Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை சேலத்தில் விஜய் பிரசாரம்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. தவெக வெளியிட்ட அறிவிப்பு!!

Vijay Salem campaign: தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியது. அதன்படி, முக்கிய நிபந்தனையாக தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் 5,000 பேர் பங்கேற்ற காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தவெக தலைமை நிலையச் செயலகம் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை இன்று காலை வெளியிட்டுள்ளது.

நாளை சேலத்தில் விஜய் பிரசாரம்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. தவெக வெளியிட்ட அறிவிப்பு!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Feb 2026 12:09 PM IST

சேலம், பிப்ரவரி 12: சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு நுழைவுச் சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டம் நாளை (பிப்.13) நடைபெற உள்ளது. முதலில் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், மனுவில் வரைபடம் இணைக்கப்படவில்லை உள்ளிட்ட கேள்விகளை காவல் துறை எழுப்பியிருந்தது. இதையடுத்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பதிலாக, குறிப்பிட்ட தேதியில் தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதையும் படிக்க : “ஆட்சியில் பங்கு”.. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

5,000 பேருக்கு மட்டுமே அனுமதி:

இதையடுத்து, தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியது. அதன்படி, முக்கிய நிபந்தனையாக தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் 5,000 பேர் பங்கேற்ற காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தவெக தலைமை நிலையச் செயலகம் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை இன்று காலை வெளியிட்டுள்ளது.

12 – 3 மணி வரை சந்திப்பு:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? “மக்கள் முடிவு செய்வார்கள்”.. மாணிக்கம் தாகூர் பதிலடி!

க்யூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு:

க்யூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.