சேலத்தில் பயங்கரம்.. போதையில் தீப்பொறி பறக்க காரை ஓட்டிய வாலிபர்கள்!
சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போதை வாலிபர்கள் ஓட்டி வந்த சொகுசு கார் மோதி வாலிபர் ஒருவரின் கால் துண்டான நிலையில், காரின் சக்கரம் உடைந்தும் நிறுத்தாமல் சாலையில் தீப்பொறி பறக்க தப்பியோடிய இருவரைப் பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலத்தில் போதை தலைக்கேறிய வாலிபர்கள் இருவர் சொகுசு காரை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டி, இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த விபத்தில் வாலிபர் ஒருவரின் கால் துண்டான நிலையில், காரின் சக்கரம் உடைந்தும் நிறுத்தாமல், சாலையில் தீப்பொறி பறக்க பறக்க தப்பி ஓட முயன்ற போதை வாலிபர்களைப் பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர்.
Follow Us
