அருவி அருகே செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவர், எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மஹாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் அருகே உள்ள காலு அருவியில் இந்த சம்பவம் நடந்ததாக சமூக வலைதளப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருவியின் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது சிறுவன் எதிர்பாராதவிதமாக கால் இடறி, மலைப்பகுதியில் இருந்து கீழே உள்ள ஆழமான பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அவரது கை ஒரு பாறையில் சிக்கியதால் அவர் மேலும் கீழே விழுவது தடுக்கப்பட்டது.