AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 25, 2026 இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்
பிரகலாத் ஜோஷி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Jul 2026 21:59 PM IST

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 25, 2026 இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

நீட் தேர்வு விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமர்ப்பித்த ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில், தற்போதைய மத்திய அமைச்சரான பிரல்ஹாத் ஜோஷியிடம் கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை ஒப்படைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. இனி, பிரல்ஹாத் ஜோஷி தனது தற்போதைய பொறுப்புகளுடன் கல்வி அமைச்சகத்தின் பணிகளையும் கவனிப்பார்.

இதையும் படிக்க : உங்கள் அன்பும் நம்பிக்கையும் எனக்கு வலிமை” – இளைஞர்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..

கடந்த மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தேர்வு நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று கூறி, மாணவர் தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கம் சமூக ஊடகங்களிலிருந்து வீதிகளுக்குப் போராட்டத்தைக் கொண்டு சென்றது. இச்சம்பவங்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடிக்கு மத்தியில், தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவும், அதைத் தொடர்ந்து பிரல்ஹாத் ஜோஷியிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக மாறியுள்ளன.

கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றுள்ள பிரல்ஹாத் ஜோஷி மீது இப்போது அனைவரின் பார்வையும் உள்ளது. அவர் மூன்று முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நீட் விவகாரத்தால் மிகுந்த கவலையில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் நம்பிக்கையை மீட்டெடுப்பது ஜோஷியின் முன்னுரிமைப் பணியாக இருக்கும்.

இதையும் படிக்க : மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் திடீர் ராஜினாமா – காரணம் என்ன?

மேலும் தேசிய அளவிலான போட்டித் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும், எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவு அல்லது முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கவும் கடுமையான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன அதனையும் அவர் உடனடியாக மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு நம்பகமான உறுதிகளை அளிப்பது போன்ற ஒரு நுட்பமான பொறுப்பு அவர் முன் உள்ளது. நிர்வாக அனுபவம் கொண்ட பிரல்ஹாத் ஜோஷி, இந்தச் சவாலான காலகட்டத்தில் கல்வித் துறையை எவ்வாறு வழிநடத்துவார் என்பதையும், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையை எவ்வாறு காப்பாற்றுவார் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us