AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!

Former BJP leader Annamalai: தமிழகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் ஒரு கீ கொடுக்கும் பொம்மை என்றும், கட்சியினர் கீ கொடுத்தால் தமிழகத்த மத்திய அரசு வஞ்சிக்கிறது, ஹிந்தி, டெல்லி என்ற வார்த்தை மாறி மாறி பேசுவார் என்று அண்ணாமலை தெரவித்தார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..

இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் போது, அதனை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்து ராகுல் காந்தியிடம் ஸ்டாலின் விவரித்துள்ளார். மசோதாவை அறிமுகம் செய்யும்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் 185 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் காங்கிரஸின் 98, சமாஜ்வாடியின் 37, திரிணாமுல் காங்கிரஸின் 28 மற்றும் திமுகவின் 22 எம்பிக்கள் அடங்குவர்.

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. 3 முக்கிய தொகுதிகளில் சூறாவளிப் பரப்புரை.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி?

Tamilnadu Assembly Election: தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொகுதிகளில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகமெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும்.. கருப்பு சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்..

CM MK Stalin Protest: இந்த தொகுதி மறுவரையறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மு. க. ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக தனது சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

“அரசியலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் பேபி”.. முதல்வர் ஸ்டாலின் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரேமலதா..

Tamilnadu Assembly Election: இந்த கூட்டத்திற்கு முன்பு கிடைத்த நேரத்தில் கமலஹாசனுடன் தான் உரையாடியதைக் குறிப்பிட்ட பிரேமலதா, சினிமாவுக்கும் அரசியலுக்குமான வித்தியாசத்தை விளக்கினார். "சினிமா என்பது ஒரு தொழில், ஆனால் அரசியல் என்பது மக்கள் சேவை. எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கை காட்டுவது அரசியல் கிடையாது" என்று அவர் கூறினார்.

நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் பிற கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மசோதாக்களால் தமிழ்நாட்டுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் “பழைய திமுகவை பார்க்க நேரிடும்” எனவும் அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி பேசுகிறார் – எடப்பாடி பழனிசாமி..

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நீண்டநாள் கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேறும் தருணம் இது; அதனால் மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. பெண்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஷயமும் இதுதான். இதனை ஜீரணிக்க முடியாததால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தினாலேயே அவர் இப்படி பேசுகிறார் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிரதமரை மிரட்டும் தொனியில் பேசுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்..

நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மரியாதை மற்றும் பிரதிநிதித்துவம் வழங்க பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2023 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பெண்கள் தொடர்பான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போது பெண்கள் பாதிக்கப்படாத வகையில் அதை விரைவாக அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்,

மீண்டும் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்.. மிரட்டல் என்று எடுத்துக்கொண்டாலும் கவலையில்லை – முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்ற கூட்டத்தில் எங்கள் எம்.பிக்கள் கலந்துகொள்வார்கள். தமிழ்நாட்டை பாதிக்கும் எந்த முடிவும் எடுக்கப்பட்டால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது. தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் இறங்கும். என் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்பது எப்போதும் வடக்கில் இருந்து தான் வரும் – திமுக தலைவர் ஸ்டாலின்..

தமிழ்நாடு என்ற பெயரே சிலருக்கு கண் உருத்தலை ஏற்படுத்துகிறது. ‘தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடாது என்பது ஆளுநர் ஆர்.என். ரவியின் குரல் அல்ல; அது ஆர்எஸ்எஸ் குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.. மீண்டும் திராவிட மாடல் அரசு தான் அமையும் – துரை வைகோ..

தமிழ்நாட்டுக்கு தேவையான மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவில்லை. உங்களுடைய வேட்பாளர் தி.மு. ராசேந்திரன் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து, மக்களுக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் வைகோவுக்கு உதவியாளராக மாறினார். அவர் படித்தவர், பண்பாளர். நீங்கள் எளிதாக அணுகக்கூடிய வேட்பாளராக இருப்பார் என துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.

அய்யா ராமதாஸ் பூரண குணமடைந்து, மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டுகிறேன் – திமுக தலைவர் ஸ்டாலின்..

பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள அருளை ஆதரித்து ஏப்ரல் 12ஆம் தேதி பள்ளப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடன் இருந்த கட்சியினர் அவரை உடனடியாக தாங்கிப் பிடித்து சேலத்தில் குரங்கணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தமிழகம் வர மறுக்கும் ராகுல் காந்தி… பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு? இண்டி கூட்டணியில் வெடிக்கும் யுத்தம்!

Rahul Gandhi Boycott Campaign: தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு, திமுக-காங்கிரஸ் கூட்டணி முரண்பாடு என்று கூறப்படுகிறது.

தைரியமிருந்தால் கடிதத்தை வெளியிடுங்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி சவால்!

MK Stalin challenges Nirmala Sitharaman: தமிழகத்தில் நெல் சாகுபடிக்கான ஊக்கத் தொகையை நிறுத்துவது தொடர்பாக மத்திய பாஜக அரசு அனுப்பிய கடிதத்தை பொது வெளியில் வெளியிட தயாரா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி.. தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடி நிதி.. புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு!

Financial Report Released: கடந்த 10 ஆண்டு கால மத்திய பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக ரூ.14 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நிதி விவரத்தை வெளியிட்டுள்ளது. எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டுகளுக்கு பதிலாக வெளியிடப்பட்டுள்ளது.