Weather Forecast
காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
தமிழகத்தில் இனி மழை இருக்காது.. அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் – வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: ஜனவரி மாதம் தொடக்கத்தில் தமிழகத்தில் பனிமூட்டம் குறைந்திருந்த நிலையில், கடந்த வாரம் குமரி கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், வெப்பநிலை மீண்டும் கணிசமாக குறையத் தொடங்கியது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 14, 2026
- 14:54 pm IST
குளிர் அலை அலெர்ட்.. தமிழ்நாட்டில் கடும் குளிர்.. உறைந்து நிற்கும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள்!
India Cold Wave : இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் கடுமையான குளிர் அலை நீடிக்கிறது. டெல்லியில் 3°C வெப்பநிலையாகப் பதிவானது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சம். வட மாநிலங்களுக்கு மூடுபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- C Murugadoss
- Updated on: Jan 14, 2026
- 07:32 am IST
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு? என்ன சொல்கிறது வானிலை மையம்?
Weather update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 14, 2026
- 06:32 am IST
கடும் குளிருடன் பனிமூட்டம்.. சில்லென மாறிய சென்னை.. பிற மாவட்டங்களில் எப்படி?
Tamil Nadu Weather Update: ஜனவரி 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வாஹமினிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், நல்ல கனமழை பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 7 செ.மீ. மழை பதிவானது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 13, 2026
- 06:15 am IST
திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகியுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 12, 2026
- 22:21 pm IST
டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை.. 4 டிகிரி வரை குறையும் வெப்பநிலை – வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: ஜனவரி 12, 2026 தேதியான இன்று கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 12, 2026
- 14:57 pm IST
ஊட்டியாக மாறும் சென்னை.. அடுத்த 7 நாட்களுக்கு இது தான் நிலை – பிரதீப் ஜான்..
Tamil Nadu Weather Update: கடந்த இரண்டு நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த நாட்களில் லேசான முதல் மிதமான மழை மட்டுமே பதிவானது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. அதாவது, அதிகாலை நேரத்தில் கடும் குளிரும், பகல் நேரங்களில் குளிர்ந்த காற்றும் இருந்தது என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 12, 2026
- 13:30 pm IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!
Weather update: ஜனவரி 14ம் தேதி (போகிப்பண்டிகை) அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே வேளையில் பொங்கல் பண்டிகை அன்று (ஜனவரி 15) முதல் 17ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 12, 2026
- 06:18 am IST
இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கப்போகுது.. வானிலை ரிப்போர்ட் இதோ!!
Weather update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 11, 2026
- 06:33 am IST
பொளக்கப்போகும் மழை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?
Tamil Nadu Weather Alert: ஜனவரி 10, 2026 தேதியான இன்று, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 10, 2026
- 14:36 pm IST
மழைக்கு ரெடியா மக்களே.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. தொடரும் கனமழை..
Tamil Nadu Weather Alert: ஜனவரி 10, 2026 தேதியான இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 10, 2026
- 06:15 am IST
நாளை இந்த 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
Heavy Rain Alert : தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது. பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Jan 9, 2026
- 19:49 pm IST
டெல்டா முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் வரை.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான் கணிப்பு..
Tamil Nadu Weather Alert: இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 9, 2026
- 11:08 am IST
டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 9, 2026
- 06:48 am IST
நாளை இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Heavy Rain Alert : வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தின் சில பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Jan 8, 2026
- 15:14 pm IST