AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Narendra Modi

Narendra Modi

குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.

Read More

நெருங்கும் தேர்தல்.. சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்..

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி.. சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை..

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, புதுச்சேரி முழுவதும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சாலைப் பயணம் மேற்கொண்ட பிரதமருக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி வருகை.. ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார்.. உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை, புதுச்சேரி!!

PM Narendra Modi Arrives Chennai and Puducherry: சென்னை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை மற்றும் சிறப்புப் பிரிவினரும் அடங்குவர். சென்னை விமான நிலையம் மற்றும் அவர் தங்கும் கிண்டி நட்சத்திர விடுதி ஆகிய பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி சென்னை வருகை.. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார்.. முக்கிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!!

PM Modi's Visit to Chennai: மயிலாப்பூர் மற்றும் தி.நகர் பகுதிகளில் ரோடு ஷோ அல்லது வாகனப் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் வருகையையொட்டிச் சென்னையின் முக்கியச் சாலைகளான ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை மற்றும் கிண்டி பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்?.. வெளியான முக்கிய தகவல்!

PM Modi To Conduct Election Campaign In Chennai | பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 04, 2026 அன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உடன் இணைந்து பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ள நிலையில், பிரதமர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

‘இந்தியாவில் போதுமான எரிபொருள் உள்ளது, கவலைப்படத் தேவையில்லை’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!

PM Modi on 132nd Mann ki Baat: தற்போதைய காலம், சந்தேகத்திற்கு இடமின்றி, சவால்கள் நிறைந்த ஒன்றாகவே உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இன்று, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி வாயிலாக, இந்தச் சவாலை வெற்றிகரமாகக் கடக்க அனைத்துக் குடிமக்களும் ஒன்றிணையுமாறு அவர் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்தார்.

மேற்கு ஆசியாவில் பதற்றம் – மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

Govt Assures Protection: மேற்கு ஆசியா பகுதிகளில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்து வருவதால், அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேற்கு ஆசியா போர் குறித்து ஆலோசித்த பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப்.. எலாஸ் மஸ்க் இருந்தாரா? வெளியான தகவல்

PM Modi : மேற்கு ஆசியா போர் சற்று தணிந்து காணப்பட்டாலும் உலகத்தலைவர்கள் அது குறித்தான ஆலோசனையில் ஈடுபட்டே வருகின்றனர். இந்நிலையில் மேற்கு ஆசியா போர் குறித்து பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஆலோசனை நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றம் – முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை கூட்டம்

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தயார்நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார் இந்த கூட்டம் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ராம் லல்லா நெற்றியில் ஜொலித்த ‘சூரிய திலகம்’.. நேரலையில் கண்டு ரசித்த பிரதமர் மோடி!!

Ram Navami 2026: இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, நண்பகல் சரியாக 12:00 மணிக்கு சூரிய திலகச் சடங்கு நடைபெற்றது. நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சூரிய ஒளியானது நேரடியாகக் கருவறையில் உள்ள 'ராம் லல்லா' சிலையின் நெற்றியில் விழுமாறு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை..

மத்திய கிழக்கு மோதல் பின்னணியில், முதல்வர்களுடன் நாளை பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. வளைகுடா பகுதிகளில் நிலைமை மேலும் பதற்றமாகியுள்ளது. இந்த போரின் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக, எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் குறைந்ததால் பல நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் எரிவாயு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

தேஜ கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம்.. பிரம்மாண்ட ரோடு ஷோ.. பக்கா பிளானுடன் புதுச்சேரி வரும் பிரதமர் மோடி!

PM Modi Visit Puducherry : பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3- ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்துக்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் தொலைப்பேசி உரையாடல்..

பிரிட்டிஷ் நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, பாகிஸ்தான், ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய முயற்சித்து வருகிறது. ஆனால், இந்தச் செய்தி வெளியாகிய சில மணி நேரங்களிலேயே அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் நேரடியாக பேசியது குறிப்பிடத்தக்கது. மேற்கு ஆசிய நெருக்கடியைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்ற நம்பிக்கையை அமெரிக்கா வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு நாளில் அரசு எத்தனை கிமீ நெடுஞ்சாலை அமைக்கிறது? WITT மாநாட்டில் விவரம் சொன்ன பிரதமர் மோடி

WITT Summit 2026 : TV9 நெட்வொர்க்கின் பிரம்மாண்ட மேடையான WITT உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டன, ஆனால் ஒரு நாளைக்கு 11 முதல் 12 கிலோமீட்டர் என்ற வேகத்தில்தான். இருப்பினும், இன்றைய நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கட்டுமானத்தின் வேகமும் மாறிவிட்டது," என்று கூறினார்.

‘நாம் அமைதிக்கே ஆதரவு’.. WITT உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

PM Modi : WITT உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், இந்தியாவையும் இந்திய மக்களையும் சோதிக்காத ஓர் ஆண்டு கூட கடந்து செல்லவில்லை. இருப்பினும், 140 கோடி குடிமக்களின் ஒன்றுபட்ட முயற்சிகளால், இந்தியா ஒவ்வொரு நெருக்கடியையும் வெற்றிகரமாகக் கடந்துள்ளது," என்று கூறினார்.