AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.5000 வழங்கல்..பறந்த புகார்…களமிறங்கும் சிபிஐ?

Kalaignar Magalir Urimai Thogai: தமிழகத்தில் ஒரே நாளில் மகளிர்களுக்கு ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருந்தது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை செயலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

“திமுக – காங்., கூட்டணி நீடிக்காது.. புகையத் தொடங்கிவிட்டது”.. இபிஎஸ் பரபர பேச்சு

DMK - Congress alliance will not last: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்டம் கண்டு உள்ளது. காங்கிரசுக்கும், திமுகவுக்கும் வார்த்தை போர் நடந்து கொண்டிருக்கிறது. வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவும், காங்கிரசும் கூட்டணியில் இருக்குமா? என்பது சந்தேகம் என்று பேசியுள்ளார்.

‘போடு தோப்புக்கரணம் என்று சொன்னால்…’ இபிஎஸ் குறித்து முதல்வர் கடும் விமர்சனம்

MK Stalin Criticizes EPS: திருப்பத்தூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் திமுக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுக்கு எவ்வித டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டில் நிந்தர டிரெண்ட் பிளாக் அண்ட் ரெட் தான். வரும்தேர்தலிலும் வெல்லப்போவது நாம் தான் என்றார்.

திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை.. பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர்!

Manickam Thakur MP: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை என்றும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த தொகுதிகளை தான் காங்கிரஸ் கேட்பதாகவும், இதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

திமுகவின் ‘Patchwork’ – முதல்வரின் அறிவிப்பை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

AIADMK vs DMK : மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கூடுதலாக கோடைகால சிறப்பு நிதி என ரூ.5000 தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை திமுகவின் பேட்ச்வொர்க் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!

Magalir urimai thogai will be increased as Rs2000: வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள் தான் வெல்வோம். அடுத்த திராவிட மாடல் ஆட்சி 2.0 ஆட்சிக்காலத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்று அவர் அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!

Magalir urimai thogai Rs5000 credited: பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000ம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000ம் என மொத்தம் ரூ.5,000 வழங்கப்படுள்ளது. 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

123 புதிய ஒப்பந்தங்கள்.. 1.48 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

திமுக ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்காகதான் செயலாக்க மாநாடு நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிண்டி நட்சத்திர விடுதியில் 123 புதிய ஒப்பந்தங்களை செயல்படுத்தப்பட்டு, 1.48 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கூட்டணி ஆட்சி கதவை அடைத்த ஸ்டாலின்…ரகசியம் வைத்துள்ள செல்வப்பெருந்தகை..காங்கிரஸுக்கு இருக்கும் 2 சாய்ஸ்!

Congress Coalition Government: திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கே கேட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் கூட்டணி ஆட்சிக்கான கதவை அடைத்துவிட்டநிலையில், காங்கிரஸ் தலைமை எந்த மாதிரியான முடிவெடுக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.

“ஆட்சியில் பங்கு”.. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

Share in governance: ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை. அது எங்களை விட காங்கிரஸுக்கு நன்றாக தெரியும் என்றும், நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதி தான் அந்த கோஷம் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன்.. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் பேசிய முதலமைச்சர்!

Tamil Nadu CM MK Stalin Speech | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிறிஸ்தவ கல்லூரி விழாவில் கலந்துக்கொண்டு மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் என்று மாணவிகள் மத்தியில் பேசியுள்ளார்.

உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளது.. டாடா மோட்டார்ஸ் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகன உற்பத்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர், பிற மாநிலங்களுடன் போட்டி போடும் நிலையில் தமிழ்நாடு எப்போது கடந்து விட்டதாகவும், உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி மதிப்பில் திறக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் ஆலை.. உலக முதலீடுகளுடன் போட்டியிடும் தமிழ்நாடு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

CM MK Stalin: முதல்வர் ஸ்டாலின், டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உடன் இணைந்து, அந்த வாகனத்தை உற்பத்தி வரிசையிலிருந்து இயக்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாநிலங்களுக்கு இடையிலான போட்டியைத் தாண்டி, தற்போது தமிழ்நாடு உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க “உலகத்துடன் போட்டியிடும்” நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

அரசு ஊழியர்களின் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது..ஜாக்டோ ஜியோ விழாவில் முதல்வர் பேச்சு!

Chief Minister MK Stalin Speech: அரசு ஊழியர்களின் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருவதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் இவ்வாறு தெரிவித்தார் .

ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..

CM MK Stalin Letter to PM Modi: மேலும், சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் ரயில் உள்கட்டமைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.