AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது.. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்..

இன்று காலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் இயக்கம் பாதிக்கப்பட்டது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்தது.

சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது.. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Apr 2026 20:36 PM IST

ஏப்ரல் 27, 2026: தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. காலை முதலாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்தப் போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனம் வாடகை நிலுவைத் தொகையை நீண்டநாளாக வழங்காததை எதிர்த்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட டேங்கர் லாரி:

இன்று காலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் இயக்கம் பாதிக்கப்பட்டது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்தது.

இந்த திடீர் வேலைநிறுத்தத்தால், தென் மாநிலங்கள் முழுவதும் கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவானது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எல்பிஜி சிலிண்டர்கள் மட்டுமின்றி, ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டது.

மேலும், பல இடங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டர்களின் விநியோகம் தாமதமாகும் நிலையும் உருவானது. இதனால் பொதுமக்கள் இடையே கவலை நிலவும் சூழல் ஏற்பட்டது.

வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்:

இந்த நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அவசர பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள வாடகைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் கட்டணங்கள் தாமதமாகாமல் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க: மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் – திருநெல்வேலியில் பரபரப்பு – என்ன நடந்தது?

அத்துடன், உரிமையாளர்கள் முன்வைத்த பிற கோரிக்கைகள்—எரிபொருள் செலவுக்கான திருத்தம், பராமரிப்பு செலவுகள் உயர்வு, ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு வசதிகள் போன்றவை—பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது:

இதன் விளைவாக, லாரிகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கம் தொடங்கியுள்ளன. எனவே, வரவிருக்கும் நாட்களில் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது எனவும், தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே நேரத்தில், நிலுவைத் தொகை வழங்கும் செயல்முறை விரைவில் நிறைவேற்றப்படுமா என்பது மீதான கண்காணிப்பில் சங்கம் தொடர்ந்து இருக்கும் என்றும், வாக்குறுதிகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் வாய்ப்பும் நிராகரிக்கப்படவில்லை.

Follow Us