Viral Video : வீடற்ற சிறுவர்களுக்கு சாலையோரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Man Teaches Education For Homeless Kids | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், டெல்லியில் வீடற்ற சிறுவர், சிறுமிகளுக்கு ஒருவர் சாலை ஓரத்தில் அமர்ந்து கல்வி கற்று கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய நகரங்களில் சாலை ஓரங்களில் வீடற்ற சிலர் குடிசை அமைத்து தங்கியிருப்பதை பார்த்திருப்போம். உணவு, உடை, இருப்பிடம் என எந்த ஒரு அடிப்படை வாழ்வாதாரமும் இல்லாமல் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வர். இந்த நிலையில், அவர்கள் கல்வி கற்பது அசாதாரன ஒன்றாக இருக்கும். அவ்வாறு கல்வி கற்க முடியமல், சாலையோரங்களில் இருக்கும் குழந்தைகளை சிலர் கண்டும் காணாமல் போய்விடுவர். ஆனால், டெல்லியில் ஒருவர் சாலையோரத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கிறார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
சாலையோர சிறுவர், சிறுமிகளுக்கு கல்வி கற்பிக்கும் நபர்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சில முக்கியமான விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், டெல்லியில் சாலை ஓரத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு ஒருவர் கல்வி கற்றுக் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Viral Video : பெங்களூரு தம்பதியின் திருமண நாளுக்கு பணிப்பெண் அளித்த அன்பு பரிசு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சாலையோர நடைமேடையில் நன்கு உடை அணிந்த ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றி சில சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உள்ளனர். அவர் அந்த சிறுவர், சிறுமிகளுக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுக்கிறார். நோட்டில் எழுதி அந்த குழந்தைகளுக்கு அவர் பாடம் கற்றுக்கொடுக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சன் கேண்டில்.. சூரிய ஒளியில் மின்னிய பனி துகள்கள்.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய வீடியோ!
தெற்கு டெல்லியின் ஷெய்க் சாரா பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. வீடற்ற சிறுவர், சிறுமிகளுக்கு பாடம் கற்பித்த அந்த நபருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.