Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

அதிமுக தனிக்கட்சி அல்ல…அது பாஜகவின் கிளை…முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

Chief Minister MK Stalin: தமிழகத்தில் அதிமுக தனிக் கட்சி அல்ல என்றும் அது பாரதீய ஜனதா கட்சியின் கிளையாக செயல்பட்டு வருவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பு…எப்போது தெரியுமா..அருண் ராஜ் கூறிய பதில்!

Tvk Secretary Arun Raj: தமிழக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் எப்போது செய்தியாளர்களை உண்மையாக சந்திக்கிறாரோ, அப்போது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார் என்று கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்?…புயலை கிளப்பிய மல்லை சத்யா!

DVK Leader Mallai Sathya: வரும் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்வதில் சந்தேகம் உள்ளதாக திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா தெரிவித்தார். திவெக தேர்தல் அறிவிப்பை 28-ஆம் தேதி அறிவிக்க உள்ளார்.

சிகிச்சையில் ஹெச்.ராஜா..நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…பாஜக-திமுகவினர் நெகிழ்ச்சி!

CM MK Stalin: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். இதே போல, துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலினும் நலம் விசாரித்தார்.

இன்று பிரசாரத்தை தொடங்கும் திமுக.. தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

DMK begins its election campaign today: திமுக கடந்த மாதம் 20ஆம் தேதி, கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 'தமிழ்நாடு பணியாது' என்ற தலைப்பில் பிப்ரவரி 1ஆம் தேதி (அதாவது இன்று) முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் அறிக்கையையே பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

MK Stalin on Tamil Nadu Development : தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே உறுதி செய்துள்ள நிலையில், அந்த அறிக்கையை பிரதமரும் ஆளுநரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிப்.5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்…இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை?

Tamil Nadu Cabinet Meeting: தமிழக அமைச்சரவைக் கூட்டம் அடுத்த மாதம் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் எந்த மாதிரியான முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

“சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு Vs என்டிஏ இடையே தான் போட்டி”.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி

Tamil Nadu Vs NDA: பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவரும் ஊழல் வாதிகள் தான், உச்சநீதிமன்றம் வரை சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தான் அதிமுக. கூட்டணியில் இல்லாத சமயத்தில் அதிமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்திர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் அவர்களை எல்லாம் வெளுத்துவிட்டீர்களா? என்று அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்?..எப்போது தாக்கல் செய்யலாம்…அரசு தீவிர ஆலோசனை!

Tamil Nadu Interim Budget: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 4 நாள்கள் பேரவையை நடத்தி முடிக்க உள்ளனராம்.

இஸ்லாமியர்களுக்கு வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள் – தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

MK Stalin Unveils Five Welfare Schemes: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 10 உருது ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் முதல் முறையாக “உலகளாவிய சுற்றுலா மாநாடு”…அடுத்த மாதம் நடக்கிறது..எங்கு தெரியுமா!

Tamil Nadu Global Tourism Conference: தமிழகத்தில் அடுத்த மாதம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026 நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த சுற்றுலா மேம்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் .

திமுக ஆட்சியில் பெண்கள் சுதந்திரத்துக்கு உரிய கட்டமைப்பு வழங்கப்படும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

C M MK Stalin Latest Speech: தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் உரிய கட்டமைப்புகள் வழங்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற உலக மகளிர் உச்சி மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார் .

டபுள் எஞ்சின் அரசு ஏன் மணிப்பூரை காப்பற்றவில்லை? – பிரதமர் மோடிக்கு முதல்வர் கேள்வி

MK Stalin Questions PM Modi : தஞ்சாவூரில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிர் அணி மாநாடு ஜனவரி 26, 2026 அன்று நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறித்து கடுமையாக விமர்சித்தார்.

தஞ்சையில் நடக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாடு.. சிறப்பு ஏற்பாடுகள் என்ன?

DMK Women Wing Conference: தஞ்சையில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதில் சுமார் ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறுகிறது.

சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி! மிடுக்காக அணி வகுத்து வந்த முப்படையினர்!

Governor Ravi Hoists National Flag: சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் தேசியக் கொடியை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முப்படைகள் மற்றும் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் .