2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.
கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.. பிளான் என்ன?
TN CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூலை 22, 2025 மற்றும் ஜூலை 23, 2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவுகளை தொடங்கி வைக்கிறார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 20, 2025
- 3:48 pm
கூட்டணி ஆட்சி.. நாங்கள் ஏமாளிகள் அல்ல.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..
Edappadi Palanisamy: இன்று அதாவது 2025 ஜூலை 20 தேதியான இன்று, திருத்துறைப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து பேசி அவர், " யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம், அது எங்கள் விருப்பம்" என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 20, 2025
- 1:46 pm
குற்றால சாரல் திருவிழா.. வில்லுப்பாட்டு, ஆணழகன் போட்டி, நாய் கண்காட்சி.. நிகழ்ச்சி நிரல் இதோ..
Courtallam Saral Festival: குற்றால சீசனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். ஜூலை 20, 2025 தேதியான இன்று முதல் குற்றால சாரல் திருவிழாவானது வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான ஜூலை 20 2025 அன்று கொழு கொழு குழந்தைகள் போட்டி, சிலம்பம், கேரளா கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், மெல்லிசைக் கச்சேரி நடக்க உள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 20, 2025
- 12:58 pm
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்.. குளித்தலையில் அதிர்ச்சி..
Kulithalai Crime News: கரூர் மாவட்டத்தில் குளித்தலையில், கணவன் மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டதில் மனைவியை தாக்கியுள்ளார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 20, 2025) அதிகாலை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 20, 2025
- 9:46 am
வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்.. நவம்பர் மாத பயன்பாட்டிற்கு வரும் என தகவல்..
Velachery - St Thomas Mount MRTS Project: வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே இருக்கக்கூடிய பறக்கும் ரயில் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு இந்த வழித்தடத்தில் ரயில் சேவை செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 20, 2025
- 9:12 am
தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. உறுப்பினர் சேர்க்கைகாக புதிய செயலி அறிமுகம்..
TVK District Secretaries Meeting: சென்னை பனையூரில் இருக்கக்கூடிய கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கியமாக மதுரையில் நடக்கக்கூடிய கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 20, 2025
- 8:11 am
அதிமுக விரிப்பது பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம்.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி..
Minister K.N. Nehru Statement: திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமி, என்றைக்காவது பாஜகவை விமர்சித்திருக்கிறாரா? கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத கோழை பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 20, 2025
- 7:00 am
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி?
Tamil Nadu Weather Alert: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 20, 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 20, 2025
- 6:10 am
கோரப்பூர் பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர்.. நெற்பயிரை நட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..
கோரக்பூர் பேருந்து நிலையத்தில், குறிப்பாக மழைக்காலங்களில், தண்ணீர் தேங்குவது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாகும். கனமழையால் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பிரேம் நகர், வித்யா நகர் மற்றும் கிருஷ்ணாநகர் உள்ளிட்ட கோரக்பூருக்குள் உள்ள பல்வேறு பகுதிகளும் கனமழை காரணமாக இதேபோன்ற இடையூறுகளை சந்திக்கின்றனர், இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு தேங்கி இருக்கும் தண்ணீரில் மக்கள் நடவு நட்டு வினோதமான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 19, 2025
- 4:21 pm
எடப்பாடி பழனிசாமியிடமிருந்து முதிர்ச்சியான அரசியலை எதிர்பார்க்கிறோம் – முத்தரசன்..
வரும் 2025, ஆகஸ்ட் 15 முதல் மாநில மாநாடு நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து முதிர்ச்சியான அரசியலை எதிர்பார்க்கிறோம் அது தவறில்லை என நாங்கள் நினைக்கிறோம். ஜூலை 7 அன்று தனது பிரச்சார பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார். அப்போது பேசியவர் கம்யூனிஸ்ட் கட்சியே இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால் 16ஆம் தேதி சிதம்பரத்தில் பேசிய அவர் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார். அழைப்பு விடுப்பது எங்கிருந்து யாருடன் இருந்து அழைப்பு விடுப்பது என்பது உள்ளது. ரத்தின கம்பளம் அல்ல ரத்தத்தால் கறை படிந்த கம்பளமாகும்” என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 19, 2025
- 4:10 pm
கொல்கத்தாவில் தொடரும் கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்..
கொல்கத்தா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் நகராட்சி குழுக்கள மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 19, 2025
- 3:45 pm
மக்களே ரெடியா இருங்க.. அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் அனேக பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 19, 2025
- 2:49 pm