MK Stalin
மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.
கோவையில் மையமிடும் 3 துருவங்கள்.. மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!
Coimbatore Traffic Change : தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் கோவை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர். இதன் காரணமாக கோவை நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 18, 2026
- 09:43 am IST
“10 தோல்வி பழனிசாமிக்கு 10 கேள்விகள்”.. முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக எழுப்பிய அனல் பறக்கும் கேள்விகள்..
Tamilnadu Assembly Election: கடந்த 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனையைத் தவிர்த்து, பாஜக தமிழகத்திற்கு வழங்கிய சிறப்புத் திட்டம் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமியால் பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாரா?
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 18, 2026
- 08:18 am IST
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்.
Delimitation Bill In Parliament: இந்த வாக்கெடுப்பில் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 278 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 211 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 17, 2026
- 22:58 pm IST
டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..
இந்த நிலையில், மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு. இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும், யாருடைய குரலுக்கு இடம் இருக்கும் என்பதே தொகுதி மறுவரையறையின் நோக்கம். அது ஒன்றியத்தை பலப்படுத்த வேண்டுமே ஒழிய பலவீனப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 17, 2026
- 21:13 pm IST
ராகுல் காந்தி தமிழகம் வருகை.. அழுத்தமா? கூட்டணி தர்மமா? பின்னணி என்ன?
Rahul Gandhi Tamil Nadu Visit: காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி தமிழகம் வருகை உறுதியான நிலையில், அவரது வருகைக்கு பின்னாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 18:06 pm IST
ரூ.10,000 ‘போலி செக்’.. தேர்தல் களத்தில் வெடிக்கும் பணப் புகார்களும், சட்டப் போராட்டங்களும்!!
Tamilnadu Assembly Election: அதிமுகவினர் 10,000 ரூபாய் மதிப்பிலான போலி காசோலைகளை விநியோகம் செய்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் சாடினார். இந்த செக் வடிவிலான துண்டுப் பிரசுரங்களை வழங்கி பரப்புரை செய்து வருவதாகவும், இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் கூறினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 17, 2026
- 14:19 pm IST
ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!
Rahul Gandhi: தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தியுடன், முதல்வர் மு. க. ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளமாட்டார் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 13:49 pm IST
திமுகவின் ஒற்றை நோக்கம் இது தான்.. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி தாக்கு!
Nainar Nagendran Latest Speech: தமிழகத்தின் முதல்வராக உதயநிதியை அமர வைப்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் ஒற்றை நோக்கமாக இருந்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 17, 2026
- 10:44 am IST
மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!
Former BJP leader Annamalai: தமிழகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் ஒரு கீ கொடுக்கும் பொம்மை என்றும், கட்சியினர் கீ கொடுத்தால் தமிழகத்த மத்திய அரசு வஞ்சிக்கிறது, ஹிந்தி, டெல்லி என்ற வார்த்தை மாறி மாறி பேசுவார் என்று அண்ணாமலை தெரவித்தார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 16, 2026
- 18:21 pm IST
தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..
இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் போது, அதனை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்து ராகுல் காந்தியிடம் ஸ்டாலின் விவரித்துள்ளார். மசோதாவை அறிமுகம் செய்யும்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் 185 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் காங்கிரஸின் 98, சமாஜ்வாடியின் 37, திரிணாமுல் காங்கிரஸின் 28 மற்றும் திமுகவின் 22 எம்பிக்கள் அடங்குவர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 16, 2026
- 14:10 pm IST
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. 3 முக்கிய தொகுதிகளில் சூறாவளிப் பரப்புரை.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி?
Tamilnadu Assembly Election: தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொகுதிகளில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 16, 2026
- 08:48 am IST
தமிழகமெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும்.. கருப்பு சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்..
CM MK Stalin Protest: இந்த தொகுதி மறுவரையறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மு. க. ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக தனது சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 16, 2026
- 08:41 am IST
“அரசியலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் பேபி”.. முதல்வர் ஸ்டாலின் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரேமலதா..
Tamilnadu Assembly Election: இந்த கூட்டத்திற்கு முன்பு கிடைத்த நேரத்தில் கமலஹாசனுடன் தான் உரையாடியதைக் குறிப்பிட்ட பிரேமலதா, சினிமாவுக்கும் அரசியலுக்குமான வித்தியாசத்தை விளக்கினார். "சினிமா என்பது ஒரு தொழில், ஆனால் அரசியல் என்பது மக்கள் சேவை. எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கை காட்டுவது அரசியல் கிடையாது" என்று அவர் கூறினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 16, 2026
- 06:46 am IST
நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் பிற கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மசோதாக்களால் தமிழ்நாட்டுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் “பழைய திமுகவை பார்க்க நேரிடும்” எனவும் அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 15, 2026
- 15:05 pm IST
தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி பேசுகிறார் – எடப்பாடி பழனிசாமி..
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நீண்டநாள் கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேறும் தருணம் இது; அதனால் மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. பெண்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஷயமும் இதுதான். இதனை ஜீரணிக்க முடியாததால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தினாலேயே அவர் இப்படி பேசுகிறார் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 14, 2026
- 21:59 pm IST