Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

Cyclone Montha: வங்கக் கடலில் உருவானது மோன்தா புயல்..

Tamilnadu weather today: வங்கக் கடலில் மோன்தா புயல் உருவான நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு சென்னையில் கனமழை இருக்காது என்பதும் தெரியவந்துள்ளது. இன்று நாள் முழுவதும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஆந்திராவை ஒட்டியுள்ள ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் – மிக கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Rain Alert : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அக்டோபர் 27, 2025 அன்று மோன்தா புயலாக உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு 790 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல்.. 28 ஆம் தேதி தீவிர புயலாக கரையை கடக்கும்..

Montha Cyclone: வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து செல்வதால், தமிழகத்திற்கு கடுமையான பாதிப்புகள் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை நோக்கி நகரும் மோன்தா புயல்.. மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்..

Montha Cyclone: வங்கக்கடலில் உருவாகக்கூடிய புயல் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் என்பதால், தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த புயல் தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி செல்லும் போது, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 3 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..

Montha Cyclone: வங்கக் கடலில் உருவாகும் இந்த புயலின் காரணமாக, தமிழகத்தில் வரவிருக்கும் சில நாட்களில் கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 25 அக்டோபர் 2025 தேதியான இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னைக்கு என்ன நிலை? பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

Montha Cyclone: பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பதிவில், வங்கக் கடலில் உருவாகக்கூடிய புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் என குறிப்பிட்டுள்ளார். வடதமிழகத்திற்கு அருகே வராமல், ஆந்திராவை நோக்கி இந்த புயல் நகரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இல்லாமல், மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும்.

தூத்துக்குடி கனமழை.. குளம்போல் காட்சியளிக்கும் தனியார் ஸ்கூல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது, இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குளம்போல் தண்ணீர் தேங்கிய காட்சி வைரலாகி வருகிறது.

வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?

Montha Cyclone: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (24-10-2025) காலை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வரும் 27 அன்று புயலாக வலுபெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Weather Update: இன்று உருவாகும் புதிய காற்றழுத்தம்.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Chennai Weather Today: தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 24 அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று, அக்டோபர் 27 வரை மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – இந்த 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Heavy Rain Warning : தமிழகத்தில் அக்டோபர் 24, 2025 முதல் கனமழை பெய்யவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனையடுத்து திண்டுக்கல், கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைவிடுத்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்து என்ன? பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்..

Northeast Monsoon: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்ததன் காரணமாக, வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 23, 2025 தேதியான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டையில் சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இனி நோ ரெட் – ஆரஞ்சு அலர்ட்.. வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..

Tamil Nadu Rain Alert: அக்டோபர் 23, 2025 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 அக்டோபர் 2025 அன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையும், பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர்ந்த மேகங்கள்.. இடைவிடாமல் மழை பெய்யும்.. வானிலை அப்டேட் இதோ!

Chennai Weather Today: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நெருங்கியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொளந்து கட்டும் பருவமழை.. சென்னையில் 12 பேரிடர் மீட்பு படைகள் தயார்!

Chennai weather today: சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வலுப்பெற கூடும் என்பதால் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் மழை வெள்ளத்தை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் தொடரும் கனமழை.. வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழையைத் தொடர்ந்து வைகை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மதுரையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.