Crime
பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!
Palani Temple Land Case: திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி கோவில் நில முறைகேடு வழக்கில் சார்பதிவாளருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 17, 2026
- 16:33 pm IST
சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு.. வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்.. என்ன காரணம்!
Sivaganga Ajith Kumar Custodial Death Case : சிவகங்கை மாவட்டத்தில் கோவில் காவலாளி லாக்கப் மரணம் தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட 5- ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எதற்காக இந்த வழக்கு மாற்றப்பட்டது என்பதை விரிவாக பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 17, 2026
- 15:45 pm IST
நாகர்கோவில் சிறை மரண விவகாரம்.. அரசு நிவாரணங்களை நிராகரித்த குடும்பத்தினர்.. அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!
Nagercoil jail custodial death: நாகர்கோவில் சிறை மரண விவகாரத்தில் பலியான சபரிவர்மன் குடும்பத்தினருடன் தமிழக அமைச்சர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, அரசு அறிவித்த 10 லட்ச ரூபாய் நிவாரணம் மற்றும் தற்காலிக அரசு வேலையை வாங்க மறுத்து, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 17, 2026
- 07:35 am IST
கோவையில் அதிர்ச்சி.. ஆட்டுக்கு பாலியல் தொல்லை.. மேற்கு வங்க வாலிபர் அதிரடி கைது!
Coimbatore Youth Arrested : கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆட்டுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞரை கவுண்டம்பாளையம் போலீசார் விலக்கு வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர் .
- Sekaran S
- Updated on: Jul 16, 2026
- 21:39 pm IST
பழனி முருகன் கோயில் நில முறைகேடு.. அதிரடி விசாரணைக்கு 3 பேர் கொண்ட குழு அமைப்பு!
Palani Land Irregularities Inquiry Committee : பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 16, 2026
- 21:06 pm IST
காலையில் துள்ளி குதித்து பள்ளி சென்ற மாணவன்.. மாலையில் பிணமாக வீடு திரும்பினார்.. கள்ளக்குறிச்சியில் சோகமான நிகழ்வு!
Kallakurichi Student Died: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அரசுப் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த மர்மமான மரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 16, 2026
- 19:26 pm IST
திருமணமான 5 மாதத்தில் விபரீதம்.. தூக்கில் பிணமாக தொங்கிய மருத்துவ மாணவி.. மதுரை போலீசார் தீவிர விசாரணை!
Madurai Medical Student Self harm : கோவையை சேரந்த மருத்துவ மாணவி மதுரையில் முதுகலை மருத்துவம் படித்து வரும் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தல்லாக்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 16, 2026
- 17:14 pm IST
உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. குத்தூசியால் மனைவியை குத்தி கொன்ற கணவர்.. திருச்சியில் கொடூரம்!
Trichy Murder : திருச்சியில் உணவு கொடுக்காத ஆத்திரத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை வாகனங்களுக்கு பஞ்சர் ஓட்டும் குத்தூசியால் கொடூரமாக குத்தி அவரது கணவர் கொலை செய்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சையையும், பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
- Gowtham Kannan s
- Updated on: Jul 16, 2026
- 15:58 pm IST
கள்ளக்காதலனுடன் சேர கணவனைக் கொன்ற ஆந்திரப் பெண்.. தமிழக வாலிபர் பிணமாக மீட்பு.. கோவிலுக்கு சென்ற இடத்தில் பயங்கரம்!!
Kuppam Temple Murder: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரமேஷ் என்ற தமிழக வாலிபர், ஆந்திர மாநிலம் குப்பம் மல்லப்பகொண்டா மலைக்கோவிலுக்குச் சென்ற இடத்தில் அவரது மனைவியின் கள்ளக்காதலன் கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலனுடன் தப்பிச் செல்ல மனைவி காசினி போட்ட திட்டத்தின் படி இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 16, 2026
- 11:02 am IST
நாகர்கோவில் சிறை மரணம்.. 19 இடங்களில் காயம், ஊனமுற்ற கையும் உடைப்பு.. நீதி கேட்டு நிற்கும் உறவினர்கள்!!
Nagercoil Custodial Death: நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஊனமுற்ற கையை உடைத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 16, 2026
- 08:46 am IST
சினிமா பாணியில் நடந்த “சேசிங்”.. GUN பாயிண்டில் ஏ பிளஸ் ரவுடி அரஸ்ட்.. பரபரப்பில் சென்னை!
Chennai Police Arrested Rowdy: சென்னையில் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த ஏ பிளஸ் ரவுடியை ஓட்டேரி போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 15, 2026
- 21:15 pm IST
இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்.. குறுக்கே சென்ற மாமியார்- மருமகள் நேர்ந்த துயரம்.. புதுக்கோட்டையில் பெருஞ்சோகம்!
Pudukkottai Accident Two Died: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் கார்களின் இடையே சிக்கிய மாமியார் மற்றும் மருமகள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 15, 2026
- 18:19 pm IST
தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!
Thoothukudi Worker Murder 5 Arrested : தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளியை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக தலைமறைவாக இருந்து வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jul 15, 2026
- 16:43 pm IST
பழனி கோயில் ரூ.100 கோடி நில முறைகேடு.. விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐடி.. சிக்கப் போவது யார்?
Palani Murugan Temple Land Case : பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 மதிப்பிலான நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Jul 15, 2026
- 15:59 pm IST
அரசு பள்ளியில் பயங்கரம் – 12 ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து – அதிர்ச்சி சம்பவம்
: சிவகங்கை அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கத்தியால் குத்திய மாணவன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இந்த நிலையில் கத்தியால் குத்தப்பட்ட மாணவனை மீட்ட ஆசிரியர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- Karthikeyan S
- Updated on: Jul 15, 2026
- 14:06 pm IST