AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலையும் 5 டிகிரி வரை உயரும்.. வானிலை நிலவரம்..

Weather Forecast: தொடர்ந்து, மார்ச் 9-ம் தேதி (நாளை) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 10-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சுட்டெரிக்கும் சூரியன்.. 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் வரக்கூடிய நாட்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் மட்டும் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வானிலை அப்டேட்: வெப்பநிலை 38° வரை உயர்வு

Tamil Nadu Weather Forecast: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது.வட கடலோர தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை 2–3° செல்சியஸ் உயர்ந்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 38.3° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Nadu Will Face Extreme Heat For Two Says | விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு வானிலை: இரண்டு நாட்களில் 2° செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்..!

Tamil Nadu Weather Update: தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுவதுடன், சில இடங்களில் 2° செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்வு பதிவாகி, வேலூரில் அதிகபட்சமாக 37.6° செல்சியஸ் பதிவான நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் மழை வாய்ப்பு உள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என்றும், மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு சூரியன் சுட்டெரிக்கும்… – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Weather Update : தமிழ்நாடு முழுவதும் மார்ச் 5 மற்றும் 6.  2026 இன்றும், நாளையும் வெப்ப நிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்ப நிலை படிப்படியாக உயரவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மக்களே உஷார் … தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக உயரும்

Tamil Nadu Weather: தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. வேலூரில் 37.9° செல்சியஸ் அதிகபட்சம் பதிவாகியுள்ளது. கொடைக்கானலில் 7.1° செல்சியஸ் குறைந்தபட்சம் பதிவாகியுள்ளது. 2026 மார்ச் 06 ஆம் தேதி வரை வெப்பநிலை உயரக்கூடும். 2026 மார்ச் 07 முதல் 09 வரை சில மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கு தற்போது எச்சரிக்கை இல்லை.

படிப்படியாக உயரும் வெப்பநிலை.. 100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெயில்.. மழை இருக்குமா?

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். உள்நாட்டு மாவட்டங்களில் வெப்பம் சற்று அதிகமாக உணரப்படலாம். குறைந்தபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட குறைவாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் லேசான மேகமூட்டம் நிலவும்

வெயிலும் கொளுத்தும், பனி மூட்டமும் இருக்கும்… எங்கெங்கு தெரியுமா?

Tamilnadu Weather: வரும் நாட்களில் தமிழகத்தின் வெப்பநிலை இயல்பை விட 3°C வரை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மார்ச் 3 முதல் 5 வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை 34°C வரை இருக்கும் மற்றும் அதிகாலை வேளைகளில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.. மழையும் இருக்கு.. வானிலை நிலவரம் இதோ..

Weather Forecast: இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதோடு, மார்ச் 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வெப்பமும் அதிகரிக்கும்.. வானிலை நிலவரம்..

Weather Forecast: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் குறையும் மழை.. அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை..

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 35.7 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 35 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் நீடிக்கும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை இருக்கும்?

பிப்ரவரி 28ஆம் தேதி மற்றும் மார்ச் 1ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. தூத்துக்குடியில் பதிவான 9 செ.மீ..

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் நிலவும் பனிமூட்டம்..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.