AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!

Aadhav Arjuna criticized M.K. Stalin in Legislative Assembly: தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவையில் அப்பாவை காணோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இது கூச்சல் குழப்பத்தை எழுப்பியது.

திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சட்டமன்றத்தில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் கடந்த திமுக அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்ய நிர்பந்தித்த வைகோ.. “அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை”.. மதிமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Vaiko Demanded Resignation: தங்களை பதவியை ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்ததாகவும், துரை வைகோ அவதூறு பரப்பியதால் மனமுடைந்து திமுகவிலேயே தொடர முடிவெடுத்துள்ளதாக மதிமுக எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், செந்தில் செல்வன் தெரிவித்துள்ளனர். அதோடு, இனி திமுக எம்எல்ஏக்களாக செயல்பட போவதாக மு.க.ஸ்டாலினிடம் உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளனர்.

தமிழக பட்ஜெட்.. “Blast Blast” இல்ல “Waste Waste”… மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

DMK leader MK Stalin Criticizes Budget : தமிழக வெற்றிக் கழக அரசின் நிதி நிலை அறிக்கை Blast Blast இல்ல Waste Waste என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பாணியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஆபாசமாக பேசவில்லை தவெகவுக்கு விழுந்த அடி – மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பேசியதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பதிவிட்ட மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆபாசமாக எதுவும் பேசவில்லை. ஆவணம், அழிவுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி ஸ்டாலின் அதிரடி கைது.. பெரும் பரபரப்பு!

Udhayanidhi Stalin Arrest : முதல்வர் ஜோசப் விஜயை விமர்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அவரது வீட்டில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது .

காவிரி விவகாரம்.. “அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடியுமா.. முடியாதா?”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

DMK Supreme Court Petition: மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடியுமா என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, சட்டமன்றத் தீர்மானத்திற்குப் பின் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதி EVM ஆய்வு.. 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி.. உயர் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு!!

Kolathur Constituency EVM Inspection Issue: கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ததில், 30 சதவீதத்திற்கும் அதிகமான இயந்திரங்களில் சீல் இல்லாதது மற்றும் புதிய முகவரி சீட்டுகள் ஒட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் திமுக செய்தித் தொடர்பாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

“முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் முதலில் மின்வெட்டுப் பிரச்சனை நிலவிய நிலையில், தற்போது மின்கட்டண உயர்வு பிரச்சனை தலைதூக்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வந்திருப்பதாக அரசே ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவப்பு + மஞ்சள் சேர்ந்தால் கிடைப்பது காவி.. தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

MK Stalin Criticized TVK Government: திராவிட கழகத்தின் இரு சக்கர வாகன பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த தமிழக வெற்றிக் கழக அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதில், சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் காவி நிறம் வரும் என்று வினவினார்.

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு.. ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்.. மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை தொடர்பான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பது குற்றம் என்றும், அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

“காவிரி உரிமை அரசியல் அல்ல; தமிழ்நாட்டின் வாழ்வுரிமை!”.. மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

Aadhav Arjuna Detailed Counter to MK Stalin: மேகதாட்டு அணை ஆதவ் அர்ஜுனா மு க ஸ்டாலின் இடையே எழுந்துள்ள அரசியல் விவாதத்தில், தமிழ்நாடு அரசு பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் சட்டமன்றத் தீர்மானங்கள் குறித்த விரிவான ஆதாரங்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையை சினிமா கொட்டகையாக மாறியுள்ளனர்.. முன்னாள் அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!

Former Minister Raghupathy Criticized CM Vijay : தமிழக சட்டப்பேரவை தற்போது திரைப்பட கொட்டகையாக மாறி உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .

விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம்.. முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணத்துக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

MK Stalin Remarks Cauvery Water Issue: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு நடத்தும் பேச்சுவார்த்தை எனும் சதி வலையில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.