AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண நிறங்களில் ஜொலித்த ஆதியோகி சிலை

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை தேசியக் கொடியின் மூவர்ண நிறங்களில் ஒளிரவிடப்பட்டது. காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் ஜொலித்த ஆதியோகியின் பிரம்மாண்ட காட்சி, சுதந்திர தின உணர்வையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண நிறங்களில் ஜொலித்த ஆதியோகி சிலை
ஆதியோகி சிலை
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Aug 2026 20:29 PM IST

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை தேசியக் கொடியின் மூவர்ண நிறங்களில் ஒளிரவிடப்பட்டது. காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் ஜொலித்த ஆதியோகியின் பிரம்மாண்ட காட்சி, சுதந்திர தின உணர்வையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

மாலை வேளையில், அந்தப் பிரகாசமான மூவர்ண விளக்குகள் பார்வையாளர்களிடையே ஆன்மீக உணர்வுடன் கலந்த தேசபக்தியைத் தூண்டின. நாட்டின் சுதந்திரப் பயணத்தையும் மக்களின் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிறப்புக் ஒளிக்காட்சியின் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

கின்னஸ் உலக சாதனையால் உலகின் மிகப்பெரிய மார்பளவுச் சிலையாக அங்கீகரிக்கப்பட்ட 112 அடி உயர ஆதியோகி சிலையை, தேசிய விழாக்களின்போது இத்தகைய சிறப்புக் விளக்குகளால் அலங்கரித்து ஒளிரச் செய்வது ஒரு மரபாகவே மாறிவிட்டது. ஈஷா மையத்திற்கு வருகை தந்திருந்தவர்கள், “ஜெய் பாரத மாதா” என்று முழக்கமிட்டபடியே, இந்தக் கண்கவர் காட்சியைத் தங்கள் ஸ்மார்ட்போன் கேமராக்களில் படம்பிடித்தனர்.

மூவர்ண நிறங்களில் ஜொலித்த ஆதியோகி சிலை

 

மும்வர்ண வானில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் ஆதியோகியின் இந்த அழகிய காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்களும் பார்வையாளர்களும் இங்கு திரண்டு வருகின்றனர். மும்வர்ண ஒளியில் ஜொலிக்கும் ஆதியோகியின் புகைப்படங்களும் காணொளிகளும் ஏற்கனவே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, சமூக ஊடகங்களிலும் பரவலான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

 

Follow Us