AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!

Weather forecast: வட தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என கூறியுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வரும் நாட்களில் அதிகரிக்கும் வெப்பநிலை..

இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20 ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம்?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் சற்றே மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இயல்பான நிலையில் இருக்கும். அதே சமயம், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம்.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் சில மாவட்டங்களில் கனமழை ஏற்படக்கூடும். குறிப்பாக பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 19ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

21ஆம் தேதி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 22ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை இருக்குமா? தொடரும் பனிமூட்டம்..

Tamil Nadu Weather Update: கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக பிப்ரவரி 18ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

Rain Alert : அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதன் காரணமாக தமிழ்நாடு 2 நாட்களு்ககு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகுது மழை.. வானிலை நிலவரம்..

Weather Update: பிப்.15 இன்று முதல் பிப்.19 வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதிகாலையில் கொட்டும் பனி.. இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வறண்ட வானிலை இருந்தாலும், அதிகாலை வேளையில் பனிமூட்டத்தின் தாக்கம் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த சூழலில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும்.

வளிமண்டல காற்று சுழற்சி.. 5 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamilnadu weather update: பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் 15 ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Low Pressure Alert : தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 15, 2026 அன்று இந்திய பெருங்கடலின் அருகிலும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன் பிரதீப் ஜான் ரிப்போர்ட்..

Weather update: நாளை (பிப்.13) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

அதிகாலை நடுங்க வைக்கும் குளிர்.. கொட்டப்போகும் மழை.. வானிலை அப்டேட்!!

Weather update: பிப்.13ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்

அதிகாலையில் ஏன் இந்த பனிமூட்டம்? இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? வானிலை ரிப்போர்ட்

Tamil Nadu Weather Update: அதிகபட்ச வெப்பநிலைப் பொறுத்தவரையில், ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட குறைவாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகளவு பனி மூட்டத்துக்கு காரணம் என்ன…வானிலை மையம் விளக்கம்!

Meteorological Department : சென்னையில் இன்று அதிகாலை அதிகளவு பனி மூட்டம் நிலவியதற்கான காரணம் என்ன என்பதை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பனி மூட்டம் இந்த மாத இறுதி வரை நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .