Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

வாக்கு அரசியலுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை.. அரசியலில் சொகுசுக்கு இடமில்லை – முதல்வர் ஸ்டாலின்..

CM MK Stalin: அன்புக்கரங்கள் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ மக்களின் குரலாக திமுக எதிரொலித்து வருகிறது. அரசியல் என்பது மக்கள் பணி; எங்களைப் பொறுத்தவரை சொகுசுக்கு இடம் இல்லை. வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யவில்லை: என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அன்புக் கரங்கள் திட்டம்… மாதம் ரூ.2,000 பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

Anbu Karangal Scheme : தமிழக முதல்வர் ஸ்டாலின் ’அன்புக் கரங்கள்’ திட்டத்தை 2025 செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதற்காக இன்று முதல் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பாஜகவோடு உறவாடுவது யார்? கொள்கை என சொல்லி கொள்ளையடிப்பவர் யார்? – விஜய் பரபரப்பு அறிக்கை..

TVK Vijay Statement: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ பாஜகவோடு உறவாடுவதும் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கை, கோட்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டு கொள்ளையடிப்பவர் யார்” என தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டங்கள்.. 5 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, ஓசூரில் எல்.சி. 14 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் உள்ளிட்ட 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Kamal Haasan : இளையராஜா எனக்கு அண்ணனும் கூட.. கமல்ஹாசன் எமோஷனல் ஸ்பீச்!

Ilaiyaraaja at 50th Year Celebration : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் சினிமாவில் 50 வருட சினிமா பயணத்தை ஒட்டி, தமிழக அரசு சார்பில் பாராட்டுவிழா இன்று 2025, செப்டம்பர் 13ம் தேதியில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.

எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்!

DMK Mupperum Vizha 2025: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விழாவின் முக்கியத்துவம், விழாவில் வழங்கப்படும் விருதுகள் ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஓசூரில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..

CM MK Stalin Hosur Trip: செப்டம்பர் 11, 2025 அன்று ஓசூரில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்கு முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் ரூ.32,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

DMK District Secretaries Meet: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 9, 2025 தேதியான இன்று காலை 12 மணிக்கு காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது. இதில் ஓரணியில் தமிழ்நாடு மற்றும் முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்படும்

பிரதமர் மோடியால் மட்டுமே முதலீடு.. மு.க.ஸ்டாலின் பயணம் குறித்து தமிழிசை கருத்து!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று தமிழ்நாட்டில் மீண்டும் கால் பதித்துள்ளார். தனக்கு பிரகாசமான முதலீடுகள் இருப்பதாக கூறுகிரார். ஆனால், பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று நமது நாட்டின் பலத்தை வெளிப்படுத்தியதால் மட்டுமே, நமது முதலமைச்சர் முதலீடுகலை ஈர்க்க முடிந்தது” என்று தெரிவித்தார்.

MK Stalin: செங்கோட்டையன் பதவி பறிப்பு.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்!

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின் விளைவாக ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதனால் 17,613 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள்’ லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

CM MK Stalin London Visit : முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, லண்டன் ஆகிய நாடுகள் சென்றார்.  எட்டு நாட்களாக பயணமாக சென்ற முதல்வர் ஸ்டாலின், 2025 செப்டம்பர் 8ஆம் தேதியான நாளை சென்னை வருகை தருகிறார். இதற்கிடையில், 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று லண்டனில் நடந்த தமிழ்க் கனவில் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

MK Stalin: பயணம் நிறைவுறுகிறது! – தமிழ்நாடு திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin Europe visit: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பா பயணத்தின் மூலம் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து ரூ.15,516 கோடி முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்துள்ளார். இதனால் 17,613-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, லண்டனில் குவிந்த ரூ.15,516 கோடி முதலீடு.. 17,613 பேருக்கு வேலை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Tamil Nadu CM MK Stalin Germany London Visit : 8 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜெர்மனி, லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தில் .15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்ப்டடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் – ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை..

CM MK Stalin Speech: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ ஒரு இனத்திற்கே சுயமரியாதையை ஊட்டி முன்னேறச் செய்தவர் பெரியார்” என பேசியுள்ளார்.

MK Stalin : முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடிதம்!

CM MK Stalin Letter: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் குறித்து பிற கட்சி தலைவர்கள் விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.