Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
TVK Party

TVK Party

கோலிவுட்டில் உச்சபட்ச நடிகராக இருப்பவர் விஜய். இவர் 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்தது. இதனை அடுத்து, 2024 ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இறங்கினார். அதாவது, கட்சி தொடங்கிய ஓராண்டிற்குள் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு, செயற்குழு கூட்டம், இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என அதிரடியாக நடத்தி முடித்தார் விஜய். குறிப்பாக, தங்கள் கட்சியின் நிலைபாட்டை எடுத்துரைத்த விஜய், தன்னுடைய கொள்கை எதிரி பாரதிய ஜனதா கட்சி என்றும் அரசியல் எதிரி திராவிட முன்னேற்ற கழகம் என்றும் அனைத்து மேடைகளிலும் கூறி வருகிறார். மேலும், திமுக மற்றும் பாஜகவை விமர்சித்தும் வருகிறார். அடுத்ததாக 2026 தேர்தலுக்கு கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்

Read More

தவெக கூட்டத்தில் உயிரிழந்த இளைஞர் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

TVK Salem Meeting Tragedy: சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட வட மாநில தொழிலாளி சூரஜ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் தவெக சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.

தவெக விருப்ப மனு வழங்க கால அவகாசம் நீட்டிப்பு..

Tamilaga vetri kalagam: கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது

விஜய்-த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து…தவெகவினர் கடும் கண்டனம்!

TVK Condemn Nainar Nagendran : தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பிரச்சனையை சந்திக்க திறனற்றவர் விஜய்- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..

விஜய்க்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விஜயை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: “ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்தால் மட்டுமே என்ன நிலைமை என்பது தெரியும். தேர்தலுக்கு முன்பாக எதையும் சொல்ல முடியாது. எந்தக் கட்சி வந்தால் நன்மை கிடைக்கும் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

விஜய்யின் சேலம் பரப்புரையின்போது ஒருவர் பலி – மஹாராஷ்டிரா நபருக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி?

TVK Rally Tragedy: சேலத்தில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  கிட்டத்தட்ட 3 மணிநேரம் வெயிலில் நின்றிருந்ததால் மயக்கமடைந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

என்னைப்போல் தனியாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி உள்ளதா.. விஜய் கேள்வி!

அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அடுத்தவர்கள் முகவரியில் நிற்பவர்கள், என்னைப்போல் தனியாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க திராணி உள்ளதா என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். 

“மக்களை சந்திக்க இடம் தர மறுக்கிறார்கள்”.. சேலத்தில் விஜய் குமுறல்!!

என்னை பார்த்து வீட்டை விட்டு வெளியே வா என்று சொல்பவர்களுக்கு விஜய் சொல்லிக்கொள்ளும் பதில், என் வீடு எங்கே இருக்கு என்று தெரியுமா? முதலில் என் வீடு எது என்று தெரியுமா? என் தாய் நாடான தமிழ்நாடுதான் என் வீடு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் குடும்பம் என்று கூறினார்.

சேலத்தில் பொதுமக்களை சந்திக்கும் விஜய்.. கடுமையான கட்டுப்பாடுகள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் சேலத்தில் இன்று பொதுமக்களை சந்திக்கிறார். கரூரில் நடந்ததை போல அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க இந்த முறை கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நுழைவிடத்தில் தீவிர சோதனை மேற்கொண்ட பிறகே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

சேலத்தில் பொதுமக்களை சந்திக்கும் விஜய்.. ஆர்வத்துடன் காத்திருக்கும் தொண்டர்கள், பொதுமக்கள்!

கரூர் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சேலத்தில் இன்று பொதுமக்களை சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அங்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியுள்ளனர். அவர்கள் தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக மிகவும் உற்சாகமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். 

“என்னால் கிடைத்த ரூ.5000”.. சந்தோஷமா வாங்கிக்கோங்க.. விஜய் பரபர அறிவிப்பு!!

TVK vijay about magalir urimai thogai: இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் புறப்பட்டார் விஜய்…தேர்தல் பரப்புரையை தொடங்க இருப்பதாக திட்டம்?

TVk Executive Meeting: தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு சென்றார். அங்கு, அவர் கூட்டத்தில் பங்கேற்பதுடன், தேர்தல் பரப்புரையை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சேலத்தில் இன்று விஜய் பிரசார கூட்டம்.. நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி!!

TVK Vijay campaign in Salem: ஈரோடு சந்திப்புக்கு பின் 55 நாட்களுக்கு பிறகு, மீண்டும் திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு, முக்கிய நிபந்தனையாக தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் 5,000 பேர் பங்கேற்ற காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

நாளை சேலத்தில் விஜய் பிரசாரம்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. தவெக வெளியிட்ட அறிவிப்பு!!

Vijay Salem campaign: தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியது. அதன்படி, முக்கிய நிபந்தனையாக தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் 5,000 பேர் பங்கேற்ற காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தவெக தலைமை நிலையச் செயலகம் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை இன்று காலை வெளியிட்டுள்ளது.

தவெகவினர் மீது தாக்குதல்.. கர்ப்பிணி உட்பட 2 பேர் ஐசியூவில் சிகிச்சை.. விஜய் கடும் கண்டனம்!!

TVK Vijay strongly condemns: தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விஜயுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா.. அறிவிப்பு எப்போது தெரியுமா? வெளியான தகவல்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள சூழலில், அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து சசிகலா ஆலோசித்து வருவதாகவும், தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.