MK Stalin
மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளது.. டாடா மோட்டார்ஸ் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்!
ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகன உற்பத்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர், பிற மாநிலங்களுடன் போட்டி போடும் நிலையில் தமிழ்நாடு எப்போது கடந்து விட்டதாகவும், உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Feb 9, 2026
- 16:43 pm IST
ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி மதிப்பில் திறக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் ஆலை.. உலக முதலீடுகளுடன் போட்டியிடும் தமிழ்நாடு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
CM MK Stalin: முதல்வர் ஸ்டாலின், டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உடன் இணைந்து, அந்த வாகனத்தை உற்பத்தி வரிசையிலிருந்து இயக்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாநிலங்களுக்கு இடையிலான போட்டியைத் தாண்டி, தற்போது தமிழ்நாடு உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க “உலகத்துடன் போட்டியிடும்” நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 9, 2026
- 15:14 pm IST
அரசு ஊழியர்களின் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது..ஜாக்டோ ஜியோ விழாவில் முதல்வர் பேச்சு!
Chief Minister MK Stalin Speech: அரசு ஊழியர்களின் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருவதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் இவ்வாறு தெரிவித்தார் .
- Gowtham Kannan
- Updated on: Feb 8, 2026
- 20:23 pm IST
ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..
CM MK Stalin Letter to PM Modi: மேலும், சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் ரயில் உள்கட்டமைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 8, 2026
- 12:33 pm IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் பெரிய மனது முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது – செல்வப்பெருந்தகை..
காங்கிரஸ் கட்சிக்கு 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க சில இடங்களை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்ற முடிந்தது. எனவே, இந்த முறை காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்கும் தொகுதிகளை திமுக வழங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 8, 2026
- 07:29 am IST
தமிழகத்திற்கு ஒரு பைசா கூட தராத பாஜக அரசு.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்!
விருதுநகரில் திமுக இளைஞர் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காததால், வரவிருக்கும் தேர்தலில் தமிழகம் என்டிஏ கூட்டணிக்கு பூஜ்ஜிய வாக்குகளை வழங்கும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தலைவர்கள் வெறும் நாற்காலி ஆட்டத்தையே விளையாடி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Feb 7, 2026
- 21:13 pm IST
‘விருதுநகரில் மாநாடு நடத்தினால் வெற்றி, அடுத்த தேர்தலில் வெற்றி உறுதி…. மு.க.ஸ்டாலின் பகிர்ந்த சுவாரசியத் தகவல்
M. K. Stalin Praises Virudhunagar : விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி தென்மண்டல மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுநகரில் மாநாடு நடத்தினால் அடுத்த தேர்தலில் நமக்கு வெற்றி உறுதி என்றும் 2019 ஆம் ஆண்டில் பரப்புரையை தொடங்கி வெற்றிபெற்றோம் என்று பேசினார்.
- Karthikeyan S
- Updated on: Feb 7, 2026
- 20:22 pm IST
மத்திய பட்ஜெட்.. பாஜகவை கண்டித்து பிப்.12 திமுக, கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு!
நிதி மறுப்பு ஒருபுறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்பப்பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது மத்திய பாஜக அரசு.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 7, 2026
- 13:08 pm IST
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்…திருமாவளவன் வீசிய குண்டு..பாமகவை குறிப்பிட்டு பேசியதென்ன!
Thol Thirumavalavan Latest Pressmeet: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த கருத்தில் ராமதாஸ் தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சியை குறிப்பிட்டு சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
- Gowtham Kannan
- Updated on: Feb 7, 2026
- 11:50 am IST
திமுகவிற்கு 2.0 இல்லை.. பூஜ்ஜியம் தான் கிடைக்கும் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
Edappadi Palaniswami On DMK: “மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக 2.0 ஆட்சி அமையும்” என ஸ்டாலின் கூறி வருவது, தமிழக மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றும் முயற்சியே என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 7, 2026
- 10:01 am IST
விருதுநகரின் இன்று திமுக இளைஞரணியின் தென்மண்டல மாநாடு.. முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் ஸ்டாலின்?
DMK Youth Wings Southern Regional Conference: இப்போது இந்த இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தமிழ்நாடு உதயநிதி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். திமுகவின் மீது எப்போதும் வன்மத்தோடு இருக்கும் எதிரிகள் என்ன கட்டமைத்தார்கள்? இளைஞர்கள் இனி திமுகவுக்கு வருவார்களா? என்று சந்தேகம் எழுப்புவது போன்று, தங்களுடைய ஆசைகளை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 7, 2026
- 07:51 am IST
“பேஸ்மென்ட் வீக் -பில்டிங் ஸ்டிராங்.. ஆட்டம் காணும் திமுக ஆட்சி”.. இபிஎஸ் கடும் விமர்சனம்!!
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 6, 2026
- 14:29 pm IST
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை!
Tamil Nadu Cabinet Meeting: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- Gowtham Kannan
- Updated on: Feb 5, 2026
- 06:30 am IST
காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள்…திமுக மூத்த நிர்வாகிகள் போர்கொடி?மாறும் கூட்டணி கணக்கு!
DMK - Congress Seat Sharing: காங்கிரஸ் கட்சி கேட்கும் கூடுதல் தொகுதிகளை கொடுத்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தான் ஆபத்து என்று அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால், திமுகவின் கூட்டணி கணக்கும் மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- Gowtham Kannan
- Updated on: Feb 4, 2026
- 11:41 am IST
என் கனவு, என் எதிர்காலம் திட்டம்.. விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..
தேர்தல் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், மக்களுக்கான புதிய அறிவிப்புகள் தினசரி வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணி அளவில் நடைபெற இருக்கக்கூடிய அரசு நிகழ்ச்சியில் ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற புதிய திட்டத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 4, 2026
- 09:00 am IST