
MK Stalin
மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.
MK Stalin: மத்திய அரசுக்கு சில கேள்விகள்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பரபரப்பான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழகத்திற்கு நிதிப் பங்கீட்டில் பாரபட்சம், இந்தி திணிப்பு, கீழடி அகழாய்வு அறிக்கையை புறக்கணிப்பது, ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சி மாநிலங்களில் குழப்பம் விளைவிப்பது போன்ற முக்கியமான விவகாரங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 18, 2025
- 14:11 pm IST
கரூர் சம்பவத்திற்கு யார் காரணம்..? சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
கரூர் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ கரூர் கூட்ட நெரிசலுக்கு TVK-யின் திட்ட அட்டவணைப் பிழைகளே காரணம். ஏழு மணி நேரம் கழித்து விஜய் வந்து சேர்ந்தார், இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை” என்றார்.
- Mukesh Kannan
- Updated on: Oct 15, 2025
- 22:04 pm IST
கரூர் வழக்கு… தனி நபரை பலிகடாவாக்குது நோக்கமல்ல… முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
Karur Stampede : கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரையும் பலிகடா ஆக்குவது நோக்கமல்ல என குறிப்பிட்டுள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Oct 15, 2025
- 19:07 pm IST
கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய் தான் காரணம்.. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..
TN CM MK Stakin On Karur Stampede: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தாமதமாக வந்தது தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 15, 2025
- 12:51 pm IST
முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை.. இந்த அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது? – அண்ணாமலை காட்டம்..
Annamalai On DMK Government: முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இதற்கு கடுமையான கண்டனத்தை தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், “அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 15, 2025
- 06:40 am IST
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Sports Infrastructure Boost: முதல்வர் கோப்பை நிறைவு விழா அக்டோபர் 14, 2025 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றார்.
- Karthikeyan S
- Updated on: Oct 14, 2025
- 20:47 pm IST
Kalaimamani Awards: தமிழக அரசின் கலைமாமணி விருது… முதலமைச்சரிடம் விருதை பெற்ற திரைப்பிரபலங்கள்!
Tamil Nadu Kalaimamani Winners: தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் சினிமா இரபலங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் கலைமாமணி. கடந்த 2021, 22, 23, ஆண்டிற்கான கலைமாமணி விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று 2025 அக்டோபர் 11ம் தேதியில் சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது.
- Barath Murugan
- Updated on: Oct 11, 2025
- 20:07 pm IST
புது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் – கோவையில் மாநாடு
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக கோவையில் கொடிசியா மைதானத்தில் உலக புத்தொழில் மாநாடு இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை சென்றடைந்தார். பல புது ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தமிழத்துக்கு அழைக்கும் விதமாக இந்த மாநாடு நடக்கவுள்ளது
- C Murugadoss
- Updated on: Oct 9, 2025
- 12:24 pm IST
காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் – முதலமைச்சர் ஸ்டாலின்
காசாவில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு மாநிலக் குழு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை மீறி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) காசா மீது கண்மூடித்தனமாக குண்டுவீசியது. இது உலகம் முழுவதையும் உலுக்கியது” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Oct 8, 2025
- 23:49 pm IST
காசா இனப்படுகொலை.. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் ஸ்டாலிம்ன்
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காசா மக்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, வரும் அக்டோபர் 14, 2025 அன்று நடைபெறும் ” தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 8, 2025
- 12:54 pm IST
இனி நோயாளிகள் அல்ல… மருத்துவ பயனாளிகள் – தமிழக அரசு அறிவிப்பு
Healthcare Policy Update: தமிழ்நாடு அரசு சார்பில் இனி மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களை நோயாளிகள் என அழைக்காமல் மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Karthikeyan S
- Updated on: Oct 7, 2025
- 21:58 pm IST
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ் – நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்
MK Stalin : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Oct 6, 2025
- 15:51 pm IST
பெரியார் உலகம்… திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
MK Stalin : திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், 31 எம்பிக்களின் ஊதியத்தையும் சேர்த்து திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம் என அறிவித்தார்.
- Karthikeyan S
- Updated on: Oct 4, 2025
- 21:03 pm IST
சட்டமன்ற முடிவுக்கு எதிரானது… ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு – என்ன நடந்தது?
TN Govt vs Governor : சட்டமன்ற முடிவுக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 4, 2025 அன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Oct 4, 2025
- 16:52 pm IST
’ஒருவர் மீது பழி போட விரும்பல’ கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு
CM Stalin On TVK Rally Stampede : கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதாவது, துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Oct 4, 2025
- 12:47 pm IST