Narendra Modi
குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.
வளர்ந்த இந்தியாவை நோக்கி மற்றொரு படி.. ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. சிறப்புகள் என்ன?
India AI Impact Summit: ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த எக்ஸ்போவில் ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளின் பவிலியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து 600-க்கும் மேற்பட்ட உயர்திறன் கொண்ட ஸ்டார்ட்அப்புகள் தங்கள் புதுமைகளை வெளிப்படுத்துகின்றன.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 16, 2026
- 19:28 pm IST
PM Modi : பொது வாழ்வு.. வர்த்தக ஒப்பந்தங்கள்.. மனம் திறந்து பேசிய பிரதமர் மோடி
PTI-க்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பொது வாழ்வு, மன அமைதி, இந்தியாவின் பயணம் என அவர் பல விஷயம் குறித்து பேசியுள்ளார். இந்தியாவின் எதிர்காலம் குறித்தும் உலகளாவிய நிலையில் இந்தியாவின் நிலை குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்
- C Murugadoss
- Updated on: Feb 16, 2026
- 11:51 am IST
India AI Impact Summit : ஏஐ உச்சி மாநாடு.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.. என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா?
AI Impact Summit know Details : இந்தியா AI தாக்க உச்சி மாநாடு 2026-க்கான நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பாரத் மண்டபத்தில் தொடங்கி வைப்பார். பாரத் மண்டபம் கண்காட்சிப் பகுதி இன்று (மாலை 5 மணிக்கு) மூடப்படும், மேலும் கண்காட்சி பிப்ரவரி 17-ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.
- C Murugadoss
- Updated on: Feb 16, 2026
- 07:53 am IST
வங்கதேச பிரதமராக பதவியேற்கும் தாரிக் ரஹ்மான்.. பிரதமர் மோடிக்கு அழைப்பு.. கலந்துகொள்வாரா?
Bangladesh PM Tariq Rahma : வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பிப். 17 அன்று பதவியேற்கிறார். தாரிக் ரஹ்மான், இரு நாடுகளின் உறவையும், வங்கதேச இந்துக்களின் நலனையும் உறுதிப்படுத்தினார். இந்தியாவின் நிலைப்பாடு, இந்துக்களின் பாதுகாப்பு தொடர்பான ரஹ்மானின் தேர்தல் வாக்குறுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- C Murugadoss
- Updated on: Feb 15, 2026
- 09:37 am IST
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்.. வீரர்களின் சேவை என்றும் நம் உணர்வில் பதிந்திருக்கும்.. பிரதமர் மோடி
Pulwama Attack 7th Anniversary: புல்வாமா தாக்குதல் இந்தியர்களின் மனதில் அழியாத காயமாக இருந்தாலும், அது நாட்டின் ஒற்றுமையையும் தேசப்பற்று உணர்வையும் வலுப்படுத்திய ஒரு தருணமாகவும் பார்க்கப்படுகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகம் என்றும் நினைவில் நிற்கும் என மக்கள் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 14, 2026
- 13:17 pm IST
அசாமில் வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம்.. வடகிழக்கின் முதல் ELF-இல் பிரதமர் மோடி
ரூ.100 கோடி செலவில், மோரான் பைபாஸ் சாலையில் 4.2 கி.மீ. நீளத்தில் வலுப்படுத்தப்பட்ட பாதையாக இந்த ELF அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய வான்படை (IAF) போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களுக்கு தந்திரோபாய மற்றும் பல்நோக்கு ஓடுதளமாக செயல்படும். இதன் மூலம் பாதுகாப்பு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பேரிடர் மேலாண்மை திறன் வலுப்பெறும்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 14, 2026
- 12:05 pm IST
பிரதமர் மோடி குறித்து அதிபர் டிரம்ப் பேசிய வீடியோ.. உண்மை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்..
ரஷ்யாவுடன் இந்தியாவின் வர்த்தக மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கேட்கப்பட்டபோது, ஜெய்ஸ்வால், “ரஷ்யா-இந்தியா இடையே வர்த்தகம் முதல் மக்கள்-மக்கள் கலாசார தொடர்புகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஈடுபாடும் ஒத்துழைப்பும் உள்ளது. எங்கள் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களும் தொடர்ந்து வளர்ச்சியடையும்,” என்று கூறினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 14, 2026
- 09:01 am IST
மதுராந்தகம் மாநாட்டில் தேஜ கூட்டணியின் ஒற்றுமை…சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னுதாரணமா?
NDA Alliance Conference: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பங்கேற்ற கூட்டணி கட்சிகளிம் ஒருமித்த கருத்து மற்றும் ஒற்றுமை காணப்பட்டது. இந்த ஒற்றுமை வருகிற சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெருவதற்கு முன்னுதாரணமாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Feb 10, 2026
- 12:01 pm IST
ஒழுக்கமும் ஊக்கமும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது – பரீட்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..
வாழ்க்கையில் ஊக்கமும் ஒழுக்கமும் இரண்டும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஒழுக்கம் இல்லையெனில் எவ்வளவு ஊக்கம் இருந்தாலும் அது பயன் தராது. அருகில் இருக்கும் விவசாயி அதிக வருமானம் ஈட்டுவதைப் பார்த்து நாம் ஊக்கம் பெறலாம். ஆனால் ஒழுக்கம் இல்லாமல் அந்த ஊக்கம் செயல்படாது. அப்போது அது சுமையாக மாறி, ஏமாற்றத்தை உருவாக்கும் என அவர் விளக்கினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 9, 2026
- 11:51 am IST
ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..
CM MK Stalin Letter to PM Modi: மேலும், சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் ரயில் உள்கட்டமைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 8, 2026
- 12:33 pm IST
இந்தியா–மலேசியா கூட்டுறவுக்கு புதிய வேகம்.. மலேசியா சென்ற பிரதமர் மோடி பாராட்டு..
இந்தியா–மலேசியா உறவு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. நாம் கடல் அண்டை நாடுகள். பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளின் மக்களுக்கிடையே ஆழமான தொடர்புகள் நிலவி வருகின்றன. இன்று, உலகில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வசிக்கும் இரண்டாவது பெரிய நாடாக மலேசியா உள்ளது. நமது நாகரிகங்கள் பகிர்ந்த கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஜனநாயக மதிப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன,” என பிரதமர் மோடி கூறினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 8, 2026
- 11:29 am IST
2 நாள் பயணமாக மலேசியா சென்ற பிரதமர் மோடி.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்ப்பு..
PM Modi Malaysia Visit: மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தைச் சந்திப்பதில் பெரும் உற்சாகம் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுமார் 30 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட இந்த இந்திய வம்சாவளி சமூகம், உலகின் மிகப்பெரிய இந்திய வெளிநாட்டினர் சமூகங்களில் ஒன்றாகும்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 7, 2026
- 13:46 pm IST
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி…மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!
Union Minister L Murugan: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெரும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். மேலும், திமுக வீட்டுக்கு செல்வது உறுதி என்றார்.
- Gowtham Kannan
- Updated on: Feb 7, 2026
- 12:34 pm IST
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்: 25% கூடுதல் சுங்கவரி ரத்து.. முக்கிய அம்சங்கள் என்ன?
India-US Trade Deal Points: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக ட்ரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதி செய்துள்ளதாக அந்த உத்தரவின் வார்த்தைகள் தெரிவிக்கின்றன.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 7, 2026
- 09:05 am IST
“எனக்கு சவக்குழி தோண்ட முடியாது”.. பிரதமரின் பரபரப்பு பேச்சு.. மாநிலங்களவையில் கடும் அமளி..
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் ஆகியவை மத்தியிலும், மாநிலங்களவையிலும் பல பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளன. இன்று நாம் ‘ஒப்பந்தம்’ பற்றி பெருமையாக பேசுகிறோம். முன்பெல்லாம் ஒப்பந்தம் என்று சொன்னால், அது போபர்ஸ் பேரம் பற்றியதாக இருந்தது. அவர்கள் தங்கள் பாக்கெட்டை மட்டுமை நிரப்பிக் கொண்டனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 6, 2026
- 13:42 pm IST