<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Tamil Nadu News Today | சமீபத்திய தமிழ்நாடு செய்திகள் Tamil Nadu Latest News, தமிழ்நாடு செய்திகள் Photos and videos in Tamil</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/tamil-nadu/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu</link>
 <description>Tamil Nadu News (தமிழ் செய்திகள்) - Read all the latest news on Tamil Nadu Politics, National, World, Business, Lifestyle, Health and more at tv9tamilnews.com. இல் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, தேசிய, உலகம், வணிகம், வாழ்க்கை முறை மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகளை தமிழில் பெறுங்கள்</description><lastBuildDate>Sat, 12 Sep 2026 19:17:02 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: மதுரைக்கு விடுமுறை அறிவிப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-district-declares-local-holiday-on-september-17-for-meenakshi-amman-temple-kumbabhishekam-104679.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 19:17:02 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-district-declares-local-holiday-on-september-17-for-meenakshi-amman-temple-kumbabhishekam-104679.html</guid>
		            
			

    	<description><![CDATA[Meenakshi Amman Temple Kumbabhishekam : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், மதுரை மாவட்டத்துக்கு வருகிற செப்டம்பர் 17, 2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/madurai-meenatchi-amman-temple.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: மதுரைக்கு விடுமுறை அறிவிப்பு" /></figure><strong>மதுரை, செப்டம்பர் 12 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/safety-alert-ahead-of-meenakshi-temple-kumbabhishekam-public-barred-from-building-rooftops-104309.html" target="_blank" rel="noopener">மதுரை மீனாட்சி அம்மன் கோயில்</a> கும்பாபிஷேக விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், மதுரை மாவட்டத்துக்கு வருகிற செப்டம்பர் 17, 2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில் மதுரை மட்டுமல்லாது தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
<h3>மதுரைக்கு விடுமுறை அறிவிப்பு</h3>
இந்நிலையில் இது தொடர்பாக வெளியான அறிக்கையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விழா நடைபெறும் நாளான செப்டம்பர் 17, 2026 வியாழக்கிழமை அன்று மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில், ‘மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, வருகிற செப்டம்பர் 26, 2026 சனிக்கிழமை அன்று மதுரை மாவட்டத்தில் முழு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dgp-mahesh-kumar-aggarwal-orders-the-transfer-of-46-dsps-in-tamil-nadu-104633.html">தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!</a></strong>

மேலும், இந்த விடுமுறை செலாவணி முறிச் சட்டம், 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசரப் பணிகளைக் கவனிக்கும் வகையில் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும். குடமுழுக்கு விழாவினைக் காண இலட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சுமார் 6 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/public-interest-litigation-filed-in-high-court-seeking-stay-on-maduranthakam-and-dharapuram-by-elections-104599.html">அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!</a></strong>

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், குடமுழுக்கு விழாவுக்கான தேவையான ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக கும்பாபிஷேகம் நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தங்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் எவரும் ஏறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுக அடிபட்ட புலியாக களத்தில் இருக்கிறது.. வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம்.. பி.கே.சேகர் பாபு ஆவேசம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-former-minister-p-k-sekar-babu-criticized-tvk-and-chief-minister-joseph-vijay-104653.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 17:50:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-former-minister-p-k-sekar-babu-criticized-tvk-and-chief-minister-joseph-vijay-104653.html</guid>
		            
			

    	<description><![CDATA[P. K. Sekar Babu Criticized CM Vijay : திராவிட முன்னேற்றக் கழகம் அடிபட்ட புலியாக களத்தில் நின்று கொண்டிருக்கிறது. இதற்கு நிச்சயமாக வட்டியும், முதலுமாக சேர்த்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருப்பி கொடுப்போம் என்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/sekar-babu.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுக அடிபட்ட புலியாக களத்தில் இருக்கிறது.. வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம்.. பி.கே.சேகர் பாபு ஆவேசம்!" /></figure>தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பேச்சை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு பங்கேற்று பேசியதாவது: தமிழக அரசியல் களத்தில் இருக்கும் தலைவர்களை ஒரு சேர நிறுத்தி அந்த அரசியல் தலைவர்களில் தியாகத்தாலும், ஆளுமையாலும் ஓங்கி நிற்கின்ற ஒரே தலைவர் மு. க. ஸ்டாலின் மட்டுமே. இவரை சட்டமன்றத்தில் விமர்சித்ததற்காக ஒரு டவுசர் பார்ட்டி... டேய் நிர்மல் குமார்... இவ்வாறு சட்டமன்றத்தில் ஓங்கி குரல் எழுப்பினோம். 5 ஆண்டுகள் மத்திய அரசை எதிர்த்து சண்டை செய்த ஒரே கட்சி திமுக மட்டுமே. அது மு. க. ஸ்டாலின் என்றால் மிகை ஆகாது. அந்த ஆளுமையே ஓடவிட்டால் இன்று மேடையில் ஓடு... ஓடு... என்று காட்டிக் கொண்டிருந்த ஓடுகாலி முதலமைச்சரை விஜய்யை தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஓட விட்டுள்ளார்.
<h3>ஓடுகாலி முதலமைச்சர் ஜோசப் விஜய்</h3>
ஓடும்போது நான் திங்கள்கிழமை பதில் சொல்ல வருவேன். யாரையும் ஓட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார். சட்டமன்றத்தில் ஒரு மணி நேரம் சினிமா பாணியில் முதல்வர் வசனத்தை பேசியுள்ளார். அந்த ஒரு மணி நேரமும் எதிர்த்து நின்று பேசுவதற்கு திமுக சார்பில் வாய்ப்பு கேட்டோம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தெம்பற்ற, திராணியற்ற முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dravidar-kazhagam-leader-k-veeramani-severely-criticized-the-tvk-government-4-month-tenure-104643.html" target="_blank" rel="noopener">தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல… பெரும் வேதனை… திராவிட கழக வீரமணி கடும் தாக்கு!</a>
<h3>டவுசர் பார்ட்டி நிர்மல் குமாருக்கு பதிலடி</h3>
சட்டமன்ற நிகழ்வில் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தால் தெரிந்து இருக்கும். ஒரு சட்டமன்ற நிகழ்வில் இந்த டவுசர் பார்ட்டி நிர்மல் குமார் கரூர் கம்பெனி என்று தெரிவித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் எழுந்து சங்கி அமைச்சர் என்று பதிலடி கொடுத்தார். இதற்கு இரண்டரை மணி நேரம் கழிப்பறையில் இருந்ததாக நிர்மல் குமார் தெரிவித்தார். அதற்கும், யார் யார் எவ்வளவு நேரம் கழிப்பறையில் இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுப்பதற்கும் அமைச்சர்கள் இருக்கிறார்களா என்று பதிலடி கொடுத்தார். தலைவா என்ற படத்துக்காக கொடநாட்டில் ஓடி சென்று நின்றவர் யார்.
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta">தைரியமற்ற, தெம்பற்ற முதலமைச்சர் நேரடித் தாக்குதல் செய்த சேகர்பாபு <a href="https://x.com/hashtag/sekerbabu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#sekerbabu</a> <a href="https://x.com/hashtag/pksekarbabuspeech?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#pksekarbabuspeech</a> <a href="https://x.com/hashtag/cmvijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#cmvijay</a> <a href="https://x.com/hashtag/tvkvsdmk?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tvkvsdmk</a> <a href="https://x.com/hashtag/thalapathyvijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thalapathyvijay</a> <a href="https://x.com/hashtag/mkstalin?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#mkstalin</a> <a href="https://x.com/hashtag/misaact?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#misaact</a> <a href="https://x.com/hashtag/arrowroots?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#arrowroots</a> <a href="https://t.co/w4B1EoEySs">pic.twitter.com/w4B1EoEySs</a></p>
— Arrowroots Media (@arrowrootsmedia) <a href="https://x.com/arrowrootsmedia/status/2098737495437615346?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>அடிப்பட்ட புலியாக களத்தில் திமுக- வட்டியும்,முதலும் கொடுப்போம்</h3>
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விமான நிலையத்தில் ஓடு... ஓடு... என்று ஓடிய தலைவர் யார். திறமையற்ற, தெம்பற்ற ஓடுகாலி நாயே... சட்டமன்றம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. அடிபட்ட புலியாக திமுக களத்தில் நின்று கொண்டிருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் வட்டியும், முதலும் ஆக சேர்த்து ஓடுகாலி நாய்களுக்கு திருப்பிக் கொடுப்போம் என்று ஆக்ரோஷமாக பேசினார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-mayor-priya-speech-at-dmk-protest-condemning-chief-minister-joseph-vijay-remarks-104577.html" target="_blank" rel="noopener">என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-minister-nirmal-kumar-clarifies-power-shortage-due-to-wind-power-generation-interruption-104654.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 17:41:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-minister-nirmal-kumar-clarifies-power-shortage-due-to-wind-power-generation-interruption-104654.html</guid>
		            
			

    	<description><![CDATA[Minister Clarifies Power Shortage: தமிழகத்தில்  பல இடங்களில் 5 முதல் 6 மணி நேரம் வரை இரவு இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுவதாக பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/nirmal-kumar-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 12 :</strong> தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பல இடங்களில் 5 முதல் 6 மணி நேரம் வரை இரவு இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுவதாக பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் காற்றாலை மின்சாரம் தடைபட்டதே மின் வெட்டுக்கு காரணம் என அமைச்சர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/speaker-jcd-prabhakar-rebukes-minister-nirmal-kumar-over-his-remarks-98833.html" target="_blank" rel="noopener">நிர்மல் குமார்</a> விளக்கம் அளித்துள்ளார்.
<h3>தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன?</h3>
இந்த நிலையில் மின் வெட்டு குறித்து முதன்முறையாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/public-interest-litigation-filed-in-high-court-seeking-stay-on-maduranthakam-and-dharapuram-by-elections-104599.html">அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!</a></strong>

மேலும், அவரது பதிவில் செப்டம்பர் 11, 2026 நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் ராஜபாளையத்தில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைச்சர் ஜெகதீஸ்வரி தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மின் வெட்டு குறித்து ஒருவர் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/solomon-pappaiah-passes-away-state-honours-madurai-cremation-details-104601.html">“அன்புத் தாய்மார்களே”.. அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!</a></strong>

இதனையடுத்து உரையை முடித்துக் கொண்டு அவர் புறப்படத் தயாரானபோது அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சேத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், அதை சரிசெய்யக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். ஆனால், அமைச்சர் அந்த மனுவை வாங்காமல் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வெட்டை ஏன் சரி செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த தவெக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். போலீசார் பொது மக்களை சமாதானப்படுத்தி திருப்பிஅனுப்பினர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல&#8230; பெரும் வேதனை&#8230; திராவிட கழக வீரமணி கடும் தாக்கு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dravidar-kazhagam-leader-k-veeramani-severely-criticized-the-tvk-government-4-month-tenure-104643.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 16:39:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dravidar-kazhagam-leader-k-veeramani-severely-criticized-the-tvk-government-4-month-tenure-104643.html</guid>
		            
			

    	<description><![CDATA[K Veeramani Criticized TVK Govt : தமிழக வெற்றிக் கழக அரசின் 4 மாத ஆட்சி காலம் சாதனை கிடையாது. பெரும் வேதனை என்று திராவிட கழகத்தின் தலைவர் கி . வீரமணி கடுமையாக விமர்சித்து உள்ளார். அதை விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/veeramani-cm-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல&#8230; பெரும் வேதனை&#8230; திராவிட கழக வீரமணி கடும் தாக்கு!" /></figure>தமிழக வெற்றிக்கழக அரசின் 4 மாத ஆட்சி குறித்து திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அவசியமற்றதாக திணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக தவெக அரசு பெரும்பான்மைக்கு ஆதரவளித்து அந்த கட்சியில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் முன்பு இல்லாதது போல தற்போது விசித்திரமான குதிரை பேரம் நடைபெற்றுள்ளது. எம்எல்ஏ பதவிகளில் இருந்து விலகியவர்கள் தலைமைச் செயலகத்திலேயே அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்துள்ளனர். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக செலவழிக்கப்படும் தொகை மக்களின் வரிப்பணம் ஆகும்.
<h3>தவெக ஆட்சியை அளவிட இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பு</h3>
இதை வீணடிப்பதற்கு யார் உரிமை தந்தது. இந்த தேர்தலை திணித்து மக்கள் பணத்தை வீணடிக்க காரணம் யார் என்பதை மக்கள் அறிய மாட்டார்களா. தற்போதைய ஆட்சி காண பெரும்பான்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த இடைத்தேர்தல் வெற்றி தோல்வி ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது என்ற நிலையில், இடைத்தேர்தலில் முக்கியத்துவம் என்ன உள்ளது என்பதை சிந்தித்துப் பார்த்து அதற்கு ஏற்றவாறு மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். கடந்த 120 நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் தவெக ஆட்சியின் செயல்பாடுகளை அளவிடுவதற்கு இந்த இடைத்தேர்தல் தான் வாய்ப்பு.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dgp-mahesh-kumar-aggarwal-orders-the-transfer-of-46-dsps-in-tamil-nadu-104633.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!</a>
<h3>தவெக அரசின் 4 மாத ஆட்சியை எடை போட்டால்</h3>
பொதுவாக இடைத்தேர்தல் என்பது அரசை எடை போட்டு பார்க்கும் தேர்தல் ஆகும். அப்படி எடை போட்டு பார்க்கும்போது, தவெகவின் 4 மாத ஆட்சியில் யாரும் இதுவரை அறிந்திராத குதிரை பேரங்கள், கட்சி தாவல்கள், அரசியல் மாண்பை கேலிக்கு உள்ளாக்கும் நிகழ்வுகள் உள்ளிட்டவை நிகழ்ந்துள்ளன. மக்களின் முடிவுகளுக்கு எதிராக கட்சி மாறிய வேட்பாளர்களை தற்போது மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில் கொலைகளும், கூலி படைகளும், பாலியல் வன்கொடுமைகளும், ஆணவ படுகொலைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளன.
<h3>தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல.. வேதனை</h3>
தமிழகத்தை ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மக்களை பாதுகாத்து வந்தது கடந்த திமுக ஆட்சி. தற்போதைய தவெக அரசு 100 நாள் திட்ட பெயர் மாற்றத்தை ஆதரித்து பாஜக அரசு கொண்டு வந்த திட்டத்தை ஏற்று கையொப்பமிட்டுள்ளது. மொத்தத்தில் தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல... வேதனை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-mayor-priya-speech-at-dmk-protest-condemning-chief-minister-joseph-vijay-remarks-104577.html" target="_blank" rel="noopener">என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் செப்.15, 16  2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு &#8211; வானிலை மையம் எச்சரிக்கை</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-report-11-sep-2026-imd-forecasts-heavy-rain-in-tn-districts-on-september-15-and-16-104644.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 16:15:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-report-11-sep-2026-imd-forecasts-heavy-rain-in-tn-districts-on-september-15-and-16-104644.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu weather today : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வருகிற செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/rain-alert-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் செப்.15, 16  2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு &#8211; வானிலை மையம் எச்சரிக்கை" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 12 :</strong> தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-update-12-sep-2026-moderate-rain-forecasted-for-southern-districts-and-chennai-104478.html" target="_blank" rel="noopener">மழை</a> பெய்து வருகிறது. அந்த வகையில் வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 15, 16, 2026 ஆகிய 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்லதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் தனியார் வானிலை நிபுணர் ஹேமச்சந்திரன் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
<h3>தமிழகத்தில் செப்.15, 16 2நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு</h3>
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் செப்டம்பர் 15, 2026 முதல் செப்டம்பர் 22, 2026 வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர். கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி உள்பட 21 மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-was-murdered-in-balakrishnapuram-dindigul-district-104586.html">கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண்.. கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்பு.. திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்!</a></strong>

மேலும் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 12, 2026 இன்று மிதமான மழையும், வரும் செப்டம்பர்  13, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து வரும்  செப்டம்பர் 14, 2026 மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattinapakkam-new-secretariat-survey-starts-political-opposition-govt-clarification-104584.html">பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. குடியிருப்போர் கணக்கெடுப்பு தொடக்கம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!</a></strong></p>
அதேபோல், வரும் செப்டம்பர்  15,2026 நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், வரும் 16ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dgp-mahesh-kumar-aggarwal-orders-the-transfer-of-46-dsps-in-tamil-nadu-104633.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 15:51:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dgp-mahesh-kumar-aggarwal-orders-the-transfer-of-46-dsps-in-tamil-nadu-104633.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu DSPs Transfer : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் 46 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/01/policemen-apology-letter-to-dgp.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!" /></figure>தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த சுமார் 46 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி டி.எஸ்.பி. ஆக இருந்த ஜெகநாதன் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சரக உதவியாளராகவும், ஆவடி குற்ற ஆவண பிரிவின் டி.எஸ்.பி. முத்துராஜா லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஆகவும், சென்னை குற்ற புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த சரஸ்வதி சென்னை ஐ. யூ. சி. ஏ. டபுள்யூ. உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
<h3>சென்னை வடக்கு டிஎஸ்பி பணியிட மாற்றம்</h3>
இதே போல சென்னை வடக்கு தீவிர குற்றப்பிரிவு டிஎஸ்பி தமிழ்வாணன் ஆவடி காவல் ஆணையரத்துக்குட்பட்ட பொன்னேரி சரக உதவி ஆணையராகவும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிஎஸ்பி பெசினா பிவி திருநெல்வேலி குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ஆகவும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் டிஎஸ்பி காயத்ரி மதுரை ஐ.யூ.சி.ஏ. டபிள்யூ. டிஎஸ்பி ஆகவும். தஞ்சாவூர் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் வேதாரண்யம் கடலோர காவல் படை பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/public-interest-litigation-filed-in-high-court-seeking-stay-on-maduranthakam-and-dharapuram-by-elections-104599.html" target="_blank" rel="noopener">அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!</a>
<h3>திருநெல்வேலி சிறப்பு பிரிவு டிஎஸ்பி</h3>
திருநெல்வேலி சிறப்பு பிரிவு டிஎஸ்பி சுதேசன் திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பிரியதர்ஷினி திருநெல்வேலி சிறப்பு பிரிவுக்கும், ஆவடி காவல் ஆணையரகத்தில் புலனாய்வு பிரிவு டிஎஸ்பி மணிவண்ணன் காஞ்சிபுரம் சப் டிவிஷனுக்கும், சென்னை வண்ணாரப்பேட்டை சரக உதவி ஆணையராக இருந்த மகேந்திரன் கிருஷ்ணகிரி உற்ற ஆவண பிரிவு டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
<h3>மதுரை குற்றப்பிரிவு டிஎஸ்பி மாற்றம்</h3>
இதே போல, மதுரை குற்றப்பிரிவு டிஎஸ்பி நிவேதா லட்சுமி மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், மயிலாடுதுறை சப் டிவிஷன் டி.எஸ்.பி. பாலாஜி சென்னை உயர்நீதிமன்ற சரக உதவி ஆணையராகவும், ராமநாதபுரம் சப் டிவிஷன் டிஎஸ்பி சுகுமாரன் பரமக்குடி சப் டிவிஷனுக்கும், திருவண்ணாமலை சப் டிவிஷன் டிஎஸ்பி ராஜா திருப்பூர் நகர கேவிஆர் நகர் சரக உதவி ஆணையராகவும், திண்டுக்கல் ரூரல் சப் டிவிஷன் டிஎஸ்பி சங்கர் திருச்சி மாவட்டம், விஜயபுரம் சப் டிவிஷனுக்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
<h3>திருச்சி நகர புலனாய்வு பிரிவு உதவி ஆணையர்</h3>
திருச்சி நகர புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் பிரிதர் கன்னியாகுமரி குற்றப்பிரிவுக்கும், திருநெல்வேலி நகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் செந்தாமரைக்கண்ணன் லஞ்ச ஒழிப்பு துறைக்கும், ஓசூர் சப் டிவிஷன் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறைக்கும், திருநெல்வேலி ரூரல் சப் டிவிஷன் ரகுபதி ராஜா சங்கரன்கோவில் சப் டிவிஷனுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, 46 டிஎஸ்பிக்கள் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-mayor-priya-speech-at-dmk-protest-condemning-chief-minister-joseph-vijay-remarks-104577.html" target="_blank" rel="noopener">என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நாளை திருமணம்.. செல்போனுக்கு வந்த ஒரு மெசேஜ்.. திருப்பத்தூரில் மணப்பெண் எடுத்த முடிவு.. திருமண வீடே கதறி அழுகிறது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/young-woman-whose-marriage-was-fixed-engages-in-self-harm-in-vaniyambadi-104615.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 14:54:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/young-woman-whose-marriage-was-fixed-engages-in-self-harm-in-vaniyambadi-104615.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tirupattur Young Woman Self Harm : திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், செல்போனில் இளைஞர் மிரட்டியதால் இளம் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/tirupattur-women-self-harm.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நாளை திருமணம்.. செல்போனுக்கு வந்த ஒரு மெசேஜ்.. திருப்பத்தூரில் மணப்பெண் எடுத்த முடிவு.. திருமண வீடே கதறி அழுகிறது!" /></figure>திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கொத்தகோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி அலமேலு. தம்பதிக்கு 20 வயதில் ஸ்ரீ தர்ஷினி என்ற மகள் இருந்தார். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 2- ஆம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். இந்த நிலையில், ஸ்ரீதர்ஷினிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அதன்படி, மாப்பிள்ளை பார்க்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
<h3>திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய இளைஞர்</h3>
இந்த நிலையில், மாணவி ஸ்ரீதர்ஷினி இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவிக்கு திருமணம் நடைபெற இருந்ததை அறிந்த அந்த இளைஞர் செல்போன் மூலம் ஸ்ரீதர்ஷினியை தொடர்பு கொண்டு என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாயா என்று மிரட்டியதாக தெரிகிறது. அத்துடன், வாட்ஸ் ஆப்பில் ஆடியோ அனுப்பியதாக தெரிகிறது. இதில், மனம் உடைந்த மாணவி ஸ்ரீதர்ஷினி சம்பவத்தன்று இரவு அனைவரும் சென்று தூங்கச் சென்ற நிலையில் விஷத்தை அருந்தி மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-with-a-fixed-marriage-dies-in-road-accident-in-dindigul-104574.html" target="_blank" rel="noopener">திண்டுக்கல்லில் சோகம்.. பைக் மீது மோதிய கார்.. நாளை திருமணம் நடக்க இருந்த பெண் பலி.. அவசர சிகிச்சையில் ராணுவ வீரர்!</a>
<h3>விஷம் அருந்து தற்கொலை செய்த இளம் பெண்</h3>
அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. என் தொடர்பாக தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாணவியின் தந்தை விநாயகம் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, அந்த மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் தொடர்பு கொண்டு பேசிய இளைஞரின் செல்போன் நம்பரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
<h3>இளம் பெண்ணுக்கு அனுப்பிய ஆடியோ வைரல்</h3>
இதில், மாணவிக்கு, அந்த இளைஞர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக, மாணவிக்கு அந்த இளைஞர் அனுப்பிய வாட்ஸ் ஆப் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பத்தூரில் நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-was-murdered-in-balakrishnapuram-dindigul-district-104586.html" target="_blank" rel="noopener">கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண்.. கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்பு.. திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/public-interest-litigation-filed-in-high-court-seeking-stay-on-maduranthakam-and-dharapuram-by-elections-104599.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 14:09:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/public-interest-litigation-filed-in-high-court-seeking-stay-on-maduranthakam-and-dharapuram-by-elections-104599.html</guid>
		            
			

    	<description><![CDATA[Maduranthakam - Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என்றும், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/high-court-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!" /></figure>தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்து வருகின்றன. இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 6- ஆம் தேதி மேற்கண்ட இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த இடை தேர்தலை நடத்துவதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தடை விதிக்க வேண்டும். எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்பவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>இடைத்தேர்தல் நடத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு</h3>
இந்த மனு தமிழக அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது. ஏற்கனவே, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு எதிராக எதிர்கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் வழக்குகளை தொடுத்துள்ளனர். இந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவதால், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க மறுத்துள்ளது. அத்துடன், இந்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடைக்காலம் வருகிற செப்டம்பர் 28- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-vanni-arasu-stated-no-one-is-qualified-to-lecture-thirumavalavan-on-social-justice-104550.html" target="_blank" rel="noopener">சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை… அமைச்சர் வன்னி அரசு!</a>
<h3>அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் புயல்</h3>
இப்படி இருக்கும் சூழ்நிலையில், தேர்தல் வழக்குகள் எதுவும் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
<h3>இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்</h3>
நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே, மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளில் நிலுவையில் இருக்கும் தேர்தல் வழக்குகள் முடிவடைந்த பின்னரே இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-mayor-priya-speech-at-dmk-protest-condemning-chief-minister-joseph-vijay-remarks-104577.html" target="_blank" rel="noopener">என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;அன்புத் தாய்மார்களே&#8221;.. அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/solomon-pappaiah-passes-away-state-honours-madurai-cremation-details-104601.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 13:57:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/solomon-pappaiah-passes-away-state-honours-madurai-cremation-details-104601.html</guid>
		            
			

    	<description><![CDATA[Solomon Pappaiah Funeral: பிரபல தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக காலமானார். மதுரையில் 10 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தத்தநேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. "நான் பெரியாரின் தொண்டன், மதச் சடங்குகளில் நம்பிக்கையில்லை" என்ற அவரது உயில் விருப்பத்தின்படியே உடல் தகனம் செய்யப்பட்டது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/salamon.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;அன்புத் தாய்மார்களே&#8221;.. அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!" /></figure><strong>மதுரை, செப்டம்பர் 12:</strong> தமிழக அரசு மரியாதையுடன் தமிழறிஞர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/solomon-pappaiah-passes-away-tamil-nadu-govt-announces-state-honours-funeral-104548.html" target="_blank" rel="noopener">சாலமன் பாப்பையா</a> உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது இயல்பான மதுரை பேச்சு வழக்காலும், எளிமையான நகைச்சுவை பாணியாலும் தமிழை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தப் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். மதுரை ஞானஒளிபுரம் விசுவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழார்வலர்கள் நேரில் வருகை தந்து அவரது உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattimandram-moderator-solomon-pappaiah-life-story-and-journey-104339.html" target="_blank" rel="noopener">Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!</a></strong>
<h3>முழு அரசு மரியாதையும், பிரியாவிடையும்:</h3>
தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, 10 காவலர்கள் துப்பாக்கிகளை ஏந்தி 10 குண்டுகள் முழங்கத் தமிழ்நாடு அரசின் முழு அரசு மரியாதை அவருக்கு வழங்கப்பட்டது. "தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!" என்ற முழக்கங்களுக்கு இடையே, மேடைகளில் பல நூற்றுக்கணக்கான பேச்சாளர்களை உருவாக்கிய தமிழறிஞர்கள் மற்றும் அவரது சீடர்கள் சூழ, அவரது இறுதி ஊர்வலம் மதுரையின் முக்கிய வீதிகள் வழியாக விமரிசையாக நடைபெற்றது.
<h3>மதச் சடங்குகளைத் தவிர்த்து தகனம்:</h3>
பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும், சடங்குகள் மற்றும் மத நம்பிக்கைகளில் தனக்கு ஈடுபாடு இல்லை என்பதைச் சாலமன் பாப்பையா வெளிப்படையாகப் பின்பற்றி வந்தார். "நான் தந்தை பெரியாரின் தொண்டன்; எனக்கு மத நம்பிக்கைகளில் உடன்பாடில்லை. எனவே எனது மறைவிற்குப் பின் உடலை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டும்" என்று அவர் ஏற்கனவே உயில் எழுதி வைத்திருந்தார். அவரது அந்த இறுதி விருப்பத்திற்கு மதிப்பளித்து, மதுரை தத்தநேரி மின் மயானத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-scholar-and-pattimandram-judge-solomon-pappaiah-dies-at-90-104334.html" target="_blank" rel="noopener">அன்பு தாய்மார்களே!… பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார் – ரசிகர்கள் சோகம்</a></strong>
<h3>சாதனைகள் நிறைந்த வாழ்வு:</h3>
1936-ஆம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, இலக்கியக் கருத்துக்களையும் கடினமான கோட்பாடுகளையும் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்த்தவர். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராகச் செயல்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களைத் தன் பேச்சால் கட்டிப்போட்டார். இவரது அளப்பரிய தமிழ் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு 2000-ஆம் ஆண்டில் 'கலைமாமணி' விருதையும், இந்திய அரசு 2021-ஆம் ஆண்டில் 'பத்மஸ்ரீ' விருதையும் வழங்கி கௌரவித்தது. பட்டிமன்றம் மட்டுமன்றி 'முதல்வன்', 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண்.. கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்பு.. திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-was-murdered-in-balakrishnapuram-dindigul-district-104586.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 13:40:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-was-murdered-in-balakrishnapuram-dindigul-district-104586.html</guid>
		            
			

    	<description><![CDATA[Dindigul Woman Murdered : திண்டுக்கல் மாவட்டத்தில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண்ணை மர்ம நபர்களை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/dindugal-women-murder.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண்.. கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்பு.. திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்!" /></figure>திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் ( 26 வயது). இவரது கணவர் ஜெயசீலன் நில அளவை துறையில் சார் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து காளியம்மாள் அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை காளியம்மாளை பார்ப்பதற்காக அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்றுள்ளனர். அவர்கள் வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில், உள்ளே சென்றனர். அப்போது, காளியம்மாள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
<h3>வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை</h3>
அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட காளியம்மாளின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், காளியம்மாளின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-hospital-employee-self-harm-in-thiruvattar-after-girlfriend-refuses-to-speak-to-him-104547.html" target="_blank" rel="noopener">காதலி பேச மறுத்ததால் சோகம்.. கன்னியாகுமரியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. போலீசார் விசாரணை!</a>
<h3>கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை</h3>
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. காளியம்மாளின் வீட்டுக்கு வந்து சென்றது யார் என்பது குறித்தும், அவரது செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
<h3>காளியம்மாள் கணவரிடம் போலீசார் விசாரணை</h3>
இதனிடையே, காளியம்மாள் கணவரான ஜெயசீலன் என்பவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதில், குடும்ப பிரச்சனை காரணமாக காளியம்மாள் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. குடியிருப்பு பகுதியில் வீட்டில் உள்ளே இளம் பெண் கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-with-a-fixed-marriage-dies-in-road-accident-in-dindigul-104574.html" target="_blank" rel="noopener">திண்டுக்கல்லில் சோகம்.. பைக் மீது மோதிய கார்.. நாளை திருமணம் நடக்க இருந்த பெண் பலி.. அவசர சிகிச்சையில் ராணுவ வீரர்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. குடியிருப்போர் கணக்கெடுப்பு தொடக்கம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattinapakkam-new-secretariat-survey-starts-political-opposition-govt-clarification-104584.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 13:39:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattinapakkam-new-secretariat-survey-starts-political-opposition-govt-clarification-104584.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Secretariat Pattinapakkam: சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட கள ஆய்வுகள் மற்றும் குடியிருப்புப் பகுதி கணக்கெடுப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. இத்திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் உள்ளூர் மீனவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இடநெருக்கடியைக் காரணம் காட்டி இத்திட்டத்திற்கான நியாயத்தை அரசுத் தரப்பு எடுத்துரைத்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/pattinapakkam-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. குடியிருப்போர் கணக்கெடுப்பு தொடக்கம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!" /></figure><strong>சென்னை, செப்.12:</strong> தமிழ்நாட்டின் நிர்வாக மையமான தலைமைச் செயலகம் தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வளாகத்தில் இடநெருக்கடி அதிகரித்து வருவதால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தைக் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-secretariat-in-pattinapakkam-political-leaders-opposition-104274.html" target="_blank" rel="noopener">பட்டினப்பாக்கம்</a> பகுதியில் சுமார் 26.5 ஏக்கர் பரப்பளவில், 15 தளங்களுடன் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர் குடும்பங்கள் குறித்த விரிவான கள ஆய்வும், குடியிருப்போர் வகைப்பாடு கணக்கெடுப்புப் பணிகளும் தற்போது பட்டினப்பாக்கத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpi-laid-conditions-for-support-to-tvk-in-madurantakam-and-dharapuram-by-elections-based-on-sources-104457.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!</a></strong>
<h3>அரசுத் தரப்பின் முதற்கட்ட நடவடிக்கை:</h3>
பட்டினப்பாக்கம் பகுதியில் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கியுள்ள அதிகாரிகள், அங்குள்ள குடியிருப்புவாசிகளைத் துல்லியமாக மூன்று முதன்மைப் பிரிவுகளாகப் பிரித்துத் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே அரசு குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று வாழ்பவர்கள் முதல் வகையாகவும், புதிய வீடு ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்கள் இரண்டாம் வகையாகவும், எவ்வித அதிகாரப்பூர்வ அனுமதியுமின்றி ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் மூன்றாம் வகையாகவும் பிரிக்கப்பட்டுப் பட்டியலிடப்படுகின்றனர். திட்டப் பணிகள் முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பாக, தகுதியுள்ள குடியிருப்பாளர்களுக்கு மாற்று உறைவிட வசதிகளை முன்னதாகவே உறுதிசெய்து, தடையற்ற முறையில் நிலத்தைக் கையகப்படுத்துவதையே அரசு தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
<h3>எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு:</h3>
அதேவேளையில், கடலோரப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் இவ்வளவு பெரிய மதிப்பீட்டில் புதிய நிர்வாக வளாகத்தைக் கட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழல் மற்றும் விவசாயப் பிரச்சனைகள் சவாலாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், கடன்களை வாங்கி ரூ.1,200 கோடியில் புதிய கட்டிடம் எழுப்புவது தேவையற்ற விரயம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். மேலும் அடர்ந்த ஜனத்தொகை கொண்ட கடலோரப் பகுதியில் இத்திட்டம் அமைவது அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதேபோல், சென்னை மாநகர எல்லைக்குள் இவ்வளவு பெரிய வளாகத்தைக் கொண்டுவருவது போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கும் என்றும், நெய்தல் நிலச் சூழலியல் மற்றும் கடலோரக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் என்றும் மதிமுக நிர்வாகி துரை வைகோ தனது கவலையைப் பதிவுசெய்துள்ளார்.
<h3>பொதுமக்களின் வாழ்வாதாரக் கவலை:</h3>
பட்டினப்பாக்கம் மற்றும் மெரினா லூப் சாலைப் பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள், படகுகளை நிறுத்துவதற்கும், வலைகளைப் பழுதுபார்ப்பதற்கும், கருவாடு காயவைப்பதற்கும் இந்தப் பகுதியையே முதன்மையாக நம்பியுள்ளனர். புதிய கட்டுமானத்தால் தங்களின் வாழ்வாதாரமும், கடலுக்குச் செல்லும் வழியும் முற்றிலும் பாதிக்கப்படும் என அஞ்சும் உள்ளூர் மீனவ அமைப்புகளும் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றக் கோரி போராட்டம் அறிவித்துள்ளன. மற்றொருபுறம், இத்திட்டத்தால் சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் சந்திப்பில் ஏற்படக்கூடிய கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கையாள, கலங்கரை விளக்கத்தில் இருந்து அடையாறு திரு.வி.க. பாலம் வரை 3.5 கி.மீ நீளத்திற்கு உயர்மட்டப் பாதை அமைக்கவும் அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-k-a-sengottaiyan-stated-that-new-parties-would-join-the-tvk-alliance-104434.html" target="_blank" rel="noopener">தவெக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்.. கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்கிறாரா… கே.ஏ. செங்கோட்டையன்!</a></strong>
<h3>இடநெருக்கடியும் புதிய வளாகத்தின் அவசியமும்:</h3>
எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், திட்டத்தின் அவசியத்தைக் கே. ஏ. செங்கோட்டையன் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். தற்போது இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் வெறும் 4.5 ஏக்கர் அளவிலான குறுகிய பரப்பளவிலேயே அமைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிர்வாகத் தேவைகள், மக்கள் சந்திப்புகள் மற்றும் நவீனக் தொழில்நுட்பக் உள்கட்டமைப்புகளுக்கு இந்தப் பரப்பளவு முற்றிலும் போதுமானதாக இல்லை என்று அவர் தெரிவித்தார். எந்தவொரு புதிய பெருந்திட்டமும் கொண்டுவரப்படும் போது இயல்பாகவே எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுவது வாடிக்கைதான் என்றும், அனைத்து சவால்களையும் கையாண்டு மாநிலத்தின் எதிர்கால நிர்வாக வசதிக்காக இப்புதிய தலைமைச் செயலகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-mayor-priya-speech-at-dmk-protest-condemning-chief-minister-joseph-vijay-remarks-104577.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 13:01:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-mayor-priya-speech-at-dmk-protest-condemning-chief-minister-joseph-vijay-remarks-104577.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chennai Mayor Priya Speech : எனது தலைவரை தொட்டவர்களை விடமாட்டோம் என்று சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா தெரிவித்தார். முதல்வர் விஜய் பேச்சை கண்டித்து நடைபெற்ற திமுக போராட்டத்தில் மேயர் பிரியா இவ்வாறு கூறினார். முழு விவரத்தை பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/cm-vijay-mayor-priya.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!" /></figure>தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் மிசா குறித்தும், மு.க. ஸ்டாலின் குறித்தும் பேசியதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்று பேசியதாவது: மிசா சட்டத்தை பற்றி தவெகவினருக்கு என்ன தெரியும். நீங்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்து கேள்வி கேட்கலாமா. அந்த தகுதி தவெகவுக்கு உள்ளதா. சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சொல்லித் தரவில்லை. இதில், பயிற்சி பட்டறை வேறு கொடுத்துள்ளீர்கள். யாரை சீண்டி பார்த்து உள்ளீர்கள் தெரியுமா. தெரியாமல் சீண்டி உள்ளீர்கள். நாங்களாக பிரச்சனைக்கு போக மாட்டோம். ஆனால், என்ன பிரச்சனை வந்தாலும் என்னைக்கும் விடமாட்டோம்.
<h3>சட்டமன்றத்தில் 3 மணி நேரம் முதல்வர் நடித்துள்ளார்</h3>
நீங்கள் விட்டாலும், நாங்கள் அந்த பிரச்சனையை விட மாட்டோம். படத்தில் 3 மணி நேரம் நடிப்பது போன்று ஒரு மணி நேரம் சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேசி விட்டு சென்றுள்ளார். தமிழகத்தின் வரலாறு என்ன. அண்ணா மற்றும் கருணாநிதி, மு. க. ஸ்டாலின் தமிழையும், தமிழ்நாட்டையும் வளர்ப்பதற்கு எவ்வளவு பாடுபட்டுள்ளனர் என்று தமிழக மக்கள் பார்த்துள்ளனர். இன்று மிசா சட்டத்தை சட்டப்பேரவையில் பேசி உள்ளீர்கள். மிசா சட்டம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/maduranthakam-and-dharapuram-by-election-tvk-appointment-of-election-officials-104557.html" target="_blank" rel="noopener">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்.. தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது தவெக!</a>
<h3>எனது தலைவரை தொட்டவரை விடமாட்டோம்</h3>
புறமுதுகை காட்டிக் கொண்டு ஓடு ஓடு ஓடு என்று ஓடிவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை செல்லக்கூடாது என்று சொல்லி உள்ளனர். அப்படி சொல்லிவிட்டு நீங்கள் ஏன் ஓடினீர்கள். தமிழகத்தில் நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். என் தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்று சொல்வார்கள். அதே போல, எனது தலைவரை தொட்டது யாராக இருந்தாலும்... அது மாண்புமிகுவாக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் என்று பரபரப்பாக பேசினார்.
<h3>சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதன் பின்னணி</h3>
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்தும், சர்க்காரியா கமிஷன் குறித்தும் முதல்வர் விஜய் ஆக்ரோஷமாக பேசி இருந்தார். இதில், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றும், அந்த சட்டம் குறித்து அனைவருக்கும் எல்லாம் தெரியும் என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனை கண்டித்து தான் தற்போது திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மேயர் பிரியா மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-vanni-arasu-stated-no-one-is-qualified-to-lecture-thirumavalavan-on-social-justice-104550.html" target="_blank" rel="noopener">சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை… அமைச்சர் வன்னி அரசு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திண்டுக்கல்லில் சோகம்.. பைக் மீது மோதிய கார்.. நாளை திருமணம் நடக்க இருந்த பெண் பலி.. அவசர சிகிச்சையில் ராணுவ வீரர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-with-a-fixed-marriage-dies-in-road-accident-in-dindigul-104574.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 12:25:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/woman-with-a-fixed-marriage-dies-in-road-accident-in-dindigul-104574.html</guid>
		            
			

    	<description><![CDATA[Dindigul Accident Women Dies : திண்டுக்கல் மாவட்டத்தில் வருங்கால கணவருடன் பைக்கில் சென்ற போது கார் மோதியதில் நாளை திருமணம் நடைபெற இருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/dindugal-accident.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திண்டுக்கல்லில் சோகம்.. பைக் மீது மோதிய கார்.. நாளை திருமணம் நடக்க இருந்த பெண் பலி.. அவசர சிகிச்சையில் ராணுவ வீரர்!" /></figure>திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் ஜெப பாஸ்டின் ( 29 வயது). இவர், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், கமலாபுரம் சக்கையா நாயக்கனூர் பகுதியை சேர்ந்த மானுவேல் மகள் மரிய வெல்சியா ( 26 வயது) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இவர்களது திருமணம் நாளை ஞாயிற்றுக்கிழமை ( ஆகஸ்ட் 13- ஆம் தேதி) நடைபெற இருந்தது. இந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை மதுரையில் நடைபெற்ற செவிலியர் தேர்வில் பங்கேற்பதற்காக மணமகள் வெல்சியாவை, மணமகன் ஜெப பாஸ்டின் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இவர்களது பைக் அதிகாலை 3 மணி அளவில் திண்டுக்கல்- மதுரை தேசிய 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
<h3>பைக் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவர்</h3>
அப்போது, வாடிப்பட்டி அருகே உள்ள சாணம்பட்டி பிரிவு அருகே இவர்களது பைக் சென்ற போது, அந்த வழியாக கோயம்புத்தூரில் இருந்து மதுரைக்கு சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்து சிதறியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி ஜெப பாஸ்டின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் ஜெப பாஸ்டின் மற்றும் மரிய வெல்சியா தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-medical-college-student-self-harm-from-kelambakkam-chengalpattu-104453.html" target="_blank" rel="noopener">செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!</a>
<h3>பெண் உயிரிழப்பு- ராணுவ வீரருக்கு தீவிர சிகிச்சை</h3>
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இருவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மரிய வெல்சியா உயிரிழந்தார். ஜெப பாஸ்டின் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
<h3>வாடிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை</h3>
இந்த சம்பவம் குறித்து மரிய வெல்சியாவின் குடும்பத்தினர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுனர் இடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக, இந்த விபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனையில் குவிந்து வெல்சியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-hospital-employee-self-harm-in-thiruvattar-after-girlfriend-refuses-to-speak-to-him-104547.html">காதலி பேச மறுத்ததால் சோகம்.. கன்னியாகுமரியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. போலீசார் விசாரணை!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>லண்டனில் முதல்வர் விஜய்.. செப்.17-ல் நடப்பதாக இருந்த &#8216;காமராஜர் காலை உணவு திட்டம்&#8217; தள்ளிப்போகிறதா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-kamarajar-breakfast-scheme-expansion-postponed-london-trip-104562.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 12:04:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-kamarajar-breakfast-scheme-expansion-postponed-london-trip-104562.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kamarajar Breakfast Scheme Expansion: தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய தவெக அரசு முடிவு செய்துள்ளது. காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க விழா செப்டம்பர் 17 அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக விழா தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/cm-vijay-41.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="லண்டனில் முதல்வர் விஜய்.. செப்.17-ல் நடப்பதாக இருந்த &#8216;காமராஜர் காலை உணவு திட்டம்&#8217; தள்ளிப்போகிறதா?" /></figure><strong>செப்டம்பர், 12:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-update-12-sep-2026-moderate-rain-forecasted-for-southern-districts-and-chennai-104478.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு இத்திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் உள்ள அவர் பயின்ற பள்ளியிலேயே, பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று இந்த விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கி வைக்கப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpi-laid-conditions-for-support-to-tvk-in-madurantakam-and-dharapuram-by-elections-based-on-sources-104457.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!</a></strong>
<h3>செப்.17ல் சென்னை திரும்பும் முதல்வர்:</h3>
இருப்பினும், இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழோ அறிவிப்போ இதுவரை அரசால் வெளியிடப்படாத நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் லண்டன் சென்றுள்ளார். திட்டமிடப்பட்ட பயண அட்டவணையின்படி முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 8.30 மணி அளவிலேயே லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் 17 அன்று விருதுநகரில் திட்டமிட்டபடி காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க விழா நடைபெறுமா என்பதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.
<h3>காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்:</h3>
ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வரும் சூழலில், இத்திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்வதன் மூலம் மேலும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாகப் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக தவெக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி, திட்டத்திற்குப் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனவும் மறுபெயரிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் 15,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/thirumavalavan-speech-dmk-alliance-breakdown-tvk-vijay-secular-front-104492.html" target="_blank" rel="noopener">“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருக்கணும்!”.. திமுகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!!</a></strong>
<h3>வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்படும் திட்டம்:</h3>
காலை உணவுத் திட்டம் என்பதால் இதற்கான தொடக்க விழாக்கள் பொதுவாகக் காலை 7.00 மணி முதல் 7.30 மணிக்குள்ளாகவே நடைபெறுவது வழக்கம். ஆனால், முதலமைச்சர் லண்டனில் இருந்து காலை 8.30 மணிக்கே சென்னை வந்தடைவார் என்பதால், அன்றைய தினமே உடனடியாக விருதுநகருக்குச் சென்று காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதன்காரணமாக, இத்திட்டத்தின் தொடக்க விழா செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறுமா அல்லது வேறொரு தேதிக்குத் தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை&#8230; அமைச்சர் வன்னி அரசு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-vanni-arasu-stated-no-one-is-qualified-to-lecture-thirumavalavan-on-social-justice-104550.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 11:16:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-vanni-arasu-stated-no-one-is-qualified-to-lecture-thirumavalavan-on-social-justice-104550.html</guid>
		            
			

    	<description><![CDATA[Minister Vanni Arasu Latest Speech : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு சமூக நீ தி குறித்து பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை என்று அந்தக் கட்சியின் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்து உள்ளார் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/thiruma-vanni-arasu.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை&#8230; அமைச்சர் வன்னி அரசு!" /></figure>விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு சமூக நீதி குறித்து பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை என்றார் அமைச்சர் வன்னி அரசு. இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கடந்த 2019- ஆம் ஆண்டு 103- ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதே போல, அடுத்த ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த சட்டத்துக்கு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளித்துள்ளார். இதனை எதிர்த்து விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்ட அறிஞர் வழக்கறிஞர் கௌதம் பாட்டியா தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு இடபிள்யூஇ சட்டத்தை எதிர்த்து மிகவும் விரிவான குற்றப் அபிடவிட்டை தாக்கல் செய்திருந்தது.
<h3>ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு</h3>
இந்த வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா எழுச்சித்தமிழர் சார்பில் 34 பக்க எழுத்து பூர்வ வாதத்தை சமர்ப்பித்து இருந்தார். திருமாவளவன் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்டோரின் வழக்கில் கடந்த 2022- ஆம் ஆண்டு பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 3:2 என்ற கணக்கில் தீர்ப்பளித்தது. மருத்துவ படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்து வலியுறுத்தி இருந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpi-laid-conditions-for-support-to-tvk-in-madurantakam-and-dharapuram-by-elections-based-on-sources-104457.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!</a>
<h3>கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்யக்கோரி போராட்டம்</h3>
இதை தொடர்ந்து, தான் திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டங்களை மேற்கொண்டது. ஓபிசி சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2020- ஆம் ஆண்டு கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இணைய வழியில் திருமாவளவன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசியிருந்தார்.
<h3>சமூக நீதி குறித்து பாடம் எடுக்க தகுதி இல்லை</h3>
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கொரோனா உச்சம் தொட்ட காலத்திலும் தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தை மேற்கொண்டது. புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்று பேசியிருந்தார். கடந்த 2021- ஆம் ஆண்டு மத்திய அரசு ஓபிசி பிரிவினருக்கு மருத்துவ படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஒதுக்கீடு வழங்குவதற்கு முன் வந்தது. இது சமூக நீதி இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பிரகடனப்படுத்தினார். அப்போது, முன்னேறிய சமுதாயத்தினருக்கு தரப்படும் ஈ.டபிள்யூ.எஸ் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் எதிர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/thirumavalavan-speech-dmk-alliance-breakdown-tvk-vijay-secular-front-104492.html" target="_blank" rel="noopener">“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருக்கணும்!”.. திமுகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்.. தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது தவெக!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/maduranthakam-and-dharapuram-by-election-tvk-appointment-of-election-officials-104557.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 11:11:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/maduranthakam-and-dharapuram-by-election-tvk-appointment-of-election-officials-104557.html</guid>
		            
			

    	<description><![CDATA[Maduranthakam- Dharapuram By Election : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி குழுவை அமைத்து தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதில், யார் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தை இந்தப்பதிவில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/cm-vijay-og-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்.. தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது தவெக!" /></figure>தமிழகத்தில் அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கட்சிகள் சார்பில் தேர்தல் பணி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணி குழுவும், பணிகளை கண்காணிக்க மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-k-a-sengottaiyan-stated-that-new-parties-would-join-the-tvk-alliance-104434.html" target="_blank" rel="noopener">தவெக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்.. கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்கிறாரா… கே.ஏ. செங்கோட்டையன்!</a>
<h3>தேர்தல் கண்காணிப்பாளர்கள்</h3>
<ul>
 	<li>நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்.</li>
 	<li>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன்.</li>
 	<li>மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்.</li>
</ul>
<h3>மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி (தேர்தல் பணிக்குழு)</h3>
<strong>பொறுப்பாளர்:</strong>
<ul>
 	<li>பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.</li>
</ul>
<strong>இணை பொறுப்பாளர்கள்:</strong>
<ul>
 	<li>அமைச்சர் ராஜ்குமார்.</li>
 	<li>அமைச்சர் தென்னரசு.</li>
 	<li>அமைச்சர் வினோத்.</li>
</ul>
<strong>துணை பொறுப்பாளர்கள்</strong>
<ul>
 	<li>சரவண மூர்த்தி ( சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்).</li>
 	<li>தியாகராஜன் ( செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்).</li>
 	<li>விஜயராஜ் ( திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்).</li>
 	<li>காமாட்சி ( பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்).</li>
 	<li>எம். எஸ். பாலாஜி என்ற மணிகண்டன் ( செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர்).</li>
</ul>
<h3>தாராபுரம் ( தனி) சட்டமன்ற தொகுதி:-</h3>
<strong>பொறுப்பாளர்கள்:</strong>
<ul>
 	<li>சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். அருண் ராஜ்.</li>
</ul>
<strong>இணை பொறுப்பாளர்கள்:</strong>
<ul>
 	<li>கைத்தறி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி.</li>
 	<li><em>பால்வளத் துறை</em> அமைச்சர் விஜயலட்சுமி.</li>
 	<li>வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.</li>
</ul>
<h3>துணை பொறுப்பாளர்கள்:</h3>
<ul>
 	<li>பாலமுருகன் ( திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்).</li>
 	<li>சத்தியபாமா ( திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்).</li>
 	<li>ராம்குமார் ( பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்).</li>
 	<li>திலீப் ( நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்).</li>
 	<li>சத்தியா ( கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்).</li>
</ul>
<h3>தவெக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்</h3>
ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பணிகளை கண்காணிப்பார்கள். அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கட்சியினர் அனைவரும் இந்த குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவெகவின் விசில் சின்னம் மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதிகளில் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தவெக சார்பில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-vanni-arasu-stated-no-one-is-qualified-to-lecture-thirumavalavan-on-social-justice-104550.html" target="_blank" rel="noopener">சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை… அமைச்சர் வன்னி அரசு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சாலமன் பாப்பையா மறைவு.. அரசு மரியாதை அறிவித்தது தமிழக அரசு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/solomon-pappaiah-passes-away-tamil-nadu-govt-announces-state-honours-funeral-104548.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 10:48:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/solomon-pappaiah-passes-away-tamil-nadu-govt-announces-state-honours-funeral-104548.html</guid>
		            
			

    	<description><![CDATA[Solomon Pappaiah Funeral: பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், மதுரையில் நடைபெறும் அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/solomon-pappiah.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சாலமன் பாப்பையா மறைவு.. அரசு மரியாதை அறிவித்தது தமிழக அரசு!" /></figure><strong>மதுரை, செப்டம்பர் 12:</strong> தமிழின் பெருமையையும் தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த புகழ்பெற்ற தமிழறிஞரும் பேராசிரியருமான <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattimandram-moderator-solomon-pappaiah-life-story-and-journey-104339.html" target="_blank" rel="noopener">சாலமன் பாப்பையா</a> வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவு செய்தி தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக மட்டுமே பார்க்காமல், அவற்றைச் சிந்தனையைத் தூண்டும் அறிவுத்தளங்களாக மாற்றிய பெருமைக்குரிய சாலமன் பாப்பையாவின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ் சான்றோர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-scholar-and-pattimandram-judge-solomon-pappaiah-dies-at-90-104334.html" target="_blank" rel="noopener">அன்பு தாய்மார்களே!… பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார் – ரசிகர்கள் சோகம்</a></strong>
<h3>அமெரிக்கா முதல் மதுரை வரை:</h3>
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சாலமன் பாப்பையா, திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை எளிய தமிழில் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். தொலைநோக்கிகள் மற்றும் திரையரங்குகள் மூலம் பட்டிமன்றக் கலை உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் சென்று சேர முக்கியக் காரணமாக அமைந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், 'சிவாஜி' போன்ற திரைப்படங்களிலும் நடித்துத் தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். மேடைகளில் தனது தனித்துவமான குரலாலும், திருக்குறள் உரைகளாலும் பல தலைமுறைகளைக் கவர்ந்த அவரது மறைவு தமிழ் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
<h3>முதலமைச்சர் விஜய் இரங்கல்:</h3>
சாலமன் பாப்பையாவின் மறைவு குறித்துத் தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும் ஆழ்ந்த தமிழ் புலமையாலும் சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்று நினைவுகூர்ந்துள்ளார். பட்டிமன்ற மேடைகளை அறிவு சார்ந்த தளங்களாக உயர்த்தியதில் அவரது பங்கு மகத்தானது என்றும், தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattimandram-moderator-solomon-pappaiah-life-story-and-journey-104339.html" target="_blank" rel="noopener">Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!</a></strong>
<h3>தமிழக அரசு மரியாதை அறிவிப்பு:</h3>
சாலமன் பாப்பையா தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஆற்றிய இணையற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், இன்று நடைபெறும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைச்சர் சி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். மதுரையில் உள்ள தத்தனேரி மயானத்தில் இன்று அவரது உடல் தகணம் செய்யப்பட உள்ள நிலையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நிறைவுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காதலி பேச மறுத்ததால் சோகம்.. கன்னியாகுமரியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. போலீசார் விசாரணை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-hospital-employee-self-harm-in-thiruvattar-after-girlfriend-refuses-to-speak-to-him-104547.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 10:34:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-hospital-employee-self-harm-in-thiruvattar-after-girlfriend-refuses-to-speak-to-him-104547.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kanniyakumari Crime News : கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த காதலன் வீட்டில் சேலையா ல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/crime-news-.png" class="attachment-large size-large wp-post-image" alt="காதலி பேச மறுத்ததால் சோகம்.. கன்னியாகுமரியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. போலீசார் விசாரணை!" /></figure>கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள தச்சூர் குன்றுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் விஷ்ணு நந்தன் ( 23 வயது). இவர், சுங்கான் கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இவரும், அந்தப் பெண்ணும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில், விஷ்ணு நந்தன் சம்பவத்தன்று தனது காதலியிடம் பேசுவதற்காக செல்போனில் அவரை தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால், அந்த பெண் தனக்கு உன்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்ததாக தெரிகிறது. இதனால், மீண்டும் தனது காதலியை விஷ்ணு நந்தன் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
<h3>வீட்டுக்கு தூங்க சென்ற இளைஞர்</h3>
ஆனால், அந்த பெண் அவரது அழைப்பை ஏற்க மறுத்து பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதில், மிகவும் மனம் உடைந்த விஷ்ணு நந்தன் தனது நண்பர்களிடம் இந்த சம்பவத்தை கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது, அவரது நண்பர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, விஷ்ணு நந்தன் வீட்டின் அருகே உள்ள பழைய வீட்டில் இரவில் தூங்க சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை வெகு நேரம் ஆகியும் அந்த வீட்டின் கதவு திறக்காமல் இருந்துள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/man-hacks-daughter-and-son-in-law-with-a-sickle-in-sivagamipuram-near-pavoorchatram-104406.html" target="_blank" rel="noopener">மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த மகள்.. வீடு புகுந்து அரிவாளால் வெட்டித் தள்ளிய தந்தை.. தென்காசியில் கொடூரம்!</a>
<h3>வீட்டில் பிணமாக தொங்கிய காதலன்</h3>
இதனால், சந்தேகம் அடைந்த விஷ்ணு நந்தனின் தாய் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால், மேலும் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னலின் வழியாக வீட்டில் உள்ளே பார்த்தபோது, விஷ்ணு நந்தன் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியில் அவர் கத்திய நிலையில், சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தொடர்ந்து, விஷ்ணு நந்தனின் சடலத்தை மீட்டனர்.
<h3>திருவட்டார் போலீசார் விசாரணை</h3>
இது தொடர்பாக தகவல் அறிந்த திருவட்டார் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி பேசாததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துவர சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-medical-college-student-self-harm-from-kelambakkam-chengalpattu-104453.html" target="_blank" rel="noopener">செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெண்ணைக் கொன்று 3 நாட்கள் உடலுடனேயே தங்கியிருந்த கொலையாளி.. தேனியில் பேரதிர்ச்சி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/shocking-murder-in-theni-man-stays-with-womans-body-for-3-days-before-arrest-104497.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 08:17:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/shocking-murder-in-theni-man-stays-with-womans-body-for-3-days-before-arrest-104497.html</guid>
		            
			

    	<description><![CDATA[Shocking Murder in Theni: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பெண்ணைக் கொலை செய்து உடலைச் சாக்குமூட்டையில் கட்டி வைத்து, 3 நாட்களாக அந்த உடலுடனேயே கொலையாளி தங்கியிருந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டின் துர்நாற்றம் வீசியதை அடுத்து காவல்துறையினர் கதவை உடைத்துச் சோதனையிட்டபோது கொலையாளி பிடிபட்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/crime-scene-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெண்ணைக் கொன்று 3 நாட்கள் உடலுடனேயே தங்கியிருந்த கொலையாளி.. தேனியில் பேரதிர்ச்சி!" /></figure><strong>தேனி, செப்டம்பர் 12:</strong> தேனி நகருக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த லட்சுமி நகர் செல்லும் வழிப்பாதையில், வாடகை வீட்டில் தங்கியிருந்த நபர் ஒருவர் பெண்ணைக் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/2-arrested-for-the-murder-of-a-wedding-hall-owner-in-kallidaikurichi-nellai-104118.html" target="_blank" rel="noopener">படுகொலை</a> செய்து, அவரது உடலைச் சாக்குமூட்டையில் மூடிவைத்துவிட்டு 3 நாட்களாக அந்த உடலுடனேயே தங்கியிருந்த விபரீத சம்பவம் தற்போது காவல்துறையினரின் அதிரடி சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-candidates-maduranthakam-maragatham-kumaravel-and-dharapuram-sathyabama-background-details-104190.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!</a></strong>
<h3>சடலத்துடன் 3 நாட்கள்:</h3>
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் எல்லைக்குட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் புரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்து வந்த அப்துல் ரகுமான் (38) என்பவர் வாடகைக்குக் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த அம்சவல்லி (38) என்ற பெண்ணை அவர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக அந்தப் பெண்ணின் சடலத்தைச் சாக்குமூட்டையில் போட்டுக் கட்டி வைத்து, வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால், சடலத்தை வெளியே கொண்டு செல்ல முடியாமல் கடந்த மூன்று நாட்களாக அந்த உடலுடனேயே அப்துல் ரகுமான் வீட்டிற்குள் தங்கியிருந்துள்ளார்.
<h3>துர்நாற்றத்தால் சிக்கிய குற்றவாளி:</h3>
மூன்று நாட்கள் கடந்த நிலையில், பூட்டியிருந்த அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகப் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். வீட்டிற்குள்ளிருந்து எந்தப் பதில்களும் வராததால் கதவை உடைக்க முயற்சி செய்தபோது, உள்ளே இருந்த அப்துல் ரகுமான் கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து வீசிய கடுமையான துர்நாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உள்ளே சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
<h3>தொடரும் போலீஸ் விசாரணை:</h3>
அப்போது, சாக்குமூட்டையில் சுற்றப்பட்ட நிலையில் அம்சவல்லியின் சடலம் கைபற்றப்பட்டது. உடனடியாகச் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், கொலையாளி அப்துல் ரகுமானைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழனிசெட்டிபட்டி, லட்சுமி நகர் மற்றும் ஆஞ்சநேயர் நகர் போன்ற பகுதிகள் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வரும் முக்கியக் குடியிருப்புப் பகுதியாகும். அமைதியான இந்தப் பகுதியில் பெண்ணைக் கொன்று உடலோடு கொலையாளி 3 நாட்கள் தங்கியிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பரப்பரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-medical-college-student-self-harm-from-kelambakkam-chengalpattu-104453.html">செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!</a>
<h3>மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சடலம்:</h3>
காவல்துறையினர் கைதான அப்துல் ரகுமானிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இக்கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது, இருவருக்கும் இடையே என்ன தகராறு ஏற்பட்டது என்பது குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அம்சவல்லியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள பழனிசெட்டிபட்டி போலீசார், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா அல்லது தற்காலிக ஆத்திரத்தில் ஏற்பட்ட மோதலா என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புப் பகுதிக்கு நடுவே நடந்த இந்தச் கொடூர சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய்.. திண்டுக்கலில் சுவாரஸ்யம்.. ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dog-gave-birth-to-17-puppies-in-one-single-delivery-in-dindigul-104496.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 08:04:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dog-gave-birth-to-17-puppies-in-one-single-delivery-in-dindigul-104496.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chippiparai Dog Gave Birth To 17 Puppies | திண்டுக்கலில் சந்திரசேகர் என்பவர் சிப்பிப்பாறை நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அது கர்ப்பமாக இருந்த நிலையில், ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/chippiparai-dog.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய்.. திண்டுக்கலில் சுவாரஸ்யம்.. ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்!" /></figure><strong>திண்டுக்கல், செப்டம்பர் 12 :</strong> திண்டுக்கல் <strong>(Dindigul)</strong> மாவட்டத்தில் உள்ள நத்தம் ரோட்டில் அமைந்துள்ள அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டில் சிப்பிப்பாறை ரக, பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கர்ப்பமாக இருந்த இந்த நாய், நேற்று (செப்டம்பர் 11, 2026) மொத்தம் 17 குட்டிகளை ஈன்றுள்ளது. ஒரே பிரசவத்தில் நாய், இத்தனை குட்டிகளை ஈன்றுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற நாய்</h3>
சந்திரசேகர் பாசத்துடன் வளர்த்து வரும் அந்த சிப்பிப்பாறை கர்ப்பமாக இருந்த நிலையில், அது குட்டிகளை ஈன்றுள்ளது. அதாவது, வழக்கமாக நாய்கள் மூன்று அல்லது 4 குட்டிகளை ஈன்றும். சில சமயங்களில் 6 முதல் 7 குட்டிகளை கூட ஈன்றும். ஆனால், சந்திரசேகரின் நாயோ, ஒரே பிரசவத்தில் மொத்தம் 17 குட்டிகளை ஈன்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் மிகவும் ஆர்வத்துடன் அந்த நாயையும், அதன் குட்டிகளையும் பார்த்து செல்கின்றனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/bjp-leader-nainar-nagendran-criticizes-the-congress-over-the-issue-of-the-arrest-of-tamil-nadu-fishermen-104466.html">திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்த காங்கிரஸ்.. பிரதமரை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது.. நயினார் நாகேந்திரன் நாக்-அவுட் கேள்வி!</a>
<h3>மகிழ்ச்சியுடன் பேசிய பராமரிப்பாளர் சந்திரசேகர்</h3>
இது குறித்து பேசிய சந்திரசேகர், கொரோனா ஊரடங்கின் போது சிறுமலை அடிவாரத்தில் பராமரிப்பு இல்லாமல் சுற்றித்திரிந்த சிப்பிப்பாறை இன நாயை எடுத்து வளர்த்தேன். இது 2023 ஆம் ஆண்டு 11 குட்டிகளை ஈன்றது. பிறகு மீண்டும் கருவுற்ற நிலையில், இந்த முறை 17 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த ரக நாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நாய் குட்டிகளி வழங்க உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpi-laid-conditions-for-support-to-tvk-in-madurantakam-and-dharapuram-by-elections-based-on-sources-104457.html">இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!</a>
<h3>அனைத்து நாய் குட்டிகளும் நலமுடன் உள்ளன</h3>
இந்த நாய் குட்டிகளை பரிசோதனை செய்த மருத்துவர், சிப்பிப்பாறை இன நாய்கள் அதிகப்படியாக 4 முதல் 8 குட்டிகள் வரை ஈன்றும். இது 17 குட்டிகளை ஈன்றுள்ளது என்பது ஆச்சர்யம் தான். நாய் மற்றும் குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளன என அவர் கூறியுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>செப்.14-க்கு பிறகு உதவித்தொகைகள் வழங்கப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/scholarships-will-be-provided-after-september-14-2026-says-minister-sengottaiyan-in-tanjore-104490.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 07:26:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/scholarships-will-be-provided-after-september-14-2026-says-minister-sengottaiyan-in-tanjore-104490.html</guid>
		            
			

    	<description><![CDATA[Minister Sengottaiyan Press Meet | அமைச்சர் செங்கோட்டையன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 14, 2026-க்கு பிறகு உதவித்தொகைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அது குறித்து அமைச்சர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/sengottaiyan-speech.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="செப்.14-க்கு பிறகு உதவித்தொகைகள் வழங்கப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!" /></figure><strong>தஞ்சாவூர், செப்டம்பர் 12 :</strong> 19.27 லட்சம் பேருக்கு செப்டம்பர் 14, 2026-க்கு பிறகு உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் <strong>(Minister Sengottaiyan)</strong> தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்<strong> (Tanjore)</strong> மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 11, 2026) செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். இந்த நிலையில், உதவித்தொகைகள் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>35 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு மாதம் தோறும் உதவித்தொகை</h3>
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 23 மண்டலங்களாக புயல் வர இருக்கிறது. அதில் 3 மண்டல் புயல்கள் பெரும் வெள்ளத்தை உருவாக்கும் நிலை உள்ளது. இது எல் நினோ நிபுணர் குழு கொடுத்த பட்டியல் ஆகும். சமூல நல திட்டத்தின் அடிப்படையில் இதுவரை சுமார் 35 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/entertainment/ajith-kumar-expresses-happiness-over-joseph-vijays-visit-and-his-becoming-tamil-nadu-chief-minister-104460.html">எனது அழைப்பை ஏற்று… முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து அஜித் பேட்டி</a>
<h3>இந்த மாதம் 14 ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்படும்</h3>
அந்த வகையில் செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தொகை, சுமார் 19 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. செப்டம்பர் 14, 2026 வரையில் விழாக்கள் உள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு, அந்த தேதிக்கு பிறகு மத்திய அரசு அந்த அந்த துறைகளுக்கு நிதி வழங்க உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-medical-college-student-self-harm-from-kelambakkam-chengalpattu-104453.html">செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!</a>

அதற்கான தொகைகளை தமிழக அரசு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான பணிகளை நாங்களும் மேற்கொண்டு வருகிறோம். எனவே, நிதி வருமா, நிறுத்திவிட்டார்களா என்ற அச்சம் எதுவும் தேவையில்லை. செப்டம்பர் 14, 2026-க்கு பிறகு உரியவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருக்கணும்!&#8221;.. திமுகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/thirumavalavan-speech-dmk-alliance-breakdown-tvk-vijay-secular-front-104492.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 07:25:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/thirumavalavan-speech-dmk-alliance-breakdown-tvk-vijay-secular-front-104492.html</guid>
		            
			

    	<description><![CDATA[Thirumavalavan Critical Speech On DMK: திமுக தலைமையிலான கூட்டணி உடைந்ததற்குக் திமுகவின் தளர்த்தப்பட்ட மற்றும் இறுக்கமான அணுகுமுறையே முக்கியக் காரணம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் தலைமையிலான புதிய அரசியல் நகர்வுகள், தவெக மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' உருவான பின்னணி குறித்து அவர் பேசியதன் முழு விவாதம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/thirumavalavan-10.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருக்கணும்!&#8221;.. திமுகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!!" /></figure><strong>தருமபுரி, செப்டம்பர் 12:</strong> தமிழக அரசியல் களத்தில் அண்மையில் ஏற்பட்ட கூட்டணிக் மாற்றங்கள் மற்றும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-appoints-election-in-charges-maduranthakam-dharapuram-assembly-by-election-104329.html" target="_blank" rel="noopener">திமுக</a> தலைமையிலான அணியில் இருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேறியது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தருமபுரியில் விசிக தலைமை நிலைய செயலர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற அவர் மேடையில் பேசியதாவது, திமுக கூட்டணியில் 100 சதவீதம் விசிக நீடிக்க முடியாமல் போனதற்கு திமுகவின் அணுகுமுறையே முழு முதற்காரணம் என்றும், இதற்குத் திருமாவளவன் பொறுப்பல்ல என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் 70 ஆண்டுகால தோழமைக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வெளியேற்றத்திற்கும், மதிமுக தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட ஆசைப்பட்டபோது அதை மறுத்து உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்த கசப்பிற்குமே திமுக கையாண்ட இறுக்கமான போக்கே காரணம் என அவர் விமர்சித்துள்ளார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-which-party-candidate-will-win-104396.html" target="_blank" rel="noopener">2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!</a></strong>
<h3>விஜய் மீது நடவடிக்கை எடுத்திருக்கனும்:</h3>
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்துப் பேசிய திருமாவளவன், விஜய்யின் அரசியல் களம் குறித்து திமுக தொடக்கம் முதலே சரியாகக் கணிக்கத் தவறிவிட்டதாகச் சாடினார். குறிப்பாக கரூர் சம்பவத்தின் போது, மக்கள் நெரிசலுக்கும் கூட்டத்திற்கும் காரணமான சூழ்நிலைகளை உருவாக்கிய விஜய் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், அப்போதே அவருடைய அரசியலை திமுக அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இருப்பினும், தவெக சார்பில் எவ்வித அதிமுக, பாஜக அல்லது பாமக ஆதரவும் கோரப்படாமல், காங்கிரஸ் மற்றும் விசிகவின் ஆதரவை விஜய் நாடியது ஒரு முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.
<h3>புதிய கூட்டணி பெயர் சுவாரஸ்யம்:</h3>
மேலும், புதிய கூட்டணி அமைப்பின் போது நடைபெற்ற சுவாரசியமான பின்னணிகளையும் திருமாவளவன் விவரித்தார். முதலமைச்சர் விஜய் கூட்டணிக்குப் பெயர் வைக்கும் நிகழ்வின் போது, அக்கூட்டணிக்கு 'சமூகநீதி வெற்றிக் கூட்டணி' எனப் பெயரிட முன்மொழிந்தார். அப்போது தான் குறுக்கிட்டு, "இன்றைய சூழலில் பாஜகவும் சாதியவாதிகளும் கூட சமூகநீதி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். எனவே, இதில் 'மதச்சார்பற்ற' என்ற சொல் இடம்பெற வேண்டும். 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' எனப் பெயரிட்டால் மட்டுமே நாம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவாக வெளிப்படும்" என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். திருமாவளவனின் இந்தக் கோரிக்கையை விஜய் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-candidates-maduranthakam-maragatham-kumaravel-and-dharapuram-sathyabama-background-details-104190.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!</a></strong>
<h3>தனிமைப்படுத்த முயன்ற திமுக:</h3>
குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், மாநிலத்தில் பாஜகவின் மறைமுக ஆதிக்கம் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் இணைந்து விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் நிலையை விசிக எடுத்ததாக திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். திமுக தங்களை தனிமைப்படுத்த முயன்ற போதிலும், மாநிலத்தில் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கவே இந்த அரசியல் முடிவை எடுத்ததாகக் கூறினார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. சென்னை சென்டிரல் &#8211; மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/special-train-between-chennai-central-to-madurai-for-meenakshi-amman-temple-consecration-104483.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 06:50:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/special-train-between-chennai-central-to-madurai-for-meenakshi-amman-temple-consecration-104483.html</guid>
		            
			

    	<description><![CDATA[Madurai Meenakshi Amman Temple Consecration | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் நிலை ஏற்பட உள்ள நிலையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/special-train-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. சென்னை சென்டிரல் &#8211; மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 12 :</strong> மதுரை மீனாட்சி அம்மன் கோயில் <strong>(Madurai Meenakshi Amman Temple)</strong> கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சென்னையில்<strong> (Chennai)</strong> இருந்து மதுரைக்கு (Madurai) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. குபாபிஷேகத்தில் பங்கேற்க ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து மதுரையை நோக்கி படையெடுக்க வாய்ப்பு உள்ளதன் காரணமாக, தெற்கு ரயில்வே<strong> (Southern Railway)</strong> இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், சிறப்பு ரயில் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கோயில் கும்பாபிஷேகம் - சிறப்பு ரயில்கள் இயக்கம்</h3>
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் தான், கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-medical-college-student-self-harm-from-kelambakkam-chengalpattu-104453.html">செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!</a>
<h3>எந்த எந்த நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்?</h3>
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து செப்டம்பர் 16, 2026 அன்று மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 4.30 மணிக்கு மதுரை சென்டிரல் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து செப்டம்பர் 17, 2026 அன்று காலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-stays-at-londons-tallest-luxury-hotel-during-investment-tour-104452.html">லண்டனில் மிக உயரமான ஹோட்டலில் தங்கும் முதல்வர் விஜய் – ஒருநாள் வாடகை இவ்வளவா?</a>
<h3>மக்களுக்கு பயனடையும் வகையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு</h3>
இந்த சிறப்பு ரயில்கள் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் பயடைய உள்ளனர். மதுரையை சேர்ந்த ஏராளமான மக்கள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் நிலையில், அவர்கள் எந்தவித சிக்கலும் இன்றி பயனிக்க தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Rain Update: இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-update-12-sep-2026-moderate-rain-forecasted-for-southern-districts-and-chennai-104478.html</link>	
		<pubDate>Sat, 12 Sep 2026 06:30:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-update-12-sep-2026-moderate-rain-forecasted-for-southern-districts-and-chennai-104478.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu weather today: தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/rain-7-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Rain Update: இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 12:</strong> தமிழ்நாட்டில் மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-report-11-sep-2026-tamil-nadu-weather-alert-heavy-rain-likely-in-5-districts-on-sept-12-and-13-104372.html" target="_blank" rel="noopener">வானிலை மையம்</a> தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-kas-press-meet-cabinet-reshuffle-delta-water-farmers-insurance-104310.html">அமைச்சரவை மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்!</a></strong>
<h3>இன்று மழைக்கு வாய்ப்பு:</h3>
அந்தவகையில், இன்று (செப்.13) மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
<h3>வரும் நாட்களில் மழை நிலவரம்:</h3>
தொடர்ந்து, நாளை (செப்.14) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, செப்.15ம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் மிதமான மழையும், வரும் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
<h3>அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:</h3>
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க இன்று முதல் 15ஆம் தேதி வரை மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html"> “எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!</a></strong>
<h3>சென்னை வானிலை நிலவரம்:</h3>
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்த காங்கிரஸ்.. பிரதமரை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது.. நயினார் நாகேந்திரன் நாக்-அவுட் கேள்வி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/bjp-leader-nainar-nagendran-criticizes-the-congress-over-the-issue-of-the-arrest-of-tamil-nadu-fishermen-104466.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 21:58:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/bjp-leader-nainar-nagendran-criticizes-the-congress-over-the-issue-of-the-arrest-of-tamil-nadu-fishermen-104466.html</guid>
		            
			

    	<description><![CDATA[Nainar Nagendran Criticizes Congress : தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/nainar-nagendran-manickam-tagore.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்த காங்கிரஸ்.. பிரதமரை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது.. நயினார் நாகேந்திரன் நாக்-அவுட் கேள்வி!" /></figure>பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை விமர்சிப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தம்பி மாணிக்கம் தாகூர், நேற்று நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மீண்டும் ஆர். எஸ். எஸ். மற்றும் பாஜக மீது அவதூறுகளை அள்ளி வீசி உள்ளீர்கள். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் விமர்சிக்க காங்கிரசுக்கு என்ன தகுதி உள்ளது. கச்சத்தீவை தாரை பார்த்ததும், காங்கிரஸ்- திமுக ஆட்சி காலத்தில் 600- க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட போதும், அதே முள்ளிவாய்க்காலில் பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்த போது வாய் மூடி மௌனம் காத்தவர்கள் தான் நீங்கள். கடந்த 2014- ஆம் ஆண்டு பிரதமர் மோடி பொறுப்பேற்ற வின்னர் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
<h3>சட்டமன்றத்தில் எந்த மதத்தையும் முன்னிறுத்தக் கூடாது</h3>
அது மட்டும் இன்றி கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை உடனடியாக ராஜ்ஜிய நடவடிக்கை மூலமாக மீட்டு அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. பித்தகைய வெளியூர் துறை செயல்பாட்டை கொச்சைப்படுத்துவது காங்கிரசின் கறை படிந்த வரலாற்று பாவங்களை மறைக்கும் மலிவான நாடகமாகும். மதச்சார்பின்மை பற்றி பேசும் மாணிக்கம் தாகூர், சட்டமன்றத்தின் மாண்பு எந்த மதத்தையும் முன்னிறுத்தாமல் நடுநிலையோடு இயங்குவது தான். ஆனால், சபாநாயகரும், நிதித்துறை அமைச்சரும் தொடர்ந்து பைபிள் வசனங்களை மட்டுமே மேற்கோள் காட்டி சட்டப்பேரவையின் மாண்பை உடைத்து வருகிறார்கள்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattimandram-moderator-solomon-pappaiah-life-story-and-journey-104339.html" target="_blank" rel="noopener">Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!</a>
<h3>காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது</h3>
பைபிளை போல பகவத் கீதையிலும், திருக்குர்ஆனிலும் மனித குலத்திற்கான நற்போதனைகள் உள்ளன. அவற்றை ஏன் மேற்கோள் காட்டுவதில்லை. அவரவர்களுக்கு அவர்களின் மதம் பெரிதாக இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அரசு நிர்வாகம் மற்றும் சட்டமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே முன்னிறுத்தி, மற்ற மதங்களை புறக்கணிப்பது என்ன மாதிரியான மதச்சார்பின்மை என்று தெரியவில்லை. சட்டப்பேரவையில் அரங்கேறும் ஒரு தலைப்பட்ச மத திருப்திப்படுத்தும் தமிழக வெற்றிக்கழக அரசியலுக்கு ஆதரவாக செயல்படும் உங்களுக்கு நல்லிணக்க பாடம் எடுக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
<h3>திமுகவின் ஒட்டுண்ணி காங்கிரஸ்</h3>
புதிய தலைமைச் செயலகம் அமைத்தால் மீனவ மக்களும், மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை சுட்டி காட்டினால் காங்கிரசுக்கு ஏன் இந்த பதற்றம் ஏற்படுகிறது. இவ்வளவு நாள் திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்துவிட்டு, தவெக பக்கம் சாய்ந்த அடுத்த கனமே அந்த கேரக்டராகவே மாறி விட்டீர்கள் தம்பி மாணிக்கம் தாகூர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-which-party-candidate-will-win-104396.html" target="_blank" rel="noopener">2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpi-laid-conditions-for-support-to-tvk-in-madurantakam-and-dharapuram-by-elections-based-on-sources-104457.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 21:15:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpi-laid-conditions-for-support-to-tvk-in-madurantakam-and-dharapuram-by-elections-based-on-sources-104457.html</guid>
		            
			

    	<description><![CDATA[CPI Laid conditions for Support TVK : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திடீர் நிபந்தனை விதித்துள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/cm-vijay-veerapandiyan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!" /></figure>தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6- ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதே நாளில் புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ள நிலையில், விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு தெரிவித்தால், தமிழகத்தில் நடைபெறும் இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம், முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
<h3>இடதுசாரி கட்சிகளின் இடைத்தேர்தல் ஆதரவு நிலைப்பாடு</h3>
இதில், தமிழக வெற்றி கழக தலைமை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிற செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறுகையில், தமிழக இடைத்தேர்தல் தொடர்பாக இடதுசாக் கட்சிகள் தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-which-party-candidate-will-win-104396.html" target="_blank" rel="noopener">2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!</a>
<h3>கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூட்டத்தில் தெளிவான முடிவு</h3>
கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நாளை சனிக்கிழமை ( செப்டம்பர் 12- ஆம் தேதி) நடைபெறுகிறது. இதில், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
<h3>இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்</h3>
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பரந்தாமன் மற்றும் சுகன்யா, அதிமுக சார்பில் கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் செப்டம்பர் 13- ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
<h3>கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தரப்பு பேச்சுவார்த்தை</h3>
இதில், தவெகவுக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து பெறுவதற்கு, தவெக பொதுச்செயலாளர்கள் என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/rs-bharathi-started-dmk-wins-the-by-election-in-tamil-nadu-tvk-government-will-collapse-104427.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும்.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரை!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எனது அழைப்பை ஏற்று&#8230;  முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து அஜித் பேட்டி</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/ajith-kumar-expresses-happiness-over-joseph-vijays-visit-and-his-becoming-tamil-nadu-chief-minister-104460.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 21:11:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/ajith-kumar-expresses-happiness-over-joseph-vijays-visit-and-his-becoming-tamil-nadu-chief-minister-104460.html</guid>
		            
			

    	<description><![CDATA[Ajith Congratulates CM Vijay : லண்டனில் செப்டம்பர் 12, 2026 நாளை நடைபெறும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் துவங்கி வைக்கவுள்ள நிலையில், இது தொடர்பாக நடிகர் அஜித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது பிஸியான ஷெட்யூலிலும் நேரம் ஒதுக்கி முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார். என்றார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/cm-vijay-11.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எனது அழைப்பை ஏற்று&#8230;  முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து அஜித் பேட்டி" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-to-wave-green-flag-at-silverstone-le-mans-cup-race-at-london-104212.html" target="_blank" rel="noopener">முதல்வர் விஜய்</a> பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாட்கள் பயணமாக லண்டன் சென்றுள்ளார். இந்த நிலையில் லண்டனில் நடிகர் அஜித் ஆகஸ்ட் 12, 2026 அன்று பங்கேற்கவிருக்கும் மைக்கேலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் லண்டனில் தான் பங்கேற்கவிருக்கும் கார் ரேஸ் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் முதல்வரானது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
<h3>முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து அஜித் பேட்டி</h3>
இதுகுறித்து பேசிய அஜித் குமார், தனது பிஸியான ஷெட்யூலிலும் நேரம் ஒதுக்கி முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார். விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக நிறைய செய்கிறார். இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற அனைத்தும் இந்தியாவில் வர வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/entertainment/sivakarthikeyans-seyon-movie-2nd-schedule-shooting-completes-104325.html">Seyon: மனமா படையல் தயாராகிட்டு இருக்கு… சிவகார்த்திகேயனின் சேயோன் பட 2வது ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவு!</a></strong>

மேலும் பேசிய அவர், எனது அழைப்பை ஏற்று வந்ததில் மகிழ்ச்சி, லண்டனில் உள்ள 'சில்வர் ஸ்டோன்' ரேஸிங் டிராக் போன்றதை சென்னையில் உருவாக்க முதலமைச்சர் விஜய் ஆர்வமாக உள்ளார். எனக்கும் லண்டனில் நடப்பது போன்ற போட்டிகள் சென்னையில் நடைபெற வேண்டும் என்ற ஆசை என்று தெரிவித்தார். இந்த நிலையில் செப்டம்பர் 12, கார் பந்தயத்தில் அஜித் மற்றும் முதல்வர் விஜய் சந்திக்கவிருப்பது அவர்களது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
<h3>செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அஜித்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">PRESS MEET :

Ajith Kumar about his friend <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> C.Joseph Vijay’s Visit and he also very happy about Thalapathy Vijay elected as chief minister of tamilnadu 😍🔥 <a href="https://t.co/yagaHMEhDy">pic.twitter.com/yagaHMEhDy</a></p>
— Arun Vijay (@AVinthehousee) <a href="https://x.com/AVinthehousee/status/2098424098401800652?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

&nbsp;

இந்த நிலையில் அஜித்குமார் ரேஸிங் அணி 2026 மிட்செலின் லே மேன்ஸ் கப் தொடரில் LMP3 Pro/Am பிரிவில் போட்டியிட்டு வருக்கிறது. சில்வர்ஸ்டோன் ரவுண்டில் மொத்தம் 44 கார்கள் பங்கேற்க உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 12, 2026 அன்று சனிக்கிழமை முக்கிய பந்தயம் நடைபெற உள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/entertainment/gautham-karthiks-political-thriller-bloody-politics-movie-teaser-release-date-out-104317.html">கௌதம் கார்த்திக்கின் பிளடி பாலிடிக்ஸ் பட டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?</a></strong>

இது தொடர்பாக மைக்கேலின் லே மான்ஸ் கப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வார இறுதியில் செப்டம்பர் 12, 2026 சனிக்கிழமை இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெற உள்ள மைக்கேலின் லே மான்ஸ் கப் ( Michelin Le Mans Cup) கார் பந்தயத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் வகையில், 44 கார்கள் கொண்ட கிரிட் முன்பு முதல்வர் விஜய் பச்சைக் கொடியை அசைக்க உள்ளதாக Michelin Le Mans Cup தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-medical-college-student-self-harm-from-kelambakkam-chengalpattu-104453.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 20:35:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/private-medical-college-student-self-harm-from-kelambakkam-chengalpattu-104453.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chengalpattu Medical Student Self Harm : செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர் 14- ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/medical-srudent-dies.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!" /></figure>ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் முனகலா சுப்பா ரெட்டி. இவரது மகன் முனகலா நிகில் ரெட்டி ( 27 வயது). இவர், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகில் ரெட்டி மருத்துவ தேர்வுகளை எழுதி இருந்தார். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், 2 பாடங்களில் நிகில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. நன்றாக படித்து தேர்வு எழுதியும் 2 பாடங்களில் தோல்வி அடைந்து விட்டோமே என்று மாணவர் நிகில் ரெட்டி மிகவும் மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது நண்பர்களிடமும் கூறி மன வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
<h3>14- ஆவது மாடியில் இருந்து குதித்த மருத்துவ மாணவர்</h3>
அதற்கு, அவரது நண்பர்களும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். அத்துடன், உன்னை போல 8 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் கவலைப்படாமல் நன்றாக படித்து எதிர்வரும் தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆறுதல் கூறி அவரை தேற்றி உள்ளனர். தொடர்ந்து, அனைவரும் அவரவர்கள் அறையில் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 7 மணி அளவில் நிகில் ரெட்டி தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14- ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/man-hacks-daughter-and-son-in-law-with-a-sickle-in-sivagamipuram-near-pavoorchatram-104406.html" target="_blank" rel="noopener">மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த மகள்.. வீடு புகுந்து அரிவாளால் வெட்டித் தள்ளிய தந்தை.. தென்காசியில் கொடூரம்!</a>
<h3>கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை</h3>
இதில், தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த நிகல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே, அவரை சக மாணவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மாணவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
<h3>மருத்துவ மாணவர் தற்கொலையில் வேறு காரணம் உள்ளதா</h3>
அங்கு, மாணவர் நிகில் ரெட்டியின் நண்பர்கள், சக மாணவர்கள் ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
<h3>தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் . . .</h3>
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/kadayanallur-surveyor-including-two-people-arrested-for-accepting-a-bribe-to-measure-land-104371.html" target="_blank" rel="noopener">தென்காசி டிஎஸ்பி பால்சுதரின் கெமிக்கல் ஆப்பு! நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் உள்பட இருவர்.. தூண்டில் போட்டு தூக்கிய DVAC போலீஸ்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>லண்டனில் மிக உயரமான ஹோட்டலில் தங்கும் முதல்வர் விஜய் &#8211; ஒருநாள் வாடகை இவ்வளவா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-stays-at-londons-tallest-luxury-hotel-during-investment-tour-104452.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 20:07:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-stays-at-londons-tallest-luxury-hotel-during-investment-tour-104452.html</guid>
		            
			

    	<description><![CDATA[CM Vijay’s London Visit : முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் செப்டம்பர் 10, 2026 நேற்றிரவு லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் லண்டனில் முதல்வர் தங்கியிருக்கும் ஹோட்டல் குறித்தும் அதன் ஒருநாள் வாடகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/cm-vijay-10.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="லண்டனில் மிக உயரமான ஹோட்டலில் தங்கும் முதல்வர் விஜய் &#8211; ஒருநாள் வாடகை இவ்வளவா?" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 11 :</strong> முதலீடுகளை ஈர்ப்பதற்காக <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-to-wave-green-flag-at-silverstone-le-mans-cup-race-at-london-104212.html" target="_blank" rel="noopener">முதல்வர் விஜய்</a> செப்டம்பர் 10, 2026 நேற்றிரவு லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் அவருக்கு லண்டனில் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 12, 2026 லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை கொடியசைத்து துவங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
<h3>லண்டனில் மிக உயரமான ஹோட்டலில் தங்கும் முதல்வர் விஜய்</h3>
இதற்கிடையில் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி அவர் லண்டனில் மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறாராம். தி ஷர்ட் என்ற மிக உயரமான நட்சத்திர விடுதியில் முதல்வர் விஜய் தங்கியுள்ளாராம். இது லண்டனில் மிக உயரமாக நட்சத்திர விடுதி என்பதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டங்களின் வரிசையில் 7வது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 34 தளங்களைக் கொண்டிருக்கிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-k-a-sengottaiyan-stated-that-new-parties-would-join-the-tvk-alliance-104434.html">தவெக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்.. கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்கிறாரா… கே.ஏ. செங்கோட்டையன்!</a></strong>

இதன் சிற்பபு என்னவென்றால் இந்த கட்டிடத்தில் இருந்து பார்த்தால் ஒட்டுமொத்த லண்டனையும் பார்க்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஹோட்டலை கடந்து செல்லும் விமானத்தில் இருந்தும் இந்த ஹோட்டலை பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஹோட்டலில் தங்கும் அறைகள் மட்டுமல்லாமல், உலகின் பல உணவு முறைகள் விற்பனையாகும் உணவகங்கள், திருமண அரங்கம், மிகப்பெரிய நிறுவனங்கள் சந்திப்புகளை நடத்துவதற்கான அரங்குகள் என பல அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக உலகின் மிக உயரமான இடத்தில் இருந்து லண்டனை ரசித்து பார்த்தபடி சாப்பிடும்படி நீச்சல் குளத்துடன் கூடிய உணவகம் இதன் தனிச்சிறப்பு என கூறப்படுகிறது. மேலும் இதில் திரையரங்கமும் உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு தங்க நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் ரூ.60,000 முதல் ரூ.1,60,000 வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/pm-modi-gifts-russian-translation-of-thirukkural-to-putin-at-brics-summit-2-104421.html">சென்னை – மதுரைக்கு ரூ.ரூ.19,761 கட்டணமா? விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் எகிறிய விமான கட்டணம்</a></strong>

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்வர் விஜய் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் 6 நாட்கள் தங்கியிருக்கும் அவர் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லால் புகழ்பெற்ற கார் பந்தய மைதானமான சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்' மைதானத்தை பார்வையிட்டு கார் ரேஸையும் துவங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக மைக்கேலின் லே மான்ஸ் கப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வார இறுதியில் செப்டம்பர் 12, 2026 சனிக்கிழமை இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெற உள்ள மைக்கேலின் லே மான்ஸ் கப் ( Michelin Le Mans Cup) கார் பந்தயத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் வகையில், 44 கார்கள் கொண்ட கிரிட் முன்பு முதல்வர் விஜய் பச்சைக் கொடியை அசைக்க உள்ளதாக Michelin Le Mans Cup தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;சட்டமன்றமா? சினிமா தியேட்டரா?&#8221;..  தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/seeman-slams-tamil-nadu-govt-and-cm-vijay-over-assembly-debates-at-paramakudi-104447.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 19:48:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/seeman-slams-tamil-nadu-govt-and-cm-vijay-over-assembly-debates-at-paramakudi-104447.html</guid>
		            
			

    	<description><![CDATA[Seeman Slams TVK Govt: தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தில் பரமக்குடியில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசு மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சட்டமன்றத்தின் தற்போதைய நிலை மற்றும் நில அபகரிப்பு குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/seeman-13.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;சட்டமன்றமா? சினிமா தியேட்டரா?&#8221;..  தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!" /></figure><strong>ராமநாதபுரம், செப்.11:</strong> தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/omni-bus-fare-hike-anbumani-ramadoss-slams-tvk-government104246-104246.html" target="_blank" rel="noopener">தமிழக அரசின்</a> தொழில் கொள்கைகள், நிலப்பறிப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களின் தரம் குறித்துத் தனது கடுமையான கண்டனங்களையும் கேள்விகளையும் முன்வைத்தார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-candidates-maduranthakam-maragatham-kumaravel-and-dharapuram-sathyabama-background-details-104190.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!</a></strong>
<h3>நிலங்கள் கையகப்படுத்த எதிர்ப்பு:</h3>
அரசு மேற்கொள்ளும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்பேட்டை திட்டங்கள் குறித்துப் பேசிய சீமான், பரந்தூர் விமான நிலையத் திட்டம் மற்றும் சிப்காட் தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். "நம் நாட்டின் சொந்த மண்ணிலேயே மக்களை அகதிகளாகவும் அனாசிகளாகவும் மாற்றும் போக்கு தொடர்கிறது. சிப்காட் தொழிற்சாலைகளைத் தொடங்குவதால் மட்டுமே வளர்ச்சி வந்துவிடும் என்றால், இன்றும் ஏழை மக்களுக்கு மாதம் ரூ.2500 நிதி உதவி, இலவச அரிசி மற்றும் இலவச சிலிண்டர்கள் வழங்கும் சூழல் ஏன் நிலவுகிறது? தொழில் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு நிலங்களை நிறுவனங்களுக்குக் தாரை வார்ப்பதால் மக்களுக்கு உண்மையான பயன் கிடைக்கவில்லை" என்று சாடினார்.
<h3>சினிமா தியேட்டராக மாறிய சட்டமன்றம்:</h3>
தொடர்ந்து சட்டமன்றத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்தார். பெருந்தலைவர் காமராஜர், கக்கன், இரட்டைமலை சீனிவாசன், ஜீவானந்தம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் போன்ற பெரும் சான்றோர்களும் தலைவர்களும் அமர்ந்து மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை நடத்திய புனிதமான அவை அது என்றும், ஆனால் தற்போது அந்த அவை ஒரு 'சினிமா தியேட்டர்' போல மாற்றப்பட்டு விட்டதாகவும் விமர்சித்தார்.
<h3>தலைவர்களை அவமதிக்கும் செயல்:</h3>
சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுவது குறித்துக் குறிப்பிட்ட அவர், "மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பேசாமல், சினிமா படங்களின் பெயர்களையும் திரை வசனங்களையும் பேசி நேரத்தை வீணடிக்கிறார்கள். 'துள்ளாத மனமும் துள்ளுது', 'மெர்சல்', 'பைரவா', 'குருவி' போன்ற திரைப்படங்களின் பெயர்களைக் கூறி பாலாபிஷேகம் செய்தது வரை அவையில் பேசுகின்றனர். சிலர் தனது குடும்பத்தினரின் பெயர்களைப் பட்டியலிட்டு நன்றி தெரிவிப்பதற்கே அவையைப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற செயல்கள் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளையும் தலைவர்களையும் அவமதிக்கும் செயலாகும்" என்று ஆதங்கத்துடன் கூறினார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-which-party-candidate-will-win-104396.html" target="_blank" rel="noopener">2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!</a></strong>
<h3>சுதந்திரத்தைப் பாதுகாப்பதே பெரும் சவால்:</h3>
தொழில் வளர்ச்சியால் ஏற்படும் நில மற்றும் நீர் நிலைப் பாதிப்புகள் குறித்து மேலும் சுட்டிக்காட்டிய சீமான், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஏற்பட்ட கழிவுப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தினார். "26 கி.மீ தொலைவுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்லும் சிப்காட் திட்டங்களால் நிலத்தடி நீர் நஞ்சாகி, அதில் யுரேனியம் கலந்து குடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகளே கூறுகின்றனர். இதற்கு இந்த ஆட்சியாளர்களிடம் பதில் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பிய அவர், ஒரே ஒரு தனியார் விமான நிறுவனத்தின் ஏகபோக லாபத்திற்காக 5000 ஏக்கர் விளைநிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் கட்டுவது மக்கள் நலனுக்கு எதிரானது என்றும், இது போன்ற தவறான கொள்கைகளால் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே பெரும் சவாலாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நெருங்கும் இடைத்தேர்தல்.. வெற்றிக் கொடி நாட்டும் முனைப்பில் தவெக.. பாமகவுக்கு ரகசிய தூது விட்ட விஜய்.. பின்னணி என்ன!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-sends-emissaries-to-seek-pmk-support-for-the-maduranthakam-and-dharapuram-by-elections-104437.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 19:45:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-sends-emissaries-to-seek-pmk-support-for-the-maduranthakam-and-dharapuram-by-elections-104437.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Seek PMK Support : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரகசிய தூது விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/anbumani-cm-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நெருங்கும் இடைத்தேர்தல்.. வெற்றிக் கொடி நாட்டும் முனைப்பில் தவெக.. பாமகவுக்கு ரகசிய தூது விட்ட விஜய்.. பின்னணி என்ன!" /></figure>தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இந்த தேர்தலானது அக்டோபர் 6- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில், திமுக, அதிமுக, தவெக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அத்துடன், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோரி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, அமுமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடம் அதிமுக தலைமை ஆதரவு கோரி உள்ளது.
<h3>பாமகவிடம் ஆதரவு கோரி தவெக ரகசிய தூது</h3>
இதற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதே போல, தனது கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை அதிமுக தலைமை தற்போது வரை சந்திக்கவில்லை. அவர்களை, விரைவில் அதிமுக தரப்பினர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாமகவுக்கு தவெக பரப்பு ரகசிய தூது விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-candidates-maduranthakam-maragatham-kumaravel-and-dharapuram-sathyabama-background-details-104190.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!</a>
<h3>வன்னியர் சமுதாக மக்கள் வாக்கை குறி வைக்கும் தவெக</h3>
அதில், மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிக அளவு இருக்கும் நிலையில், அவர்களின் வாக்குகளை பெரும் வகையில் பாமகவுக்கு தூது அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பாமக தலைவர் அன்புமணி அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், அவரது மனைவியும், எம்எல்ஏவுமான சௌமியா அன்புமணி தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இடைத்தேர்தல் அரசியல் களத்தில் பாமகவின் முடிவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
<h3>பாமகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்</h3>
தற்போதைய சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா நிலைபாட்டால் கட்சியில் இக்கட்டான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதை வேளையில், தவெக அரசின் நடவடிக்கைகளை பாமக தலைவர் அன்புமணி சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், தவெகவிடம் இருந்து விலகியும், அதிமுகவுடன் நெருக்கமாகவும் இருப்பதாகவே அவரது செயல்பாடுகள் தெரிகிறது. இருந்தாலும், பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது விரைவில் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-which-party-candidate-will-win-104396.html" target="_blank" rel="noopener">2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;இடைத்தேர்தலில் 2-வது இடமாவது திமுகவுக்கு கிடைக்குமா?&#8221;.. மாணிக்கம் தாகூர் கிண்டல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/manickam-tagore-criticizes-dmk-second-position-elections-104440.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 19:26:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/manickam-tagore-criticizes-dmk-second-position-elections-104440.html</guid>
		            
			

    	<description><![CDATA[Manickam Tagore Comments On DMK: வரவிருக்கும் தேர்தலில் திமுக முதலிடத்தைப் பிடிப்பதையெல்லாம் விட, குறைந்தபட்சம் 2-வது இடத்தையாவது பெறுமா என்பதே பெரிய சந்தேகம்தான் என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். மேலும், 2-வது மற்றும் 3-வது இடத்திற்கான போட்டியே திமுக மற்றும் அதிமுக இடையே நிலவுவதாகவும் அவர் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/manickam-tagore-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;இடைத்தேர்தலில் 2-வது இடமாவது திமுகவுக்கு கிடைக்குமா?&#8221;.. மாணிக்கம் தாகூர் கிண்டல்!" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 11:</strong> தமிழக அரசியல் களம் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-k-a-sengottaiyan-stated-that-new-parties-would-join-the-tvk-alliance-104434.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தல்</a> நெருங்கும் சூழலில் நாளுக்கு நாள் சுவாரசியமாகவும், சூடான விவாதங்களுடனும் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான கருத்துப் போர்களும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர், ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றின் தேர்தல் வாய்ப்புகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/rs-bharathi-started-dmk-wins-the-by-election-in-tamil-nadu-tvk-government-will-collapse-104427.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும்.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரை!</a></strong>
<h3>இரண்டாம் இடத்திற்கான போட்டியே நடக்கிறது:</h3>
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, களம் தயாராகி வருகிறது. வரும் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய நிலவரப்படி, தேர்தலில் 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பிடிப்பதற்காகவே திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது" என்று விமர்சித்தார்.
<h3>திமுக மீது கடுமையான தாக்குதல்:</h3>
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், "முதலில் வரவிருக்கும் தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 2-வது இடத்தையாவது பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி ஒருவேளை அவர்கள் 2-வது இடத்தைப் பெற்றுவிட்டால், அதன்பிறகு மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசலாம்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக தலைவர்களின் தொடர் கருத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வெறும் வாய்வார்த்தை பேச்சுக்களை மட்டுமே வைத்துக்கொண்டு திமுக தலைவர்கள் அரசியல் செய்து வருவதாகவும் சாடினார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-which-party-candidate-will-win-104396.html" target="_blank" rel="noopener">2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!</a></strong>
<h3>மாறிவரும் கூட்டணிக் கணக்குகளும் கள நிலவரமும்:</h3>
சமீபகாலமாக தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய கூட்டணிக் கட்டமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்களின் பின்னணியிலேயே மாணிக்கம் தாகூரின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது. காங்கிரஸ், விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் உருவான புதிய அரசியல் நகர்வுகள், திமுக மற்றும் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கிகளுக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் போன்ற இடைத்தேர்தல் களம் காணும் தொகுதிகளில் பலமுனைப் போட்டி நிலவும் சூழலில், பிரதான திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>டாஸ்மாக் ஊழியர்களின் பணிச்சுமைக்கு முற்றுப்புள்ளி.. காலி பாட்டில்களைப் பெற வருகிறது &#8216;ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்&#8217;!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tasmac-bottle-buyback-scheme-reverse-vending-machines-high-court-tn-government-104436.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 19:11:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tasmac-bottle-buyback-scheme-reverse-vending-machines-high-court-tn-government-104436.html</guid>
		            
			

    	<description><![CDATA[TASMAC Bottle Buyback Scheme: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் பணியாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 'ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்' எந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்‌துள்ளது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/tasmac-15.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டாஸ்மாக் ஊழியர்களின் பணிச்சுமைக்கு முற்றுப்புள்ளி.. காலி பாட்டில்களைப் பெற வருகிறது &#8216;ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்&#8217;!" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 11:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html" target="_blank" rel="noopener">தமிழ்நாட்டில்</a> சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், குறிப்பாக மலைப்பிரதேசங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி மது பாட்டில்கள் வீசியெறியப்படுவதைத் தடுக்கவும் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மது பாட்டில்களை வாங்கும் போது கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, பின்னர் காலி பாட்டில்களைத் திரும்பத் தரும் போது அந்தப் பணம் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மலைப்பகுதிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் மிக முக்கியமான புதிய தொழில்நுட்ப மாற்றத்தைக்கொண்டு வரத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-secretariat-in-pattinapakkam-political-leaders-opposition-104274.html">பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?</a></strong>
<h3>காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்:</h3>
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இத்திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஜூலை 31-ஆம் தேதி வரை திரும்பப் பெறப்பட்ட காலி பாட்டில்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை மறுசுழற்சி/விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
<h3>ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்:</h3>
தொடர்ந்து வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், காலி பாட்டில்களை நேரில் பெற்றுப் பணத்தைத் திரும்ப அளிப்பதில் ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் தவிர்க்கும் பொருட்டு, 'ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்' என்ற தானியங்கி எந்திரங்களை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், இ எந்திரங்களை நிறுவுவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையைத் தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

<strong>மேலும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html">எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!</a></strong>
<h3>3 மாத கால அவகாசம்:</h3>
அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், 3 மாத கால அவகாசம் வழங்கிய அதே வேளையில், மூன்று மாதங்களுக்குக் காத்திருக்காமல் எந்திரங்களை நிறுவும் நடைமுறைகளை முடிந்தவரை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், எந்திரங்கள் நடைமுறைக்கு வரும் வரை தற்போது உள்ள நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்.. கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்கிறாரா&#8230; கே.ஏ. செங்கோட்டையன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-k-a-sengottaiyan-stated-that-new-parties-would-join-the-tvk-alliance-104434.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 19:00:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-k-a-sengottaiyan-stated-that-new-parties-would-join-the-tvk-alliance-104434.html</guid>
		            
			

    	<description><![CDATA[Minister K A Sengottaiyan Latest Pressmeeet : தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணையும் என்று அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர் கம்யூனிஸ்ட் கட்சிகளை குறிப்பிட்டு சொன்னாரா என்ற கேள்வி எழுந்துள்ளது .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/sengottayan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்.. கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்கிறாரா&#8230; கே.ஏ. செங்கோட்டையன்!" /></figure>தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழக கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணையும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக மக்கள் வாக்களித்து தவெக தலைவர் ஜோசப் விஜய்யை முதல்வராக அமர வைத்துள்ளனர். விஜய் இருக்கும் வரை அவர் தான் நிரந்தரம் முதல்வர். தமிழக மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு வரலாற்றை படைத்து வருகிறார். இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு ஆளுமையாக விளங்கி வருகிறார்.
<h3>திமுகவுக்கு தான் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன</h3>
திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறுவது போல தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை. திமுகவுக்கு தான் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 100 சதவீத வெற்றியை பதிவு செய்யும். தொடரும் மின்வெட்டை சரி செய்வதற்காக மின் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மின்வெட்டு சரி செய்யப்படும். கடந்த 2017- ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் திமுக உறுப்பினர் செய்த அராஜகம் அனைவருக்கும் தெரியும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattimandram-moderator-solomon-pappaiah-life-story-and-journey-104339.html" target="_blank" rel="noopener">Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!</a>
<h3>தவெக கூட்டணியில் இணைகிறதா கம்யூனிஸ்ட் கட்சிகள்</h3>
முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு அருகதை இல்லை. தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தமிழக இடைத்தேர்தலுக்கு முன்னதாக தவெக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளது என்று தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி முறித்து விட்டு தவெக கூட்டணிகள் இணைந்துள்ளது.
<h3>கம்யூனிஸ்ட கட்சிகளின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு</h3>
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகள் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறாமலும், தவெக கூட்டணியில் இணையாமலும் மத்தியஸ்தமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான், தவெக அமைச்சர் செங்கோட்டையன் தவெக கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணையும் என்று தெரிவித்துள்ளார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியை மறைமுகமாக குறிப்பிடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/rs-bharathi-started-dmk-wins-the-by-election-in-tamil-nadu-tvk-government-will-collapse-104427.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும்.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரை!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னை &#8211; மதுரைக்கு ரூ.ரூ.19,761 கட்டணமா? விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் எகிறிய விமான கட்டணம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/pm-modi-gifts-russian-translation-of-thirukkural-to-putin-at-brics-summit-2-104421.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 18:29:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/pm-modi-gifts-russian-translation-of-thirukkural-to-putin-at-brics-summit-2-104421.html</guid>
		            
			

    	<description><![CDATA[Flight Ticket Prices Surge : விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்தர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரித்த நிலையில் விமான கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/flight-ticket-fare.png" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னை &#8211; மதுரைக்கு ரூ.ரூ.19,761 கட்டணமா? விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் எகிறிய விமான கட்டணம்" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 11 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/religion/ganesh-chaturthi-2026-avoid-these-items-for-blessings-and-full-benefits-104326.html" target="_blank" rel="noopener">விநாயகர் சதுர்த்தி</a> மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்தர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்தர்களில் பண்டிகைகளை கொண்டாடும் நோக்கில் அதிகளவிலான மக்கள் பயணிப்பது வழக்கம். இதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் .
<h3>விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் எகிறிய விமான கட்டணம்</h3>
ஏற்கனவே ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அரசு அறிவித்த சிறப்பு பேருந்துகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. 8 முதல் 10 மணி நேரம் பயணம் செய்பவர்கள் கூட்டநெரிசலில் பயணிப்பது சிரமமான காரியம். இதனைப்பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார்கள்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-report-11-sep-2026-tamil-nadu-weather-alert-heavy-rain-likely-in-5-districts-on-sept-12-and-13-104372.html"> Tamil Nadu Weather Alert: இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை</a></strong>

இந்த நிலையில் சற்று விலை உயர்வு என்றாலும் வசதியாகவும் விரைவாகவும் பயணிக்க முடியும் என்று விமான டிக்கெட்டை முயற்சித்தவர்களுக்கு காத்திருந்ததது அதிர்ச்சி. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,991 என்று இருக்கும் நிலையில், செப்டம்பர் 11, 2026 இன்று ரூ.17,153 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.5393 ஆக இருக்கும் கட்டணம், செப்டம்பர் 11, 2026 இன்று ரூ.19,761 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. .

சென்னையில் இருந்து திருச்சிக்கு வழக்கமாக விமான கட்டணம் ரூ.4,646 என்று இருக்கும் நிலையில் செப்டம்பர் 11, 2026 ரூ.14,673 ஆகவும், சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.4966-ல் இருந்து ரூ.16496 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு விமானக் கட்டணம் ரூ.3,801 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.17,993 வரை உயர்ந்துள்ளது. சென்னை–ஹைதராபாத் வழித்தடத்தில் ரூ.4,467 ஆக இருந்த கட்டணம், இன்று ரூ.18,207 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, நீண்டதூர விமானப் பயணத்துக்கான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattimandram-moderator-solomon-pappaiah-life-story-and-journey-104339.html">Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!</a></strong>

இந்த திடீர் கட்டண உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களை மக்கள் தங்கள் சொந்த ஊரில் கொண்டாட விரும்பும் நிலையில் தேவையை புரிந்துகொண்டு அவர்கள் மீது கூடுதல் கட்டணத்தை திணிப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்து வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும்.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/rs-bharathi-started-dmk-wins-the-by-election-in-tamil-nadu-tvk-government-will-collapse-104427.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 18:08:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/rs-bharathi-started-dmk-wins-the-by-election-in-tamil-nadu-tvk-government-will-collapse-104427.html</guid>
		            
			

    	<description><![CDATA[DMK Wins TVK Govt Collapse : தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் தமிழ க வெற்றிக் கழக அரசு கவிழும் என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி சூளுரைத்து உள்ளார் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/mk-stalin-seeks-cm-vijays-response.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும்.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரை!" /></figure>செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் திமுகவின் வேட்பாளர் சட்டத்துறை மாநில துணை செயலாளர் பரந்தாமன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி பங்கேற்று பேசியதாவது: மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுவது பரந்தாமன் இல்லை. திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தான். இவருக்கும், மதுராந்தகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த தொகுதி மக்களின் முகத்தில் எதிர்ப்பும், கோபமும் இருப்பது நன்றாக தெரிகிறது. மிசா பற்றி தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாது. எங்களைப் போன்ற 80 வயதை கடந்த நபர்களுக்கு தான் மிசாவின் கொடுமை என்றால் என்ன என்பது தெரியும். தற்போதைய சூழலில் மிசாவை பற்றி மு.க. ஸ்டாலின், டி. ஆர். பாலு, துரைமுருகன் ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.
<h3>மிசாவின் வரலாறு மதுராந்தகத்தில் தான் தொடங்கியது</h3>
ஆனால், யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததை சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியுள்ளார். நமது தலைவரை பற்றி பேசிய அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க இடைத்தேர்தல் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் வேறு எந்த தொகுதி மக்களுக்கும் கிடைக்காமல் மதுராந்தகம் தொகுதி கட்சியினருக்கு கிடைத்துள்ளது. மிசா- வரலாறு முதல் முதலாக மதுராந்தகம் தொகுதியில் தான் தொடங்கியது. அதன்படி, இந்த தொகுதியில் நிச்சயம் பரந்தாமன் வெற்றி பெறுவார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-candidates-maduranthakam-maragatham-kumaravel-and-dharapuram-sathyabama-background-details-104190.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!</a>
<h3>திமுக வெற்றி பெற்றால் தவெக அரசு கவிழ்ந்து விடும்</h3>
அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெற்றால், வருகிற ஜனவரி மாதத்துக்குள் தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் பேசுகையில், மதுராந்தகம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வெற்றி விழா, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு மூடு விழாவாக அமையும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தா. மோ. அன்பரசன், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
<h3>திமுக நிச்சயம் வெற்றி பெறும் என சூளுரை</h3>
தமிழகத்தில் அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றியை பதிவு செய்வதற்காக திமுக சார்பில் பரந்தாமன், சுகன்யாவும், அதிமுக சார்பில் கணிதா சம்பத், பானுமதியும், தவெக சார்பில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் களத்தில் திமுக- தவெக இடையே மோதல் போக்கு தீவிரமாக இருந்து வரும் நிலையில், மதுராந்தகம் தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று ஆர். எஸ். பாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-which-party-candidate-will-win-104396.html" target="_blank" rel="noopener">2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த மகள்.. வீடு புகுந்து அரிவாளால் வெட்டித் தள்ளிய தந்தை.. தென்காசியில் கொடூரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/man-hacks-daughter-and-son-in-law-with-a-sickle-in-sivagamipuram-near-pavoorchatram-104406.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 17:31:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/man-hacks-daughter-and-son-in-law-with-a-sickle-in-sivagamipuram-near-pavoorchatram-104406.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tenkasi Crime News : தென்காசி மாவட்டத்தில் சிவகாமிபுரத்தில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் பெண்ணின் தந்தை அரிவாளால் இருவரையும் கொடூரமாக வெட்டி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/tenkasi-attempt-murder-arrest.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த மகள்.. வீடு புகுந்து அரிவாளால் வெட்டித் தள்ளிய தந்தை.. தென்காசியில் கொடூரம்!" /></figure>தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் ( 23 வயது). இவரும், திருநெல்வேலி மாவட்டம், மேல அரியநாயகிபுரத்தை சேர்ந்த சுஷ்மிதா ( 21 வயது) என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போது காதல் மலர்ந்துள்ளது. ஆனால், இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுஷ்மிதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஆகாஷ் மற்றும் சுஷ்மிதா ஆகியோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, தம்பதி இருவரும் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். இவர்களது திருமணத்தில் விருப்பமில்லாத சுஷ்மிதாவின் தந்தை முருகன் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
<h3>மகள்- மருமகனை அரிவாளால் வெட்டி தந்தை</h3>
இந்த நிலையில், முருகன், சுஷ்மிதா மற்றும் ஆகாஷ் வசித்து வந்த வீட்டுக்குள் அத்துமீறி உள்ளே சென்று கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மருமகன் ஆகாஷை தலை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டினார். இதில், அவர் அலறி துடித்த நிலையில், அவரது சத்தம் கேட்டு சுஷ்மிதா ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், ஆத்திரம் தீராத முருகன் மகள் என்று பாராமல் சுஷ்மிதாவின் கை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் கொடூரமாக வெட்டினார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/case-registered-against-timber-merchant-following-pregnant-women-and-infant-death-kanchipuram-104211.html" target="_blank" rel="noopener">கர்ப்பிணி – சிசு உயிரிழந்த கொடூர சம்பவம்.. மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு.. காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி!</a>
<h3>அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை</h3>
இருவரின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் வசித்தவர்கள் வருவதைப் பார்த்து முருகன் அங்கிருந்து தனது பைக்கில் தப்பி சென்று விட்டார். உடனே, ஆகாஷ் மற்றும் சுஷ்மிதாவை மீட்ட பொதுமக்கள் அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் வேல்கனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
<h3>பெண்ணின் தந்தை அதிரடி கைது</h3>
தொடர்ந்து, இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட முருகன் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரை கைது செய்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் தந்தை கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் சாதிய ஆணவ கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-court-orders-murder-case-registered-against-4-police-over-sivaganga-ajith-kumar-custodial-death-104134.html" target="_blank" rel="noopener">சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-which-party-candidate-will-win-104396.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 16:51:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-which-party-candidate-will-win-104396.html</guid>
		            
			

    	<description><![CDATA[Madurantakam - Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவும் என கூறப்படும் நிலையில், எந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/by-election-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!" /></figure>தமிழகத்தில் அடுத்த மாதம் அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. பொதுவாக இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் பலத்தை எடை போடும் தேர்தல் என்றே சொல்வது வழக்கம். அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்துக்கு இந்த தேர்தல் வெற்றி வாய்ப்பை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்த இடைத்தேர்தலை சாதகமாக பயன்படுத்தி எம்எல்ஏக்களின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு அச்சாரமாக தவெக அரசின் 4 மாத ஆட்சியில் லஞ்சம், ஊழல் ஒழிப்பு கொள்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் தவெக மட்டும் தனித்து களமிறங்கிய நிலையில், தற்போது, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
<h3>தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு</h3>
இதன் காரணமாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரு தொகுதிகளில் தவெகவின் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இரு வேட்பாளர்களுக்கும் தலா 45 சதவீத அளவுக்கு குறையாமல் வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன், இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளில் தவெக தலைவர் ஜோசப் விஜய் நேரில் சென்று வாக்கு சேகரித்தால், கூடுதல் வாக்குகள் கிடைத்து வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம், தவெகவின் எம்எல்ஏக்கள் பலம் 110- ஆக உயர வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-candidates-announced-for-madhurantakam-and-tarapuram-by-elections-104185.html" target="_blank" rel="noopener">மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!</a>
<h3>பலம் வாய்ந்த வேட்பாளர்களை களமிறக்கிய தவெக</h3>
அத்துடன், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த சத்தியபாமாவும் தவெக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் மேற்கண்ட தொகுதிகளில் அதிக செல்வாக்கு உள்ளது. அதனை, சிந்தாமல், சிதறாமல் தவெக அறுவடை செய்ய தனி தேர்தல் வியூகம் அமைத்துள்ளது. இது ஒரு புறம் இருந்தால், அதிமுகவின் கோட்டையாக விளங்கி வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் எதிர்பாராத விதமாக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
<h3>3 முனைப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு</h3>
இதனால், தங்களது கோட்டையை தக்க வைத்துக் கொள்ள அதிமுகவும் தேர்தல் வியூகத்தை கட்டமைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறு மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக என மும்முனை போட்டி நிலவும் சூழ்நிலையில், உறுதியாக தவெக வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தவெக அரசுக்கு சற்று நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-candidates-maduranthakam-maragatham-kumaravel-and-dharapuram-sathyabama-background-details-104190.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தென்காசி டிஎஸ்பி பால்சுதரின் கெமிக்கல் ஆப்பு! நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் உள்பட இருவர்.. தூண்டில் போட்டு தூக்கிய DVAC போலீஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/kadayanallur-surveyor-including-two-people-arrested-for-accepting-a-bribe-to-measure-land-104371.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 15:55:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/kadayanallur-surveyor-including-two-people-arrested-for-accepting-a-bribe-to-measure-land-104371.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tenkasi Surveyor Arrested For Accepting Bribe : கடையநல்லூரில் நிலத்தை அளவீடு செய்வதற்காக ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேர் உள்பட இருவரை தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/survoyer-arrest-tsi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தென்காசி டிஎஸ்பி பால்சுதரின் கெமிக்கல் ஆப்பு! நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் உள்பட இருவர்.. தூண்டில் போட்டு தூக்கிய DVAC போலீஸ்!" /></figure>தென்காசி மாவட்டம், கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் மிட்டா ஆஃபீஸ் தெருவை சேர்ந்தவர் கணபதி. இவர், தனது பெயரில் இருந்த இடத்தை தனது மகன்களான கருப்பசாமி மற்றும் கல்யாணி ஆகியோருக்கு பிரித்து கொடுத்துள்ளார். அந்த இடத்தில் கருப்பசாமி வீடு கட்டி தீர்வை செலுத்தி வந்துள்ளார். இதனிடையே, அந்த இடத்துக்கு தனிப்பட்ட கோரி கருப்பசாமி விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வரும் கடையநல்லூர், கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் மாரிராஜ் ( 36 வயது) என்பவரை சந்தித்து கேட்ட போது, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, இடைத்தரகரான கடையநல்லூர், கம்பனேரியை சேர்ந்த ராஜா மகன் ஜெகதீஷ் ( 23 வயது) என்பவர், கருப்பசாமியின் வீட்டுக்கு சென்று இடத்தை பார்வையிட்டதுடன், விண்ணப்பத்தில் சர்வே எண் தவறாக இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க கூறியுள்ளார். அதன்படி, கருப்பசாமி மீண்டும் பட்டாவுக்கு விண்ணப்பித்துள்ளார்.
<h3>நிலத்தை அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சர்வேயர்</h3>
அதன்படி, கடந்த 8- ஆம் தேதி கருப்பசாமியின் இடத்தை சர்வேயர் மாரிராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் அளவீடு செய்தனர். தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் தந்தால்தான் வரைபடம் தயார் செய்து தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு, கருப்பசாமி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பின்னர், நேற்று வியாழக்கிழமை கருப்பசாமியை தொடர்பு கொண்ட ஜெகதீஷ் பணம் தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது, அவ்வளவு பணம் இல்லை என்றும் குறைத்துக் கொள்ளுமாறும் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tiruvottiyur-murder-youth-pradeep-raj-hacked-to-death-police-inspector-allegation-104067.html" target="_blank" rel="noopener">கந்துவட்டி கொடூரம்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக பேட்டி அளித்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலை.. திருவொற்றியூரில் பரபரப்பு!!</a>
<h3>ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த போலீஸ்</h3>
இதில், பேரம் பேசப்பட்டு இறுதியாக ரூ. 4 ஆயிரம் தர வேண்டும் என்று ஜெகதீஷ் கறாராக தெரிவித்துள்ளார். இதனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பசாமி தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை சர்வேயர் மாரிராஜிடம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வேயரிடம், கருப்புசாமி லஞ்ச பணத்தை கொடுத்தார்.
<h3>சர்வேயரை அதிரடியாக கைது செய்த டிஎஸ்பி தலைமையிலான போலீஸ்</h3>
அப்போது, இந்த பணத்தை ஜெகதீஷிடம் கொடுக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில், அவரிடம் கருப்பசாமி லஞ்ச பணத்தை கொடுத்த நிலையில், அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சர்வேயர் மாரிராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/2-arrested-for-the-murder-of-a-wedding-hall-owner-in-kallidaikurichi-nellai-104118.html" target="_blank" rel="noopener">நெல்லையில் 10 வயது மகள் கண்முன்னே தந்தை கொடூர கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்.. இருவரை கைது செய்த தனிப்படை!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Weather Alert: இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு &#8211; வானிலை மையம் எச்சரிக்கை</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-report-11-sep-2026-tamil-nadu-weather-alert-heavy-rain-likely-in-5-districts-on-sept-12-and-13-104372.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 15:48:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-weather-report-11-sep-2026-tamil-nadu-weather-alert-heavy-rain-likely-in-5-districts-on-sept-12-and-13-104372.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu weather today : சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/rain-alert-sep-12.png" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Weather Alert: இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு &#8211; வானிலை மையம் எச்சரிக்கை" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 11 :</strong> தமிழ்நாட்டில் மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 12, 2026 மற்றும் செப்டம்பர் 13, 2026 ஆகிய 2 நாட்கள் பலத்த காற்றுடன் மிதமான <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-september-11-chennai-imd-issues-moderate-rainfall-warning-to-10-districts-104236.html" target="_blank" rel="noopener">மழைக்கு</a> வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் கடலோர தமிழக மாவட்டங்கள், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
<h3>இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு</h3>
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 11, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல்
மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-kas-press-meet-cabinet-reshuffle-delta-water-farmers-insurance-104310.html">அமைச்சரவை மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்!</a></strong>

மேலும் கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை,நாமக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு, கரூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 12, 2026 மற்றும் 13, 2026 ஆகிய 2 நாட்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html"> “எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!</a></strong>

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் செப்டம்பர் 11, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 12, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattimandram-moderator-solomon-pappaiah-life-story-and-journey-104339.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 14:52:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/pattimandram-moderator-solomon-pappaiah-life-story-and-journey-104339.html</guid>
		            
			

    	<description><![CDATA[Pattimandram Moderator Solomon Pappaiah : பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். இவர் யார், இவர் கடந்து வந்த பாதை என்ன என்ற முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக படித்த பார்த்து தெரிந்து கொள்ளலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/solomon-pappaiahh.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!" /></figure>அன்பு பெரியோர்களே... அருமை தாய்மார்களே என்ற அருமையான வரிகளுக்கு சொந்தக்காரரான பட்டிமன்ற நடுவரும், தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மதுரையில் காலமானார். இவர் யார்... இவர் கடந்து வந்த பாதை என்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் கடந்த 1936- ஆம் ஆண்டு பிப்ரவரி 22- ஆம் தேதி சுந்தரம்- பாக்கியம் தம்பதிக்கு 9- ஆவது குழந்தையாக பிறந்தார் சாலமன் பாப்பையா. இவருக்கு ஜெயாபாய் என்ற மனைவி இருந்தார். விமலா சாலமன் என்ற மகளும், தியாக மூர்த்தி என்ற மகனும் உள்ளனர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா தனது குரு பேராசிரியர் ஜோதி முத்துவின் வழிகாட்டுதலின்படி இளம் வயதிலேயே மேடைகளில் பேசத் தொடங்கினார்.
<h3>விரிவுரையாளர்- நடிகர்- நடுவர் என பன்முக தன்மையுடையவர்</h3>
தொடர்ந்து, அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய சாலமன் பாப்பையா கல்லூரி நாடகங்களையும் இயக்கியுள்ளார். திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள சாலமன் பாப்பையா திருக்குறள் செம்மல் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். திருக்குறள் கழகத் தலைவர், மதுரை கம்பன் கழக தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். பேராசிரியராகவும், பட்டிமன்ற நடுவராகவும் பல்வேறு மேடைகளில் பேசி அலங்கரித்துள்ளார். சினிமாவையும் விட்டு வைக்காமல் நடித்து தூள் கிளப்பியுள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/the-manifold-increase-in-omni-bus-fares-ahead-of-weekends-and-holidays-has-caused-great-shock-among-passengers-104290.html" target="_blank" rel="noopener">மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..</a>
<h3>"அன்பு பெரியோர்களே அருமை தாய்மார்களை" என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்</h3>
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட படங்களில் பேராசிரியர் சாலமன் பாப்பையா நடித்து கலக்கியுள்ளார். தமிழ் மீது தீராத காதல் கொண்டவர் சாலமன் பாப்பையா. "அன்பு பெரியோர்களே அருமை தாய்மார்களே" என்ற சாலமன் பாப்பையாவின் சொல்லாடல் மிகவும் பிரபலம் வாய்ந்தது. 7000- க்கும் அதிகமான பட்டிமன்றங்களில் பேசியவர். அதிலும் பெரும்பாலும் நடுவராக இருந்துள்ளார். சமுதாயம், குடும்பப் பிரச்சனை சார்ந்த தலைப்புகளை பட்டிமன்றங்களில் கையாண்டவர்.
<h3>விருதுகளை அள்ளிய சாலமன் பாப்பையா</h3>
பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். சாலமன் பாப்பையாவின் பணிகளை பாராட்டி கடந்த 2021- ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கடந்த 2000- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சாலமன் பாப்பையாவுக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்து. முத்தமிழறிஞர் தமிழறிஞர் சொல்வேந்தர் நகைச்சுவை நாவலர் இயர் செல்வம் பட்டிமன்ற பேரரசு ஆகிய பெயர்களை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-scholar-and-pattimandram-judge-solomon-pappaiah-dies-at-90-104334.html" target="_blank" rel="noopener">அன்பு தாய்மார்களே!… பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார் – ரசிகர்கள் சோகம்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அன்பு தாய்மார்களே!&#8230; பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார் &#8211; ரசிகர்கள் சோகம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-scholar-and-pattimandram-judge-solomon-pappaiah-dies-at-90-104334.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 14:04:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-scholar-and-pattimandram-judge-solomon-pappaiah-dies-at-90-104334.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா செப்டம்பர் 11, 2026 இன்று  காலமானார். அவருக்கு வயது 90 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சன் டிவிக்காக சிவகாசியில் கடந்த செப்டம்பர் 5, 2026 அன்று நடைபெற்ற பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் அவரது இழப்பு தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/solomo-pappaiah.png" class="attachment-large size-large wp-post-image" alt="அன்பு தாய்மார்களே!&#8230; பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார் &#8211; ரசிகர்கள் சோகம்" /></figure>தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா செப்டம்பர் 11, 2026 இன்று  காலமானார். அவருக்கு வயது 90. <a href="https://www.tv9tamilnews.com/religion/why-is-arugampul-garland-special-in-lord-vinayagar-worship-104316.html" target="_blank" rel="noopener">விநாயகர் சதுர்த்தியை</a> முன்னிட்டு சன் டிவிக்காக சிவகாசியில் கடந்த செப்டம்பர் 5, 2026 அன்று நடைபெற்ற பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் அவரது இழப்பு தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
<h3>சாலமன் பாப்பையா காலமானார்</h3>
திருக்குறள் கம்பராமாயணத்துக்கு உரை எழுதியுள்ளார். தமிழ் ரசிகர்களிடையே பட்டிமன்ற பேச்சாளராக மிகவும் பிரபலமானவர். கிட்டத்தட்ட 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார். அன்புத் தாய்மார்களே என இவர் பட்டிமன்றத்தை தொடங்கும் விதம் தலைமுறைகள் கடந்து ரசிகர்களிடையே தனி வரவேற்பு உண்டு. மேலும் பண்டிகை நாட்களில் இவரது பட்டிமன்றங்கள் தவறாது இடம் பெறும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/the-manifold-increase-in-omni-bus-fares-ahead-of-weekends-and-holidays-has-caused-great-shock-among-passengers-104290.html">மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..</a></strong>

வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 5, 2026 அன்று சிவகாசியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கலந்துகொண்டார். இந்த பட்டிமன்றம் சன்டிவியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒளிபரப்பாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
<h3>'பட்டிமன்றங்களில் எளிய மக்களின் பிரச்னைகளை பேச வைத்தவர்'</h3>
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். குறிப்பாக பட்டிமன்றங்களில் புராணங்கள், இலக்கியங்கள் மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், எளிய மக்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை எடுத்து வந்து பேச வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html"> “எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!</a></strong>

சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தன்குடி அருகே கடந்த பிப்ரவரி 22, 1936 அன்று பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர் ்தே கல்லூரியில் பின்னாளில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். நடிகர் விவேக், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் இவரிடம் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருக்கிறது.

இது தொடர்பாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து தனது இரங்கல் பதிவில், சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும். பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?

கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன். சிரிக்க வைத்துச்
சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார். அவரது நாற்காலி காலியாகவே இருக்கும். நிரப்ப முடியாது. மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது. மனம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் திமுக.. மதுராந்தகம், தாராபுரத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-appoints-election-in-charges-maduranthakam-dharapuram-assembly-by-election-104329.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 13:25:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-appoints-election-in-charges-maduranthakam-dharapuram-assembly-by-election-104329.html</guid>
		            
			

    	<description><![CDATA[Assembly By-Election 2026: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் மற்றும் எஸ்.சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், மனுத்தாக்கல் முதல் பிரச்சார வியூகங்கள் வரை ஒருங்கிணைக்க மூத்த தலைவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/mk-stalin-dmk-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் திமுக.. மதுராந்தகம், தாராபுரத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம்!!" /></figure>தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இத்தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்ட நிலையில், தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில் திமுக தலைமை முக்கிய நகர்வை மேற்கொண்டுள்ளது. இதன்படி, இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

<strong>மேலும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html">எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!</a></strong>
<h3>மும்முனைப் போட்டியாக உருவெடுத்த இடைத்தேர்தல் களம்</h3>
இடைத்தேர்தல் களம் குறித்துப் பார்க்கையில், மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் போட்டியிடுகிறார். அதேபோல், தாராபுரம் (தனி) தொகுதியில் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த எஸ். சுகன்யா வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். இத்தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் சூழல் உருவாகியுள்ளது. தற்போது திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று பிரதான கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், இரு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவி தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
<h3>திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்</h3>
இதன் தொடர்ச்சியாக, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காகத் தமிழக முன்னாள் அமைச்சர் தா.மு. அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் ஆகிய இருவரையும் திமுக தலைமை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-secretariat-in-pattinapakkam-political-leaders-opposition-104274.html">பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?</a></strong>
<h3>வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரச்சாரத் திட்டங்கள்;</h3>
நியமிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணிகள், பூத் கமிட்டி கூட்டங்களை ஒருங்கிணைப்பது மற்றும் முதன்மைத் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத் திட்டங்களை வகுப்பது போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இதனிடையே, இரு தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வரும் 15-ஆம் தேதி தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, திமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடபிடித்துள்ளது.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கட்டிட மேற்கூரைகளில் ஏற பொதுமக்களுக்கு தடை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/safety-alert-ahead-of-meenakshi-temple-kumbabhishekam-public-barred-from-building-rooftops-104309.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 11:52:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/safety-alert-ahead-of-meenakshi-temple-kumbabhishekam-public-barred-from-building-rooftops-104309.html</guid>
		            
			

    	<description><![CDATA[Meenakshi Temple Kumbabhishekam: கும்பாபிஷேகம் நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தங்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் எவரும் ஏறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenakshi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கட்டிட மேற்கூரைகளில் ஏற பொதுமக்களுக்கு தடை!" /></figure><strong>செப்டம்பர் 11, 2026:</strong> மதுரை மாநகராட்சி மண்டலம் 3-க்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் ஏறி கும்பாபிஷேகத்தைப் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-secretariat-in-pattinapakkam-political-leaders-opposition-104274.html"> பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?</a>
<h3>மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா:</h3>
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு பெருவிழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், மதுரை மாநகரமே காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், குடமுழுக்கு விழாவுக்கான தேவையான ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
<h3>பக்தர்கள் மேற்கூரை மீது ஏற தடை விதிப்பு:</h3>
இந்த சூழலில், கும்பாபிஷேக தினத்தன்று கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் அவற்றின் மேற்கூரைகளில் பொதுமக்கள் ஏறுவதற்கு மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது. கும்பாபிஷேகத்தின்போது ஏற்படக்கூடிய கூட்ட நெரிசல் மற்றும் எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/the-manifold-increase-in-omni-bus-fares-ahead-of-weekends-and-holidays-has-caused-great-shock-among-passengers-104290.html">மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..</a>

அதிகமான பொதுமக்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் ஏறுவதால், கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும், சில கட்டிடங்களின் அருகிலேயே மின்சாரக் கம்பிகள் மற்றும் வடங்கள் செல்வதால், மின்சார விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
<h3>உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்:</h3>
இதனை கருத்தில் கொண்டு, கும்பாபிஷேகம் நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தங்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் எவரும் ஏறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 17 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அமைச்சரவை மாற்றமா? அமைச்சர்  செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-kas-press-meet-cabinet-reshuffle-delta-water-farmers-insurance-104310.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 11:52:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-kas-press-meet-cabinet-reshuffle-delta-water-farmers-insurance-104310.html</guid>
		            
			

    	<description><![CDATA[Minister KAS Press Meet: தமிழக அமைச்சரவை மாற்றம், மேட்டூர் அணை நீர் திறப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் பயிர்க் காப்பீடு ஆகியவை குறித்து அமைச்சர் கே.ஏ.எஸ் (கே.என். நேரு / சேகர்பாபு) செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அரசுத் திட்டங்கள் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த விரிவான பதில்கள் இதோ.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/sengottaiyan-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அமைச்சரவை மாற்றமா? அமைச்சர்  செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்!" /></figure>தமிழகத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான திட்டங்கள், டெல்டா மாவட்டப் பாசனத்திற்கான நீர் வரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்த பல்வேறு கேள்விகளுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஒன்பது கிராம மக்கள் எழுப்பியுள்ள கருத்துக்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, எந்தவொரு மக்கள் நலத் திட்டத்தைக் கொண்டு வரும்போதும் பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்படுவது இயல்பு என்றும், அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து இறுதியான முடிவை முதலமைச்சரே மேற்கொள்வார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

<strong>மேலும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html">எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!</a></strong>
<h3>அணையிலிருந்து திறக்கப்படும் நீர்:</h3>
விவசாயிகள் சந்தித்து வரும் பாசன நீர் தட்டுப்பாடு மற்றும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறித்துப் பேசிய அமைச்சர், தற்போதுள்ள நீர் இருப்பு மற்றும் வருங்கால நீர் வரத்தை ஆய்வு செய்தே துறை சார்பில் நீர் திறக்கப்பட்டு வருவதாகக் கூறினார். காவிரி நீர் Tanjavur தாண்டி விரைவாக வந்து சேரவில்லை என்றும், குறைந்த அளவிலான நீரே வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ள சூழலில், "கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது; வெள்ளப் பெருக்கு வரக்கூடும் என்பதால் விவசாயிகள் எக்காரணத்தைக் கொண்டும் கவலைப்படத் தேவையில்லை" என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்குவதற்கு ஏற்பப் படிப்படியாகக் கூடுதல் நீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
<h3>பயிர்க் காப்பீடு திட்டம்:</h3>
விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பயிர்க் காப்பீடு (Crop Insurance) திட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகக் கூறினார். கூட்டுறவு சங்கங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளில் 75,000 பேருக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டும், அதற்கான அரசாணை (GO) மற்றும் நிதிகள் சேரவில்லை என்ற குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த அவர், முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தள்ளுபடித் தொகை விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்கு முழுமையாகச் சென்றடையும் என்றும், புதிய கடன்களை வழங்குவதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்றும் விளக்கமளித்தார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-secretariat-in-pattinapakkam-political-leaders-opposition-104274.html">பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?</a></strong>
<h3>கூட்டுறவு கடன் தள்ளுபடி:</h3>
முன்னதாக, கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்ய ஐந்து ஆண்டு கால அவகாசத்தில் அரசே நிதிகளை ஒதுக்கும் முறை இருந்தது என்றும், தற்போது அந்த நடைமுறைகள் மாற்றப்பட்டு உடனடியாக நிதிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பின் இறுதியில், 'தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறதா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மக்கள் நலப் பணிகளுக்காக வந்துள்ளோம் என்றும், அதுபோன்ற செய்திகளுக்குப் பிறகு பதிலளிப்பதாகக் கூறிச் சிரித்தபடி செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/the-manifold-increase-in-omni-bus-fares-ahead-of-weekends-and-holidays-has-caused-great-shock-among-passengers-104290.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 10:31:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/the-manifold-increase-in-omni-bus-fares-ahead-of-weekends-and-holidays-has-caused-great-shock-among-passengers-104290.html</guid>
		            
			

    	<description><![CDATA[விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் என்பது பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு சுமார் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைப்போல, சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.3,000, சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3,500, கன்னியாகுமரிக்கு ரூ.3,800, நாகர்கோவிலுக்கு ரூ.3,690, ஈரோட்டிற்கு ரூ.2,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/omni.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்.." /></figure><strong>செப்டம்பர் 11, 2026:</strong> வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை பண்டிகை நாட்களை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு தரப்பில் இயக்கப்படும். அதே சமயத்தில், தெற்கு ரயில்வே தரப்பிலும் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்படும். இந்த சூழலில், ரயில்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்படும் காரணத்தினால், பலரும் பேருந்துகளை நாடுகின்றனர்.

இந்த சூழலில், வரக்கூடிய செப்டம்பர் 14ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என மூன்று நாட்கள் விடுமுறை என்ற சூழலில், பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்துள்ளனர்.
<h3>பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta">தவெக அரசு அமைந்த பிறகு ஆம்னி பஸ் பர்மிட்டுக்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்குவதில்லை.. இனிமேல் நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் ~ ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு..

செப்டம்பர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமையான நாளை பெங்களூர் டூ கோவை 650 ரூபாய் டிக்கெட்… <a href="https://t.co/6lmkBKSxmf">pic.twitter.com/6lmkBKSxmf</a></p>
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) <a href="https://x.com/sureshkalipandi/status/2098105729534369919?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் என்பது பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு சுமார் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைப்போல, சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.3,000, சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3,500, கன்னியாகுமரிக்கு ரூ.3,800, நாகர்கோவிலுக்கு ரூ.3,690, ஈரோட்டிற்கு ரூ.2,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வழக்கமாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யக்கூடிய இந்த டிக்கெட்டுகள், தற்போது நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளன. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-secretariat-in-pattinapakkam-political-leaders-opposition-104274.html">பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?</a>

அதேபோல, பெங்களூரில் இருந்து கோவைக்கு ரூ.650 ஆக இருக்கும் பேருந்து டிக்கெட் தற்போது ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரூ.750 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்ட டிக்கெட்டுகள் தற்போது ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
<h3>நடவடிக்கை எடுக்குமா அரசு?</h3>
பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. கடந்த ஆட்சியில் நடந்த அதே தவறையும், ஒரே கேட்பையும் தான் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் மேற்கொண்டு இருக்கிறது என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html">எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!</a>

அதே சமயத்தில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு ஆம்னி பேருந்துகளுக்கான பெர்மிட் வழங்க ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கப்படுவதில்லை. எனவே, இனிமேல் நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மக்களிடம் வசூலிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இது வெறும் காகித அறிக்கையாக மட்டுமே இருக்கிறது தவிர, நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. எனவே, ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;எங்கே சென்றது சிங்கப்பெண் படை?&#8221;.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 10:19:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/vanathi-srinivasan-questions-singappen-padai-women-safety-tamil-nadu-104287.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vanathi Srinivasan Slams TN Govt: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், மிகுந்த விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் படை’ தற்போது எங்கே சென்றது எனத் தமிழக அரசை நோக்கிக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/vanathi-srinivaasn.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;எங்கே சென்றது சிங்கப்பெண் படை?&#8221;.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!" /></figure><strong>செப்டம்பர், 11:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/will-aadhav-arjuna-topple-the-government-like-chandrababu-naidu-former-speaker-appavu-questions-cm-vijay-104270.html" target="_blank" rel="noopener">தமிழ்நாட்டில்</a> பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து வந்தாலும், களத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இந்தச் சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து பதிவாகியுள்ள பாலியல் தொல்லை வழக்குகளைச் சுட்டிக்காட்டி, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பெருமையுடன் தொடங்கப்பட்ட சிறப்புப் படைகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-drinking-water-crisis-lake-reservoir-levels-drop-44-percent-104241.html">சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?</a></strong>
<h3>24 மணி நேரத்தில் அடுக்கடுக்கான குற்றங்கள்:</h3>
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரே நாளில் வெளியாகியுள்ள குற்றச் சம்பவங்களின் பட்டியலை வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையில் பணியாற்றும் ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை, அரும்பாக்கம் பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை, கள்ளக்குறிச்சியில் அரசுப் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை ஆகியவை இதில் அடங்கும். மேலும், கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் ஓடும் அரசுப் பேருந்தில் நடத்துநரால் மாணவிக்கு ஏற்பட்ட அத்துமீறல், திண்டுக்கல்லில் தனியார் பேருந்து ஓட்டுநரால் பத்தாம் வகுப்பு மாணவிக்கு அளிக்கப்பட்ட தொல்லை, சிவகங்கையில் 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை மற்றும் ராமநாதபுரம் கீழக்கரையில் கஞ்சா போதை ஆசாமிகளால் பெண் தற்கொலை செய்து கொண்ட சோகம் என மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாகப் பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளதை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
<h3>சிங்கப்பெண் படையின் நிலை என்ன?</h3>
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, மிகுந்த விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் படை’ அல்லது சிறப்புப் பாதுகாப்புப் படையின் தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பெருமையுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய காவல் அமைப்புகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன என்றும், அவை பெயரளவில் மட்டுமே இயங்குகின்றனவா என்றும் அவர் வினவியுள்ளார். தொடர்ச்சியாக குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்தச் சிறப்புப் படையின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியிருப்பதாக அவர் சாடியுள்ளார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/omni-bus-fare-hike-anbumani-ramadoss-slams-tvk-government104246-104246.html">“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!</a></strong>
<h3>மக்களின் அச்சமும், அரசின் மீதான விமர்சனமும்:</h3>
தற்போதுள்ள சூழலில், “நான் இந்தப் பதிவை இட்டுக் கொண்டிருக்கும் இந்த நொடியில் கூட, தமிழ்நாட்டின் ஏதேனும் ஒரு மூளையில் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு எதிராகப் பாலியல் குற்றம் நடந்து கொண்டிருக்குமோ” என்ற அச்சம் எழுகிறது என வானதி சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியின் கீழ் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை மாநில மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் இத்தனை மாவட்டங்களில் அடுக்கடுக்காகப் பாலியல் குற்றங்கள் பதிவாகியிருப்பது காவல் துறையின் கண்காணிப்புக் குறைபாட்டையே காட்டுகிறது என்றும், குற்றவாளிகள் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-secretariat-in-pattinapakkam-political-leaders-opposition-104274.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 10:02:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-secretariat-in-pattinapakkam-political-leaders-opposition-104274.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Secretariat in Pattinapakkam: சென்னை பட்டினப்பாக்கத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், அப்பகுதி மீனவ மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விரிவான செய்தித் தொகுப்பு இதோ.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/pattinapakkam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 11:</strong> தமிழ்நாட்டின் முதன்மை நிர்வாக மையமான தலைமைச் செயலகத்திற்குப் புதிய வளாகம் அமைப்பது தொடர்பான விவாதம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 26.36 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற பேரவை வளாகம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியான நொடியிலிருந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் நிலவும் கடும் இடநெருக்கடி, போதிய வாகன நிறுத்த வசதியின்மை மற்றும் துறைச் செயலர்களின் அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறி இருப்பதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/omni-bus-fare-hike-anbumani-ramadoss-slams-tvk-government104246-104246.html">“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!</a></strong>
<h3>110-ன் கீழ் அரசாணை, இடத்தேர்வு விவரங்கள்:</h3>
சட்டமன்றப் பேரவையில் அரசமைப்பு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்கள் இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாடிக் கட்டிடமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த வளாகத்திற்கு, வடிவமைப்பு, திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுக்காகத் தனித்தனிக் குழுக்களை அமைக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கையாள லைட்ஹவுஸ் முதல் அடையாறு வரை 3.5 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டவும் நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு வருகிறது.
<h3>அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டும் சிக்கல்:</h3>
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இத்திட்டத்திற்குத் தனது காரசாரமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். "சாந்தோம் மற்றும் பசுமைவழிச் சாலைகளில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வரும் நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு வருவது நிலைமையை மேலும் மோசமாக்கும். அருகில் உள்ள பள்ளிகள், சாந்தோம் தேவாலயம் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும், வெறும் 26 ஏக்கர் நிலப்பரப்பு என்பது ஒரு ஒருங்கிணைந்த தலைமைச் செயலகத்திற்குப் போதுமானது அல்ல. எனவே அவசரப்படாமல், அடுத்த 100  ஆண்டுகால தேவைகளைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு வெளியே 500 முதல் 1,000 ஏக்கரில் பரந்த 'ஒருங்கிணைந்த நிர்வாக நகரம்' அமைக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
<h3>டிடிவி தினகரன் சாடும் சர்வாதிகாரப் போக்கு:</h3>
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "சட்டமன்றத்தில் எவ்வித ஜனநாயக விவாதமும் இன்றி 110 விதியின் கீழ் திட்டத்தை அறிவித்து, அவசரகதியில் பட்டினப்பாக்கத்தைத் தேர்வு செய்திருப்பது அரசின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் வந்து செல்ல வேண்டிய ஒரு மையத்தைப் பட்டினப்பாக்கம் போன்ற நெருக்கடியான கடலோரப் பகுதியில் அமைத்தால், அது கட்டுப்படுத்த முடியாத பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைத் தோற்றுவிக்கும். எனவே இந்த இடத்தேர்வை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" எனச் சாடியுள்ளார்.
<h3>பாஜக கண்டனம், மீனவர் வாழ்வாதாரக் கவலை:</h3>
பாரதிய ஜனதா கட்சி தரப்பிலும் இத்திட்டத்திற்கு வீரியமிக்க எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கொண்டு வருவது பாரம்பரிய மீனவச் சமூகத்தினருக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி, இயற்கைச் சீற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதியில் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை மேற்கொள்வது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், சுனாமி போன்ற பேரிடர்களின் போது இக்கட்டிடம் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-drinking-water-crisis-lake-reservoir-levels-drop-44-percent-104241.html">சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?</a></strong>
<h3>மீனவர்களின் வீதிப்போராட்ட எச்சரிக்கை:</h3>
அரசியல் தலைவர்களின் விமர்சனங்களுக்கு இடையே, பட்டினப்பாக்கம் பகுதி மீனவ மக்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டித் தங்களது அன்றாட மீன்பிடித் தொழிலும் கடலுக்குச் செல்லும் வழிகளும் முடக்கப்படும் என அவர்கள் அச்சப்படுகின்றனர். இத்திட்டத்திற்கு எதிராகப் பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான மீனவக் கிராமப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், அரசு திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் மீனவ அமைப்புகள் தீர்மானித்துள்ளன. எதிர்ப்புகள் முற்றும் நிலையில், அரசு இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமா அல்லது மாற்று இடத்தை மறுபரிசீலனை செய்யுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆட்சியை கவிழ்த்து முதல்வராக ஆதவ் அர்ஜுனா ப்ளான்.. அந்த பயத்தில் தான் லண்டன் அழைத்து சென்றீர்களா? முதல்வர் விஜய்க்கு அப்பாவு கேள்வி..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/will-aadhav-arjuna-topple-the-government-like-chandrababu-naidu-former-speaker-appavu-questions-cm-vijay-104270.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 07:57:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/will-aadhav-arjuna-topple-the-government-like-chandrababu-naidu-former-speaker-appavu-questions-cm-vijay-104270.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி. ராமராவ் அவர்கள் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வரானது போல், ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் உங்களோடு லண்டன் அழைத்துச் செல்கிறீர்களா, CM sir? என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/aadhav-cm-appavu.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆட்சியை கவிழ்த்து முதல்வராக ஆதவ் அர்ஜுனா ப்ளான்.. அந்த பயத்தில் தான் லண்டன் அழைத்து சென்றீர்களா? முதல்வர் விஜய்க்கு அப்பாவு கேள்வி.." /></figure><strong>செப்டம்பர் 11, 2026:</strong> தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சியின் முதல்வர் சி. ஜோசப் விஜய், முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், இந்தப் பயணம் குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து,

இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக, உங்களால் “கல்லாப்பெட்டிக் கூட்டணி” என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து, “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி” என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள், CM sir? என அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/omni-bus-fare-hike-anbumani-ramadoss-slams-tvk-government104246-104246.html">“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!</a>
<h3>முதலமைச்சர் விஜய் நோக்கி அப்பாவு எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta"><a href="https://x.com/hashtag/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#தவெக</a> ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் "<a href="https://x.com/hashtag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#கல்லாப்பெட்டிகூட்டணி</a> " என்று…</p>
— M Appavu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AppavuexSpeaker) <a href="https://x.com/AppavuexSpeaker/status/2097961599151829413?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு, கூட்டத்தின் நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசத் துணிவில்லாமல், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் “நரித்தனத்தின் வெளிப்பாடு” என்பது நாட்டுமக்களுக்கு நன்றாகத் தெரியும், CM sir? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
<h3>கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா?</h3>
மேலும், இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை இந்திரா அவர்களால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்ததால், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா, கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா? என்றும் அப்பாவு விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-drinking-water-crisis-lake-reservoir-levels-drop-44-percent-104241.html">சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?</a>
<h3>ஆட்சியஒ கவிழ்க்க ஆதவ் அர்ஜுனா பிளான்:</h3>
அதேபோல், ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி. ராமராவ் அவர்கள் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வரானது போல், ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் உங்களோடு லண்டன் அழைத்துச் செல்கிறீர்களா, CM sir? எனவும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>முதல்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் மதுராந்தகம் தொகுதி.. மும்முனைப் போட்டியில் சூடாகும் தேர்தல் களம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/maduranthakam-assembly-by-election-political-history-triangular-contest-tvk-dmk-aiadmk-104253.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 07:51:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/maduranthakam-assembly-by-election-political-history-triangular-contest-tvk-dmk-aiadmk-104253.html</guid>
		            
			

    	<description><![CDATA[Maduranthakam By Election: மதுராந்தகம் தனித் தொகுதி வரலாற்றிலேயே முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள சூழலில், அங்கு நிலவும் கடும் மும்முனைப் போட்டி குறித்து சிறப்புத் தொகுப்பு. திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்த இத்தொகுதியில் வெற்றி வாய்ப்பை கைப்பற்ற திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளிடையே நிலவும் வாக்கு பின்னணி மற்றும் தேர்தல் கள நிலவரம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/by-election.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முதல்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் மதுராந்தகம் தொகுதி.. மும்முனைப் போட்டியில் சூடாகும் தேர்தல் களம்!" /></figure><strong>செங்கல்பட்டு, செப்.11: </strong>தமிழ்நாட்டில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-drinking-water-crisis-lake-reservoir-levels-drop-44-percent-104241.html" target="_blank" rel="noopener">சென்னை</a> மாகாணமாக இருந்த 1951-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தொகுதியாக உருவெடுத்த மதுராந்தகம் தனித் தொகுதி, தனது நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தற்போது இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளது. 1952-இல் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுத் தனது கணக்கைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 1957 மற்றும் 1962 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸே வெற்றி வாகை சூடியது. அதன்பின்னர் களமிறங்கிய திமுக, 1967, 1971, மற்றும் 1977 ஆகிய தொடர்ச்சியான மூன்று தேர்தல்களில் வென்று இத்தொகுதியைத் தனது கோட்டையாக மாற்றியது. 1980-இல் முதன்முறையாக அதிமுக இங்கு வெற்றிக் கொடியை நாட்டிய நிலையில், 1984-இல் மீண்டும் திமுகவும், 1989 மற்றும் 1991 தேர்தல்களில் அதிமுகவும் மாற்றி மாற்றி வெற்றி பெற்றன. தொடர்ந்து 1996-இல் திமுகவும், 2001-இல் அதிமுகவும் வென்றன. நீண்ட இடைவெளிக்குப் பின் 2006-இல் காங்கிரஸ் மீண்டும் வென்றாலும், 2011-இல் அதிமுகவும், 2016-இல் திமுகவும் வெற்றி பெற்றன.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-candidates-paranthaman-maduranthakam-and-suganya-dharapuram-details-103928.html" target="_blank" rel="noopener">மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!</a></strong>
<h3>அதிமுக 7 முறை வென்ற தொகுதியாக மதுராந்தகம்:</h3>
தொகுதி வரலாற்றில் காங்கிரஸ் 4 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கடந்த 2021 மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அதிமுக 7 முறை வென்ற தொகுதியாக மதுராந்தகத்தை மாற்றியது. கடந்த 2021 தேர்தலில் 86,646 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற அதிமுகவின் மரகதம் குமரவேல், 2026 தேர்தலிலும் 69,284 வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலை 62,904 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்க, 59,838 வாக்குகள் பெற்ற திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. 2026 தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 93.22% வாக்குகளில் அதிமுக 32.58%, தவெக 29.2% மற்றும் திமுக 28.14% வாக்கு வீதம் பெற்றன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த கட்சிகளிடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததே இங்கு நிலவும் கடும் போட்டியை உணர்த்துகிறது.
<h3><strong>மும்முனைப் போட்டியாக உருவெடுத்த களம்:</strong></h3>
மொத்தம் 2,12,656 வாக்காளர்களைக் (1,08,079 பெண்கள், 1,04,522 ஆண்கள், 65 மூன்றாம் பாலினத்தவர்) கொண்ட மதுராந்தகம் தொகுதியில் தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம் மிகக் கடுமையான மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. கடந்த இரு தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அதே மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில் கடந்த 2011 தேர்தலில் இதே தொகுதியில் வென்ற கனிதா சம்பத்தும் களமிறக்கப்பட்டுள்ளதால் மதுராந்தகம் தேர்தல் களம் தற்போதே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-court-orders-murder-case-registered-against-4-police-over-sivaganga-ajith-kumar-custodial-death-104134.html" target="_blank" rel="noopener">சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</a></strong>
<h3>சமூக மற்றும் சமூகவியல் பின்னணி:</h3>
இத்தொகுதியின் சமூக மற்றும் சமூகவியல் பின்னணிகளும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. மதுராந்தகம் தனித் தொகுதியை பொறுத்தவரை ஆதிதிராவிடர் சமூக மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வரும் அதே வேளையில், வன்னியர் மற்றும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக உள்ளனர். விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இந்த விவசாயப் பகுதியில், நீர்நிலைப் பராமரிப்பு, செய்யூர் மற்றும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக சீரமைப்பு, மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பு கோரிக்கைகளே தேர்தலின் முதன்மைப் புகார்களாக எதிரொலிக்கின்றன. கடந்த காலங்களில் கூட்டணிக் கணக்குகள் மற்றும் தனிநபர் செல்வாக்கே வெற்றி வாய்ப்பைத் தீர்மானித்த நிலையில், இம்முறை தவெகவின் வருகை பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதும், அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு யார் முக்கியத்துவம் தருவார்கள் என்பதும் இத்தேர்தல் முடிவின் மூலம் தெரியவரும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?&#8221;.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/omni-bus-fare-hike-anbumani-ramadoss-slams-tvk-government104246-104246.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 07:03:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/omni-bus-fare-hike-anbumani-ramadoss-slams-tvk-government104246-104246.html</guid>
		            
			

    	<description><![CDATA[Anbumani Ramadoss Slams TVK Govt: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை ஒட்டித் தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய கட்டணக் கொள்ளையைத் தடுக்காமல் தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாகச் சாடியுள்ள அவர், இதுதான் நீங்கள் கொண்டு வந்த மாற்றமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/anbumani-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?&#8221;.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 11:</strong> தமிழ்நாட்டில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-police-guidelines-vinayaka-chaturthi-idol-immersion-103796.html" target="_blank" rel="noopener">விநாயகர் சதுர்த்தி</a> மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தலைநகர் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்திற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் படையெடுப்பது வழக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை விண்ணைத் முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளனர். வழக்கமான கட்டணத்தை விடப் பல மடங்கு உயர்த்தப்பட்டு, பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இக்கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-court-orders-murder-case-registered-against-4-police-over-sivaganga-ajith-kumar-custodial-death-104134.html" target="_blank" rel="noopener">சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</a></strong>
<h3>கண்டும் காணாமல் இருக்கும் தவெக அரசு:</h3>
அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தனியாரின் இந்த அநியாயக் கட்டண உயர்வுக்கு எதிராகத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்வதற்கான ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல ஆயிரங்களை எட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுபோன்ற வரலாற்று காணாத கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டிய தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
<h3>பயணக் கட்டணத்தை காட்டி சரமாரி கேள்வி:</h3>
முக்கியமாக, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தற்போதைய பேருந்துக் கட்டணப் பட்டியலைச் சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்ல ரூ.4,899, கோவைக்குச் செல்ல ரூ.6,154, கும்பகோணத்திற்குச் செல்ல ரூ.3,419 வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளில் போதிய இட வசதி இல்லாத சூழலிலும், ரயில் பயணச் சீட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலையிலும், சொந்த ஊருக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறு வழியின்றி இந்த அநியாயக் கட்டணத்தைக் கொடுத்துப் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
<h3>"இதுதான் நீங்கள் பேசும் மாற்றமா?":</h3>
மாற்றம் என்ற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் தவெக அரசு, தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகளின் இத்தகைய கட்டணக் கொள்ளைக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறதா என்ற காரசாரமான கேள்வியை அன்புமணி ராமதாஸ் முன்வைத்துள்ளார். "பொதுமக்களின் பாக்கெட்டைக் காலி செய்யும் இத்தகைய கூடுதல் கட்டணக் கொள்ளைதான் நீங்கள் வாக்குறுதி அளித்த மாற்றமா?" என்று வினவியுள்ள அவர், பெயரளவில் கூட ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்காமல் அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-candidates-paranthaman-maduranthakam-and-suganya-dharapuram-details-103928.html" target="_blank" rel="noopener">மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!</a></strong>
<h3>உடனடியாக அரசு தலையிட கோரிக்கை:</h3>
பண்டிகைக் காலங்களில் வெளியூர் செல்லும் சாமானிய மக்கள் தங்களின் உழைப்பில் கணிசமான தொகையைப் போக்குவரத்துக்காக மட்டுமே செலவிட வேண்டிய நிர்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நடுத்தரக் குடும்பங்களின் நிதிநிலையைப் பெரிதும் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டிய அன்புமணி, உடனடியாகப் போக்குவரத்துத் துறையும் தமிழக அரசும் இதில் தலையிட்டுத் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்திய பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கி மக்களின் பயணத்தைச் சுலபமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-drinking-water-crisis-lake-reservoir-levels-drop-44-percent-104241.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 06:27:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-drinking-water-crisis-lake-reservoir-levels-drop-44-percent-104241.html</guid>
		            
			

    	<description><![CDATA[Chennai Drinking Water Crisis: சென்னை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து, தற்போது 44 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைப்பொழிவு கணிசமாகக் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம். வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே சென்னையின் குடிநீர் தேவையை தடையின்றி பூர்த்தி செய்ய முடியும் என்ற சூழல் நிலவுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/chennai-sembarambakkam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?" /></figure><strong>சென்னை, செப்டம்பர் 11:</strong> சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-chief-minister-joseph-vijay-has-left-for-london-to-attract-investments-104215.html" target="_blank" rel="noopener">சென்னை</a> பெருநகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் தினசரி குடிநீர் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்வது என்பது எப்போதும் பெருநகராட்சி நிர்வாகத்திற்கும் குடிநீர் வாரியத்திற்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. தலைநகர் சென்னையின் நாள் ஒன்றுக்கான மொத்த குடிநீர் தேவை சுமார் 1,200 மில்லியன் லிட்டராக உள்ளது. சென்னை மக்களின் இந்த அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்யப் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தெருவாய்க்கண்டிகை ஆகிய முதன்மை குடிநீர் ஆதார ஏரிகளும், கடலூரில் உள்ள வீராணம் ஏரியும், கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களுமே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது இந்த முக்கியக் குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாகச் சரிந்து, நீரிருப்பு கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதால், வரவிருக்கும் நாட்களில் சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமும் அபாயமும் நிலவி வருகிறது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-candidates-paranthaman-maduranthakam-and-suganya-dharapuram-details-103928.html" target="_blank" rel="noopener">மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!</a></strong>
<h3>ஏரிகளில் வேகமாகச் சரியும் நீர்மட்டம்:</h3>
சென்னையின் முதன்மை நீர் ஆதாரங்களாகத் திகழும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை தெருவாய்க்கண்டிகை ஆகிய 5 முக்கிய ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். இருப்பினும், தொடர் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், தற்போது இந்த 5 ஏரிகளிலும் சேர்த்து வெறும் 5,175 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதாவது, ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் சுமார் 44 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, சென்னைக்குத் தடையின்றி நீர் வழங்கும் மற்றொரு முக்கியமான நீர் ஆதாரமான வீராணம் ஏரியின் நீர்மட்டமும் மிகவும் கவலை அளிக்கும் வகையில் சரிந்துள்ளது. 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 174.75 மில்லியன் கன அடி மட்டுமே நீர் எஞ்சியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவுடன் நிரம்பி வழழிந்த நிலையில், தற்போது அங்கு நீரிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
<h3>மழைப்பொழிவு குறைவும் நிலவும் சவால்களும்:</h3>
சென்னைக்கு நீர்வரத்து தரும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு கணிசமாகக் குறைந்து போனதே இந்த திடீர் நீர்ச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக, கடந்த காலங்களை விட செங்கல்பட்டு மாவட்டத்தில் இயல்பான மழை அளவைக் காட்டிலும் 56 சதவீதமும், திருவள்ளூர் மாவட்டத்தில் 27 சதவீதமும் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதன் நேரடியாக விளைவாக, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து ஏரிகளுக்கு வரக்கூடிய நீரின் அளவு வெகுவாகப் பாதிக்கப்பட்டு, ஏரிகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்புத் திட்டங்களின் மூலம் சென்னை நகரின் மொத்த குடிநீர் தேவையில் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், வெறும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும், தற்போதைய ஏரிகளின் சொற்ப நீரிருப்பையும் மட்டுமே நம்பி சென்னையின் பிரம்மாண்டமான குடிநீர் தேவையை நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியாகச் சமாளிப்பது என்பது மிகக் கடினமான மற்றும் சவாலான காரியமாகும்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-court-orders-murder-case-registered-against-4-police-over-sivaganga-ajith-kumar-custodial-death-104134.html" target="_blank" rel="noopener">சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</a></strong>
<h3>பருவமழை எதிர்பார்ப்பும் எதிர்காலத் தீர்வுகளும்:</h3>
வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எதிர்பார்த்த அளவு பெய்து கை கொடுத்தால் மட்டுமே, ஏரிகளின் நீர்மட்டத்தை மீண்டும் கணிசமாக உயர்த்த முடியும். இடைக்கால மற்றும் நீண்டகாலத் தீர்வாக, நகரில் உள்ள நீர்நிலைகள் மற்றும் வரத்துக் கால்வாய்களைத் தொடர்ந்து தூர்வாரிப் பாதுகாப்பதோடு, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகளை அரசு விரைவுபடுத்த வேண்டும். மேலும், கடல்நீரைக் குடிநீராக்கும் கூடுதல் திட்டங்களைச் செயல்படுத்தி மாற்று நீராதாரங்களை வலுப்படுத்துவதே சென்னைக்கு நிரந்தரப் பாதுகாப்பைத் தரும். முக்கிய ஏரிகளில் தற்போது பாதியளவிற்கும் குறைவாகவே நீர் எஞ்சியுள்ள நிலையில், வரவிருக்கும் பருவமழை எந்த அளவுக்குக் கை கொடுக்கப் போகிறது, இந்தச் சவாலை எதிர்கொள்ள தமிழக அரசும் குடிநீர் வாரியமும் எடுக்கப்போகும் அடுத்த கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதே தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-september-11-chennai-imd-issues-moderate-rainfall-warning-to-10-districts-104236.html</link>	
		<pubDate>Fri, 11 Sep 2026 06:25:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-september-11-chennai-imd-issues-moderate-rainfall-warning-to-10-districts-104236.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/wea-5th-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு?" /></figure><strong>செப்டம்பர் 11, 2026:</strong> தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அந்த வகையில், அதிகபட்சமாக திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் 39.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38.7 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.'
<h3>சதம் அடிக்கும் வெயில்:</h3>
சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 34.2 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 33.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருக்கிறது. இந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, வரக்கூடிய அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
<h3>10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:</h3>
செப்டம்பர் 11-ம் தேதியான இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-to-wave-green-flag-at-silverstone-le-mans-cup-race-at-london-104212.html">அஜித்குமாரின் கார் பந்தயத்தை துவங்கி வைக்கும் முதல்வர் விஜய் – அதிகாரப்பூர்வ தகவல்</a>

செப்டம்பர் 12-ம் தேதியைப் பொறுத்தவரையில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
<h3>செப்.15 இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:</h3>
செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், செப்டம்பர் 15-ம் தேதி விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-workers-killed-as-church-building-collapses-near-katpadi-104226.html">வேலூரில் கொடூரம்… தேவாலய கட்டுமான பணியில் விபத்து.. 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!</a>

செப்டம்பர் 16-ம் தேதியைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
<h3>சென்னையில் மழைக்கு வாய்ப்பு:</h3>
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வேலூரில் கொடூரம்&#8230; தேவாலய கட்டுமான பணியில் விபத்து.. 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-workers-killed-as-church-building-collapses-near-katpadi-104226.html</link>	
		<pubDate>Thu, 10 Sep 2026 21:49:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/3-workers-killed-as-church-building-collapses-near-katpadi-104226.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vellore Church Collapses 3 Killed : வேலூர் மாவட்டத்தில் தேவாலய கட்டுமான பணியின் போது, முதல் தளம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/chruch-collapse.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வேலூரில் கொடூரம்&#8230; தேவாலய கட்டுமான பணியில் விபத்து.. 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!" /></figure>வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் பகுதியில் புதிதாக தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம்- ஆந்திரா எல்லை பகுதியில் நடைபெற்று வரும் தேவாலய கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள், இன்று வியாழக்கிழமை மாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், தேவாலயத்தின் முதல் தளத்தில் சாரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அப்போது, திடீரென தேவாலயத்தின் முதல் தளம் இடிந்து விழுந்தது. இதில், சுமார் 12 கட்டட தொழிலாளர்கள் சிக்கியதாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து அறிந்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக காட்பாடி <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/2-arrested-for-the-murder-of-a-wedding-hall-owner-in-kallidaikurichi-nellai-104118.html" target="_blank" rel="noopener">காவல் நிலையம்</a> மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
<h3>அடுத்தடுத்து உயிரிழந்த 3 தொழிலாளர்கள்</h3>
அதன் அடிப்படையில், போலீசார், தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில், 12 பேரும் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள சேர்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 10 தொழிலாளர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில், சிகிச்சை பலன் இன்றி மேலும் ஒரு தொழிலாளி பரிதாபமாக உள்ளார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3- ஆக உயர்ந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-court-orders-murder-case-registered-against-4-police-over-sivaganga-ajith-kumar-custodial-death-104134.html" target="_blank" rel="noopener">சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</a>
<h3>பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம்</h3>
மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் கட்டட இடுப்பாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன உபகரணங்களுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
<h3>வேலூர் மாவட்ட ஆட்சியர்- எம்எல்ஏ ஆய்வு</h3>
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் மற்றும் காட்பாடி எம்எல்ஏ சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேவாலய கட்டுமான பணியின்போது, நிகழ்ந்த கொடூர விபத்தும், உயிரிழப்பும் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் விவரம் உடனடியாக தெரியவரவில்லை.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/case-registered-against-timber-merchant-following-pregnant-women-and-infant-death-kanchipuram-104211.html" target="_blank" rel="noopener">கர்ப்பிணி – சிசு உயிரிழந்த கொடூர சம்பவம்.. மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு.. காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக முதல்வர் ஜோசப் விஜய் லண்டன் புறப்பட்டார்&#8230; ஒரு வாரம் சுற்றுப்பயணம்.. ரூ. 8491 கோடி முதலீட்டை ஈர்க்க திட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-chief-minister-joseph-vijay-has-left-for-london-to-attract-investments-104215.html</link>	
		<pubDate>Thu, 10 Sep 2026 20:49:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-chief-minister-joseph-vijay-has-left-for-london-to-attract-investments-104215.html</guid>
		            
			

    	<description><![CDATA[CM Vijay Left For London : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அங்கு, ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/vijay-left-for-london.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக முதல்வர் ஜோசப் விஜய் லண்டன் புறப்பட்டார்&#8230; ஒரு வாரம் சுற்றுப்பயணம்.. ரூ. 8491 கோடி முதலீட்டை ஈர்க்க திட்டம்!" /></figure>தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் இன்று வியாழக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் லண்டன் புறப்பட்டு சென்றார். அங்கு, பல்வேறு நிறுவன முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் வருமாறு அழைப்பு விடுக்கிறார். இவருடன் பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். லண்டனில் சுமார் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான குழு செப்டம்பர் 17- ஆம் தேதி சென்னை திரும்புகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
<h3>ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பை பார்வையிடுகிறார்</h3>
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு, பல்வேறு முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அத்துடன் சில்வர் ஸ்டோன் மோட்டார் சேசிங் சர்க்யூட் மற்றும் உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் ஜோசப் விஜய் நேரில் பார்வையிட உள்ளார். அத்துடன் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-traveling-to-london-on-emirates-flight-luxurious-amenities-and-special-features-104168.html" target="_blank" rel="noopener">ஆகாயத்தில் பறக்கும் ஆடம்பர சொர்க்கம்.. முதல்வர் விஜய் லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானம்.. என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா?</a>
<h3>பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக. . .</h3>
அதற்கான முதலீடுகளை ஏற்பதற்காகவும், புதிய முதலீடுகளை ஏற்ப்பதற்காகவும் பல்வேறு முதலீட்டாளர்களுடன் சந்திப்பு மேற்கொள்கிறார். வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொள்கிறார். பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதே முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>பயணிகள் விமான மூலம் லண்டன் புறப்பட்ட முதல்வர் விஜய்</h3>
முன்னதாக முதல்வர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து, பயணிகள் விமான மூலம் துபாய் புறப்பட்டார். அங்கு, முதல்வர் விஜய் மற்றொரு விமான மூலமாக லண்டன் புறப்பட்டு செல்கிறார். அங்கு, பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்திற்கான ரூ. 8491 கோடி முதலீடுகளை ஈர்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் விஜய்யை பார்ப்பதற்காக விமான நிலையத்தில் ஏராளமான தவெகவினர் மற்றும் பொது மக்கள் கூடி இருந்தனர். அவர்களை பார்த்து முதல்வர் கையசைத்து விட்டு புறப்பட்டு சென்றார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-to-wave-green-flag-at-silverstone-le-mans-cup-race-at-london-104212.html" target="_blank" rel="noopener">அஜித்குமாரின் கார் பந்தயத்தை துவங்கி வைக்கும் முதல்வர் விஜய் – அதிகாரப்பூர்வ தகவல்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அஜித்குமாரின் கார் பந்தயத்தை துவங்கி வைக்கும் முதல்வர் விஜய்  &#8211; அதிகாரப்பூர்வ தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-to-wave-green-flag-at-silverstone-le-mans-cup-race-at-london-104212.html</link>	
		<pubDate>Thu, 10 Sep 2026 20:36:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-to-wave-green-flag-at-silverstone-le-mans-cup-race-at-london-104212.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vijay to Flag Off Ajith’s Race: பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, அன்றைய போட்டிய தொடங்கி வைக்கவுள்ளதாக லே மான்ஸ் கோப்பை நிர்வாகம் அறிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/cm-vijay-.png" class="attachment-large size-large wp-post-image" alt="அஜித்குமாரின் கார் பந்தயத்தை துவங்கி வைக்கும் முதல்வர் விஜய்  &#8211; அதிகாரப்பூர்வ தகவல்" /></figure>பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10, 2026 இரவு லண்டன் செல்லும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-chief-minister-joseph-vijay-has-left-for-london-to-attract-investments-104215.html" target="_blank" rel="noopener">முதல்வர் விஜய்</a> இந்த வார இறுதியில் லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, அன்றைய போட்டியை பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளதாக லே மான்ஸ் கோப்பை (Le Mans Cup) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில் நடிகர் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங் அணியும் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
<h3>அஜித்குமாரின் கார் பந்தயத்தை துவங்கி வைக்கும் முதல்வர் விஜய்</h3>
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் வருகிற செப்டம்பர் 10, 2026 இன்று லண்டன் செல்லவுள்ளார். அங்கு அவர் செப்டம்பர் 16, 2026 வரை தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்தித்து சேவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் லண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் ரேசையும் அவர் பார்வையிட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-candidates-announced-for-madhurantakam-and-tarapuram-by-elections-104185.html">மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!</a></strong>
<h3>வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY</p>
The Indian actor and Chief Minister of Tamil Nadu <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a>, will be joining us to support our Indian drivers in the UK and officially start the <a href="https://x.com/hashtag/SilverstoneRound?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SilverstoneRound</a> in front of the… <a href="https://t.co/pZiZOKy7yW">pic.twitter.com/pZiZOKy7yW</a>

— Le Mans Cup (@LeMansCup) <a href="https://x.com/LeMansCup/status/2098050030162559409?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

மைக்கேலின் லே மான்ஸ் கப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வார இறுதியில் செப்டம்பர் 12, 2026 சனிக்கிழமை இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெற உள்ள மைக்கேலின் லே மான்ஸ் கப் ( Michelin Le Mans Cup) கார் பந்தயத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் வகையில், 44 கார்கள் கொண்ட கிரிட் முன்பு முதல்வர் விஜய் பச்சைக் கொடியை அசைக்க உள்ளதாக Michelin Le Mans Cup தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-traveling-to-london-on-emirates-flight-luxurious-amenities-and-special-features-104168.html">ஆகாயத்தில் பறக்கும் ஆடம்பர சொர்க்கம்.. முதல்வர் விஜய் லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானம்.. என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா?</a></strong>

குறிப்பாக, இந்த போட்டியில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்கிறார். அவரது அஜித்குமார் ரேஸிங் அணி 2026 Michelin Le Mans Cup தொடரில் LMP3 Pro/Am பிரிவில் போட்டியிட்டு வருக்கிறது.இதனால், ஒரே இடத்தில் திரையுலகில் முன்னணி போட்டியாளர்களாக திகழ்ந்த நடிகர் அஜித்தும் முதல்வர் விஜய்யும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில்வர்ஸ்டோன் ரவுண்டில் மொத்தம் 44 கார்கள் பங்கேற்க உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 12, 2026 அன்று சனிக்கிழமை முக்கிய பந்தயம் நடைபெற உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கர்ப்பிணி &#8211; சிசு உயிரிழந்த கொடூர சம்பவம்.. மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு.. காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/case-registered-against-timber-merchant-following-pregnant-women-and-infant-death-kanchipuram-104211.html</link>	
		<pubDate>Thu, 10 Sep 2026 20:29:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/case-registered-against-timber-merchant-following-pregnant-women-and-infant-death-kanchipuram-104211.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kanchipuram Pregnant Women And Infant Death : காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி மறுத்த மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/arrest-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கர்ப்பிணி &#8211; சிசு உயிரிழந்த கொடூர சம்பவம்.. மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு.. காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி!" /></figure>காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள சிங்காரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் ( 40 வயது). இவரது மனைவி தேன்மொழி ( 35 வயது). இவர்கள் காஞ்சிபுரம் அருகே உள்ள வெள்ளை கேட் பகுதியில் ஆறுமுகம் என்பவரின் மரக்கிடங்கில் தங்கி இருந்து மரம் வெட்டும் கூலி தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு செல்வதற்கு ஆறுமுகம் அனுமதிக்காத நிலையில், தேன் மொழியும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
<h3>மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு</h3>
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், ஆனந்தன் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், ஆனந்தன் அளித்த புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கை அளிப்பதற்காக சப் கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணை மற்றும் சப் கலெக்டர் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/2-arrested-for-the-murder-of-a-wedding-hall-owner-in-kallidaikurichi-nellai-104118.html" target="_blank" rel="noopener">நெல்லையில் 10 வயது மகள் கண்முன்னே தந்தை கொடூர கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்.. இருவரை கைது செய்த தனிப்படை!</a>
<h3>கர்ப்பிணி- சிசு உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி</h3>
முன்னதாக, ஆனந்தன் மற்றும் தேன்மொழி ஆகியோர் ஆறுமுகம் நடத்தி வந்த மரக்கிடங்கில் தார்ப்பாய் கொட்டகை அமைத்து மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில், ஆறுமுகத்திடம், ஆனந்தன் குடும்ப செலவுக்காக ரூ. 20 ஆயிரம் முன்பணம் வாங்கியுள்ளார். அதனை, திரும்ப கேட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு செல்லுமாறு ஆறுமுகம் மிரட்டியுள்ளார். பணம் இல்லாத காரணத்தால் ஆனந்தன் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் தார்ப்பாய் கொட்டகையில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
<h3>குழந்தை பாதி வெளியேறிய நிலையில் உயிரிழப்பு</h3>
அப்போது, தேன்மொழி மட்டும் தனியாக இருந்த நிலையில் அவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை வெளியேறத் தொடங்கியது. இதில், அதிக அளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், குழந்தையின் பாதி உடல் வெளியேறிய நிலையில், திடீரென தேன்மொழி மரணம் அடைந்தார். அத்துடன், அந்த சிசுவும் உயிரிழந்தது. இதனை மறைப்பதற்காக ஆனந்தனிடம் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து இயற்கை மரணம் என கூறி, தேன்மொழியின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு ஆறுமுகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-court-orders-murder-case-registered-against-4-police-over-sivaganga-ajith-kumar-custodial-death-104134.html" target="_blank" rel="noopener">சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-candidates-maduranthakam-maragatham-kumaravel-and-dharapuram-sathyabama-background-details-104190.html</link>	
		<pubDate>Thu, 10 Sep 2026 19:43:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-candidates-maduranthakam-maragatham-kumaravel-and-dharapuram-sathyabama-background-details-104190.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Candidates Details : தமிழக இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள (மதுராந்தகம் தொகுதி) மரகதம் குமரவேல் மற்றும் ( தாராபுரம் தொகுதி) சத்தியபாமா ஆகியோர் குறித்த முழ விவரத்தை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/tvk-candiates.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!" /></figure>தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், மதுராந்தகம் தொகுதிக்கு மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதிக்கு சத்தியபாமாவும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே அதிமுகவில் எம்எல்ஏக்களாக இருந்த நிலையில், அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள் ஆவர். இவர்கள் குறித்த பின்னணி விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
<h3>மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல்:</h3>
மரகதம் குமரவேல் செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் வட்டம், தையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை அதிமுகவின் முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆரின் ராமாபுரம் தோட்டத்தில் பணிபுரிந்துள்ளார். கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை அதிமுகவில் ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார். 2011- ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை ஒன்றிய தலைவராக மரகதம் குமரவேல் இருந்துள்ளார். இதேபோல, கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்திருந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilaga-vetri-kazhagam-has-announced-its-candidate-list-contesting-in-by-election-at-madurathakam-and-dharapuram-104049.html" target="_blank" rel="noopener">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு.. யாருக்கு வாய்ப்பு?</a>
<h3>தவெக வேட்பாளரை தோற்கடித்திருந்த மரகதம் குமரவேல்</h3>
தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்ட மரகதம் குமரவேல் எம்எல்ஏவாக தேர்வானார். தொடர்ந்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர், மாநில மகளிர் அணி துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் எழில் கேத்தரீனை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர் தவெகவில் இணைந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளரை எதிர்த்து களமாட உள்ளார்.
<h3>தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா:</h3>
இவர், திருப்பூர் மாவட்ட அதிமுக ஊராட்சி தலைவராக இருந்து வந்த நிலையில், ஊராட்சியில் சிறப்பாக களப்பணியாற்றிய இவருக்கு கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில், கடுமையான பிரச்சாரத்துக்கு பலனாக அவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அந்த தேர்தலில் 81,100 வாக்குகள் பெற்றிருந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார். தற்போது, தவெகவில் இணைந்து அந்த கட்சி சார்பில் தேர்தலை சந்திக்க உள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-candidates-paranthaman-maduranthakam-and-suganya-dharapuram-details-103928.html" target="_blank" rel="noopener">மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்&#8230; அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-candidates-announced-for-madhurantakam-and-tarapuram-by-elections-104185.html</link>	
		<pubDate>Thu, 10 Sep 2026 18:45:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-candidates-announced-for-madhurantakam-and-tarapuram-by-elections-104185.html</guid>
		            
			

    	<description><![CDATA[Aiadmk Candidates Announced : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/admk-candiates.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்&#8230; அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!" /></figure>தமிழகத்தில் வருகிற அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் ( தனி) தொகுதி மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் ( தனி) தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
<h3>மதுராந்தகம்- தாராபுரம் தொகுதி வேட்பாளர்கள்</h3>
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி இணை செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத் மதுராந்தகம் (தனி) தொகுதியிலும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழுவின் 12- ஆவது வார்டு முன்னாள் உறுப்பினருமான கே. பானுமதி தாராபுரம் தொகுதியிலும் போட்டியிடுவார். இவர்களுக்கு கட்சியினர் முழு ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-it-wing-responds-to-tvk-it-wings-comments-regarding-misa-and-m-k-stalin-104099.html" target="_blank" rel="noopener">“தற்குறிகளுக்கு மிசா கைதின் வலிகள் தெரியாது” முதல்வரை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்!</a>
<h3>இரு தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள அதிமுக திட்டம்</h3>
அதிமுகவின் கோட்டைகளாக விளங்கிவரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தனி தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிமுக தலைமை பல்வேறு கட்ட தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே, அதிமுகவில் மிகவும் பரிச்சயமான கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளில் அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.

[caption id="attachment_104189" align="alignnone" width="210"]<img class="size-medium wp-image-104189" src="https://www.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/141f49c9-b459-430e-b932-24c390ee4e37-210x300.jpg" alt="141f49c9 B459 430e B932 24c390ee4e37" width="210" height="300" /> அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு விவரம்.[/caption]
<h3>தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம்</h3>
இதனால், இந்த இரு தொகுதிகளை மீண்டும் தன் வசப்படுத்திக் கொள்வதற்காக அதிமுகவை சேர்ந்த பெண்களை மீண்டும் இதே தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர். தற்போது, திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன், தாராபுரம் தொகுதிக்கு சுகன்யா, தவெக சார்பில் முந்தைய அதிமுக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அதிமுக சார்பிலும் இரு பெண்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்த இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள 6 வேட்பாளர்களில் பெண்களே அதிகமாக உள்ளனர். அதாவது, ஆண் வேட்பாளர் ஒருவரும், பெண் வேட்பாளர்கள் 5 பேரும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/communist-parties-stance-regarding-whom-to-support-dmk-or-tvk-in-the-tamil-nadu-by-election-104158.html" target="_blank" rel="noopener">இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவா? தவெகவுக்கு ஆதரவா? கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன.. நாளை வெளியாகிறது அறிவிப்பு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆகாயத்தில் பறக்கும் ஆடம்பர சொர்க்கம்.. முதல்வர் விஜய் லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானம்.. என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-traveling-to-london-on-emirates-flight-luxurious-amenities-and-special-features-104168.html</link>	
		<pubDate>Thu, 10 Sep 2026 18:10:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-traveling-to-london-on-emirates-flight-luxurious-amenities-and-special-features-104168.html</guid>
		            
			

    	<description><![CDATA[CM Vijay Traveling Emirates Flight Features : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று இரவு லண்டன் புறப்பட்டு செல்லும் நிலையில், அவர் பயணிக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் உள்ள ஆடம்பரமான சொகுசு வசதிகள், சிறப்பம்பசங்கள் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/cm-vijay-travel-emirates-flight.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆகாயத்தில் பறக்கும் ஆடம்பர சொர்க்கம்.. முதல்வர் விஜய் லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானம்.. என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா?" /></figure>தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை இருப்பதற்காக இன்று வியாழக்கிழமை இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்று, அங்கிருந்து, மற்றொரு விமானத்தில் லண்டன் செல்கிறார். சென்னையில் இருந்து துபாய் வரை முதல்வர் விஜய் பயணிக்க இருப்பதாக கூறப்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஆடம்பர சொகுசு வசதிகளுக்கு பெயர் போனதாகும். இந்த விமான நிறுவனத்தில் பல்வேறு ஆடம்பர வசதிகள், சிறப்புகள் உள்ளன. துபாய் அரசுக்கு சொந்தமான இந்த விமான நிறுவனமானது உலகிலேயே மிக மிக ஆடம்பர பயண அனுபவத்தை தரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த விமானத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mk-stalin-video-response-cm-vijay-misa-assembly-gesture-tn-politics-104022.html" target="_blank" rel="noopener">“அடிவாங்கிய தழும்பு இன்னமும் இருக்கிறது; வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!</a>
<ul>
 	<li>விமானத்தில் தனக்கென பிரத்தியேக அறை போன்ற தனி வசதியை ஏற்படுத்த முடியும்.</li>
 	<li>விமானத்தில் குளிப்பதற்கு ஷவர்- ஸ்பா வசதி.</li>
 	<li>சொகுசு உணவக வசதி.</li>
 	<li>பயணிகளுக்கு பிரீமியம் ரக ஆடம்பர சோப்புகள்- டவல்கள் வழங்கப்படும்.</li>
 	<li>முதல் வகுப்பு பயணிகளுக்கு தின்பண்டங்கள், குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்படும்.</li>
 	<li>உலக தரம் வாய்ந்த செப்-களால் தயார் செய்யப்படும் பிரீமியம் உணவுகள் வழங்கப்படும்.</li>
 	<li>மது பிரியர்களுக்கு ஒயின்கள் வழங்கப்படும்.</li>
 	<li>விமான பயணிகளுக்கு இரவு நேர மென்மையான ஆடைகள், காலணிகள், முன்னணி நிறுவனத்தின் ஸ்கின் கேர் பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்படும்.</li>
 	<li>முதல் வகுப்பு பயணிகளுக்கு பயணம் முழுவதும் அன்லிமிடெட் இலவச இன்டர்நெட் வசதி வழங்கப்படும்.</li>
</ul>
<h3>முதல் முறையாக பயணிகள் விமானத்தில் செல்லும் முதல்வர் விஜய்</h3>
தற்போது, முதல்வர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொள்ள இருக்கும் விமானம் எந்த மாடலை சேர்ந்தது என்பதற்கு ஏற்ப அதில் உள்ள வசதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளன. பொதுவாக, முதல்வர் விஜய் தனி விமானங்களிலேயே பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது, முதல் முறையாக பயணிகள் விமானத்தில் லண்டன் செல்ல உள்ளார்.
<h3>செப்டம்பர் 17- இல் சென்னை திரும்புகிறார்</h3>
அங்கு சுமார் ஒரு வார காலம் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அத்துடன், லண்டன் வாழ் தமிழர்களையும் நேரில் சந்தித்து முதல்வர் விஜய் கலந்துரையாட இருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 17- ஆம் தேதி மீண்டும் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சென்னை திரும்ப இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-it-wing-responds-to-tvk-it-wings-comments-regarding-misa-and-m-k-stalin-104099.html" target="_blank" rel="noopener">“தற்குறிகளுக்கு மிசா கைதின் வலிகள் தெரியாது” முதல்வரை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>