AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

அதிமுக ஒரு Copy–paste’ அரசியல்.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டம்..

சில நாட்களுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகையாக 1.31 கோடி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 முன்பணமாக வரவு வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனால், இதற்கு அதிமுகவின் அழுத்தமே காரணம் என அதிமுக தரப்பில் கூறப்பட்டது.

திமுக-அதிமுக வெவ்வேறு கட்சி கிடையாது.. இரண்டுமே ஊழலில் திளைத்த கட்சி… சீமான் கடும் விமர்சனம்!

NTK Conference Seeman Speach: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே கட்சிதான் எனவும், இரண்டுமே ஊழலில் திளைத்த கட்சி தான் என்று திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

ஆதரவாளருக்கு சீட் கேட்ட ஓபிஎஸ்? மு.க.ஸ்டாலின் கூறிய பதில்.. ஏமாற்றத்தில் பன்னீர் செல்வம் எடுத்த முடிவு!

O Panneerselvam : திராவிட முன்னேற்ற கழகத்தில் தனது ஆதரவாளர்கள் 4 பேருக்கு ஓ. பன்னீர் செல்வம் சீட் கேட்டதாகவும், அதற்கு மு. க. ஸ்டாலின் அளித்த பதிலால் அவர் ஏமாற்றம் அடைந்து முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தொகுதி பங்கீடு பேச்சு.. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்.. முதல்வர் பிறந்தநாளில் பட்டியல் வெளியீடு!

DMK Alliance Seat Sharing Talks: திமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் வழங்கப்பட உள்ளன என்பது தீர்மானிக்கப்பட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

MK Stalin : மதுரையில் திமுக பாக முகவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ். அவரைப் போல நாங்கள் கோழைகள் அல்ல என்றார்.

காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள்.. திமுக ஒதுக்க இருக்கும் தொகுதிகள்.. முழு விவரம் இதோ!

DMK Congress Allaince: திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் 28 தொகுதிகளை மட்டுமே திமுக தலைமை வழங்க உள்ளதாகவும், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் இதே கருத்தை முன்வைத்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திமுக களமிறக்கிய 7 பேர் குழு… நாளை முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. யார் யார் இடம் பெற்றுள்ளனர்!

DMK Seat Sharing Committee : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் அமைத்து உத்தரவிட்டுள்ளார் .

மதுரையில் நடைபெறும் திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு.. சிறப்புரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்..

தென் மண்டல திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு இன்று மாலை 5 மணி அளவில் மதுரை உத்தங்குடியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தென் மண்டலங்களைச் சேர்ந்த 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் முகவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் நபர்களுக்காக இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதி, மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திமுகவிடம் 10+1 தொகுதிக்கான பட்டியலை அளித்த தேமுதிக… எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!

DMDK Requests Assembly Seats: திராவிட முன்னேற்ற கழகத்திடம் 10 சட்டமன்ற தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களையும் தே மு தி க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த கேட்டுள்ளதாகவும், அது தொடர்பான பட்டியலை சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“நிறைவேறிய விஜயகாந்த் விருப்பம்”..நெகிழ்ந்த பிரேமலதா.. பெரு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்..

Dmdk joined in dmk alliance: முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மகிழ்ச்சியுடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். விஜயகாந்த் இருந்தபோதே 2016ல் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைய வேண்டியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜயகாந்த் விருப்பம் நிறைவேறியுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய-மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும்… உயர்நிலைக் குழுவின் 11 முக்கிய பரிந்துரைகள்!

Centre And State Govt Relationship : மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்ட குழு 11 முக்கிய பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

திமுக கூட்டணியில் தேமுதிக.. முதல்வருடன் பிரேமலதா சந்திப்பு

பிரேமலதா, தற்போது திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். இதையொட்டி, இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்தார். அதிமுக கூட்டணியில் வாக்குறுதி அளித்தபடி, எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தராததால் அக்கட்சி மீது பிரேமலதா அதிருப்தியில் இருந்து வந்தார்.

திமுக விருப்ப மனு நாளை முதல் விநியோகம்.. 23ம் தேதி முதல் வீடு, வீடாக பிராசாரம்.. பரபரக்கும் தேர்தல் களம்!!

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிப். 23 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' வீடு வீடாகப் பிரசாரத்தை சிறப்பாக நடத்திட வேண்டும் என மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாட்சி – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்..

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இன்று புதன்கிழமை 2- ஆவது நாள் கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை திமுக கொண்டுள்ளது. தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு நமக்கு ஆதரவாக மத்திய அரசு அமையவில்லை. எனவே, இருக்கும் அதிகாரத்தின் மூலமே சமூக நீதி, கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவற்றில் உட்கட்டமைப்பு வசதிகளில் முன்னேறி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாட்சி.. அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.. சட்டப்பேரவையில் முழங்கிய முதல்வர்!

Chief Minister M. K. Stalin : மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கொள்கையை நிலை நிறுத்த வேண்டும் என்றும் இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.