Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi)

விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi)

இந்து மதத்தில் முழுமுதற் கடவுள் ஆக அறியப்படுகிறார். நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் விநாயகரை வணங்காமல் செய்வது இல்லை. திரும்பும் திசை எங்கிலும், அல்லது ஏதேனும் கோயிலுக்கு சென்றாலும் அங்கு நம்மை முதலில் வரவேற்பவர் விநாயகர் தான். இப்படிப்பட்ட விநாயகர் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) என்ற பெயரில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி திதியில் கடைபிடிக்கப்படுகிறது

Read More

ஆட்டம் பாட்டத்துடன் கரைக்கப்பட்ட கர்நாடகாவின் ஹூப்பள்ளி விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் கொண்டாடப்பட்டாலும் விநாயகர் சிலை கரைப்பு என்பது இந்தியா முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன. ஆனால் மும்பை, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் விநாயகர் சிலை கரைப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் உள்ள விநாயகர் சிலைகள் நேற்று ஆட்டம் பாட்டத்துடன் கரைக்கப்பட்டன

Rohit Sharma: விநாயகர் வழிபாட்டின்போது ரசிகர்கள் செய்த செயல்.. கடுப்பாகி கையெடுத்து கும்பிட்ட ரோஹித் சர்மா!

Rohit Sharma Requests Fans: இந்திய ஒருநாள் அணித் தலைவர் ரோஹித் சர்மா, மும்பையில் விநாயகர் சிலையை வழிபட்டபோது ரசிகர்கள் "மும்பை கா ராஜா ரோஹித் சர்மா" எனக் கோஷமிட்டதால் அதிருப்தி அடைந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க ரசிகர்கள் கோஷமிடுவதை நிறுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி: லண்டனில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் பக்தர்கள் – சர்ச்சையான வீடியோ

Ganesh Chaturthi : விநாயகர் சதுர்த்தி நிறைவு நாளான செப்டம்பர் 6, 2025 அன்று விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து நீரில் கரைத்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்தில் ஆற்றில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரமாண்ட விநாயகரின் ஊர்வலம்!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது நாடு முழுவதும் கடந்த 2025, ஆகஸ்ட் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சில மாநிலங்களில் இப்பண்டிகை 10 நாட்கள் திருவிழாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் உள்ள 49 அடி உயர விநாயகர் சிலையின் ஊர்வலம் அனந்த சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

மஹாராஷ்டிராவில் 21 விநாயகர் சிலைக்கு பெண்கள் வழிபாடு

மஹாராஷ்டிரா மாநிலம் கோலாபூர் பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சதுக்கில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு செப்டம்பர் 4, 2025 அன்று 21 அடி உயரமான விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபற்றது. அப்போது பெண்கள் விநாயகர் சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Ganesh Chaturthi : ரூ.1.50 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்காரம்!

விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக ஒரு வாரத்திற்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறுஇடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக வட இந்தியாவில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் ஸ்பெஷலாக வைக்கப்படுகின்றன. அந்த வகையில் ராஜஸ்தானின் உதய்பூர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்

Sachin Tendulkar: மும்பையில் குடும்பத்துடன் விநாயகரை வழிபட்ட சச்சின்.. கிரிக்கெட் கடவுளையும் தரிசித்த ரசிகர்கள்!

Sachin Tendulkar Visits Lalbaugcha Raja: 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் மும்பையில் உள்ள பிரபலமான லால்பாச்சா ராஜா பந்தலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவரது மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுன், மற்றும் மகள் சாரா உடன் வந்திருந்தார்.

Lalbaugcha Raja : மும்பை விநாயகரை பார்க்க முண்டியடிக்கும் கூட்டம்!

விநாயகர் சதுர்த்தி தினம் முடிந்துவிட்டாலும் வழிபாடு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல இடங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. லால்பாக்சா ராஜா விநாயகரை சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர்

கர்நாடகாவில் கோலாகலம்.. கணபதி சிலையை கரைத்த பக்தர்கள்!

கர்நாடகாவை அடுத்த கலபுர்கியில் உள்ள அப்பா ஏரி தொட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. பல பக்தர்களுக்கு 5வது நாள் விசர்ஜனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பாரம்பரியம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேறுபடுகிறது. ஐந்தாவது நாளில் கொண்டாடப்படும் கணபதி விசர்ஜனம் ஒருவரின் வாழ்க்கையிலிருந்து தடைகளை நீக்கி நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது என்ற பொதுவான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

வரிசைக்கட்டிய விநாயகர் சிலைகள்.. தூத்துக்குடியில் கோலாகல விழா!

விநாயகர் சதுர்த்தி விழா சில நாட்கள் ஆனாலும் சிலைகள் கரைப்பு தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதுபோல ஒவ்வொரு ஊரிலும் விநாயகர் சிலைகளை அருகிலுள்ள நீர் நிலைகளில் அப்பகுதி மக்கள் கரைத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் வரிசையாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

சென்னை மெரினாவில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்..!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி நாள் முதல் தெருக்களில் வைத்து தரிசனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டது. தற்போது இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பை லால் பாக் சா ராஜா கணேஷ் சிலை.. லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை!

மும்பை முழுவதும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக லால்பாச்சா ராஜா, நகரத்தின் மிகவும் பிரபலமான விநாயகர் சிலையாகக் கருதப்படுகிறது. இங்கு பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை.. வேறு எந்த நாடு தெரியுமா?

World Largest Vinayagar Statue : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் இந்த நேரத்தில் விநாயகர் சிலை தொடர்பான ஒரு தகவலை தெரிந்துகொள்ளுங்கள். உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை. அது வேறு ஒரு நாட்டில்தான் இருக்கிறது.

வெள்ளி, தங்கத்தால் ஆன விநாயகர் சிலை.. தரிசிக்க குவிந்த பக்தர்கள்..!

மகாராஷ்டிராவில் உள்ள ஜல்னாவில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 108 கிலோ வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட தனித்துவமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலைக்கு அருகிலுள்ள பொது பந்தலில் நிறுவப்பட்ட இந்த சிலை, தூய வெள்ளி மற்றும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டு, ஐந்தரை அடி உயரம் கொண்டது. இதன் விலை ரூ.90 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

விநாயகர் கோயிலில் குடும்பத்துடன் வழிபட்ட அமித் ஷா.. பாஜக தலைவர்களுடனும் சந்திப்பு..!

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 30ம் தேதி தனது குடும்பத்தினருடன் புகழ்பெற்ற லால்பாச்சா ராஜ கணபதியில் பிரார்த்தனை செய்தார். இந்த நிகழ்வின்போது மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மாநில பாஜக தலைவர்களுடனும் அமித் ஷா ஒரு சந்திப்பை நடத்தினார்.