AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Narendra Modi

Narendra Modi

குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.

Read More

மார்ச் 11ம் தேதி திருச்சி வரும் பிரதமர் மோடி.. ஏற்பாடுகள் தீவிரம்!

திருச்சியில் வருகின்ற 2026 மார்ச் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 11-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. NDA-ன் பிரம்மாண பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்!

PM Narendra Modi To Visit Tamil Nadu On 11 March | மார்ச் 01, 2026 அன்று புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர், மார்ச் 11-ல் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்… களமிறங்கும் மத்திய அமைச்சர்கள் குழு? பாஜக தலைமையின் பலே திட்டம்!

Tamil Nadu Assembly Elections: தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக மத்திய அமைச்சர்கள் குழுவை இறக்குவதற்கு பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவானது மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூபிலும் பிரதமர் மோடி சாதனை.. 30 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டு அசத்தல்!

PM Narendra Modi Crossed 30 Million Subscribers In YouTube | இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் சுமார் 30 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது அவரது யூடியூப் சேனலை சுமார் 30 கோடி மக்கள் பின்தொடர்கின்றனர்.

அதிமுக – பாஜக கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் உள்ளனர் – முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..

தமிழ்நாடு முழுவதும் பெரிய மேம்பாலங்கள், பல்வேறு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. கிராம சாலைகளையும் மேம்படுத்தி வருகிறோம். இவ்வாறு ஆல்ரவுண்டராக செயல்படுவதால்தான் இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. இதை மத்திய பாரதிய ஜனதா அரசு பாராட்டியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தந்த முதல் பிரதமர் நரேந்திர மோடி!

Pm Modi visit Thiruparankundram: ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்த முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். மதுரையில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பங்கேற்க வந்த நிலையில், இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றார்.

Iran-Israel conflict: மேற்கு ஆசியா போர்.. இஸ்ரேல் பிரதமர், UAE அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!

PM Modi : ஈரானின் உச்ச தலைவர் காமெனியின் மரணத்தைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன . அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் குண்டுவீச்சைத் தொடர்ந்த அதே வேளையில், ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, நிலைமை குறித்து தொலைபேசியில் பேசியுள்ளார்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

PM Modi chairs CCS meeting: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 2 நாட்களாக நடத்திய தொடர் தாக்குதலில் 86 வயதான ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் துபாய் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி – பிரதமர் நரேந்திர மோடி

தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, மதுரையில், 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டதாக தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் – வைரலாகும் படங்கள்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 1, 2026 அன்று மதுரை வந்தார். அப்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும்போது வருத்தமாக இருந்தது – பிரதமர் மோடி வேதனை

Prime Minister Narendra Modi : மதுரையில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெற்றிவேல், வெற்றிவேல், வெற்றிவேல். அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். அம்மா மீனாட்சி  சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன் இது பாண்டியநாடு வீரத்தின் நிலம் என தமிழில் பேசினார் 

மதுரை திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1, 2026 அன்று மதுரை வந்தார். அதனைத் தொடர்ந்து முருகனின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். 

மதுரையில் ரூ.4,400 கோடி திட்டப் பணிகள் – துவங்கி வைத்த பிரதமர் மோடி

PM Modi In Madurai : மதுரையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்  மேலும், மரக்காணம் - புதுவை பிரிவு, பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

புதுச்சேரி ஒரு புண்ணிய பூமி – பிரதமர் மோடி உரை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.  புதுச்சேரியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர்,  மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்பட்டால், ஒரு மாநிலம் எப்படி வளரும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாகும் என்றார். தனிநபர் வருமானத்தில் புதுச்சேரி வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

“மக்களுக்கு நிம்மதியான வாழ்வை வழங்குவதே நோக்கம்”.. பிரதமர் மோடி புதுச்சேரியல் பேச்சு!!

PM Narendra Modi speech at Puducherry: புதுச்சேரி வளர்ச்சியில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களுக்கு நிம்மதியான வாழ்வை வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அரசு காலிப் பணியிடங்களை இரட்டை எஞ்சின் ஆட்சிதான் நிரப்பி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.