AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Narendra Modi

Narendra Modi

குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.

Read More

மத்திய அமைச்சர்கள் வெயிட்டிங்.. இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தும் பிரதமர் மோடி

PM Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட உள்ளார். இக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள், சமீபத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

‘ரோமுக்கு நல்வரவு, நண்பரே’ – இத்தாலி சென்ற பிரதமர் மோடி.. செல்ஃபி வரவேற்பு கொடுத்த மெலோனி!

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக, செவ்வாய்க்கிழமை மாலை இத்தாலி சென்றடைந்தார். தலைநகரான ரோமில் அவர் வந்திறங்கியதும், அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலிய துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானி, விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார். அவரது வருகையின்போது இந்திய சமூகம் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டது.

3வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு!

3வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்று இருதரப்பு சந்திப்புகளை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "ஓஸ்லோவில் நடைபெற்ற 3வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்றேன். இது, நார்டிக் பிராந்தியத்துடனான இந்தியாவின் கூட்டாண்மையின் வளர்ந்து வரும் ஆழத்தையும் ஆற்றலையும் பிரதிபலித்தது. நிலைத்தன்மை, புதுமை, தூய்மையான ஆற்றல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அமைதியான, வளமான எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்களில் எங்கள் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. இந்தியாவும் நார்டிக் நாடுகளும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், நம்பிக்கை மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ளன," என்றார்.

‘இந்தியாவின் பொருளாதார டிஎன்ஏ மாறிவிட்டது’ – நார்வே வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சு

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார அடிப்படைக்கூறு முற்றிலும் மாறிவிட்டது என்று பிரதமர் மோடி நார்வே வணிகத் தலைவர்களிடம் கூறினார். வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்கள் போன்ற துறைகளில் நாடு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, வணிகம் செய்வதை இந்தியா எளிதாக்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

நார்வே சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..

பிரதமர் மோடி தனது ஐரோப்பிய தூதரக பயணத்தின் ஒரு பகுதியாக ஒஸ்லோ நகருக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு நோர்வேயில் வாழும் இந்தியர்கள் சார்பில் பிரம்மாண்டமான கலாச்சார வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒஸ்லோவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய பாரம்பரிய இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் உற்சாக முழக்கங்களுடன் பிரதமர் மோடி  வரவேற்கப்பட்டார். பாரம்பரிய இந்திய உடைகளில் அலங்கரித்திருந்த குழந்தைகள் கலாச்சார நடனங்களை நிகழ்த்தி, மலர்கள் வழங்கி, தேசபற்று முழக்கங்களுடன் பிரதமரை வரவேற்றனர்.

இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் ஒரு லட்சிய இலக்கு – ஸ்வீடன் பயணம் குறித்து பதிவிட்ட பிரதமர் மோடி

PM Modi : ஸ்வீடன் பயணத்தில், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலமைப்பு என்று பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (AI), நிதித் தொழில்நுட்பம் (fintech), விண்வெளி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் உள்கட்டமைப்பு எவ்வாறு உலகிற்குத் தீர்வுகளை உருவாக்கி வருகிறது என்பதை எடுத்துரைத்தார்.

இந்தியாவுக்கே பெருமை.. பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்’!

PM Modi Receives Sweden Highest Honor : ஸ்வீடன் அரசாங்கம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்' விருதை வழங்கி கௌரவித்துள்ளது. பல்வேறு நாடுகள் மற்றும் உலகளாவிய அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 31வது சர்வதேச விருது இதுவாகும்.

நாகப்பட்டினம் வரலாறு.. நெதர்லாந்து டூ இந்தியா வரும் சோழர்கால செப்பேடுகள்.. அண்ணாமலை சொன்ன விளக்கம்!

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 21 செப்புப் பட்டயங்களும் காலப்போக்கில் நெதர்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற 'லைடன் பல்கலைக்கழகத்தில்' யாரோ கொண்டு போய் வைத்துவிட்டனர். பல ஆண்டுகளாக அங்கேயே முடங்கிக் கிடந்த நமது சரித்திரப் பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து போராடினார்.

டிஜிட்டல் உலகத்தின் தேவை.. இந்தியாவில் செமி கண்டக்டர் ஆலை.. நெதர்லாந்தில் பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம்

Semiconductor Plant : பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் மற்றும் கனிமங்கள் மட்டுமின்றி, புத்தாக்க ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன. இந்தப் பயணத்தின் போது செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பாக ஒரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டது.

முதல்வராக முதல் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஜோசப் விஜய்.. நேரம் ஒதுக்க கோரிக்கை!

CM Joseph Vijay Meet PM Modi : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சந்திப்பதற்கு முதல்வர் அலுவலகம் சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 20- ஆம் தேதிக்கு மேல் இந்த சந்திப்பு நிகழும் என தெரிகிறது.

பிரதமர் மோடியின் 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணம்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடக்கம்.. முக்கியத்துவம் என்ன?

PM Modi Five Nation Tour : பிரதமர் மோடி இன்று முதல் ஐந்து நாடுகளுக்கான முக்கியப் பயணத்தைத் தொடங்குகிறார். உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இந்தப் பயணம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின் போது, ​​எல்பிஜி விநியோகம் மற்றும் பெட்ரோலிய இருப்புக்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் ஐரோப்பா சுற்றுப்பயணம்… இந்தியாவிற்கு 70 பில்லியன் டாலர் வர்த்தக வாய்ப்பு?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 15, 2026 அன்று ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில் இந்த பயணத்தில் இந்தியாவுக்கு 70 பில்லியன் டாலர் வர்த்தக வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு.. என்ன காரணம்!

Prime Minister Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் 2- ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிப்பதுடன், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கினார்.

எரிசக்தி நெருக்கடி.. தள்ளாடும் உலக நாடுகள்… சமாளிக்கும் இந்தியா.. உலகநாடுகளின் நிலைமை இதுதான்!

Big changes in world to over come fuel crisis : பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலகம் தற்போது ஒரு பெரும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு, பல நாடுகளில் பணவீக்கம் உயர்வதற்கும், விமானப் பயணங்கள் குறைவதற்கும் வழிவகுக்கிறது.

Pm Modi : ஐக்கிய அரபு அமீரகம் முதல் ஐரோப்பா வரை… பிரதமர் மோடியின் 5 நாடுகள் பயணம் முழு விவரம்!

பிரதமர் மோடி 2026 மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு வழக்கமான வெளிநாட்டுப் பயணம் மட்டுமல்ல, வேகமாக மாறிவரும் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியில் இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகும்.