AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“விமான நிலைய ஓடு பாதை முதல் 4 வழிச் சாலை வரை!”.. புதுச்சேரியை மாற்றப்போகும் அமித் ஷாவின் பிரம்மாண்ட அறிவிப்பு!!

புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 12 ஆண்டுகளில் புதுச்சேரியின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1.37 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து தோளோடு தோள் நிற்பதாக அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

“விமான நிலைய ஓடு பாதை முதல் 4 வழிச் சாலை வரை!”.. புதுச்சேரியை மாற்றப்போகும் அமித் ஷாவின் பிரம்மாண்ட அறிவிப்பு!!
மத்திய அமைச்சர் அமித்ஷா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Aug 2026 14:00 PM IST

புதுச்சேரி, ஆகஸ்ட் 09: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல்வேறு முடிவுற்ற வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு யூனியன் பிரதேசங்களைப் பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், குறிப்பாகப் புதுச்சேரியின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தோளோடு தோள் நிற்கும் என்றும் அமித் ஷா தனது உரையில் மிக உறுதியாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: தவெகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றம்.. மேலும் 27 புதிய மாவட்ட அமைப்புகள் உருவாக்கம்.. புதிய மா.செக்கள் நியமனம்!!

ரூ.1.37 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு:

விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்து விரிவான புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புதுச்சேரிக்கு வெறும் 35,000 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 2014 முதல் 2026 வரையிலான பிரதமர் நரேந்திர மோடி அரசின் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ.1,37,062 கோடி நிதி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆட்சிக் காலங்களை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு கூடுதலான நிதியாகும்” என்று சுட்டிக்காட்டினார்.

உள்கட்டமைப்பு மற்றும் சாலை விரிவாக்கத் திட்டங்கள்:

புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துப் பேசிய அவர், “புதுச்சேரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.2,500 கோடி செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை 332A-வை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி, புதுச்சேரியின் வான்வழிப் போக்குவரத்தை அதிகரிக்கும் பொருட்டு விமான நிலையத்தின் ஓடு பாதை 3,400 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது” என்று விளக்கினார்.

மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பயனாளிகள்:

மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் புதுச்சேரி மக்களைச் சென்றடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அமித் ஷா, “பிரதமரின் ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், ஆயுஷ்மான் பாரத் திட்டம், உஜ்வாலா திட்டம், லஜ்பதி தீதி திட்டம் மற்றும் நேரடி மானியப் பரிவர்த்தனை (DBT) உள்ளிட்ட பல்வேறு உன்னதமான நலத்திட்டங்களின் மூலம் புதுச்சேரியில் உள்ள சுமார் 7.7 லட்சம் மக்கள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார். புதுச்சேரியின் உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசு எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Follow Us