DMK
திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
மதுரை மாநகராட்சி முறைகேடு மர்மம்.. எப்போது விலகும்? நயினார் நாகேந்திரன் கேள்வி..
Nainar Nagendran On Madurai: பாஜக மாநில தலைவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக குளறுபடிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் முக்கிய நகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளில் திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான மர்மம் எப்போது விலகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 18, 2025
- 07:58 am IST
முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை.. இந்த அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது? – அண்ணாமலை காட்டம்..
Annamalai On DMK Government: முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இதற்கு கடுமையான கண்டனத்தை தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், “அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 15, 2025
- 06:40 am IST
திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் பேச்சு..
Nainar Nagendran: மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “ 2026 ல் எல்லொரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும், திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினையை பேசவில்லை, பாஜக - அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணியாக உள்ளது” என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 13, 2025
- 06:40 am IST
இருமல் மருந்து நிறுவனம் தமிழகத்தில் இருந்தது கூட தெரியாத ஒரு அரசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
Edappadi Palaniswami: அக்டோபர் 9, 2025 அன்று நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தயாரித்த இருமல் மருந்தை அருந்தியதால் இந்தியாவில் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்த மருந்து நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்ததே மாநில சுகாதாரத் துறைக்கு தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 10, 2025
- 06:10 am IST
‘கை நம்மைவிட்டு போகாது’ காங்கிரஸ் – தவெக கூட்டணி? உதயநிதி ஸ்டாலின் பளீச்!
Udhayanidhi Stalin On Congress : கை நம்மை விட்டு போகாது என்று காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையும் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Oct 9, 2025
- 13:43 pm IST
எதை மறைக்க வழக்குப்பதிவு? சமூக வலைதள கணக்காரளர்கள் கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..
Nainar Nagendran Condemns DMK: 25 சமூக வலைதளக் கணக்குகள் வைத்த நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ தன்னால் நிகழ்ந்த தவறை திரையிட்டு மறைக்க தன்னை கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம்” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 30, 2025
- 07:10 am IST
அமைச்சருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என சொன்ன அன்புமணி.. காட்டமாக பதில் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்.. நடந்தது என்ன?
செப்டம்பர் 30, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட கரூர் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, “வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் […]
- Aarthi Govindaraman
- Updated on: Sep 30, 2025
- 06:40 am IST
என் மீது இவ்வளவு நம்பிக்கையா? ஒருகை பாத்திடலாம் – கான்ஃபிடெண்டாக சொன்ன விஜய்..
TVK Leader Vijay: நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், “ 2026 இல் போட்டி என்பது திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே மட்டும்தான். நண்பர்களே, நண்பிகளே, தோழர்களே, தோழிகளே என் மீது இவ்வளவு நம்பிக்கையா? பார்த்து விடலாம்... ஒரு கை பார்த்து விடலாம்” என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 27, 2025
- 16:10 pm IST
காலை உணவு திட்டம்… மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு 70% குறைவு – முதல்வருக்கு மருத்துவர் அருண் குமார் நன்றி
Dr Arunkumar Praises Breakfast Scheme: தமிழ்நாடு கல்வியில் அடைந்துள்ள சாதனைகளை சிறப்பிக்கும் வகையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து மருத்துவர் அருண் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Sep 25, 2025
- 19:50 pm IST
DMK: விஜய் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு தடையா?
DMK vs TVK: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால், 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக அமைச்சர்கள் விஜய்யைப் பற்றி பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய், திமுகவினரை நேரடியாக விமர்சித்த நிலையில் இந்த தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 23, 2025
- 12:29 pm IST
’தமிழகத்தில் பாஜகவுக்கு No Entry தான்’ திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
DMK Mupperum Vizha : கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். அதாவது, தமிழகத்தில் பாஜகவுக்கு நோ என்ட்ரி என்றும் தமிழகத்தை எப்போதும் தலைகுனிய விடமாட்டேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Sep 17, 2025
- 19:58 pm IST
DMK Mupperum Vizha: இன்று திமுக முப்பெரும் விழா.. களைகட்டிய கரூர் மாநகரம்!
கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். அண்ணா, பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் இணைந்து கொண்டாடப்படும் இந்த விழாவில், பல்வேறு தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதனால் கரூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 17, 2025
- 14:20 pm IST
பாஜகவோடு உறவாடுவது யார்? கொள்கை என சொல்லி கொள்ளையடிப்பவர் யார்? – விஜய் பரபரப்பு அறிக்கை..
TVK Vijay Statement: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ பாஜகவோடு உறவாடுவதும் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கை, கோட்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டு கொள்ளையடிப்பவர் யார்” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 14, 2025
- 22:01 pm IST
திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? திருச்சி பரப்புரையில் விஜய் சரமாரி கேள்வி..
TVK Leader Vijay Speech: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் தனது பரப்புரையின் போது, “ 2021 சட்டசபை தேர்தலில் 505 வாக்குறுதிகளை கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகம், அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது?” என சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 13, 2025
- 16:14 pm IST
எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்!
DMK Mupperum Vizha 2025: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விழாவின் முக்கியத்துவம், விழாவில் வழங்கப்படும் விருதுகள் ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 13, 2025
- 12:06 pm IST