AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Aadi Masam

Aadi Masam

ஆடி மாதம் என்பது தமிழ் மாத நாட்காட்டியின்படி 4வது மாதமாகும். இம்மாதம் இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மிக மாதம் என அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை சூரிய பகவான் இம்மாதத்தில் கடக ராசியில் பிரவேசிக்கிறார். ஆடி மாதம் என்பது பெண் தெய்வங்களுக்குரிய காலமாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அனைத்து விதமான அம்மன் கோயில்களில் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என நடைபெறும். ஆடி மாதம் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற மாதம் இல்லை என சொல்லப்பட்டாலும் இந்த காலக்கட்டம் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி என பல சிறப்பு நிகழ்வுகள் உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆடி மாதம் ஆன்மிக சுற்றுலாவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முன்னோர் வழிபாட்டில் மிக முக்கிய விசேஷ நாளாக பார்க்கப்படும் ஆடி அமாவாசையும், சுமங்கலி பெண்களின் மிக முக்கிய நாளான கடைசி வெள்ளிக்கிழமை சுமங்கலி விரதமும் என முக்கிய தினங்களும் வருகிறது. அப்படியான ஆடி மாதம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாம் காணலாம்.

Read More

அமாவாசை நாளில் கடலலைகளின் சீற்றம் அதிகரிப்பது ஏன்? காரணம் இதுதான்!

New Moon: நிலவும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய வானியல் நிகழ்வே அமாவாசை தினத்தில் நடைபெறுகிறது. வழக்கமான நாட்களை விட இந்த குறிப்பிட்ட நாளில் கடலில் அலைகளின் உயரமும் சீற்றமும் கணிசமாக அதிகரிப்பதை நாம் காண முடியும். இதற்குப் பின்னணியில் இருக்கும் ஈர்ப்பு விசை மாற்றங்களை விரிவாகப் பார்ப்போம்.

வழிபாடு: அம்மனுக்கு எந்த நிற புடவை சாத்தினால் என்ன பலன்?

Aadi Amman Saree: ஆடி மாதத்தில் அம்மனுக்கு புடவை காணிக்கையாக சமர்ப்பிப்பது, பக்தி மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முக்கியமான ஆன்மிக மரபாக கருதப்படுகிறது. புடவையின் நிறங்கள் வெற்றி, வளம், அமைதி, குடும்ப நலம் போன்ற பல்வேறு நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், வழிபாட்டின் உண்மையான பலன் மனதார செலுத்தப்படும் பக்தியில்தான் இருப்பதாக ஆன்மிக அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆடிப்பெருக்கு விழா.. காவிரிக்கரையில் களைகட்டிய குலதெய்வ வழிபாடு!!

Salem Aadi Perukku Celebrations: தமிழ்நாட்டின் ஜீவநதியான காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு திருவிழா சேலம் மாவட்டத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பூலாம்பட்டி தடுப்பணைப் பகுதியில் கிராமங்களை உயிர்ப்பிக்கும் குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இதில், விவசாயிகள் நடத்திய சிறப்புப் பூஜைகளின் விவரங்கள் காணலாம்.

  • Sathis S
  • Updated on: Aug 3, 2026
  • 13:31 pm IST

ஆடி அமாவாசை திருவிழா: பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்குப் போறீங்களா?

Sorimuthu Ayyanar Temple: பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தாமிரபரணி ஆறு மற்றும் வனச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆடிப்பெருக்கு: பெண்களே தாலி கயிறு மாற்ற உகந்த நேரம் எது?

Thali Rope Time to Change: தெய்வ வழிபாடு மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் தாலி கயிறு மாற்றுவது மங்களகரமானதாக நம்பப்படுகிறது. தாலி கயிறு மாற்றும் வழக்கம் குடும்ப ஒற்றுமை, இறைநம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முக்கிய சடங்காக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு: காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் திருநாள்..!

Aadi Perukku: தமிழ் கலாச்சாரத்தில் ஆடிப்பெருக்கு என்பது நதிகளுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உயரிய திருவிழாவாக சங்க காலம் தொட்டே வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நீர்நிலைகளில் புனித நீராடி காவிரித் தாயை வழிபட்டு, சித்ரான்னங்கள் படையலிட்டு நீர் ஆதாரங்களைப் போற்றுவது பக்திப்பூர்வமான நற்பழக்கமாகும்.

ஆடி வெள்ளி: வீட்டில் லட்சுமி கடாட்சமும் செல்வமும் பெருக சுமங்கலி பூஜை செய்வது எப்படி?

Auspicious Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமையில் அதிகாலையிலேயே வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசலில் கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி மகாலட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும். பூஜை அறையில் நெய் தீபமேற்றி மலர்களால் அலங்கரித்து, லலிதா சகஸ்ரநாமம் அல்லது லட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து அம்மனை வழிபட வேண்டும்.

ஆடித்தபசு தரிசனம் ஏன் இவ்வளவு சிறப்பு? பக்தர்கள் நம்பும் காரணம் என்ன?

Aadi Thapasu Festival: ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா, இறை பக்தி மற்றும் ஆன்மிக ஒற்றுமையை எடுத்துரைக்கும் சிறப்பு விழாவாகும். இந்த நாளில் பக்தர்கள் இறைவனை மனமார வழிபட்டு அருளாசி பெறுகின்றனர். தலைமுறைகளாக தொடர்ந்து வரும் இந்த மரபு, தமிழர் ஆன்மிக பண்பாட்டின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது.

ஆடி வெள்ளி… அஷ்டலட்சுமி அருள் பெற எளிய பூஜை முறைகள்!

Aadi Friday Mahalakshmi: ஆடி வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் பூஜை அறையில் தாமரை கோலமிட்டு, செந்தாமரை மலர்களால் மகாலட்சுமியை பூஜிப்பது சகல சௌபாக்கியங்களையும் தரும். குத்துவிளக்கிற்குத் திலகமிட்டு கிழக்கு நோக்கி தீபமேற்றி, லட்சுமி அஷ்டோத்திரங்கள் கூறி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து குடும்ப சுபிட்சத்திற்காக வேண்டிக் கொள்ளலாம்.

அம்மன் அருள் முழுமையா கிடைக்க… மறந்தும் இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!

Amman Temple Worship Rules: அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் போது ராஜகோபுர வாசற்படிகளை மிதிக்காமலும், கோபுரம் மற்றும் கொடிமரத்தின் நிழல்களை மிதிக்காமலும் செல்வது காவல் தெய்வங்களுக்கும் இறைவனுக்கும் செலுத்தும் மரியாதையாகும். காளியம்மன், துர்க்கை போன்ற உக்கிர தெய்வங்களை தரிசிக்கும் போதும் தீபாராதனையின் போதும் கண்களை மூடாமல் அம்மனின் திருமுகத்தை நேராகப் பார்த்து அருட்பார்வையைப் பெற வேண்டும்.

இரண்டு நாள் கார்த்திகை நட்சத்திரம்: ஆடி கிருத்திகை விரதம் இருக்க சரியான நாள் எது?

Special Aadi Krittigai Auspicious: ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய திருநாளாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6 மாலை தொடங்கி ஆகஸ்ட் 7 மாலை வரை நீடிப்பதால் விரதம் இருக்கும் நாளில் பக்தர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஏன் கூழ் ஊற்றுகிறார்கள்? வியக்க வைக்கும் காரணங்கள்!

Koozh Offered in Amman: ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் மரபு, பக்தி வழிபாட்டுடன் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் பாரம்பரியமாக கருதப்படுகிறது. கேழ்வரகு, கம்பு போன்ற சத்தான தானியங்களால் தயாரிக்கப்படும் கூழ் உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும். வேப்பிலையுடன் வழங்கப்படும் இந்த பிரசாதம் இயற்கை மருத்துவ அறிவையும் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் நினைவூட்டுகிறது.

ஆடி அம்மன் வழிபாட்டில் எந்த நிற சேலை சாத்தினால் என்ன பலன் தெரியுமா?

Aadi Month: ஆடி மாதத்தில் அம்மனுக்கு சேலை சாத்துவது பக்தி மற்றும் நேர்த்திக்கடனின் அடையாளமாக கருதப்படுகிறது. சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை போன்ற ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்துவமான ஆன்மிக அர்த்தமும் நம்பிக்கையும் உள்ளது. வாழ்க்கையில் வெற்றி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் மன அமைதி வேண்டி பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப நிறங்களை தேர்வு செய்கின்றனர்.

கடன் பிரச்சனை தீர வேண்டுமா? ஆடி செவ்வாய் அன்று இதை செய்யுங்கள்…

Aadi Sevvai Worship: ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் அம்பாள் மற்றும் பிற தெய்வங்களின் அருள் பெற மிகவும் சக்திவாய்ந்த நாட்களாகும். இந்த விசேஷ நாளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நித்திய பிரதோஷ வேளையில் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று நெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.

பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடி செவ்வாய் அவ்வையார் விரதம் பற்றி தெரியுமா?

Aadi Tuesday Avvaiyar Vrat: ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் அவ்வையார் விரதம் எனப்படும் செவ்வாய் பிள்ளையார் வழிபாடு மிகவும் விசேஷமாகக் கடைபிடிக்கப்படுகிறது. ஜாதகத்தில் உள்ள செவ்வாய், நாக மற்றும் ராகு-கேது தோஷங்களை நீக்கி, கன்னிப் பெண்களுக்கு விரைவான திருமண வரத்தையும், சுமங்கலிகளுக்கு நீண்ட மாங்கல்ய பலத்தையும் இந்த விரதம் அள்ளித் தருகிறது.