Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் அடுத்தடுத்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் காலை முதல் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். நேற்றைய தினம் 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்த நிலையில், இன்றும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Heavy rain: தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்றும் அந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

Heavy rain: இந்த 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!!

very heavy rain today: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதை பொறுத்து தமிழகத்தில் மழை அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Rain Alert: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது..

Heavy Rain: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் நேற்று பல இடங்களில் நல்ல மழை பெய்தது.

தூத்துக்குடி கொட்டும் கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்..!

தூத்துக்குடி நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தூத்துக்குடியில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டம் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதையடுத்து, உள்ளூர் நிர்வாகம் நிலைமையைக் கண்காணித்து, குறிப்பாக நீர் தேங்கிய பகுதிகளுக்கு அருகில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி… இந்த 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Heavy Rain Alert : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 22, 2025 அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறலாம் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பொய்த்து போனதா வடகிழக்கு பருவமழை? இதுவரை இல்லாத அளவு குறைந்த மழை பதிவு – வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

Northeast Monsoon: வட தமிழகமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது; மிதமான மழை மட்டுமே பதிவாகி வருகிறது. இந்த சூழலில், இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..

Tamil Nadu Weather Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் மிதமான மழை பதிவாகி வருகிறது. இரவு முதல் அதிகாலை வரை சில வேளைகளில் கனமழையும், மிதமான மழையும் பதிவாகி வருகின்றன. இந்த நிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் வங்கக் கடலில் உருவாகும் ‘சென்யார் புயல்’.. தமிழகத்தை தாக்குமா?

Cyclone Senyar: அந்தவகையில், ‘மோந்தா’ புயலை தொடர்ந்து வங்கக்கடலில் அடுத்து வரும் புயலுக்கு 'சென்யார்' என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப்பெயரை ஐக்கிய அரபு அமீரகம் சூட்டியுள்ளது. இம்மாத இறுதியில் இந்த சென்யார் புயல் தமிழக கடற்கரையை தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

Delta Districts will Have Heavy Rain | வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Rain Alert: தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, அம்மாதம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவை அளித்தது. தொடர்ந்து, அம்மாத இறுதியில் மோந்தா புயல் உருவாகி ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடந்தது. இதனால், தமிழகத்திற்கு ஓரளவு மழை பொழிவு இருந்தாலும், அதன் பின் மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது.

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வலுப்பெறக்கூடும் என கணிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?

Tamil Nadu Rain Alert: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நாளான நவம்பர் 22, 2025 அன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 22 முதல் 25 வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும் அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்குத்-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது

குளுகுளுவென மாறிய சென்னை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை..

Tamil Nadu Weather Alert: 2025 நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21, 2025 அன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

School Holiday: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இருக்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 18, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.