AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!

Undergraduate Medical Courses : தமிழகத்தில் எம்பிபிஎஸ், பி. டி. எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 27- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Jul 2026 19:27 PM IST

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வில் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 29- ஆம் தேதி மருத்துவ கல்வி இயக்குனராகம் வெளியிட்டிருந்தது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 23- ஆம் தேதி நிறைவு பெற்றிருந்தது. அதன்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40 ஆயிரத்து 760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயிரத்து 726 விண்ணப்பங்களும் என மொத்தம் 70,486 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்திருந்தது. இந்த விண்ணப்பங்கள் ஆனது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும். கடந்த ஆண்டில் 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது.

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நிகழாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், ஜூலை 23- ஆம் தேதியுடன் விண்ணப்ப காலம் முடிவடைந்த நிலையில், இதற்கு ஜூலை 27- ஆம் தேதி ( திங்கள்கிழமை) மாலை 5 மணி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

நீட் தேர்வு விவகாரத்தில் நிகழ்ந்த குளறுபடி

தற்போது, நடைபெற்ற நீட் தேர்வு அதற்கு முன்னதாக ஒரு தேதியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறொரு தேதியில் நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு முடிவடையும் வரை டெலிகிராம் செயலுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. அத்துடன், பல்வேறு மாநிலங்களுக்கு நீட் தேர்வு வினாத்தாள் அனுப்பி வைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை இந்திய ராணுவம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகல்

அதன்படி, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகளும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதனிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவரங்களை கண்டித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்திருந்தனர். அதன் அடிப்படையில், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் – நீட் தேர்வு போராட்டம் தீவிரமடையும் நிலையில் முடிவு

Follow Us