Narendra Modi
குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.
80வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி!!
80th Independence Day 2026: இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகத் தொடங்கியது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் முதன்முறையாக தேசியப் பாடல் அதிகாரப்பூர்வமாகப் பாடப்பட்டது. 25,000 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் AI கண்காணிப்பு கேமராக்கள் சூழ பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 15, 2026
- 09:33 am IST
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை ..மரபுச் சின்னம் என பிரதமர் மோடி புகழாரம்
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கைப் பயணமும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் முக்கியமானவை என்று பிரதமர் மோடி கூறினார். நான் விரிவாகப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், இந்தப் புத்தக வெளியீடு ஒரு முன்னோட்டமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்
- C Murugadoss
- Updated on: Aug 12, 2026
- 10:39 am IST
சாதித்த இந்தியர்கள்.. காமன்வெல்த் பதக்கம் வென்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி
டோக்கியோ ஒலிம்பிக்காக இருந்தாலும் சரி, கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிகளாக இருந்தாலும் சரி, நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தனது இல்லத்திற்கு அழைத்து வரவேற்றுள்ளார். அந்த வகையில் காமன்வெல்த் வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்தார்
- C Murugadoss
- Updated on: Aug 10, 2026
- 11:43 am IST
பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்த அமெரிக்க துணை அதிபர்.. நடந்த ஆலோசனை என்ன?
PM Narendra Modi: அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்தார், இந்த அழைப்பு குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, "முக்கியமான துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம்," என்று கூறியுள்ளார்
- C Murugadoss
- Updated on: Aug 9, 2026
- 07:24 am IST
தேசிய கைத்தறி தினம்.. கைத்தறி ஆடைகள் அணிந்து வீடியோவை பகிர பிரதமர் மோடி வலியுறுத்தல்..
மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 12வது தேசிய கைத்தறி தின விழாவை இன்று நடத்துகிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிலவி வரும் கைத்தறி பாரம்பரியத்தை பாதுகாத்து, ஊக்குவித்து, மேலும் வலுப்படுத்தும் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 7, 2026
- 07:44 am IST
பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் முதல் CSAM வரை… மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா!
சட்டவிரோதமான பல்வேறு உள்ளடக்கங்கள் தங்களது தளங்களில் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டதை மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும், குறிப்பிட்ட இலக்கு பயனர்களை அடையும் வகையில் கட்டண அடிப்படையிலான புரமோஷன்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூடுதல் விளக்கம் பெற மெட்டா அதிகாரிகள் மீண்டும் ஆஜராக அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 6, 2026
- 10:08 am IST
பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் – மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்
பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கிய விவகாரம் தொடர்பாக, மத்திய அரசின் அழைப்பின் பேரில் மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தது. இந்த விவகாரம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தவறுகளுக்காக மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Karthikeyan S
- Updated on: Aug 5, 2026
- 19:15 pm IST
ஆந்திராவில் ரூ.17,912 கோடி வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் அமைந்துள்ள அல்லூரி சீதாராமராஜு சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 1) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 1, 2026
- 12:32 pm IST
ஜந்தர் மந்தர் சர்ச்சை: “வழிதவறிய இளைஞர்களுக்கு சரியான பாதை காட்ட வேண்டும்” – பிரதமர் மோடி..
இளமையில் தவறுகள் நடப்பது இயல்புதான். அதே இளமைதான் அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. சமூகத்தில் கோபம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அந்த இளைஞர்களை தண்டிப்பதோ, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்வதோ, அவர்களை துன்புறுத்துவதோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் வழிதவறிய இளைஞர்கள். அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவது நமது கடமை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 1, 2026
- 09:52 am IST
தேர்வு வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை… புதிய சட்ட மசோதாவை வரவேற்று பிரதமர் மோடி வீடியோ வெளியீடு!
கேள்வித்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் அமர்வு நீதிமன்றங்களை சிறப்பு விரைவு நீதிமன்றங்களாக அறிவிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வழக்குகளை முடிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 31, 2026
- 09:03 am IST
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு – பிரதமர் மோடி முக்கிய உத்தரவு
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
- Karthikeyan S
- Updated on: Jul 30, 2026
- 19:55 pm IST
பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம்.. மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு
பிரதமரின் அதிகாரப்பூர்வ பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்திருந்தாலும், இந்தச் சம்பவத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கொள்கைத் தலைவரிடம் நேரடி விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 28, 2026
- 16:20 pm IST
மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது…. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை என்ற ஒன்றிய அமைச்சர் ராஜ் பூசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் மேகதாது அணைக்கு எந்த அனுமதியும் தரக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
- Karthikeyan S
- Updated on: Jul 28, 2026
- 13:44 pm IST
களமிறங்கும் டாஸ்க் போர்ஸ்.. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடியின் முக்கிய முடிவு.. குழுவில் இருப்பது யார் யார்?
PM Narendra Modi : வினாத்தாள் கசிவுப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றொரு காணொளியை வெளியிட்டுள்ளார். , தேர்வு மேலாண்மை அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக, புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனருமான நந்தன் நிலேகனி தலைமையில் மத்திய அரசு ஒரு உயர்மட்டப் பணிக்குழுவை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
- C Murugadoss
- Updated on: Jul 27, 2026
- 08:37 am IST
வினாத்தாள் கசிவுக்கு முடிவு கட்டும் புதிய சட்டத்திருத்தம்.. ரூ.10 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை.. நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!
Public Examinations Amendment Bill: தேசிய போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்ட முறைகேடுகளைத் தடுக்க, குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்யும் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 27, 2026
- 07:38 am IST