AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
DMK

DMK

திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Read More

“ஒரு மேயரை ஜெயிச்சு காட்டுங்க பாப்போம்!”.. உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஓபன் சவால்!

மேயர் என்கிற அந்த அகங்காரமும் திமிரும் திமுக என்கிற அதிகார மமதையால் வந்தது. "மக்களுக்குத் துரோகம் செய்யும் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள்"திமுக தற்போது ஆட்சியை இழந்துவிட்டாலும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள திமுக மேயர்களும், நகராட்சித் தலைவர்களும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.

“திமுக ஆட்சியில் சரண்டர் செய்யப்பட்ட மருத்துவ இடங்கள் உதயநிதிக்கு தெரியுமா?”.. அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!

Minister Arunraj hits back udhayanidhi: கடந்த 2024-இல் 119 இடங்களும், 2025-இல் 145 இடங்களும் இவ்வாறு அகில இந்திய தொகுப்பிற்குச் சென்றதே வரலாறு ஆகும். எனவே, கடந்த ஆண்டு 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வது தடுக்கப்பட்டதாக உதயநிதி கூறுவது முற்றிலும் தவறானது.

“13ம் ஜோக்கராக இருந்தால் என்ன செய்ய முடியும்?”.. தவெக அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

இந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குத் தங்களுக்கு என்ன இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. ஒரு அமைச்சர் செய்தியாளர்களைப் பார்த்து, 'நான் சுற்றுச்சூழல் அமைச்சரா அல்லது சுற்றுலாத்துறை அமைச்சரா?' என்று கேட்கிறார். ஒரு கோமாளி அரண்மனைக்குச் செல்வதால் அவன் அரசன் ஆகிவிட முடியாது, மாறாக அந்த அரண்மனை சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்ற பழமொழி தான் இன்று தமிழ்நாட்டில் நிஜமாகியுள்ளது

“திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசமானது தான்!”.. துரை வைகோ எம்பி ஆவேசம்!

10 ஆண்டுகளாக இந்த (திமுக) கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் கடைசி நேரத்தில் எங்களது பிடிவாதம் காரணமாகக் கூட்டணித் தலைமைக்கு எந்தவொரு கஷ்டமும், அதிருப்தியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவுமே அந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது" என்றார்.

கோவையில் மக்களுக்கு உணவளித்து நன்றி தெரிவித்த செந்தில் பாலாஜி!

2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று கோயம்புத்தூர் சென்று தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

இண்டி கூட்டணியில் இணையுமாறு தவெகவுக்கு அழைப்பு… திமுகவை டீலில் விட்ட காங்கிரஸ்.. என்ன முடிவில் இருக்கிறார் விஜய்!

TVK Participating In The India Alliance: இண்டி கூட்டணியில் பங்கேற்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், முதல்வர் விஜய் பங்கேற்பார் என்றே பரவலாக கூறப்படுகிறது.

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்படுவது எப்போது.. கனிமொழி எம்.பி. கேள்வி!

Kanimozhi MP Criticizes CM Vijay: தூத்துக்குடியில் தவக நிர்வாகிகள் இருவரால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் விஜய் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து எப்பதோ பொறுப்படன் செயல்பட போகிறார் என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

தீய சக்தியும் – தீஞ்சு போன சக்தியும்.. திமுக அதிமுகவை கடுமையாக சாடிய முதல்வர் விஜய்..

ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை நான் கொடுப்பேன். ஒரே நாளில் அது நடக்காது. ஆனால் ஒரு நாள் அதை நடக்க வைப்பேன். எனக்கு இப்போது எந்த வேலையும் கிடையாது — உங்களுக்கு நல்லது செய்வதைத் தவிர என முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

தற்குறி என சொன்னவர்கள் தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளனர் – திருச்சியில் முதல்வர் விஜய் பேச்சு..

‘அரசியல் புரிதல் இல்லாமல் கவர்ச்சியில் மயங்கி வாக்களித்து விட்டார்கள்’ என கூறுகிறார்கள். மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள்; நமக்கு ஓட்டு போட்டால் கெட்டவர்கள், தற்குறிகள். அண்ணா ஆரம்பித்த கட்சியை ஒரு அடிமைக் கூடாரமாக மாற்றியது யார்? என முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலில் படுதோல்வி.. இளம் தலைமுறையினரை ஈர்க்க திமுகவின் புதிய முயற்சி!!

GenZ DMK Initiative: "அரசியலில் எதிரி ஒரு ஆயுதத்தை எடுத்து அதில் பலன் கண்டுவிட்டால், அதை எதிர்கொள்ள நாமும் அதே ஆயுதத்தைக் கையில் எடுப்பதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில், விஜய் வசமுள்ள ஜென்சி வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக எடுக்கும் இந்த முடிவு ஒரு யதார்த்தமான சரியான பாதை" என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்”.. ‘மியூட்டில்’ இருக்கும் முதல்வர்.. தமிழர் சுயமரியாதையை உரசிப் பார்க்காதீங்க.. கொந்தளித்த உதயநிதி!!

ஜனவரி மாதத்தில் 'திருவள்ளுவர் தினத்தை' தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? இத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.

தமிழக உரிமைக்கான தீர்ப்பை அரசு செயல்படுத்த வேண்டும்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

TVK Government : தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தவெக அரசு ஊசலாட்டம் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு தாங்காது “சிஎம் சார்”… சட்டம் – ஒழுங்கு குறித்து உதயநிதி காட்டமான விமர்சனம்!

Udhayanidhi Criticizes CM Vijay: சட்டம் - ஒழுங்கை பேணி காப்பது தொடர்பாக நீண்ட நேரம் எடுத்து கத்துக் கொண்டு வரும் வரை தமிழகம் தாங்காது சிஎம் சார் என்று முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தி, ஆனால்.. திராவிட கட்சிகளின் எதிர்காலம் என்ன?.. வைகோ பளீச்!

"மாநில முதலமைச்சர் என்பவர் 8 கோடி தமிழர்களின் பிரதிநிதி. அப்படிப்பட்ட ஒருவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கியும், பின்னர் உள்துறை அமைச்சர் வேண்டுமென்றே தவிர்த்திருந்தார் என்றால் அது கடுமையான கண்டனத்திற்குரியது. ஒரு முதலமைச்சரைச் சந்திப்பதற்கான வாய்ப்பை மறுப்பது முற்றிலும் தவறான அணுகுமுறை" என்று அமித்ஷாவின் போக்கைக் கண்டித்தார்.

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர் விஜய், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுக்கும் குதிரை பேர வேலைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையைத் தன்னிச்சையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட வைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.