Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

3 நாட்களுக்கு அலர்ட்.. கேப் விடாமல் கொட்ட போகுது கனமழை.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் இதோ!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Weather Update: பகலில் கடும் வெயில்.. இரவில் குளு குளு மழை .. எத்தனை நாட்களுக்கு?

Chennai Weather: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 22 வரை பல இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சென்னையில் அதிகாலை நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் செப்டம்பர் 16, 2025 இன்று ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather: சென்னையில் கொட்டிய கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ!

Chennai weather today: சென்னையில் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியது. பல பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வரும் நாட்களில் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கணித்துள்ளார்.

இனி வெயில் இல்லை.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. இனி வரும் நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலை குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில், வட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அலர்ட் மக்களே… வரப்போகும் அடுத்தடுத்து 2 புயல்கள்.. வெதர்மேன் சொன்ன தகவல்!

NorthEast Monsoon : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2025 நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கக் கூடும் எனவும், நவம்பர், டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகக் கூடும் டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார். இந்த புயல்களால் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தீவிரமாக இருக்கும் எனவும் கணித்துள்ளார்.

செப். 16 முதல் ரெடியா இருங்க.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 16, 2025 அன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில்கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் விடாமல் பெய்யும் கனமழை.. இன்னும் தொடருமா? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

Chennai Weather Today : சென்னையில் இரவில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, சென்னையில் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தொடர் மழையால் நிலச்சரிவுகள்.. பூஞ்ச் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

தொடர் மழையால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு பிரிவின் பூஞ்ச் ​​மற்றும் ராம்பன் மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 95 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 700 குடியிருப்பாளர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைக்கு ரெடியா மக்களே! 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை..

Tamil Nadu Weather Update: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 13, 2025 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது

வங்கக் கடலில் காற்றழுத்தம்.. கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு அலர்ட்!

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழையே பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது-

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: வளிமண்டல சுழற்சிகளின் காரணமாக, செப்டம்பர் 12, 2025 (இன்று) மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்.

பிச்சு உதறபோகும் கனமழை.. 2 நாட்களுக்கு அலர்ட்.. சென்னையில் வானிலை எப்படி?

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு டெல்டா, வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை.. பிற மாவட்டங்களில் எப்படி?

Tamil Nadu Weather Update: வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, செப்டம்பர் 11, 2025 தேதியான இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.