AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

கொளத்தூர் தொகுதி EVM ஆய்வு.. 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி.. உயர் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு!!

Kolathur Constituency EVM Inspection Issue: கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ததில், 30 சதவீதத்திற்கும் அதிகமான இயந்திரங்களில் சீல் இல்லாதது மற்றும் புதிய முகவரி சீட்டுகள் ஒட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் திமுக செய்தித் தொடர்பாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

“முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் முதலில் மின்வெட்டுப் பிரச்சனை நிலவிய நிலையில், தற்போது மின்கட்டண உயர்வு பிரச்சனை தலைதூக்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வந்திருப்பதாக அரசே ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவப்பு + மஞ்சள் சேர்ந்தால் கிடைப்பது காவி.. தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

MK Stalin Criticized TVK Government: திராவிட கழகத்தின் இரு சக்கர வாகன பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த தமிழக வெற்றிக் கழக அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதில், சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் காவி நிறம் வரும் என்று வினவினார்.

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு.. ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்.. மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை தொடர்பான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பது குற்றம் என்றும், அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

“காவிரி உரிமை அரசியல் அல்ல; தமிழ்நாட்டின் வாழ்வுரிமை!”.. மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

Aadhav Arjuna Detailed Counter to MK Stalin: மேகதாட்டு அணை ஆதவ் அர்ஜுனா மு க ஸ்டாலின் இடையே எழுந்துள்ள அரசியல் விவாதத்தில், தமிழ்நாடு அரசு பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் சட்டமன்றத் தீர்மானங்கள் குறித்த விரிவான ஆதாரங்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையை சினிமா கொட்டகையாக மாறியுள்ளனர்.. முன்னாள் அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!

Former Minister Raghupathy Criticized CM Vijay : தமிழக சட்டப்பேரவை தற்போது திரைப்பட கொட்டகையாக மாறி உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .

விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம்.. முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணத்துக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

MK Stalin Remarks Cauvery Water Issue: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு நடத்தும் பேச்சுவார்த்தை எனும் சதி வலையில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கன்னத்தில் கை வைத்தது குற்றமா? எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு பளார்.. மு. க. அழகிரி மகள் மீது வழக்கு பதிவு!

MK Alagiri Daughter Kayalvizhi : சென்னையில் எஸ். பி. ஐ. வங்கி மேலாளரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மு.க. அழகிரி மகள் கயல் விழி மீது அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

“ஆறுதல் சொல்லக் கூட மனமில்லாத படுபாதக அரசு!”.. முதல்வர் விஜய்யை விளாசிய மு.க.ஸ்டாலின்!

MK Stalin Questions CM Vijay: காவல் மரணங்கள் முதல்வர் விஜய் முக ஸ்டாலின் அறிக்கை வாயிலாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 'Accountability, Apology முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளா?' எனச் சாடியுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், "காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் உடனடியாகப் பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டும்" என மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது!”.. மாணவர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

Scrap NEET exam MK Stalin: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் மத்திய அரசுக்கான எச்சரிக்கை மணி என்றும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டிய நேரம் இது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“புதிய திட்டம் எதுவுமில்லை… பெயர்களை மட்டுமே மாற்றுகிறார்கள்!” – தவெக அரசை விளாசிய துரைமுருகன்!

காலை உணவுத் திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனத் தவெக அரசு அரசாணை மூலம் மாற்றி அமைத்துள்ள நிலையின் பின்னணியில், புதிய திட்டங்களை அறிவிக்க முடியாமல் முந்தைய திமுக அரசின் திட்டங்களின் பெயர்களை மட்டுமே தவெக அரசு மாற்றி வருவதாகத் துரைமுருகன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

“நீட் தேர்வு ரத்தே நிரந்தர தீர்வு!”.. டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Delhi NEET student protest: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் மாணவர்களின் கொந்தளிப்பான போராட்டத்தைச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வாகும் எனத் தெரிவித்துள்ளார்.

2 மாதங்களில் 10 பேர் கைது… ஆணவத்துக்கு பாடம் புகட்டுவார்கள் – மு.க.ஸ்டாலின் கண்டனம்

விளாத்திக்குளம் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் , ''ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

“நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”.. திமுக எம்.எல்.ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கடும் கண்டனம்!!

Stalin and Kanimozhi Slam TVK Govt: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவெக அரசு அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல் துறையை ஏவி திமுகவினரை வேட்டையாடுவதாக அவர்கள் சாடியுள்ளனர்.