ATM : அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்.. இந்த விஷயங்கள் குறித்து உஷாராக இருங்கள்!
Tips For Safe ATM Transaction | என்னதான் யுபிஐ, மொபைல் செயலிகள் வந்துவிட்டாலும் ஏடிஎம் பயன்பாடு மக்கள் மத்தியில் தற்போதும் கூட பரவலாக உள்ளது. இந்த நிலையில், ஏடிஎம் பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாதிரி புகைப்படம்
- ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுக்கும்போது, கீ போடை உங்களுக்கு பின்னால் இருக்கும் நபருக்கு தெரியாத வகையில் கையை வைத்து மறைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களது பின் எண்ணை யாரேனும் பார்க்க முயற்சி செய்தால், அந்த நபரை வெளியே செல்லும்படி கூறிவிட்டு பணத்தை எடுங்கள். இல்லையென்றால் அந்த ஏடிஎம் மையத்தை பயன்படுத்தாதீர்கள்.
- ஏடிஎம் கார்டுக்கு பின் எண் செட் செய்யும்போது பிறர் மிக எளிதில் கணிக்க கூடிய பின் எண்களாக வைக்காதீர்கள். குறிப்பாக உங்களின் பெயர், பிறந்த தேதி, உள்ளிட்ட மிகவும் அடிப்படையான தகவல்களை உங்களது பின் எண்ணாக வைக்காதீர்கள். அது மிக எளிதில் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
- நீங்கள் பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு செல்லும்போது அங்கு ஏதேனும் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் ஏடிஎம் மையத்தில் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டு இருந்தால், உங்களது தகவல்கள் எடுக்கப்பட்டு பணம் மோசடி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
- ஒவ்வொரு முறையும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால், உங்களது மொபைல் எண்ணுக்கு அது குறித்து குறுஞ்செய்தி வரும்படி செட் செய்து வையுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், உங்களது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வேறு யாரேனும் பணத்தை எடுக்க முயற்சி செய்தால் அது குறித்து உங்களுக்கு மிக எளிதாக தெரிய வந்துவிடும்.
- உங்களது தனிப்பட்ட தகவல்கள், விவரங்கள் உள்ளிட்டவற்றை கூறும்படி உங்களை யாரேனும் தொடர்புக்கொண்டால் அந்த அழைப்புகளுக்கு பதில் அளித்து உங்களது தனிப்பட்ட மற்றும் முக்கிய விவரங்களை கொடுக்க வேண்டாம். அது உங்களை மோசடி வலையில் விழ வைக்கும் மிகப்பெரிய சதியாக இருக்கலாம்.
Follow Us




