<h3>ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு</h3>
இதை தொடர்ந்து, அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cmda-rule-change-17-high-rise-buildings-approved-in-one-month-chennai-93805.html" target="_blank" rel="noopener">CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-inspects-the-chennai-koyambedu-sewage-treatment-plant-93848.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 17:08:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-inspects-the-chennai-koyambedu-sewage-treatment-plant-93848.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chief Minister Joseph Vijay Inspect : சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, அதிகாரிகளிடம் கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக கேட்டறிந்தார் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/cm-inspect.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!" /></figure>சென்னை மாவட்டம், கோயம்பேட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-high-court-quashed-government-job-appointment-orders-issued-by-the-tvk-government-regarding-the-karur-stampede-incident-93854.html" target="_blank" rel="noopener">முதல் அமைச்சர் ஜோசப் விஜய்</a> எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இன்று திங்கள்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டார். இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையானது சுமார் 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அண்மையில், முதல்வர் விஜய் நகர்ப்புற கட்டமைப்பு, நீர் மேலாண்மை திட்ட பணிகள் விரிவு படுத்துவது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடிய நீர் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கோயம்பேட்டில் 45 எம். எல். டி. திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
<h3>கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்</h3>
இந்த நிலையமானது சென்னை மாநகரத்தின் நீர் தேவையை சமாளிப்பதற்காக இந்த தொழில்நுட்பத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக முதல்வரின் இந்த ஆய்வின் போது, விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 45 எம் எல் டி திறன் கொண்ட ஆலையை 100 எம்எல்டி திறன் கொண்ட ஆலையாக மாற்றுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்ததன் அடிப்படையிலும், இந்த ஆலையின் திறனை மேம்படுத்துவதும், அதன் அருகிலேயே அடுத்த கட்ட பணிகளை தொடங்குவது குறித்தும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரிடம் அவர்கள் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-high-court-quashed-government-job-appointment-orders-issued-by-the-tvk-government-regarding-the-karur-stampede-incident-93854.html" target="_blank" rel="noopener">கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து!</a>
<h3>கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆய்வு</h3>
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராகும் திட்டம் குறித்து ஆய்வு செய்திருந்தார். அப்போது இந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார். மேலும், பல்வேறு அறிவுறுத்தல்களை துறை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.இதே போல, சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
<h3>கட்டணம் அடிப்படையில் நீர் விநியோகம்</h3>
இந்த ஆய்வை தொடர்ந்து, மாணவர்கள் தெரிவித்த புகார்கள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக சரி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில், தற்போது கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு நடத்தியுள்ளார். இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர்கள் அனைத்தும் அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கட்டணத்தின் அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/karur-government-appointments-cancellation-appeal-would-be-filed-supreme-court-says-ctr-nirmal-kumar-93866.html" target="_blank" rel="noopener">கரூர் அரசு பணி ரத்து உத்தரவு… உச்சநீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய திட்டம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பழனி நில முறைகேடு வழக்கு.. சஸ்பெண்ட் சார்-பதிவாளரிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/palani-dandayuthapani-land-irregularity-case-cbcid-police-question-sub-registrar-93835.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 16:36:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/palani-dandayuthapani-land-irregularity-case-cbcid-police-question-sub-registrar-93835.html</guid>
		            
			

    	<description><![CDATA[Palani Sub Registrar CBCID Question : பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான போலீசார் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/palani-sub-registrar.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பழனி நில முறைகேடு வழக்கு.. சஸ்பெண்ட் சார்-பதிவாளரிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/airport-will-be-soon-open-in-vellore-says-union-minister-l-murugan-93741.html" target="_blank" rel="noopener">திண்டுக்கல்</a> மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து. ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி போலீசார் இன்று திங்கள்கிழமை ( ஜூலை 27- ஆம் தேதி) அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
<h3>சார் பதிவாளரிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை</h3>
இதற்காக அவருக்கு சி. பி. சி. டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில், அவர் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான நிலையில், அவரிடம் கோவில் நில மோசடி தொடர்பாகவும், பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாகவும் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையானது சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதே போல, இந்த வழக்கில் தொடர்புடையவர்களான நிலத்தை விற்றவர், வாங்கியவர் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/airport-will-be-soon-open-in-vellore-says-union-minister-l-murugan-93741.html" target="_blank" rel="noopener">வேலூரில் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!</a>
<h3>பழனி நில முறைகேடு சம்பவத்தின் பின்னணி</h3>
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை கோவில் அறக்கட்டளை உறுப்பினரான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான முருகதாஸ் என்பவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளதுரை, பழனியை சேர்ந்த சேதுபதி ஆகியோருக்கு ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்திருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், கோவில் நிர்வாகம் தரப்பில் பழனி அடிவார காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
<h3>வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற காரணம்</h3>
இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அத்துடன், இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, சிபிசிஐடி விசாரணையில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/ias-sagayam-trichy-east-byelection-contest-tnpsc-group1-speech-tirunelveli-93758.html" target="_blank" rel="noopener">திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?.. தெளிவுபடுத்திய சகாயம் ஐ.ஏ.எஸ்!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்தில் இந்தாண்டும் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியமில்லை? ஏன் இந்த தாமதம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-local-body-election-postponed-due-to-extension-of-state-finance-commission-term-based-on-sources-93828.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 16:03:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-local-body-election-postponed-due-to-extension-of-state-finance-commission-term-based-on-sources-93828.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Local Body Election: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாநில நிதிக்குழுவின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/election.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்தில் இந்தாண்டும் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியமில்லை? ஏன் இந்த தாமதம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/business/scanning-face-facility-will-be-available-in-ration-shops-says-minister-venkataramanan-93735.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சுமார் 27 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த 2025- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக சுமார் 92 ஆயிரம் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. இதில், ஊரக உள்ளாட்சி பணிகளை கவனிப்பதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இதனால், தமிழகத்தில் கடந்த 1.5 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பதவிகளை கைப்பற்ற தவெக திட்டமிட்டது.
<h3>2027- க்கு தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்</h3>
ஆனால், தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கையின் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு 2027- ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்க வேண்டும். இதற்காக 7- ஆவது மாநில நிதி குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-minister-maria-wilson-speech-sekar-babu-corruption-list-93744.html" target="_blank" rel="noopener">“பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு”.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!</a>
<h3>மாநில நிதிக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு</h3>
இதனால், முன்னதாக அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில நிதிக்குழுவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது தாமதம் ஆகும் நிலை உருவாகி உள்ளது. இது மட்டும் இன்றி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யும் பணிகளும் நிலுவையில் இருந்து வருகிறது.
<h3>உள்ளாட்சி பதவிகளில் பெரும்பாலும் திமுக-அதிமுக</h3>
இந்த பணிகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் சூழல் நிலை இருந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று பரவலாக கூறப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்திருந்தாலும் உள்ளாட்சி பதவிகளில் பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுகவினர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தேர்தலை நடத்தி பதவிகளை தன்வசப்படுத்த தவெக திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தல் தள்ளிபோகும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-agriculture-budget-2026-farmers-consultation-meeting-ten-ministers-participate-93782.html" target="_blank" rel="noopener">வேளாண் பட்ஜெட் 2026.. பச்சைத் துண்டுடன் களமிறங்கிய 10 அமைச்சர்கள்.. விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆகஸ்ட் மாதம் முதல் வரப்போகும் முக்கிய மாற்றம்.. விரைவு ரயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டம்.. என்ன காரணம்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/as-a-part-of-renovation-work-in-egmore-railway-station-express-train-sevice-changed-to-tambaram-railway-station-93826.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 15:48:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/as-a-part-of-renovation-work-in-egmore-railway-station-express-train-sevice-changed-to-tambaram-railway-station-93826.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்தப் பணிகள் நடைபெறும் காலத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்காமல் இருக்க, ரயில் இயக்கத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் சில விரைவு ரயில்களை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/egmore-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆகஸ்ட் மாதம் முதல் வரப்போகும் முக்கிய மாற்றம்.. விரைவு ரயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டம்.. என்ன காரணம்?" /></figure><strong>ஜூலை 27, 2026:</strong> ஆகஸ்ட் மாதம் முதல், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமேம்பாலப் பணிகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் இங்கிருந்து தொடங்குகின்றன.

எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் மட்டுமல்லாமல், மின்சார ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்குதல், புதிய வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
<h3>ரூ. 840 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள்:</h3>
இந்தப் பணிகளின்போது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, ஒரு சில ரயில் சேவைகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.840 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் வகையில், ஐந்து கட்டங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-heavy-rainfall-warning-to-many-districts-in-tamilnadu-from-today-till-2nd-august-93815.html">ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. எத்தனை மாவட்டங்களில் கனமழை இருக்கும்?</a>

இதன் ஒரு பகுதியாக, நடைமேடைகள், பிரம்மாண்ட நடைமேம்பாலங்கள், பயணிகள் காத்திருக்கும் பகுதிகள், ஓய்வறைகள், உணவகங்கள், வணிகப் பகுதிகள், எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
<h3>எழும்பூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம்:</h3>
இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்காக அவ்வப்போது ரயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமாகும். இந்தச் சூழலில், மூன்றாவது கட்டமாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

500 டன்களுக்கும் அதிகமான எடையைத் தாங்கக்கூடிய கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு, இந்த இரும்புப் பாலம் நிறுவப்பட்டு வருகிறது. தற்போது காந்தி இர்வின் சாலையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரும் வழித்தடத்தின் முதல் ஐந்து நடைமேடைகளில் இரும்புப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/metro-rail-corridor-in-chennai-extended-to-chengalpattu-and-wimco-nagar-93807.html">சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி… விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?</a>

புறநகர் மின்சார ரயில்கள் செல்லும் 10 மற்றும் 11ஆவது நடைமேடைகள் வரையிலான இரும்புப் பாலம் அமைக்கும் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளன.
<h3>தாம்பரத்தில் இருந்து விரைவு ரயில்கள் இயக்க திட்டம்:</h3>
இந்தப் பணிகள் நடைபெறும் காலத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்காமல் இருக்க, ரயில் இயக்கத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் சில விரைவு ரயில்களை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சில ரயில்களின் தொடக்க நிலையம் தாம்பரத்திற்கு மாற்றப்பட உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-corporation-mayor-r-priya-complaint-lodged-with-police-commissioner-amalraj-regarding-harassment-93824.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 15:26:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-corporation-mayor-r-priya-complaint-lodged-with-police-commissioner-amalraj-regarding-harassment-93824.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chennai Corporation Mayor R. Priya : சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனக்கு அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவாதாக தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/mayor-r-priya.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/business/scanning-face-facility-will-be-available-in-ration-shops-says-minister-venkataramanan-93735.html" target="_blank" rel="noopener">பெருநகர சென்னை மாநகராட்சியின்</a> மேயராக இருந்து வருபவர் ஆர். பிரியா. இவர், சென்னை, வேப்பேரியில் செயல்பட்டு வரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் அமல்ராஜை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னை பற்றி புகைப்படத்துடன் அவதூறாக சித்தரித்து பரப்புவதாகவும், அத்துடன் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொல்லை கொடுப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
<h3>வாட்ஸ் ஆப் - சமூக வலைதளங்களில் தொல்லை</h3>
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு அடையாளம் தெரியாத நபர் சமூக வலைதளங்களில் அவதூரமான கருத்துக்களை பரப்புவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேயர் பிரியாவுக்கு கடந்த சில நாட்களாக அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை அவதூறு பரப்பும் வகையில் சித்தரித்து சமூக வலைதளங்கள் மற்றும் அவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், மேயர் பிரியாவின் அலுவலக எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/airport-will-be-soon-open-in-vellore-says-union-minister-l-murugan-93741.html" target="_blank" rel="noopener">வேலூரில் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!</a>
<h3>ஆவணங்களுடன் புகார் அளிப்பு</h3>
அதன் அடிப்படையிலேயே, சென்னை மேயர் பிரியா சென்னை காவல் ஆணையரத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனுவுடன் சித்தரிக்கப்பட்ட பிரியாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபரின் செல்போன் எண் உள்ளிட்ட ஆவணங்களையும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் தற்போதைய மேயராக இருந்து வரும் பிரியா 49- ஆவது மேயர் அவர். இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்.
<h3>யார் இந்த மேயர் ஆர். பிரியா</h3>
கடந்த 2022- ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகரில் உள்ள 74- ஆவது கோட்டத்தில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியின் 49- ஆவது மேயராக ஆர். பிரியா பதவி ஏற்றார். சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் மே பதவியை பிடித்த முதல் தலித் பெண் மற்றும் இளைய வயது மேயர் என்ற பெருமையை ஆர். பிரியா பெற்றுள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-heavy-rainfall-warning-to-many-districts-in-tamilnadu-from-today-till-2nd-august-93815.html" target="_blank" rel="noopener">ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. எத்தனை மாவட்டங்களில் கனமழை இருக்கும்?</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. எத்தனை மாவட்டங்களில் கனமழை இருக்கும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-heavy-rainfall-warning-to-many-districts-in-tamilnadu-from-today-till-2nd-august-93815.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 14:57:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-heavy-rainfall-warning-to-many-districts-in-tamilnadu-from-today-till-2nd-august-93815.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, வட கடலோரத் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/july-27-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. எத்தனை மாவட்டங்களில் கனமழை இருக்கும்?" /></figure><strong>ஜூலை 27, 2026:</strong> தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும், இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாகப் பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
<h3>சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:</h3>
சென்னையைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வெயில் ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, வட கடலோரத் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cmda-rule-change-17-high-rise-buildings-approved-in-one-month-chennai-93805.html">CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!</a>
<h3>ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்:</h3>
அதனைத் தொடர்ந்து, ஜூலை 28 மற்றும் 29ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 30ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிதமான மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/metro-rail-corridor-in-chennai-extended-to-chengalpattu-and-wimco-nagar-93807.html">சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி… விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?</a>

ஜூலை 31ஆம் தேதியைப் பொறுத்தவரையில், கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை ஆகஸ்ட் 3ஆம் தேதியும் தொடரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி&#8230; விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/metro-rail-corridor-in-chennai-extended-to-chengalpattu-and-wimco-nagar-93807.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 14:35:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/metro-rail-corridor-in-chennai-extended-to-chengalpattu-and-wimco-nagar-93807.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chennai Metro Rail Corridor Extended: சென்னையில் கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரையும், அசிசி நகர் முதல் விம்கோ நகர் வரையும் மெட்ரோ ரயில் சேவை வழித்தடம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/metro-fine.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி&#8230; விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-central-college-students-fight-pachaiyappa-college-students-attacked-93801.html" target="_blank" rel="noopener">சென்னை மாவட்டத்தில்</a> பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தற்போது 2- ஆவது கட்ட விரிவாக்கத்தின்படி, தெற்கு பகுதியில் செங்கல்பட்டு வரையும், வடபகுதியில் விம்கோ நகருக்கு வழித்தடம் 5 வரையிலும் மெட்ரோ வழி தடம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான 2 விரிவான திட்ட அறிக்கைகளுக்காக டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆய்வுகளில் பெரியதாக வழித்தடம் 1 ( முதலாவது கட்டம்) திட்டத்தின் கீழ், திட்டமிடப்பட்ட கிளாம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை செங்கல்பட்டு வரை சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக சி.எம்.ஆர்.எல். நிறுவனம் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் இந்த ஒப்பந்த புள்ளியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
<h3>விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை</h3>
இதற்காக முன்மொழிக்கப்பட்ட இந்த வழித்தடம், சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தும். இந்த திட்டத்துக்காக சி. எம். ஆர். எல். நிறுவனம் கடந்த 2025- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில அரசிடம் ஒரு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ரூ.9,335 கோடி மதிப்பீட்டில் ஒரு மேம்பால சாலையும் அமைய உள்ளது. சுமார் 15.46 கிலோ மீட்டர் தொலைவு உள்ள உயர்மட்ட வழித்தடம் மற்றும் 13 நிறுத்தங்கள் வழியாக சென்னை விமான நிலையத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-central-college-students-fight-pachaiyappa-college-students-attacked-93801.html" target="_blank" rel="noopener">சென்னையில் பயங்கரம்.. கத்திகளுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.. 2 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம்</a>
<h3>அசிசி நகர் முதல் விம்கோ நகர் வரை</h3>
இந்த திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து அனுமதி கோரப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரூ.88 லட்சம் மதிப்பிலான 2- ஆவது டெண்டர் வட சென்னையில் உள்ள அசிசி நகரில் இருந்து விம்கோ நகர் வரை செல்லும் காரிடார் 5 (2- ஆம் கட்டம்) இன் 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. தற்போது உள்ள விம்கோ நகர் மெட்ரோ நிலையத்துடன் இணைப்பதன் மூலம், நகரின் வடக்கு பகுதியில் மெட்ரோ இணைப்பை வலுப்படுத்துவதே இந்த நீட்டி பின் நோக்கம் என்று மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
<h3>மெட்ரோ விரிவாக்க பணிகள் 4 மாதங்களில் முடிக்க திட்டம்</h3>
வட சென்னையில் உள்ள விம்கோ நகர், புறநகர், பிராந்திய மற்றும் நகர்ப்புற போக்குவரத்தை ஒரே முனையத்தில் ஒருங்கிணைக்கும் திட்டங்களில் இந்திய ரயில்வே, சென்னை மெட்ரோ மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இணைந்து செயல்படுவதால் ஒரு போக்குவரத்து பரிமாற்றம் மையமாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 2 விரிவான திட்ட அறிக்கைகளும் 4 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cmda-rule-change-17-high-rise-buildings-approved-in-one-month-chennai-93805.html" target="_blank" rel="noopener">CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cmda-rule-change-17-high-rise-buildings-approved-in-one-month-chennai-93805.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 14:01:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Baskar P]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cmda-rule-change-17-high-rise-buildings-approved-in-one-month-chennai-93805.html</guid>
		            
			

    	<description><![CDATA[CMDA New Rules Approval Speed Up: CMDA-வில் அமைச்சரின் ஒப்புதல் தேவையில்லை என்ற புதிய அரசாணை அமலுக்கு வந்த ஒரே மாதத்தில், 17 உயரமான கட்டடத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு முழுவதற்கும் வழங்கப்பட்ட மொத்த ஒப்புதல்களின் எண்ணிக்கைக்குச் சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/cmda.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!" /></figure><strong>சென்னை, ஜூலை 27:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-central-college-students-fight-pachaiyappa-college-students-attacked-93801.html" target="_blank" rel="noopener">சென்னை</a> பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) கட்டட ஒப்புதல் முறைகளில் கொண்டு வரப்பட்ட அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 17 உயரமான கட்டடத் திட்டங்களுக்கு CMDA நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது, கடந்த 2024-ஆம் ஆண்டு முழுவதற்கும் வழங்கப்பட்ட மொத்த ஒப்புதல்களின் எண்ணிக்கைக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/legislative-assembly-secretary-santhi-writes-to-edappadi-regarding-four-former-aiadmk-mlas-93606.html" target="_blank" rel="noopener">அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!</a></strong>
<h3>கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரம்:</h3>
கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் உயரமான கட்டட திட்டங்களுக்கான ஒப்புதல் அளிப்பதில் பெரும் தொய்வு நிலவி வந்தது. CMDA வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 2021ல் 66 கட்டடங்களுக்கு ஒப்புதல், 2022ல் 58 கட்டடங்களுக்கு ஒப்புதல், 2023ல் 30 கட்டடங்களுக்கு ஒப்புதல், 2024ல் 17 கட்டடங்களுக்கு ஒப்புதல், 2025ல் வெறும் 9 கட்டடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் பல விண்ணப்பங்கள் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டு ஒப்புதலுக்காகக் காத்திருந்தன.
<h3>முந்தைய நடைமுறையும் 'பார்ட்டி ஃபண்ட்' புகார்களும்:</h3>
முந்தைய நடைமுறையின்படி, 18.3 மீட்டருக்கு மேல் உயரமுள்ள கட்டடத் திட்டங்கள் CMDA உறுப்பினர் செயலர் தலைமையிலான குழுவால் முதலில் பரிசீலிக்கப்படும். அதன்பின்னர், இறுதி ஒப்புதலுக்காக CMDA தலைவரான வீட்டுவசதித் துறை அமைச்சரின் ஒப்புதலுக்குக் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அரசு மட்டத்தில் அமைச்சரின் ஒப்புதல் பெறப் பொதுவாகக் குறைந்தபட்சம் 2 மாதங்கள் வரை தாமதமாகும். மேலும், இந்த ஒப்புதலைப் பெறுவதற்காக "பார்ட்டி ஃபண்ட்" என்ற பெயரில் மறைமுகமாக நிதி செலுத்த வற்புறுத்தப்பட்டதால் தான் நூற்றுக்கணக்கான கோப்புகள் முடக்கப்பட்டு நிலுவையில் இருந்ததாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.
<h3>ஜூன் 15 அரசாணை: வேகம் எடுத்த CMDA கோப்புகள்!</h3>
இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த ஜூன் 15-ஆம் தேதி தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் புதிய அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின்படி, உயரமான கட்டடத் திட்டங்களுக்கு இனி அமைச்சரின் இறுதி ஒப்புதல் தேவையில்லை என்றும், அதிகாரம் பரவலாக்கப்பட்டுத் துறை அளவிலேயே முடிவெடுக்கலாம் என்றும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/thoothukudi-tharuvaikulam-boat-engine-failure-drowning-two-boys-dead93773-93773.html">சோகத்தில் முடிந்த ஜாலி ரைடு.. கடலில் எஞ்சின் பழுதானதால் துயரம்.. அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்கள் பலி!</a></strong>

இந்தத் திருத்தப்பட்ட நடைமுறை அமலுக்கு வந்த ஒரே மாதத்திற்குள், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 17 உயரமான கட்டடத் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரின் ஒப்புதல் கட்டாயம் என்ற விதி நீக்கப்பட்டதால், தடையின்றி விரைவாக ஒப்புதல்கள் வழங்கி வருவதாக CMDA அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் புதிய கட்டடத் திட்டங்களும் ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் மீண்டும் வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னையில் பயங்கரம்.. கத்திகளுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.. 2 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-central-college-students-fight-pachaiyappa-college-students-attacked-93801.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 13:48:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-central-college-students-fight-pachaiyappa-college-students-attacked-93801.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் இருவேறு கல்லூரி மாணவர்கள் கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பலத்த வெட்டுக் காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/students-fight.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னையில் பயங்கரம்.. கத்திகளுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.. 2 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம்" /></figure><strong>சென்னை, ஜூலை 27:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/zomato-delivery-person-in-chennai-delivered-food-on-horseback-93623.html" target="_blank" rel="noopener">சென்னை</a> சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கத்திகளுடன் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளியே பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில், திடீரென இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுப் பின்னர் கைகலப்பாக மாறியது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/thoothukudi-tharuvaikulam-boat-engine-failure-drowning-two-boys-dead93773-93773.html">சோகத்தில் முடிந்த ஜாலி ரைடு.. கடலில் எஞ்சின் பழுதானதால் துயரம்.. அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்கள் பலி!</a></strong>
<h3>15 பேர் கொண்ட கும்பல் கத்திகளுடன் தாக்குதல்:</h3>
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த பி.எஸ்சி இரண்டாமாண்டு பயிலும் ஏம்ராஜ் மற்றும் பொன்னேரியைச் சேர்ந்த நிதீஷ்குமார் ஆகிய இரு மாணவர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, 6-க்கும் மேற்பட்ட கத்திகள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் வந்து இந்த இரண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
<h3>ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை:</h3>
கத்திகளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் ஏம்ராஜ் மற்றும் நிதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
<h3>அலறியடித்து ஓடிய பொதுமக்கள்:</h3>
பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிக அளவில் நடமாடும் சென்ட்ரல் மெட்ரோ பகுதியில், மாணவர்கள் பட்டப்பகலில் கத்திகளுடன் மோதிக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பயந்து அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பெரியமேடு காவல் நிலையப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/legislative-assembly-secretary-santhi-writes-to-edappadi-regarding-four-former-aiadmk-mlas-93606.html" target="_blank" rel="noopener">அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!</a></strong>

தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் யார் என்பதைக் கண்டறிய, மெட்ரோ ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மாணவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் சென்னை சென்ட்ரல் பகுதியில் சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வேளாண் பட்ஜெட் 2026.. பச்சைத் துண்டுடன் களமிறங்கிய 10 அமைச்சர்கள்.. விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-agriculture-budget-2026-farmers-consultation-meeting-ten-ministers-participate-93782.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 12:36:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-agriculture-budget-2026-farmers-consultation-meeting-ten-ministers-participate-93782.html</guid>
		            
			

    	<description><![CDATA[TN Agriculture Budget 2026: தமிழக வேளாண் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10 அமைச்சர்கள் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்ற பிரம்மாண்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவும் சூழலில், ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/agri-budget.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வேளாண் பட்ஜெட் 2026.. பச்சைத் துண்டுடன் களமிறங்கிய 10 அமைச்சர்கள்.. விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு!!" /></figure><strong>சென்னை, ஜூலை 27:</strong> தமிழக அரசின் தனித்துவமான வேளாண் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-debt-everything-you-need-to-know-before-budget-93126.html" target="_blank" rel="noopener">நிதிநிலை அறிக்கை</a> தயாரிப்பு தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடனான பிரம்மாண்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக, விவசாயிகளின் கோரிக்கைகளைக் நேரடியாகக் கேட்டறிய 10 அமைச்சர்கள் ஒரே மேடையில் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/tamilnadu-budget-school-education-department-expectations-teacher-vacancies-demands-photo-gallery-93583.html">TN Budget 2026: பள்ளி கல்வித்துறை பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?.. முழு விவரம்!!</a></strong>
<h3>பச்சைத் துண்டுடன் களமிறங்கிய 10 அமைச்சர்கள்:</h3>
வேளாண்மைத் துறை மட்டுமின்றி, விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நேரில் பங்கேற்றனர். வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, சிறுகுறு நடுத்தரத் தொழில்துறை, கைத்தறித்துறை, மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பால்வளத்துறை, வனத்துறை, உணவுத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகிய 11 துறைகளின் அமைச்சர்களும் பச்சைத் துண்டு அணிந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக அமர்ந்து அவர்களின் கோரிக்கைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் சேகரிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து, இன்று மாலை முதலமைச்சருடன் நடைபெறும் உயர் ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இறுதி பட்ஜெட்டில் சேர்க்கப்படவுள்ளன.
<h3>10 ஆண்டுகளில் இல்லாத வறட்சி:</h3>
தற்போது தமிழகத்தில் காவேரி உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீர்வரத்து குறைந்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியான சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் வேளாண் பட்ஜெட்டில் கீழ்க்கண்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அதிக நீர் தேவைப்படும் நெல் சாகுபடியைத் தவிர்த்து, சிறுதானியங்கள் மற்றும் மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள் சாகுபடிக்கு அதிக மானியம் வழங்க வேண்டும்.
<h3>மாதாந்திர உதவித்தொகை:</h3>
மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதைப் போல, வறட்சி மற்றும் விவசாயப் பணிகள் இல்லாத காலங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும். விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதால், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங் துறை மூலம் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை எவ்வித முறைகேடுமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் வழங்க வேண்டும்.

மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தடுக்க ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்; இஸ்ரேல் நாட்டைப் போல நவீன நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/how-tamil-nadu-budget-works-assembly-procedures-explained-92843.html">தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!</a></strong>
<h3>ஆகஸ்ட் 6-ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்:</h3>
திமுக ஆட்சிக் காலத்தில் தனி வேளாண் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்காக ₹30,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வறட்சி மேலாண்மை மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படவுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சோகத்தில் முடிந்த ஜாலி ரைடு.. கடலில் எஞ்சின் பழுதானதால் துயரம்.. அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்கள் பலி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/thoothukudi-tharuvaikulam-boat-engine-failure-drowning-two-boys-dead93773-93773.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 11:39:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/thoothukudi-tharuvaikulam-boat-engine-failure-drowning-two-boys-dead93773-93773.html</guid>
		            
			

    	<description><![CDATA[Thoothukudi Drowning Inciden: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் பொழுதுபோக்கிற்காக பைபர் படகில் கடலுக்குச் சென்ற 7 சிறுவர்களில், படகின் எஞ்சின் பழுதாகி அலையில் அடித்துச் செல்லப்பட்டதால் கடலில் நீந்திய 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான இருவரின் சடலங்களும் சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் மூலம் மீட்கப்பட்டு மெரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/sea.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சோகத்தில் முடிந்த ஜாலி ரைடு.. கடலில் எஞ்சின் பழுதானதால் துயரம்.. அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்கள் பலி!" /></figure><strong>தூத்துக்குடி, ஜூலை 27:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/thoothukudi-lockup-death-controversy-arunachalam-body-handed-over-family-93339.html" target="_blank" rel="noopener">தூத்துக்குடி</a> மாவட்டம் தருவைகுளம் அருகே விடுமுறை நாளன்று பொழுதுபோக்கிற்காக பைபர் படகில் கடலுக்குள் சென்ற சிறுவர்களில், எஞ்சின் பழுதானதால் கடலில் குதித்து நீந்த முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senthil-balaji-questioned-for-second-day-regarding-horse-trading-case-involving-tvk-mla-ilaiyaraja-93595.html" target="_blank" rel="noopener">தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!</a></strong>
<h3>7 சிறுவர்கள் சென்ற ஜாலி ரைட்!</h3>
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரைக் கிராமத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள், விடுமுறை தினமான நேற்று மதியம் கரையிலிருந்த ஒரு பைபர் படகை எடுத்துக்கொண்டு ஜாலியாகச் சுற்றிப் பார்க்கவும், கடலில் குளிப்பதற்காகவும் கடலுக்குள் சென்றுள்ளனர். கரையில் இருந்து சுமார் 1 மைல் தொலைவு சென்றதும், படகை நிறுத்திவிட்டு அதில் 3 பேர் அமர்ந்திருக்க, மீதி 4 சிறுவர்கள் கடலில் குதித்து நீந்தி குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.
<h3>அலையில் அடித்துச் செல்லப்பட்ட படகு:</h3>
அப்போது எதிர்பாராதவிதமாகப் படகின் எஞ்சின் திடீரென அணைந்து பழுதானது. காற்று வேகமாக வீசியதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கடலில் நீந்திக்கொண்டிருந்த சிறுவர்களை விட்டு விலகி மிக வேகமாக அலைகளின் திசையை நோக்கி அடித்துச் செல்லப்பட்டது. படகின் அருகே நீந்திச் செல்ல முடியாததால், நீரில் குளித்துக் கொண்டிருந்த 4 சிறுவர்களும் கரையை நோக்கி நீந்தத் தொடங்கினர். அதேவேளையில், படகில் இருந்த 3 சிறுவர்களுக்கும் எஞ்சினை மீண்டும் ஸ்டார்ட் செய்யத் தெரியாததால் செய்வதறியாது திகைத்தனர்.
<h3>செல்போன் அழைப்பும் மீட்பு நடவடிக்கையும்:</h3>
படகில் இருந்த சிறுவர்கள் உடனடியாகத் தங்களிடம் இருந்த செல்போன் மூலம் கரையில் உள்ள குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், அதில் ஒரு சிறுவனின் தந்தை உடனடியாக மற்றொரு படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் விரைந்தார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களையும், எஞ்சின் இயங்காமல் தவித்த படகையும் அதில் இருந்த 3 சிறுவர்களையும் சேர்த்து மொத்தம் 5 பேரை பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
<h3>2 சிறுவர்கள் சடலமாக மீட்பு:</h3>
இருப்பினும், நீந்தி வர முயன்ற மனோஜ்குமார் மற்றும் ஜோசுவா ஆகிய 2 சிறுவர்கள் கடலில் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணியில் 8 நாட்டுப் படகுகளில் 60-க்கும் மேற்பட்ட உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று இரவு வரை தேடியும் கிடைக்காத நிலையில், இன்று அதிகாலை சங்கு குளிக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, தருவைகுளத்தில் இருந்து முக்கால் மைல் தொலைவில் மனோஜ்குமார் மற்றும் ஜோசுவா ஆகிய இருவரின் உடல்களும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/legislative-assembly-secretary-santhi-writes-to-edappadi-regarding-four-former-aiadmk-mlas-93606.html" target="_blank" rel="noopener">அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!</a></strong>

உயிரிழந்த சிறுவர்களின் உடல்களைக் கண்டு குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரைக் கலங்கச் செய்தது. இச்சம்பவம் குறித்து மெரைன் (Marine) துறைமுகக் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?.. தெளிவுபடுத்திய சகாயம் ஐ.ஏ.எஸ்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/ias-sagayam-trichy-east-byelection-contest-tnpsc-group1-speech-tirunelveli-93758.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 10:13:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/ias-sagayam-trichy-east-byelection-contest-tnpsc-group1-speech-tirunelveli-93758.html</guid>
		            
			

    	<description><![CDATA[IAS Sagayam Speech: நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற போட்டித் தேர்வு விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது முக்கியமல்ல என்றும், TNPSC தேர்வுகளில் இளைஞர்கள் வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாவதே தமக்கு முதன்மையானது என்றும் தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/sagayam-ias.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?.. தெளிவுபடுத்திய சகாயம் ஐ.ஏ.எஸ்!!" /></figure><strong>நெல்லை, ஜூலை 27:</strong> திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது தமக்கு முக்கியமல்ல; TNPSC குரூப்-1 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-ka-sengottaiyan-commented-on-the-rs-2500-magalir-urimai-thogai-93691.html" target="_blank" rel="noopener">தமிழக</a> இளைஞர்களும் மாணவர்களும் வெற்றிபெற்று நேர்மையான அதிகாரிகளாக உருவெடுப்பதே தமக்கு முதன்மையானது என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், 'ஸ்மார்ட் லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான இலவச வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் உரையாற்றினார்.

<strong>இதையும் படிக்க:</strong> <strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-finance-minister-maria-wilson-spoke-about-the-tamil-nadu-budget-93685.html">தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!</a></strong>
<h3>திருச்சி கிழக்கு தொகுதி எனக்கு முக்கியமல்ல:</h3>
சமீபகாலமாக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் 'திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சகாயம் போட்டியிடப் போகிறாரா?' என்ற ஊகங்கள் தீவிரமாக உலா வந்து கொண்டிருந்தன. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேடையில் பேசியதாவது, "சகாயம் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடப் போகிறாரா என்ற சந்தேகங்களும் கேள்விகளும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் சிறிதும் கவலைப்படவில்லை; அது எனக்கு ஒரு பிரச்சனையே அல்ல. நான் இங்கு மாணவர்களாகிய உங்களிடம் உரையாட வந்திருக்கிறேன்.
<h3>நான் என்றுமே யோசித்ததில்லை:</h3>
நான் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடுகிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல; மாறாக, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று நேர்மையான அதிகாரிகளாக வருகிறீர்களா என்பதுதான் எனக்கு முதன்மையான விஷயம். என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி நான் என்றுமே யோசித்ததில்லை. ஒரு உண்மையான லட்சியவாதி தன் பதவியை இழந்தாலும், அவன் என்றென்றைக்குமே சமூகத்தின் பார்வையில் வெற்றியாளனாகத்தான் இருப்பான் என சகாயம் தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க:</strong> <strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/undergraduate-medical-courses-applying-deadline-extended-until-july-27-93679.html">எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!</a></strong>
<h3> சமூகத்திற்குச் சேவையாற்றுங்கள்:</h3>
தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், TNPSC குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளில் வெற்றி பெற திட்டமிட்ட உழைப்பும், விடாமுயற்சியும் அவசியம் எனக் குறிப்பிட்டார். அரசு நிர்வாகத்தில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வர வேண்டுமானால், இளைஞர்கள் அதிக அளவில் ஆட்சிப் பணிகளுக்கும் அரசுப் பணிகளுக்கும் வர வேண்டும் என்றும், அவ்வாறு பொறுப்பேற்கும் போது எவ்வித சமரசமும் இன்றி மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வேலூரில் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/airport-will-be-soon-open-in-vellore-says-union-minister-l-murugan-93741.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 08:40:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/airport-will-be-soon-open-in-vellore-says-union-minister-l-murugan-93741.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vellore Airport Soon Will Be Open | வேலூரில் விரைவில்  விமான நிலையம் திறக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/vellore-airport.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வேலூரில் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!" /></figure><strong>வேலூர், ஜூலை 27 :</strong> வேலூரில் <strong>(Vellore)</strong> விரைவில் விமான நிலையம் திறக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் <strong>(Union Minister L Murugan)</strong> தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2026 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வேலூர் விமான நிலையம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் - எல்.முருகன்</h3>
வேலூரில் நேற்று (ஜூலை 26, 2026) சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2026 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அவர், அதனை தொடர்ந்து வேலூர் வடக்கு மண்டலத்தில் பாரதிய ஜந்தா கட்சி நிர்வாகிகள் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-ka-sengottaiyan-commented-on-the-rs-2500-magalir-urimai-thogai-93691.html">ரூ.2500 மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஷாக் பதில்!</a>
<h3>விமான நிலைய பணிகள் நிறைவு பெற போகின்றன - எல்.முருகன்</h3>
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவரிடம், வேலூர் விமான நிலையம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், வேலூர் விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவு பெற போகின்றன. இது குறித்து விமானத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். மீதமுள்ள பணிகள் முடிந்ததும், வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-finance-minister-maria-wilson-spoke-about-the-tamil-nadu-budget-93685.html">தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!</a>

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் மட்டுமே விமான நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில் தான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேலூரில் விரைவில் விமான் நிலையம் வரவுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் தமிழகத்திற்கு மேலும் ஒரு விமான நிலையம் கிடைக்கும் பட்சத்தில், விமான போக்குவரத்து மிகவும் சுலபமானதாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு&#8221;.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-minister-maria-wilson-speech-sekar-babu-corruption-list-93744.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 08:27:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-minister-maria-wilson-speech-sekar-babu-corruption-list-93744.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Minister Maria Wilson Speech: திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக விமர்சித்த தவெக அமைச்சர் மரிய வில்சன், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஊழல் பட்டியல் தாக்கல் செய்யப்படும் என்றும் 2029-ல் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/maria-willson.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு&#8221;.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!" /></figure><strong>சென்னை, ஜூலை 27:</strong> சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற மாணவர்கள் பாராட்டு விழாவில், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-detailed-reply-mk-stalin-mekedatu-cauvery-issue-93579.html" target="_blank" rel="noopener">திமுக</a> முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.கே. சேகர் பாபுவை மறைமுகமாகத் தாக்கிப் பேசி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான மரிய வில்சன். தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றளிக்கும் விழா சென்னை துறைமுகத் தொகுதியில் நடைபெற்றது. முதன்முறையாக இத்தொகுதியில் தவெக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் மரிய வில்சன் உரையாற்றினார்.

<strong>இதையும் படிக்க:</strong> <strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-finance-minister-maria-wilson-spoke-about-the-tamil-nadu-budget-93685.html">தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!</a></strong>
<h3>"பார்ட்டி ஃபண்ட் தெரியாத மாதிரி நடிப்பு":</h3>
நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சேகர் பாபுவை நேரடியாகப் பெயர் குறிப்பிடாமல் கடுமையாகச் சாடினார். பார்ட்டி ஃபண்ட் என்றால் என்னவென்றே தெரியாதது போல சிலர் வெளியில் நடமாடுகிறார்கள். 'அப்படினா என்னது? பார்ட்டி ஃபண்ட்னா என்ன?' என்று விசித்திரமாகக் கேட்டுக்கொண்டு வருகிறார் இந்தத் தொகுதியில் ஜெயிச்சவர் (சேகர் பாபு). அவருக்கு இந்த மேடை வாயிலாக நான் ஒன்றை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். "வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுகவின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையில் பிரத்யேக அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
<h3>தனி ஆடிட்டிங் அறிக்கை:</h3>
துறைமுகம் தொகுதி சார்ந்த நிதிகள் மற்றும் திட்டங்கள் குறித்த தனிப்பட்ட நிதி தணிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆடிட்டிங் ஃபைல் வரும் சட்டமன்றப் பேரவை செஷனில் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படும். அப்போது தெரியும் ஊழல் பட்டியல்: "அந்தத் தனி அறிக்கையை நாங்கள் பேரவையில் தாக்கல் செய்யும் அன்று உங்களுக்குத் தெரியும், அங்கே என்ன நடக்கப்போகிறது; அந்த ஊழல் பட்டியலில் என்ன இருக்கிறது என்று!" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
<h3>2029-ல் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்:</h3>
மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி முறை குறித்து உரையாற்றிய மரிய வில்சன், தேசிய அளவிலான நீட் தேர்வு ரத்து குறித்து தவெகவின் முக்கியத் திட்டத்தையும் வெளிப்படுத்தினார். "இங்கு அமர்ந்திருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கலாம். தமிழ்நாட்டில் எவ்வாறு மிகப்பெரிய அரசியல் மாற்றம் சாத்தியமானதோ, அதேபோன்று வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் நிகழும்.

அப்போது நமது தவெக தலைவர் மூலமாக, நீட் தேர்வுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட்டு, இந்திய அளவிலேயே நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். இதற்கான அனைத்துத் திட்டங்களையும் நமது தலைவர் வகுத்து வருகிறார்." என்று கூறினார்.

<strong>இதையும் படிக்க:</strong> <strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/undergraduate-medical-courses-applying-deadline-extended-until-july-27-93679.html">எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!</a></strong>
<h3>கூடும் அரசியல் சூடு:</h3>
துறைமுகம் தொகுதியைக் கைப்பற்றிய திமுகவின் பி.கே. சேகர் பாபுவை இலக்கு வைத்து தவெக அமைச்சர் மரிய வில்சன் முன்வைத்துள்ள இந்த "ஆடிட்டிங் அறிக்கை" மற்றும் "ஊழல் பட்டியல்" எச்சரிக்கை, தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக எதிர்வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மிகப்பெரிய விவாதப் பொருளாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/scanning-face-facility-will-be-available-in-ration-shops-says-minister-venkataramanan-93735.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 07:51:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/scanning-face-facility-will-be-available-in-ration-shops-says-minister-venkataramanan-93735.html</guid>
		            
			

    	<description><![CDATA[Scanning Face Facility In Ration Card | ரேஷன் கார்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், வரும் காலத்தில் ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/ration-shop-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய தகவல்!" /></figure><strong>கிருஷ்ணகிரி, ஜூலை 27 :</strong> தமிழகத்தில் <strong>(Tamil Nadu)</strong> வரும் காலத்தில் ரேஷன் கடைகளில், பயனர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யும் அம்சம் குறித்து அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ரேஷன் அட்டையில் மேற்கொள்ளப்படும் புதிய புதிய மாற்றங்கள்</h3>
இந்தியாவில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக ரேஷன் கார்டு <strong>(Ration Card)</strong> உள்ளது. தமிழகத்திலும் கோடிக்கணக்கான குடும்பங்கள் இந்த ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். முன்னதாக இந்த ரேஷன் அட்டை திட்டத்தில் புத்தக வடிவிலான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருந்தன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-finance-minister-maria-wilson-spoke-about-the-tamil-nadu-budget-93685.html">தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!</a>

பின்னர் தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பயனர்களின் கைரேகை ஸ்கேன் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தான், ரேஷன் அட்டை தொடர்பான மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
<h3>ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யும் அம்சம் - அமைச்சர் தகவல்</h3>
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலம் முழுவதும் இதுவரை 20,000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் ரேஷன் கார்டுகளை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/undergraduate-medical-courses-applying-deadline-extended-until-july-27-93679.html">எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!</a>

அதற்கான பணிகள் 97 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. ரேகை பதிவாகாத நபர்களுக்கு கண்விழி பதிவு செய்யப்படுகிறது. இனி வரும் காலத்தில் ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் சுவர்களுக்கு இடையே சிக்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/andhra-woman-trapped-between-the-walls-of-idukku-pillayar-temple-in-tiruvannamalai-93731.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 07:05:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/andhra-woman-trapped-between-the-walls-of-idukku-pillayar-temple-in-tiruvannamalai-93731.html</guid>
		            
			

    	<description><![CDATA[Woman Trapped Between Temple Walls | திருவண்ணாமலை கிரிவல பாதையில் இடுக்கு பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. ஜூலை 24, 2026 அன்று இதில் சிக்கி இளைஞர் பலியான நிலையில், ஜூலை 25, 2026 அன்று மீண்டும் ஒரு பெண் சிக்கியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/woman-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் சுவர்களுக்கு இடையே சிக்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்!" /></figure><strong>திருவண்ணாமலை, ஜூலை 27 :</strong> திருவண்ணாமலையில் <strong>(Tiruvannamalai)</strong> உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் சுவர்களில் மீண்டும் ஒரு பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 24, 2026 அன்று அந்த சுவர்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட ஆந்திர இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஜூலை 25, 2026 மீண்டும் ஒரு ஆந்திராவை சேர்ந்த பெண் சிக்கிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் வழிபடும் பக்தர்கள்</h3>
திருவண்ணாமலை கிரிவல பாதையில் இடுக்கு பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் மூன்று வாசல்கள் உள்ளன. இந்த மிகவும் குறுகிய வாசல்கள் வழியாக நுழைந்து வெளியே வருவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வாசல்கள் மிகவும் குறுகலானவை என்பதால், சற்று உடல் பருமன் இருந்தால் கூட அதில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/undergraduate-medical-courses-applying-deadline-extended-until-july-27-93679.html">எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!</a>

இந்த நிலையில் தான் ஜூலை 24, 2026 அன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணிக்குமார் என்ற 36 வயது நபர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளார். அப்போது அவர் இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகிய வாசல் வழியாக உள்ளே நுழைந்துள்ளார். ஆனால், அவரால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் போயுள்ளது. இதனை கண்ட சக பக்தர்கள் போராடி அவரை மீட்டுள்ளனர்.
<h3>மூச்சுத்திணறி உயிரிழந்த நபர்</h3>
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள்ளாகதான் ஜூலை 25, 2026 அன்று மேலும் ஒரு ஆந்திரா பெண் பக்தர் அந்த சுவர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anbumani-commented-on-pmk-founder-ramadoss-retiring-from-politics-93658.html"> பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!</a>

இந்த நிலையில், கோயிலுக்குள் இருந்த சக பக்தர்கள் அந்த பெண்ணை வெளியே கொண்டுவந்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தப்போகுது.. மழையும் இருக்கு.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-update-moderate-rain-forecast-heatwave-12-places-century-93728.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 06:27:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-update-moderate-rain-forecast-heatwave-12-places-century-93728.html</guid>
		            
			

    	<description><![CDATA[TN Rain Forecast: தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலக் கீழ்மட்டக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/heat-wave-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தப்போகுது.. மழையும் இருக்கு.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!" /></figure><strong>Tamilnadu Weather today:</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/tamilnadu-budget-school-education-department-expectations-teacher-vacancies-demands-photo-gallery-93583.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> நிலவும் வளிமண்டல மேலடுக்கு மாறுபாடுகள் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாகவே அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senthil-balaji-questioned-for-second-day-regarding-horse-trading-case-involving-tvk-mla-ilaiyaraja-93595.html" target="_blank" rel="noopener">தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!</a></strong>
<h3>இன்று மழைக்கு வாய்ப்பு:</h3>
அந்தவகையில், இன்று (ஜூலை 27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
<h3>வரும் நாட்களில் வானிலை நிலவரம்:</h3>
இன்று முதல் ஜூலை 31 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
<h3>12 இடங்களில் சதமடித்த வெயில்:</h3>
மழை அறிவிப்பு ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் 12 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிச் சுட்டெரித்துள்ளது. மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், சென்னை (மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம்), தஞ்சாவூர், திருத்தணி, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் அதிக வெயில் பதிவாகியுள்ளது.
<h3>அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:</h3>
வரும் 30-ஆம் தேதி வரை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகக் காணப்படலாம். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் இயல்பை ஒட்டி இருக்கும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/legislative-assembly-secretary-santhi-writes-to-edappadi-regarding-four-former-aiadmk-mlas-93606.html" target="_blank" rel="noopener">அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!</a></strong>
<h3>சென்னை வானிலை நிலவரம்:</h3>
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மதுபான பார் டெண்டரில் புதிய தளர்வு.. இனி புதியவர்களுக்கு வாய்ப்பு.. அரசின் அதிரடி அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-government-has-announced-new-relaxations-regarding-liquor-bar-tenders-93696.html</link>	
		<pubDate>Sun, 26 Jul 2026 21:46:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-government-has-announced-new-relaxations-regarding-liquor-bar-tenders-93696.html</guid>
		            
			

    	<description><![CDATA[Liquor Bar Tenders Relaxations : தமிழகத்தில் மதுபான கூடங்கள் அமைப்பதற்கான டெண்டரில் தமிழக அரசு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் மூலம், புதிய நபர்களும் டெண்டரில் பங்கேற்று மதுபான கூடங்களை அமைக்க முடியும். இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/tasmac-bar.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மதுபான பார் டெண்டரில் புதிய தளர்வு.. இனி புதியவர்களுக்கு வாய்ப்பு.. அரசின் அதிரடி அறிவிப்பு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/zomato-delivery-person-in-chennai-delivered-food-on-horseback-93623.html">தமிழக அரசின்</a> டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் மூலமாக மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கடைகளை ஒட்டியவாறு குளிர்பானம், தின்பண்டங்கள் ஆகியவற்றை விற்பதற்கான மதுக்கூடம் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு டெண்டர் கோரப்பட்டு தேர்வாகும் நபர்களுக்கு மது கூடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. டெண்டருக்கான நிபந்தனையில், மது கூடம் நடத்துவதற்கு அதன் இடத்தின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியமாகும். ஆனால், பல கட்டட உரிமையாளர்கள் மதுக்கடைகளுக்கு இடம் வழங்கி மது கூடங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால், மது கூடங்கள் அமைப்பதற்கு கோரப்படும் டெண்டரின் புதிய நபர்களால் பங்கேற்க முடியாமல் இருந்து வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக மது கூடங்களை நடத்தி வருவோரை டென்டரில் பங்கேற்று தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
<h3>டாஸ்மாக் நிறுவனத்துக்கு பெரும் நிதி இழப்பு</h3>
மேலும், அவர்கள் குறைந்த அளவிலான விலைப்புள்ளி வழங்கி, மதுக்கூட ஒப்பந்தத்தை எடுப்பதுடன், டாஸ்மாக் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை சரிவர செலுத்துவது கிடையாது. இதன் காரணமாக, டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மது கூட நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த ஜூன் 30- ஆம் தேதி நிறைவடைந்தது. புதிதாக டெண்டர் கோரப்பட இருப்பதால், மது கூடங்களுக்கான ஒப்பந்தம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/zomato-delivery-person-in-chennai-delivered-food-on-horseback-93623.html" target="_blank" rel="noopener">நோ பெட்ரோல்.. நோ டிராஃபிக்.. சென்னையில் வெள்ளை குதிரையில் சொமேட்டோ ஊழியர் உணவு டெலிவரி..!</a>
<h3>மதுக்கூடங்கள் அமைப்பதற்கான வழிமுறைகள்</h3>
அதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுக்கூடங்களுக்கு ஒப்பந்தம் வழங்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுக்கூடங்கள் அமைப்பதற்கான விதிகளில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், மது கடையுடன் இணைந்து மதுகூடம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இனி மதுக்கடையை ஒட்டிய இடத்தில் அல்லது மது கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்குள் எங்கு வேண்டுமானாலும் மது கூடம் அமைக்கலாம்.
<h3>புதிய நபர்களும் மதுக்கூடங்களை நடத்த முடியும்</h3>
அத்துடன், அந்த மது கூடத்துக்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய விதியால் மது கூடங்களுக்கான டென்டர்களில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தேர்வாகி வந்த நிலையில், அந்த நிலை மாற்றப்பட்டு இனி புதியவர்களும் டெண்டரில் பங்கேற்று மதுக்கூடங்கள் நடத்துவதற்கான அனுமதியை பெற்று அதனை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/11-people-arrested-for-illegal-firecracker-manufacturing-in-sivakasi-93638.html" target="_blank" rel="noopener">சிவகாசி விபத்து எதிரொலி.. விதியை மீறி பட்டாசு தயாரிப்பு.. 11 பேர் அதிரடி கைது!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரூ.2500 மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஷாக் பதில்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-ka-sengottaiyan-commented-on-the-rs-2500-magalir-urimai-thogai-93691.html</link>	
		<pubDate>Sun, 26 Jul 2026 20:44:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-ka-sengottaiyan-commented-on-the-rs-2500-magalir-urimai-thogai-93691.html</guid>
		            
			

    	<description><![CDATA[Magalir Urimai Thogai: தமிழகத்தில் மகளிர்களுக்கான உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு, திமுக ஆட்சியில் எப்போது வழங்கப்பட்டது. அதை ஏன் உடனே கேட்கிறீர்கள் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/sengottaiyan-tvk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரூ.2500 மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஷாக் பதில்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-finance-minister-maria-wilson-spoke-about-the-tamil-nadu-budget-93685.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> பெண்களுக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.13.32 லட்சம் கோடி கடன் உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டும். கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையை எப்போது வழங்கினர். எங்களிடம் மட்டும் ஏன் இப்போதே கேட்கிறீர்கள். தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக அகதிகள் அணி உள்ளதாக ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார். யார் அகதிகளாக போகிறார்கள் என்று அவருக்கு காலம்தான் பதில் சொல்லும். நீட் தேர்வு விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் தமிழக வெற்றிக்கழக அரசு எடுக்கவில்லை முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.
<h3>234 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்</h3>
கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சென்னையில் கடலின் உள்ளேட ரூ.84 கோடிக்கு பேனா வைப்பதாக தெரிவித்திருந்தனர். அந்த பேனா வைக்க வேண்டும் என்று யார் கேட்டனர். இது போன்று எதை எதையோ கேட்பதற்கெல்லாம் பதில் கூறினால் மனது சங்கடம் ஏற்படும். நாங்கள் மூத்த அரசியல்வாதிகள் என்பதால் இதெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறேன். ஜனநாயன் திரைப்படம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/karur-municipal-office-anti-corruption-raid-rs-57000-seized-93632.html" target="_blank" rel="noopener">கரூரில் அதிரடி.. புகழூர் நகராட்சி அலுவலகத்தை அலறவிட்ட லஞ்ச ஒழிப்பு படை.. கணக்கில் வராத பணம் சிக்கியது!</a>
<h3>நீட் தேர்வுக்கு எதிராக விஜய் குரல் கொடுத்தார்</h3>
தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார். மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை ஆகும் என்று தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எங்களிடம் மட்டும் ஏன் இப்போதே கேட்கிறீர்கள் என்று அமைச்சர் கூறி இருந்தது சற்று அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் ரூ.1000 மகளிர் உரிமைக்காக வழங்கப்பட்டு வந்தது.
<h3>உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை</h3>
இந்த தொகை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது வரை உயர்த்தப்பட்ட உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ.1000 உரிமைத் தொகையை வரவு வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anbumani-commented-on-pmk-founder-ramadoss-retiring-from-politics-93658.html" target="_blank" rel="noopener">பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-finance-minister-maria-wilson-spoke-about-the-tamil-nadu-budget-93685.html</link>	
		<pubDate>Sun, 26 Jul 2026 19:39:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-finance-minister-maria-wilson-spoke-about-the-tamil-nadu-budget-93685.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Finance Minister Maria Wilson : தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தமிழகத்தில் நிகழ்ந்த ஊழல்கள் தொடர்பான பட்டியல் சமர்ப்பிக்கப்படும் என்று நீதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதை விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/maria-wilson-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/undergraduate-medical-courses-applying-deadline-extended-until-july-27-93679.html" target="_blank" rel="noopener">சென்னையில்</a> முதல்வரின் கரம் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: தமிழகத்தில் 2026 இல் எப்படி ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டதோ, அதேபோல, 2029 இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மாபெரும் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தின் மூலமாக நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பார்ட்டி ஃபண்ட் தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் பேசியிருந்தார். இதை கேட்டதும் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் பார்ட்டி ஃபண்ட் என்றால் என்னவென்றே தெரியாதவாறு அவையில் இருந்து வெளியேறி சென்றனர்.
<h3>தமிழக பட்ஜெட் தொடரில் ஊழல் பட்டியல் தாக்கல்</h3>
தற்போது, நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்துடன் போது ஊழல் பட்டியல் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் தற்போது நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வந்து விட்டார். ஆனால், சில அரசியல்வாதிகள் தற்போதும் நடித்து கொண்டு இருக்கின்றனர். சட்டப்பேரவையில் பலர் வரைமுறை இன்றி பேசுகின்றனர். ஆனால், நாங்கள் அவ்வாறு பேசியது கிடையாது. அவர்கள் அப்படி பேசினாலும், நாங்கள் பேசப் போவது கிடையாது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/undergraduate-medical-courses-applying-deadline-extended-until-july-27-93679.html" target="_blank" rel="noopener">எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!</a>
<h3>ஊழல் பட்டியல் மூலம் பதிலடி கொடுப்போம்</h3>
இதை புரிந்து கொள்ளாமல் மேற்கொண்டு அவதூறாக பேசினால், எங்களது பேச்சு ஊழல் அறிக்கை வெளியிடுவதன் மூலம் பதிலடி கொடுக்கப்படும். வரும் காலங்களில் ஊழல் இல்லாத தமிழகத்தில் மக்கள் வாழ போகின்றனர். இதனை கெடுப்பதற்காக தமிழக வெற்றிக் கழக அரசு இன்னும் 3 மாதங்களில் கவிழ போகிறது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார். தமிழகத்தில் அரசு துறைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
<h3>ஊழலுக்கு எதிராக தமிழக அரசு கடும் நடவடிக்கை</h3>
அந்த வகையில், கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு டெண்டர்களை தமிழக அரசு ரத்து செய்து இருந்தது. அத்துடன், ஊழல் தொடர்பான பட்டியலை தமிழக அரசு தயார் செய்து வருகிறது. இதில், ஈடுபட்டிருக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anbumani-commented-on-pmk-founder-ramadoss-retiring-from-politics-93658.html" target="_blank" rel="noopener">பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>