
Crime
பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
Crime: மக்களே உஷார்.. சைபர் மோசடியில் ரூ.7 கோடியை இழந்த மருத்துவர்!
Cybercrime Scam: மகாராஷ்டிராவில் மூத்த மருத்துவர் ஒருவர் ₹7.17 கோடி சைபர் கிரைம் மோசடியில் சிக்கினார். உச்ச நீதிமன்றம், காவல்துறை பெயரில் போலி ஆவணங்கள், டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் பணத்தைப் பறித்துள்ளனர். வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 16, 2025
- 08:13 am IST
Crime: கோயில் பூசாரி வெட்டிக் கொலை.. திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்!
தூத்துக்குடி ஆறுமுகநேரி கோயில் பூசாரி முருகேசன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் வளாகத்திலேயே சடலமாக மீட்கப்பட்ட முருகேசனின் மரணம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரிக்கின்றனர். 2023 கோயில் கொடை விழா தகராறே இக்கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 15, 2025
- 08:21 am IST
லிஃப்ட் கொடுப்பதாக கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை – இருவர் கைது
கர்நாடகாவில் வேலை தேடிச் சென்ற பி.காம் பட்டதாரி பெண்ணுக்கு உதவுவதாகக் கூறி, இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 14, 2025
- 09:20 am IST
சாதி மாறி மகள் திருமணம்.. மாப்பிள்ளையை கொன்ற மாமனார்!
Dindigul Crime News: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் சாதி மறுப்பு திருமணம் செய்த ராமச்சந்திரன், பெண்ணின் தந்தையால் வெட்டிக் கொல்லப்பட்டார். காதல் விவகாரம் இரு வீட்டிலும் எதிர்ப்பைச் சந்தித்த நிலையில், பதிவு திருமணம் செய்துள்ளனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 14, 2025
- 08:40 am IST
சென்னையில் பயங்கரம்.. நடுரோட்டில் திமுக பிரமுகர் கொலை
Chennai Crime News: சென்னை அடையாறில் திமுக பிரமுகரும் வழக்கறிஞருமான குணசேகரன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார். ஆறு பேர் கொண்ட கும்பல் இக்கொலையைச் செய்தது. கடந்த ஆண்டு வழக்கறிஞர் கௌதம் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இச்சம்பவம் நடந்ததா என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 14, 2025
- 08:07 am IST
Namakkal: கைவிட முடியாத கள்ளக்காதல்.. தற்கொலைக்கு முயன்ற ஜோடி!
நாமக்கல்லில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் காதலனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினேகா மற்றும் அஜித் ஆகிய இருவரும் ராசிபுரம் அருகே விஷம் குடித்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 14, 2025
- 06:50 am IST
இருமல் மருந்து குடித்து உயிரிழந்த குழந்தைகள்.. சென்னையில் அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..
அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் இருமல் மருந்து தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீசென் ஃபார்மா மருந்து கம்பெனி உரிமையாளரான ரங்கநாதன் வீடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. கோடம்பாக்கம் நாகர்ஜூனா 2 வது தெருவில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Oct 13, 2025
- 12:04 pm IST
காப்பீடு பணம் ரூ.4 லட்சம்.. கணவருடன் சேர்ந்து அண்ணனை கொன்ற தங்கை!
Coimbatore Crime News: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.4 லட்சம் பணத்திற்காக அண்ணன் மணிகண்டனை தங்கை அஞ்சு, அவரது கணவர் அஜித்குமாருடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். தாயாரின் விபத்து காப்பீட்டு பணத்தில் மணிகண்டனின் பங்கை அஞ்சு செலவிட்டது தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 13, 2025
- 09:05 am IST
கோவையில் பரபரப்பு.. நடுரோட்டில் அடுத்தடுத்து பெண்களிடம் செயின் பறிப்பு!
Coimbatore Crime News : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இரண்டு பெண்களின் மர்ம நபர்கள் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். தங்க நகை என நினைத்து மர்ம நபர்கள் கவரிங் நகை சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் பறித்துள்ளனர். இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 11:01 am IST
காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி.. பறிபோன உயிர்.. தூத்துக்குடியில் சம்பவம்
Thoothukudi Crime News : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால், தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 2025 அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று உயிரிழந்தார்.
- Umabarkavi K
- Updated on: Oct 11, 2025
- 09:43 am IST
ரேஷன் அரிசி கடத்த வற்புறுத்தல்.. லஞ்சம் கேட்ட 4 போலீசார் கைது!
சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்த விவசாயியை கட்டாயப்படுத்தி லஞ்சம் கேட்ட 4 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி சக்திவேல் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் அனைவரும் பிடிப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 11, 2025
- 08:46 am IST
Namakkal: 15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. சிக்கிய பைக் மெக்கானிக்!
நாமக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சதீஷ் குமார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோழிப்பண்ணையில் வேலை செய்தபோது ஏற்பட்ட பழக்கம் தற்போது குழந்தை பெற்றெடுக்கும் நிலைக்கும் வந்துள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Oct 11, 2025
- 07:18 am IST
தந்தை செய்த கொடூரம்.. 3 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை.. தஞ்சையில் பயங்கரம்!
Thanjavur Crime News : தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், தனது மூன்று குழந்தைகளை மதுபோதையில் கழுத்தறுத்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- Umabarkavi K
- Updated on: Oct 11, 2025
- 06:36 am IST
மனைவியின் தங்கையை 2வது மனைவியாக்க தீரா ஆசை.. 2 கொலைகளில் முடிந்தது எப்படி?
Man Demands to Marry Wife's Sister as Second Wife | குஜராத்தில் அக்காவை திருமணம் செய்த நபர் அவரது தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் உட்பட இரண்டு கொலைகளை அரங்கேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Oct 10, 2025
- 21:08 pm IST
ஜாமீனில் வந்த ஒரே நாளில்.. இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்.. தூத்துக்குடியில் ஷாக்
Thoothukudi Murder : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இளைஞரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. கையெழுத்திட காவல்நிலையம் சென்ற நிலையில், இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவருடன் வந்த சகோதரரையும் கும்பல் வெட்டியுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Oct 10, 2025
- 16:56 pm IST