AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர் புகாரி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இவ்வழக்கில் சிபிஐ தனியாகப் புதிய வழக்குப் பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!
ஆம்ஸ்ட்ராங், காவலர் புகாரி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 Aug 2026 11:49 AM IST

சென்னை, ஆகஸ்ட் 13: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு மாநில அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கு தற்போது பல்வேறு பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. செம்பியம் காவல் துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து, வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் காவல் ஆய்வாளர் புகாரி கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

காவல் ஆய்வாளர் புகாரி கைது:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபரை மிரட்டிப் பணம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட ‘பிரின்ஸ் ஆஃப் போலீஸ்’ பிரிவில் பணியாற்றிய சீனிவாசன் என்பவரிடம் காவல் துறையினர் 3 நாட்கள் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில், வழக்கின் முக்கியத் திருப்பமாக ஆய்வாளர் புகாரி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை காலத்தில் புகாரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் மேலும் பல உயர்மட்டக் காவல் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை:

ஏற்கனவே உள்ளூர் காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, தற்போது சிபிஐ அதிகாரிகள் தனியாக ஒரு புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட சாட்சிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் மீண்டும் தனித்தனியாக விசாரணையைத் தொடங்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் புகாரியைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதோடு, அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்படும் உயர்மட்டக் காவல் அதிகாரிகளிடமும் விசாரணையை முடுக்கிவிட உள்ளது.

மேலும் படிக்க: “யானைகள் தினத்தில் நேர்ந்த நெஞ்சை ரணமாக்கும் துயரம்!”.. ரயில் மோதி தாய், குட்டி யானைகள் பரிதாப பலி!

புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு:

இக்கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 12 பேர் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளனர். தற்போது சிபிஐ தனியாகப் புதிய வழக்குப் பதிவு செய்து சாட்சிகளிடம் விரிவான விசாரணையை நடத்தி வருவதால், இதில் புதிய குற்றவாளிகள் பலர் சிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த முழுமையான விசாரணையின் முடிவில் சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us