
Crime
பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர்.. சுருண்டு விழுந்து பலி.. சென்னையில் ஷாக்!
Chennai Youth Dies While Dance in Wedding : சென்னையில் திருமண நிகழ்ச்சியில் நடமானடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். மதுபோதையில் நடமாடிய இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தண்டையார்பேட்டையில் நடந்து உள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: May 29, 2025
- 11:59 am
பெண் மருத்துவர் கொலை… கணவர், மாமியார் செய்த கொடூரம்.. பகீர் காரணம்
Karnataka Doctor Murder : கர்நாடகாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரை கணவர், மாமனார், மாமியார் திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை இல்லாத காரணத்தால், பெண் மருத்துவரை ஒட்டுமொத்த குடும்பமும் பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- Umabarkavi K
- Updated on: May 29, 2025
- 09:06 am
காரில் கிடந்த சடலங்கள்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் எடுத்த விபரீத முடிவு!
Haryana Suicide : ஹரியானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்தபடியே, இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேருக்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவரின் சடலங்களை காரில் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
- Umabarkavi K
- Updated on: May 27, 2025
- 11:48 am
தேனியில் அதிர்ச்சி.. சாலையோர மழைநீர் வடிகால் தொட்டிக்குள் விழுந்து இருவர் பலி!
Theni Accident : தேனி மாவட்டத்தில் சாலையோரத்தில் இருந்த மழைநீர் வடிகால் தொட்டிக்குள் விழுந்து இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்போது, நிலைத்தடுமாறி மழைநீர் வடிகால் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- Umabarkavi K
- Updated on: May 27, 2025
- 09:50 am
பரபரப்பான நாகை கலெக்டர் ஆபீஸ்.. துப்பாக்கியால் சுட்டு பெண் காவலர் தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் அபிநயா தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து நாகூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Petchi Avudaiappan
- Updated on: May 26, 2025
- 19:01 pm
சென்னையில் ஏடிஎம் கொள்ளை முயற்சி.. உ.பி.,யைச் சேந்த 3 பேர் கைது
சென்னை திருவான்மியூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு அட்டை பயன்படுத்தி பணம் எடுப்பதைத் தடுத்து கொள்ளையர்கள் பணத்தை அபகரிக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Petchi Avudaiappan
- Updated on: May 26, 2025
- 17:38 pm
ஆன்லைன் வர்த்தகத்தில் பெரும் நஷ்டம்.. மகளுடன் ரயில் முன் பாய்ந்த நபர்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஆன்லைன் வியாபாரத்தில் 15 லட்சம் ரூபாய் நஷ்டமடைந்த நிலையில் கடன் பிரச்னையால் மனமுடைந்தார். இதனிடையே அவர், தனது 6 வயது மகள் ஜஸ்வந்திகாவுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: May 26, 2025
- 17:37 pm