AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மொட்டை அடித்தால் ரூ.15,000 – சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மொட்டை அடித்தால் ரூ.15 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, பெண்களை மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மொட்டை அடித்தால் ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது.

மொட்டை அடித்தால் ரூ.15,000 – சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி
மாதிரி புகைப்படம்Image Source: Getty Images
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Jul 2026 08:49 AM IST

சேலம், ஜூலை 28: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மொட்டை அடித்தால் ரூ.15 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, பெண்களை மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கொத்தாம்பாடி என்ற பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி

மேலும், மொட்டை அடித்தால் ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது. பெண்களை நம்ப வைக்க, பெண்கள் சிலர் மொட்டை அடித்தது போன்ற படங்களையும் அவர் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். இதை நம்பி 20 பேர் மொட்டை அடிக்க தயாரான நிலையில், 3 பெண்கள் மொட்டையும் போட்டுள்ளனர். பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்களை ஏமாற்றிய நபரை தேடி வருகின்றனர்.

Follow Us