2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.
தமிழக துணிநூல் துறைக்கு ரூ.912.97 கோடி முதலீடு: 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..
Textile Conference: புதிய ஒருங்கிணைந்த துணிநூல் கொள்கை 2026 அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, போட்டித்திறன், தொழில் தொடங்கும் எளிமை, நிலைத்தன்மை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றில் அரசின் கவனத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் துணிநூல் துறை முக்கிய தூணாகத் தொடரும் என்றும் அவர் கூறினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 30, 2026
- 8:25 am IST
SIR பணிகள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்
SIR Work Last Day: ஜனவரி 30, 2026 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், படிவம் 6 பயன்படுத்தி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 30, 2026
- 7:43 am IST
இனி நோ மழை.. ஆனால் அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் – வானிலை ரிப்போர்ட்
Tamil Nadu Weather Update: பிப்ரவரி 1, 2026 (ஞாயிற்றுகிழமை) அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 30, 2026
- 6:24 am IST
மத்திய பட்ஜெட் 2026: தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய பொருளாதார வார்த்தைகள்..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மத்திய பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளார். இதில் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். பணவீக்கம் என்பது பொருளாதாரத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்ந்து உயர்வதை குறிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது. பணவீக்க விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் விலைகள் எவ்வளவு வேகமாக உயருகின்றன என்பதைக் காட்டுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 29, 2026
- 2:55 pm IST
2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
DMK - DMDK Alliance: ஆளும் கட்சியான திமுகவுடன் தேமுதிக முதல் முறையாக கைகோர்க்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தேமுதிக இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டதாகவும், அதற்கு சம்மதம் கிடைக்காத நிலையில், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 29, 2026
- 12:26 pm IST
எட்டாக்கனியாய் மாறிய தங்கம்.. ஒரே நாளில் ரூ. 9,000 உயர்வு.. 17,000 ரூபாயை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்..
Gold Price Hike: நாளுக்கு நாள் இவ்வாறு அதிரடியாக தங்கம் விலை உயர்வை சந்தித்து வரும் சூழலில், தங்கம் பொதுமக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.18,327-க்கும், ஒரு சவரன் ரூ.1,46,616-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரி 28ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.15,610-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 29, 2026
- 10:25 am IST
இந்தியா – ஐரோப்பா ஒப்பந்தம்: வர்த்தகத்திற்கே முக்கியத்துவம்.. உக்ரைன் அல்ல – அமெரிக்கா கடும் விமர்சனம்..
India EU Trade: அவர்கள் தங்களுக்குச் சிறந்ததாக இருப்பதைச் செய்யலாம். ஆனால், ஐரோப்பியர்கள் என்னை மிகவும் ஏமாற்றியுள்ளனர்” என பெஸன்ட் தெரிவித்தார். ரஷ்ய எண்ணெயை பயன்படுத்தி இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஐரோப்பிய நாடுகள் வாங்கி வருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாஷிங்டனின் கடுமையான வர்த்தகக் கொள்கைகளுடன் இணைவதைத் தவிர்த்து வருவதாகவும் பெஸன்ட் குற்றம்சாட்டினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 29, 2026
- 9:59 am IST
நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்
O Panneerselvam Meeting: செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீர்செல்வம், தை மாதம் முடிவில் முடிவை அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வைத்தியலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 29, 2026
- 8:16 am IST
Chennai Crime: சென்னையை உலுக்கிய ட்ரிபிள் மர்டர்.. மனைவியின் உடலை தேடும் பணியில் போலீசார்.. நடந்தது என்ன?
Crime: பீகாரைச் சேர்ந்த குடும்பத்தினரை சென்னையில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இளம் பெண்ணையும் அவரது கணவரையும் இரண்டு வயது ஆண் குழந்தையையும் கொடூரமாக கொலை செய்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீசி எரிந்து விட்டு சென்ற சம்பவமானது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 29, 2026
- 7:21 am IST
அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. இனி மழை இல்லை.. வெயில் மட்டும்தான்..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ள சூழலில், இரவு நேர வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 17 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 29, 2026
- 6:25 am IST
உரிய நேரத்தில் பதில் கிடைக்கும் – கூட்டணி குறித்து பேசிய ஓபிஎஸ்..
அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பிரிந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, உரிய நேரத்தில் தங்களுக்கு பதில் கிடைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஒரு பக்கம் அவர் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையக்கூடும் என்ற யூகங்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், மற்றொரு பக்கம் அவர் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 27, 2026
- 10:09 pm IST
தை கிருத்திகை.. முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்..
ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோயிலில், தை கிருத்திகை விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தை கிருத்திகையை ஒட்டி முருகப் பெருமானை வழிபட்டால் திருமணத் தோஷங்கள் மற்றும் கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 27, 2026
- 10:04 pm IST