Weather Forecast
காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
உஷார் மக்களே.. சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்.. பிற மாவட்டங்களில் மழை இருக்குமா?
Tamil Nadu Rain Alert: தென் தமிழகமும் டெல்டா மாவட்டங்களிலும் மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சி மற்றும் செங்கல்பட்டில் இன்று அதிகாலை முதலே அவ்வப்போது கனமழையும் மிதமான மழையும் பெய்து வருகின்றன.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 1, 2025
- 14:32 pm IST
புயல் வலுவிழந்தாலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
Tamil Nadu Rain Alert: பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில், “புயல் வலுவிழந்தாலும் மேகக் கூட்டங்கள் அதே பகுதியில் இருப்பதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இந்த மழை மேகங்கள் தொடர்ந்து இருக்கும். டிட்வா புயலின் காரணமாக சென்னைக்கு கிடைக்க வேண்டிய மழை அடுத்த இரண்டு நாட்களில் பூர்த்தி அடையும் என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Dec 1, 2025
- 13:05 pm IST
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. அலர்ட் மக்களே!!
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களிலும் காலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி மாணவர்களும், பெற்றோரும் காலை முதல் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று காத்திருந்தனர். ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 1, 2025
- 12:48 pm IST
சென்னையில் காலை முதல் பலத்த மழை.. தவித்த பள்ளி மாணவர்கள்!!
Chennai rain: காலை முதல் விடாமல் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருவதால், பள்ளி மாணவர்கள் விடுமுறை கிடைக்காத என்று தவித்தனர். எனினும், அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், கொட்டும் மழையில் குடைகளை பிடித்தப்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 1, 2025
- 10:40 am IST
வலுவிழந்தது ‘தித்வா’ புயல்: சென்னை, திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?
தித்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னையை புயல் கடக்கும் வரையில், வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தித்வா புயல் வலுகுறைந்ததால், மழையின் அளவும் குறைந்துள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 1, 2025
- 06:47 am IST
நாளைமுதல் கனமழை இல்லை.. சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு
Ditwah Cyclone : தித்வா புயல் காரணமாக டிசம்பர் 1, 2025 முதல் கனமழை படிபடிப்பாக குறையும் எனவும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Nov 30, 2025
- 15:11 pm IST
Ditwah Cylone: சென்னைக்கு 220 கி.மீ தொலைவில் டிட்வா புயல்..எங்கே அதிகனமழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..
Red Alert Issue: நவம்பர் 30, 2025 தேதியான இன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் அதிக கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 30, 2025
- 09:44 am IST
‘தித்வா புயல்’ எதிரொலி: தென் தமிழகத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிர்!!
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெப்பநிலை சாதாரணமானதை விட 4 முதல் 6 டிகிரிகள் வரை குறைந்து பதிவாகி ஊட்டி - கொடைக்கானல் போன்ற சூழல் அங்கு நிலவுகிறது. இந்த திடீர் குளிர்ச்சிக்கு தித்வா புயல் ஏற்படுத்திய காற்றழுத்த மாற்றம், அதிக மேகமூட்டமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 30, 2025
- 08:40 am IST
வலுவிழந்த டிட்வா புயல்.. வட தமிழகத்தில் மழை இருக்குமா? வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?
Ditwah Cyclone: புயல் மெல்ல-மெல்ல வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை நோக்கி வரும் என கணிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 29, 2025 அன்று இது டெல்டா மாவட்டங்களை அடைந்தது. இதன் காரணமாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிக கன மழை பதிவானது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 30, 2025
- 07:35 am IST
Ditwah Cyclone: தமிழகத்திற்கு 25 கி.மீ அருகே வரும் டிட்வா புயல்.. 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை
Tamil Nadu Rainfall: வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் மெல்ல மெல்ல நகர்ந்து வரும் நிலையில், வடக்கடலோர தமிழகப் பகுதிகளில் இன்று கனமழை இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நவம்பர் 30, 2025 அன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் சில இடங்களில் அதிக கனமழை பதிவாகக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 30, 2025
- 06:15 am IST
சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை… 47 விமானங்கள் ரத்து – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Chennai flight disruption : சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னையில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Nov 29, 2025
- 20:01 pm IST
சென்னையை நெருங்கும் தித்வா புயல்… வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Heavy Rain Alert : தித்வா புயல் தற்போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது புயலானது சென்னைக்கு தெற்கில் 350 கி.மீ தூரத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக நாளை சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Nov 29, 2025
- 18:59 pm IST
வட தமிழகத்தை நெருங்கும் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
தித்வா புயல் தற்போது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு தெற்கில் 380 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து நவ.30ல் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடலை அடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 29, 2025
- 14:45 pm IST
வடதமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு?
Cyclone Ditwah: டிட்வா புயல், வடக்கு–வடமேற்கு திசையில் நகரும் போது, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலிருந்து — இன்று நள்ளிரவு 60 கிலோமீட்டர் தொலைவில், நாளை அதிகாலை 50 கிலோமீட்டர் தொலைவில், நாளை மாலை 25 கிலோமீட்டர் தொலைவில் இது நிலை கொள்ளக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Nov 29, 2025
- 13:47 pm IST
இலங்கையில் ருத்ரதாண்டவம் ஆடிய ‘தித்வா புயல்’.. பலியானோர் எண்ணிக்கை 123 ஆக உயர்வு.. 130 பேர் மாயம்!!
Operation Sagar Bandhu: நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா, 'ஆபரேஷன் சாகர் பந்து'வைத் தொடங்கியுள்ளது.மேலும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி மூலம் அந்நாட்டிற்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 29, 2025
- 12:46 pm IST