Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

தமிழகத்தில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான் கணிப்பது என்ன?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறையும் வெப்பநிலை.. அதிகரிக்கும் பனிப்பொழிவு.. வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் கணிசமான அளவில் வெப்பநிலையின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் குளிர் நடுங்க வைக்கும், மழையும் இருக்கு.. வானிலை மையம் அலர்ட்!!

Tamil Nadu weather: நாளை டிசம்பர் 16 மற்றும் நாளை மறுநாள் டிசம்பர் 17ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சில்லென மாறிய தமிழகம்.. அதிகாலையில் கொட்டும் பனி.. வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்திருந்தாலும், அதிகாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கடும் பனி நிலவத் தொடங்கியுள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் (0) டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையும் இருக்கு பனியும் இருக்கு.. சென்னையில் எப்படி? வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: சென்னையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

Rain alert: குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஊட்டியில் உறைபனி.. 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் உறைபனி தொடங்கியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!!

TN Weather Report: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் லேசான மழை அவ்வப்போது பெய்யக்கூடிய வகையில் இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பரதீப் ஜான் கணித்துள்ளார். இது தவிர, வேறு குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இனி மழை கிடையாது.. பனிமூட்டம் தான் இருக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான்..

Tamil Nadu Weather Update: டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 16 ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு?.. என்ன சொல்கிறது வானிலை மையம்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. இனி மழை கிடையாது – வெதர்மேன் சொன்னது என்ன?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஓட்டையும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்!!

Rain today: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் முதல் தென் மாவட்டங்கள் வரை இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அதேசமயம் சென்னையில் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்டா, தென் தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் மழை இருக்காது – வெதர்மேன் பிரதீப் ஜான்..

Tamil Nadu Weather Update: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டையில் அதிகபட்சமாக 4 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

ஆறே நாட்களில் ‘தித்வா புயல்’ தந்த மழை எவ்வளவு தெரியுமா? பிரதீப் ஜான் தந்த ஷாக் தகவல்..

Cyclone Ditwah 2025: வட சென்னையில் நாம் காலத்திற்கு நினைவில் கொள்ளும் வகையில், குறுகிய நாட்களில் அதிகளவு மழைப்பொழிவை தித்வா புயல் தந்துச் சென்றதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். தென் சென்னையிலும் 6 நாட்களில் இதுபோதுமான மழை தான் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கணிப்பு!!

தித்வா புயலைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களுக்கு மழை இருக்கும் எனவும், டிசம்பர் 08 முதல் டிசம்பர் 12ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.