AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Education

Education

தமிழகத்தில் அரசு, அரசுக்கு இணையான, தனியார் மற்றும் சுற்றுச்சூழல் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகள் பொதுவாக முறையான பாடத்திட்டத்துடன் சீரான கல்வி தரம் வழங்குகின்றன. மேலும், CBSE, ICSE போன்ற தேசிய பாடத்திட்டம் செயல்படும் தனியார் பள்ளிகளும் பல உள்ளன. இதேபோல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் கற்பித்தல் வழங்குகின்றன. இங்கு பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல், வணிகம், கலை, அறிவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் கல்லூரிகள் விருத்தி பெற்றுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி,சிதம்பரம் போன்ற நகரங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் கல்வி அமைப்பு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது, பள்ளிகளும் கல்லூரிகளும் ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாக அமைந்துள்ளன. கல்லூரி முடிவுற்ற பிறகு கல்லூரி சார்பாகவும், அரசு சார்பாகவும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read More

புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.. அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள்.. 8 பேர் காயம்!

Pudukkottai Tribal Students Pushed Off Bus : புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்தில் ஏறிய பழங்குடியின பள்ளி மாணவிகள் பேருந்தில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டனர். இதில், 8 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியரை மிரட்டி முட்டிக்கால் போட வைத்தார்களா? கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!

Perambalur Govet Teacher Kneel : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரை முட்டிக் கால் போட வைத்த சம்பவம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் மாணவி தற்கொலை விவகாரம்.. தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.. கல்வித்துறையில் பரபரப்பு!

Usilampatti School Headmistress Suspended : மதுரை மாவட்டத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தி ல் உசிலம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ் பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெளியிட்டார் .

அரசுப் பள்ளிகளில் மாநில கல்வி கொள்கை பாடத்திட்டங்கள்… ஆக.31 வரை கருத்து தெரிவிக்கலாம்.. பள்ளிக்கல்வித்துறை!

Tamil Nadu State Education Policy Ccurriculum : தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் இதுதொடர்பான கருத்துக்களை ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்.. மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் என்ன?

காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் 1 முதல் 448 வரை இடம்பெற்றுள்ள, நீட் தேர்வில் 599 முதல் 469 மதிப்பெண்கள் வரை பெற்ற 448 மாணவர்களுக்கும், மதியம் 12 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் 449 முதல் 912 வரை இடம்பெற்றுள்ள, நீட் தேர்வில் 468 முதல் 433 மதிப்பெண்கள் வரை பெற்ற 464 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தனி தீர்மானம்.. ஒரணியில் நின்று ஆதரித்த உறுப்பினர்கள்.. ஒரு மனதாக நிறைவேறியது!

Neet Exam Resolution : தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்து பேசினார். அவர் என்ன பேசினார் என்பன உள்ளிட்டவை குறித்து இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

Tamil Nadu School Education Budget 2026: அரசு பள்ளிகளில் “சூப்பர் க்ளீன்- சூப்பர் கேம்பஸ்” திட்டம்.. அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு!

Tamil Nadu Budget School Education Allocation : தமிழக அரசுப் பள்ளிகளில் ரூ. 139 கோடியில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். முதல் கட்டமாக சுமார் 10 ஆயிரம் பள்ளிகளில் இந்த திட்டம் வரப்போகிறது.

கரூரில் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்.. இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்..

இடைநிலை ஆசிரியர் கலைமதி பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை, முறையாக பணியாற்றுவதில்லை, மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை என தலைமை ஆசிரியர் புவனா, வட்டாரக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!

Undergraduate Medical Courses : தமிழகத்தில் எம்பிபிஎஸ், பி. டி. எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 27- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

GATE 2027 அலர்ட்: புதிய பாடம், மாற்றிய பாடத்திட்டம்… மாணவர்களே தெரிந்துகொள்ளுங்க

GATE Exam: GATE 2027 தேர்வை ஐஐடி மெட்ராஸ் நடத்த உள்ளது. தேர்வு பிப்ரவரி 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். 'ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்' என்ற புதிய பாடம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பாடங்களின் பாடத்திட்டமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நீட் மாணவர்களின் தலையில் விழுந்த பேரிடி.. குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் உயர்வு.. முழு விவரம் உள்ளே!

NEET Qualifying Marks Increase : நாடு முழுவதும் நடைபெறும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி தேர்வின் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பன குறித்த விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மாணவர்களின் புத்தகப்பை சுமை இனி குறைக்கப்படும்.. இந்த நொடி முதல் கல்வி முறை மாறுகிறது – அமைச்சர் ராஜ் மோகன்..

புத்தகச் சுமை எந்த அளவுக்குக் குறைகிறதோ, அந்த அளவுக்கு மாணவர்களின் மனச்சுமையும் குறையும். நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவான சுமையைத்தான் எடுத்துச் சென்றிருப்பார். ஆனால், அதைவிட பள்ளி மாணவர்கள் தற்போது அதிகமான சுமையைச் சுமந்து செல்கின்றனர் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களின் ஜாதி விவரங்கள் கட்டாயம்.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!

Tamilnadu Education Department : தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆதார் எண், ஜாதி விவரங்கள் உள்ளிட்டவற்றை கட்டாயம் கேட்டு பெற்று பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

குரூப் 1 முதன்மை தேர்வு தேதியில் மாற்றம்.. செப். 27ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு..

TNPSC Group 1 Exam: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கி, ஜூலை 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக 950 எம்.பி.பி.எஸ் இடங்கள்.. மொத்தம் 13,999ஆக உயர்வு..

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கூடுதலாக 950 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் இடங்களில், மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 13 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. மேலும், ஒரு புதிய தனியார் மருத்துவக் கல்லூரியும் இந்தக் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளது.