2018 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். டிஜிட்டல் மீடியாவில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அனைத்து வகையான செய்திகளையும் கொடுப்பவர். குறிப்பாக பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்துபவர். திரைப்பட விமர்சனம், பிரபலங்களுடன் தொலைபேசி நேர்காணல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Senior Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம்.. தவெக தலைவர் விஜய் நம்பிக்கை!
1967,1977 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் மாற்றம் போல 2026 சட்டமன்ற தேர்தலிலும் நிகழும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். MY TVK என்ற உறுப்பினர் செயலி அறிமுக விழாவில் பேசிய அவர் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 30, 2025
- 3:33 pm
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு.. அமலாக்கத்துறை முன் பிரகாஷ்ராஜ் ஆஜர்!
அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியது தொடர்பான விசாரணைக்காக நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் இன்று (ஜூலை 30) ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் முன் ஆஜரானார். அவர் தனது வழக்கறிஞருடன் பஷீர்பாக்கில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்தார். விரைவில் ராணா டகுபதி, லட்சுமி மஞ்சு ஆகியோரும் வரும் நாட்களில் நேரில் ஆஜராகி பதிலளிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 30, 2025
- 3:06 pm
Kaveri Amman: ஆடிப்பெருக்கு நாள்.. கண்டிப்பாக வழிபட வேண்டிய கோயில் இதுதான்!
Aadiperukku Worship: திருச்சியில் உள்ள காவேரி அம்மன் கோயில், ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் இருந்து கரை ஒதுங்கிய அம்மன் சிலை இக்கோயிலில் வீற்றிருக்கிறது. ஆடிப்பெருக்கு நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நீர்வளம், குடும்ப நலன், விவசாயம் போன்றவற்றிற்காக மக்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 30, 2025
- 1:20 pm
திருத்தணி முருகன் கோயில் வழிபாடு.. எவ்வளவு பலன்கள் தெரியுமா?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் கோவிலான திருத்தணி முருகன் கோயிலானது 365 படிகள் கொண்ட புனித ஸ்தலமாகும். இங்கு திருமணத் தடை நீங்கவும், நோய் தீர்வும் வேண்டி பக்தர்கள் வழிபடும் முறை பற்றி ஆன்மிக அன்பர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். அதனைப் பற்றிக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 30, 2025
- 11:53 am
Evil Eye: கண் திருஷ்டி நீக்கும் ஊமத்தங்காய் தீப வழிபாடு!
ஊமத்தங்காய் தீப வழிபாடு கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திகளை நீக்குவதற்கான பரிகாரமாக கருதப்படுகிறது. ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து ஊமத்தங்காயில் இலுப்பை எண்ணெய் விளக்கேற்றி சிவபெருமானை வழிபடுவது ஏராளமான நன்மைகளை தரும் என நம்பப்படுகிறது. அதேபோல் ஊமத்தங்காய், இலை, பூக்களை மஞ்சள் நீரில் கழுவி, வீட்டு நிலைப்படியில் கட்டலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 30, 2025
- 11:18 am
அதிமுக கூட்டணியில் யார், யார் இருக்கிறார்கள்? – எடப்பாடி பழனிசாமி பதில்
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பல கட்சிகள் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. தேர்தல் அறிவித்த பின்னர் கூட்டணியில் இருந்து யார் யார் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும் என கூறியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 29, 2025
- 5:17 pm
Astrology: திருவாதிரை நட்சத்திரத்தில் குரு.. இந்த 4 ராசிக்கு செம லக்!
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் ரிஷபம், மிதுனம், கடகம், துலாம் ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். நிதி லாபம், குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம், வெற்றி போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 29, 2025
- 5:01 pm
இலங்கை கடற்படை அட்டூழியம்.. தங்கச்சி மடம் மீனவர்கள் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களிடம் தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு மீன்பிடி சாதனங்களும் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து தங்கச்சி மடத்தில் மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று போராட்டம் நடத்தினர்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 29, 2025
- 3:55 pm
குழந்தை வரம்.. பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் சின்ன மாரியம்மன் கோயில்!
Chinna Mariamman Temple: ஈரோடு கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள 150 ஆண்டு பழமையான சின்ன மாரியம்மன் கோயில், குழந்தைகளால் கட்டப்பட்ட கூழாங்கல் கோயிலாகத் தொடங்கி இன்று பெரும் கோயிலாக வளர்ந்துள்ளது. மழை, நோய் விலகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆடி மாதம், கார்த்திகை மாதத் தேரோட்டம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 29, 2025
- 12:24 pm
Aadi Perukku Worship: ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
ஆடிப்பெருக்கு, இந்துக்களின் முக்கியமான பண்டிகையாகும். இது ஆடி மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்நாளில் வீட்டுப் பூஜை மற்றும் ஆற்றுப்படுகை வழிபாடுகளுக்கு செய்தால் பல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 30, 2025
- 9:14 am
கேரளாவில் விலைவாசி உயர்வு.. மகிளா மோர்ச்சா சார்பில் ஆர்ப்பாட்டம்!
கேரள மாநிலத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆங்காங்கே அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் பிரிவான மகிளா மோர்ச்சா சார்பில் விறகு அடுப்பில் அப்பளம் சுட்டும், உணவு செய்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 28, 2025
- 7:37 pm
முக்கொம்பு அணை வழியாக இரு கரை தொட்டு பாய்ந்தோடும் காவிரி நீர்!
கர்நாடகா மாநிலம் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் திருச்சி முக்கொம்பு அணைக்கு வரும் காவிரி நீரின் அளவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 28, 2025
- 6:17 pm