AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

200க்கு மேற்பட்ட இடங்களை வெல்வோம்.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் 73வது பிறந்தநாள் குறித்து டி கே எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக தலைமையிலான இந்த கூட்டணி மிகவும் வலுவானது. கடந்த தேர்தல்களில் இதே கூட்டணியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இதே கூட்டணி அப்படியே உள்ளது. நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு 200க்கு மேற்பட்ட இடங்களை வெல்வோம்” என்றார்.

73வது பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின்.. தொண்டர்கள் நேரில் வாழ்த்து!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 01, 2026) தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரை சந்தித்த தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

முதல்வர் ஸ்டாலின் 73வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!!

CM Stalins 73rd birthday: முதல்வர் ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்.. தமிழர்களின் அவசர உதவிக்காக எண்கள் அறிவிப்பு..

Israel-Iran War Tension: புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.

திமுகவிடம் காங்கிரஸ் தொகுதிகள் பட்டியல் அளிப்பு… 3 நாள்களில் சுமூக முடிவு… கிரிஷ் சோடங்கர் தகவல்!

DMK Congress Seat Sharing : திமுக தலைமையிடம் காங்கிரஸ் கோரும் தொகுதிகள் அடங்கிய பட்டில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அடுத்து வரும் 3 நாள்களில் சமூக முடிவு எட்டப்படும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார் .

அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… வெல்லமண்டி நடராஜன் வரிசையில் கிருஷ்ணமூர்த்தி.. அடுத்து யார்!

Ops Supporter Join Aiadmk: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த நிலையில், இதை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதில், வெல்லமண்டி நடராஜனை தொடர்ந்து, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்துள்ளார்.

திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.. இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா?

அதிமுகவை எடுத்துக் கொண்டால், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இணைந்திருந்த கட்சிகள் தொடர்ந்து உள்ளன. கூடுதலாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன.

சத்துணவு அமைப்பாளர்கள்- ஊராட்சி செயலர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Tamil Nadu government: தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வின்போது, வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பார்க்கலாம்.

திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்… அதிமுக ஆட்சியில் விசாரணை நடத்தப்படும்… எடப்பாடி பழனிசாமி சூளுரை!

Edappadi K Palaniswami: கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மக்கள வரிப்பணத்தை ஊழல் செய்தது தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விசாரணை நடத்தப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை… மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர்!

Indian communist leader Nallakannu: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு சார்பில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாத செலுத்தினார். அப்போது, 72 குண்டுகள் முழங்க காவல் துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்… அண்ணாமலை காட்டம்!

Annamalai Criticized DMK : கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்துள்ளதாகவும், இதற்கான பதிலை வருகிற சட்டமன்ற தேர்தலில் வெளிபடுத்துவார்கள் என்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர்!

கன்னியாகுமரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்துக்காக புதிய 6 அறிவிப்புகளை வெளியிட்டார். குடிநீர் தேவை, கால்வாய், போக்குவரத்தை எளிதாக்க சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தார். 

3 மாவட்டங்களில் புதிதாக மினி டைடல் பூங்காக்கள்… 1800 பேருக்கு வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ!

MK Stalin start 3 Mini Tidel Parks: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.117.65 கோடியில் மினி டைடல் பார்க்குகள் அமைப்பதற்கான பணிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் சுமார் 1,800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி – முதல்வர் அறிவிப்பு

விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது கம்யூனிச கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி… திமுக வீட்டு மக்களுக்கான கட்சி.. எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

Edappadi K Palaniswami : அதிமுக நாட்டு மக்களுக்கும், திமுக வீட்டு மக்களுக்கும் ஆட்சி செய்து வருவதாக திருவள்ளூரில் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டிருந்த அ. தி. மு. க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.