MK Stalin
மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.
எய்ம்ஸ் வராது… மெட்ரோவையும் வரவிட மாட்டோம்…. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
MK Stalin Accuses Centre : கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், எய்ம்ஸ் வராது, மெட்ரோ ரயிலையும் வரவிட மாட்டோம் என பாஜக வஞ்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Nov 21, 2025
- 15:26 pm IST
ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி
மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது என்றும், ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்கு உட்படுத்தி நியாயம் பெறலாம். என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 21, 2025
- 13:12 pm IST
கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”.. தமிழ்நாட்டை பழிவாங்குவதா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!
NO metro for Coimbatore and Madurai: தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் தொகை குறைவாக உள்ளதாக காரணம் காட்டி அந்த மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 19, 2025
- 16:19 pm IST
மூன்று வேளை உணவு, 1000 வீடுகள், கல்வி உதவித் தொகை.. தூய்மை பணியாளர்களுக்கு 6 நலத்திட்டங்களை அறிவித்த தமிழக அரசு
Welfare Schemes : தமிழக அரசு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு, 1000 குடியிருப்புகள், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 15. 2025 அன்று துவங்கி வைத்தார். இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
- Karthikeyan S
- Updated on: Nov 15, 2025
- 16:51 pm IST
பீகார் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம் – முதலமைச்சர் ஸ்டாலின்..
CM MK Stalin On Bihar Election: பீகார் தேர்தல் 2025 அனைவருக்கும் ஒரு பாடம். முதுபெரும் தலைவர் நிதீஷ் குமார் அவர்களின் தீர்க்கமான வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு என் நல்வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,
- Aarthi Govindaraman
- Updated on: Nov 15, 2025
- 09:04 am IST
“SIR படிவத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது”.. முதல்வர் ஸ்டாலின்!!
மத்திய அரசு, தேர்தல் ஆணையம் கொடுக்கும் அழுத்தத்தை மீறி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு, வழக்கமாக கட்சியை வெற்றி பெற வைக்கும் பணி மட்டுமே நிர்வாகிகளுக்கு இருக்கும், இம்முறை, மக்களுடைய வாக்குரிமையைப் பெற்றுத் தரும் பொறுப்பும் கூடுதலாக உள்ளதாக கூறியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 15, 2025
- 06:53 am IST
நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.. எஸ்ஐஆர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர்!
CM MK Stalin Wrote About SIR | தமிழகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், எஸ்ஐஆர் தடுப்பதே நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Nov 11, 2025
- 14:25 pm IST
25 இடங்களில் அன்புச்சோலை மையங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. இதன் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் என்ன?
Anbu Solai Centre In Tamil Nadu: அன்புச் சோலை திட்டமானது, முதியோர்களை போற்றும் தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதோடு, முதியோர்களின் பாதுகாப்பையும் நன்முறையில் பராமரிப்பதையும் உறுதி செய்கிறது. இதன் மூலம் முழுமையான நிறுவனம் சார்ந்த பராமரிப்பு தேவையை குறைத்து, குடும்ப பிணைப்பை வலுப்படுத்த உதவுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 10, 2025
- 17:52 pm IST
டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..
CM MK Stalin Speech: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 10, 2025
- 12:33 pm IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்களோடு களத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 9, 2025
- 07:00 am IST
திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்..
CM MK Stalin: இன்றைக்கு யார் யாரோ கிளம்பியுள்ளனர்; திமுகவை அழித்து விடலாம் என நினைக்கின்றனர், ஒழித்து விடலாம் என கனவு காண்கின்றனர். இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது என சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 7, 2025
- 13:15 pm IST
திருநெல்வேலியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்… கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
MK Stalin : வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திருநெல்வேலியில் வெற்றி பெறவில்லை என்றால் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்தார். அது குறித்து பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Nov 6, 2025
- 15:40 pm IST
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஜய், “கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு. இந்த தனிநபர் ஆணையத்தையே அவமதிப்பது போல், தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இவை எல்லாம் ஏன் நடக்கிறது எதற்காக நடக்கிறது? என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள் என இதையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா?”என கேள்வி எழுப்பினார்.
- Mukesh Kannan
- Updated on: Nov 5, 2025
- 22:37 pm IST
ரூ.3கோடி பட்ஜெட்.. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Thevar jayanthi 2025: பசும்பொன்னில் இன்று காலை முத்துராமலிங்கத் தேவருகுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், அதைத்தொடர்ந்து, சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் பசும்பொன் படையெடுத்துள்ளனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Oct 30, 2025
- 11:34 am IST
எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொய்யும், துரோகமும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? – முதல்வர் ஸ்டாலின்
CM MK Stalin: தென்காசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொய்யும் துரோகத்தையும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? நெல் கொள்முதலில் அடிப்படை அறிவே இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருடைய வரலாறு பொய்யும் துரோகமும் தான்” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 29, 2025
- 16:18 pm IST