புலிக்காக வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை; ஓவேலி பகுதியில் பரபரப்பு
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி பாரம் பகுதியில் இரண்டு பேரை கொன்ற ஆட்கொல்லிப் புலியைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். புலியைப் பிடிப்பதற்காக அந்தக் கூண்டில் பச்சை இறை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்தக் கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கூண்டில் சிக்கியிருந்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
நீலகிரி, செப்டம்பர் 10, 2026: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி பாரம் பகுதியில் இரண்டு பேரை கொன்ற ஆட்கொல்லிப் புலியைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். புலியைப் பிடிப்பதற்காக அந்தக் கூண்டில் பச்சை இறை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்தக் கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கூண்டில் சிக்கியிருந்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், அந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர். ஏற்கனவே ஆட்கொல்லிப் புலியின் நடமாட்டத்தால் ஓவேலி பாரம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கிய சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலிக்காக வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை; ஓவேலியில் பரபரப்பு
தொழிலாளர்கள் தங்கிய கொட்டகையை உடைத்த ஒற்றை யானை!
பேருந்தில் ஆபத்தான பயணம்: கால் இடறிய மாணவன் உயிர்தப்பிய காட்சி!
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக உலா வரும் பன்றி
