2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.
நீலகிரியில் கொட்டிய மழை.. மகிழ்ச்சியில் மக்கள்..
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தில் இருந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த சூழலில், ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் இன்று நல்ல மழை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 10:59 pm IST
2026 தேர்தல் ஒரு விசில் புரட்சியாக இருக்கும் – செங்கோட்டையன்..
2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு “விசில் புரட்சியாக” இருக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பனையூரில் வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாகவும், தமிழகத்தின் இனி நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 10:56 pm IST
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
‘தோல்வி நிச்சயம்’ என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. அதனால், திமுக வெற்றி பெறும் என்ற பொய்யான படிமத்தை உருவாக்கி, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்யவும், கலவரம் ஏற்படுத்தவும் முயற்சிகள் இருக்கலாம். எனவே, 04.05.2026 அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது நம் கழகத் தொண்டர்கள், பூத் ஏஜெண்ட்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 8:17 pm IST
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
நேற்றைய தினம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்றும், 15 முதல் 30 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளன. குறிப்பாக சில நிறுவனங்கள் மட்டும் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறியுள்ளன.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 8:01 pm IST
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடக்கூடிய அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தாலும், வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவிதமான குறைபாடும் இல்லாமல், ஒவ்வொரு சுற்றிலும் முடிவுகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட வேண்டும். விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும், என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அலுவலர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 7:10 pm IST
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
உலக தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்; நீங்கள் இழப்பதற்கு சங்கிலிகளைத் தவிர எதுவுமில்லை’ என அழைத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு சொல்லாலும் செயலாலும் உழைப்பாளர்களை போற்றும் இந்த மே தினத்தில், உழைக்கும் தோழர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 4:51 pm IST
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
Chennai Metro: இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)”க்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 3:28 pm IST
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. ஒரு பக்கம் கொட்டும் மழை.. எந்த ஊரில் எப்படி இருக்கும்?
தமிழகத்தில் பல இடங்களில் வெப்பநிலை 40°C-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் – 41.5°C, திருச்சி – 40.1°C, மதுரை – 40.2°C, கரூர் – 40.2°C பதிவாகியுள்ளது. மேலும், திருத்தணி – 39.5°C, திருப்பத்தூர் – 38.5°C, ஈரோடு – 39.6°C, தர்மபுரி – 39°C பதிவாகியுள்ளது. சென்னை நகரில் மீனம்பாக்கத்தில் 39.3°C மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35°C பதிவாகியுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 30, 2026
- 2:54 pm IST
சீரடி சாய் பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்..
தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக நடிகர் விஜய் தனது ஆன்மீக சுற்றுழாவில் உள்ளார். அதன்படி நடிகர் விஜய் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று சீரடியில் உள்ள சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 29, 2026
- 10:31 pm IST
மாசி வீதிகளில் வலம் வந்த மதுரை மீனாட்சி தேர்.. பக்தி பரவசத்தில் மக்கள்..
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 10 டன் எடையுள்ள வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சுந்தரேஸ்வரர் – பிரியாவிடை பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 29, 2026
- 10:22 pm IST
NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?
NTK Exit Poll Results 2026: இந்த கருத்துக்கணிப்புகளின் படி, தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 6 இடங்களில் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 29, 2026
- 8:52 pm IST
ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?
ADMK Assembly Election Exit Poll Result: தமிழகத்தைப் பொறுத்தவரையில், மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், சில கருத்துக்கணிப்புகளில் மட்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு சுமார் 50% அளவில் இருக்கலாம் என சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 29, 2026
- 9:05 pm IST