AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
TVK Party

TVK Party

கோலிவுட்டில் உச்சபட்ச நடிகராக இருப்பவர் விஜய். இவர் 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்தது. இதனை அடுத்து, 2024 ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இறங்கினார். அதாவது, கட்சி தொடங்கிய ஓராண்டிற்குள் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு, செயற்குழு கூட்டம், இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என அதிரடியாக நடத்தி முடித்தார் விஜய். குறிப்பாக, தங்கள் கட்சியின் நிலைபாட்டை எடுத்துரைத்த விஜய், தன்னுடைய கொள்கை எதிரி பாரதிய ஜனதா கட்சி என்றும் அரசியல் எதிரி திராவிட முன்னேற்ற கழகம் என்றும் அனைத்து மேடைகளிலும் கூறி வருகிறார். மேலும், திமுக மற்றும் பாஜகவை விமர்சித்தும் வருகிறார். அடுத்ததாக 2026 தேர்தலுக்கு கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்

Read More

வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!

KP Munusamy : அதிமுகவை இனிமேல் விமர்சித்தால் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி தெரிவித்தார். மேலும், கடுமையாக விமர்சித்தார் .

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேர வழக்கு.. அடுத்ததடுத்து கைதாகும் நபர்கள்.. திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி!

TVK MLAs Bribery Case : தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ க்கள் பேர வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது வாகன ஓட்டுனரான கிருஷ்ணா என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர் .

தவெக அரசுக்கு அடுத்த செக்.. திமுகவின் ‘மாஸ்டர் பிளான்’.. அதிர்ச்சியில் கோட்டை!!

தவெகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தங்களது அதிகார எல்லையை மீறி அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து 'ஆய்வு' என்ற பெயரில் அங்குள்ள அரசு ஊழியர்களை அச்சுறுத்தி வருகின்றனர். தங்களுக்குச் சாதகமாகச் செயல்படச் சொல்லி அதிகாரிகளுக்குக் கடுமையான நிர்பந்தங்களை வழங்கி, அரசு நிர்வாகத்தை முடக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

“தவெக அரசுடன் இணைந்து செயல்படுவோம்”.. மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முதல்வரிடம் பேசுவேன்.. ஆளுநர் ஆர்லேகர் உறுதி!!

மேலும், "ஆளுநரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ உங்களுக்கு ஏதேனும் எதிர்பார்ப்புகள் இருந்தால், அதனை நீங்கள் எங்களிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம். நீங்கள் வந்து கூறினால், நாம் அனைவரும் இணைந்து கூட்டு முயற்சியாக மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்போம்" என்றும் ஆளுநர் ஆர்லேகர் தனது உரையில் உறுதியளித்தார்.

தவெக எம்எல்ஏக்கள் பேரம் விவகாரம்… விசாரணையில் சிக்கும் செந்தில் பாலாஜி- அசோக் குமார்.. போலீசார் சம்மன்!

TVK MLAs Horse Trading Issue: தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற திங்கள்கிழமை ஆஜராகுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்.. அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைகள்.. பொன் ஜெயசீலன் வெளியேறினார்!

AIADMK Former MLA Pon. Jayaseelan: அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில், கூடலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பொன். ஜெயசீலன் அந்தக் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இவர், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

வீடி புகுந்து தாக்கிய வழக்கு.. அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாததால் நீதிபதி ஆவேசம்.. புதுச்சேரி நீதிமன்றம் ஸ்ட்ரிட் உத்தரவு!

Minister Maria Wilson Case: புதுச்சேரியில் சகோதரரை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை.

கட்சியில் புதியவர்களுக்கு பொறுப்பு.. அதிரடி முடிவு எடுத்த CM விஜய்.. பனையூரில் நடக்கப்போகும் முக்கிய திருப்பம்!

முன்னதாக 132 ஆக இருந்த தவெக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை, தற்போது 137 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்களின் எல்லைகள் மற்றும் நிர்வாக வசதிக்கேற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட இந்த 137 மாவட்டச் செயலாளர்களுக்கும் தவெக தலைவர் விஜய் இன்று நேரில் சான்றுகளை வழங்கவுள்ளார்.

குமரி அணுக்கனிம திட்டம்.. “மக்களுக்கு விரோதமாக ஒருபோதும் அரசு செயல்படாது”.. அமைச்சர் டி.கே.பிரபு உறுதி!

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார். அவர் கூறியதாவது, "கன்னியாகுமரி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்குத் தமிழக அரசு என்றும் மதிப்பளிக்கும். மக்களுக்கு விரோதமான அல்லது உள்ளூர் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார் என்று கூறினார்.

கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்.. ஆனால் 10 நாட்களுக்கு.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!

DMK Ex Minister Anitha Radhakrishnan: முதல்வர் விஜயை விமர்சித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவுக்கு ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, ஆத்தூர் காவல் நிலையத்தில் 10 நாள்கள் கையெழுத்துபோடுமாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

“தவெக-வின் தாக்கத்தைக் கணிக்கத் தவறிவிட்டோம்”.. நிர்வாகிகள் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட இபிஎஸ்.. பரபர பின்னணி!!

கட்சியின் நிலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகிகளுக்குப் பொதுச்செயலாளர் சில முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, தவெக நோக்கிச் செல்லும் இளைஞர் வாக்குகளைத் தடுக்க, மாவட்டம் தோறும் உள்ள அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகத் தீவிரப்படுத்தி, புதிய இளைஞர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம்.. தவெகவில் இணையக்கோரி அழுத்தம்.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

Anitha Radhakrishnan Arrest: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம் செய்வதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தில் சேர கோரி நெருக்கடி அளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி அளித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

MK Stalin Condemned TVK Government: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கைது விவகாரத்தில் ஆளும் அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

கரூர் சம்பவம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு!!

திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பல்வேறு முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சிபிஐ விசாரணை நிலுவையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் அல்லது இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் யாரும் எதிர்கட்சிகளைக் குற்றம்சாட்டியோ, அச்சுறுத்தும் வகையிலோ பொதுவெளியில் பேசக் கூடாது.

கோயில் வேலைகளுக்கு லஞ்சமா?.. ஆதாரத்துடன் எனக்கு அனுப்புங்க.. அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு!

இந்த மின்னஞ்சலுக்கு வரும் புகார்களை உயர்மட்ட அதிகாரிகள் யாரும் மறைக்க முடியாது. புகார்கள் அனைத்தும் அமைச்சரின் தனிப்பட்ட அலுவலகப் பிரிவின் நேரடிக் கட்டுப்பாட்டில் கண்காணிக்கப்படும். புகாரில் உண்மைத்தன்மை இருக்கும் பட்சத்தில், கீழ்மட்ட ஊழியர் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை யாராக இருந்தாலும் எவ்விதப் பரிந்துரையுமின்றி உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.