Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Education

Education

தமிழகத்தில் அரசு, அரசுக்கு இணையான, தனியார் மற்றும் சுற்றுச்சூழல் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகள் பொதுவாக முறையான பாடத்திட்டத்துடன் சீரான கல்வி தரம் வழங்குகின்றன. மேலும், CBSE, ICSE போன்ற தேசிய பாடத்திட்டம் செயல்படும் தனியார் பள்ளிகளும் பல உள்ளன. இதேபோல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் கற்பித்தல் வழங்குகின்றன. இங்கு பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல், வணிகம், கலை, அறிவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் கல்லூரிகள் விருத்தி பெற்றுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி,சிதம்பரம் போன்ற நகரங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் கல்வி அமைப்பு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது, பள்ளிகளும் கல்லூரிகளும் ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாக அமைந்துள்ளன. கல்லூரி முடிவுற்ற பிறகு கல்லூரி சார்பாகவும், அரசு சார்பாகவும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read More

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி? முழு விவரம் இதோ!

TNPSC Group 5A Exam : குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 5 ஏ தேர்வுக்கு 2025 அக்டோபர் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதுகுறித்து கூடுதல் விவரங்களை பார்ப்போம்.

இனி 40 வயது வரை கல்லூரிகளில் சேரலாம்.. ரூல்ஸை மாற்றிய தமிழக அரசு

Tamil Nadu UG College Admission : தமிழகத்தில் உயர்கல்வியில் இனி 40 வயது வரை சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அதிகப்படியான வயதுவரம்பு 21 ஆக இருந்த நிலையில், தற்போது 40 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வேளாண் படிப்புகளுக்கு போட்டித் தேர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு

UG Agriculture Exam : வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இளங்கலை இடங்கள் இனி அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பில் உயிரியல், வேதியில், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்

குரூப் 2 தேர்வுக்கு கட்டுப்பாடு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tnpsc Group 2 Exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகளையும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. அது என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எப்போது? வெளியான அட்டவணை.. முழு விவரம்

CBSE Board Exams Date Sheet 2026 : 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான உத்தேச அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 204 பாடங்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

’ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம்’ டெட் தேர்வு குறித்து அன்பில் மகேஷ் சொன்ன விஷயம்

TET Exam : டெட் தேர்வு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கியமாக பேசியுள்ளார். அதாவது, டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவால் ஆசிரியர்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றும் கூறினார்.

CBSE: 75% வருகைப்பதிவு அவசியம்.. 10, 12 மாணவ, மாணவியர்களுக்கு சிபிஎஸ்இ வார்னிங்!

சிபிஎஸ்இ வாரியம் 2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 75% வருகை கட்டாயம் என அறிவித்துள்ளது. வருகைப் பதிவு இனி உள் மதிப்பீட்டு மதிப்பெண்களுடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் பாடங்களைத் தேர்வு செய்வதற்கான விதிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

காலாண்டு தேர்வு… வினாத் தாள் முறையில் பெரிய மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Tamil Nadu Quaterly Exam 2025 : தமிழகத்தில் காலாண்டு தேர்வு தொடங்கப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயற்சி பெற்று வரும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத் தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டெட் தேர்வு.. ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

TET Exam : டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பு அளித்து இருந்தது.

துபாயில் ஐஐஎம் அஹமதாபாத் வளாகம்.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்!

துபாயில் ஐஐஎம் அஹமதாபாத் வளாகம் திறக்கப்பட்டுள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் கற்பனை செய்யப்பட்ட இந்திய கல்வியின் உலகமயமாக்கலை நோக்கிய மற்றொரு பெரிய பாய்ச்சலாக இது அமைகிறது என தெரிவித்துள்ளார். ஐஐஎம் அகமதாபாத் துபாய் வளாகம் இந்தியாவின் சிறந்ததை உலகிற்கு எடுத்துச் செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களே கவனிங்க.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. இனி வேலைக்கு சிக்கல்!

Tamil Nadu Education Department : பள்ளிகளில் சாதி மற்றும் வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடம் ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் பணியிட மாற்றம் செய்யவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் சாதி ரீதியான பதிவேடுகளை வெளியில் காட்சிப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வர்களே அலர்ட்.. டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

TET Exam 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2025 செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. 2025 செப்டம்பர் 8ஆம் தேதி விண்ணப்பப் பதிவு முடிந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கை ஏற்று இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டது.

செப்டம்பர் 11ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Ramanathapuram Local Holiday : இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, 2025 செப்டம்பர் 11ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. எத்தனை நாட்கள்? வெளியான அறிவிப்பு

TET Exam 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை 2025 செப்டம்பர் 10ஆம் தேதி மாமைல 5 மணி வரை நீடித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கடைசி நேரத்தில் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு குட் நியூஸ்.. காலாண்டு விடுமுறை இத்தனை நாளா? தேர்வு அட்டவணை வெளியீடு

Tamil Nadu School Quaterly Exam Holiday Schedule : தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. மேலும், காலாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 26ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.