AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

மதுரையை சேர்ந்தவர்களின் விருப்ப மனு.. நேர்க்காணல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த விருப்ப மனுக்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. இந்தநிலையில், திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களைச் சமர்ப்பித்த மதுரையைச் சேர்ந்த திமுக தொண்டர்கள், மு.க. ஸ்டாலினைச் சந்தித்தனர். இந்த நேர்காணல் அமர்வில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த வழக்கறிஞர்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புதிதாக இணைந்தவர்கள் மற்றும் ஏற்கனவே திமுகவில் சேர்ந்தவர்கள் என சுமார் 150 வழக்கறிஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் முன்னதாகவே திமுகவில் இணைந்த, அதிமுக மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 70 வழக்கறிஞர்கள் இன்று அதாவது 2026 மார்ச் 18ம் தேதி முதலமைச்சரைச் சந்தித்தனர். மேலும், கூடுதலாக சுமார் 80 வழக்கறிஞர்கள் முதலமைச்சரின் முன்னிலையில் இன்று முறைப்படி திமுகவில் இணைந்தனர்.

வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்..

2021 ஆம் ஆண்டு திமுகஆட்சியை கைப்பற்றியது போல மீண்டும் இந்த முறைவும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திமுகவைப் பொருத்தவரையில் 21 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதாவது விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

R. Sakkarapani Tamil Nadu Election: தோல்வியே கண்டிராத தொடர் வெற்றியாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா!

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1996- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தோல்வி அடையாமல் தொடர் வெற்றியை பதிவு செய்து வருகிறார் ஆர். சக்கரபாணி. வரும் தேர்தலில் 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா.

K.S.Masthan Tamil Nadu Election: செஞ்சி தொகுதியில் 2 முறை வெற்றியை பதிவு செய்தவர்… மீண்டும் களமிறக்கப்படுவாரா கே.எஸ்.மஸ்தான்?

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ பதவியை அடைந்த செஞ்சி கே.எஸ். மஸ்தான் மீண்டும் அதே தொகுதியில் களமிறக்கப்படுவாரா திமுக தலைமையின் திட்டம் என்னவாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு… தொகுதியை குறைக்க காரணம் இதுதான்… மு.வீரபாண்டியன் விளக்கம்!

Dmk And Cpi Seat Sharing: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு செய்ய அனுமதி.. “விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி”.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

வைகை நதிக்கரை நாகரிகத்தின் சான்றாகத் திகழும் கீழடி மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த அகழாய்வு நடைபெறவுள்ளது. அதன்பிட, மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் பின்வருமாறு, சிவகங்கை மாவட்டம் கீழடியில், ஏற்கனவே பல கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

பெண்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கும் திமுக – நடிகை கவுதமி

பெண்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே தமிழ்நாடு முதலமைச்சர் பார்க்கிறார் என நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது இரவோடு இரவாக 41 பேருக்கு பிரேத பரிசோதனை செய்த தமிழக அரசு, விளாத்திகுளத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை விஷயத்தில் ஏன் மெத்தனம் காட்டுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்..

Sahitya Akademi Award: சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதாகும். இது கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வு உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பிரிவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை! – முதல்வர் ஸ்டாலின்

Tamil Nadu CM MK Stalin: இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உழைப்பை அள்ளிக் கொடுங்கள்; உதயசூரியன் உதிக்கட்டும்” என குறிப்பிட்டு, “#வாக்களியுங்கள்_திமுகவிற்கு” என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

விளாத்திகுளம் விஷயத்தில் ஏன் இவ்வளவு மெத்தனம்? முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டிய நடிகை கவுதமி..

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறுதிவரை பெண்களுக்காகவே வாழ்ந்தவர். ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார். இதற்கு சாட்சியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராடிய பின்னர் 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

R. Gandhi Tamil Nadu Election: திமுகவின் சாதனை செம்மல்.. ராணிப்பேட்டையின் வெற்றி முகம்.. ஆர். காந்திக்கு மீண்டும் வசமாகுமா தொகுதி!

Tamil Nadu Elections 2026 : திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை செம்மல் என்ற பெயருக்கு சொந்தக்காரரும், ராணிப்பேட்டை ஹீரோவுமான அமைச்சர் ஆர். காந்தி மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வசப்படும் என்று அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

K. Pitchandi Tamil Nadu Election: கருணாநிதியால் அடையாளம் காண்பிக்கப்பட்டவர்… 6 முறை வெற்றி வாகை சூடியவர்.. மீண்டும் தடம் பதிப்பாரா கு.பிச்சாண்டி!

Tamil Nadu Elections 2026 : திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதன் தலைவர் மு.கருணாநிதியால் அடையாளம் காண்பிக்கப்பட்டு திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 6 முறை வெற்றியை பதிவு செய்த கு.பிச்சாண்டி மீண்டும கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

K. Ponmudi Tamil Nadu Election: விழுப்புரத்தில் தொடர் வெற்றியில் திளைத்த க.பொன்முடி… மீண்டும் களமிறக்கப்படுவாரா!

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் தொடர் வெற்றியில் திளைத்து வரும் முன்னாள் அமைச்சரும், எல்எல்ஏவுமான க.பொன்முடி மீண்டும் சட்டமன்ற தொகுதியில் களமிறக்கப்படுவாரா. திமுக தலைமை என்ன நிலைபாட்டில் உள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் காரணம்… ஓபிஎஸ் புகழாரம்!

O Panneerselvam speech: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்று பேசியிருந்தார். இதில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என தெரிவித்தார். மேலும், எடப்பாடியை கடுமையாக விமர்சித்தார்.