AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
BJP

BJP

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி (BJP) என்பது இந்தியாவின் முக்கியமான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் தொடக்கத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்தனர். பா.ஜ.க., இந்துத்துவா கொள்கையை ஆதரித்து செயல்படுகிறது. மத்தியில் 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தலைமை ஏற்று ஆட்சியை நடத்தியது.அதன்பின்னர் எதிர்கட்சியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பாஜக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சி ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்து பலத்தை அதிகரித்துள்ளது. மாநில அரசியலில் பல மாநிலங்களில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பை விட பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அக்கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.

Read More

எல்.முருகனை ஆதரித்து மபி முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்!

மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் 2026 ஆம் ஆண்டுக்கான விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக, அவினாசி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  

தென்காசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வாசுதேவநல்லூர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து தென்காசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாஜவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் தென்காசியில் பிரசாரம் மேற்கொண்டார். 

மொடக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

“மகனை முதல்வராக்கவே ஸ்டாலின் உழைக்கிறார்”.. ஈரோட்டில் அமித் ஷா வைத்த ‘வாரிசு’ அரசியல் விமர்சனம்!!

Tamilnadu Assembly Election: தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பெருமைகளை மத்திய பாஜக அரசு எப்போதும் போற்றும் என்று குறிப்பிட்ட அவர், "தமிழகம் இழந்த பெருமைகளை மீட்கவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறினார்.

NDA கூட்டணிக்கு வாக்குசேகரிக்கு களமிறங்கிய அமித் ஷா, ராஜ்நாத் சிங்.. அனல் பறக்கும் தேர்தல் களம்!

`Tamilnadu Assembly Election: ஹெலிபேட் தளம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ட்ரோன்களைப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

தீவிர தேர்தல் பிரசாரம்.. கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த அண்ணாமலை!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர் மாவட்டங்கள் தோறும் தீவிர தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். 

“தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!

Tamilnadu Assembly Election: பாஜகவின் தாக்குதலில் இருந்து திமுகவும், இந்தியா கூட்டணி சகோதரர்களும் தமிழ்நாட்டை காத்து வருகிறார்கள். சமூக நீதி என்றால் என்னவென்று நாட்டிற்கே நாங்கள் காட்டியுள்ளோம். என்ன தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவினர் தாக்குவார்கள்

வேடசந்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 

பிரதமர் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொண்டு இருக்கிறார்.. அண்ணாமலை பேச்சு!

உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என கூறுவார். பிரதமர் நேரந்திர மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ராமநாதபுர தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.. 850 தொகுதிகளாக உயரும் மக்களவை?.. 3 முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கல்!

இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்த தொகுதி மறுவரையறைக்கான சட்டத்திருத்த முன்மொழிவுகளை எதிர்த்து உள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்கிறார்.

பீகாரில் முதல்முறையாக பாஜக ஆட்சி மலர்ந்தது.. முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி.. அரசியலில் புதிய சகாப்தம்!!

Bihar Chief Minister: நிதீஷ் குமாரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாட்னாவில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சாம்ராட் சவுத்ரி ஒருமனதாகச் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் 89 எம்எல்ஏக்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

பீகாரின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.. அடுத்த முதல்வர் யார்?

Nitish Kumar Resigned As A Chief Minister | பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில், அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

“மக்களைச் சந்தியுங்கள்.. சிறு கூட்டங்களை நடத்துங்கள்”.. தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி சொன்ன தேர்தல் ‘மந்திரம்’!

Tamilnadu Assembly Election: வழக்கம்போலத் தனது பேச்சில் தமிழகத்தின் தொன்மை மற்றும் திருக்குறள் குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி.. தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடி நிதி.. புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு!

Financial Report Released: கடந்த 10 ஆண்டு கால மத்திய பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக ரூ.14 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நிதி விவரத்தை வெளியிட்டுள்ளது. எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டுகளுக்கு பதிலாக வெளியிடப்பட்டுள்ளது.

சாத்தூரில் பாஜக தேசிய தலைவர் ரோடுஷோ.. நயினார், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பு!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ரோடு ஷோ மேற்கொண்டார். அவருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.