கோவையில் நள்ளிரவில் தொழிலாளர்கள் தங்கிய கொட்டகையை உடைத்த ஒற்றை யானை!
கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து பசுந்தீவனங்களை உண்டதுடன், அங்கிருந்த நாய்களையும் துரத்தியது.
கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து பசுந்தீவனங்களை உண்டதுடன், அங்கிருந்த நாய்களையும் துரத்தியது.
பின்னர், கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்து, உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேதப்படுத்தியது. யானையின் சத்தம் கேட்டு விழித்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி அருகிலிருந்த கட்டிடத்தில் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் சுமார் 2 மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதற்கிடையில், அப்பகுதியில் தொடரும் திடீர் மின்வெட்டால் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தொழிலாளர்கள் தங்கிய கொட்டகையை உடைத்த ஒற்றை யானை!
பேருந்தில் ஆபத்தான பயணம்: கால் இடறிய மாணவன் உயிர்தப்பிய காட்சி!
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக உலா வரும் பன்றி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்..
