AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
BJP

BJP

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி (BJP) என்பது இந்தியாவின் முக்கியமான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் தொடக்கத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்தனர். பா.ஜ.க., இந்துத்துவா கொள்கையை ஆதரித்து செயல்படுகிறது. மத்தியில் 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தலைமை ஏற்று ஆட்சியை நடத்தியது.அதன்பின்னர் எதிர்கட்சியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பாஜக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சி ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்து பலத்தை அதிகரித்துள்ளது. மாநில அரசியலில் பல மாநிலங்களில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பை விட பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அக்கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.

Read More

சாத்தூரில் பாஜக தேசிய தலைவர் ரோடுஷோ.. நயினார், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பு!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ரோடு ஷோ மேற்கொண்டார். அவருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

உதகை பிரசாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற அண்ணாமலை.. பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிரசாரம் மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் உதகமண்டலம் சென்றார். அவர் சென்ற ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

உதகமண்டலத்தில் வெற்றி எங்களுக்கு தான்.. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!

உதக மண்டலம் சட்டமன்ற தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாய கூட்டணி சார்பாக, பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. மக்கள் இரண்டு முறை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தும் , அவர்கள் எந்த விதமான அடிப்படை வேலைகளையும் செய்யவில்லை. எனவே இந்த முறை வெற்றி வாய்ப்பு எங்களுக்கு தான். காரணம் மக்களுடைய அன்பு எங்கள் பக்கம் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி தேர்தல் களம்.. பாஜக, காங்கிரஸ், தவெகவின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்.. ஒரு விரிவான பார்வை!

Puducherry Assembly Election: ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் (பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு) இலவசமாக வழங்கப்படும். 12-ம் வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு 'அன்பு தங்கை' திட்டத்தின் கீழ் இலவச இ-ஸ்கூட்டர் வழங்கப்படும். மேலும், 'பிங்க் ஆட்டோ' திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம் என பாஜக வாக்குறுதி.

27 பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

தமிழகத்தில் 27 பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 27 பேரும் வெற்றி பெற வேண்டும். பாஜாக வேட்பாளர்கள் மட்டுமன்றி தேசிய ஜனநாய கூட்டணியின் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி.. சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை..

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, புதுச்சேரி முழுவதும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சாலைப் பயணம் மேற்கொண்ட பிரதமருக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கட்சி அறிவிக்கும் முன்பே வேட்புமனுத் தாக்கல்.. பாஜக நிர்வாகியை அதிரடியாக நீக்கிய நயினார் நாகேந்திரன்..

Tamilnadu Assembly Election: இந்த நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத சூழலில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த R. முரளீதரன், தன்னிச்சையாகத் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி வருகை.. ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார்.. உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை, புதுச்சேரி!!

PM Narendra Modi Arrives Chennai and Puducherry: சென்னை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை மற்றும் சிறப்புப் பிரிவினரும் அடங்குவர். சென்னை விமான நிலையம் மற்றும் அவர் தங்கும் கிண்டி நட்சத்திர விடுதி ஆகிய பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி சென்னை வருகை.. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார்.. முக்கிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!!

PM Modi's Visit to Chennai: மயிலாப்பூர் மற்றும் தி.நகர் பகுதிகளில் ரோடு ஷோ அல்லது வாகனப் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் வருகையையொட்டிச் சென்னையின் முக்கியச் சாலைகளான ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை மற்றும் கிண்டி பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளர்களை அறிவிக்காத தேசிய கட்சிகள்.. டெல்லியில் காத்திருக்கும் தமிழக நிர்வாகிகள்!!

Tamilnadu Assembly Election: பாஜகவை பொறுத்தவரை அது தேர்ந்தெடுத்த உத்தேச பட்டியலை கட்சித்தலைமை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறது. இல்லாவிட்டால் ஏற்கனவே வெளியாகி இருக்கும். கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் 2 நாளில் பட்டியல் வெளியாகி விடும் என நேற்று தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பாஜக கூட்டணி.. NDA ஆட்சி அமையும்.. ராம்தாஸ் அத்வாலே உறுதி!!

Tamilnadu Assembly Election: அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்த அதிரடியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அரசியலில் நடிகர் விஜய் களமிறங்குவது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் NDA கூட்டணி வெற்றி பெறும்.. அண்ணாமலை பேச்சு!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது. புதுச்சேரி வணிகம், கல்வி மற்றும் சுற்றுலா என பல்வேறு துறைகளில் மிக சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

நெல்லை தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்!!

Tamilnadu Assembly Election: டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டியிருந்ததால் தொகுதிகளின் எண்ணிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக விளக்கினார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று மாலை சென்னை வரவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற வேட்பாளர் பட்டியல்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

சென்னையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்?.. வெளியான முக்கிய தகவல்!

PM Modi To Conduct Election Campaign In Chennai | பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 04, 2026 அன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உடன் இணைந்து பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ள நிலையில், பிரதமர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

துணை வேந்தர்களை நியமிக்காதது தான் காரணம்.. பாஜக நாராயணன் திருப்பதி பேச்சு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக ஆசிரியர் ஒருவர் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி, பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.