Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

நவ.16க்கு பிறகு மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. அலெர்ட் மக்களே!!

heavy rain alert: நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. அதேசமயம், நவ.16க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை இரவு நேரங்களில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert: தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அருகிலுள்ள குமரிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Rain Alert : மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள குமரி பெருங்கடல் பகுதிகளில் மேலடுக்கு காற்றழுத்தச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், நவம்பர் 8, 2025 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ.15 பிறகு மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. வானிலை நிலவரம்..

North East Monsoon: நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்ததை விட மழையின் அளவு குறைவாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், நவம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த 6 மாவட்டங்களுக்கு கனமனழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Rain Alert : தமிழகத்தின் சில பகுதிகளில் வான்மண்டல சுழற்சி நிலவி வரும் நிலையில், நவம்பர் 7, நவம்பர் 8, 2025  ஆகிய இரண்டு நாட்கள் மாநிலத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Rain Alert | தமிழகத்தில் இன்று இந்த 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!!

Today rain: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்து வரும் நிலையில், 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தென் தமிழகம், வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. அதோடு, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறியுள்ளது.

வெப்பசலனம் காரணமாக மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன ரிப்போர்ட்..

Tamil Nadu Weather: வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக மழை பதிவாகும் நிலையில், தற்போது வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியான மழை இல்லாவிட்டாலும், விட்டு விட்டு ஒரு மணி நேரம் வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?

Tamil Nadu Rain Alert: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாகவும், கடல் காற்றின் தாக்கத்தினாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது கனமழை பதிவானது.

கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

Tamilnadu Weather Alert: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. முழு ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 36% அதிக மழை.. இனி வறண்ட வானிலையே இருக்கும் – பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை..

Tamil Nadu Weather Update: கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வந்த நிலையில், தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக, வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!

Rain in tamilnadu: வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்திற்கு மழையை கொடுக்குமா என்பது குறித்து அதன் நகர்வுகளை வைத்தே கணிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.