DMK
திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் மேயர் ஆர்.பிரியா? திமுக தலைமை காட்டிய க்ரீன் சிக்னல்.. போட்டியிடும் தொகுதி இதுதான்?
Chennai Corporation Mayor R Priya : தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் ஆர். பிரியா போட்டியிட உள்ளதாகவும், இதற்கான தொகுதியை தேர்வு செய்து விட்டதாகவும், தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- Gowtham Kannan
- Updated on: Mar 7, 2026
- 17:03 pm IST
‘பாரதியார் இல்லம்’ பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கம் – தமிழக அரசு அறிவிப்பு
Bharathiyar Illam” Instagram Page: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு ‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ளது. பெண்களின் உரிமை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்திய பாரதியாரின் பங்களிப்பு குறித்து அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Mar 7, 2026
- 12:18 pm IST
கூடுதல் இடங்களை கேட்டு கூட்டணி கட்சிகள் அழுத்தம்.. தொகுதி பங்கீடு குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..
CM Stalin disscusion with the seat-sharing committee: திமுக கூட்டணியில் புதிய வரவான தேமுதிகவுக்கு ஒரு ராஜ்சபா பதவி ஒதுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Mar 7, 2026
- 08:01 am IST
புதுச்சேரியை கைப்பற்றும் நோக்கில் திமுக.. ஆயுத்த பணிகள் தீவிரம்!
புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமையகத்தில் மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஐ.சிவா தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியையும் கைப்பற்றும் நோக்கி திராவிட முன்னேற்ற கழக கட்சியினர் ஆயுத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Mukesh Kannan
- Updated on: Mar 6, 2026
- 22:29 pm IST
அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி.. செல்வப்பெருந்தகை விமர்சனம்!
அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி. அதில் தெரியாமல் சிலர் ஏறிவிட்டனர். அவர்கள் இறங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணி என்பது தமிழ்நாடு மக்களை தலை நிமிர செய்வதற்கான கூட்டணி என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Mar 6, 2026
- 21:45 pm IST
போடி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்?.. மகன் ரவீந்தரநாத் அறிவாலயத்தில் விருப்ப மனு!
Panneer Selvam and O P Ravindhranath Optional Petition Filed | தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தந்தை ஓபிஎஸ் மற்றும் தனக்கும் சேர்த்து ஓ.பி.ரவிந்தரநாத் சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Mar 6, 2026
- 21:09 pm IST
O.Panneerselvam Tamil Nadu Election: திமுகவில் இணைந்த அதிமுவின் முக்கிய முகம் ஓ.பன்னீர் செல்வம்!
Tamil Nadu Elections 2026 : அதிமுவின் முகமாக இருந்து வந்த ஓ. பன்னீர் செல்வம் அந்தக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
- Gowtham Kannan
- Updated on: Mar 5, 2026
- 13:26 pm IST
ராஜ்ய சபா தேர்தல்.. அதிமுக-திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்!
Rajya Sabha Elections Nominations: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனுக்களை அதிமுக கூட்டணியை சேர்ந்த தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் தாக்கல் செய்தனர். திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிற்பகல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர் .
- Gowtham Kannan
- Updated on: Mar 5, 2026
- 13:17 pm IST
தேமுதிக கனவு நிறைவேறியது… நாடாளுமன்றம் செல்லும் கட்சியின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே.சுதீஷ்!
DMDK Rajya Sabha Candidate: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் அந்தக் கட்சியை சேர்ந்த எல். கே. சுதீஷ் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை அவர் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
- Gowtham Kannan
- Updated on: Mar 5, 2026
- 14:23 pm IST
ராஜ்ய சபா தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்!
Congress Rajya Sabha candidate: காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதில், திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பணி புரிந்துள்ளார். இவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
- Gowtham Kannan
- Updated on: Mar 5, 2026
- 10:29 am IST
முடிவுக்கு வந்த திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு.. வெளியே வந்து முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்..
நீண்ட நாட்களாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்து வந்த தொகுதி பங்கீடு இழுபறி மார்ச் 4ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வெளியேறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் அளித்த பதில் கவனத்தை பெற்றுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Mar 4, 2026
- 23:02 pm IST
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை – டிகேஎஸ் இளங்கோவன்..
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எப்போதும் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை; காங்கிரஸ் கட்சிக்குள் தான் கருத்து வேறுபாடுகள் இருந்ததே தவிர, கூட்டணிக்குள் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின்னர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Mar 4, 2026
- 22:57 pm IST
Saidapet Constituency Election 2026: 7 முறை வெற்றி வாகை சூடிய திமுக.. இந்த முறை சைதாப்பேட்டையில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், முதல் நூறு சட்டமன்றத் தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திகழ்கிறது. இந்த தொகுதியின் எண் 23 ஆகும். இது தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.
- Aarthi Govindaraman
- Updated on: Mar 4, 2026
- 22:37 pm IST
திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு.. திருச்சி சிவா போட்டி..!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தொகுதி பங்கீடு குறித்து இன்று 2026 மார்ச் 4ம் தேதி பேசி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 2026 மார்ச் 16ம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், ஒரு இடம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், ஒரு இடம் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திருச்சி சிவா மற்றும் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Mar 4, 2026
- 22:16 pm IST
திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தமானது.. 28 இடங்கள் ஒதுக்கீடு..
DMK AND CONGRESS Alliance: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்றும், நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Mar 4, 2026
- 20:40 pm IST