DMK
திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 20, 2026
- 21:34 pm IST
போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர்.. கைதான திமுக எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!
DMK MLA Markandan : தன்னை போலீசார் துப்பாக்கி முனைையில் மிரட்டுவதாக கைதான திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மார்க்கண்டேயன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார். உடனே, அவரை போலீசார் அழைத்து சென்றனர். அவர் என்ன கூறினார் என்பதை விரிவாக பார்க்கலாம் .
- Gowtham Kannan s
- Updated on: Jul 20, 2026
- 20:37 pm IST
கைது நடவடிக்கைக்கு அஞ்சமாட்டோம்.. சட்ட ரீதியாக சந்திப்போம்.. பொங்கிய ஆர்.எஸ்.பாரதி!
DMK MLA Arrest RS Bharathi Condemned: தமிழக வெற்றிக் கழக அரசின் கைது நடவடிக்கையை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறிய கருத்தை விரிவாக பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 20, 2026
- 17:03 pm IST
“நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”.. திமுக எம்.எல்.ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கடும் கண்டனம்!!
Stalin and Kanimozhi Slam TVK Govt: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவெக அரசு அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல் துறையை ஏவி திமுகவினரை வேட்டையாடுவதாக அவர்கள் சாடியுள்ளனர்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 20, 2026
- 13:32 pm IST
இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்த திமுக.. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் இருக்கைகள் அதிரடி மாற்றம்!!
DMK Skips INDIA Alliance Meeting: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை திமுக முழுமையாகப் புறக்கணித்துள்ளது. கூட்டணி முறிவைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் அருகே இருந்த திமுக எம்பிக்களின் இருக்கைகள் மாற்றப்பட்டு, சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அருகே ஒதுக்கப்பட்டுள்ளன.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 20, 2026
- 12:01 pm IST
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. திமுக எம்எல்ஏ அதிரடி கைது!!
DMK MLA Markandayan Arrested: தூத்துக்குடி கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து ஒருமையிலும், மிரட்டும் தோனியிலும் அவதூறாகப் பேசிய வழக்கில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 20, 2026
- 08:02 am IST
காங்கிரஸை ஓரங்கட்டிய திமுக.. நாடாளுமன்றத்தில் தனிப் பாதை.. தமிழ்நாட்டுப் பகை டெல்லியில் எதிரொலி!
DMK Congress seat change: திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி விடுத்த அதிரடிக் கோரிக்கையை அடுத்து, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக எம்பிக்களின் இருக்கைகள் காங்கிரஸ் எம்பிக்களுக்கு அருகில் இருந்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்டணி அமைத்ததால், டெல்லியில் காங்கிரஸை முற்றிலுமாக ஓரங்கட்டி திமுக தனது அரசியல் பலத்தைக் காட்டியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 18, 2026
- 13:44 pm IST
திமுக – அதிமுக – பாஜக ரகசியக் கூட்டணி?.. அதிர்ச்சியை ஏற்படுத்திய துரை வைகோ!
Durai Vaiko Pudukkottai press meet: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, அதிமுக மற்றும் பாஜக-வுடன் திமுக இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க முயன்றதாலேயே கூட்டணியை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டதோடு, தவெக அரசின் லஞ்சமற்ற நிதி மேலாண்மை முயற்சிகளைப் பாராட்டினார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 18, 2026
- 08:21 am IST
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்குமா? ஆர். எஸ். பாரதி கூறுவதென்ன!
Constituency Delimitation Bill DMK Stance: நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்பது குறித்த விளக்கத்தை அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 17, 2026
- 21:42 pm IST
2 பெரும் தவறுகளை செய்து விட்டேன்.. அதிமுக-திமுகவை குறிப்பிட்டு வைகோ விமர்சனம்!
MDMK General Secretary Vaiko : அதிமுக மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்ததை நான் செய்த இரு பெரும் தவறுகள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்து உள்ளார் .
- Gowtham Kannan s
- Updated on: Jul 17, 2026
- 15:04 pm IST
“மேகதாதுவுக்கு எதிராக எம்.பிக்கள் குரல் கொடுப்பார்கள்”.. லண்டனில் இருந்து ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்.. திமுக எம்.பிக்கள் அதிரடி ஆக்ஷன்!
Mekedatu dam dispute: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, லண்டனில் இருந்து காணொளி வாயிலாக தி.மு.க எம்பிக்களுடன் அவசர ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக வலுவாக குரல் எழுப்ப அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 17, 2026
- 06:32 am IST
தேர்தல் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
C Vijayabaskar: விராலிமலை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்குப் பரிசு கூப்பன்கள் மற்றும் இலவச குளிர்சாதனப் பெட்டி டோக்கன்கள் விநியோகித்து முறைகேடாக வெற்றி பெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 15, 2026
- 12:32 pm IST
“அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் இடம்பெறும் சூழல்”.. பரபரப்பை கிளப்பிய சிபிஐ வீரபாண்டியன்!!
தவெக கூட்டணி ஆட்சியில் கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கும் காலம் நெருங்கி வருவதாக சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தங்களது வாக்கு வங்கியை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், சூழ்நிலை நிர்பந்தித்தால் தனித்து களம் காணவும் இடதுசாரிகள் தயாராக இருப்பதாக அதிரடி வியூகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 15, 2026
- 08:16 am IST
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு.. திடீர் என்ட்ரி கொடுத்த அமலாக்கத்துறை.. தமிழக அரசியலில் புதிய புயல்!!
TVK MLA Bargaining Case ED Investigate: தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் திமுகவை சேர்ந்தவர்கள் பேரம் பேசியது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தாமாக முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 14, 2026
- 13:45 pm IST
பல கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு.. முன்னாள் திமுக அமைச்சர் தாமோ.அன்பரசன் மீது பரபரப்பு புகார்..
குத்தகை காலம் முடிந்து நீண்ட நாட்களாகியும் சொத்து இன்னும் திருப்பித் தரப்படவில்லை என்றும், இதுவரை ஒரு ரூபாய் கூட வாடகையாக வழங்கப்படவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் சொத்தின் உரிமையாளருக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 13, 2026
- 11:34 am IST