<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>சமீபத்திய இந்திய செய்திகள் India News in Tamil - இந்தியாவின் செய்திகள் தமிழில், Latest National News Updates in Tamil</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/india/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/india</link>
 <description>India News in Tamil: - TV9 Tamil: Read All The Latest News and Political Updates, Current Affairs in India and around the indian States in tamil at tv9tamilnews.com இந்திய செய்திக் கதைகள்: சமீபத்திய செய்திகள் &amp; இந்தியக் கதைகளின் புதுப்பிப்புகளைத் தமிழில் பார்க்கவும்.</description><lastBuildDate>Thu, 13 Aug 2026 22:00:43 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>வடிவேலு ஸ்டைலில்&#8230; திருட வந்த இடத்தில் துணி துவைத்து குளித்து ஜாலியாக இருந்த திருடன் &#8211; வைரலாகும் சிசிடிவி காட்சிகள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/thief-spends-four-hours-in-varanasi-showroom-before-stealing-rs-4-71-lakh-ktm-bike-97956.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 22:00:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[வைரல் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/thief-spends-four-hours-in-varanasi-showroom-before-stealing-rs-4-71-lakh-ktm-bike-97956.html</guid>
		            
			

    	<description><![CDATA[Showroom Thief Goes Viral : உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பைக் ஷோரூமில் நுழைந்த திருடன் அங்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் தங்கி குளித்து, துணி வைத்து காபி குடித்து பின்னர் விலையுயர்ந்த பைக்கை திருடி சென்றுள்ளான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/theft-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வடிவேலு ஸ்டைலில்&#8230; திருட வந்த இடத்தில் துணி துவைத்து குளித்து ஜாலியாக இருந்த திருடன் &#8211; வைரலாகும் சிசிடிவி காட்சிகள்" /></figure>உத்தரப் பிரதேச மாநிலம் வராணசியில் உள்ள <a href="https://www.tv9tamilnews.com/technology/are-you-going-to-buy-new-bike-analyze-these-things-before-buying-91175.html" target="_blank" rel="noopener">பைக்</a> ஷோரூமில் புகுந்த திருடன், கிட்டத்தட்ட 4 மணி நேரம் அங்கேயே தங்கி ஜாலியாக பொழுதை கழித்துவிட்டு, ரூ.4.71 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கேடிஎம் பைக்கை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பைக் ஷோரூமில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
<h3>காபி போட்டு குடித்த திருடன்</h3>
உத்தரப்பிரதேச மாநிலம் வராணசியில் பிரபல பைக் ஷோரூமுக்குள் நுழைந்த அந்த ஒருவர், உடனடியாக பைக்தை திருடி செல்லாமல் அங்கேயே தங்கி டான்ஸ் ஆடி திரிந்துள்ளார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஷோரூமில் இருந்த அவர், பயமோ, கவலையோ துளியும் இன்றி மிகவும் சாதாரணமாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அவர் செய்த செயல்கள் அனைத்தும் ஷோரூமில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/16-years-old-boy-spends-his-most-of-the-time-in-pond-in-west-bengal-97490.html">குளத்துக்குள் வாழும் 16 வயது சிறுவன்.. அரிய வகை பிரச்னையால் 5 ஆண்டுகளாக அவதி.. சோக கதை!</a></strong>

மேலும் ஷோரூமுக்குள் இருந்தபோது அந்த நபர் தனக்காக காபி போட்டு குடித்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது உடைகளை துவைத்து அவற்றை காய வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர் அங்கேயே குளிக்கவும் செய்திருக்கிறார். பொதுவாக திருடர்கள் திருடிவிட்டு யாரும் பார்க்காமல் அங்கிருந்து தப்பி செல்வார்கள். ஆனால் இந்த நபர் எந்த அவசரமும் இல்லாமல் நீண்ட நேரம் ஷோரூமுக்குள் இருந்தது சம்பவத்தை மேலும் வினோதமாக்கியுள்ளது.
<h3>'லுங்கி டான்ஸ்' பாடலுக்கு நடனம்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Varanasi: A thief spent 4 hours inside a bike agency, made coffee, took a bath, danced to music, and even dried his clothes before fleeing with the manager’s ₹4.70 lakh KTM bike😭💀 <a href="https://t.co/6C5cdMOhnM">pic.twitter.com/6C5cdMOhnM</a></p>
— Ghar Ke Kalesh (@gharkekalesh) <a href="https://x.com/gharkekalesh/status/2087824471629689026?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

சிசிடிவி காட்சிகளில் அந்த நபர் பிரபல பாலிவுட் பாடலான 'லுங்கி டான்ஸ்' பாடலுக்கு ஷோரூமுக்குள் நடனமாடுவதும் பதிவாகியுள்ளது. இதனால் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. சுமார் 4 மணி நேரம் ஷோரூமுக்குள் இருந்த பிறகு, அங்கிருந்த ஷோரூம் மேனேஜரின் விலையுயர்ந்த கேடிஎம் பைக்கை அவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட கேடிஎம் பைக்கின் மதிப்பு சுமார் ரூ.4.71 லட்சம் என கூறப்படுகிறது. ஷோரூமில் இருந்த பைக்குகளில் இருந்து இந்த விலையுயர்ந்த பைக்கைத் தேர்வு செய்து அந்த நபர் திருடிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/a-young-man-died-after-accidentally-falling-from-a-moving-train-near-the-panoli-railway-stationin-gujarat-attempting-to-snatch-a-mobile-phone-from-a-passenger-97248.html">ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு முயற்சி! இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..</a></strong>
<h3>போலீஸ் விசாரணை தீவிரம்</h3>
இந்த சம்பவம் தொடர்பாக வராணசி போலீசார் ஆகஸ்ட் 13, 2026 விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில வெளியிடப்பட்ட பதிவில், சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்துள்ள பிற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் திருடனை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு!&#8221;.. கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் போராட்டம்.. வாட்டாள் நாகராஜ் கைது, எல்லை நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/karnataka-bandh-cauvery-water-release-vatal-nagaraj-arrested-attibele-border-97815.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 13:25:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/karnataka-bandh-cauvery-water-release-vatal-nagaraj-arrested-attibele-border-97815.html</guid>
		            
			

    	<description><![CDATA[Karnataka Bandh Over Cauvery Water Release: தமிழ்நாட்டிற்குக் காவிரியில் நீர் திறக்கக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதற்குக் எதிர்ப்பு தெரிவித்துக் கன்னட அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார். மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டாலும், பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/vattal-nagaraj.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு!&#8221;.. கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் போராட்டம்.. வாட்டாள் நாகராஜ் கைது, எல்லை நிலவரம் என்ன?" /></figure><strong>கர்நாடகா, ஆகஸ்ட் 13:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cauvery-water-dispute-tamil-nadu-counter-petition-karnataka-supreme-court-97754.html" target="_blank" rel="noopener">காவிரி நதிநீர்</a> பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரியத் தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிலவும் நீர் பற்றாக்குறையைக் சுட்டிக்காட்டி இந்த உத்தரவிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன் தொடர்ச்சியாக, கன்னட சளுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடக பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் பின்னணி, பெங்களூரு மற்றும் எல்லைப் பகுதிகளில் நிலவிய சூழல் மற்றும் காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/armstrong-murder-case-inspector-pukhari-puzhal-jail-cbi-investigation-97799.html">“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!</a></strong>
<h3>பந்த் அழைப்பும் பல்வேறு அமைப்புகளின் நிலைப்பாடும்:</h3>
வாட்டாள் நாகராஜ் கர்நாடக பந்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சங்கங்கள், அரசுப் பேருந்து கழகங்கள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த பந்த் போராட்டத்திற்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை என முன்னதாகவே அறிவித்திருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் முழுமையான பந்த் அடைப்பு ஏற்படாவிட்டாலும், பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காலி குடங்களை ஏந்திச் சாலை மறியலில் ஈடுபடுவது, இருசக்கர வாகனப் பேரணிகள் நடத்துவது எனப் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக கே.ஆர்.எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் மட்டுமே பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு முழு அடைப்பு போன்ற சூழல் காணப்பட்டது.
<h3>வாட்டாள் நாகராஜ் கைது:</h3>
போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் அரசுப் பேருந்து ஊழியர்களிடம் ஆதரவு திரட்டவும், டவுன் ஹால் பகுதியிலிருந்து ஃப்ரீடம் பார்க் வரை பேரணியாகச் செல்லவும் வாட்டாள் நாகராஜ் திட்டமிட்டிருந்தார். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பெங்களூரு சதாசிவ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் முன் காலை முதலே காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோதே காவல் துறையினர் அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரையும் போலீசார் கைது செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/confession-by-the-youth-arrested-in-the-tiruppur-mother-and-daughter-double-murder-case-97693.html" target="_blank" rel="noopener">“எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!</a></strong>
<h3>மாநில எல்லை அத்திப்பள்ளி நிலவரம்:</h3>
தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த போராட்டத்தின் தாக்கம் ஓரளவு பிரதிபலித்தது. அப்பகுதியில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் பேக்கரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பேருந்து போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஓசூர் வழியாகத் தமிழ்நாட்டிலிருந்து பெங்களூரு செல்லும் நாள்தோறும் இயக்கப்படும் சுமார் 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பேருந்துகளும் எவ்வித இடையூறுகளுமின்றி வழக்கம் போல் இயங்கின. அசம்பாவிதங்களைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Indian Independence Year : இந்தியா கொண்டாடுவது 79-ஆவது சுதந்திர தினமா? 80- ஆவது சுதந்திர தினமா? குழப்பமும்- உண்மையும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/india-79th-or-80th-independence-day-full-details-in-tamil-97682.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 18:00:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/india-79th-or-80th-independence-day-full-details-in-tamil-97682.html</guid>
		            
			

    	<description><![CDATA[Indian Independence Year : இந்திய திருநாட்டின் வருகிற ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த சுதந்திர தினம் 79- ஆவதா அல்லது 80- ஆவது சுதந்திர தினமா என்ற கேள்விக்கு பதிலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/independence-day-2026.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Indian Independence Year : இந்தியா கொண்டாடுவது 79-ஆவது சுதந்திர தினமா? 80- ஆவது சுதந்திர தினமா? குழப்பமும்- உண்மையும்!" /></figure>இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படும். இந்த நிலையில், வருகிற சுதந்திர தினம் 79- ஆவது சுதந்திர தினமா அல்லது 80- ஆவது சுதந்திர தினமா என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது. தற்போது, 2026- இல் இருந்து 1947- ஐ கழித்தால் 79 வரும். ஆனால், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி ஆகஸ்ட் 15, 2026 அன்றை 80- ஆவது சுதந்திர தினம் என்றே குறிப்பிடுகிறது. அப்படி என்றால் இவற்றில் எது சரியானது என்ற கேள்வி எழுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதற்கும், அது கொண்டாடிய சுதந்திர தின கொண்டாட்டங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதிலேயே இதற்கான பதில் உள்ளது.
<h3>பத்திரிக்கை தகவல் பணியகத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு</h3>
2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் 80-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கான தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பத்திரிக்கை தகவல் பணியகம் இந்தியா 80 ஆவது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு கொண்டாடும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதில், கடந்த 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் சுதந்திர தினம் ஆகும். 1948 ஆகஸ்ட் 15 வரை சுதந்திர தினம் கொண்டாடுவதற்காக காத்திருக்கவில்லை.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/videos/ahead-of-the-independence-day-celebration-trichy-head-post-office-illuminated-in-the-colours-of-the-tricolor-25691.html" target="_blank" rel="noopener">சுதந்திர தினம் : மூவர்ண விளக்குகளால் ஜொலித்த திருச்சியின் முக்கிய கட்டிடங்கள்</a>
<h3>1947 முதல் 2026 வரை சுதந்திர தினம்</h3>
எனவே ஆண்டுதோறும் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாக்களை கணக்கீடு செய்தால்
<ul>
 	<li>1947- முதல் சுதந்திர தினம்.</li>
 	<li>2024-- 78- ஆவது சுதந்திர தினம்.</li>
 	<li>2025- 79- ஆவது சுதந்திர தினம்.</li>
 	<li>2026- 80- ஆவது சுதந்திர தினம்.</li>
</ul>
<h3>இந்தியாவின் 80 - ஆவது சுதந்திர தினம்</h3>
தற்போது, 79- ஆவது சுதந்திர தினம் நிறைவடைந்து, 80- ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதாவது, இந்தியா 1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. 2026 ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்குள் 79 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும். எனவே, சுதந்திர ஆண்டு விழா கணக்கீட்டின் அடிப்படையில் 2026- ஆம் ஆண்டு சுதந்திரத்தின் 79- ஆவது ஆண்டு நிறைவை குறிக்கிறது.
<h3>சுதந்திர தின ஆண்டை நினைவில் வைக்க எளிய வழி</h3>
சுதந்திர தின ஆண்டை நினைவில் வைப்பதற்கு, 1947- இல் பிறந்த ஒரு குழந்தை 1948- இல் ஒரு வயதை அடைகிறது. இதே போல, இந்தியாவின் முதல் சுதந்திர தினம் 1947- ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட நிலையில் அதன் முதல் ஆண்டு நிறைவு விழா 1948- இல் வந்தது. அதன் அடிப்படையில், தற்போது, 80- ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/videos/world-famous-samaguri-satra-mask-artists-celebrate-79th-independence-day-with-tricolour-masks-25767.html" target="_blank" rel="noopener">தேசிய கொடி வண்ணத்தில் மாஸ்க்.. வித்யாசமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சாதாரண ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.. அதிகரிக்கிறது பொது பெட்டிகளின் எண்ணிக்கை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/indian-railways-to-add-more-general-coaches-3200-long-distance-trains-to-get-more-seats-know-more-in-details-97679.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 17:43:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/indian-railways-to-add-more-general-coaches-3200-long-distance-trains-to-get-more-seats-know-more-in-details-97679.html</guid>
		            
			

    	<description><![CDATA[தற்போது பல ரயில்களில் பொது பெட்டிகளில் அதிக நெரிசல் காரணமாக பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கதவுகளில் நின்றபடியும் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்நிலையில், ரயில்களில் பொது மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/irctc-coaches-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சாதாரண ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.. அதிகரிக்கிறது பொது பெட்டிகளின் எண்ணிக்கை!" /></figure><strong>ஆகஸ்ட் 12, 2026:</strong> ரயில்களில் பயணம் செய்யும் சாதாரண பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், நீண்ட தூரம் செல்லும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொது பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது. தற்போது பல ரயில்களில் இரண்டு பொது பெட்டிகள் மட்டுமே இருப்பதால், அதிகளவிலான பயணிகள் நெரிசலில் சிக்கி சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பொது பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். ஆனால், பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பண்டிகைக் காலங்களில் கூட்ட நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. சில நேரங்களில் பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலையும், நெரிசல் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழலும் உருவாகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/mumbai-kurla-landslide-gaushiya-chawl-death-toll-updates-97539.html">மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!</a>
<h3>3,200 நீண்ட தூர ரயில்களில் கூடுதல் பெட்டிகள்:</h3>
பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், சுமார் 3,200 நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரயில்வே துறை தயாராகி வருகிறது.

ஒவ்வொரு ரயிலிலும் மொத்தம் 24 பெட்டிகள் இருக்கும் வகையில் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 4 பொது பெட்டிகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8 ஸ்லீப்பர் பெட்டிகள் வரை இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் பொது மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான சாதாரண பயணிகள் பயனடைவார்கள். குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு பொது பெட்டிகளில் இடம் கிடைப்பது எளிதாகும்.
<h3>ஆண்டுக்கு 36 கோடி கூடுதல் இருக்கைகள்:</h3>
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 36 கோடி கூடுதல் பயண இருக்கைகள் உருவாக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் வெளிமாநிலங்கள் மற்றும் நகரங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொது பெட்டிகளையே பயன்படுத்துகின்றனர். எனவே, கூடுதல் பொது பெட்டிகள் அமைக்கப்படுவது அவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/air-india-pilot-accused-of-being-high-before-flight-as-phuket-delhi-plane-plunged-300-feet-97629.html">நடுவானில் 300 அடி சரிந்த விமானம்.. போதைப்பொருளை பயன்படுத்திய விமானி – பரிசோதனையில் உறுதி</a>

தற்போது பல ரயில்களில் பொது பெட்டிகளில் அதிக நெரிசல் காரணமாக பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கதவுகளில் நின்றபடியும் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

இந்நிலையில், ரயில்களில் பொது மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சாதாரண பயணிகள் பாதுகாப்பான மற்றும் சற்று வசதியான முறையில் நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நடுவானில் 300 அடி சரிந்த விமானம்.. போதைப்பொருளை பயன்படுத்திய விமானி &#8211; பரிசோதனையில் உறுதி</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/air-india-pilot-accused-of-being-high-before-flight-as-phuket-delhi-plane-plunged-300-feet-97629.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 15:26:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/air-india-pilot-accused-of-being-high-before-flight-as-phuket-delhi-plane-plunged-300-feet-97629.html</guid>
		            
			

    	<description><![CDATA[ம்பவத்துக்குப் பிறகு இரு விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. துணை விமானியின் பரிசோதனை முடிவு தெளிவாக இருந்த நிலையில், கேப்டன் இரண்டு பரிசோதனைகளிலும் தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது பரிசோதனையில் மரிஜுவானா (கஞ்சா) பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/delhi-phuket-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நடுவானில் 300 அடி சரிந்த விமானம்.. போதைப்பொருளை பயன்படுத்திய விமானி &#8211; பரிசோதனையில் உறுதி" /></figure><strong>ஆகஸ்ட் 12, 2026:</strong> புகெட்-டெல்லி இடையே சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி உயரம் சரிந்த சம்பவத்தில், விமானத்தின் கேப்டன் புறப்படுவதற்கு முன்பே போதையில் இருந்ததாக பயணி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், சம்பவத்திற்குப் பிறகு பயணிகளை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என விமானி கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் AI-2379 விமானம் 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் ஆகஸ்ட் 4ஆம் தேதி புகெட்டில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. பயணத்தின் நடுவே விமானம் திடீரென 300 அடி உயரம் சரிந்ததில், குறைந்தது 20 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் காயமடைந்தனர்.
<h3>மது போதையில் விமானி - பயணிகள் பரபரப்பு குற்றச்சாட்டு:</h3>
தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய பயணி ஒருவர், தானும் தனது சகோதரரும் கடைசியாக விமானத்தில் ஏறியதாகவும், அப்போது விமானியும் தங்களுடன் விமானத்தில் ஏறியதாகவும் கூறினார். விமானத்திற்கான நேரம் குறித்து விமானியிடம் பேசியபோது, அவர் மெதுவாக பதிலளித்ததாகவும், அவரது கண்கள் சிவந்து காணப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் விமானி போதையில் இருப்பது போல் தெரிகிறது என தனது சகோதரரிடம் அப்போதே கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

விமானம் திடீரென கீழே சரிந்தபோது, பயணிகள் பலர் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும், தனது சகோதரர் பலமுறை விமானத்தின் மேற்கூரையில் மோதியதாகவும் பயணி கூறினார். பலர் காயமடைந்து உதவி கோரி அலறியதாகவும் தெரிவித்தார்.

சம்பவத்திற்குப் பிறகு விமானி கேபினுக்கு வந்து பயணிகளை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும், “இதை பெரிதாக்கவேண்டாம் எனக் கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைக்க அவசரமாக வேறு விமான நிலையத்தில் தரையிறங்காமல் டெல்லிக்கே சென்றது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
<h3>விமான திடீரென கீழே சரிய என்ன காரணம்?</h3>
இதற்கிடையில், விமானப் பாதுகாப்புத் துறையின் அறிக்கையின்படி, விமானம் திடீரென ஸ்டால் நிலையை எதிர்கொண்டபோது ஆட்டோபைலட் துண்டிக்கப்பட்டது. அப்போது விமானத்தை இயக்கிய துணை விமானி, பயிற்சியின்படி விமானத்தின் மூக்குப் பகுதியை கீழ்நோக்கித் தள்ளி வேகத்தை அதிகரித்தார். இதனால் விமானம் சில நொடிகளுக்கு கடுமையான எதிர்மறை ஈர்ப்பு விசையை எதிர்கொண்டு, அதிகபட்சமாக 300 அடி உயரத்தை இழந்தது.

மேலும், மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்ததற்கான அறிகுறிகள், ஆட்டோபைலட் துண்டிப்பு மற்றும் எலிவேட்டர் கோளாறு பதிவாகியுள்ளன. இதனால் விமானத்தின் உயரக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
<h3>போதைப்பொருளை பயன்படுத்திய விமானி - பரிசோதனையில் உறுதி:</h3>
இதனிடையே, சம்பவத்துக்குப் பிறகு இரு விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. துணை விமானியின் பரிசோதனை முடிவு தெளிவாக இருந்த நிலையில், கேப்டன் இரண்டு பரிசோதனைகளிலும் தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது பரிசோதனையில் மரிஜுவானா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு விமானிகளும் பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/mumbai-kurla-landslide-gaushiya-chawl-death-toll-updates-97539.html">மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!</a>

இந்த சம்பவத்தை தீவிரமான விமானப் பாதுகாப்பு நிகழ்வாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வகைப்படுத்தியுள்ளது. விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB), ஏர்பஸ் மற்றும் பிரான்சின் BEA ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறது. அனைத்து தொழில்நுட்ப, செயல்பாட்டு, மருத்துவ மற்றும் மனிதக் காரணிகள் தொடர்பான ஆதாரங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Independence Day 2026: 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நடந்தது என்ன? வரலாற்றின் அறியப்படாத பக்கங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-untold-stories-of-indias-midnight-independence-in-1947-97559.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 11:57:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-untold-stories-of-indias-midnight-independence-in-1947-97559.html</guid>
		            
			

    	<description><![CDATA[India Independence 1947: ஜோதிடர்களின் ஆலோசனைகளாலும் ஆங்கிலேயர்களின் முடிவாலும் 1947 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது. இத்தருணத்தில் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையுடன், தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய புனிதச் செங்கோல் மூலமாக அதிகாரப் பகிர்வு முறைப்படி நடைபெற்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/india-day.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Independence Day 2026: 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நடந்தது என்ன? வரலாற்றின் அறியப்படாத பக்கங்கள்!" /></figure>பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயான லார்ட் மவுண்ட்பேட்டன், இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியை இந்தியாவின் சுதந்திர தினமாக அறிவித்தார். ஆனால், இந்திய ஜோதிடர்கள் அந்த நாளை அசுப நாளாகக் கருதியதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆங்கிலேயர்களின் முடிவை மாற்ற முடியாத நிலையில், ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட நள்ளிரவு 12 மணிக்கு அதிகாரப் பகிர்வு செய்ய ஜோதிட வல்லுநர்கள் ஒப்புக்கொண்டனர். இரவின் தொடக்கம் ஆகஸ்ட் 14 ஆகவும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகஸ்ட் 15 ஆகவும் மாறுவதால் இந்த வரலாற்று முடிவு எட்டப்பட்டது.
<h3>நள்ளிரவு நேரம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி</h3>
ஆகஸ்ட் 14, இரவு 11:00 மணிக்கு புதுடெல்லியிலுள்ள அரசியலமைப்பு மன்றக் கூடத்தில் சிறப்புச் சபை கூடியது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த ஜவஹர்லால் நேரு, வரலாற்றுச் சிறப்புமிக்க "விதியுடன் ஒரு சந்திப்பு" (Tryst with Destiny) என்ற புகழ்பெற்ற உரையை ஆற்றினார். நள்ளிரவு சரியாக 12 மணி அடித்தவுடன் சங்கு முழங்கப்பட்டு, 'வந்தே மாதரம்' பாடலுடன் சுதந்திர இந்தியாவின் பிறப்பு அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
<h3>காந்தியடிகளின் அமைதிப் போராட்டம்</h3>
நாடு முழுவதும் சுதந்திரக் கொண்டாட்டங்கள் உச்சத்திலிருந்த நள்ளிரவில், விடுதலைப் போராட்டத்தின் முதன்மைத் தலைவரான மகாத்மா காந்தி டெல்லியில் இருக்கவில்லை. மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருந்த கொல்கத்தாவின் பெலியாகட்டா பகுதியில் அமைதியை நிலைநாட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். சுதந்திரப் பிரகடன நிகழ்வில் பங்கேற்காமல், வன்முறையைக் கட்டுப்படுத்த இரவு முழுதும் அவர் மக்கள் சேவையில் ஈடுபட்டது பலரும் அறியாத ஒரு செய்தியாகும்.
<h3>தமிழ்நாட்டின் 'செங்கோல்' பாரம்பரியம்</h3>
சுதந்திரப் பகிர்வின் குறியீடாக, திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தங்கச் செங்கோல் லார்ட் மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. சோழர் காலப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, தமிழ்நாட்டின் ஆன்மீகச் சடங்குகளுடன் இந்திய அதிகாரம் கைமாறியது இந்த நள்ளிரவு நிகழ்வின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

<a href="https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-know-about-date-importance-and-history-of-freedom-struggle-in-tamil-97543.html">Also Read: Independence Day 2026: ஆங்கிலேயர்களை வெளியேற்ற வைத்த அந்த ஒரு முடிவு எது தெரியுமா?</a>
<h3>செங்கோட்டையில் ஆகஸ்ட் 16 கொடியேற்றம்</h3>
பலரும் நினைப்பது போல ஆகஸ்ட் 15 நள்ளிரவில் செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றப்படவில்லை. ஆகஸ்ட் 15 அன்று காலை நாடாளுமன்ற வளாகத்திலேயே தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற டெல்லி செங்கோட்டையில் பண்டித ஜவஹர்லால் நேரு முதல்முறையாக ஆகஸ்ட் 16, 1947 அன்று காலையிலேயே மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Independence Day 2026: ஆங்கிலேயர்களை வெளியேற்ற வைத்த அந்த ஒரு முடிவு எது தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-know-about-date-importance-and-history-of-freedom-struggle-in-tamil-97543.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:34:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-know-about-date-importance-and-history-of-freedom-struggle-in-tamil-97543.html</guid>
		            
			

    	<description><![CDATA[Independence Day 2026: பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. காந்தியடிகள், நேதாஜி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வ.உ.சி, பாரதியார் போன்ற பல தியாகிகளின் தியாகத்தால் சாத்தியமான இந்நாளில் தில்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/india.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Independence Day 2026: ஆங்கிலேயர்களை வெளியேற்ற வைத்த அந்த ஒரு முடிவு எது தெரியுமா?" /></figure>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது. 1947 ஆம் ஆண்டு இதே நாளில், சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவிற்கு முழுமையான விடுதலை கிடைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் தில்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்ற பல முன்னணித் தலைவர்கள் வீரியமிக்கப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்ற தியாகிகளும் விடுதலைக் கனவை வளர்த்தெடுக்க முக்கியப் பங்காற்றினர்.

அகிம்சை, ஒத்துழையாமை மற்றும் வெள்ளையனே வெளியேறு போன்ற மக்கள் இயக்கங்கள் ஆங்கிலேயரின் ஆட்சியை வீழ்த்தி நாட்டிற்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன. இந்நாள் நமது நாட்டின் தேசபக்தியை புதுப்பிப்பதோடு, வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாகவும் போற்றப்படுகிறது.
<h3>சுதந்திர தினத் தேதி மற்றும் அறிவிப்பு</h3>
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக உதயமானது. இந்நாளில் தில்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவது வழக்கமாகும்.
<h3>நீண்ட விடுதலைப் போராட்ட வரலாறு</h3>
இந்தியாவின் சுதந்திரம் என்பது எளிதில் கிடைத்த ஒன்று அல்ல; தியாகங்கள் நிறைந்த நீண்ட போராட்டத்தின் முடிவாகும். 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் தொடங்கி, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்ற தலைவர்களின் தீவிரப் போராட்டங்கள் வரை இந்திய விடுதலை இயக்கம் தீவிரமடைந்தது. அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார் போன்ற முன்னோடிகளும் சுதந்திரக் கனவை வளர்த்தெடுத்தனர். அகிம்சை, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற தொடர் மக்கள் போராட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சியை அதிர வைத்தன.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/india/independence-day-2026-flag-code-rules-to-remember-before-hoisting-the-tricolour-97383.html">ஆகஸ்ட் 15ம் தேதி மூவண்ணக்கொடி ஏற்றுவீர்களா? இந்த ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க!</a>
<h3>நாட்டின் சுதந்திர தின முக்கியத்துவம்</h3>
இந்த நாள் வெறும் விடுமுறை தினம் மட்டுமல்ல; உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாகும். நமது நாட்டின் ஜனநாயக மதிப்புகள், அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை நினைவு கூர்வதோடு, ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வலுப்படுத்தும் உன்னத நாளாகவும் இது திகழ்கிறது. அகிம்சை, ஒத்துழையாமை மற்றும் வெள்ளையனே வெளியேறு போன்ற மக்கள் இயக்கங்கள் ஆங்கிலேயரின் ஆட்சியை வீழ்த்தி நாட்டிற்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன. இந்நாள் நமது நாட்டின் தேசபக்தியை புதுப்பிப்பதோடு, வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாகவும் போற்றப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/mumbai-kurla-landslide-gaushiya-chawl-death-toll-updates-97539.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:24:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/mumbai-kurla-landslide-gaushiya-chawl-death-toll-updates-97539.html</guid>
		            
			

    	<description><![CDATA[Mumbai Landslide: மும்பை குரலா அருகே உள்ள காவ்ஷியா சாவ்ல் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். சுமார் 4 முதல் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/land-slide.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!" /></figure><strong>மும்பை, ஆகஸ்ட் 12:</strong> மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை, மாநகரின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. குறிப்பாக, தாழ்வான மற்றும் குன்றுப் பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இந்த மழை மாறியுள்ளது. இந்தச் சூழலில், இன்று புதன்கிழமை (ஆக.12) அதிகாலை மும்பையின் குரலா மேற்குப் பகுதியில் உள்ள சிராக் நகர், காவ்ஷியா சாவ்ல் குடியிருப்பின் மீது மலைப் பகுதி சரிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/india-ev-industry-to-create-more-than-4-crore-jobs-by-2030-know-more-in-details-97187.html">2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை</a></strong>
<h3>சம்பவம் நடந்த விதம்:</h3>
இன்று அதிகாலை சுமார் 3:48 மணியளவில், மும்பையின் சிராக் நகர் பகுதியில் உள்ள காவ்ஷியா சாவ்ல் குடியிருப்பில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழையினால் நனைந்து பலவீனமடைந்திருந்த மலைப்பகுதியின் ஒரு பகுதி, மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் குடியிருப்புகள் மீது திடீரெனச் சரிந்து விழுந்தது. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்தச் சம்பவம் 'நிலை-2' பேரிடராக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
<h3>காயமடைந்தவர்கள் விவரம்:</h3>
இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த இருவர் சகில் அன்சாரி (28), முகமது சமீர் (14) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், காயமடைந்த சோஹேல் அன்சாரி (18) மற்றும் முகமது அன்சாரி (14) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, குரலாவில் உள்ள பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
<h3>தீவிரமடைந்த மீட்புப் பணிகள்:</h3>
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மும்பை தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சுமார் 4 முதல் 6 பேர் வரை இன்னும் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். மும்பை மாநகராட்சி மேயர் ரிது தாவ்டே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-meets-and-hosts-cwg-2026-medal-winner-indian-athletes-in-his-residence-video-here-97096.html">சாதித்த இந்தியர்கள்.. காமன்வெல்த் பதக்கம் வென்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி</a></strong>
<h3>மற்றொரு துயர சம்பவம்:</h3>
நிலச்சரிவு அபாயம் உள்ள இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழைக் காலத்திற்கு முன்பே வீடுகளைக் காலி செய்யும்படி மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர் மழையினால் நேற்று இரவு மும்பையின் வைல் பார்லே பகுதியில் உள்ள 12 மாடி கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்கள் மும்பை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை ..மரபுச் சின்னம் என பிரதமர் மோடி புகழாரம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-modi-releases-ram-nath-kovind-autobiography-recalls-former-presidents-guidance-97544.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:21:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-modi-releases-ram-nath-kovind-autobiography-recalls-former-presidents-guidance-97544.html</guid>
		            
			

    	<description><![CDATA[முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கைப் பயணமும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் முக்கியமானவை என்று பிரதமர் மோடி கூறினார். நான் விரிவாகப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், இந்தப் புத்தக வெளியீடு ஒரு முன்னோட்டமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pm-modi-releases-ram-nath-kovind-autobiography.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை ..மரபுச் சின்னம் என பிரதமர் மோடி புகழாரம்" /></figure>பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையான 'இந்தியக் குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்' என்ற நூலை புதன்கிழமை வெளியிட்டார். புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவரின் போராட்டங்களை விவரித்ததோடு, அவரது புத்தகம் ஜனநாயகத்திற்கு ஒரு மரபுச் சின்னமாக அமையும் என்றும் கூறினார். இளைய தலைமுறையினர் இந்நூலைப் படிக்க வேண்டும் என்றார்.

மேலும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவருடைய வாழ்க்கைப் பயணத்தை அவருடைய சொந்த வார்த்தைகள், எழுத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம் அறிந்து, நாட்டின் புதிய தலைமுறையினர் அவற்றைப் படிக்கட்டும். இதிலிருந்து அனைவரும் நிறைய கற்றுக்கொள்வார்கள். இந்த சுயசரிதைக்காக கோவிந்திற்கு எனது வாழ்த்துகள். நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாகப் போராடினார்கள். மகாத்மா காந்தி, பாபா சாகேப் அம்பேத்கர், ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே என எத்தனையோ மாபெரும் ஆளுமைகள் இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்பக் கனவு கண்டனர். ஏழையிலும் ஏழையான, மிகவும் நலிவடைந்த மக்கள்கூட உச்சத்தை அடைய வாய்ப்புள்ள ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு" என்றார்.

"கோவிந்த் போன்ற தனிநபர்கள், தங்களின் கடின உழைப்பு மற்றும் திறமையின் மூலம், தங்கள் சொந்த வாழ்க்கையை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், பல நூற்றாண்டுகள் பழமையான அந்தக் கனவையும் தொலைநோக்குப் பார்வையையும் நனவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இந்தத் திசையில் எங்களின் முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன," என்று பிரதமர் கூறினார்.
<h3>இந்தப் புத்தகம் ஜனநாயகத்தின் ஒரு மரபுச் சின்னமாக மாறும்: மோடி</h3>
முன்னதாக, புத்தக வெளியீட்டிற்குப் பிறகு பிரதமர் மோடி கூறுகையில், "இன்று ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையை வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு கோவிந்தை நீண்ட காலமாகத் தெரியும், அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. குடியரசுத் தலைவராக அவர் அளித்த வழிகாட்டுதலும், என் மீது அவர் காட்டிய சிறப்புப் பாசமும் அன்பும் எனக்குப் பெரும் சொத்தாக அமைந்துள்ளன. அவரது வாழ்க்கையையும் சாதனைகளையும் நான் புரிந்துகொண்ட நிலையில், கோவிந்தின் சுயசரிதை இந்திய ஜனநாயகத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் ஒரு பொக்கிஷமாக அமையும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்," என்றார்

முன்னதாக, நேற்று பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த சுயசரிதையின் வெளியீடு, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட பொதுத்துறை ஆளுமைகளில் ஒருவரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பை நினைவுகூரும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என்று கூறப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதியின் சுயசரிதையானது, அவரது இளமைக் காலம் முதல் புகழ்பெற்ற பொது வாழ்க்கை, பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக அவர் ஆற்றிய சேவை வரை, அவரது அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை உள்ளடக்கி, அவரது புகழ்பெற்ற வாழ்க்கைப் பயணத்தின் ஒரு ஆழமான தனிப்பட்ட விவரத்தை வழங்குகிறது.

கோவிந்தின் வாழ்க்கைப் பயணத்தையும் பொதுச் சேவையையும் , அனுபவங்கள் மற்றும் சூழ்நிலைகளை இந்நூல் ஆராய்கிறது.
<h3>வீடியோ</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Speaking at the release of 'Triumph of the Indian Republic: My Life, My Struggles,' the autobiography of former President Shri Ram Nath Kovind Ji. His journey reflects a life dedicated to public service and the progress of our nation.<a href="https://x.com/ramnathkovind?ref_src=twsrc%5Etfw">@ramnathkovind</a>
<a href="https://t.co/SCsPxznLG7">https://t.co/SCsPxznLG7</a></p>
— Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2087394225193398783?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>குளத்துக்குள் வாழும் 16 வயது சிறுவன்.. அரிய வகை பிரச்னையால் 5 ஆண்டுகளாக அவதி.. சோக கதை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/16-years-old-boy-spends-his-most-of-the-time-in-pond-in-west-bengal-97490.html</link>	
		<pubDate>Tue, 11 Aug 2026 20:49:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/16-years-old-boy-spends-his-most-of-the-time-in-pond-in-west-bengal-97490.html</guid>
		            
			

    	<description><![CDATA[16 Years Old Boy Spends His All The Time In Pond | மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் பெரும்பாலான நேரத்தை தண்ணீருக்குள் செலவிடுகிறார். தண்ணீரில் இரூந்து வெளியேறினால் தோல் எரிச்சல் ஏற்படுவதன் காரணமாக அவர் இவ்வாறு தண்ணீருக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/boy-in-pond.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="குளத்துக்குள் வாழும் 16 வயது சிறுவன்.. அரிய வகை பிரச்னையால் 5 ஆண்டுகளாக அவதி.. சோக கதை!" /></figure><strong>முர்ஷிதாபாத், ஆகஸ்ட் 11 :</strong> மேற்கு வங்கத்தில் <strong>(West Bengal)</strong> தண்ணீரை விட்டு வெளியே வர முடியால் குளத்துக்குள்ளேயே நாட்களை கழிக்கும் 16 வயது சிறுவனின் நிலை அந்த கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த சிக்கலை எதிர்க்கொண்டு வரும் நிலையில், அரசு விரைந்து சிறுவனுக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தண்ணீரை விட்டு வெளியேறினால் தாங்க முடியாத எரிச்சல் - சிறுவன் அவதி</h3>
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியை சேர்ந்தவர் இக்பால் ஷேக் என்ற சிறுவன். இவர் சுமார் 5 ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரத்தை தண்ணீரில் கழித்து வருகிறார். தண்ணீரை விட்டு வெளியேறும்போது உடலில் தாங்க முடியாத எரிச்சல் உண்டாவதாகவும், தண்ணீருக்குள் இருக்கும்போது சற்று குளிர்ச்சியாக உணர்வகாதவும் அந்த சிறுவன் கூறுகிறார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/a-young-man-died-after-accidentally-falling-from-a-moving-train-near-the-panoli-railway-stationin-gujarat-attempting-to-snatch-a-mobile-phone-from-a-passenger-97248.html">ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு முயற்சி! இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்</a>
<h3>தண்ணீருக்குள் இருந்து சித்ரவதை அனுபவிக்கும் சிறுவன்</h3>
இவ்வாறு தொடர்ந்து தண்ணீருக்குள்ளே இருப்பதன் காரணமாக அந்த சிறுவன் தனது இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத சூழல் உள்ளது. அடிக்கடி உடலில் எரிச்சல் ஏற்படுவதன் காரணமாக அந்த சிறுவன் 4 முதல் 7 நாட்கள் வரை அந்த குளத்திற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. அந்த சிறுவன் சாப்பிடுவது, தூங்குவது என அனைத்தையும் குளத்திற்குள்ளேயே மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/india/india-ev-industry-to-create-more-than-4-crore-jobs-by-2030-know-more-in-details-97187.html"> 2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை</a>

தொடர்ந்து தண்ணீருக்குள்ளேயே இருப்பதன் காரணமாக இக்பாலின் கை, கால்களில் இருக்கும் தோல் வெளுத்து காணப்படுகிறது. இதுதவிர தண்ணீருக்குள்ளேயே இருப்பதன் விளைவாக சிறுவனுக்கு அடிக்கடி சளி, இருமல் உள்ளிட்ட உடல்நல சிக்கல்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இக்பாலின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதன் காரணமாக அவர்களால் அதிக பணம் செலவு செய்து அவருக்கு மருத்துவம் பார்க்க முடியாது. எனவே அரசு அதிகாரிகள் முன்வந்து சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை பெற உதவி செய்ய வேண்டும் என அந்த கிராம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுவன் குளத்தில் இருக்கும் நேரத்தில் குளத்திற்கு செல்லும் பொதுமக்கள் அவருக்கு உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தெருக்கள், சாலைகளுக்கு சாதி பெயர்கள்.. தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-high-court-has-filed-a-petition-suo-moto-for-removal-of-caste-name-from-streets-and-roads-97458.html</link>	
		<pubDate>Tue, 11 Aug 2026 18:13:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-high-court-has-filed-a-petition-suo-moto-for-removal-of-caste-name-from-streets-and-roads-97458.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்தத் தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கை எந்த நீதிபதி அல்லது அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை தலைமை நீதிபதி சீஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/road-name-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தெருக்கள், சாலைகளுக்கு சாதி பெயர்கள்.. தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம்.." /></figure><strong>ஆகஸ்ட் 11, 2026:</strong> தமிழ்நாட்டில் தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ஒரு ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்தினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், "பள்ளர் தெரு" எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை நீதிபதி ரமேஷ் கவனித்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு பெயரிடும்போது சாதியைக் குறிக்கும் பெயர்களைத் தவிர்க்க வேண்டும் என 1978ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அரசாணைகளும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது வரை "பள்ளர் தெரு" போன்ற பெயர்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து நீதிபதி வேதனை தெரிவித்தார்.
<h3>சாதிகளின் அடிப்படியில் இருக்கும் தெருக்களின் பெயர்:</h3>
மேலும், ஒரு தெரு அல்லது சாலைக்கு ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சூட்டுவதால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படுகின்றன என நீதிபதி குறிப்பிட்டார். இதுபோன்ற பெயர்களால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவர்களின் சாதியின் அடிப்படையில் அடையாளம் காணப்படும் நிலை ஏற்படுகிறது என்றும், அந்தப் பெயர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரத சக்கரவர்த்தி சமீபத்தில் உத்தரவிட்டிருந்ததையும் நீதிபதி ரமேஷ் சுட்டிக்காட்டினார்.
<h3>தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த நீதிபதி:</h3>
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயர் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளையும் குறிப்பிட்ட நீதிபதி, தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் முழுமையாக நீக்கப்படாவிட்டால், இதுபோன்ற முயற்சிகள் முழுமையடையாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ஜாமீன் மனுவை பரிசீலித்த பின்னர், தெருக்கள் மற்றும் சாலைகளில் இருந்து சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக நீதிபதி ரமேஷ் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-corporations-holds-meeting-with-internet-providers-about-free-wifi-at-public-places-96716.html">வளர்ப்பு நாய்களைத் தெருவில் விடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..</a>

இந்தத் தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கை எந்த நீதிபதி அல்லது அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை தலைமை நீதிபதி சீஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், தமிழகத்தில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை முழுமையாக நீக்குவதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆகஸ்ட் 15ம் தேதி மூவண்ணக்கொடி ஏற்றுவீர்களா? இந்த ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/independence-day-2026-flag-code-rules-to-remember-before-hoisting-the-tricolour-97383.html</link>	
		<pubDate>Tue, 11 Aug 2026 13:45:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/independence-day-2026-flag-code-rules-to-remember-before-hoisting-the-tricolour-97383.html</guid>
		            
			

    	<description><![CDATA[Independence Day 2026 : சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவது, ஒவ்வொரு இந்தியரும் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஒரு பெருமைக்குரிய தருணமாகும். இருப்பினும், மூவர்ணக் கொடி ஒரு சாதாரண அலங்காரப் பொருள் அல்ல. அதற்கு அரசியலமைப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஒரு சிறப்பு மரியாதை உண்டு.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/independence-day-2026.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆகஸ்ட் 15ம் தேதி மூவண்ணக்கொடி ஏற்றுவீர்களா? இந்த ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க!" /></figure>இந்திய தேசியக் கொடியின் பயன்பாடும் காட்சிப்படுத்துதலும் முக்கியமாக இந்தியக் கொடிச் சட்டம், 2002 மற்றும் தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. 2021 மற்றும் 2022-ல் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, சாமானிய மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான சில விதிகள் எளிதாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தேசியக் கொடியைப் பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுதந்திரத்துடன் பொறுப்பும் வருகிறது. எனவே, 'ஹர் கர் திரிவர்ணா' திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொடியை ஏற்றுவதற்கு முன்பு ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகள் இவை.

<strong>காவி நிறம் மேலே இருக்க வேண்டும்:</strong> மூவர்ணக் கொடியில் மேலே காவி நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், கீழே பச்சை நிறமும் இருக்க வேண்டும். நடுவில் அடர் நீல நிறத்தில் அசோகச் சக்கரம் உள்ளது. கொடியை செங்குத்தாக ஏற்றும்போது கூட, கொடிக்கு எதிரே நிற்கும் நபரின் வலது பக்கத்தில் காவி நிறம் இருக்க வேண்டும். வேண்டுமென்றே கொடியைத் தலைகீழாக ஏற்றுவது தேசியக் கொடியை அவமதிப்பதாகக் கருதப்படுகிறது.

<strong>3:2 விகிதம் கட்டாயமாகும்:</strong> தேசியக் கொடியானது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதன் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் 3:2 ஆக இருக்க வேண்டும். வீட்டின் அளவைப் பொறுத்து கொடியின் அளவு மாறுபடலாம், ஆனால் விகிதம் மாறக்கூடாது. எனவே, குடும்பங்கள் தங்களுக்குக் கிடைக்கும் இடத்திற்குப் பொருத்தமான அளவைத் தேர்ந்தெடுக்கலாம்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/videos/80th-independence-day-coimbatore-flag-manufacturing-international-orders-96960.html" target="_blank" rel="noopener">இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்.. அசத்தும் கோவையின் தேசியக் கொடி தயாரிப்பு மையம்</a>

<strong>மூவர்ணக் கொடிக்கு எப்போதும் ஒரு கௌரவமான இடம் அளிக்கப்பட வேண்டும்:</strong> தேசியக் கொடி ஏற்றப்படும் இடமெல்லாம், அது தெளிவாகத் தெரியும் மற்றும் கௌரவமான இடத்தில் ஏற்றப்பட வேண்டும். அதன் மேலே வேறு எந்தக் கொடியோ, வளைவோ அல்லது அலங்காரமோ இருக்கக்கூடாது. மூவர்ணக் கொடியின் கௌரவத்தைக் குறைக்கும் வகையில் மற்றப் பொருட்களை அமைப்பது பொருத்தமற்றது. மூவர்ணக் கொடியுடன் ஒரே கொடிக்கம்பத்தில் வேறு எந்தக் கொடியும் ஏற்றப்படக்கூடாது. தேசியக் கொடிக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

<strong>கிழிந்த கொடியைப் பறக்கவிடாதீர்கள்:</strong> கிழிந்த, சேதமடைந்த, நிறம் மங்கிய அல்லது எந்த வகையிலாவது சேதமடைந்த கொடியைக் காட்சிப்படுத்தக் கூடாது. தேசியக் கொடியானது கண்ணியமான நிலையில் பேணப்பட வேண்டும்.

<strong>கொடிக்கு மரியாதை:</strong> மூவர்ணக் கொடி தரையையோ தண்ணீரையோ தொடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொண்டாட்டங்களுக்குப் பிறகு, கீழே விழுந்த கொடிகளைச் சாலைகள், கால்வாய்கள் அல்லது பிற பொது இடங்களில் கவனக்குறைவாக விட்டுச் செல்வதும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதாகும்.

<strong>கொடியில் பெயர்களையோ முழக்கங்களையோ எழுத வேண்டாம்:</strong> தேசபக்திச் செய்திகள், பெயர்கள், அரசியல் முழக்கங்கள், விளம்பரங்கள் அல்லது பிற எழுத்துக்களை தேசியக் கொடியில் அச்சிடவோ எழுதவோ கூடாது. மூவர்ணக் கொடியானது எந்தவொரு நபர், அமைப்பு அல்லது பிரச்சாரத்தின் அடையாளச் சின்னம் அல்ல.

<strong>ஆடை மற்றும் அலங்காரமாகப் பயன்படுத்துவதற்கான தடை:</strong> திரைச்சீலைகள், மேசை விரிப்புகள், தலையணைகள், கைத்துண்டுகள் போன்ற பொருட்களில் மூவர்ணக் கொடியை அலங்காரமாகப் பயன்படுத்தக் கூடாது. இடுப்புக்குக் கீழே அணியப்படும் ஆடைகள் அல்லது பிற பொருத்தமற்ற பொருட்களில் தேசியக் கொடியை அச்சிடுவது அல்லது எம்ப்ராய்டரி செய்வதும் விதிமுறைகளுக்கு எதிரானது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>1917- இல் பிரிட்டிஷ் அரசுக்கு ரூ.35 ஆயிரம் கடன் கொடுத்த இந்தியர்.. இங்கிலாந்து கடன் அலுவலகம் தெரிவித்த பதில்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/uk-debt-office-responded-to-family-from-madhya-pradesh-who-lent-rs-35000-to-british-government-in-1917-97322.html</link>	
		<pubDate>Tue, 11 Aug 2026 10:40:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/uk-debt-office-responded-to-family-from-madhya-pradesh-who-lent-rs-35000-to-british-government-in-1917-97322.html</guid>
		            
			

    	<description><![CDATA[Indian Lent Money To British Government: 1917- இல் முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் அரசுக்கு ரூ. 35 ஆயிரம் கடன் அளித்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நபரின் குடும்பத்தினருக்கு இங்கிலாந்து நாட்டின் கடன் அலுவலகம் பதில் அளித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/mp.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="1917- இல் பிரிட்டிஷ் அரசுக்கு ரூ.35 ஆயிரம் கடன் கொடுத்த இந்தியர்.. இங்கிலாந்து கடன் அலுவலகம் தெரிவித்த பதில்!" /></figure>மத்திய பிரதேச மாநிலம், செஹோரை சேர்ந்தவர் விவேக் ருத்தியா ( 63 வயது). இவரது, மூதாதையர் ஒருவர் முதலாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ரூ.35 ஆயிரம் கடன் வழங்கியிருந்தாராம். இது தொடர்பாக விவேக் ருத்தியா, தனது மூதாதையரிடமிருந்து பெற்ற கடன் எப்போதாவது திருப்பி செலுத்தப்பட்டதா என்பதை அறிந்து கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் பிரிட்டிஷ் அதிகாரிகளை அணுகினர். இதில், அவரது வழக்கறிஞருக்கு அண்மையில் டிஎம்ஓ- இடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அசல் போர்க்கடன் சான்றிதழ் மற்றும் அது தொடர்பான கடித பரிமாற்றங்களின் நகல் கோரப்பட்டு இருந்தது. இந்த குடும்பமானது தற்போது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அனுப்புவதற்காக தேவையான ஆவணங்களையும், மற்ற காப்பாக பதிவுகளையும் தயார் செய்து வருகிறது.
<h3>1917 ஜூன் 4- ஆம் தேதியிட்ட சான்றிதழ்</h3>
அந்த பணத்திற்கு என்ன ஆனது என்பதை இறுதியாக கண்டறிய வரலாற்று பதிவுகள் உதவ கூடும் என்ற நம்பிக்கையை இந்த பதில் தங்களுக்கு அளித்துள்ளதாக விவேக் ருத்தியா தெரிவித்துள்ளார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த கட்டத்தில் ஒரு பதில் வரும் என்று நான் எப்போதும் கற்பனை செய்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 1917 ஜூன் 4- ஆம் தேதியிடப்பட்ட ஒரு சான்றிதழ் உள்ளது. இது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ருத்தியா குடும்பத்தின் வசம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/india-ev-industry-to-create-more-than-4-crore-jobs-by-2030-know-more-in-details-97187.html" target="_blank" rel="noopener">2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை</a>
<h3>முதலாம் உலகப் போரின் போது ரூ.35 ஆயிரம் கடன்</h3>
அந்த சான்றிதழில் போபால் மாநிலத்தில் உள்ள சேத் ராம கிஷன் ஜஸ்கரன் ருத்தியா என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய சேத் ஜும்மா லால் ருத்தியா, முதலாம் உலகப் போரின் போது, இந்திய போர் கடனுக்காக ரூ.35 ஆயிரம் செலுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேத் ராம கிஷன் ஜஸ்கரன் ருத்தியா என்பவரின் நிறுவனத்திடம் இருந்து சேத் ஜும்மா லால், இந்திய போர் கடனுக்காக ரூ.35 ஆயிரம் சந்தா செலுத்தி, அதன்மூலம் அரசுக்கும், பேரரசிற்கும் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்று அப்போதைய கோபாலின் அரசியல் முகவரான டபிள்யூ. எஸ். டேவிஸ் கையெழுத்திட்ட அந்த ஆவணம் குறிப்பிட்டது.
<h3>கடன் ஒருபோதும் திருப்பி செலுத்தப்படவில்லை</h3>
அந்த தொகை ஒருபோதும் திருப்பி செலுத்தப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். சேத் ஜும்மா லால் ருத்தியா 1937 இல் உயிரிழந்து விட்டார். ஆனால், 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ அந்த பணம் திருப்பித் தரப்பட்டதற்கோ அல்லது செலுத்தப்பட்டதுக்கோ எந்த பதிவுகளையும் கண்டுபிடிக்க வில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/parliament-clears-taxation-bill-fm-sitharaman-says-upi-will-remain-free-no-framework-on-mdr-yet-97260.html" target="_blank" rel="noopener">UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/parliament-clears-taxation-bill-fm-sitharaman-says-upi-will-remain-free-no-framework-on-mdr-yet-97260.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 21:05:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/parliament-clears-taxation-bill-fm-sitharaman-says-upi-will-remain-free-no-framework-on-mdr-yet-97260.html</guid>
		            
			

    	<description><![CDATA[நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், NPCI தலைமையிலான யுபிஐ and Services Steering Committee, எம்.டி.ஆர் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கும். அவ்வாறு அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டால், அதன் அளவு மற்றும் நடைமுறைகள் குறித்து இந்தக் குழு தீர்மானிக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/upi-ns.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.." /></figure><strong>ஆகஸ்ட் 10, 2026:</strong> யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் பொதுமக்களிடம் தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், எதிர்காலத்திலும் யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடரும் என நம்புவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் எனப்படும் எம்.டி.ஆர் கட்டணம் விதிக்க சட்டப்பூர்வ வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
<h3>விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்:</h3>
இதுகுறித்து விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், "யுபிஐ கட்டணத்தை நுகர்வோர் செலுத்துவார்களா? இல்லை. யுபிஐ தொடங்கப்பட்ட காலத்திலிருந்து நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் எந்தப் பரிவர்த்தனை கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Payment and Settlement Systems Act-ன் 10A பிரிவில் மாற்றங்களைச் செய்வதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், எந்தெந்த மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகள் அல்லது பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கக் கூடாது என்பதை அரசு அறிவிப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.

எனினும், இந்தத் திருத்தம் யுபிஐ பயனாளர்களுக்கு நேரடியாக புதிய வரியையோ பரிவர்த்தனைக் கட்டணத்தையோ விதிக்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள Zero-எம்.டி.ஆர் முறையின்படி, UPI மற்றும் RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்க முடியாது.
<h3>உடனடியாக எம்.டி.ஆர்கட்டணம் விதிக்கப்படாது:</h3>
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், NPCI தலைமையிலான யுபிஐ and Services Steering Committee, எம்.டி.ஆர் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கும். அவ்வாறு அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டால், அதன் அளவு மற்றும் நடைமுறைகள் குறித்து இந்தக் குழு தீர்மானிக்கும்.

இதனால், மசோதா நிறைவேறியதாலேயே யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு உடனடியாக எம்.டி.ஆர் கட்டணம் விதிக்கப்படாது. தற்போது யுபிஐ பரிவர்த்தனைகள் பொதுமக்களுக்கு இலவசமாகவே தொடர்கின்றன.

மேலும், இந்த மசோதா டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மட்டுமின்றி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, உள்நாட்டு மின்னணு உற்பத்தியை ஊக்குவிப்பது, வெளிநாட்டு கிளவுட் சேவை நிறுவனங்கள் இந்திய தரவு மையங்களைப் பயன்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வரி மற்றும் முதலீட்டு தொடர்பான மாற்றங்களையும் முன்மொழிகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு முயற்சி! இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/a-young-man-died-after-accidentally-falling-from-a-moving-train-near-the-panoli-railway-stationin-gujarat-attempting-to-snatch-a-mobile-phone-from-a-passenger-97248.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 20:02:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[வைரல் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/a-young-man-died-after-accidentally-falling-from-a-moving-train-near-the-panoli-railway-stationin-gujarat-attempting-to-snatch-a-mobile-phone-from-a-passenger-97248.html</guid>
		            
			

    	<description><![CDATA[பொதுப் பெட்டியின் கதவு அருகே அசோக் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் பனோலி ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அங்குள்ள நடைமேடையில் பெஞ்சில் படுத்திருந்த ஒருவர் திடீரென எழுந்து, ஓடும் ரயிலை நோக்கி ஓடியுள்ளார். பின்னர், கதவு அருகே அமர்ந்திருந்த அசோக்கிடம் இருந்து செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/viral-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு முயற்சி! இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.." /></figure><strong>ஆகஸ்ட் 10, 2026:</strong> குஜராத் மாநிலம் அங்க்லேஷ்வர் அருகே உள்ள பனோலி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் பயணியிடம் செல்போனைப் பறிக்க முயன்ற சம்பவத்தில், இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த 32 வயதான அசோக் குர்ஜர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பத்தைப் பராமரிப்பதற்காக ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர், சவாய் மாதோபூரில் இருந்து சூரத் நோக்கி ஜெய்ப்பூர்–பாந்த்ரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (12980) பயணம் செய்துள்ளார்.
<h3>ரயில் பயணியிடம் செல்போன் பறிக்க முயற்சி:</h3>
அப்போது, பொதுப் பெட்டியின் கதவு அருகே அசோக் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் பனோலி ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அங்குள்ள நடைமேடையில் பெஞ்சில் படுத்திருந்த ஒருவர் திடீரென எழுந்து, ஓடும் ரயிலை நோக்கி ஓடியுள்ளார். பின்னர், கதவு அருகே அமர்ந்திருந்த அசோக்கிடம் இருந்து செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.
<h3>பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Passenger Dies After Mobile Snatching at Panoli Station: CCTV Shows Everything Yet RPF Failed to Act</p>
Poor Autorickshaw driver Ashok Gurjar 32 died after a platform snatcher grabbed his phone at Panoli station.

He fell from the moving train and was dragged 100 metres.

CCTV… <a href="https://t.co/UprAsz1ipx">pic.twitter.com/UprAsz1ipx</a>

— Ramesh Tiwari (@rameshofficial0) <a href="https://x.com/rameshofficial0/status/2086503689104376279?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
எதிர்பாராத விதமாக செல்போன் பறிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அசோக், நிலைதடுமாறியுள்ளார். ரயிலில் இருந்து கீழே விழாமல் இருக்க சில நேரம் பெட்டியைப் பிடித்தபடி தொங்கியதாகவும், பின்னர் பிடி நழுவி நடைமேடையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/india-ev-industry-to-create-more-than-4-crore-jobs-by-2030-know-more-in-details-97187.html">2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை</a>

இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிசிடிவி காட்சிகளில், ரயில் பனோலி நிலையத்தை கடந்து செல்லும்போது ஒருவர் ஓடும் ரயிலை நோக்கி ஓடி வந்து, பயணியிடம் இருந்து செல்போனைப் பறித்துச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
<h3>சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர்:</h3>
ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் அசோக்கிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், செல்போனைப் பறித்ததாகக் கூறப்படும் நபரை அடையாளம் காணும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்ததற்கான சரியான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/india-ev-industry-to-create-more-than-4-crore-jobs-by-2030-know-more-in-details-97187.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 17:21:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/india-ev-industry-to-create-more-than-4-crore-jobs-by-2030-know-more-in-details-97187.html</guid>
		            
			

    	<description><![CDATA[மின்சார வாகனத் துறையில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர்களுக்கு பாரம்பரிய எரிபொருள் வாகனத் துறை பணியாளர்களைவிட 45 சதவீதம் வரை கூடுதல் ஊதியம் கிடைக்கக்கூடும் என Adecco India தெரிவித்துள்ளது. பேட்டரி, மின்சக்தி மின்னணுவியல், மென்பொருள், சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் இணைக்கப்பட்ட வாகனத் தொழில்நுட்பங்களில் திறமையான பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ev-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை" /></figure><strong>ஆகஸ்ட் 10, 2026:</strong> இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தத் துறை வாகனங்களை இயக்குவது மட்டுமின்றி, அவற்றை தயாரித்தல், சார்ஜிங் மையங்களை நிர்வகித்தல், பராமரித்தல், மென்பொருள் சேவைகள் மற்றும் பேட்டரி மறுசுழற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<h3>மின்சார வாகனத்தால் 4 கோடி வேலைவாய்ப்புகள்:</h3>
Adecco India நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவின் மின்சார வாகனத் துறை 2030ஆம் ஆண்டுக்குள் 3 கோடி முதல் 4 கோடி வரையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இதில் வியக்கத்தக்க வகையில், பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பாரம்பரிய வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி உற்பத்தி, மின்சார வாகன சார்ஜிங் கட்டமைப்பு, வாகனப் படை (Fleet) நிர்வாகம், மென்பொருள், வாகனப் பராமரிப்பு மற்றும் பேட்டரி மறுசுழற்சி உள்ளிட்ட துறைகள் எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சிறப்பு திறன்கள் கொண்ட பணியாளர்களுக்கான தேவை சுமார் 35 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/fake-rs-10-rs-20-notes-to-flood-indian-markets-intelligence-agencies-warn-of-new-isi-backed-counterfeit-strategy-on-low-value-notes-96737.html">கள்ளநோட்டு புழக்கத்தில் புதிய யுக்தி? குறைந்த மதிப்பு நோட்டுகளை குறிவைக்கும் கும்பல்கள்!</a>
<h3>55 சதவீத வேலைவாய்ப்பு உற்பத்தித் துறையில் உருவாகும்:</h3>
மொத்தம் உருவாகும் வேலைவாய்ப்புகளில் வெறும் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே நேரடி வேலைவாய்ப்புகளாக இருக்கும். மீதமுள்ள 85 முதல் 90 சதவீதம் மறைமுக வேலைவாய்ப்புகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி பராமரிப்பு, வாகனப் படை நிர்வாகம், மென்பொருள், வாகன சேவை, ஓட்டுநர் பயிற்சி, தளவாடம் மற்றும் பேட்டரி மறுசுழற்சி உள்ளிட்ட பணிகளுக்கான தேவை அதிகரிக்கும்.

மொத்த வேலைவாய்ப்புகளில் 50 முதல் 55 சதவீதம் உற்பத்தித் துறையில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பேட்டரி உற்பத்தி, மின்சார வாகன உள்கட்டமைப்பு மற்றும் மறுசுழற்சி பொருளாதாரம் ஆகியவை வேகமாக வளரக்கூடிய துறைகளாக உள்ளன.
<h3> இந்த ஆண்டு 12.6 லட்சம் மின்சார வாகனங்கள் தயாரிப்பு:</h3>
இந்தியாவில் மின்சார வாகனப் பயன்பாடும் வேகமாக அதிகரித்து வருகிறது. அரசின் PM E-DRIVE தரவின்படி, 2025-26ஆம் நிதியாண்டில் ஜூலை 2026 வரை 12.6 லட்சத்துக்கும் அதிகமான மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-meets-and-hosts-cwg-2026-medal-winner-indian-athletes-in-his-residence-video-here-97096.html">சாதித்த இந்தியர்கள்.. காமன்வெல்த் பதக்கம் வென்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி</a>

மின்சார வாகனத் துறையில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர்களுக்கு பாரம்பரிய எரிபொருள் வாகனத் துறை பணியாளர்களைவிட 45 சதவீதம் வரை கூடுதல் ஊதியம் கிடைக்கக்கூடும் என Adecco India தெரிவித்துள்ளது. பேட்டரி, மின்சக்தி மின்னணுவியல், மென்பொருள், சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் இணைக்கப்பட்ட வாகனத் தொழில்நுட்பங்களில் திறமையான பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

மேலும், புதிய வேலைவாய்ப்புகளில் 40 முதல் 50 சதவீதம் ஆரம்பகட்டத்தில் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியிடங்களாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இவை நிரந்தரப் பணிகளாக மாற வாய்ப்புள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பசுமை வேலைவாய்ப்புகளில் சுமார் 60 சதவீதம் மின்சார வாகனச் சூழலுடன் தொடர்புடையதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சுவாமி பத்ரேஷ்தாஸ்க்கு சிறப்பான கெளரவம்..  &#8216;வேதாந்த வித்யா விஸ்வகுரு&#8217;  விருது</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/central-sanskrit-university-has-conferred-a-distinguished-honour-on-baps-scholar-swami-bhadreshdas-97100.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 12:09:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/central-sanskrit-university-has-conferred-a-distinguished-honour-on-baps-scholar-swami-bhadreshdas-97100.html</guid>
		            
			

    	<description><![CDATA[டெல்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாமில் 2026 ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்ற விழாவில், டெல்லியின் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம்  , BAPS அமைப்பைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞரும் தத்துவஞானியுமான மஹாமஹோபாத்யாய சுவாமி பத்ரேஷ்தாஸ் அவர்களுக்கு 'வேதாந்தவித்யா-விஸ்வகுரு' (Vedantavidya-Vishwaguru) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/sanskrit-and-vedanta.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சுவாமி பத்ரேஷ்தாஸ்க்கு சிறப்பான கெளரவம்..  &#8216;வேதாந்த வித்யா விஸ்வகுரு&#8217;  விருது" /></figure>BAPS-ஐச் சேர்ந்த புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும் தத்துவஞானியுமான மகாமகோபாத்யாய சுவாமி பத்ரேஷ்தாஸுக்கு மதிப்புமிக்க கௌரவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. புது தில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம், அவருக்கு 'வேதாந்த வித்யா-விஸ்வகுரு' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்சர்தாமில் நடைபெற்ற ஒரு விழாவில் அவருக்கு இந்தக் கௌரவம் வழங்கப்பட்டது. வேதாந்தம், சமஸ்கிருத இலக்கியம் மற்றும் இந்திய அறிவு மரபுகள் ஆகியவற்றின் ஆய்வு, ஆராய்ச்சி மற்றும் பரவலான பரவலுக்கு சுவாமி பத்ரேஷ்தாஸ் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பைப் பாராட்டி இந்தக் கௌரவம் வழங்கப்பட்டதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
<h3>பிரஸ்தானத்ரயி பற்றிய சமஸ்கிருதத்தில் வர்ணனைகள்</h3>
வேதாந்தத்தின் மூன்று முக்கிய நூல்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் மற்றும் பகவத் கீதை ஆகியவை கூட்டாக பிரஸ்தானத்ரயி என்று அழைக்கப்படுகின்றன. சுவாமி பத்ரேஷ்தாசர் இந்த மூன்று நூல்களுக்கும் செவ்வியல் சமஸ்கிருத உரைகளை எழுதினார்.

பிரமுக் சுவாமி மஹாராஜின் உத்வேகத்தால் உருவான இந்தப் படைப்புகள், பிரஸ்தானத்ரயியின் மூன்று செம்மையான நூல்களுக்கான விரிவான சமஸ்கிருத உரைகளாகும் என்று அந்தப் பத்திரிகைச் செய்தி தெரிவித்தது. மஹந்த் சுவாமி மஹாராஜின் வழிகாட்டுதலின் கீழ், சுவாமி பத்ரேஷ்தாஸ் சமஸ்கிருதம், வேதாந்தம் மற்றும் இந்திய அறிவு மரபுகளின் ஆய்வை சர்வதேச அளவில் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அது கூறியது.
<h3>பிரமுகர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டார்</h3>
பல முக்கிய ஆன்மீகத் தலைவர்களும் சமஸ்கிருத அறிஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். உடுப்பியில் உள்ள பேஜாவர அதோக்ஷஜ மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிஜி, மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சீனிவாச வர்க்கேடி, ஸ்ரீ சோமநாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுகந்த குமார் சேனாபதி மற்றும் பலர் பங்கேற்றனர். மேலும், பேராசிரியர் வி. நாராயணன், பேராசிரியர் ஓம்நாத் பிம்லி, பேராசிரியர் முரளிகிருஷ்ணா, பேராசிரியர் கணேஷ் டி. பண்டிட் மற்றும் பிற முக்கிய அறிஞர்களும் கலந்துகொண்டனர்.
<h3>அக்ஷர-புருஷோத்தம தர்ஷன் மீதான பணிக்கான பாராட்டு</h3>
பல புகழ்பெற்ற ஆளுமைகள் சுவாமி பத்ரேஷ்தாஸின் புலமையைப் பாராட்டியுள்ளனர். சமஸ்கிருத பிரஸ்தானத்ரயி மரபில் அக்ஷர-புருஷோத்தம தரிசனத்தை அறிவியல் பூர்வமாக வகுத்ததில் அவரது பங்களிப்பை, மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சீனிவாச வர்க்கி குறிப்பிட்டார்.

சுவாமி பத்ரேஷ்தாஸின் அறிவியல் பயணத்தில், பிரமுக் சுவாமி மஹாராஜின் ஆசீர்வாதங்களும் வழிகாட்டுதலும், அத்துடன் மஹந்த் சுவாமி மஹாராஜ் வழங்கிய வழிகாட்டுதலும் முக்கியப் பங்கு வகித்தன என்று பேராசிரியர் சுகந்த குமார் சேனாபதி குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் வி. நாராயணன் அதிகாரப்பூர்வ பாராட்டுரையை வாசித்தபோது, ​​பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
<h3>ஆசிரியர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது</h3>
வேதாந்த வித்யா-விஸ்வகுரு என்ற பெருமையைப் பெற்ற சுவாமி பத்ரேஷ்தாஸ், இந்த கௌரவத்தை பகவான் சுவாமிநாராயண், அவரது குருக்களான பிரமுக் சுவாமி மகராஜ் மற்றும் மஹந்த் சுவாமி மகாராஜ் பாத பத்மலா ஆகியோருக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார்.

வேதாந்தம், சமஸ்கிருதம் மற்றும் இந்திய அறிவு மரபுகள் ஆகியவற்றின் ஆய்வுக்கு சுவாமி பத்ரேஷ்தாஸ் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தக் கௌரவம் வழங்கப்படுகிறது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சாதித்த இந்தியர்கள்.. காமன்வெல்த் பதக்கம் வென்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-meets-and-hosts-cwg-2026-medal-winner-indian-athletes-in-his-residence-video-here-97096.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 11:43:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-meets-and-hosts-cwg-2026-medal-winner-indian-athletes-in-his-residence-video-here-97096.html</guid>
		            
			

    	<description><![CDATA[டோக்கியோ ஒலிம்பிக்காக இருந்தாலும் சரி, கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிகளாக இருந்தாலும் சரி, நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தனது இல்லத்திற்கு அழைத்து வரவேற்றுள்ளார். அந்த வகையில் காமன்வெல்த் வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்தார்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pm-modi-meets-medal-winner-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சாதித்த இந்தியர்கள்.. காமன்வெல்த் பதக்கம் வென்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி" /></figure>இந்தியாவுக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026-ன் பயணம் அற்புதமாக அமைந்தது. பல முக்கிய விளையாட்டுகள் இல்லாதபோதிலும், இந்திய வீரர்கள் கிளாஸ்கோவில் தங்கள் பலத்தை வெளிப்படுத்தி, 39 பதக்கங்களுடன் அனைத்து நாடுகளிலும் நான்காவது இடத்தைப் பிடித்தனர். பதக்கம் வென்றவர்கள் வெவ்வேறு நேரங்களில் நாட்டிற்கு வரவேற்கப்பட்டனர். ஆனால், அனைத்துப் பதக்கம் வென்றவர்களுக்கும் மிகவும் சிறப்பான வரவேற்பு லோக் கல்யாண் மார்க்கில் நடைபெற்றது. அங்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உபசரித்தார்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, 7 எல்.கே.எம்-ல் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் வரவேற்கப்பட்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது, ​​பிரதமர் மோடி அனைத்து வெற்றியாளர்களையும் சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். மேலும், நாட்டிற்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுடன் தனது எண்ணங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். இந்த சந்திப்பு, பிரதமரே தனது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்த ஒரு மனதைக் கவரும் காணொளியுடன் நிறைவடைந்தது.
<h3>பதக்கம் வென்றவர்களைச் சந்தித்த பிறகு இந்தச் செய்தி</h3>
இந்தக் காணொளியில், பிரதமர் மோடியுடன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைவரும் உடன் இருந்தனர். குத்துச்சண்டை தங்கப் பதக்கம் வென்ற சாக்ஷி சௌத்ரி கேமராவைப் பிடித்திருந்தார். பிரதமரைச் சந்தித்தது அனைத்துப் பதக்கம் வென்றவர்களுக்கும் கிடைத்த கௌரவம் என்றும், இந்தச் சந்திப்பில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் சாக்ஷி கூறினார். பின்னர் பிரதமர், நாட்டு மக்களுக்கு விளையாட்டு தொடர்பான ஒரு சிறப்புச் செய்தியை வழங்கினார். அவர், "விளையாடுபவர்கள் செழிப்படைவார்கள். எப்போதும் இந்தியாவை உற்சாகப்படுத்துங்கள். பாரத் மாதா கி ஜெய்" என்று கூறினார்.
<h3>வீடியோ</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Always <a href="https://x.com/hashtag/Cheer4Bharat?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Cheer4Bharat</a>. <a href="https://t.co/eSjh8o1Ris">pic.twitter.com/eSjh8o1Ris</a></p>
— Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2086445178190201186?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>பிரதமர் மோடி இதற்கு முன்பும் வெற்றியாளர்களைச் சந்தித்துள்ளார்.</h3>
மோடி பதக்கம் வென்றவர்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட அனைத்துப் பதக்கம் வென்றவர்களையும் பங்கேற்பாளர்களையும் தனது இல்லத்திற்கு அழைத்து அவர்களுடன் பேசினார். இதேபோல், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகும் அவர் விளையாட்டு வீரர்களை உபசரித்தார். மேலும், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் அணியையும், 2025 ஒருநாள் சர்வதேச (ODI) உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியையும் அவர் சந்தித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்த அமெரிக்க துணை அதிபர்.. நடந்த ஆலோசனை என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-receives-phone-call-from-us-vice-president-jd-vance-details-in-tamil-96925.html</link>	
		<pubDate>Sun, 09 Aug 2026 07:24:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-receives-phone-call-from-us-vice-president-jd-vance-details-in-tamil-96925.html</guid>
		            
			

    	<description><![CDATA[PM Narendra Modi: அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்தார், இந்த அழைப்பு குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, "முக்கியமான துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம்," என்று  கூறியுள்ளார்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pm-narendra-modi-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்த அமெரிக்க துணை அதிபர்.. நடந்த ஆலோசனை என்ன?" /></figure>பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸுடன் தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலுக்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, "முக்கியமான துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று கூறினார். பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில், "அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. முக்கியமான துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று பதிவிட்டார்.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தம்பதிக்கு சமீபத்தில் மகன் பிறந்ததை அடுத்து மனமார்ந்த வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களது குடும்பம் முழுவதற்கும் தனது நல்வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
<h3>பிரதமர் பதிவு</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Received a phone call from US Vice President JD Vance. We discussed ways to further deepen India-US Comprehensive Global Strategic Partnership across key areas.</p>
Warmly congratulated him and the Second Lady on the birth of their son and conveyed best wishes to the entire family.…

— Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2086143126729584815?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்</h3>
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விரிவான உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மை பல முக்கியத் துறைகளில் முன்னேறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் பிற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.
<h3>மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்களுக்கு மத்தியில் புதிய கூட்டணி</h3>
துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு வேன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்களுக்கு மத்தியில், இந்த ஒப்பந்தம் ஒரு புதிய பிராந்திய கூட்டணியின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் குறித்த எந்த விவரங்களையும் அமெரிக்கத் தரப்பு இதுவரை வழங்கவில்லை.
<h3>வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டதா இல்லையா?</h3>
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதா என்பது உடனடியாகத் தெரியவில்லை. கடந்த ஜூன் மாதம் பிரான்சில் நடந்த சந்திப்பின்போது, ​​பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், சமச்சீரான, பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் வர்த்தகத்திற்கு உகந்த ஒரு ஒப்பந்தத்தை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப் பணியாற்றுமாறு தங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கள்ளநோட்டு புழக்கத்தில் புதிய யுக்தி? குறைந்த மதிப்பு நோட்டுகளை குறிவைக்கும் கும்பல்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/fake-rs-10-rs-20-notes-to-flood-indian-markets-intelligence-agencies-warn-of-new-isi-backed-counterfeit-strategy-on-low-value-notes-96737.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 11:32:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/fake-rs-10-rs-20-notes-to-flood-indian-markets-intelligence-agencies-warn-of-new-isi-backed-counterfeit-strategy-on-low-value-notes-96737.html</guid>
		            
			

    	<description><![CDATA[புதிய பாலிமர் நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு, ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் கள்ளநோட்டு கும்பல்கள் அதிக அளவில் குறைந்த மதிப்பு கொண்ட கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயற்சிக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. மேலும், பாலிமர் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு, இந்தக் கும்பல்கள் தங்களது கவனத்தை ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பிலான நோட்டுகளுக்கு மாற்றக்கூடும் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/fake-note.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கள்ளநோட்டு புழக்கத்தில் புதிய யுக்தி? குறைந்த மதிப்பு நோட்டுகளை குறிவைக்கும் கும்பல்கள்!" /></figure><strong>ஆகஸ்ட் 8, 2026:</strong> இந்தியாவில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக கள்ளநோட்டு புழக்கத்தில் ஈடுபட்டு வரும் குற்றக் கும்பல்கள் தற்போது தங்களது செயல்பாட்டு முறையை மாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய குற்றக் கும்பல்கள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் நீண்ட காலமாக இந்தியாவில் கள்ளநோட்டுகளை கடத்தி புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவளிப்பதாகவும், கள்ளநோட்டு வர்த்தகம் இந்தக் கும்பல்களின் முக்கிய சட்டவிரோத வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
<h3>ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்குப் பதில் குறைந்த மதிப்பு நோட்டுகள்:</h3>
இதுவரை இந்தக் கும்பல்கள் பெரும்பாலும் ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதில் கவனம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களில் கள்ள ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக விசாரணை அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

அதற்குப் பதிலாக, ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 மதிப்பிலான கள்ளநோட்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கள்ளநோட்டு கும்பல்கள் தங்களது செயல்பாட்டு முறையை மாற்றியிருக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
<h3>சிறிய நோட்டுகளை குறிவைப்பது ஏன்?</h3>
பொதுமக்கள் ரூ.200 அல்லது ரூ.500 நோட்டுகளைப் பெறும்போது அவற்றை கவனமாகச் சரிபார்ப்பது வழக்கம். ஆனால், ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய மதிப்பிலான நோட்டுகளைப் பெறும்போது பெரும்பாலும் அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதில்லை.

இந்தப் பழக்கத்தை கள்ளநோட்டு கும்பல்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலம் அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளில் எளிதாகக் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முடியும் என அவர்கள் கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>2027 ஏப்ரல் வரை அதிகரிக்கலாம்:</h3>
இந்திய உளவுத்துறை (IB) அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், குறைந்த மதிப்பிலான கள்ளநோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 மதிப்பிலான கள்ளநோட்டுகளை முன்பைவிட அதிக அளவில் புழக்கத்தில் விட முயற்சி மேற்கொள்ளப்படலாம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், 2027 ஏப்ரல் மாதத்திற்கு முன்பான காலகட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும், இந்தக் காலத்தில் கள்ளநோட்டு கும்பல்கள் சிறிய மதிப்பிலான கள்ளநோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
<h3>புதிய பாலிமர் ரூபாய் நோட்டுகள் வருகை</h3>
இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய திட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் அல்லது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை 2028ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காகித ரூபாய் நோட்டுகளைவிட பாலிமர் நோட்டுகள் நீண்ட காலம் நீடிக்கும். மேலும், அவற்றில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்பதால் கள்ளநோட்டு தயாரிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய நோட்டுகளில் வெளிப்படையான சாளரங்கள், சிறப்பு உலோக அம்சங்கள் மற்றும் மைக்ரோ-ஆப்டிக் ஹாலோகிராம்கள் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>ரூ.50, ரூ.100 நோட்டுகளுக்கு மாற வாய்ப்பு:</h3>
புதிய பாலிமர் நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு, ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் கள்ளநோட்டு கும்பல்கள் அதிக அளவில் குறைந்த மதிப்பு கொண்ட கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயற்சிக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

மேலும், பாலிமர் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு, இந்தக் கும்பல்கள் தங்களது கவனத்தை ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பிலான நோட்டுகளுக்கு மாற்றக்கூடும் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர். இதனால், கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மின்கம்பத்தில் புல் &#8211; அப்ஸ் எடுத்த இளைஞர்.. கொல்கத்தாவில் பரபரப்பு சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/young-man-took-pull-ups-in-electric-pole-in-streets-of-kolkata-96674.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 07:18:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/young-man-took-pull-ups-in-electric-pole-in-streets-of-kolkata-96674.html</guid>
		            
			

    	<description><![CDATA[Man Took Pull Ups In Electric Pole | சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும், பல விதமான சாகசங்களை செய்து இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இளைஞர் ஒருவர் மின்சார கம்பத்தின் மீது ஏறி புல் அப் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pull-ups.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மின்கம்பத்தில் புல் &#8211; அப்ஸ் எடுத்த இளைஞர்.. கொல்கத்தாவில் பரபரப்பு சம்பவம்!" /></figure><strong>கொல்கத்தா, ஆகஸ்ட் 08 :</strong> கொல்கத்தாவில்<strong> (Kolkata)</strong>, உயரமான மின் கம்பத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதேனும் வித்தியாசமாக செய்தால் தான் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக முடியும் என்பதால் இளைஞர்களும், இளம் பெண்களும் இத்தகைய சவாலான செயல்களை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்த இளைஞர் செய்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், மின்கம்பத்தில் இளைஞர் உடற்பயிற்சி செய்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>உயரமான மின் கம்பத்தில் உடற்பயிற்சி செய்த இளைஞர்</h3>
மிகவும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதன் காரணமாக தாங்களும் வைரலாக வேண்டும் என பலரும், பல விதமான, வித்தியாசமான செயல்களை செய்து அது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,  இளைஞர் ஒருவர் செய்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/human-body-parts-found-inside-the-suitcase-shocking-incident-in-agra-96172.html">ரயிலில் சூட்கேசில் இருந்த மனித உடல் பாகங்கள்.. பகீர் சம்பவம்!</a>
<h3>ஆபத்தான முறையில் புல் - அப்ஸ் எடுத்த இளைஞர்</h3>
அதாவது கொல்கத்தாவின் மிகவும் முக்கியமான சாலை ஒன்றில, மிக உயரமான மின்சார கம்பம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கம்பத்தின் மீது இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். எந்த வித பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபகரணங்களுமின்றி மின்சார கம்பத்தின் மீது ஏறிய அவர், அதில் தொங்கியபடி புல் - அப்ஸ் எடுத்துள்ளார். அதனை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/mark-zuckerberg-apologises-after-meta-removes-pm-modi-video-from-facebook-96132.html">பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் – மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்</a>
<h3>இணையத்தில் வைரலாகும் வீடியோ</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">A man was spotted doing pull-ups on a streetlight in Kolkata. <a href="https://x.com/hashtag/Kolkata?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kolkata</a> <a href="https://x.com/hashtag/StreetGym?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#StreetGym</a> <a href="https://t.co/fu0tVGzghs">pic.twitter.com/fu0tVGzghs</a></p>
— Bikash Mondal (@bik62122) <a href="https://x.com/bik62122/status/2085278464047997437?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote>
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்&#8230; யார்.. யார்&#8230; முழு விவரம் உள்ளே!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/president-droupadi-murmu-issued-an-order-appointing-15-new-judges-to-the-madras-high-court-96653.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 21:33:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/president-droupadi-murmu-issued-an-order-appointing-15-new-judges-to-the-madras-high-court-96653.html</guid>
		            
			

    	<description><![CDATA[Madras High Court New Judges Appointed : சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் மற்றும் 10 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் யார் யார் என்ற விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/chennai-high.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்&#8230; யார்.. யார்&#8230; முழு விவரம் உள்ளே!" /></figure>இந்தியாவில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-george-court-has-cancelled-the-arrest-warrant-against-former-dmk-minister-ponmudi-96614.html" target="_blank" rel="noopener">தமிழகம்</a>, கர்நாடகம், மத்திய பிரதேசம், கொல்கத்தா ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் அளித்த அதிகாரத்தின் அடிப்படையிலும் இந்திய தலைமை நீதிபதியுடன் ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையிலும் பல்வேறு மாநில உயர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-george-court-has-cancelled-the-arrest-warrant-against-former-dmk-minister-ponmudi-96614.html" target="_blank" rel="noopener">நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள்</a> மற்றும் கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், தமிழக உயர்நீதிமன்றத்திற்கு 5 வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில்,

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/premalatha-vijayakanth-urged-in-legislative-assembly-that-virudhachalam-be-declared-a-separate-district-96566.html" target="_blank" rel="noopener">விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!</a>
<ul>
 	<li>ரஜ்னிஷ் பதியில்.</li>
 	<li>ஜி. கே. முத்துக்குமார்.</li>
 	<li>கோவிந்தராஜன்.</li>
 	<li>கிருஷ்ணசாமி.</li>
 	<li>ரமேஷ் நடராஜன்.</li>
 	<li>ராமகிருஷ்ணா ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</li>
</ul>
அதே போல, மேலும் 3 வழக்கறிஞர்கள் மற்றும் 7 நீதித்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்,
<ul>
 	<li>திலீப் குமார் நடராஜன் ( வழக்கறிஞர்).</li>
 	<li>ரவிக்குமார் சங்கரநாராயணன் ( வழக்கறிஞர்).</li>
 	<li>முருகன் ( நீதித்துறை அதிகாரி).</li>
 	<li>எல்லப்பன் மனோகரன் ( வழக்கறிஞர்).</li>
 	<li>அல்லி ( நீதித்துறை அதிகாரி).</li>
 	<li>சுமதி ( நீதித்துறை அதிகாரி).</li>
 	<li>திருமகள் ( நீதித்துறை அதிகாரி).</li>
 	<li>குணசேகரன் ( நீதித்துறை அதிகாரி).</li>
 	<li>சண்முகன் கார்த்திகேயன் ( நீதித்துறை அதிகாரி).</li>
 	<li>முருகேசன் பாலுசாமி ( நீதித்துறை அதிகாரி) ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</li>
</ul>
<h3>கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள்:</h3>
<ul>
 	<li>சுப்பிரமணிய ரங்கா ராவ்.</li>
 	<li>ராகவேந்திரா எஸ். ஸ்ரீ வஸ்தா.</li>
 	<li>பிரமோத் பகேஸ்வரா.</li>
 	<li>ஹேமா குல்கர்னி.</li>
 	<li>விவேகானந்தா ததகாவடி பிரகாஷ்.</li>
 	<li>சாந்தி பூஷன் ஹோம்பே கவுடா.</li>
</ul>
<h3>கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள்:</h3>
<ul>
 	<li>ஆதரப் பானர்ஜி.</li>
 	<li>ஆர்யக் தக்.</li>
 	<li>பார்த்தா பிரதிம் ராய்.</li>
 	<li>சந்தீப் குமார்.</li>
 	<li>அனுஜ் சிங்.</li>
 	<li>ரிஷத் மேதோரா.</li>
 	<li>சுதீப் தேப். அர்ஜுன் ரே முகர்ஜி.</li>
</ul>
<h3>மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள்:</h3>
<ul>
 	<li>அமித் லகோரி கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேலால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</li>
</ul>
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக உச்சநீதிமன்ற கொலீஜியம் 19 பேரின் பெயர்களை பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது. இதனை பரிசீலித்த ஜனாதிபதி முர்மு, 15 பேரை தேர்வு செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-criticized-m-k-stalin-in-the-legislative-assembly-regarding-the-tasmac-corruption-issue-96559.html" target="_blank" rel="noopener">அவையில் அப்பாவை காணோம் என மீண்டும் கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>UPI பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா? யாருக்கு பொருந்தும்? மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/upi-charges-only-for-merchants-not-customers-says-finance-minister-nirmala-sitharaman-on-new-bill-96486.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 09:30:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/upi-charges-only-for-merchants-not-customers-says-finance-minister-nirmala-sitharaman-on-new-bill-96486.html</guid>
		            
			

    	<description><![CDATA[இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "தவறான தகவல்களை பரப்புவதற்கு முன்பு உண்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக விவாதத்தில் பங்கேற்றிருந்தால், இந்த விவகாரம் குறித்து அவையிலேயே விரிவாக விவாதிக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ui.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="UPI பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா? யாருக்கு பொருந்தும்? மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்.." /></figure><strong>ஆகஸ்ட் 7, 2026:</strong> UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) விதிக்கப்பட்டாலும், அது வாடிக்கையாளர்களுக்கு அல்ல; வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "UPI சேவையைப் பயன்படுத்தும் சாதாரண மக்களே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்" என்று சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், அவரது கருத்தை மறுத்து விளக்கம் வெளியிட்டார்.
<h3>UPI சேவையைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த நேரிடும்:</h3>
அவர் வெளியிட்ட பதிவில், "வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். இறுதி வாடிக்கையாளர்கள் அல்லது பயனர்களுக்கு இது பொருந்தாது. MDR மூலம் கிடைக்கும் வருவாய், வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் பாதுகாப்பு வசதிகளில் கூடுதல் முதலீடு செய்ய உதவும். அதன் பலனை அனைத்து UPI பயனர்களும் பெறுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 2026ஆம் ஆண்டுக்கான "வரி மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா" நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகே, தேசிய கட்டண கழகம் (NPCI) தலைமையிலான UPI மற்றும் சேவைகள் வழிகாட்டும் குழு MDR தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/pm-modi-calls-upon-people-to-celebrate-national-handloom-day-by-showcasing-indias-rich-handloom-heritage-post-on-x-96476.html">தேசிய கைத்தறி தினம்.. கைத்தறி ஆடைகள் அணிந்து வீடியோவை பகிர பிரதமர் மோடி வலியுறுத்தல்..</a>

இந்த மசோதா மூலம், எந்தெந்த மின்னணு கட்டண முறைகள் அல்லது பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை மத்திய அரசு அறிவிப்பு மூலம் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில், MDR சுமை இறுதியில் பொதுமக்கள் மீதே விழும் என்றும், UPI சேவையை நிதி ரீதியாக நிலைநிறுத்துவதற்கான ஒரே வழி இதுதான் என்ற அரசின் வாதம் முற்றிலும் தவறானது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
<h3>நிதி அமைச்சர் கொடுத்த விளக்கம்:</h3>
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "தவறான தகவல்களை பரப்புவதற்கு முன்பு உண்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக விவாதத்தில் பங்கேற்றிருந்தால், இந்த விவகாரம் குறித்து அவையிலேயே விரிவாக விவாதிக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வரி மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா மூலம், Payment and Settlement Systems Act, 2007-இன் பிரிவு 10(A)-ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், தற்போது UPI மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளுக்கு நடைமுறையில் உள்ள 'Zero MDR' முறையை எதிர்காலத்தில் மாற்றுவதற்கான சட்டபூர்வ அதிகாரம் அரசுக்கு கிடைக்கும்.

அதேநேரத்தில், இந்த மசோதா உடனடியாக MDR கட்டணத்தை அறிமுகப்படுத்தவில்லை என்றும், எந்தக் கட்டணத் தொகையையும் நிர்ணயிக்கவில்லை என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது. மாறாக, எதிர்காலத்தில் தேவைப்பட்டால் 'Zero MDR' கொள்கையில் மாற்றம் செய்யும் சட்ட அடித்தளத்தை மட்டுமே இந்த மசோதா உருவாக்குகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தேசிய கைத்தறி தினம்.. கைத்தறி ஆடைகள் அணிந்து வீடியோவை பகிர பிரதமர் மோடி வலியுறுத்தல்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-modi-calls-upon-people-to-celebrate-national-handloom-day-by-showcasing-indias-rich-handloom-heritage-post-on-x-96476.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 07:42:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-modi-calls-upon-people-to-celebrate-national-handloom-day-by-showcasing-indias-rich-handloom-heritage-post-on-x-96476.html</guid>
		            
			

    	<description><![CDATA[மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 12வது தேசிய கைத்தறி தின விழாவை இன்று நடத்துகிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிலவி வரும் கைத்தறி பாரம்பரியத்தை பாதுகாத்து, ஊக்குவித்து, மேலும் வலுப்படுத்தும் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/handloom-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தேசிய கைத்தறி தினம்.. கைத்தறி ஆடைகள் அணிந்து வீடியோவை பகிர பிரதமர் மோடி வலியுறுத்தல்.." /></figure><strong>ஆகஸ்ட் 7, 2026:</strong> ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நாட்டின் வளமான மற்றும் பல்வகைமையான கைத்தறி பாரம்பரியத்தை உலகறியச் செய்வதற்காக சமூக வலைதளங்களில் கைத்தறி ஆடைகள் மற்றும் தயாரிப்புகளை அதிகளவில் பகிர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளார்.
<h3>கைத்தறியை பயன்படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Tomorrow, 7th August is National Handloom Day. Let’s make India’s handloom diversity popular.</p>
Share your videos with your favourite handloom products, including GRWM videos on social media.

Don’t forget to use <a href="https://x.com/hashtag/NationalHandloomDay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NationalHandloomDay</a>. <a href="https://t.co/zoFdTXphRL">pic.twitter.com/zoFdTXphRL</a>

— Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2085397848154345956?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தங்களுக்கு மிகவும் பிடித்தமான கைத்தறி ஆடைகள் மற்றும் பொருட்களுடன் எடுத்துக் கொண்ட காணொளிகள், குறிப்பாக "கெட் ரெடி வித் மீ (GRWM)" வகை வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிருமாறு கேட்டுக்கொண்டார்.

அவரது பதிவில், "ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கைத்தறி பன்முகத்தன்மையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவோம். உங்களுக்குப் பிடித்த கைத்தறி ஆடைகள் மற்றும் பொருட்களுடன் எடுத்துள்ள வீடியோக்களை #NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பகிருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
<h3>12வது தேசிய கைத்தறி தின விழா:</h3>
இந்த நிலையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 12வது தேசிய கைத்தறி தின விழாவை இன்று நடத்துகிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிலவி வரும் கைத்தறி பாரம்பரியத்தை பாதுகாத்து, ஊக்குவித்து, மேலும் வலுப்படுத்தும் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, சந்த் கபீர் கைத்தறி விருதுகள் மற்றும் தேசிய கைத்தறி விருதுகள் 2025 ஆகியவற்றை வழங்குகிறார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, ஜவுளித் துறை செயலாளர் நீலம் ஷாமி ராவ், கைத்தறி மேம்பாட்டு ஆணையர் டாக்டர் எம். பீனா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், வடிவமைப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விருது பெறுவோரும் இதில் பங்கேற்கின்றனர்.
<h3>கைத்தறி விருதுகள்:</h3>
விழாவின் முக்கிய நிகழ்வாக, 3 சந்த் கபீர் கைத்தறி விருதுகள் மற்றும் 19 தேசிய கைத்தறி விருதுகள் என மொத்தம் 22 தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. நெசவுத் திறன், புதுமை, வடிவமைப்பு, சந்தைப்படுத்தல், தொழில்முனைவு மற்றும் கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனங்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், இந்தியாவின் பல்வேறு கைத்தறி மரபுகளை பிரதிபலிக்கும் நான்கு நினைவு அஞ்சல் தலைகளும் வெளியிடப்படுகின்றன. "Earth. Root. Thread – Aal Dyed Handloom Textiles of Central India" மற்றும் "Handloom Awards Book 2025" ஆகிய இரண்டு நூல்களும் விழாவில் வெளியிடப்படுகின்றன.

இதனுடன், விருது பெற்ற கைத்தறி தயாரிப்புகளின் கண்காட்சியும், பாரம்பரிய கனி நெசவு மற்றும் வால் ஹேங்கிங் நெசவு ஆகியவற்றின் நேரடி செயல்விளக்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் தேசிய விழாவைத் தவிர, நாடு முழுவதும் கண்காட்சிகள், வடிவமைப்பாளர் மாநாடுகள், இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
<h3>இந்தியாவின் கைத்தறி துறை:</h3>
இந்தியாவின் கைத்தறித் துறை, 35 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நிலையான கிராமப்புற வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இதில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் பாரம்பரிய ஜவுளி மரபை பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளை ஊக்குவிப்பதிலும் கைத்தறித் துறை முக்கிய பங்காற்றி வருகிறது.

1905ஆம் ஆண்டு சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய கைத்தறி நெசவாளர்களின் கலைத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் நாளாக இது விளங்கி வருகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் முதல் CSAM வரை&#8230; மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/meta-admits-illegal-content-was-promoted-apologises-during-meeting-with-indian-government-regarding-the-removal-of-pm-modi-video-96243.html</link>	
		<pubDate>Thu, 06 Aug 2026 09:57:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/meta-admits-illegal-content-was-promoted-apologises-during-meeting-with-indian-government-regarding-the-removal-of-pm-modi-video-96243.html</guid>
		            
			

    	<description><![CDATA[சட்டவிரோதமான பல்வேறு உள்ளடக்கங்கள் தங்களது தளங்களில் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டதை மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும், குறிப்பிட்ட இலக்கு பயனர்களை அடையும் வகையில் கட்டண அடிப்படையிலான புரமோஷன்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூடுதல் விளக்கம் பெற மெட்டா அதிகாரிகள் மீண்டும் ஆஜராக அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/mark.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் முதல் CSAM வரை&#8230; மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா!" /></figure><strong>ஆகஸ்ட் 6, 2026:</strong> பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரம், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக (CSAM) உள்ளடக்கங்கள், டீப் ஃபேக் பதிவுகள் மற்றும் தளத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
<h3>மெட்டா நிறுவனத்திடன் ஆலோசனை மேற்கொண்ட மத்திய அரசு:</h3>
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மெட்டாவின் சர்வதேச அதிகாரிகள் பங்கேற்றனர். பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அண்மையில் மெட்டாவுக்கு சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக (CSAM) உள்ளடக்கங்கள், டீப் ஃபேக் பதிவுகள் மற்றும் தளத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட தவறுகளுக்காக மார்க் சக்கர்பெர்க் சார்பில் மெட்டா அதிகாரிகள் மன்னிப்பு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் "இடைநிலை சேவை வழங்குநர்" என்ற வரையறையின் கீழ் மெட்டா வராது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. எந்தப் பயனருக்கு எந்த உள்ளடக்கம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை மெட்டா நிறுவனமே தீர்மானிப்பதால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 'Safe Harbour' சட்டப் பாதுகாப்பு மெட்டாவுக்கு பொருந்தாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
<h3>மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம்:</h3>
அதேபோல், குறிப்பிட்ட வகையான உள்ளடக்கங்களை குறிப்பிட்ட பயனர்களிடம் அதிகளவில் கொண்டு சேர்க்க பணம் செலுத்தப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட தவறுக்கு மெட்டா அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கேட்டதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமான பல்வேறு உள்ளடக்கங்கள் தங்களது தளங்களில் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டதை மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும், குறிப்பிட்ட இலக்கு பயனர்களை அடையும் வகையில் கட்டண அடிப்படையிலான புரமோஷன்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூடுதல் விளக்கம் பெற மெட்டா அதிகாரிகள் மீண்டும் ஆஜராக அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, மெட்டா நிறுவனத்திற்கு உலகிலேயே அதிக பயனர்கள் உள்ள மிகப்பெரிய சந்தையாகும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
<h3>பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ:</h3>
கடந்த ஜூலை 23ஆம் தேதி, ஆன்லைன் "காக்ரோச் ஜனதா பார்ட்டி"  முன்னெடுத்த போராட்டங்களின் உச்சகட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செங்குத்து வடிவிலான வீடியோ, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்காலிகமாக நீக்கப்பட்டது. பின்னர் அது மீண்டும் பதிவேற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என்றும், உள்ளடக்கம் தவறுதலாக நீக்கப்பட்டதாகவும் மெட்டா விளக்கம் அளித்தது. ஆனால், அந்த விளக்கத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போதுமானதாக ஏற்கவில்லை.

இதனிடையே, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகளை கட்டுப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டு வெளியான ராய்ட்டர்ஸ் விசாரணை அறிக்கையில், மோசடி விளம்பரங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் மூலம் மெட்டா நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியதாக குறிப்பிடப்பட்டது. போலியான முதலீட்டு திட்டங்கள், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் விளம்பரங்களை தடுக்க மெட்டா தவறியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரயிலில் சூட்கேசில் இருந்த மனித உடல் பாகங்கள்.. பகீர் சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/human-body-parts-found-inside-the-suitcase-shocking-incident-in-agra-96172.html</link>	
		<pubDate>Wed, 05 Aug 2026 20:50:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/human-body-parts-found-inside-the-suitcase-shocking-incident-in-agra-96172.html</guid>
		            
			

    	<description><![CDATA[Human Body Parts Found Inside The Suitcase | சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சூட்கேச் ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகீர் சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/train-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரயிலில் சூட்கேசில் இருந்த மனித உடல் பாகங்கள்.. பகீர் சம்பவம்!" /></figure><strong>ஆக்ரா, ஆகஸ்ட் 05 :</strong> தமிழகத்தில் <strong>(Tamil Nadu)</strong> இருந்து டெல்லி<strong> (Delhi)</strong> நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேஸ் ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகராம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகீர் சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ரயிலில் சூட்கேசில் இருந்த மனித உடல் பாகங்கள்</h3>
இன்று (ஆகஸ்ட் 05, 2026) அதிகாலை 5 மணி அளவில் அந்த ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேசில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. அதுமட்டுமன்றி, அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த இளைஞர் ஒருவர் அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/india/fssai-bans-dabur-from-selling-honey-ghee-and-other-products-with-100-percent-claim-know-more-in-details-95594.html"><strong> 1</strong>00 சதவீதம் என்ற தவறான விளம்பரக் கூற்றுகள்.. டாபர் நிறுவன பொருட்கள் விற்பனை செய்ய தடை – எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிரடி</a>

இந்த நிலையில், ரயில் ஆக்ரா ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும், அரசு ரயில்வே போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் அந்த சூட்கேஸை கைப்பற்றி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த சூட்கேஸில் மனித உடலின் சில பாகங்கள் இருந்ததைன் கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
<h3>உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை</h3>
அந்த சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த உடல் பாகங்கள் சென்னை பெயர் ஆச்சிடப்பட்டு இருந்த பையில் சுற்றப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து விசாரணை குழு சென்னைக்கு வந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/prashant-kishor-wins-bankipur-bypoll-deals-major-blow-to-bjps-stronghold-in-bihar-95551.html">பாஜகவின் கோட்டையை தகர்த்த பிரசாந்த் கிஷோர்; பாங்கிபூர் இடைத்தேர்தலில் வரலாற்று வெற்றி</a>

இந்த சூட்கேஸ் எந்த ரயில் நிலையத்தில் யாரால் ஏற்றிவிடப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு உரிய இடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் &#8211; மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/mark-zuckerberg-apologises-after-meta-removes-pm-modi-video-from-facebook-96132.html</link>	
		<pubDate>Wed, 05 Aug 2026 18:53:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/mark-zuckerberg-apologises-after-meta-removes-pm-modi-video-from-facebook-96132.html</guid>
		            
			

    	<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கிய விவகாரம் தொடர்பாக, மத்திய அரசின் அழைப்பின் பேரில் மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தது.  இந்த விவகாரம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தவறுகளுக்காக மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/mark-zuckerberg.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் &#8211; மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்" /></figure>பிரதமர் <a href="https://www.tv9tamilnews.com/india/prime-minister-narendra-modi-launches-nasha-mukt-yuva-for-viksit-bharat-sankalp-abhiyan-details-in-tamil-95184.html" target="_blank" rel="noopener">நரேந்திர மோடியின்</a> வீடியோவை பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கிய விவகாரம் தொடர்பாக, மத்திய அரசின் அழைப்பின் பேரில் மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தது. மோடியின் வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவித்த மெட்டா, பின்னர் அந்த வீடியோவை மீண்டும் பதிவேற்றியது. இந்த விவகாரம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தவறுகளுக்காக மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
<h3>பிரதமரிடம் மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்</h3>
பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்ற காணொளி ஒன்று ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய அரசிடம் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, மெட்டாவின் உலகளாவிய குழுவினர் ஆகஸ்ட் 5, 2026 மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது, ​​பிரதமர் மோடியின் காணொளி நீக்கப்பட்டது குறித்து மட்டுமல்லாமல், சமூக ஊடகத் தளங்களில் டீப்ஃபேக்  வீடியோக்கள், குழந்தைகளை தவறாக வழிநடத்தும் வீடியோக்கள் மற்றும் ஸ்கேம் சம்பவங்கள் மற்றும் பிற சட்டவிரோத கண்டென்ட்கள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் அரசு தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. நம்பகமான வட்டாரங்களின்படி, மெட்டா பிரதிநிதிகள் தங்கள் தளங்களில் ஏற்பட்ட செயல்பாட்டுத் தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர்.

சமூக ஊடக நிறுவனங்கள் வெறும் இடைத்தரகர்கள் என்று கூறிப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அரசு தெளிவுபடுத்தியது. பயனர்களுக்கு எந்த வகையான உள்ளடக்கம் காட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவை அல்காரிதங்களைப் பயன்படுத்துவதால், அதற்கான முழுப் பொறுப்பையும் அவை ஏற்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.

கடந்த ஜூலை 23, 2026 அன்று, பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்ற காணொளி ஒன்று ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது. பின்னர் மெட்டா அந்தக் காணொளியை மீண்டும் பதிவேற்றியதுடன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அது நீக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.

இருப்பினும், அந்த விளக்கத்தில் அரசு முழுமையாகத் திருப்தியடையவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் இது குறித்து மெட்டாவிடம் விளக்கம் கோரியது. குறிப்பாக, குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் வீடியோக்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகளை விரைவாக நீக்குவதை உறுதிசெய்யக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நிறுவனத்தை அக்குழு வலியுறுத்தியது.

சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், மெட்டாவின்  நிர்வாகி ஜோயல் கபிலன் மற்றும் அந்நிறுவனத்தின் பிற உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். மெட்டாவின் மிகப்பெரிய மார்க்கெட்களில் ஒன்றாக இந்தியா இருப்பதால், நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அரசு மீண்டும் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;இன்சூரன்ஸ் இல்லையா?.. பெட்ரோல், டீசல் கிடையாது?&#8221; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/no-insurance-no-fuel-supreme-court-pilot-project-petrol-bunks-irdai-95913.html</link>	
		<pubDate>Wed, 05 Aug 2026 09:50:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/no-insurance-no-fuel-supreme-court-pilot-project-petrol-bunks-irdai-95913.html</guid>
		            
			

    	<description><![CDATA[No Insurance No Fuel Supreme Court Pilot Project: இந்தியாவில் ஓடும் 56% வாகனங்களுக்கு மூன்றாம் தரப்புக் காப்பீடு இல்லை என்பதால், காப்பீடு இல்லாத வாகனங்களுக்குப் பெட்ரோல், டீசல் வழங்கத் தடை விதிக்கும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கும் IRDAI-க்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/no-insurance-no-fuel.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;இன்சூரன்ஸ் இல்லையா?.. பெட்ரோல், டீசல் கிடையாது?&#8221; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!" /></figure><strong>டெல்லி, ஆகஸ்ட் 05:</strong> இந்தியச் சாலைகளில் செல்லும் வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு முறையான காப்பீடு இல்லை என்ற அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மூன்றாம் தரப்புக் காப்பீடு (Third-Party Insurance) இல்லாத வாகனங்களுக்குப் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதைத் தடை செய்யும் 'நோ இன்சூரன்ஸ்.. நோ ஃபியூயல்' (No Insurance, No Fuel) முன்னோடித் திட்டத்தைச் உடனடியாகச் செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/vaiko-in-parliament-book-release-delhi-rahul-gandhi-india-alliance-leaders-participated-95897.html">“நாடாளுமன்றத்தில் வைகோ” நூல் வெளியீட்டு விழா.. டெல்லியில் ஒன்றுதிரண்ட ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள்!!</a></strong>

நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு 'தேசிய காப்பீட்டு நிறுவனம் vs துங்கலா தனலட்சுமி' வழக்கின் விசாரணையின் போது இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
<h3>16.54 கோடி வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை:</h3>
2024-25 நிதியாண்டிற்கான நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்தியாவில் உள்ள மொத்த 30.48 கோடி வாகனங்களில் சுமார் 16.54 கோடி வாகனங்கள் (56%) எந்தவிதமான காப்பீடும் இல்லாமல் சட்டவிரோதமாகச் சாலைகளில் இயங்குவதைக் கண்டு அதிர்ச்சி தெரிவித்தனர்.

"மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 146-ன் கீழ் கட்டாயக் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே, சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீடு தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், 56% வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்குவதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகள் நீதிமன்றப் போராட்டங்களில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது" என நீதிபதிகள் கவலையுடன் சுட்டிக்காட்டினர்.
<h3>பெட்ரோல் பங்குகளில் பரிசோதனை எவ்வாறு செயல்படும்?</h3>
பெட்ரோல் பங்குகளில் தானியங்கி எண் பலகை கண்டறியும் (ANPR) கேமராக்கள் பொருத்தப்படும். வாகனம் உள்ளே நுழையும் போதே அதன் பதிவு எண் VAHAN போர்டல் மற்றும் காப்பீட்டுத் தரவுத்தளத்துடன் ஒப்பிடப்படும். இன்சூரன்ஸ் காலாவதியாகியிருந்தால், அந்த வாகனத்திற்குப் பெட்ரோல்/டீசல் வழங்கப் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மறுப்பார்கள். இந்தத் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கொள்கை ரீதியாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
<h3>இ-செல்லான் மற்றும் நவீனச் சாதனங்கள்:</h3>
நெடுஞ்சாலைகளில் உள்ள ANPR கேமராக்கள் VAHAN தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டு, இன்சூரன்ஸ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்குத் தானாகவே இ-செல்லான் அபராதம் அனுப்பப்படும். போக்குவரத்துக் காவலர்களுக்கு நவீனக் கையடக்கச் சாதனங்கள் அல்லது மொபைல் செயலிகள் வழங்கப்படும். இதன் மூலம் வாகனச் சான்றுகளை நேரடியாகப் பார்க்காமலேயே இன்சூரன்ஸ் நிலையைச் சரிபார்க்க முடியும்.
<h3>புதிய வாகனங்களுக்கான கட்டாய இன்சூரன்ஸ் காலம் உயர்வு:</h3>
2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, புதிய கார்களுக்கு 3 ஆண்டுகளும், பைக்குகளுக்கு 5 ஆண்டுகளும் மூன்றாம் தரப்புக் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறையை மேலும் ஓராண்டு உயர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இனி 3 ஆண்டுகளுக்குப் பதிலாக 4 ஆண்டுகள் கட்டாய மூன்றாம் தரப்புக் காப்பீடு எடுக்க வேண்டும். இனி 5 ஆண்டுகளுக்குப் பதிலாக 6 ஆண்டுகள் கட்டாய மூன்றாம் தரப்புக் காப்பீடு எடுக்க வேண்டும்.

<strong>மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-sengottaiyan-slams-dmk-dynastic-politics-tvk-meeting-95869.html"> “தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!</a></strong>

இதற்கான முறையான சுற்றறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு IRDAI அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு விரைவாக இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்யவும், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களைக் கட்டுப்படுத்தவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பயன்படும் எனக் கருதப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>“நாடாளுமன்றத்தில் வைகோ” நூல் வெளியீட்டு விழா.. டெல்லியில் ஒன்றுதிரண்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/vaiko-in-parliament-book-release-delhi-rahul-gandhi-india-alliance-leaders-participated-95897.html</link>	
		<pubDate>Wed, 05 Aug 2026 08:49:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/vaiko-in-parliament-book-release-delhi-rahul-gandhi-india-alliance-leaders-participated-95897.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vaiko in Parliament Book Release: டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ‘இன்டியா’ கூட்டணிக் தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய நிலையில், இந்துத்துவ சக்திகளை வீழ்த்துவேன் என வைகோ உறுதிபூண்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/vaiko-book-launch.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="“நாடாளுமன்றத்தில் வைகோ” நூல் வெளியீட்டு விழா.. டெல்லியில் ஒன்றுதிரண்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்!!" /></figure><strong>டெல்லி, ஆகஸ்ட் 05:</strong> மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின் நாடாளுமன்ற உாைகளின் தொகுப்பான “நாடாளுமன்றத்தில் வைகோ” (Vaiko in Parliament) என்னும் நூல் வெளியீட்டு விழா நாட்டின் தலைநகரான டெல்லியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேசிய அளவிலான ‘இந்தியா’ (INDIA) கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் ஒன்றுதிரண்ட இந்த விழாவில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நூலை வெளியிட, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mk-stalin-says-court-verdict-is-a-blow-to-tvk-fascism-95747.html">உதயநிதி ஆபாசமாக பேசவில்லை தவெகவுக்கு விழுந்த அடி – மு.க.ஸ்டாலின் கண்டனம்</a></strong>
<h3>ஒன்றுதிரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்:</h3>
இந்த நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ராகுல் காந்தி (மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்), அகிலேஷ் யாதவ் (தலைவர், சமாஜ்வாடி கட்சி), ப. சிதம்பரம் (மூத்த காங்கிரஸ் தலைவர்), டி. ராஜா (பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), எம்.ஏ. பேபி (மூத்த தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), தொல். திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), ஜி.கே. வாசன் (தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்), ராஜமோகன் (தமிழக அமைச்சர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
<h3>ராகுல் காந்தி பேச்சு:</h3>
வைகோவின் நூலை வெளியிட்டு உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜாக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாகச் சாடிப் பேசினார். "இன்று நாட்டின் இளைஞர்களும் மாணவர்களும் கடுமையான பாதிப்புகளையும் வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகள் இல்லை. நியாயமான தேர்வு முறையையும், சீரான கல்வி அமைப்பையுமே அவர்கள் அரசினிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், மறுபுறம் பிரதமர் அவர்களைப் பார்த்து மன்னிப்பது போலப் பேசுகிறார். இந்தியாவின் எதிர்காலத்தையே மன்னிப்பதற்குப் பிரதமருக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது என்று எனக்குத் தெரியவில்லை. பிரதமரின் சிந்தனைக்குக் பின்னாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னாலும் மிகவும் ஆபத்தான, நச்சுத்தன்மையான கோட்பாடு ஒளிந்துள்ளது.

இந்த நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட பல பண்பாடுகளின், மொழிகளின் ஒன்றியம் என்பதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அந்தப் பன்முகத்தன்மையை நசுக்க நினைப்பதை இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்.
<h3>வைகோ ஆவேச உரை:</h3>
விழாவில் ஏற்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட சித்தாந்தம் மற்றும் பாசிச எதிர்ப்பு குறித்து உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். திராவிட இயக்கம்: தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தவும், திராவிட இயக்கத்தின் லட்சியங்களை வென்றெடுக்கவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-sengottaiyan-slams-dmk-dynastic-politics-tvk-meeting-95869.html"> “தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!</a></strong>

"இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராகச் செயல்படும் இந்துத்துவ நச்சுச் சக்திகளை அடி முதல் நுனி வரை முழுமையாகத் தகர்த்தெறிந்து, அவர்களை வங்கக்கடலில் தூக்கி எறியும் வரை என் போராட்டம் ஓயாது" என ஆவேசமாக உறுதிபூண்டார். டெல்லியில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா, தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திடீரென சரிந்த மின் கம்பம்.. மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான சிறுமி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/9th-standard-girl-died-after-electrocuted-by-electric-poll-in-lucknow-95847.html</link>	
		<pubDate>Tue, 04 Aug 2026 23:38:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/9th-standard-girl-died-after-electrocuted-by-electric-poll-in-lucknow-95847.html</guid>
		            
			

    	<description><![CDATA[9th Standard Girl Died After Electrocuted | லக்னோவில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சாலையில் நடந்துச் சென்ற நிலையில், மின்கம்பம் சரிந்து விழுந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/girl-died.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திடீரென சரிந்த மின் கம்பம்.. மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான சிறுமி!" /></figure><strong>லக்னோ, ஆகஸ்ட் 04 :</strong> உத்தர பிரதேச <strong>(UP - Uttar Pradesh)</strong> மாநிலம், ஹர்டோய் மாவட்டம், பஹ்வான் கிராமத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி ரகினி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி மின்கம்பம் சரிந்து விழுந்த விபத்தில், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மின்கம்பம் சரிந்த விபத்தில் பள்ளி மாணவி பலியானது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>மளிகை கடைக்குச் சென்ற மாணவிக்கு நடந்த சோகம்</h3>
மாணவி ரஜினி நேற்று (ஆகஸ்ட் 03, 2026) மாலை தனது தோழியுடன் மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அப்போது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருந்த அவர் மீது அந்த பகுதியில் இருந்த மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் மிக கடுமையான மின்சார தாக்குதலுக்கு உள்ளான அந்த மாணவி படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/nasha-mukt-yuva-for-viksit-bharat-program-held-grandly-at-akshardham-in-delhi-full-details-95204.html">போதையில்லா இளைஞர்களுக்கான விகாசித் பாரத் நிகழ்ச்சி.. டெல்லியில் பிரம்மாண்டம்</a>
<h3>துடிதுடித்து பலியான சிறுமி - பதைபதைக்க வைக்கும் வீடியோ</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">TRAGIC | Class 9 Student Killed After Electricity Pole Collapses in UP's Hardoi</p>
A Class 9 student, Ragini Shukla, was killed after an electricity pole suddenly collapsed on her while she was on her way to a grocery store with a friend in Hardoi, Uttar Pradesh. Her friend… <a href="https://t.co/OVoNfGFyD6">pic.twitter.com/OVoNfGFyD6</a>

— Atulkrishan (@iAtulKrishan1) <a href="https://x.com/iAtulKrishan1/status/2084497121085215012?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>100 சதவீதம் என்ற தவறான விளம்பரக் கூற்றுகள்.. டாபர் நிறுவன பொருட்கள் விற்பனை செய்ய தடை &#8211; எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிரடி..</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/fssai-bans-dabur-from-selling-honey-ghee-and-other-products-with-100-percent-claim-know-more-in-details-95594.html</link>	
		<pubDate>Tue, 04 Aug 2026 09:20:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/fssai-bans-dabur-from-selling-honey-ghee-and-other-products-with-100-percent-claim-know-more-in-details-95594.html</guid>
		            
			

    	<description><![CDATA[FSSAI Bans Dabur Product: இதற்கு முன்பும் தவறாக வழிநடத்தும் "100%" விளம்பரக் கூற்றுகளை உடனடியாக நீக்குமாறு டாபர் நிறுவனத்திற்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், நிறுவனம் திருப்திகரமான நடவடிக்கை எடுக்காததால், தற்போது சம்பந்தப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விற்பனையையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/dabur.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="100 சதவீதம் என்ற தவறான விளம்பரக் கூற்றுகள்.. டாபர் நிறுவன பொருட்கள் விற்பனை செய்ய தடை &#8211; எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிரடி.." /></figure><p class="isSelectedEnd"><strong>ஆகஸ்ட் 4, 2026:</strong> 100 சதவீதம்' என்ற தவறாக வழிநடத்தும் விளம்பரக் கூற்றுகளுடன் உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டி, டாபர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதுகுறித்து எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், டாபர் இந்தியா நிறுவனம் தேன், ஆப்பிள் சைடர் வினிகர், விர்ஜின் தேங்காய் எண்ணெய், எள்ளெண்ணெய், பசு நெய், தேங்காய் தண்ணீர், தேங்காய் பால் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை "100% இயற்கையானது", "100% தூய்மையானது", "100% தூய்மை உத்தரவாதம்", "100% ஆர்கானிக்", "100% இளநீர்" போன்ற வாசகங்களுடன் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<h3>தவறான கூற்றுகளுடன் உணவு பொருட்கள்:</h3>
<p class="isSelectedEnd">இந்தக் கூற்றுகள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (விளம்பரம் மற்றும் கூற்றுகள்) விதிகள், 2018-ஐ மீறுவதாக எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தெரிவித்துள்ளது. குறிப்பாக, "100%" போன்ற கூற்றுகள் தெளிவற்றவை, சரிபார்க்க முடியாதவை மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடியவை என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/india/friendship-day-two-friends-drowned-in-the-waves-at-vizag-beach-95203.html"> பிரண்ட்ஷிப் டேவில் ஒன்று கூடிய நண்பர்கள்.. இருவரை பிரித்து சென்ற அலை.. சோகத்தில் ஆந்திரா!</a>
<p class="isSelectedEnd">மேலும், டாபரின் ஹிமாலயன் ஆர்கானிக் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ஆர்கானில் தேன் தயாரிப்புகளில், செல்லுபடியாகும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆர்கானிக் அங்கீகாரம் இல்லாமல் ஜெய்விக் பாரத் லோகோ பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும், டாபர் ஹோம்மேட் தேங்காய் பால் தயாரிப்பில் "100% தூய்மை என்ற கூற்று இடம்பெற்றிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கூட்டு உணவுப் பொருட்களில் இதுபோன்ற கூற்றுகளை பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தெரிவித்துள்ளது.</p>

<h3>விற்பனையை உடனடியாக நிறுத்த உத்தரவு:</h3>
<p class="isSelectedEnd">இதற்கு முன்பும் தவறாக வழிநடத்தும் "100%" விளம்பரக் கூற்றுகளை உடனடியாக நீக்குமாறு டாபர் நிறுவனத்திற்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், நிறுவனம் திருப்திகரமான நடவடிக்கை எடுக்காததால், தற்போது சம்பந்தப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விற்பனையையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/boy-dies-after-swallowing-a-ball-found-in-a-packet-of-chips-in-karnataka-95424.html">சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பந்து உயிரை பறித்தது.. கர்நாடகாவில் 5 வயது சிறுவன் பரிதாப பலி!</a>
<p class="isSelectedEnd">மேலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உத்தரவிட்டுள்ளது.</p>

<h3>டாபர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்:</h3>
<p class="isSelectedEnd">இதுகுறித்து டாபர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ -யின் நோட்டீஸ் கிடைத்துள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள உள்ளடக்கங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.</p>
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் உணவுப் பொருள் விற்பனையாளர்கள், எரிசக்தி பான உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபான நிறுவனங்கள் மீதும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பாஜகவின் கோட்டையை தகர்த்த பிரசாந்த் கிஷோர்; பாங்கிபூர் இடைத்தேர்தலில் வரலாற்று வெற்றி</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/prashant-kishor-wins-bankipur-bypoll-deals-major-blow-to-bjps-stronghold-in-bihar-95551.html</link>	
		<pubDate>Mon, 03 Aug 2026 22:08:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/prashant-kishor-wins-bankipur-bypoll-deals-major-blow-to-bjps-stronghold-in-bihar-95551.html</guid>
		            
			

    	<description><![CDATA[Bankipur Bypoll: தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ஜன சுராஜ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர். இந்த வெற்றி பீகார் அரசியலில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pk-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பாஜகவின் கோட்டையை தகர்த்த பிரசாந்த் கிஷோர்; பாங்கிபூர் இடைத்தேர்தலில் வரலாற்று வெற்றி" /></figure><strong>ஆகஸ்ட் 3, 2026:</strong> பீகாரின் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஜன சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட இந்தத் தொகுதியில், முதல் முறையாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றது பீகார் அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
<h3>பாஜகவின் கோட்டையாக இருந்த பாங்கிபூர்:</h3>
1995ஆம் ஆண்டு முதல் பாங்கிபூர் தொகுதியில் பாஜக அல்லது அதன் வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர். ஆரம்பத்தில் நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவும், பின்னர் நிதின் நவீனும் இந்தத் தொகுதியில் பாஜகவின் ஆதிக்கத்தை தக்க வைத்திருந்தனர். ஆனால், இந்த முறை அந்த ஆதிக்கத்திற்கு பிரசாந்த் கிஷோர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மொத்தம் 31 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பிரசாந்த் கிஷோர் 63,203 வாக்குகள் பெற்று 18,953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா 44,250 வாக்குகளும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வேட்பாளர் ரேகா குப்தா 14,085 வாக்குகளும் பெற்றனர்.
<h3>முதல்முறையாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வெற்றி:</h3>
பாட்னாவில் உள்ள இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில், தேர்தல் முடிவு பீகார் அரசியலில் பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, முதல் சுற்று முதல் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகித்தார். 31 சுற்றுகளில் 22வது சுற்று முடிவிலேயே அவர் 12,809 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்தத் தேர்தல் ஜன சுராஜ் மற்றும் பாஜக இடையேயான நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியான ஆர்ஜேடி மிகவும் பின்தங்கியது. இதன் மூலம் பாங்கிபூர் தொகுதி வாக்காளர்கள் ஆர்ஜேடிக்கு தெளிவான மறுப்பை தெரிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/boy-dies-after-swallowing-a-ball-found-in-a-packet-of-chips-in-karnataka-95424.html">சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பந்து உயிரை பறித்தது.. கர்நாடகாவில் 5 வயது சிறுவன் பரிதாப பலி!</a>

பாஜக மூத்த தலைவர் நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாங்கிபூர் தொகுதி காலியானது. இதையடுத்து, பாஜக இளம் முகமான நீரஜ் குமார் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தது. எனினும், உள்ளூர் மக்களின் மனநிலையை சரியாக கணிக்கத் தவறியதே தோல்விக்குக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
<h3>வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள்:</h3>
மறுபுறம், தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக நகர்ப்புறத் தொகுதியான பாங்கிபூரை தேர்வு செய்த பிரசாந்த் கிஷோர், அதில் வெற்றியும் கண்டுள்ளார். குறிப்பாக, உள்ளூர் மேல்சாதி வாக்காளர்களின் அதிருப்தி மற்றும் மாற்றத்தை விரும்பிய இளைஞர்களின் ஆதரவு அவருக்கு சாதகமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ஜன சுராஜ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர். இந்த வெற்றி பீகார் அரசியலில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பந்து உயிரை பறித்தது.. கர்நாடகாவில் 5 வயது சிறுவன் பரிதாப பலி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/boy-dies-after-swallowing-a-ball-found-in-a-packet-of-chips-in-karnataka-95424.html</link>	
		<pubDate>Mon, 03 Aug 2026 15:09:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/boy-dies-after-swallowing-a-ball-found-in-a-packet-of-chips-in-karnataka-95424.html</guid>
		            
			

    	<description><![CDATA[Boy Dies After Swallowing Ball: கர்நாடக மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பந்தை விழுங்கிய சிறுவன் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/boy-dies.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பந்து உயிரை பறித்தது.. கர்நாடகாவில் 5 வயது சிறுவன் பரிதாப பலி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/india/pm-modi-inaugurated-alluri-sitarama-raju-international-airport-in-bhogapuram-vizianagaram-district-95005.html" target="_blank" rel="noopener">கர்நாடகா</a> மாநிலம், மைசூர் மாவட்டத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒரு சிறிய பிளாஸ்டிக் பந்தை விழுங்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். ஹன்சூர் தாலுகாவில் கெளரிபுராவை சேர்ந்த சந்தோஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் ஒரே மகனான முகுந்த் மயூருக்கு, அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த சிப்ஸ் பாக்கெட்டுக்குள் ஒரு பந்து இருந்ததாக அவரது தாத்தா கூறியுள்ளார். அந்த பந்தை சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதனை அந்த சிறுவன் விழுங்கியதாக தெரிகிறது. இதனால், அந்த பந்து சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
<h3>செம்பருத்தி பூவை சாப்பிட்ட 6.5 மாத குழந்தை பலி</h3>
சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினர் எந்தவிதமான புகார் அளிக்கவில்லை என்று பிலிகெரே போலீசார் தெரிவித்துள்ளனர். நாயக்கன் மனைவி கௌரம்மா, கௌரிபுரா கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்தார். கடந்த மார்ச் மாதம், மைசூர் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீட்டின் வெளியே கிடந்த செம்பருத்தி பூவின் ஒரு பகுதியை 6.5 மாத குழந்தை சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது, அந்த குழந்தை மூச்சு விட சிரமப்படுவதை கண்டதும், முதல் உதவிக்காக வந்த குழந்தை உடனடியாக ஹனகோட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/pm-modi-inaugurated-alluri-sitarama-raju-international-airport-in-bhogapuram-vizianagaram-district-95005.html" target="_blank" rel="noopener">ஆந்திராவில் ரூ.17,912 கோடி வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி</a>
<h3>தீவிர சிகிச்சையில் உயிரிழந்த குழந்தை</h3>
பின்னர், தீவிர சிகிச்சைக்காக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு, தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. மேலும், தொட்ட ஹெஜ்ஜூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் மற்றும் நாவ்யா தம்பதியின் 2- ஆவது குழந்தையான சின்மய் கெளடா என அந்த குழந்தை அடையாளம் காணப்பட்டது.
<h3>ஹன்சூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை</h3>
உடனடியாக, அந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிறிது நேரத்தில் அந்த குழந்தை பரிதாபமாக உயர்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஹன்சூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/keralam-landslides-death-toll-rises-to-7-several-feared-trapped-red-alert-in-8-districts-95097.html" target="_blank" rel="noopener">கேரளத்தில் வெளுத்து வாங்கும் கனமழை – 7 பேர் மரணம் – அதிர்ச்சி தகவல்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிரண்ட்ஷிப் டேவில் ஒன்று கூடிய நண்பர்கள்.. இருவரை பிரித்து சென்ற அலை.. சோகத்தில் ஆந்திரா!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/friendship-day-two-friends-drowned-in-the-waves-at-vizag-beach-95203.html</link>	
		<pubDate>Sun, 02 Aug 2026 14:50:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/friendship-day-two-friends-drowned-in-the-waves-at-vizag-beach-95203.html</guid>
		            
			

    	<description><![CDATA[Visakhapatnam: பிரண்ட்ஷிப் டேவை முன்னிட்டு, 7 பேர் கொண்ட நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க கங்காவரம் கடற்கரைக்குச் சென்றனர். இந்த நண்பர்கள் கூட்டம் கடற்கரையில் மிகவும் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர். அந்த நேரத்தில் கடற்கரைக்கு அருகில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​நீது (18) எதிர்பாராதவிதமாகக் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, தாமோதர் அவரைக் காப்பாற்றுவதற்காகத் தண்ணீரில் குதித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/andra-tragedy.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிரண்ட்ஷிப் டேவில் ஒன்று கூடிய நண்பர்கள்.. இருவரை பிரித்து சென்ற அலை.. சோகத்தில் ஆந்திரா!" /></figure>உலகம் முழுவதும் ஆகஸ்ட் முதல் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரண்ட்ஷிப் டே கொண்டாடப்படும். அந்தவகையில், 2026 ஆகஸ்ட் 2ம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரண்ட்ஷிப் டேவும் <strong>(Friendship Day)</strong> கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நண்பர்கள் ஒன்று கூடி ஊர் சுற்றுவார்கள். சிறு வயது நண்பர்கள் முதல் தற்போதைய ஆபிஸ் நண்பர்கள் வரை ஒன்றாக இணைந்து பல சுற்றி பார்க்கும் இடங்களுக்கு சென்று ஜாலியாக பேசி மகிழ்வார்கள். அந்தவகையில், <a href="https://www.tv9tamilnews.com/india/pm-modi-inaugurated-alluri-sitarama-raju-international-airport-in-bhogapuram-vizianagaram-district-95005.html">ஆந்திராவில்</a> <strong>(Andra Pradesh)</strong> இன்று நண்பர்கள் ஒன்று கூடிய நிகழ்வின்போது ஏற்பட்ட பயங்கரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் விசாகப்பட்டினத்தின் பெடகண்டியாடா மண்டலத்தில் உள்ள பழைய கங்காவரம் கடற்கரையில் ஒரு இளம் பெண்ணும் ஒரு <a href="https://www.tv9tamilnews.com/india/pm-modi-released-another-video-in-instagram-stating-that-we-should-forgive-the-youngsters-94969.html">இளைஞரும்</a> ஒன்றாக புகைப்படம் எடுத்தப்போது அலை அடித்து காணாமல் போயுள்ளனர்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/india/pm-modi-inaugurated-alluri-sitarama-raju-international-airport-in-bhogapuram-vizianagaram-district-95005.html">ஆந்திராவில் ரூ.17,912 கோடி வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி</a>
<h3>காப்பாற்ற போய் காணாமல் போன சோகம்:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="te">ఫ్రెండ్‌షిప్ డే నాడు తీవ్ర విషాదం

వైజాగ్ బీచ్‌లో అలల తాకిడికి గల్లంతైన ఇద్దరు స్నేహితులు

ఫ్రెండ్‌షిప్ డే వేడుకల కోసం బీచ్‌కు వెళ్లి ఫొటోలు దిగుతుండగా, ఒక్కసారిగా దూసుకొచ్చిన అల

దీంతో సముద్రంలోకి కొట్టుకుపోయిన పెదజాలరిపేటకు చెందిన నీతు అనే యువతి, నీతును కాపాడబోయి గల్లంతైన రాము… <a href="https://t.co/VAAx7xnIC1">pic.twitter.com/VAAx7xnIC1</a></p>
— Telugu Scribe (@TeluguScribe) <a href="https://x.com/TeluguScribe/status/2083815882417946827?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
பிரண்ட்ஷிப் டேவை முன்னிட்டு, 7 பேர் கொண்ட நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க கங்காவரம் கடற்கரைக்குச் சென்றனர். இந்த நண்பர்கள் கூட்டம் கடற்கரையில் மிகவும் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர். அந்த நேரத்தில் கடற்கரைக்கு அருகில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​நீது (18) எதிர்பாராதவிதமாகக் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, தாமோதர் அவரைக் காப்பாற்றுவதற்காகத் தண்ணீரில் குதித்தார். இதன்போது, பலத்த அலைகள் காரணமாக காப்பாற்ற சென்ற தாமோதர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். அலை அதிகமாக இருந்ததால் இருவரும் அலையில் சிக்கி காணாமல் போயினர்.

உடனடியாக, நண்பர்கள் தங்களைச் சுற்றியிருந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி, கடற்கரை உயிர்காப்பாளர்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது. கடற்கரைக்குச் சென்றவர்களில் 4 பேர் இளம் பெண்கள் என்றும், 3 பேர் இளம் ஆண்கள் என்றும் கூறப்படுகிறது. தாமோதர் இன்னும் சில நாட்களில் கனகமகாலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்யவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/india/heavy-rains-lash-india-assam-death-toll-reaches-80-kerala-hit-by-flash-floods-red-alerts-issued-95144.html">நாடு முழுவதும் கனமழை தீவிரம் – அசாமில் 80 பேர் பலி… கேரளாவில் வெள்ளப்பெருக்கு</a>

இதற்கிடையில், நீது தனது இடைநிலை இரண்டாம் ஆண்டில் படித்து வருகிறார். காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அங்கு வந்து, தங்கள் உறவினர்கள் குறித்த கவலையில் அழுது கொண்டிருக்கின்றனர். அதுவரை அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த நண்பர்கள் திடீரெனக் காணாமல் போனதால், மற்றவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது, ​​காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>போதையில்லா இளைஞர்களுக்கான விகாசித் பாரத் நிகழ்ச்சி.. டெல்லியில் பிரம்மாண்டம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/nasha-mukt-yuva-for-viksit-bharat-program-held-grandly-at-akshardham-in-delhi-full-details-95204.html</link>	
		<pubDate>Sun, 02 Aug 2026 14:28:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/nasha-mukt-yuva-for-viksit-bharat-program-held-grandly-at-akshardham-in-delhi-full-details-95204.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஞாயிற்றுக்கிழமையன்று, டெல்லியில் உள்ள BAPS சுவாமிநாராயண் அக்சர்தாம், 'விகாசித் பாரதத்திற்கான போதை இல்லாத இளைஞர்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகப் பங்கேற்று இளைஞர்களிடையே உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சி குறித்து பார்க்கலாம்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/nasha-mukt-yuva.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="போதையில்லா இளைஞர்களுக்கான விகாசித் பாரத் நிகழ்ச்சி.. டெல்லியில் பிரம்மாண்டம்" /></figure>மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதே நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள அனைத்து BAPS மையங்களிலும் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரார்த்தனை மற்றும் துன் இசையுடன் கூட்டம் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வளர்ந்த இந்தியா (விகாசித் பாரத்) என்ற இலக்கை அடைய, இளைஞர்கள் போதைப்பழக்கங்களிலிருந்து முழுமையாக விலகி இருக்க வேண்டும் என்று கூறினார். போதைப்பொருட்களிலிருந்து விடுபட்ட இளைஞர் சக்தியே நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் அவர் கூறினார். போதைப்பழக்கமற்ற இந்தியாவைக் கட்டமைப்பதில் ஒவ்வொரு இளைஞரும் பங்காளராக இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். பிரதமரின் உரைக்கு முன்னதாக, BAPS அமைப்பின் மூத்த சாதுவான ஈஸ்வர் சரண்தாஸ் சுவாமி, பகவான் சுவாமிநாராயணன் போதித்த போதைப்பழக்கமற்ற வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள இந்த பிரச்சாரத்திற்கு இளைஞர்கள் தங்களின் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், BAPS ஏற்பாடு செய்திருந்த இளைஞர் நிகழ்ச்சிகளைப் பாராட்டினார். இளைஞர்கள் தங்களது ஆற்றலை ஆக்கப்பூர்வமான பணிகளில் செலுத்தி, நாட்டின் வளர்ச்சியில் பங்காளிகளாக மாற வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகள், மை பாரத் தன்னார்வலர்கள், என்.எஸ்.எஸ் உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் இணையவழியாகப் பங்கேற்றனர். BAPS கடந்த மூன்று தசாப்தங்களாக போதைப்பழக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக பெரிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

1997-ல் குஜராத்தில் போதைப்பழக்க விடுதலை முகாம்களுடன் தொடங்கிய இந்த இயக்கம், 2000-ல் குழந்தைகள் மூலமான வீடு வீடாகச் சென்று பிரச்சாரம், 2007-ல் நாடு முழுவதும் 21 லட்சம் மக்களைச் சென்றடைந்த விழிப்புணர்வுத் திட்டம், மற்றும் 2022-ல் ஆசாதி கா அம்ரித் மகோத்சவத்தின் போது ஒரு மாபெரும் பிரச்சாரம் எனத் தொடர்ந்தது. பிரமுக் சுவாமி மஹாராஜின் உத்வேகத்தால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் போதைப்பழக்கங்களைக் கைவிட்டு, ஒரு நன்னெறி வாழ்க்கையைத் தழுவியுள்ளனர், மேலும் இந்த சேவைத் திட்டங்கள் தற்போது மஹந்த் சுவாமி மஹாராஜின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் &#8211;  பிரச்சார நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/prime-minister-narendra-modi-launches-nasha-mukt-yuva-for-viksit-bharat-sankalp-abhiyan-details-in-tamil-95184.html</link>	
		<pubDate>Sun, 02 Aug 2026 11:17:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/prime-minister-narendra-modi-launches-nasha-mukt-yuva-for-viksit-bharat-sankalp-abhiyan-details-in-tamil-95184.html</guid>
		            
			

    	<description><![CDATA['வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்' (Nasha Mukt Yuva for Viksit Bharat) என்ற உறுதிமொழிப் பிரச்சார நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபற்றது. இதில் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pm-modi-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் &#8211;  பிரச்சார நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி" /></figure>நாட்டை போதைப்பொருள் இல்லாத இந்தியாவாக மாற்றும் நோக்கில், மத்திய அரசு மற்றொரு முக்கிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று காணொளிக் காட்சி மூலம் 'போதைப்பொருள் இல்லாத இளைஞர்களுக்கான விக்ஷித் பாரத் சங்கல்ப்' பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இளைஞர்கள் போதைப்பொருட்களிலிருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான சமுதாயத்தை உருவாக்குவதில் பங்காளிகளாக ஆக வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வு, 100 வாரங்கள் நடைபெறும் நாடு தழுவிய 'ஜன் பாகிதாரி' பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறித்தது. நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இணையவழியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மை பாரத் தன்னார்வலர்கள், தேசிய சேவைத் திட்ட (NSS) தன்னார்வலர்கள், இளைஞர் மன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில்துறைகளின் இளைஞர் பிரிவுகள் மற்றும் 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 100 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். போதைப்பொருட்களின் தீய விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, விளையாட்டுப் போட்டிகள், நடைப்பயணங்கள், தியான முகாம்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பேரணிகள், தெரு நாடகங்கள், கலந்துரையாடல் மன்றங்கள், ஓவியப் போட்டிகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

இந்த பிரச்சாரத்தின் மூலம் மத்திய அரசின் முக்கிய நோக்கம், இளைஞர்களை போதைப்பொருட்களிலிருந்து விலக்கி வைப்பது மட்டுமல்லாமல், அவர்களைத் தங்கள் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கான தூதுவர்களாக மாற ஊக்குவிப்பதும் ஆகும். நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றும், 'விக்ஸித் பாரத்' இலக்கை அடைவதில் போதைப்பொருட்களை ஒழிப்பது அனைவரின் பொறுப்பு என்றும் பிரதமர் மோடி இந்த நிகழ்வில் தெளிவுபடுத்தினார்.
<h3>வீடியோ</h3>
<iframe title="LIVE: PM Modi launches ‘Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan’ via VC" src="https://www.youtube.com/embed/uhbZenc8jfE" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நாடு முழுவதும் கனமழை தீவிரம் &#8211; அசாமில் 80 பேர் பலி&#8230; கேரளாவில் வெள்ளப்பெருக்கு</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/heavy-rains-lash-india-assam-death-toll-reaches-80-kerala-hit-by-flash-floods-red-alerts-issued-95144.html</link>	
		<pubDate>Sat, 01 Aug 2026 22:52:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/heavy-rains-lash-india-assam-death-toll-reaches-80-kerala-hit-by-flash-floods-red-alerts-issued-95144.html</guid>
		            
			

    	<description><![CDATA[நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை பல மாநிலங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கேரளாவில் வெறும் இரண்டு மணி நேரத்தில் 300 மி.மீ மழை பெய்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/heavy-rain-in-assam-keralam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நாடு முழுவதும் கனமழை தீவிரம் &#8211; அசாமில் 80 பேர் பலி&#8230; கேரளாவில் வெள்ளப்பெருக்கு" /></figure>இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-issues-orange-alert-very-heavy-rain-expected-in-3-tamil-nadu-districts-95033.html" target="_blank" rel="noopener">கனமழை</a> பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அசாம், கேரளா, குஜராத், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு, பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளன. பல பகுதிகளில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
<h3>அசாமில் வெள்ளம் காரணமாக 80 பேர் பலி</h3>
அசாமில் வெள்ள நிலைமை தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது. சிவசாகர் மற்றும் சாரைடியோ மாவட்டங்களில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. பேரிடர் மேலாண்மை அமைப்பின் தகவலின்படி, சிவசாகர், கோலாகாட், ஜோர்ஹாட், நாகான் மற்றும் சாரைடியோ ஆகிய மாவட்டங்களில் 1.92 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 379 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், 15,430 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dk-shivakumar-stated-cm-vijay-need-not-visit-karnataka-for-talks-regarding-the-cauvery-water-and-mekedatu-dam-issue-94778.html">காவிரி விவகாரம்.. முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்… டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பு!</a></strong>
<h3>கேரளத்தில் கனமழை தீவிரம்</h3>
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் வெறும் 2 மணி நேரத்தில் 300 மி.மீ அதிகமான மழை பதிவானதைத் தொடர்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ரன்னி நகரின் பல பகுதிகள் இடுப்பளவு நீரில் மூழ்கின. இந்த நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் காவல்துறை, தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
<h3>குஜராத்தில் மழையின் பாதிப்புகள்</h3>
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள அவுரங்கா ஆற்றின் அருகே வெள்ள நீரில் சிக்கியிருந்த 3 பேரை தீயணைப்புத் துறையினர் வெற்றிகரமாக மீட்டனர். ஜூலை 23 முதல் 27, 2026 வரை பெய்த கனமழையால் மூடப்பட்ட சாலைகள் ஏற்கனவே மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்தது. தென் குஜராத் அதிக பாதிப்புகளைச் சந்தித்த போதிலும், போர்க்கால அடிப்படையில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்களும் கனரக இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டு, 98 சதவிகிதத்திற்கும் அதிகமான சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
<h3>ஒடிசாவில் தீவுகளாக மாறிய கிராமங்கள்</h3>
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள கனாஸ் வட்டாரத்தில் உள்ள டோகந்தர் கிராம மக்கள், தங்கள் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பெரும்பாலான கிராமங்கள் தீவுகளாக மாறியுள்ளன. குடிநீர், மின்சாரம் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
<h3>ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு</h3>
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ பகுதியில் ஆகஸ்ட் 1, 2026 இன்று அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் பல கடைகள் சேதமடைந்தன. இருப்பினும், உயிரிழப்பு ஏதுமில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/india/cauvery-dispute-dk-shivakumar-refuses-water-release-to-tamilnadu-cwma-order-94682.html"> “தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!”.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!</a></strong>
<h3>இமாச்சலப் பிரதேசத்தில் தொடரும் மழை</h3>
தொடர் மழையால் இமாச்சலப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 4, 2026 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்எச்சரித்துள்ளது. இதற்கிடையில், பாண்டோ அணையிலிருந்து கூடுதலாக 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால், பியாஸ் ஆற்றில் நீர்வரத்து சுமார் 36,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஆற்றங்கரைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
<h3>மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் கனமழை</h3>
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில், நாக்பூர்-மும்பை நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்திற்கான இணைப்புச் சாலை கனமழையால் இடிந்து விழுந்தது. அதிகாரிகள் பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கேரளத்தில் வெளுத்து வாங்கும் கனமழை &#8211; 7 பேர் மரணம்  &#8211; அதிர்ச்சி தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/keralam-landslides-death-toll-rises-to-7-several-feared-trapped-red-alert-in-8-districts-95097.html</link>	
		<pubDate>Sat, 01 Aug 2026 19:52:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/keralam-landslides-death-toll-rises-to-7-several-feared-trapped-red-alert-in-8-districts-95097.html</guid>
		            
			

    	<description><![CDATA[கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் வரை உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/keralam-landslides-death-toll-rises.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கேரளத்தில் வெளுத்து வாங்கும் கனமழை &#8211; 7 பேர் மரணம்  &#8211; அதிர்ச்சி தகவல்" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/kerala-minister-ramesh-chennithala-meets-tn-cm-vijay-operation-toofan-chennai-91124.html" target="_blank" rel="noopener">கேரளத்தில்</a> ஆகஸ்ட் 1, 2026 இன்றும் நாளையும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-issues-orange-alert-very-heavy-rain-expected-in-3-tamil-nadu-districts-95033.html" target="_blank" rel="noopener">கனமழை</a> பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் வரை உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 2, 2026 நாளையும் கனமழை வாய்ப்புள்ளதால், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை கிரீன் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கேரளாவின் எந்த மாவட்டத்திலும் சிறப்பு மழை எச்சரிக்கை எதுவும் இல்லை.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/india/cauvery-dispute-dk-shivakumar-refuses-water-release-to-tamilnadu-cwma-order-94682.html"> “தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!”.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!</a></strong>
<h3>கனமழை காரணமாக 7 பேர் மரணம்</h3>
கனமழையால் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்கள் வெள்ள அபாயத்தில் உள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழையால் இந்த மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பம்பையாறு நிரம்பியதையடுத்து, குடியிருப்பு பகுதிகள் மற்றும் ரன்னி நகரம் முற்றிலும் நீரில் மூழ்கியது. மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பலத்த மழையும், மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மற்ற மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-releases-4th-video-in-this-week-and-praised-anti-paper-leak-bill-passed-in-parliament-94679.html">தேர்வு வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை… புதிய சட்ட மசோதாவை வரவேற்று பிரதமர் மோடி வீடியோ வெளியீடு!</a></strong>

கேரள முழுவதும் நேற்றும் இன்றும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மண்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தாயும் மகனும் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பத்தனம்திட்டா ரன்னி அனைத்து பகுதிகளிலும் மூழ்கியது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆந்திராவில் ரூ.17,912 கோடி வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-modi-inaugurated-alluri-sitarama-raju-international-airport-in-bhogapuram-vizianagaram-district-95005.html</link>	
		<pubDate>Sat, 01 Aug 2026 12:32:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-modi-inaugurated-alluri-sitarama-raju-international-airport-in-bhogapuram-vizianagaram-district-95005.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் அமைந்துள்ள அல்லூரி சீதாராமராஜு சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 1) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/go-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆந்திராவில் ரூ.17,912 கோடி வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி" /></figure><strong>ஆகஸ்ட் 1, 2026:</strong> ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் அமைந்துள்ள அல்லூரி சீதாராமராஜு சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 1) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
<h3>சீதாராமராஜு சர்வதேச விமான நிலையம் சிற்ப்புகள்:</h3>
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/WGSfGCVpBOw?si=63lU7HulCjiVZFFI" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
சுமார் ரூ.4,727 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் முனையக் கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள நவீன வசதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, செக்-இன் மையம், பயணிகளுக்கான வசதிகள், விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அமைப்புகள் குறித்து ஜிஎம்ஆர் (GMR) நிறுவன அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். மேலும், விமான நிலையத்தின் மாஸ்டர் பிளான், ஏவியேஷன் ஹப் மற்றும் ஏவியேஷன் எட்யூசிட்டி திட்ட மாதிரிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தில் பழங்குடியின கலைஞர்கள் நடத்திய பாரம்பரிய திம்சா (Dhimsa) நடன நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரசித்து பாராட்டினார்.

பின்னர், ரூ.17,912 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, சில திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற அவர், அங்கு மக்களிடையே உரையாற்றினார்.

வட ஆந்திராவின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு போகாபுரம் சர்வதேச விமான நிலையம் முக்கிய மைல்கல்லாக அமையும் என ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜந்தர் மந்தர் சர்ச்சை: &#8220;வழிதவறிய இளைஞர்களுக்கு சரியான பாதை காட்ட வேண்டும்&#8221; &#8211; பிரதமர் மோடி..</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-modi-released-another-video-in-instagram-stating-that-we-should-forgive-the-youngsters-94969.html</link>	
		<pubDate>Sat, 01 Aug 2026 08:45:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-modi-released-another-video-in-instagram-stating-that-we-should-forgive-the-youngsters-94969.html</guid>
		            
			

    	<description><![CDATA[இளமையில் தவறுகள் நடப்பது இயல்புதான். அதே இளமைதான் அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. சமூகத்தில் கோபம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அந்த இளைஞர்களை தண்டிப்பதோ, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்வதோ, அவர்களை துன்புறுத்துவதோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் வழிதவறிய இளைஞர்கள். அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவது நமது கடமை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/mo-vide-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜந்தர் மந்தர் சர்ச்சை: &#8220;வழிதவறிய இளைஞர்களுக்கு சரியான பாதை காட்ட வேண்டும்&#8221; &#8211; பிரதமர் மோடி.." /></figure><strong>ஆகஸ்ட் 1, 2026:</strong> டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், அதுகுறித்து பிரதமர் மோடி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், "ஜந்தர் மந்தரில் நடந்த சம்பவத்தை நாடும் உலகமும் பார்த்துள்ளது. சில வழிதவறிய இளைஞர்கள் நாகரிகமான சமூகத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்தினர். என்னையும், மறைந்த என் தாயாரையும் அவதூறாக பேசியுள்ளனர். ஆனால் அவதூறான வார்த்தைகளால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது" என்று கூறினார்.
<h3>டெல்லி போராட்டம் குறித்து வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி:</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbdzX-2ztBV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/DbdzX-2ztBV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Narendra Modi (@narendramodi)</a></p>

</div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script>

மேலும், "இளமையில் தவறுகள் நடப்பது இயல்புதான். அதே இளமைதான் அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. சமூகத்தில் கோபம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அந்த இளைஞர்களை தண்டிப்பதோ, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்வதோ, அவர்களை துன்புறுத்துவதோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் வழிதவறிய இளைஞர்கள். அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவது நமது கடமை" என்றார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/cauvery-dispute-dk-shivakumar-refuses-water-release-to-tamilnadu-cwma-order-94682.html">“தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!”.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!</a>

மேலும், "நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகமும் அதே மனப்பான்மையுடன் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற வேண்டும்" என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
<h3>பிரதமர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம்:</h3>
இந்த விவகாரம் தொடர்பாக, ஜூலை 23ஆம் தேதி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கேள்வித்தாள் கசிவு எதிர்ப்பு போராட்டத்தின் போது, 25 வயது பெண் ஒருவர் பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவுகள் 352, 353(1), 356(1) ஆகியவற்றின் கீழ் முதலில் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் 'ஜீரோ எஃப்ஐஆர்' பதிவு செய்யப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைக்காக டெல்லி பாராளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dk-shivakumar-stated-cm-vijay-need-not-visit-karnataka-for-talks-regarding-the-cauvery-water-and-mekedatu-dam-issue-94778.html">காவிரி விவகாரம்.. முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்… டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பு!</a>

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Viral Video : 52 ஆண்டுகளுக்கு பிறந்த பெண் குழந்தை.. கொண்டாடிய குடுபத்தினர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/trending/a-family-celebrates-baby-girl-born-after-52-years-video-goes-viral-on-internet-94835.html</link>	
		<pubDate>Fri, 31 Jul 2026 17:34:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[வைரல் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/trending/a-family-celebrates-baby-girl-born-after-52-years-video-goes-viral-on-internet-94835.html</guid>
		            
			

    	<description><![CDATA[A Family Celebrates Baby Girl Born After 52 Years | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், 52 ஆண்டுகளுக்கு பிறந்த குழந்தையை குடும்பத்தினர் கொண்டாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/viral-video-35.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Viral Video : 52 ஆண்டுகளுக்கு பிறந்த பெண் குழந்தை.. கொண்டாடிய குடுபத்தினர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!" /></figure>ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இந்த உலகில் நம்மை சுற்றி நடைபெறும் பல சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குடும்பத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறந்த பெண் குழந்தையை, அந்த குடும்பம் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>52 ஆண்டுகளுக்கு பிறந்த பெண் குழந்தை - கொண்டாடிய குடும்பம்</h3>
இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் வரவேற்பும், உற்சாகமும் பெண் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. பெரும்பாலான குடும்பங்கள் பெண் குழந்தைகளை பாரமாக பார்ர்கின்றன. இதன் காரணமாக அவர்கள் ஆண் குழந்தைகள் பிற வேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆனால், சில குடும்பங்களோ ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் குழந்தைகளை பெற்று, சிறப்பான முறையில் வளர்க்கின்றனர். இந்த நிலையில், பெண் குழந்தை பிறந்ததற்கு குடும்பமே மகிழ்ச்சியில் கொண்டாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/trending/college-students-gifted-watchman-a-portrait-of-him-video-goes-viral-on-internet-93533.html">Viral Video : காவலாளிக்கு கல்லூரி மாணவிகள் அளித்த பரிசு.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!</a>
<h3>இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbFT87IsZPx/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/DbFT87IsZPx/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dr. Bela Shah Jain (@the_gynaexpert)</a></p>

</div></blockquote>
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பிரச அறைக்கு வெளியே ஏராளமான குடும்பத்தினர் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள், குழந்தை எப்போது பிறக்கும் என ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் ஒருவர் குழந்தை எடுத்து வந்து பெண் குழந்தை என்றதும், அவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகின்றனர். 52 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்ததன் காரணமாக அவர்கள் அத்தனை மகிழ்ச்சியாக உள்ளனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/trending/3-sisters-married-one-man-in-uttar-pradesh-video-goes-viral-on-internet-93200.html">Viral Video : ஒரே ஆணை திருமணம் செய்துக்கொண்ட 3 சகோதரிகள்.. ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியாது என இந்த முடிவை எடுத்ததாக விளக்கம்!</a>

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காவிரி விவகாரம்.. முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்&#8230; டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dk-shivakumar-stated-cm-vijay-need-not-visit-karnataka-for-talks-regarding-the-cauvery-water-and-mekedatu-dam-issue-94778.html</link>	
		<pubDate>Fri, 31 Jul 2026 14:35:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dk-shivakumar-stated-cm-vijay-need-not-visit-karnataka-for-talks-regarding-the-cauvery-water-and-mekedatu-dam-issue-94778.html</guid>
		            
			

    	<description><![CDATA[DK Shivakumar Joseph Vijay Meeting Cancel: காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகா செல்ல இருந்த நிலையில் வர வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/vijay-dl-shiva-kumar.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காவிரி விவகாரம்.. முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்&#8230; டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பு!" /></figure>தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mekedatu-issue-cm-vijay-holds-meeting-with-law-minister-nirmal-kumar-94717.html" target="_blank" rel="noopener">காவிரி நீர் மற்றும் மேகதாது அணை</a> தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு, கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் அழைப்பு விடுத்ததன் பேரில், வருகிற ஆகஸ்ட் 3- ஆம் தேதி ( திங்கள்கிழமை) முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகா செல்ல திட்டமிட்டு இருந்தார். அங்கு, காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதனிடையே, தமிழக முதல்வர் விஜய் வருகைக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
<h3>மேகதாது அணை தமிழகத்துக்கே அதிக பயன் தரும்</h3>
இது தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், இதைத் தொடர்ந்து டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் அணை கட்டுவது கர்நாடகத்தை விட தமிழகத்துக்கு அதிக பயன் தரும். கர்நாடக மாநிலத்தில் வீணாகும் தண்ணீரை மேகதாது அணை கட்டுவதன் மூலமாக சேமிக்க முடியும். மேகதாது அணை கட்டப்படுவதால் கர்நாடகாவில் மின்சார உற்பத்தி மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். கர்நாடக மாநிலத்தின் நல் எண்ணங்களை பாதுகாக்க அனைத்து வகையிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறோம்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mekedatu-issue-cm-vijay-holds-meeting-with-law-minister-nirmal-kumar-94717.html" target="_blank" rel="noopener">கர்நாடகா பயணம் சாத்தியமா? காவிரி நீர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!</a>
<h3>கர்நாடகாவில் அசாதாரண சூழல்</h3>
இதே போல, தமிழகத்தின் நலன்கள் குறித்தும் அம் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. தற்போது, கர்நாடகாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், கர்நாடகாவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனவே, இந்த சூழ்நிலையின் போது, ( கர்நாடக மாநில விருந்தாளி) தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வருகை தந்தால் நன்றாக இருக்காது.
<h3>ரத்தாகிறதா தமிழக முதல்வர் விஜய் பயணம்</h3>
இதன் காரணமாக மற்றொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருந்து உரிய நேரம் வரும் போது இருவரும் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்வோம். இக்கட்டான இந்த சூழலில் அவசரப்பட்டு முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார். இதனால், தமிழக முதல்வர் விஜய் கர்நாடக பயணம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/eps-slams-cm-vijay-over-cauvery-dispute-and-farmer-crop-loan-waiver-94739.html" target="_blank" rel="noopener">“காவிரி விவகாரத்தில் வாய் மூடி மௌனமாக இருக்கும் முதல்வர் விஜய்!”.. இபிஎஸ் கடும் கண்டனம்!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!&#8221;.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/cauvery-dispute-dk-shivakumar-refuses-water-release-to-tamilnadu-cwma-order-94682.html</link>	
		<pubDate>Fri, 31 Jul 2026 07:54:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/cauvery-dispute-dk-shivakumar-refuses-water-release-to-tamilnadu-cwma-order-94682.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கனஅடி நீர் திறக்கக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையிலும், நீர் திறக்க இயலாது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மறுத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக ஞாயிறன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/karnataka-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!&#8221;.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!" /></figure><strong>சென்னை, ஜூலை 31:</strong> காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/management-authority-has-ordered-the-release-of-water-from-the-cauvery-river-in-karnataka-to-tamil-nadu-94545.html" target="_blank" rel="noopener">3,500 கனஅடி நீர் திறந்துவிட</a> வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், தங்களது மாநிலத்தில் போதிய நீர் இருப்பு இல்லை எனக் கூறித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்பதில் கர்நாடக அரசு மீண்டும் கடுமையான பிடிவாதம் காட்டி வருகிறது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/neet-debate-parliament-admk-thambidurai-vs-dmk-tiruchi-siva-dispute-94676.html">நீட் தேர்வு.. நாடாளுமன்றத்தில் திமுக – அதிமுக எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்..</a></strong>
<h3>காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்:</h3>
டெல்லியில் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது ஆலோசனைக் கூட்டம், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு முன்னதாக அளித்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், பற்றாக்குறை கால நீர்ப் பங்கீட்டு விதிகளின் கீழ் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தொடர்ச்சியாக வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் நீர் திறக்க வேண்டும் என்று ஆணையம் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது.
<h3>தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தல்:</h3>
இக்கூட்டத்தில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்ட தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள், குறுவைச் சாகுபடி மற்றும் தமிழகக் குடிநீர்த் தேவைகளைக் கருத்தில் கொண்டு உடனடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும் என உறுதியாக வலியுறுத்தினர். ஆனால், கர்நாடக அரசு அதிகாரிகள் தங்களால் நீர் திறக்க முடியாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
<h3>தண்ணீர் திறக்க முடியாது:</h3>
ஆணையத்தின் உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கர்நாடக அரசின் நிலையைத் தெளிவுபடுத்தினார். "கர்நாடகாவில் உள்ள அணைகளில் தற்போதைக்குக் குடிநீர்த் தேவைக்கே போதுமான அளவு நீர் மட்டுமே உள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது. இந்தச் சிக்கலான சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம்.

மேலும், காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து நேரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் வரவுள்ளார். இரு மாநிலங்களின் ஒட்டுமொத்த நலன்களையும் பாதுகாக்கும் வகையில், மனப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமானத் தீர்வைக் காண முயல்வோம்" என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/management-authority-has-ordered-the-release-of-water-from-the-cauvery-river-in-karnataka-to-tamil-nadu-94545.html">தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!</a></strong>
<h3>கொதிப்பில் தமிழக விவசாயிகள்:</h3>
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளைத் தொடர்ச்சியாக மதிக்காமல் தண்ணீர் தர மறுத்து வரும் கர்நாடக அரசின் இந்த அடாவடிப் போக்கிற்குத் தமிழக அரசியல் தலைவர்களும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக அரசு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி அவசர மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தேர்வு வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை&#8230; புதிய சட்ட மசோதாவை வரவேற்று பிரதமர் மோடி வீடியோ வெளியீடு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-releases-4th-video-in-this-week-and-praised-anti-paper-leak-bill-passed-in-parliament-94679.html</link>	
		<pubDate>Fri, 31 Jul 2026 07:07:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-releases-4th-video-in-this-week-and-praised-anti-paper-leak-bill-passed-in-parliament-94679.html</guid>
		            
			

    	<description><![CDATA[கேள்வித்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் அமர்வு நீதிமன்றங்களை சிறப்பு விரைவு நீதிமன்றங்களாக அறிவிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வழக்குகளை முடிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/mo-vi-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தேர்வு வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை&#8230; புதிய சட்ட மசோதாவை வரவேற்று பிரதமர் மோடி வீடியோ வெளியீடு!" /></figure><strong>ஜூலை 31, 2026:</strong> தேர்வுக் வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், தேர்வு முறையை மேலும் நம்பகத்தன்மையுடன் மாற்றவும் கொண்டு வரப்பட்டுள்ள பொது தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா–2026 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் கல்வி முறை மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நான்காவது முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த மசோதா தேர்வு முறையை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.
<h3>ஆண்டி பேப்பர் லீக் மசோதாவை வரவேற்று வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி:</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbbMBmPTOYy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/DbbMBmPTOYy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Narendra Modi (@narendramodi)</a></p>

</div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script>
இந்த மசோதா, வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதுடன், இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் வகையிலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மசோதா புதன்கிழமை மக்களவையிலும், வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

நேற்று இரவு வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடி கூறியதாவது: "கடந்த பல தசாப்தங்களாக மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் கேள்வித்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே கல்வி முறையில் சீர்திருத்தம் அவசியமாகியுள்ளது. தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் கேள்வித்தாள் கசிவு கும்பல்கள், தேர்வு மாஃபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவே கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
<h3>நான் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது:</h3>
நான் அளித்த வாக்குறுதியின்படி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இரு அவைகளிலும் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. தற்போது இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நம்பகமான தேர்வு முறையை உருவாக்குவதில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இத்தகைய சூழ்நிலைகள் நீண்ட காலம் நீடிக்க அனுமதிக்க மாட்டோம். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
<h3>இந்த மசோதா சொல்வது என்ன?</h3>
புதிய சட்டத் திருத்தத்தின்படி, கேள்வித்தாள் கசிவு அல்லது தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். அமைப்புசார்ந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடிக்கும் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/vande-mataram-bill-passed-in-lok-sabha-gets-national-anthem-equivalent-status-94574.html">வந்தே மாதரம்’ மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் – கனிமொழி எதிர்ப்பு</a>

மேலும், கேள்வித்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் அமர்வு நீதிமன்றங்களை சிறப்பு விரைவு நீதிமன்றங்களாக அறிவிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வழக்குகளை முடிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
<h3>கடந்த ஒரு வாரத்தில் 4 வீடியோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி:</h3>
கடந்த ஜூலை 23ஆம் தேதி வெளியிட்ட முதல் இன்ஸ்டாகிராம் வீடியோவில், கேள்வித்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான நடவடிக்கைகளுக்காக புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜூலை 24ஆம் தேதி, தனது பதிவுக்கு இளைஞர்கள் வழங்கிய பயனுள்ள ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுடனான தனது உறவு மேலும் வலுப்பெறும் என்று கூறினார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/pm-chairs-ccs-meeting-to-review-ongoing-west-asia-conflict-94617.html">வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு – பிரதமர் மோடி முக்கிய உத்தரவு</a>

ஜூலை 26ஆம் தேதி வெளியிட்ட மற்றொரு வீடியோவில், இந்தியாவின் தேர்வு முறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் வகையில், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்தார்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சமையல் செய்ய தாமதம்.. மனைவியின் தலையை வெட்டி மரத்தில் தொங்க விட்ட கொடூர கணவன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/man-brutally-killed-his-wife-and-hanged-her-head-in-tree-shocking-incident-in-bihar-94664.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 23:10:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/man-brutally-killed-his-wife-and-hanged-her-head-in-tree-shocking-incident-in-bihar-94664.html</guid>
		            
			

    	<description><![CDATA[Husband Killed Wife Over Cooking In Bihar | பீகாரில் சமையல் செய்ய தாமதமான நிலையில், ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் தலையை வெட்டி வீட்டின் முன்பு இருக்கும் மரத்தில் தொங்க வைத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/bihar-crime.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சமையல் செய்ய தாமதம்.. மனைவியின் தலையை வெட்டி மரத்தில் தொங்க விட்ட கொடூர கணவன்!" /></figure><strong>பாட்னா, ஜூலை 30 :</strong> பீகார் <strong>(Bihar)</strong> மாநில, ஜெனாபாத் பகுதியை சேர்ந்தவர் குணால். இவருக்கு திருமணமாகி அன்ஷி என்ற என்ற 25 வயது மனைவி இருந்துள்ளார். குமார், வேலைக்கு செல்லாமல் எப்போதும் மது போதையில் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் காரணமாக கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான், நேற்று (ஜூலை 29, 2026) குணாலின் குடும்பத்தினர் வயலுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அன்ஷி வீட்டில் இருந்துக்கொண்டு, குடும்பத்திற்காக உணவு சமைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
<h3>உடனடியாக சாப்பாடு வேண்டும் என சண்டை போட்ட குணால்</h3>
வேலைக்கு சென்ற இடத்தில் குணால், தனது நண்பர்கள் உடன் இணைந்து மது குடித்துள்ளார். அப்போது தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு சென்ற அவர், உடனடியாக சாப்பாடு பரிமாற வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அன்ஷி, உணவு தயாராக்கிக்கொண்டு இருக்கிறது. சிறிது நேரத்தில் முழுவதுமாக தயாராகிவிடும்  என்று கூறியுள்ளார். ஆனால், அதனை கேட்டதும் குணாலுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/cauvery-row-sparks-protest-in-karnataka-vijay-posters-torn-outside-jana-nayagan-theatres-94504.html">கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு – தீவிரமடையும் காவிரி பிரச்னை</a>
<h3>சாப்பாட்டால் கணவன் - மனைவி இடையே சண்டை</h3>
அப்போது அவர் அன்ஷியிடம் ஏன் இவ்வளவு தாமதமாக சமையல் செய்கிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அன்ஷி, இன்னும் சற்றும் நேரத்தில் சாப்பாடு தயாராகிவிடும் என கூறியுள்ளார். இந்த நிலையில், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற குணால், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து, மனைவியை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அன்ஷி தனது கணவரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால்,  குணால் அவரது கழுத்தில் கோடாரியால் வெட்டியதில் அன்ஷியின் தலை துண்டாக விழுந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/parliament-monsoon-session-lok-sabha-passes-anti-paper-leak-bill-after-debate-94261.html">தேர்வுத் தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டம்.. ஆண்டி பேப்பர் லீக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்</a>

பிறகு தனது மனைவியின் தலையை வீட்டின் முன்பு இருக்கும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்திருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குணாலை கைது செய்த நிலையில் அன்ஷியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பழைய வாகனங்களும் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாமா?  &#8211; மத்திய அரசு விளக்கம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/centre-rejects-claims-on-e20-petrol-says-no-widespread-engine-damage-reported-94646.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 21:06:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/centre-rejects-claims-on-e20-petrol-says-no-widespread-engine-damage-reported-94646.html</guid>
		            
			

    	<description><![CDATA[எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் 2023க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களும் E20 பெட்ரோலை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/e20-petrol-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பழைய வாகனங்களும் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாமா?  &#8211; மத்திய அரசு விளக்கம்" /></figure>எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் 2023க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களும் E20 பெட்ரோலை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என்றும், இ20 காரணமாக நாடு முழுவதும் வாகனங்களின் எஞ்சின் சேதமடைந்ததாக எந்த உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
<h3>பழைய வாகனங்களும் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாமா?</h3>
மேலும், மாருதி சுசுகி, டொயோட்டா, ஹீரோ மோட்டோகார்ப், ஹூண்டாய், டிவிஎஸ், பஜாஜ் உள்ளிட்ட முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் E20 பெட்ரோல் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், பழைய வாகனங்களிலும் எஞ்சின் சேதம் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அரசு கூறியுள்ளது. அதேபோல், E20 பயன்படுத்துவதால் மைலேஜ் மிக சிறிய அளவிலேயே குறையும் என்றும், எரிபொருள் திறன் ஓட்டும் முறை, போக்குவரத்து நெரிசல், வாகன பராமரிப்பு போன்ற காரணிகளையும் பொறுத்தே மாறுபடும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
<h3>2023க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் E20 பெட்ரோலைப் பயன்படுத்த முடியாதா?</h3>
உண்மை: நாட்டில் E15+ எரிபொருள் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகவும், E19-E20 எரிபொருள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்காலகட்டத்தில், எத்தனால் கலப்பு காரணமாக என்ஜின் பழுதடைதல் அல்லது வாகனம் நின்றுபோதல் போன்ற எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை. எத்தனால் கலப்பு என்ஜின்கள் அல்லது எரிபொருள் அமைப்புகளுக்குப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், ஏராளமான வாடிக்கையாளர் புகார்கள் எழுந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எத்தனால் என்பது புதிய எரிபொருள் அல்ல. இது உலகம் முழுவதும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரேசில் போன்ற நாடுகள் பல ஆண்டுகளாக அதிக அளவு எத்தனால் கொண்ட எரிபொருளைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் EBP திட்டம் 2001-ல் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது. 2006-ல் E5 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. 2013-14 ஆண்டுகளில் சராசரி கலப்பு அளவு 1.53% மட்டுமே இருந்தபோதிலும், உற்பத்தித் திறன், உள்கட்டமைப்பு மற்றும் தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
<h3>சுமார் 30 கோடி வாகனங்கள் பயனற்றதாகிவிடுமா?</h3>
உண்மை: நாட்டில் E15+ பெட்ரோல் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகவும், E19-E20 பெட்ரோல் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகவும் பயன்பாட்டில் உள்ளன. இக்காலகட்டத்தில், 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான பெட்ரோல் கார்களும் எந்தச் சிக்கலுமின்றி இந்த எரிபொருளில் இயங்கி வருகின்றன. E20 எரிபொருள் வாகனங்களைப் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கும் என்ற கூற்று உண்மையாக இருந்திருந்தால், லட்சக்கணக்கான வாகனங்கள் சாலையில் பழுதாகி நின்றிருக்கும். ஆனால் நாட்டில் அத்தகைய சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
<h3>E20 எரிபொருள் ஏற்றதல்ல என்று கூறும் வாகன உற்பத்தியாளர்கள்?</h3>
உண்மை: டொயோட்டா கிர்லோஸ்கர், மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டோகார்ப், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், ஜூலை 4, 2026 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், கனரகத் தொழில்கள் அமைச்சகம் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று, E20 எரிபொருளுக்கு முழு ஆதரவை தெரிவித்தனர்.
<h3>வாகனங்களின் மைலேஜ் கணிசமாகக் குறையும்?</h3>
உண்மை: எரிபொருள் சிக்கனமானது வாகனம் ஓட்டும் முறை, போக்குவரத்து நிலைமைகள், வாகனப் பராமரிப்பு, டயர்களில் உள்ள காற்றின் அளவு மற்றும் ஏர் கண்டிஷனர் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. பழைய E10 வாகனங்களில் E20 எரிபொருளைப் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய மைலேஜ் குறைவு வெறும் 3 முதல் 5 சதவீதம் மட்டுமே. அதே வேளையில், E20 எரிபொருள் அதிக ஆக்டேன் அளவு, சிறந்த 'ஆன்டி-நாக்'பண்புகள், தூய்மையான எரிதல், சீரான இயந்திர இயக்கம் மற்றும் சிறந்த முடுக்கம் ஆகியவற்றை வழங்குகிறது.
<h3>அரசின் அழுத்தம்?</h3>
உண்மை: இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சட்டரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பொறுப்புள்ள, சுதந்திரமான மற்றும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆகும். அவர்கள் வாகனக் குறைபாடுகளை மறைத்தால், மிகப்பெரிய உத்தரவாதக் கோரிக்கைகள் (warranty claims), சட்ட நடவடிக்கைகள் மற்றும் நிதி மற்றும் நற்பெயர் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். முறையான பொறியியல் சோதனைகள் மற்றும் களத் தரவுகளின் அடிப்படையில் உற்பத்தியாளர்கள் எவ்விதத் தடையுமின்றி உத்தரவாதங்களை வழங்குகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு &#8211; பிரதமர் மோடி முக்கிய உத்தரவு</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-chairs-ccs-meeting-to-review-ongoing-west-asia-conflict-94617.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 19:47:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-chairs-ccs-meeting-to-review-ongoing-west-asia-conflict-94617.html</guid>
		            
			

    	<description><![CDATA[மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/pm-modi-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு &#8211; பிரதமர் மோடி முக்கிய உத்தரவு" /></figure>மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும் போர் சூழல் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மாலுமிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அவசர உதவி, மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள சிறப்பு அமைப்பை உருவாக்க அறிவுறுத்தினார்.
<h3>பிரதமர் தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு கூட்டம்</h3>
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மற்றும் அது தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஜூலை 30, 2026 இன்று கூடியது. இந்த பிரச்னை தொடர்பாக நடைபெற்ற நான்காவது சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். தற்போதைய புவிசார் அரசியல் சூழல் குறித்து அமைச்சரவைச் செயலாளர் இக்குழுவிடம் விளக்கமளித்தார். எல்என்ஜி, எல்பிஜி மற்றும் உரங்கள் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.

எல்பிஜி கொள்முதல் செய்வதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே பல்வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முக்கிய பெட்ரோலியப் பொருட்களின் ஒட்டுமொத்த இருப்பு மற்றும் விநியோக நிலை திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் தடையின்றி கிடைப்பதால், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான திறனில் இயங்க முடிகிறது.

இது பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களின் தடையற்ற உற்பத்தியை உறுதி செய்கிறது. குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பிஎன்ஜி இணைப்புகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரித்துள்ளது.

தேசிய எரிவாயு கட்டமைப்பு  விரிவாக்கம், எல்என்ஜி இறக்குமதி மற்றும் மறுவாயுவாக்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நகர எரிவாயு விநியோக வலைப்பின்னல்களை விரிவுபடுத்துதல் மற்றும் 'குழாய் உள்கட்டமைப்பு ஆணை, 2026'-ன் கீழ் குழாய் பதிப்பு மற்றும் இறுதி இணைப்புக்கான அனுமதிகளை உரிய நேரத்தில் வழங்குதல் ஆகியவற்றின் மூலம், தொழில்துறை பயன்பாட்டிற்கான எல்பிஜி மாற்றீட்டு நடவடிக்கைகளை அரசுகள் சுமூகமாக ஒருங்கிணைத்து வருகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வந்தே மாதரம்&#8217; மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் &#8211; கனிமொழி எதிர்ப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/vande-mataram-bill-passed-in-lok-sabha-gets-national-anthem-equivalent-status-94574.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 17:18:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/vande-mataram-bill-passed-in-lok-sabha-gets-national-anthem-equivalent-status-94574.html</guid>
		            
			

    	<description><![CDATA['வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதை குற்றச் செயலாக மாற்றும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, 'வந்தே மாதரம்' பாடல் பாடப்படும்போது அதை அவமதிப்பது, அதற்கு இடையூறு விளைவிப்பது அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய செயல்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/vande-mataram-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வந்தே மாதரம்&#8217; மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் &#8211; கனிமொழி எதிர்ப்பு" /></figure>'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதை குற்றச் செயலாக அறிவிக்கும் மசோதாவை <a href="https://www.tv9tamilnews.com/india/public-examinations-amendment-bill-anti-paper-leak-stricter-penalties-93732.html" target="_blank" rel="noopener">நாடாளுமன்றம்</a> ஜூலை 29, 2026 நேற்று நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 30, 2026 இன்று மக்களவையில் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு மசோதா, 2026' என்று பெயரிடப்பட்ட இந்த மசோதா, ஒரு நாளுக்கு முன்பே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்தத் திருத்தம் இப்போது சட்டமாக மாறும் நிலையில் உள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்திய சூழலில், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அவையின் அலுவல் நடவடிக்கைகள் தொடர்ந்தபோதும் இந்த அமளி நீடித்தது.
<h3>வந்தே மாதரம் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்</h3>
தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971'-ஐத் திருத்துவதன் மூலம், தேசிய கீதமான 'வந்தே மாதரம் அச்சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவருவதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, ​​அரசியலமைப்பு, தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற தேசியச் சின்னங்களை அவமதிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது. சட்டம் நடைமுறைக்கு வந்ததும், 'வந்தே மாதரம்' பாடல் பாடப்படும்போது அவமதிப்பு, இடையூறு அல்லது குழப்பம் விளைவிக்கும் செயல்களுக்கும் அதே தண்டனை வழங்கப்படும். அதாவது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/parliament-monsoon-session-lok-sabha-passes-anti-paper-leak-bill-after-debate-94261.html">தேர்வுத் தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டம்.. ஆண்டி பேப்பர் லீக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..</a></strong>
<h3>கனிமொழி எதிர்ப்பு</h3>
மாநிலப் பாடலை வைத்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை நீங்கள் அவமதிப்பதாக உள்ளதாகவும், நாட்டை பிளவு படுத்துவதாக உள்ளதகாவும் கனிமொழி எம்பி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் தேச உணர்வை மக்களிடம் திணிக்க முடியாது. வந்தே மாதரம் கட்டாயம் என்ற மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது விவாதமின்றி வந்தே மாதரம் மசோதா நிறைவேறக்கூடாது. கருத்து சொல்வோரை தேசத்துரோகிகள் என்கிறீர்கள். வந்தே மாதரம் பாடாவிட்டால் தேசத்துரோகிகளா? பாஜகதான் தேசத்துக்கு எதிரானது என்று பேசினார்.

'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 'வந்தே மாதரம்' பாடல் 1875 ஆம் ஆணடு பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு, 1882-இல் அவரது ஆனந்த மத் நாவலில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. கடந்த சில மாதங்களாக, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளின்போது தேசியப் பாடலைப் பாடுவது குறித்து மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/central-govt-one-officer-one-official-car-policy-finance-ministry-guidelines-94209.html">“ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே!”.. செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!</a></strong>

ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, ஜூலை 29 அன்று மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதத்தின்போது காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/management-authority-has-ordered-the-release-of-water-from-the-cauvery-river-in-karnataka-to-tamil-nadu-94545.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 16:13:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/management-authority-has-ordered-the-release-of-water-from-the-cauvery-river-in-karnataka-to-tamil-nadu-94545.html</guid>
		            
			

    	<description><![CDATA[Cauvery Management Authority : காவிரி  ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 3, 500 கன அடி  வீதம் 15  நாட்களுக்கு  தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு  காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/cauvery-river.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!" /></figure>கர்நாட மாநிலத்தில் காவரி ஆற்றில் இருந்து <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-leader-mk-stalin-has-announced-protest-at-tanjore-on-august-3rd-against-tvk-government-94462.html" target="_blank" rel="noopener">தமிழகத்துக்கான</a> நீரை திறப்பது தொடர்பாக டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று வியாழக்கிழமை ( ஜூலை 30- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 4 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டி இருந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கி இருந்தது.
<h3>தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கனஅடி நீர்</h3>
அதன்படி, காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டத்தில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், ஏற்கனவே நிலுவையில் இருக்கக்கூடிய தண்ணீரை விடுவிக்காமல் கர்நாடகா அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், ஏற்கனவே, ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தங்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/hrce-temple-tender-guidelines-big-changes-online-tenders-pos-bills-minister-ramesh-94465.html" target="_blank" rel="noopener">கோவில் டெண்டர்களில் அதிரடி மாற்றங்கள்.. இனி அனைத்தும் ஆன்லைன்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி!!</a>
<h3>கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு</h3>
கர்நாடகா அரசு சார்பில் தங்களுக்கான குடிநீர் தேவை, விவசாயிகளுக்கான நீர் தேவை குறித்த விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. மழையின்மை காரணமாக அணையில் தற்போது இருப்பில் உள்ள நீர் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அணையில் இருக்கக்கூடிய இந்த நீரானது கர்நாடகத்துக்கு தேவையான பயன்பாட்டுக்கும் விவசாய பயன்பாட்டுக்கும் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட முடியாது என்று வாதம் முன்வைக்கப்பட்டு வந்தது. இருந்தாலும், தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
<h3>கர்நாடக அரசு நீதிமன்றத்தை நாட முடிவு</h3>
கர்நாடக அரசு சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறுகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவு குறித்து முதல்வர் சிவகுமாருடன் கலந்துரையாடல் நடத்த இருப்பதாகவும், இந்த உத்தரவு குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடா இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-is-indias-third-richest-chief-minister-says-adr-report-94531.html" target="_blank" rel="noopener">நாட்டில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்கள் – முதல்வர் விஜய்க்கு எந்த இடம்?</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு &#8211; தீவிரமடையும் காவிரி பிரச்னை</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/cauvery-row-sparks-protest-in-karnataka-vijay-posters-torn-outside-jana-nayagan-theatres-94504.html</link>	
		<pubDate>Thu, 30 Jul 2026 14:40:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/cauvery-row-sparks-protest-in-karnataka-vijay-posters-torn-outside-jana-nayagan-theatres-94504.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதல்வர் விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/cm-vijay-jana-nayagan-posters.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு &#8211; தீவிரமடையும் காவிரி பிரச்னை" /></figure>தமிழ்நாடு - கர்நாடகா இடையே <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-dk-shivakumar-asks-cm-vijay-to-visit-cauvery-basin-and-see-the-reality-talks-to-be-held-on-3rd-august-94404.html" target="_blank" rel="noopener">காவிரி பிரச்னை</a> தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/jana-nayagan-movie-t-shirts-orders-are-pouring-in-tiruppur-91988.html" target="_blank" rel="noopener">ஜனநாயகன்</a> திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதல்வர் விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
<h3>கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு</h3>
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இதற்கிடையில் மேகதாது அணை விவகாரம் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்னையை மேலும் தீவிரமடைய செய்துள்ளது. இந்த நிலையில் மேகதாது குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-leader-mk-stalin-has-announced-protest-at-tanjore-on-august-3rd-against-tvk-government-94462.html">விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு.. ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..</a></strong>

&nbsp;
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en"><a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a>'s film Jana Nayagan poster defaced by members of pro <a href="https://x.com/hashtag/Kannada?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kannada</a> organisation Vijay Sene demanding that CM Vijay's Jana Nayagan not be screened in <a href="https://x.com/hashtag/Mandya?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mandya</a> <a href="https://x.com/hashtag/Karnataka?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Karnataka</a> over <a href="https://x.com/hashtag/cauvery?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#cauvery</a> water issue. <a href="https://t.co/DqrQuzsYZB">pic.twitter.com/DqrQuzsYZB</a></p>
— Imran Khan (@KeypadGuerilla) <a href="https://x.com/KeypadGuerilla/status/2082722450140434761?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் சமீபத்தில் நடை​பெற்​றது. இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களை சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் பங்​கேற்​றனர்.

இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி நீர் ஒழுங்​காற்று குழு, உச்சநீதிமன்ற உத்​தர​வின்​படி தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்து​விட வேண்​டும். மழை பற்​றாக்​குறை காரண​மாக அணைகளில் உள்ள நீர் இருப்​பின் அளவுக்கு ஏற்​ற​வாறு நீரை பங்கிட்​டுக் கொள்ள வேண்​டும். கிருஷ்ண​ ராஜ​சாகர் மற்​றும் கபினி ஆகிய இரு அணை​களில் இருந்​தும் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு தின​மும் 3500 கன அடி நீரை திறந்​து​விட வேண்டும் என உத்​தர​விட்​டது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-mou-signing-guidance-tamil-nadu-nandanam-ev-and-rd-investments-94446.html">தொழில்துறையில் மாபெரும் பாய்ச்சல்.. முதல்வர் விஜய் முன்னிலையில் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!</a></strong>

இந்த நிலையில் கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில்,  கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தியேட்டர் முன் இருந்த ஜனநாயகன் பட போஸ்டரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் வருகிற ஆகஸ்ட் 3, 2026  அன்று முதல்வர் விஜய் கர்நாடகா சென்று முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்தித்து காவிரி நீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/do-not-take-it-lite-when-your-wi-fi-speed-reduces-secure-your-network-94152.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 17:45:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/do-not-take-it-lite-when-your-wi-fi-speed-reduces-secure-your-network-94152.html</guid>
		            
			

    	<description><![CDATA[Your Wi Fi Network Can Hack By Hackers | பலரும் தடையில்லாத மற்றும் அதிவேக இணைய சேவைக்காக வைஃபை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அந்த வைஃபையை திருடி வேறு ஒருவர் பயன்படுத்துவதற்கான ஆபத்துகள் உள்ளன. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/wi-fi-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!" /></figure>தற்போதைய சூழலில் உலகமே உள்ளங்கையில் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இணைய வசதி மூலம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவரை கூட மிக எளிதாக தொடர்புக்கொள்ள முடியும். வீட்டில் இருந்து ஷாப்பிங் செய்வது, உணவு ஆர்டர் செய்பது, திரைப்படம் பார்ப்பது என அனைத்து சேவைகளையும் பெற இணைய வசதி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதற்காக பலரும் மொபைல் டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.

மொபைல் டேட்டாவில் குறிப்பிட்ட அளவு மட்டுமே டேட்டாவை பயன்படுத்த முடியும் என்ற சூழலில், தடையில்லாமல் இணைய சேவையை பயன்படுத்த பலரும் வைஃபை வசதியை பெறுகின்றனர். ஆனால், அந்த வைஃபை இணைய சேவை சத்தமில்லாமல் திருடப்படுவது குறித்து யாரும் கண்டுக்கொள்வதில்லை. இந்த நிலையில், வைஃபை இணைய சேவையை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இணைய வேகம் குறைவதற்கான முக்கிய காரணங்கள்</h3>
உங்கள் வீட்டில் எந்தவித காரணங்களும் இல்லாமல் திடீரென உங்களது வைஃபை இணைய வேகம் குறைந்தால் அதனை மிகவும் எளியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், இந்த சூழலில்  உங்களுக்கு தெரியாமல் உங்கள் வைஃபை இணைய சேவையை வேறு ஒருவர் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இதேபோல வீட்டில் நள்ளிரவு நேரத்தில் நீங்கள் எந்த ஒரு மின்சாதன பொருட்களை பயன்படுத்தாத போதும், உங்களது வைஃபை ரவுட்டரில் இருக்கும் விளக்குகள் விட்டு விட்டு எரிந்தாலும் உங்களது வைஃபை நெட்வொர்க்கை வேறு ஒருவர் பயன்படுத்துகிறார் என்று அர்த்தம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/people-can-also-make-payment-in-flight-too-nfc-upi-payment-method-will-introduce-soon-93374.html">UPI : இனி விமானத்திலும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!</a>

நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் டேட்டா அளவை விட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்றாலும் உங்களது வைஃபை டேட்டாவை வேறு ஒருவர் பயன்படுத்துகிறார் என்று அர்த்தம். தற்போது அனைத்தையும் மிக எளிதாக ஹாக் செய்ய முடிகிறது. அதன்படி, ஹேக்கர்கள் மிக எளிதாக உங்களது வைஃபையை ஹேக் செய்துவிடுவார்கள். இதன் காரணமாக உங்களது இணைய வேகம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, வங்கி விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடைபெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/hp-planning-to-introduce-smart-lpg-gas-cylinders-to-avoid-accidents-92975.html">கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தடுக்க அதிரடி நடவடிக்கை.. விரைவில் வருகிறது ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்.. சிறப்புகள் என்ன என்ன?</a>

எனவே உங்கள் வைஃபை இணைய சேவை குறையும்போது அது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தேர்வுத் தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டம்.. ஆண்டி பேப்பர் லீக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/parliament-monsoon-session-lok-sabha-passes-anti-paper-leak-bill-after-debate-94261.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 16:12:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/parliament-monsoon-session-lok-sabha-passes-anti-paper-leak-bill-after-debate-94261.html</guid>
		            
			

    	<description><![CDATA[Anti Paper Leak Bill: இதற்கு முன்னதாக, ஆண்டி பேப்பர் லீக் மசோதா தொடர்பாக மக்களவையில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. தேர்வுத் தாள் கசிவு, மாணவர் போராட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மசோதாவில் உள்ள திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/anti-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தேர்வுத் தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டம்.. ஆண்டி பேப்பர் லீக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.." /></figure><strong>ஜூலை 29, 2026:</strong> தேர்வுத் தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஆண்டி பேப்பர் லீக் மசோதா – 2026-க்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
<h3>ஆண்டி பேப்பர் லீக் மசோதா:</h3>
இதற்கு முன்னதாக, ஆண்டி பேப்பர் லீக் மசோதா தொடர்பாக மக்களவையில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. தேர்வுத் தாள் கசிவு, மாணவர் போராட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மசோதாவில் உள்ள திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/the-ministry-of-electronics-and-information-technology-has-summoned-metas-global-head-of-public-policy-after-the-social-media-company-removed-prime-minister-narendra-modis-facebook-post-94074.html">பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம்.. மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு</a>

இதற்கிடையில், வந்தே மாதரம் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
<h3>ராகுல் காந்தி கருத்தால் மக்களவையில் அமளி:</h3>
ஆண்டி பேப்பர் லீக் மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில்தான் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். பெல்லெட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதால் மாணவர்கள் பலர் கடுமையாக காயமடைந்ததாகவும், அதற்கு அமித் ஷாவே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/india/central-govt-one-officer-one-official-car-policy-finance-ministry-guidelines-94209.html">ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே!”.. செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!</a>

மேலும், ஆண்டி பேப்பர் லீக் மசோதா தொடர்பான முக்கியமான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஏன் பங்கேற்கவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
<h3>மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலுயுறுத்தல்:</h3>
இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித் ஷா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும், முதலில் அமித் ஷாவிடம் மன்னிப்பு கேட்ட பிறகே அவர் அவையில் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால், தனது கருத்துகளை ராகுல் காந்தி மீண்டும் நியாயப்படுத்தினார். டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால், தனது கருத்தில் மாற்றமில்லை என அவர் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே!&#8221;.. செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/central-govt-one-officer-one-official-car-policy-finance-ministry-guidelines-94209.html</link>	
		<pubDate>Wed, 29 Jul 2026 11:28:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/central-govt-one-officer-one-official-car-policy-finance-ministry-guidelines-94209.html</guid>
		            
			

    	<description><![CDATA[One Officer One Official Car Policy: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசு வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் "ஒரு அதிகாரிக்கு ஒரு அதிகாரப்பூர்வ வாகனம் மட்டுமே" என்ற புதிய கொள்கையை மத்திய நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/one-car.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே!&#8221;.. செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!" /></figure><strong>டெல்லி, ஜூலை 29:</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/the-ministry-of-electronics-and-information-technology-has-summoned-metas-global-head-of-public-policy-after-the-social-media-company-removed-prime-minister-narendra-modis-facebook-post-94074.html" target="_blank" rel="noopener">மத்திய அரசுத்</a> துறைகளில் நிலவும் தேவையற்ற செலவினங்களை முற்றிலுமாகத் தவிர்த்து, நிதி ஒழுக்கத்தை உறுதியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அதிரடியான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, "ஒரு அதிகாரிக்கு ஒரே ஒரு அதிகாரப்பூர்வ கார்" (One Officer One Official Car) என்ற கொள்கை மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் உடனடியாகச் அமலுக்கு கொண்டுவரப்படுகிறது.

<strong>இதையும் படிக்க: </strong><a href="https://www.tv9tamilnews.com/india/supreme-court-slams-delhi-police-student-protest-lathicharge-cji-hearing-93778.html">மாணவர்கள் மீது தடியடியா?.. டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.. தலைமை நீதிபதி அதிரடி!!</a>
<h3>முறைகேடுகளுக்குக் கடிவாளம்:</h3>
மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரிகள், தாங்கள் வகிக்கும் முதன்மைப் பதவிக்கு ஒரு வாகனம், கூடுதலாகக் கவனிக்கும் துறைகள் அல்லது குழுக்களுக்கு என தனித்தனி வாகனங்கள் எனப் பல அதிகாரப்பூர்வ கார்களைத் தங்களின் வசதிக்கு ஏற்பப் பயன்படுத்தி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அரசுத் துறைகளின் கார்கள் மட்டுமின்றி, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஆடம்பர வாகனங்களையும் சொந்தப் பயன்பாட்டிற்கும், குடும்பத்தினரின் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.

இதனால் எரிபொருள் செலவு, வாகனப் பராமரிப்பு, ஓட்டுநர் ஊதியம் என அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடிக்கணக்கில் தேவையற்ற நிதி இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனைத் தடுக்கும் பொருட்டே இத்தகைய கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
<h3>முக்கிய விதிமுறைகள் &amp; கட்டுப்பாடுகள்:</h3>
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு, பல துறை நிர்வாகம் என எதுவாக இருந்தாலும், ஒரு அதிகாரிக்குச் சட்டப்பூர்வமாக ஒரே ஒரு அரசு வாகனம் மட்டுமே ஒதுக்கப்படும். ஒரு அதிகாரி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைச்சகங்கள்/துறைகளின் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், அவருக்கு ஏற்கெனவே ஒரு கார் ஒதுக்கப்பட்டிருந்தால், இரண்டாவது கார் பெற அவருக்கு முற்றிலும் தகுதியில்லை.
<h3>பொதுத்துறை நிறுவன வாகனங்களுக்குத் தடை:</h3>
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை, அரசுத் துறை அதிகாரிகள் தங்களின் சொந்த அலுவல் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. ஒதுக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் நூறு சதவீதம் அரசுப் பணி மற்றும் அலுவல் ரீதியான பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட முறையிலோ அல்லது குடும்பத்தினருக்கோ பயன்படுத்துவது விதிமீறலாகக் கருதப்படும்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/trending/a-viral-video-circulating-where-a-passenger-lights-lamp-and-prays-inside-ac-rail-coach-93874.html">ஏசி ரயில் பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த பயணி.. பாதுகாப்பு குறித்து சர்ச்சை</a></strong>
<h3>நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை:</h3>
இப்புதிய கொள்கையின் மூலம் மத்திய அரசுத் துறைகளின் வருடாந்திர செலவினங்களில் பெரும் பகுதி சேமிக்கப்படும் என்றும், அரசு இயந்திரத்தின் செயல்பாட்டில் நிதி ஒழுக்கமும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை அனைத்து மத்திய அமைச்சகங்களும், துறைத் தலைவர்களும் எவ்வித விலக்குமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம்.. மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/the-ministry-of-electronics-and-information-technology-has-summoned-metas-global-head-of-public-policy-after-the-social-media-company-removed-prime-minister-narendra-modis-facebook-post-94074.html</link>	
		<pubDate>Tue, 28 Jul 2026 16:20:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/the-ministry-of-electronics-and-information-technology-has-summoned-metas-global-head-of-public-policy-after-the-social-media-company-removed-prime-minister-narendra-modis-facebook-post-94074.html</guid>
		            
			

    	<description><![CDATA[பிரதமரின் அதிகாரப்பூர்வ பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்திருந்தாலும், இந்தச் சம்பவத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கொள்கைத் தலைவரிடம் நேரடி விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/mo-fb-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம்.. மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு" /></figure><strong>ஜூலை 28, 2026:</strong> பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு உரையாற்றும் வகையில் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவை சமூக வலைதள நிறுவனமான மெட்டா நீக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கொள்கைத் தலைவரை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
<h3>பிரதமர் மோடியின் பதிவு நீக்கம் - மெட்டா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்:</h3>
அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த காணொளி திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கும் வகையில் மெட்டா நிறுவனத்தின் உயரதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு அமைச்சகம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/public-examinations-amendment-bill-anti-paper-leak-stricter-penalties-93732.html">வினாத்தாள் கசிவுக்கு முடிவு கட்டும் புதிய சட்டத்திருத்தம்.. ரூ.10 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை.. நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!</a>

கடந்த ஜூலை 23-ஆம் தேதி, கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த மாணவர் போராட்டத்தின் பின்னணியில், இளைஞர்களை நோக்கி பிரதமர் மோடி வெளியிட்டிருந்த அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருந்தது. அதில், தேர்வுத் தாள் கசிவு  சம்பவங்களைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசின் முன்னுரிமையாக இருக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்திருந்தார்.

இந்த காணொளி ஃபேஸ்புக்கில் இருந்து திடீரென நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடையே கேள்விகள் எழுந்தன. இதையடுத்து, மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
<h3>தொழில்நுட்ப பிழை - மெட்டா விளக்கம்:</h3>
இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "தொழில்நுட்பப் பிழை காரணமாக அந்தப் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டது. பின்னர் பிழை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதிவு மீண்டும் ஃபேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/pm-modi-announces-nandan-nilekani-led-task-force-to-reform-competitive-exams-93688.html">வினாத்தாள் கசிவு விவகாரம் – முறைக்கேடுகளை தவிர்க்க சிறப்பு குழுவை அறிவித்த பிரதமர் மோடி</a>

பிரதமரின் அதிகாரப்பூர்வ பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்திருந்தாலும், இந்தச் சம்பவத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கொள்கைத் தலைவரிடம் நேரடி விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அரசியல் மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஏசி ரயில் பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த பயணி.. பாதுகாப்பு குறித்து சர்ச்சை</title>
		<link>https://www.tv9tamilnews.com/trending/a-viral-video-circulating-where-a-passenger-lights-lamp-and-prays-inside-ac-rail-coach-93874.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 19:09:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[வைரல் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/trending/a-viral-video-circulating-where-a-passenger-lights-lamp-and-prays-inside-ac-rail-coach-93874.html</guid>
		            
			

    	<description><![CDATA[ரயில்வே அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படும் அந்தப் பயணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளப் பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிலர், இதுபோன்ற செயல்கள் ரயிலில் பயணம் செய்யும் மற்ற பயணிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/pooja-train-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஏசி ரயில் பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த பயணி.. பாதுகாப்பு குறித்து சர்ச்சை" /></figure><strong>ஜூலை 27, 2026:</strong> ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்குள் பயணி ஒருவர் ஊதுபத்தி மற்றும் எண்ணெய் விளக்கை ஏற்றி பூஜை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் வீடியோவில், மேல் படுக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பயணி, பனியன் மற்றும் வேட்டி அணிந்தபடி கைகளை கூப்பி பிரார்த்தனை செய்வது தெரிகிறது. அவருக்கு முன்பாக ஊதுபத்திகள் மற்றும் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தன.
<h3>ஏசி ரயில் பெட்டியில் விளக்கு ஏற்றி பூஜை செய்த நபர்:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">🚆A video circulating on social media shows a passenger performing prayers on the upper berth of an AC train coach while lighting incense sticks and an oil lamp.

A fellow passenger reportedly intervened, explaining that such acts can be dangerous. Smoke may trigger the train's… <a href="https://t.co/79SrmBnAdW">pic.twitter.com/79SrmBnAdW</a></p>
— Jharkhand Rail Users (@JharkhandRail) <a href="https://x.com/JharkhandRail/status/2081485280528507348?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
இதைக் கவனித்த மற்றொரு பயணி, அவரை பலமுறை “பண்டிட்ஜி” என அழைத்து, இந்தச் செயல் குறித்து எச்சரித்தார். ஆனால், பூஜையில் ஈடுபட்டிருந்த அந்தப் பயணி, அழைத்தவரைத் திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீடியோ பதிவு செய்த பயணி, மற்ற பயணிகளிடம் அந்த நபர் தங்களுடன் பயணம் செய்கிறாரா எனக் கேட்டார். ஆனால், அவர் தங்களுடன் வரவில்லை என மற்ற பயணிகள் தெரிவித்தனர்.

பின்னர், அந்தப் பயணி மீண்டும் பூஜை செய்து கொண்டிருந்த நபரை எச்சரித்தார். ஊதுபத்தியில் இருந்து வரும் புகை ரயிலின் தீ எச்சரிக்கை அமைப்பைத் தூண்டக்கூடும் என்றும், திறந்த நிலையில் எரியும் எண்ணெய் விளக்கால் மூடப்பட்ட ஏசி பெட்டிக்குள் எதிர்பாராத தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களது மத நம்பிக்கைகளைப் பின்பற்ற உரிமை கொண்டிருந்தாலும், நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் பொதுப் போக்குவரத்தில் திறந்த நெருப்பைப் பயன்படுத்துவது ஆபத்தானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
<h3>சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே அதிகாரிகள்:</h3>
மேலும், ரயில்வே அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படும் அந்தப் பயணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளப் பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிலர், இதுபோன்ற செயல்கள் ரயிலில் பயணம் செய்யும் மற்ற பயணிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும், ரயிலில் புகைபிடிப்பதும், திறந்த தீயைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானவை என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மாணவர்கள் மீது தடியடியா?.. டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.. தலைமை நீதிபதி அதிரடி!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/supreme-court-slams-delhi-police-student-protest-lathicharge-cji-hearing-93778.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 11:58:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/supreme-court-slams-delhi-police-student-protest-lathicharge-cji-hearing-93778.html</guid>
		            
			

    	<description><![CDATA[Supreme Court Slams Delhi Police: டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்திற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையின் வரம்பு மீறிய நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/students-protest-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மாணவர்கள் மீது தடியடியா?.. டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.. தலைமை நீதிபதி அதிரடி!!" /></figure><strong>டெல்லி, ஜூலை 27:</strong> டெல்லியில் அமைதியான வழியில் <a href="https://www.tv9tamilnews.com/india/supreme-court-refuses-urgent-hearing-delhi-student-protest-lathicharge-92639.html" target="_blank" rel="noopener">போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது</a> காவல்துறையினர் நடத்திய கொடூரமான தடியடி தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "காவல்துறையின் வரம்பு மீறிய எந்தவொரு நடவடிக்கையையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது" என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாகத் தெரிவித்துள்ளது. டெல்லியில் தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" சார்பில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாகத் தடியடி நடத்தியதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோதே நீதிபதிகள் இந்த காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-released-video-stating-thanks-to-youngsters-for-sending-insightful-suggestions-to-yesterdays-midnight-video-93335.html">உங்கள் அன்பும் நம்பிக்கையும் எனக்கு வலிமை” – இளைஞர்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..</a></strong>
<h3>"AK-47 துப்பாக்கிகளுடன் காவல்துறை":</h3>
விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கின. அளவுக்கு அதிகமான காவலர்கள்: அமைதியான முறையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மிக அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.

டெல்லி மட்டுமின்றி பீகார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து கடுமையான தடியடி நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், "போராட்டக்காரர்களால் காவல்துறையினரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்; சூழலைக் கட்டுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என வாதிட்டார்.
<h3>ஒவ்வொரு மனிதனின் உயிரும் முக்கியம்:</h3>
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்த முக்கியக் கருத்துகள், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டப்படி முழுமையான உரிமையையும் உத்தரவாதத்தையும் நாடு வழங்கியுள்ளது. தீவிர போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே காவல்துறையினர் தங்களுடைய வரம்பை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது.

"போராட்டம் நடக்கிறது என்பதற்காகவே அதன்மீது தடியடி நடத்த வேண்டும் என்பதில்லை. ஜனநாயகச் செயல்முறைக்குச் சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுங்குமுறை அவசியம்" எனத் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
<h3>வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது:</h3>
"யார் எவர் என்ற பாகுபாடின்றி, நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனின் உயிரும் மிகவும் முக்கியமானது" என்று நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி வலியுறுத்தினார். அதேவேளையில், போராட்டத்தின் போது சமூக விரோதச் செயல்கள் ஏதேனும் நடைபெற்றால் மட்டுமே காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாமே தவிர, உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்தனர்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senthil-balaji-questioned-for-second-day-regarding-horse-trading-case-involving-tvk-mla-ilaiyaraja-93595.html" target="_blank" rel="noopener">தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!</a></strong>

இச்சம்பவம் தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றிணைத்து நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் உச்சநீதிமன்றம் விரிவாக விசாரிக்கவுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>களமிறங்கும் டாஸ்க் போர்ஸ்.. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடியின் முக்கிய முடிவு.. குழுவில் இருப்பது யார் யார்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-announces-high-powered-task-force-led-by-nandan-nilekani-and-six-experts-details-here-93747.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 08:31:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-announces-high-powered-task-force-led-by-nandan-nilekani-and-six-experts-details-here-93747.html</guid>
		            
			

    	<description><![CDATA[PM Narendra Modi : வினாத்தாள் கசிவுப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றொரு காணொளியை வெளியிட்டுள்ளார். , தேர்வு மேலாண்மை அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக, புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனருமான நந்தன் நிலேகனி தலைமையில் மத்திய அரசு ஒரு உயர்மட்டப் பணிக்குழுவை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/pm-narendra-modi-announces-high-powered-task-force.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="களமிறங்கும் டாஸ்க் போர்ஸ்.. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடியின் முக்கிய முடிவு.. குழுவில் இருப்பது யார் யார்?" /></figure>மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வினாத்தாள் கசிவுப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும், முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முடிவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நந்தன் நிலேகனி தலைமையில் ஒரு உயர்மட்டப் பணிக்குழு அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்வுகளை நடத்தும் முறையில் தீவிர மாற்றங்களைக் கொண்டுவருவதோடு, வினாத்தாள் கசிவுகளை முற்றிலுமாகத் தடுப்பதற்காக விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

சமீபத்தில் நடந்த வினாத்தாள் கசிவு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, தேர்வு முறையில் தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் இதைத் தெளிவுபடுத்தினார்.
<h3>வீடியோ</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbQfIx5zIun/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/DbQfIx5zIun/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Narendra Modi (@narendramodi)</a></p>

</div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script>

மொத்தம் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொழில்நுட்பப் பெருநிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி, பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவருடன், முன்னாள் இஸ்ரோ தலைவர் சோம்நாத், முன்னாள் உளவுத்துறை இயக்குநர் தபன் தேகா, மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் காமகோடி, முன்னாள் கல்வித்துறைச் செயலாளர் அனிதா கர்வால், தளவாட மற்றும் நிர்வாக நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
<h3>குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பு</h3>
<strong>நந்தன் நிலேகனி:</strong> இவர் ஒரு புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஆதார் திட்டத்தை வடிவமைத்தவர். இவர் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தேர்வுச் செயல்பாட்டில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பணியாற்றுவார்.

<strong>எஸ். சோமநாத்:</strong> இவர் இதற்கு முன்னர் இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். முக்கிய செயல்முறை தன்னியக்கமாக்கல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை சோமநாத் ஏற்பார்.

<strong>தபன் தேகா :</strong> இவர் இதற்கு முன்னர் புலனாய்வுப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றினார். இந்தக் குழு, வினாத்தாள் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் கசிவுகளைத் தடுத்தல் ஆகிய பணிகளில் ஈடுபடும்.

<strong>பேராசிரியர் வி. காமகோடி :</strong> இவர் ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் ஆவார். இவர் இந்தக் குழுவின் உறுப்பினர்களுடன் குறிப்பாக தொழில்நுட்பச் சோதனை நடைமுறைகள், இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஆகிய விஷயங்களில் பணியாற்றுவார்.

<strong>அனிதா கர்வாள்:</strong> முன்னாள் கல்விச் செயலாளர் இனி மாணவர்களின் மனப்பான்மை, கல்விக் கொள்கைகள் மற்றும் வாரியத் தேர்வுகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கவனிப்பதற்காக இந்தக் குழுவில் இருப்பார்.

<strong>அம்ரித் லால் மீனா :</strong> இந்த தளவாட நிபுணர், நாடு முழுவதும் தடையற்ற, பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் பரிசோதனை மையங்களை ஏற்பாடு செய்வார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வினாத்தாள் கசிவுக்கு முடிவு கட்டும் புதிய சட்டத்திருத்தம்.. ரூ.10 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை.. நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/public-examinations-amendment-bill-anti-paper-leak-stricter-penalties-93732.html</link>	
		<pubDate>Mon, 27 Jul 2026 07:37:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/public-examinations-amendment-bill-anti-paper-leak-stricter-penalties-93732.html</guid>
		            
			

    	<description><![CDATA[Public Examinations Amendment Bill: தேசிய போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்ட முறைகேடுகளைத் தடுக்க, குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்யும் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/parliament-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வினாத்தாள் கசிவுக்கு முடிவு கட்டும் புதிய சட்டத்திருத்தம்.. ரூ.10 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை.. நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!" /></figure><strong>டெல்லி, ஜூலை 27:</strong> தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணிகளுக்கான பொதுத் தேர்வுகளில் ஏற்படும் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா <a href="https://www.tv9tamilnews.com/india/centre-to-tighten-rules-under-public-examinations-act-2024-to-curb-paper-leaks-93423.html" target="_blank" rel="noopener">நாடாளுமன்றத்தில் தாக்கல்</a> செய்யப்படுகிறது. நீட் உள்ளிட்ட பல்வேறு தேசியத் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த அவசரச் சட்டத்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senthil-balaji-questioned-for-second-day-regarding-horse-trading-case-involving-tvk-mla-ilaiyaraja-93595.html" target="_blank" rel="noopener">தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!</a></strong>
<h3>மசோதாவின் முக்கிய அம்சங்கள் &amp; கடும் தண்டனைகள்:</h3>
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இச்சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். வினாத்தாள் கசிவு, தேர்வு மையங்களில் முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் அமைப்புகள் அல்லது நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க மசோதா வழிவகை செய்கிறது. முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ரூ. 10 கோடி வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது. இச்சட்டம் மூலம் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகள் மேலும் பாதுகாப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<h3>6 பேர் கொண்ட உயர்மட்ட பணிக்குழு:</h3>
தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீலேகனி தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்டப் பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய வல்லுநர்கள், நந்தன் நீலேகனி - தலைவர் (தொழில்நுட்ப வல்லுநர் &amp; இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்), எஸ். சோமநாத் - இஸ்ரோ முன்னாள் தலைவர், தபன் டேகா - மத்திய உளவுத்துறை முன்னாள் இயக்குநர், வி. காமகோடி - சென்னை ஐஐடி இயக்குநர், அனிதா கர்வால் - முன்னாள் மத்திய கல்வித்துறைச் செயலாளர், அம்ரித் லால் மீனா - தளவாட நிபுணர். இக்குழு தொழில்நுட்ப பாதுகாப்பு, தேர்வு கட்டமைப்பு சீர்திருத்தம் மற்றும் NTA-வின் மேம்பாடுகள் குறித்து ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.
<h3>இளைஞர்களிடம் பேசிய பிரதமர் மோடி:</h3>
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் காணொலி வாயிலாக நாட்டின் இளைஞர்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்வு சீர்திருத்தங்களை மிகக் கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். "நந்தன் நீலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, தேர்வு முறையில் மாற்றங்களைக்கொண்டு வர உயர் அதிகாரம் பொருந்திய குழுவாகச் செயல்படும். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு தேர்வும் எவ்வித முறைகேடுகளுமின்றி முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்." என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/legislative-assembly-secretary-santhi-writes-to-edappadi-regarding-four-former-aiadmk-mlas-93606.html" target="_blank" rel="noopener">அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!</a></strong>
<h3>பிற மசோதாக்கள்:</h3>
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா மட்டுமின்றி, தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதங்கள் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு சட்டங்கள் தொடர்பான முக்கிய மசோதாக்களும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வினாத்தாள் கசிவு விவகாரம் &#8211; முறைக்கேடுகளை தவிர்க்க சிறப்பு குழுவை அறிவித்த பிரதமர் மோடி</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-modi-announces-nandan-nilekani-led-task-force-to-reform-competitive-exams-93688.html</link>	
		<pubDate>Sun, 26 Jul 2026 19:40:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-modi-announces-nandan-nilekani-led-task-force-to-reform-competitive-exams-93688.html</guid>
		            
			

    	<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் போட்டித் தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்ட குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்தக் குழுவுக்கு ஆதார் திட்டத்தின் வடிவமைப்பாளரும், தொழில்நுட்ப வல்லுநருமான நந்தன் நிலேகனி தலைமை வகிக்கிறார். போட்டித் தேர்வுகளை மேலும் வெளிப்படையாகவும், தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பாகவும் மாற்றுவது இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/pm-modi-announces-nandan-nilekani-led-task.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வினாத்தாள் கசிவு விவகாரம் &#8211; முறைக்கேடுகளை தவிர்க்க சிறப்பு குழுவை அறிவித்த பிரதமர் மோடி" /></figure>பிரதமர் <a href="https://www.tv9tamilnews.com/india/pm-modis-mann-ki-baat-kargil-heroes-atmanirbhar-defence-water-conservation-and-indias-space-success-93605.html">நரேந்திர மோடி</a>, நாட்டில் போட்டித் தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்ட குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்தக் குழுவுக்கு <a href="https://www.tv9tamilnews.com/business/aadhaar-registrations-in-hospital-will-help-public-to-get-lifelong-continuous-treatment-92798.html" target="_blank" rel="noopener">ஆதார்</a> திட்டத்தின் வடிவமைப்பாளரும், தொழில்நுட்ப வல்லுநருமான நந்தன் நிலேகனி தலைமை வகிக்கிறார். போட்டித் தேர்வுகளை மேலும் வெளிப்படையாகவும், தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பாகவும் மாற்றுவது இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
<h3>சிறப்பு குழுவை அறிவித்த பிரதமர் மோடி</h3>
நாட்டின் தேர்வு முறையில் விரிவான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக மத்திய அரசு ஒரு உயர்மட்டப் பணிக்குழுவை அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இக்குழுவிற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தொழில்நுட்ப நிபுணருமான நந்தன் நிலேகனி தலைமை தாங்குவார். தேர்வு முறையை மேலும் நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாற்றும் நோக்கத்துடன் இந்தக் புதிய குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
<h3>பிரதமர் மோடி பேசிய வீடியோ</h3>
&nbsp;
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbQfIx5zIun/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px;"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px;"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent;"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent;"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent;"></div>
</div>
</div>
<div style="flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/DbQfIx5zIun/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Narendra Modi (@narendramodi)</a></p>

</div></blockquote>
மேலும் பேசிய அவர், பல்வேறு தேசிய அளவிலான தேர்வுகளில் சமீபகாலமாக நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் குறித்த மாணவர்களின் கவலைகளுக்கு மத்தியில் மத்திய அரசின் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதும், தொழில்நுட்பத்தின் பயனுள்ள பயன்பாட்டை அதிகரிப்பதும் இப்பணிக்குழுவின் முக்கிய நோக்கம் என்று பிரதமர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலத்தையும் நாட்டின் கல்வி முறையையும் வலுப்படுத்த சீர்திருத்தங்கள் அவசியம். தேர்வுகள் மாணவர்களின் திறனை நியாயமாக மதிப்பிடும் ஒரு அமைப்பாகத் தொடர்ந்து இருக்க வேண்டும், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தற்போதைய தேர்வு முறையின் செயல்பாட்டை விரிவாக மதிப்பீடு செய்யவுள்ள இப்பணிக்குழு, தொழில்நுட்பப் பாதுகாப்பு, தேர்வு நிர்வாகம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை உறுதி செய்தல் போன்ற விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும். தேர்வு நிர்வாகத்தில் பிழைகளைக் குறைப்பதிலும், எதிர்காலத்தில் இத்தகைய முறைகேடுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதிலும் இக்குழு கவனம் செலுத்தும்.

இதற்கிடையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக நந்தன் நிலேகனி தலைமையில் புதிய உயர்மட்டப் பணிக்குழு அமைக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு, கல்வித் துறையின் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/undergraduate-medical-courses-applying-deadline-extended-until-july-27-93679.html</link>	
		<pubDate>Sun, 26 Jul 2026 19:27:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/undergraduate-medical-courses-applying-deadline-extended-until-july-27-93679.html</guid>
		            
			

    	<description><![CDATA[Undergraduate Medical Courses : தமிழகத்தில் எம்பிபிஎஸ், பி. டி. எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 27- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/medical-cources.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!" /></figure>தமிழகத்தில் <a href="https://www.tv9tamilnews.com/india/pralhad-joshi-given-additional-charge-of-education-ministry-after-dharmendra-pradhan-resignation-93500.html" target="_blank" rel="noopener">எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ்</a> போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வில் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 29- ஆம் தேதி மருத்துவ கல்வி இயக்குனராகம் வெளியிட்டிருந்தது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 23- ஆம் தேதி நிறைவு பெற்றிருந்தது. அதன்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40 ஆயிரத்து 760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயிரத்து 726 விண்ணப்பங்களும் என மொத்தம் 70,486 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்திருந்தது. இந்த விண்ணப்பங்கள் ஆனது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும். கடந்த ஆண்டில் 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது.
<h3>மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு</h3>
நிகழாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், ஜூலை 23- ஆம் தேதியுடன் விண்ணப்ப காலம் முடிவடைந்த நிலையில், இதற்கு ஜூலை 27- ஆம் தேதி ( திங்கள்கிழமை) மாலை 5 மணி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/pralhad-joshi-given-additional-charge-of-education-ministry-after-dharmendra-pradhan-resignation-93500.html" target="_blank" rel="noopener">புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்</a>
<h3>நீட் தேர்வு விவகாரத்தில் நிகழ்ந்த குளறுபடி</h3>
தற்போது, நடைபெற்ற நீட் தேர்வு அதற்கு முன்னதாக ஒரு தேதியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறொரு தேதியில் நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு முடிவடையும் வரை டெலிகிராம் செயலுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. அத்துடன், பல்வேறு மாநிலங்களுக்கு நீட் தேர்வு வினாத்தாள் அனுப்பி வைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை இந்திய ராணுவம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
<h3>நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகல்</h3>
அதன்படி, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகளும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதனிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவரங்களை கண்டித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்திருந்தனர். அதன் அடிப்படையில், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/minister-dharmendra-pradhan-resignation-over-neet-paper-leak-row-93411.html" target="_blank" rel="noopener">மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் – நீட் தேர்வு போராட்டம் தீவிரமடையும் நிலையில் முடிவு</a> ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>