Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. இனி மழை இல்லை.. வெயில் மட்டும்தான்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ள சூழலில், இரவு நேர வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 17 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

மழைக்கு குட்பை.. தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்… வானிலை ரிப்போர்ட் இதோ!!

Weather forecast: வரும் 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

தமிழத்தில் இனி மழை இல்லை.. வறண்ட வானிலை தான்.. அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை..

Tamil Nadu Weather Update: ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது எனவும், பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை கணிசமாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!

Weather update: தொடர்ந்து, 28-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர், 31-01-2026 மற்றும் 01-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும், மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

Tamil Nadu Weather Update : தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: சென்னையைப் பொறுத்தவரையில், ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையாகவும், அவ்வப்போது மிதமான மழையாகவும், ஒரு சில இடங்களில் கனமழையாகவும் பதிவாகி வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றன. வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு தொடரும்? வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: ஜனவரி 25, 2026 தேதியான இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த பகுதிகளில் ? பிரதீப் ஜான் சொன்ன தகவல்.

Tamil Nadu Weather Update: ஜனவரி 24, 2026 தேதியான இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu Weather Update: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஜனவரி 23, 2026 தேதியான நேற்று பிற்பகல் முதல் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி? வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிர்.. தர்மபுரியில் 16 டிகிரி வரை குறைந்த வெப்பநிலை.. தமிழகத்தில் தொடரும் பனிமூட்டம்..

Tamil Nau Weather Update: குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மீண்டும் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் முறைப்பனி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. அப்போ பனிமூட்டம் இருக்குமா?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஊட்டி கொடையில் தொடரும் உறைபனி.. கடும் குளிருடன் நிலவும் பனிமூட்டம் – வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குறைந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. ஊட்டியில் 6.6 டிகிரி செல்சியஸ், கொடைக்கானலில் 6.6 டிகிரி செல்சியஸ், வால்பாறையில் 8 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து விலகிய வடகிழக்கு பருவமழை.. இனி வறண்ட வானிலை தான் – வானிலை நிலவரம் என்ன?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பகல் நேர வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்

அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. அதிகாலையில் நிலவும் பனிமூட்டம் – வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: குமரி கடலில் நிலவக்கூடிய கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, ஜனவரி 23ஆம் தேதி வாக்கில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.