Weather Forecast
காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. இனி மழை கிடையாது – வெதர்மேன் சொன்னது என்ன?
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஓட்டையும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 8, 2025
- 14:45 pm IST
தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்!!
Rain today: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் முதல் தென் மாவட்டங்கள் வரை இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அதேசமயம் சென்னையில் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 8, 2025
- 06:36 am IST
டெல்டா, தென் தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் மழை இருக்காது – வெதர்மேன் பிரதீப் ஜான்..
Tamil Nadu Weather Update: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டையில் அதிகபட்சமாக 4 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 7, 2025
- 14:25 pm IST
ஆறே நாட்களில் ‘தித்வா புயல்’ தந்த மழை எவ்வளவு தெரியுமா? பிரதீப் ஜான் தந்த ஷாக் தகவல்..
Cyclone Ditwah 2025: வட சென்னையில் நாம் காலத்திற்கு நினைவில் கொள்ளும் வகையில், குறுகிய நாட்களில் அதிகளவு மழைப்பொழிவை தித்வா புயல் தந்துச் சென்றதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். தென் சென்னையிலும் 6 நாட்களில் இதுபோதுமான மழை தான் என்று கூறியுள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 7, 2025
- 06:33 am IST
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கணிப்பு!!
தித்வா புயலைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களுக்கு மழை இருக்கும் எனவும், டிசம்பர் 08 முதல் டிசம்பர் 12ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 6, 2025
- 16:10 pm IST
தமிழகத்தில் மிதமான மழை தான் இருக்கும்.. சென்னைக்கு இனி நோ மழை – பிரதீப் ஜான் தகவல்..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு சில இடங்களில் மட்டுமே மிதமான மழை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், “அடுத்த ஆறு நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சென்டிமீட்டருக்கு குறைவான மழை தான் பதிவாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 6, 2025
- 06:15 am IST
சென்னையில் மிதமான மழை இருக்கும்.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Rainfall Alert: தமிழகத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறண்ட வானிலை நிலவிய நிலையில், கடந்த வாரத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் வடகடலோர தமிழகத்தில் பரவலாக கனமழை பதிவானது. இது வரக்கூடிய நாட்களில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 5, 2025
- 06:40 am IST
சென்னையில் இன்று மட்டும் தான் மழை இருக்கும்.. நாளை முதல் மழைக்கு ப்ரேக் – வெதர்மேன் பிரதீப் ஜான்..
Tamil Nadu Weather Update: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தாலும், இந்தச் சுழற்சி சென்னை அருகே 50 கிலோமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கனமழை பதிவானது.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 5, 2025
- 06:15 am IST
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுக்கும் என வானிலை மையம் முன்னறிவித்திருந்தது. அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 4, 2025
- 13:46 pm IST
வெளுக்கும் கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!
வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து, இன்று அது மேலும் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 4, 2025
- 07:33 am IST
இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு, தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்தனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 4, 2025
- 06:28 am IST
நாளை இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Heavy Rain Alert : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிசம்பர் 3, 2025 அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்துள்ளது இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் பலவீனமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Dec 3, 2025
- 16:19 pm IST
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தொடரும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!
சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 3, 2025
- 11:07 am IST
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 3, 2025
- 07:39 am IST
வலுவிழக்கும் தித்வா புயல்: இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!
தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்த தித்வா, ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்ததால், ஒரு சில பகுதிகளில் மிக கனமழை கொட்டித்தீர்த்தது.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 3, 2025
- 06:33 am IST