Aadi Masam
ஆடி மாதம் என்பது தமிழ் மாத நாட்காட்டியின்படி 4வது மாதமாகும். இம்மாதம் இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மிக மாதம் என அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை சூரிய பகவான் இம்மாதத்தில் கடக ராசியில் பிரவேசிக்கிறார். ஆடி மாதம் என்பது பெண் தெய்வங்களுக்குரிய காலமாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அனைத்து விதமான அம்மன் கோயில்களில் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என நடைபெறும். ஆடி மாதம் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற மாதம் இல்லை என சொல்லப்பட்டாலும் இந்த காலக்கட்டம் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி என பல சிறப்பு நிகழ்வுகள் உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆடி மாதம் ஆன்மிக சுற்றுலாவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முன்னோர் வழிபாட்டில் மிக முக்கிய விசேஷ நாளாக பார்க்கப்படும் ஆடி அமாவாசையும், சுமங்கலி பெண்களின் மிக முக்கிய நாளான கடைசி வெள்ளிக்கிழமை சுமங்கலி விரதமும் என முக்கிய தினங்களும் வருகிறது. அப்படியான ஆடி மாதம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.
ஆடி வெள்ளி: வீட்டில் லட்சுமி கடாட்சமும் செல்வமும் பெருக சுமங்கலி பூஜை செய்வது எப்படி?
Auspicious Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமையில் அதிகாலையிலேயே வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசலில் கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி மகாலட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும். பூஜை அறையில் நெய் தீபமேற்றி மலர்களால் அலங்கரித்து, லலிதா சகஸ்ரநாமம் அல்லது லட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து அம்மனை வழிபட வேண்டும்.
- Sivasankari Bose
- Updated on: Jul 29, 2026
- 15:33 pm IST
ஆடித்தபசு தரிசனம் ஏன் இவ்வளவு சிறப்பு? பக்தர்கள் நம்பும் காரணம் என்ன?
Aadi Thapasu Festival: ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா, இறை பக்தி மற்றும் ஆன்மிக ஒற்றுமையை எடுத்துரைக்கும் சிறப்பு விழாவாகும். இந்த நாளில் பக்தர்கள் இறைவனை மனமார வழிபட்டு அருளாசி பெறுகின்றனர். தலைமுறைகளாக தொடர்ந்து வரும் இந்த மரபு, தமிழர் ஆன்மிக பண்பாட்டின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jul 29, 2026
- 06:14 am IST
ஆடி வெள்ளி… அஷ்டலட்சுமி அருள் பெற எளிய பூஜை முறைகள்!
Aadi Friday Mahalakshmi: ஆடி வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் பூஜை அறையில் தாமரை கோலமிட்டு, செந்தாமரை மலர்களால் மகாலட்சுமியை பூஜிப்பது சகல சௌபாக்கியங்களையும் தரும். குத்துவிளக்கிற்குத் திலகமிட்டு கிழக்கு நோக்கி தீபமேற்றி, லட்சுமி அஷ்டோத்திரங்கள் கூறி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து குடும்ப சுபிட்சத்திற்காக வேண்டிக் கொள்ளலாம்.
- Sivasankari Bose
- Updated on: Jul 29, 2026
- 05:12 am IST
அம்மன் அருள் முழுமையா கிடைக்க… மறந்தும் இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!
Amman Temple Worship Rules: அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் போது ராஜகோபுர வாசற்படிகளை மிதிக்காமலும், கோபுரம் மற்றும் கொடிமரத்தின் நிழல்களை மிதிக்காமலும் செல்வது காவல் தெய்வங்களுக்கும் இறைவனுக்கும் செலுத்தும் மரியாதையாகும். காளியம்மன், துர்க்கை போன்ற உக்கிர தெய்வங்களை தரிசிக்கும் போதும் தீபாராதனையின் போதும் கண்களை மூடாமல் அம்மனின் திருமுகத்தை நேராகப் பார்த்து அருட்பார்வையைப் பெற வேண்டும்.
- Sivasankari Bose
- Updated on: Jul 27, 2026
- 15:01 pm IST
இரண்டு நாள் கார்த்திகை நட்சத்திரம்: ஆடி கிருத்திகை விரதம் இருக்க சரியான நாள் எது?
Special Aadi Krittigai Auspicious: ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய திருநாளாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6 மாலை தொடங்கி ஆகஸ்ட் 7 மாலை வரை நீடிப்பதால் விரதம் இருக்கும் நாளில் பக்தர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது.
- Sivasankari Bose
- Updated on: Jul 26, 2026
- 05:26 am IST
ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஏன் கூழ் ஊற்றுகிறார்கள்? வியக்க வைக்கும் காரணங்கள்!
Koozh Offered in Amman: ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் மரபு, பக்தி வழிபாட்டுடன் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் பாரம்பரியமாக கருதப்படுகிறது. கேழ்வரகு, கம்பு போன்ற சத்தான தானியங்களால் தயாரிக்கப்படும் கூழ் உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும். வேப்பிலையுடன் வழங்கப்படும் இந்த பிரசாதம் இயற்கை மருத்துவ அறிவையும் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் நினைவூட்டுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jul 24, 2026
- 12:54 pm IST
ஆடி அம்மன் வழிபாட்டில் எந்த நிற சேலை சாத்தினால் என்ன பலன் தெரியுமா?
Aadi Month: ஆடி மாதத்தில் அம்மனுக்கு சேலை சாத்துவது பக்தி மற்றும் நேர்த்திக்கடனின் அடையாளமாக கருதப்படுகிறது. சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை போன்ற ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்துவமான ஆன்மிக அர்த்தமும் நம்பிக்கையும் உள்ளது. வாழ்க்கையில் வெற்றி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் மன அமைதி வேண்டி பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப நிறங்களை தேர்வு செய்கின்றனர்.
- Sivasankari Bose
- Updated on: Jul 23, 2026
- 15:19 pm IST
கடன் பிரச்சனை தீர வேண்டுமா? ஆடி செவ்வாய் அன்று இதை செய்யுங்கள்…
Aadi Sevvai Worship: ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் அம்பாள் மற்றும் பிற தெய்வங்களின் அருள் பெற மிகவும் சக்திவாய்ந்த நாட்களாகும். இந்த விசேஷ நாளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நித்திய பிரதோஷ வேளையில் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று நெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.
- Sivasankari Bose
- Updated on: Jul 22, 2026
- 13:25 pm IST
பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடி செவ்வாய் அவ்வையார் விரதம் பற்றி தெரியுமா?
Aadi Tuesday Avvaiyar Vrat: ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் அவ்வையார் விரதம் எனப்படும் செவ்வாய் பிள்ளையார் வழிபாடு மிகவும் விசேஷமாகக் கடைபிடிக்கப்படுகிறது. ஜாதகத்தில் உள்ள செவ்வாய், நாக மற்றும் ராகு-கேது தோஷங்களை நீக்கி, கன்னிப் பெண்களுக்கு விரைவான திருமண வரத்தையும், சுமங்கலிகளுக்கு நீண்ட மாங்கல்ய பலத்தையும் இந்த விரதம் அள்ளித் தருகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jul 21, 2026
- 05:13 am IST
ஆடி ஞாயிறு வழிபாடு: அம்மன் அருளைப் பெற இதை செய்யுங்கள் போதும்!
Aadi Sunday Worship: ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் புனிதமான நாட்களாக கருதப்படுகின்றன. அதிகாலையில் நீராடி தீபம் ஏற்றி பக்தியுடன் வழிபடுவது சிறப்பான பலன்களை தரும் என நம்பப்படுகிறது. படையல், விரதம் மற்றும் தானம் செய்வது குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் பொருளாதார வளம் பெற உதவும் என்று ஆன்மிக மரபுகள் கூறுகின்றன.
- Sivasankari Bose
- Updated on: Jul 20, 2026
- 14:05 pm IST
ஆடி மாதத்தில் இந்த காரியங்களை செய்தால் முழு பலன் கிடைக்கும்…
Essential Spiritual Rituals: ஆடிப் பெருக்கு நன்னாளில் சுமங்கலிப் பெண்கள் தங்களது மாங்கல்யக் கயிற்றைப் புதிதாக மாற்றிக் கொள்ளலாம் மற்றும் ஆடி 18 அன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது மிகவும் விசேஷமானதாகும். இம்முறையில் காற்றில் பரவும் நோய்களிலிருந்து குடும்பத்தைப் பாதுகாக்க முன்னோர்கள் காட்டிய வழியில் வீட்டின் முன் வேப்பிலை கட்டி அம்மனை வழிபட வேண்டும்.
- Sivasankari Bose
- Updated on: Jul 20, 2026
- 11:53 am IST
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் பிரிக்கப்படுவதும் ஏன்?
Separating Newlyweds in Aadi Month: ஆடி மாதம் என்பது அம்மன் வழிபாட்டிற்கும் மற்றும் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கு ஏற்ப உழவுத் தொழிலுக்கும் உரிய சிறப்பான காலமாகும். இக்காலத்தில் புதுமணத் தம்பதியர் கூடினால் அடுத்த பத்து மாதங்களில், அதாவது சித்திரை-வைகாசி மாத கடுமையான கோடைக் காலத்தில் குழந்தை பிறக்கும் என்பதால் தாயின் உடல்நலன் கருதியே தம்பதியர் பிரிக்கப்படுகின்றனர்.
- Sivasankari Bose
- Updated on: Jul 18, 2026
- 12:41 pm IST
வேப்பிலை வாசமும் பக்திப் பரவசமும்: ஆடி வெள்ளியில் அம்மனின் கண் கொள்ளா தரிசனம்!
Aadi Velli Amman Temple: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்திப் பெருக்குடன் அம்மனை வழிபட்டனர். கருவறையில் வீற்றிருக்கும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- Sivasankari Bose
- Updated on: Jul 17, 2026
- 06:15 am IST
ஆடிப்பெருக்கு அற்புதம்: தீர்க்க சுமங்கலி வரம் தரும் தாலி பிரித்துக் கோர்க்கும் பாரம்பரியம்!
Aadi Perukku: வாழ்வாதாரமாக விளங்கும் நீர் நிலைகளைப் போற்றும் ஆடிப்பெருக்கு திருநாளில், புதுமணத் தம்பதியர் நதிக்கரைகளில் கூடி தாலி பிரித்துக் கோர்க்கும் பாரம்பரிய சடங்கை மேற்கொள்கின்றனர். திருமணத்தின் போது கட்டிய மஞ்சள் கயிற்றை மாற்றி புதிய கயிற்றில் மாங்கல்யத்தைக் கோர்ப்பதன் மூலம் கணவனின் ஆயுளும் தம்பதியரின் மாங்கல்ய பலமும் கூடும் என நம்பப்படுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jul 16, 2026
- 21:52 pm IST
Aadi Month Horoscope 2026: ஆடி மாதம் அமோக லாபத்தைப் பெறப்போகும் ராசிகள் எவை?
Aadi Month Horoscope 2026: ஆடி மாத சூரிய பெயர்ச்சியால் கடகம், ரிஷபம், கன்னி மற்றும் சிம்ம ராசியினருக்குப் புதிய தொழில் ஒப்பந்தங்களும், இரட்டிப்பு லாபமும், பதவி உயர்வும் தடையின்றித் தேடிவரும். மேஷம், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்குப் பணப்புழக்கம் திருப்திகரமாக இருந்தாலும், அதற்கேற்ற ஆடம்பரச் செலவுகளும் வேலைப்பளுவும் கலவையாக அதிகரிக்கும்.
- Sivasankari Bose
- Updated on: Jul 16, 2026
- 05:02 am IST