BJP
பாரதிய ஜனதா கட்சி
பாரதிய ஜனதா கட்சி (BJP) என்பது இந்தியாவின் முக்கியமான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் தொடக்கத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்தனர். பா.ஜ.க., இந்துத்துவா கொள்கையை ஆதரித்து செயல்படுகிறது. மத்தியில் 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தலைமை ஏற்று ஆட்சியை நடத்தியது.அதன்பின்னர் எதிர்கட்சியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பாஜக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சி ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்து பலத்தை அதிகரித்துள்ளது. மாநில அரசியலில் பல மாநிலங்களில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பை விட பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அக்கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.
நாடாளுமன்றத்தில் பரபரப்பு.. நேருக்கு நேர் நின்று முழக்கமிட்ட ஆளும் – எதிர்க்கட்சி எம்பிக்கள்!!
Delhi Parliament protest NDA vs Opposition: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்திய வேளையில், ஆளும் கூட்டணி எம்பிக்களும் எதிரெதிரே நின்று போட்டாபோட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 23, 2026
- 13:48 pm IST
“தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
JP Nadda Explanation: தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்ததாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எந்த நேரமும் விரிவாக விவாதிக்க மத்திய அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் அவர் டெல்லியில் தெரிவித்துள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 23, 2026
- 06:34 am IST
ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி அதிரடி கைது! டெல்லியில் பெரும் பரபரப்பு!
Rahul Gandhi- Priyanka Gandhi Arrested: டெல்லியில் இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம் பி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 21, 2026
- 19:11 pm IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகை.. விழா ஏற்பாடுகள் தீவிரம்!
Union Home Minister Amit Shah : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூலை 18 அல்லது 25- ஆம் தேதிகளில் புதுச்சேரிக்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்துக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 16, 2026
- 17:40 pm IST
அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!
பள்ளிச் சான்றிதழ் கணக்குப்படி தனக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருடனான சுவாரசிய உரையாடலை விசிக தலைவர் திருமாவளவன் பகிர்ந்துள்ளார். மேலும், கொள்கை வேறு, தனிநபர் நட்பு வேறு என்றும் திமுக கூட்டணி தொடர்வதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 11, 2026
- 11:40 am IST
கோவையில் ஆய்வு மேற்கொண்ட பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்!
தவெக ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் 1.2 கிமீ மேம்பால பணிகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jun 30, 2026
- 23:46 pm IST
அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன ‘பாசிட்டிவ்’ வார்த்தை..
சட்டமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த தோல்வி என்பது ஒரு தோல்வியே இல்லை. நாம் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வலுவாகத்தான் இருக்கிறோம். பாஜக நீங்கள் நினைப்பது போலத் தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை; மாறாக அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது," என்று பேசி நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 13, 2026
- 08:05 am IST
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் தரும் முக்கிய அறிகுறி!
தற்போது மத்திய அமைச்சரவையில் பொறுப்பில் இருக்கும் சில முக்கியத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் தொடக்கமாக, ஏற்கனவே டெல்லி மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ராவும், உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக மற்றொரு மத்திய அமைச்சர் பங்கஜ் சௌத்ரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 10, 2026
- 13:03 pm IST
திருப்பரங்குன்றம் விவகாரம்.. சிடி நிர்மல் குமார் கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!
திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் கூறியுள்ளதற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களுடைய முடிவு அல்ல. இது நீதிமன்றத்தின் முடிவு. இந்துக்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்கவில்லை என்றால் மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jun 7, 2026
- 23:08 pm IST
“பாஜகவின் ஒரே முகம் தாமரைதான்”.. அண்ணாமலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
பாஜகவுக்குள் குழப்பம் நிலவுவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "பாஜக இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பிறகும் மிகவும் உறுதியாக இருக்கிறது. இதனைப் பொறுக்க முடியாமல், காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு போன்றவர்கள் ஏதேதோ கதைகளைக் கட்டி விடுகிறார்கள். இதைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை" என்று சாடினார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 7, 2026
- 14:00 pm IST
வேறு எந்த கட்சிக்கும் செல்ல வேண்டாம் என கட்சியினரிடம் கூறியுள்ளேன்.. நயினார் நாகேந்திரன் பேச்சு!
உலகின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. நம்மிடம் உலகின் நம்பர் 1 தலைவர் இருக்கிறார். எனவே வேறு எந்த கட்சிக்கோ இயக்கங்களுக்கோ செல்ல வேண்டாம் என்று கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jun 7, 2026
- 00:12 am IST
இந்துக்களின் உணர்வை குறைத்து மதிப்பிடக்கூடாது.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
அவர் இந்துக்களின் உணர்வை குறைத்து மதிப்பிடக்கூடாது. திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்ற வேண்டும் என்று இந்துக்கள் தீவிரமாக உள்ளனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமாரின் கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jun 6, 2026
- 23:52 pm IST
சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு!
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில், இது நம்ம இயக்கம் என்ற புதிய கட்சியையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த அவரை அவரது ஆதரவாலர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
- Vinalin Sweety
- Updated on: Jun 5, 2026
- 23:37 pm IST
அண்ணாமலைக்கு அணிலாக உதவி செய்வோம்.. பாஜகவில் இருந்து விலகிய கரு. நாகராஜன் அதிரடி முழக்கம்!
Karu Nagarajan: தமிழகத்தில் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தது முதல் அணிலாக செயல்படுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்தார். பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த நிலையில் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 5, 2026
- 20:21 pm IST
அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!
Nainar Nagendran : பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்ணாமலை விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக பாஜகவின் மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், கட்சி, அண்ணாமலை குறித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்தார் .
- Gowtham Kannan s
- Updated on: Jun 5, 2026
- 16:34 pm IST