Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

“இதுதான் எனது 2026 தேர்தல் வாக்குறுதி”.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளதாக பெருமை கூறிய அவர், முறியடிக்க முடியாத சாதனைகளை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை என்று தெரிவித்தார். மேலும், 40 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளதாக கூறினார்.

வெளியூரில் இருக்கும் நபர்கள் கவனத்திற்கு.. பொங்கல் பரிசுத் தொகை வாங்க இது கட்டாயம்!

Pongal Gift and Money | தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 உடன் கூடிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தொகுப்பை அட்டை தாரர்கள் எங்கு அட்டை வைத்துள்ளார்களோ அங்கு மட்டும் தான் பெற்றுக்கொள்ள முடியும்.

”உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம்.. இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..

Ungal Kanvai Sollungal Scheme: தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளையும் அறிந்து கொள்ள அரசு விரும்புகிறது. இதற்காக 50,000 தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். இந்த தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று குடும்ப விவரங்களை சேகரித்து, எந்தெந்த அரசுத் திட்டங்களால் அவர்கள் பயன் பெறுகிறார்கள் என்பதையும், அவர்களது கனவுகள் என்ன என்பதையும் பதிவு செய்வார்கள்.

திமுக ஆட்சியில் 85% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்…அமைச்சர் கே.என்.நேரு!

Minister K N Nehru : திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

இன்று தொடங்கும் 49வது சென்னை புத்தக கண்காட்சி.. என்னவெல்லாம் ஸ்பெஷல்?

49th Book Fair In Chennai | சென்னையில் இன்று (ஜனவரி 08, 2026) தொடங்க உள்ள 49வது புத்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த புத்த கண்காட்சிக்காக சென்னையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து – பரபரப்பு தகவல்

CM Convoy Incident:: திண்டுக்கல்லில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதுரை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் திருமங்கலம் அருகே சென்ற போது  திடீரென கார் டயர் வெடித்தது. இந்த சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

திண்டுக்கல்லில் ரூ. 1,595 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..

CM MK Stalin Visit To Dindigul: முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1,111 முடிவுற்ற பணிகள், 212 புதிய திட்டப் பணிகள் என மொத்தம் ரூ. 1,595 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.

ஏஐ ஒருபோதும் மனிதனுக்கு மாற்று இல்லை… லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேச்சு

Free Laptop Scheme : தமிழ்நாட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், ஏஐ ஒரு போதும் மனிதனுக்கு மாற்று இல்லை என பேசினார்.

10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. யாருக்கு இந்த லேப்டாப் கிடைக்கும்?

Free Laptop Scheme: இதற்கு முன்னதாக, 2025–2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒரு ஆண்டிற்கு 10 லட்சம் மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின்படி டேப் அல்லது லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை செயல்படுத்த ஒரு உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது.

3000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு…. எப்போது? யாருக்கு கிடைக்கும்?

Pongal Gift Update: தமிழக அரசு சார்பில் ரூ.3000 ரொக்கத் தொகை, அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியன அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 4, 2026 அன்று அறிவித்தார். இந்த பரிசுத் தொகை எப்போது? யாருக்கு கிடைக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? விஜய்க்கு எந்த இடம்? வெளியானது புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்

Opinion Poll Results: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் எனற கருத்து கணிப்பை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் குறித்தும், விஜய் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

“அண்ணன் வைகோவுக்கு 82 வயதா அல்லது 28 வயதா?”.. சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

போதைப் பொருள் ஒலிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு, கலைத் துறையை சேர்ந்தோர் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதோடு, தமிழகத்தின் குறுக்கும், நெடுக்குமாக தனது காலடி படாத இடமே இல்லை என்று சொல்லும் வண்ணம் நடந்தவர் அண்ணன் வைகோ என்றும் பேசியுள்ளார்.

28 வயதா என ஆச்சரியம் தருகிறார் வைகோ – மு.க.ஸ்டாலின் புகழாரம்

2026ம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் வேலைகளும் சூடுபிடித்துள்ளன. இன்று மதிமுகவின் வைகோ, சமத்துவ பயணம் என்ற பெயரில் திருச்சியில் நடைபயணம் தொடங்குகிறார். 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பயணத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் வைகோவின் வயது 28தானா என ஆச்சரியம் தரும் அளவுக்கு இளைஞர் போல செயல்படுவதாக புகழ்ந்து பேசினார்

2026 New Year Wishes: ஸ்டாலின் முதல் விஜய் வரை தலைவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

2026 New Year: சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே லேசான சாரல் மழை பொழிந்து, மக்களின் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர்.

“எப்போது வருவீர்கள் முதல்வரே?” 6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்!

School teachers Protest: சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1,583 ஆசிரியர்கள் மீது எழும்பூர் காவல்துறையினர் அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.