Education
தமிழகத்தில் அரசு, அரசுக்கு இணையான, தனியார் மற்றும் சுற்றுச்சூழல் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகள் பொதுவாக முறையான பாடத்திட்டத்துடன் சீரான கல்வி தரம் வழங்குகின்றன. மேலும், CBSE, ICSE போன்ற தேசிய பாடத்திட்டம் செயல்படும் தனியார் பள்ளிகளும் பல உள்ளன. இதேபோல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் கற்பித்தல் வழங்குகின்றன. இங்கு பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல், வணிகம், கலை, அறிவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் கல்லூரிகள் விருத்தி பெற்றுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி,சிதம்பரம் போன்ற நகரங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் கல்வி அமைப்பு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது, பள்ளிகளும் கல்லூரிகளும் ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாக அமைந்துள்ளன. கல்லூரி முடிவுற்ற பிறகு கல்லூரி சார்பாகவும், அரசு சார்பாகவும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
Restrictions on Private Schools: தமிழகத்தில் 58 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகிறது. 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. அரசியல் மற்றும் மத நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசிதழ் மூலம் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. பிரிவினையை தூண்டும் செயல்களுக்கு முழுத் தடை அறிவிக்கப்பட்டது.
- Sivasankari Bose
- Updated on: Mar 5, 2026
- 09:56 am IST
11-ஆம் வகுப்பில் தோல்வியா? மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
Second Chance Public Exam: தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 25,051 பேர் இன்று 2026 மார்ச் 3–27 வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்கின்றனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Mar 3, 2026
- 10:58 am IST
அண்ணா பல்கலை.மாணவர்கள் கவனத்துக்கு… மதிப்பெண் முறையில் புதிய மாற்றம்!
Anna University New Grading System: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து இன்ஜினீயரிங் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் மதிப்பெண் முறையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தனித்திறமை, தரம் அவர்களை சென்றடையும்.
- Gowtham Kannan
- Updated on: Feb 21, 2026
- 06:59 am IST
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய நடைமுறை..ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!
CBSE Plus 2 Exam: மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் வரும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் முழு ஆண்டு தேர்வு விடைத்தாள்கள் டிஜிட்டல் முறையில் திருத்தம் செய்யப்பட உள்ளன. வரும் தேர்வில் இருந்து நடைமுறைக்கு வருகிறது .
- Gowtham Kannan
- Updated on: Feb 12, 2026
- 10:55 am IST
எஸ்எஸ்சி 13-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு…67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தக் கட்டத்துக்கு தகுதி!
SSC 13th Phase Exam Result: பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட எஸ்எஸ்சி 13- ஆம் கட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடுத்தக் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இது தொடர்பான முடிவுகளை இணையதளத்தில் அறியலாம்.
- Gowtham Kannan
- Updated on: Feb 6, 2026
- 12:39 pm IST
உலகின் கடினமான கல்வி முறை கொண்ட 10 நாடுகள்; இவை தான்.. லிஸ்ட் இதோ!!
Worlds Toughest Schools: ட்யூஷன் மையங்கள், கூடுதல் வகுப்புகள், கடுமையான நுழைவுத் தேர்வுகள் போன்றவை தொடர்ந்து மாணவர்களை ஒப்பீடு செய்யும் சூழலை உருவாக்குகின்றன. நடைமுறை அறிவுக்கு பதிலாக மனப்பாடம் மற்றும் மதிப்பெண் போட்டி முக்கியமாகும். இவை அனைத்தும் சேர்ந்து கல்வி முறையை மிகப் பெரிய சுமையாகவும், கடினமானதாகவும் மாற்றுகின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 18, 2025
- 16:12 pm IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC Group 5A Exam : குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 5 ஏ தேர்வுக்கு 2025 அக்டோபர் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதுகுறித்து கூடுதல் விவரங்களை பார்ப்போம்.
- Umabarkavi K
- Updated on: Oct 8, 2025
- 09:09 am IST
இனி 40 வயது வரை கல்லூரிகளில் சேரலாம்.. ரூல்ஸை மாற்றிய தமிழக அரசு
Tamil Nadu UG College Admission : தமிழகத்தில் உயர்கல்வியில் இனி 40 வயது வரை சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அதிகப்படியான வயதுவரம்பு 21 ஆக இருந்த நிலையில், தற்போது 40 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Oct 5, 2025
- 08:56 am IST
வேளாண் படிப்புகளுக்கு போட்டித் தேர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு
UG Agriculture Exam : வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இளங்கலை இடங்கள் இனி அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பில் உயிரியல், வேதியில், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்
- Umabarkavi K
- Updated on: Oct 4, 2025
- 11:47 am IST
குரூப் 2 தேர்வுக்கு கட்டுப்பாடு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Tnpsc Group 2 Exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகளையும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. அது என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
- Umabarkavi K
- Updated on: Sep 26, 2025
- 20:31 pm IST
சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எப்போது? வெளியான அட்டவணை.. முழு விவரம்
CBSE Board Exams Date Sheet 2026 : 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான உத்தேச அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 204 பாடங்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
- Umabarkavi K
- Updated on: Sep 25, 2025
- 06:33 am IST
’ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம்’ டெட் தேர்வு குறித்து அன்பில் மகேஷ் சொன்ன விஷயம்
TET Exam : டெட் தேர்வு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கியமாக பேசியுள்ளார். அதாவது, டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவால் ஆசிரியர்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றும் கூறினார்.
- Umabarkavi K
- Updated on: Sep 19, 2025
- 16:36 pm IST
CBSE: 75% வருகைப்பதிவு அவசியம்.. 10, 12 மாணவ, மாணவியர்களுக்கு சிபிஎஸ்இ வார்னிங்!
சிபிஎஸ்இ வாரியம் 2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 75% வருகை கட்டாயம் என அறிவித்துள்ளது. வருகைப் பதிவு இனி உள் மதிப்பீட்டு மதிப்பெண்களுடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் பாடங்களைத் தேர்வு செய்வதற்கான விதிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 16, 2025
- 19:20 pm IST
காலாண்டு தேர்வு… வினாத் தாள் முறையில் பெரிய மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Tamil Nadu Quaterly Exam 2025 : தமிழகத்தில் காலாண்டு தேர்வு தொடங்கப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயற்சி பெற்று வரும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத் தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Sep 14, 2025
- 08:49 am IST
டெட் தேர்வு.. ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
TET Exam : டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பு அளித்து இருந்தது.
- Umabarkavi K
- Updated on: Sep 12, 2025
- 08:37 am IST