<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>சமீபத்திய தொழில்நுட்பம் செய்திகள் Technology News in Tamil: டெக் தமிழ்  செய்திகள்</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/technology/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/technology</link>
 <description>Technology News in Tamil, டெக் தமிழ்  செய்திகள்: Latest Technology News and Gadget updates in Tamil Online at tv9tamilnews.com. Gadget Reviews, Smartphone Reviews, new laptop releases and more in Tamil</description><lastBuildDate>Sat, 15 Aug 2026 18:08:47 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>இனி எவ்வளவு நேரங்கள் வேண்டுமானாலும் விளம்பரங்கள் ஒளிபரப்பலாம் &#8211; மத்திய அரசின் புதிய முடிவு</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/india-removes-12-minute-tv-ad-cap-allowing-broadcasters-to-air-more-advertisements-98355.html</link>	
		<pubDate>Sat, 15 Aug 2026 18:08:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/india-removes-12-minute-tv-ad-cap-allowing-broadcasters-to-air-more-advertisements-98355.html</guid>
		            
			

    	<description><![CDATA[TV Advertising Rules : ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்ற விதியை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ரத்து செய்துள்ளது.  தொலைக்காட்சி ஒளிபரப்புத் துறையில் இப்போது போதுமான போட்டி நிலவுவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/tv-chennel-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி எவ்வளவு நேரங்கள் வேண்டுமானாலும் விளம்பரங்கள் ஒளிபரப்பலாம் &#8211; மத்திய அரசின் புதிய முடிவு" /></figure>&nbsp;

<a href="https://www.tv9tamilnews.com/entertainment/top-earning-tamil-serial-actresses-salary-list-94080.html" target="_blank" rel="noopener">தொலைக்காட்சி</a> நேயர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் விளம்பரங்கள் தான். டிவி சேனல்கள் தாண்டி தற்போது யூடியூப் மற்றும் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/the-movie-idhayam-murali-which-was-a-super-hit-in-theaters-is-set-for-an-ott-release-on-august-7th-2026-96101.html" target="_blank" rel="noopener">ஓடிடி</a> தளங்களிலும் விளம்பரங்கள் மக்களுக்கு தொல்லையாக மாறி வருகின்றன. இந்த நிலையில் விளம்பரங்கள் மக்களுக்கு மேலும் தொல்லையாக மாறப்போகின்றன. 20 ஆண்டுகளாக தொடர்ந்த விளம்பரங்களுக்கான 12 நிமிட கட்டுப்பாட்டை அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் தொலைகாட்சி சேனல்கள் கூடுதலாக விளம்பரங்களை ஒளிபரப்ப்ப முடியும்.
<h3>20 ஆண்டுகால விளம்பரக் கட்டுப்பாடு நீக்கம்</h3>
ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்ற விதியை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு கடந்த 1994 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகளின் கீழ் 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 20 ஆண்டுகளாக தொலைக்காட்சி ஒளிபரப்புத் துறை பெருமளவில் மாறியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/indian-railways-to-add-more-general-coaches-3200-long-distance-trains-to-get-more-seats-know-more-in-details-97679.html">சாதாரண ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.. அதிகரிக்கிறது பொது பெட்டிகளின் எண்ணிக்கை!</a></strong>

கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாட்டில் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 900க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. கேபிள் தொலைக்காட்சி சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதையும், டிடிஎச், கேபிள் டிவி போன்ற தளங்கள் நேயர்களுக்கான தேர்வுகளை விரிவுபடுத்தியுள்ளதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்புத் துறையில் இப்போது போதுமான போட்டி நிலவுவதாகவும், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் நுகர்வோருக்கு நூற்றுக்கணக்கான சேனல்கள் கிடைப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கட்டணத் தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி அல்லது இலவச ஒளிபரப்புச் சேவையாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரங்களையே பெரிதும் நம்பியுள்ளன.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, விளம்பர கால அளவுக்கான இத்தகைய கட்டுப்பாடு டிஜிட்டல் ஊடகங்களுக்கு இல்லாத நிலையில், பாரம்பரிய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு இடையே சமமற்ற சூழலை இந்த 12 நிமிட வரம்பு உருவாக்கியிருந்தது. எனவே, வணிகம் செய்வதை எளிதாக்கவும், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கவும் அந்தப் பழைய விதியை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 12 நிமிட வரம்பை நீக்குவதற்கான இந்த முடிவு, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.'

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/parliament-clears-taxation-bill-fm-sitharaman-says-upi-will-remain-free-no-framework-on-mdr-yet-97260.html">UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..</a></strong>

விளம்பர கால அளவுக்கான இத்தகைய கட்டுப்பாடு டிஜிட்டல் ஊடகங்களுக்கு இல்லாத நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு இடையே சமமற்ற சூழலை இந்த 12 நிமிட வரம்பு உருவாக்கியிருந்தது. எனவே,  வணிக நோக்கத்திற்காகவும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கவும் அந்தப் பழைய விதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

&nbsp;

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரூ.1க்கு புதிய சிம் &#8211;  அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி டேட்டா  &#8211; பிஎஸ்என்எல்லின் சுதந்திர தின ஆஃபர்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/independence-day-offers-bsnl-offers-unlimited-calls-and-daily-data-for-just-rs-1-98173.html</link>	
		<pubDate>Fri, 14 Aug 2026 21:21:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/independence-day-offers-bsnl-offers-unlimited-calls-and-daily-data-for-just-rs-1-98173.html</guid>
		            
			

    	<description><![CDATA[BSNL Independence Day Offer : பிஎஸ்என்எல் ஃப்ரீடம் 2.0 திட்டத்தின் கீழ் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. அதனுடன் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/bsnl-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரூ.1க்கு புதிய சிம் &#8211;  அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி டேட்டா  &#8211; பிஎஸ்என்எல்லின் சுதந்திர தின ஆஃபர்" /></figure>இந்தியாவின் 80வது <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/coimbatore-isha-yoga-center-adiyogi-statue-illuminated-in-tricolour-ahead-of-independence-day-98164.html" target="_blank" rel="noopener">சுதந்திர தினத்தை</a> முன்னிட்டு <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-provides-amazing-recharge-plans-with-budget-friendly-price-84838.html" target="_blank" rel="noopener">பிஎஸ்என்எல்</a> நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஃப்ரீடம் 2.0 என்ற சிறப்பு ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய வாடிக்கையாளர்கள் வெறும் வெறும் ரூ.1 மட்டும் செலுத்தி புதிய சிம் கார்ட் பெறலாம். இந்த சிம் கார்டின் ஸ்பெஷல் என்னவென்றால் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் போன் கால், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை பெறலாம். இந்த சிறப்பு சலுகை ஆகஸ்ட் 12, 2026 முதல் செப்டம்பர் 12, 2026 வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>ரூ.1 திட்டத்தில் என்னென்ன கிடைக்கும்?</h3>
பிஎஸ்என்எல் ஃப்ரீடம் 2.0 திட்டத்தின் கீழ் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. அதனுடன் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இந்த அனைத்து சிறப்பம்சங்களையும் 24 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்கியவுடன் பெரிய ரீசார்ஜ் செய்யாமலேயே திட்டங்களை அனுபவிக்க முடியும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/oneplus-nord-6-smartphone-selling-with-11000-discount-97612.html">ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் ஒன்பிளஸ்!</a></strong>

இந்த சலுகை புதிதாக சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஏற்கனவே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற முடியாது. அதே நேரம் குறைந்த செலவில் 2வது சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டத்தில் புதிய சிம் வாங்க விரும்புகிறவர்கள் நேரடியாக அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்திற்கு சென்று புதிய சிம் கார்டை வாங்கிக்கொள்ளலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் இது போன்ற ரூ.1 க்கு புதிய சிம் வழங்குவது இது முதன்முறை அல்ல. கடந்த 2025 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஏற்கனவே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/upi-charges-clarified-no-fees-for-users-as-government-explains-proposed-mdr-rules-96880.html">யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்</a></strong>

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுதாகர ராவ் ஆகஸ்ட் 14, 2026 இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎல்என்எல் நிறுவனம் புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. அதன் படி,  ஒரு ரூபாய்க்கு ஃப்ரீடம் பிளான் என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்காக, ஒரு ரூபாய்க்கு ஃப்ரீடம் பிளான் என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி ஒரு ஜிபி டேட்டா, தினசரி, 100 எஸ்எம்எஸ் மற்றும் 24 நாட்கள் செல்லுபடியாகும் காலம் வழங்கப்படுகிறது. இச்சலுகை செப்டம்பர் 12, 2026 வரை கிடைக்கும் என்றார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எலக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருக்கிறீர்களா? சரியான முறையில் சார்ஜ் செய்வது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-charge-an-ev-properly-essential-charging-rules-to-protect-battery-life-97949.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 21:19:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-charge-an-ev-properly-essential-charging-rules-to-protect-battery-life-97949.html</guid>
		            
			

    	<description><![CDATA[How to charge ev vehicle properly:  விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை, இன்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் போலவே எலக்ட்ரிக் வாகனங்களும் பிரபலமாகி வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களை சரியான முறையில் 'சார்ஜிங் செய்வது மிகவும் அவசியம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ev-cars.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எலக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருக்கிறீர்களா? சரியான முறையில் சார்ஜ் செய்வது எப்படி?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-wash-your-electric-scooter-the-right-way-essential-tips-to-avoid-damage-94907.html" target="_blank" rel="noopener">எலக்ட்ரிக் வாகனங்கள்</a> நம் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவு, <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-petrol-bunks-warn-stop-upi-digital-payments-bank-accounts-frozen-97524.html" target="_blank" rel="noopener">பெட்ரோல்</a>, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பலரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறார்கள். இந்த நிலையில் அவற்றை முறையாக பராமரிப்பதும் மிகவும் அவசியம். குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
<h3>சரியான முறையில் சார்ஜ் செய்வது எப்படி?</h3>
சிலர் தங்கள் வாகனங்களை வீட்டிலேயே சார்ஜ் செய்கிறார்கள். வேறு சிலர் பொது சார்ஜிங் நிலையங்களைச் சார்ந்திருக்கிறார்கள். நீங்கள் எங்கு சார்ஜ் செய்தாலும், சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றைச் சரியாகப் பின்பற்றாவிட்டால், நீங்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடலாம். வாகனங்களை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் சார்ஜ் செய்வதற்கான முறைகளை இப்போது பார்ப்போம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/google-pixel-10-smartphone-gets-huge-discount-in-flipkart-freedom-sale-2026-97452.html">கூகுள் பிக்சல் 10-க்கு பிளிப்கார்ட் வழங்கும் அட்டகாசமான சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!</a></strong>

முதலாவதாக, உங்கள் வாகனத்திற்கு ஏற்ற சார்ஜிங் நிலையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாகனத்தின் பேட்டரி ஸ்பெஷிஃபிகேஷன் பொருந்தக்கூடிய சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்தவும். தொடர்ந்து 'ஃபாஸ்ட் சார்ஜிங்' செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்வது பேட்டரியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். வீட்டிலேயே சார்ஜ் செய்வதே மிகவும் சிறந்தது. வீட்டிலேயே சார்ஜ் செய்தாலும், அதற்காக வாகனத்துடன் வழங்கப்பட்ட அசல் சார்ஜரையே பயன்படுத்த வேண்டும்.

எலக்ட்ரிக் வாகனங்களைப் பாதுகாப்பான முறையில் சார்ஜ் செய்ய வேண்டும். பலத்த மழை அல்லது பனிப்பொழிவு உள்ள நேரங்களில் சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும். சார்ஜ் செய்யத் தேர்ந்தெடுக்கும் இடம் உலர்ந்ததாகவும், நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சார்ஜ் செய்யும்போது ஏதேனும் அசாதாரண சத்தம் அல்லது துர்நாற்றம் வீசினால், உடனடியாக சார்ஜிங் கேபிளைத் துண்டித்துவிடவும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/parliament-clears-taxation-bill-fm-sitharaman-says-upi-will-remain-free-no-framework-on-mdr-yet-97260.html">UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..</a></strong>

இரவு முழுவதும் சார்ஜ் செய்வது பலரும் பின்பற்றும் ஒரு தவறான நடைமுறையாகும். சந்தையில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களில் 'பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம்' இருந்தாலும், நமது சார்ஜிங் பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு முறையும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வது சரியல்ல. இது பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும். தினசரி பயன்பாட்டிற்கு 80 சதவீதம் வரை சார்ஜ் செய்வதே சிறந்தது. சார்ஜர்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். சார்ஜ் செய்யத் தொடங்கும் முன், சார்ஜிங் கேபிளில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். சரியான சார்ஜிங் முறைகளைப் பின்பற்றுவது பேட்டரியின் ஆரோக்கியத்தையும் வாகனத்தின் ஆயுளையும் அதிகரிக்க உதவும்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளில் டிப்ஸ் கேட்பதற்கு செக்.. மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய விதி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/central-government-of-india-introduced-new-rules-for-pre-ride-tipping-in-apps-like-ola-uber-and-rapido-97855.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 15:47:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/central-government-of-india-introduced-new-rules-for-pre-ride-tipping-in-apps-like-ola-uber-and-rapido-97855.html</guid>
		            
			

    	<description><![CDATA[Central Government Rules For Traveling Apps | தற்போது பயன்பாட்டில் உள்ள ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆகிய செயலிகளில் பயணத்திற்கு முன்னதாகவே டிப்ஸ் கேட்கும் முறை உள்ளது. இந்த நிலையில், அதற்கு செக் வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ola-uber.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளில் டிப்ஸ் கேட்பதற்கு செக்.. மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய விதி!" /></figure>இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக பயணம் செய்ய ஓலா <strong>(Ola)</strong>, ஊபர் <strong>(Uber)</strong>, ரேப்பிடோ<strong> (Rapido)</strong> உள்ளிட்ட செயலிகள் உள்ளன. இந்த செயலிகளை பயன்படுத்தி நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த செயலிகளில் தற்போது டிப்ஸ் கேட்கப்படும் நிலையில், மத்திய அரசு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பயணத்திற்கு முன்பே டிப்ஸ் கேட்பதால் பொதுமக்கள் அவதி</h3>
ஓலா, ஊபர், ரேப்பிடோ உள்ளிட்ட செயலிகளில் வாகனம் ஓட்டும் நபர்கள், பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணம் கேட்கும் முறை உள்ளது. இந்த நிலையில், தற்போது இத்தகைய செயலிகளில் பயணத்திற்கு முன்னதாகவே, டிப்ஸ் வழங்குவதற்கான ஆப்ஷன் தோன்றுகிறது. இவ்வாறு ஆப்ஷன் தோன்றும் பட்சத்தில், அதில் அதிகபட்ச தொகையை தேர்வு செய்யும்போது தான் ஓட்டுநர்கள் அந்த பயணத்தை உறுதி செய்வர். இதனால், ஏராளமான பொதுமக்கள் தங்களது தினசரி பயணங்களில் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/india/parliament-clears-taxation-bill-fm-sitharaman-says-upi-will-remain-free-no-framework-on-mdr-yet-97260.html"> UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்</a>
<h3>அரசு போட்ட புது ரூல்ஸ்</h3>
மத்திய அரசு மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2025-ன் கீழ் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த விதியின்படி, பயணத்தின்போது டிப்ஸ் வழங்குவது ஒரு பயணியின் தனிப்பட்ட விருப்பம். இதனை ஒரு பயணி, பயணம் முடிந்த பிறகு மட்டுமே செய்ய வேண்டும். பயணத்திற்கு முன்னதாகவோ அல்லது பயணத்திற்கு இடையிலேயோ இவ்வாறு டிப்ஸ் கேட்கும் முறை இருக்க கூடாது என கூறியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/google-pixel-11-smartphone-to-launch-within-three-days-in-india-97290.html">மூன்று நாட்களில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 11.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a>

டிப்ஸ் வழங்கினால் விரைவாக கேப் கிடைக்கும், ஓட்டுநர் பயணத்தை உறுதி செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்பதை போன்ற எந்த ஒரு தவறான அல்லது மக்களை தூண்டும் வகையிலான செய்திகள் இடம்பெற கூடாது என்பதையும் அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எலக்ட்ரிக் சாதனங்களுக்குள் எறும்புகள் செல்வது ஏன்? தடுப்பது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/why-do-ants-enter-electronic-devices-and-how-to-prevent-them-97833.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 14:32:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/why-do-ants-enter-electronic-devices-and-how-to-prevent-them-97833.html</guid>
		            
			

    	<description><![CDATA[Electronic Devices: டிவி, பேன், லேப்டாப் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களுக்குள் வெப்பம், பாதுகாப்பான மறைவிடம் மற்றும் உணவுத் துகள்களின் வாசனை காரணமாக எறும்புகள் செல்லக்கூடும். அவை அதிகமாக உள்ளே சென்றால் மின்சார இணைப்புகளில் சிக்கி சாதனத்தின் செயல்பாட்டை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சாதனங்களைச் சுற்றி உணவுத் துகள்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பதுடன், எறும்புகள் உள்ளே சென்றால் சாதனத்தை அணைத்து மின் இணைப்பைத் துண்டித்து, தேவையானால் நிபுணரின் உதவியைப் பெறுவது பாதுகாப்பானது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ants-enter-laptop.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எலக்ட்ரிக் சாதனங்களுக்குள் எறும்புகள் செல்வது ஏன்? தடுப்பது எப்படி?" /></figure>வீட்டில் உள்ள டிவி, பேன், லேப்டாப், சார்ஜர் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களுக்குள் சில நேரங்களில் எறும்புகள் செல்வதைப் பார்க்க முடியும். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, சாதனங்களுக்குள் இருக்கும் சிறிய இடங்கள் எறும்புகளுக்கு பாதுகாப்பான மறைவிடமாக இருப்பதுதான். குறிப்பாக சாதனம் இயங்கும்போது உருவாகும் வெப்பம், குளிர்ச்சியான அல்லது ஈரமான வெளிப்புற சூழலுடன் ஒப்பிடும்போது எறும்புகளை ஈர்க்கக்கூடும்.
<h3>உணவு மற்றும் இனிப்பு வாசனை</h3>
சாதனங்களுக்கு அருகில் சிந்திய சர்க்கரை, இனிப்பு பானங்கள், உணவுத் துகள்கள் போன்றவற்றின் வாசனையும் எறும்புகளை ஈர்க்கலாம். லேப்டாப் கீபோர்டு, டிவி ரிமோட் அல்லது சார்ஜிங் பகுதியில் உணவுத் துகள்கள் சிக்கியிருந்தால், எறும்புகள் அந்த வாசனையைப் பின்தொடர்ந்து சாதனத்தின் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது.
<h3>மின்சார சாதனங்களுக்கு ஆபத்து</h3>
எறும்புகள் அதிகமாக சாதனத்திற்குள் கூடு அமைத்தால், அவற்றின் உடல்கள் அல்லது கழிவுகள் சிறிய மின்சார இணைப்புகளில் சிக்கி பிரச்சினையை ஏற்படுத்தலாம். இதனால் சாதனம் சரியாக இயங்காமல் போகலாம் அல்லது சில சமயங்களில் ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் அபாயமும் இருக்கலாம். எனவே எறும்புகள் உள்ளே சென்றதை கவனித்தால் அதை சாதாரண விஷயமாகக் கருதாமல் நடவடிக்கை எடுப்பது நல்லது.
<h3>எப்படித் தடுப்பது?</h3>
சாதனங்களைச் சுற்றியுள்ள இடத்தை எப்போதும் சுத்தமாகவும், உணவுத் துகள்கள் இல்லாமலும் வைத்திருப்பது முதல் தடுப்பு நடவடிக்கையாகும். சர்க்கரை, இனிப்பு உணவுகள் மற்றும் பானங்களை எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சாதனங்களைப் பயன்படுத்தாத நேரத்தில் அவற்றை முறையாக அணைத்து, தூசி சேராமல் சுத்தம் செய்வதும் உதவும்.
<h3>எறும்புகள் ஏற்கனவே உள்ளே சென்றால்</h3>
எறும்புகள் சாதனத்தின் உள்ளே இருப்பது தெரிந்தால், அதை உடனடியாக திறந்து நீங்களே சுத்தம் செய்ய முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக டிவி, லேப்டாப் போன்ற சாதனங்களில் மின்சாரம் தொடர்பான ஆபத்து இருப்பதால், சாதனத்தை அணைத்து மின் இணைப்பைத் துண்டித்த பிறகு தேவையானால் தொழில்நுட்ப நிபுணரின் உதவியைப் பெறுவது பாதுகாப்பானது. சாதனத்தின் மீது நேரடியாக தண்ணீர், பூச்சிக்கொல்லி அல்லது வேறு திரவங்களை தெளிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/simple-ways-to-reduce-kids-screen-time-without-tears-and-tantrums-97165.html">அழுகை, அடம்பிடிப்பே இல்லாமல் குழந்தைகளின் ஸ்க்ரீன் நேரத்தை எப்படி குறைக்கலாம்?</a>
<h3>வீட்டில் எறும்புகளின் நடமாட்டத்தைக் குறைக்க</h3>
சாதனங்களை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது போதாது; எறும்புகள் வீட்டிற்குள் வரும் பாதையையும் கண்டறிந்து சுத்தம் செய்ய வேண்டும். சுவர் விரிசல்கள், ஜன்னல் ஓரங்கள் மற்றும் கதவு இடைவெளிகளில் எறும்புகள் நடமாடினால் அவற்றைச் சரிசெய்வது உதவும். இவ்வாறு உணவு ஆதாரம், மறைவிடம் மற்றும் நுழையும் பாதை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எலக்ட்ரிக் சாதனங்களுக்குள் எறும்புகள் செல்வதை கணிசமாகக் குறைக்க முடியும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி 17 5ஜி.. முழு விவரம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/redmi-17-5g-smartphone-launched-globally-know-the-price-and-specifications-97626.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 16:40:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/redmi-17-5g-smartphone-launched-globally-know-the-price-and-specifications-97626.html</guid>
		            
														<description><![CDATA[Redmi 17 5G Smartphone Launched Globally | ரெட்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/redmi-17-5g.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி 17 5ஜி.. முழு விவரம் இதோ!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/W8KAL6vh-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>ரெட்மி <strong>(Redmi)</strong> நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனை <strong>(Redmi 17 5G Smartphone)</strong> சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன, இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வருகிறது என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ரெட்மி 17 5ஜி - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
இந்த ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் HD + LCD பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4nm ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இதில், 4ஜிபி LPDDR RAM மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 8எம்பி செஃல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/upi-charges-clarified-no-fees-for-users-as-government-explains-proposed-mdr-rules-96880.html">யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்</a>

இந்த ஸ்மார்ட்போனில் 7.500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 45 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் அம்சம் மற்றும் 22.5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனில் 6,300 mAh பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
<h3>ரெட்மி 17 5ஜி - விலை என்ன?</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Redmi 17 5G launched globally</p>
Also Spotted on Geekbench 🇮🇳 launch will happen soon..

. 6.9" 120Hz HD+LCD display
. Unisoc T8300 5G (China)
. Snapdragon 4 Gen 5 5G (Global)
. LPDDR4X, UFS 2.2
. 7500mah🔋45W⚡
. 50MP Main rear 📸
. 8MP🤳
. Android 16, Xiaomi Hyper OS 3
. IP64,… <a href="https://t.co/pHWc32bHtS">pic.twitter.com/pHWc32bHtS</a>

— Ravi Kiran - Tech Influencer (@Ravikrn36) <a href="https://x.com/Ravikrn36/status/2087051438212170227?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote>
இந்த ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் 769 MYR-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.18,000 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி ஆன்லைன் ஸ்டோரில் மலேசியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்மி நிறுவனம் விரைவில் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் ஒன்பிளஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/oneplus-nord-6-smartphone-selling-with-11000-discount-97612.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 15:20:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/oneplus-nord-6-smartphone-selling-with-11000-discount-97612.html</guid>
		            
			

    	<description><![CDATA[OnePlus Nord 6 Smartphone Discount | அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் சுதந்திர தின சேலை நடத்தி வரும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி வழங்கியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/oneplus-nord-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் ஒன்பிளஸ்!" /></figure>அமேசான் <strong>(Amazon)</strong>, பிளிப்கார்ட்<strong> (Flipkart)</strong> ஆகிய நிறுவனங்கள் தங்களின் ப்ரீடம் சேலை <strong>(Freedom Sale)</strong> நடத்தி வருவதை போலவே, சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒன்பிளஸ் <strong>(OnePlus)</strong> நிறுவனமும் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சேலில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு <strong>(OnePlus Nord 6 Smartphone)</strong> ரூ.11,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. ஒன்பிளஸின் இந்த அதிரடி தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி</h3>
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன் தற்போது ஒன்பிளஸ் இணையதளத்தில் ரூ.44,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.52,999-க்கு அறிமுகமான நிலையில், தற்போது ரூ.8,500 குறைவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதவிர சுதந்திர தின சிறப்பு சலுகையான ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.2,500 கூடுதல் உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் மொத்த ரூ.11,000 தள்ளுபடியில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-avoid-fake-discounts-when-shopping-online-price-tracker-tools-you-should-know-96871.html">அமேசான் – ஃபிளிப்கார்ட் வழங்கும் தள்ளுபடிகள் உண்மையா? எப்படி கண்டுபிடிப்பது?</a>
<h3>இரண்டு முறை விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்</h3>
ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா மற்றும் ஐடிஎஃப்சி வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் இந்த உடனடி சலுகையான ரூ.2,500 பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.42,000-க்கு தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், சமீப காலமாக நிலவி வரும் மெமரி சிப் சிக்கல்கள் காரணமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக தான் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.52,999 ஆக இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸின் இந்த சலுகையை பயன்படுத்தி பழைய விலைக்கே இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ள முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/amazon-great-freedom-sale-2026-discount-and-offers-on-smartphones-laptops-tabs-and-gadgets-a-96750.html">ஸ்மார்ட்போன்கள் முதல் கேட்ஜெட்ஸ் வரை.. அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்ன?</a>
<h3>ஒன்பிளஸ் நோர்டு 6 - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K AMLOED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் கென் 4 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள ஸ்மார்ட்போன் அசத்தல் சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கூகுள் பிக்சல் 10-க்கு பிளிப்கார்ட் வழங்கும் அட்டகாசமான சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/google-pixel-10-smartphone-gets-huge-discount-in-flipkart-freedom-sale-2026-97452.html</link>	
		<pubDate>Tue, 11 Aug 2026 18:10:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/google-pixel-10-smartphone-gets-huge-discount-in-flipkart-freedom-sale-2026-97452.html</guid>
		            
			

    	<description><![CDATA[Flipkart Freedom Sale 2026 | பிளிப்கார்ட் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது ப்ரீடம் சேலை நடத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படும் நிலையில், பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/google-pixel-10.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கூகுள் பிக்சல் 10-க்கு பிளிப்கார்ட் வழங்கும் அட்டகாசமான சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!" /></figure>கூகுள் <strong>(Google)</strong> நிறுவனம் தனது அடுத்த புதிய மாடல் ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் 11-ஐ <strong>(Google Pixel 11 Smartphone)</strong> அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தையில் நாளை (ஆகஸ்ட் 12, 2026) அறிமுகமாகும் நிலையில், இந்தியாவில் ஆகஸ்ட் 13, 2026 அன்று அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில் தான் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு <strong>(Google Pixel 10 Smartphone)</strong>, பிளிப்கார்ட் <strong>(Flipkart)</strong> தளத்தில் அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்டில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி</h3>
இந்தியா இன்னும் சில நாட்களில் தனது 80வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இதன் காரணமாக பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது ப்ரீடம் சேலை செயல்படுத்தி வருகின்றன. பிளிப்கார்ட் நிறுவனம் ஆகஸ்ட் 08, 2026 முதல் தனது ப்ரீடம் சேலை நடத்தி வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/amazon-great-freedom-sale-2026-discount-and-offers-on-smartphones-laptops-tabs-and-gadgets-a-96750.html">ஸ்மார்ட்போன்கள் முதல் கேட்ஜெட்ஸ் வரை.. அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்ன?</a>
<h3>கூகுள் பிக்சல் 10-க்கு பிளிப்கார்டில் என்ன தள்ளுபடி</h3>
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ரூ.74,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது, அறிமுக விலையான ரூ.79,999-ல் இருந்து ரூ.5,000 குறைவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவே நீங்கள் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உங்களுக்கு கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும். அதன் மூலம் வெறும் ரூ.69,999-க்கே கூகுள் பிக்சல் 10 கிடைக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/flipkart-freedom-sale-gives-huge-discounts-and-offers-for-iphones-96627.html">ஐபோன்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கும் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல்!</a>

இதுமட்டுமன்றி, ரூ.59,400 வரை எக்ஸ்சேஞ் சலுகைகளையும் பிளிப்கார்ட் வழங்குகிறது. நீங்கள் எக்ஸ்சேஞ் செய்யும் ஸ்மார்ட்போன் எந்த நிலையில் உள்ளது என்பதை பொறுத்து அதற்கான தொகை நிர்ணயம் செய்யப்படும். உதாரணமாக நீங்கள் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ரூ.14,050 எக்ஸ்சேஞ் போனஸாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/parliament-clears-taxation-bill-fm-sitharaman-says-upi-will-remain-free-no-framework-on-mdr-yet-97260.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 21:05:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/parliament-clears-taxation-bill-fm-sitharaman-says-upi-will-remain-free-no-framework-on-mdr-yet-97260.html</guid>
		            
			

    	<description><![CDATA[நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், NPCI தலைமையிலான யுபிஐ and Services Steering Committee, எம்.டி.ஆர் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கும். அவ்வாறு அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டால், அதன் அளவு மற்றும் நடைமுறைகள் குறித்து இந்தக் குழு தீர்மானிக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/upi-ns.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.." /></figure><strong>ஆகஸ்ட் 10, 2026:</strong> யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் பொதுமக்களிடம் தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், எதிர்காலத்திலும் யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடரும் என நம்புவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் எனப்படும் எம்.டி.ஆர் கட்டணம் விதிக்க சட்டப்பூர்வ வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
<h3>விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்:</h3>
இதுகுறித்து விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், "யுபிஐ கட்டணத்தை நுகர்வோர் செலுத்துவார்களா? இல்லை. யுபிஐ தொடங்கப்பட்ட காலத்திலிருந்து நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் எந்தப் பரிவர்த்தனை கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Payment and Settlement Systems Act-ன் 10A பிரிவில் மாற்றங்களைச் செய்வதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், எந்தெந்த மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகள் அல்லது பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கக் கூடாது என்பதை அரசு அறிவிப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.

எனினும், இந்தத் திருத்தம் யுபிஐ பயனாளர்களுக்கு நேரடியாக புதிய வரியையோ பரிவர்த்தனைக் கட்டணத்தையோ விதிக்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள Zero-எம்.டி.ஆர் முறையின்படி, UPI மற்றும் RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்க முடியாது.
<h3>உடனடியாக எம்.டி.ஆர்கட்டணம் விதிக்கப்படாது:</h3>
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், NPCI தலைமையிலான யுபிஐ and Services Steering Committee, எம்.டி.ஆர் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கும். அவ்வாறு அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டால், அதன் அளவு மற்றும் நடைமுறைகள் குறித்து இந்தக் குழு தீர்மானிக்கும்.

இதனால், மசோதா நிறைவேறியதாலேயே யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு உடனடியாக எம்.டி.ஆர் கட்டணம் விதிக்கப்படாது. தற்போது யுபிஐ பரிவர்த்தனைகள் பொதுமக்களுக்கு இலவசமாகவே தொடர்கின்றன.

மேலும், இந்த மசோதா டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மட்டுமின்றி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, உள்நாட்டு மின்னணு உற்பத்தியை ஊக்குவிப்பது, வெளிநாட்டு கிளவுட் சேவை நிறுவனங்கள் இந்திய தரவு மையங்களைப் பயன்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வரி மற்றும் முதலீட்டு தொடர்பான மாற்றங்களையும் முன்மொழிகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மூன்று நாட்களில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 11.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/google-pixel-11-smartphone-to-launch-within-three-days-in-india-97290.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 15:51:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/google-pixel-11-smartphone-to-launch-within-three-days-in-india-97290.html</guid>
		            
			

    	<description><![CDATA[Google Pixel 11 Smartphone | கூகுள் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கூகுள் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/google-pixel-11.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மூன்று நாட்களில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 11.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?" /></figure>கூகுள்<strong> (Google)</strong> நிறுவனம் ஸ்மார்ட்போன்<strong> (Smartphone)</strong> சந்தையில் புதிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளது. ஐபோன்களுக்கு பிறகு மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக கூகுள் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கூகுள் நிறுவனம் இன்னும் மூன்று நாட்களில் தனது கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனை <strong>(Google Pixel 11 Smartphone)</strong> அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>மூன்று நாட்களில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன்</h3>
கூகுள் நிறுவனம் தனது நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது கூகுள் பிக்சல் 11 <strong>(Pixel 11)</strong>, பிக்சல் 11 ப்ரோ <strong>(Pixel 11 Pro)</strong>, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் <strong>(Pixel 11 Pro XL)</strong> மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு <strong>(Pixel 11 Pro Fold)</strong> ஆகிய ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்ய உள்ளது. கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் விலை சற்று அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/flipkart-freedom-sale-gives-huge-discounts-and-offers-for-iphones-96627.html">ஐபோன்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கும் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல்!</a>

மெமரி சிப்களின் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன்களின் விலைகளும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த முறை அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 10 மாடல் ஸ்மார்ட்போனை விட 100 டாலர்கள் அதிகம் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
<h3>கூகுள் பிக்சல் 11 - விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்</h3>
கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் ரூ.85,600-க்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,04,600-க்கும், பிக்சல் 11 ப்ரோ எக்ஸ் எல் ஸ்மார்ட்போன் ரூ.1,23,678-க்கும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும், கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு ஸ்மார்ட்போன் ரூ.1,80,804-க்கும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/upi-charges-clarified-no-fees-for-users-as-government-explains-proposed-mdr-rules-96880.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 20:03:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/upi-charges-clarified-no-fees-for-users-as-government-explains-proposed-mdr-rules-96880.html</guid>
		            
			

    	<description><![CDATA[யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா என்ற குழப்பத்திற்கு மத்திய அரசு முக்கிய விளக்கம் அளித்துள்ளது. யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் எந்தவித பரிவர்த்தனை கட்டணமும் வசூலிக்கப்படாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  மேலும் பல்வேறு சந்தேகங்களுக்கும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/upi-mdr-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்" /></figure>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா என்ற குழப்பத்திற்கு மத்திய அரசு முக்கிய விளக்கம் அளித்துள்ளது. யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் எந்தவித பரிவர்த்தனை கட்டணமும் வசூலிக்கப்படாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
<h3>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா?</h3>
மேலும், எதிர்காலத்தில் வணிகர் தள்ளுபடி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டால், அது அனைத்து வணிகர்களுக்கும் பொதுவாக விதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நடைபெறும் சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, குறைந்த அளவிலான எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படலாம். மேலும், இந்தக் கட்டணம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை விட மிகவும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், யுபிஐ மூலம் நடைபெறும் பெரும்பாலான பரிவர்த்தனைகள் வணிகர்களுக்கும் தொடர்ந்து கட்டணமின்றியே இருக்கும். எம்டிஆர் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்பின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் பொதுவாக விதிக்கப்படாது. இதற்கான அடுத்தகட்ட முடிவு, நாடாளுமன்றத்தில்வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் 2026 நிறைவேற்றப்பட்ட பிறகு எடுக்கப்படும்.

எம்டிஆர் கட்டணங்களைச் செயல்படுத்துவது குறித்த முடிவு இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் கீழ் உள்ள யுபிஐ சேவைகள் வழிநடத்தல் குழுவின் வசம் உள்ளது. இந்தியா யுபிஐ கட்டண முறையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகவும், கிராமப்புறங்களில் இச்சேவையை விரிவுபடுத்த இம்முறை சுயசார்பு கொண்டதாக மாற வேண்டும் என்றும் நிதியமைச்சகம் குறிப்பிட்டது.

இது தொடர்பாக பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தமானது, யுபிஐ பாதுகாப்பானதாகவும், சமமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அது தெளிவுபடுத்தியது.

கடந்த 2016 - 17 இல் தொடங்கப்பட்ட யுபிஐ அமைப்பு, காலப்போக்கில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. மேலும் கடந்த ஜூலை 2026ல், ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது, ​​11 நாடுகளில் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது; மேலும் பல நாடுகள் இம்முறையுடன் இணைய முன்வந்து கொண்டிருக்கின்றன.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அமேசான் &#8211; ஃபிளிப்கார்ட் வழங்கும் தள்ளுபடிகள் உண்மையா? எப்படி கண்டுபிடிப்பது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-avoid-fake-discounts-when-shopping-online-price-tracker-tools-you-should-know-96871.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 19:57:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-avoid-fake-discounts-when-shopping-online-price-tracker-tools-you-should-know-96871.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுநத்திர தின தள்ளுபடி விற்பனையை அறிவித்திருக்கின்றன. ஆன்லைன் விற்பனையின் போது விளம்பரப்படுத்தப்படும் மிகப்பெரிய தள்ளுபடிகள் உண்மையா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதனை எப்படி தெரிந்து கொள்வது என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/amazon-flipkart-sale-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அமேசான் &#8211; ஃபிளிப்கார்ட் வழங்கும் தள்ளுபடிகள் உண்மையா? எப்படி கண்டுபிடிப்பது?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/technology/flipkart-freedom-sale-gives-huge-discounts-and-offers-for-iphones-96627.html" target="_blank" rel="noopener">ஃபிளிப்கார்ட்</a> மற்றும் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுநத்திர தின தள்ளுபடி விற்பனையை அறிவித்திருக்கின்றன. ஆன்லைன் விற்பனையின் போது விளம்பரப்படுத்தப்படும் மிகப்பெரிய தள்ளுபடிகள் எப்போதும் உண்மையானதாக இருக்காது.  பெரும்பாலும், பின்னர் பெரிய தள்ளுபடியைக் காட்டுவதற்காகவே, முன்னதாகவே பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுகின்றன. இத்தகைய சூழலில், ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அதன் உண்மையான விலை வரலாற்றை மூன்று  டூல்கள் மூலம் எளிதாகச் சரிபார்க்கலாம்.
<h3>அமேசான் - ஃபிளிப்கார்ட் வழங்கும் தள்ளுபடிகள் உண்மையா?</h3>
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலமோ அல்லது வார இறுதி விற்பனையோ எதுவாக இருந்தாலும், இ-காமர்ஸ் தளங்களில் 80% தள்ளுபடி மற்றும் அதிரடி விலை குறைவு போன்ற அறிவிப்புகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. இதைப் பார்த்து, உண்மை என நம்பி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அவசரப்பட்டு பொருட்களை வாங்கிவிடுகிறார்கள். ஆனால், அதிக தள்ளுபடியில் நீங்கள் வாங்கும் பொருளின் உண்மையான விலை என்ன என்பதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/upi-charges-only-for-merchants-not-customers-says-finance-minister-nirmala-sitharaman-on-new-bill-96486.html">UPI பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா? யாருக்கு பொருந்தும்? மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்..</a></strong>

இ - காமர்ஸ் நிறுவனங்கள் பெரும்பாலும் தள்ளுபடி விற்பனைக்குச் சில நாட்களுக்கு முன்பு பொருட்களின் விலையை உயர்த்திவிட்டு, பின்னர் அவற்றின் மீது மிகப்பெரிய தள்ளுபடி என்ற முத்திரையை ஒட்டுகின்றன. தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் மொழியில், இது "போலி தள்ளுபடி" என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய ஆன்லைன் ஏமாற்று வேலைகளையும் பண இழப்பையும் தவிர்க்க விரும்பினால், இந்த மூன்று இலவசக் கருவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
<h3>1. PriceHistory.app</h3>
ஆன்லைன் பொருட்களின் கடந்தகால விலைகளைச் சரிபார்ப்பதற்கு இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கருவிகளில் இதுவும் ஒன்று. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற முக்கிய தளங்களில் விற்கப்படும் பொருட்களின் முழுமையான விலை வரலாற்றை இது காட்டுகிறது. நீங்கள் வாங்க விரும்பும் பொருளின் லிங்க்கை காப்பி செய்து PriceHistory.app-இல் பேஸ்ட் செய்தால் மட்டும் போதும். கடந்த ஒரு மாதம், மூன்று மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் அப்பொருளின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலைகளை ஒரு கிராஃப் மூலம் இக்கருவி காட்டுகிறது. இதன் மூலம், விற்பனைச் சலுகை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் உடனடியாகத் தீர்மானிக்க முடியும்.
<h3>2. Buyhatke</h3>
உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் கூகுள் குரோம் புரௌசரில் ஷாப்பிங் செய்பவர் என்றால், Buyhatke எக்ஸ்டென்ஷன் (உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஒரு பொருளின் பக்கத்தைப் பார்வையிட்ட உடனேயே, அப்பொருளின் உண்மையான விலை குறித்த தகவல்களைக் கொண்ட ஒரு சிறிய மேப்பை இந்த எக்ஸ்டென்ஷன் திரையில் காட்டுகிறது. கூடுதலாக, இதில் விலை குறைப்பு எச்சரிக்கை வசதியும் உள்ளது. அதாவது, நீங்கள் விரும்பும் விலையை இதில் நிர்ணயிக்கலாம். உதாரணமாக, ரூ.20,000 மதிப்புள்ள போன் ரூ.15,000க்குக் குறைந்தால் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். விலை உங்கள் பட்ஜெட்டிற்குள் வந்தவுடன், அது உடனடியாக உங்களுக்கு இமெயில் அல்லது நோட்டிஃபிகேஷன் அனுப்பும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/apple-iphone-17-pro-gets-huge-discount-you-can-actually-buy-it-for-90000-rupees-96165.html">ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை ரூ.90,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.. பிளிப்கார்டின் இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க!</a></strong>
<h3>3. Keepa</h3>
அமேசானில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு மிகவும் நம்பகமான கருவிகளில் ஒன்றாக Keepa கருதப்படுகிறது. இது செயலி மற்றும் புரௌசர் எக்ஸ்டன்ஷன் ஆகிய வடிவங்களில் கிடைக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது தள்ளுபடிகளை மட்டும் காட்டுவதில்லை. ஒரு தயாரிப்பு எப்போது மிகக் குறைந்த விலையில் கிடைத்தது என்பதையும் அப்போது பயன்படுத்தப்பட்ட வங்கிச் சலுகைகள் அல்லது கூப்பன்கள் உட்பட துல்லியமாகக் கண்காணிக்கிறது. நீங்கள் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது வீட்டு உபயோகப் பொருள் ) ஒன்றை வாங்கத் திட்டமிட்டிருந்தால், வாங்குவதற்கு முன் 'Keepa'-வில் அதன் விலை ஏற்ற இறக்கங்களை சரிபார்க்க மறக்காதீர்கள். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்மார்ட்போன்கள் முதல் கேட்ஜெட்ஸ் வரை.. அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/amazon-great-freedom-sale-2026-discount-and-offers-on-smartphones-laptops-tabs-and-gadgets-a-96750.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 13:05:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/amazon-great-freedom-sale-2026-discount-and-offers-on-smartphones-laptops-tabs-and-gadgets-a-96750.html</guid>
		            
			

    	<description><![CDATA[Amazon Great Freedom Sale 2026 | அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் நேற்று (ஆகஸ்ட் 07, 2026) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் கேட்ஜெட்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/amazon-great-freedom-sale-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்மார்ட்போன்கள் முதல் கேட்ஜெட்ஸ் வரை.. அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்ன?" /></figure>அமேசான்<strong> (Amazon)</strong> நிறுவனம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தனது கிரேட் ப்ரீடம் சேலை <strong>(Great Freedom Sale)</strong> அறிவித்தது. அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 07, 2026) முதல் அமேசானின் தி கிரேட் ப்ரீட்ம் சேல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட கேட்ஜெட்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமேசானின் இந்த கிரேட் ப்ரீடல் சேலில் உள்ள சில அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜியோமி பேட் 8-க்கு அசத்தல் தள்ளுபடி</h3>
ஜியோமி பேட் 8-க்கு<strong> (Xiaomi 8 Pad)</strong> இந்த ப்ரீடம் சேலில் அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ரூ.43,999-க்கு அறிமுகமான நிலையில், தற்போது இந்த சேலில் வெறும் ரூ.39,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8எஸ் 4ஜென் சிப்செட் மற்றும் 9,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்ட இந்த பேடை வாங்க இது சிறந்த சலுகையாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/what-will-happen-to-your-pf-account-if-you-took-career-break-96526.html">EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>
<h3>ஜியோமி பவர் பேங்க் 5ஐ 20000 67வாட்ஸ்</h3>
ஸ்மார்ட்போன்கள், டேப்லட்களை விடவும் ஸ்மார்ட்போன்களுக்கான கேட்ஜெட்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பவர் பேங்க் ரூ.5,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசானின் இந்த சேலில் வெறும் ரூ.3,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
<h3>சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ</h3>
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ <strong>(Samsung Galaxy Buds 4 Pro)</strong> தனது அசல் விலையான ரூ.29,999-ல் இருந்து வெறும் ரூ.19,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர அமேசான் சேலில் இந்த பட்ஸை வாங்கும் நபர்கள் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் மாத தவணை பெற்றுக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-kept-repo-rate-remain-unchanged-for-next-two-months-96460.html">ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!</a>
<h3>ரூ.49,999-க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் 13எஸ்</h3>
இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன்<strong> (OnePlus 13 Smartphone)</strong> ரூ.57,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் வெறும் ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஐபோன்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கும் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/flipkart-freedom-sale-gives-huge-discounts-and-offers-for-iphones-96627.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 18:09:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/flipkart-freedom-sale-gives-huge-discounts-and-offers-for-iphones-96627.html</guid>
		            
			

    	<description><![CDATA[iPhone Offers In Flipkart Freedom Sale | பிளிப்கார்ட் நிறுவனத்தின் ப்ரீடம் சேல் நாளை (ஆகஸ்ட் 08, 2026) தொடங்க உள்ளது. இந்த சேலில், பிளிப்கார்ட் நிறுவனம் ஐபோன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/flipkart-sale-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஐபோன்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கும் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல்!" /></figure>இந்தியா விரைவில் தனது 80வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது ப்ரீடம் சேலை <strong>(Freedom Sale)</strong> அறிவித்து வருகின்றன. அந்த வகையில், உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் <strong>(e Commerce)</strong> நிறுவனங்களான பிளிப்கார்ட்<strong> (Flipkart)</strong> மற்றும் அமேசான்<strong> (Amazon)</strong> ஆகிய நிறுவனங்களும் தங்களது ப்ரீடம் சேலை அறிவித்துள்ளன. அந்த வகையில், பிளிப்கார்ட் நிறுவனமும் தனது ப்ரீடம் சேலை <strong>(Flipkart Freedom Sale)</strong> அறிவித்துள்ளது. சாதரண பயனர்களுக்கு இந்த சேல் சலுகைகள் நாளை (ஆகஸ்ட் 08, 2026) முதல் கிடைக்கும் நிலையில், பிளிப்கார்ட் பிளஸ் பயன்படுத்தும் பயனர்கள் இன்று (ஆகஸ்ட் 07, 2026) முதலே சேல் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில், பிளிப்கார்டின் இந்த ப்ரீடம் சேல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் - சிறப்பு தள்ளுடிகள் மற்றும் சலுகைகள்</h3>
பிளிப்கார்ட் நிறுவனம் தனது ப்ரீடம் சேலை தொடங்கியுள்ள நிலையில், இதில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்திற்கும் அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், பிளிப்கார்டின் இந்த சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என பார்க்கலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/vivo-s2-smartphone-launched-in-india-with-amazing-features-96414.html">அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது விவோ எஸ்2 ஸ்மார்ட்போன்.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?</a>
<h3>ஐபோன் ஏர்</h3>
நீங்கள் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என நினைத்தால் உங்களுக்கு ஏர் ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,19,900 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டின் இந்த சேலில் ரூ.97,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
<h3>ஐபோன் 17 ப்ரோ</h3>
உங்களுக்கு ப்ரோ லெவல் அனுபவம் வேண்டும் என்றால் நீங்கள் ஆப்பிள் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை தேர்வு செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,34,900 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.1,22,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/apple-iphone-17-pro-gets-huge-discount-you-can-actually-buy-it-for-90000-rupees-96165.html">ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை ரூ.90,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.. பிளிப்கார்டின் இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க!</a>
<h3>இபோன் 16</h3>
நீங்கள் சற்று விலை குறைவான ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால் உங்களுக்கு ஐபோன் 16 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.69,900 வரை விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.61,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விரைவில் செயலாற்றும் QR கோடு.. எப்படி வேலை செய்கிறது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-qr-code-function-this-quickly-without-delay-photo-gallery-96537.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 15:10:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-qr-code-function-this-quickly-without-delay-photo-gallery-96537.html</guid>
		            
			    	<description><![CDATA[How QR Code Function This Quickly | தற்போதைய சூழலில் அனைத்து இடங்களில் QR கோடுகளை வைத்து அவற்றின் மூலம் பணம் பெறும் வசதி உள்ளது. இந்த நிலையில், QR கோடுகள் எப்படி இவ்வளவு விரைவாக செயலாற்றுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/technology/how-qr-code-function-this-quickly-without-delay-photo-gallery-96537.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/qr-code-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Qr Code (5)" /></a></dt><p>இன்றைய டிஜிட்டல் உலகில் QR கோடு பயன்படுத்தப்படாத இடமே இருக்காது. சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை என அனைத்து இடங்களிலும் இந்த QR கோடு வசதி உள்ளது. பண பரிவர்த்தனைக்கு மட்டுமன்றி, செயலிகள் உள்ளிட்டவற்றுக்கும் QR கோடு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/technology/how-qr-code-function-this-quickly-without-delay-photo-gallery-96537.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/qr-code-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Qr Code (1)" /></a></dt><p>ஒரே கிளிக் மூலம் இந்த QR கோடு மூலம் பண பரிவர்த்தனையை மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம். ஒருவரின் வங்கி எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு பணம் அனுப்புவதை விடவும், இந்த QR கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் முறை மிகவும் எளிதானதாக உள்ளது. 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/technology/how-qr-code-function-this-quickly-without-delay-photo-gallery-96537.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/qr-code-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Qr Code (3)" /></a></dt><p>இந்த QR கோடில் உள்ள QR என்பதற்கு Quick Response என்று அர்த்தம். அதாவது, 1994 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள Denso Wave என்ற நிறுவனம் வாகன உதிரி பாகங்களை விரைவாக கண்காணிக்க இந்த அம்சத்தை அறிமுகம் செய்தது. பின்னர் ஸ்மார்ட்போன்களின் வருகை ஆகியற்றின் காரணமாக இந்த முறை தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/technology/how-qr-code-function-this-quickly-without-delay-photo-gallery-96537.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/qr-code-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Qr Code (2)" /></a></dt><p>மிக சிறிய அளவில் உள்ள ஒரு QR கோடில் ஆயிரக்கணக்கான தகவல்களை சேமித்து வைக்க முடியும். அதாவது இணையதள முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, Wi - Fi கடவுச்சொல், வங்கி கட்டண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த QR கோடுகளில் குறியாக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/technology/how-qr-code-function-this-quickly-without-delay-photo-gallery-96537.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/qr-code-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Qr Code (4)" /></a></dt><p>QR கோடை ஸ்மார்ட்போன் கேமரா அல்லது QR ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன் செய்தவுடன், அதில் உள்ள தகவல்களை மென்பொருள் உடனடியாக வாசித்து, பயனருக்கு காட்டும். இதில் உள்ள Error Correction தொழில்நுட்ப அம்சம் QR கோடு கிழிந்திருந்தாலோ அல்லது அழுக்காக இருந்தாலோ தகவல்களை துல்லியமாக படித்துவிடும் அம்சத்தை கொண்டுள்ளது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>தொடங்கியது அமேசான் கிரேட் ப்ரீடம் சேல்.. என்ன என்ன தள்ளுபடிகள், சலுகைகள்.. முழு விவரம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/amazon-great-freedom-sale-2026-live-now-what-are-the-discounts-and-special-offers-available-in-this-sale-96502.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 11:45:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/amazon-great-freedom-sale-2026-live-now-what-are-the-discounts-and-special-offers-available-in-this-sale-96502.html</guid>
		            
			

    	<description><![CDATA[Amazon Freedom Sale 2026 Live Now | சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் தனது ப்ரீடம் சேலை அறிவித்தது. இன்று (ஆகஸ்ட் 07, 2026) இந்த சேல் ஆகஸ்ட் 12, 2026 அன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த சேல் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/amazon-great-freedom-sale.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தொடங்கியது அமேசான் கிரேட் ப்ரீடம் சேல்.. என்ன என்ன தள்ளுபடிகள், சலுகைகள்.. முழு விவரம் இதோ!" /></figure>இந்தியா தனது 80வது சுதந்திர தின விழாவை <strong>(80th Independence Day)</strong> ஆகஸ்ட் 15, 2026 அன்று கொண்டாட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமேசான் <strong>(Amazon)</strong>, பிளிப்கார்ட் <strong>(Flipkart) </strong>உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ப்ரீடம் சேலை அறிவிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த இரண்டு பெரிய இ காமர்ஸ் நிறுவனங்களும் தங்களது ப்ரீடம் சேலை<strong> (Amazon Great Freedom Sale)</strong> அறிவித்துள்ளன. இந்த நிலையில், அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் என்ன என்ன சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இன்று முதல் அமேசான் கிரேட் பிரீடம் சேல் - என்ன என்ன சலுகைகள்</h3>
அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் இன்று (ஆகஸ்ட் 07, 2026) முதல் தொடங்கியுள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. நீங்கள் புதியதாக வாங்க நினைத்தாலோ அல்லது உங்களிடம் ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை மாற்றம் செய்ய விரும்பினாலோ இந்த சேல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/uber-to-launch-1-20-lakhs-driverless-cabs-in-2026-in-15-cities-96152.html">ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் 1.20 லட்சம் கேப்களை அறிமுகம் செய்யும் ஊபர்.. இந்தியாவில் புதிய சாதனை!</a>
<h3>கூடுதலாக என்ன என்ன சலுகைகளை பெறலாம்?</h3>
<ul>
 	<li>எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மாத தவணை முறையில் பொருட்களை வாங்கும் பட்சத்தில் உடனடியாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.</li>
 	<li>அமேசான் பிரைம் பயன்படுத்தும் நபர்கள் இந்த சேலில் சில கூடுதல் சலுகைகளை பெறலாம்.</li>
 	<li>அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடி கார்டை பயன்படுத்தி 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம்.</li>
 	<li>பிரைம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.2,500 வரவேற்பு போனசாக பெற்றுக்கொள்ளலாம்.</li>
 	<li>இந்த சேலில் பல்வேறு நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு<strong> No Cost EMI</strong> சலுகை வழங்கப்படுகிறது.</li>
 	<li>சில குறிப்பிட்ட பொருட்களுக்கு எக்ஸ்சேஞ் சலுகைகளும் வழங்கப்படுகிறது.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/meta-blocked-several-whatsapp-users-account-for-24-hours-to-review-95743.html">பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை 24 மணி நேரம் மூடிய மெட்டா.. காரணம் என்ன?</a></p>
அட்டகாசமான அம்சங்களை கொண்ட இந்த சேல் இன்று (ஆகஸ்ட் 07, 2026) தொடங்கும் நிலையில், ஆகஸ்ட் 12, 2026 அன்று நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>UPI பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா? யாருக்கு பொருந்தும்? மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/upi-charges-only-for-merchants-not-customers-says-finance-minister-nirmala-sitharaman-on-new-bill-96486.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 09:30:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/upi-charges-only-for-merchants-not-customers-says-finance-minister-nirmala-sitharaman-on-new-bill-96486.html</guid>
		            
			

    	<description><![CDATA[இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "தவறான தகவல்களை பரப்புவதற்கு முன்பு உண்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக விவாதத்தில் பங்கேற்றிருந்தால், இந்த விவகாரம் குறித்து அவையிலேயே விரிவாக விவாதிக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ui.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="UPI பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா? யாருக்கு பொருந்தும்? மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்.." /></figure><strong>ஆகஸ்ட் 7, 2026:</strong> UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) விதிக்கப்பட்டாலும், அது வாடிக்கையாளர்களுக்கு அல்ல; வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "UPI சேவையைப் பயன்படுத்தும் சாதாரண மக்களே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்" என்று சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், அவரது கருத்தை மறுத்து விளக்கம் வெளியிட்டார்.
<h3>UPI சேவையைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த நேரிடும்:</h3>
அவர் வெளியிட்ட பதிவில், "வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். இறுதி வாடிக்கையாளர்கள் அல்லது பயனர்களுக்கு இது பொருந்தாது. MDR மூலம் கிடைக்கும் வருவாய், வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் பாதுகாப்பு வசதிகளில் கூடுதல் முதலீடு செய்ய உதவும். அதன் பலனை அனைத்து UPI பயனர்களும் பெறுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 2026ஆம் ஆண்டுக்கான "வரி மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா" நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகே, தேசிய கட்டண கழகம் (NPCI) தலைமையிலான UPI மற்றும் சேவைகள் வழிகாட்டும் குழு MDR தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/pm-modi-calls-upon-people-to-celebrate-national-handloom-day-by-showcasing-indias-rich-handloom-heritage-post-on-x-96476.html">தேசிய கைத்தறி தினம்.. கைத்தறி ஆடைகள் அணிந்து வீடியோவை பகிர பிரதமர் மோடி வலியுறுத்தல்..</a>

இந்த மசோதா மூலம், எந்தெந்த மின்னணு கட்டண முறைகள் அல்லது பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை மத்திய அரசு அறிவிப்பு மூலம் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில், MDR சுமை இறுதியில் பொதுமக்கள் மீதே விழும் என்றும், UPI சேவையை நிதி ரீதியாக நிலைநிறுத்துவதற்கான ஒரே வழி இதுதான் என்ற அரசின் வாதம் முற்றிலும் தவறானது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
<h3>நிதி அமைச்சர் கொடுத்த விளக்கம்:</h3>
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "தவறான தகவல்களை பரப்புவதற்கு முன்பு உண்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக விவாதத்தில் பங்கேற்றிருந்தால், இந்த விவகாரம் குறித்து அவையிலேயே விரிவாக விவாதிக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வரி மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா மூலம், Payment and Settlement Systems Act, 2007-இன் பிரிவு 10(A)-ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், தற்போது UPI மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளுக்கு நடைமுறையில் உள்ள 'Zero MDR' முறையை எதிர்காலத்தில் மாற்றுவதற்கான சட்டபூர்வ அதிகாரம் அரசுக்கு கிடைக்கும்.

அதேநேரத்தில், இந்த மசோதா உடனடியாக MDR கட்டணத்தை அறிமுகப்படுத்தவில்லை என்றும், எந்தக் கட்டணத் தொகையையும் நிர்ணயிக்கவில்லை என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது. மாறாக, எதிர்காலத்தில் தேவைப்பட்டால் 'Zero MDR' கொள்கையில் மாற்றம் செய்யும் சட்ட அடித்தளத்தை மட்டுமே இந்த மசோதா உருவாக்குகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சாம்சங் கேலக்ஸி எஸ்25-க்கு ரூ.15,000 தள்ளுபடி.. ப்ரீடம் சேலுக்கு முன்னதாகவே இன்ப அதிர்ச்சி கொடுத்த அமேசான்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-s25-smartphone-gets-15000-rupees-discount-on-amazon-96456.html</link>	
		<pubDate>Thu, 06 Aug 2026 22:41:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-s25-smartphone-gets-15000-rupees-discount-on-amazon-96456.html</guid>
		            
			

    	<description><![CDATA[Samsung Galaxy S25 Smartphone Gets 15000 Rupees Discount | அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ப்ரீடம் சேலை நாளை (ஆகஸ்ட் 07, 2026) தொடங்க உள்ளன. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000 தள்ளுபடி வழங்கியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/samsung-galaxy-s25.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சாம்சங் கேலக்ஸி எஸ்25-க்கு ரூ.15,000 தள்ளுபடி.. ப்ரீடம் சேலுக்கு முன்னதாகவே இன்ப அதிர்ச்சி கொடுத்த அமேசான்!" /></figure>ஆகஸ்ட் 15, 2026 அன்று இந்தியா தனது 60வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் <strong>(e Commerce)</strong> நிறுவனங்களான அமேசான் <strong>(Amazon),</strong> பிளிப்கார்ட் <strong>(Flipkart)</strong> ஆகியவை சேலை அறிவிக்க உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் சேலும் நாளை (ஆகஸ்ட் 07, 2026) தொடங்க உள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவளுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில், சேலுக்கு முன்னதாக அமேசான் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனுக்கு <strong>(Samsung Galaxy S25 Smartphone)</strong> சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. அதாவது அந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் வழங்கும் சிறப்பு தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>சாம்சங் கேலக்ஸி எஸ்25 - அமேசானில் சிறப்பு சலுகை</h3>
12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.74,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடியுடன் வெறும் ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சுமார் ரூ.15,000 வரையிலான் தள்ளுபடியுடன் அந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஸ்மார்ட்போன் ரூ.87,999-க்கு அறிமுகமான நிலையில், தற்போது வெறும் ரூ.73,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-agricultural-budget-2026-new-college-in-tanjore-in-the-name-of-nammazhwar-rupees-5-crore-alloted-96319.html">தஞ்சையில் நம்மாழ்வார் பெயரில் கல்லூரி.. விவசாயிகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள்!</a>
<h3>தற்போது வாங்கலாமா அல்லது சேலுக்கு காத்திருக்கலாமா?</h3>
அமேசான் நிறுவனத்தின் சேல் நாளை (ஆகஸ்ட் 07, 2026) தொடங்க உள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் அசத்தல் தள்ளுபடிகளை வழங்க உள்ளது. தற்போது இருக்கும் விலையை விடவும் சேலில் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, காத்திருந்து சேலில் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்து வாங்கிக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-general-secretary-edappadi-palaniswami-stated-that-tvk-government-agriculture-budget-is-disappointing-96314.html">விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!</a>

இது தவிர மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் அமேசான் சேலில் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது விவோ எஸ்2 ஸ்மார்ட்போன்.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/vivo-s2-smartphone-launched-in-india-with-amazing-features-96414.html</link>	
		<pubDate>Thu, 06 Aug 2026 20:20:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/vivo-s2-smartphone-launched-in-india-with-amazing-features-96414.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vivo S2 Smartphone Launched In India | விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விவோ எஸ்2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/vivo-s2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது விவோ எஸ்2 ஸ்மார்ட்போன்.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?" /></figure>இந்திய ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> சந்தையிலும், இந்திய பொதுமக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் விவோ <strong>(Vivo)</strong>. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விவோ எஸ்2 ஸ்மார்ட்போனை<strong> (Vivo S2 Smartphone)</strong> இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்</h3>
விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தனது விவோ எஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு விவோ நிறுவனம், விவோ எஸ்1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில், அதனை தொடர்ந்து இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/iphone-17-pro-gets-huge-discount-in-flipkart-freedom-sale-2026-95572.html">விரைவில் தொடங்கும் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்.. ஐபோன் 17 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி!</a>
<h3>விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Vivo Set to launch its most awaited Vivo S2 5G phone today</p>
- The phone is launching as Redmi also gears up to launch its Redmi Note 17 5G smartphone series today.
- The Vivo S2 is launching after a seven-year gap since the S1 launch in 2019.
- Vivo S2 is expected to feature a… <a href="https://t.co/ZGceGPPmeN">pic.twitter.com/ZGceGPPmeN</a>

— TelecomTalk (@TelecomTalk) <a href="https://x.com/TelecomTalk/status/2085250427017413018?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote>
இந்த ஸ்மார்ட்போன் 6.83 இன்ச் 3டி கர்வுடு AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7360 டர்போ பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7050 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.
<h3>விலை மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்</h3>
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.49,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை ரூ.90,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.. பிளிப்கார்டின் இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/apple-iphone-17-pro-gets-huge-discount-you-can-actually-buy-it-for-90000-rupees-96165.html</link>	
		<pubDate>Wed, 05 Aug 2026 21:10:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/apple-iphone-17-pro-gets-huge-discount-you-can-actually-buy-it-for-90000-rupees-96165.html</guid>
		            
			

    	<description><![CDATA[Apple iPhone 17 Pro Gets Huge Discount | ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ரூ.1,34,000 மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை பிளிப்கார்ட் சலுகை மூலம் ரூ.90,000-க்கு வாங்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/apple-17-pro.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை ரூ.90,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.. பிளிப்கார்டின் இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க!" /></figure>உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள்<strong> (Apple)</strong>
தனது அடுத்த மாடல் ஸ்மார்ட்போனை, செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை விட சில அட்வான்ஸ்டு அம்சங்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தற்போது விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ <strong>(Apple iPhone 17 Pro)</strong> பிளிப்கார்டில்<strong> (Flipkart)</strong> ரூ.90,000-க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவுக்கு பிளிப்கார்டில் வழங்கப்பட்டுள்ள சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஐபோன் 17 ப்ரோ - ரூ.90,000-க்கு கீழ் கிடைக்கிறது?</h3>
256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,32,900-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது, அதன் அசல் விலையில் இருந்து ரூ.2,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர நீங்கள் ரூ.3,000 வரை உடனடி தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் அறிமுக விலையான ரூ.1,34,900-ல் இருந்து ரூ.1,29,900-க்கு வாங்கலாம். ஆக்சிஸ், இசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த சலுகையை பெறலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/driving-in-heavy-rain-essential-safety-tips-for-flooded-roads-95251.html">தீவிரமடையும் மழை- நீரில் வாகனம் ஓட்டும்போது செய்யக்கூடாத 5 தவறுகள்</a>
<h3>எக்ஸ்சேஞ்சுக்கு ரூ.54,400 வழங்கப்படும்</h3>
அதுமட்டுமன்றி, பிளிப்கார்ட் நிறுவனம் எக்ஸ்சேஞ் சலுகை வழங்குகிறது. பயனர்கள் வழங்கும் மாடல் மற்றும் அந்த ஐபோனின் தரத்தை பொறுத்து ரூ.54,400 வரை வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் ஆப்பிள் ஐபோன் 14 ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்தால் உங்களுக்கு ரூ.38,950 வரை வழங்கப்படும். இதன் உடன் ரூ.3,000 உடனடி சலுகை பெறும் பட்சத்தில் உங்களால் ரூ.90,950-க்கு ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/is-whatsapp-introducing-age-restriction-feature-why-the-company-asking-age-to-indian-users-95148.html">WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?</a>

பிளிப்கார்டின் இந்த சலுகையை பயன்படுத்தி ரூ.1,34,900 மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவை, வெறும் ரூ.90,000-க்கு வாங்கிக்கொள்ளலாம். நீண்ட நாட்களாக ஸ்மார்ட்போன் வாங்க காத்துக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் 1.20 லட்சம் கேப்களை அறிமுகம் செய்யும் ஊபர்.. இந்தியாவில் புதிய சாதனை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/uber-to-launch-1-20-lakhs-driverless-cabs-in-2026-in-15-cities-96152.html</link>	
		<pubDate>Wed, 05 Aug 2026 20:20:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/uber-to-launch-1-20-lakhs-driverless-cabs-in-2026-in-15-cities-96152.html</guid>
		            
			

    	<description><![CDATA[Uber To Introduce Driverless Cabs In India | துபாய், சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ளதை போலவே இந்தியாவிலும் ஓட்டுநர் இல்லாத கார்களை ஊபர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. ஊபர் நிறுவனத்தின் இந்த அட்டகாசமான முயற்சி குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/uber-cabs.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் 1.20 லட்சம் கேப்களை அறிமுகம் செய்யும் ஊபர்.. இந்தியாவில் புதிய சாதனை!" /></figure>இந்தியாவில் மிக சுலபமாக, இருக்கும் இடத்திற்கே வாகனங்களை வரவழைத்து பயணம் செய்ய சேவையை ஓலா<strong> (Ola)</strong>, ஊபர்<strong> (Uber)</strong> உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த சேவைகளை பயன்படுத்தி ஏராளமான பயனர்கள் தினசரி பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், ஊபர் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது, ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கேப்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ஓலா நிறுவனத்தின் இந்த புதிய நடவடிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஓட்டுநர் இல்லாத கார்களை அறிமுகம் செய்யும் ஊபர்</h3>
முன்பு ஒரு வாகனத்தை இயக்க வேண்டும் என்றால் ஓட்டுநர் தேவை. ஆனால், தற்போது அதற்கெல்லாம் அவசியமே இல்லை. ஓட்டுநர் இல்லாமலே கூட பயணம் செய்யும் <strong>Self Driving</strong> அம்சம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. துபாய், சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்த அம்சம் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தான், ஊபர் நிறுவனம் இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/is-whatsapp-introducing-age-restriction-feature-why-the-company-asking-age-to-indian-users-95148.html">WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?</a>

ஊபர் நிறுவனம் சுமார் 10 பில்லியன் மதிப்பில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.95,000 கோடியில் மொத்தம் 1,20,000 ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. டெஸ்லா உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் இந்த ரோபோ டேக்ஸி நெட்வொர்க் அம்சத்தை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய ஊபர் திட்டமிட்டுள்ளது.
<h3>15 நகரங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டம்</h3>
2026 ஆம் ஆண்டு 15 நகரங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய ஊபர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத கார்களை இயக்கும் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக உயரும் நோக்கில் ஊபர் பயணம் செய்துக்கொண்டு உள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த சேவை இல்லாத நிலையில், முதல் முறையாக இந்த சேவையை ஊபர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை 24 மணி நேரம் மூடிய மெட்டா.. காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/meta-blocked-several-whatsapp-users-account-for-24-hours-to-review-95743.html</link>	
		<pubDate>Tue, 04 Aug 2026 17:42:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/meta-blocked-several-whatsapp-users-account-for-24-hours-to-review-95743.html</guid>
		            
			

    	<description><![CDATA[Meta Blocked WhatsApp Accounts | மெட்டா நிறுவனம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை முடக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக பயனர்கள் 24 மணி நேரம் தங்களது வாட்ஸ்அப்பில் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/whatsapp-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை 24 மணி நேரம் மூடிய மெட்டா.. காரணம் என்ன?" /></figure>உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டாவின் <strong>(Meta)</strong> வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong> உள்ளது. சிறிது நேரம் வாட்ஸ்அப் செயலி முடங்கினாலே பலரும் கடும் சிரமங்களை சந்திப்பர். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சில பயனர்களுக்கு 24 மணி நேரம் வாட்ஸ்அப் செயலி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயனர்களுக்கு 24 மணி நேரம் வாட்ஸ்அப் செயலி முடங்கியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளை முடக்கிய மெட்டா - காரணம் என்ன?</h3>
இந்தியா மட்டுமன்றி, உலக அளவில் உள்ள ஏராளமான பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை மெட்டா முடக்கம் செய்துள்ளது. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த 24 மணி நேர முடக்கத்தால் பயனர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். கணக்கை முடக்குவதற்கு முன்னதாக தகவல் தெரிவிக்காத மெட்டா, கணக்கு முடக்கம் செய்யப்பட்ட பிறகு 24 மணி நேர Review-க்கு பிறகே கணக்கை பயன்படுத்த முடியும் என்று பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/is-whatsapp-introducing-age-restriction-feature-why-the-company-asking-age-to-indian-users-95148.html">WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?</a>
<h3>அனைத்து அம்சங்களுக்கும் தற்காலிக தடை</h3>
நேற்று (ஆகஸ்ட் 03, 2026) இரவு 8 மணி அளவில் பயனர்கள் இந்த சிக்கலை எதிர்க்கொண்டுள்ளனர். வாட்ஸ்அப் செயலியை பயனர்கள் திறக்க முயற்சி செய்த நிலையில், அவர்களால் குறுஞ்செய்தி அனுப்புவது, பெறுவது உள்ளிட்ட எந்தவித சேவைகளையும் பெற முடியாமல் போயுள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் உள்ள அனைத்து சேவைகள் மற்றும் வசதிகள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/oneplus-n6x-smartphone-launched-in-india-with-amazing-feature-and-in-a-budget-friendly-range-95015.html">அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. முழு விவரம் இதோ!</a>
<h3>மெட்டாவின் செயலுக்கு பயனர்கள் கடும் அதிர்ச்சி</h3>
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மெட்டா மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மெட்டாவின் இந்த நடவடிக்கையில் தங்களது தினசரி வாழ்க்கை மற்றும் தொழில் உள்ளிட்டவை கடும் பாதிப்புக்கு உள்ளானதாக பலரும் சமூக ஊடகங்களில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி யுபிஐ இலவசம் இல்லை.. எம்டிஆர் கட்டணத்தை அறிமுகம் செய்ய அரசு தீவிரம்.. யார் யாருக்கு பொருந்தும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/central-government-of-india-planning-to-introduce-merchant-discount-rate-in-upi-what-will-change-95684.html</link>	
		<pubDate>Tue, 04 Aug 2026 14:50:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/central-government-of-india-planning-to-introduce-merchant-discount-rate-in-upi-what-will-change-95684.html</guid>
		            
			

    	<description><![CDATA[Merchant Discount Rate In UPI | இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது தின்சரி பண பரிவர்த்தனை தேவைகளுக்கு யுபிஐ பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், யுபிஐ-ல் வணிகர்களுக்காக எம்டிஆர் கட்டண முறையை அரசு அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/upi-feature-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி யுபிஐ இலவசம் இல்லை.. எம்டிஆர் கட்டணத்தை அறிமுகம் செய்ய அரசு தீவிரம்.. யார் யாருக்கு பொருந்தும்?" /></figure>இந்திய பொதுமக்கள் மத்தியில் யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> பயன்பாடு மிக பரவலாக உள்ளது. பலரும் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ செயலிகள் மூலமே மேற்கொள்கின்றனர். இத்தகைய முக்கிய அம்சமாக யுபிஐ உள்ள நிலையில், யுபிஐ சேவைகளில் எம்டிஆர்<strong> (MDR - Merchant Discount Rate)</strong> கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், யுபிஐ-ல் வரவுள்ள இந்த முக்கிய கட்டண முறை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>யுபிஐ பண பரிவர்த்தனைக்கு எம்டிஆர் கட்டணத்தை விதிக்கும் மத்திய அரசு?</h3>
இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், யுபிஐ சேவைகளில் வணிகர்களுக்கான எம்டிஆர் கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்த அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசு ஏற்கனவே அமலில் உள்ள ஜீரோ எம்டிஆர் திருத்த சட்டத்தை ரத்து செய்ய புதிய மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/is-whatsapp-introducing-age-restriction-feature-why-the-company-asking-age-to-indian-users-95148.html">WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?</a>
<h3>எம்டிஆர் கட்டணம் என்றால் என்ன? - எப்படி செயல்படும்?</h3>
டிஜிட்டல் மற்றும் ரியல் டைம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கிகள் வணிகர்களிடம் கட்டணம் வசூல் செய்யும். இந்த கட்டணத்திற்கு பெயர் தான் எம்டிஆர். இந்த கட்டணம் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்படாது. நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வசூல் செய்யப்படும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/oneplus-n6x-smartphone-launched-in-india-with-amazing-feature-and-in-a-budget-friendly-range-95015.html">அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. முழு விவரம் இதோ!</a>
<h3>இந்த கட்டண முறை யாரை அதிகம் பாதிக்கும்?</h3>
இந்த கட்டண முறையால் சாதாரண பயனர்களுக்கு எந்த வித சிக்கல்களும் வராது. மாறாக வணிகர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் முறை சிக்கலாக அமையும். அதுவும் தற்போதைய நிலவரப்படி வணிக ரீதியில் பெரிய அளவில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக இந்த கட்டண முறை அமல்படுத்தப்படும். இதன் காரணமாக சாதாரன பயனர்கள் எந்த வித கட்டணமும் இன்றி வழக்கம் போல இலவசமாக யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விரைவில் தொடங்கும் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்.. ஐபோன் 17 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/iphone-17-pro-gets-huge-discount-in-flipkart-freedom-sale-2026-95572.html</link>	
		<pubDate>Mon, 03 Aug 2026 22:50:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/iphone-17-pro-gets-huge-discount-in-flipkart-freedom-sale-2026-95572.html</guid>
		            
			

    	<description><![CDATA[Flipkart Freedom Sale 2026 | ஆகஸ்ட் 08, 2026 அன்று பிளிப்கார்டின் 2026 ஆம் ஆண்டுக்கான ப்ரீடம் சேல் தொடங்க உள்ளது. பிளஸ் பயனர்களுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே சேல் சலுகைகள் கிடைக்கும். இந்த நிலையில், இந்த சேலில் ஐபோன் 17 ப்ரோவுக்கு கிடைக்ககூடிய சலுகை குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/flipkart-freedom-sale.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விரைவில் தொடங்கும் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்.. ஐபோன் 17 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி!" /></figure>உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் <strong>(e Commerce)</strong> நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் <strong>(Flipkart)</strong>, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஃப்ரீடம் சேலை <strong>(Freedom Sale)</strong> அறிவிக்கும். 2026 ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் இன்னும் ஒருசில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளிப்கார்ட் தனது 2026 ஃப்ரீடம் சேலுக்கு <strong>(Flipkart 2026 Freedom Sale)</strong> தயாராகி வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு அட்டகாசமான தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு <strong>(iPhone 17 Pro Smartphone)</strong> எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,000 வரை தள்ளுபடி</h3>
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த ப்ரீடம் சேல் ஆகஸ்ட் 08, 2026 அன்று தொடங்க உள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளிப்கார்ட் பிளாக் பயனர்கள் ஒரு நாளுக்கு முன்னதாக அதாவது ஆகஸ்ட் 07, 2026 அன்றே சேல் பயன்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேலில் மிகவும் அசத்தலான அம்சத்தை ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ பெறுகிறது. அதாவது, இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,000 வரையிலான சலுகை வழங்கப்பட உள்ளதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தீவிரமடையும் மழை-  நீரில் வாகனம் ஓட்டும்போது செய்யக்கூடாத 5 தவறுகள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/driving-in-heavy-rain-essential-safety-tips-for-flooded-roads-95251.html</link>	
		<pubDate>Sun, 02 Aug 2026 18:56:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/driving-in-heavy-rain-essential-safety-tips-for-flooded-roads-95251.html</guid>
		            
			    	<description><![CDATA[தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  இத்தகைய சூழலில், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் வழியாக வாகனம் ஓட்டும்போது சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறிய அளவிலான நீர் தேங்கியிருந்தாலும் கவனமாகக் கையாளாவிட்டால் அது வாகனத்திற்கும் நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/driving-in-heavy-rain-essential-safety-tips-for-flooded-roads-95251.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/monsoon-driving-tips-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Monsoon Driving Tips 5" /></a></dt><p>நீரில் வாகனத்தைச் செலுத்தும்போது, ​​பிரேக் டிரம் மற்றும் டிஸ்க்குகளில் ( அழுக்கு, சேறு அல்லது ஈரப்பதம் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. இது வாகனத்தின் பிரேக்கிங் திறனைப் பாதிக்கும். எனவே, நீரைக்கடந்து வந்தவுடன், வாகனத்தின் பிரேக்கை அழுத்திச் சோதித்துப் பார்க்க வேண்டும்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/driving-in-heavy-rain-essential-safety-tips-for-flooded-roads-95251.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/monsoon-driving-tips-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Monsoon Driving Tips 4" /></a></dt><p>நீரில் செல்லும்போது வாகனம் திடீரென நின்றுவிட்டால், அதை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கக்கூடாது. முடிந்தால், வாகனத்தை தள்ளிக்கொண்டு நீருக்கு வெளியே கொண்டு வர வேண்டும். நீரில் நின்றுகொண்டு வாகனத்தை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயலும்போது, ​​என்ஜினுக்குள் நீர் நுழைய வாய்ப்புள்ளது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/driving-in-heavy-rain-essential-safety-tips-for-flooded-roads-95251.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/monsoon-driving-tips-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Monsoon Driving Tips 3" /></a></dt><p>மற்றொரு முக்கியமான விஷயம், வாகனத்தின் ஏர் ஃபில்டருக்குள் நீர் நுழையாமல் பார்த்துக்கொள்வது. ஏர் ஃபில்டர் வழியாக நீர் உள்ளே சென்றால், அது நேரடியாக என்ஜினுக்குள் சென்றுவிடும். இது என்ஜினுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நாம் ஓட்டும் வாகனத்தின் ஏர் ஃபில்டர் எங்கு அமைந்துள்ளது என்பது பற்றிய அடிப்படை அறிவாவது நமக்கு இருக்க வேண்டும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/driving-in-heavy-rain-essential-safety-tips-for-flooded-roads-95251.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/monsoon-driving-tips-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Monsoon Driving Tips 2" /></a></dt><p>நீர் சைலன்சர் குழாய் வரை உயர்ந்தால், வாகனம் நின்றுபோக வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் சிக்கிக்கொண்டால், கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் வாகனத்தை அணைக்காமல்  இருப்பதுதான். நீர் தேங்கிய பகுதியைக் கடக்கும் வரை வேகத்தைக் குறைத்து, முதல் கியரில் தொடர்ந்து செல்ல வேண்டும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/driving-in-heavy-rain-essential-safety-tips-for-flooded-roads-95251.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/monsoon-driving-tips-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Monsoon Driving Tips 1" /></a></dt><p>தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்யும்போது நம் சாலைகளில் மழை நீர் தேங்குவது வழக்கம். நீரில் வாகனத்தைச் செலுத்துவதற்கு முன், நீரின் ஆழம் அல்லது மட்டம் எவ்வளவு என்பதை நாம் கணிக்க வேண்டும். அது குறித்த தெளிவான புரிதல் இல்லையென்றால், ஒருபோதும் வாகனத்தை நீருக்குள் செலுத்த முயற்சிக்கக்கூடாது. நீரின் மட்டம் வாகனத்தின் சைலன்சர் வரை மட்டுமே இருந்தால் பெரிய பிரச்சனை இருக்காது.
</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>பொள்ளாச்சி அருகே  லாரி மீது கார் மோதி கோர விபத்து  &#8211; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/5-killed-including-four-family-members-in-pollachi-truck-car-collision-95238.html</link>	
		<pubDate>Sun, 02 Aug 2026 18:02:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/5-killed-including-four-family-members-in-pollachi-truck-car-collision-95238.html</guid>
		            
			

    	<description><![CDATA[கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். குல தெய்வம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/coimbatore-car-accident-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பொள்ளாச்சி அருகே  லாரி மீது கார் மோதி கோர விபத்து  &#8211; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்" /></figure><strong>கோவை, ஆகஸ்ட் 2 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/womens-undergarments-stolen-from-coimbatore-homes-found-piled-on-apartment-terrace-in-coimbatore-95201.html" target="_blank" rel="noopener">கோவை</a> மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். கோவை மாவட்டம் மதுக்கரை எம்எல்ஏ வீதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உமா மகேஸ்வரி என்ற மனைவியும் ஆர்த்தி, இளைய மகள் நர்மதா என்ற மகள்களும் உள்ளனர்.
<h3>பொள்ளாச்சி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து</h3>
இந்த நிலையில் இவர்களது குடும்பத்தினர் மற்றும் தூரத்து உறவினரான ராமன் ஆகியோருடன் ஒரே காரில் ஆகஸ்ட் 2, 2026 இன்று உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஒரு குல தெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை கனகராஜ் ஓட்டி வந்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-dog-bite-cases-rabies-deaths-public-health-department-detailed-report-95155.html">தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!</a></strong>

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதில் சம்பவ இடத்திலேயே 5 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோமங்கலம் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கனகராஜ் உள்ளிட்ட ஐந்து பேரும் உடுமலை அருகே உள்ள குல தெய்வம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். நல்லாம்பள்ளி அருகே சென்ற போது சாலையோரம் சாலை மையத் தடுப்பில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.” என்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/police-arrested-a-hired-gang-that-had-planned-to-murder-a-rowdy-in-tiruvallur-95080.html">திருவள்ளூர் நீதிமன்றத்தில் ரவுடியை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட கூலிப்படை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை!</a></strong>

இதே போல சென்னை எண்ணூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி கண்ணன் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் ரயில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதியில் ரயில் பாதையை கடக்க ஏதுவாக பாலம் அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன் &#8220;பாஜகவின் திடீர் மூவ்!&#8221;.. தமிழக முதல்வர் விஜய்க்கு வந்த கடிதம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/karnataka-bjp-president-vijayendra-letter-to-tamilnadu-cm-vijay-mekedatu-issue-95188.html</link>	
		<pubDate>Sun, 02 Aug 2026 12:00:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/karnataka-bjp-president-vijayendra-letter-to-tamilnadu-cm-vijay-mekedatu-issue-95188.html</guid>
		            
			

    	<description><![CDATA[Karnataka BJP President Vijayendra Letter to TN CM: பெங்களூருவில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன்பாக, மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/cm-letter.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன் &#8220;பாஜகவின் திடீர் மூவ்!&#8221;.. தமிழக முதல்வர் விஜய்க்கு வந்த கடிதம்!!" /></figure><strong>பெங்களூரு, ஆகஸ்ட் 02:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijaya-prabhakaran-slams-rahul-gandhi-congress-over-cauvery-issue-95179.html" target="_blank" rel="noopener">காவிரி நதிநீர் பங்கீடு</a> மற்றும் மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், மேகதாது அணைத் திட்டத்திற்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மிக முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijaya-prabhakaran-slams-rahul-gandhi-congress-over-cauvery-issue-95179.html">காவிரி மேகதாது விவகாரத்தில் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்?.. விஜய பிரபாகரன் சரமாரி கேள்வி!!</a></strong></p>

<h3>அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன் பாஜகவின் நகர்வு:</h3>
பெங்களூருவில் காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவதற்குச் சற்று முன்பாக, கர்நாடக மாநில பாஜக சார்பில் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவிலேயே கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, தமிழக முதல்வர் விஜய்க்கு இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், "தமிழ்நாடும் கர்நாடகமும் வரலாறு, கலாச்சாரம், வணிகம் மற்றும் மக்களிடையேயான ஆழமான உறவால் பிணைக்கப்பட்ட சகோதர மாநிலங்கள் ஆகும். பெங்களூருவின் வளர்ச்சிக்குத் தமிழர்கள் எப்படிக் காரணியாக இருக்கிறார்களோ, அதேபோன்று தமிழகத்தின் வளர்ச்சியிலும் கன்னடர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
<h3>முதிர்ச்சியுடன் அணுக வேண்டும்:</h3>
கடிதத்தின் மிக முக்கிய அம்சமாக, கடந்த காலத்தில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோர் இடையே நிலவிய முதிர்ச்சியான அணுகுமுறையை பி.ஒய். விஜயேந்திரா நினைவுகூர்ந்துள்ளார். பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையையும், தமிழகத்தில் சர்வக்ஞா சிலையையும் திறந்தபோது இரு தலைவர்களும் காட்டிய ராஜதந்திர முதிர்ச்சியையும் பரஸ்பர சுமுக உறவையும் போன்று, தற்போதைய மேகதாது அணை விவகாரத்தையும் தமிழக அரசும் கர்நாடக அரசும் இணைந்து சுமுகமாக எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
<h3>காவிரி நம்மைப் பிரிப்பதற்கல்ல:</h3>
போதிய மழை இல்லாத காரணத்தால் கர்நாடக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், "காவிரி நதி இரு மாநில மக்களைப் பிரிக்கும் காரணியாக இல்லாமல், இரு மாநிலங்களையும் பிணைக்கும் பாலமாகத் திகழ வேண்டும்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/anitha-radhakrishnan-made-controversial-remarks-regarding-chief-minister-vijay-visit-to-karnataka-95048.html" target="_blank" rel="noopener">கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!</a></strong>

மேலும், மேகதாது அணைத் திட்டம் என்பது பெங்களூரு மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்று என்பதால், அத்திட்டத்திற்குத் தமிழக அரசு ஒத்துழைப்பு மனப்பான்மையோடு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், தமிழகத்திற்குரிய நியாயமான காவிரி நீர் உரிமைகளுக்குக் கர்நாடகா எப்பொழுதும் துணைநிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/is-whatsapp-introducing-age-restriction-feature-why-the-company-asking-age-to-indian-users-95148.html</link>	
		<pubDate>Sat, 01 Aug 2026 20:50:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/is-whatsapp-introducing-age-restriction-feature-why-the-company-asking-age-to-indian-users-95148.html</guid>
		            
			

    	<description><![CDATA[Is WhatsApp Introducing Age Restriction Feature | வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் வயது கட்டுப்பாட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/whatsapp-feature-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?" /></figure>உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு முக்கிய செயலியாக மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப்<strong> (WhatsApp)</strong> உள்ளது. இத்தகைய மிகவும் புகழ்பெற்ற மற்றும் அதிக பயனர்களை கொண்ட செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான், வாட்ஸ் வயது தடையை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள சில பயனர்களிடம் வாட்ஸ்அப் நிறுவனம் வயது கேட்பதாகவும், இதன் காரணமாக வயது தடை அம்சம் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் வயது கேட்கப்படுவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்திய பயனர்களிடம் வயது கேட்கும் வாட்ஸ்அப்?</h3>
இந்திய பயனர்களிடம் வாட்ஸ்அப் வயது கேட்பதாக கூறப்படுவது அபிஷேக் யாதவ் என்ற இளைஞர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட் மூலம் தொடங்கியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அந்த ஸ்கிரீன்ஷாட்டில், வாட்ஸ்அப் பயனரை தனது பிறந்த தேதியை இணைக்குமாரு கூறுகிறது. விரைவில் வரவுள்ள இந்திய அரசின் புதிய விதிக்காக  வயது கேட்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/russias-federal-security-service-charges-telegram-founder-pavel-durov-and-put-him-on-international-wanted-94368.html">டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு சர்வதேச பிடிவாரண்ட்.. காரணம் என்ன?</a>
<h3>வாட்ஸ்அப் பயனர்களின் வயதை கேட்பது ஏன்?</h3>
வாட்ஸ்அப்பில் தோன்றுவதை போல மத்திய அரசு எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் வாட்ஸ்அப் ஏன் வயதை கேட்கிறது என உங்களுக்கு சந்தேகம் வரலாம். வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களிடம் வயது கேட்பது இது முதல் முறை அல்ல. அந்த நிறுவனம் தொடர்ந்து பயனர்களிடம் வயதை கேட்டு வருகிறது. தான் அறிமுகம் செய்யும் புதிய அம்சங்களுக்காக வாட்ஸ்அப் நிறுவனம் இவ்வாறு பயனர்களிடம் வயதை கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/do-not-take-it-lite-when-your-wi-fi-speed-reduces-secure-your-network-94152.html">உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!</a>

வாட்ஸ்அப் நிறுவனம் சில பயனர்களிடம் வயதை கேட்டாலும், வயது கட்டுப்பாடு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. முழு விவரம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/oneplus-n6x-smartphone-launched-in-india-with-amazing-feature-and-in-a-budget-friendly-range-95015.html</link>	
		<pubDate>Sat, 01 Aug 2026 16:10:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/oneplus-n6x-smartphone-launched-in-india-with-amazing-feature-and-in-a-budget-friendly-range-95015.html</guid>
		            
			

    	<description><![CDATA[OnePlus N6X Smartphone Launched In India | ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/oneplus-n6x.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. முழு விவரம் இதோ!" /></figure>இந்திய ஸ்மார்ட்போன்<strong> (Smartphone)</strong> சந்தையிலும், இந்திய பொதுமக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ஒன்பிளஸ் <strong>(OnePlus)</strong>. இந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது, ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனை <strong>(OnePlus N6X Smartphone)</strong> இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன்</h3>
ஒன்பிளஸ் நிறுவனம் தனது என் சீரீஸை விரிவுப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் ஜூன் 30, 2026 அன்று தனது ஒன்பிளஸ் என்6 ஸ்மார்டோனை அறிமுகம் செய்த நிலையில், தற்போது அதே வரிசையில் இந்த ஒம்பிளஸ் என்எக்ஸ்6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரி, அழகிய டிசைன் மற்றும் அன்றாட தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/russias-federal-security-service-charges-telegram-founder-pavel-durov-and-put-him-on-international-wanted-94368.html">டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு சர்வதேச பிடிவாரண்ட்.. காரணம் என்ன?</a>
<h3>ஒன்பிளஸ் என்6எக்ஸ் - விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">OnePlus N6x launched in India for ₹18999 (4GB+64GB)</p>
• 6.8" HD+ 120Hz LCD Display
• Dimensity 6360 Apex
• LPDDR4X + eMMC 5.1
• 13MP rear camera
• 5MP front
• 7000mAh battery
• 15W charging
• 5300mm² VC Cooling
• IP64
• 3.5mm Jack
• Side-mounted Fingerprint <a href="https://t.co/gSvRF6ZNau">pic.twitter.com/gSvRF6ZNau</a>

— OPlus Club (@OnePlusClub) <a href="https://x.com/OnePlusClub/status/2083119179121737900?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote>
இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் HD + LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கண் பாதுகாப்பு மோட், நேச்சுரல் கலர் மோட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 ஏபெக்ஸ் பிராசசர் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/do-not-take-it-lite-when-your-wi-fi-speed-reduces-secure-your-network-94152.html">உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!</a>

இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான 7,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தாலே 2.5 நாட்களுக்கு ஸ்மார்ட்போனை பயன்படுத்தப்படும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மின்சார ஸ்கூட்டரை கழுவும்போது உஷார்&#8230; இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-wash-your-electric-scooter-the-right-way-essential-tips-to-avoid-damage-94907.html</link>	
		<pubDate>Fri, 31 Jul 2026 21:44:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-wash-your-electric-scooter-the-right-way-essential-tips-to-avoid-damage-94907.html</guid>
		            
			

    	<description><![CDATA[.  பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இவற்றின் பராமரிப்புச் செலவு குறைவு என்றாலும், இவற்றைக் கையாளும்போது சிறப்பு கவனம் தேவை. வாகனத்தைக் கழுவும்போதுதான் மிக அதிக கவனம் தேவைப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பாதுகாப்பாக எப்படிக் கழுவுவது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/electric-scooter-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மின்சார ஸ்கூட்டரை கழுவும்போது உஷார்&#8230; இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க" /></figure>இன்று பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் <a href="https://www.tv9tamilnews.com/technology/ampere-magnus-g-max-electric-two-wheeler-launched-best-for-family-users-92346.html" target="_blank" rel="noopener">எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்</a> ஒரு அங்கமாகிவிட்டன. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாட தொடங்கியிருக்கிறார்கள். மேலும் இது சுற்றுச்சூழல் மாசடைதலையும் வெகுவாக குறைக்கும் என்பதால் இது சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.  பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இவற்றின் பராமரிப்புச் செலவு குறைவு என்றாலும், இவற்றைக் கையாளும்போது சிறப்பு கவனம் தேவை. வாகனத்தைக் கழுவும்போதுதான் மிக அதிக கவனம் தேவைப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பாதுகாப்பாக எப்படிக் கழுவுவது என்று பார்ப்போம்.
<h3>பெட்ரோல் ஸ்கூட்டரை கழுவும்போது கவனிக்க வேண்டியவை</h3>
எலக்ட்ரிக் ஸ்கூட்டரைக் கழுவுவதற்கு முன் அதன் மின் இணைப்பை முறையாக அணைக்க வேண்டும். சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும்போது ஒருபோதும் வாகனத்தைக் கழுவக்கூடாது. சார்ஜிங் போர்ட்டின் மூடி முழுமையாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனம் ஓட்டி வந்த உடனேயே அதைக் கழுவக்கூடாது. பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவை நன்கு குளிர்ந்த பிறகு கழுவ வேண்டும். சுவிட்சுகள் மற்றும் சார்ஜிங் போர்ட்கள் மீது நேரடியாகத் தண்ணீரைச் பீய்ச்சி அடிக்கக்கூடாது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/do-not-take-it-lite-when-your-wi-fi-speed-reduces-secure-your-network-94152.html">உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!</a></strong>

அதிக அழுத்தத்துடன் தண்ணீரைச் செலுத்தக்கூடாது. முடிந்தவரை 'பிரஷர் வாஷர்' போன்ற அதிக அழுத்தத்துடன் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கருவிகளைப் பயன்படுத்தாமல் கழுவுவது நல்லது. ஏனெனில், ஏதேனும் காரணத்தால் உட்புற பாகங்களுக்குள் தண்ணீர் சென்றால், அவை ஷார்ட் சர்க்யூட் ஆகி பழுதடைய வாய்ப்புள்ளது. பேட்டரி பேக், மோட்டார் மற்றும் கன்ட்ரோலர் உள்ள பாகங்களின் மீது நேரடியாகத் தண்ணீரை ஊற்றக்கூடாது. வாகனத்தை சென்டர் ஸ்டாண்ட்டில் நிறுத்தி வைத்துக் கழுவுவது சிறந்தது. ஹப் மோட்டார் உள்ள பகுதியில் அதிக சேறு படிந்திருந்தால், அதை ஒரு பிரஷ் மூலம் அகற்றுவது நல்லது.

ஸ்கூட்டரில் பெல்ட் டிரைவ் அமைப்பு இருந்தால், அங்கேயும் அதேபோல பிரஷ்ஷைப் பயன்படுத்துவது சிறந்தது. அந்த மாடலில் டிஸ்க் பிரேக்குகள் இருந்தால், அப்பகுதியைக் கழுவும்போது கூடுதல் கவனம் தேவை. வீட்டில் பயன்படுத்தும் சாதாரண ஷாம்பு அல்லது சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வாகனங்களைக் கழுவுவதற்கான பிரத்யேக ஷாம்பு இல்லையென்றால், வெறும் தண்ணீரை ஊற்றியே அப்பகுதியைச் சுத்தம் செய்யலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/google-lets-you-sign-in-with-a-selfie-video-here-is-how-the-new-feature-works-93475.html">கூகுள் பாஸ்வேர்டை மறந்துட்டிங்களா? இனி செல்ஃபி மூலம் லாகின் செய்யலாம்! – எப்படி தெரியுமா?</a></strong>

கழுவிய உடனேயே ஸ்கூட்டரை இயக்க முயற்சிக்காதீர்கள். வாகனத்தின் சுவிட்ச் பகுதி, சாவி துளை மற்றும் சார்ஜிங் போர்ட் பகுதி ஆகியவற்றை மைக்ரோஃபைபர் துணியால் துடைக்க வேண்டும். அதன் பிறகு, ஸ்கூட்டரை குறைந்தது பத்து நிமிடங்களாவது அப்படியே விட்டுவிட வேண்டும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பொருளை வாங்கிக்கொண்டு பொறுமையாக கட்டணம் செலுத்தலாம்.. Pay Later அம்சத்தை அறிமுகம் செய்த பிளிப்கார்ட்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/flipkart-introduced-pay-later-feature-know-how-it-works-94773.html</link>	
		<pubDate>Fri, 31 Jul 2026 14:51:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/flipkart-introduced-pay-later-feature-know-how-it-works-94773.html</guid>
		            
			

    	<description><![CDATA[Flipkart Introduced Pay Later Feature | உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள பிளிப்கார்ட் தனது பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பொருட்களை வாங்கிக்கொண்டு கட்டணத்தை பிறகு செலுத்தும் பே லேட்டர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/flipkart-pay-later.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பொருளை வாங்கிக்கொண்டு பொறுமையாக கட்டணம் செலுத்தலாம்.. Pay Later அம்சத்தை அறிமுகம் செய்த பிளிப்கார்ட்!" /></figure>தற்போதைய சூழலில் இந்திய பொதுமக்கள் மத்தியில் மாத தவணை<strong> (EMI - Every Month Installment)</strong> முறை தான் பரவலாக காணப்படுகிறது. ஒரு பொருளை வாங்கிவிட்டு அதற்கு மாதம் மாதம் கட்டணம் செலுத்துவது என்பது நிதி சுமையை குறைப்பதாக கருதம் பொதுமக்கள் இந்த மாத தவணை முறையை பயன்படுத்துகின்றனர். வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள், வீடு, நிலம் என அனைத்தும் மாத தவணை முறையில் கிடைக்கின்றது. இந்த நிலையில் தான், உலகின் மிகவும் பிரபலாமகா இ காமர்ஸ் <strong>(e Commerce)</strong> நிறுவனமாக பிளிப்கார்ட் <strong>(Flipkart)</strong> நிறுவனமும் இந்த மாத தவணை முறையை கையில் எடுத்துள்ளது.
<h3>மாத தவணை முறையை அறிமுகம் செய்யும் பிளிப்கார்ட்</h3>
பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஃபிரீடம் சேல்<strong> (Flipkart Freedom Sale)</strong> விரைவில் தொடங்க உள்ளது. ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று பிளிப்கார்ட் இந்த சேலை நடத்தும். அந்த வகையில் , 2026 ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினத்துக்காகவும் இந்த சேலை நடத்தும் பணிகளை பிளிப்கார்ட் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான், பிளிப்கார்ட் பே லேட்டர் <strong>(Flipkart Pay Later)</strong> அம்சத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/can-you-get-gold-loan-for-18k-gold-jewellery-know-how-it-works-94661.html">Gold : 18 காரட் தங்கத்திற்கு நகைக் கடன் கிடைக்குமா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>
<h3>பொருளை வாங்கிக்கொண்டு மாத தவணையில் கட்டணம் செலுத்தலாம்</h3>
இந்த அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டு, மாத தவணை முறையில் திருப்பி செலுத்தலாம். இந்த அம்சத்தை பார்ட்னர்ஷிப் உடன் பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பிளிப்கார்ட், மின்த்ரா மற்றும் பிளிப்கார்ட் மினியூட்ஸ் ஆகியவற்றின் மூலம் இந்த அம்சத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அம்சத்தை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்கள், விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொள்ள முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/do-this-before-july-31st-2026-in-ration-card-to-get-free-rice-94656.html">இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. ஜூலை 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது!</a>
<h3>மூன்று வழிகளில் பேமெண்ட் செய்யலாம்</h3>
பிளிப்கார்டின் இந்த பே லேட்டர் அம்சத்தை பயன்படுத்தி மூன்று வழிகளில் பணம் செலுத்தலாம். இந்த அம்சம் பயனர்கள் பணத்தை திருப்பி செலுத்த மொத்தம் 30 நாட்கள் கால அவகாசம் வழங்குகிறது. இந்த மூன்று ஆப்ஷன்கள் மூலம், கட்டணத்தை மூன்று சம பங்காக பிரித்து செலுத்த முடியும். அதிக மதிப்பு கொண்ட பொருட்களை வாங்கினால் மூன்று முதல் 12 மாதங்கள் வரை பிளிப்கார்ட் மாத தவணை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி யுபிஐ செயலிகளில் முழு மொபைல் எண் தெரியாது.. விரைவில் அமலுக்கு வரும் முக்கிய அம்சம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/full-mobile-number-will-not-shown-in-upi-new-feature-will-be-implement-soon-94670.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 23:35:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/full-mobile-number-will-not-shown-in-upi-new-feature-will-be-implement-soon-94670.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Safety Feature For UPI | யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்வது இந்தியர்கள் மத்தியில் மிகவும் பரவலாக காணப்படுகிறது. இந்த நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில், பயனர்களின் பாதுகாப்புக்காக மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/upi-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி யுபிஐ செயலிகளில் முழு மொபைல் எண் தெரியாது.. விரைவில் அமலுக்கு வரும் முக்கிய அம்சம்!" /></figure>இந்தியா முழுவதும் யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> பண பரிவர்த்தனை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரையும், நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரையும் என அனைத்து இடங்களில் யுபிஐ பண பரிவர்த்தனை புழக்கத்தில் உள்ளது. இவ்வாறு அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் முக்கிய அம்சமாக இந்த யுபிஐ பண பரிவர்த்தனை மாறி வரும் நிலையில், அது தொடர்பான பல்வேறு முக்கிய மாற்றங்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் <strong>(NPCI - National Payment Corporation Of India)</strong> மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், தேசிய கொடுப்பனவு கழகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து  விரிவாக பார்க்கலாம்.
<h3>யுபிஐ பண பரிவர்த்தனை - என்சிபிஐ வெளியிட்ட வழிகாட்டுதல்கள்</h3>
இந்தியாவில்  கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல்வேறு யுபிஐ செயலிகள் உள்ளன. இந்த செயலிகளை பயன்படுத்தி நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், யுபிஐ பயன்படுத்தும் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தேசிய கொடுப்பனது கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, <strong>Moneycontrol</strong> வெளியிட்டுள்ள செய்தியில் செப்டம்பர் 04, 2026-க்குள் வங்கிகள் மற்றும் செயலிகள் தேவையான தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/facebook-introduced-human-verification-badge-to-find-which-account-is-not-ai-93544.html"> ஏஐ கணக்குகளை கண்டறிய Human Verification Badge அறிமுகம் செய்த ஃபேஸ்புக்.. சிறப்பு அம்சம் என்ன?</a>
<h3>முழு மொபைல் எண் திரையில் தோன்றாது</h3>
இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில் பயனர்களின் முழு மொபைல் எண் திரையில் தோன்றாது. அதாவது, யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போதோ அல்லது  பெறும்போதோ அவர்களின் முழு மொபைல் எண்களும் தோன்றாது. அதற்கு பதிலாக மொபைல் எண்ணின் கடைசி நான்கு எண்கள் மட்டுமே திரையில் தோன்றும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/google-lets-you-sign-in-with-a-selfie-video-here-is-how-the-new-feature-works-93475.html">கூகுள் பாஸ்வேர்டை மறந்துட்டிங்களா? இனி செல்ஃபி மூலம் லாகின் செய்யலாம்! – எப்படி தெரியுமா?</a>

இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதாக உள்ளது. இவ்வாறு முழு மொபைல் எண்கள் திரையில் தெரியாமல் இருப்பது, தேவையில்லாமல் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுவதை தடுக்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரூ.40,000 தள்ளுபடியுடன் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா.. பிளிப்கார்ட் அசத்தல் சலுகை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-s25-ultra-smartphone-gets-40000-discount-in-flipkart-94543.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 15:31:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-s25-ultra-smartphone-gets-40000-discount-in-flipkart-94543.html</guid>
		            
			

    	<description><![CDATA[Samsung Galaxy S25 Ultra Smartphone | சாம்சங் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு முன்னதாக அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் தான் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது பிளிப்கார்ட் ரூ.40,000 சலுகை வழங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/samsung-galaxy-s25-ultra-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரூ.40,000 தள்ளுபடியுடன் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா.. பிளிப்கார்ட் அசத்தல் சலுகை!" /></figure>இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களுக்கு <strong>(Apple iPhones)</strong> அடுத்து பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் சாம்சங்க்<strong> (Samsung).</strong> இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில், ஐபோன்களில் இருப்பதை போலவே பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். அம்சத்தில் மட்டுமன்றி, விலையிலும் ஐபோன்களுக்கு இணையாம சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இருக்கும். இந்த நிலையில் தான், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு<strong> (Samsung Galaxy S25 Ultra Smartphone)</strong> ரூ.40,000 சலுகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் அசத்தல் சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>சாம்சங் கேலஸ்கி எஸ்25 அல்டா ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் சலுகை</h3>
சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னதாக சாம்சங் நிறுவனம் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அப்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,29,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான், பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.86,778-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வங்கி சலுகைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை மேலும் குறைவாக வெறும் ரூ.82,778-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/10-best-ai-tools-every-student-should-use-for-smarter-learning-93635.html">இனி ஈஸியா படிக்கலாம்! மாணவர்களுக்கான 10 சிறந்த ஏஐ கருவிகள்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு சர்வதேச பிடிவாரண்ட்.. காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/russias-federal-security-service-charges-telegram-founder-pavel-durov-and-put-him-on-international-wanted-94368.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 22:25:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/russias-federal-security-service-charges-telegram-founder-pavel-durov-and-put-him-on-international-wanted-94368.html</guid>
		            
			

    	<description><![CDATA[Russia Put Pavel Durov As International Wanted | உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக டெலிகிராம் உள்ளது. இந்த நிலையில், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யா சர்வதே பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/pavel-durov.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு சர்வதேச பிடிவாரண்ட்.. காரணம் என்ன?" /></figure>உலக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலிகளில் ஒன்றாக டெலிகிராம் <strong>(Telegram)</strong> உள்ளது. இந்த செயலியில் அதிக நபர்களை கொண்ட பெரிய குழுக்களை நிர்வகிக்கலாம், பெரிய ஃபைல்களை பரிமாற்றம் செய்யலாம். இவ்வாறு பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டு இருப்பதன் காரணமாக பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். என்னதான் டெலிகிராம் செயலிக்கு இத்தகைய சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், இந்த செயலி குறித்து தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வருவது தொடர்கதையாக உள்ளது.
<h3>டெலிகிராம் செயலிக்கு மீண்டும் ஒரு ஆபத்து</h3>
குறிப்பாக இந்தியாவில் சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலம் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நீட் மறுதேர்வின் போது சில நாட்கள் இந்தியாவில் டெலிகிராம் செயலி முடக்கம் செய்யப்பட்டு இருந்தது. இத்தகைய தொடர் சவால்களை டெலிகிராம் செயலி எதிர்க்கொண்டு வரும் நிலையில், தற்போது அந்த செயலிக்கு மீண்டும் ஒரு ஆபத்து எழுந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/google-lets-you-sign-in-with-a-selfie-video-here-is-how-the-new-feature-works-93475.html">கூகுள் பாஸ்வேர்டை மறந்துட்டிங்களா? இனி செல்ஃபி மூலம் லாகின் செய்யலாம்! – எப்படி தெரியுமா?</a>
<h3>பயங்கரவாத செயல்களுக்கு உடந்தை - டெலிகிராம் நிறுவனர் மீது குற்றச்சாட்டு</h3>
டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் <strong>(Telegram Founder Pavel Durov)</strong> மீது ரஷ்ய பாதுகாப்பு அமைப்பான<strong> (FSB - Federal Security Service)</strong> பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது, பாவெல் துரோவ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக அது கூறியுள்ளது. குறிப்பாக, டெலிகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பான செய்தி பரிமாற்ற அம்சத்தை பயன்படுத்தி பயங்கரவாத அமைப்புகள் தங்களின் திட்டங்களை நிறைவேற்றவும், ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தியதாக ரஷ்ய உளவு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/people-can-also-make-payment-in-flight-too-nfc-upi-payment-method-will-introduce-soon-93374.html">UPI : இனி விமானத்திலும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!</a>

இத்தகைய பகிரங்க குற்றச்சாட்டை ரஷ்யா பாவெல் துரோவ் மீது வைத்துள்ள நிலையில், அவர் மீது சர்வதே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு டெக் உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/do-not-take-it-lite-when-your-wi-fi-speed-reduces-secure-your-network-94152.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 17:45:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/do-not-take-it-lite-when-your-wi-fi-speed-reduces-secure-your-network-94152.html</guid>
		            
			

    	<description><![CDATA[Your Wi Fi Network Can Hack By Hackers | பலரும் தடையில்லாத மற்றும் அதிவேக இணைய சேவைக்காக வைஃபை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அந்த வைஃபையை திருடி வேறு ஒருவர் பயன்படுத்துவதற்கான ஆபத்துகள் உள்ளன. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/wi-fi-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!" /></figure>தற்போதைய சூழலில் உலகமே உள்ளங்கையில் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இணைய வசதி மூலம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவரை கூட மிக எளிதாக தொடர்புக்கொள்ள முடியும். வீட்டில் இருந்து ஷாப்பிங் செய்வது, உணவு ஆர்டர் செய்பது, திரைப்படம் பார்ப்பது என அனைத்து சேவைகளையும் பெற இணைய வசதி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதற்காக பலரும் மொபைல் டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.

மொபைல் டேட்டாவில் குறிப்பிட்ட அளவு மட்டுமே டேட்டாவை பயன்படுத்த முடியும் என்ற சூழலில், தடையில்லாமல் இணைய சேவையை பயன்படுத்த பலரும் வைஃபை வசதியை பெறுகின்றனர். ஆனால், அந்த வைஃபை இணைய சேவை சத்தமில்லாமல் திருடப்படுவது குறித்து யாரும் கண்டுக்கொள்வதில்லை. இந்த நிலையில், வைஃபை இணைய சேவையை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இணைய வேகம் குறைவதற்கான முக்கிய காரணங்கள்</h3>
உங்கள் வீட்டில் எந்தவித காரணங்களும் இல்லாமல் திடீரென உங்களது வைஃபை இணைய வேகம் குறைந்தால் அதனை மிகவும் எளியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், இந்த சூழலில்  உங்களுக்கு தெரியாமல் உங்கள் வைஃபை இணைய சேவையை வேறு ஒருவர் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இதேபோல வீட்டில் நள்ளிரவு நேரத்தில் நீங்கள் எந்த ஒரு மின்சாதன பொருட்களை பயன்படுத்தாத போதும், உங்களது வைஃபை ரவுட்டரில் இருக்கும் விளக்குகள் விட்டு விட்டு எரிந்தாலும் உங்களது வைஃபை நெட்வொர்க்கை வேறு ஒருவர் பயன்படுத்துகிறார் என்று அர்த்தம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/people-can-also-make-payment-in-flight-too-nfc-upi-payment-method-will-introduce-soon-93374.html">UPI : இனி விமானத்திலும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!</a>

நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் டேட்டா அளவை விட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்றாலும் உங்களது வைஃபை டேட்டாவை வேறு ஒருவர் பயன்படுத்துகிறார் என்று அர்த்தம். தற்போது அனைத்தையும் மிக எளிதாக ஹாக் செய்ய முடிகிறது. அதன்படி, ஹேக்கர்கள் மிக எளிதாக உங்களது வைஃபையை ஹேக் செய்துவிடுவார்கள். இதன் காரணமாக உங்களது இணைய வேகம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, வங்கி விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடைபெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/hp-planning-to-introduce-smart-lpg-gas-cylinders-to-avoid-accidents-92975.html">கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தடுக்க அதிரடி நடவடிக்கை.. விரைவில் வருகிறது ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்.. சிறப்புகள் என்ன என்ன?</a>

எனவே உங்கள் வைஃபை இணைய சேவை குறையும்போது அது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>iPhone 15 : வெறும் ரூ.50,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15.. பிளிப்கார்டின் இந்த சலுகை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/apple-iphone-15-selling-for-just-50000-rupees-in-flipkart-94148.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 21:46:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/apple-iphone-15-selling-for-just-50000-rupees-in-flipkart-94148.html</guid>
		            
			

    	<description><![CDATA[Apple 15 Smartphone Discount In Flipkart | ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு சலுகையை பயன்படுத்தி ஆப்பிள் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.50,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/apple-15.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="iPhone 15 : வெறும் ரூ.50,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15.. பிளிப்கார்டின் இந்த சலுகை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>2026 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்கள் <strong>(Smartphone)</strong> மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள்<strong> (Apple)</strong>, சாம்சங் <strong>(Samsung)</strong>, ஒன்பிளஸ் <strong>(OnePlus)</strong>, நத்திங் <strong>(Nothing),</strong> போக்கோ<strong> (Poco)</strong> மற்றும் ஜியோமி <strong>(Xiaomi)</strong> ஆகிய நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றின் விலைகளை உயர்த்தியுள்ளது. ஆப்பிள் ஏற்கனவே விலையை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்து அறிமுகம் செய்ய உள்ள தனது ஆப்பிள் ஐபோன் 18 விலையையும்  உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆப்பிள் பயனர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
<h3>ஆப்பிள் ஐபோனை வெறும் ரூ.50,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்</h3>
சிப்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு மத்தியில் நீங்கள் வெறும் ரூ.50,000-க்கு ஆப்பிள் ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பழையது தான். ஐபோன் 17 மற்றும் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் இதில் இல்லை தான். ஆனால், இந்த ஸ்மார்ட்போன் மிக குறைந்த பட்ஜெட் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/hp-planning-to-introduce-smart-lpg-gas-cylinders-to-avoid-accidents-92975.html">கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தடுக்க அதிரடி நடவடிக்கை.. விரைவில் வருகிறது ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்.. சிறப்புகள் என்ன என்ன?</a>
<h3>ஐபோன் 15-க்கு அசத்தல் சலுகை வழங்கும் பிளிப்கார்ட்</h3>
ஐபோன் 15 ஸ்மார்ட்போன் <strong>(Apple iPhone 15)</strong> இந்தியாவில் ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.58,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் அல்லது எஸ்பிஐ கிரெடிட் கார்டு ஆகிய கார்டுகளை பயன்படுத்தி கூடுதலாக ரூ.5,795 பெறலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/bmw-is-not-vehicle-company-what-product-was-the-company-producing-during-the-initial-times-93298.html">BMW கார் நிறுவனம் இல்லையா?.. அந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் எதனை தயாரித்தது தெரியுமா?</a>

இதன் மூலம் ரூ.79,900 மதிப்புள்ள இந்த ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.53,105-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி ஈஸியா படிக்கலாம்! மாணவர்களுக்கான 10 சிறந்த ஏஐ கருவிகள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/10-best-ai-tools-every-student-should-use-for-smarter-learning-93635.html</link>	
		<pubDate>Sun, 26 Jul 2026 17:11:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/10-best-ai-tools-every-student-should-use-for-smarter-learning-93635.html</guid>
		            
			

    	<description><![CDATA[இன்று மாணவர்களின் படிக்கும் முறை முன்பை விட நவீனமாக மாறி வருகிறது. புத்தகங்களை மட்டுமே நம்பியிருப்பதற்குப் பதிலாக, மாணவர்கள் இப்போது ஏஐ கருவிகளைப் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.  இந்த கட்டுரையில் மாணவர்களின் படிப்பிற்கு உதவக்கூடிய 10 சிறந்த ஏஐ கருவிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/ai-tools-for-studying.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி ஈஸியா படிக்கலாம்! மாணவர்களுக்கான 10 சிறந்த ஏஐ கருவிகள்" /></figure>இன்று மாணவர்களின் படிக்கும் முறை வேகமாக மாறி வருகிறது. புத்தகங்களை மட்டுமே நம்பியிருப்பதற்குப் பதிலாக, மாணவர்கள் இப்போது ஏஐ கருவிகளைப் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர். சிக்கலான பாடங்களை எளிய மொழியில் விளக்குவது, குறிப்புகளை உருவாக்குவது, ஆராய்ச்சி செய்வது, பிரசன்டேஷன் தயாரிப்பது மற்றும் அசைன்மென்ட்கள் எழுதுவது போன்ற பணிகளுக்கு இந்தக் கருவிகள் உதவுகின்றன. இந்த ஏஐ கருவிகளை சரியாகப் பயன்படுத்தும்போது, ​​இவை படிப்பை எளிதாக்குவதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன. அத்தகைய 10 பயனுள்ள AI கருவிகள் குறித்து பார்க்கலாம்.
<h3>மாணவர்களுக்கான 10 சிறந்த ஏஐ கருவிகள்</h3>
<h3>1. சாட்ஜிபிடி (ChatGPT)</h3>
கடினமான கேள்விக்கான விடையைப் புரிந்துகொள்வது, கணிதம் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பது, வரலாற்று நிகழ்வுகளை சுருக்கமாக அறிவது அல்லது கோடிங் கற்றுக்கொள்வது என எதுவாக இருந்தாலும், சாட்ஜிபிடி விஷயங்களை எளிய விளக்கங்களுடன் நமக்கு பதிலளிக்கும் இது 24 மணிநேரமும் செயல்படும் ஒரு தனிப்பட்ட ஆசிரியராகச் செயல்படும்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/technology/bmw-is-not-vehicle-company-what-product-was-the-company-producing-during-the-initial-times-93298.html"> BMW கார் நிறுவனம் இல்லையா?.. அந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் எதனை தயாரித்தது தெரியுமா?</a></strong>
<h3>2. நோட்புக் எல்எம் (NotebookLM)</h3>
கூகுளின் இந்த ஏஐ கருவி, பிடிஎஃப்கள், குறிப்புகள் மற்றும் கூகுள் டாக்ஸில் உள்ளவற்றைப் படித்து, அதனடிப்படையில் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. மேலும், ஒரு முழுப் பாடப்பகுதியையும் ஆடியோ பாட்காஸ்டாக மாற்றும் திறன் கொண்டது; இது கற்றல் செயல்முறையை இன்னும் எளிதாக்குகிறது.
<h3>3. கிராமர்லி (Grammarly)</h3>
அசைன்மென்ட்கள், மின்னஞ்சல்கள் அல்லது கட்டுரைகளை எழுதும்போது, ​​எழுத்துப்பிழை, இலக்கணம் மற்றும் மொழி சார்ந்த பிழைகளைச் சரிசெய்ய கிராமர்லி உதவுகிறது. இது உங்கள் எழுத்து நடையைத் தெளிவானதாகவும் தொழில்முறைத் தரத்துடனும் மாற்ற உதவும்.
<h3>4. QuillBot</h3>
ஒரே பாராகிராஃபை எளிமையான அல்லது வேறுபட்ட சொற்களைப் பயன்படுத்தி மீண்டும் எழுத வேண்டிய சூழல் அடிக்கடி ஏற்படலாம். புதிய சொற்களைப் பயன்படுத்தி அதே பாராகிராஃபை இன்னும் சிறப்பாக மாற்றி எழுத இந்க ஏஐ டூல் உதவுகிறது.
<h3>5. பெர்ப்லெக்ஸிட்டி ஏஐ (Perplexity AI)</h3>
இது கேள்விகளுக்கு நேரடிப் பதில்களை வழங்கும் ஏஐ சார்ந்த தேடல் கருவியாகும். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், பதிலுடன் சேர்த்துத் தகவல் பெறப்பட்ட இணையதளங்களின் விவரங்களையும் இது வழங்குகிறது. இதனால் ஆராய்ச்சி செய்வது எளிதாகிறது.
<h3>6. Wolfram Alpha</h3>
கணிதம், இயற்பியல் அல்லது அறிவியல் பாடங்களில் உள்ள சிக்கலான கேள்விகளைக் கையாள்வதில் சிரமம் இருந்தால், இந்த ஏஐ டூல் முழுமையான மற்றும் படிப்படியான தீர்வுகளை வழங்குகிறது. இது கணக்குகளை அல்லது சிக்கல்களைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது.
<h3>7. Otter.ai</h3>
வகுப்புகள் அல்லது ஆன்லைன் விரிவுரைகளின்போது எல்லாவற்றையும் குறிப்பெடுத்து எழுத வேண்டிய அவசியமில்லை. இந்த ஏஐ டூல் ஆடியோவைக் கேட்டு, அதைத் தானாகவே டெக்ஸ்ட் வடிவில் நோட்ஸ்களாக குறிப்புகளாக மாற்றி தரும்.
<h3>8. Anki</h3>
இந்த ஏஐ கருவி டிஜிட்டல் ஃப்ளாஷ் கார்டுகளை உருவாக்குவதன் மூலம் மாணவர்கள் படிப்பதற்கு உதவுகிறது. இது ஃபார்முலா, டிக்ஷனரி, முக்கியத் தகவல்களை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்வதை எளிதாக்கும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/flipkart-soon-to-launch-food-delivery-service-in-india-says-ceo-kalyan-krishnamurthy-93162.html">Swiggy, Zomato-க்கு போட்டியாக களமிறங்கும் Flipkart.. விரைவில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது!</a></strong>
<h3>9. Gamma App</h3>
பள்ளி அல்லது கல்லூரிக்காக ஒரு பிரசென்டேஷன் நீங்கள் உருவாக்க வேண்டியிருந்தால், இந்த ஏஐ டூல் சில நிமிடங்களிலேயே ஈர்க்கக்கூடிய ஸ்லைடுகளையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கித் தருகிறது. இதன் மூலம் பல மணிநேர உழைப்பு மிச்சமாகிறது.
<h3>10. Consensus</h3>
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு இந்தக் கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய லட்சக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேடி, அறிவியல் பூர்வமான தகவல்களை வழங்குகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஏஐ கணக்குகளை கண்டறிய Human Verification Badge அறிமுகம் செய்த ஃபேஸ்புக்.. சிறப்பு அம்சம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/facebook-introduced-human-verification-badge-to-find-which-account-is-not-ai-93544.html</link>	
		<pubDate>Sun, 26 Jul 2026 12:00:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/facebook-introduced-human-verification-badge-to-find-which-account-is-not-ai-93544.html</guid>
		            
			

    	<description><![CDATA[Human Verification Badge In Facebook | மெட்டாவின் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை வழங்கி வரும் நிலையில், தற்போது ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/facebook-feature.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஏஐ கணக்குகளை கண்டறிய Human Verification Badge அறிமுகம் செய்த ஃபேஸ்புக்.. சிறப்பு அம்சம் என்ன?" /></figure>செயற்கை நுண்ணறிவு<strong> (AI - Artificial Intelligence)</strong> அம்சத்தின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. தொழிலநுட்பம், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் நுழைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. சமூக ஊடகங்களை திறந்தாலே ஏஐ வீடியோக்கள், புகைப்படங்கள் தான் நிறைந்துள்ளன. இதனால், போலி எது, அசல் எது என தெரியாமல் பொதுமக்கள் குழம்புகின்றனர். இந்த நிலையில் தான், ஃபேஸ்புக் <strong>(Facebook)</strong> ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு</h3>
சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏஐ புகைப்படங்கள், வீடியோக்கள் தான் சமூக ஊடகங்கள் முழுவதும் நிறைந்துள்ளன. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்கள் தனி கணக்குகளை வைத்துள்ளதை போலவே செயற்கை நுண்ணறிவு அம்ச பங்கங்களும் வந்துவிட்டன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/flipkart-soon-to-launch-food-delivery-service-in-india-says-ceo-kalyan-krishnamurthy-93162.html">Swiggy, Zomato-க்கு போட்டியாக களமிறங்கும் Flipkart.. விரைவில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது!</a>

இதன் காரணமாக பயனர்களுக்கு பெரிய குழப்பம் ஏற்படுகிறது. இன்ஸ்டாகிராமில் வீடியோக்களின் கீழ் அது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டது என்றால் அதற்கான வாட்டர் மார்க் தோன்றும். ஆனால், ஃபேஸ்புக்கில் அத்தகைய அம்சம் இல்லை. இந்த நிலையில் தான், ஃபேஸ்புக் ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
<h3>மனிதர்களுக்கான பேட்ஜை அறிமுகம் செய்த ஏஐ</h3>
ஃபேஸ்புக்கில் எது மனிதர்களின் கணக்கு, எது ஏஐ கணக்கு என்பதை கண்டறிய புதிய அம்சத்தை ஃபேபுக் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஒரு கணக்கு ஏஐ கணக்கு இல்லை என்பதை கண்டறியும் வகையில், மனிதர்களுக்கான பிரத்யேக பேட்சை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/iqoo-z11-lite-5g-smartphone-launched-in-india-know-the-price-and-other-specifications-93196.html">அட்டகாசமான அம்சம்.. வெறும் ரூ.19,499.. இந்தியாவில் அறிமுகமானது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன்!</a>

இந்த பேட்ஜை பெறுவதற்கு பயனர்கள் செஃல்பி வீடியோ செக் செய்ய வேண்டும். அதன் மூலம் கணக்கு சோதனை செய்யப்பட்டு, இந்த பேட்ஜ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கூகுள் பாஸ்வேர்டை மறந்துட்டிங்களா? இனி செல்ஃபி மூலம் லாகின் செய்யலாம்! &#8211; எப்படி தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/google-lets-you-sign-in-with-a-selfie-video-here-is-how-the-new-feature-works-93475.html</link>	
		<pubDate>Sat, 25 Jul 2026 19:07:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/google-lets-you-sign-in-with-a-selfie-video-here-is-how-the-new-feature-works-93475.html</guid>
		            
			

    	<description><![CDATA[இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொருவருக்கும் கூகுள் கணக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நாம் கூகுள் பாஸ்வேர்டை மறந்துவிட்டால் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும்.  கூகுள் கணக்கில் லாகின் செய்வதை எளிதாக்க மேலும் ஒரு புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/google-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கூகுள் பாஸ்வேர்டை மறந்துட்டிங்களா? இனி செல்ஃபி மூலம் லாகின் செய்யலாம்! &#8211; எப்படி தெரியுமா?" /></figure>இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொருவருக்கும் <a href="https://www.tv9tamilnews.com/technology/google-maps-fuel-efficient-routes-help-save-petrol-and-diesel-costs-daily-84343.html" target="_blank" rel="noopener">கூகுள் </a>கணக்கு மிகவும் முக்கியமானது. டிஜிட்டல் உலகில் நமது முகவரியாக கூகுளின் <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-delete-unwanted-messages-in-gmail-by-bulk-step-by-step-guide-87439.html" target="_blank" rel="noopener">ஜிமெயில்</a> முகவரியைக் குறிப்பிடலாம். அந்தளவுக்கு கூகுள் கணக்கு நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால், இவ்வளவு முக்கியமான கூகுள் அக்கவுண்டின் பாஸ்வேர்டை நினைவில் கொள்வது பலருக்கும் பல சமயங்களில் சவாலாக அமைகிறது. பாஸ்வேர்டு பாதுகாப்பிற்காக கூகுள் ஏற்கனவே பல அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. இப்போது, ​​இவை அனைத்திற்கும் மேலாக, கூகுள் கணக்கில் லாகின் செய்வதை எளிதாக்க மேலும் ஒரு புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
<h3>செல்ஃபி வீடியோ மூலம் லாகின் செய்யலாம்!</h3>
பாஸ்வேர்டை நினைவில் கொள்வது சற்று கடினமான காரியம். ஆனால் செல்ஃபி எடுப்பது அவ்வளவு கடினமல்ல. இப்போது, ​​ கணக்கில் உள்நுழைவதை எளிதாக்க, செல்ஃபி அடிப்படையிலான உள்நுழைவு முறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. கணக்குகளில் லாகின் செய்வதற்கானகான ஒரு புதிய வழியாக 'செல்ஃபி வீடியோ' விருப்பத்தை கூகுள் கொண்டு வந்துள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/flipkart-soon-to-launch-food-delivery-service-in-india-says-ceo-kalyan-krishnamurthy-93162.html">Swiggy, Zomato-க்கு போட்டியாக களமிறங்கும் Flipkart.. விரைவில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது!</a></strong>

பயனர்கள் தங்கள் முகத்தைப் பயன்படுத்தி எளிதாகத் தங்கள் கணக்கை அணுகவோ அல்லது மீட்டெடுக்கவோ உதவும் 'செல்ஃபி வீடியோ' அம்சத்தை கூகுள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பாஸ்வேர்டு அல்லது பிற குறியீடுகள் இல்லாத சூழலிலோ அல்லது ஸ்மார்ட்போனை தொலைத்துவிட்ட நிலையிலோ, கணக்கை மீண்டும் பெறுவதற்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.

எதிர்காலத்தில், உங்கள் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ அல்லது உங்கள் கணக்கை அணுக முடியாவிட்டாலோ, செல்ஃபி வீடியோவை பதிவு செய்யக் கோரும் ஒரு புதிய விருப்பம் உங்களுக்குக் கிடைக்கும். இந்த புதிய அம்சத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஏற்கனவே சேமிக்கப்பட்ட வீடியோவுடன் ஒப்பிட்டுப் பார்த்து பயனரை அடையாளம் கண்டு, அக்கவுணடைத் திறப்பதற்கான அனுமதியை கூகுள் வழங்கும்.
<h3>எப்படி செய்வது?</h3>
முதலில், கூகுள் அக்கவுண்ட் செட்டிங்கிற்கு சென்று Security &amp; Sign-in என்ற ஆப்சனை கிளிக் செய்து Selfie Video என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், உங்கள் போன் கேமராவிற்கு முன் செல்ஃபி எடுக்கும் முறையில் வைத்துக்கொண்டு, உங்கள் தலையை வெவ்வேறு திசைகளில் திருப்பவும். இது உங்கள் முகத்தின் வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்து சேமிக்கும். டீப்ஃபேக் போன்ற போலி உள்நுழைவு முயற்சிகளைத் தடுக்க இது உதவும். இவ்வாறு சேமிக்கப்பட்ட வீடியோவையும், லாகின் செய்யும்போது வழங்கப்படும் வீடியோவையும் ஒப்பிட்டுப் பார்த்து லாகின் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/are-you-tired-of-getting-lots-of-spam-calls-follow-these-steps-to-stop-it-92754.html"> Spam Call தொல்லை கொடுக்கிறதா.. இதோ இப்படி Stop பண்ணிடலாம்.. முழு விவரம் இதோ!</a></strong>

வீடியோக்களைப் பதிவேற்றுவது நமது பிரைவசிக்கு அச்சுறுத்தல் என்று சிலர் கருதுகின்றனர். இருப்பினும், பயனர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை அளித்து இந்த புதிய வீடியோ லாகின் செய்யும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் மறைகுறியாக்கம் செய்யப்பட்டு சேமிக்கப்படும் என்றும், கணக்கு அமைப்புகளுக்குச் சென்று இந்த வீடியோவை எப்போது வேண்டுமானாலும் நீக்குவதற்கான வசதி உள்ளது என்றும் கூகிள் குறிப்பிடுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>UPI : இனி விமானத்திலும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/people-can-also-make-payment-in-flight-too-nfc-upi-payment-method-will-introduce-soon-93374.html</link>	
		<pubDate>Sat, 25 Jul 2026 12:05:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/people-can-also-make-payment-in-flight-too-nfc-upi-payment-method-will-introduce-soon-93374.html</guid>
		            
			

    	<description><![CDATA[NFC UPI Payment Method Will Introduce Soon | யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பெரிய சிக்கலாக உள்ளது தான் நெட்வொர்க் சிக்கல். இந்த நிலையில், நெட்வொர்க் சிக்கல் இல்லாமல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு அசத்தல் அம்சம் அமலுக்கு வர உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/upi-payment-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="UPI : இனி விமானத்திலும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!" /></figure>இந்தியாவில் தற்போதைய சூழலில் பெரும்பாலான மக்கள் யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> பண பரிவர்த்தனை முறையை தான் பயன்படுத்துகின்றனர். சிறிய மலிகைக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை சிறிய அளவிலான தொகை முதல் பெரிய அளவிலான தொகை வரை யுபிஐ மூலம் மக்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு பொதுமக்களால் பரவலாக யுபிஐ பண பரிவர்த்தனை பயன்படுத்தப்படும் நிலையில், பெரும்பாலான பயனர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. அதுதான் நெட்வொர்க் சிக்கல். பண பரிவர்த்தனை செய்யும்போது நெட்வொர்க் சிக்கல் ஏற்பட்டால் பண பரிவத்தனை தோல்வியடைவது, பாதியிலேயே நின்றுவிடுவது உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில் தான், நெட்வொர்க் வசதி இல்லாமலே யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை என்பிசிஐ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன அம்சம் அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>NFC பயன்படுத்த விரைவில் அனுமதி வழங்க உள்ள என்பிசிஐ</h3>
அதாவது மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் <strong>(NCPI - National Payment Corporation Of India)</strong>, முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் PoS டெர்மினல்களுக்கு விரைவில் ஒரு முக்கிய நிதி பரிமாற்ற ஒப்புதலை வழங்க உள்ளது. அதாவது, இந்த ஒப்புதல் மூலம், மொபைல் போனில் இருக்கும் NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.2,000 வரையிலான தொகையை பண பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/need-not-to-spend-lakhs-to-buy-iphones-apple-planning-to-introduce-lease-scheme-for-smartphones-and-other-gadgets-92871.html">இனி லட்சக்கணக்கில் பணம் செலுத்தி ஐபோன் வாங்க வேண்டாம்.. லீஸ் அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்!</a>

பேமெண்ட் NFC  மூலம் நடைபெறுவதன் காரணமாக, பண பரிவர்த்தனை செய்ய நெட்வொர்க் வசதி தேவையில்லை. ஆனால், இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பொதுமக்கள் தங்களது வேலெட்டில் பணத்தை போட வேண்டும். இது வரையில் கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொண்டு வந்தன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/india-introduced-longest-hydrogen-train-for-the-first-time-in-the-world-92794.html">உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்த இந்தியா.. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது!</a>

இந்த பேமெண்ட் முறையில் ரூ.2,000 அதிகபட்சமாக உள்ள நிலையில், நிதி மோசடிக்கான ஆபத்தும் இதில் குறைவாகவே இருக்கும். இந்த அம்சத்தின் மூலம் விமானத்தில் பயணம் செய்யும்போது கூட சுலபமாக பண பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தடுக்க அதிரடி நடவடிக்கை.. விரைவில் வருகிறது ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்.. சிறப்புகள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/hp-planning-to-introduce-smart-lpg-gas-cylinders-to-avoid-accidents-92975.html</link>	
		<pubDate>Sat, 25 Jul 2026 08:49:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/hp-planning-to-introduce-smart-lpg-gas-cylinders-to-avoid-accidents-92975.html</guid>
		            
			

    	<description><![CDATA[Smart LPG Gas Cylinders To Be Introduce Soon | தற்போதுள்ள கேஸ் சிலிண்டர்களில் இருந்து கேஸ் கசிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தான் விபத்துக்களை தடுக்க எச்பி அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/lpg.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தடுக்க அதிரடி நடவடிக்கை.. விரைவில் வருகிறது ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்.. சிறப்புகள் என்ன என்ன?" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர் <strong>(Gas Cylinder)</strong> தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வீடு, உணவகங்கள், விடுதிகள், திருமணம் மண்டபங்கள் என அனைத்து இடங்களிலும் சமையல் செய்ய கேஸ் சிலிண்டர்கள் தான் பிரதானமாக உள்ளது. விரகு அடுப்பை போல இல்லாமல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி மிக விரைவாக, சிரமமின்றி சமையல் செய்ய முடியும். ஆனால், சிறிதளவு கேஸ் கசிந்தாலும் பெரிய ஆபத்தில் சிக்க வைத்துவிடும்.
<h3>விரைவில் அறிமுமாக உள்ள ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்</h3>
இந்த நிலையில் தான், பாதுகாப்பாக முறையில் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்<strong> (Smart LPG Cylinder)</strong> அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர் என்றால் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர் என்றால் என்ன?</h3>
கேஸ் சிலிண்டர்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனமாக எச்பி ஒரு முக்கிய முடிபை கையில் எடுத்துள்ளது. அதாவது கேஸ் கசிவை உடனுக்குடன் கண்டறிந்து, பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்களை அறிமுகம் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/how-tamil-nadu-budget-works-assembly-procedures-explained-92843.html">தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!</a>
<h3>சிலிண்டர்கள் அதிக பாதுகாப்பை கொண்டு இருக்கும்</h3>
இது குறித்து கூறியுள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி துருவ் கபில், நவீன சிலிண்டர்கள் சாதாரண சிலிண்டர்களை விட அதிக பாதுகாப்பு கொண்டவையாக இருக்கும் என்று கூறியுள்ளார். சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால் அதனை உடனடியாக கண்டறிந்து அந்த சாதனமே ஒலி எழுப்பும். இவ்வாறு சிலிண்டர் ஒலி எழுப்புவதன் மூலம் ஆபத்துக்களை முன்கூட்டியே தெரிந்து விபத்துக்களை தடுக்க முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-s25-ultra-smartphone-gets-huge-discount-on-flipkart-92415.html">சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?</a>

சிலிண்டர் வெடி விபத்துக்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், அவற்றை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>BMW கார் நிறுவனம் இல்லையா?.. அந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் எதனை தயாரித்தது தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/bmw-is-not-vehicle-company-what-product-was-the-company-producing-during-the-initial-times-93298.html</link>	
		<pubDate>Fri, 24 Jul 2026 21:20:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/bmw-is-not-vehicle-company-what-product-was-the-company-producing-during-the-initial-times-93298.html</guid>
		            
			

    	<description><![CDATA[BMW Is Not Vehicle Company | தற்போதைய சூழலில் மிகப்பெரிய கார் நிறுவனமாக கருதப்படும் BMW உண்மையாகவே ஒரு கார் நிறுவனம் அல்ல. அது ஆரம்ப காலக்கட்டத்தில் விமானத்திற்கு இயந்திரங்களை தயாரித்து கொடுக்கும் நிறுவனமாக இருந்த நிலையில், தற்போது கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/bmw.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="BMW கார் நிறுவனம் இல்லையா?.. அந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் எதனை தயாரித்தது தெரியுமா?" /></figure>BMW என்பது ஒரு பிரபல கார் நிறுவன் என்ற எண்ணம் தான் பலருக்கும் உள்ளது. சாலைகளில் இந்த கார்கள் சென்றாலே வியப்பாக பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. ஒருபர் BMW கார் வைத்துள்ளார் என்றால் அவர் மிகவும் வசதியான நபர் என்ற பார்வையும் உள்ளது. BMW நிறுவனத்திற்கு பின்னால் இப்படி சில கதைகள் உள்ள நிலையில், அதன் உண்மையான கதை என்னவென்று தெரியுமா. BMW முதலில் ஒரு கார் நிறுவனமே கிடையாது, அது காலப்போக்கில் தான் உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

அப்போதுன் BMW என்ன நிறுவனம், எதற்காக உருவாக்கப்பட்டது என்று உங்களுக்கு பல்வேறு கேள்விகள் எழலாம். அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>BMW நிறுவனம் உருவானதன் பின்னணி என்ன?</h3>
இந்த நிறுவனம் தொடங்கும்போதே ஒரு கார் நிறுவனமாக தொடங்கப்படவில்லை. இது 2000களின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்த ஒரு சிறிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் BMW என்ற வார்த்தைகளுக்கான விரிவாக்கம் உள்ளது. அதாவது, <strong>Bayerische Motoren Werke</strong> என்பதுதான் விரிவாக்கம். அதாவது, ஜெர்மனியின் பவேரியப் பகுதியில் இயந்திரங்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை இந்த பெயர் குறிக்கிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/are-you-tired-of-getting-lots-of-spam-calls-follow-these-steps-to-stop-it-92754.html">Spam Call தொல்லை கொடுக்கிறதா.. இதோ இப்படி Stop பண்ணிடலாம்.. முழு விவரம் இதோ!</a>
<h3>BMW நிறுவனத்தின் தோற்றம்</h3>
இந்த நிறுவனம் 1916 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் கார்களை விட அதிக அளவு இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தது. அந்த காலக்கட்டத்தில் விமான தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சியை கண்டது. அப்போது, விமானத்திற்கு தேவையான பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயந்திரங்களை BMW வழங்கி வந்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/maruti-suzuki-to-increase-car-prices-by-up-to-30000-from-august-92630.html">கார்களின் விலை உயர்வை அறிவித்த மாருதி சுசூகி – ரூ.30,000 வரை விலை உயரும் – காரணம் என்ன?</a>

இரண்டாம் உலக போருக்கு பிறகு தான் இந்த நிறுவனம் விமானத்தில் இருந்து மெல்ல மெல்ல மோட்டார் சைக்கிள், தானியங்கி வாகனங்களுக்கு மாறியது. இவ்வாறாக தான் BMW நிறுவனம் இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனமாக தொடங்கி தற்போது பிரபல கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Swiggy, Zomato-க்கு போட்டியாக களமிறங்கும் Flipkart.. விரைவில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/flipkart-soon-to-launch-food-delivery-service-in-india-says-ceo-kalyan-krishnamurthy-93162.html</link>	
		<pubDate>Fri, 24 Jul 2026 18:30:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/flipkart-soon-to-launch-food-delivery-service-in-india-says-ceo-kalyan-krishnamurthy-93162.html</guid>
		            
			

    	<description><![CDATA[Flipkart Soon To Launch Food Delivery Service | இந்தியாவில் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், அவற்றுக்கு போட்டியாக பிளிப்கார்ட் தனது உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/flipkart-food-delivery.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Swiggy, Zomato-க்கு போட்டியாக களமிறங்கும் Flipkart.. விரைவில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது!" /></figure>உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ்<strong> (e Commerce)</strong> நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதுதான் பிளிப்கார்ட் <strong>(Flipkart)</strong>. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை அவர்களது வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது. பிளிப்கார்டில் வீட்டு உபயோக பொருட்கள், உடைகள், மலிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், மின்சாதன பொருட்கள் என அனைத்தும் வீடு தேடி டெலிவரி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பிளிப்கார்ட் மேலும் ஒரு சேவையையும் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் வாரங்களில் உணவு டெலிவரி சேவையை பிளிப்கார்ட் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>உணவு டெலிவரி செய்யும் சேவையை அறிமுகம் செய்யும் பிளிப்கார்ட்</h3>
பிளிப்கார்ட் தளத்தில் மின்சாதன பொருட்கள் முதல் அழகு சாதன பொருட்கள் வரை அனைத்தும் உள்ளது. இந்த நிலையில் தான், உணவு டெலிவரி செய்யும் இந்த புதிய முயற்சியை பிளிப்கார்ட் கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் தான் அவற்றுக்கு போட்டியாக பிளிப்கார்ட் களமிறங்க உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/maruti-suzuki-to-increase-car-prices-by-up-to-30000-from-august-92630.html">கார்களின் விலை உயர்வை அறிவித்த மாருதி சுசூகி – ரூ.30,000 வரை விலை உயரும் – காரணம் என்ன?</a>
<h3>பிளிப்கார்ட் உணவு டெலிவரி சேவை - உறுதி செய்த சிஇஓ</h3>
பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, <strong>Moneycontrol-</strong>க்கு அளித்த நேர்காணலில் இது தொடர்பாக பேசியுள்ளார். அடுத்த ஒருசில வாரங்களில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆரம்பக்கட்டத்தில் சோதனை முயற்சியாக இதனை மேற்கொள்ள உள்ளதாகவும், அது வெற்றிபெறும் நிலையில் அனைத்து நகரங்களிலும் உணவு டெலிவரி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-s25-ultra-smartphone-gets-huge-discount-on-flipkart-92415.html">சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?</a>

பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள அந்த சேவைக்கான செயலியின் பெயர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், அதன் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி இந்த சேவையை அதற்கான பிரத்யேக செயலி மூலமும் அல்லது பிளிப்கார்ட் செயலி மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சம்.. வெறும் ரூ.19,499.. இந்தியாவில் அறிமுகமானது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/iqoo-z11-lite-5g-smartphone-launched-in-india-know-the-price-and-other-specifications-93196.html</link>	
		<pubDate>Fri, 24 Jul 2026 16:40:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/iqoo-z11-lite-5g-smartphone-launched-in-india-know-the-price-and-other-specifications-93196.html</guid>
		            
			

    	<description><![CDATA[iQOO Z11 Lite 5G Smartphone Launched In India | iQOO நிறுவனம் இந்தியாவில் தனது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/iqoo-z11-lite-5g.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சம்.. வெறும் ரூ.19,499.. இந்தியாவில் அறிமுகமானது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன்!" /></figure>iQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில், மிகவும் அசத்தல் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகமாகியுள்ள இந்த iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்தியாவில் அறிமுகமானது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன்</h3>
iQOO நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் அறிமுகம் செய்த iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து தற்போது இந்த iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமான விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களை போலவே அம்சங்களை கொண்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-s25-ultra-smartphone-gets-huge-discount-on-flipkart-92415.html">சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?</a>
<h3>iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன் - விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The wait is over. ⚡📱</p>
Meet the all-new iQOO Z11 Lite, starting at just ₹17,999*.
*inclusive of all taxes and offers.

From non-stop lag-free performance and AI-powered features to the segment's brightest display#, a massive 6500mAh BlueVolt Battery, and comprehensive… <a href="https://t.co/zSx6YZ3YvM">pic.twitter.com/zSx6YZ3YvM</a>

— iQOO India (@IqooInd) <a href="https://x.com/IqooInd/status/2080553289285030152?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote>
இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் HD Plus IPS டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 209 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 8.4 மிமீ அளவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 6,500 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 44 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/be-aware-of-these-issues-while-using-atm-machines-to-withdraw-money-92573.html"> ATM : அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்.. இந்த விஷயங்கள் குறித்து உஷாராக இருங்கள்!</a>

பல அசத்தல் அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.19,499-க்கும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.21,499-க்கும், மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.24,499-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி லட்சக்கணக்கில் பணம் செலுத்தி ஐபோன் வாங்க வேண்டாம்.. லீஸ் அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/need-not-to-spend-lakhs-to-buy-iphones-apple-planning-to-introduce-lease-scheme-for-smartphones-and-other-gadgets-92871.html</link>	
		<pubDate>Thu, 23 Jul 2026 13:14:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/need-not-to-spend-lakhs-to-buy-iphones-apple-planning-to-introduce-lease-scheme-for-smartphones-and-other-gadgets-92871.html</guid>
		            
			

    	<description><![CDATA[Need Not To Spend Lakhs To Buy iPhones | தற்போதைய சூழலில் ஒரு பேஸ் மாடல் ஐபோன் வாங்க வேண்டும் என்றாலும் கூட ரூ.50,000-க்கு மேல் செலவு செய்ய வேண்டும். ஆனால், இனி மிக குறைந்த விலையில் ஐபோன்களை பயன்படுத்து வாய்ப்பு வர உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/iphones.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி லட்சக்கணக்கில் பணம் செலுத்தி ஐபோன் வாங்க வேண்டாம்.. லீஸ் அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்!" /></figure>என்னதான் ஏராளமான புதிய ஸ்மார்ட்போன்<strong> (Smartphone)</strong> நிறுவனங்கள் வந்து பல அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும், ஆப்பிள்<strong> (Apple)</strong> நிறுவனத்தின் ஐபோன்களுக்கு <strong>(iPhones)</strong> எப்போதுமே பொதுமக்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றாக் ஆப்பிள் ஐபோன்கள் வைத்திருப்பவர்கள் குறித்த பார்வையே மேலாண்மையாக உள்ளது. இதன் காரணமாக பலரும் ஆப்பிள் ஐபோன் வாங்க நினைக்கின்றனர். ஆனால், அதன் விலை அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காது.
<h3>ஆப்பிள் ஐபோன்களை லீசுக்கு விட திட்டம்</h3>
ஆப்பிள் நிறுவனத்தின் பேஸ் மாடல் ஸ்மார்ட்போனே ரூ.50,000-க்கு மேல் விற்பனை செய்யப்படும். இதுவே ப்ரோ மாடல் ஐபோன்களை வாங்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டும். இதன் காரணமாக ஆப்பிள் ஐபோன்கள் பலருக்கும் எட்டா கனியாகவே உள்ளது. இந்த நிலையில் தான், ஆப்பிள் ஐபோனின் விலையை குறித்து கவலை கொள்ளாமல், ஐபோனை பயன்படுத்த அந்த நிறுவனம் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது, ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை லீசுக்கு வழங்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி கூறுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/be-aware-of-these-issues-while-using-atm-machines-to-withdraw-money-92573.html">ATM : அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்.. இந்த விஷயங்கள் குறித்து உஷாராக இருங்கள்!</a>
<h3>வாடகை செலுத்தில் ஐபோன்களை பயன்படுத்தலாம்</h3>
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் முழு தொகையையும் செலுத்தி லட்சங்கள் மதிப்பு கொண்ட ஐபோன்களை வாங்க வேண்டியதில்லை. மாறாக அவர்கள் மாதம் சிறிய அளவிலான தொகையை வாடகையாக செலுத்தி ஐபோன்களை பயன்படுத்தலாம். இவ்வாறு மாதம் மாதம் வாடகை செலுத்தி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட சில காலம் முடிந்ததும் ஐபோனை மீண்டும் ஆப்பிள் நிறுவனத்திடமே ஒப்படைத்துவிட வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/no-internet-upi-payments-up-to-2000-soon-possible-with-nfc-based-offline-technology-92510.html">இணைய வசதியின்றி ரூ.2,000 வரை யுபிஐ பணப்பரிவர்த்தனை? NPCI புதிய வசதி.. எப்படி செயல்படும்?</a>
<h3>புதிய மாடல் ஐபோன்களுக்கு மிக சுலபமாக மாற்றிக்கொள்ளலாம்</h3>
மாத சந்தா செலுத்தி சேவைகளை பெறுவதை போல தான் இந்த ஐபோன் லீசும் செயல்படும். வாடிக்கையாளர்கள் ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்திக்கொண்டு இருக்கும்போதே, வேறொரு ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டால் ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஐபோனை ஒப்படைந்துவிட்டு புதிய மாடல் ஐபோனுக்கு லீசை மாற்றிக்கொள்ளலாம். ஐபோன்களுக்கு செலுத்தும் மாத தவணையை விடவும் இதன் கட்டணம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்த இந்தியா.. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/india-introduced-longest-hydrogen-train-for-the-first-time-in-the-world-92794.html</link>	
		<pubDate>Wed, 22 Jul 2026 22:06:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/india-introduced-longest-hydrogen-train-for-the-first-time-in-the-world-92794.html</guid>
		            
			

    	<description><![CDATA[India's Longest Hydrogen Train | பசுமை ரயில் திட்டத்தில் ஹைட்ரஜன் ரயில்களை உலக நாடுகள் இயக்கி வருகின்றன. இந்த நிலையில், உலக அளவில் முதல் முறையாக மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/hydrogen-train.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்த இந்தியா.. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது!" /></figure>உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலை<strong> (Hydrogen Train)</strong> இயக்கி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. உலக நாடுகளில் இரண்டு முதல் மூன்று பெட்டிகளை உடைய ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், உலக அளவில் முதல் முறையாக 10 பெட்டிகளை கொண்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
<h3>மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலை இயக்கி இந்தியா சாதனை</h3>
இந்தியா, ஹரியானா ஜிந்த் - சோனிபட் இடையே 10 பெட்டிகளை கொண்ட உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலை இயக்கி பசுமை ரயில் துறையில் இந்தியா சாதனை படைத்துள்ளது. பசுமை ரயில் திட்டத்தின் முக்கிய அம்சமாக ஹைர்டஜன் ரயிலை ஊக்குவிக்கும் உலக நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/no-internet-upi-payments-up-to-2000-soon-possible-with-nfc-based-offline-technology-92510.html">இணைய வசதியின்றி ரூ.2,000 வரை யுபிஐ பணப்பரிவர்த்தனை? NPCI புதிய வசதி.. எப்படி செயல்படும்?</a>

உலகில் உள்ள பல்வேறு வளர்ந்த நாடுகள் வெறும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளை கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை மட்டுமே பயன்பாட்டில் வைத்துள்ள நிலையில், 10 பெட்டிகளை கொண்டு ஹைட்ரஜன் ரயிலை இயக்கி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ரயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அளித்துள்ளார்.
<h3>ஹைட்ரஜன் ரயில் குறித்த முக்கிய அம்சங்கள்</h3>
ஹைட்ரஜன் ரயில்கள் மூலம் சுற்று சூழலுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. ஹைட்ரஜன் ரயில்கள், டீசல் இன்ஜின்களை போல கருப்பு புகையை வெளியிடுவதில்லை. இந்த ரயில்களில் இருந்து ஹைட்ரஜன் வினையால் நீராவி மட்டுமே துணை பொருளாக வரும். இதன் காரணமாக தான் இந்த ரயில் பசுமை ரயில் திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/ampere-magnus-g-max-electric-two-wheeler-launched-best-for-family-users-92346.html">ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோ மீட்டர் பயணம்.. சந்தையில் அறிமுகமான அட்டகாசமான மின்சார இருசக்கர வாகனம்!</a>

சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில் இந்தியாவின் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Spam Call தொல்லை கொடுக்கிறதா.. இதோ இப்படி Stop பண்ணிடலாம்.. முழு விவரம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/are-you-tired-of-getting-lots-of-spam-calls-follow-these-steps-to-stop-it-92754.html</link>	
		<pubDate>Wed, 22 Jul 2026 20:40:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/are-you-tired-of-getting-lots-of-spam-calls-follow-these-steps-to-stop-it-92754.html</guid>
		            
			

    	<description><![CDATA[How To Stop Spam Calls Completely | பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக ஸ்பேம் கால்கள் உள்ளன. இந்த நிலையில், Do Not Call Registry அம்சத்தில் பதிவு செய்வதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஸ்பேம் கால்கள் வராமல் செய்யலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/spam-call.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Spam Call தொல்லை கொடுக்கிறதா.. இதோ இப்படி Stop பண்ணிடலாம்.. முழு விவரம் இதோ!" /></figure>ஒருவரை ஒருவர் விரைவாக தொடர்ப்புக்கொண்டு தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் பலரும் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பெரும்பாலான பயனர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக ஸ்பேம் கால்கள் <strong>(Spam Calls)</strong> உள்ளன. அதாவது, முன்பு இருந்ததை போல் இல்லாமல், தற்போது ஸ்பேம் கால்கள் என திரையில் தோன்றுகிறது. அதனை பார்த்துவிட்டு அந்த போன் காலை எடுக்க வேண்டாம் என முடிவு செய்யலாம். ஆனால், தொடர்ந்து வரும் ஸ்பேம் கால்களால் பலரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், மொபைல் போனுக்கு வரும் ஸ்பேம் கால்களை தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஸ்பேம் கால்களை தவிர்க்க வழி உள்ளதா?</h3>
ஸ்பேம் கால்கள் உங்களது மொபைல் எண்ணுக்கு வரவே கூடாது என நீங்கள் விரும்பினால் அதற்கு ஒரு வழி உள்ளது. அதாவது, உங்களது மொபைல் எண்ணை என்சிபிஆர் <strong>(NCPR - National Customer Preference Register)</strong> அமைப்பில் பதிவு செய்வதன் மூலம் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஸ்பேம் கால்கள் முற்றிலும் தடுக்கப்படும். அதனை எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/ampere-magnus-g-max-electric-two-wheeler-launched-best-for-family-users-92346.html">ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோ மீட்டர் பயணம்.. சந்தையில் அறிமுகமான அட்டகாசமான மின்சார இருசக்கர வாகனம்!</a>
<h3>Do Not Call Registry-ல் பதிவு செய்யுங்கள்</h3>
உங்கள் மொபைல் எண்ணை <strong>Do Not Call Registry-</strong>ல் பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
<ol>
 	<li>உங்களது குறுஞ்செய்தி செயலியை திறந்து அதில் <strong>START</strong> என டைப் செய்து, 1909 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.</li>
 	<li>அப்போது உங்களுக்கு <strong>Banking, Hospitality</strong> உள்ளிட்ட பல்வேறு ஆப்ஷன்கள் தோன்றும்.</li>
 	<li>அதில் உங்களுக்கு எந்த சேவை வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.</li>
 	<li>நீங்கள் அதில் பதிவு செய்த பிறகு உங்களுக்கு உறுதிப்படுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.</li>
 	<li>அதன் பிறகு 24 மணி நேரத்தில் உங்களுக்கு அந்த <strong>Do Not Call Registry</strong> அம்சம் ஆக்டிவேட் செய்யப்படும்.</li>
 	<li>இந்த அம்சம் மூன்றம் தரப்பில் இருந்து உங்களுக்கு வரும் வணிக ரீதியான போன் கால்களை தடுக்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.</li>
</ol>
<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/is-airtel-limiting-hotspot-usage-of-5g-unlimited-recharge-plans-92344.html">மொவைல் ஹாட்ஸ்பாட் போட்டால் 5ஜி சேவை கட்?.. பயனர்களுக்கு ஏர்டெல் வைத்த டிவிஸ்ட்?</a>

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றி உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஸ்பேம் கால்களை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கார்களின் விலை உயர்வை அறிவித்த மாருதி சுசூகி  &#8211; ரூ.30,000 வரை விலை உயரும்  &#8211; காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/maruti-suzuki-to-increase-car-prices-by-up-to-30000-from-august-92630.html</link>	
		<pubDate>Wed, 22 Jul 2026 12:01:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/maruti-suzuki-to-increase-car-prices-by-up-to-30000-from-august-92630.html</guid>
		            
			

    	<description><![CDATA[ந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் படி வருகிற ஆகஸ்ட் 2026, முதல் புதிய விலை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/maruti-suzuki-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கார்களின் விலை உயர்வை அறிவித்த மாருதி சுசூகி  &#8211; ரூ.30,000 வரை விலை உயரும்  &#8211; காரணம் என்ன?" /></figure>இந்தியாவில் மிகப்பெரிய <a href="https://www.tv9tamilnews.com/technology/car-sunshade-benefits-does-it-really-reduce-car-heat-and-protect-interior-read-details-92139.html" target="_blank" rel="noopener">கார்</a> தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான <a href="https://www.tv9tamilnews.com/business/how-to-avoid-maruti-suzukis-upcoming-price-hike-and-save-up-to-rs-30000-84066.html" target="_blank" rel="noopener">மாருதி சுசூகி</a> நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் படி வருகிற ஆகஸ்ட் 2026, முதல் புதிய விலை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாடலை பொறுத்து ரூ.30,000 வரை கார்களின் விலை உயர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன், 2026 மாதம் தான் கார்களின் விலையை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
<h3>விலை உயர்வுக்கு காரணம் என்ன?</h3>
இதுகுறித்து வெளியான தகவலின் படி மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, பணவீக்கத்தின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/car-sunshade-benefits-does-it-really-reduce-car-heat-and-protect-interior-read-details-92139.html">கார் இருந்தால் கண்டிப்பாக சன்ஷேடு வேண்டுமா? வெப்பநிலையை இது உண்மையில் குறைக்குதா?</a></strong>

உற்பத்தி செலவை குறைக்க உள்நாட்டு செயல்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதிகரித்து வரும் செலவினத்தை முழுமையாக தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக விலை உயர்வு ஒன்றே தீர்வு என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
<h3>எந்தெந்த கார்களின் விலை உயரும்?</h3>
மாருதி சுசூகி தற்போது மாடல் வாரியாக கார் விலை உயர்வை அறிவிக்கவில்லை. இதனால் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், ஸ்விப்ட், டிசைர், பலினோ, பிரெஸ்ஸா, எர்டிகா, கிராண்ட் விடாரா போன்ற அனைத்து பிரபல மாடல்களிலும் இந்த விலை உயர்வு எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. மாடல் வாரியாக விலை உயர்வு விவரங்கள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற ஆகஸ்ட் 2026 முதல் விலை உயர்வுக்கு வரவிருப்பதால், கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் உடனடியாக முன்பதிவு செய்வதன் மூலம் விலை உயர்விலிருந்து தப்பிக்க வாய்பிபிருக்கிறது. ஆனால் அது நாம் வாங்கும் டீலரின் விதிமுறைகள், முன்பதிவு தேதி, கார் டெலிவரி செய்யப்படும் காரணத்தை பொறுத்து மாறுபடும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/are-you-going-to-buy-new-bike-analyze-these-things-before-buying-91175.html">புதிதாக பைக் வாங்க போறீங்களா?.. இந்த விஷயங்கள் குறித்து கட்டாயம் யோசிக்க வேண்டும்!</a></strong>

இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் மாருதி சசூகி கார்களின் விலை உயர்த்தியபோது, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவு ஆகியவற்றை காரணமாக தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே காரணத்திற்காக மீண்டும் விலை உயர்வை அறிவித்திருக்கிறது.

மாருதி சசூகி மட்டுமில்லாமல், டாடா மோட்டார், மகிந்திரா போன்ற நிறுவனங்களும் உற்பத்தி செலவு அதிகரிப்பை காரணம் காட்டி விலை உயர்வை அறிவித்திருக்கின்றன. இதற்கிடையில் மாருதி சுசூகி நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் கார்கள் என்பதால் இந்த விலை உயர்வு அவர்களை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-s25-ultra-smartphone-gets-huge-discount-on-flipkart-92415.html</link>	
		<pubDate>Tue, 21 Jul 2026 22:33:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-s25-ultra-smartphone-gets-huge-discount-on-flipkart-92415.html</guid>
		            
			

    	<description><![CDATA[Samsung Galaxy S25 Ultra Smartphone | உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ள பிளிப்கார்ட், தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/samsung-galaxy-s25-ultra.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?" /></figure>உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் <strong>(Flipkart)</strong>, சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு <strong>(Samsung Galaxy S25 Ultra Smartphone)</strong> அட்டகாசமான சலுகையை வழங்கியுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகள் மற்றும் இதர சலுகைகளை பயன்படுத்தி ரூ.75,000-க்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,29,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த பிளிப்கார்ட் சலுகையில் ரூ.54,000 சலுகையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு சலுகை</h3>
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஒரு ஆண்டுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டதாக இருந்தாலும், பெரும்பாலான பயனர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், பிளிப்கார்டின் இந்த சலுகையை பயன்படுத்துவதன் மூலம் மிக குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/jio-vs-airtel-which-company-offers-the-cheapest-30-day-recharge-plan-92054.html">ஜியோ vs ஏர்டெல்: குறைந்த கட்டணத்தில் 30 நாள் ரீசார்ஜ் பிளான் எது?</a>
<h3>பிளிப்கார்ட் வழங்கும் உடனடி சலுகை ரூ.4,000</h3>
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு பிளிக்பார்ட் நிறுவனம் உடனடி சலுகையாக ரூ.4,000 வழங்குகிறது. சில கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் பட்சத்தில் இந்த சிறப்பு அம்சத்தை பெற முடியும். பழைய சாம்சங் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் கூடுதலாக ரூ.10,000 பெற முடியும். இந்த நிலையில், சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் ஆகியவை சேர்த்து நல்ல விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/is-it-safe-to-charge-your-phone-overnight-experts-bust-common-battery-myths-92043.html"> இரவு முழுவதும் உங்கள் போனை சார்ஜ் செய்வது சரியா? உண்மை என்ன?</a>
<h3>சாம்சங்க் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா - சிறப்பு அம்சங்கள்</h3>
இந்த ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இது தவிர 200 மெகாபிக்சல் கேமரா உள்ளிட்ட அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ATM : அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்.. இந்த விஷயங்கள் குறித்து உஷாராக இருங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/be-aware-of-these-issues-while-using-atm-machines-to-withdraw-money-92573.html</link>	
		<pubDate>Tue, 21 Jul 2026 21:24:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/be-aware-of-these-issues-while-using-atm-machines-to-withdraw-money-92573.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tips For Safe ATM Transaction | என்னதான் யுபிஐ, மொபைல் செயலிகள் வந்துவிட்டாலும் ஏடிஎம் பயன்பாடு மக்கள் மத்தியில் தற்போதும் கூட பரவலாக உள்ளது. இந்த நிலையில், ஏடிஎம் பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/atm-4-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ATM : அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்.. இந்த விஷயங்கள் குறித்து உஷாராக இருங்கள்!" /></figure>[gallery link="file" columns="1" size="full" ids="92574,92575,92576,92577,92578"] ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இணைய வசதியின்றி ரூ.2,000 வரை யுபிஐ பணப்பரிவர்த்தனை? NPCI புதிய வசதி.. எப்படி செயல்படும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/no-internet-upi-payments-up-to-2000-soon-possible-with-nfc-based-offline-technology-92510.html</link>	
		<pubDate>Tue, 21 Jul 2026 19:55:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/no-internet-upi-payments-up-to-2000-soon-possible-with-nfc-based-offline-technology-92510.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்த PoS கருவிகள் மூலம் டெபிட், கிரெடிட், ப்ரீபெய்டு கார்டுகள் மற்றும் மொபைல் வாலெட் பணப்பரிவர்த்தனைகளையும் வணிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியும். இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் பரிவர்த்தனை அங்கீகாரத் தகவலை PoS கருவி சேமித்து வைத்துக்கொள்ளும். பின்னர் இணைய இணைப்பு மீண்டும் கிடைத்தவுடன் அந்தத் தகவல் தொடர்புடைய நெட்வொர்க்கிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/upi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இணைய வசதியின்றி ரூ.2,000 வரை யுபிஐ பணப்பரிவர்த்தனை? NPCI புதிய வசதி.. எப்படி செயல்படும்?" /></figure><strong>ஜூலை 21, 2026:</strong> இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலானோர் யுபிஐ பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை பல்வேறு இடங்களில் யுபிஐ ஸ்கேனர்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் சில நொடிகளில் பணம் செலுத்த முடிவதால், யுபிஐ பரிவர்த்தனை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

இந்த நிலையில், இணையதள இணைப்பு இல்லாமலேயே வணிகர்களின் பாயின்ட் ஆஃப் சேல் (PoS) கருவிகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் வகையில் யுபிஐ வசதியை விரிவுபடுத்த தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/technology/top-5-ai-chatbots-that-can-save-you-hours-on-emails-assignments-and-daily-tasks-91707.html">அசைமென்ட் முதல் இமெயில் வரை… நம் வேலைகளை எளிதாக்கும் சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள்</a>
<h3>ரூ. 2000 வரை பணம் செலுத்த முடியும்:</h3>
இதற்காக முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் PoS கருவிகளுக்கு 2026ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வசதி, நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன் (NFC) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் NFC வசதி கொண்ட ஸ்மார்ட்போனை இணைய இணைப்பு இல்லாத PoS கருவியில் ‘டேப்’ செய்வதன் மூலம் ரூ.2,000 வரை பணம் செலுத்த முடியும்.
<h3>சிக்னல் இல்லாத பகுதிகளிலும் பணப்பரிவர்த்தனை:</h3>
விமான கேபின்கள், நிலத்தடி ரயில் நெட்வொர்க்குகள் உள்ளிட்ட இணைய இணைப்பு அல்லது மொபைல் சிக்னல் கிடைக்காத பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் இணையத்துடன் இணைந்திருக்கும் நேரத்தில், தங்களது சாதனத்தில் உள்ள யுபிஐ லைட் வாலெட்டில் பணத்தை முன்கூட்டியே ஏற்றிக்கொள்ள வேண்டும். பின்னர், இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் யுபிஐ பின் எண்ணை உள்ளிடாமல், அந்தத் தொகையைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/technology/is-airtel-limiting-hotspot-usage-of-5g-unlimited-recharge-plans-92344.html">மொவைல் ஹாட்ஸ்பாட் போட்டால் 5ஜி சேவை கட்?.. பயனர்களுக்கு ஏர்டெல் வைத்த டிவிஸ்ட்?</a>

ஆஃப்லைன் முறையில் யுபிஐ பணப்பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ள PoS நிறுவனங்கள் NPCI-யிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழ் பெற்ற பின்னர், இந்த வசதிக்கான செயலியை உருவாக்கி PoS கருவிகளில் பயன்படுத்த முடியும்.
<h3>இது எப்படி செயல்படும்?</h3>
இந்த PoS கருவிகள் மூலம் டெபிட், கிரெடிட், ப்ரீபெய்டு கார்டுகள் மற்றும் மொபைல் வாலெட் பணப்பரிவர்த்தனைகளையும் வணிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியும். இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் பரிவர்த்தனை அங்கீகாரத் தகவலை PoS கருவி சேமித்து வைத்துக்கொள்ளும். பின்னர் இணைய இணைப்பு மீண்டும் கிடைத்தவுடன் அந்தத் தகவல் தொடர்புடைய நெட்வொர்க்கிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.

இந்த NFC அடிப்படையிலான வசதி மூலம், யுபிஐ செயலியைப் பயன்படுத்தி PoS கருவியில் ‘டேப்’ செய்வதன் மூலம் இணைய இணைப்பு இல்லாமலேயே ரூ.2,000 வரை பணம் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பு யுபிஐ செயலி நிறுவனங்களும் இந்த வசதியை தங்களது செயலிகளில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோ மீட்டர் பயணம்.. சந்தையில் அறிமுகமான அட்டகாசமான மின்சார இருசக்கர வாகனம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/ampere-magnus-g-max-electric-two-wheeler-launched-best-for-family-users-92346.html</link>	
		<pubDate>Mon, 20 Jul 2026 20:50:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/ampere-magnus-g-max-electric-two-wheeler-launched-best-for-family-users-92346.html</guid>
		            
			

    	<description><![CDATA[Ampere Magnus G Max Electric Two Wheeler | பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்டவற்றின் காரணமாக ஏராளமான பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், அசத்தல் அம்சங்கள் உடன் கூடிய புதிய மின்சார இருசக்கர வாகனம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/electric-scooter.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோ மீட்டர் பயணம்.. சந்தையில் அறிமுகமான அட்டகாசமான மின்சார இருசக்கர வாகனம்!" /></figure>உலக நாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் இந்த முடிவை எடுக்கின்றனர். அதற்கு ஏற்றவாறு நிறுவனங்களும் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மின்சார வாகனம் குறித்தும், அதன் சிறப்பு அம்சம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
<h3>Ampere Magnus G Max மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்</h3>
மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வரும் கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தனது புதிய மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த <strong>Ampere Magnus G Max</strong> வாகனம், தினசரி பயணங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த மின்சார இருசக்கர வாகனத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் குடும்ப வாடிக்கையாளர்களை கவரும் விதமாக உள்ளன.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/why-modern-smartphones-no-longer-have-removable-batteries-explained-in-tamil-91593.html">நியூ ஸ்மார்ட்போன்களில் ஏன் பேட்டரியைக் கழற்ற முடிவதில்லை? இதோ அதற்கான காரணங்கள்!</a>
<h3>வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
இந்த வாகனத்தில் மிகவும் சக்தி வாய்ந்த 3  kWh லித்தியம் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம், 142 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இந்த இருசக்கர வாகனத்தில் மணிக்கு சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். இந்த வாகனம், நகர பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/these-things-in-your-house-can-damage-the-wi-fi-speed-91382.html">இணைவ சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்.. என்ன என்ன தெரியுமா?</a>

இந்த வாகனத்தில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 7.5 மணி நேரம் தேவைப்படும். இந்த வாகனத்தில் எகோ மற்றும் சிட்டி என இரண்டு விதமான அட்டகாசமான மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 116 கிலோ எடை கொண்ட இந்த இருசக்கர வாகனம், சுமார் 150 கிலோ வரை எடை தாங்கும் தன்மை கொண்டுள்ளது.

தற்போதுள்ள சூழலில் மின்சார வாகனங்களை வாங்குவது தான் சிறப்பானதாக இருக்கும். இந்த நிலையில், மின்சார இருசக்கர வாகனங்களை வாங்க நினைக்கும் நபர்கள் இந்த வாகனத்தை கருத்தில் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மொவைல் ஹாட்ஸ்பாட் போட்டால் 5ஜி சேவை கட்?.. பயனர்களுக்கு ஏர்டெல் வைத்த டிவிஸ்ட்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/is-airtel-limiting-hotspot-usage-of-5g-unlimited-recharge-plans-92344.html</link>	
		<pubDate>Mon, 20 Jul 2026 20:48:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/is-airtel-limiting-hotspot-usage-of-5g-unlimited-recharge-plans-92344.html</guid>
		            
			

    	<description><![CDATA[Airtel Limiting 5G Service For Hotspot | ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அன்லிமிடேட் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஹாட்ஸ்பாட் போடும்போது தங்களால் 5ஜி சேவையை பெற முடியவில்லை என பயனர்கள் கூறி வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/airtel.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மொவைல் ஹாட்ஸ்பாட் போட்டால் 5ஜி சேவை கட்?.. பயனர்களுக்கு ஏர்டெல் வைத்த டிவிஸ்ட்?" /></figure>பயனர்கள் தடையற்ற இணைய வசதியை பெறுவதற்காக தான் இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் <strong>(Reliance)</strong>, ஏர்டெல்<strong> (Airtel)</strong> உள்ளிட்ட முக்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தான், ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையில் பயனர்கள் சில சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளனர். அதாவது, கடந்த சில நாட்களாக பயனர்கள் தங்களது 5ஜி இணைய சேவையை மொபைல் ஹாட்ஸ்பாட் <strong>(Mobile Hotspot)</strong> மூலம் வேறு ஒருவருக்கு வழங்குவதை ஏர்டெல் தடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஏர்டெலின் 5ஜி இணைய சேவையில் ஹாட்ஸ்பாட் வசதி இல்லை?</h3>
ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் தங்களது பயனர்கள் சீரான மற்றும் தடையற்ற இணைய சேவையை பெறும் வகையில் தனது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி இணைய சேவையை வழங்கி வருகிறது. ஒருமுறை திட்டத்தை தேர்வு செய்து ரீச்சார்ஜ் செய்யும் பட்சத்தில் அந்த திட்டம் முடிவு பெறும் வரை தடையில்லாமல் இணைய சேவையை பெற முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/top-5-ai-chatbots-that-can-save-you-hours-on-emails-assignments-and-daily-tasks-91707.html">அசைமென்ட் முதல் இமெயில் வரை… நம் வேலைகளை எளிதாக்கும் சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள்</a>

ஏர்டெல் தனது பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி சேவையை வழங்கி வந்த நிலையில், அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எக்ஸ் தளத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் <strong>Terms and Conditions</strong> குறித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அந்த நிறுவனம் பயனர்கள் தாங்கள் மட்டும் இணைய சேவையை பயன்படுத்தும்போது 5ஜி சேவையை பயன்படுத்தலாம் என்றும், ஹாட்ஸ்பாட் பகிரும்போது 4ஜி சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறியுள்ளது.
<h3>பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய ஏர்டெலின் செயல்</h3>
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை குறித்து பயனர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சிலர் தாங்கள் லேப்டாப்பில் மொபைல் ஹாட்ஸ்பாட் இணைத்து பயன்படுத்துவதாகவும், இந்த நடவடிக்கை தங்களை கடுமையாக பாதிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கார் இருந்தால் கண்டிப்பாக சன்ஷேடு வேண்டுமா? வெப்பநிலையை இது உண்மையில் குறைக்குதா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/car-sunshade-benefits-does-it-really-reduce-car-heat-and-protect-interior-read-details-92139.html</link>	
		<pubDate>Mon, 20 Jul 2026 12:27:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/car-sunshade-benefits-does-it-really-reduce-car-heat-and-protect-interior-read-details-92139.html</guid>
		            
			

    	<description><![CDATA[Car sunshade: கோடைக்காலத்தில், காரை சில மணிநேரம் வெயிலில் நிறுத்திய பிறகும் கூட , அதற்குள் உட்காருவது கடினமாகிவிடும் . ஸ்டீயரிங், இருக்கைகள் மற்றும் டாஷ்போர்டு ஆகியவை மிகவும் சூடாகிவிடும், எனவே நீங்கள் காரை ஓட்டத் தொடங்குவதற்கு முன்பு ஏசியை இயக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், பலர் காரின் முன் ஜன்னலில் ஒரு சன்ஷேடைப் பொருத்துகிறார்கள்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/car-tips-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கார் இருந்தால் கண்டிப்பாக சன்ஷேடு வேண்டுமா? வெப்பநிலையை இது உண்மையில் குறைக்குதா?" /></figure>சரியாகப் பயன்படுத்தினால், ஒரு நல்ல தரமான சன்ஷேடு காருக்குள் இருக்கும் வெப்பநிலையை கணிசமாகக் குறைப்பதோடு, காரின் உட்புறத்திற்கும் நல்ல பாதுகாப்பை வழங்கும். சன்ஷேடின் முக்கியப் பணி, சூரியக் கதிர்கள் நேரடியாக காருக்குள் நுழைவதைத் தடுப்பதாகும். பொதுவாக, சூரிய மறைப்பின் வெளிப்புறத்தில் ஒரு பிரதிபலிப்பு அடுக்கு இருக்கும். இது சூரியனின் வெப்பத்தைப் பிரதிபலித்து வெளிப்புறமாகத் தள்ளுவதன் மூலம், காரின் உட்புறம் அதிக வெப்பமடைவதைத் தடுக்கிறது. இதன் விளைவாக, ஸ்டீயரிங் வீல், டாஷ்போர்டு, இருக்கைகள் மற்றும் பிற பிளாஸ்டிக் பாகங்கள் அதிக வெப்பமடைவதில்லை.
<h3>வெப்பநிலையை குறைக்குமா?</h3>
பல்வேறு சோதனைகளின்படி, ஒரு நல்ல சூரிய மறைப்பைப் பயன்படுத்துவது காருக்குள் இருக்கும் வெப்பநிலையை சுமார் 10 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். இது குறிப்பாக டாஷ்போர்டின் மேற்பரப்பு வெப்பநிலையை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. இதனால் காரின் ஏசி வேகமாக குளிர்ச்சியடைந்து, வாகனம் ஓட்டும் அனுபவம் மேலும் வசதியாகிறது.

சன்ஷேடின் மற்றொரு முக்கியப் பயன் என்னவென்றால், அது காரின் உட்புறத்தை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. தொடர்ந்து சூரிய ஒளி படுவதால் டாஷ்போர்டு நிறம் மாறலாம், பிளாஸ்டிக் பாகங்கள் விரிசல் அடையலாம், மற்றும் இருக்கைகளின் தரம் குறையலாம். சூரிய மறைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இதுபோன்ற சேதங்களைப் பெருமளவில் குறைக்கலாம். மேலும், காருக்குள் வைக்கப்பட்டுள்ள மொபைல் ஹோல்டர்கள், வாசனைத் திரவியங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிற உபகரணங்களும் அதிகப்படியான வெப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

Also Read:
<h3>கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?</h3>
கோடைக்காலத்தில் சன்ஷேடை பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அதன் பளபளப்பான அல்லது வெள்ளி நிறப் பக்கம் வெளிப்புறமாக, அதாவது சூரியனை நோக்கியவாறு இருக்க வேண்டும். இது சூரியனின் கதிர்களை நேரடியாகப் பிரதிபலிக்கும். மேலும், சூரிய மறைப்பை முன்பக்கக் கண்ணாடியை முழுமையாக மறைக்கும்படி பொருத்தி, காரின் சன் வைசரின் உதவியுடன் அதை நிலையாகப் பிடித்துக்கொள்வது சிறந்தது.

பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத மற்றொரு விஷயம் என்னவென்றால், சில இருபக்க சூரிய மறைப்புகளைக் குளிர்காலத்திலும் பயன்படுத்தலாம் என்பதுதான். இந்த நிலையில், நீங்கள் அந்த மறைப்பைத் திருப்பிப் பொருத்தினால், அது காருக்குள் வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைக்க உதவும். இதன் மூலம், குளிர் காலத்திலும்கூட காரின் உட்புறம் மிக விரைவாகக் குளிர்ச்சியடைவதைத் தடுக்கலாம்.

சூரிய மறைப்பு வாங்கும்போது, ​​உங்கள் கார் மாடலுக்கு ஏற்ற சரியான அளவைத் தேர்ந்தெடுப்பது அவசியம். உயர்தரமான பிரதிபலிப்பு அடுக்கு கொண்ட சூரிய மறைப்பு அதிக பலனளிக்கும். முடிந்தால், அதன் பலன்களை அதிகரிக்க உங்கள் காரை நிழலில் நிறுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். மொத்தத்தில், கார் சன்ஷேடு என்பது ஒரு சாதாரண துணைக்கருவி மட்டுமல்ல. இது குறைந்த செலவில் காருக்குள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உட்புறத்தைப் பாதுகாக்கவும், கோடைக்காலத்தில் ஒரு வசதியான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கவும் மிகவும் பயனுள்ள ஒரு கருவியாகும். முறையாகப் பயன்படுத்தினால், இதை கோடைக்காலத்தில் மட்டுமல்ல, குளிர்காலத்திலும் பயன்படுத்தலாம்.
<h3>போக்குவரத்து விதி</h3>
கார் கண்ணாடியில் குறிப்பிட்ட அளவு விசிபிலிட்டி தெரியும் அளவில் மட்டுமே சன்பிளிம் ஒட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதேபோல் சன்ஷேட் பயன்படுத்துதலும் பார்க்கிங் நேரத்தில் இருக்க வேண்டும். கார் ஓட்டும்போது போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டே நாம் செயல்பட வேண்டும் ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜியோ vs ஏர்டெல்: குறைந்த கட்டணத்தில் 30 நாள் ரீசார்ஜ் பிளான் எது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/jio-vs-airtel-which-company-offers-the-cheapest-30-day-recharge-plan-92054.html</link>	
		<pubDate>Sun, 19 Jul 2026 21:42:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/jio-vs-airtel-which-company-offers-the-cheapest-30-day-recharge-plan-92054.html</guid>
		            
			

    	<description><![CDATA[நீங்கள் ஜியோ அல்லது ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் பயன்படுத்துபவர் என்றால், அடுத்த முறை ரீசார்ஜ் செய்வதற்கு முன் எந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் 30 நாள் செல்லுபடியாகும் பிளானை வழங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/airtel-vs-jio-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜியோ vs ஏர்டெல்: குறைந்த கட்டணத்தில் 30 நாள் ரீசார்ஜ் பிளான் எது?" /></figure>நீங்கள் ஜியோ அல்லது <a href="https://www.tv9tamilnews.com/technology/jio-vs-airtel-vs-vi-will-mobile-recharge-prices-increase-in-india-heres-what-we-know-89761.html" target="_blank" rel="noopener">ஏர்டெல்</a> ப்ரீபெய்ட் சிம் பயன்படுத்துபவர் என்றால், அடுத்த முறை <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-provides-amazing-recharge-plans-with-budget-friendly-price-84838.html" target="_blank" rel="noopener">ரீசார்ஜ்</a> செய்வதற்கு முன் எந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் 30 நாள் செல்லுபடியாகும் பிளானை வழங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஜியோவின் 30 நாள் பிளானின் விலை ரூ.355 ஆகும். இதில் டேட்டா, போன் கால், எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சலுகைகள் அடங்கும். அதேபோல், ஏர்டெலின் குறைந்த கட்டணத்தில் 30 நாளுக்கான பிளானும் ரூ.355 தான். இந்தத் திட்டம் என்னென்ன சலுகைகளை வழங்குகிறது என்று பார்ப்போம்.
<h3>ஜியோ ரூ.355 பிளானின் நன்மைகள்</h3>
ரூ.355க்கு, ஜியோமொத்தம் 25 GB அதிவேக டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, இத்திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் பிளானுக்கான மூன்று மாத சப்ஸ்கிரிப்ஷன், இலவச ஜியோ கிளவுட் சேமிப்பு வசதி, 18 மாத கூகுள் ஜெமினி புரோ பிளான், 5,000 GB கிளவுட் சேமிப்பு மற்றும் நானோ பனானா சலுகைகள் ஆகியவை அடங்கும். இத்திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது.
<h3>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/these-things-in-your-house-can-damage-the-wi-fi-speed-91382.html">இணைய சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்.. என்ன என்ன தெரியுமா?</a></h3>
<h3>ஏர்டெல் ரூ.355 பிளானின் நன்மைகள்</h3>
இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம், உங்களுக்கு மொத்தம் 25 GB அதிவேக டேட்டாவுடன், 300 SMS மற்றும் அன்லிமிட்டெட் வாய் காலிங் வசதி கிடைக்கிறது. 30 நாள் செல்லுபடியாகும் காலத்துடன், இந்நிறுவனம் இத்திட்டத்தில் ரூ.5 மதிப்பிலான டாக் டைம் வசதியையும் வழங்குகிறது. மேலும், ரூ.4,000 மதிப்பிலான 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் , நிகழ்நேர ஸ்பேம் அழைப்பு மற்றும் SMS எச்சரிக்கைகள், மற்றும் 30 நாட்களுக்கு ஒருமுறை இலவச ஹெலோ டியூனை அமைக்கும் வசதி போன்ற கூடுதல் சலுகைகளையும் இத்திட்டம் வழங்குகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/friends-will-show-up-more-in-your-feed-in-x-a-new-update-91179.html">இனி உங்கள் எக்ஸ் Feed-ல் அதிகம் நண்பர்கள் தான் இருப்பார்கள்.. விரைவில் வரும் புதிய அம்சம்!</a></strong>
<h3>2 பிளானுக்கும் உள்ள வித்தியாசம்</h3>
இரு திட்டங்களையும் ஒப்பிடும்போது, ​​எஸ்எம்எஸ்-ஐ பொறுத்தவரை மிக முக்கியமான வேறுபாடு உள்ளது. ஜியோதினசரி எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது, ஆனால் ஏர்டெல் மொத்தம் 300 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்குகிறது. கூடுதலாக, ஜியோதிட்டத்தில் டாக் டைம் இல்லை, ஆனால் ஏர்டெல் திட்டத்தில் அது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்படும் கூடுதல் சலுகைகளிலும் வேறுபாடுகள் உள்ளன. எனவே, எந்தெந்தச் சலுகைகள் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நம் அன்றாட பயன்பாடு, டேட்டா தேவைகள், நம் மாத பட்ஜெட் ஆகியவற்றைக் கொண்டு முடிவெடுப்பது சிறந்தது. மேலும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் ஒருமுறை தெரிந்துகொண்டு அதன் சாதக பாதகங்கள் முழுமையாக அறிந்துகொண்டு தேர்ந்தெடுப்பது நல்லது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இரவு முழுவதும் உங்கள் போனை சார்ஜ் செய்வது சரியா? உண்மை என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/is-it-safe-to-charge-your-phone-overnight-experts-bust-common-battery-myths-92043.html</link>	
		<pubDate>Sun, 19 Jul 2026 19:22:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/is-it-safe-to-charge-your-phone-overnight-experts-bust-common-battery-myths-92043.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறி வருகிறது பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, போனை சார்ஜ் செய்வது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன.  போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்வது பாதுகாப்பானதா? இது பேட்டரியை சேதப்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/smartphone-charging-tips-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இரவு முழுவதும் உங்கள் போனை சார்ஜ் செய்வது சரியா? உண்மை என்ன?" /></figure>இந்தியாவில் <a href="https://www.tv9tamilnews.com/technology/redmi-launched-redmi-note-17-and-note-17-pro-smartphones-in-china-91339.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போன்</a> பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறி வருகிறது பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, போனை சார்ஜ் செய்வது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது, போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்வது பாதுகாப்பானதா என்பதுதான். இது <a href="https://www.tv9tamilnews.com/technology/why-modern-smartphones-no-longer-have-removable-batteries-explained-in-tamil-91593.html" target="_blank" rel="noopener">பேட்டரியை</a> சேதப்படுத்துமா அல்லது போன் தீப்பிடிக்கும் அபாயத்தை அதிகரிக்குமா? இது குறித்துப் பலவிதமான கருத்துகள் இருந்தாலும், உண்மை நிலை வேறானது.
<h3>மேம்பட்ட பேட்டரி மேனேஜ்மென்ட் அமைப்புகள்</h3>
இப்போதெல்லாம், கிட்டத்தட்ட அனைத்து புதிய ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்மார்ட்போன்களிலும் மேம்பட்ட பேட்டரி மேனேஜ்மென்ட் அமைப்புகள் உள்ளன. பேட்டரி 100% சார்ஜ் ஆனதும் மின் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் சர்க்யூட்ரி இதில் உள்ளது. அதாவது, பேட்டரி முழுமையாக நிரம்பிய பிறகு தொடர்ந்து சார்ஜ் ஆகாது. எனவே, சாதாரண சூழ்நிலைகளில், போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்வதால் பேட்டரி வெடிக்கும் அல்லது அதிக சுமைக்கு உள்ளாகும் அபாயம் இல்லை.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/redmi-launched-redmi-note-17-and-note-17-pro-smartphones-in-china-91339.html">அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன்கள்!</a></strong>

இருப்பினும், இந்த வழக்கம் முற்றிலும் சிறந்தது என்று அர்த்தமல்ல. 100% சார்ஜ் ஆன பிறகு, பயன்பாடு அல்லது பின்னணிச் செயல்பாடுகள் காரணமாக சார்ஜ் அளவு 99%க்குக் குறைந்தால், அது மீண்டும் சார்ஜ் ஆகத் தொடங்கும். இந்தச் சுழற்சி இரவு முழுவதும் பலமுறை நிகழலாம். இவ்வாறு தொடர்ந்து நிகழும் சிறிய சார்ஜிங் சுழற்சிகள் பேட்டரியின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன; இது காலப்போக்கில் பேட்டரியின் திறனைக் குறைக்கக்கூடும்.
<h3>கவனத்தில் கொள்ள வேண்டியவை</h3>
போனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சார்ஜ் செய்யும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம். போனை தலையணைகள், போர்வைகள் அல்லது வெப்பம் வெளியேற முடியாத இடங்களில் வைக்க வேண்டாம். மேலும், போனின் மீது கனமான பொருட்களை வைப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது போனின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/friends-will-show-up-more-in-your-feed-in-x-a-new-update-91179.html">இனி உங்கள் எக்ஸ் Feed-ல் அதிகம் நண்பர்கள் தான் இருப்பார்கள்.. விரைவில் வரும் புதிய அம்சம்!</a></strong>

முடிந்தால், தூங்குவதற்கு முன்பே உங்கள் போனை சார்ஜ் செய்து, போதுமான அளவு சார்ஜ் ஆனதும் பிளக்கை அகற்றிவிடவும். இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டியவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மின் விநியோகத்தைத் தானாகவே துண்டிக்கும் ஸ்மார்ட் பிளக்குகள் அல்லது டைமர் வசதி கொண்ட சார்ஜிங் சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில், நவீன ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியான சார்ஜிங்கிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தேவையற்ற வகையில் இரவு முழுவதும் அவற்றை சார்ஜரில் வைத்திருக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. முறையான மற்றும் சீரான சார்ஜிங் முறை பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கவும், போனின் செயல்பாட்டைச் சிறப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆன்லைனில் ஹெல்மெட் வாங்கப்போறீங்களா? அப்போ இந்த 5 விஷயங்களை கவனிங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/buying-a-bike-helmet-online-check-these-5-things-before-you-order-92009.html</link>	
		<pubDate>Sun, 19 Jul 2026 16:02:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/buying-a-bike-helmet-online-check-these-5-things-before-you-order-92009.html</guid>
		            
			

    	<description><![CDATA[இப்போதெல்லாம், இருசக்கர வாகன ஓட்டிகள் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பல்வேறு ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் ஹெல்மெட்களை வாங்குகிறார்கள். அப்படி வாங்குவதில் ஆபத்து அதிகம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. ஆன்லைனில் ஹெல்மெட் வாங்கும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/helmet-buying-tips-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆன்லைனில் ஹெல்மெட் வாங்கப்போறீங்களா? அப்போ இந்த 5 விஷயங்களை கவனிங்க!" /></figure>இப்போதெல்லாம், இருசக்கர வாகன ஓட்டிகள் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பல்வேறு ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் ஹெல்மெட்களை வாங்குகிறார்கள். ஆனால், விலை குறைவாக இருக்கிறது என்பதற்காகவோ அல்லது டிசைன் நன்றாக உள்ளது என்பதற்காகவோ மட்டும் ஹெல்மெட் வாங்குவது உங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கலாம். எனவே, ஆன்லைனில் ஹெல்மெட் வாங்குவதற்கு முன் சில முக்கிய விஷயங்களைச் சரிபார்ப்பது அவசியம்.
<h3>ஆன்லைனில் ஹெல்மெட் வாங்கும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்</h3>
1. எந்தவொரு ஹெல்மெட்டையும் வாங்குவதற்கு முன், அதில் செல்லுபடியாகும் பாதுகாப்புச் சான்றிதழ் குறியீடுகள் உள்ளனவா என்று சரிபாருங்கள். பாதுகாப்புச் சோதனைகளில் தேர்ச்சி பெற்ற ஹெல்மெட் மட்டுமே விபத்தின் போது தலையைத் திறம்படப் பாதுகாக்க முடியும்.

2. அளவு சரியாக இல்லாவிட்டால் அல்லது தயாரிப்பில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதைத் திரும்பப் பெறவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ ​​முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பல ஆன்லைன் தளங்கள் 30 முதல் 90 நாட்கள் வரை திரும்பப் பெறும் அல்லது மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குகின்றன. வாங்குவதற்கு முன் இந்த விதிமுறைகளைப் படிப்பது நல்லது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/technology/are-you-going-to-buy-new-bike-analyze-these-things-before-buying-91175.html"> புதிதாக பைக் வாங்க போறீங்களா?.. இந்த விஷயங்கள் குறித்து கட்டாயம் யோசிக்க வேண்டும்!</a></strong>

3. தயாரிப்பு நிறுவனம் அளிக்கும் தகவல்களை மட்டும் நம்பாதீர்கள். ஏற்கனவே அந்த ஹெல்மெட்டைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் பதிவிட்ட கருத்துகள், ரேட்டிங்ஸ் மற்றும் உண்மையான புகைப்படங்களைப் பாருங்கள். இது ஹெல்மெட்டின் தரம், பொருத்தம் மற்றும் அதில் உள்ள சிக்கல்கள் குறித்த தெளிவான புரிதலை உங்களுக்கு வழங்கும்.

4. ஹெல்மெட்டுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக் காலம் உண்டு. பழைய சரக்குகளுக்கு (old stocks) அதிக தள்ளுபடி கிடைத்தாலும், அவற்றின் பாதுகாப்புத் திறன் குறைந்திருக்கலாம். எனவே, வாங்குவதற்கு முன் ஹெல்மெட்டின் தயாரிப்புத் தேதியைச் சரிபார்த்து, முடிந்தவரை சமீபத்தில் தயாரிக்கப்பட்ட தயாரிப்பைத் தேர்ந்தெடுங்கள்.

5. ஆன்லைனில் ஹெல்மெட் வாங்கும்போது, ​​அதை அணிந்து பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, முதலில் உங்கள் தலைச் சுற்றளவை துல்லியமாக அளவிடுங்கள். நிறுவனத்தின் அளவு அட்டவணைக்கு ஏற்ற ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுத்தால், அது சரியாகப் பொருந்தும் மற்றும் விபத்தின் போது சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/technology/drdo-completes-military-trials-of-secure-intercept-proof-quantum-communication-system-details-in-tamil-91140.html"> பாதுகாப்புக்காக இந்தியாவின் அடுத்தக்கட்ட டெக்னாலஜி.. களமிறங்கும் குவாண்டம் தொழில்நுட்பம்!</a></strong>

மொத்தத்தில், ஆன்லைனில் ஹெல்மெட் வாங்கும்போது, ​​விலை அல்லது வடிவமைப்பை விட உங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள். சரியான அளவு, செல்லுபடியாகும் பாதுகாப்புச் சான்றிதழ், வாடிக்கையாளர்களின் நல்ல விமர்சனங்கள், திரும்பப் பெறும் வசதி மற்றும் புதிய தயாரிப்புத் தேதி ஆகியவற்றைக் கொண்ட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பயணத்தைப் பாதுகாப்பானதாக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அசைமென்ட் முதல் இமெயில் வரை&#8230; நம் வேலைகளை எளிதாக்கும் சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/top-5-ai-chatbots-that-can-save-you-hours-on-emails-assignments-and-daily-tasks-91707.html</link>	
		<pubDate>Fri, 17 Jul 2026 21:24:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/top-5-ai-chatbots-that-can-save-you-hours-on-emails-assignments-and-daily-tasks-91707.html</guid>
		            
			

    	<description><![CDATA[செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறி வருகிறது. மாணவர்களின் படிப்பு முதல் அலுவலகப் பணிகள் வரை பல்வேறு வேலைகளை விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிக்க ஏஐ கருவிகள் உதவுகின்றன. அன்றாட வேலைகளை மேற்கொள்ள சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/chatgpt-ai.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அசைமென்ட் முதல் இமெயில் வரை&#8230; நம் வேலைகளை எளிதாக்கும் சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள்" /></figure><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/openai-testing-voice-models-in-chatgpt-which-talk-more-like-humans-photo-gallery-90227.html" target="_blank" rel="noopener">செயற்கை நுண்ணறிவு</a>தொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறி வருகிறது. மாணவர்களின் படிப்பு முதல் அலுவலகப் பணிகள் வரை பல்வேறு வேலைகளை விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிக்க ஏஐ கருவிகள் உதவுகின்றன. அசைன்மென்ட் எழுதுவது, பிரசன்டேஷன் தயாரிப்பது, இமெயில் உருவாக்குவது என பல்வேறு பணிகளில் ஏஐ சாட்பாட்கள் நமக்கு உதவுகின்றன. இந்த ஏஐ சாட்பாட்கள் நம் வேலையைக் குறைப்பதுடன், நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும். இந்த நிலையில் நம் வேலையை எளிமையாக்கும் 5 பிரபலமான <a href="https://www.tv9tamilnews.com/technology/the-data-you-are-providing-to-artificial-intelligence-is-really-safe-87602.html" target="_blank" rel="noopener">ஏஐ</a> சாட்பாட்கள் குறித்து பார்க்கலாம்.
<h3>1 .சாட்ஜிபிடி</h3>
மாணவர்கள் முதல் பணியாளர்கள் வரை பல்வேறு தரப்பினர் வரை சாட்ஜிபிடி பிரபலமானதாக இருக்கிறது. மாணவர்கள் கடினமான பாடங்களை எளிமையாக புரிந்துகொள்ளவும், தங்கள் பாடங்களுக்கான குறிப்புகளைத் தயாரிக்கவும், அசைன்மென்ட்களை முடிக்கவும், தேர்வுகளுக்குத் தயாராகவும் சாட்ஜிபிடி பெரிதும் கைகொடுக்கும். அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் இ-மெயில் எழுதுவது, கட்டுரைகள் உருவாக்குவது, நீண்ட கட்டுரைகளை சுருக்குவது, பிரசன்டேஷன்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவது மற்றும் புதிய வணிக யோசனைகளை பெறுவது போன்ற பணிகளுக்கும் இது பெரிதும் உதவும்.

<strong>இதையும் படிக்க :  <a href="https://www.tv9tamilnews.com/technology/friends-will-show-up-more-in-your-feed-in-x-a-new-update-91179.html">இனி உங்கள் எக்ஸ் Feed-ல் அதிகம் நண்பர்கள் தான் இருப்பார்கள்.. விரைவில் வரும் புதிய அம்சம்!</a></strong>
<h3>2. கூகுள் ஜெமினி</h3>
கூகுள் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பாக ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் டிரைவ் போன்ற சேவைகளை பயன்படுத்துபர்களுக்கு கூகுள் ஜெமினி பெரிதும் உதவும். புதிய இமெயில் உருவாக்க, ஆவணங்களை தெளிவாக புரிந்துகொள்ள, புதிய கண்டென்ட்களை உருவாக்குவது, தகவல்களை ஆய்வு செய்வது என இது நம் வேலைகளை எளிதாக்கும். குறிப்பாக அலுவலக பணியாளர்களுக்கு பெரிதும் உதவும்.
<h3>3. மைக்ரோசாஃப்ட் கோபைலட்</h3>
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் ஏஐ சாட்பாட் ஏஐ தொழில்முறை பணிகளில் பெரிதும் கைகொடுக்கும். குறிப்பாக மைக்ரோ சாஃப்ட் வேர்டு ஆவணங்களை மேம்படுத்துவது, பவர்பாயிண்ட் பிரசண்டேசன்களை உருவாக்குவது, எக்சல் டேட்டாக்களை உருவாக்குவதுஇமெயில்களை உருவாக்குவது போன்ற பல பணிகளுக்கு பெரிதும் உதவும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/drdo-completes-military-trials-of-secure-intercept-proof-quantum-communication-system-details-in-tamil-91140.html">பாதுகாப்புக்காக இந்தியாவின் அடுத்தக்கட்ட டெக்னாலஜி.. களமிறங்கும் குவாண்டம் தொழில்நுட்பம்!</a></strong>
<h3>4. கிளௌட் ஏஐ</h3>
நீண்ட ஆவணங்கள் மற்றும் எழுத்து பணிகளுக்கு கிளெளட் ஏஐ பெரிதும் உதவம். நீண்ட ஆவணங்களை விரைவாக படித்து புரிந்துகொள்வது, புதிய ஆவணங்களை உருவாக்குவது, கட்டுரைகளை திருத்துவது, ஆராய்ச்சிக்கான தகவல்களை பெறுதவு என இந்த கிளௌட் ஏஐ பெரிதும் உதவும். அதிக அளவிலான உரைகளுடன் பணிபுரியும் மாணவர்கள் மற்றும் தொழில்முறை பணியாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம்.
<h3>5. பெர்ப்லெக்ஸிட்டி</h3>
விரைவான தகவல்களை பெற, பல்வேறு தலைப்புகளின் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இந்த ஏஐ பெரிதும் உதவும். மாணவர்கள், பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்பவர்களுக்கும் இந்த பெர்ப்லெக்ஸிட்டி ஏஐ கைகொடுக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நியூ ஸ்மார்ட்போன்களில் ஏன் பேட்டரியைக் கழற்ற முடிவதில்லை? இதோ அதற்கான காரணங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/why-modern-smartphones-no-longer-have-removable-batteries-explained-in-tamil-91593.html</link>	
		<pubDate>Fri, 17 Jul 2026 14:07:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/why-modern-smartphones-no-longer-have-removable-batteries-explained-in-tamil-91593.html</guid>
		            
			

    	<description><![CDATA[Smart Phone Tips: ஒரு காலத்தில், செல்போன்களின் பேட்டரி எளிதாகக் கழற்றிவிட்டுப் புதிய ஒன்றைப் பொருத்த முடிந்தது. ஆனால் இன்றோ, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் மூடப்படாத அல்லது கழற்ற முடியாத மின்கலம் உள்ளது. இந்த மாற்றத்திற்குப் பின்னால் பல தொழில்நுட்பக் காரணங்கள் உள்ளன]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/smartphone-battery.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நியூ ஸ்மார்ட்போன்களில் ஏன் பேட்டரியைக் கழற்ற முடிவதில்லை? இதோ அதற்கான காரணங்கள்!" /></figure>ஒரு காலத்தில், நோக்கியா உட்பட பெரும்பாலான மொபைல் போன்களில் பேட்டரியை எளிதாகக் கழற்றிவிட்டுப் புதியதைப் பொருத்த முடிந்தது. பலர் ஒரு போனில் இரண்டு-மூன்று பேட்டரிகளைப் பயன்படுத்தினர். ஆனால் இன்றைய பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கழற்ற முடியாத (சீல் செய்யப்பட்ட) பேட்டரி மட்டுமே உள்ளது. அப்படியென்றால், நிறுவனங்கள் ஏன் இந்த மாற்றத்தைச் செய்துள்ளன? இதற்கு ஒரே ஒரு காரணம் இல்லை, பல தொழில்நுட்பக் காரணங்கள் உள்ளன.  முதலில், இன்றைய ஸ்மார்ட்போன்கள் மெல்லியதாகவும் அதிக சக்தி வாய்ந்ததாகவும் மாறி வருகின்றன. மேலும், அவை ஒரு பெரிய கேமரா, கம்பியில்லா சார்ஜிங், வேகமான செயலி மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரி ஆகியவற்றை ஒரே சாதனத்தில் உள்ளடக்க வேண்டும். பேட்டரியைக் கழற்ற முடிந்தால், இத்தகைய கச்சிதமான வடிவமைப்பை அடைவது கடினமாக இருக்கும். அதனால்தான் நிறுவனங்கள் மூடப்பட்ட பேட்டரியைத் தேர்ந்தெடுத்துள்ளன.

மற்றொரு முக்கிய காரணம் தொலைபேசியின் பாதுகாப்பு. தொலைபேசி திருடப்படும்போது, ​​அகற்றக்கூடிய பேட்டரியை நீக்கிவிட்டால், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உடனடியாக முடக்கிவிட முடியும். ஆனால், மூடப்பட்ட பேட்டரியை எளிதில் அகற்ற முடியாது. இது திருடப்பட்ட தொலைபேசியைக் கண்காணிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும், மூடப்பட்ட வடிவமைப்பு, தொலைபேசிக்குள் தண்ணீர் மற்றும் தூசி நுழைவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது. இதனால்தான் இன்று பல ஸ்மார்ட்போன்கள் IP மதிப்பீட்டுடன் நல்ல நீர் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளன.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-soon-offer-cloud-backups-for-chats-what-is-it-all-about-91106.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப் சாட்டை Back Up செய்ய பிரத்யேக கிளவுட்.. விரைவில் அறிமுகம்!</a>
<h3>குறைபாடுகள் என்ன?</h3>
ஆனால், இந்த மாற்றத்தில் சில குறைபாடுகளும் உள்ளன. பேட்டரியின் செயல்திறன் குறைந்தாலோ அல்லது அது வீங்கினாலோ, பயனரால் அதைத் தாங்களாகவே மாற்ற முடியாது. பேட்டரியை மாற்றுவதற்காக அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். இது பழுதுபார்க்கும் செலவையும் அதிகரிக்கக்கூடும்.

சுவாரஸ்யமாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) சமீபத்தில் கையடக்க மின்னணு சாதனங்களில் எளிதில் மாற்றக்கூடிய மின்கலங்கள் இருக்க வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதி, ஐரோப்பாவில் விற்கப்படும் சில ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பை மாற்றக்கூடும். ஆனால், கழற்றி மாற்றக்கூடிய மின்கலங்களின் சகாப்தம் உலகளவில் முழுமையாகத் திரும்புமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இணைவ சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்.. என்ன என்ன தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/these-things-in-your-house-can-damage-the-wi-fi-speed-91382.html</link>	
		<pubDate>Thu, 16 Jul 2026 14:53:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/these-things-in-your-house-can-damage-the-wi-fi-speed-91382.html</guid>
		            
			

    	<description><![CDATA[Wi Fi Speed Issue In House | பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளில் வைஃபை மிக மெதுவாக செயல்படுவதாக கூறுகின்றனர். அதற்கு அவர்கள் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களை குறை கூறுகின்றனர். ஆனால், வீட்டில் இருக்கும் சில பொருட்களும் கூட இந்த வைஃபை சிக்கலுக்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/wi-fi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இணைவ சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்.. என்ன என்ன தெரியுமா?" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் இணைய சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த உலகமும் இணைய சேவையின் மூலம் ஒரு சிறிய கிராமம் ஆக மாறியுள்ளது. சமூக ஊடகங்களை பயன்படுத்துவது, நண்பர்கள், உறவினர்கள் உரையாடுவது என அனைத்திற்கு இணைய வசதி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தகைய சூழலில் இணைய வசதி இல்லை என்றாலோ அல்லது இணைய வசதி சீராக இல்லை என்றாலோ மிகவும் கடினமாக மாறிவிடும். அப்படி, உங்கள் வீட்டில் இணைய சேவை மிகவும் மெதுவாக உள்ளது என்றால் அதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.
<h3>இணைவ சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்</h3>
நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்கள் இணைய வசதியை பாதிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.
<h3>மைக்ரோவேவ் ஓவன்</h3>
நாம் வீட்டில் பயன்படுத்தும் மைக்ரோவேவ் ஓவன், நமது இணைய சேவை சிக்னல்களை அதிக அளவு பாதிக்க செய்கிறது. பெரும்பாலான ரவுட்டர்கள் ஜிகாஹெடர்ட்ஸ் அலைவரிசையை பயன்படுத்துகின்றன. எதே அலைவரிசையில் தான் ஓவன்களும் இயங்குகின்றன. இந்த நிலையில், பழைய அல்லது பழுதான ஓவன்களை பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளியேரும் அலைகள் சிக்னலை முழுமையாக தடுத்துவிடும் ஆபத்து உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-soon-offer-cloud-backups-for-chats-what-is-it-all-about-91106.html">WhatsApp : வாட்ஸ்அப் சாட்டை Back Up செய்ய பிரத்யேக கிளவுட்.. விரைவில் அறிமுகம்!</a>
<h3>கண்ணாடிகள், டிவி திரைகள்</h3>
வீட்டில் உள்ள பெரிய கண்ணாடிகள் மற்றும் டிவி திரைகளும் கூட இணைய சிக்னல்களை பாதிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. கண்ணாடியில் பட்டு ஒளி எப்படி சிதறுகிறதோ, அதேபோல ரேடியோ அலைகளும் பல்வேறு திசைகளில் சிதறும். எனவே ரவுட்டருக்கு நேராக இத்தகைய பொருட்களை வைக்காமல் இருப்பது சீரான இணைய வசதியை பெற உதவியாக இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/oneplus-and-xiaomi-hiked-its-mobile-phones-prices-up-to-5000-rupees-91012.html">ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.5,000 வரை உயர்த்திய ஒன்பிளஸ் மற்றும் ஜியோமி நிறுவனங்கள்!</a>
<h3>வீட்டின் தன்மை</h3>
சீரான இணைய சேவை பெற வீட்டின் தன்மையும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. அதாவது, செங்கல் மற்றும் கான்கிரீட் கொண்டு கட்டப்படும் சுவர்கள் தடிமனாக இருக்கும். அவற்றில் சிக்னல்கள் எளிதில் ஊடுருவ முடியாது. இதுவே மரத்தால் ஆன வீடுகளில் மிக சுலபமாக ஊடுருவும். எனவே ரவுட்டரை வீட்டின்  உயரமான மற்றும் மையப்பகுதியில் வைப்பது அனைத்து அறைகளிலும் சீரான இணைய சேவை பெற வழிவகை செய்யும். ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>