AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Aadi Masam

Aadi Masam

ஆடி மாதம் என்பது தமிழ் மாத நாட்காட்டியின்படி 4வது மாதமாகும். இம்மாதம் இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மிக மாதம் என அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை சூரிய பகவான் இம்மாதத்தில் கடக ராசியில் பிரவேசிக்கிறார். ஆடி மாதம் என்பது பெண் தெய்வங்களுக்குரிய காலமாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அனைத்து விதமான அம்மன் கோயில்களில் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என நடைபெறும். ஆடி மாதம் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற மாதம் இல்லை என சொல்லப்பட்டாலும் இந்த காலக்கட்டம் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி என பல சிறப்பு நிகழ்வுகள் உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆடி மாதம் ஆன்மிக சுற்றுலாவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முன்னோர் வழிபாட்டில் மிக முக்கிய விசேஷ நாளாக பார்க்கப்படும் ஆடி அமாவாசையும், சுமங்கலி பெண்களின் மிக முக்கிய நாளான கடைசி வெள்ளிக்கிழமை சுமங்கலி விரதமும் என முக்கிய தினங்களும் வருகிறது. அப்படியான ஆடி மாதம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.

Read More

வெளிநாடு செல்ல வாய்ப்பு.. வேண்டுதலை நிறைவேற்றும் மாரியம்மன்!

சிதம்பரம் அருகேயுள்ள நஞ்சை மகத்து வாழ்க்கை பனங்காடு மாரியம்மன் கோயிலின் வரலாறு பற்றிக் காணலாம். ஆங்கிலேயர் காலத்தில் தோன்றிய இந்தக் கோயில், வெளிநாடு செல்ல விரும்புவோர் மற்றும் குழந்தைப் பேறு வேண்டி பலர் வழிபடும் தலமாக உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் சூரிய ஒளி சிலைகள் மீது படும் அற்புத நிகழ்வும் இங்கு நடைபெறுகிறது.

Coonoor: வாழ்க்கை பிரச்னைகளை போக்கும் தந்தி மாரியம்மன் கோயில்!

நீலகிரி மாவட்டம் கூன்னூரில் உள்ள மேல்கடை வீதியில் அமைந்துள்ள தந்தி மாரியம்மன் கோயில், ஆங்கிலேயர் காலத்தில் தோன்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகும். சிறுமியாக தோன்றிய அம்மன், சுயம்புவாக இங்கு வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது. மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கும் இங்கு வருகை தந்து பிரார்த்தனை செய்கின்றனர்

வாழ்க்கையை வளமாக்கும் அந்தியூர் பத்ர காளியம்மன் கோயில்!

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் 2000 ஆண்டுகள் பழமையான தலமாகும். இக்கோயில் பாண்டிய மன்னர்களால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாகப்பாம்பு வடிவில் பசுவின் பால் குடித்த காளியம்மன், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயில் ராகு தோஷ நிவர்த்திக்கும் பிரசித்தி பெற்றது என ஐதீகமாக உள்ளது.

Aadi Tuesday: ஆடி மாத கடைசி செவ்வாயும், குங்கும அர்ச்சனை வழிபாடும்!

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். குழந்தைகளுக்கான கன்னிகா பூஜை, சுமங்கலிப் பெண்களுக்கு விருந்தளித்தல், குங்கும அர்ச்சனை போன்றவற்றைச் செய்வதன் மூலம் குடும்பத்தில் செல்வம், மகிழ்ச்சி பெருகும் என நம்பப்படுகிறது. அம்மனுக்குரிய மந்திரங்கள், பாடல்களைச் சொல்லி குங்கும அர்ச்சனை செய்வது பற்றிப் பார்க்கலாம்.

Angala Parameshwari: சிலிர்க்க வைக்கும் தெய்வீகம்.. இந்த அங்காள பரமேஸ்வரி கோயில் தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் அருகே அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலின் வரலாறு பொன்மேனி என்பவரின் வறுமை மற்றும் மகிசுரன் என்பவருடனான ஆதிக்கம் ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இக்கோயில் சென்னையில் இருந்து சரியாக 38 கிலோ மீட்டர் தொலைவில் அமையப் பெற்றிருக்கிறது.

சுமங்கலி வரம் அருளும் மாரியம்மன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில், சுயம்புவாக தோன்றிய அம்பாள் சிலையுடன் விளங்கும் புகழ்பெற்ற கோயிலாகும். நான்கு மலைகளுக்கு இடையே அமைந்த இக்கோயிலில் அம்பாளுக்கு எதிரே நிலைத்திருக்கும் கம்பத்தை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Varalakshmi Viratham: வரலட்சுமி விரதம்.. கலசம் வைத்து வழிபடுபவர்கள் கவனத்திற்கு!

வரலட்சுமி விரதம் ஆடி மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று கொண்டாடப்படும் முக்கியமான விழாவாக பார்க்கப்படுகிறது. கணவனின் ஆயுள், செல்வம், குடும்ப ஒற்றுமைக்காக பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். இதில் கலச வழிபாடு முக்கிய அங்கமாகும். இந்தக் கலசம் அமைக்கும் முறை பற்றிக் காணலாம்.

3 நாட்கள் கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு.. என்ன செய்ய வேண்டும்?

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. இது மூன்று நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பு வழிபாடாகும். மகாலட்சுமியை புகைப்படம், கலசம் வைத்து வீட்டிற்கு அழைத்து வந்து வழிபடலாம். வழிபாட்டு முறை, நேரம், மற்றும் மூன்று நாட்களுக்கான வழிபாட்டு விவரங்கள் பற்றிக் காணலாம்.

Aadi Pournami: ஆடி பௌர்ணமியில் பெண்கள் விரதம் இருக்கும் வழிமுறைகள்!

2025 ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி ஆகஸ்ட் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிகாலையில் நீராடி, கோலமிட்டு, விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். முழு உபவாசம் அல்லது பழம், பால் உண்டு விரதம் இருக்கலாம். அதனைப் பற்றி பார்க்கலாம்.

ஆடி பௌர்ணமி.. ஹயக்ரீவர் வழிபாடு செய்தால் பலன்கள் ஏராளம்!

ஆடிப் பௌர்ணமி, 2025 ஆகஸ்ட் 8, வெள்ளிக்கிழமை வருகிறது. இந்நாள் மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் ஹயக்ரீவர் வழிபாடு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளது. கல்வியின் அதிபதியான ஹயக்ரீவரை வழிபடுவதால், கல்வியில் தடுமாறும் குழந்தைகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

திருமண வரம் அருளும் தீப்பாய்ச்சி அம்மன்.. கோயில் எங்கே இருக்கு தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள தீப்பாச்சியம்மன் கோயில், அக்கம்மாள் என்ற பக்தியுள்ள பெண்ணின் தியாகக் கதையுடன் தொடர்புடையது. தன் கணவர் இறந்த பின்னர், அவருடன் உடன்கட்டை ஏறிய அக்கம்மாளின் பக்தியும், தோழி லட்சுமியின் உடன்பாடுமே கோயில் நிர்மாணத்திற்கு அடிப்படையாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

Varalakshmi Vratam: ஆகஸ்ட் 8ல் வரலட்சுமி நோன்பு.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

வரலட்சுமி விரதம் ஆடி மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் முக்கியமான விரதம். சுமங்கலிகள் தங்கள் கணவன், குடும்ப நலனுக்காகவும், திருமணமாகாத பெண்கள் திருமணத்தடை நீங்கவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். வீட்டில் எளிமையாக கலசம் அலங்கரித்து, பூஜை செய்யும் முறைகள் பற்றிக் காணலாம்.

ஆடிச்சுற்று வழிபாடு – இதனை செய்வதால் எவ்வளவு பலன்கள் தெரியுமா?

சங்கரன்கோயிலில் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஆடித்தபசு திருவிழா, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை விளக்கும் 10 நாள் விழாவாகும். பார்வதி தேவியின் தவத்தின் பயனாக சங்கரநாராயணர் அவதரித்த தலம் இது. முக்கிய நிகழ்வான ஆடிச்சுற்று நடைபெறுகிறது. அதனைப் பற்றி விரிவாக காணலாம்.

Aadi Pournami: 2025 ஆடி பௌர்ணமி எப்போது? – அதன் சிறப்புகள் இதோ!

2025 ஆம் ஆண்டு ஆடிப் பௌர்ணமி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாள் அம்பாள், சிவபெருமான், மற்றும் ஹயக்ரீவர் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் செல்வம், நலம், மகிழ்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வேண்டியதை நிறைவேற்றும் மகா மாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?

சோழர் கால வரலாற்றைக் கொண்ட இக்கோயில், பயிர்த் தொழில் சிறக்கவும், செல்வ வளம் பெருகவும் கட்டப்பட்டது. குழந்தைப் பேறு, உடல் நலம், அம்மை நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இங்கு வழிபாடு செய்வது நன்மையளிக்கும். தினமும் திறந்திருக்கும் இக்கோயிலில், சித்திரை மாதத்தில் பத்து நாள் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும்.