Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
DMK

DMK

திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Read More

Oraniyil Tamil Nadu: திமுக உறுப்பினர் சேர்க்கை.. ஓரணியில் தமிழ்நாடு மூலம் OTP பெற உயர்நீதிமன்றம் தடை..!

DMK Oraniyil Tamil Nadu: திராவிட முன்னேற்ற கழகத்தின் 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கைக்காக ஆதார், வாக்காளர் அட்டை, வங்கி விவரங்கள் சேகரித்ததற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி தகவல்களை சேகரிப்பதாகவும், தரவு பாதுகாப்பு குறித்து தெளிவான விளக்கம் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி.. த.வெ.க சொன்ன பதில்..

ADMK - TVK - NTK: எடப்பாடி பழனிசாமி ஒற்றை எண்ணத்தை இருக்கக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம் என்றும் இந்த கருத்து தமிழக வெற்றிக்கழகத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரை த.வெ.க உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

திமுகவின் ஊழல்கள் தான் பாஜகவை வளர்த்து வருகிறது – ஆதவ் அர்ஜுனா.

TVK Party Meeting: சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு பொது செயலாளர் ஆதர் அர்ஜுனா, திமுகவின் ஊழல் தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து வருகிறது என பேசியுள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு.. ஓடிபி பெற இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..

Oraniyil Tamil Nadu: OTP விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுகையில் எதற்காக கேட்கிறார்கள்? என கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது OTPயை பெற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்.. திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பேட்டி..

Anwar Raja Pressmeet: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நிச்சயமாக மு க ஸ்டாலின் அவர்கள் தான் மீண்டும் முதலமைச்சராக வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என பேசியுள்ளார்.

கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.. பிளான் என்ன?

TN CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூலை 22, 2025 மற்றும் ஜூலை 23, 2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவுகளை தொடங்கி வைக்கிறார்.

கூட்டணி ஆட்சி.. நாங்கள் ஏமாளிகள் அல்ல.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..

Edappadi Palanisamy: இன்று அதாவது 2025 ஜூலை 20 தேதியான இன்று, திருத்துறைப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து பேசி அவர், " யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம், அது எங்கள் விருப்பம்" என பேசியுள்ளார்.

அதிமுக விரிப்பது பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம்.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி..

Minister K.N. Nehru Statement: திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமி, என்றைக்காவது பாஜகவை விமர்சித்திருக்கிறாரா? கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத கோழை பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

M.K.Muthu: கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்து மறைவு.. சோகத்தில் திமுக

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மூத்த மகனும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து உடல்நலக்குறைவான் தனது 77வயதில் இன்று (ஜூலை 19) காலமானார். அவரது மறைவு செய்தி திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் மு.க.முத்து உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

திமுக எம்.பி.க்கள் கூட்டம்: நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? என முடிவு

DMK Resolves: திமுக கூட்டத்தில், மத்திய அரசின் நிதி மற்றும் மொழித் திணிப்புகளை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டுக்கான உரிமைகள் – நிதி, கல்வி, மொழி – ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் ஒருமித்த குரலாக உரிமைகளை எழுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னையில் இன்று நடக்கும் முகாம்.. விவரம் உள்ளே..

Stalin's ungaludan stalin scheme: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மக்கள் குறைதீர்வு திட்டமாகும், இத்திட்டத்தின் மூலம் மக்கள் நேரில் புகார்களை தெரிவித்துத் தீர்வு பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் இன்று 2025 ஜூலை 18 திட்டம் முகாம் 6 வார்டுகளில் நடக்கிறது.

Tamil Nadu News Highlights: ஜூலை 19ல் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

Tamil Nadu news Today 18 July 2025, Highlights: பராமரிப்பு பணிகள் காரணமாக பெருங்குடி, வேளச்சேரி, திருமுல்லைவாயல், போரூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஜூலை 19ம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

‘சர்ச்சை வேண்டாம்.. வீண் விவாதங்களை தவிர்ப்போம்’ காமராஜர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

Trichy Siva Controversy on Kamarajar : காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த திருச்சி சிவா எம்.பிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொது வெளியில் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..

Tamil Nadu CM MK Stalin: திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “ நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கு. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும்” என பேசியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் குறித்த சர்ச்சை கருத்து.. திருச்சி சிவா சொன்ன விளக்கம்..

MP Trichy Siva: திருச்சி சிவாவிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் அவர் இதனை தெளிவு படுத்துவதற்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல என குறிப்பிட்டுள்ளார்.