<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>சமீபத்திய தொழில்நுட்பம் செய்திகள் Technology News in Tamil: டெக் தமிழ்  செய்திகள்</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/technology/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/technology</link>
 <description>Technology News in Tamil, டெக் தமிழ்  செய்திகள்: Latest Technology News and Gadget updates in Tamil Online at tv9tamilnews.com. Gadget Reviews, Smartphone Reviews, new laptop releases and more in Tamil</description><lastBuildDate>Sun, 17 May 2026 14:58:22 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது &#8211; விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/vishal-has-stated-that-it-is-regrettable-that-the-honorable-minister-rajmohan-has-assumed-charge-as-the-minister-for-film-technology-and-cinematography-79046.html</link>	
		<pubDate>Sun, 17 May 2026 14:58:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/vishal-has-stated-that-it-is-regrettable-that-the-honorable-minister-rajmohan-has-assumed-charge-as-the-minister-for-film-technology-and-cinematography-79046.html</guid>
		            
			

    	<description><![CDATA[Actor Vishal X Post : தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று புதிய அமைச்சரவையை உருவாகி உள்ளார் தளபதி விஜய். இதில் ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது என்று நடிகர் விஷால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vishal-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது &#8211; விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு" /></figure>தமிழ் சினிமாவில் மக்கள் மனதை கவர்ந்து உச்ச நடிகராக வலம் வந்த தளபதி விஜய் தற்போது தமிழ் நாட்டின் அரசியலிலும் மக்களின் மனதை கவர்ந்து தமிழ் நாட்டின் முதமைச்சராக பதவி ஏற்றுள்ளார். அதன்படி நடந்து முடிந்த 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/kamal-haasans-6-key-demands-to-cm-vijay-for-tamil-film-industry-reforms-78950.html" target="_blank" rel="noopener">நடிகர் தளபதி விஜய்</a> தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் சார்பாக போட்டியிட்டார். தமிழக சட்டமன்ற தொகுதிகளில் அதிக அளவில் வெற்றிப் பெற்று பெரும்பான்மையை நிரூபித்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார் தளபதி விஜய். தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பலரும் அவருக்கு வாழ்த்துகளையும் அறிவுறைகளையும் வழங்கி வருகின்றனர். மேலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற பலரை தேர்வு செய்து அமைச்சரவையிலும் அமர வைத்துள்ளார் தளபதி விஜய்.

தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் அமைச்சரை தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். அதில் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராக ராஜ் மோகனை தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ள நடிகர் விஷால் ராஜ் மோகனை அமைச்சராக தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
<h3>ராஜ்மோகன் திரைப்பட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது:</h3>
அந்தப் பதிவில் விஷால் கூறியதாவது, வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சர்களாக்குவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது. பெரும் நஷ்டத்தில் இருக்கும் சினிமா துறையை தூக்கி விடுவதற்கு அடிமட்டத்திலிருந்து இந்தத் துறையின் ஒரு அங்கமாக இருந்து, கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் நமது முதலமைச்சரை விட இந்த துறையை சரியாக கவனித்துக்கொள்ளும் ஒரு நபர் இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/a-video-is-going-viral-in-which-trisha-is-seen-walking-away-while-smiling-after-a-fan-spoke-about-vijay-78821.html">விஜய் குறித்து ரசிகர் பேசியபோது த்ரிஷா கொடுத்த ரியாக்‌ஷன் – வைரலாகும் வீடியோ</a></strong>
<h3>நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Happy to see <a href="https://twitter.com/hashtag/CMJosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay</a> allocating ministries to respective elected MLAs but it's disheartening to see honorable minister <a href="https://twitter.com/hashtag/Rajmohan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Rajmohan</a> to be in charge as minister of Film Technology and Cinematograph Act. How would I or we as a body or as an association render our requests or…</p>
— Vishal (@VishalKOfficial) <a href="https://twitter.com/VishalKOfficial/status/2055905870245204103?ref_src=twsrc%5Etfw">May 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/office-bearers-of-the-actors-association-personally-visited-and-conveyed-their-congratulations-to-chief-minister-joseph-vijay-78830.html">முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சங்க நிர்வாகிகள்</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>mAadhaar செயலி நிறுத்தம்? புதிய ஆதார் செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/uidai-shuts-down-maadhaar-app-launches-new-app-with-better-privacy-features-78962.html</link>	
		<pubDate>Sat, 16 May 2026 21:38:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/uidai-shuts-down-maadhaar-app-launches-new-app-with-better-privacy-features-78962.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Aadhaar App : தற்போது பயன்பாட்டில் உள்ள mAadhaar செயலியை நிறுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் பழைய செயலியை பயன்படுத்தி வந்தவர்கள் இனி புதிய ஆதார் செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/new-aadhaar-app.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="mAadhaar செயலி நிறுத்தம்? புதிய ஆதார் செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தல்" /></figure>இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI, தற்போது பயன்படுத்தப்பட்டு வந்த <a href="https://www.tv9tamilnews.com/business/aadhaar-card-will-not-have-these-details-anymore-new-card-will-be-introduced-within-2026-75010.html" target="_blank" rel="noopener">ஆதார்</a> செயலியை விரைவில் முற்றிலுமாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து பயனர்கள் புதிய ஆதார் செயலியை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. புதிய ஆதார் செயலியை பாதுகாப்பு மற்றும் பிரைவசி வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பழைய ஆதார் செயலியை காட்டிலும் புதிய ஆதார் செயலி அதிக பாதுகாப்பு அதிக வசதிகளுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
<h3>புதிய ஆதார் செயலி அறிமுகம்</h3>
தற்போது பயன்பாட்டில் உள்ள mAadhaar செயலியை நிறுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் பழைய செயலியை பயன்படுத்தி வந்தவர்கள் இனி புதிய ஆதார் செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். புதிய ஆதார் செயலியில் பல மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்ப்டுள்ளன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/users-can-get-final-settlement-within-3-days-employee-provident-fund-organizations-update-photo-gallery-78670.html">இனி மொத்த செட்டில்மெண்டும் வெறும் 3 நாளில்.. இபிஎஃப்ஓவில் வரும் முக்கிய மாற்றம்!</a></strong>
<ul>
 	<li>கியூஆர் கோட் மூலம் ஆதார் பகிர்வு</li>
 	<li>முக அடையாள சரிபார்ப்பு</li>
 	<li>ஆஃப்லைன் ஆதார் வெரிஃபிகேஷன்</li>
 	<li>பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக் வசதி</li>
 	<li>பிரைவசி கண்ட்ரோல் வசதி</li>
</ul>
<h3>அதிக பாதுகாப்பு வசதிகளுடன் புதிய ஆதார் செயலி</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The <a href="https://twitter.com/hashtag/mAadhaar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#mAadhaar</a> App is retiring soon. Now experience a smarter, faster, and more secure digital journey with the new <a href="https://twitter.com/hashtag/AadhaarApp?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AadhaarApp</a>. From secure QR-based <a href="https://twitter.com/hashtag/Aadhaar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Aadhaar</a> sharing to enhanced privacy controls and seamless access to Aadhaar services — the new app is designed to make your… <a href="https://t.co/snfeUx4Rgr">pic.twitter.com/snfeUx4Rgr</a></p>
— Aadhaar (@UIDAI) <a href="https://twitter.com/UIDAI/status/2055184740484018327?ref_src=twsrc%5Etfw">May 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
புதிய செயலி மூலம் கியூஆர் கோட் அடிப்படையில் ஆதாரை பாதுகாப்பாக பகிர முடியும். இதனால் இனி கையில் ஜெராக்ஸ் காப்பி எடுத்து செல்ல வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பழைய ஆதார் செயலிகளில் இருந்த தகவல்கள் புதிய செயலிக்கு தானாக மாறாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அதனால் பயனர்கள் புதிய செயலியில் ஆதார் புரொஃபைலை மீண்டும் மாற்ற வேண்டியிருக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/you-can-create-1-crore-rupees-by-investing-post-office-scheme-know-how-to-do-it-78616.html">அஞ்சல சேமிப்பு திட்டங்கள் போதும்.. சுலபமாக ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம்.. எப்படி?</a></strong>
<h3>புதிய ஆதார் செயலியை எப்படி டவுன்லோடு செய்வது?</h3>
இதனை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் புதிய ஆதார் செயலியை டவுன்லோடு செய்யலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி மூலம் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். சிலருக்கு முக அடையாள வவரங்கள் கேட்கப்படலாம். பின்னர் பின் அல்லது விரல் ரேகை மூலம் லாக் செய்யலாம்.

பயனர்களின் பிரைவசி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது தான் புதிய ஆதார் செயலியின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது. இதன் மூலம் நம் அனைத்து தகவல்களையும் கட்டுப்படுத்த முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் &#8211; வந்தாச்சு சிபிஐயின் அபய் ஏஐ</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/cbi-launches-abhay-ai-tool-to-prevent-digital-arrest-and-online-fraud-scams-78778.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 21:58:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/cbi-launches-abhay-ai-tool-to-prevent-digital-arrest-and-online-fraud-scams-78778.html</guid>
		            
			    	<description><![CDATA[இதனை தவிர்க்க சிபிஐ அபய் ஏஐ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் மக்கள் தங்களுக்கு வரும் நோட்டீஸ்களை அது உண்மையா இல்லையா என தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளை தவிர்க்க முடியும். அது குறித்து விரிவா பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/cbi-launches-abhay-ai-tool-to-prevent-digital-arrest-and-online-fraud-scams-78778.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/abhay-ai.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Abhay Ai" /></a></dt><p>நாடு முழுவதும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகளை தடுக்க, சிபிஐ தற்போது  அபய் (ABHAY) என்ற புதிய ஏஐ அடிப்படையிலான வெரிஃபிகேஷன் முறையை  அறிமுகப்படுத்தியுள்ளது.  
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/cbi-launches-abhay-ai-tool-to-prevent-digital-arrest-and-online-fraud-scams-78778.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/abhay-ai-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Abhay Ai 2" /></a></dt><p>இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பொதுமக்களுக்கு வரும் சிபிஐ நோட்டீஸ் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சில நிமிடங்களிலேயே சரிபார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/cbi-launches-abhay-ai-tool-to-prevent-digital-arrest-and-online-fraud-scams-78778.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/abhay-ai-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Abhay Ai 3" /></a></dt><p>சமீப காலமாக சைபர் குற்றவாளிகள் தங்களை சிபிஐ, போலீஸ்,  அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல காட்டி மக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலியான நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/cbi-launches-abhay-ai-tool-to-prevent-digital-arrest-and-online-fraud-scams-78778.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/abhay-ai-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Abhay Ai 4" /></a></dt><p>அந்த நோட்டீஸில் பண மோசடி, போதைப்பொருள் வழக்கு, வருமானவரித்துறை மோசடி  போன்ற வழக்குகளில் உங்கள் பெயர் உள்ளது என்று கூறப்படுகிறது. பின்னர் வீடியோ கால் மூலம் போலியான விசாரணை நடத்தி, நீங்கள் டிஜிட்டல் அரஸ்டில் இருக்கிறீர்கள் என்று பயமுறுத்துகின்றனர். இதன் மூலம், வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/cbi-launches-abhay-ai-tool-to-prevent-digital-arrest-and-online-fraud-scams-78778.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/abhay-ai-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Abhay Ai 5" /></a></dt><p>இதனை தவிர்க்க சிபிஐ அபய் ஏஐ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் மக்கள் தங்களுக்கு வரும் நோட்டீஸ்களை அது உண்மையா இல்லையா என தெரிந்துகொள்ளலாம். இதற்காக சிபிஐ அதிகாரப்பூர்வ வெப் சைட்டிற்கு செல்ல வேண்டும். அதில் அபய் லோகோவை கிளிக் செய்ய வேண்டும். அதில் நம் மொபைல் நம்பர் கொடுத்து ஓடிபி மூலம் வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். பின்னர் நம் அந்த நோட்டீஸை அப்லோட் செய்தால் அது உண்மையா இல்லை போலியானதா என தெரிவிக்கும். 
</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>இனி 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடையாது&#8230; கூகுள் அதிரடி நடவடிக்கை &#8211; காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/google-changes-gmail-storage-rule-new-accounts-need-phone-verification-for-full-15gb-78762.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 21:22:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/google-changes-gmail-storage-rule-new-accounts-need-phone-verification-for-full-15gb-78762.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Gmail Storage Rule : புதிதாக ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுண்ட் உருவாக்கும் பயனர்களுக்கு ஆரம்பத்தில் வெறும் 5ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்படும். முழுதாக 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் பெற வேண்டுமெனில், பயனர் தனது போன் நம்பரை வெரிஃபை செய்ய வேண்டும் என கூகுள் தெரிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/new-gmail-storage-rule.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடையாது&#8230; கூகுள் அதிரடி நடவடிக்கை &#8211; காரணம் என்ன?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/technology/google-warns-android-phones-with-old-software-face-serious-security-risk-57165.html" target="_blank" rel="noopener">கூகுள்</a> தனது ஜிமெயில் மற்றும் கூகுள் அக்கவுண்ட் பயனர்களுக்கு புதிய முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை புதிய கூகுள் அக்கவுண்ட்டை உருவாக்கும் அனைவருக்கும்<a href="https://www.tv9tamilnews.com/technology/users-now-can-easily-change-their-gmail-id-google-announced-68157.html" target="_blank" rel="noopener"> ஜிமெயில்</a>, கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் போட்டோஸ் சேவைகளுக்காக 15ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜை வழங்கி வந்தது. இந்த நிலையில் தற்போது கூகுள் அந்த விதிகளில் மிகப்பெரிய மாற்றம் செய்துள்ளது. அதன்படி இனி 15ஜிபி ஸ்டோரேஜை பெற போன் நம்பர் வெரிஃபிகேஷன் அவசியம் என தெரிவித்துள்ளது.
<h3>இனி 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடையாது</h3>
புதிய விதிகளின் படி, புதிதாக ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுண்ட் உருவாக்கும் பயனர்களுக்கு ஆரம்பத்தில் வெறும் 5ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்படும். முழுதாக 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் பெற வேண்டுமெனில், பயனர் தனது போன் நம்பரை வெரிஃபை செய்ய வேண்டும் என கூகுள் தெரிவித்துள்ளது. அதாவது போன் நம்பரை வெரிஃபை செய்த பிறகு மீதமுள்ள 10ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படும். இது ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ் ஆகியவற்றுக்கு பொருந்தும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/did-instagram-copied-snapchat-feature-and-named-as-instants-how-the-new-feature-works-78636.html">ஸ்னாப்சாட்டை காப்பி அடித்த இன்ஸ்டாகிராம்?.. புதிய இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் எப்படி உள்ளது?</a></strong>

கூகுள் தெரிவித்த தகவலின் படி போலி கணக்குகள், பாட்ஸ் பயன்பாட்டை கட்டுப்படுத்தவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பலர் தொடர்ந்து கூகுள் அக்கவுண்டை தொடங்கி, இலவச ஸ்டோரேஜை தவறாக பயன்படுத்துவதாக கூகுள் கண்டறிந்துள்ளது. இதனை தடுக்க போன் நம்பர் வெரிஃபிகேஷன் கட்டாயமக்கப்பட்டுள்ளது.

கூகுளின் கிளவுட் ஸ்டோரேஜ் தேவைகள் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் டேட்டா ஸ்டோரேஜ் சர்வர், ஹார்வேர்டு செலவுகள் போன்ற செலவுகள் அதிகரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இலவச ஸ்டோரேஜ் வழங்கும் முறையை கூகுள் தற்போது கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு கூகுள் சப்போர்டடட் பேஜில் எல்லா கூகுள் கணக்குகளுக்கும் 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/new-online-scam-targeting-public-with-jpeg-images-cyber-security-agencies-warned-78595.html">JPEG புகைப்படங்கள் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள்!</a></strong>

ஆனால் தற்போது அது 15 ஜிபி வரை என மாற்றப்பட்டுள்ளது. அதாவது இனி அனைவருக்கும் 15ஜிபி உடனடியாக கிடைக்காது என்பதை குறிக்கிறது. ஆனால் போன் நம்பர் வெரிஃபிகேஷன் என்பது பயனர்களுக்கு அவர்களின் பிரைவசி குறித்து கவலையை உருவாக்கியுள்ளது. பலர் வெறும் இமெயில் பயன்பாட்டிற்காக போன் நம்பரை வழங்க விரும்புவதில்லை. அப்படிப்பட்ட பயனர்கள் இனி 5ஜிபி ஸ்டோரேஜ் உடன் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிரது. ஆனால் கூகுளின் இந்த நடவடிக்கையால் போலி கணக்குகள் குறையலாம் என கூறப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்மார்ட்போனை பெற்றோர்கள் ஈஸியா பயன்படுத்த 5 வழிகள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/hidden-smartphone-features-that-can-make-life-easier-for-your-parents-78754.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 20:40:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/hidden-smartphone-features-that-can-make-life-easier-for-your-parents-78754.html</guid>
		            
			

    	<description><![CDATA[Smartphone Tips For Parents : நம் பெற்றோருக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது சற்று சிக்கலாகவும் தோன்றும். குறிப்பாக போன் கால் தவிர பிற வசதிகள் அவர்களு்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சில ஸ்மார்ட்போனில் உள்ள சில எளிய ஆப்சன்கள் அதன் பயன்பாட்டை எளிதாக மாற்றுகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/smartphone-tips-for-parents-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்மார்ட்போனை பெற்றோர்கள் ஈஸியா பயன்படுத்த 5 வழிகள்" /></figure>இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. ஆனால், மொபைல்களில் இருக்கும் பல பயனுள்ள வசதிகள் குறித்து பெற்றோர்களுக்கு முழுமையாக தெரியாமல் இருக்கலாம். நம் முந்தைய தலைமுறையினரில் சிலருக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது சற்று சிக்கலாகவும் தோன்றும். குறிப்பாக போன் கால் தவிர பிற வசதிகள் அவர்களு்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சில ஸ்மார்ட்போனில் உள்ள சில எளிய ஆப்சன்கள் அதன் பயன்பாட்டை எளிதாக மாற்றுகின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
<h3>வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆப்சன்</h3>
ஸ்மார்ட்போனில் இருக்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி நம் பெற்றோர்களுக்கும் வயதனாவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதியின் மூலம் டைப் செய்யும் சிக்கல் இல்லாமல் நம் கேள்விகள் கேட்கலாம், பாடல்களை கண்டுபிடிக்கலாம். மொழிபெயர்ப்பு செய்யலாம்., நமக்கு தேவையானவற்ற இணையத்தில் தேடலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/did-instagram-copied-snapchat-feature-and-named-as-instants-how-the-new-feature-works-78636.html">ஸ்னாப்சாட்டை காப்பி அடித்த இன்ஸ்டாகிராம்?.. புதிய இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் எப்படி உள்ளது?</a></strong>
<h3>Do Not Disturb Mode</h3>
அதிகமான ஸ்பாம் போன் கால்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் காரணமாக பலரின் தூக்கம் மற்றும் அமைதி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மதிய தூக்கம் போன்ற முக்கிய தருணங்களில் அடிக்கடி வரும் நோட்டிஃபிகேஷன்கள் அவர்களுக்கு தொந்தரவு தரலாம். இதற்கு Do Not Disturb Mode மிகவும் உதவியாக இருக்கும். இந்த வசதியை இயக்கினால் தேவையற்ற போன் கால்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். தூங்கும் போதோ அல்லது முக்கியமான தருணங்களிலோ இந்த ஆப்சனை தேர்ந்தெடுக்கும் போது எந்த தொல்லையும் இல்லாமல் நம்மால் இருக்க முடியும்.
<h3>கூகுள் லென்ஸ்</h3>
கூகுள் லென்ஸ் வசதி பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஒரு அம்சமாகும். இதன் மூலம், தெரியாத பொருட்களை கண்டுபிடிக்கலாம்
மருந்து பெயர்களை படிக்கலாம். வெளிநாட்டு மொழிகளை மொழிபெயர்க்கலாம். உணவுப் பொருட்களை அடையாளம் காணலாம். கூகுள் லென்ஸ் மூலம் கேமராவை ஒரு பொருளின் மேல் காட்டினாலே அந்த பொருள் குறித்த தகவல்களை கூகுள் லென்ஸ் காட்டும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/new-online-scam-targeting-public-with-jpeg-images-cyber-security-agencies-warned-78595.html">JPEG புகைப்படங்கள் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள்!</a></strong>
<h3>ஸ்பிலிட் ஸ்கிரீன் ஆப்சன்</h3>
ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை பயன்படுத்த உதவும் வசதிதான் ஸ்பிலிட் ஸ்கிரீன் வசதி. உதாரணமாக நாம் யூடியூப் வீடியோ பார்த்துக்கொண்டே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப முடியும். அதாவது ஒரு செயலியை மூடிவிட்டு வேறு செயலிக்கு செல்ல தேவையில்லை.
<h3>ஸ்கிரீன் டைம்</h3>
பல பெற்றோர்கள் மொபைல் பயன்படுத்திய பிறகு ஸ்கிரீன் ஆஃப் செய்ய மறந்துவிடுவார்கள். இதனால் பேட்டரி வேகமாக காலியாகும். இந்த நிலையில் ஸ்கிரீன் டைம்அவுட் வசதி மூலம், சில நிமிடங்கள் போன் பயன்படுத்தப்படவில்லை என்றால் ஸ்கிரீன் தானாக Off ஆகிவிடும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வயர்லஸ் சார்ஜிங் ஆபத்தானதா? உண்மை என்ன? விவரம் இதோ</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/does-wireless-charging-damage-your-phone-battery-here-is-the-truth-78701.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 18:22:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/does-wireless-charging-damage-your-phone-battery-here-is-the-truth-78701.html</guid>
		            
			

    	<description><![CDATA[Wired Charging Vs Wireless Charging : வீடுகள், அலுவலகங்கள், கார்கள் மட்டுமல்லாமல் தற்போது  ஃபர்னிச்சர்களிலும் கூட வயர்லஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு வயர்லஸ் சார்ஜிங் பயன்படுத்துவது மொபைல் பேட்டரியின் செயல்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/wired-charging-vs-wireless-charging.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வயர்லஸ் சார்ஜிங் ஆபத்தானதா? உண்மை என்ன? விவரம் இதோ" /></figure>இன்றைய காலத்தில் வயர்லஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போன்</a> பயனர்களிடையே வேகமாக பிரபலமாகி வருகிறது. வீடுகள், அலுவலகங்கள், கார்கள் மட்டுமல்லாமல் தற்போது சில சோபா போன்ற ஃபர்னிச்சர்களிலும் கூட வயர்லஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சார்ஜிங் கேபிள் பயன்படுத்தாமல், <a href="https://www.tv9tamilnews.com/technology/do-not-let-your-smartphone-battery-goes-down-from-20-perventage-75226.html" target="_blank" rel="noopener">மொபைலை சார்ஜிங்</a> பேட் மீது வைத்தாலே சார்ஜ் ஆகும் இந்த தொழில்நுட்பம் பலருக்கும் வசதியாக உள்ளது. ஆனால், நீண்ட காலத்திற்கு வயர்லஸ் சார்ஜிங் பயன்படுத்துவது மொபைல் பேட்டரியின் செயல்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
<h3>வயர்லஸ் சார்ஜிங் பாதுகாப்பானதா?</h3>
இந்த நலையில் , வயர்லஸ் சார்ஜிங் முழுமையாக ஆபத்தானது இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நவீன ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் வயர்லஸ் சார்ஜிங்கை தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தினமும் தொடர்ந்து வயர்லஸ் சார்ஜிங்கை பயன்படுத்துவது பேட்டரியின் செயல்திறனை குறைக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html">உங்கள் போன் காணாமல் போனால் உடனே செய்ய வேண்டிய 4 விஷயங்கள்</a></strong>

வயர்லஸ் சார்ஜரில் இருக்கும் டிரான்ஸ்மிட்டர் காயில், ஆல்டர்நேட்டிங்க கரண்ட் மூலம் மேக்னெட்டிக் ஃபீல்டை உருவாக்குகிறது. பின்னர் மொபைலுக்குள் இருக்கும் ரிசீவர் காயிலை அந்த பவரரை டைரக்ட் கரண்ட்டாக மாற்றி பேட்டரிக்கு அனுப்புகிறது.

இந்த செயல்முறையில் அனைத்து மின்சாரமும் பேட்டரிக்க்கு செல்லாது. இதனால் வயர்லஸ் சார்ஜிங்கின் போது போன் அதிகமாக சூடாகும். சாதாரண சார்ஜரில் கேபிள் மூலம் சார்ஜ் செய்யும் 5 சதவிகிதம் வரை மட்டுமே எனர்ஜி வீணாகும். இதுவே வயர்லஸ் சார்ஜரில் 20 முதல் 30 சதவிகிதம வரை எனர்ஜி வீணாகிறது. இதுவே வயர்லஸ் சார்ஜிங்கின் போது போன் அதிக வெப்பமடைகிறது.

வயர்லஸ் சார்ஜிங்கில் பேட்டரியின் காலம் மெதுவாக பாதிப்படையக் கூடும். இதனால் வயர்லஸ் சார்ஜிங்கை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எப்போழுதும் கேபிள் மூலம் சார்ஜ் செய்வதே சிறந்தது எனவும் அவசர காலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

<strong>இதையும் படிக்க :  <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/importance-of-fixing-dash-cam-in-your-car-it-will-work-as-a-third-eye-photo-gallery-77946.html">கார்களின் மூன்றாவது கண்ணாக செயல்படும் டேஷ்கேம்.. முக்கியத்துவம் என்ன?</a></strong>
<h3>வயர்லஸ் சார்ஜிங் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை</h3>
தரமான வயர்லஸ் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சார்ஜிங் செய்யும் போது கேம் விளையாடுவது, தொடர்ந்து வீடியோ பார்ப்பது கூடாது. மொபைல் கவரை கழற்றி வைத்து சார்ஜ் செய்வது நல்லது. பேட்டரியின் பவர் 80 சதவிகிதம் வரும் வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்.

மொபைல் பேட்டரி நீண்ட நாட்கள் வர ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. 100 சதவிகிதம் முழுமையான சார்ஜிங்கோ அல்லது 0 சதவிகிதம் சார்ஜ் குறையும் வரையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? தமிழக அரசின் புதிய பயிற்சி திட்டம் &#8211; எப்படி விண்ணப்பிப்பது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/tamil-nadu-govt-to-conduct-youtube-channel-training-program-for-entrepreneurs-in-chennai-78660.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 16:00:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/tamil-nadu-govt-to-conduct-youtube-channel-training-program-for-entrepreneurs-in-chennai-78660.html</guid>
		            
			

    	<description><![CDATA[யூடியூப் செயல்முறையை கற்றுக்கொடுக்க தமிழக அரசு புதிய பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.  3 நாட்கள் நடைபெறும் இந்த திட்டத்தில் யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி? வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்குதல், திறமையான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நுட்பங்கள் போன்றவை கற்றுக்கொடுக்கப்படவிருக்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/youtube-videos-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? தமிழக அரசின் புதிய பயிற்சி திட்டம் &#8211; எப்படி விண்ணப்பிப்பது?" /></figure>பலருக்கும் <a href="https://www.tv9tamilnews.com/technology/youtube-introduced-picture-in-picture-feature-know-how-it-works-75697.html" target="_blank" rel="noopener">யூடியூபில்</a> வீடியோ வெளியிடுவது கிட்டத்தட்ட புதிய தொழிலாக மாறி வருகிறது. மக்களை மகிழ்விக்க, அவர்களுக்கு தகவல்களை வழங்க, சமையல் கலை, தோட்டக் கலை என போன்ற பல்வேறு தலைப்புகளில் கிரியேட்டர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு கனிசமான வருமானம் கிடைத்து வருகிறது. எனவே இது தற்போது புதிய தொழில் வாய்ப்பாக மாறி வருகிறது. இந்த நிலையில் இதற்காக மக்கள் முறையாக யூடியூப் செயல்முறையை கற்றுக்கொடுக்க<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/reports-have-emerged-that-work-has-begun-on-providing-a-monthly-allowance-of-rs-2500-to-women-78646.html" target="_blank" rel="noopener"> தமிழக அரசு</a> புதிய பயிற்சியை வழங்குகிறது.
<h3>தமிழக அரசின் புதிய பயிற்சி திட்டம்</h3>
இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியான அறிக்கையில், தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில்முனைவோருக்கான சொந்தமாக யூடியூப் சேனல் உருவாக்குதல் பயிற்சி வழங்குகிறது. அதில், சொந்த யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி திட்டம் 25.05.2026 முதல் 27.05.2026 வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை EDII-TN வளாகம், சென்னையில் நடைபெற உள்ளது.
<h3>யூடியூப் பயிற்சி திட்டம்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="und">தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
தொழில்முனைவோருக்கான – சொந்தமாக யூடியூப் (YouTube) சேனல் உருவாக்குதல் பயிற்சி

Entrepreneurship Development and Innovation Institute-TN
Three days “Create Your Own YouTube Channel”.<a href="https://twitter.com/hashtag/CMJosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay</a> | <a href="https://twitter.com/hashtag/TNDIPR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNDIPR</a> | <a href="https://t.co/iiNKeDjpuF">pic.twitter.com/iiNKeDjpuF</a></p>
— TN DIPR (@TNDIPRNEWS) <a href="https://twitter.com/TNDIPRNEWS/status/2055170325726527890?ref_src=twsrc%5Etfw">May 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html">உங்கள் போன் காணாமல் போனால் உடனே செய்ய வேண்டிய 4 விஷயங்கள்</a></strong>

இந்த பயிற்சியில் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஆன்லைன் விளம்பர முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் இடம்பெறும் தலைப்புகள் பின்வருமாறு:
<ul>
 	<li>வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்குதல்</li>
 	<li>சமூக வலைதள சந்தைப்படுத்தல் மற்றும் சமூக வலைதள இணைப்பு</li>
 	<li>வாடிக்கையாளர் வலையமைப்பை அதிகரிக்கும் முறைகள்</li>
 	<li>திறமையான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நுட்பங்கள்</li>
 	<li>ஆன்லைன் மார்க்கெட்டிங் முறைகள்</li>
 	<li>டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் தொடர்பான அறிமுகம்</li>
 	<li>இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிமுறைகள்</li>
</ul>
இந்த பயிற்சி, YouTube சேனலை தொடங்கி திறமையாக நிர்வகிக்க விரும்பும் தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் ஆண்/பெண், திருநங்கைகள், திருநம்பிகள் என 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/incognito-tab-introduced-in-whatsapp-meta-ai-what-is-the-special-features-about-it-78495.html">வாட்ஸ்அப் மெட்டா ஏஐ-ல் “Incognito Tab” அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?</a></strong>

பயிற்சியில் பங்கேற்கும் பயிற்சியாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி வழங்கப்படும். தங்கும் வசதி தேவையுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா? கண்டுபிடிக்க எளிய 5 டிப்ஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/5-smart-ways-to-check-if-your-smartphone-is-original-or-fake-at-home-78649.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 15:28:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/5-smart-ways-to-check-if-your-smartphone-is-original-or-fake-at-home-78649.html</guid>
		            
			

    	<description><![CDATA[Fake Smartphone Check : பிரபல நிறுவனங்களின் ஒரிஜினல் ஸ்மார்ட்போன்களைப் போலவே தோற்றமளிக்கும் போலியான போன்களும் தற்போது அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆங்காங்கே சில போன்கள் வெடிப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் போன்கள் போலியானதா என எப்படி கண்டுபிடிப்பது என பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/fake-smartphone-check.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா? கண்டுபிடிக்க எளிய 5 டிப்ஸ்!" /></figure>இப்போது மார்கெட்டில் போலி <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போன்களின்</a> எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் நாம் ஆர்டர் செய்து வாங்கும் ஸ்மார்ட்போன்கள் போலியானது என சமூக வலைதளங்களில் பதிவுகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. சமீப காலமாக இது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சந்தையில் மிக பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட்போன்களை போன்று போலியான ஸ்மார்ட்போன்களும் சந்தைகளில் கிடைக்கின்றன. விலை குறைவாகவும் அதிரடி ஆஃபர்களுடன் கிடைக்கும் நிலையில் அதனை வாங்கி மக்கள் ஏமாறும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில் நாம் வாங்கும் <a href="https://www.tv9tamilnews.com/technology/using-wi-fi-in-public-places-can-make-you-loose-your-data-to-hackers-76748.html" target="_blank" rel="noopener">மொபைல்</a> உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகியுள்ளது.

பிரபல நிறுவனங்களின் ஒரிஜினல் ஸ்மார்ட்போன்களைப் போலவே தோற்றமளிக்கும் போலியான போன்களும் தற்போது அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆங்காங்கே சில போன்கள் வெடிப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பலருக்கும் போனில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு பழுதான பிறகே பலருக்கும் அது போலியான போன் என தெரிய வருகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/instagram-removed-end-to-end-encryption-feature-in-messages-your-dms-are-not-safe-anymore-77219.html">இனி உங்கள் இன்ஸ்டாகிராம் சாட்க்கு பாதுகாப்பு இல்லை.. End-To-End Encryption அம்சத்தை நீக்கிய மெட்டா!</a></strong>

அதனால், புதிய மொபைல் வாங்கிய பிறகு சில எளிய வழிகளில் வீட்டிலேயே அதனை சரிபார்க்கலாம். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>1. IMEI நம்பரை சரிபார்க்கவும்</h3>
ஒவ்வொரு மொபைலுக்கும் தனித்துவமான IMEI நம்பர் இருக்கும். அதனை தெரிந்து கொள்ள, நம் போனில் டயலர் பேடில் *#06# என்று டைப் செய்யவும். உடனே IMEI நம்பர் திரையில் தோன்றும். அந்த எண்ணை, மொபைல் பாக்ஸில் உள்ள எண்ணுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எண்கள் பொருந்தவில்லை என்றால், அது போலியான போனாக இருக்க வாய்ப்பு அதிகம். மேலும் IMEI.info போன்ற இணையதளங்களில் IMEI நம்பரை சரிபார்த்து அந்த போன் உண்மையானதா என்பதை உறுதி செய்யலாம்.
<h3>2. சாஃப்ட்வேரை கவனமாக பாருங்கள்</h3>
பல போலி போன்கள் வெளிப்புற தோற்றத்தை மட்டும் ஒரே மாதிரி உருவாக்கும். ஆனால் சாஃப்ட்வேர் மூலம் அவற்றை எளிதாக கண்டுபிடிக்கலாம். இதற்கு போன் செட்டிங்க்ஸில் ஐகான், மெனு, சரியாக இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். எதாவது செயலிகள் சரியாக வேலை செய்யாமல் இருக்கிறதா? அடிக்கடி விளம்பரங்கள் திரையில் தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். உண்மையான ஸ்மார்ட்போன் ஸ்மூத்தாக இயங்கும்.
<h3>3. போனின் பாடி குவாலிட்டியை சரி பார்க்கவும்</h3>
போலியான ஸ்மர்ட்போன்கலில் பில்ட் குவாலிட்டி குறைவாக இருக்கும். குறிப்பாக டச் சரியாக வேலை செய்கிறதா, பட்டன் வேலை செய்கிறதா, கேமரா சரியான இடத்தில் இருக்கிறதா லோகோ வித்தியாசமாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/technology/using-wi-fi-in-public-places-can-make-you-loose-your-data-to-hackers-76748.html"> பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!</a></strong>
<h3>4. ஹார்ட்வேர் இன்ஃபோ ஆப்ஸ்</h3>
பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ஹார்ட்வேர் இன்ஃபோ ஆப்ஸ் மூலம் போனின் உள்ள விஷயங்களை சரிபார்க்கலாம். குறிப்பாக பிராசசர், ரேம், ஸ்டோரேஜ், கேமரா தகவல்கள், பேட்டரி விவரங்கள் போன்றவை கிடைக்கும். அதனை சரிபார்த்து உண்மையை தெரிந்துகொள்ளலாம். அவற்றை ஸ்மார்ட்போன் நிறுவனங்கலின் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விவரங்கள் பொருந்தவில்லை என்றால் அது போலியானதாக இருக்கலாம்.
<h3>5. நம்பிக்கையான கடைகளில் மட்டும் வாங்க வேண்டும்</h3>
போலி போன்களை தவிர்க்க போன் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். அல்லது நம்பிக்கைக்குரிய ஆன்லைன் நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். போனின் சராசரி விலையை விட குறைவான விளையில் விற்கப்படும் போன்கள் குறித்து சந்தேகம் கொள்ள வேண்டும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்னாப்சாட்டை காப்பி அடித்த இன்ஸ்டாகிராம்?.. புதிய இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் எப்படி உள்ளது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/did-instagram-copied-snapchat-feature-and-named-as-instants-how-the-new-feature-works-78636.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 15:10:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/did-instagram-copied-snapchat-feature-and-named-as-instants-how-the-new-feature-works-78636.html</guid>
		            
			

    	<description><![CDATA[Did Instagram Copied Snapchat Feature | இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது இன்ஸ்டன்ட்ஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/instants.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்னாப்சாட்டை காப்பி அடித்த இன்ஸ்டாகிராம்?.. புதிய இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் எப்படி உள்ளது?" /></figure>பொதுமக்கள் மத்தியில் ஏராளமான செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அத்தகைய செயலிகளில் ஒன்றுதான் மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் <strong>(Instagram).</strong> இந்த செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இன்ஸ்டன்ட்ஸ் <strong>(Instants)</strong> என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஸ்னாப்சாட்டில்<strong> (Snapchat)</strong> இருந்து காப்பி செய்யப்பட்ட அம்சம் என்று பயனர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இன்ஸ்டாகிராமில் அறிமுகனான இன்ஸ்டன்ட்ஸ் அம்சம்</h3>
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களின் நலனுக்காக அந்த நிறுவனம் தொடந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் இந்த இன்ஸ்டன்ட்ஸ்  அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் குறித்து தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேச்சாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/is-whatsapp-premium-plus-feature-came-to-use-know-this-update-77859.html">அமலுக்கு வந்தததா வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ்?.. வெளியான முக்கிய தகவல்!</a>
<h3>ஸ்னாப்சாட்டை காப்பி அடித்த இன்ஸ்டாகிராம்?</h3>
இன்ஸ்டாகிராமில் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த அம்சம் ஏற்கனவே ஸ்னாப்சாட்டில் உள்ளதாகவும், அதனை பார்த்து தான் இன்ஸ்டாகிராம் தற்போது இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும் பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். காரணம், இன்ஸ்டாகிராம் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த இன்ஸ்டன்ட் அம்சம் ஸ்னாப்சாட்டில் உள்ளதை போலவே உள்ளது என்பதுதான்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/apple-announced-mothers-day-sale-know-the-cashback-details-77501.html">கொட்டி கிடக்கு கேஷ்பேக்.. அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள்.. மிஸ் பண்ணிடாதீங்க!</a>

இவை இரண்டு ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் ஒரே மாதிரியானதாக இருக்காது. குறிப்பாக ஸ்னாப்சாட்டில் ஒருவரது புகைப்படத்தை சேவ் செய்துக்கொள்ள முடியும். அவ்வாறு சேவ் செய்யும்போது அது குறித்த தகவல் புகைப்படத்தை அனுப்பிய நபருக்கு செல்லும். ஆனால், இன்ஸ்டாகிராமில் வந்துள்ள இந்த அம்சம் அத்தகையது அல்ல. காரணம், புகைப்படங்களை சேவ் செய்யவோ, ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ அல்லது ஸ்கிரீன் பதிவு செய்யவோ முடியாது என்பதை இன்ஸ்டாகிராம் உறுதி செய்துள்ளது.

மற்றபடி ஸ்னாப்சாட் செயலியில் உள்ளதை போலவே 24 மணி நேரத்தில் புகைப்படங்கள் தானாக மறைந்துவிடும் அம்சம் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>JPEG புகைப்படங்கள் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/new-online-scam-targeting-public-with-jpeg-images-cyber-security-agencies-warned-78595.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 12:40:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/new-online-scam-targeting-public-with-jpeg-images-cyber-security-agencies-warned-78595.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Online Scam Targeting Public With JPEG Images | தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைவதை போலவே அதனை பயன்படுத்தி மோசடி மற்றும் குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், ஜேபெக் புகைப்படங்களை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறுவதாக சைபர் பாதுகாப்பு அமைச்சகங்கள் எச்சரிக்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cyber-crime.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="JPEG புகைப்படங்கள் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள்!" /></figure>தொழில்நுட்ப வளர்ச்சிக்கு <strong>(Technology Development)</strong> ஏற்ப ஆன்லைன் மோசடி <strong>(Online Scam)</strong> மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் பணம் மோசடி செய்வது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், ஜேபெக் புகைப்படங்கள் <strong>(JPEG Photos)</strong> மூலம் புதிய மோசடி நடைபெறுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், ஜெபெக் புகைப்படங்கள் மூலம் எவ்வாறு மோசடி நடைபெறுகிறது, அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்தியாவின் மிகப்பெரிய சிக்கலாக உள்ள ஆன்லைன் மோசடி</h3>
உலகம் மிக வேகமாக தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. தகவல்  பரிமாற்றம், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் செயலிகளும் உள்ளன. இவ்வாறு பொதுமக்கள் டிஜிட்டல் செயலிகள் மற்றும் இணையதளங்களை அதிகம் பயன்படுத்தும் நிலையில் அவற்றின் மூலம் மோசடிகள் அரங்கேறுவது தொடர்கதையாகி வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/apple-announced-mothers-day-sale-know-the-cashback-details-77501.html">கொட்டி கிடக்கு கேஷ்பேக்.. அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள்.. மிஸ் பண்ணிடாதீங்க!</a>

முன்னதாக மால்வேர் மற்றும் ஸ்பைவேர் தாக்குதல்கள் மொபைல் போனை ஹேக் செய்வது, செயலிகளை ஹேக் செய்வது, லிங்குகள் மூலம் மோசடி வலையில் சிக்க வைப்பது போல இருக்கும். ஆனால், தற்போது ஒரே ஒரு ஜெபெக் புகைப்படத்தின் மூலம் மிக சுலபமாக மோசடிகள் நடைபெறுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
<h3>ஜேபெக் புகைப்படம் மூலம் அரங்கேறும் ஆன்லைன் மோசடி</h3>
இந்தியாவில் ஜேபெக் புகைப்படங்கள் மூலம் பொதுமக்களிடம் மோசடிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்கதையாகி வருகிறது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஜேபெக் புகைப்படங்களை அனுப்பி அதன் மூலம் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளில் வரும் திருமணம் அழைப்பிதழ்கள், ஜேபெக் புகைப்படங்கள், ஏபிகே ஃபைல்கள் ஆகியவற்றை தொட வேண்டா என்று சைபர் பாதுகாப்பு அமைச்சகங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/you-cannot-miss-important-chats-use-custom-list-77423.html">வாட்ஸ்அப்பில் இனி குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாது.. அதான் கஸ்டம் லிஸ்ட் இருக்கே!</a>

அவ்வாறு சந்தேகத்திற்கு உரிய புகைப்படங்கள், லிங்குகள், ஏபிகே ஃபைல்கள் ஆகியவற்றை தொடுவதன் மூலம் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள், தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவை திருடப்படுவதற்கான ஆபத்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்கள் போன் காணாமல் போனால் உடனே செய்ய வேண்டிய 4 விஷயங்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html</link>	
		<pubDate>Thu, 14 May 2026 21:45:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html</guid>
		            
			    	<description><![CDATA[இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் 700-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் திருடப்படுவதாக சமீபத்திய தகவல்கள் . குறிப்பாக, டெல்லியில் குறைந்தது 210 ஸ்மார்ட்போன்களும், பெங்களூரில் அதிகபட்சமாக 747 போன்களும்  திருடப்படுகின்றன. உங்கள் ஸ்மார்ட்போனை இதுபோன்று மறந்துவிட்டால், நீங்கள் செய்ய வேண்டிய 4 முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/smartphone-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Smartphone 5" /></a></dt><p>இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் 700-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் திருடப்படுவதாக சமீபத்திய தகவல்கள் . குறிப்பாக, டெல்லியில் குறைந்தது 210 ஸ்மார்ட்போன்களும், பெங்களூரில் அதிகபட்சமாக 747 அலைபேசிகளும் திருடப்படுகின்றன. காணாமல் போன உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் மிக விரைவாகத் திரும்பப் பெறலாம். உங்கள் ஸ்மார்ட்போனை இதுபோன்று மறந்துவிட்டால், நீங்கள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/smartphone-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Smartphone 4" /></a></dt><p>நீங்கள் ஸ்மார்ட்போனை மறந்துவிட்டீர்களா அல்லது திருடு போய்விட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில், துல்லியமான தகவல்களுடன் புகாரைப் பதிவு செய்யுங்கள்.  போன் மாடல், தயாரிப்பு நிறுவனம் மற்றும் IMEI எண்ணை வழங்குவது, ஸ்மார்ட்போனை துல்லியமாகக் கண்காணிக்க உங்களுக்கு உதவும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/smartphone-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Smartphone 3" /></a></dt><p>உங்கள் போனில் உள்ள டிராக்கர்  வசதிகளைச் செயல்படுத்தவும். நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் சேவையைப் பயன்படுத்தலாம்.ஐபோன் பயனர்கள் https://www.icloud.com/find என்ற இணையதளம் வாயிலாகவும் தங்கள் போன் காணாமல் போனதைப் புகாரளிக்கலாம். மேலும், உங்கள் போன் நிச்சயமாகக் காணாமல் போய்விட்டது என்று நீங்கள் உறுதியாக நம்பினால், அதில் உள்ள டேட்டாவை அழித்துவிட்டு, சிம் கார்டையும் முடக்க வேண்டும். அந்த அலைபேசியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வங்கித் தகவல்கள், பின் எண்கள் மற்றும் யுபிஐ விவரங்களைச் செயலிழக்கச் செய்யுங்கள் அல்லது சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் தகவல் தெரிவியுங்கள்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/smartphone-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Smartphone 2" /></a></dt><p>மத்திய அரசின் இணையதளமான sancharsaathi.gov.in-ஐப் பார்வையிடவும். அந்த இணையதளத்திற்குச் சென்ற பிறகு, 'Block Your Lost/Stolen Mobile (CEIR)' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் IMEI எண்ணையும் முடக்கிவிட்டால், இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்கிலும் அந்தத் தொலைபேசியைப் பயன்படுத்த இயலாது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/lost-your-mobile-phone-here-are-4-important-things-you-must-do-78522.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/smartphone-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Smartphone 1" /></a></dt><p>நாட்டில் சராசரியாகத் தினமும் 700-க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் திருடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் குறைந்தது 210 தொலைபேசிகளும், பெங்களூரில் 747 தொலைபேசிகளும் திருடப்படுகின்றன. அரசாங்கத்தின் சஞ்சார் சாத்தி செயலி வாயிலாக, திருடப்பட்ட தொலைபேசிகளில் குறைந்தது 74 சதவீதத்தைக் கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப் மெட்டா ஏஐ-ல் &#8220;Incognito Tab&#8221; அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/incognito-tab-introduced-in-whatsapp-meta-ai-what-is-the-special-features-about-it-78495.html</link>	
		<pubDate>Thu, 14 May 2026 19:10:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/incognito-tab-introduced-in-whatsapp-meta-ai-what-is-the-special-features-about-it-78495.html</guid>
		            
			

    	<description><![CDATA[Incognito Tab Introduced In WhatsApp Meta AI | உலகம் முழுவதும் உள்ள மக்களால் பரவலாக பயன்படுத்தப்படும் செயலி தான் மெட்டாவின் வாட்ஸ்அப். இதில் பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவி அம்சத்தில் தேடும் ரகசிய தகவல்களை பாதுகாக்க இன்காக்னிட்டோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/whatsapp-meta-ai.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப் மெட்டா ஏஐ-ல் &#8220;Incognito Tab&#8221; அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?" /></figure>உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மிக முக்கிய செயலியாக மெட்டா<strong> (Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong> செயலி உள்ளது. தகவல்களை விரைவாக பரிமாற்றம் செய்துக்கொள்வதற்காககவும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை பகிர்ந்துக்கொள்வதற்காகவும் இந்த செயலி பெரும் உதவியாக உள்ளது. இத்தகைய பல்வேறு அட்டகாசமான அம்சங்களை வாட்ஸ்அப் கொண்டுள்ள நிலையில், அதில் தற்போது ஒரு புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் இன்காக்னிட்டோவில் மெட்டா ஏஐ <strong>(Incognito In Meta AI)</strong> பயன்படுத்தும் அம்சம். இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வாட்ஸ்அப்பில் மெட்டா ஏஐ-க்கு இன்காக்னிட்டோ டேப் அறிமுகம்</h3>
தற்போதைய இணைய உலகை கட்டுக்குள் வைத்திருக்கும் அம்சமாக செயற்கை நுண்ணறிவு <strong>(AI - Artificial Intelligence) </strong>உள்ளது. சந்தேகங்களுக்கு விடை அளிப்பது, பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவது, யோசனைகளை வழங்குவது என பல்வேறு இடங்களில் கைடாகவும், சில இடங்களில் வழிநடத்தும் முதன்மை அம்சமாகவும் செயற்கை நுண்ணறிவு உள்ளது. செயற்கை நுண்ணறிவு அம்சம் மனிதர்களின் வாழ்வில் முக்கியத்துவமாக மாறிய நிலையில், சமூக ஊடகங்களில் அவற்றை சமூக ஊடக நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயனர்களுக்காக வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தான் வாட்ஸ்அப்பில் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/instagram-removed-end-to-end-encryption-feature-in-messages-your-dms-are-not-safe-anymore-77219.html">இனி உங்கள் இன்ஸ்டாகிராம் சாட்க்கு பாதுகாப்பு இல்லை.. End-To-End Encryption அம்சத்தை நீக்கிய மெட்டா!</a>
<h3>இன்காக்னிட்டோ டேப்  - சிறப்பு அம்சங்கள் என்ன?</h3>
இன்காக்னிட்டோ டேப் என்பது பயனர்கள் கூகுளில் தேடிய அம்சங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்க உதவும். இதே அம்சம் தான் தற்போது வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மெட்டா, வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ-க்கு இன்காக்னிட்டோ டேபை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து கூறியுள்ள அந்த நிறுவனம், வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ மற்றும் மெட்டா ஏஐ ஆப் ஆகியவற்றில் இன்காக்னிட்டோ டேப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/instagram-introduces-new-app-in-the-competition-of-snapchat-77247.html">ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம் செயலி!</a>

பொருளாதாரம், உடல்நலம், பணி, மனநலம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் குறித்து செயற்கை நுண்ணறிவில் கேட்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அம்சமாக இது உள்ளது. இந்த அம்சத்தில் தேடுவது அடுத்தவர்கள் பார்க்காத வகையில் பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கார்களின் மூன்றாவது கண்ணாக செயல்படும் டேஷ்கேம்.. முக்கியத்துவம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/importance-of-fixing-dash-cam-in-your-car-it-will-work-as-a-third-eye-photo-gallery-77946.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 23:44:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/importance-of-fixing-dash-cam-in-your-car-it-will-work-as-a-third-eye-photo-gallery-77946.html</guid>
		            
			    	<description><![CDATA[Importance of Fixing Dash Cam In Your Car | சாலையில் பயணம் செய்யும்போது விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், கார்களில் டேஷ்கேம் பொருத்துவதன் மூலம் என்ன என்ன நன்மைகள் மற்றும் பாதுகாப்புகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/importance-of-fixing-dash-cam-in-your-car-it-will-work-as-a-third-eye-photo-gallery-77946.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/dashcam-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Dashcam (1)" /></a></dt><p>சாலையில் பயணம் செய்யும்போது நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், நம்முடன் சாலையில் வாகனம் ஓட்டும் நபர்களும் முறையாக வாகனங்களை ஓட்ட வேண்டும். காரணம், விபத்து என்று ஒன்று நடக்கும்போது இரண்டு தரப்பினரும் விசாரணைக்குள்ளாவர். எனவே நம் மீது தப்பில்லை என்று நிரூபிக்க ஆதாரங்கள் மிகவும் முக்கியவையாக உள்ளன. </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/importance-of-fixing-dash-cam-in-your-car-it-will-work-as-a-third-eye-photo-gallery-77946.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/dashcam-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Dashcam (2)" /></a></dt><p>இவ்வாறு சாலையில் செல்லும்போது நாம் பாதுகாப்பாக இருக்க உதவும் ஒரு அம்சம் தான் கார்களின் பொருத்தப்படும் டேஷ் கேமரா. இந்த டேஷ் கேமராவை பொருத்துவதன் மூலம் அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு சட்ட ரீதியாக உரிய தண்டனை வழங்கப்படும். 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/importance-of-fixing-dash-cam-in-your-car-it-will-work-as-a-third-eye-photo-gallery-77946.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/dashcam-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Dashcam (3)" /></a></dt><p>கார்களில் பொருத்தப்படும் இந்த கேமராக்கள், நாம் சாலையில் பயணம் செய்யும்போது முன்பக்கம் தெரியும் அனைத்தையும் படம் பிடித்து சேமித்து வைக்கும். இந்த காட்சிகளை பயன்படுத்தி, சாலையில் விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை சுலபமாக அடையாளம் காண முடியும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/importance-of-fixing-dash-cam-in-your-car-it-will-work-as-a-third-eye-photo-gallery-77946.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/dashcam-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Dashcam (4)" /></a></dt><p>டேஷ்கேம் பொருத்தப்படும்போது வாகன உரிமையாளர் சாலை விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் சுலபமானதாக மாறிவிடும். குறிப்பாக டேஷ்கேம் மூலம் படமாக்கப்பட்ட காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும் மிகவும் சுலபமாக இருக்கும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/importance-of-fixing-dash-cam-in-your-car-it-will-work-as-a-third-eye-photo-gallery-77946.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/dashcam-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Dashcam (5)" /></a></dt><p>தற்போதைய காலக்கட்டத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அந்த வகையில், வாகனங்கள் எந்த வித சிக்கல்களில் சிக்கினாலும் யார் மீது தவறு என்பதை கண்டறிய உதவும் மிக சிறந்த அம்சமாக இந்த டேஷ்கேம் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>அமலுக்கு வந்தததா வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ்?.. வெளியான முக்கிய தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/is-whatsapp-premium-plus-feature-came-to-use-know-this-update-77859.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 19:10:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/is-whatsapp-premium-plus-feature-came-to-use-know-this-update-77859.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Premium Plus Feature | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அதில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படும் வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ் என்ற அம்சம் குறித்து வெளியான முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/whatsapp-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அமலுக்கு வந்தததா வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ்?.. வெளியான முக்கிய தகவல்!" /></figure>மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong> செயலி, உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. தகவல் பரிமாற்றம், ஆவணங்களை பரிமாறுதல், புகைப்படங்கள், வீடியோ கால், ஆடியோ கால் என ஏராளமான அம்சங்கள் இந்த செயலியில் உள்ளன. ஏற்கனவே இத்தகைய அட்டகாசமான அம்சங்களை வாட்ஸ்அப் கொண்டுள்ள நிலையில், கூடுதல் அம்சங்களை வழங்கக்கூடிய வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ் <strong>(WhatsApp Premium Plus)</strong> அம்சத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் சாதாரன வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படுவதை விடவும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படும். இந்த புதிய அம்சம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
<h3>வாட்ஸ்அப்பின் புதிய பிரீமியம் அம்சம்</h3>
வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பிரீமியம் அம்சம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த பிரீமியம் அம்சத்தில் வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இருக்ககூடிய அம்சங்களை விடவும் பல அட்வான்ஸ்டு அம்சங்கள் வழங்கப்படும். உதாரணமாக இந்த அம்சத்தை பயன்படுத்தும் பயனர்கள் தங்களளுக்கு பிடித்த மாதிரி தங்களது செயலியை வடிவமைத்துக்கொள்ளலாம். இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பயனர்கள் பிரீமியம் அம்சத்தில் சைன் இன் செய்ய வேண்டும் என்றால் காத்திருக்க வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/using-wi-fi-in-public-places-can-make-you-loose-your-data-to-hackers-76748.html">பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!</a>
<h3>குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் பிளஸ்</h3>
வாபீட்டாவின் அறிக்கையின் படி, வாட்ஸ்அப் பிளஸ் அம்சம் தற்போது சமீபத்திய வர்ஷன் கொண்ட செயலிகளை பதிவிறக்கம் செய்த பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எக்ஸ் செயலியை போல இந்த பிரீமியம் அம்சத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. செயலியின் செயல்பாடுகள் அனைத்தும் வழக்கம் போலவே இருக்கும். ஆனால், சில கூடுதல் அம்சங்கள் இதில் வழங்கப்படும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/follow-these-steps-to-clean-air-conditioner-in-your-house-by-yourself-76654.html">கோடையில் அடிக்கடி பழுதாகும் ஏசி.. நீங்களே சரிசெய்யலாம்.. எப்படி தெரியுமா?</a>
<h3>வாட்ஸ்அப் பிளஸில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள்?</h3>
இந்த வாட்ஸ்அப் பிளஸில் பிரீமியம் ஸ்டிக்கர் பேக், 18 நிறங்களில் இண்டர்பேஸ், 14 வகையான வித்தியாசமான ஐகான்கள் ஆகியவை இதில் வழங்கப்படும். வாட்ஸ்அப் பிளஸில் இந்த அம்சங்களை பெற வேண்டும் என்றால் பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கொட்டி கிடக்கு கேஷ்பேக்.. அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள்.. மிஸ் பண்ணிடாதீங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/apple-announced-mothers-day-sale-know-the-cashback-details-77501.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 22:23:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/apple-announced-mothers-day-sale-know-the-cashback-details-77501.html</guid>
		            
			

    	<description><![CDATA[Apple Announced Mothers Day Sale | ஆப்பிள் நிறுவனம் அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், மேக்புக்குகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், என்ன என்ன சிறப்பு சலுகைகள் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/apple.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கொட்டி கிடக்கு கேஷ்பேக்.. அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள்.. மிஸ் பண்ணிடாதீங்க!" /></figure>உலக அளவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன்<strong> (Smartphone)</strong> நிறுவனமாக ஆப்பிள் <strong>(Apple)</strong> உள்ளது. இதேபோல இந்தியாவிலும் அதிக பயனர்களை கொண்ட மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாகவும் ஆப்பிள் உள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஐபோன் வாங்குவது பலருக்கு கனவாக உள்ள நிலையில், அந்த நிறுவனம் தற்போது அன்னையர் தின சேலை <strong>(Apple Mothers Day Sale)</strong> அறிவித்துள்ளது. இந்த சேலில் சில முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் அன்னையர் தின சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள் நிறுவனம்</h3>
<ul>
 	<li>ரூ.69,900 மதிப்புள்ள ஆப்பிள் மேக்பு நியோ தற்போது ரூ.3,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் உடன் வருகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.66,900-க்கே வாங்கிக்கொள்ள முடியும்.</li>
 	<li>ரூ.1,19,900 மதிப்புள்ள ஆப்பிள் மேக்புக் ஏர் இந்த சேலில் ரூ.7,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் உடன் வருகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.1,12,900-க்கே வாங்கிக்கொள்ள முடியும்.</li>
 	<li>எம்5 சிப் உடன் கூடிய 14 இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில கார்டுகளை பயன்படுத்தி இந்த மேக்புக்கை வாங்கும் நபர்கள் ரூ.1,89,900 மதிப்புள்ள இந்த மேக்புக்கை வெறும் ரூ.1,79,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.</li>
 	<li>எம்5 சிப் உடன் கூடிய 16 இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில கார்டுகளை பயன்படுத்தி இந்த மேக்புக்கை வாங்கும் நபர்கள் ரூ.2,89,900 மதிப்புள்ள இந்த மேக்புக்கை ரூ.2,99,900-க்கே வாங்கிக்கொள்ளலாம்.</li>
 	<li>16ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மேக்புக ஏர் எம்5-க்கு ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இறுதியாக ரூ.1,04,900 மதிப்புள்ள இந்த மேக்புக்கை வெறும் ரூ.99,900-க்கே வாங்கிக்கொள்ளலாம்.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/follow-these-steps-to-clean-air-conditioner-in-your-house-by-yourself-76654.html">கோடையில் அடிக்கடி பழுதாகும் ஏசி.. நீங்களே சரிசெய்யலாம்.. எப்படி தெரியுமா?</a></p>
ஐபோன்கள் மற்றும் மேக்புக்குகளை சற்று குறைந்த விலையில் வாங்க நினைக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப்பில் இனி குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாது.. அதான் கஸ்டம் லிஸ்ட் இருக்கே!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/you-cannot-miss-important-chats-use-custom-list-77423.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 18:47:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/you-cannot-miss-important-chats-use-custom-list-77423.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Custom List Feature | உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் தினசரி வாழ்வின் முக்கிய செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் முக்கிய குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாமல் இருக்க இந்த அம்சத்தை பயன்படுத்துங்கள்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/whatsapp-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப்பில் இனி குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாது.. அதான் கஸ்டம் லிஸ்ட் இருக்கே!" /></figure>தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல அம்சங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் முக்கிய செயலியாக மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப்<strong> (WhatsApp)</strong> உள்ளது. இதன் காரணமாக பலரும் இந்த செயலியை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். பலருக்கும் நண்பர்கள் உடன் உரையாடுவது, அலுவலக தகவல்களை பெறுவது, தகவல்களை பரிமாறிக்கொள்வது என அனைத்திற்கும் முதன்மையாக உள்ளது. இத்தகைய முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் முக்கிய குறுஞ்செய்திகளை தவறவிடாமல் இருக்க உதவும் கஸ்டம் லிஸ்ட் <strong>(Custom List)</strong> அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இனி குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாது - கஸ்டம் லிஸ்ட் இருக்கே</h3>
வாட்ஸ்அப்பில் உள்ள இந்த கஸ்டம் லிஸ்ட் என்ற அம்சத்தை பயன்படுத்தி உங்கள் உரையாடல்களை குடும்பம், வேலை, நண்பர்கள், விற்பனையாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளாக பிரித்து வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் பிரிவுகளில் சேர்க்கும் உரையாடல்கள் முதன்மையானவையாக இருக்கும். எனவே நீங்கள் உங்களது சாட்களை நீண்ட நேரம் ஸ்குரோல் செய்து தேட வேண்டிய அவசியம் இல்லை.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/using-wi-fi-in-public-places-can-make-you-loose-your-data-to-hackers-76748.html">பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி உங்கள் இன்ஸ்டாகிராம் சாட்க்கு பாதுகாப்பு இல்லை.. End-To-End Encryption அம்சத்தை நீக்கிய மெட்டா!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/instagram-removed-end-to-end-encryption-feature-in-messages-your-dms-are-not-safe-anymore-77219.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 20:30:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/instagram-removed-end-to-end-encryption-feature-in-messages-your-dms-are-not-safe-anymore-77219.html</guid>
		            
			

    	<description><![CDATA[Instagram Removed End-To-End Encryption Feature | மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் பாதுகாப்பு அம்சமாக End-To-End Encryption நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி பயனர்களின் சாட்கள் பாதுகாப்பானதாக இருக்காது. இந்த நிலையில், பாதுகாப்பு அம்சத்தை மெட்டா நீக்கியது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/instagram-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி உங்கள் இன்ஸ்டாகிராம் சாட்க்கு பாதுகாப்பு இல்லை.. End-To-End Encryption அம்சத்தை நீக்கிய மெட்டா!" /></figure>உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக மெட்டாவின் <strong>(Meta)</strong> இன்ஸ்டாகிராம்<strong> (Instagram)</strong> செயலொ உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில், பலருக்கும் அது மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இவ்வாறு கோடிக்கணக்கான பயனர்களுக்கு இது மிகவும் முக்கிய செயலியாக உள்ள நிலையில், பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் முக்கிய மாற்றம் ஒன்று  அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இன்று முதல் இன்ஸ்டாகிராமில் வந்த முக்கிய மாற்றம்</h3>
இன்ஸ்டாகிராம் செயலியில் தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இத்தகைய அம்சங்கள் உள்ளதன் காரணமாக அதன் பயன்பாடும் பொதுமக்கள் மத்தியில் மிக அதிகமாக உள்ளது. சிலரால் இன்ஸ்டாகிராம் செயலி இல்லாமல் இயங்கவே முடியாது. இவ்வாறு பலரது வாழ்விலும் முக்கிய அங்கம் வகிக்கும் இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முக்கிய அம்சம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/oneplus-summer-sale-huge-discount-announced-for-smartphones-76313.html">சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!</a>
<h3>இனி இன்ஸ்டாகிராமில் End-To-End Encryption கிடையாது?</h3>
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி படுத்தும் <strong>End-To-End Encryption </strong>அம்சம் இருந்தது. அதாவது, பயனர்களின் சாட்களை வேறு யாரும் படிக்க முடியாது என்று மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளிக்கும் வாக்குறுதியாக இந்த அம்சம் இருந்து வந்தது. இந்த நிலையில் தான், இதில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. அதாவது, இனி இன்ஸ்டாகிராமில் பயனர்களுக்கு End-To-End Encryption பாதுகாப்பு அம்சம் வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/protect-your-eyes-from-damages-with-yellow-light-screen-76251.html">அதிக நேரம் லேப்டாப், ஸ்மார்ட்போன் பார்க்கும் நபரா நீங்கள்?.. Yellow Light Screen பயன்படுத்துங்கள்!</a>

இது தொடர்பாக மார்ச் மாதம் கூறியிருந்த மெட்டா, End-To-End Encryption அம்சம் நீக்கம் செய்யப்படுவதால் உங்களது சாட் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றால், அந்த சாட்களை பதிவிறக்கம் செய்துக்கொண்டு சாட்களை டெலிட் செய்துவிடலாம் என்று மெட்டா கூறியிருந்தது. இந்த நிலையில் தான், இந்த முக்கிய அம்சம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பயனர்களின் சாட்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்களால் சுலபமாக அனுகப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம் செயலி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/instagram-introduces-new-app-in-the-competition-of-snapchat-77247.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 19:23:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/instagram-introduces-new-app-in-the-competition-of-snapchat-77247.html</guid>
		            
			

    	<description><![CDATA[Instagram Competition App To Snapchat | உலக அளவில் அதிக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக உள்ள இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக ஒரு செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், புதியதாக அறிமுகமாக உள்ள இந்த செயலியின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/snapchat.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம் செயலி!" /></figure>தொழில்நுட்ப வளர்ச்சியின் <strong>(Technology Development)</strong> காரணமாக பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன்<strong> (Smartphone)</strong> பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் அனைத்து சேவைகளுக்கும் செயலிகள் உள்ள நிலையில், பலருக்கும் ஸ்மார்ட்போன் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் பல செயலிகள் உள்ள நிலையில், தற்போது புதிய செயலி ஒன்றை இன்ஸ்டாகிராம் <strong>(Instagram)</strong> அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, ஸ்னாப்சாட் <strong>(Snapchat)</strong> செயலிக்கு போட்டியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், ஸ்னாப்சாட்டுக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ள இன்ஸ்டென்ட் செயலி குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஸ்னாப்சாட்டுக்கு போட்டியாக இன்ஸ்டென்ட் என்ற செயலியை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்</h3>
அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய செயலியாக ஸ்னாப்சாட் உள்ளது. இந்த செயலியில் உரையாடல், பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்களை தாண்டி புகைப்படங்கள் தான் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்காகவே பலரும் இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் தான் ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய செயலியை அறிமுகம் செய்வதற்கான பணிகளை கையில் எடுத்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/google-to-introduce-google-pixel-11-pro-and-google-pixel-11-pro-xl-specifications-76604.html">கூகுள் பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல்.. வெளியான சிறப்பு அம்சங்கள்!</a>
<h3>சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ள இன்ஸ்டாகிராம்</h3>
அதாவது இன்ஸ்டாகிராம் நிறுவனம் இன்ஸ்டென்ட் என்ற புதிய புகைப்பட பகிர்வு செயலியை அறிமுகம் செய்துள்ளது. சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த செயலிக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/oneplus-summer-sale-huge-discount-announced-for-smartphones-76313.html">சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!</a>

இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் சோதனையில் இருக்கும் இந்த செயலி, விரைவில் அனைத்து பொதுமக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலியில், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாகவே மறைந்துவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளில் ஒரு அம்சமாக இது இருந்த நிலையில், இதனை ஒரு செயலியாகவே இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை.. டெல்லியில் மருத்துவர்கள் சாதனை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/new-born-went-through-heart-surgery-in-delhi-76835.html</link>	
		<pubDate>Wed, 06 May 2026 20:47:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/new-born-went-through-heart-surgery-in-delhi-76835.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Born Heart Surgery | டெல்லியில் உள்ளா ஒரு தம்பதிக்கு பல நாட்களுக்கு பிறகு குழந்தை பெறும் வாய்ப்பு கிடைத்த நிலையில், கருவிலே குழந்தைக்கு இதயம் சார்ந்த சிக்கல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், குழந்தை பிறந்த உடனே அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/new-born.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை.. டெல்லியில் மருத்துவர்கள் சாதனை!" /></figure><strong>புதுடெல்லி, மே 06</strong> : பீகார் <strong>(Bihar)</strong> மாநிலம், பாட்னாவை <strong>(Patna)</strong> சேர்ந்த ஒரு மருத்துவ தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, 33 வயதில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். அனைத்து கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகாலத்தில் பரிசோதனை செய்யப்படுவதை போலவே இந்த பெண்ணுக்கும் கர்ப்பகால பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தான் தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குழந்தைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை</h3>
அதாவது பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு இதயத்தில் சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அது ஒரு அரிய, பிறவி இதய குறைப்பாடு என கூறியுள்ளனர். அது நுரையீரலில் இருந்து வரும் ஆக்சிஜன் செறிந்த ரத்தத்தை வழக்கமான முறையில் இதயத்துக்கு திருப்பாத ஒரு நிலையை உருவாக்கும். இந்த குறைபாட்டுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை என்றால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/pm-modi-to-visit-art-of-living-international-centre-for-sri-sris-70th-birthday-and-45th-anniversary-76630.html">ஆர்ட் ஆஃப் லிவிங் 45வது ஆண்டு விழா: பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை</a>

மருத்துவர்கள் கூறியபடி குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்காக அவர்கள் மருத்துவமனைக்கு அருகே வசித்துள்ளனர். இதனை தொடர்ந்து கர்ப்பத்தில் இருக்கும்போது குழந்தையின் நிலை தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இறுதியாக குழந்தை பிறக்கும் நாள் வந்துள்ளது. குழந்தை பிறந்த நிலையில், மூச்சு விடுவதற்கே கடும் சிரமங்களை சந்திக்க தொடங்கியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-thanks-prime-minister-narendra-modi-and-rahul-gandhi-76610.html">மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்… பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து விஜய் கோரிக்கை!</a>
<h3>திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை</h3>
இந்த நிலையில், துலியும் தாமதிக்காமல் மருத்துவர்கள் குழந்தைக்கான சிகிச்சையை தொடங்கியுள்ளனர். அதாவது மருத்துவமனையின் இதய நிபுணர் குழு, திறந்த நிலை இதய அவசர சிகிச்சையில் ஈடுபட்டது. இந்த சிகிச்சையின்போது மருத்துவர்கள், ஆக்சிஜன் செறிந்த ரத்த ஓட்டத்தை இதயத்தின் இடது பக்கத்துக்கு திருப்பி விட்டுள்ளனர். இதன் மூலம் குழந்தை மீட்கப்பட்டது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/using-wi-fi-in-public-places-can-make-you-loose-your-data-to-hackers-76748.html</link>	
		<pubDate>Wed, 06 May 2026 13:10:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/using-wi-fi-in-public-places-can-make-you-loose-your-data-to-hackers-76748.html</guid>
		            
			

    	<description><![CDATA[Public Wi-Fi Issue | மால்கள், கடைகள், திரையறங்குகள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த இலவச வைஃபைக்கு முன்பு மறைந்திருக்கும் சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/wi-fi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!" /></figure>தற்போதைய சூழலில் உலகமே நவீன மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன்கள் முதல், தொலைக்காட்சி, லேப்டாப்கள் என அனைத்திற்கு இணைய வசதி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு பல்வேறு இடங்களில் இணைய வசதி தேவைப்படும் நிலையில், பல இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதில் இருக்கும் ஆபத்து பலருக்கும் தெரிவதில்லை. அதாவது, இந்த பொது இடங்களில் இருக்கும் வைஃபை மூலம் ஒருவரின் தகவல்கள் மற்றும் தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பொது இடங்களில் இருக்கும் வைஃபை - பயன்படுத்துவது ஆபத்து?</h3>
சென்னை உள்ளிட்ட நகரங்களில் மால்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர்.

நீங்கள் பொது இடங்களில் உள்ள வைஃபையில் உங்களது ஸ்மார்ட்போனை இணைக்கும்போது, பாதுகாப்பற்ற ஒரு அமைப்பில் உங்களது ஸ்மார்ட்போன் இணைக்கப்படும். இது ஹேக்கர்கள் சுலபமாக உங்களது ஸ்மார்ட்போனை அணுக வழிவகை செய்யும். இதன் மூலம் ஒருவரின் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகள் மற்றும் தகவல்கள் மிக சுலபமாக திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/amazon-great-summer-sale-2026-announced-with-big-deals-on-smartphones-and-appliances-75991.html">Amazon Great Summer Sale 2026: ஸ்மார்ட்போன் முதல் வீட்டு உபகரணங்கள் வரை பெரிய தள்ளுபடி – எப்போ தெரியுமா?</a>
<h3>ஹேக்கர்கள் எப்படி சுலபமாக உங்களை அணுகுவார்கள்?</h3>
<ul>
 	<li>பாஸ்வேர்டுகள்</li>
 	<li>ஓடிபி</li>
 	<li>இமெயில் மற்றும் குறுஞ்செய்திகள்</li>
</ul>
மேற்குறிப்பிடப்பட்டுள்ள இவை அனைத்தும் பொது இடங்களில் உள்ள வைஃபை சேவையை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களை ஹேக்கர்கள் குறிவைக்க உதவும் அம்சங்களாக உள்ளன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/nothing-realme-and-oneplus-these-smartphones-price-rapidly-increased-75924.html">நத்திங் முதல் ரியல்மி வரை.. அதிரடியாக விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்!</a>
<h3>பொது இடங்களில் உள்ள வைஃபையில் உள்ள சிக்கல்கள்</h3>
<ol>
 	<li>ஹேக்கர்கள் உங்களது சமூக ஊடக கணக்குகளின் லாக் இன் விவரங்களை திருடுவார்கள்.</li>
 	<li>யுபிஐ உள்ளிட்ட பண பரிமாற்ற செயலிகளின் தகவல்களை திருடி, பணத்தை கொள்ளையடிக்கும் வாய்ப்பு உள்ளது.</li>
 	<li>மால்வேர் மற்றும் ஸ்பைவேர் தாக்குதல்கள் நடத்தி அதன் மூலம் மோசடிகளும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன.</li>
</ol> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோடையில் அடிக்கடி பழுதாகும் ஏசி.. நீங்களே சரிசெய்யலாம்.. எப்படி தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/follow-these-steps-to-clean-air-conditioner-in-your-house-by-yourself-76654.html</link>	
		<pubDate>Tue, 05 May 2026 23:22:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/follow-these-steps-to-clean-air-conditioner-in-your-house-by-yourself-76654.html</guid>
		            
			

    	<description><![CDATA[Service Air Conditioner By Yourself | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஏசியை வீட்டில் இருந்தே எப்படி சுத்தம் செய்து சர்வீஸ் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ac-service.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோடையில் அடிக்கடி பழுதாகும் ஏசி.. நீங்களே சரிசெய்யலாம்.. எப்படி தெரியுமா?" /></figure>முன்பெல்லாம் ஏசி <strong>(AC - Air Conditioner)</strong> என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால், மாறி வரும் காலநிலை, வெப்பநிலை அதிகரிப்பது உள்ளிட்டவற்றின் காரணமாக ஏசி அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக கோடைக்காலத்தில் ஏசியை பயன்படுத்தமால் யாரும் இருக்கமாட்டார்கல். இவ்வாறு கோடையில் ஏசி அதிக பயன்பாட்டை எதிர்க்கொள்ளும் அதில் சில சிக்கல்களும் ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த நிலையில், கோடைக்காலத்தில் நாமே ஏசியை சர்வீஸ் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஏசியை நாமே சர்வீஸ் செய்துக்கொள்ளலாம் - எப்படி தெரியுமா?</h3>
ஏசியை சிலமுறைகளை பின்பற்றி நாமே சர்வீஸ் செய்ய முடியும். அது என்ன என்ன முறைகள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>காற்று வடிகட்டி சுத்தம்</h3>
ஏசியில் உள்ள காற்று வடிகட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே அதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது ஏசியின் முன்பக்கம் உள்ள பேனலை மெதுவாக வெளியே தூக்கினால் வலைபோன்ற பில்டர்கள் இருக்கும். அந்த பில்டர்களை வெளியே எடுத்து அதில் படித்திருக்கும் தூசியை வேகமாக வெளியேறும் வாட்டர் பைப் மூலம் கழுவி சுத்தம் செய்யலாம். இதுவே அதிகமாக அழுக்கு மற்றும் தூசி சேர்ந்திருந்தால் திரவங்களை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/nothing-realme-and-oneplus-these-smartphones-price-rapidly-increased-75924.html">நத்திங் முதல் ரியல்மி வரை.. அதிரடியாக விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்!</a>
<h3>குளிரூட்டும் சுருள் சுத்தம்</h3>
பில்டர்களை எடுத்த பிறகு மெல்லிய அலுமினிய வரிசைகளில் இருப்பவை தான் குளிரூட்டும் சுருள்கள். அவை மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் மென்மையாக சுத்தம் செய்வது மிகவும் அவசியமாக உள்ளது. அதாவது மெல்லிய பிரஷ்களை கொண்டு அதில் படிந்திருக்கும் தூசிகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கூகுள் பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல்.. வெளியான சிறப்பு அம்சங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/google-to-introduce-google-pixel-11-pro-and-google-pixel-11-pro-xl-specifications-76604.html</link>	
		<pubDate>Tue, 05 May 2026 19:37:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/google-to-introduce-google-pixel-11-pro-and-google-pixel-11-pro-xl-specifications-76604.html</guid>
		            
			

    	<description><![CDATA[Google Pixel 11 Pro and Google Pixel 11 Pro XL | கூகுள் நிறுவனம் தனது அடுத்த மாடல் ஸ்மார்ட்போன்களான கூகுள் பிக்சல் 11 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/google-pixel-smartphone.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கூகுள் பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல்.. வெளியான சிறப்பு அம்சங்கள்!" /></figure>கூகுள் <strong>(Google)</strong> நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது அடுத்த கூகுள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, கூகுள் பிக்சல் 11 ப்ரோ <strong>(Google Pixel 11 Pro)</strong> மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் <strong>(Google Pixel 11 Pro XL)</strong> ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், கூகுள் நிறுவனம் தான் அறிமுகம் செய்ய உள்ள இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்பு அம்சங்களை அறிவித்துள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கூகுள் பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் - சிறப்பு அம்சங்கள் என்ன?</h3>
கூகுள் நிறுவனத்தின் இந்த கூகுள் பிக்சல் 11 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களில் கூகுளின் புதிய டென்சார் ஜி6 சிப்செட் அம்சம் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பிக்சல் 11 சீரீஸில் புதிய அம்சமாக பிக்சல் க்லோ <strong>(Pixel Glow)</strong> அம்சம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதாவது, இந்த அம்சத்தில் ஸ்மார்ட்போன்களில் நோடிஃபிகேஷன் வரும்போது பின்பக்கத்தில் லைட் எரியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/smartphones-getting-excessive-heat-during-summer-how-to-control-it-75871.html">கோடையில் எளிதாக வெப்பமடையும் ஸ்மார்ட்போன்.. பாதுகாப்பாக வைப்பது எப்படி?</a>
<h3>டிஸ்பிளே மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?</h3>
இந்த பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் LTPO டிஸ்பிளே அம்சத்தை கொண்டு இருக்கும், இதுவே பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் 6.8 இன்ச் அம்சத்தை கொண்டு இருக்கு என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் சாம்சங்கின் புதிய M16 OLED பேனல்கள் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம், கூர்மையான நிறங்கள் மற்றும் பேட்டரி திறனை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/netflix-launches-clips-new-vertical-video-feed-to-rival-tiktok-and-reels-75836.html">இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் நெட்ஃபிளிக்ஸ் – புதிய கிளிப்ஸ் வசதி – எப்படி பயன்படுத்துவது?</a>

இந்த கூகுள் பிக்சல் 11 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே ஃபேஸ் ஐடி அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் 5எக்ஸ் டெலிபோட்டோ கேமரா ஆகிய கேமரா அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/oneplus-summer-sale-huge-discount-announced-for-smartphones-76313.html</link>	
		<pubDate>Mon, 04 May 2026 17:40:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/oneplus-summer-sale-huge-discount-announced-for-smartphones-76313.html</guid>
		            
			

    	<description><![CDATA[OnePlus Summer Sale | இந்தியாவின் மிக முக்கிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஒன்பிளஸ் உள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது சம்மர் சேலை அறிவித்துள்ளது. எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/oneplus.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!" /></figure>இந்தியாவில் மிக முக்கிய ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> நிறுவனமாக உள்ள ஒன்பிளஸ் <strong>(OnePlus)</strong>, தனது சம்மர் சேலை<strong> (Summer Sale)</strong> அறிவித்துள்ளது. இந்த சேலில் ஒன்பிளஸ் 15R, பேட் 3 ஆகியவற்றுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த சம்மர் சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஸ்மார்ட்போன்களுக்கு சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்</h3>
ஒன்பிளஸ் நிறுவனம் தனது சம்மர் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் தனது முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடியை வழங்கியுள்ளது.
<h3>ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்</h3>
ரூ.77,999 மதிப்பிலான இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்<strong> (OnePlus 15 Smartphone)</strong> விலை குறைக்கப்படவில்லை. ஆனால், இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்கள் ரூ.4,000 வங்கி சலுகை பெற முடியும். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.73,999-க்கே வாங்கிக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/netflix-launches-clips-new-vertical-video-feed-to-rival-tiktok-and-reels-75836.html"> இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் நெட்ஃபிளிக்ஸ் – புதிய கிளிப்ஸ் வசதி – எப்படி பயன்படுத்துவது?</a>
<h3>ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன்</h3>
ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படும் இந்த ஒன்பிளச் 15R ஸ்மார்ட்போனுக்கு<strong> (OnePlus 15R Smartphone)</strong> ரூ.2,000 சலுகை மற்றும் ரூ.2,000 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.50,999-க்கே வாங்கிக்கொள்ளலாம்.
<h3>ஒன்பிளஸ் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்</h3>
ரூ.69,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு <strong>(OnePlus 13 Smartphone)</strong> ரூ.7,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கூடுதலாக ரூ.5,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.57,999-க்கே வாங்கிக்கொள்ளலாம். ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட்போன்<strong> (OnePlus 13R Smartphone)</strong> ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கு ரூ.3,000 தள்ளுபடி மற்றும் ரூ.2,000 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.37,999-க்கே வாங்கிக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/health-risks-of-using-ac-in-summer-what-you-should-know-75814.html"> கோடையில் ஏசியால் ஏற்படும் பாதிப்புகள் – நிபுணர்கள் சொல்வது என்ன?</a>

ரூ.54,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 13S ஸ்மார்ட்போனுக்கு<strong> (OnePlus 13S Smartphone)</strong> ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, ரூ.3,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.46,999-க்கே வாங்கிக்கொள்ளலாம்.
<h3>ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன்</h3>
ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன்<strong> (OnePlus Nord 6 Smartphone)</strong> ரூ.38,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி எதுவும் வழங்கப்படாத நிலையில், ரூ.2,000 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.36,999-க்கே வாங்கிக்கொள்ளலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிக நேரம் லேப்டாப், ஸ்மார்ட்போன் பார்க்கும் நபரா நீங்கள்?.. Yellow Light Screen பயன்படுத்துங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/protect-your-eyes-from-damages-with-yellow-light-screen-76251.html</link>	
		<pubDate>Mon, 04 May 2026 15:02:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/protect-your-eyes-from-damages-with-yellow-light-screen-76251.html</guid>
		            
			

    	<description><![CDATA[Yellow Light Screen In Digital Gadgets | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் டிஜிட்டல் சாதனங்களை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கண்களை பாதுகாக்க உதவும் மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/yellow-light.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிக நேரம் லேப்டாப், ஸ்மார்ட்போன் பார்க்கும் நபரா நீங்கள்?.. Yellow Light Screen பயன்படுத்துங்கள்!" /></figure>ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன. பலரும் பல மணி நேரம் இந்த சாதனங்களை பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளனர். இவ்வாறு தொடர்ந்து இத்தகைய சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து ஸ்கிரீனை பார்க்கும்போது கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும் அம்சம் தான் மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீன் <strong>(Yellow Light Screen)</strong>. லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களில் இந்த மஞ்சள் நிற ஒளியை செட் செய்வதன் மூலம் கண்களுக்கு என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
<ul>
 	<li>இந்த மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீன் கண்களை சோர்வடைவதில் இருந்து பாதுகாக்க உதவும்.</li>
 	<li>மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீனில் இதமான சூழலை உருவாக்குகிறது. அது கண்களையும் பாதுகாக்கிறது.</li>
 	<li>இந்த மஞ்சள் நிற ஸ்கிரீனை பயன்படுத்துவது உடலில் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து விரைவில் தூக்கம் வர வழிவகை செய்யும்.</li>
 	<li>நீல நிற ஒளி திரையை பார்க்கும் பலருக்கும் மைக்ரேன் தலைவலி வந்து சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், மஞ்சள் நிற ஒளி திரையை பயன்படுத்துவது தலைவலி பிரச்ணைகளில் இருந்து நிவாரணம் தரும்.</li>
 	<li>கண்களுக்கு பாதுகாப்பு தரும் இந்த மஞ்சள் நிற ஒளி திரையை இரவு நேரத்தில் மட்டுமன்றி, பகல் நேரத்திலும் பயன்படுத்தி கண்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.</li>
</ul>
<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/health-risks-of-using-ac-in-summer-what-you-should-know-75814.html">கோடையில் ஏசியால் ஏற்படும் பாதிப்புகள் – நிபுணர்கள் சொல்வது என்ன?</a>
<h3>கண்களை பாதுகாப்பதற்கான கூடுதல் அம்சங்கள்</h3>
<ul>
 	<li>கணினி மற்றும் செல்போனில் குறிப்பிட்ட அளவும் பிரைட்னஸ் வைத்து பயன்படுத்த வேண்டும்.</li>
 	<li>ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட அளவு தூரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.</li>
 	<li>தொடர்ந்து ஸ்மார்ட்போன், கணினி திரைகளை பார்க்கும் நபர்கள் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 நொடிகளுக்கு 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/iphone-overheating-in-summer-causes-warning-signs-and-easy-fixes-for-users-75753.html">வெயில் காலத்தில் ஐபோன் அதிக வெப்பமடைவதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன?</a></p>
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்வதன் மூலம், கண்களில் எந்த வித சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Amazon Great Summer Sale 2026: ஸ்மார்ட்போன் முதல் வீட்டு உபகரணங்கள் வரை பெரிய தள்ளுபடி &#8211; எப்போ தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/amazon-great-summer-sale-2026-announced-with-big-deals-on-smartphones-and-appliances-75991.html</link>	
		<pubDate>Sun, 03 May 2026 19:32:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/amazon-great-summer-sale-2026-announced-with-big-deals-on-smartphones-and-appliances-75991.html</guid>
		            
			

    	<description><![CDATA[உலக அளவில் முன்னணி ஈ-காமர்ஸ் தளமான அமேசான் தனது கிரேட் சம்மர் சேல் 2026 விற்பனையை அறிவித்திருக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/amazon-great-summer-sale-2026-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Amazon Great Summer Sale 2026: ஸ்மார்ட்போன் முதல் வீட்டு உபகரணங்கள் வரை பெரிய தள்ளுபடி &#8211; எப்போ தெரியுமா?" /></figure>உலக அளவில் முன்னணி ஈ-காமர்ஸ் தளமான <a href="https://www.tv9tamilnews.com/technology/amazon-great-indian-festival-top-gas-stove-deals-for-diwali-2025-sale-35812.html" target="_blank" rel="noopener">அமேசான்</a> தனது கிரேட் சம்மர் சேல் 2026 விற்பனையை அறிவித்திருக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனையில் <a href="https://www.tv9tamilnews.com/technology/nothing-realme-and-oneplus-these-smartphones-price-rapidly-increased-75924.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போன்கள்</a>, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் கடைகளுக்கு செல்லும் அலச்சல் குறைவு என்பதால் மக்கள் இந்த அமேசான் தள்ளுபடி விற்பனைய மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் அமேசானின் கிரேட் சம்மர் சேல் 2026 விற்பனை மே 8, 2026 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. குறிப்பாக பிரைம் உறுப்பினர்களுக்கு முன் கூட்டியே இந்த தள்ளுபடிகளை பெற முடியும்.

மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் கிரேட் சம்மர் சேல் வருகிற மே 8, 2026 முதல் விற்பனை தொடங்கப்படுகிறது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இந்த தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படும் உள்ள பொருட்களை மக்கள் உடனடியாக வாங்க முடியும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/inverter-vs-convertible-ac-which-saves-more-power-and-offers-better-cooling-complete-buying-guide-75554.html">இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?</a></strong>
<h3>வங்கி தள்ளுபடிகள் மற்றும் கேஷ் பேக் ஆஃபர்கள்</h3>
இந்த விற்பைனைக்கு சில வங்கிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன் படி அமேசான் எச்டிஎஃப்சி பேங்க் காரடுகளுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதே போல அமைசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு கேஷ்பேக் ஆஃபர்ஸ் கிடைக்கும். குறிப்பாக ரூ.1,250 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் சில பொருட்களுக்கு ரூ. 2,500 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்கள் லேப்டாப்கள் ஆகியவற்று பல சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்படவுள்ளன. அதே போல சாம்சங், ஜியோமி, iQOO போன்ற பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/technology/did-you-get-alert-message-from-national-disaster-management-authority-do-not-worry-75488.html"> உங்களுக்கு NDMA-ல் இருந்து எச்சரிக்கை வந்ததா?.. கவலைப்பட வேண்டாம்.. இதுதான் காரணம்!</a></strong>

மேலும் அதோடு, லேப்டாப்கள், டேப்லட்கள், ஹெட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற பொருட்களுக்கு சிறப்பு ஆஃபர்களும் கிடைக்கின்றன. மேலும் ஏர் கண்டிஷனர், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஸ்மார்ட் டிவி போன்றவை குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் இந்த ஆஃபர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும். அதனால் அறிவிப்புகளை சரியாக கவனித்து சரியான நேரத்தில் ஆர்டர் செய்தால் மிகப்பெரிய சேமிப்பு கிடைக்கும். குறிப்பாக கோடைகாலம் தொடங்கியுள்ளதால் ஏசி வாங்க நினைப்பவர்கள் இந்த சேலை பயன்படுத்திக்கொள்ளளலாம். மேலும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் வாங்க நினைப்பவர்கள் இந்த சேல் மூலம் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நல்லது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நத்திங் முதல் ரியல்மி வரை.. அதிரடியாக விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/nothing-realme-and-oneplus-these-smartphones-price-rapidly-increased-75924.html</link>	
		<pubDate>Sun, 03 May 2026 13:33:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/nothing-realme-and-oneplus-these-smartphones-price-rapidly-increased-75924.html</guid>
		            
			

    	<description><![CDATA[Smartphones Price Increased | இந்திய சந்தையில் ஏராளமனா ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், நத்திங், ரியல்மி, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்கள் விலை உயர்த்தப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/smartphones-price-hike.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நத்திங் முதல் ரியல்மி வரை.. அதிரடியாக விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்!" /></figure>இந்தியாவில் சில முன்னணி ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன. நத்திங்<strong> (Nothing)</strong>, ஒன்பிளஸ் <strong>(OnePlus)</strong>, ரியல்மி <strong>(Realme) </strong>உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சில முக்கிய மாடல் ஸ்மார்ட்போன்களுக்கான விலைகளை மாற்றி அமைத்துள்ளன. இந்த நிலையில், இந்த நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விலை உயர்த்தப்பட்ட நத்திங் ஸ்மார்ட்போன்கள்</h3>
நத்திங் நிறுவனம் தனது முக்கிய மாடல் ஸ்மார்ட்போன்களுக்கான விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
<ul>
 	<li>ரூ.24,999 ஆரம்ப விலையாக கொண்டிருந்த நத்திங் போன் 3a தற்போது ரூ.27,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.</li>
 	<li>8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நத்திங் போன் 4a ஸ்மார்ட்போன் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.40,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.</li>
 	<li>நத்திங் போன் 4a ஸ்மார்ட்போன் வேரியண்டுகளின் அடிப்படையில் ரூ.44,999 முதல் ரூ.50,999 வரை விற்பனை செய்யப்படுகிறது.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/youtube-introduced-picture-in-picture-feature-know-how-it-works-75697.html">இனி யூடியூப் பயன்படுத்தும்போது வேறு செயலியும் பயன்படுத்தலாம்.. வந்தது Picture In Picture அம்சம்!</a></p>

<h3>ஒன்பிளஸ் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு</h3>
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15R ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
<ul>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ரூ.72,999-ல் இருந்து ரூ.77,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.</li>
 	<li>16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ரூ.79,999-ல் இருந்து ரூ.85,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.</li>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் ரூ.50,499-ல் இருந்து ரூ.52,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.</li>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் ரூ.55,999-ல் இருந்து ரூ.57,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.</li>
</ul>
<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/inverter-vs-convertible-ac-which-saves-more-power-and-offers-better-cooling-complete-buying-guide-75554.html">இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?</a>
<h3>ரியல்மி 6 ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியது</h3>
ரியல்மி தனது 6 மாடல் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது ரியமி C71 4G, ரியல்மி 15x 5G, ரியல்மி 15T 5G, ரியல்மி C85 5G, ரியல்மி 16 Pro 5G மற்றும் ரியல்மி 16 Pro+ 5G ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.11,999 முதல் ரூ.44,999 வரை விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோடையில் எளிதாக வெப்பமடையும் ஸ்மார்ட்போன்.. பாதுகாப்பாக வைப்பது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/smartphones-getting-excessive-heat-during-summer-how-to-control-it-75871.html</link>	
		<pubDate>Sat, 02 May 2026 21:29:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/smartphones-getting-excessive-heat-during-summer-how-to-control-it-75871.html</guid>
		            
			

    	<description><![CDATA[Smartphones Getting Excessive Heat During Summer | பொதுவாகவே அதிக பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஸ்மார்ட்போன் அதிகமாக சூடாகும். இந்த நிலையில், கோடைக்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் விரைவாக வெப்பமடையாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/smartphone-heat.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோடையில் எளிதாக வெப்பமடையும் ஸ்மார்ட்போன்.. பாதுகாப்பாக வைப்பது எப்படி?" /></figure>கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், எங்கு பார்த்தாலும் சூரியன் சுட்டெரிக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகள், மின்சாதன பொருட்கள் என அனைத்திற்கும் அதீத வெப்பம் மிகப்பெரிய எதிரியாக உள்ளது. இந்த சூழலில் ஸ்மார்ட்போன்கள் அதிக வெப்பமடைந்து வெடிப்பது உள்ளிட்ட மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> வெப்பமடைவதற்கான காரணங்கள் எவை என்று தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப உங்களது ஸ்மார்ட்போன்களை பாதுகாத்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும்.
<h3>கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தை எதிர்க்கொள்ளும் ஸ்மார்ட்போன்</h3>
கோடைக்காலத்தில் மனிதர்கள் மட்டுமன்றி ஸ்மார்ட்போன்களும் மிக அதிகமான வெப்பத்தை எதிர்க்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, உங்களது ஸ்மார்ட்போன் பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். அதாவது, கோடைக்காலத்தில் நிலவும் இந்த அதீத வெப்பம், உங்களது ஸ்மார்ட்போன் எந்த வித சிக்கல்களும் இல்லாமல் இயங்க ஸ்மார்ட்போனுக்குள் இருக்கும் தெர்மல் சிஸ்டம் அதிகமாக உழைக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/inverter-vs-convertible-ac-which-saves-more-power-and-offers-better-cooling-complete-buying-guide-75554.html">இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?</a>

கோடைக்காலத்தில் வெளிப்புற சூழலில் நிலவும் இந்த சிக்கலை சரிசெய்ய உங்களது ஸ்மார்ட்போனில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது, அதிக அளவு கொண்ட செயலிகளை பயன்படுத்துவது, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளும் சிறிய சிறிய மாற்றங்கள் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து உங்களது ஸ்மார்ட்போனை பாதுகாக்க உதவும்.
<h3>ஸ்மார்ட்போனை உள்ளிருந்து வெப்பம் அடையாமல் பாதுகாப்பது எப்படி?</h3>
<ul>
 	<li>அதிக வெப்பத்தின் காரணமாக உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே வெளியே செல்லும்போது உங்களது ஸ்மார்ட்போனில் போதுமான அளவு சார்ஜ் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.</li>
 	<li>அதிக வெப்பமான சூழலில் உங்கள் ஸ்மார்ட்போனில் செயல்திறன் குறைந்து அது மெதுவாக இயங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், வெயிலில் செல்லும்போது ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.</li>
 	<li>நீங்கள் வெளியே செல்லும்போது உங்களது ஸ்மார்ட்போனை காருக்குள் வைப்பதை தவிர்த்துவிடுங்கள். காரணம், அது உங்களது ஸ்மார்ட்போனுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும். ஏனென்றால் வெப்பமான சூழலில் நீங்கள் ஸ்மார்ட்போனை காருக்குள் வைத்துவிட்டு சென்றால் அது அதிகப்படியான அளவான 45 டிகிரி செல்சியஸை தாண்டிவிடும்.</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் நெட்ஃபிளிக்ஸ்  &#8211; புதிய கிளிப்ஸ் வசதி &#8211; எப்படி பயன்படுத்துவது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/netflix-launches-clips-new-vertical-video-feed-to-rival-tiktok-and-reels-75836.html</link>	
		<pubDate>Sat, 02 May 2026 20:21:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/netflix-launches-clips-new-vertical-video-feed-to-rival-tiktok-and-reels-75836.html</guid>
		            
			

    	<description><![CDATA[நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள கிளிப்ஸ் என்பது அதன் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் இருந்து எடுக்கப்பட்ட குறுகிய வெர்டிக்கல் வீடியோக்களை கொண்ட புதிய அம்சமாகும். இதன் மூலம் பயனர்கள் கிளிப்ஸ் வீடியோக்களை பார்த்து, படங்கள் மற்றும் சீரிஸ்களை பார்ப்பதா வேண்டாமா என முடிவெடுக்க முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/netflix-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் நெட்ஃபிளிக்ஸ்  &#8211; புதிய கிளிப்ஸ் வசதி &#8211; எப்படி பயன்படுத்துவது?" /></figure>சமீபகாலமாக <a href="https://www.tv9tamilnews.com/technology/youtube-introduced-picture-in-picture-feature-know-how-it-works-75697.html" target="_blank" rel="noopener">யூடியூப்</a> ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற குறுகிய வடிவ வீடியோக்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தனது பயனர்களுக்காக புதிய கிளிப்ஸ் என்ற வசதியை ஏறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் டிக்டாக், யூடியூப் ஷார்ட்ஸ், <a href="https://www.tv9tamilnews.com/technology/snapchat-like-feature-for-sending-photographs-to-be-introduced-in-instagram-soon-74174.html" target="_blank" rel="noopener">இன்ஸ்டாகிராம்</a> ரீல்ஸ் போன்ற ஷார்ட் வீடியோ வடிவத்துக்கு நேரடி போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
<h3>நெட்ஃபிளிக்ஸின் கிளிப்ஸ் அம்சம்</h3>
நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள கிளிப்ஸ் என்பது அதன் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் இருந்து எடுக்கப்பட்ட குறுகிய வெர்டிக்கல் வீடியோக்களை கொண்ட புதிய அம்சமாகும். இதன் மூலம் பயனர்கள் நெட்ஃபிளிக்ஸில் முழு படம் அல்லது சீரிஸ்களை பார்க்கும் முன் கிளிப்ஸ் வீடியோக்களை பார்த்து, பார்ப்பதா வேண்டாமா என முடிவெடுக்க முடியும். இது கிட்டத்தட்ட டிரெய்லர் மற்றும் டீசர் போன்று படம் அல்லது வெப் சீரிஸ் எப்படி இருக்கும் என்று நமக்கு சொல்லும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/face-unlock-on-many-android-phones-poses-major-security-risk-as-devices-can-be-tricked-with-photos-75543.html">ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு? – பயனர்களுக்கு பெரிய ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்</a></strong>

இதன் மூலம் நீங்கள் விரும்பும் படங்களையும் வெப் சீரிஸ்களை பார்ப்பதற்கு முன் அதன் முக்கிய காட்சிகளை ஷார்ட் வீடியோவாக பார்க்க முடியும். இது போன்று தொடர்ச்சியாக ஷார்ட் வீடியோக்களை கிளிப்ஸ் என்ற அம்சத்தின் மூலம் பார்க்க முடியும். அதில் நமக்கு விருப்பமான படங்களை அல்ல சீரிஸ்களை தேர்ந்தெடுக்க முடியும். மேலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல இந்த கிளிப்ஸ் வீடியோக்களையும் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
<h3>இந்த கிளிப்ஸ் வசதியை எப்படி பயன்படுத்துவது?</h3>
உங்களிடம் ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸ் செயலி இருந்தால் அவற்றை அப்டேட் செய்வது மூலம் இந்த கிளிப்ஸ் வசதியை பெற முடியும். இதற்காக தனியாக வேறு செயலிகள் எதையும் டவுன்லோடு செய்ய தேவையில்லை. நெட்ஃபிளிக்ஸ் செயலியை திறந்து அதில் கீழே இருக்கும் மெனுவில் கிளிப்ஸ் என்ற ஆப்சனைத் தேர்வு செய்ய வேண்டும். அதனை கிளிக் செய்தால் வெர்டிக்கல் வீடியோக்கள் உங்கள் ஃபீடில் வரும். அதனை ஸ்வைப் செய்வதன் மூலம் முழு வீடியோக்களை பார்க்க முடியும்.

இந்த புதிய அம்சம் தற்போது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் மாற்ற நாடுகளில் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/did-you-get-alert-message-from-national-disaster-management-authority-do-not-worry-75488.html">உங்களுக்கு NDMA-ல் இருந்து எச்சரிக்கை வந்ததா?.. கவலைப்பட வேண்டாம்.. இதுதான் காரணம்!</a></strong>

இந்த புதிய feature முதலில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளிலும் வெளியாகும் என Netflix தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவற்றை பயனர்களை வீடியோக்களை உருவாக்க முடியும். ஆனால், நெட்ஃபிளிக்ஸின் கிளிப்ஸ் அம்சத்தில் அதில் இருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்களில் இருந்து கிளிப்ஸ்களை பார்க்க முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோடையில் ஏசியால் ஏற்படும் பாதிப்புகள்  &#8211;  நிபுணர்கள் சொல்வது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/health-risks-of-using-ac-in-summer-what-you-should-know-75814.html</link>	
		<pubDate>Sat, 02 May 2026 19:13:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/health-risks-of-using-ac-in-summer-what-you-should-know-75814.html</guid>
		            
			

    	<description><![CDATA[Stepping Into AC After Sun: கடுமையான வெயிலில் வெளியே சென்ற பிறகு உடனடியாக ஏசி அறைகளில் நுழைவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் இந்தக் கட்டுரையில், வெயிலின் வெப்பத்திலிருந்து நேரடியாகக் குளிர்ந்த ஏசி அறைக்குள் நுழைவதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ac-room-safety.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோடையில் ஏசியால் ஏற்படும் பாதிப்புகள்  &#8211;  நிபுணர்கள் சொல்வது என்ன?" /></figure>இந்த 2026 ஆம் ஆண்டு கோடைகாலம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெப்பம் உச்சத்தை தொட்டு வருகிறது. இருப்பினும் டெலிவரி ஊழியர்கள், காவல்துறையினர், நெடுஞ்சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் சென்ற பிறகு , ஏசி வசதி கொண்ட அறைக்குள் நுழையும் போது கிடைக்கும் குளுமை அலாதியானது.
<h3>வெயிலில் இருந்த பிறகு உடனடியாக ஏசி அறைக்குள் செல்வது உடலுக்கு ஆபத்தா?</h3>
ஆனால், இப்படி கடுமையான கோடை வெயிலில் வெளியே சென்ற பிறகு உடனடியாக ஏசி அறைகளில் நுழைவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் இந்தக் கட்டுரையில், வெயிலின் வெப்பத்திலிருந்து நேரடியாகக் குளிர்ந்த ஏசி அறைக்குள் நுழைவதற்கு முன் நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோடைக்காலம் தொடங்கியவுடனேயே, தாங்க முடியாத வெப்பத்தைச் சமாளிக்க மக்கள் ஏசியை பயன்படுத்த தொடங்கிவிடுகிறார்கள். வெயிலில் அலைந்த பிறகு வீட்டிற்குத் திரும்பியதும் உடனடியாக ஏசியை ஆன் செய்துவிட்டு, வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க அதற்கு நேர் எதிரே அமர்வது மிகுந்த இதமாக உணரப்படுகிறது. இருப்பினும், இந்த பழக்கம் உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக, வெளிப்புற வெப்பநிலைக்கு ஏற்ப நம் உடல் தன்னைத்தானே இயற்கையாகவே மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இந்த நிலையில் நாம் வெயில் மற்றும் அதிக வெப்பத்தில் இருக்கும்போது ​​வியர்வை வருவது,  இரத்த நாளங்கள் விரிவடைதல் போன்ற செயல்முறைகள் மூலம் உடல் தனது வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது. இது நம் உடலிலேயே இயல்பாக அமைந்துள்ள ஒரு இயற்கையான பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.

வெயிலின் வெப்பத்திலிருந்து, மிகக் குறைந்த வெப்பநிலை கொண்ட ஏசி அறைக்குள் நாம் திடீரென மாறும்போது, ​​நம் உடலுக்குள் இயங்கும் இந்த இயற்கையான பாதுகாப்பு அமைப்புகள் சீர்குலைகின்றன. வெப்பநிலையில் ஏற்படும் இத்தகைய திடீர் மாற்றங்கள் சளி, இருமல் போன்ற பிரச்னைகளையும், கடுமையான தலைவலி மற்றும் தசை வலிகளையும் ஏற்படுத்தக்கூடும். மேலும், இந்தச் செயல்முறை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
<h3>நீங்கள் என்ன செய்ய வேண்டும்?</h3>
வெயிலில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய உடனேயே, ஏசி அறைக்குள் நுழைவதற்கு முன்பு, சிறிது நேரம் நிழலிலோ அல்லது மின்விசிறியின் கீழோ அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டும். உங்கள் உடல் வெப்பநிலை ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு மட்டுமே, ஏசி அறைக்குள் நுழைவது பாதுகாப்பானது. அதேபோல, ஏசி அறைக்குள் நுழைவதற்குச் சற்று முன்பு, மிகக் குளிர்ந்த நீரைக் குடிப்பதும் அறிவுறுத்தப்படுவதில்லை. ஏசி அறைக்குள் நுழைவதற்கு முன்பு சில நிமிடங்கள் இடைவெளி விடுவதன் மூலம், உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகாமல் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெயில் காலத்தில் ஐபோன் அதிக வெப்பமடைவதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/iphone-overheating-in-summer-causes-warning-signs-and-easy-fixes-for-users-75753.html</link>	
		<pubDate>Sat, 02 May 2026 16:32:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/iphone-overheating-in-summer-causes-warning-signs-and-easy-fixes-for-users-75753.html</guid>
		            
			

    	<description><![CDATA[iPhone Overheating in Summer : ஐபோன் பயன்படுத்தும் பலர், தங்கள் போன் திடீரென அதிகமாக சூடாவதாகவும், செயல் திறன் குறைவதாகவும் பலரும் தங்கள் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? இந்த பிரச்னைகளை எப்படி சரி செய்வது என பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/iphone-summer-heat-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெயில் காலத்தில் ஐபோன் அதிக வெப்பமடைவதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன?" /></figure>இந்தியாவில் அதிகரித்து வரும் கடும் வெயில், மனிதர்களை மட்டுமல்லாமல் <a href="https://www.tv9tamilnews.com/technology/silicon-carbon-battery-in-smartphones-what-it-is-and-how-it-helps-make-phones-slimmer-75347.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போன்களையும்</a> பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக <a href="https://www.tv9tamilnews.com/technology/smartphones-to-launch-in-may-2026-list-here-75114.html" target="_blank" rel="noopener">ஐபோன்</a> பயன்படுத்தும் பலர், தங்கள் போன் திடீரென அதிகமாக சூடாவதாகவும், செயல் திறன் குறைவதாகவும் பலரும் தங்கள் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன்களை பொதுவாக 0°C முதல் 35°C வரை உள்ள வெப்பநிலையில் சிறப்பாக செயல்படும்படி வடிவமைத்துள்ளது. இதை மீறி அதிக வெப்பநிலை ஏற்பட்டால், ஸ்மார்ட்போன் தன்னைத்தானே பாதுகாக்க கூலிங் மோட் அல்லது பாதுகாப்பு நிலைக்கு மாறும்.
<h3>ஐபோன் வெப்பமடையும் போது காட்டும் அறிகுறிகள்</h3>
டிஸ்பிளே திடீரென மங்கலாகி விடும். சார்ஜிங் நிறுத்தம் போன்ற நோட்டிஃஃபிகேஷன் காட்டப்படும். போன் வழக்கத்தை விட மெதுவாக இயங்கும். கேமரா சரியாக வேலை செய்யாது. போனில் உள்ள ஆப்ஸ் திறக்க அதிக நேரம் ஆகும். ஆனால் இது ஐபோன் தன்னை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/technology/oneplus-pad-4-introduced-in-india-with-amazing-features-know-full-details-75478.html"> 13,380 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் பேட் 4!</a></strong>
<h3>ஐபோன் வெப்பமடைய முக்கிய காரணங்கள்</h3>
ஐபோனை அதிக நேரம் வெயிலில் பயன்படுத்தும்போது வெப்பமடையும். சார்ஜ் செய்தபடியே கேம் விளையாடுவது, வீடியோக்கள் பார்ப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்தால் ஐபோன் வெப்பமடைய வாய்ப்பிருக்கிறது. அதே போல கேபிள் சார்ஜிங்கிற்கு பதிலாக வயர்லெஸ் சார்ஜிக் செய்தால் போன் அதிக வெப்பமடைய வாய்ப்பிருக்கிறது. , மேலும் ஜிபிஎஸ், ப்ளூடூத் ஆகிய வற்றை தொடர்ந்து பயன்படுத்தினாலோ அல்லது ஒரே நேரத்தில் பல செயலிகளை பயன்படுத்தினாலோ பேட்டரியின் லோட் அதிகரித்து வெப்ப நிலைய உயர வாய்ப்பிருக்கிறது.
<h3>இதற்கான தீர்வு என்ன?</h3>
பொதுவாக ஐபோன்கள் வெப்பமடைவதை தவிர்க்க, வெயிலில் அதிக நேரம் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கனமான கவர் அணிவதை தவிர்க்க வேண்டும். வயர்லெஸ் சார்ஜிங் தவிர்த்து கேபிள் மூலம் சார்ஜ் செய்வதை வழக்கமாக வைத்திருங்கள். தேவையற்ற செயலிகள் பயன்படுத்துவதை தவிர்த்து அவற்றை குளோஸ் செய்யலாம். குறைவான பவர் மோடில் பயன்புட்துதவது நல்லது. காரின் டேஷ்போர்டில் ஸ்மார்போனை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/meet-your-younger-self-how-ai-prompts-are-reuniting-users-with-their-childhood-on-instagram-75406.html">உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம் – சமூக வலைதள Baby me Treand – எப்படி உருவாக்குவது?</a></strong>

வெயில் காலங்களில் மனிதர்கள் மட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன்கள் கூட பாதிப்படைய செய்கின்றன. இதனால் மககள் அதிக கவனத்துடன் அதனை கையாள வேண்டியது அவசியமாகிறது. காரணம் நாம் அலட்சியம் செய்தால் அதன் செயல் திறன் முழுமையாக பாதிக்கப்படக்கூடும். ஆண்ட்ராய்டு போன்களை விட ஐபோன்கள் விலை உயர்ந்ததால் அதனை கூடுதல் கவனத்துடன் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி யூடியூப் பயன்படுத்தும்போது வேறு செயலியும் பயன்படுத்தலாம்.. வந்தது Picture In Picture அம்சம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/youtube-introduced-picture-in-picture-feature-know-how-it-works-75697.html</link>	
		<pubDate>Sat, 02 May 2026 12:21:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/youtube-introduced-picture-in-picture-feature-know-how-it-works-75697.html</guid>
		            
			

    	<description><![CDATA[Picture In Picture Feature In YouTube | கூகுள் நிறுவனத்தின் யூடியூப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக்சர் இன் பிக்சர் என்ற அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/yiutube-feature.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி யூடியூப் பயன்படுத்தும்போது வேறு செயலியும் பயன்படுத்தலாம்.. வந்தது Picture In Picture அம்சம்!" /></figure>உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலியாக கூகுள் <strong>(Google)</strong> நிறுவனத்தின் யூடியூப்<strong> (YouTube)</strong> உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இதில் புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் நிலையில், உலக அளவில் உள்ள பயனர்களுக்காக புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை பயன்படுத்தும் பிக்சர் இன் பிக்சர் <strong>(Picture In Picture)</strong> அம்சத்தை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், யூடியூபில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பிக்சர் இன் பிக்சர் அம்சத்தை அறிமுகம் செய்த யூடியூப்</h3>
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் வீடியோ தளமாக யூடியூப் உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தும்போது, அதனை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒருவேளை அந்த செயலியில் இருந்து வெளியே வந்துவிட்டால், அதனை பயன்படுத்த முடியாது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப், இந்த பிக்சர் இன் பிக்சர் அம்சத்தை அறிமுகம் செய்தது. ஆனால், முன்னதாக இந்த அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த பயனர் பிரீமியம் செலுத்தியிருக்க வேண்டும். இந்த நிலையில் தான் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக பிக்சர் இன் பிக்சர் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/meet-your-younger-self-how-ai-prompts-are-reuniting-users-with-their-childhood-on-instagram-75406.html">உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம் – சமூக வலைதள Baby me Treand – எப்படி உருவாக்குவது?</a>
<h3>பிக்சர் இன் பிக்சர் அம்சம் எப்படி செயல்படும்?</h3>
இந்த அம்சம் மூலம் யூடியூப் செயலியை பயன்படுத்திக்கொண்டே வேறு ஒரு செயலியையும் பயன்படுத்த முடியும். அதாவது, யூடியூப் செயலியில் இருந்து வெளியே வந்தாலும், சிறிய கட்டத்தில் யூடியூப் ஓடிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்திக்கொண்டு இருக்கும்போது யூடியூப் ஒரு இடத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். இதனை ஸ்கிரீனின் எந்த மூளையில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-limit-screen-time-for-kids-on-android-and-iphone-simple-guide-75400.html">குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனில் நேரக் கட்டுப்பாட்டை உருவாக்குவது எப்படி? விவரம் இதோ</a>

யூடியூப் டுடோரியல் வீடியோ பார்த்துக்கொண்டே ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/inverter-vs-convertible-ac-which-saves-more-power-and-offers-better-cooling-complete-buying-guide-75554.html</link>	
		<pubDate>Fri, 01 May 2026 17:35:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/inverter-vs-convertible-ac-which-saves-more-power-and-offers-better-cooling-complete-buying-guide-75554.html</guid>
		            
			

    	<description><![CDATA[Inverter AC vs Convertible AC : மார்கெட்டில் கிடைக்கும் பல்வேறு மாடல்கள் காரணமாக, சரியான ஏசியை தேர்வு செய்வது மக்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். குறிப்பாக இன்வர்டர் ஏசி மற்றும் கன்வர்டெபிள் ஏசி ஆகியவற்றில் எது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/inverter-ac-vs-convertible-ac.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/essential-summer-care-tips-for-a-healthy-body-and-peaceful-mind-75472.html" target="_blank" rel="noopener">கோடை வெப்பம்</a> நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், <a href="https://www.tv9tamilnews.com/technology/humidity-vs-dry-heat-which-season-makes-your-ac-consume-more-electricity-73996.html" target="_blank" rel="noopener">ஏசி</a> விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் மார்கெட்டில் கிடைக்கும் பல்வேறு மாடல்கள் காரணமாக, சரியான ஏசியை தேர்வு செய்வது மக்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். குறிப்பாக இன்வர்டர் ஏசி மற்றும் கன்வர்டெபிள் ஏசி ஆகியவற்றில் எது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இந்த இரண்டு வகை ஏசிகளில் மின் சேமிப்பு மற்றும் குளிர்ச்சி அவற்றின் செயல்முறை மற்றும் பயன்பாடு ஒன்றுக்கொன்று வேறுபடும். இந்த கட்டுரையில் 2 வகை ஏசிகளில் உள்ள வித்தியாசம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இன்வர்டர் ஏசி என்றால் என்ன?</h3>
இன்வர்டர் ஏசி என்பது அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப கம்பிரசரின் வேகத்தை தானாக மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டது. சாதாரண ஏசிக்கள் போல அடிக்கடி ON/OFF ஆகாமல், தொடர்ந்து இயங்கி வெப்பநிலையை சமநிலையாக வைத்திருக்கிறது. இதில் மின் நுகர்வு குறைவு, ஒரே மாதிரியான குளிர்ச்சி, குறைந்த சத்தம், நீண்ட நேர பயன்பாடு ஆகிய நன்மைகள் கொண்டது. அறையின் வெப்பநிலை குறைந்ததும், கம்பிரசர் வேகம் குறைவதால் மின் நுகர்வு குறைகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/humidity-vs-dry-heat-which-season-makes-your-ac-consume-more-electricity-73996.html">கோடைகாலத்தை விட குளிர்காலத்திலேயே ஏசியினால் மின் கட்டணம் அதிகரிக்குமா? – காரணம் என்ன?</a></strong>
<h3>கன்வர்டெபிள் ஏசி என்றால் என்ன?</h3>
கன்வர்டெபிள் ஏசி என்பது குளிர்ச்சி தரும் திறனை பயனர் விருப்பப்படி மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொண்டது. அதாவது, நீங்கள் தேவைக்கேற்ப குளிர்ச்சி அளவை கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக அதிக வெப்பம் அல்லது அதிக பேர் உள்ள அறை என்றால் அதற்கு ஏற்ப ஹை மோட் பயன்படுத்த முடியும். அதே போ இரவு நேரம் அல்லது குறைவான நபர்கள் வசிக்கும் அறை என்றால் லோ மோட் பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும் என்பதால் மின் பயன்பாட்டை குறைக்க முடியும். மேலும் சூழல்களுக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/desert-cooler-vs-personal-cooler-vs-tower-cooler-key-differences-power-consumption-and-buying-guide-70430.html">டவர் கூலர் vs பெர்சனல் கூலர் vs டவர் கூலர் – வித்தியாசம் என்ன? எது சிறந்தது?</a></strong>
<h3>மின் சேமிப்பில் எது சிறந்தது?</h3>
<ul>
 	<li>இன்வர்டர் ஏசியை பொறுத்தவரை பயன்பாட்டுக்கு ஏற்ப கன்வர்டர் வேகத்தை மாற்றி மின்சாரத்தை சேமிக்க முடியும். அதே நேரம் ஆட்களின் எண்ணிக்கை மற்றும் வெப்ப நிலைக்கு ஏற்ப ஏசியை பயன்பாட்டை கட்டுப்படுத்தி மின்சாரத்தை சேமிக்க முடியும்.</li>
 	<li>இதன் மூலம் நீங்கள் ஆட்டோமேட்டிக்காக மின் சேமிப்பை விரும்பினால் அதற்கு இன்வர்டர் ஏசி சிறந்தது. அதே நேரம் நீங்கள் சூழலுக்கு ஏற்பட ஏசி பயன்பாட்டை கட்டுப்படுத்தி மின்சாரத்தை சேமிக்க விரும்பினால் அதற்கு கன்வர்டெபிள் ஏசி சிறந்தது.</li>
 	<li>நீண்ட நேர பயன்பாடு, சத்தம் குறைவாக இருக்க வேண்டும், தானாக செயல்படும் வசதி போன்ற தேவைகளுக்கு இன்வர்டர் ஏசி சிறந்ததாக பார்க்கப்படுகிறது.</li>
 	<li>அறையில் உள்ள நபர்களை பொறுத்து ஏசியின் மோடை அடிக்கடி மாற்ற வேண்டியிருந்தால் அதற்கு கன்வர்டபிள் ஏசி சிறந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக வீடுகளில் ஹால் மற்றும் லிவிங் ரூம் போன்றவற்றுக்கு இந்த வகை ஏசிசிறந்ததாக கருதப்படுகிறது.</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு? &#8211;  பயனர்களுக்கு பெரிய ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/face-unlock-on-many-android-phones-poses-major-security-risk-as-devices-can-be-tricked-with-photos-75543.html</link>	
		<pubDate>Fri, 01 May 2026 16:32:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/face-unlock-on-many-android-phones-poses-major-security-risk-as-devices-can-be-tricked-with-photos-75543.html</guid>
		            
			

    	<description><![CDATA[Android Face ID Risk : சமீபத்திய ஆய்வில் இந்த வசதி பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் ஃபேஸ் அன்லாக் வசதி பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ் அன்லாக் வசதியை ஒரு போட்டோ மூலம் எளிதாக  போனை அன்லாக் செய்ய முடிகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/face-unlock-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு? &#8211;  பயனர்களுக்கு பெரிய ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்" /></figure>ஆண்ட்ராய்டு <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-limit-screen-time-for-kids-on-android-and-iphone-simple-guide-75400.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போன்களில்</a> பயன்படுத்தப்படும் Face Unlock வசதி பலருக்கும் எளிதான மற்றும் விரைவான பாதுகாப்பு முறையாக இருக்கிறது. நம்மை தவிர வேறு யாராலும் போனை பயன்படுத்த முடியாது என்ற நம்பிக்கையை தருகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்த வசதி பெரும்பாலான <a href="https://www.tv9tamilnews.com/technology/government-warns-android-users-about-new-dangerous-virus-how-to-stay-safe-73417.html" target="_blank" rel="noopener">ஆண்ட்ராய்டு</a> போன்களில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின் படி, ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஃபேஸ் அன்லாக் வசதியை ஒரு சாதாரண புகைப்படத்தின் மூலம் கூட எளிதாக பயன்படுத்தி போனை அன்லாக் செய்ய முடிகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளுக்கு பெரிய பாதுகாப்பு அபாயமாக மாறுகிறது.
<h3>ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு?</h3>
சாம்சங், ஒன்பிளஸ், ஷியோமி போன்ற முன்னணி நிறுவனங்களின் சில மாடல்கள் கூட இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்25, ஓப்போ ஃபைன்ட் எக்ஸ்9 புரோ, மோட்ரோலோ ரேசர் 50 போன்ற மாடல்களில் இந்த பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டதில், இந்த ஃபேஸ் அன்லாக் வசதி நம் போட்டோவின் மூலம் ஏமாற்றப்பட முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-use-youtube-offline-on-android-step-by-step-guide-75372.html">இண்டர்நெட் இல்லாமல் யூடியூப் வீடியோ பார்ப்பது எப்படி? விவரம் இதோ</a></strong>

மொத்தம் 133 போன்களில் நடத்தப்பட்ட சோதனையில், பெரும்பாலான போன்கள் 2D முக அடையாள முறையை பயன்படுத்துவதால் இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock பெரும்பாலும் சாஃப்ட்வேர் முறையில் செயல்படுகிறது. அதாவது, கேமரா மூலம் எடுத்த படங்களை வைத்து முகத்தை அடையாளம் காண்கிறது. இதனால், உண்மையான மனிதர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வேறுபடுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதற்கு மாறாக, ஆப்பிள் ஐ போன்களில் உள்ள Face ID தொழில்நுட்பம் 3D முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதில் முகத்தின் தோற்றம், அமைப்பு போன்ற பல அம்சங்கள் கணக்கில் எடுக்கப்படுவதால், போனை போட்டோவின் மூலம் அதை ஏமாற்றுவது மிகவும் கடினம். இதுவே ஐபோன்களில் Face ID அதிக பாதுகாப்பானதாக இருக்கக் காரணம் என கூறப்படுகிறது.

இந்த காரணத்தால் தான் பல நிபுணர்கள் மற்றும் பயனர்கள் ஆண்ட்ராய்டு போன்களில் ஃபிங்கர்பிரிண்ட் மூலம் அன்லாக் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். இது ஃபேஸ் அன்லாக் முறையை விட நம்பகமானதாக கருதப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/silicon-carbon-battery-in-smartphones-what-it-is-and-how-it-helps-make-phones-slimmer-75347.html">சாராண பேட்டரிக்கும் சிலிகான் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம்? எது நல்லது?</a></strong>

இந்நிலையில், புதிய ஆண்ட்ராய்டு போன்களில் மேம்பட்ட முக அடையாள தொழில்நுட்பம் அறிமுகமாகி வருகிறது. குறிப்பாக ஹார்வேர்டு மூலம் முக அடையாளம் காணும் முறையை கொண்டு வர கூகுகள் முயற்சி செய்து வருகிறது. இது ஐபோன் பேஸ் ஐடி போன்ற பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடிவில், ஃபேஸ் அன்லாக் வசதியின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமான டேட்டாக்கள் உள்ள போன்களில் ஃபிங்கர்பிரிண்ட் அல்லது பின் அல்லது பாஸ்வேர்டு போன்ற பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்களுக்கு NDMA-ல் இருந்து எச்சரிக்கை வந்ததா?.. கவலைப்பட வேண்டாம்.. இதுதான் காரணம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/did-you-get-alert-message-from-national-disaster-management-authority-do-not-worry-75488.html</link>	
		<pubDate>Fri, 01 May 2026 13:38:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/did-you-get-alert-message-from-national-disaster-management-authority-do-not-worry-75488.html</guid>
		            
			

    	<description><![CDATA[National Disaster Management Authority | இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில், புதிய அம்சம் ஒன்றை மத்திய அரசு சோதனை செய்து வருகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக சில பொதுமக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அனுப்பியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/alert.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்களுக்கு NDMA-ல் இருந்து எச்சரிக்கை வந்ததா?.. கவலைப்பட வேண்டாம்.. இதுதான் காரணம்!" /></figure>தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் <strong>(NDMA - National Disaster Management Authority)</strong> இருந்து சில பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை கண்டு சிலர் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், பொதுமக்கள் அந்த குறுஞ்செய்தி குறித்து அச்சமடைய தேவை இல்லை. காரணம், இயற்கை பேரிடர்கள் குறித்து எச்சரிக்கும் புதிய அம்சத்தை அரசு சோதனை செய்து வருகிறது. இதன் காரணமாகவே சிலருக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இயற்கை பேரழிவுகள் குறித்து எச்சரிக்கும் புதிய அம்சம்</h3>
இயற்கை பேரழிவுகள் குறித்து எச்சரிக்கும் <strong>"Cell Broadcast Alert"</strong> என்ற அம்சத்தை அரசு சோதனை செய்து வருகிறது. அதாவது ஏதேனும் பேரழிவுகள் அல்லது இயற்கை சீர்ரங்கள் ஏற்படும்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த அம்சம் தற்போது இந்தியா முழுவதும் பரவலாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த குறுஞ்செய்தியை பெற்றவர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/silicon-carbon-battery-in-smartphones-what-it-is-and-how-it-helps-make-phones-slimmer-75347.html">சாராண பேட்டரிக்கும் சிலிகான் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம்? எது நல்லது?</a>
<h3>எச்சரிக்கை வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும்?</h3>
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு இயற்கை பேரழிவு நடைபெறுவதற்கு முன்னதாகவும், பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இத்தகைய எச்சரிக்கை செய்திகளை பெற விருப்பம் இல்லை என்றால் <strong>Settings</strong> பகுதிக்கு சென்று இந்த அம்சத்தை <strong>Disable</strong> செய்யும் வசதியும் உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/do-not-let-your-smartphone-battery-goes-down-from-20-perventage-75226.html">உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி 20%-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் சிக்கல்!</a>
<h3>எச்சரிக்கை வரும்போது என்ன நடக்கும்</h3>
சுனாமி, நிலநடுக்கம், மின்னல் தாக்குதல், ரசாயன சிக்கல்கள் தொடர்பான ஆபத்துகள் குறித்து அரசு குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களை எச்சரிக்கும். இந்த எச்சரிக்கை வரும்போது பொதுமக்கள் மிக சத்தமான அலாரம் போன்ற ஓசையை கேட்பார்கள். அல்லது எச்சரிக்கை தொடர்பான குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ள நிலையில், அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு <strong>NDMA</strong> இடம் இருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி பெற்றால் கவலைப்பட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>13,380 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் பேட் 4!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/oneplus-pad-4-introduced-in-india-with-amazing-features-know-full-details-75478.html</link>	
		<pubDate>Fri, 01 May 2026 12:55:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/oneplus-pad-4-introduced-in-india-with-amazing-features-know-full-details-75478.html</guid>
		            
			

    	<description><![CDATA[OnePlus Pad 4 Introduced In India | ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒன்பிளஸ் பேட் 4-ஐ அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/oneplus-4-tab.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="13,380 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் பேட் 4!" /></figure>இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> நிறுவனமாக ஒன்பிளஸ் <strong>(OnePlus)</strong> உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒன்பிளஸ் பேட் 4-ஐ <strong>(OnePlus Pad 4 )</strong> இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த டேபின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் பேட் 4</h3>
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஒன்பிளஸ் பேட் 4-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி LPDDR5X RAM மற்றும் 512ஜிபி UFS ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 13.2 இன்ச் எல்சிடி பேனல் கொடுக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/do-not-let-your-smartphone-battery-goes-down-from-20-perventage-75226.html">உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி 20%-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் சிக்கல்!</a>

இந்த ஒன்பிளஸ் பேட் 4 13,380 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை வழங்கும் வகையில் 80 வாட்ஸ் SUPERVOOC அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேபை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 20 மணி நேரம் வரை தொடர்ந்து வீடியோ பிளே செய்ய முடியும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக பேட்டரி திறன் கொண்ட டேபை வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
<h3>ஒன்பிளஸ் பேட் 4 - விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">It’s here. <a href="https://twitter.com/hashtag/OnePlusPad4?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#OnePlusPad4</a> sale starts May 5, 12 PM IST.</p>
Get notified: <a href="https://t.co/Ulp8gRflZj">https://t.co/Ulp8gRflZj</a> <a href="https://t.co/ljcagCLcLK">pic.twitter.com/ljcagCLcLK</a>

— OnePlus India (@OnePlus_IN) <a href="https://twitter.com/OnePlus_IN/status/2049754002339062050?ref_src=twsrc%5Etfw">April 30, 2026</a></blockquote>
8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் பேட் 4 ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக மெமரி மற்றும் ஸ்டோரேஜ் அம்சத்தை எதிர்பார்க்கும் நபர்கள் ரூ.64,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டேபை தேர்வு செய்யலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/smartphones-to-launch-in-may-2026-list-here-75114.html">மே மாதத்தில் அறிமுகமாக உள்ள அசத்தல் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!</a>

அறிமுக சலுகையாக ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.5,000 தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் ரூ.59,999 ஆரம்ப விலையாக உள்ள ஒன்பிளஸ் பேட் 4-ஐ வெறும் ரூ.54,999-க்கே வாங்கிக்கொள்ளலாம். இது மே 05, 2026 பிற்பகல் 12 மணிக்கு இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம் &#8211; சமூக வலைதள Baby me Treand &#8211; எப்படி உருவாக்குவது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/meet-your-younger-self-how-ai-prompts-are-reuniting-users-with-their-childhood-on-instagram-75406.html</link>	
		<pubDate>Thu, 30 Apr 2026 21:39:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/meet-your-younger-self-how-ai-prompts-are-reuniting-users-with-their-childhood-on-instagram-75406.html</guid>
		            
			

    	<description><![CDATA[“Meet Your Younger Self : நம் குழந்த பருவத்துடன் உரையாடும் Baby Me என்ற டிரெண்ட் இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்துள்ளது.  நம் குழந்தைப் பருவப் புகைப்படம் ஒன்றையும், தற்போதைய புகைப்படம் ஒன்றையும் நாம் வழங்கினால், ஏஐ அவற்றை ஒன்றிணைத்து ஒரே ஃபிரேமிற்குள் கொண்டுவருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/instagram-baby-me-trend.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம் &#8211; சமூக வலைதள Baby me Treand &#8211; எப்படி உருவாக்குவது?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/technology/watching-reels-continuously-for-long-hours-can-damage-human-brain-five-time-than-alcohol-warns-neurologist-74312.html" target="_blank" rel="noopener">சமூக ஊடகங்களில்</a> நீங்கள் எங்கு பார்த்தாலும் பழைய நாம் மற்றும் புதிய நாம் என்ற பதிவுகளே அதிகம் தென்படுகின்றன. டைம் டிராவல் செய்யாமலேயே நம் குழந்தைப் பருவத்துடன் உரையாடவும் முடியும். இதற்கு <a href="https://www.tv9tamilnews.com/technology/prophetic-launched-ai-wearable-and-says-this-device-can-control-human-dreams-74447.html" target="_blank" rel="noopener">செயற்கை நுண்ணறிவு</a> ஒரு வாய்ப்பை வழங்குகிறது. சாட்ஜிபிடி மற்றும் Gemini போன்ற ஏஐ தளங்களில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சங்களே, இந்த சமூகவலைதலங்களில் இந்த டிரெண்டிற்கு காரணமாக அமைந்துள்ளன. அதாவது நாம் நம் குழந்தை பருவத்துடன் சந்திப்பது போல அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
<h3>உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம்</h3>
நம் குழந்தைப் பருவப் புகைப்படம் ஒன்றையும், தற்போதைய புகைப்படம் ஒன்றையும் நாம் வழங்கினால், ஏஐ அவற்றை ஒன்றிணைத்து ஒரே ஃபிரேமிற்குள் கொண்டுவருகிறது. இது வெறும் ஒரு புகைப்படமாக மட்டும் இல்லாமல், நாம் குழந்தையாக இருந்தபோது நம்முடன் நாமே எப்படிப் பேசிக்கொண்டிருப்போம் என்பதையோ, அல்லது இருவரும் அருகருகே அமர்ந்து பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்றோ இந்தப் படங்கள் உருவாக்கப்படுகின்றன. வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல, நீ கவனமாக இருக்க வேண்டும் "அழாதே," "உனக்கு முன்னால் ஒரு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது" போன்ற உணர்வுபூர்வமான வாசகங்களுடன் பலரும் இந்த போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-protect-your-smartphone-from-overheating-this-summer-5-key-tips-75049.html">கோடைகாலத்தில் வெப்பமடையும் ஸ்மார்ட்போன்கள் – இதை கவனிக்கலனா ஆபத்து!</a></strong>

இந்தப் படங்கள் பலருக்கும் உணர்ச்சிரரமான தருணமாக மாறியுள்ளது. குழந்தையாக இருந்தபோது எப்போது வளர்ந்து பெரியவராவோம் என்று ஏங்கிய தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் நினைவுகூருகிறார்கள். சிலர் கேள்வி எழுப்பினாலும், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைப் பருவ வடிவத்தைத் தாங்களே கையில் ஏந்தியிருப்பது போன்ற படங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
<h3>எப்படி ஒரு 'Baby Me' படத்தை உருவாக்குவது?</h3>
Gemini அல்லது ChatGPT ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் குழந்தையாக இருந்தபோது எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படம் ஒன்றையும், தற்போதைய புகைப்படம் ஒன்றையும் அப்லோட் செய்யவும். அதற்கு நாம் பிராம்ப்ட்டை சரியாக வழங்க வேண்டும். அதாவது நம் குழந்தை பருவ நம்மையும், இப்போது இருக்கும் நம்மையும் அருகருகே அமர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு இமேஜை உருவாக்கி கொடு என டைப் செய்து அனுப்புங்கள். சில வடிவங்களில் இமேஜ் உருவாக்கி கொடுக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-will-not-work-on-these-model-smartphones-from-2026-september-74825.html">செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. அதிரடி அறிவிப்பு!</a></strong>

தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இது டிரெண்டாகி வருகிறது. மனித உணர்வுகளை தொடுகின்றன சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. டைம் டிராவல் செய்யாமலேயே நாம் நம் குழந்தை பருவத்துடன் சமமாக உட்கார்ந்து பேசுவது போன்று சுவாரசியமான தருணமாக பார்க்கப்படுகிறது

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனில் நேரக் கட்டுப்பாட்டை உருவாக்குவது எப்படி? விவரம் இதோ</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-limit-screen-time-for-kids-on-android-and-iphone-simple-guide-75400.html</link>	
		<pubDate>Thu, 30 Apr 2026 21:10:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-limit-screen-time-for-kids-on-android-and-iphone-simple-guide-75400.html</guid>
		            
			

    	<description><![CDATA[How to Limit Screen Time for Kids : ஸ்மார்ட்போன்களில் நன்மைகள் இருப்பது போலவே, ஏராளமான தீமைகளும் உள்ளன. எனவே குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணிப்பது அவசியம். தற்போது குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது பெற்றோர்களுக்கு கவலையாக மாறியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/smartphone-screen-time.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனில் நேரக் கட்டுப்பாட்டை உருவாக்குவது எப்படி? விவரம் இதோ" /></figure>இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை <a href="https://www.tv9tamilnews.com/technology/smartphones-to-launch-in-may-2026-list-here-75114.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போன்களை</a> பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் நன்மைகள் இருப்பது போலவே, ஏராளமான தீமைகளும் உள்ளன. எனவே <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/modern-parenting-in-2026-5-crucial-changes-every-parent-must-embrace-75012.html" target="_blank" rel="noopener">குழந்தைகள்</a> ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணிப்பது அவசியம். தற்போது குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது பெற்றோர்களுக்கு கவலையாக மாறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள், யூடியூப் வீடியோக்கள் மற்றும் கேம்ஸ் காரணமாக அவர்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. இதனையடுத்து அவர்கள் போன் பார்ப்பதை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது.
<h3>குழந்தைகள் போன் பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டும்?</h3>
அதிக நேரம் ஸ்மார்ட்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு கவன சிதறல் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்களின் தூக்கம், உடல் மற்றும் மன நலன் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கக்கூடும். இதனால் சிறிய வயதிலேயே இருந்து அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-protect-your-smartphone-from-overheating-this-summer-5-key-tips-75049.html">கோடைகாலத்தில் வெப்பமடையும் ஸ்மார்ட்போன்கள் – இதை கவனிக்கலனா ஆபத்து!</a></strong>

இதற்காக செட்டிங்ஸ் சென்று Apps அல்லது Digital Wellbeing / Screen Time என்பதை தேர்வு செய்யவும். அதில் நாம் பயன்படுத்தும் செயலிகள் விவரங்களை பார்க்க முடியும். ஒவ்வொரு செயலிகளுக்கும் அருகில் ஹவர்கிளாஸ் என்ற ஐகான் இருக்கும். அந்த செயலியை பயன்படுத்தும் நேரத்தை இதில் நிர்வகிக்கலாம். ஒரே நேரத்தில் பல செயலிகளுக்கும் நேரக் கட்டுப்பாட்டை நிர்வகிக்க முடியும்.

ஐபோனில் இந்த வசதி ஸ்கிரீன் டைம் என்ற பெயரில் இருக்கும். இதற்காக உங்கள் ஐபோனில் Settings பகுதிக்கு சென்று Screen Time என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். பாஸ்கோட் அமைத்துக்கொள்ளவும், அதில் Add Limit என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் நாம் எந்த செயலிக்கு நேரக்கட்டுப்பாடு தேவையா அதனை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அந்த செயலிக்கு நேரக் கட்டுப்பாட்டை அமைக்கலாம். நாம் நேரக்கட்டுப்பாடு விதித்தவுடன் அந்த நேரத்துக்கு பிறகு அந்த செயலி தானாகவே லாக் ஆகும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-will-not-work-on-these-model-smartphones-from-2026-september-74825.html">செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. அதிரடி அறிவிப்பு!</a></strong>

13 வயதிற்கு மேல் குழந்தைகளுக்கு நேரக் கட்டுப்பாடு அம்சங்களுடன் பயன்படுத்தக் கொடுக்கலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அதற்குமுன் அதில் உள்ள சாதக பாதக அம்சங்களை நாம் அவர்களுக்கு தெளிவாக கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் அவர்களின் பயன்பாட்டை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

குறிப்பாக சமூக வலைதள மோசடிகளில் அவர்கள் சிக்காமல் இருக்க முறையான கண்காணிப்பு அவசியம். இன்றைய காலகட்டத்தில் படிப்பு உள்ளிட்ட விஷயங்களால் குழந்தைகளை ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் தவிர்க்க முடியாது என்றாலும், முறையான கண்காணிப்பு அவசியம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இண்டர்நெட் இல்லாமல் யூடியூப் வீடியோ பார்ப்பது எப்படி? விவரம் இதோ</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-use-youtube-offline-on-android-step-by-step-guide-75372.html</link>	
		<pubDate>Thu, 30 Apr 2026 18:39:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-use-youtube-offline-on-android-step-by-step-guide-75372.html</guid>
		            
			

    	<description><![CDATA[Youtube Premium : இண்டர்நெட் இல்லாதபோதும் வீடியோக்களை பார்க்கும் வசதியை யூடியூப் வழங்குகிறது. குறிப்பாக பயணங்களின்போது, குறைந்த இண்டர்நெட் ஸ்பீட் அல்லது டேட்டா குறைவாக இருக்கும் தருணங்கள் போன்ற சூழல்களில் இந்த ஆஃப்லைனில் யூடியூப் பார்க்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/youtube-premium.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இண்டர்நெட் இல்லாமல் யூடியூப் வீடியோ பார்ப்பது எப்படி? விவரம் இதோ" /></figure>உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தளமாக <a href="https://www.tv9tamilnews.com/technology/youtube-lets-users-turn-off-shorts-check-exact-settings-to-clean-up-your-feed-71806.html" target="_blank" rel="noopener">யூடியூப்</a> இருந்து வருகிறது. பலர் வீடியோ, ஷார்ட்ஸ் பார்க்க யூடியூபை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-launches-fiber-plan-at-rs-399-per-month-check-full-benefits-72080.html" target="_blank" rel="noopener">இண்டர்நெட்</a> இல்லாதபோதும் வீடியோக்களை பார்க்கும் வசதியையும் வழங்குகிறது. குறிப்பாக பயணங்களின்போது, குறைந்த இண்டர்நெட் ஸ்பீட் அல்லது டேட்டா குறைவாக இருக்கும் தருணங்கள் போன்ற சூழல்களில் இந்த ஆஃப்லைனில் யூடியூப் பார்க்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
<h3>இண்டர்நெட் இல்லாமல் யூடியூப் பார்ப்பது எப்படி?</h3>
யூடியூபில் வீடியோக்களை ஆஃப்லைனில் பார்க்க, அவற்றை முன்கூட்டியே டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும். இதற்கான எளிய வழி யூடியூப் பிரீமியம் சேவையை பயன்படுத்துவதுதான். யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.149 கட்டணத்தில் பெறலாம். இந்த சேவையின் மூலம் வீடியோக்களை நேரடியாக டவுன்லோடு செய்யலாம், பின்னர் இண்டர்நெட் இல்லாத போது பார்க்கலாம். ஆனால் அதனை யூடியூப் ஆப்பில் மட்டுமே இயங்கும். குறிப்பாக நீண்ட நேரம் பயணங்கள் மேற்கொள்பவர்கள் யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்து பின்னர் பயன்படுத்தலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-will-not-work-on-these-model-smartphones-from-2026-september-74825.html">செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. அதிரடி அறிவிப்பு!</a></strong>

உங்களிடம் யூடியூப் பிரீமியம் வசதி இருந்தால் அதனை தெரிந்துகொள்ள யூடியூப் ஆப் சென்று நீங்கள் பார்க்க வேண்டிய வீடியோவை சர்ச் பகுதியில் தேட வேண்டும். பின்னர் வீடியோ அருகில் இருக்கும் 3 டாட்டை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் டவுன்லோடு ஆப்சனை தேர்ந்தெடுக்கவும். வீடியோ குவாலிட்டியை தேர்வு செய்யவும். இப்படி டவுன்லோடு செய்வதற்கு டேட்டா தேவை என்பது குறிப்பிடத்தக்கது. டவுன்லோடு செய்யும்போது எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்படும் என்பதையும் இந்த செயலி காட்டும்.

பொதுவாக யூடியூப் வீடியோ வைஃபை மூலம் மட்டும் டவுன்லோடு ஆகும். மொபைல் டேட்டா பயன்படுத்தி டவுன்லோடு செய்ய செய்ய செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Download Over Wi-Fi Only என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மொபைல் டேட்டா பயன்படுத்தி வீடியோவை டவுன்லோடு செய்யலாம். நாம் டவுன்லோடு செய்த வீடியோ யூடியூப் ஆப்பின் டவுன்லோட்ஸ் பகுதியில் இருக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/what-is-the-use-of-small-green-light-in-smartphone-74592.html">ஸ்மார்ட் போனில் எரியும் சிறிய பச்சை லைட் .. ஆபத்தா?.. உண்மை என்ன?</a></strong>

நாம் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோவை தொடர்ந்து பார்க்க, குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு ஒருமுறை இண்டர்நெட் கணெக்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் வீடியோ எக்ஸ்பயர் ஆகிவிடும். நாம் டவுன்லோடு செய்த வீடியோவை டெலிட் செய்ய, வீடியோ அருகில் இருக்கும் 3 டாட்ஸ் ஐகானை அழுத்தவும். அதில் Delete from Download என்பதை தேர்வு செய்யலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சாராண பேட்டரிக்கும் சிலிகான் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம்? எது நல்லது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/silicon-carbon-battery-in-smartphones-what-it-is-and-how-it-helps-make-phones-slimmer-75347.html</link>	
		<pubDate>Thu, 30 Apr 2026 16:42:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/silicon-carbon-battery-in-smartphones-what-it-is-and-how-it-helps-make-phones-slimmer-75347.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Battery Technology : சிலிகான் கார்பன் பேட்டரி என்பது ஒரு ஏற்கனவே பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியின் புதிய வடிவமாக கூறப்படுகிறது. அதற்கும் தற்போது ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/silicon-battery-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சாராண பேட்டரிக்கும் சிலிகான் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம்? எது நல்லது?" /></figure>சமீப காலங்களில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பேட்டரி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, இப்போது நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடிய வகையில் பெரிய பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டாலும், மொபைல்கள் மிகவும் சிலிம்மாக உருவாக்கப்படுகின்றன. இதற்கான சிலிகான் கார்பன் பேட்டரி முக்கிய காரமாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடிய வகையில் பெரிய பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டாலும் போன் ஸ்லிம்மாகவே இருக்கும்.
<h3>சிலிகான் கார்பன் பேட்டரி என்றால் என்ன?</h3>
சிலிகான் கார்பன் பேட்டரி என்பது ஒரு ஏற்கனவே பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியின் புதிய வடிவமாக கூறப்படுகிறது. இதில் வழக்கமாக பயன்படுத்தப்படும் கிராஃபைட் அனோட்டிற்கு பதிலாக, இதில் சிலிகான் பயன்படுத்தப்படுகிறது. இது பேட்டரியின் செயல் திறனை அதிகரிக்கிறது. சாதாரண லித்தியம்-அயன் பேட்டரி 300 முதல் 400 wh/kg இருந்தால், சிலிகான் கார்பன் பேட்டரி, 500 முதல் 600 wh/kg அளவு கொண்டதாக இருக்கும். அதாவது அதே அளவிலான பேட்டரியில் கூடுதல் மின் சக்தியை சேமிக்க முடியும்.

இந்த சிலிகான் கார்பன் பேட்டரி காரணமாக, அதே அளவுள்ள பேட்டரியில் 40 சதவிகிதம் கூடுதல் பவரை சேமிக்க முடியும். இதனால் பெரிய mAh பேட்டரிகள் இருந்தாலும், மொபைலின் அளவு குறையும். குறிப்பாக போனில் 6000 mAh அளவுள்ள பேட்டரி இருந்தாலும் போனின் டிசைன் சிறியதாகவே இருக்கும்.

இந்த சிலிகான் கார்பன் பேட்டரியின் கூடுதல் நன்மை அதன் வேகமான சார்ஜிங் வசதி தான். 80W அல்லது அதற்கு மேலும் வேகமான சார்ஜிங் முறையை இது ஆதரிக்கும். இதனால் குறைவான நேரங்களில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

முன்பை விட இந்த சிலிகான் பேட்டரியின் ஆயுள் நீண்ட காலத்திற்கு வரும். அதாவது கிட்டத்தட்ட இந்த சிலிகான் பேட்டரியின் மூலம் 1000 முறை சார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது. மேலும் பேட்டரியின் செயல் திறன் விரைவாக குறையாது. இதனால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது.
மேலும் சிலிகான் அதிகம் கிடைக்கும் பொருள் என்பதால் பேட்டரி தயாரிப்பு செலவு குறையும். இதனால் எதிர்காலத்தில் போன் விலையும் குறையலாம். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

தற்போது ஒன்பிளஸ், ஜியோமி, ஓப்போ, விவோ, போன்ற சீன நிறுவனங்கள் இந்த பேட்டரியை பயன்படுத்தி வருகின்றன. மேலும் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்த பேட்டரியை பயன்படுத்தும் முடிவை பரிசோதித்து வருவதாக கூறப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி 20%-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் சிக்கல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/do-not-let-your-smartphone-battery-goes-down-from-20-perventage-75226.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 19:13:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/do-not-let-your-smartphone-battery-goes-down-from-20-perventage-75226.html</guid>
		            
			

    	<description><![CDATA[Smartphone Battery Charging Tips | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போனை எப்படி முறையாக சார்ஜ் செய்வது, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்ன, அதனை சரிசெய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/smartphone-8.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி 20%-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் சிக்கல்!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> பயன்படுத்திகின்றனர். அதாவது, பெரும்பாலானவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இத்தகைய மிக முக்கிய செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில், பலருக்கும் தெரியாதது தான் ஸ்மார்ட்போனை எந்த அளவுக்கு சார்ஜ் செய்வது என்பது தான். இந்த நிலையில், ஸ்மார்ட்போனை 100 சதவீதம் சார்ஜ் செய்வது ஆபத்தானதா அல்லது பாதுகாப்பானதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஸ்மார்ட்போனை 100 சதவீதம் சார்ஜ் போடுவது ஆபத்து</h3>
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் தங்களது ஸ்மார்ட்போனை 100 சதவீதம் சார்ஜ் செய்வர். அவ்வாறு 100 சதவீதம் சார்ஜ் செய்தால் தங்களது ஸ்மார்ட்போனில் பல மணி நேரம் சார்ஜ் நீடிக்கும் என அவர்கள் அத்தகைய செயல்களை செய்வர். ஆனால் அது உண்மை இல்லை. ஸ்மார்ட்போனை 100 சதவீதம் சார்ஜ் செய்வது ஸ்மார்ட்போனின் பேட்டரியை சீக்கரமே வீணாக்கிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/what-is-the-use-of-small-green-light-in-smartphone-74592.html">ஸ்மார்ட்போனில் எரியும் சிறிய பச்சை லைட்.. ஆபத்தா?.. உண்மை என்ன?</a>
<h3>ஸ்மார்ட்போனை எப்படி சார்ஜ் செய்வது?</h3>
ஸ்மார்ட்போனை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சார்ஜ் செய்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறான ஒன்று. காரணம், முறையாக ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யாவிட்டால் பேட்டரியின் ஆயுட்காலம் சீக்கிரமே முடிந்திவிடும். இந்த நிலையில் தான் ஸ்மார்ட்போனை எப்படி சார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில குறிப்புகளை வழங்குகின்றனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/ai-costs-outpace-human-salaries-as-companies-face-rising-spending-pressure-74617.html">ஏஐக்கான செலவு மனிதர்களை விட அதிகமா? சிக்கலில் ஐடி நிறுவனங்கள்</a>
<h3>20 சதவீதத்திற்கு குறையாமல் பார்த்துக்கொள்ள வெண்டும்</h3>
அதாவது உங்களது ஸ்மார்ட்போனில் சார்ஜ் 20 சதவீதத்திற்கும் கீழ் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதேபோல, நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் அது 100 சதவீதம் வரை செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகப்படியாக ஸ்மார்ட்போனை 90 சதவீதம் வரை சார்ஜ் செய்வது பாதுகாப்பானதாக இருக்கும். இதுவே நீங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட்போனை 0 சதவீததில் இருந்து சார்ஜ் செய்யக்கூடாது.

ஒருவேளை 0 சதவீதத்தில் இருந்து சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் ஆயுட்காலம் சீக்கிரமே குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மே மாதத்தில் அறிமுகமாக உள்ள அசத்தல் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/smartphones-to-launch-in-may-2026-list-here-75114.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 17:10:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/smartphones-to-launch-in-may-2026-list-here-75114.html</guid>
		            
			

    	<description><![CDATA[Smartphones To Launch In May 2026 | ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2026, மே மாதத்தில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/smartphones.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மே மாதத்தில் அறிமுகமாக உள்ள அசத்தல் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!" /></figure>உலக அளவில் பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> பயன்பாடு அதிகரித்துள்ளது. அதாவது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரது வாழ்விலும் ஸ்மார்ட்போன் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2026, மே மாதத்தில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>மே மாதத்தில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள்</h3>
2026, மே மாதத்தில் சில முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன.
<h3>ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6</h3>
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ஒன்பிளஸ் நார்ட் சிஇ ஸ்மார்ட்போன் <strong>(OnePlus Nord CE Smartphone)</strong> அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் அட்டகாசமான தோற்றத்துடன் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மே 07, 2026 அன்று மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் <strong>Vivid Mint</strong> மற்றும் <strong>Hyper Black</strong> என மொத்தம் இரண்டு வண்ணங்களில் அறிமுகமாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/ai-costs-outpace-human-salaries-as-companies-face-rising-spending-pressure-74617.html">ஏஐக்கான செலவு மனிதர்களை விட அதிகமா? சிக்கலில் ஐடி நிறுவனங்கள்</a>
<h3>ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட்</h3>
ஒன்பிளஸ் நிறுவனம் மே மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ள மற்றொரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் தான் இந்த ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் <strong>(OnePlus Nord CE6 Lite).</strong> இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா, நீடித்து உழைக்கும் பேட்டரி மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கு சிறந்த அம்சங்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 50 எம்பி முதன்மை கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் அம்சத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் மே 07, 2026 அன்று பிற்பகல் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/old-man-lost-2-7-crores-in-digital-arrest-scam-in-mangaluru-74481.html">டிஜிட்டல் கைது என மிரட்டல்.. முதியவரிடம் இருந்து ரூ.2.07 கோடி கொள்ளையடித்த கும்பல்!</a>
<h3>விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300 எஃப்இ</h3>
விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் புகைப்பட கருவிகளை சார்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும். புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கான சிறந்த ஸ்மார்ட்போனாக இது உள்ளது. மறுபுறம் விவோ எக்ஸ்300 எஃப்இ ஸ்மார்ட்போன் உயர்தர அனுபவத்தை வழங்கினாலும் விலை அடிப்படையில் இது சற்று மலிவானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் சாமானியர்களும் இந்த ஸ்மார்ட்போனை எளிதாக வாங்க முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோடைகாலத்தில் வெப்பமடையும் ஸ்மார்ட்போன்கள் &#8211; இதை கவனிக்கலனா ஆபத்து!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-protect-your-smartphone-from-overheating-this-summer-5-key-tips-75049.html</link>	
		<pubDate>Wed, 29 Apr 2026 14:17:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-protect-your-smartphone-from-overheating-this-summer-5-key-tips-75049.html</guid>
		            
			

    	<description><![CDATA[Smartphone Overheating in Summer : கோடைக்காலம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஸ்மார்ட்போன்களுக்கும் சவால்களை ஏற்படுத்துகிறது. கடுமையான சூரிய ஒளி மற்றும் உயரும் வெப்பநிலை ஆகியவை உங்கள் தொலைபேசியின் பேட்டரி, பிராசசர் மற்றும் டிஸ்பிளேவை சேதப்படுத்தக்கூடும். பல நேரங்களில், ஸ்மார்ட்போன் திடீரென அதிக வெப்பமடைந்து செயலிழக்கலாம்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/smarphone-heat-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோடைகாலத்தில் வெப்பமடையும் ஸ்மார்ட்போன்கள் &#8211; இதை கவனிக்கலனா ஆபத்து!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/palm-nectar-season-boosts-livelihood-in-south-tamil-nadu-74820.html" target="_blank" rel="noopener">கோடைகாலத்தில்</a> கடுமையான சூரிய ஒளியில் இருக்கும்போது, ​​ஒரு <a href="https://www.tv9tamilnews.com/technology/what-is-the-use-of-small-green-light-in-smartphone-74592.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போனின்</a> வெப்பநிலை மிக வேகமாக உயர்கிறது. உங்கள் ஸ்மார்ட்போனை காரின் டேஷ்போர்டு, இருசக்கர வாகனத்தின் டேங்க் கவர் அல்லது திறந்தவெளி போன்ற இடங்களில் விட்டுச் செல்வது மிகவும் ஆபத்தானது. நேரடி சூரியக் கதிர்கள் நீண்ட நேரம் படுவதால், டிஸ்பிளே, பேட்டரி மற்றும் கேமரா சென்சார்கள் சேதமடையக்கூடும். பல நேரங்களில், ஸ்மார்ட்போன் தற்காலிகமாகச் செயலிழந்துவிடும். எனவே, நீங்கள் வெளியே செல்லும்போது, ​​உங்கள் ஸ்மார்ட்போனை பையில், கைப்பையில் அல்லது நிழலான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது போன் இயல்பான வெப்பநிலையில் செயல்படுவதை உறுதி செய்வதுடன், அதன் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கிறது.

கோடைக்காலத்தில், ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும்போது அதன் வெப்பநிலை இன்னும் அதிகமாக உயர்கிறது. எனவே, உங்கள் ஸ்மார்ட்போனை தலையனை, படுக்கை உள்ளிட்டவற்றின் மேற்பரப்பின் மீது வைத்து சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். எப்போதும் ஒரு தட்டையான, குளிர்ந்த மேற்பரப்பின் மீது வைத்து மட்டுமே சார்ஜ் செய்யுங்கள். மேலும், ஒரிஜினல் சார்ஜர் மற்றும் கேபிளை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சார்ஜ் செய்யும்போது உங்கள் ஸ்மார்ட்போனை அதிகப்படியாக வெப்பமடைந்தால், சிறிது நேரத்திற்கு சார்ஜ் செய்வதை நிறுத்தி வைப்பதே சிறந்தது. இது பேட்டரியைப் பாதுகாக்க உதவுவதுடன், அதிக வெப்பமடைதல் அபாயத்தையும் குறைக்கிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/new-auto-ejection-chargers-disconnect-smartphones-once-battery-is-full-everything-you-need-to-know-74240.html">பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜர் தானாகவே துண்டிக்கப்படும் – வந்தாச்சு புது சார்ஜர் !</a></strong>

வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் வீடியோ கேம்களை விளையாடுவது, வீடியோக்களை பார்ப்பது அல்லது ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்குவது ஆகியவை உங்கள் ஸ்மார்ட்போனின் மீது அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் செயலி வேகமாகச் சூடாகிறது. உங்கள் போன் ஏற்கனவே சூடாக உணர்ந்தால், அதிக நேரம் எடுக்கும் செயலிகளை உடனடியாக மூடவும். மேலும், பின்னணியில் இயங்கும் தேவையற்ற செயலிகளையும் மூடவும். இது செயலியின் மீதான சுமையைக் குறைத்து, போன் விரைவாகக் குளிர்ச்சியடைய அனுமதிக்கிறது. தேவைப்பட்டால், சில நிமிடங்களுக்கு தொலைபேசிக்கு ஓய்வு கொடுப்பதும் ஒரு புத்திசாலித்தனமான செயலாகும்.
<h3>ஸ்மார்ட்போன் கவரை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம்</h3>
பெரும்பாலும், தடிமனான ஸ்மார்ட்போன் கவர்கள் வெப்பத்தைத் தக்கவைத்து, அது வெளியேறுவதைத் தடுக்கின்றன. இது போனின் உள் வெப்பநிலை தொடர்ந்து உயரக் காரணமாகிறது. கேமிங் அமர்வுகளின் போதும் அல்லது சார்ஜ் செய்யும் போதும் இந்தப் பிரச்சனை குறிப்பாக அதிகமாகத் தெரிகிறது. உங்கள் தொலைபேசி அடிக்கடி அதிக வெப்பமடைந்தால், சிறிது நேரத்திற்கு கவரை அகற்ற வேண்டும். இது வெப்பம் எளிதாக வெளியேற அனுமதிக்கிறது. இருப்பினும், நீண்ட நேரம் உறை இல்லாமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது எச்சரிக்கை அறிவுறுத்தப்படுகிறது. சரியான காற்றோட்டம் ஸ்மார்ட்போன் செயல்திறனைப் பராமரிக்க உதவுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/watching-reels-continuously-for-long-hours-can-damage-human-brain-five-time-than-alcohol-warns-neurologist-74312.html">தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட மோசமானது.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்கள்!</a></strong>
<h3>ஸ்மார்ட்போன் வெப்பமடைவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?</h3>
உங்கள் ஸ்மார்ட்போன் அதிக வெப்பமடைந்தால், அதை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். மொபைல் டேட்டா, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற சேவைகளை அணைக்கவும். தொலைபேசியைக் குளிர்ச்சியான, நிழலான இடத்தில் வைக்கவும். அதை குளிர்சாதனப் பெட்டியிலோ அல்லது பனிக்கட்டிக்கு அருகிலோ வைக்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் திடீர் வெப்பநிலை மாற்றங்கள் சாதனத்தின் உள்ளே ஈரப்பதம் ஒடுங்கக் காரணமாகலாம். தொலைபேசி இயல்பான வெப்பநிலைக்குத் திரும்பிய பிறகு, சில நிமிடங்கள் கழித்து மட்டுமே அதைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். இந்த அணுகுமுறை உங்கள் ஸ்மார்ட்போனைப் பெரிய சேதங்களிலிருந்து பாதுகாக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி?.. எக்ஸ் சாட் செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/elon-musk-introduced-x-chat-app-for-iphone-users-74886.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 19:15:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/elon-musk-introduced-x-chat-app-for-iphone-users-74886.html</guid>
		            
			

    	<description><![CDATA[X Chat App Introduced | தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவ்னம் எக்ஸ் சாட் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/x-chat-app.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி?.. எக்ஸ் சாட் செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!" /></figure>உலக அளவில் ஏராளமான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியாக மெட்டா<strong> (Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong> உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக எலான் மஸ்க் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதாவது, தனது எக்ஸ் நிறுவனத்தை மையப்படுத்தி <strong>"எக்ஸ் சாட்" (X Chat)</strong> என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், எக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எக்ஸ் சாட் அம்சத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>எக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் சாட் செயலி அறிமுகம்</h3>
வாட்ஸ்அப் செயலியை போலவே பயனர்கள் சேட் செய்வதற்கு வசதியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 24, 2026 அன்று ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி அறிமுகமானது முதலே ஏராளமான பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் <strong>ChatGPT, Claude</strong> உள்ளிட்ட செயலிகளை பின்னுக்கு தள்ளி இந்த செயலி முதல் இடத்தில் உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/wireless-earbuds-under-1000-rupees-in-amazon-74446.html">அமேசானில் ரூ.1,000-க்கு குறைவாக கிடைக்கும் இயர்பட்ஸ்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a>
<h3>எக்ஸ் சாட் செயலி - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
இந்த எக்ஸ் சாட் செயலி மூலம் பயனர்கள் மெசேஜிங், ஃபைல் ஷேரிங், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், குரூப் சாட் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போதைய நிலவரப்படி இந்த செயலியை எக்ஸ் தள பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இது ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும் நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகாமல் உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/prophetic-launched-ai-wearable-and-says-this-device-can-control-human-dreams-74447.html">ஏஐ கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும்.. Prophetic நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதி!</a>

தற்போது ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த செயலி, விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. அதிரடி அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-will-not-work-on-these-model-smartphones-from-2026-september-74825.html</link>	
		<pubDate>Tue, 28 Apr 2026 14:45:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-will-not-work-on-these-model-smartphones-from-2026-september-74825.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Will Not Work On These Model Smartphones | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில், 2026 செப்டம்பர் மாதம் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/whatsapp-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. அதிரடி அறிவிப்பு!" /></figure>உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப்<strong> (WhatsApp)</strong> செயலியை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான மக்களால் வாட்ஸ்அப் இல்லாமல் தங்களது அன்றாட வாழ்வில் இயங்கவே முடியாது. அத்தகைய மிக முக்கிய செயலியாக இது உள்ளது. இந்த நிலையில் தான், செப்டம்பர் 2026 முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>2026 செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது</h3>
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட்போன்களில் செப்டம்பர் மாதம் முதல் வாட்ஸ்அப் இயங்காது என தெரிவித்துள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு 6.0-க்கும் <strong>(Android 6.0)</strong> குறைவான இயங்குதளம் கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களில் 2026 செப்டம்பர் மாதம் வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்படுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/prophetic-launched-ai-wearable-and-says-this-device-can-control-human-dreams-74447.html">ஏஐ கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும்.. Prophetic நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதி!</a>
<h3>ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் செயல்படாது</h3>
தற்போது 5.0 ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்அப் செயலி இயங்கி வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அட்வான்ஸ்டு அம்சங்களை செயலியில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த அம்சங்களை பயன்படுத்த அட்வான்ஸ்டு இயங்குதளம் தேவை என்பதால் அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-tests-major-redesign-with-logo-top-bar-chat-bubbles-and-channel-status-updates-74267.html">வாட்ஸ்அப் டிசைனில் மிகப்பெரிய அப்டேட் – என்னென்ன மாற்றங்கள் வரப்போது?</a>

இந்த முடிவின் மூலம் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 உள்ளிட்ட இயங்குதளம் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செப்டம்பர் மாதம் முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது. இதனை பயனர்களுக்கு அறிவிக்கும் விதமாக, இது தொடர்பான அறிவிப்பு ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 உள்ளிட்ட இயங்குதளங்களில் இயங்கும் வாட்ஸ்அப் கணக்குகளில் தோன்றி வருகிறது. எனவே வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை ஆண்ட்ராய்டு 6.0-க்கு மேற்பட்ட இயங்குதளம் கொண்டதாக மாற்ற வேண்டியது கட்டாயமாக உள்ளது. இல்லை என்றால் அவர்களால் தொடர்ந்து தங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்மார்ட்போனில் எரியும் சிறிய பச்சை லைட்.. ஆபத்தா?.. உண்மை என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/what-is-the-use-of-small-green-light-in-smartphone-74592.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 16:42:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/what-is-the-use-of-small-green-light-in-smartphone-74592.html</guid>
		            
			

    	<description><![CDATA[Green Light In Smartphone | ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள் உள்ளது. இந்த நிலையில், அதில் உள்ள சிறிய பச்சை லைட் எதற்காக உள்ளது என பலருக்கும் தெரியாமல் உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போனில் இருக்கும் பச்சை லைட்டுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/smartphone-7.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்மார்ட்போனில் எரியும் சிறிய பச்சை லைட்.. ஆபத்தா?.. உண்மை என்ன?" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாத மனிதர்களையே பார்க்க முடியாது. அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். பலரும் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தினாலும், அதில் உள்ள சில முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளாமலே உள்ளனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் மேலே எரியும் சிறிய பச்சை நிற லைட் <strong>(Green Colour Light)</strong> எதற்காக எரிகிறது, அதன் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஸ்மார்ட்போனில் எரியும் பச்சை நிற லைட் - காரணம் என்ன?</h3>
ஸ்மார்ட்போன் திரையில் மே பகுதியில், வழக்கமாக பேட்டரி குறியீடு உள்ளிட்டவற்றுக்கு அருகில் பச்சை நிற புள்ளி போன்ற லைட் ஒன்றி எரியும். இதனை பார்த்த உடன் சிலர் ஏதேனும் சிக்கலோ என அச்சப்படுவர். ஆனால், அது பயனர்களின் பாதுகாப்புக்கான ஒரு அம்சம் தான். அதாவது கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க அறிமுகம் செய்த அம்சமாகும். இந்த பச்சை நிற புள்ளி பொதுவாக இரண்டு விஷயங்களை குறிக்கிறது. அதன் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-tests-major-redesign-with-logo-top-bar-chat-bubbles-and-channel-status-updates-74267.html">வாட்ஸ்அப் டிசைனில் மிகப்பெரிய அப்டேட் – என்னென்ன மாற்றங்கள் வரப்போது?</a>
<h3>பச்சை நிற லைட் கூறும் இரண்டு முக்கிய விஷயங்கள்</h3>
இந்த பச்சை நிற லைட் கேமரா பயன்பாடு, மைக்ரோபோன் பயன்பாடு என இரண்டு முக்கியமான விஷயங்களை உணர்த்துகிறது.
<h3>கேமரா பயன்பாடு</h3>
நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கும்போது, வீடியோ எடுக்கும்போது மற்றும் வீடியோ கால் பேசும்போது இந்த பச்சை நிற லைட் எரியும்.
<h3>மைக்ரோபோன் பயன்பாடு</h3>
நீங்கள் ஸ்மார்ட்போனில் பேசும்போது, வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது, கூகுள் அசிஸ்டண்ட் <strong>(Google Assistant)</strong> போன்ற வசதிகளை பயன்படுத்தும்போது இது எரியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/new-auto-ejection-chargers-disconnect-smartphones-once-battery-is-full-everything-you-need-to-know-74240.html">பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜர் தானாகவே துண்டிக்கப்படும் – வந்தாச்சு புது சார்ஜர் !</a>

அதாவது உங்களது ஸ்மார்ட்போனில் கேமரா மற்றும் மைக்ரோபோன் செயல்பாட்டில் உள்ளது என்பதை உணர்த்துவது தான் இதன் முக்கியத்துவமாக உள்ளது. இதில் என்ன சிறப்பு என நினைக்கலாம். நீங்கள் கேமராவை அல்லது மைக்ரோபோனை பயன்படுத்தாதபோது இந்த பச்சை நிற லைட் எரியும் பட்சத்தில் உங்களது கேமரா மற்றும் மைக்ரோபோனை யாரோ பயன்படுத்துகின்றனர் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஏஐக்கான செலவு மனிதர்களை விட அதிகமா? சிக்கலில் ஐடி நிறுவனங்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/ai-costs-outpace-human-salaries-as-companies-face-rising-spending-pressure-74617.html</link>	
		<pubDate>Mon, 27 Apr 2026 15:31:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/ai-costs-outpace-human-salaries-as-companies-face-rising-spending-pressure-74617.html</guid>
		            
			

    	<description><![CDATA[AI vs Humans: உலகம் முழுவதும் ஏஐ பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனால் பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் ஏஐ கருவிகளுக்கு மனிதர்களை விட அதிகம் செலவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/ai-vs-human-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஏஐக்கான செலவு மனிதர்களை விட அதிகமா? சிக்கலில் ஐடி நிறுவனங்கள்" /></figure><a href="https://www.tv9tamilnews.com/technology/prophetic-launched-ai-wearable-and-says-this-device-can-control-human-dreams-74447.html">செயற்கை நுண்ணறிவு</a> பயன்பாடு உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. பல நிறுவனங்கள் தங்கள் வேலைகளை ஏஐ மூலம் நிறைவேற்றி வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதற்கு அந்த நிறுவனங்கள் மிகப்பெரி விலை கொடுக்க வேண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு முதலீட்டாளர்களின் பணத்தை பயன்படுத்தி <a href="https://www.tv9tamilnews.com/technology/five-ai-apps-every-student-should-use-beyond-notebooklm-73914.html" target="_blank" rel="noopener">ஏஐ</a> மாடல்களை உருவாக்கிய நிறுவனங்கள், தற்போது அதற்கான செலவுகளை தங்கள் பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க தொடங்கியுள்ளன. இதனால், நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்து வருகிறது.
<h3>ஊழியர்களை விட நிறுவனங்களின் செலவுகள் அதிகம்?</h3>
சில நிறுவனங்களில், ஏஐ பயன்படுத்தும் செலவு ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக உள்ளது. பல நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஏஐ பட்ஜெட்டை சில மாதங்களிலேயே முழுமையாக பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆந்த்ரோபிக் உருவாக்கிய கிளவுட் கோட் போன்ற கருவிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/new-auto-ejection-chargers-disconnect-smartphones-once-battery-is-full-everything-you-need-to-know-74240.html">பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜர் தானாகவே துண்டிக்கப்படும் – வந்தாச்சு புது சார்ஜர் !</a></strong>

மேலும் 4 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு ஏஐக்காக மட்டும் ரூ.1 கோடிக்கு அதிகமாக செலவழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிவிடியா நிறுவனத்தின் அதிகாரி பிரயன் தெரிவித்ததாவது, எங்கள் குழுவிற்கு ஏஐ பயன்பாட்டு செலவு ஊழியர்களுக்கு பயன்படுத்தும் செலவை விட அதிகமாக உள்ளது என்றார். இந்த நிலையில் கார்ட்னர் வெளியிட்ட தகவலின் படி, 2026 ஆம் ஆண்டில் உலக அளவில் ஐடி செலவுகள் 6.31 டிரில்லியன் டாலர்களை விட அதிகம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டை விட 13.5 சதவிகிதம் அதிகம் என கூறப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/watching-reels-continuously-for-long-hours-can-damage-human-brain-five-time-than-alcohol-warns-neurologist-74312.html">தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட மோசமானது.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்கள்!</a></strong>

கிளவுட் சேவைக்கான கட்டணம், சப்ஸ்கிரிப்ஷன் கட்டணங்கள் ஆகியவை ஐடி செலவுகள் உயர்வதற்கு மிக முக்கிய காரணமாகவும். இதனால் நிறுனங்கள் தங்கள் செய்யும் முதலீடுகளுக்கு ஏற்ப சரியான வருமானம் கிடைக்கிறதா என்பதை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏஐக்கான செலவுகளால் பெரிய நிறுவனங்கள் மட்டும் அல்ல சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஆந்திரோபிக் நிறுவனத்தின் கிளாட் சேவையை பயன்படுத்தும் பயனர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் வரம்பு விரைவில் முடிவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>டிஜிட்டல் கைது என மிரட்டல்.. முதியவரிடம் இருந்து ரூ.2.07 கோடி கொள்ளையடித்த கும்பல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/old-man-lost-2-7-crores-in-digital-arrest-scam-in-mangaluru-74481.html</link>	
		<pubDate>Sun, 26 Apr 2026 23:28:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/old-man-lost-2-7-crores-in-digital-arrest-scam-in-mangaluru-74481.html</guid>
		            
			

    	<description><![CDATA[Old Man Lost 2.7 Crores | இந்தியாவில் டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், மங்களூரில் முதியவர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி ரூ.2.7 கோடி பணத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/digital-arrest-scam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டிஜிட்டல் கைது என மிரட்டல்.. முதியவரிடம் இருந்து ரூ.2.07 கோடி கொள்ளையடித்த கும்பல்!" /></figure><strong>பெங்களூரு, ஏப்ரல் 26 :</strong> தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவது மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால், தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வளவு சாதகங்கள் உள்ளனவோ அதே அளவு சிக்கல்களும் உள்ளன. அத்தகைய சிக்கல்களில் ஒன்றுதான் ஆன்லைன் மோசடி. இந்தியாவில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில், மங்களூரில் <strong>(Mangaluru)</strong> முதியர்வர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் <strong>(Digital Arrest Scam)</strong> ரூ.2.07 கோடி பணத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
<h3>டிஜிட்டல் கைது மோசடி - ரூ.2.07 கோடியை இழந்த முதியவர்</h3>
மார்ச் 31, 2026 அன்று மங்களூருவை சேர்ந்த முதியவர் ஒருவரை தொலைபேசி மூலம் மோசடிக்காரர்கள் தொடர்புக்கொண்டு பேசியுள்ளனர். அவர்கள், நாங்கள் தேசிய தரவுகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி மும்பையில் போலி சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது. அது போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/woman-anesthetizes-old-couple-to-loot-gold-and-money-from-their-home-74331.html">லஸ்ஸியில் மயக்க மருந்து கலந்து முதியவர் கொலை.. நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்!</a>

அவர்கள் கூறியதை கேட்டு பயந்துப்போன அந்த முதியவர், தனக்கும் அந்த விவகாரத்தும் எந்த வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். ஆனால், அதற்கு மோசடிக்காரர்கள் உங்கள் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி இந்த வழக்கை என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.
<h3>கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பணம் அனுப்ப மிரட்டிய கும்பல்</h3>
அந்த கும்பல் தொடர் மிரட்டல்களை விடுத்ததன் காரணமாக முதியவர் கடும் அச்சத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக முதியவர் மார்ச் 07, 2026 முதல் மார்ச் 18, 2026 வரை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக ரூ.2.07 கோடி பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து அறிந்த அவர், சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/why-water-bottle-is-selling-for-from-80-rupees-to-100-rupees-vendor-explained-74166.html">Viral Video : கேதார்நாத்தில் ரூ.80 – 100 வரை விற்பனை செய்யப்படும் தண்ணீர்.. வியாபாரி விளக்கம்!</a>

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அமேசானில் ரூ.1,000-க்கு குறைவாக கிடைக்கும் இயர்பட்ஸ்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/wireless-earbuds-under-1000-rupees-in-amazon-74446.html</link>	
		<pubDate>Sun, 26 Apr 2026 17:20:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/wireless-earbuds-under-1000-rupees-in-amazon-74446.html</guid>
		            
			

    	<description><![CDATA[Wireless Earbuds Under 1000 Rupees | இளைஞர்கள் மத்தியில் மிகவும் பரவலாக பார்க்கப்படும் முக்கிய கருவி தான் இயர்பட்ஸ். இந்த நிலையில், அமேசானில் ரூ.1,000-க்குள் கிடைகும் இயர்பட்ஸ்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/earbuds.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அமேசானில் ரூ.1,000-க்கு குறைவாக கிடைக்கும் இயர்பட்ஸ்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?" /></figure>தற்போதைய இளைய சமுதாயத்தினர் மத்தியில் பரவலாக பார்க்கப்படும் ஒரு அம்சம் தான் இயர் பட்ஸ் <strong>(Ear Buds)</strong>. தாங்கள் கேட்கும் பாடல்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் வெளியே யாருக்கும் கேட்காமல் இருக்கவும், யாருக்கும் தொந்தரவு இழைக்காமல் இருக்கவும் இந்த அம்சம் பயனுள்ளதாக உள்ளது. இந்த சிறிய கருவியை காதில் மாட்டிக்கொண்டு தனி உலகத்தில் வசிப்பவர்கள் பலர் உண்டு. இவ்வாறு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த இயர் பட்ஸ் உள்ள நிலையில், அமேசானில் ரூ.1,000-க்கும் குறைவாக கிடைக்கும் 5 இயர்பட்ஸ்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>அமேசானில் ரூ.1,000-க்கும் குறைவாக கிடைக்கும் இயர்பட்ஸ்கள்</h3>
அமேசானில் சில அட்டகாசமான அம்சங்கள் உடன் கூடிய சில இயர்பட்ஸ்கள் ரூ.1,000-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.
<h3>HAMMER Airflow Neo Earbuds</h3>
நீங்கள் அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்பவர் என்றால் உங்களுக்கு அதிக பேட்டரி திறன் கொண்ட இயர்பட்ஸ் தேவைப்படும். இந்த நிலையில் தான் இந்த  <strong>HAMMER Airflow Neo Earbuds</strong> உங்களுக்கு உதவியாக இருக்கும். இது 80 மணி நேரம் பிளே டைம் வசதியை கொண்டுள்ளது. இதன் தற்போதைய விலை வெறும் ரூ.599 ஆக மட்டுமே உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/snapchat-like-feature-for-sending-photographs-to-be-introduced-in-instagram-soon-74174.html">ஸ்னாப்சாட்டை போலவே இன்ஸ்டாவில் வரும் புகைப்பட அம்சம்.. 24 மணி நேரம் மட்டுமே இருக்கும்!</a>
<h3>pTron Bassbuds Astra in-Era TWS Earbuds</h3>
அடுத்ததாக அமேசானில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரு இயர்பட்ஸ் தான் <strong>pTron Bassbuds Astra in-Era TWS Earbuds</strong>. வெறும் ரூ.598-க்கு இந்த இயர்பட்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸில் கஸ்டம் இக்யூ மற்றும் மொபைல் ஆஃப் சப்போர்ட் உள்ளதால் சவுண்ட் எஃபெக்ட்டை உங்களுக்கு ஏற்றவாறு மிக சுலபமாக மாற்றிக்கொள்ள முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/meta-planning-to-introduce-notification-bubbles-in-whatsapp-too-74046.html">ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ்அப்பிலும் Notification Bubbles அம்சம்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!</a>
<h3>Fire Bolt Aero TWS Earbuds</h3>
லேட்டஸ்ட் ப்ளூடூத் 5.4 தொழில்நுட்பம் மற்றும் 50 மணி நேர பிளேடைம் ஆகிய அம்சங்கள் இந்த <strong>Fire Bolt Aero TWS Earbuds</strong> சிறப்பாக இருக்கும். வியர்வை மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க இதில் ஐபிஎக்ஸ் 4 தண்ணீர் எதிர்ப்பு வசதியும் உள்ளது. இந்த இயர்பட்ஸின் விலை ரூ.9,000 ஆக இருந்தாலும் அமேசானில் தற்போது வெறும் ரூ.699-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஏஐ கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும்.. Prophetic நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/prophetic-launched-ai-wearable-and-says-this-device-can-control-human-dreams-74447.html</link>	
		<pubDate>Sun, 26 Apr 2026 16:20:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/prophetic-launched-ai-wearable-and-says-this-device-can-control-human-dreams-74447.html</guid>
		            
			

    	<description><![CDATA[AI Device To Control Human Dreams | செயற்கை நுண்ணறிவு அம்சம் எழுதுவது, கோடிங் உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்கிறது. இந்த நிலையில், ப்ரொபெட்டிக் என்ற நிறுவனம் தனது ஏஐ கருவில் மூலம் மனிதர்களின் கனவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/ai-device.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஏஐ கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும்.. Prophetic நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதி!" /></figure>தொழில்நுட்பத்தின் <strong>(Technology)</strong> உச்சமாக செயற்கை நுண்ணறிவு<strong> (AI - Artificial Intelligence)</strong> அம்சம் உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் ஏராளமான விஷயங்களை நொடி பொழுதில் செய்ய முடியும். இதுவரை செயற்கை நுண்ணறிவு அம்சம் கோடிங் செய்தது, எழுதியது, மனிதர்களின் வேலைகளை செய்தது குறித்து கேள்விப்பட்டு இருப்போம், சிலர் அதனை பயன்படுத்தி இந்த பணிகளையும் முடித்திருப்பர். ஆனால், செயற்கை நுண்ணறிவு அம்சம் உங்களது கனவுகளை கட்டுப்படுத்த உதவும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மை தான், <strong>Prophetic</strong> என்ற நிறுவனம் தான், தங்களது செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கனவுகளை கட்டுப்படுத்தும் செயற்கை நுண்ணறிவு கருவி</h3>
ப்ரொபெட்டிக் என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த கருவி மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்தும் என அந்த நிறுவனம் கூறுகிறது. அந்த கருவி 449 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.42,300 ஆகும். இந்த நிறுவனம் கூறுவதை போலவே அந்த கருவி மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்துமா?.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/meta-planning-to-introduce-notification-bubbles-in-whatsapp-too-74046.html">ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ்அப்பிலும் Notification Bubbles அம்சம்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!</a>
<h3>இந்த கருவி எப்படி செயல்படும்?</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Today we are launching two revolutionary products: Dual and Phase.</p>
These devices will enhance how humans dream.

Prophetic Dual retails for $449 and starts shipping at the end of this year.

Prophetic Phase retails for $1299 and starting shipping middle of next year. <a href="https://t.co/Kctt47tM2N">pic.twitter.com/Kctt47tM2N</a>

— Prophetic (@PropheticAI) <a href="https://twitter.com/PropheticAI/status/2047730546764308965?ref_src=twsrc%5Etfw">April 24, 2026</a></blockquote>
இந்த கருவி எப்படி செயல்படும் என்பது குறித்து அந்த நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது, இந்த கருவி பாதுகாப்பான அல்ட்ராசோனிக் எனர்ஜியை நெற்றி மூலம் <strong>Prefrontal</strong> <strong>Cortex</strong> மற்றும் <strong>Frontoparietal Network</strong>-க்கு அனுப்பும். இது இரவு தூங்கும் நேரத்தில் செயல்படாது. இந்த அமைப்பை தூண்டுவதன் மூலம் கனவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப் டிசைனில் மிகப்பெரிய அப்டேட்  &#8211; என்னென்ன மாற்றங்கள் வரப்போது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-tests-major-redesign-with-logo-top-bar-chat-bubbles-and-channel-status-updates-74267.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 21:05:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-tests-major-redesign-with-logo-top-bar-chat-bubbles-and-channel-status-updates-74267.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Tests Major Redesign : வாட்ஸ்அப் தற்போது மிகப்பெரிய அளவில் டிஷைனை மாற்றத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு வாட்ஸ்அப்பில் வரும் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதில் என்னென்ன புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்டவுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/whatsapp-design-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப் டிசைனில் மிகப்பெரிய அப்டேட்  &#8211; என்னென்ன மாற்றங்கள் வரப்போது?" /></figure>உலக முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் தற்போது மிகப்பெரிய அளவில் டிஷைனை மாற்றத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தகவல்களை பரிமாற, டாக்குமென்ட் மற்றும் வீடியோ ஆடியோ, புகைப்படங்களை அனுப்ப என நம் பணிகளை எளிதாக மாற்றி வருகிறது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக பெரிய மாற்றம் இல்லாமல் இருந்த இந்த செயலியில் தற்போது புதிய அம்சங்களுடன் கூடிய அப்டேட் தற்போது பரிசோதனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
<h3>புதிய அப்டேட்டில் என்ன மாற்றங்கள்?</h3>
புதிய அப்டேட்டில் இதுவரை இருந்த வாட்ஸ்அப் என்ற எழுத்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வாட்ஸ்அப் செயலியின் லோகோ மேல் பகுதியில் இடம் பெற உள்ளது. இது நம் வாட்ஸ்அப் சுத்தமாகவும், எளிமையாகவும் மாற்றும் கூடுதல் அம்சங்களுக்கு இதில் இடத்தை உருவாக்கும். புதிய நவீன வடிவமைப்புடன் அதிக இட வசதி மற்றும் கூடுதல் அம்சங்களுன் வரவிருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு வாட்ஸ்அப் அதன் வடிவமைப்பில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
<h3>நோட்டிஃபிகேஷன் பபுள் அம்சம்</h3>
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் புதிய நோட்டிஃபிகேஷன் பபுள் என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன் படி மெசேஜ் வந்தால், அந்த ஐகானை கிளிக் செய்தால் சிறிய சாட்பாக்ஸ் திறக்கும். இதன் மூலம் வாட்ஸ்அப் செல்லாமலேயே மெசேஜ்களுக்கு பதிலளிக்க முடியும். அதாவது நாம் வேறு ஆப்பில் இருக்கும்போது அங்கிருந்தபடியே வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு பதிலளிக்க முடியும். இதனால் நம் கவனம் சிதறாது. பயனர்கள் விரும்பினால் இந்த அம்சத்தை ஆஃப் செய்யலாம். அதாவது வீடியோ பார்க்கும்போது உடனடியாக வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு பதிலளிக்க முடியும்.
<h3>வாட்ஸ்அப் சேனலில் வரும் மாற்றம்</h3>
இதன் மூலம் வாட்ஸ்அப் சேனல் அட்மின் 24 மணி நேரத்திற்கு மட்டும் காணப்படும் வகையில் ஸ்டேட்டாஸ் வைக்க முடியும். இது சாதாரண வாட்ஸ்அப் போலவே செயல்படும். மேலும் அறிவிப்புகளை வெளியிடவும் ஆப்சன் இடம் பெயர உள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் சோதனை கட்டத்தில் உள்ளது.

இந்த அனைத்து அம்சங்களும் தற்போது சோதனை நிலையிலேயே உள்ளன. சோதனை அடிப்பைடையில் சில பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு பின்னர் அனைவருக்கும் வழங்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் பயன்பாடு மிகவும் எளிதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜர் தானாகவே துண்டிக்கப்படும் &#8211; வந்தாச்சு புது சார்ஜர் !</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/new-auto-ejection-chargers-disconnect-smartphones-once-battery-is-full-everything-you-need-to-know-74240.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 19:27:02 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/new-auto-ejection-chargers-disconnect-smartphones-once-battery-is-full-everything-you-need-to-know-74240.html</guid>
		            
			

    	<description><![CDATA[Auto Ejection Charger : ஃபோன் சார்ஜ் ஆன பிறகும் சார்ஜருடன் கணெக்ட் ஆன நிலையிலேயே இருப்பது சாதாரணமாக நடக்கும் ஒன்று. இதனால், சார்ஜர் அதிக வெப்பமடைந்து, ஃபோன் அல்லது சார்ஜருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் போன் முழுமையாக சார்ஜ் ஆனதும் தானாகவே துண்டிக்கும் சார்ஜர் அறிமுகமாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/auto-ejection-charger.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும் சார்ஜர் தானாகவே துண்டிக்கப்படும் &#8211; வந்தாச்சு புது சார்ஜர் !" /></figure>அதிக நேரம் <a href="https://www.tv9tamilnews.com/technology/apple-iphone-16-pro-selling-with-amazing-discount-in-jiomart-72951.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போனை</a> சார்ஜ் செய்வதால், ஃபோன் பேட்டரி சேதமடையும் என்பதால் பலர் தங்கள் போன்களை இரவு முழுவதும் சார்ஜ் செய்வதில்லை. போனின் மதர்போர்டு உள்ளிட்டவை சேதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க ஒரு சீன நிறுவனம் ஒரு புதிய அமைப்பைக் கொண்டு வந்துள்ளது. குவாஜியா (Kuajia) என்ற சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஆட்டோ எஜெக்ட் மொபைல் <a href="https://www.tv9tamilnews.com/technology/what-does-r-code-on-mobile-charger-mean-know-bis-certification-and-how-to-check-fake-chargers-70680.html" target="_blank" rel="noopener">சார்ஜரை</a> சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. பேட்டரி 100 சதவீதம் சார்ஜ் ஆனதும், இந்த அமைப்பு ஸ்மார்ட்போனின் சாக்கெட்டிலிருந்து சார்ஜரைத் தானாகவே அகற்றிவிடும். இதற்காக, சார்ஜரில் ஒரு ஸ்பிரிங் மற்றும் ஒரு மின்காந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஃபோன் சார்ஜ் ஆன பிறகும் சார்ஜருடன் கணெக்ட் ஆன நிலையிலேயே இருப்பது சாதாரணமாக நடக்கும் ஒன்று. இதனால், சார்ஜர் அதிக வெப்பமடைந்து, ஃபோன் அல்லது சார்ஜருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதுபோன்ற நேரங்களில் போன் சார்ஜர் ஆனதும், சார்ஜர் பின்னை, தானாக வெளியே தள்ளும் மொபைல் சார்ஜர்கள் இத்தகைய பிரச்சனைகளை எளிதில் தீர்க்கும்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/technology/what-does-r-code-on-mobile-charger-mean-know-bis-certification-and-how-to-check-fake-chargers-70680.html"> சார்ஜரில் உள்ள R குறியீட்டை என்ன தெரியுமா? போன் பாதுகாப்புக்கு இது முக்கியம்</a></strong>
<h3>இது எப்படி செயல்படும்?</h3>
இதற்காக அந்த சார்ஜரில் ஒரு சென்சார் கொடுக்கப்பட்டிருக்கும். இது உங்கள் போன் முழுமையாக சார்ஜ் ஆனதும் அந்த சென்சார் உடனடியாக கண்டறியும். இதனையடுத்து எலக்ட்ரோ மேக்னேட்டிக் செயல்படத் தொடங்கும். பின்னர் அதில் உள்ள ஸ்பிரிங் உங்கள் சார்ஜர் பின்னை வெளியே தள்ளும். இதனால் உங்கள் போன் சார்ஜ் செய்யப்படுவது நிறுத்தப்படும். இது அதிக நேரம் சார்ஜ் செய்வதால் போன் பாதிக்கப்படும் அபாயத்தில் குறைக்கிறது. சில நேரங்களில் அதிக நேரம் சார்ஜ் செய்வதால் போன் வெடிப்பது போன்ற அபாயங்களையும் குறைக்கிறது. இதனையடுத்து இனி இரவில் பயமில்லாமல் போனை சார்ஜ் போட்டு தூங்கலாம். போனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சாம்சங், ஆப்பிள், சியோமி மற்றும் ஒன்பிளஸ் போன்ற பெரும்பாலான நவீன மற்றும் முன்னணி ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே பேட்டரி மேலாண்மையில் விரிவான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. சார்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்துதல், மின்சார ஓட்டத்தைக் குறைத்தல் மற்றும் அதிக வெப்பமடைவதைத் தடுத்தல் போன்ற பல அம்சங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. இருப்பினும், பல சாதாரண ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இத்தகைய தகவல்கள் தெரிவதில்லை. தானாக வெளியே தள்ளும் மொபைல் சார்ஜர்கள் அவர்கள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/iphone-fold-to-be-launch-in-india-soon-with-amazing-features-70741.html">அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாக உள்ள ஐபோன் ஃபோல்டு.. முக்கிய அம்சங்கள்!</a></strong>
<h3>விலை எவ்வளவு?</h3>
தற்போதைய விலை நிலவரத்தின்படி, இத்தகைய சார்ஜர்கள் வெளிநாடுகளில் ரூ.750 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்திய சந்தையில் அவற்றின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும். புதிய பிராண்டட் நிறுவனங்கள் உருவாவதால் அவற்றின் விலையும் மாறக்கூடும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட மோசமானது.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/watching-reels-continuously-for-long-hours-can-damage-human-brain-five-time-than-alcohol-warns-neurologist-74312.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 17:10:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/watching-reels-continuously-for-long-hours-can-damage-human-brain-five-time-than-alcohol-warns-neurologist-74312.html</guid>
		            
			

    	<description><![CDATA[Serious Effects Of Watching Reels | பெரும்பாலான மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது ரீல்ஸ் தான். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பலரும் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், ரீல்ஸ் பார்ப்பது குறித்து நரம்பியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/reels-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட மோசமானது.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்கள்!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து பொதுமக்களும் தங்களது கைகளில் ஸ்மார்ட்போன்களை <strong>(Smartphone)</strong> வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கும் அம்சமாக ரீல்ஸ்<strong> (Reels)</strong> உள்ளது. இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ரீல்ஸ் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ளனர். இந்த நிலையில் தான், அது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட 5 மடங்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>முழு நேரமும் ஸ்மார்ட்போன்களுக்குள் மூழ்கி கிடக்கும் மனிதர்கள்</h3>
ஸ்மார்ட்போன்களை அனைவரும் பயன்படுத்தும் நிலையில், சமூக ஊடகங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஏராளமானவர்கள் தங்களது நாளை அதிக நேரம் சமூக ஊடகங்களில் கழிக்கின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம்<strong> (Instagram)</strong>, ஃபேஸ்புக் (Facebook) மற்றும் யூடியூப் <strong>(YouTube)</strong> உள்ளிட்ட தளங்களில் இருக்கு குறுகிய வீடியோக்களுக்கு பலரும் அடிமைகளாக உள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் இந்த குறுகிய வீடியோக்களை பலரும் பார்க்கின்றனர். இதில் தான் மிகப்பெரிய சிக்கல்கள் ஒளிந்திருப்பதாக ஆய்வு கூறியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/chatgpt-partners-with-skyscanner-to-help-users-find-cheapest-flights-and-how-to-use-it-74010.html"> விலை குறைவான விமான டிக்கெட்டை வாங்க உதவும் சாட்ஜிபிடி? எப்படி தெரியுமா?</a>
<h3>மதுவை விட 5 மடங்கு அதிக பாதிப்புகளை கொடுக்கும்</h3>
இவ்வாறு பலரும் தங்களது வாழ்வில் பல மணி நேரம் தொடர்ந்து ரீல்ஸ்களை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து பல மணி நேரம் ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட 5 மடங்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கும் என்று நரம்பியல் ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக கவனம், நினைவாற்றல் ஆகியவற்றை அது மிக கடுமையாக பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/teens-parental-control-in-instagram-and-facebook-meta-introduced-74012.html">இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் டீன்ஸ் பெற்றோர் கட்டுப்பாடு.. மெட்டா அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!</a>

டோபமைன் அதிகமாக சுரப்பதால் மூளை எப்போதும் விரைவான தூண்டுதல்களை மட்டுமே விரும்ப பழக்கப்படுகின்றது. இதன் காரணமாக நீண்ட உரையாடல்கள், படிப்பு, பொறுமை, போன்றவை தாங்க முடியாததாக மாறுகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் தொடர்ந்து ரீல்ஸ் பார்க்கும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்னாப்சாட்டை போலவே இன்ஸ்டாவில் வரும் புகைப்பட அம்சம்.. 24 மணி நேரம் மட்டுமே இருக்கும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/snapchat-like-feature-for-sending-photographs-to-be-introduced-in-instagram-soon-74174.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 16:30:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/snapchat-like-feature-for-sending-photographs-to-be-introduced-in-instagram-soon-74174.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Feature To Be Introduced In Instagram | ஸ்னாப்சாட்டில் உள்ளதை போலவே இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுதான் இன்ஸ்டன்ட்ஸ்.  இந்த அம்சத்தில் 24 மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும் புகைப்படங்களை அனுப்ப முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/instagram.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்னாப்சாட்டை போலவே இன்ஸ்டாவில் வரும் புகைப்பட அம்சம்.. 24 மணி நேரம் மட்டுமே இருக்கும்!" /></figure>உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக மெட்டாவின் <strong>(Meta)</strong> இன்ஸ்டாகிராம்<strong> (Instagram)</strong> செயலி உள்ளது. இந்த செயலியில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில், பலரும் அதனை விரும்பி பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம், தொடர்ச்சியாக மற்ற செயலிகளில் இருக்கும் அம்சங்களை போலவே சில அம்சங்களை அறிமுகம் செய்து வருவது. அந்த வகையில், ஸ்னாப்சாட்டில் <strong>(Snapchat)</strong> உள்ளதை போலவே இன்ஸ்டாகிராமிலும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும் புகைப்பட  அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>புகைப்படங்கள் 24 மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் - இன்ஸ்டாவில் புதிய அம்சம்</h3>
இன்ஸ்டாகிராம் செயலியில் குறுஞ்செய்தி, ஸ்டோரி, வீடியோ, ரீல்ஸ் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன. இத்தகைய அம்சங்கள் இருந்தாலும், மேலும் புதிய புதிய அம்சங்களை மெட்டா அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் ஸ்னாப்சாட்டில் உள்ளதை போலவே 24 மணி நேரத்திற்கு மட்டும் இருக்கும் <strong>"Instants"</strong> என்ற புகைப்படம் தொடர்பான புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-launches-mobile-recharge-feature-with-instant-upi-payments-for-prepaid-users-73932.html">இனி வாட்ஸ்அப் மூலமாகவே ரீசார்ஜ் பண்ணலாம் – வெளியான புது அப்டேட்</a>
<h3>இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் என்றால் என்ன? - அது எப்படி செயல்படும்?</h3>
இந்த அம்சத்தில் பயனர்கள் <strong>Disappearing</strong> புகைப்படங்களை அனுப்ப முடியும். அதாவது இந்த புகைப்படங்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், அவை 24 மணி நேரத்திற்கு சாட்டிலே இருக்கும். ஸ்னாப்சாட்டில் புகைப்படங்களை ஓபன் செய்ததுமே மறைந்துவிடும். ஆனால், இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சத்தில் 24 மணி நேரம் வரை அனுமதி வழங்கப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/five-ai-apps-every-student-should-use-beyond-notebooklm-73914.html">மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சிறந்த 5 ஏஐ டூல்கள்</a>

புகைப்படங்கள் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அம்சத்தில் எந்த விதமான எடிட்டிங் அம்சமும் கொடுக்கப்படவில்லை. புகைப்படம் எப்படி இருக்கிறதோ அப்படியே தான் அதனை மற்றவருக்கு அனுப்ப முடியும். இந்த அம்சத்தில் பயனர்கள் தங்களது கேலரியில் இருக்கும் புகைப்படங்களை அனுப்ப முடியாது. இன்ஸ்டாகிராம்  கேமராவில் எடுக்கும் புகைப்படங்களை மட்டுமே அனுப்ப முடியும். இந்த அம்சத்தை சோதனை செய்யும் நோக்கில் ஸ்பெயின், இத்தாலியில் உள்ள சில பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ்அப்பிலும் Notification Bubbles அம்சம்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/meta-planning-to-introduce-notification-bubbles-in-whatsapp-too-74046.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 23:02:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/meta-planning-to-introduce-notification-bubbles-in-whatsapp-too-74046.html</guid>
		            
			

    	<description><![CDATA[Notification Bubbles Feature | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஃபேஸ்புக் செயலியில் உள்ளதை போலவே நோட்டிபிகேஷன் பப்பில்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது தற்போது சோதனையில் உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/whatsapp-feature-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ்அப்பிலும் Notification Bubbles அம்சம்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!" /></figure>உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டான் <strong>(Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong> உள்ளது. இந்த செயலியை ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த தேர்வாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக மெட்டா புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஃபேஸ்புக் <strong>(Facebook)</strong> செயலியில் உள்ளதை போலவே வாட்ஸ்அப் செயலியிலும்<strong> Notification Bubbles</strong> அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் வர உள்ள இந்த புதிய அம்சம் தொடர்பான அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ் அப்பிலும் <strong>Notification Bubbles</strong></h3>
ஃபேஸ்புக் மெசஞ்சர் <strong>(Facebook Messenger)</strong> செயலியை பயன்படுத்தியவர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பரிட்சியமானதாக இருக்கும். அதாவது பயனர்கள் தங்களது உரையாடல்களை எளிமையானதாக்க மாற்ற இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பயனர்கள் செயலிகளை திறக்காமலே இந்த அம்சத்தின் மூலம் ஒருவர், மற்றொருவருடன் மிக எளிதாக உரையாற்ற முடியும். இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/five-ai-apps-every-student-should-use-beyond-notebooklm-73914.html">மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சிறந்த 5 ஏஐ டூல்கள்</a>
<h3>வேறு செயலிகளை பயன்படுத்திக்கொண்டே குறுஞ்செய்தி அனுப்பலாம்</h3>
வாட்ஸ்அப் செயலியை திறக்காமலே வேறு செயலியை பயன்படுத்திக்கொண்டே கூட இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப் செயலியில் பெறும் குறுஞ்செய்திகளை உடனே படித்துவிட்டு அதற்கு உடனடியாக பதில் அளிக்க இந்த அம்சம் வழிவகை செய்யும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் வேறு செயலிகளை பயன்படுத்தும்போதோ அல்லது யூடியூபில் ஏதேனும் வீடியோ பார்த்துக்கொண்டு இருந்தாலோ இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/government-warns-android-users-about-new-dangerous-virus-how-to-stay-safe-73417.html">ஆண்ட்ராய்டு போன்களை தாக்கும் புதிய வைரஸ் – மத்திய அரசு எச்சரிக்கை – தவிர்ப்பது எப்படி?</a>

வாட்ஸ்அப்பின் தோற்றம் 2013 ஆம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப்படாமலே அப்படியே உள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனம் தோற்றத்தில் புதிய மாற்றத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விலை குறைவான விமான டிக்கெட்டை வாங்க உதவும் சாட்ஜிபிடி? எப்படி தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/chatgpt-partners-with-skyscanner-to-help-users-find-cheapest-flights-and-how-to-use-it-74010.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 21:43:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/chatgpt-partners-with-skyscanner-to-help-users-find-cheapest-flights-and-how-to-use-it-74010.html</guid>
		            
			

    	<description><![CDATA[Cheapest Flight ticket : விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​​நீங்கள் வழக்கமாகப் பல செயலிகளுக்கு மாறி மாறிச் சென்று, விலைகளைத் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பவராக இருந்தால், சாட்ஜிபிடி இப்போது அந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/cheapest-flight-ticket-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விலை குறைவான விமான டிக்கெட்டை வாங்க உதவும் சாட்ஜிபிடி? எப்படி தெரியுமா?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/india/is-ghost-activity-found-in-kempegowda-airport-in-bengaluru-64707.html" target="_blank" rel="noopener">விமான</a> டிக்கெட் பெறும் செயல்முறையை எளிதாக்கும் வகையில், <a href="https://www.tv9tamilnews.com/technology/chatgpt-risks-users-life-7-cases-filed-in-just-one-week-in-california-39659.html" target="_blank" rel="noopener">சாட்ஜிபிடி</a> தற்போது இப்போது ஸ்கை ஸ்கேன்னர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. பல இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு மாறி மாறிச் சென்று டிக்கெட் விலையை ஒப்பிட்டு பார்ப்பதை விட, நேரடியாக சாட்ஜிபியின் சாட் பகுதியிலேயே, விலை குறைவான விமான டிக்கெட்டுகளை நீங்கள் இப்போது கண்டறியலாம். இந்த வசதி தற்போது இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
<h3>விலை குறைவான விமான டிக்கெட்டை வாங்க உதவும் சாட்ஜிபிடி?</h3>
இதன் மூலம், தேவையில்லாத ஃபில்டர்ஸ் மற்றும் இணைய பக்கங்களுக்கு இடையே தேடிச் செல்லும் விரக்தி இனி இருக்காது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உங்கள் அடுத்த பயணத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு நம் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-check-if-your-phone-is-being-spied-on-and-ways-to-stay-safe-72640.html">உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?</a></strong>

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​​நீங்கள் வழக்கமாகப் பல செயலிகளுக்கு மாறி மாறிச் சென்று, விலைகளைத் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பவராக இருந்தால், சாட்ஜிபிடி இப்போது அந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளது. ஸ்கை ஸ்கேன்னர் என்ற நிறுவனத்துடன் இணைந்து சாட்ஜிபிடி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இந்தக் கூட்டு முயற்சி பயனர்களுக்குப் பெரும் நன்மைகளை வழங்கவிருக்கிறது. ஸ்கைஸ்கேன்னர் ஒரு தேடல் கருவியை சாட்ஜிபிடியில் இணைத்துள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள விமான டிக்கெட்டுகள் குறித்து உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த வசதி இப்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் கிடைக்கும். இதற்காக பல இணையதள பக்கங்கள் மற்றும் செயலிகளில் தேடுவதற்கு பதிலாக நீங்ள் நேரடியாக சாட்ஜிபிடியின் சாட் பகுதியில் கேட்டாலே உங்களுக்கு தெளிவான பதிலை விரைவாக அளிக்கும். மேலும் அதற்கான லிங்க்குகளை சாட் பகுதியிலேயே நம்மால் பெற முடியும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/artificial-intelligence-will-weaken-the-way-human-think-says-report-72541.html">ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!</a></strong>

இது வழக்கமான ஒரு சர்ச் இஞ்சின் போல அல்லாமல், நம் பெர்சனல் உதவியாளர் போல நமக்கு தேவையான விவரங்களை அது நமக்கு அளிக்கும். இந்த முடிவுகள் அனைத்தும் ஸ்கைஸ்கேன்னர் நிறுவனத்தின் கட்டமைப்பின் அடிப்படையிலேயே உங்களுக்கு முடிவுகளை வழங்கும். அதாவது நீங்கள் நேரடியாக ஸ்கைஸ்கேன்னர் நிறுவனத்தின் இணையதளத்தை பயன்படுத்தினால் என்ன முடிவுகள் கிடைக்குமோ அதற்கு நிகரான முடிவுகள் கிடைக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் டீன்ஸ் பெற்றோர் கட்டுப்பாடு.. மெட்டா அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/teens-parental-control-in-instagram-and-facebook-meta-introduced-74012.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 21:40:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/teens-parental-control-in-instagram-and-facebook-meta-introduced-74012.html</guid>
		            
			

    	<description><![CDATA[Meta Introduced Parental Control | மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் செயலியை ஏராளமான டீனேஜர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், டீனேஜர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டீன்ஸ் பெற்றோர் பாதுகாப்பு அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/meta-new-update.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் டீன்ஸ் பெற்றோர் கட்டுப்பாடு.. மெட்டா அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!" /></figure>தொழில்நுட்பம் வளர்ச்சி <strong>(Technology Development)</strong> அடைந்துக்கொண்டே செல்லும் நிலையில், அதற்கு ஏற்ப புதிய புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அத்தகைய அசத்தலான அம்சமாக செயற்கை நுண்ணறிவு<strong> (AI - Artificial Intelligence)</strong> உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், அதில் பல ஆபத்துகளும் உள்ளன. இந்த நிலையில் தான் டீனேஜர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மெட்டா<strong> (Meta)</strong> புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம், அது எப்படி செயல்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஃபேஸ்புக், இன்ஸ்டாவின் ஏஐ அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா</h3>
மெட்டா தனது சமூக ஊடக செயலிகளான ஃபேஸ்புக்<strong> (Facebook)</strong>, இன்ஸ்டாகிராம் <strong>(Instagram)</strong> ஆகியவற்றில் பல அசத்தலான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் பயனர்கள் செயலிகளுக்குள்ளேயே செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய செயலிகளில் மெட்டா ஏஐ அம்சத்தை அறிமுகம் செய்தது. இதனை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், இந்த புதிய அறிவிப்பை மெட்டா வெளியிட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/9000mah-battery-phones-are-trending-do-you-really-need-one-73366.html">9000mAh பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் – சிறப்பம்சங்கள் என்ன?</a>
<h3>ஃபேஸ்புக், இஸ்டாப்வில் பெற்றோர் கட்டுப்பாடு - மெட்டா புதிய அறிவிப்பு</h3>
ஃபேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட செயலிகளை ஏராளமான டீனேஜர்கள் பயன்படுத்தும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மெட்டா இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, சில சூழல்களில் செயற்கை நுண்ணறிவு அம்சம் ஆபத்தாக இருக்கும் நிலையில், அதில் இருந்து அவர்களை பாதுகாக்க ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரமில் டீனேஜர் பெற்றோர் கட்டுப்பாடு <strong>(Parental Control)</strong> அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-is-testing-its-whatsapp-plus-feature-73090.html"> வாட்ஸ்அப் செயலியில் வரப்போகும் வாட்ஸ்அப் பிளஸ்.. சோதனை!</a>

அதாவது <strong>Insights</strong> என்ற புதிய டேபை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் என்ன என்ன தலைப்பை மெட்டா ஏஐ-ல் தேடியுள்ளனர் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். இந்த அம்சத்தின் மூலம் தங்களது பிள்ளைகள் ஆபத்தில் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பாதுகாக்கவும் இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோடைகாலத்தை விட குளிர்காலத்திலேயே ஏசியினால் மின் கட்டணம் அதிகரிக்குமா? &#8211; காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/humidity-vs-dry-heat-which-season-makes-your-ac-consume-more-electricity-73996.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 20:51:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/humidity-vs-dry-heat-which-season-makes-your-ac-consume-more-electricity-73996.html</guid>
		            
			

    	<description><![CDATA[Humidity vs Dry Heat : வறண்ட வானிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் நிறைந்ததாக இருக்கிறதா என்பதைப் பொறுத்து, நம் ஏசியின் பயன்பாடு இருக்கும். ஆனால் மின் கட்டணத்தை பொருத்தவரை கோடைகாலங்களை விட காற்றில் ஈரப்பதம் அதிகமிருக்கும் குளிர் காலத்திலேயே ஏசி பயன்படுத்துவதால் மின் கட்டணம் அதிகரிக்கும்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/ac-consume-more-electricity.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோடைகாலத்தை விட குளிர்காலத்திலேயே ஏசியினால் மின் கட்டணம் அதிகரிக்குமா? &#8211; காரணம் என்ன?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/consuming-rice-water-regularly-may-transform-your-skin-more-healthier-73969.html" target="_blank" rel="noopener">கோடைக்காலங்களில்</a> வந்ததும், வீடுகளில் <a href="https://www.tv9tamilnews.com/technology/follow-these-tips-to-protect-your-car-ac-from-damage-often-70733.html" target="_blank" rel="noopener">ஏசிகளின்</a> பயன்பாடு பெருமளவில் அதிகரிக்கிறது. இதனால் மின் கட்டணம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக வறண்ட வானிலை மற்றும் ஈரப்பதம் கொண்ட வானிலை மாறி மாறி வரும்போது நம் வீட்டு மின் கட்டணத்தை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் உண்மையில் எந்த வகையான வானிலையில் ஏசி அதிக மின்சாரம் செலவாகிறது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் தோன்றும். ஆனால், ஏசி பயன்பாட்டை நேரடியாக பாதிக்கும் காரணி காற்றில் உள்ள ஈரப்பதமே ஆகும். ஈரப்பதம் நிறைந்த வானிலையின்போது, ​​ஏசியின் பயன்பாடு அதிகரிக்கிறது. இதுவே, மின் நுகர்வு அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.
<h3>ஈரப்பதமான வானிலை நிலவும் போது ஏசி பயன்பாடு அதிகரிப்பதற்கான காரணம் என்ன?</h3>
காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருக்கும்போது, ​​ஏசி அறையின் வெப்பநிலையைக் குறைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், கூடுதல் பணியையும் செய்ய வேண்டியுள்ளது. அதாவது, காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தையும் அது வெளியேற்ற வேண்டும். இந்தச் செயல்முறை டிஹூமிடிஃபிகேஷன் (Dehumidification) என்று அழைக்கப்படுகிறது. ஈரப்பதத்தை வெளியேற்றுவதற்கு, ஏசியின் கம்ப்ரஸர் நீண்ட நேரம் இயங்க வேண்டியுள்ளது; இதன் விளைவாக மின் நுகர்வு அதிகரிக்கிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-check-if-your-phone-is-being-spied-on-and-ways-to-stay-safe-72640.html">உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?</a></strong>

இதனால்தான், கடலோரப் பகுதிகளில் அல்லது பருவமழைக்காலத்தின்போது ஏசிகள் அதிக மின்சாரத்தைச் செலவிடுகின்றன. அறையை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் உணரச் செய்வதற்கு, ஏசி தொடர்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, ஈரப்பதம் நிறைந்த வானிலையின்போது உண்மையான வெப்பநிலை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தாலும், அதற்கான மின்சாரக் கட்டணம் பெரும்பாலும் அதிகமாகவே வருகிறது.
<h3>வறண்ட வானிலையின்போது மின் நுகர்வு எவ்வாறு மாறுபடுகிறது?</h3>
வறண்ட வானிலை நிலவும் காலங்களில், காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு மிகக் குறைவாக இருக்கும். இத்தகைய வானிலைச் சூழல்களில், அறையின் வெப்பநிலையைக் குறைப்பது மட்டுமே ஏசியின் ஒரே பணியாக இருக்கும். ஈரப்பதத்தை வெளியேற்றுவது தொடர்பான கூடுதல் பணிச்சுமை ஏதும் இல்லாததால், கம்ப்ரஸர் குறைவான அழுத்தத்தையே எதிர்கொள்கிறது. இதன் விளைவாக, ஏசி நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலையை மிக விரைவாகவே அடைந்துவிடுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/artificial-intelligence-will-weaken-the-way-human-think-says-report-72541.html">ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!</a></strong>

மேலும், அது அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் என மாறி மாறி இயங்குகிறது. இதனால்தான் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி போன்ற வட இந்தியப் பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவினாலும் கூட ஏசிக்கான மின் நுகர்வு ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. வெப்பநிலை மிக அதிக அளவை எட்டும்போது மின் நுகர்வு சற்று அதிகரிக்கக்கூடும் என்றாலும், பொதுவாக ஈரப்பதம் நிறைந்த வானிலையின்போது ஏற்படும் நுகர்வை ஒப்பிடும்போது இது குறைவாகவே இருக்கும்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி வாட்ஸ்அப் மூலமாகவே ரீசார்ஜ் பண்ணலாம் &#8211; வெளியான புது அப்டேட்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-launches-mobile-recharge-feature-with-instant-upi-payments-for-prepaid-users-73932.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 16:18:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-launches-mobile-recharge-feature-with-instant-upi-payments-for-prepaid-users-73932.html</guid>
		            
			

    	<description><![CDATA[Whatsapp Recharge : இனி நம்  மொபைலை ரீசார்ஜ் செய்வதற்காக வாட்ஸ்அப்பை பயன்படுத்தி நேரடியாக, சில வினாடிகளில் உங்கள் ரீசார்ஜ் செயல்முறையை நீங்கள் எளிதாக முடித்துவிடலாம். இதற்காக வாட்ஸ்அப் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/whatsapp-.png" class="attachment-large size-large wp-post-image" alt="இனி வாட்ஸ்அப் மூலமாகவே ரீசார்ஜ் பண்ணலாம் &#8211; வெளியான புது அப்டேட்" /></figure>உங்கள் மொபைல் போனை ரீசார்ஜ் செய்ய இனி இனி பேடிஎம், <a href="https://www.tv9tamilnews.com/technology/google-pay-pocket-money-feature-explained-how-it-works-and-who-can-use-it-69913.html" target="_blank" rel="noopener">கூகுள் பே</a> போன்ற யுபிஐ செயலிகளுக்கு செல்ல தேவையில்லை. <a href="https://www.tv9tamilnews.com/technology/telegram-ceo-claims-whatsapp-is-secretly-reading-your-private-messages-70361.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப்பில்</a> இருந்தபடியே நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம். பீரிபெய்டு கார்டுகளை ரீசார்ஜ் செய்வதற்காக ஒரு புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா போன்ற எந்த நெட்வொர்க்கை நீங்கள் பயன்படுத்தினாலும். உங்கள் சிம் கார்டை எளிதாக வாட்ஸ்அப் மூலமாக ரீசார்ஜ் செய்ய முடியும். யுபிஐக்கான QR கோட்களை ஸ்கேன் செய்தல், பணப்பரிமாற்றம் மேற்கொள்ள, பிற கணக்குகளில் இருந்து நீங்கள் பணம் பெற போன்ற வசதிகளை வாட்ஸ் அப் ஏற்னகவே அறிமுகப்படுத்தியிரிருந்தது. அந்த வகையில் தற்போது செல்போன் ரீசார்ஜ் செய்யும் வசதியையும் வாட்ஸ் அப் வழங்கியுள்ளது.
<h3>இனி வாட்ஸ்அப் மூலமாகவே ரீசார்ஜ் பண்ணலாம்</h3>
முன்னதாக மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியிருந்தத குறிப்பிடத்தக்கது. இந்த ரீசார்ஜ் வசதியை பயனர்களுக்கு வழங்குவதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது PayU என்ற நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியிுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு இயங்குதளங்கள் வாயிலாகவும் பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும் என மெட்டா இந்தியாவின் இயக்குநர் ரவி கார்க் தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-check-if-your-phone-is-being-spied-on-and-ways-to-stay-safe-72640.html">உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?</a></strong>

வாட்ஸ்அப்பின் ஹோம் ஸ்கிரீனில் நேரடியாக ரூபாய் குறியீட்டைக் காட்டும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் படி இனி வரும் காலங்களில் ரீசார்ஜ் செய்வதற்காக வாட்ஸ்அப் பயனர்கள் வேறு செயலிகளுக்கு மாற வேண்டிய அவசியமிருக்காது. அதற்கு பதிலாக வாட்ஸ்அப்பில் இருந்த படியே நேரடியாக பணம் செலுத்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் பயனர்கள் சில விநாடிகளிலையே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் என அவர் தெளிவு படுத்தினார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/artificial-intelligence-will-weaken-the-way-human-think-says-report-72541.html">ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!</a></strong>

இதன் மூலம் நேரம் மிச்சமாவதாகவும், பயனர்கள் தங்கள் சாட் செய்த படியே எவ்வித தடையும் இன்றி ரீசார்ஜ் செய்து விட முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார். இதன் விளைவாக மொபைல் ரீசார்ஜ் செய்வதற்காக இனி வேறு செயலிகளையோ இணையதளங்களையோ நாட தேவையில்ல்லை. இதன் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் மெல்ல ஆல் இன் ஒன் செயலியாக மாறி வருகிறது. குறிப்பாக அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு சூப்பர் ஆப்பாக வாட்ஸ்அப் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சிறந்த 5 ஏஐ டூல்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/five-ai-apps-every-student-should-use-beyond-notebooklm-73914.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 15:18:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/five-ai-apps-every-student-should-use-beyond-notebooklm-73914.html</guid>
		            
			

    	<description><![CDATA[Best AI Tools : மாணவர்களின் வாழ்க்கையில் அசைன்மெண்ட், காலேஜ் பிரசன்டேஷன், தேர்வுக்கு தயாராவது என போன்ற பல வேலைகளை ஏஐ கருவிகள் மிக எளிமையாக மாற்றியிருக்கிறது. இதன் மூலம் அவர்கள் வேலை பாதியாக குறைகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு உதவும் சிறந்த 5 ஏஐ கருவிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/ai-tool.png" class="attachment-large size-large wp-post-image" alt="மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சிறந்த 5 ஏஐ டூல்கள்" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/free-laptops-with-ai-for-tamil-nadu-college-students-from-tommorow-cm-mkstalin-starts-49617.html" target="_blank" rel="noopener">கல்லூரி மாணவர்களின்</a> தினசரி வாழ்க்கையில் ஏஐ எனப்படும் <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/as-ai-advances-rapidly-should-we-be-worried-about-jobs-or-ready-to-adapt-58627.html" target="_blank" rel="noopener">செயற்கை நுண்ணறிவு</a> கருவிகள் முக்கிய பங்கு வகிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக மாணவர்களின் வாழ்க்கையில் அசைன்மெண்ட், காலேஜ் பிரசன்டேஷன், தேர்வுக்கு தயாராவது என போன்ற பல வேலைகளை ஏஐ கருவிகள் மிக எளிமையாக மாற்றியிருக்கிறது. இதன் மூலம் அவர்கள் வேலை பாதியாக குறைகிறது. ஏஐ கருவியை முழுமையாக நம்பாமல் அதனை வேலைகளை எளிதாக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு உதவும் சிறந்த 5 ஏஐ கருவிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
<h3>Ryne AI</h3>
எந்தவித வகுப்புகளுக்கும் செல்லாமல் சுயமாக ஒரு கோர்ஸை தேர்ந்தெடுத்து படிக்கும் பாணவர்களுக்கு இந்த ஏஐ டூல் உதவிகரமாக இருக்கும். இந்த ஏஐ டூல் மாணவர்களின் கேள்விகளுக்கு துல்லியமான பதில்களை பெற உதவும். சாட்ஜிபிடி, ஜெமினி போன்று கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் துல்லியமான பதில்களை வழங்குககிறது. கேள்விகளுக்கு உடனுக்கு உடன் பதில்களை பெறலாம்.

<strong>இதையும் படிக்க :  <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-check-if-your-phone-is-being-spied-on-and-ways-to-stay-safe-72640.html">உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?</a></strong>
<h3>
Studygenie</h3>
ஒரு புதிய விஷயங்களை கற்கும்போது அதனை கலந்துரையாடல் முறையில் சுவாரசியமான கற்றலை இந்த ஏஐ டூல் நமக்கு வழங்கும். குறிப்பாக நோட்ஸ் அப்லோடு செய்தால் அதற்கான கேள்வி பதில்களை உருவாக்கி கொடுக்கும். நாம் தவறான பதிலளித்தார். அதற்கு சரியான விளக்கம் கொடுக்கும். மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு இந்த ஏஐ கருவி மிக பயனுள்ளதாக இருக்கும்.
<h3>PDF.ai</h3>
நம் பாடங்களை பிடிஎஃப் ஆக அப்லோட் செய்தால் அதில் உள்ள முக்கிய தகவல்களை மட்டும் நமக்கு வழங்கும். அதாவது நமக்கு தேவையானவற்றை நம் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக கொடுக்கும்.
<h3>Gamma AI</h3>
கல்லூரிில் பிரசன்டேஷன் செய்ய இந்த ஏஐ டூல் நமக்கு மிக உதவும். டாபிக் கொடுத்தால் முழு பிரசன்டேசனையும் சில நிமிடங்களில் உருவாக்கி கொடுக்கும். நம் பிரசன்டேஷனின் ஒவ்வொரு ஸ்லைடிலும் நாம் சேர்க்க வேண்டியவற்றை சொன்னால் போதும். நம் தேவைக்கு ஏற்ப எடிட் செய்து கொடுக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/artificial-intelligence-will-weaken-the-way-human-think-says-report-72541.html">ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!</a></strong>
<h3>
Jenni Ai</h3>
ஆய்வு கட்டுரைகள், அசைன்மென்ட் போன்ற எழுதுவதற்கு தேவையான கண்டென்ட்களை இந்த ஏஐ நமக்கு உதவும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட டாபிக்கை கொடுத்தால் முழுமையான டேட்டா விவரங்களை திரட்டி தரும். ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு இந்த செயலி மிகச் சிறந்த உதவியாக இருக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆண்ட்ராய்டு போன்களை தாக்கும் புதிய வைரஸ்  &#8211; மத்திய அரசு எச்சரிக்கை &#8211; தவிர்ப்பது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/government-warns-android-users-about-new-dangerous-virus-how-to-stay-safe-73417.html</link>	
		<pubDate>Wed, 22 Apr 2026 20:54:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/government-warns-android-users-about-new-dangerous-virus-how-to-stay-safe-73417.html</guid>
		            
			

    	<description><![CDATA[Government Warns Android Users : இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சைபர் ஆபத்து குறித்து மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் வழக்கமான செயலிகள் போலவே தோற்றம் கொண்ட புதிய மால்வேர் உருவாகியிருப்பதாகவும் அது நம் தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/government-warns-android-users.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆண்ட்ராய்டு போன்களை தாக்கும் புதிய வைரஸ்  &#8211; மத்திய அரசு எச்சரிக்கை &#8211; தவிர்ப்பது எப்படி?" /></figure>இந்தியாவில் <a href="https://www.tv9tamilnews.com/technology/iphone-security-myth-study-reveals-more-scams-for-iphone-users-38877.html" target="_blank" rel="noopener">ஆண்ட்ராய்டு</a> பயனர்களுக்கு புதிய சைபர் ஆபத்து குறித்து மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கமான செயலி போல தோன்றும் இந்த <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-check-if-your-phone-is-being-spied-on-and-ways-to-stay-safe-72640.html" target="_blank" rel="noopener">மால்வேர்</a> ஒருமுறை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டால் ஓடிபி, பாஸ்வேர்டு வங்கி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை திருடுவதுடன், உங்கள் ஸ்மார்ட்போனை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் திறனும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எச்சரிக்கைபதிவையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
<h3>புதிய ஆண்ட்ராய்டு வைரஸ் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை</h3>
ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிய மால்வேர் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியாது. இது வங்கி செயலி, கஸ்டமர் கேர் செயலிகள், மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள் போன்ற வடிவில் தோன்றக் கூடும். மக்கள் தெரியாமல் அதனை தங்கள் போனில் இன்ஸ்டால் செய்தால் அது பின்னணியில் இயங்கி மொபைலில் உள்ள தகவல்களை எடுத்துக்கொள்ளும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-check-if-your-phone-is-being-spied-on-and-ways-to-stay-safe-72640.html">உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?</a></strong>
<h3>மத்திய அரசு எச்சரிக்கை</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="und">Android users के लिए एक नया और खतरनाक threat सामने आया है — ऐसा malware जो दिखने में normal app लगता है, लेकिन install होते ही पूरे device का control ले सकता है।</p>
“Banking app” या “customer support” के नाम पर भेजी गई APK files के जरिए users को trap किया जाता है।

एक बार… <a href="https://t.co/D3pasSvLDC">pic.twitter.com/D3pasSvLDC</a>

— CyberDost I4C (@Cyberdost) <a href="https://twitter.com/Cyberdost/status/2046615053592588738?ref_src=twsrc%5Etfw">April 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

குறிப்பாக நம் வங்கி லாகின் விவரங்கள், ஓடிபி மெசேஜ்கள், டெபிட், கிரெடிட் கார்டுகள், பாஸ்வேர்டு மற்றும் பின, தனிப்பட்ட மெசேஜ், கால் லாக் போன் விவரங்களை சேகரிக்கும். இதன் மூலம் மோசடி குழுக்கள் நம் வங்கி கணக்குகளை காலி செய்யும் ஆபத்து உள்ளது. மேலும், அடையாள திருட்டு போன்று நம் விவரங்களை வைத்து ஏமாற்றவும் முடியும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்த வைரஸ் பொ72320துவாக ஏபிகே ஃபைல்கள் மூலம் நம் இயங்கத் தொடங்கும். மேலும் வாட்ஸ்அப், எஸ்எம்எஸ், டெலிகிராம் லிங்க்குள் அல்லது போலியான கஸ்டமர் கேர் அழைப்புகள், அல்லது சந்தேகத்துக்குரிய இணையதளங்கள் மூலம் பயனர்களை ஏமாற்றி இன்ஸ்டால் செய்ய வைக்கப்படுகிறது. அதன் பின் நாம் பெர்மிசன் கொடுத்த பிறகு உங்கள் போன் முழுவதும் மால்வேர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/indian-government-drop-pre-install-aadhaar-app-mandatory-for-new-smartphones-72300.html">ஸ்மார்ட்போனில் ஆதார் செயலி Pre Install.. முடிவில் இருந்து பின்வாங்கிய அரசு.. காரணம் என்ன?</a></strong>
<h3>தவிர்ப்பது எப்படி?</h3>
<ul>
 	<li>கூகுள் பிளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.</li>
 	<li>தெரியாத லிங்க்குகள் மற்றும் மெசேஜ்களில் வரும் ஏபிகே ஃபைல்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும்.</li>
 	<li>எந்தவொரு செயலிக்கும் ஆப் பெர்மிசன் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பயன்பாடுகளுக்கு பெர்மிசன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.</li>
 	<li>உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் இன்ஸ்டால் செய்யாத ஆப்கள் இருந்தால் உடனே டெலிட் செய்ய வேண்டும்.</li>
 	<li>உங்கள் போனை அடிக்கடி சாஃப்ட்வேர் அப்டேட் செய்வது நல்லது.</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>