நீட் தேர்வு விவகாரம்… 47 என்டிஏ அதிகாரிகள் கூண்டோடு நீக்கம்.. மத்திய அரசு வைத்த செக்!
National Testing Agency officials suspended : நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையை சேர்ந்த 47 அதிகாரிகள் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரும் போராட்டம் நடைபெறும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்காக டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில், இந்த முகமையை சேர்ந்த 47 அதிகாரிகளை இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 24) அதிரடியாக பணிகளை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. நாட்டில் தேர்வு முறையை வலுப்படுத்தும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சராக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் சிலர் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. தேசிய தேர்வு முகமையின் முழுமையான மறு சீரமைப்பு திட்டத்தின் படி இது அடுத்த மாதத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்
இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக தேசிய தேர்வு முகமையின் வெளிப்பணி ஒப்படைப்பு கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வலுவான மற்றும் குறைபாடு இல்லாத தேர்வு முறையை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் தேசிய தேர்வு முகமை தற்போது ஜேஇஇ, நீட் மற்றும் சியுஇடி உள்ளிட்ட 15 முதல் 20 தேசிய அளவிலான நுழைவு மற்றும் ஆள்சேர்ப்பு தேர்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: போராட்டத்திற்கு மத்தியில் போலி தகவல்கள்.. 400 பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளை முடக்கிய டெல்லி போலீஸ்!
தேசிய தேர்வு முகமையில் பெரிய மாற்றம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக ஏற்பட்டுள்ள பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் தேசிய தேர்வு முகமையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முகமையின் வெளிப்பணி ஒப்படைப்பு முறையிலும் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை ஒரு சுயநிதி அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பணியாளர் நியமன திட்டத்தின் கீழ் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஒரு தலைமை இயக்குனர் தலைமை வகிக்கிறார். தற்போது தேசிய தேர்வு முகமையில் 22 ஊழியர்கள் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர்.
தேர்வுகள் சீராகவும், நேர்மையாகவும் நடக்க
மேலும், 38 ஒப்பந்த ஊழியர்களும், 138 வெளிப்பணி ஊழியர்களும், ஒரு ஊழியர் தனது தாய் துறையிலும் உள்ளனர். கடந்த 2024 அக்டோபர் 29- ஆம் தேதி 16 புதிய பணியிடங்களை உருவாக்கபட்டது. இவற்றில் 8 பணியிடங்கள் இயக்குனர் நிலையிலும், 8 பணியிடங்கள் இணை இயக்குனர் நிலையிலும் உள்ளன. தேர்வு தொடர்பான நடவடிக்கைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு தேர்வுகள் சீராகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு தேவையான செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நீட் வினாத்தாள் கசிவு – முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய மசோதா