AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!

பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள். அதெல்லாம் இருக்கிறது. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலத்தின் கட்டாயம் – தவெகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெகவிற்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி.. தவெக எம்.எல்.ஏக்கள் 107 பேர் ராஜினாமா செய்ய திட்டம்? என்ன நடக்கிறது?

நேற்றைய தினம் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்தனியாக தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டன. இதில், இரண்டு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் சூசகமாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, கட்சியின் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக எம்.எல்.ஏக்களுக்கு மு.க ஸ்டாலின் போட்ட உத்தரவு..

திமுக சட்டமன்ற எம்எல்ஏகளை சந்தித்து அக்கட்சியின் தலைவர்  மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,  சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. என்ன முடிவு எடுத்தாலும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும். மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பேசியுள்ளார். மேலும் மே 10, 2026 வரை எம்எல்ஏகளை சென்னையில் தங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

என்ன முடிவு எடுத்தாலும்.. – திமுக எம்எல்ஏகளை சென்னையில் தங்க ஸ்டாலின் உத்தரவு

சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. என்ன முடிவு எடுத்தாலும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும். மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பேசியுள்ளார். மேலும் மே 10, 2026 வரை எம்எல்ஏகளை சென்னையில் தங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

தவெகவுக்கு மேலும் சிக்கல்? – அடுத்தடுத்து எம்எல்ஏகளை சந்திக்கும் திமுக, அதிமுக தலைவர்கள்

DMK, AIADMK Hold Key MLA Meetings : தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் ஆதரவு கோரி பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏகள் கூட்டம் அடுத்தடுத்து நடைபெறுவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்டாலின் தோல்வி எதிரொலி.. மனமுடைந்த திமுக தொண்டர் தற்கொலை; நிர்வாகி மாரடைப்பால் மரணம்!

Cuddalore Crime: தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ளமுடியாத அந்தக் கட்சியின் தொண்டர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேலத்தில் திமுக அவைத்தலைவர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் – மு.க ஸ்டாலின்..

தமிழக சட்டப்பேரவையில் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தற்போது வரை தமிழக வெற்றி கழகத்துக்கு 113 இடங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 6 இடங்கள் தேவைப்படுவதால், அக்கட்சியின் தலைவர் விஜய் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தோல்வியை தாங்காத இதயம்.. திமுக கிளைச் செயலர் அதிர்ச்சியில் மரணம்.. கடலூரில் சோக சம்பவம்!

DMK Member Dies: தமிழக சட்டமன்ற தேர்திலில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில், இதனால், அதிர்ச்சி அடைந்த திமுக கிளைச் செயலர் ஒருவர் வீட்டிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின்.. கதறி அழுத மக்களும் சேர் பாபுவும்..

கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு மற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மு க ஸ்டாலின் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சாலை வலம் சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் திமுகவின் திட்டங்களை கூறியதுடன், கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதை பார்த்த, மு. க. ஸ்டாலின் தொண்டர்களை ஆசுவாசப்படுத்தி அழ வேண்டாம் என்று தேற்றினார். மேலும், மு. க. ஸ்டாலின் உடன் சென்ற முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு கண்ணீர் விட்டு அழுதார்.

கொளத்தூர் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி.. கண்ணீர் மல்க தொண்டர்கள் – சேகர்பாபு அழுகை!

MK Stalin Thanked Kolathur People : தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில், அவர் சாலை வலமாக சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, திரண்டிருந்த தொண்டர்கள், பி.கே.சேகர் பாபு ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர்.

கொளத்தூர் தொகுதி பொறுப்பாளர்.. இதை தான் பார்த்துக்கொள்கிறேன் என்றீர்களா? சேகர்பாபு மீது கடுமையான நடவடிக்கை தேவை – முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன்..

முக்கியமாக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது தோல்வி, கட்சி தொண்டர்களுக்கு மட்டுமின்றி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

வறுத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்.. நீங்கள் இருக்க கவலை என்ன? மு.க ஸ்டாலின் உருக்கமான பதிவு..

கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி, நம்மை விட 17.43 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு 3.52 விழுக்காடு மட்டுமே. இதனால், தமிழ்நாட்டு மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கை வலிமையானது என நான் கருதுகிறேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்.. போலீஸ் பாதுகாப்புகள் வாபஸ்!!

இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் பொறுப்பு ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்றுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, அவர் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை அவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது.

2026 தேர்தல் களம்.. வீழ்ந்த திமுக கோட்டைகளும், அமைச்சர்களும்.. தவெகவின் வரலாற்று சாதனையும்..

இதேபோல், அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இங்கு முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் தவெக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் தாமோ.அன்பரசன் ஆலந்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.