Health Tips: நன்றாக சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிடலாமா? சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
Fruit Eating Tips: உணவுக்கு முன் அல்லது பின் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் முழு நன்மைகளும் கிடைக்காது என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், மனித செரிமான அமைப்பு உணவில் இருந்து அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வேளை உணவின்போதும் (Food Habits) சரியாக சாப்பிடுவது மிக முக்கியம். ஆனால், உணவுக்கு பிந்தைய பழக்கவழக்கங்களும் நம் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்று பலரும் தெரிவதில்லை. நாம் எவ்வளவு ஆரோக்கியமான சாப்பிட்டாலும், நாம் செய்யும் சில தவறான பழக்கவழக்கங்கள் நம் செரிமானத்தை பலவீனப்படுத்தும். சாப்பிட்ட பிறகு செரிமான செயல்முறை 2 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும். இந்த நேரத்தில், நம் உடல்கள் உணவை உடைத்து அதன் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும். இந்த முக்கியமான நேரத்தில் நம் உடல்களை நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில், சாப்பிட்ட உடனே பழம் சாப்பிடுவது சரியா இல்லையா என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது. அதன்படி, அதிகமான உணவுக்குப் பிறகு பழம் (Fruits) சாப்பிடலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இருமல் அல்லது சளி இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
அதிகமாக சாப்பிட்டபிறகு பழங்கள் சாப்பிடலாமா?
பலர் அதிகமாக சாப்பிட்ட பிறகு பழங்களை இனிப்புப் பொருளாக சாப்பிடுகிறார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, இது அனைவருக்கும் சரியானதல்ல. பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து விரைவாக ஜீரணமாகும். அதேசமயம், அதிகமாக சாப்பிட்ட பிறகு, அதிலுள்ள புரதம் மற்றும் கொழுப்பு ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அதிக உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் சிலருக்கு வாயு மற்றும் வீக்கம் ஏற்படலாம். இது அனைவருக்கும் பொருந்தாது என்றாலும், உணர்திறன் வாய்ந்த செரிமான அமைப்புகள், பிரக்டோஸ் சகிப்புத்தன்மை அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு, உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிடுவது வாயு அல்லது வீக்கத்தை அதிகரிக்கும்.
உணவுக்கு முன் அல்லது பின் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் முழு நன்மைகளும் கிடைக்காது என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், மனித செரிமான அமைப்பு உணவில் இருந்து அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ALSO READ: இதை செய்தால் ருசி மட்டுமல்ல, உங்கள் இதயத்திற்கும் நல்லது!
சிறுகுடல் மிக நீளமானது என்பதால் அதன் செயல்பாடு உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை மெதுவாக உறிஞ்சுவதாகும். எனவே, உணவுடன் அல்லது உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்து மதிப்பை அழிக்காது. நிபுணர்களின் கூற்றுப்படி, உணவுக்குப் பிறகு ஜீரணிக்க எளிதான சில பழங்கள் உள்ளன. மேலும், அவை செரிமானத்திற்கு உதவும். இவற்றில் பப்பாளி, அன்னாசி, கிவி, பெர்ரி மற்றும் ஆப்பிள் போன்ற பழங்கள் அடங்கும். பப்பாளி மற்றும் அன்னாசிப்பழத்தில் உள்ள நொதிகள் புரதங்களை உடைக்க உதவுகின்றன. இது செரிமான செயல்முறையை மேம்படுத்தும்.



