Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
BJP

BJP

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி (BJP) என்பது இந்தியாவின் முக்கியமான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் தொடக்கத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்தனர். பா.ஜ.க., இந்துத்துவா கொள்கையை ஆதரித்து செயல்படுகிறது. மத்தியில் 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தலைமை ஏற்று ஆட்சியை நடத்தியது.அதன்பின்னர் எதிர்கட்சியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பாஜக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சி ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்து பலத்தை அதிகரித்துள்ளது. மாநில அரசியலில் பல மாநிலங்களில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பை விட பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அக்கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.

Read More

தேர்தல் வாக்குறுதிகள் – தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜக கூட்டம்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை உறுதி செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துரையாடினார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஓபிஎஸ் நிலை என்ன? மீண்டும் NDA கூட்டணியில் இணைவாரா?.. அண்ணாமலை பளீச்!!

Will ops rejoin the NDA alliance: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக, தவெக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று கூறி வந்த ஓபிஎஸ், தற்போது தை முடிய இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அதற்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என்கிறார்

‘இனி என் முதலாளி’ – பாஜகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நிதினை வாழ்த்திய பிரதமர் மோடி

Nitin Nabin : நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இன்று பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் கிடைத்தார். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்த நிதின் நபின் கட்சியின் புதிய தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார். முன்னதாக நேற்று பாஜகவின் தேசியத் தலைவராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்,

பாஜகவின் மாபெரும் பேரணி ஜனவரி 23-ல் நடைபெறும்.. நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாய கட்சியின் பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் ஜனவரி 23, 2026 அன்று நடைபெற உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். 

கோயம்புத்தூரில் பாஜக சார்பில் பொங்கல் கொண்டாட்டம்.. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் விரைவில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோயம்புத்தூரில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பீகார் சட்டமன்ற உறுப்பினருமான நிதின் நபின் கலந்துக்கொண்டார். 

“அதிமுக கூட்டணியில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுக்கவில்லை”.. நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

NDA அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா?.. மேடையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா. மோடி அவர்களின் தலைமையின் கீழ் நம்முடைய தமிழ்நாட்டிலே அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

மதவெறிப் போக்கை இந்த நாடு ஒருபோதும் மறக்காது.. காங்கிரஸ் தலைவரை சாடியய சி.ஆர்.கேசவன்!

காங்கிரஸ் தலைவர் நானா படோலின் அறிக்கை குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் கூறுகையில், "கடவுள் ராமரை ராகுல் காந்தியுடன் ஒப்பிட்டு நானா படோல் கூறிய மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள், கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் கடுமையாகப் புண்படுத்தி, பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று வந்த மறுநாளே, அந்தக் கோயிலைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று கூறி அவர் இழிவான கருத்துக்களைத் தெரிவித்த அந்த மதவெறிப் போக்கை இந்த நாடு ஒருபோதும் மறக்காது." என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4-இல் தமிழகம் வருகை…அரசியல் பின்னணி என்ன!

Union Minister Amit Shah To Visit Tamil Nadu: மத்திய உள்துறை அமித் ஷா வரும் ஜனவரி 4- ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் .

பரபரக்கும் தமிழக தேர்தல் களம்.. ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

PM Modi To Visit Tamil Nadu In January 2026 | 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு வர உள்ளார்.

முடிவை மாற்றிய ஓபிஎஸ்.. டிச.15ல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு.. டெல்லி பயணம் காரணமா?

டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும் என கெடு விதித்த ஓ.பன்னீர்செல்வம், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்றும் எச்சரித்தார். மேலும், எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Parliament: நாடாளுமன்றத்தில் இ-சிகரெட்.. சபாநாயகரிடம் அனுராக் தாக்கூர் புகார்!

BJP MP Anurag Thakur: அனுராக் தாக்கூரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பாஜக எம்.பிக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேரம் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து எம்.பி.க்களும் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து, நாடாளுமன்றத்தின் ஒழுக்கத்தை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தவெகவில் இணையும் பாஜக முன்னாள் தலைவர் – வெளியான தகவல் – முழு விவரம் இதோ

TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகர் செங்கோட்டையன் இணையவுள்ள நிலையில், மேலும் ஒரு முக்கிய பிரமுகர் அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநில முன்னாள் பாஜக தலைவர் சுவாமிநாதன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

CM MK Stalin Speech: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

PM Modi Road Show | பீகாரில் பிரமாண்ட ‘ரோடு ஷோ’ சென்ற பிரதமர் மோடி: பரபரக்கும் தேர்தல் களம்!

Bihar elections: பீகார் மக்கள் நல்லாட்சி அளிக்கும் அரசை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை தனது உள்ளதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார். இத்தனை நாள் பீகார் பக்கம் செல்லாத ராகுல் காந்தி சமீபத்தில் தான் அங்கு பிரசாரத்தை தொடங்கி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.