AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

“மிசா குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!”.. திருமாவளவன் சொன்ன பரபரப்பு கருத்து!!

Thirumavalavan Interview about misa: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்த கொடுமைகள், இடதுசாரி கட்சிகளின் ஆதரவு மற்றும் புதிய தலைமைச் செயலக விவகாரம் எனப் பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்து விரிவான விளக்கமளித்தார்

“அடிவாங்கிய தழும்பு இன்னமும் இருக்கிறது; வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!

MK Stalin Video Response to CM Vijay: சட்டமன்றத்தில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் தனது சிறை வரலாறு குறித்த விவாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார். மிசா காலத்தில் தான் சந்தித்த சித்திரவதைகள், சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்து விளக்கமளித்துள்ள அவர், முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!

DMK candidates Paranthaman- Suganya Details : தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பி ல் போட்டியிடும் பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியோரின் பின்னணி குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் வி ரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக நேரடியாக போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு!

Madurantakam Dharapuram By-Elections: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியலும் யாரும் எதிர்பாராத வகையில் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது.

புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!

Dayanidhi Maran criticizes CM Vijay : புலி திரைப்படத்தின் வருவாயை மறைத்த உத்தமர் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது என்று சென்னை திமுக எம். பி. தயாநிதி மாறன் காட்டமாக விமர்சித்தார்.

கரூர் சம்பவத்தில் முதல்வர் விஜய் கைதாகியிருந்தால் சிறைவாசம் தெரிந்திருக்கும்.. திமுக பரந்தாமன் கடும் விமர்சனம்!

DMK Paranthaman Criticism CM Vijay : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதல்வர் ஜோசப் விஜய் கைது செய்யப்பட்டிருந்தால் அவருக்கு சிறை வாசம் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்திருக்கும் என்று திமுகவை சேர்ந்த பரந்தாமன் கடுமையாக விமர்சித்தார் .

கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..”பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்!”.. கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்!!

MK Stalin Condemns: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையானது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. “மா.செ. தேர்தலைத் தள்ளிப்போடுங்க!”.. மூத்த நிர்வாகிகள் vs கனிமொழி மோதல்!!

DMK Internal Election Crisis: திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கனிமொழி வலியுறுத்தி வரும் நிலையில், மாவட்ட செயலாளர் தேர்தலை தள்ளிவைத்துவிட்டு தற்காலிக பொறுப்பாளர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் உட்கட்சித் தேர்வை நடத்துவதில் திமுக தலைமைக்கு முக்கோண சிக்கல் எழுந்துள்ளது.

பலரின் பொறுப்புகள் பறிக்கப்படும் – புதிய நிர்வாகிகளுக்கு மு.க ஸ்டாலின் அட்வைஸ்

திமுக 2.0-க்கான பயணத்தை தொடங்கியுள்ளதாகக் கூறிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கட்சியில் 110 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்புப் பணிகளுக்காக தலைமைக்கழக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கிளை முதல் தலைமைக்கழகம் வரையிலான பதவிகளுக்கு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு.. இன்று காலை 10:30 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!

Kolathur Constituency Election Case: கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது! தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது.. சூரியன் தான் நிரந்தரம் – மு.க ஸ்டாலின்

கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும் கட்டமைப்பை பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம். இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாக நிலைத்து நிற்கும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ்.. எஸ்கார்ட் பாதுகாப்பாக குறைத்து நடவடிக்கை!

Former CM MK Stalin: முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த 'இசட்' (Z) பிரிவு பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாகத் தற்போது ஒரு உதவி ஆய்வாளர் தலைமையிலான 4 காவலர்கள் அடங்கிய எஸ்கார்ட் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த அதிரடி பாதுகாப்பு மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் 16-வது உட்கட்சித் தேர்தல்.. 110 மாவட்ட செயலாளர்களும் உட்கட்சித் தேர்தல் மூலமே தேர்வு.. அதிரடியில் மு.க.ஸ்டாலின்!!

DMK Internal Election: திமுகவில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அனைவரையும் உட்கட்சித் தேர்தல் மூலமாக மட்டுமே தேர்வு செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 70 வயது வரம்பு, பெண்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல புதிய நிபந்தனைகளுடன் விரைவில் 16-வது உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு நோட்டீஸ்.. பின்னணியில் ஆதவ் அர்ஜூனா தொடுத்த வழக்கு.. என்ன காரணம்!

High Court Issued Notice To M. K. Stalin : ஜான் பிரிட்டோவுடன் தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக ஆதவ் அர்ஜூனா தொடுத்த வழக்கில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திமுகவில் அதிரடி மாற்றம்.. 38 மாவட்டங்கள், 110 மாவட்ட செயலாளர்கள் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

திமுகவில் அமைப்பு ரீதியாக முக்கியமான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 110 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வகையில் சட்டப்பேரவைத் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் மூன்று தொகுதிகளைக் கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.