DMK
திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
பிரச்சாரத்தின் கடைசி நாள்.. பிரமாண்ட ரோடு ஷோ நடத்திய முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான மு.க. ஸ்டாலின், மாநில சட்டமன்றத் தேர்தல்களையொட்டி இன்று அதாவது 2026 ஏப்ரல் 21ம் தேதி தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வில்லிவாக்கத்தில் ஒரு ரோடு ஷோ நடத்தினார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 21, 2026
- 20:21 pm IST
கொளத்தூர் வராமல் என்னால் இருக்க முடியாது – முதல்வர் ஸ்டாலின்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நம்முடைய கொளத்தூர் தொகுதி என்னுடைய செல்லக் குழந்தை. பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்தப் பண்டிகையாக இருந்தாலும், நான் உங்களுடன் தான் கொண்டாடி வருகிறேன். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்றாலும், 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூர் வராமல் என்னால் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த தொகுதிக்காக தொடர்ந்து பணிகளை செய்து கொண்டிருக்கிறேன் என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 20:20 pm IST
கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை.. நான் செய்த திட்டங்கள் எனக்காக ஓட்டுக்கேட்கும் – முதல்வர் ஸ்டாலின்..
கொளத்தூர் தொகுதியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “என்னதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நான் முதலமைச்சராக இருந்தாலும், சென்னை எனக்கு நான் பாசமாக வளர்த்த குழந்தை போன்றது. ஏனெனில் நான் அந்த அளவிற்கு உங்களோடு ஒன்றிணைந்தவன். அது மட்டுமல்ல, சென்னைக்கு மாநகரத் தந்தையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான்” என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 19:59 pm IST
சேப்பாக்கத்தை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
என்றைக்குமே நான் உங்களுடன் தான் பயணிக்க போகிறேன். அனைவரும் சேர்ந்த்து பயணிப்போம். சேப்பாக்கம் தொகுதியை, தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவோம் என்று சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 21, 2026
- 19:16 pm IST
தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்.. அனைவரும் வாக்களியுங்கள் – எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை நந்தனம் பகுதியில்வும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும் தங்களது பிரச்சாரங்களை நிறைவு செய்து வருகின்றனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 15:03 pm IST
கடையநல்லூர் தொகுதி கள நிலவரம் என்ன? மீண்டும் திமுக வெற்றியை கைப்பற்றுமா?
திமுக சார்பில் நேரடியாக இந்த தொகுதியில் நீண்ட காலமாக போட்டியிடவில்லை என்ற நிலை இந்த தேர்தலிலும் தொடர்ந்தாலும், மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தி.மு. இராஜேந்திரன், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது திமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை களத்தில் காண முடிகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 21, 2026
- 14:16 pm IST
ஓட்டு கேட்டு வந்த மதிமுக வேட்பாளர்.. கேள்விகளால் அடுக்கிய பொதுமக்கள்!
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் தி.மு. ராசேந்திரனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் நேற்றும் (2026 ஏப்ரல் 2026) இன்றும் (2026 ஏப்ரல் 21) சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தி.மு.ராசேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை அதிமுக வேட்பாளரை நோக்கி எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- Mukesh Kannan
- Updated on: Apr 21, 2026
- 13:06 pm IST
“சொந்தமாக கார் கூட இல்லையா?”.. முதல்வரின் சொத்து விவரம் குறித்து காளியம்மாள் கடும் விமர்சனம்!!
Tamilnadu Assembly Election: திமுக ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காளியம்மாள் குற்றம் சாட்டினார். குறிப்பாக அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம். ஆடு, மாடு வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை. தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் மகப்பேறு உதவித்தொகை. பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிவழங்கும் திட்டம்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 21, 2026
- 12:50 pm IST
“தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
Tamilnadu Assembly Election: "திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. அதே சமயம், சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுத்துத் துணை நிற்பதும் திமுகதான். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது என்பதை வரலாறு சொல்லும்" என்றார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 21, 2026
- 10:14 am IST
இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் தலைவர்கள்.. இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்வு..
Tamilnadu Assembly Election: சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரச்சாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 21, 2026
- 07:36 am IST
திருவல்லிக்கேணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிடும் திருவல்லிக்கேணி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 21, 2026
- 00:01 am IST
கருத்துக்கணிப்புகள், மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்.. படைப்போம் வரலாறு – முதல்வர் ஸ்டாலின்..
CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தினமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலை நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்; மாலை நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 20, 2026
- 09:31 am IST
தேர்தல் தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி.. கரூரில் சீறிய எடப்பாடி பழனிசாமி!
Edappadi Criticized Senthil Balaji : கரூர் தொகுதியில் தற்போதைய எம். எல். ஏ.வான செந்தில்பாலாஜி தனது பலவீனம் காரணமாக வேறு தொகுதியில் போட்டியிட சென்று விட்டார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தாார்.
- Gowtham Kannan
- Updated on: Apr 19, 2026
- 20:50 pm IST
திமுக – தவெக இடையே உள்குத்து… வில்லிவாக்கம் சஸ்பென்சை உடைத்த ஜோஸ் சார்லஸ்…!
வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர்களை சந்தித்தபோது, “வில்லிவாக்கத்தில் அண்ணன் எஸ்.ஆர்.விஜயகுமார் நீண்ட காலத்திற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அவரது இயல்பான குணமும், பண்பும் மக்களுக்கு தெரியும். இதுமட்டுமின்றி, எஸ்.ஆர்.விஜயகுமார் திறமையும், ஏற்கனவே எம்.பியாக பதவியும் வகித்துள்ளார். இதனால், வில்லிவாக்கம் தொகுதி வளர்ச்சிக்கு அமோகமாக செயல்படுவார். திமுகவும் தவெகவும் ஏ டீம், பி டீம் மாதிரி நண்பர்களாக உள்ளனர். இதை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காகதான் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். இதன் காரணமாக, வில்லிவாக்கம் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதிமுக மாபெரும் வெற்றியடையும்” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 19, 2026
- 19:43 pm IST
திமுக கூட்டணிக்கு ஆதரவாக மல்லிகார்ஜூன கார்கே பரப்புரை!
Mallikarjun Kharge Campaign : தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார் கே ஓசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் .
- Gowtham Kannan
- Updated on: Apr 19, 2026
- 19:52 pm IST