Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Crime

Crime

 

பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Read More

அயர்லாந்து: 796 குழந்தைகள் கழிவுநீர்குழிக்குள் புதைக்கப்பட்ட கொடூர உண்மை!

Irish Chapel Of Death: தியூம் தாய் மற்றும் குழந்தை இல்லத்தில் 796 குழந்தைகள் கழிவுநீர்குழியில் புதைக்கப்பட்ட கொடூரம் அம்பலமானது. திருமணம் செய்யாத பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். குடும்பங்கள், மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.

திருப்பத்தூர் ரயில் வழக்கில் அதிரடி தீர்ப்பு: கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிய குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை!

Hemaraj Life Sentence: கர்ப்பிணி பெண்ணை ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு 32 நாளில் தீர்வு பெற்றது.

திருமணமான ஒரு மாதம்.. மனைவி, தாயை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்.. பகீர் பின்னணி!

Villupuram Crime News : விழுப்புரத்தில் குடும்ப தகராறில் மூன்று பேரை இளைஞர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஒரு மாதத்தில் மனைவி, தாய் மற்றும் உறவினரை இளைஞர் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. மூன்று பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிகிறது.

சிவகங்கை அஜித் குமார் மரணம்.. விசாரணையை துவங்கிய சிபிஐ.. அடுத்து என்ன?

Sivaganga Custodial Death : சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கின் விசாரணையை சிபிஐ துவங்கி உள்ளது. தமிழக காவல்துறையினரிடம் ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், பிரிவு 103ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலையா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

Tirumala Manager Death Case : திருமலா பால் மேலாளர் நவீன் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது எனவும் அறிவிய்ல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். நவீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்த நிலையில், இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

பிரபல ரவுடி கொலை.. காரில் வைத்து கும்பல் செய்த கொடூரம்.. திண்டுக்கல்லில் பயங்கரம்!

Dindigul History Sheeter Murder : திண்டுக்கல் மாவட்டத்தில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டாளிகளுடன் ஏற்பட்ட தகராறில், ஐந்து பேர் கொண்ட அவரை, காரில் வைத்து சரமாரியாக குத்தி, தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

Father Misbehaved to His Own Daughter | உத்தர பிரதேசத்தில் 45 வயதாகும் தந்தை வீட்டில் தனியாக இருந்த தனது 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறிய நிலையில், தாயின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளின் பள்ளி கட்டணத்தை திரும்ப கேட்ட விவசாயி.. அடித்தே கொன்ற தாளாளர்!

Farmer Beaten to Death | மும்பையில் தனியார் பள்ளியில் படித்து வந்த தனது மகளை வேறு பள்ளியில் சேர்க்க நினைத்த விவசாயி தந்தை, பள்ளி நிர்வாகத்திடம் தான் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப தருமாறு கோரியுள்ளார். இதனால் பள்ளி தாளாளர் மற்றும் அவரது மனைவி இணைந்து விவசாயியை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

திருமலா பால் மேலாளர் கொலையா? விசாரணை வளையில் துணை ஆணையர்.. பின்னணி என்ன?

Tirumala Manager Death Case : சென்னையில் திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரண வழக்கு தொடர்பாக கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மேலும், நவீன் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய பாண்டியராஜன் திடீர் விடுப்பு எடுத்துள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எனவே, நவீன் மரணத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

கொலையில் முடிந்த பிராங்க் கால்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!

Madurai Youth Murder : மதுரையில் 18 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராங்க் கால் மூலம் ஏற்பட்ட பிரச்னையால், இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞரின், நண்பர் காவல்துறை அதிகாரி போல் பேசியது தொடர்பாக, இருவருக்கு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்.. ஹேமராஜ் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி!

Tirupattur Crime News : 2025 பிப்ரவரி 6ஆம் தேதி கர்ப்பிணிக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளி விட்ட வழக்கில் ஹேமராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹேமந்த்ராஜுக்கான தண்டனை விவரங்கள் 2025 ஜூலை 14ஆம் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ரூ.45 கோடி மோசடி புகார்.. திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை: வெளியான தகவல்கள்!

Chennai Crime: திருமலா பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி மோசடி நடந்ததாக மேலாளர் நவீன் மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் அழைப்புக்கு பின்னர் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் தொடர்பு உண்டா என சந்தேகம் எழ, சிபிசிஐடி விசாரணை கோரப்பட்டது. எனினும் போலீசார் இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடனாக கொடுத்த ரூ.2,000 பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. இளைஞர் குத்தி படுகொலை!

Man Killed For Asking to Return the Debt | டெல்லியில் தான் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்ட இளைஞர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முடி வெட்டலையா? கேள்வி கேட்ட பள்ளி முதல்வர்.. ஆத்திரத்தில் கொலை செய்த மாணவர்கள்!

Haryana Crime News : ஹரியானா மாநிலத்தில் பள்ளி முதல்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமுடியை வெட்ட சொல்லி பள்ளி முதல்வர் அறிவுறுத்தியதால், ஆத்திரத்தில் 11, 12ஆம் வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், அவரை கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்துள்ளனர்.

பால் குடிக்காமல் அழுத பச்சிளம் குழந்தை.. கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொலை செய்த தாய்.. கொடூர சம்பவம்!

Mother Killed New Born Child | பெங்களூருவில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பால் குடிக்காமல் அழுதுக்கொண்டே இருந்த நிலையில், ஆத்திரமடைந்த தாய் அதனை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.