
TVK Party
கோலிவுட்டில் உச்சபட்ச நடிகராக இருப்பவர் விஜய். இவர் 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்தது. இதனை அடுத்து, 2024 ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இறங்கினார். அதாவது, கட்சி தொடங்கிய ஓராண்டிற்குள் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு, செயற்குழு கூட்டம், இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என அதிரடியாக நடத்தி முடித்தார் விஜய். குறிப்பாக, தங்கள் கட்சியின் நிலைபாட்டை எடுத்துரைத்த விஜய், தன்னுடைய கொள்கை எதிரி பாரதிய ஜனதா கட்சி என்றும் அரசியல் எதிரி திராவிட முன்னேற்ற கழகம் என்றும் அனைத்து மேடைகளிலும் கூறி வருகிறார். மேலும், திமுக மற்றும் பாஜகவை விமர்சித்தும் வருகிறார். அடுத்ததாக 2026 தேர்தலுக்கு கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்
எதை மறைக்க வழக்குப்பதிவு? சமூக வலைதள கணக்காரளர்கள் கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..
Nainar Nagendran Condemns DMK: 25 சமூக வலைதளக் கணக்குகள் வைத்த நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ தன்னால் நிகழ்ந்த தவறை திரையிட்டு மறைக்க தன்னை கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம்” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 30, 2025
- 07:10 am IST
‘செந்தில் பாலாஜி தான் காரணம்’ விஜய் தொண்டர் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!
TVK Cadre Suicide In Villupuram : விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூரில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தவெக தொண்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Sep 30, 2025
- 06:20 am IST
கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுதான்… யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன் பேட்டி
Karur Stampede Update: தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- Karthikeyan S
- Updated on: Sep 29, 2025
- 19:42 pm IST
கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி – 25 சமூக வலைதள கணக்கு மீது வழக்குப்பதிவு
Karur Stampede Case: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- Karthikeyan S
- Updated on: Sep 29, 2025
- 18:17 pm IST
கரூர் சம்பவம் – பாஜக சார்பில் 8 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு – யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
Karur Stampede : கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.. இதுகுறித்து விசாரிக்க பாஜக சார்பில் எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Sep 29, 2025
- 17:21 pm IST
கரூர் சம்பவம்… எந்த ஒரு கட்சித் தலைவரும் விரும்ப மாட்டார்…. முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
Karur Tragedy : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் கேட்டுக்கொண்டார்.
- Karthikeyan S
- Updated on: Sep 29, 2025
- 14:47 pm IST
அப்படியே கிடக்கும் செருப்புகள்.. கரூரில் சோகம் மறையாத இடம்!
தவெக தலைவரின் கரூர் பிரசாரம் இந்தியா முழுவதுமே சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் சில குழந்தைகளும் அடக்கம்.இந்நிலையில் விபத்து நடந்த கரூர் பகுதி இன்னமும் சோகம் மறையாமலே உள்ளது. செருப்புகளும் கொடிகளும் ஆங்காங்கே சிதறி கிடைக்கின்றன.
- C Murugadoss
- Updated on: Sep 29, 2025
- 12:04 pm IST
யார் மீது பழிப்போடலாம் என நாங்கள் இல்லை – விமர்சனத்திற்கு கனிமொழி பதில்..
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பேசிய திமுக எம்.பி கனிமொழி, “ அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்கும். ஆனால் பிரச்சார நிகழ்ச்சிகள் என்றால் கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும். யார் மீது பழி போடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 29, 2025
- 10:38 am IST
மக்களின் அழுகுரலை கடந்துசெல்வதற்கான வழியின்றி தவிக்கிறேன் – ஆதவ் அர்ஜுனா பதிவு..
Aadhav Arjuna Post: கரூர் சம்பவத்தை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறேன். மரணத்தின் வலியையும் அந்த மக்களின் அழுகுரலையும் கடந்துசெல்வதற்கான வழியின்றி தவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 29, 2025
- 09:48 am IST
தொடரும் சோகம்.. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..
Karur Stampede: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பது 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 29, 2025
- 07:38 am IST
கரூர் விரையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்? சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டம்..
TVK Leader Vijay Visit To Karur: சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் (செப்டம்பர் 28, 2025) கூட்டத்தின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீட்டை நேரில் சென்று வழங்குவதற்காகவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 29, 2025
- 06:40 am IST
விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் – நிபுணர்கள் தீவிர சோதனை
TVK Vijay : கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடிகர் விஜய்யின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Sep 28, 2025
- 22:13 pm IST
தமிழகம் முழுவதும் நாளை கடைகள் இயங்காது – வணிகர் சங்கம் அறிவிப்பு
Karur TVK Stampede : கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் 40 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழக வணிகர் சங்கம் சார்பில் செப்டம்பர் 29, 2025 அன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Sep 28, 2025
- 19:52 pm IST
முதல் தவறு இவங்க மீது தான், ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? – அண்ணாமலை கேள்வி
Karur TVK Stampede: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Sep 28, 2025
- 18:40 pm IST
தவெக கூட்டத்தில் பங்கேற்ற மேலும் ஒருவர் மரணம்…. பலி எண்ணிக்கை உயர்வு – அதிர்ச்சி தகவல்
TVK Rally Stampede: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கவின் என்ற இளைஞர் மரணம் அடைந்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Sep 28, 2025
- 15:29 pm IST