Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

இந்த மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும்.. படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை – வானிலை நிலவரம்..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வறண்ட வானிலையே நிலவும் என்றும், மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. இனி வறண்ட வானிலை தான் – வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: வரக்கூடிய ஜனவரி 5, 2026 தேதியான நாளையும் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வரக்கூடிய ஜனவரி 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும், வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Rain Alert : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பிப்ரவரி 4, 2026 அன்று லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அதிகாலையில் வாட்டி வதைக்கும் குளிர்.. மழையும் இருக்கு!.. வானிலை அப்டேட் இதோ..

Weather update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று இங்கு மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 6 நாட்கள் மழை நிலவரம்.. வானிலை ரிப்போர்ட்..

Weather report: அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.. காலையில் பனியும் இருக்கும்.. வானிலை ரிப்போர்ட் இதோ..

Weather Forecast: தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்​டை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் இன்று ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​ட​மும் ஈரோடு, சேலம், நாமக்​கல், திருச்​சி, கரூர் மாவட்​டங்​களில் லேசான பனிமூட்​ட​மும் காணப்​படும். என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் பனி.. மழையும் இருக்கு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!

Weather forecast: தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 1) அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

இனி நோ மழை.. ஆனால் அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் – வானிலை ரிப்போர்ட்

Tamil Nadu Weather Update: பிப்ரவரி 1, 2026 (ஞாயிற்றுகிழமை) அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. இனி மழை இல்லை.. வெயில் மட்டும்தான்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ள சூழலில், இரவு நேர வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 17 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

மழைக்கு குட்பை.. தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்… வானிலை ரிப்போர்ட் இதோ!!

Weather forecast: வரும் 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

தமிழத்தில் இனி மழை இல்லை.. வறண்ட வானிலை தான்.. அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை..

Tamil Nadu Weather Update: ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது எனவும், பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை கணிசமாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!

Weather update: தொடர்ந்து, 28-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர், 31-01-2026 மற்றும் 01-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும், மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

Tamil Nadu Weather Update : தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: சென்னையைப் பொறுத்தவரையில், ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையாகவும், அவ்வப்போது மிதமான மழையாகவும், ஒரு சில இடங்களில் கனமழையாகவும் பதிவாகி வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றன. வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு தொடரும்? வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: ஜனவரி 25, 2026 தேதியான இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.