AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More
0

5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதேசமயம், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்க

தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களில் ஜூலை 31, 2026 மற்றும் ஆகஸ்ட் 1, 2026 சனிக்கிழமையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 31, 2026 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ கண்காணிக்க குழு – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்ளிட்ட 7 நிபுணர்கள்..

எல் நினோ தாக்கத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு குறைதல், கடும் வெப்பம், வறட்சி அல்லது சில இடங்களில் அதிக மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், அவற்றை அறிவியல் அடிப்படையில் கண்காணித்து பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சில்லென மாறிய சென்னை.. 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..

ஜூலை 31-ஆம் தேதி கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நீடிக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை ?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயில் ஒருபக்கம்.. கொட்டும் மழை ஒருபக்கம் – அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு, 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை 28, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 2, 2026 தேதி வரை 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. எத்தனை மாவட்டங்களில் கனமழை இருக்கும்?

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, வட கடலோரத் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தப்போகுது.. மழையும் இருக்கு.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!

TN Rain Forecast: தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலக் கீழ்மட்டக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென மாறும் வானிலை.. தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!

IMD Weather Forecast: தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரையில் கொளுத்திய வெயில்.. கரூரில் 6.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவான வெப்பநிலை..

ஜூலை 25, 2026: தமிழகத்தில் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 39 டிகிரி செல்சியஸ், நாகையில் 38.7 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸ், கரூரில் 38.5 டிகிரி செல்சியஸ், வேலூர் மற்றும் திருத்தணியில் தலா 38.1 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 38 டிகிரி […]

மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பொளக்கப்போகும் வெயில்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் அவ்வப்போது ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

Tamil Nadu Weather: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு? வெப்பநிலை எப்படி இருக்கும்?

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.