ஊடக துறையில் இளையவர். நியூஸ் 7 தமிழ், ஏபிபி நாடு உள்ளிட்டவற்றில் பணிபுரிந்த அனுபவம் உண்டு. தேசிய (National), சர்வதேசம் (International), குற்றம் (crime), வர்த்தகம் (Buisness) ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செய்திகளை கொடுப்பதில் வல்லவர். உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக தரக் கூடியவர். டிரெண்டிங் செய்திகளில் கூடுதல் ஆர்வம் கொண்டவர். இப்போது டிவி 9 தமிழ் இணையத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறார்.
’ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை’ கடம்பூர் ராஜு பேச்சால் சலசலப்பு!
AIADMK EX Minister Kadabur Raju : அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஜெயலலிதா குறித்து பேசியது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தான் ஜெயலலிதா பற்றி பேசவில்லை என்றும் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்ததை தான் கூறினேன் என விளக்கம் அளித்தார்.
- Umabarkavi K
- Updated on: Jul 30, 2025
- 3:50 pm
பட்டப்பகலில் அதிர்ச்சி.. பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு.. இளைஞர் கைது!
Chennai Perungudi Railway Station Chain Snatching : சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண்ணின் அருகில் சாவகாசமாக அமர்ந்து, தங்கச் செயின் பறிப்பில் இளைஞர் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு, அந்த இளைஞர் செயின் பறிப்பில் ஈடுபட்டார். பெண்ணிடம் செயின் பறித்த விழுப்பரத்தைச் சேர்ந்த பாபாஜி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
- Umabarkavi K
- Updated on: Jul 30, 2025
- 3:02 pm
பயணிகளே அலர்ட்.. மெட்ரோ ரயிலில் இதை செய்தால் அபராதம்.. கடும் எச்சரிக்கை!
Chennai Metro Rail : சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்களில் பயணிகள் புகையிலை பொருட்களை பயன்படுத்தி எச்சில் துப்புவதாக புகார்கள் எழுந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Jul 30, 2025
- 2:08 pm
‘அண்ணா வழியில் செல்வோம்.. இனி மக்களுடன் தான் வாழ்க்கை’ தவெக தலைவர் விஜய் பேச்சு
Tamilaga Vettri Kazhagam Chief Vijay : தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் செயலியை விஜய் அறிமுகம் செய்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், அண்ணா வழியில் மக்களிடம் செல்வோம் எனவும் மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தல் ஒரு திருப்புமுனையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Jul 30, 2025
- 12:53 pm
பெண்கள், மாணவிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஈஸியா போகலாம்.. போக்குவரத்து கழகம் எடுத்த முடிவு
Chennai MTC Buses : சென்னையில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பிரத்யேகமாக சிறப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
- Umabarkavi K
- Updated on: Jul 29, 2025
- 9:43 pm
திருப்பூரில் பயங்கரம்.. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் வெட்டிக் கொலை.. பகீர் பின்னணி!
Tirupur Crime News : சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கூலிப்படையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்பாக திருப்பூர் சென்றபோது, அங்கு 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
- Umabarkavi K
- Updated on: Jul 30, 2025
- 11:49 am
Rahul Gandhi : 22 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல் காந்தி.. ஏன் தெரியுமா?
Rahul Gandhi Adopt 22 Childrens : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். குழந்தைகளின் கல்விச் செலவையும் ராகுல் ஏற்று உள்ளார். இதற்கான முதற்கட்ட தொகை 2025 ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Umabarkavi K
- Updated on: Jul 30, 2025
- 11:59 am
‘இந்தியாவுக்கு முழு உலகத்தின் ஆதரவு கிடைத்தது’ – ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி
PM Modi On Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அப்போது, ஆபேரஷன் சிந்தூர் நடவடிக்கையை எந்த நாடுகளும் தடுக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார். அதோடு, ஐநாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மூன்று நாடுகள் மட்டுமே பேசியதாகவும் அவர் கூறினார்.
- Umabarkavi K
- Updated on: Jul 29, 2025
- 7:22 pm
‘டிரம்ப் பொய்யர் என நாடாளுமன்றத்தில் கூறுவீர்களா?’ மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி!
Rahul Gandhi On Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்போது, 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருடன் ஆபரேஷன் சிந்தூரை ஒப்பிட்டு மத்திய அரசு தவறு செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். அதோடு, நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி கூறுவாரா எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
- Umabarkavi K
- Updated on: Jul 29, 2025
- 6:26 pm
‘போடா’ கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டிய திமுக எம்எல்ஏ.. அதிர்ச்சி வீடியோ.. கடும் கண்டனம்!
Sankarapuram Dmk Mla Udhayasuriyan : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன் இளைஞரை மிரட்டிய காட்சிகள் வெளியாகி உள்ளது. உறுப்பினர் சேர்க்கையின்போது, இளைஞர் சாலை வசதிகள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, எம்எல்ஏ உதயசூரியன் அவரை போடா என கூறி மிரட்டி இருக்கிறார்.
- Umabarkavi K
- Updated on: Jul 29, 2025
- 5:29 pm
பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
Tamil Nadu Public Exam Timetable 2025-26 : 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை 2025 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்னும் ஒருசில மாதங்களில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பை அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Jul 29, 2025
- 4:31 pm
நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளியின் போலீஸ் பெற்றோர் சஸ்பெண்ட்
Tirunelveli Honour Killing : நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கவின்குமார் மரணத்திற்கு நீதி கோரி உறவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Jul 29, 2025
- 3:51 pm