AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Aarthi Govindaraman

Aarthi Govindaraman

Chief Sub-Editor

2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு.. ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு.. ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ கண்காணிக்க குழு – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்ளிட்ட 7 நிபுணர்கள்..

எல் நினோ கண்காணிக்க குழு – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்ளிட்ட 7 நிபுணர்கள்..

எல் நினோ தாக்கத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு குறைதல், கடும் வெப்பம், வறட்சி அல்லது சில இடங்களில் அதிக மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், அவற்றை அறிவியல் அடிப்படையில் கண்காணித்து பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்.. விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு..

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்.. விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு..

அந்தப் பணிகளை விரைந்து முடித்து, பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காலை நேர போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கட்டுமானப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம்.. திமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் இணைய திட்டமா?

அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம்.. திமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் இணைய திட்டமா?

திமுக சார்பில் அவருக்கு போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானாலும், இதுவரை அவருக்கு திமுகவில் முக்கியப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. திமுகவில் இணைந்தபோது அவருக்கு உயர்மட்ட பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியிருந்தாலும், அது நிறைவேறவில்லை எனக் கூறப்படுகிறது.

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ.. பிரான்ஸ், ஸ்பெயினில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ.. பிரான்ஸ், ஸ்பெயினில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

Europe Wildfire Rescue Operations: காட்டுத்தீயால் உருவாகும் புகையில் உள்ள நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட மாசுக்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பரவி காற்றின் தரத்தை பாதிக்கின்றன. மேலும், விவசாய நிலங்கள், தோட்டங்கள் மற்றும் கால்நடை வாழ்வாதாரமும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

காவிரி விவகாரம்: முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது – முதல்வர் டி.கே சிவகுமார்..

காவிரி விவகாரம்: முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது – முதல்வர் டி.கே சிவகுமார்..

தற்போதைய சூழலில் காவிரி ஆற்றிலிருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது சாத்தியமற்ற நிலை இருப்பதாகவும், கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் உண்மை நிலையை நேரில் பார்வையிட்டு அறிந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்..

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்..

இந்தப் புலனாய்வின் ஒரு பகுதியாக, இன்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரிகளின் வீடுகள், இருப்பிடங்கள், மதுபான உற்பத்தி ஆலைகள், பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள், டாஸ்மாக் சரக்குகளைக் கையாளும் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 45 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சில்லென மாறிய சென்னை.. 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..

சில்லென மாறிய சென்னை.. 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..

ஜூலை 31-ஆம் தேதி கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம்.. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்..

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம்.. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்..

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும், அடிக்கடி பூச்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. தமிழகம் முழுவதும் சோதனை

செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. தமிழகம் முழுவதும் சோதனை

FIR Against Senthil Balaji: 45 டாஸ்மாக் டிப்போக்களுக்கான போக்குவரத்து டெண்டர்களிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், ஒருவரின் வரைவோலைகளை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பார் ஒப்பந்தம் பெற்றவர்களே பார்களை நடத்தாமல், மூன்றாம் நபர்கள் மூலம் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்..  மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்.. மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை தொடர்பான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பது குற்றம் என்றும், அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்.. பயணிகளுடன் மெட்ரோவில் பயணம்..

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்.. பயணிகளுடன் மெட்ரோவில் பயணம்..

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி வரை மீண்டும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக போரூர் மற்றும் பூந்தமல்லி பகுதிகளுக்கு சென்று சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.