
MK Stalin
மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.
” 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாய் தவற விட்டீர்களே” – எடப்பாடி பழனிசாமி பேச்சு..
Edappadi Palnisamy Campaign: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் மனநிறைவு அடையும் வரையில் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாயை தவிற விட்டீர்களே என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 12, 2025
- 06:41 am
வீடுதேடி ரேஷன் பொருட்கள்… எப்போது முதல் தொடக்கம்..? வெளியான அறிவிப்பு
Free Home Ration Delivery in Tamil Nadu: தமிழக அரசு 2025 ஆகஸ்ட் 15 முதல் மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 16 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 10 மாவட்டங்களில் வெற்றிகரமாகச் சோதனை நடத்தப்பட்டது.
- Sivasankari Bose
- Updated on: Jul 11, 2025
- 11:25 am
கோயில் நிதியை கல்லூரிக்கு செலவு செய்வதில் என்ன தவறு.. அறநிலை கல்லூரி விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கருத்து..
MP Karti P Chidambaram: அறநிலை கல்லூரி விவகாரம் தற்போது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையில், கோயில் நிதியில் இருந்து கல்லூரிக்கு செலவு செய்வது தவறில்லை, சொல்லப்போனால் கல்லூரிகளுக்கு தான் கோயிலை விட அதிக செலவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 11, 2025
- 08:09 am
முதலமைச்சர் ஸ்டாலினின் திருவாரூர் பயணம்.. இரண்டாம் நாள் திட்டம் என்ன?
TN CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். இரண்டாம் நாளான இன்று (ஜூலை 10, 2025) அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார், அதே போல் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 10, 2025
- 07:20 am
கோட்சே கூட்டம் செல்லும் பாதைக்குச் செல்லாதீர்கள் – மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Stalin Urges Students to Shun Extremism: திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் 75வது ஆண்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களை கோட்சே போன்ற பிரிவினைவாதிகளின் பாதையைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். அறிவியல் சிந்தனை, பகுத்தறிவு, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
- Sivasankari Bose
- Updated on: Jul 9, 2025
- 15:01 pm
Annamalai: முழுவதும் விளம்பரம்! மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை.. விடுதி பெயர் மாற்றம் குறித்து அண்ணாமலை விமர்சனம்!
Social Justice Hostels: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி விடுதிகளும் 'சமூக நீதி விடுதிகள்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை, விடுதிகளின் மோசமான நிலை, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் படி குறைவு எனவும், அரசின் விளம்பர செலவு அதிகம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Jul 7, 2025
- 14:55 pm
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, சமூகநீதி பெயரை பயன்படுத்துவதா? – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்
Anbumani Ramadoss: பள்ளி கல்லூரி விடுதிகள் சமூகநீதி விடுதிகள் என அழைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு சமூகநீதியை படுகொலை செய்து, விடுதிகளுக்கு சமூக நீதி பெயர் வைப்பதா என கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 7, 2025
- 12:37 pm
பள்ளி கல்லூரி விடுதிகள்.. இனி சமூகநீதி விடுதிகள் என அழைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்
CM MK Stalin: அரசு தரப்பில் பள்ளி கல்லூரிகளில் இருக்கும் விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது தவிர மாணவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும் அதில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 7, 2025
- 16:50 pm
வீடு தேடி அரசு சேவைகள்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..
Ungaludan Stalin Scheme: வீடு தேடி அரசு திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 2025, ஜூலை 15 ஆம் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 6, 2025
- 09:09 am
Tamil Nadu CM MK Stalin: மகாராஷ்டிராவில் கிளம்பிய இந்தி எதிர்ப்பு.. முதல் ஆளாக ஆதரவை தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
Maharashtra Scraps Hindi Imposition: மகாராஷ்டிராவில் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அம்மாநில அரசு அந்தக் கொள்கையை ரத்து செய்துள்ளது. இந்தித் திணிப்புக்கு எதிரான மகாராஷ்டிராவின் போராட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தமிழ் மொழி உரிமைப் போராட்டத்தின் வெற்றி என பலரும் கருதுகின்றனர்.
- Mukesh Kannan
- Updated on: Jul 5, 2025
- 19:01 pm
மக்களின் தேவை அறிந்து செயல்படுகிறேன் – முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னையில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் கேலி செய்தவற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசினார். மேலும் மக்களுக்கு தொண்டு செய்வதே என் பணி என திருநாவுக்கரசின் வார்த்தைகளையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 2, 2025
- 15:42 pm
சேகர்பாபு, புயல்பாபுவாக செயல்படுகிறார்.. சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாமலைபுரத்தில் 32 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறையின் சாதனைகளைப் பற்றிப் பேசிய அவர், 4 ஆண்டுகளில் 1800 திருமணங்கள் நடத்தப்பட்டதாகவும், 3107 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகவும் சாதனைகளை பட்டியலிட்டார்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 2, 2025
- 11:20 am
Sivagangai Custodial Death: சிவகங்கை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. அஜித் குமார் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
Tamil Nadu CM MK Stalin Apology: சிவகங்கையில் காவல் காவலில் இறந்த அஜித் குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறவினர்கள் போலீஸ் சித்திரவதையே காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அஜித் குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Jul 1, 2025
- 21:20 pm
சிவகங்கை சம்பவம்.. தகவல் தெரிந்ததும் ஆக்ஷன்.. முதலமைச்சர் விளக்கம்
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் திமுகவின் திட்டம் என்ன என்பது பற்றியும் விளக்கம் கொடுத்தார்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 1, 2025
- 15:26 pm
திமுகவின் ‘ஒரே அணியில் தமிழ்நாடு’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
One Nation, One Voice: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்த 45 நாள் இயக்கம், திமுகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மத்திய அரசுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jul 1, 2025
- 13:25 pm