Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Narendra Modi

Narendra Modi

குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.

Read More

Narendra Modi : அடுத்து வாரம் பிரேசில் செல்லும் பிரதமர் மோடி?.. மேலும் 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

PM Narendra Modi Visit to Brazil | இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரேசிலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்று அவர் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர் மேலும் 4 நாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Narendra Modi : அரசின் திட்டங்களில் தாமதம் கூடாது.. தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

48th Pragati Meeting Chaired By PM Modi | இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 48வது பிரகதி கூட்டம் நேற்று (ஜூன் 25, 2025) டெல்லியில் நடைபெற்றது. இதில் முக்கிய விவகாரங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

‘140 கோடி மக்களின் நம்பிக்கை’ விண்வெளி பயணத்தை துவங்கிய சுபான்ஷு சுக்லா.. வாழ்த்திய பிரதமர் மோடி!

AXIOM 4 Mission Astronaut shubhanshu shukla : விண்வெளி பயணத்தை தொடங்கிய இந்திய வீரர் சுபாஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும், விண்வெளி பயணத்தை தொடங்கியபோது சுபாஷு சுக்லா முக்கிய மெசேஜை பகிர்ந்துள்ளார்.

PM Modi on Emergency: இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயம்.. எமர்ஜென்சியை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

50 Years of Emergency: 1975 ஜூன் 25ம் தேதி அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மோடி காங்கிரஸின் செயல்பாடுகளை கண்டித்துள்ளார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் எனக் குறிப்பிட்ட அவர், அடிப்படை உரிமைகள் பறிப்பு, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் அனுபவம் தனக்குக் கற்றுத் தந்த பாடங்களை பகிர்ந்துகொண்ட அவர், இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்தியா – மொரிஷியஸ் உறவை மேம்படுத்த திட்டம்.. தொலைப்பேசியில் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமிடம் பேசிய பிரதமர் மோடி..

PM Narendra Modi: மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக உறையாற்றினார். அப்போது இரு நாட்களுக்கும் இடையே இருக்கக்கூடிய உறவை வலுப்படுத்தும் விதமாக பல் துறை முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மா விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

TN CM M.K. Stalin Letter: மாம்பழம் விவசாயிகளின் நலனை காக்க சந்தை தேவையை ஏற்படுத்த போதிய நடவடிக்கை வேண்டும் என்றும் ஜி.எஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

’இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த ஆபரேஷன் சிந்தூர்’ பிரதமர் மோடி பேச்சு

PM Modi On Operation Sindoor : பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் அனைவருக்கும் தெளிவாகக் காட்டியது என்றும் இந்திய ரத்தத்தைச் சிந்தும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல்.. போன் போட்டு பேசிய பிரதமர் மோடி.. பின்னணி என்ன?

Israel Iran Conflict : இஸ்ரேல் ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் தற்போதை நிலை குறித்து அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். ஈரானில் நடந்து வரும் போர் குறித்த ஆழ்ந்த வருத்தங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

அமைதியான சமூகத்தை உருவாக்க யோகா மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் மோடி..

International Yoga Day: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, லட்சக்கணக்கான மக்களுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார், அதோடு யோகாவின் முக்கியத்துவத்தை குறித்து மக்களிடையே எடுத்துரைத்து, அனைவரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

International Yoga Day: சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி தலைமையில் கொண்டாட்டம்!

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ஆயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து யோகா செய்து இந்த தினத்தை கொண்டாடினார். இந்நிகழ்வில் ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

அமெரிக்கா செல்ல டிரம்பின் அழைப்பை ஏற்காதது ஏன்? பிரதமர் மோடி கொடுத்த விளக்கம்!

PM Modi on Donald Trump Invite to Visit US : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அழைப்பை ஏற்காதது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் டிரம்ப், அமெரிக்காவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை பிரதமர் மோடி நிராகரித்திருந்தார்.

பிரதமர் மோடியின் பீகார் பயணம்.. கினியா குடியரசிற்காக இந்தியாவில் தயார் செய்யப்பட்ட 150 ரயில் இன்ஜின்கள்..

PM Modi: இந்தியாவின், ” இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் சுமார் 150 அதிக குதிரை திறன் கொண்ட ரயில் இன்ஜின்களை கினியா குடியரசிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைப்பார்.

சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்.. நெகிழ்ச்சியுடன் சொன்ன பிரதமர் மோடி!

PM Modi Received Gift : குரோஷியா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததோடு, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் வரும் காலங்களில் இன்னும் வலுப்பெறக்கூடும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

குரோஷியாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர்.. பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

PM Modi Visit To Croatia: குரோஷியாவிற்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமராக, மோடி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட (IMEC) முயற்சியின் பின்னணியில் குரோஷியாவின் முக்கியத்துவம் அதிகமாக வெளிப்படுகிறது. அதேபோல், மேற்கு ஐரோப்பிய நுழைவாயில்களுக்கு மாற்று வழியை இந்தியாவிற்கு இது வழங்கும்.

மந்திர ஒலிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த குரோஷியா!

3 நாடுகள் சுற்றுப்பயணத்திட்டத்தின்படி சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். முதலில் சைப்ரஸ் சென்றடைந்த பின்னர் கனடா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்நிலையில் மூன்றாவது நாடாக இன்று குரோஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு மந்திர ஒலிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கி கலந்துரையாடினார்