குறைந்து வரும் மக்கள் தொகை மற்றும் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ள பிறப்பு விகிதத்தை எதிர்கொண்டு வரும் சீனா, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான துணை சாட்பாட்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, சிறார்களிடம் உணர்ச்சி சார்ந்த சார்புநிலையை உருவாக்கும் வகையிலோ, மெய்நிகர் காதல் அல்லது குடும்ப உறவுகளை உருவாக்கும் வகையிலோ AI சாட்பாட்கள் செயல்படக் கூடாது. மேலும், பயனர் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை எதிர்கொண்டால், அவரது பாதுகாவலர் அல்லது அவசர தொடர்பு நபரை நிறுவனங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.