AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

“நாங்களும் விஜய் ரசிகர்கள்தான்”.. ஆனால் அவர்.. பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர்..

Tamilnadu Assembly Election: விஜய் தொடர்ந்து திமுகவை 'ஏமாற்ற அரசு', தீய சக்சி என்று விமர்சிப்பது குறித்துப் பேசிய அமைச்சர், விஜய் பாரதிய ஜனதா கட்சியால் அனுப்பப்பட்ட ஒரு வேட்பாளரைப் போலச் செயல்படுகிறார் என்று சாடினார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே அவர் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மெட்ரோ ரயிலில் பயணித்து வாக்குசேகரித்த முதல்வர் ஸ்டாலின்.. பயணிகளுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சி!!

CM Stalin Campaigns in Metro rail: இந்த பயணத்தின் போது, ரயிலில் இருந்த பயணிகளுடன் அவர் மிகவும் சகஜமாக உரையாடினார். குறிப்பாக, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவை மக்களுக்குச் சென்றடைவது குறித்தும் பயணிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சரைத் தங்களுக்கு அருகிலேயே கண்ட பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

பழனிச்சாமிக்கெல்லாம் பதில் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம்!

CM MK Stalin Slams Eps: பெரிய பெரிய தலைவர்களுடன் பழகும் அனுபவம் கிடைத்த எனக்கு எடப்பாடி கே. பழனிசாமிக்கெல்லாம் பதில் அளிக்கும் நிலை வந்துவிட்டதே என்று எண்ணி வருத்தம் அடைவதாக திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி?.. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?..

Tamilnadu Assembly Election: தங்களது மேடைப் பேச்சுகளில் ஒருவரது பெயரை மற்றொருவர் குறிப்பிடக் கூடத் தவிர்த்துவிட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கோரியதுடன், ஆட்சி, அதிகாரத்தில் பங்கும் கேட்டது இரு கட்சிகளுக்கும் இடையே கசப்பான சூழலை உருவாக்கியதாகப் பேசப்படுகிறது.

தலைமை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர் ஸ்டாலின்..

பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில் தேர்தல்கள் நடந்தபோது, அங்கு டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற பீகார் மாநிலத்திலும் அதே நிலை தான். அங்கு கூட டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி மீது தேர்தல் ஆணையத்தின் கவனம் திரும்பி, பாஜக தூண்டுதலின் பேரில் அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

திமுக அமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்புடையவர் யார் தெரியுமா… கவனம் ஈர்க்கும் தகவல்!

Minister Govi ​​Chezhiaan: திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்புடைய அமைச்சர் கோவி. செழியன் இருந்து வருகிறார். இவர் சொத்து மதிப்பு என்ன மற்ற அமைச்சர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

“ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு”.. வேளச்சேரி பரப்புரையில் இபிஎஸ் விளாசல்!!

Tamilnadu Assembly Election: திமுகவினர் கடைகளில் பொருள் வாங்கிவிட்டுப் பணம் கேட்டால் மிரட்டுவதாகவும், உணவகங்களில் சாப்பிட்டுவிட்டுப் பணம் கேட்கும் ஊழியர்களைத் தாக்குவதாகவும் அவர் புகார் கூறினார். இத்தகைய அநாகரிகமான அரசியல் மற்றும் மிரட்டல் போக்குகளுக்கு இந்தத் தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

மகாராஷ்டிரா முதலமைச்சர் கேள்வி..? முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!

கடலூரில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்புனர் தேர்தலுடன் தொடர்புபடுத்தி பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை விமர்சித்தார். அதில்,, “நீங்கள் இரட்டை எஞ்சின் மாநிலங்கள் என்று பெருமை பேசும் பழைய எஞ்சின் மாநிலங்களை காட்டிலும், திராவிட மாதிரியால் ஆளப்படும் தமிழ்நாடுதான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ” என்றார்.

பச்சை பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

Chief Minister MK Stalin: பச்சை பொய் கூறி வரும் எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சியில் தமிழகம் பல்வேறு வகைகளில் சீரழிந்து இருந்ததாக கடலூர் பொதுக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசினார்.

கருணாநிதி வீட்டு சிறை விவகாரம்… அதிமுக ஆட்சியில் சட்ட ரீதியான நடவடிக்கை… எடப்பாடி பழனிசாமி உறுதி!

Edappadi K Palaniswami Campaign : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்ட விவகாரம் உண்மையெனில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கித்தரப்படும் – முதல்வர் ஸ்டாலின்..

புதுச்சேரி மாநிலத்தில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திங்கள்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு மரியாதை இல்லாமல் உள்ளது. இவர்களுக்கான மரியாதை அனைத்தும் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

மதுரை: CBSE-யில் மும்மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "திமுக ஆட்சியில் இருக்கும் வரை, தமிழகத்தில் மும்மொழித் திட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வெற்றி வாய்ப்புகள் மிகச் சிறப்பாக உள்ளன. நாங்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்," என்று கூறினார்.

“வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட கருணாநிதி?”.. ஆ.ராசா ஆடியோ விவகாரத்தை கையில் எடுத்த இபிஎஸ்.. அதிமுக ஆட்சியில் செக்!

Tamilnadu Assembly Election: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாரா என்பது குறித்துச் சட்ட ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இபிஎஸ் உறுதியளித்தார்.

நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி

Education Policy : முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? என கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

தலைவருக்காக உங்கள் வீட்டு படியேறினேனே.. இறக்கமில்லாமல் மறுத்தவர் தானே நீங்கள்.. இபிஎஸ்-ஐ விளாசிய முதல்வர்!!

Tamilnadu Assembly Election: சாதனைகளைச் செய்துவிட்டு, எதிர்காலத்திற்கான தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கிவிட்டு, நான் உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றேன். ஆனால், டபுள் எஞ்சின், டப்பர் எஞ்சின் என்று வரும், அமித்ஷா ஆட்டுவிக்கும் பழனிசாமி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் லட்சணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.