Education
தமிழகத்தில் அரசு, அரசுக்கு இணையான, தனியார் மற்றும் சுற்றுச்சூழல் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகள் பொதுவாக முறையான பாடத்திட்டத்துடன் சீரான கல்வி தரம் வழங்குகின்றன. மேலும், CBSE, ICSE போன்ற தேசிய பாடத்திட்டம் செயல்படும் தனியார் பள்ளிகளும் பல உள்ளன. இதேபோல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் கற்பித்தல் வழங்குகின்றன. இங்கு பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல், வணிகம், கலை, அறிவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் கல்லூரிகள் விருத்தி பெற்றுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி,சிதம்பரம் போன்ற நகரங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் கல்வி அமைப்பு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது, பள்ளிகளும் கல்லூரிகளும் ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாக அமைந்துள்ளன. கல்லூரி முடிவுற்ற பிறகு கல்லூரி சார்பாகவும், அரசு சார்பாகவும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
GATE 2027 அலர்ட்: புதிய பாடம், மாற்றிய பாடத்திட்டம்… மாணவர்களே தெரிந்துகொள்ளுங்க
GATE Exam: GATE 2027 தேர்வை ஐஐடி மெட்ராஸ் நடத்த உள்ளது. தேர்வு பிப்ரவரி 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். 'ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்' என்ற புதிய பாடம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பாடங்களின் பாடத்திட்டமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jul 22, 2026
- 06:24 am IST
நீட் மாணவர்களின் தலையில் விழுந்த பேரிடி.. குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் உயர்வு.. முழு விவரம் உள்ளே!
NEET Qualifying Marks Increase : நாடு முழுவதும் நடைபெறும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி தேர்வின் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பன குறித்த விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 21, 2026
- 17:46 pm IST
மாணவர்களின் புத்தகப்பை சுமை இனி குறைக்கப்படும்.. இந்த நொடி முதல் கல்வி முறை மாறுகிறது – அமைச்சர் ராஜ் மோகன்..
புத்தகச் சுமை எந்த அளவுக்குக் குறைகிறதோ, அந்த அளவுக்கு மாணவர்களின் மனச்சுமையும் குறையும். நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவான சுமையைத்தான் எடுத்துச் சென்றிருப்பார். ஆனால், அதைவிட பள்ளி மாணவர்கள் தற்போது அதிகமான சுமையைச் சுமந்து செல்கின்றனர் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 21, 2026
- 15:45 pm IST
பள்ளி மாணவர்களின் ஜாதி விவரங்கள் கட்டாயம்.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!
Tamilnadu Education Department : தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆதார் எண், ஜாதி விவரங்கள் உள்ளிட்டவற்றை கட்டாயம் கேட்டு பெற்று பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 18, 2026
- 20:48 pm IST
குரூப் 1 முதன்மை தேர்வு தேதியில் மாற்றம்.. செப். 27ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு..
TNPSC Group 1 Exam: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கி, ஜூலை 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 17, 2026
- 07:04 am IST
தமிழகத்தில் கூடுதலாக 950 எம்.பி.பி.எஸ் இடங்கள்.. மொத்தம் 13,999ஆக உயர்வு..
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கூடுதலாக 950 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் இடங்களில், மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 13 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. மேலும், ஒரு புதிய தனியார் மருத்துவக் கல்லூரியும் இந்தக் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 15, 2026
- 16:48 pm IST
மூன்றாவது மொழி பாடத்தில் தேர்ச்சி கட்டாயம் – சிபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு
2026-27 கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் மூன்றாம் மொழி மதிப்பீட்டில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர் 10-ம் வகுப்பிற்கு முன்னேற்றப்படுவார். ஆனால், 10-ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே 9-ம் வகுப்பிற்கான மூன்றாவதுது மொடி பாடத்தில் நடத்தப்படும் மதுப்பீடிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 14, 2026
- 19:07 pm IST
அடுத்த லெவலுக்கு செல்லும் தமிழக கல்வித்துறை.. அரசு பள்ளிகளில் ஏஐ- காலநிலை அறிவியல் பாடம்.. முழு விவரம் உள்ளே!
AI and Climate Science Subjects: தமிழக அரசுப் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் குறித்த பாடங்களை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 14, 2026
- 06:27 am IST
பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழைய அனுமதி இல்லை; விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு – அமைச்சர் ராஜ்மோகன்
பள்ளி வளாகங்கள் விழாக்கள் நடைபெறும் இடமாக அல்ல; அறிவு, விழிப்புணர்வு மற்றும் சிந்தனையை வளர்க்கும் மையமாகத் திகழ வேண்டும் என்றும், புகழ் பரப்பும் இடமாக அல்லாமல், எதிர்காலத்தை உருவாக்கும் இடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 9, 2026
- 20:04 pm IST
பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு.. பள்ளிக்கல்வித்துறை சொன்ன விளக்கம்..
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாநிலம் முழுவதும் பல்வேறு வகுப்புகளில் கணிசமான அளவில் புதிய மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றன. இதன் காரணமாக ஆரம்பக் கல்வி இயக்குநரகம், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புதிதாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைத்து, கூடுதலாக தேவையான பாடப்புத்தகங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 9, 2026
- 15:49 pm IST
அரசு கலைக் கல்லூரிகளில் சரியும் சேர்க்கை: 43% இடங்கள் காலியாக கிடக்கக் காரணம் என்ன?
Seats Vacant in Government Arts Colleges: தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் கலந்தாய்வு தாமதமாவதால் தனியார் கல்லூரிகளை விட மாணவர் சேர்க்கை நடப்பாண்டு மந்தகதியில் நடந்து வருகிறது. பொறியியல், மருத்துவம் மற்றும் விவசாயப் படிப்புகளுக்கான சேர்க்கை இன்னும் தொடங்காததால், கிராமப்புற மாணவர்கள் அங்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
- Baskar P
- Updated on: Jun 24, 2026
- 11:13 am IST
நீட் ஹால் டிக்கெட்டில் பெரும் குளறுபடி.. நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கீடு!
Neet Exam Center Abu Dhabi: மகாராஷ்டிர மாநிலத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவருக்கு ஐக்கிய அரபு அமீர நாடான அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை விளக்கமளித்துள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jun 20, 2026
- 11:45 am IST
மாணவர்களே நோட் பண்ணுங்க.. இந்தாண்டு எத்தனை நாள்கள் லீவு.. அடுத்த சம்மர் லீவு அப்டேட்!
Tamil Nadu School Timetable: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்குமான கால அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில், பள்ளிகளுக்கு 155 நாள்கள் விடுமுறை கிடைக்கிறது. 210 நாள்கள் வேலை நாள்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 2027 ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jun 16, 2026
- 16:49 pm IST
பெற்றோர்களே கவனிங்க.. ஸ்காலர்ஷிப் லிங்க் வந்தால் க்ளிக் செய்யாதீங்க.. பரவும் நூதன மோசடி!
Tamil Nadu Education Scholarships Scam: தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதாக கூறி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதில், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 16, 2026
- 14:32 pm IST
குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பு பாதுகாப்பா? பள்ளிகளும் விழிக்க வேண்டிய நேரம்!
Digital Safety in Education: இன்றைய மாணவர்கள் கல்விக்காக இணையத்தை அதிகம் பயன்படுத்துவதால், டிஜிட்டல் பாதுகாப்பு முக்கிய தேவையாக மாறியுள்ளது. சைபர் துன்புறுத்தல், போலி தகவல்கள் மற்றும் தனியுரிமை பிரச்சினைகள் மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும். இதனால், பெற்றோர்கள் மட்டுமல்லாமல் பள்ளிகளும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jun 10, 2026
- 13:29 pm IST