AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Education

Education

தமிழகத்தில் அரசு, அரசுக்கு இணையான, தனியார் மற்றும் சுற்றுச்சூழல் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகள் பொதுவாக முறையான பாடத்திட்டத்துடன் சீரான கல்வி தரம் வழங்குகின்றன. மேலும், CBSE, ICSE போன்ற தேசிய பாடத்திட்டம் செயல்படும் தனியார் பள்ளிகளும் பல உள்ளன. இதேபோல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் கற்பித்தல் வழங்குகின்றன. இங்கு பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல், வணிகம், கலை, அறிவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் கல்லூரிகள் விருத்தி பெற்றுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி,சிதம்பரம் போன்ற நகரங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் கல்வி அமைப்பு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது, பள்ளிகளும் கல்லூரிகளும் ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாக அமைந்துள்ளன. கல்லூரி முடிவுற்ற பிறகு கல்லூரி சார்பாகவும், அரசு சார்பாகவும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read More

குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பு பாதுகாப்பா? பள்ளிகளும் விழிக்க வேண்டிய நேரம்!

Digital Safety in Education: இன்றைய மாணவர்கள் கல்விக்காக இணையத்தை அதிகம் பயன்படுத்துவதால், டிஜிட்டல் பாதுகாப்பு முக்கிய தேவையாக மாறியுள்ளது. சைபர் துன்புறுத்தல், போலி தகவல்கள் மற்றும் தனியுரிமை பிரச்சினைகள் மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும். இதனால், பெற்றோர்கள் மட்டுமல்லாமல் பள்ளிகளும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களே ரெடியா? முடிந்தது கோடை விடுமுறை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு..

வடகடலோர தமிழகத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல கடும் அவதிக்கு உள்ளாகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, பள்ளிகள் மூன்று நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

பள்ளி குழந்தைகள் கொண்டும் செல்லும் வாட்டர் பாட்டிலை எப்படி தேர்வு செய்வது?

Healthiest School Water Bottles: குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நச்சுத்தன்மையற்ற, இரசாயனக் கசிவுகள் இல்லாத 'BPA-Free' பிளாஸ்டிக் அல்லது எஃகு (Stainless Steel) வாட்டர் பாட்டில்களை மட்டுமே பெற்றோர்கள் தேர்வு செய்ய வேண்டும். தண்ணீரைத் தூய்மையாக வைப்பதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தாமிர (Copper) பாட்டில்களைப் பயன்படுத்துவது மாணவர்களின் உடல்நலத்திற்குப் பெரும் நன்மை பயக்கும்.

சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு போர்டலில் சைபர் தாக்குதல்: மாணவர்கள் கடும் அவதி

மறுமதிப்பீட்டு போர்டல் முதலில் மே 29ஆம் தேதி தொடங்கப்பட இருந்தது. பின்னர் ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றும் தொடங்கப்படாமல் இறுதியாக ஜூன் 2ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இந்த போர்டல் மூலம் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை சரிபார்க்கவும், மறுமதிப்பீடு கோரவும் விண்ணப்பிக்க முடியும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அவசரமின்றி, புன்னகையோடு தயார் செய்வது எப்படி?

Smart Morning Routines: முந்தைய இரவிலேயே பள்ளி சீருடைகள், பைகள் மற்றும் சமையல் தேவைகளைத் திட்டமிட்டுத் தயார் செய்து வைப்பது காலை நேரப் பதற்றத்தைப் பாதியாகக் குறைக்கும். குழந்தைகள் எழுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே பெற்றோர்கள் எழுந்து தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது வீட்டின் சூழலை அமைதியாக வைத்திருக்க உதவும்.

ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு? விவரமா எழுதி போடணும் – தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!

Private Schools Tuition Fees : தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெரும் கல்வி கட்டணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி தெரிவித்துள்ளார் .

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம்.. ஜூன் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு – அமைச்சர் விஸ்வநாதன்..

கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தமாக 2,33,417 கலைக் கல்லூரி விண்ணப்பங்கள் பதிவாகியிருந்ததாகவும், 2026ஆம் ஆண்டில் 2,31,274 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், 2025ஆம் ஆண்டில் 1,87,310 பேர் கட்டணம் செலுத்தியிருந்ததாகவும், 2026ஆம் ஆண்டில் 1,79,675 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.

பள்ளி – கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு… சீருடை – ஐடி கார்டு இருந்தாலே பேருந்தில் இலவச பயணம்!

School And College Students Free Bus: தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது அடையாள அட்டை, சீருடை அணிந்து அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக் கட்டண விவகாரத்தில் அதிரடி உத்தரவு: தனியார் பள்ளிகள் இதை செய்தே ஆகணும்..!

Private School Fee: தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை விளம்பரப் பலகை மற்றும் விண்ணப்பங்களில் கட்டாயம் அச்சிட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளாகத் தகவல் தராமல் அலட்சியம் காட்டிய மாவட்ட கல்வி அதிகாரிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, மனுதாரருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

விரைவில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களே ஸ்கூலுக்கு போக ரெடியா?

School Reopening: பள்ளி திறப்பை முன்னிட்டு மாணவர்கள் மனதளவிலும் உடலளவிலும் தயாராகுவது அவசியம். தூக்க நேரம், உணவு பழக்கம் மற்றும் தினசரி ஒழுங்கை முன்கூட்டியே சரிசெய்தால் பள்ளி வாழ்க்கை எளிதாகும். புத்தகங்கள், சீருடை, கல்வி பொருட்களை முன்பே தயார் செய்துகொள்வது நம்பிக்கையை அதிகரிக்கும்.

10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்.. எப்போது கிடைக்கும்? தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

10 Students Provisional Mark Sheets : தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வருகிற மே 22- ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படுவதாக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

SSLC Class 10 results 2026 : 10ம் வகுப்பு ரிசல்ட்.. எந்த மாவட்டம் டாப்.. எது கடைசி.. முழு விவரம்!

Tamil Nadu SSLC Class 10 results 2026: தமிழ்நாட்டில் இன்று வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.31% ஆகப் பதிவாகியுள்ள நிலையில், மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த தேர்ச்சிப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% பெற்று தமிழகத்திலேயே முதலிடத்தையும் இராணிப்பேட்டை மாவட்டம் (86.58%) கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.

Tamil Nadu SSLC Result 2026: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி.. முழு விவரம்..

Tamil Nadu SSLC 10th Class Results 2026: மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தங்களின் பதிவெண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றைக் குறிப்பிட்டு, www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக உடனடியாக அறிந்து கொள்ளலாம்.

Tamil Nadu SSLC Result 2026: வெளியாகும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் தெரிந்துக்கொள்வது எப்படி?

Tamil Nadu SSLC 10th Class Result Download: மார்ச்/ஏப்ரல் 2026இல் நடைபெற்ற 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அவர்களால் வெளியிடப்படவுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?.. தமிழக அரசு அறிவிப்பு!!

விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்களைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் அண்மையில் முழுமையாக நிறைவடைந்தன. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்த கல்வி ஆண்டு அட்டவணையின்படி, மே 20-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில், எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்ட தேதியிலேயே முடிவுகள் வெளியாக உள்ளது.