DMK
திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
நீடிக்கும் கூட்டணி குழப்பம்.. ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசிக்கும் முடிவில் திமுக?
திமுக மாவட்ட செயலளர்களுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள். தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 21, 2026
- 12:36 pm IST
சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் காணும் தவெக?.. கூட்டணி நிலவரம் எப்படி உள்ளது?
திமுக கூட்டணியை பார்த்தால், காங்கிரஸ் கட்சி மற்றும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியில்லாத மனநிலையில் உள்ளதாக தெரிகிறது. ஏனெனில், அக்கட்சி உறுப்பினர்கள் பலரும் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனால், அக்கட்சி தரப்பில் இன்னும் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 21, 2026
- 11:23 am IST
ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்..
Vaithilingam Joined in Dmk: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பான பாஜகவின் முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. அதோடு, பாஜகவும் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 21, 2026
- 11:32 am IST
இன்று திமுகவில் இணைகிறார் வைத்திலிங்கம்?.. ஓபிஎஸ்-க்கு காத்திருக்கும் ஷாக்!!
Vaithilingam joining in DMK: ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அண்மையில் நடந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் கூட, உணர்ச்சிவசமாக பேசியிருந்தார். குறிப்பாக, அதிமுக ஒன்றிணைய வேண்டும் இல்லையென்றால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறும் என்றெல்லாம் கூறியிருந்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 21, 2026
- 07:01 am IST
“நம்மை பிடிக்காத சிலரும் கூட்டணியில் இருப்பார்கள்”.. மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபர பேச்சு!!
CM Stalins sensational speech: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக தேர்தலில் 100 சதவீதம் களப் பணியாற்ற வேண்டும் என அவர் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற பெயரில் திருச்சியில் வரும் மார்ச் 8ம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 20, 2026
- 20:43 pm IST
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. ஓபனாக பேசிய சச்சின் பைலட்!
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இன்று அதாவது 2026 ஜனவரி 16ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆட்சியில் பங்கு பெற விரும்புகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில் பங்கு கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஒருபோதும் தமிழக அரசியலில் காலூன்றாது” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Jan 16, 2026
- 21:37 pm IST
திமுகவிற்கு தேர்தலை கண்டு பதற்றம்.. வானதி சீனிவாசன் கருத்து!
பாஜக-வை பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிய 'நிரந்தர கொரோனா' என்ற விமர்சனம் குறித்து, பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், "முன்பு அவருடைய மகனான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு என்றார். இப்போது அவருடைய தந்தை இப்படிச் சொல்கிறார். திமுக-வினர் தங்கள் புத்தியை இழந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்... ஏனென்றால் அவர்கள் தேர்தலைக் கண்டு பதற்றமடைந்துள்ளனர்." என்றார்.
- Mukesh Kannan
- Updated on: Jan 14, 2026
- 22:07 pm IST
வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்.. திமுகவின் அடுத்தடுத்த மூவ் இதுதான்..
வரும் வாரம் முதல் தேர்தல் பணிகள் தற்போது இருப்பதை விட பல மடங்கு வேகமடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணியை இறுதி செய்துவிடும் எனத் தெரிகிறது. அந்தவகையில், திமுகவும் பொங்கலுக்கு பின் தனது அடுத்தடுத்த நகர்களில் வேகமெடுக்க திட்டமிட்டு வருகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 14, 2026
- 13:34 pm IST
திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளது….அமைச்சர் ராஜகண்ணப்பன்!
Minister Rajakannappan: பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த கட்சி திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டணி குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று குறிப்பிட்டார்.
- Gowtham Kannan
- Updated on: Jan 12, 2026
- 17:22 pm IST
“கூட்டணி பற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் பேச தடை”.. செல்வப்பெருந்தகை அதிரடி உத்தரவு!!
நேற்றைய தினம் கடலூரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்ததற்கு பதிலளித்தார். அதன்படி, காங்கிரஸ் எப்போதும் கொல்லைப்புறமாக அரசியல் செய்யாது, நேர்மையான அரசியல் செய்யும் இயக்கம். எந்த காலத்திலும் தரகர் வேலை செய்வது காங்கிரஸ் பேரியக்கத்தின் வேலையல்லை என்றார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 10, 2026
- 12:56 pm IST
“திமுக – அதிமுகவுக்கு சமமான கட்சியே தவெக”.. கிருஷ்ணசாமி தடாலடி!!
திமுகவுக்கு மாற்றாக அதிமுக இருக்கக் கூடாது என நான் மாநாட்டில் பேசியது உண்மை. தமிழகத்தில் இனிமேல் ஒற்றை கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விஜய் மட்டும் தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவதாக கூறுகிறார் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 10, 2026
- 08:56 am IST
தூத்துக்குடியில் ’உங்க கனவ சொல்லுங்க’.. திட்டத்தை தொடங்கி வைத்த கனிமொழி!
தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி இன்று அதாவது 2026 ஜனவரி 9ம் தேதி தூத்துக்குடியில் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த மக்கள் தொடர்புத் திட்டத்தின் நோக்கம், தன்னார்வலர்கள் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் கேட்டறிந்து, மாவட்டத்தின் வளர்ச்சி குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகும்.
- Mukesh Kannan
- Updated on: Jan 9, 2026
- 22:31 pm IST
“கடைசி காலத்தில் நல்ல மனசு வந்துவிட்டது”.. திமுக அரசை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!!
இவ்வளவு ஆதரவுடன் படிக்கும் நீங்கள் சமூகத்தில் சிறந்தவர்களாக நிற்கக் கூடிய திறமை உள்ளவர்கள். அதற்காக கிடைத்த இந்த வாய்ப்புகளை பிடித்து பயன்படுத்த வேண்டும். கல்வியில் முன்னேற விரும்பும் மாணவர்களுக்கு இத்தகைய அரசு உதவிகள் பெரிய வாய்ப்பு. அதை பயனாக்கி சமூகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 9, 2026
- 11:32 am IST
விஜய் பட விவகாரம்! திமுக-விற்கும் என்ன சம்பந்தம்? அமைச்சர் கே.என்.நேரு கேள்வி!
'ஜன நாயகன்' திரைப்படத்தின் தணிக்கைப் பிரச்சினை குறித்து, தமிழக அமைச்சர் கே.என். நேரு கூறுகையில், "மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இதற்கும் திமுக-விற்கும் என்ன சம்பந்தம்? தணிக்கைச் சான்றிதழ் தணிக்கை வாரியத்தால் வழங்கப்படுகிறது, அதைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெறுகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியின் போதும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த விஷயத்தில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கும், நடிகர் விஜய்க்கும், இந்த பிரச்சினைக்கும் என்ன தொடர்பு என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் குரல் எழுப்புகிறார்கள்?" என்றார்.
- Mukesh Kannan
- Updated on: Jan 8, 2026
- 22:06 pm IST
திமுக ஆட்சியில் 85% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்…அமைச்சர் கே.என்.நேரு!
Minister K N Nehru : திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
- Gowtham Kannan
- Updated on: Jan 8, 2026
- 16:42 pm IST