AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

சிலிண்டர் தட்டுப்பாடு.. ஹோட்டல், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்.. அரசு அதிரடி அறிவிப்பு!!

சிலிண்டர் கட்டுப்பாடு இருக்கும் வரை இந்த சலுகை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டை சீர்செய்வது தொடர்பாக பலதரப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், உணவகங்களில் எதற்காக மின் பயன்பாடு அதிகரித்தது என்று ஆராயப்படாது என்றும் சென்னையில் மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டா டூ சி.எம் ஆபீஸ்.. தேவா, ஜீவாவுடன் கலகலப்பாக பேசி ரீல்ஸ் எடுத்த முதல்வர் ஸ்டாலின்..

CM Stalin With Deva and Jeeva: அதேபோல், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பினார். பள்ளிகளில் எந்தெந்த உணவுகள் வழங்கப்படுகின்றன, அந்த உணவுகள் பிடித்திருக்கிறதா என்பதையும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சிறுவர்களின் குடும்பத்தினருடனும் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

அரைநூற்றாண்டு சாதனை 5 ஆண்டுகளில்.. இன்னும் செய்வோம் – சிங்கார சென்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

உள்கட்டமைப்பு மேம்பாடு, பாலங்கள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் புதிய பூங்காக்கள், சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் போன்ற திட்டங்களும் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

போதிய எரிவாயு கையிருப்பு உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம் – முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்..

தமிழகத்தைப் பொறுத்தவரையில், சில உணவகங்களில் உணவு தயாரிக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விடுதிகளில் தோசை, சப்பாத்தி, காபி, டீ உள்ளிட்ட சில பொருட்கள் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் டீ மற்றும் காபியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பார்சல் டீ மற்றும் காபி விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து!

மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக எல்.கே.சுதீஷ் உட்பட பேரும் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில உணவகங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில உணவகங்களில் உணவு தயாரிக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில உணவகங்களில் இதுகுறித்து வெளியில் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!

O ​​Panneerselvam House: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டில் இருந்து அகற்றப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. அதன் அருகில் மு.க. ஸ்டாலினுடம், ஓபிஎஸ் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான படங்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கடற்கரை திருமணமா… அதுவும் குறைந்த கட்டணத்திலா… அட ஆமாங்க.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!

Tamil Nadu Beach Weddings: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் கடற்கரை திருமணங்களை நடத்தி கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வகையான திருமணத்தை நடத்துவதற்கு குறைந்த அளவே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

திருச்சியில் முதலமைச்சர் தலைமையில் திமுக மாநில மாநாடு!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. 

தமிழர்களை காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுக தான் – முதல்வர் ஸ்டாலின்..

இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழர்களை காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுக தான்” என்று குறிப்பிட்டார். மேலும், எண்ணிக்க முடியாத அளவுக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதனால் தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம் என பேசியுள்ளார். 

200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.. உழைக்க நான் தயார்.. நீங்கள் தயாரா? முதல்வர் ஸ்டாலின்..

எண்ணிக்க முடியாத அளவுக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதனால் தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம். மற்ற கட்சிகள் தவணைகளில் அறிக்கையை வெளியிடுகின்றன. திமுக திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது. முத்துவேல் கருணாநிதி திட்டம் யாராலும் மாற்ற முடியாத திட்டமாகும். 

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. நோயை விட கொடிய மருந்து – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..

உலக நாடுகளில் கட்டாயமாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை இல்லை. கனடாவில் கூட்டாட்சி மற்றும் மாகாணத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன.ஆஸ்திரேலியாவில் மாநில சட்டமன்றங்களின் காலம் 4 ஆண்டுகள்; கூட்டாட்சிச் சபையின் காலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள். ஜெர்மனியில் அரசியல் நிலைத்தன்மை ஒருங்கிணைந்த தேர்தல்களால் அல்ல, “Constructive Vote of No Confidence” போன்ற அரசியல் நடைமுறைகளால் உருவாகிறது.

V. Senthil Balaji Tamil Nadu Election: கட்சி மாற்றம்.. சிறைவாசம்.. தொடர் வெற்றியை வசமாக்குவாரா செந்தில்பாலாஜி?

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வே. செந்தில் பாலாஜி தற்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கட்சி பணி ஆற்றி வருகிறார். வருகிற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் களமிறங்க உள்ளதாகவும், வேறு தொகு மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகள்.. கறார் காட்டும் விசிக-கம்யூனிஸ்ட் கட்சிகள்.. காரணம் என்ன!

DMK Alliance Seat Sharing: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தேமுதிகவுக்கு ஒதுக்கும் தொகுதிகளுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்றும், அதற்கு குறைவாக ஒதுக்க கூடாது என்று விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

திருச்சியில் இன்று 10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக நிர்வாகிகள் மாநாடு.. முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கும் முதல்வர்..

DMK state conference in Trichy: நிர்வாகிகள் நெரிசல் இல்லாமல் மாநாட்டு திடலுக்கு வந்து செல்லும் வகையில் 9 நுழைவுவாயில்கள், 10 லட்சம் நிர்வாகிகளுக்கும் உணவு, இருக்கை வசதி, குடிநீர் வசதிகள் என பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.