Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Crime

Crime

 

பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Read More

பாஜக நிர்வாகி அடித்து கொலை.. இரவில் நடந்த சம்பவம்.. சிவகங்கையில் அதிர்ச்சி

Sivaganga BJP Functionary Murder : சிவகங்கை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் கும்பலிடத் தகராறில் ஈடுபட்ட நிலையில், அந்த கும்பல், பாஜக நிர்வாகியை அடித்து கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கடத்தல்.. ரூ.50 லட்சம் கேட்ட கும்பல் கைது!

Krishnagiri Crime News: கிருஷ்ணகிரியில் இரண்டு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பணம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவத்தில், 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. போலீசாரின் விரைவான நடவடிக்கையால் கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

வரதட்சணை கொடுமை.. ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை.. நடந்தது என்ன?

Uttar Pradesh Dowry Murder : உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை கட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் மற்றும் கார் கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்தி வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் பயங்கரம்.. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?

Salem Murder : சேலம் மாவட்டத்தில் திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர், அவரை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாகி உள்ள இளைஞரை தேடி வருகின்றனர்.

கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி பலி.. பெற்றோர் செய்த கொடூரம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி!

Tiruvallur Illegal Abortion : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். பெற்றோரே வலுக்கட்டாயமாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி!

Bengaluru Dowry Harassment : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கர்ப்பமாக இருந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பெண்ணின் கணவர் கைதான நிலையில், அவரது பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

யாருப்பா நீ? பாம்பு பிடிக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. இந்த தவறை பண்ணாதீங்க!

Salem Crime News : சேலம் மாவட்டத்தில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்துள்ளார். விளையாட்டாக நல்ல பாம்பை பிடிக்க முயற்சித்த போது, இளைஞரை பாம்பு கடித்துள்ளது. இதில் மயக்கமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore: சாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் கல்லை போட்டு கொலை!

Coimbatore Crime News: கோயம்புத்தூரில் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபர் கல்வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்யப்பட்ட இளைஞர், 2018ல் சிறையில் கைதியை கொலை செய்த வழக்கில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிக்க சென்ற சிறுவன்.. துடிதுடித்து பலியான சோகம்.. பெற்றோரே உஷார்!

Vellore Crime News : வேலூர் மாவட்டத்தில் விஷப் பூச்சி கடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற சிறுவனை, விஷப் பூச்சி கடித்துள்ளது. இதனை அடுத்து சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தியிடம் தொடர்ந்து தகராறு.. அடித்துக்கொன்ற தந்தை.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Perambalur Crime News: பெரம்பலூர் அருகே அரும்பாவூரில், குடும்பத் தகராறில் தந்தை ராஜா தனது மகன் ராசுக்குட்டியை கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது மனைவியுடனான பிரச்சினையால் ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒரு வாரத்தில் திருமணம்.. பத்திரிகை கொடுக்க சென்ற மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்!

Kallakurichi Accident : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர் உயிரிழந்துள்ளனர். திருமணம் ஒரு வாரத்திற்கு நடைபெற இருக்கும் நிலையில், பத்திரிகை கொடுப்பதற்காக மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

இரண்டரை வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தந்தை – மதுரை அருகே பரபரப்பு

Crime News : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனது இரண்டரை வயது மகளை, தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அழைத்து சென்று சாக்கு மூட்டையில் அடைத்து வைத்திருக்கிறார். பின்னர் தனது குழந்தையை காணவில்லை என நாடகமாடியிருக்கிறார். போலீசார் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

Crime: முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!

Sivaganga Crime News: சிவகங்கை மாவட்டத்தில், இளம்பெண் கணவருடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து நான்கு பேர் கொண்ட கும்பல் மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. துடிதுடித்து பறிபோன இரு உயிர்.. சென்னையில் சோகம்!

Chennai Ganesh Chaturthi Celebrations : சென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்திற்கு நோ சொன்ன பெண்.. சுட்டுக் கொன்ற இளைஞர்.. ஹோட்டல் அறையில் சம்பவம்!

Bihar Crime News : பீகாரில் இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், பெண்ணை, இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்ற, அவரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த பெண், இளைஞரை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார்.