
Narendra Modi
குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.
பெங்களூருவில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ.. அமோக வரவேற்பு அளித்த மக்கள்..!
பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 10ம் தேதி ஒரு பிரமாண்டமான ரோடு ஷோ நடத்தினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு, பிரதமர் மோடி முதன்முறையாக வருகை தந்த இந்த நிகழ்வில், மக்கள் வீதிகளில் வரிசையாக நின்று, கொடிகளை அசைத்து, கோஷங்களை எழுப்பியபடி, அமோகமான மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி பெங்களூருவில் வைத்தார்.
- Mukesh Kannan
- Updated on: Aug 10, 2025
- 22:34 pm
உலகில் நடக்கும் நேரடி பணப் பரிவர்த்தனைகளில் 50% யுபிஐ.. பிரதமர் மோடி பெருமிதம்!
PM Narendra Modi Bengaluru Speech | இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் 4 ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் உலகில் நடக்கும் நேரடி பணப் பரிவர்த்தனைகளில் 50 சதவிகிதம் யுபிஐ மூலம் நடப்பதாக கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Aug 10, 2025
- 18:43 pm
Independence Day : 78வது அல்லது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியா?.. குழப்பத்துக்கு அரசு விளக்கம்!
Independence Day Celebration | இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இது 78 அல்லது 79வது சுதந்திர தினவிழா என பொதுமக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Aug 10, 2025
- 16:31 pm
பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
PM Modi Visit To Bengaluru: பெங்களூரு வருகை தந்த பிரதமர் மோடி அங்கே 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். அதே போல் பிரதமர் பெங்களூருவில் 3 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 10, 2025
- 13:37 pm
பெங்களூரு : 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டது. பெங்களூரு-பெலகாவி உட்பட மொத்தம் மூன்று பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 10) பெங்களூருவில் உள்ள சங்கொல்லி ராயன்னா ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . அதன் விவரங்கள் இதோ
- C Murugadoss
- Updated on: Aug 10, 2025
- 12:52 pm
PM Modi : பெங்களூரு வரும் பிரதமர் மோடி.. திறந்து வைக்கவுள்ள மெட்ரோ வீடியோ
பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு வருதை தரவுள்ளார். வந்தே பாரத் ரயில், மற்றும் மெட்ரோ வழித்தடங்களை அவர் இன்று திறந்து வைக்கிறார், மேலும், அவர் ஆர்வி சாலை டூ எலக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோவில் பயணம் செய்யவுள்ளார். இந்நிலையில் அவர் திறந்து வைக்கவுள்ள மெட்ரோ நிலையத்தி அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன
- C Murugadoss
- Updated on: Aug 10, 2025
- 08:47 am
வந்தே பாரத், மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.. பெங்களூருவில் போக்குவரத்து மாற்றம்..
PM Narendra Modi Visit To Bengaluru: பெங்களூரு வரும் பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு வந்தே பாரத் ரயிலை காலை 11 மணியளவில் தொடங்கி வைக்கிறார். மேலும், மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் நிற பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 10, 2025
- 06:30 am
ரக்ஷா பந்தன்.. பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி கொண்டாடிய பள்ளி குழந்தைகள்!
PM Modi Celebrates Raksha Bandhan : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி தனது இல்லத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். பிரதமர் மோடியின் கையில் பள்ளிக் குழந்தைகள் ராக்கி கயிற்றை கட்டினர்.
- Umabarkavi K
- Updated on: Aug 9, 2025
- 16:26 pm
மெட்ரோ ரயில் பாதையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி.. பெங்களூருவில் போக்குவரத்து மாற்றம்..
PM Modi Visit to Bengaluru: பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 10, 2025) அன்று பெங்களூருவில் இருக்கும் மஞ்சல் நிற வழித்தட வந்தே பாரத் ரயிலை திறந்து வைக்கிறார். இதற்காக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 9, 2025
- 14:19 pm
உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடியிடம் விளக்கமளித்த ரஷ்ய அதிபர் புதின்
Modi, Putin Discuss Ties : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசிய வாயிலாக தொடர்புகொண்டு உக்ரைன் விவகாரம் குறித்து பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தனது பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Aug 8, 2025
- 19:44 pm
அமெரிக்காவுடன் மோதல்.. முக்கியமான நேரத்தில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்
Russia President Putin Visit India : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு 2025ஆம் ஆண்டு இறுதியில் வருகை தர உள்ளார். அமெரிக்கா இந்தியா இடையேயான வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, முதல்முறையாக புதின் இந்தியா வருகிறார்.
- Umabarkavi K
- Updated on: Aug 7, 2025
- 18:47 pm
பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு.. கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை.. என்ன மேட்டர்?
Kamal Haasan Meets PM Modi : டெல்லியில் பிரதமர் மோடியை, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் எம்.பி சந்தித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின்போது முக்கிய கோரிக்கை முன்வைத்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Aug 7, 2025
- 17:45 pm
PM Modi: விவசாயிகளின் நலனே முக்கியம்.. சவாலுக்கு நான் தயார்! அமெரிக்க வரி குறித்து பேசிய பிரதமர் மோடி!
PM Modi Responds to US Tariff: அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மீது கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி விவசாயிகளின் நலன் முதன்மை எனக் கூறியுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்த்து, இந்தியா விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரின் நலனில் சமரசம் செய்யாது எனவும், அதற்கு எந்த விலை கொடுத்தாலும் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Aug 7, 2025
- 12:58 pm
பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட தயாராக இருக்கும் பாகிஸ்தான் பெண்.. 30 ஆண்டுகளாக தொடரும் பாச பந்தம்!
Woman Ties Rakhi to Prime Minister Modi | பாகிஸ்தானை சேர்ந்த கமர் மொஹ்சி என்ற பெண் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் பிரதமர் மோடியின் அழைப்பை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Aug 7, 2025
- 09:45 am
கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டிய டிரம்ப்.. விளக்கம் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா!
India Responds to Donald Trump's Threatening | இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Aug 5, 2025
- 08:53 am