Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
DMK

DMK

திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Read More

திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்த ஊழியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. நடந்தது என்ன?

Tindivanam: திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர் திமுக பெண் கவுன்சிலர் ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த ரிப்போர்ட்!

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 4.5 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டிலும், 40 பரிசீலனையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதி உதவி குறைவாக இருந்தும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்.. அஸ்தியை கரைப்பது போல் கிடக்கிறது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

Ungaludan Stalin Petition: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் மூலம் அரசு துறை சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருபுவனத்தில் வைகையாற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகளில் 13% தான் திமுக நிறைவேற்றியது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Anbumani Ramadoss : விடியல் எங்கே என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட் பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 505 வாக்குறுதிகளை அளித்த திமுக அதில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் – நெல்லை கூட்டத்தில் அமித்ஷா பேச்சு..

Amit Shah On DMK: நெல்லை மாவட்டத்தில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். திமுகவின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது” என பேசியுள்ளார்.

கூட்டணியில் புதிய கட்சிகள்? முதல்வருடன் முக்கிய மீட்டிங் நடத்திய கூட்டணி தலைவர்கள்.. என்ன மேட்டர்?

CM MK Stalin Meets DMK Alliance Leaders : சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இந்தியக் கூட்டணி? முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..

Vice President Election: துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும்படி பேசியுள்ளார்.

” ரெய்டு என்றதும் கூட்டணியில் சேர நாங்கள் என்ன பழனிசாமியா” – முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்..

Tamil Nadu CM MK Stalin Speech: சேலத்தில் நடைபெற்ற சிபிஎம் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உறவினர்கள் வீட்டில் ரெய்டு என்றதும் ஓடி வந்து கூட்டணியில் சேர நாங்க என்ன பழனிசாமியா என பேசியுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகும் தங்கமணி.. முன்னாள் அமைச்சர் கொடுத்த விளக்கம்..

ADMK VS DMK: 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது, அந்த வகையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி விலகி திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. திமுகவின் தரங்கெட்ட நாடகம்.. அண்ணாமலை காட்டம்..

Annamalai Condemns Dmk: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலை கண்டித்து, இது திமுகவினரின் தரங்கெட்ட நாடகம் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

207 அரசு பள்ளிகள் மூடல்.. பதிலளிக்குமா பள்ளி கல்வித்துறை – எடப்பாடி பழனிசாமி கேள்வி..

207 Government School Closure: தமிழகத்தில் இருக்கக்கூடிய 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உடனடியாக அந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை..

Tamil Nadu CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 13, 2025) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது முழு வீச்சுடன் களப்பணியாற்றிடுவோம் என தெரிவித்துள்ளார்.

நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்..

DMK District Secretaries Meeting: 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாத காலங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு,க ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 13, 2025) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

’தளபதியின் சிப்பாய்களில் ஒருவனாக’ – திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேச்சு

அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன், முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்காக தளபதி ஸ்டாலின் நிற்கிறார். அதனால் அவரது சிப்பாய்களில் ஒருவனாக நானும் என்னை இணைத்துக்கொண்டே என்று தெரிவித்தார்.

அதிமுகவுக்கு டாடா.. திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன்!

Maitreyan Joins DMK : அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், அதிமுகவின் போக்கு சரியில்லை என்வும் அதிமுகவின் ஸ்விட்ச் போர்டு டெல்லியில் இருப்பதாக மைத்ரேயன் விமர்சித்துள்ளார்.