AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Thalapathy Vijay

Thalapathy Vijay

விஜய்
நடிகர் விஜய், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராவார். இவரின் தந்தை பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவார். தாயார் ஷோபா பாடகி மற்றும் தயாரிப்பாளராவார். விஜய் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையும் கொண்டிருந்தார். ஆரம்ப காலக்கட்டங்களில் ரசிகர்களால் இளைய தளபதி என அழைக்கப்பட்ட திரையுலகின் உச்சத்தில் இருக்கும்போது தளபதியாக பரிணாமிக்க தொடங்கினார். 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய அவர் தனது 69வது படத்தோடு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்படும் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் ஸ்டாராக ஜொலித்த விஜய், இனி அரசியலிலும் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள், தொண்டர்கள் காத்திருக்கின்றனர். நாம் இந்த தொகுப்பில் தளபதி விஜய் பற்றிய தகவல்களை காணலாம்.

Read More

தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்… ராஜ்யசபா புதிய எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி!

Rajya Sabha MP Praveen Chakravarty: மாநிலங்களவையில் தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று தமிழக வெற்றிக் கழத்தின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வான பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறிய கருத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜனநாயகன் படம் கசிவு விவகாரம்.. அதிரடி வேட்டையில் சைபர் கிரைம்.. முக்கிய நபர் கைது!

Jananayagan Leak Accused Arrested : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை சென்னை இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது என்ன? முழு விவரம் உள்ளே!

Niti Aayog Meeting: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்துக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து முத்லவர் ஜோசப் விஜய் வலியுறுத்தி உள்ளார். அத்துடன் மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

ராஜ்யசபா இடைத்தேர்தல்.. போட்டியின்றி தேர்வானார் பிரவீன் சக்கரவர்த்தி!

Rajya Sabha By Election Praveen Chakravarty Elected : ராஜ்யசபா இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே தவெக நிர்வாகி மீதுதானா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

Edappadi Palaniswami : தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கிடைத்த முதல் வழக்கு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்து உள்ளார் .

“ரீல்ஸ் எடுத்து போஸ்ட் போடவா சிங்கப்பெண் பிரிவு?”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளர். அதோடு, இவர்களுக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம்.. மீண்டும் விசாரணையை தொடங்கிய சிபிஐ!

அதன் தொடர்ச்சியாக, இன்று மீண்டும் தொடங்கியுள்ள விசாரணையில், சம்பவத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நோக்கிச் சிபிஐ தன் விசாரணையைத் திருப்பியுள்ளது. துயரச் சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சையத் அலி மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 10 காவலர்களுக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

திமுக, அதிமுகவை போல த.வெ.கவிலும் தொழிற்சங்க பேரவை.. முதல்வர் விஜய் உத்தரவு..

இந்த சூழலில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொழிற்சங்க பேரவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம்.. ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சபாநாயகர்!

Speaker JCD Prabhakar Meet Governor Arlekar: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் அழைப்பு விடுத்தார்.

குடியரசுத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புது டெல்லிக்கு வருகைதந்த தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நாளை நடக்கும் நிதி ஆயோக் கூட்டம்.. 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் விஜய்..

CM Vijay Delhi Visit: சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விஜய், நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கு தேவையான நிதி, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..

அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெண்கள் மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை… முதல்வர் விஜய் விடுத்த கடும் எச்சரிக்கை!

CM Vijay Latest Speech: தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொந்தரவு செய்தால் அதனை சகித்துக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறு தொந்தரவில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.

ராஜ்யசபா இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு ஏற்பு.. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!

Praveen Chakravarty Nomination Papers Accepted: ராஜ்ய சபா இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பிரவீன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முதல்வர் விஜய் – செங்கோட்டையன் சொன்ன தகவல்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கான தேவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.