Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Education

Education

தமிழகத்தில் அரசு, அரசுக்கு இணையான, தனியார் மற்றும் சுற்றுச்சூழல் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகள் பொதுவாக முறையான பாடத்திட்டத்துடன் சீரான கல்வி தரம் வழங்குகின்றன. மேலும், CBSE, ICSE போன்ற தேசிய பாடத்திட்டம் செயல்படும் தனியார் பள்ளிகளும் பல உள்ளன. இதேபோல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் கற்பித்தல் வழங்குகின்றன. இங்கு பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல், வணிகம், கலை, அறிவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் கல்லூரிகள் விருத்தி பெற்றுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி,சிதம்பரம் போன்ற நகரங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் கல்வி அமைப்பு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது, பள்ளிகளும் கல்லூரிகளும் ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாக அமைந்துள்ளன. கல்லூரி முடிவுற்ற பிறகு கல்லூரி சார்பாகவும், அரசு சார்பாகவும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read More

செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.. என்ன காரணம்?

Chengalpattu Kanyakumari Local Holiday : செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 24ஆம் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், 2025 ஜூலை 28ஆம் தேதி மேல்மருத்துவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சட்டப் பல்கலை: முதுநிலை படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம்

Ambedkar Law University: சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் (LLM) முதுநிலைப் படிப்புக்கான சேர்க்கை 2025 ஜூலை 16 அன்று தொடங்கியது. 2025 ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1000 கட்டணம். 260 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!

TNPSC Group 2, 2A Exam Date : குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வின் மூலம் 647 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ’ப’ வடிவில் இருக்கை வசதி.. நிறுத்தி வைத்ததா பள்ளிக்கல்வித்துறை? உண்மை என்ன?

Tamil Nadu School New Seating Arrangements : தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் இருக்கையை 'ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், இதற்கு பள்ளிக்கல்வித்துறை தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இனி கடைசி பெஞ்ச் இல்ல.. பள்ளியில் ’ப’ வடிவில் இருக்கைகள்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி

Classroom Seating Arrangement Plan: தமிழக அரசு பள்ளிகளில் வகுப்பறை அமர்வு ஒழுங்கமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் தனிப்பட்ட அமர்வு, ஆசிரியரின் கண்காணிப்பு, ஒழுங்கான நடைமுறை ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாக உள்ளன. கல்வித் தரம் மற்றும் ஒழுக்கம் மேம்பட இதன் மூலம் அரசு எதிர்பார்க்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும்..? வெளியான அறிவிப்பு

TNPSC Group 4 Exam 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 13,89,738 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். முடிவுகள் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் எனவும், 10,000 பேர் அரசுப் பணியில் சேர திட்டமிடப்பட்டுள்ளது என்றும் TNPSC தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

குரூப் 4 வினாத்தாள் கசிவா? உண்மை என்ன? டிஎன்பிஎன்சி தலைவர் பரபரப்பு விளக்கம்

Tnpsc Group 4 Exam : 2025 ஜூலை 12ஆம் தேதியான நாளை நடைபெற உள்ள குரூப் 4 வினாத் தாள் கசியவில்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் தனியார் பேருந்தில் குரூப் 4 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டதோடு, ஏ4 சீட் மூலம் சீல் வைத்து அனுப்பப்பட்டது பேசும் பொருளாக மாறியது. இதனை அடுத்து, டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டம் படிக்க வேண்டுமா? கால அவகாசத்தை நீட்டித்த அம்பேத்கர் பல்கலைக்கழகம்…

TNDALU LLB Application Deadline Extended: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில், மூன்றாண்டு எல்.எல்.பி மற்றும் எல்.எல்.பி (ஹானர்ஸ்) படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப கடைசி தேதி ஜூலை 25, 2025 மாலை 5.45 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களே அலர்ட்… நீட் தேர்வு குறித்து போலி தகவல்கள்.. வெளியான முக்கிய அறிவிப்பு

NEET Exams : நீட் தேர்வுகள் தொடர்பாக போலியான தகவல்கள், விளம்பரங்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதோடு, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று தர உதவி செய்தாக கூறி, பல மோசடிகளும் நடந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamilnadu TRB Recruitment 2025: தமிழகத்தில் 1,915 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்: வெளியான அறிவிப்பு..

TN TRB Recruitment 2025: தமிழ்நாட்டில் 1996க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. ஜூலை 10, 2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில், பாட வாரியான காலிப் பணியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Tamil Nadu B.Ed. Admission: தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை விண்ணப்பத் தேதி நீட்டிப்பு… எப்படி விண்ணப்பிப்பது?

Tamil Nadu B.Ed. Admission Deadline Extended: பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்ப தேதி 2025 ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டது. தரவரிசைப் பட்டியல் 2025 ஜூலை 31ல் வெளியாகி, 2025 ஆகஸ்ட் 20 முதல் வகுப்புகள் தொடங்கும். விருப்பக் கல்லூரி தேர்வு 2025 ஆகஸ்ட் 4 முதல் 9 வரை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்.. டவுன்லோட் செய்வது எப்படி?

TNPSC Group 4 Hall Ticket 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 ஜூலை 12 அன்று நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. 3,935 காலியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு எப்போது தொடக்கம்?

School Survey Tamil Nadu: தமிழ்நாட்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணும் கணக்கெடுப்பு 2025 ஆகஸ்ட் 1-ல் தொடங்குகிறது. இந்தப் பணியில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுவர். குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டு, பெற்றோருக்கு உளவியல் ஆலோசனையும் வழங்கப்படும்.

நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்.. காண்பது எப்படி? முழு விவரம்

CUET UG Result 2025 : மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு முடிவுகள் 2025 ஜூலை 4ஆம் தேதியான நாளை வெளியாகிறது. எனவே, மாணவர்கள் க்யூட் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஜூலையில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…? முழு விவரம் இதோ!

Tamil Nadu School Holidays July 2025: ஜூலை 2025 மாதத்தில் பள்ளிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது, இதில் வார இறுதி நாட்கள் மற்றும் சில உள்ளூர் விடுமுறைகள் அடங்கும். ஜூலை 16 முதல் 18 வரை முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடைபெற உள்ளன.