
Narendra Modi
குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.
அது ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும் – ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி
PM Narendra Modi about Pakistan : ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுடன் நேரலையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது பாகிஸ்தானுடனான தாக்குதல் முடிவுக்கு வரவில்லை எனவும் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்தியாவின் பதிலடி உக்கிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
- Karthikeyan S
- Updated on: May 12, 2025
- 21:26 pm
PM Modi on India Pakistan Relation: தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக பாய முடியாது.. பாகிஸ்தான் உடனான உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு!
PM Modi's Strong Warning to Pakistan: பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தார். 'ஆபரேஷன் சிந்துர்' மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும், பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார். அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்றும் உறுதியாகக் கூறினார்.
- Mukesh Kannan
- Updated on: May 12, 2025
- 21:18 pm
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் முடியல, பதிலடி உக்கிரமாக இருக்கும் – பிரதமர் மோடி எச்சரிக்கை
PM Modi on Pakistan : ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்கள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளன எனவும் முடிவுக்கு வந்துவிடவில்லை. இனி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என்றால் இந்தியாவின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும் என்று பேசினார்.
- Karthikeyan S
- Updated on: May 12, 2025
- 21:10 pm
PM Modi’s Nation Address: ஆபரேஷன் சிந்தூர் வெற்றி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு.. பிரதமர் மோடி பெருமிதம்!
PM Modi on Operation Sindoor : இந்தியாவின் ராணுவ வீரர்கள் மற்றும் உளவுத்துறைக்கு தலை வணக்குகிறேன். இந்தியாவின் வலிமையும், பொறுமையையும் நாம் பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமான நடத்திய இந்திய இராணுவத்திற்கு எனது சல்யூட். ஆபரேஷன் சிந்தூர் வெற்றி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: May 12, 2025
- 20:32 pm
PM Modi’s Nation Address: பஹல்காம் தாக்குதல் முதல் போர் நிறுத்தம் வரை.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை!
India-Pakistan War Ends: 2025 மே 10 அன்று இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அடைந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துரை மேற்கொண்டது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி நாட்டு மக்களை உரையாற்ற உள்ளார். இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துர் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Mukesh Kannan
- Updated on: May 12, 2025
- 17:50 pm