Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Narendra Modi

Narendra Modi

குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.

Read More

5 நாடுகள் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி

அரசு முறை பயணமாக 5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார். 8 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் அமைந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக பிரிக்ஸ் மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொண்டார். இன்று டெல்லி திரும்பிய பிரதமருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு துறையினர் வரவேற்பு அளித்தனர் 

‘ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு கிடைத்த வாய்ப்பு’ நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

PM Modi Speech In Namibia Parliament : முதல்முறையாக நமீபியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராகும் வாய்ப்பை வழங்கியது அரசியலமைப்பின் சக்தி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்.. நமீபியாவின் உயரிய விருது.. முழு விவரம்

Namibia Honours PM Modi : நமீபயா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுவரை 27 நாடுகளின் விருதுகளைப் பெற்ற பிரமதர் மோடி, இந்த சுற்றுப்பயணத்தில் 4 விருதுகள் பெற்றுள்ளார். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

குஜராத்: 45 ஆண்டுகள் பழைமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்..

Gujarat Bridge Collapse Accident: குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் இருக்கக்கூடிய மஹிசாகர் ஆற்றில் கட்டப்பட்ட 45 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் ஆற்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய குடிமகன் விருது.. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த இரு நாட்டு தலைவர்கள்..

PM Modi: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலின் மிக உயர்ந்த தேசிய விருதை ஜனாதிபதியால் கௌரவிப்பது எனக்கு மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கும் மிகுந்த பெருமை மற்றும் உணர்ச்சிகரமான தருணம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

‘மனிதகுலத்திற்கு பயங்கரவாதம் பெரும் சவால்’ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

PM Modi Speech In Brics Summit : பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்டு, பயங்கரவாதத்தை வெறும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமல்ல, வலுவான நடவடிக்கைகளாலும் கண்டிக்க வேண்டும் என்று கூறினார். காசாவின் நிலைமை குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அமைதிக்கான முயற்சிகளை வலியுறுத்தினார்.

பிரேசிலில் பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் வரவேற்பு!

ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் நான்காவது கட்டமாக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். பிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை சந்தித்து உற்சாகமாக உரையாடினர்

நான்கு நாள் பயணமாக பிரேசிலில் பிரதமர் மோடி.. பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க திட்டம்..

PM Modi: பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணமாக பிரேசில் சென்றடைந்தார், அங்கு நடைபெற இருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை பரிமாறி கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

57 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா செல்லும் இந்தியப் பிரதமர்.. பல்துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..

PM Modi Argentina Visit: 57 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் மோடி. வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த பயணம் இந்தியாவிற்கும் அர்ஜென்டினாவிற்கும் இடையிலான கூட்டான்மையை ஆழப்படுத்தும் என் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைவராகும் வானதி ஸ்ரீனிவாசன்? பாஜக மேலிடம் எடுக்கும் முடிவு… விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

Vanathi Srinivasan MLA : அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணிகளில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது. தேசிய தலைவர் பதவிக்கு பெண்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இதில், எம்எல்ஏ வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமன் ஆகியோ பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.

PM Modi 5 Nation Tour : டிரினிடாட் அண்டு டுபாகோவில் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு!

PM Modi Visit Trinidad Tobago : கானா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 2025 ஜூலை 3ஆம் தேதி டிரினிடாட் அண்டு டுபாகோவுக்கு சென்றடைந்தார். அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

’ஜனநாயகம் அமைப்பு அல்ல.. கலாச்சாரம்’ கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!

PM Modi In Ghana Parliament : கானாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார். இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும் ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு அல்ல, அது ஒரு கலாச்சாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவம்!

Indian Prime Minister Narendra Modi's Ghana Visit | 5 நாடுகளுக்கு மொத்தம் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் நாளான நேற்று (ஜூலை 2, 2025) ஆப்ரிக்காவின் கானா நாட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

8 நாட்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி!

2025 ஜூலை 2ஆம் தேதியான இன்று பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, கானா, டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று கானா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். 8 நாட்கள் 5 நாடுகள் சுற்றுப்பயணம் பிரதமரின் நீண்ட நாட்கள் சுற்றுப்பயணமாக பார்க்கப்படுகிறது.

5 நாடுகள்.. 8 நாட்கள்.. பிரதமர் மோடியின் நீண்ட சுற்றுப்பயணம் இன்று தொடக்கம்.. ஏன் முக்கியம்?

PM Modi 5 Nation Trip : பிரதமர் மோடி 2025 ஜூலை 2ஆம் தேதியான இன்று தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபயா ஆகிய ஐந்து நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் நீண்ட நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமைகிறது. கடைசியாக பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டு ஆறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.