Health Tips: உடலில் இந்த பிரச்சனைகள் இருக்கா? பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது!
Side Effects of Milk: சிலருக்கு பாலில் உள்ள அதிகப்படியான புரதங்களால் அழற்ஜி ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில், பால் குடிப்பதால் தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இந்த விஷயத்தில், பால் குடிப்பது முற்றிலும் பாதிப்பில்லாததாக இருக்கலாம்.
ஆதி காலம் முதல் பால் (Milk) ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. கால்சியம், புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் (Vitamins) நிறைந்த இது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை பயக்கும். ஆனால் இந்த பால் உண்மையில் சிலருக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அனைவரின் உடலுக்கும் பால் ஒரே மாதிரியான நன்மைகளை தருமா? உடலில் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. சிலருக்கு, பால் படிப்படியாக அவர்களின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். அது எப்படி உள்ளிட்ட விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
ALSO READ: அதிக விலை ப்ளூபெர்ரி.. எளிதாக கிடைக்கும் கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா? எது சிறந்தது..?
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்:
இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலான மக்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலனவர்களின் உடலில் லாக்டேஸ் நொதி இல்லாமல் ஒருக்கும், இது செரிமானத்தைத் தடுக்கிறது. இதன் விளைவாக, பால் குடித்த பிறகு வீக்கம், வாயு, வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.




பால் அழற்ஜி உள்ளவர்கள்:
சிலருக்கு பாலில் உள்ள புரதங்களால் அழற்ஜி ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில், பால் குடிப்பதால் தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இந்த விஷயத்தில், பால் குடிப்பது முற்றிலும் பாதிப்பில்லாததாக இருக்கலாம்.
முழு கொழுப்புள்ள பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இதய நோயாளிகள் மற்றும் அதிக கொழுப்பு உள்ளவர்கள் பிரச்சனையை ஏற்படுத்தலாம். அந்தவகையில், இதை அதிக அளவில் உட்கொள்வது கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். மேலும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். இத்தகையவர்கள் பாலின் அளவு மற்றும் வகையை புத்திசாலித்தனமாக தேர்வு செய்வது முக்கியம்.
புற்றுநோய் அபாயத்தில் உள்ளவர்கள்:
சில ஆராய்ச்சிகள், அதிகமாக பால் குடிப்பது புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றன. கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், அதிக ஆபத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இரும்புச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள்:
இளம் குழந்தைகள் அதிகமாக பசும்பாலை உட்கொள்வது இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இது இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, சமச்சீரான உணவு முக்கியமானது.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்:
பச்சைப் பால் சிலருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். இதில் பாக்டீரியாக்கள் இருக்கும், இது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ALSO READ: மாரடைப்பை குறைக்கும் மகத்துவம்.. நீண்ட நாள் வாழ்வு தரும் வால்நட்ஸ்..!
பால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்கலாம். ஆனால், இது அனைவருக்கும் அவசியமானதாகவோ அல்லது பாதுகாப்பானதாகவோ இருக்காது. பால் குடித்த பிறகு உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், அதைப் புறக்கணிக்காமல் இருப்பது நல்லது. அதன்படி, உங்கள் உடலின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.