AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Crime

Crime

 

பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Read More

சைலண்ட் கில்லரான கார் ஏசி.. ராணிப்பேட்டையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்.. தூக்கத்தில் பிரிந்த ஓட்டல் மேலாளர் உயிர்!

Ranipet Restaurant Manager Dies : ராணிப்பேட்டை மாவட்டத்தில் காரில் ஏசியை இ யக்கியவாறு தூங்கிய தனியார் உணவகத்தின் மேலாளர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் . இந்தச் சம்பவம் தொடர்பாக வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரம்.. சார்-பதிவாளர் உள்ளிட்டோருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

Palani Land Fraud Case : பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கெனவே, ஜாமின் தரமறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் எஃப்கியூஎல் முதலீட்டு மோசடி.. பாதிக்கப்பட்ட இளைஞர் விபரீத முடிவு.. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Madurai FQL Financial Scam : மதுரை மாவட்டத்தில் எஃப்கியூஎல் நிதி மோசடியில் பாதிகப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை சாலையில் வைத்து நீதி கேட்டு உறவினர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் பகீர் சம்பவம்.. நாமக்கல்லில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை- ரூ.40 லட்சம் கொள்ளை!

Namakkal 40 Sovereign Looted : நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம கும்பல் கணவன், மனைவியை கட்டி போட்டு பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 40 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றது.

நாகப்பட்டினத்தில் திருமணமான 4 மாதத்தில் அதிர்ச்சி.. மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்.. நள்ளிரவில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு!

Nagapattinam Crime : நாகப்பட்டினத்தில் திருமணமான 4.5 மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புது மாப்பிள்ளை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

கார் கதவுகளில் ரகசிய அறைகள்.. கோவையில் சிக்கிய ரூ. 10 கோடி போதைப்பொருள்.. 3 பேர் அதிரடி கைது

Coimbatore Narcotics Smuggling : கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரின் கதவுகளில் ரகசிய அறை அமைத்து ரூ. 10 கோடி மதிப்பிலான 12.80 கிலோ எம்எம்டிஏ வீரிய ரக போதைப் பொருளை கடத்திய 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

  • Sekaran S
  • Updated on: Aug 31, 2026
  • 14:37 pm IST

சேலத்தில் உறைய வைக்கும் கொடூரம்.. பெண்ணை வெட்டிக் கொன்று உடல் பாகங்களை மூட்டையாகக் கட்டி வீச்சு!!

Woman Body Parts Found in Water Tank: சேலம் அரிசிபாளையத்தில் துர்நாற்றம் வீசிய வீட்டின் மேல்நிலைத் தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்த உரிமையாளருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண் ஒருவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து, தலை, உடம்பு, கை மற்றும் கால்களைத் தனித்தனியாகப் பிரித்து இரண்டு மூட்டைகளாகக் கட்டித் தண்ணீர் தொட்டிக்குள் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sathis S
  • Updated on: Aug 31, 2026
  • 14:00 pm IST

வரதட்சணை கொடுமையால் பரிதாபம்.. கை குழந்தையை தவிக்கவிட்டு தாய் விபரீத முடிவு.. சென்னையில் சோகம்!

Chennai Dowry Harassment Case: சென்னை ஈச்சங்கரணையைச் சேர்ந்த புவனேஸ்வரி, வரதட்சணை கொடுமை காரணமாக பள்ளிக்கரணையில் உள்ள தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது வாக்குறுதி அளித்தபடி 200 சவரன் நகை தராததால் கணவர் மற்றும் உறவினர்கள் மன உளைச்சல் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது.

நெல்லையில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் படுகொலை – வீட்டுமுன் தலையை வீசி சென்றதால் பரபரப்பு

Tirunelveli Murder Shock : திருநெல்வேலி மாவட்டம் உடையார்பெட்டி அருகே மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அவர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றபோது மர்ம நபர்கள் அவரை தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

மதுபோதையில் வெடித்த குடும்பத் தகராறு.. பெற்ற மகளையும், தாயையும் சரமாரியாக வெட்டி கொன்ற கொடூரம்.. தருமபுரியை உலுக்கிய துயரம்!

Dharmapuri Double Murder: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பெற்ற தாயை வெட்டிக்கொலை செய்து, தனது சொந்த மகளையும் கொடூரமாகத் தாக்கிய தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகளும் உயிரிழந்ததால், இச்சம்பவம் இரட்டைக்கொலை வழக்காக மாறியுள்ளது.

டெல்லி ரயிலில் சூட்கேஸில் உடல் பாகங்கள்.. பிரியாணி டபராவில் மனித உடல் இருந்த வழக்கு.. முக்கிய குற்றவாளி கைது!

Train Suitcase Body Case : சென்னையில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகம் மற்றும் பிரியாணி டபராவில் உடல் இருந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை மணிப்பூரில் போலீசார் கைது செய்தனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

டெல்லியில் மாடல் அழகி படுகொலை.. தப்பிய டிரைனரை சுட்டுப் பிடித்த காவல்துறை.. திடுக்கிடும் பின்னணி!

Delhi Model Muskan Murder: டெல்லியில் 21 வயது மாடல் அழகி மற்றும் பல்கலைக்கழக மாணவி முஸ்கான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உடற்பயிற்சி பயிற்சியாளரான இம்ரான் என்பவரைப் பொலிஸார் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளில் போக்சோ வழக்கு, ஒருவரைத் தாக்கி கோமா நிலைக்குத் தள்ளியது உட்பட இம்ரான் நடத்திய கொடூரக் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

NEET-இல் பாஸ் செய்தும் கிடைக்காத MBBS சீட்.. நெல்லையில் சோகம்.. மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

Nellai NEET Student Self Harm : திருநெல்வேலி மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி தான் மருத்துவம் படிக்க விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காத காரணத்தால் வீட்டின் பின் பகுதியில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகாலையிலேயே கொடூரம்.. செங்கல்பட்டில் கார் டயர் வெடித்து விபத்து.. பரிதாபமாக பறிபோன 4 உயிர்!

Chengalpattu Car Accident Dies : செங்கல்பட்டு மாவட்டத்தில் காரின் டயர் வெடித்த விபத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசிக நிர்வாகி படுகொலை சம்பவம்.. 7 பேரை தட்டி தூக்கிய தனிப்படை? ரகசிய இடத்தில் வைத்து விசாரணை!

Chennai VCK Functionary Murder : சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 7 பேரை தனிப் படை போலீசார் கைது செய்து அதிரடி விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .