தந்தையின் வழிகாட்டுதல் படி, அடியெடுத்து வைத்த தனக்கு ஊடகத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம். பட்ட மேற்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பிரபல தமிழ் செய்தி தாளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு, குற்றச்செய்திகள், மாநில மற்றும் உலகச் செய்திகளை பிரத்யேகமாக எழுதுவதில் ஆர்வம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனங்களில் மாவட்ட செய்திகளின் பொறுப்பாளராகவும், செய்தியாளராகவும் இருந்த தனக்கு நேர்காணல் செய்யும் அனுபவமும் உண்டு. தற்போது TV9 TAMIL -ல் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிகிறார்.
எடை குறைப்பிற்கான சிறந்த உணவுமுறை எது? வெளியான புதிய ஆய்வு
Low-Fat Vegan Diet: புதிய ஆய்வு, குறைந்த கொழுப்புள்ள சைவ உணவுமுறை எடை குறைப்பில் மெடிட்டரேனியன் உணவதைவிட பயனுள்ளதாக கூறுகிறது. சுமார் 6 கிலோ எடை குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. தாவர உணவுகள் உடலின் அமிலத்தன்மையைக் குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
- Sivasankari Bose
- Updated on: Jul 26, 2025
- 12:00 pm
பனி லிங்கத்தை தரிசிக்க திரளும் பக்தர்கள்.. அமர்நாத் யாத்திரை: 3.60 லட்சம் பேர் தரிசனம்
Amarnath Yatra 2025: அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.60 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். பனிலிங்க தரிசனம் ஆன்மிக ரீதியாக மக்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. பக்தர்களின் தினசரி வருகை, இந்த யாத்திரையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டின் வருகை, கடந்த ஆண்டின் 5.10 லட்சத்தினை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jul 26, 2025
- 11:14 am
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை: முக்கிய குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்..!
West Bengal youth arrested: திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்குவங்காளத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சிறுமி அவர் குற்றவாளி என அடையாளம் கூறியதைத் தொடர்ந்து, போலீசாரிடம் இளைஞர் வன்கொடுமையை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jul 26, 2025
- 10:51 am
சென்னையில் அதிர்ச்சி: மதுபோதை தகராறில் தாக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு…
Chennai Sub-Inspector death: சென்னையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மீது இருவர் தாக்குதல் நடத்தியதால், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக எழும்பூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sivasankari Bose
- Updated on: Jul 26, 2025
- 9:35 am
ரிதன்யா வழக்கு: கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைத்த ஐகோர்ட்..!
Rithanya dowry death case: ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜாமீன் மனுவை திருப்பூர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர்கள் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு வழங்கி, விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
- Sivasankari Bose
- Updated on: Jul 26, 2025
- 9:04 am
நெல்லை காவலர் குடியிருப்பில் நகை திருட்டு வழக்கில் திருப்பம்… போலீஸ்காரர் கைது..!
Nellai Policeman Arrested: தென்காசியைச் சேர்ந்த பெண் போலீசாரான தங்கமாரியின் வீட்டில் 30 பவுன் நகை திருடப்பட்டது. விசாரணையில் அவரது நண்பரான போலீஸ்காரர் மணிகண்டன் மற்றும் முகமது அசாருதீன் குற்றவாளிகள் என தெரியவந்தது. ஆன்லைன் ரம்மியில் பண இழந்ததால் திருட்டு திட்டமிட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- Sivasankari Bose
- Updated on: Jul 26, 2025
- 7:57 am
திருப்பத்தூரில் எல்இடி டிவி வெடித்து தீ விபத்து – நடந்தது என்ன?
LED TV Explosion: திருப்பத்தூர் அருகே ஒரு வீட்டில் டிவி வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவால் ஏற்பட்ட தீயில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன. அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை வைத்துள்ளார். தீ விபத்து ஏற்பட்டால் மின்சாரம் துண்டித்து, 101 என்ற எண்ணுக்கு அழைத்து தீயணைப்பு உதவியை பெற வேண்டும்.
- Sivasankari Bose
- Updated on: Jul 26, 2025
- 7:21 am
கள்ளக்காதலுக்காக 4 வயது மகளை கொன்ற தாய் – கோவையில் அதிர்ச்சி
Coimbatore mother arrested: கள்ளக்காதலுக்காக 4 வயது மகளை கழுத்து நெரித்து கொன்ற தாயை கோவை போலீசார் கைது செய்தனர். வசந்த் என்ற இளைஞருடன் தன்னுடைய உறவைத் தொடர வேண்டும் என்பதால் இந்த கொலையைத் திட்டமிட்டார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தமிழரசியின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- Sivasankari Bose
- Updated on: Jul 26, 2025
- 6:56 am
மன அழுத்தத்தைக் குறைக்க 5-4-3-2-1 கிரவுண்டிங் டெக்னிக்: பதட்டத்தை உடனே தணிக்கும் எளிய முறை!
5-4-3-2-1 Grounding Technique: பதட்டம் அல்லது மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் போது, 5-4-3-2-1 அடிப்படை நுட்பம் உதவியாக இருக்கும். இந்த எளிய நுட்பம் உங்கள் ஐம்புலன்களைப் பயன்படுத்தி, நிகழ்காலத்திற்கு உங்களை மீண்டும் கொண்டு வரும். இது மூளையின் செயல்பாட்டை மாற்றி, பதட்ட எண்ணங்களிடமிருந்து உங்களைத் தற்காலிகமாக விடுவிக்கும்.
- Sivasankari Bose
- Updated on: Jul 23, 2025
- 2:30 pm
புனித ஸ்தலங்களுக்கு போறீங்களா? தமிழக அரசு ரூ.10000 அறிவிப்பு…
Tamil Nadu announces: தமிழ்நாடு அரசு, 120 சிறுபான்மையினருக்கான புனித பயண நிதி உதவியாக 12 ரூபாய் இலட்சம் வழங்குகிறது. பயணிக்க விரும்புபவர்கள் www.bcmbcmw.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ECS மூலம் நேரடி பணமாற்றம் செய்யப்பட்டு பயணிகள் பயனடைவார்கள். பயணத்திற்கான முக்கிய தலங்கள் இந்தியா மற்றும் நேபாளம், பாகிஸ்தானில் உள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Jul 23, 2025
- 1:49 pm
கோடை காலத்தில் தப்புமா தமிழகம்..? அணைகளில் இருக்கும் 185 டி.எம்.சி..!
Tamil Nadu dams fill up: தமிழகத்தில் அணைகளில் 82.91% நீர் இருப்பு உள்ளது. குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. வருங்கால மழை மூலமாக மேலும் நீர் வளம் பெருகும் என நம்பிக்கை நிலவுகிறது. 14,141 பாசன ஏரிகளில் 422 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் மழை வருமானால் வறண்ட ஏரிகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jul 23, 2025
- 1:00 pm
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்குமா? ஆய்வு எச்சரிக்கை!
Smartphone Use Before 13: 13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மனநலப் பிரச்னைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறது. அதிக திரை நேரம் மூளை வளர்ச்சியை பாதித்து, சமூகத் திறன்களைக் குறைக்கிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கலாம்.
- Sivasankari Bose
- Updated on: Jul 23, 2025
- 12:30 pm