பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார்–வால்பாறை சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் 25 பேர் பயணம் செய்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பியபோது, முதல் கொண்டை ஊசி வளைவில் வேனின் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார்–வால்பாறை சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் 25 பேர் பயணம் செய்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பியபோது, முதல் கொண்டை ஊசி வளைவில் வேனின் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us
