MK Stalin
மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்.. ஒரு வாரம் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க திட்டம்..
CM MK Stain Kodaikanal Trip: வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளதால், ஒரு வார காலத்திற்கு கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். குடும்பத்தினருடன் ஒரு வாரம் அங்கு தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 25, 2026
- 08:29 am IST
திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. சொல்லப்பட்ட முக்கிய விஷயம்..
CM MK Stalin Meeting: தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்த இந்த வாக்குப்பதிவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.92 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.46 சதவீத வாக்குப்பதிவு இடம் பெற்றுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 24, 2026
- 15:39 pm IST
சட்டமன்ற தேர்தல்… ஜனநாயக கடமை ஆற்றிய அரசியல் தலைவர்கள்!
Tamilnadu Assembly Election : தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அந்த கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் தொகுதிக்குள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர் .
- Gowtham Kannan
- Updated on: Apr 23, 2026
- 10:43 am IST
நாளை வாக்குப்பதிவு.. மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்..
திருவாரூரில் தொடங்கிய தனது தேர்தல் பிரச்சாரம், கொளத்தூர் தொகுதியில் நிறைவடைந்ததாகவும், மாநிலம் முழுவதும் மக்கள் நேரடியாக சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். “விடியல் பயணம்”, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”, “காலை உணவுத் திட்டம்”, “நான் முதல்வன்” உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 22, 2026
- 14:59 pm IST
“வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனமாக இருங்கள்”.. தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்..
Tamilnadu Assembly Election: மே 4ம் தேதி, இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை நமது தேர்தல் பணி தொடர வேண்டும். நமது தலைவர், கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பல நாட்களாகப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இந்த கடும் உழைப்பின் பயனை, மகத்தான தேர்தல் வெற்றியாக நாம் அறுவடை செய்திட வேண்டும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 22, 2026
- 07:34 am IST
பிரச்சாரத்தின் கடைசி நாள்.. பிரமாண்ட ரோடு ஷோ நடத்திய முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான மு.க. ஸ்டாலின், மாநில சட்டமன்றத் தேர்தல்களையொட்டி இன்று அதாவது 2026 ஏப்ரல் 21ம் தேதி தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வில்லிவாக்கத்தில் ஒரு ரோடு ஷோ நடத்தினார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 21, 2026
- 20:21 pm IST
கொளத்தூர் வராமல் என்னால் இருக்க முடியாது – முதல்வர் ஸ்டாலின்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நம்முடைய கொளத்தூர் தொகுதி என்னுடைய செல்லக் குழந்தை. பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்தப் பண்டிகையாக இருந்தாலும், நான் உங்களுடன் தான் கொண்டாடி வருகிறேன். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்றாலும், 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூர் வராமல் என்னால் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த தொகுதிக்காக தொடர்ந்து பணிகளை செய்து கொண்டிருக்கிறேன் என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 20:20 pm IST
கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை.. நான் செய்த திட்டங்கள் எனக்காக ஓட்டுக்கேட்கும் – முதல்வர் ஸ்டாலின்..
கொளத்தூர் தொகுதியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “என்னதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நான் முதலமைச்சராக இருந்தாலும், சென்னை எனக்கு நான் பாசமாக வளர்த்த குழந்தை போன்றது. ஏனெனில் நான் அந்த அளவிற்கு உங்களோடு ஒன்றிணைந்தவன். அது மட்டுமல்ல, சென்னைக்கு மாநகரத் தந்தையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான்” என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 19:59 pm IST
“சொந்தமாக கார் கூட இல்லையா?”.. முதல்வரின் சொத்து விவரம் குறித்து காளியம்மாள் கடும் விமர்சனம்!!
Tamilnadu Assembly Election: திமுக ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காளியம்மாள் குற்றம் சாட்டினார். குறிப்பாக அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம். ஆடு, மாடு வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை. தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் மகப்பேறு உதவித்தொகை. பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிவழங்கும் திட்டம்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 21, 2026
- 12:50 pm IST
“தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
Tamilnadu Assembly Election: "திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. அதே சமயம், சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுத்துத் துணை நிற்பதும் திமுகதான். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது என்பதை வரலாறு சொல்லும்" என்றார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 21, 2026
- 10:14 am IST
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..
வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதால், நான் கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த நிலையில், வருமான வரித்துறையினர் என்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் இருக்குமாறு முடக்கி வைத்துள்ளனர்,” என தெரிவித்துள்ளார் இதுபோல், மு.க. அழகிரி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 20, 2026
- 12:08 pm IST
கருத்துக்கணிப்புகள், மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்.. படைப்போம் வரலாறு – முதல்வர் ஸ்டாலின்..
CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தினமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலை நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்; மாலை நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 20, 2026
- 09:31 am IST
திமுக கூட்டணிக்கு ஆதரவாக மல்லிகார்ஜூன கார்கே பரப்புரை!
Mallikarjun Kharge Campaign : தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார் கே ஓசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் .
- Gowtham Kannan
- Updated on: Apr 19, 2026
- 19:52 pm IST
“சென்னை சூப்பர் 6” தலைநகரை உலக தரத்திற்கு மாற்றும் முக்கிய வாக்குறுதிகள்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியீடு!
DMK Election Promises: சென்னையில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு முதல் அதிக வருமானம் தரத்கூடிய வேலை வாய்ப்புகள் வரை பல்வேறு அதிரடி தேர்தல் வாக்குறுதிகளா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவை என்ன என்பதை பார்க்கலாம்.
- Gowtham Kannan
- Updated on: Apr 19, 2026
- 14:33 pm IST
கடந்த 5 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பலனை அனுபவிக்கிறார்கள் – பிரதமர் மோடி விமர்சனம்..
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சில நாட்களுக்கு முன்னர் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதை பயன்படுத்தி அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள். புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, திமுகவின் வெளியேற்றம் என்ற தெளிவான செய்தியை மக்கள் தெரிவிக்கிறார்கள்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 18, 2026
- 20:13 pm IST