AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
BJP

BJP

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி (BJP) என்பது இந்தியாவின் முக்கியமான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் தொடக்கத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்தனர். பா.ஜ.க., இந்துத்துவா கொள்கையை ஆதரித்து செயல்படுகிறது. மத்தியில் 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தலைமை ஏற்று ஆட்சியை நடத்தியது.அதன்பின்னர் எதிர்கட்சியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பாஜக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சி ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்து பலத்தை அதிகரித்துள்ளது. மாநில அரசியலில் பல மாநிலங்களில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பை விட பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அக்கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.

Read More

மார்ச் 11-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. NDA-ன் பிரம்மாண பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்!

PM Narendra Modi To Visit Tamil Nadu On 11 March | மார்ச் 01, 2026 அன்று புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர், மார்ச் 11-ல் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்… களமிறங்கும் மத்திய அமைச்சர்கள் குழு? பாஜக தலைமையின் பலே திட்டம்!

Tamil Nadu Assembly Elections: தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக மத்திய அமைச்சர்கள் குழுவை இறக்குவதற்கு பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவானது மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளதாக கூறப்படுகிறது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்… பல்வேறு வண்ணங்களில் தீவிரமாக தயாராகும் கட்சி கொடிகள்!

Tamil Nadu Assembly Elections : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கான கொடிகள் தயார் செய்யும் பணி திருப்பூரில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர் .

“ஓபிஎஸ்-ஐ தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”.. பியூஸ் கோயல் சரமாரி தாக்கு..

முன்னதாக நேற்று முன்தினம் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்றைய தினமும் அறிவாலயம் வருகை தந்தார். அங்கு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, வெளியே வந்த அவரிடம், திமுகவில் இணைந்தவுடன் மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்துள்ளீர்களே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பிரதமர் மோடி வருகை.. தமிழகத்தில் களமிறங்கிய சிறப்பு பாதுகாப்பு படை.. பயண திட்டம் வெளியீடு!

Prime Minister Narendra Modi: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் எஸ்பிஜி வசம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்…வாடகை வாகனங்களுக்கு திடீர் மவுசு…பிரசாரத்துக்கு முன்பதிவு செய்யும் கட்சிகள்!

Election Campaign Vechicle: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில். அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்காக வாடகை வாகங்களை முன்பதிவு செய்து வருகின்றன. இதனால், வாடகை வாகனங்களின் வாடகை மற்றும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதுடன், அதன் மவுசும் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் தேஜ கூட்டணி 60% வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும்… உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Union Home Minister Amit Shah: புதுச்சேரி மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 தொகுதிகளில் 24 தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், 60 சதவீத வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இந்து தெய்வங்களுக்கு எதிரான கருத்து.. ரேவந்த் ரெட்டி வழக்குப்பதிவு!

நிஜாமாபாத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் குறித்து 'உணர்ச்சியற்ற' கருத்துகளைத் தெரிவித்ததாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது பாஜக தலைவர் அரவிந்த் தர்மபுரி புகார் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரேவந்த் ரெட்டி, இந்து மதத்தில் எத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? எத்தனை தெய்வங்கள்? மூன்று கோடி தெய்வங்களா? ஏன்? திருமணம் ஆகாதவர்களுக்கு அனுமன் இருக்கிறார். இரண்டு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு இன்னொரு தெய்வம் இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி…மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!

Union Minister L Murugan: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெரும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். மேலும், திமுக வீட்டுக்கு செல்வது உறுதி என்றார்.

தமிழகம்-புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாள்கள் விசிட்..பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார்…குஷியில் பாஜகவினர்!

Prime Minister Narendra Modi: தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்காக இரு நாள்கள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடியரசு தின நிகழ்ச்சியில் 3வது வரிசையில் இருக்கை.. சால்வை அணிய மறுத்த ராகுல்.. பாஜகVSகாங்., அவமதிப்பு குற்றச்சாட்டு!!

BJP vs Congress clash; இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து, ராகுல் காந்தி செய்தது கலாச்சார அவமதிப்பு என குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதோடு, குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டும் அவர் அதனை அணியவில்லை என்றும் சாடி வருகின்றனர்.

தேர்தல் வாக்குறுதிகள் – தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜக கூட்டம்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை உறுதி செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துரையாடினார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஓபிஎஸ் நிலை என்ன? மீண்டும் NDA கூட்டணியில் இணைவாரா?.. அண்ணாமலை பளீச்!!

Will ops rejoin the NDA alliance: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக, தவெக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று கூறி வந்த ஓபிஎஸ், தற்போது தை முடிய இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அதற்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என்கிறார்

‘இனி என் முதலாளி’ – பாஜகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நிதினை வாழ்த்திய பிரதமர் மோடி

Nitin Nabin : நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இன்று பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் கிடைத்தார். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்த நிதின் நபின் கட்சியின் புதிய தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார். முன்னதாக நேற்று பாஜகவின் தேசியத் தலைவராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்,

பாஜகவின் மாபெரும் பேரணி ஜனவரி 23-ல் நடைபெறும்.. நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாய கட்சியின் பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் ஜனவரி 23, 2026 அன்று நடைபெற உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.