AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Sivasankari Bose

Sivasankari Bose

Senior Sub-Editor

sivasankari.subash@tv9.com

தந்தையின் வழிகாட்டுதல் படி, அடியெடுத்து வைத்த தனக்கு ஊடகத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம். பட்ட மேற்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பிரபல தமிழ் செய்தி தாளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு, குற்றச்செய்திகள், மாநில மற்றும் உலகச் செய்திகளை பிரத்யேகமாக எழுதுவதில் ஆர்வம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனங்களில் மாவட்ட செய்திகளின் பொறுப்பாளராகவும், செய்தியாளராகவும் இருந்த தனக்கு நேர்காணல் செய்யும் அனுபவமும் உண்டு. தற்போது TV9 TAMIL -ல் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிகிறார்.

Read More
ரயில் பயணிகளுக்கு உற்சாக அறிவிப்பு:  திண்டிவனத்தில் நிற்கும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

ரயில் பயணிகளுக்கு உற்சாக அறிவிப்பு: திண்டிவனத்தில் நிற்கும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

Tindivanam Station: சென்னை எழும்பூர்–தஞ்சாவூர் (16865/16866) மற்றும் சென்னை எழும்பூர்–மங்களூரு (16159/16160) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும் 2026 மார்ச் 16-ந் தேதி முதல் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை இருந்து செல்லும் மற்றும் திரும்பும் இரு திசைகளிலும் அதிகாலை நேரங்களில் தலா 2 நிமிடங்கள் ரெயில்கள் நிறுத்தப்படும்.

பாசி பிடித்த தண்ணீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம்: கடும் எச்சரிக்கை

பாசி பிடித்த தண்ணீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம்: கடும் எச்சரிக்கை

Food Safety Department: பாசி பிடித்த அல்லது அசுத்தமான 20 லிட்டர் குடிநீர் கேன்களில் தண்ணீர் விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. குடிநீர் கேன்களில் நிறுவன பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் FSSAI உரிமம் எண் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.

சிலிண்டர் தட்டுப்பாடு: கோயம்பேடு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு.. என்ன நடந்தது?

சிலிண்டர் தட்டுப்பாடு: கோயம்பேடு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு.. என்ன நடந்தது?

Stockpile Rises at Koyambedu Market:ஹோட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படாமல் இருப்பதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் சுமார் 2000 டன் அளவுக்கு வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சந்தையில் தேங்கி கிடக்கின்றன என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Food Trip திட்டமிடுகிறீர்களா? மார்ச் 2026ல் திறந்த இந்தியாவின் புதிய உணவகங்கள் இதோ!

Food Trip திட்டமிடுகிறீர்களா? மார்ச் 2026ல் திறந்த இந்தியாவின் புதிய உணவகங்கள் இதோ!

New Restaurants India 2026: மார்ச் 2026ல் இந்தியாவின் பல நகரங்களில் புதிய உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மும்பை, கோவா மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் உலகளாவிய மற்றும் பாரம்பரிய சுவைகள் இணைந்த உணவுகள் வழங்கப்படுகின்றன. புதிய உணவு அனுபவத்தை தேடும் விருந்தினர்களை இவ்வுணவகங்கள் அதிகமாக ஈர்த்து வருகின்றன.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?

Tamil Nadu Weather Update: தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குடும்ப ஆட்சிக்கு முடிவு வரும்” – தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என பாஜக நம்பிக்கை

“குடும்ப ஆட்சிக்கு முடிவு வரும்” – தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என பாஜக நம்பிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கஞ்சா புழக்கம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, வரும் தேர்தலில் NDA ஆட்சி அமைவது உறுதி என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். நடிகர் விஜய் கூட்டணி குறித்து தமக்கு தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

நீளும் வெப்ப அலை: இந்தியாவில் அச்சம் தரும் புதிய வானிலை மாற்றம்

நீளும் வெப்ப அலை: இந்தியாவில் அச்சம் தரும் புதிய வானிலை மாற்றம்

Changing Heatwave Patterns in India: இந்தியாவில் வெப்ப அலைகள் முன்பைவிட சீக்கிரமாக தொடங்கி நீண்ட நாட்கள் நீடிக்கும் நிலை கவனிக்கப்படுகிறது. இரவு நேரங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பதால் மக்களுக்கு கிடைக்கும் இயற்கை குளிர்ச்சி குறைந்து வருகிறது. வெப்ப அலை தாக்கம் விரிவடைவது வானிலை ஆய்வுகளில் முக்கியமாக பதிவாகியுள்ளது.

பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸை கடந்து குழந்தை பெற்றெடுத்த பெண்..!

பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸை கடந்து குழந்தை பெற்றெடுத்த பெண்..!

Fertility Journey: பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் காரணமாக பல ஆண்டுகள் கருத்தரிக்க முடியாமல் தவித்த பெண், இரண்டு ஐவிஎப் முயற்சிகளும் தோல்வியடைந்தார். நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்பான ‘சிகாகோ’ பரிசோதனை மூலம் பிரச்சினை கண்டறியப்பட்டது. இரண்டு முறை ஐவிஎப் சிகிச்சை எடுத்தும் ஒரு முறை கருக்கலைப்பு ஏற்பட்டதும், மற்றொரு முறை கரு வளர்ச்சி ஏற்படாததாலும் 2024ஆம் ஆண்டில் குழந்தை பெறும் நம்பிக்கை அவர்களுக்கு குறைந்தது.

இயற்கை முறையில் பொலிவான சருமத்தைப் பெற எளிய வழிமுறைகள்

இயற்கை முறையில் பொலிவான சருமத்தைப் பெற எளிய வழிமுறைகள்

Naturally Glowing and Healthy Skin: முறையான நீர்ச்சத்தும், சத்தான உணவுப் பழக்கமும் சருமத்தின் இயற்கை பொலிவை மீட்டெடுக்க உதவும் அடிப்படைத் தேவைகளாகும். போதிய உறக்கம் மற்றும் தூய்மையான பராமரிப்பு முறைகள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் சோர்வையும் நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.

வீட்டில் இருந்த நகையை காதலனுக்கு கொடுத்த மாணவி… திருப்பி கேட்டதால் தாய்க்கு நேர்ந்த கொடூர தாக்குதல்!

வீட்டில் இருந்த நகையை காதலனுக்கு கொடுத்த மாணவி… திருப்பி கேட்டதால் தாய்க்கு நேர்ந்த கொடூர தாக்குதல்!

Nagercoil Crime: நாகர்கோவிலில் கல்லூரி மாணவி தனது காதலனின் அவசர தேவைக்காக வீட்டில் சேமித்து வைத்திருந்த 10 பவுன் நகைகளை கொடுத்ததாக தெரிவித்தார். நகைகளை திருப்பி கேட்டு தாய் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காதலன் உருட்டு கட்டையால் தாக்கியதுடன், மாணவியும் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகன் வழிபாடு: பங்குனி உத்திரத்திருநாள் எப்போது வருகிறது?

முருகன் வழிபாடு: பங்குனி உத்திரத்திருநாள் எப்போது வருகிறது?

Panguni Uthiram 2026: பங்குனி உத்திரம் இந்துக்களின் முக்கிய ஆன்மீக திருநாளாக கருதப்படுகிறது. முருகப் பெருமான் மற்றும் தெய்வயானையின் திருமணம் நடைபெற்ற நாளாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. 2026 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் 01 அன்று கொண்டாடப்படுகிறது. “ஓம் சரவண பவாய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது முக்கியமானதாக கூறப்படுகிறது.

‘உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம்’ – ஒரு அழைப்பில் ரூ.10 லட்சம் பறித்த சைபர் கும்பல்

‘உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம்’ – ஒரு அழைப்பில் ரூ.10 லட்சம் பறித்த சைபர் கும்பல்

Cyber Fraud: மும்பை போலீஸ் என கூறிய மர்மநபர் ‘டிஜிட்டல் கைது’ என்று மிரட்டி மோசடி செய்தார். வேலூர் ஓய்வுபெற்ற ஆசிரியை பல தவணைகளில் ரூ.10 லட்சம் அனுப்பினார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.