Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

தித்வா புயல்…. ‘அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்’ – முதல்வர் எச்சரிக்கை

State Issues Warning: தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தித்வா புயல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைத்து துறைகளும் முறையான திட்டமிடலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் முதல்வர் உத்தரவிட்டார்.

அதி கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!!

‘தித்வா’ புயல் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களிலும் சூறைக்காற்று வீசி வருகிறது. தொடர்ந்து, 4 மாவட்டங்களில் இன்றைய தினம் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளையும் அதி கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி நகரும் திட்வா புயல்.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..

Ditwah Cyclone: வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த திட்வா புயலால் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை புரட்டிப்போட்ட தித்வா புயல் – இதுவரை 20 பேர் பலி, 14 பேர் மாயம் – தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

Ditwah Cyclone Impact : தித்வா புயலால் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 14 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயலால் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமா என மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

வேகமெடுக்கும் தித்வா புயல்… இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

Heavy Rain Alert : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை (Sri Lanka) ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு தித்வா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’.. மக்களே உஷார்!!

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், நாளை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டமலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், 3 நாட்களுக்கு தமிழகத்தில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும்.

கரையை கடந்த ‘சென்யார்’… உருவாகும் புதிய புயல்.. தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் நவ.29ம் தேதி முதல் டிச.1ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வுளர்கள் கூறுகின்றனர்.

இந்த 6 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் – எப்போ தெரியுமா? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Red Alert Issued Again in Tamil Nadu: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து, இந்த 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வங்கக்கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா? வானிலை ரிப்போர்ட்.

Senyar Cyclone: வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ‘சென்யார்’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து இந்தோனேசிய கடலோர பகுதிகளில் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பெரிய தாக்கம் இருக்காது.

அடுத்த சுற்று வடகிழக்கு பருவமழை.. எப்போது தொடங்கும்? எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை?

Tamil Nadu Weather: குமரி கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக, அடுத்த சுற்று வடகிழக்கு பருவமழை நவம்பர் 28ஆம் தேதி முதல் தொடங்கி படிப்படியாக வட கடலோர மாவட்டங்களில் தீவிரமாகும்.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்? வானிலை ரிப்போர்ட்..

Northeast Monsoon: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, குமரி கடல்,  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்–இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை: இடிந்து விழுந்த வீடுகள்.. வெள்ள அபாய எச்சரிக்கை!!

Heavy rain in nellai: பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையிலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உருவாகிறது புயல்.. இன்று இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. பள்ளிகளுக்கு விடுமுறை வாய்ப்பு?

Heavy rain: காற்றடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நவம்பர் இறுதி வரை தென் மாவட்டம், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், நவ.29, 30ம் தேதிகளில் சென்னைக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. புயல் நிலை குறித்து இன்று தெரியவரும்.