Weather Forecast
காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
மழைக்கு ரெடியா மக்களே? சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?
Tamil Nadu Weather Alert: வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பதிவாகக்கூடும் என்றும், நவம்பர் மாதம் இறுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 17, 2025
- 06:21 am IST
Rain Alert: நாளை இந்த 7 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
Very heavy rain: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 16, 2025
- 14:50 pm IST
நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..
Tamil Nadu Weather Alert: வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் நாட்களில் நல்ல மழை பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நவம்பர் 17, 2025 முதல் நவம்பர் 21, 2025 ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பதிவாகக்கூடும்.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 16, 2025
- 06:40 am IST
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை..
Tamil Nadu Weather Alert: நவம்பர் 16, 2025 தேதியான இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 16, 2025
- 06:15 am IST
நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Orange Alert : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 16. 2025 நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Nov 15, 2025
- 15:36 pm IST
நாளை முதல் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நல்ல மழைப் பதிவு இருந்தது. அக்டோபர் மாதம் மட்டும் நமக்கு 58% இயல்பை விட அதிகமான மழை பதிவு இருந்தது. ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறண்டு வானிலையே நிலவுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 15, 2025
- 06:15 am IST
நவ. 21 வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ. 16 முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..
North East Monsoon: நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறட்சியான வானிலையே நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது வரை நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு, இயல்பான அளவைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சூழலில், வடகிழக்கு பருவமழை வரக்கூடிய நவம்பர் 16, 2025 முதல் மீண்டும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 14, 2025
- 06:15 am IST
சென்னையில் கொட்டும் மழை.. பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..
Tamil Nadu Rain Alert: சென்னையில் அதிகாலை முதல் தற்போது வரை நல்ல மழை பதிவாகி வருகிறது. இதனால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் பல சாலைகளிலும் தண்ணீர் தேங்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 13, 2025
- 10:33 am IST
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. மழையால் குறையும் வெப்பநிலை.. சென்னையில் எப்படி?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் மாத இறுதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 58% வழக்கத்தை விட அதிகமான மழை பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 13, 2025
- 06:15 am IST
இன்றிரவு இந்த 7 மாவட்டங்களுக்கு கனமனழைக்கான ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Orange Alert : தமிழகத்தில் நவம்பர் 12, 2025 அன்று இரவு 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தென் தமிழ்நாட்டில் மழை வலுப்பெற்று வருகிறது.
- Karthikeyan S
- Updated on: Nov 12, 2025
- 21:46 pm IST
இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கப்போகுது.. அலர்ட் மக்களே!!
Rain today: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 12, 2025
- 11:55 am IST
தமிழகத்தில் தொடரும் கனமழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை சொல்லும் தகவல்..
Tamil Nadu Weather Rain: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 33 டிகிரி செல்சியஸை ஒட்டியே வெப்பநிலை பதிவாகி வருகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 10, 2025
- 13:45 pm IST
நவ.16க்கு பிறகு மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. அலெர்ட் மக்களே!!
heavy rain alert: நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. அதேசமயம், நவ.16க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 10, 2025
- 08:55 am IST
டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..
Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை இரவு நேரங்களில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 9, 2025
- 13:12 pm IST
இந்த 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Heavy Rain Alert: தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அருகிலுள்ள குமரிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Nov 9, 2025
- 06:35 am IST