Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Narendra Modi

Narendra Modi

குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.

Read More

10,000 மருத்துவ படிப்புக்கான கூடுதல் இடங்கள்.. மத்திய அரசு ஒப்புதல்..

Medical College Seats: இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 5,000 முதுகலை இடங்கள் மற்றும் 5,023 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி 2.0.. தமிழகத்திற்கு இத்தனை பலன்களா? வெளியான தகவல்கள்

GST Reforms : பிரதமர் மோடி அறிவித்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பால், தமிழகத்தில்  பல  நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களின் வருவாய் அதிகரிக்கக் கூடும்.

திரிபுரேஷ்வரி கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி.. மனமுருகி பிரார்த்தனை!

திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள திரிபுரேஷ்வரி கோயிலுக்கு இன்று அதாவது 2025 செப்டம்பர் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்து பிராத்தனை செய்தார். கோயிலுக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திரிபுரேஸ்வரி கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இது மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது.

அருணாச்சல பிரதேசம், திரிபுராவுக்கு செல்லும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன?

PM Modi: பிரதமர் மோடி, அருணாச்சலப் பிரதேசத்தில், இட்டாநகரில் ரூ. 3,700 கோடிக்கு மேல் மதிப்புள்ள இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் - ஹியோ நீர் மின் திட்டம் (240 மெகாவாட்) மற்றும் டாடோ-ஐ நீர் மின் திட்டம் (186 மெகாவாட்).

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும்.. மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..

PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேசுகையில், “ சிறு, குறு தொழில் மக்களைப் பற்றி பேசுகையில், “அவர்களுக்கு தேவையான பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை நுகர்வோரிடம் கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு பெற்ற இந்தியா.. பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் – பிரதமர் மோடி..

PM Modi: பிரதமர் மோடி, : “நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது. அதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளான நாளை, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி நாடு ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது” என பேசியுள்ளார்.

இபிஎஸ்ஸை ஏளனம் செய்யும் திமுக.. குற்றச்சாட்டை அடுக்கிய நயினார்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் கோவையில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முக்கியத்தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தினம் தினம் தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன பேசப்போகிறார்?

PM Modi Address To Nation : பிரதமர் மோடி 2025 செப்டம்பர் 21ஆம் தேதியான இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை (செப்டம்பர் 22) அமலாக உள்ள நிலையில், அதுகுறித்தும, அமெரிக்காவின் வரி விதிப்பு, எச்-1 விசா குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 34,200 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட பணிகள்.. குஜராத்தில் பிரதமர் மோடியின் திட்டம் என்ன?

PM Modi in Gujarat: பிரதமர் மோடி ரூபாய் 7,870 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கடல்சார் துறை தொடர்பான பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி இந்திரா கப்பல்துறையில் மும்பை சர்வதேச கப்பல் முனையத்தை திறந்து வைக்கிறார் .

PM Narendra Modi Fitness Secret: 75 வயதிலும் சுறுசுறுப்பு.. போகும் இடமெல்லாம் உற்சாகம்.. பிரதமர் மோடியின் உடற்தகுதி ரகசியம் என்ன..?

Prime Minister Narendra Modi's fitness: தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராகியுள்ள நரேந்திர மோடி, இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இளைஞர்கள் உள்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

Narendra Modi: அரசியல் வித்தகர்.. பிரதமர் மோடி வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்!

Happy Birthday PM Narendra Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வாட்நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த மோடி, ஆர்.எஸ்.எஸ். தொடர்பு, பாஜகவில் வளர்ச்சி, குஜராத் முதல்வராகப் பதவி ஏற்பு, மற்றும் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றது என அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகமளிப்பதாக உள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு இந்தியாவின் முதல் கிராமம் எழுதிய உருக்கமான கடிதம்!

Letter to PM Narendra Modi on His Birthday | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2025) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், இந்தியாவின் முதல் கிராமத்தில் இருந்து அவருக்கு உருக்கமான கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Narendra Modi : 75வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடி.. உலக தலைவர்கள் வாழ்த்து!

Prime Minister Narendra Modi's 75th Birthday | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2025) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா உடனான உறவை முறிக்க முடியாது.. அமெரிக்காவுக்கு ரஷ்யா திட்டவட்ட பதில்!

Russia About Relationship with India | இந்தியா, ரஷ்யாவுடன் உறவு வைத்திருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் இந்தியா உறவை கைவிடவில்லை. இந்த நிலையில் இந்தியா உடனான உறவை முறிக்க முடியாது என்று ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு திட்வட்டமாக தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் மராத்தான்.. கொடியசைத்து தொடங்கி வைத்த சாய்னா நேவால்!

வருகின்ற 2025 செப்டம்பர் 17ம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு முன்னதாக, ஒலிம்பிக் வீராங்கனையும் பாஜக தலைவருமான சாய்னா நேவால், முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயலுடன் இணைந்து, இன்று அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி யுவா மராத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.