DMK
திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
திமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. “மா.செ. தேர்தலைத் தள்ளிப்போடுங்க!”.. மூத்த நிர்வாகிகள் vs கனிமொழி மோதல்!!
DMK Internal Election Crisis: திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கனிமொழி வலியுறுத்தி வரும் நிலையில், மாவட்ட செயலாளர் தேர்தலை தள்ளிவைத்துவிட்டு தற்காலிக பொறுப்பாளர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் உட்கட்சித் தேர்வை நடத்துவதில் திமுக தலைமைக்கு முக்கோண சிக்கல் எழுந்துள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 4, 2026
- 11:57 am IST
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகக் கனவு.. புனித ஜார்ஜ் கோட்டை முதல் ஓமந்தூரார் வரை.. தோன்றி மறைந்த வரலாற்றுப் பின்னணி!!
Tamil Nadu New Secretariat Plans: தமிழ்நாட்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றுப் பின்னணியையும், கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகளையும் விவரிக்கும் சிறப்பு செய்தித் தொகுப்பு.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 4, 2026
- 07:21 am IST
“யாரும் ஓடிப் போகக் கூடாது.. திங்கட்கிழமை பதில் சொல்றேன்!”.. உதயநிதிக்கு சவால் விடுத்த முதல்வர் விஜய்!!
CM Vijay vs Udhayanidhi Stalin: சட்டப்பேரவையில் டிஜிபி நியமனம், போக்சோ வழக்குகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக அரசின் அதிரடி நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த முதல்வர் விஜய், உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பேரவையில் பதிலளிப்பதாகச் சவால் விடுத்து உறுதியளித்தார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 3, 2026
- 14:04 pm IST
“116 நாளில் ரிவர்ஸ் கியரில் தமிழ்நாடு”.. கர்ஜித்து கேள்வி கேட்ட உதயநிதி.. கொந்தளித்த அமைச்சர் ஆனந்த்!!
TN Assembly debate: தமிழகச் சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீது தூத்துக்குடியில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த அமைச்சர் என். ஆனந்த், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 3, 2026
- 13:21 pm IST
சரிவை நோக்கி தமிழ்நாட்டின் GST வருவாய்.. ரூ.140 கோடி குறைந்து பின்னடைவு.. என்ன செய்யப்போகிறது அரசு?
Tamil Nadu GST revenue decline: தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டை விட ரூ.140 கோடி (1%) சரிந்து ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது.உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்கள் ஜிஎஸ்டி வசூலில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் இந்த பின்னடைவு பெரும் அதிர்ச்சியையும் நிதி நிர்வாகம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 3, 2026
- 09:26 am IST
பலரின் பொறுப்புகள் பறிக்கப்படும் – புதிய நிர்வாகிகளுக்கு மு.க ஸ்டாலின் அட்வைஸ்
திமுக 2.0-க்கான பயணத்தை தொடங்கியுள்ளதாகக் கூறிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கட்சியில் 110 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்புப் பணிகளுக்காக தலைமைக்கழக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கிளை முதல் தலைமைக்கழகம் வரையிலான பதவிகளுக்கு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 3, 2026
- 07:48 am IST
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு.. இன்று காலை 10:30 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!
Kolathur Constituency Election Case: கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது! தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 3, 2026
- 06:44 am IST
மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது.. சூரியன் தான் நிரந்தரம் – மு.க ஸ்டாலின்
கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும் கட்டமைப்பை பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம். இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாக நிலைத்து நிற்கும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 2, 2026
- 21:49 pm IST
“100 நாட்கள் வரை காத்திருக்கப் போகிறீர்களா?”.. தூய்மைப் பணியாளர்களை முதல்வர் சந்திக்க மறுப்பது ஏன்? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி!!
Sanitation Workers Strike TN Assembly: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழகச் சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் குறித்து இரு தரப்பும் அளித்த விளக்கங்களின் தொகுப்பு இதோ.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Sep 2, 2026
- 12:44 pm IST
‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை கைவிடுகிறீர்களா?.. பேரவையில் ஆதவ் அர்ஜுனா vs உதயநிதி ஸ்டாலின் அனல் பறந்த விவாதம்!!
Global Sports City Project: தமிழக சட்டப்பேரவையில் சர்வதேச ஒலிம்பிக் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பது குறித்து தவெக அரசிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சுவாரசியமான விவாதம் நடைபெற்றது. இத்திட்டம் கைவிடப்படவில்லை என்றும், 46 விளையாட்டுகளுடன் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட்டு 6 மாதங்களில் பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதேவ் அர்ஜுனா விளக்கமளித்தார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 31, 2026
- 12:50 pm IST
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் விலகல்
Thoppu Venkatachalam Resigns From DMK: திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திடீரென விலகியுள்ளார். ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவரே செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 31, 2026
- 09:58 am IST
“ஜெயலலிதாவே சவால்களைச் சந்தித்தார்”.. முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி சவால்.. வார்த்தைக்கு வார்த்தை வெடித்த சர்ச்சை!!
RS Bharathi Strong Critique: வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் விமர்சனங்களை முழுமையாகப் பகுப்பாய்வு செய்து கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். CAG தணிக்கை நடைமுறைகள் மற்றும் ஜெயலலிதா காலத்து சட்டப் போராட்டங்களைச் சுட்டிக்காட்டி அவர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 30, 2026
- 12:31 pm IST
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ்.. எஸ்கார்ட் பாதுகாப்பாக குறைத்து நடவடிக்கை!
Former CM MK Stalin: முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த 'இசட்' (Z) பிரிவு பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாகத் தற்போது ஒரு உதவி ஆய்வாளர் தலைமையிலான 4 காவலர்கள் அடங்கிய எஸ்கார்ட் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த அதிரடி பாதுகாப்பு மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 30, 2026
- 08:53 am IST
திமுகவில் 16-வது உட்கட்சித் தேர்தல்.. 110 மாவட்ட செயலாளர்களும் உட்கட்சித் தேர்தல் மூலமே தேர்வு.. அதிரடியில் மு.க.ஸ்டாலின்!!
DMK Internal Election: திமுகவில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அனைவரையும் உட்கட்சித் தேர்தல் மூலமாக மட்டுமே தேர்வு செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 70 வயது வரம்பு, பெண்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல புதிய நிபந்தனைகளுடன் விரைவில் 16-வது உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 29, 2026
- 12:59 pm IST
திமுகவில் உட்கட்டமைப்பு மாற்றம்.. சேகர்பாபு வசம் இருந்த சென்னை கிழக்கு மாவட்டம் பிரிப்பு
DMK Restructuring PK Sekar Babu: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, கட்சி அமைப்பில் அதிரடி மாற்றங்களை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் பொறுப்பிலிருந்த கொளத்தூர் தொகுதி கைமாறுவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Aug 29, 2026
- 08:27 am IST