MK Stalin
மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பரமக்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Jan 17, 2026
- 21:01 pm IST
திருவள்ளுவர் தினம்.. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 முக்கிய வாக்குறுதிகள்!!
Thiruvalluvar Day CM MKStalin Promises: வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு தான் 4 முக்கிய வாக்குறுதிகளை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு என்ற குறளை குறிப்பிட்டுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 16, 2026
- 11:50 am IST
வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்.. திமுகவின் அடுத்தடுத்த மூவ் இதுதான்..
வரும் வாரம் முதல் தேர்தல் பணிகள் தற்போது இருப்பதை விட பல மடங்கு வேகமடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணியை இறுதி செய்துவிடும் எனத் தெரிகிறது. அந்தவகையில், திமுகவும் பொங்கலுக்கு பின் தனது அடுத்தடுத்த நகர்களில் வேகமெடுக்க திட்டமிட்டு வருகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 14, 2026
- 13:34 pm IST
துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய காவலர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
CM appreciates police who saved a child’s life: கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் கடை ஒன்றில் குழந்தை சுவாசமில்லாமல் மயங்கிய குழந்தையை துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தலைமை காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Jan 13, 2026
- 21:39 pm IST
பழைய ஓய்வூதியத் திட்டம்.. திமுகவின் கண் துடைப்பு நாடகம் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
Edappadi Palaniswami Statement: அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இந்த ஓய்வூதியத்தை பெரும் நபர் உயிரிழந்தால், அவர் பெற்று வந்த ஓய்வூதிய தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் இது வெறும் கண் துடைப்பு நாடகம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 10, 2026
- 20:01 pm IST
சாதிவாரி கணக்கெடுப்பு.. ஆலோசனை குழு அமைக்க வலுயுறுத்தல் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..
CM MK Stalin Letter: சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக விவாதித்து மேம்படுத்த, மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 10, 2026
- 19:30 pm IST
“இதுதான் எனது 2026 தேர்தல் வாக்குறுதி”.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!
திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளதாக பெருமை கூறிய அவர், முறியடிக்க முடியாத சாதனைகளை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை என்று தெரிவித்தார். மேலும், 40 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளதாக கூறினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 9, 2026
- 13:34 pm IST
வெளியூரில் இருக்கும் நபர்கள் கவனத்திற்கு.. பொங்கல் பரிசுத் தொகை வாங்க இது கட்டாயம்!
Pongal Gift and Money | தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 உடன் கூடிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தொகுப்பை அட்டை தாரர்கள் எங்கு அட்டை வைத்துள்ளார்களோ அங்கு மட்டும் தான் பெற்றுக்கொள்ள முடியும்.
- Vinalin Sweety
- Updated on: Jan 9, 2026
- 11:28 am IST
”உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம்.. இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..
Ungal Kanvai Sollungal Scheme: தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளையும் அறிந்து கொள்ள அரசு விரும்புகிறது. இதற்காக 50,000 தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். இந்த தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று குடும்ப விவரங்களை சேகரித்து, எந்தெந்த அரசுத் திட்டங்களால் அவர்கள் பயன் பெறுகிறார்கள் என்பதையும், அவர்களது கனவுகள் என்ன என்பதையும் பதிவு செய்வார்கள்.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 9, 2026
- 08:23 am IST
திமுக ஆட்சியில் 85% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்…அமைச்சர் கே.என்.நேரு!
Minister K N Nehru : திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
- Gowtham Kannan
- Updated on: Jan 8, 2026
- 16:42 pm IST
இன்று தொடங்கும் 49வது சென்னை புத்தக கண்காட்சி.. என்னவெல்லாம் ஸ்பெஷல்?
49th Book Fair In Chennai | சென்னையில் இன்று (ஜனவரி 08, 2026) தொடங்க உள்ள 49வது புத்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த புத்த கண்காட்சிக்காக சென்னையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- Vinalin Sweety
- Updated on: Jan 8, 2026
- 23:49 pm IST
முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து – பரபரப்பு தகவல்
CM Convoy Incident:: திண்டுக்கல்லில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதுரை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் திருமங்கலம் அருகே சென்ற போது திடீரென கார் டயர் வெடித்தது. இந்த சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
- Karthikeyan S
- Updated on: Jan 7, 2026
- 15:42 pm IST
திண்டுக்கல்லில் ரூ. 1,595 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..
CM MK Stalin Visit To Dindigul: முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1,111 முடிவுற்ற பணிகள், 212 புதிய திட்டப் பணிகள் என மொத்தம் ரூ. 1,595 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 7, 2026
- 08:07 am IST
ஏஐ ஒருபோதும் மனிதனுக்கு மாற்று இல்லை… லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேச்சு
Free Laptop Scheme : தமிழ்நாட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், ஏஐ ஒரு போதும் மனிதனுக்கு மாற்று இல்லை என பேசினார்.
- Karthikeyan S
- Updated on: Jan 5, 2026
- 20:01 pm IST
10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. யாருக்கு இந்த லேப்டாப் கிடைக்கும்?
Free Laptop Scheme: இதற்கு முன்னதாக, 2025–2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒரு ஆண்டிற்கு 10 லட்சம் மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின்படி டேப் அல்லது லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை செயல்படுத்த ஒரு உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 5, 2026
- 06:52 am IST