AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

கடந்த 5 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பலனை அனுபவிக்கிறார்கள் – பிரதமர் மோடி விமர்சனம்..

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சில நாட்களுக்கு முன்னர் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதை பயன்படுத்தி அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள். புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, திமுகவின் வெளியேற்றம் என்ற தெளிவான செய்தியை மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போடக்கூடிய வாக்கு – தமிழக வளர்ச்சிக்கான தடைக்கல்.. முதல்வர் ஸ்டாலின்..

அடிமை அதிமுக, மதவாத பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழக முழுவதும் தற்போது இந்த ஒரு பாடுதான் ஒலிக்கிறது — ‘என்கிட்ட மோதாதே, இது பெரியாரின் தமிழ்நாடடா; வம்புக்கு இழுக்காதே, இது அண்ணாவின் கோட்டையடா. நான் பறக்கவிட்ட கருப்புக்கொடி, காவிக்கொடியை வீழ்த்தி…’ போர் என்றால் வெற்றி ஒன்றுதான் குறி; நம் குறி தவறவில்லை. இதுதான் திமுக, தமிழ்நாடு, திராவிட மாடல்,” எனவும் தெரிவித்தார்.

தீ பரவட்டும் என கூறினேன், அது நாடாளுமன்றம் வரை பற்றிக்கொண்டது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ!

தொகுதி மறுவரையறைக்கு எதிரான நமது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆபத்தை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து இதில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அப்போதே தொடங்கினோம். தீ பரவட்டும் என கூறினேன், அது நாடாளுமன்றம் வரை பற்றிக்கொண்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். 

“திமுக பற்றவைத்த தீ நாடாளுமன்றம் வரை பரவியது”.. புது வரலாறு படைத்துள்ளோம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

Tamilnadu Assembly Election: திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடுவதோடு நிறுத்தாமல், எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை உடைக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் வாக்காளர்களைச் சிந்திக்க வைக்கவும் இந்த "நண்பர்கள் - துரோகிகள்" அஸ்திரத்தை முதல்வர் கையில் எடுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

“தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!

Tamilnadu Assembly Election: பாஜகவின் தாக்குதலில் இருந்து திமுகவும், இந்தியா கூட்டணி சகோதரர்களும் தமிழ்நாட்டை காத்து வருகிறார்கள். சமூக நீதி என்றால் என்னவென்று நாட்டிற்கே நாங்கள் காட்டியுள்ளோம். என்ன தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவினர் தாக்குவார்கள்

கோவையில் மையமிடும் 3 துருவங்கள்.. மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!

Coimbatore Traffic Change : தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் கோவை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர். இதன் காரணமாக கோவை நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“10 தோல்வி பழனிசாமிக்கு 10 கேள்விகள்”.. முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக எழுப்பிய அனல் பறக்கும் கேள்விகள்..

Tamilnadu Assembly Election: கடந்த 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனையைத் தவிர்த்து, பாஜக தமிழகத்திற்கு வழங்கிய சிறப்புத் திட்டம் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமியால் பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாரா?

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்.

Delimitation Bill In Parliament: இந்த வாக்கெடுப்பில் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 278 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 211 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை.

டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

இந்த நிலையில், மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு. இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும், யாருடைய குரலுக்கு இடம் இருக்கும் என்பதே தொகுதி மறுவரையறையின் நோக்கம். அது ஒன்றியத்தை பலப்படுத்த வேண்டுமே ஒழிய பலவீனப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தமிழகம் வருகை.. அழுத்தமா? கூட்டணி தர்மமா? பின்னணி என்ன?

Rahul Gandhi Tamil Nadu Visit: காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி தமிழகம் வருகை உறுதியான நிலையில், அவரது வருகைக்கு பின்னாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரூ.10,000 ‘போலி செக்’.. தேர்தல் களத்தில் வெடிக்கும் பணப் புகார்களும், சட்டப் போராட்டங்களும்!!

Tamilnadu Assembly Election: அதிமுகவினர் 10,000 ரூபாய் மதிப்பிலான போலி காசோலைகளை விநியோகம் செய்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் சாடினார். இந்த செக் வடிவிலான துண்டுப் பிரசுரங்களை வழங்கி பரப்புரை செய்து வருவதாகவும், இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் கூறினார்.

ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!

Rahul Gandhi: தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தியுடன், முதல்வர் மு. க. ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளமாட்டார் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

திமுகவின் ஒற்றை நோக்கம் இது தான்.. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி தாக்கு!

Nainar Nagendran Latest Speech: தமிழகத்தின் முதல்வராக உதயநிதியை அமர வைப்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் ஒற்றை நோக்கமாக இருந்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!

Former BJP leader Annamalai: தமிழகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் ஒரு கீ கொடுக்கும் பொம்மை என்றும், கட்சியினர் கீ கொடுத்தால் தமிழகத்த மத்திய அரசு வஞ்சிக்கிறது, ஹிந்தி, டெல்லி என்ற வார்த்தை மாறி மாறி பேசுவார் என்று அண்ணாமலை தெரவித்தார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..

இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் போது, அதனை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்து ராகுல் காந்தியிடம் ஸ்டாலின் விவரித்துள்ளார். மசோதாவை அறிமுகம் செய்யும்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் 185 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் காங்கிரஸின் 98, சமாஜ்வாடியின் 37, திரிணாமுல் காங்கிரஸின் 28 மற்றும் திமுகவின் 22 எம்பிக்கள் அடங்குவர்.