Narendra Modi
குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.
ராஜஸ்தான், குஜராத்தில் ரூ.1.13 லட்சம் கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
Pm Modi: ராஜஸ்தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலத்திற்கான 530 கிலோமீட்டர் நீள மின் பரிமாற்ற அமைப்பிற்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், ராஜஸ்தான் அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 54 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் பிரதமர் வழங்குகிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 4, 2026
- 09:14 am IST
சந்தூர் இசைத்து அசத்திய ஜப்பான் பிரதமர்.. இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ..
இந்திய - ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பிரதமர் தகாய்ச்சிக்கு மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக விருப்பம் இருப்பதாக அறிந்தேன். இந்தியாவில் தயாரிக்கப்படும் யமஹா, கவாசாகி, ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜப்பானின் தொழில்நுட்ப திறனும், இந்தியாவின் வேகமும், உற்பத்தித் திறனும் இணையும் போது உலகமே பயனடையும்" என்று தெரிவித்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 3, 2026
- 10:10 am IST
125 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்.. விதிகளில் மாற்றம் கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
கடிதத்தில், புதிய திட்டத்தின் தற்போதைய நிதிப் பகிர்வு முறை தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 கோடிக்கும் அதிகமான கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு ஒன்றிய-மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் செலவிட வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 1, 2026
- 20:20 pm IST
மொரிஷியஸ் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி.. கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசனை!
செஷல்ஸ் தீவுகளுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, மொரிஷியப் பிரதமர் நவின்சந்திர ராம்கூலாமையும் சந்தித்தார். இரு தலைவர்களும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனர். நவம்பர் 2024-ல் பிரதமர் பதவியேற்றதிலிருந்து, பிரதமர் ராம்கூலாமை பிரதமர் மோடி சந்திப்பது இது நான்காவது முறையாகும்
- C Murugadoss
- Updated on: Jun 29, 2026
- 07:24 am IST
பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவுக்கு முதலிடம் – பிரதமர் பெருமிதம்
மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சார்ந்த வெற்றிகளைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்: 2026 ஆம் ஆண்டின் முதல் பாதி நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த ஆறு மாதங்களில், நமது குடிமக்களின் பல சாதனைகள் குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும், நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பல சாதனைகளை நம் குடிமக்கள் புரிந்துள்ளனர்.
- Karthikeyan S
- Updated on: Jun 28, 2026
- 14:40 pm IST
“சுயசார்பு பாரதமே நமது இலக்கு!”.. 135-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!
இந்தியாவை உலக அரங்கில் ஒரு வலிமையான, சுயசார்பு கொண்ட நாடாக மாற்றுவதில் நாட்டின் இளைஞர்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதிலும், உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதிலும் இந்தியா அடைந்து வரும் அபரிமிதமான முன்னேற்றங்கள் குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 28, 2026
- 11:41 am IST
“டீ கடையில் பணிபுரிந்தவர் பிரதமர்.. நல்ல நடிக்க தெரிஞ்ச நடிகர் முதல்வர்”.. இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.. ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் நெகிழ்ச்சி!!
அவர் பேசுகையில், "வெளிநாடுகளான துபாய் போன்ற நாடுகளுக்கோ அல்லது ரஷ்யா போன்ற தேசங்களுக்கோ சென்று நாம் நேரடியாக அரசியல் களத்தில் நின்று அங்குத் தலைவராகவோ அல்லது அதிபராகவோ மாறிவிட முடியாது. அங்கு ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே ஆட்சி என்ற அதிகார மைய நிலைதான் நடைமுறையில் உள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 26, 2026
- 07:35 am IST
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்… முதல்வர் விஜய் குறிப்பிட்ட அந்த வார்த்தை.. ஏன் இந்த திடீர் மாற்றம்!
CM Vijay Letter To Pm Modi: நெய்வேலி என்எல்சி பங்குகள் விற்பனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் எழுதிய கடிதத்தில் இந்திய அரசு என 7 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஏன் இந்த மாற்றம் என கேள்வியெழுந்துள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jun 25, 2026
- 21:12 pm IST
யோகா என்பது ஆற்றலின் ஒளி – யோகா தினக் கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி
International Yoga Day 2026: 2026 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் யோகா செய்தார். யோகா என்பது வெறும் ஆசனங்கள் மட்டுமல்ல, அது மனித ஒற்றுமையின் அடித்தளம் என்று அவர் கூறினார். புனித பூமியான வங்காளத்திலிருந்து சுவாமி விவேகானந்தரையும் மகரிஷி அரவிந்தரையும் நினைவுகூர்ந்தார்
- C Murugadoss
- Updated on: Jun 21, 2026
- 08:33 am IST
“உலகத் தலைவர்களில் யாரை அதிகம் பிடிக்கும்?”.. பிரதமர் மோடியை கைகாட்டிய டிரம்ப்!
இதுவரை வாழ்ந்த மனிதர்களிலேயே அவரை மிகவும் சக்திவாய்ந்த நபராக மாற்றுகிறது என்று முடிவு செய்கிறது. டிரம்ப் குறிப்பிட்டது போல இந்த ஆவணத்தை எழுதியவர் ஒரு ஜனாதிபதி வரலாற்று ஆசிரியர் அல்ல, மாறாக கோல்ஃப் வீரர் கேரி பிளேயரின் நீண்டகால உதவியாளர் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைக்குரியவர் என்று புத்தக ஆசிரியர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 20, 2026
- 07:37 am IST
இந்தியா உலகின் 2வது பெரிய மொபைல் உற்பத்தி நாடு – பாரிஸில் பிரதமர் மோடி பெருமிதம்
PM Modi : பாரிஸில் உள்ள இந்தியச் சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இது இந்தியாவின் லட்சியங்களுக்கான ஒரு புதிய சகாப்தம் என்று குறிப்பிட்டார். இன்று, இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று பேசினார்.
- Karthikeyan S
- Updated on: Jun 18, 2026
- 22:45 pm IST
ஜி-7 மாநாடு.. இந்திய மாலுமிகளின் மரணம் குறித்து பேசிய பிரதமர் மோடி!
Pm Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். தனது உரையின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சினைகளை அவர் வலுவாக எழுப்பினார்.
- C Murugadoss
- Updated on: Jun 17, 2026
- 13:11 pm IST
ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் சந்திப்பு.. இந்தியா-அமெரிக்க உறவை மீட்டெடுக்கும் முயற்சி..
சமீப காலமாக இந்தியா-அமெரிக்க உறவில் சில விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. அமெரிக்கா இந்தியாவுக்கு கூடுதல் வரிகள் விதித்தது, இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தாம் தலையிட்டு சமரசம் செய்ததாக டிரம்ப் கூறியது போன்றவை உறவை பாதித்தன. இதை இந்தியா மறுத்து, போர் நிறுத்தம் இரு நாடுகளின் நேரடி பேச்சுவார்த்தையின் விளைவாகவே ஏற்பட்டது என தெரிவித்தது.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 17, 2026
- 07:07 am IST
பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக் குடியரசின் உயரிய தேசிய விருது – மேலும் ஒரு கௌரவம்!
PM Modi : ஸ்லோவாக்கியாவுக்கான பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்றொரு அரிய கௌரவம் கிடைத்தது. ஸ்லோவாக் குடியரசின் உயரிய தேசிய விருதான 'தி ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ் என்ற உயரிய விருதை ஸ்லோவாக் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
- Karthikeyan S
- Updated on: Jun 16, 2026
- 09:04 am IST
முடிவுக்கு வரும் ஈரான் போர்.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
PM Narendra Modi On West Asia Pact | ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த மூன்று மாதங்களாக கடும் போர் நிலவி வந்த நிலையில், அது முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jun 16, 2026
- 07:36 am IST