AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Aarthi Govindaraman

Aarthi Govindaraman

Chief Sub-Editor

2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?  காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? உதயநிதி காட்டம்..

காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? உதயநிதி காட்டம்..

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை, அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? பெரியார் – அண்ணாவைப் புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்தப் பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் – அஜித் பரிமாறிக்கொண்ட பரிசுகள்.. வெளியான புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..

முதல்வர் விஜய் – அஜித் பரிமாறிக்கொண்ட பரிசுகள்.. வெளியான புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..

CM Vijay - Ajith Gift: முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித்குமாருக்கு ரேசிங் கார் மாதிரியைப் பரிசாக அளித்துள்ளார். அதில், "பிரியமுடன் விஜய்" என கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல, அஜித்குமார், முதலமைச்சர் விஜய்க்கு தான் அணிந்திருந்த தலைக்கவசத்தைப் பரிசாகக் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மழைக்கு ரெடியா மக்களே..! செப்டம்பர் 20ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?

மழைக்கு ரெடியா மக்களே..! செப்டம்பர் 20ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?

Weather Report: சென்னையை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கட்டிட மேற்கூரைகளில் ஏற பொதுமக்களுக்கு தடை!

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கட்டிட மேற்கூரைகளில் ஏற பொதுமக்களுக்கு தடை!

Meenakshi Temple Kumbabhishekam: கும்பாபிஷேகம் நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தங்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் எவரும் ஏறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.

அன்று விமர்சனம்.. இன்று உலகின் கவனம்! BRICS-ல் இந்தியாவின் புதிய பலம்

அன்று விமர்சனம்.. இன்று உலகின் கவனம்! BRICS-ல் இந்தியாவின் புதிய பலம்

2012ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருந்தது. பணவீக்கம் அதிகரித்ததுடன், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பொருளாதார செயல்பாடுகள் குறித்த கவலைகளும் நிலவின. BRIC என்ற கருத்தாக்கத்தை உருவாக்கிய கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஜிம் ஓ’நீல், மதிப்பீட்டு அடிப்படையில் இந்தியாவை “குறைந்த கவர்ச்சிகரமான” BRIC பொருளாதாரம் என குறிப்பிட்டிருந்தார்.

மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..

மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..

விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் என்பது பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு சுமார் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைப்போல, சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.3,000, சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3,500, கன்னியாகுமரிக்கு ரூ.3,800, நாகர்கோவிலுக்கு ரூ.3,690, ஈரோட்டிற்கு ரூ.2,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

18வது பிரிக்ஸ் மாநாடு.. டெல்லி வரும் உலக தலைவர்கள்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

18வது பிரிக்ஸ் மாநாடு.. டெல்லி வரும் உலக தலைவர்கள்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

BRICS Summit: பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், சுகாதாரம், வேளாண்மை, எரிசக்தி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

ஆட்சியை கவிழ்த்து முதல்வராக ஆதவ் அர்ஜுனா ப்ளான்.. அந்த பயத்தில் தான் லண்டன் அழைத்து சென்றீர்களா? முதல்வர் விஜய்க்கு அப்பாவு கேள்வி..

ஆட்சியை கவிழ்த்து முதல்வராக ஆதவ் அர்ஜுனா ப்ளான்.. அந்த பயத்தில் தான் லண்டன் அழைத்து சென்றீர்களா? முதல்வர் விஜய்க்கு அப்பாவு கேள்வி..

ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி. ராமராவ் அவர்கள் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வரானது போல், ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் உங்களோடு லண்டன் அழைத்துச் செல்கிறீர்களா, CM sir? என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்

ஆம்னி பேருந்தில் மின்கசிவு: 3 மணி நேரம் தவித்த பயணிகள்..

ஆம்னி பேருந்தில் மின்கசிவு: 3 மணி நேரம் தவித்த பயணிகள்..

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வெளியேறியதால், பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்படாததால் பயணிகள் சாலையிலேயே காத்திருந்தனர். பயணிகளில் இதயப் பிரச்சனை கொண்ட குழந்தையுடன் வந்த குடும்பத்தினரும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்.. பாதிக்கப்படும் வங்கி சேவைகள்.. முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன?

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்.. பாதிக்கப்படும் வங்கி சேவைகள்.. முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன?

Bank Employees Strike: ஓய்வூதியத்தை புதுப்பித்து மேம்படுத்துதல், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி கணக்கீட்டு முறையை அமல்படுத்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வங்கி சங்கங்கள் முன்வைத்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு?

10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை கழிவால் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய ஆறு; பொதுமக்கள் அதிர்ச்சி

தொழிற்சாலை கழிவால் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய ஆறு; பொதுமக்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிளையூரணி பகுதியில் உள்ள உப்பாறு ஓடை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு ஆற்று நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது. மாப்பிளையூரணி–தருவைக்குளம் சாலையில் உள்ள பாலம் முதல் இந்நிறமாற்றம் காணப்படுகிறது.