AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு (LPG) இன்றைய நவீன வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. எல்பிஜி என்பது புரொப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களின் கலவையாகும். தூய்மையான மற்றும் திறமையான எரிபொருளான வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் 14.2 kg எடையில், கோடிக்கணக்கான இல்லங்களில் அன்றாடச் சமையலுக்குப் பெரிதும் உதவுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஆற்றல் மூலமாகும். இது மிகக் குறைந்த அழுத்தத்தில் திரவமாக்கப்பட்டு சிலிண்டர்களில் அடைக்கப்படுகிறது. ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உணவு தயாரிப்புகளுக்குப் பெரிய அளவிலான வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்கள் 19 Kg எடையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. இதன் விலையைத் தீர்மானிப்பதில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Read More

ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அரசு.. 5கிலோ சிலிண்டர் இரட்டிப்பு.. யாருக்கு தெரியுமா?

மேற்கு ஆசியா போர் சூழல் காரணமாக எல்பிஜி தொடர்பான குழப்பங்களும், நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5கிலோ இலவச தடையற்ற வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் தினசரி ஒதுக்கீட்டை மத்திய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. இது தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது

5 கிலோ மினி சிலிண்டர்களின் விலை உயர்வு – எவ்வளவு தெரியுமா?

Mini LPG Cylinder Price Hike: நாடு முழுவதும் 5 கிலோ எடை கொண்ட மினி சிலிண்டர்களின் விலை ரூ. 51 வரை உயர்ந்துள்ளது. தற்போது பெருநகரங்களில் 5 கிலோ மினி சிலிண்டர்கள் தற்போது ரூ.470  முதல் ரூ.500 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கேஸ் சிலிண்டர் புக் பண்ணப்போறீங்களா? ரூ.200 சலுகை வழங்கும் பேடிஎம் – எப்படி பெறுவது?

Gas Booking Offer: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பேடிஎம் நிறுவனம் கேஸ் சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 தள்ளுபடி அறிவித்துள்ளது. அதனை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… எவ்வளவு தெரியுமா?

Commercial LPG Cylinders Price Hike: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், ஏப்ரல் மாதத்திற்கான விலையை இன்று மாற்றியமைத்த எண்ணெய் நிறுவனங்கள் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன.

எல்.பி.ஜி பற்றாக்குறை: மண்ணெண்ணெய் விதிகளில் தளர்வு.. 60 நாட்களுக்கு அவசர விநியோகம் தொடக்கம்

மண்ணெண்ணெய் விநியோகம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் குறிப்பிடும் நிலையங்களில் மட்டுமே வழங்கப்படும். இது வீட்டு பயன்பாடுகளான சமையல் மற்றும் விளக்கிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்ந்து பின்பற்றப்படும்.

இனி சிலிண்டர் தேவையில்லை.. குழாய் வழி எரிவாயு இணைப்பு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

Piped Natural Gas: தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் தொழில் துறை தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

குழாயில் வரும் கேஸ்.. எல்பிஜிக்கு மாற்றாகும் பிஎன்ஜி.. எப்படி கிடைக்கும்? அரசு சொல்வது என்ன?

PNG Details : ​​போர் காரணமாக மேற்கு ஆசியாவில் கடுமையான நெருக்கடி நிலவுகிறது. இதன் பின்னணியில், பல நாடுகளில் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சிக்கல் இல்லை என்றாலும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்

Government Clarifies Fuel Shortage Rumour : இந்தியாவில் 2 மாதங்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்புகள் உள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை நிலவுவதாகப் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பதிலளித்துள்ளது.

இந்தியா முழுவதும் எரிவாயு பைப்லைன் விரிவாக்கம்.. மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த உத்தரவு..

மேலும், நுகர்வோருக்கு இயற்கை எரிவாயு வழங்க, பெரிய பரிமாற்ற குழாய்களில் இருந்து அல்லது எல்என்ஜி (Liquefied Natural Gas) சேமிப்பு நிலையங்களில் இருந்து கிளை குழாய்கள் அமைத்தல் அவசியமாகும். இவை சிறிய குழாய்கள் வலையமைப்பாக அமைந்து இறுதியில் நுகர்வோருக்கு சேவை வழங்கும்.

மாநிலங்களுக்கு வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்திய மத்திய அரசு.. ஹோட்டல், டீ கடைகளுக்கு குட் நியூஸ்!!

Commercial LPG allocation raises: இந்நிலையில், மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 20% ஒதுக்கீட்டுடன், தற்போது கூடுதலாக 20% வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மேலும் 10% வரை வழங்கப்படலாம். ஒட்டுமொத்தமாக 50% வரை எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி – திருவண்ணாமலை கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்

Gas Shortage Impact Temple : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது கோவில்களிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளன. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் கடல்வழி பிரச்னை – இந்தியாவுக்கு நல்ல செய்தி – புதிய எண்ணெய் பாதையை திறந்த சவுதி அரேபியா

Saudi Oil Supply: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் கடல் வழி மூடப்பட்டுள்ளதால் இந்தியா முழுதும் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில், சவுதி அரேபியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க புதிய மாற்று பாதையை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

ஆட்டோவுக்கான எரிவாயுவை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பும் மக்கள் – என்ன நடக்கும் தெரியுமா?

Cylinder Shortage Crisis : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் ஆட்டோக்களுக்கு நிர்ப்பும் சிஎன்ஜி எரிவாயுவை, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரில் நிரப்பி வருகின்றனர். இது கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

LPG Crisis: கத்தாரிலிருந்து இந்தியா வந்த 46,000 மெட்ரிக் டன் எல்பிஜி.. எத்தனை சிலிண்டர்களை நிரப்பும் தெரியுமா?

LPG : சமையல் எரிவாயு நெருக்கடிக்கு மத்தியில், கத்தாரிலிருந்து 46,000 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றி வந்த 'ஷிவாலிக்' என்ற இந்தியக் கப்பல் திங்களன்று இந்தியா வந்தடைந்தது. இது நாட்டிற்கு எரிவாயுவை வழங்கும்? கொண்டு வந்துள்ள 46,000 மெட்ரிக் டன் எல்பிஜியைக் கொண்டு எத்தனை சிலிண்டர்களை நிரப்ப முடியும் என்பதை பார்க்கலாம்

சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு கண்டனம்.. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்!!

DMK Alliance Stages Protests: மும்மொழிக் கொள்கையைத் திணித்துத் தமிழ் மொழியைப் புறக்கணிக்க முயல்வது. இப்படித் தமிழகத்தைப் புறக்கணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகரங்கள், ஒன்றியங்கள் மற்றும் பேரூர்களில் இப்போராட்டம் நடைபெறுகிறது.