Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. அப்போ பனிமூட்டம் இருக்குமா?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஊட்டி கொடையில் தொடரும் உறைபனி.. கடும் குளிருடன் நிலவும் பனிமூட்டம் – வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குறைந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. ஊட்டியில் 6.6 டிகிரி செல்சியஸ், கொடைக்கானலில் 6.6 டிகிரி செல்சியஸ், வால்பாறையில் 8 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து விலகிய வடகிழக்கு பருவமழை.. இனி வறண்ட வானிலை தான் – வானிலை நிலவரம் என்ன?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பகல் நேர வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்

அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. அதிகாலையில் நிலவும் பனிமூட்டம் – வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: குமரி கடலில் நிலவக்கூடிய கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, ஜனவரி 23ஆம் தேதி வாக்கில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு?.. விடைபெறும் வடகிழக்கு பருவமழை.. வானிலை அப்டேட் இதோ..

Weather update: ஜனவரி 18 இன்று முதல் ஜனவரி 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 23- ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு…மீனவர்களுக்கு சூறாவளிக்காற்று எச்சரிக்கை…வானிலை ஆய்வு மையம்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை 48 மணி நேரத்தில் விலக உள்ள நிலையில், வரும் ஜனவரி 23- ஆம் தேதி ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து இன்று விலகும் வடகிழக்கு பருவமழை.. மீண்டும் பனிமூட்டம் தொடரும் – வெதர்மேன் பிரதீப் ஜான் ரிப்போர்ட்..

North East Monsoon: தொடர்ச்சியாக தமிழகத்தில் நல்ல மழை இருந்த சூழலில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்திலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் - தமிழ்நாடு வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து விலகும் வடகிழக்கு பருவமழை.. இனி மழை இருக்காது – வானிலை சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: வரக்கூடிய அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் சொன்ன தகவல்!!

weather update: இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!

Weather update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 16 முதல் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறியுள்ளது. அதோடு, தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பெரும்பாலும் இயல்பான அளவிலேயே இருக்கும்.

தமிழகத்தில் இனி மழை இருக்காது.. அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் – வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: ஜனவரி மாதம் தொடக்கத்தில் தமிழகத்தில் பனிமூட்டம் குறைந்திருந்த நிலையில், கடந்த வாரம் குமரி கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், வெப்பநிலை மீண்டும் கணிசமாக குறையத் தொடங்கியது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.

குளிர் அலை அலெர்ட்.. தமிழ்நாட்டில் கடும் குளிர்.. உறைந்து நிற்கும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள்!

India Cold Wave : இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் கடுமையான குளிர் அலை நீடிக்கிறது. டெல்லியில் 3°C வெப்பநிலையாகப் பதிவானது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சம். வட மாநிலங்களுக்கு மூடுபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு? என்ன சொல்கிறது வானிலை மையம்?

Weather update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடும் குளிருடன் பனிமூட்டம்.. சில்லென மாறிய சென்னை.. பிற மாவட்டங்களில் எப்படி?

Tamil Nadu Weather Update: ஜனவரி 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வாஹமினிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், நல்ல கனமழை பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 7 செ.மீ. மழை பதிவானது.

திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகியுள்ளது.