Crime
பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
கோவையில் தனியார் தியேட்டரில் திடீர் கலாட்டா.. பொதுமக்களிடம் உரிமையாளர்கள் – ஊழியர்கள் கடும் வாக்குவாதம்!
Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் தியேட்டரில் கழிவறை சுத்தமாக இல்லாததா வீடியோவாக பதிவு செய்த பொது மக்களுடன் தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கில் வைரகி வருகிறது .
- Sekaran S
- Updated on: Jun 2, 2026
- 14:53 pm IST
கோவையில் திடீரென மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ் படை.. ஆம்னி பேருந்துகள் சல்லடை சல்லடையாக அலசல்.. என்ன காரணம்!
Coimbatore Police Drug Raids : கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்துகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பார்சல் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
- Sekaran S
- Updated on: Jun 2, 2026
- 12:21 pm IST
ஒன்றரை வயது அர்ஷித் கொலை வழக்கு: 51 காயங்கள், பல மர்ம சம்பவங்கள்… அஷ்கர் – அகிலா மீது தீவிர விசாரணை
Nedumangad Child Murder Case: குழந்தையை அஷ்கர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அர்ஷித்தின் தாத்தா சுனில் குமார் குற்றம்சாட்டியுள்ளார். அகிலாவின் முதல் கணவர் அகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதும் தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அகிலா கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 2, 2026
- 09:41 am IST
பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. தவெக நிர்வாகிகள் இருவர் கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!
Thoothukudi Women Gang HAarassment : தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி காரில் அழைத்து சென்று மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 2, 2026
- 08:25 am IST
சென்னையில் போதைப்பொருள் விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர்.. போதை கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..
Chennai Crime: சென்னை தண்டையார்பேட்டையில் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதனை தட்டிக் கேட்ட விஷ்ணு மீது போதை கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 2, 2026
- 07:07 am IST
தஞ்சாவூரில் கணவன் – மனைவி இடையே கத்திச் சண்டை.. நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கரம்.. இறுதியில் பறிபோன உயிர்!
Thanjavur Women Murder: தஞ்சாவூரில் நகை திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கியது தொடர்பாக கணவன், மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் கத்தியால் சண்டை போட்டதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 2, 2026
- 07:03 am IST
கோவையில் சடலமாக மீட்கப்பட்ட மேற்கு வங்க நபர்.. பகீர் சம்பவம்!
West Bengal Man Found Dead and Decomposed | கோயம்புத்தூரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உடலை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Vinalin Sweety
- Updated on: Jun 1, 2026
- 22:18 pm IST
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. இரண்டு சிறுவர்கள் கைது.. அதிர்ச்சி சம்பவம்!!
தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாகி வந்த சிறுமி, ஒரு கட்டத்துக்கு மேல் இவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் அவர்களின் மிரட்டலுக்கு அடிப்படையாமல் முடிந்ததை செய்துகொள் என துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அரவிந்தன் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை அப்பகுதியில் உள்ள அவரது நண்பர்களுக்கு அனுப்பி பரப்பியுள்ளார்.
- Vinoth V
- Updated on: Jun 1, 2026
- 12:01 pm IST
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்.. நெல்லை சரக டிஐஜி உத்தரவு!
Arumuganeri Inspector Thileepan suspend : தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திலீபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தூநெல்லை சரக டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகர் சஞ்சய் பிறப்பித்துள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 1, 2026
- 11:57 am IST
சென்னையில் இளம்பெண் கார் ஏற்றி கொலை.. பாரில் நடந்தது என்ன?.. இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!!
சண்டை தீவிரமானதால், பயந்துபோன அஷ்ரத் மற்றும் அவரது நண்பர், அந்த இரண்டு பெண்களையும் காப்பாற்றிப் பஸ் ஸ்டாண்டில் விடுவதற்காக ஒரே ஸ்கூட்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். நண்பர் வண்டி ஓட்ட, நடுவில் இரண்டு பெண்களை உட்கார வைத்துவிட்டு, அஷ்ரத் கடைசியில் உட்கார்ந்துள்ளார். ஒரே ஸ்கூட்டியில் 4 பேராக அவர்கள் கோயம்பேடு மேம்பாலம் கீழே தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jun 1, 2026
- 08:31 am IST
நெல்லையில் தறிகெட்டு ஓடிய கார்.. நொடிப் பொழுதில் நேர்ந்த கோர விபத்து.. அடுத்தடுத்து பறிபோன 3 உயிர்!
Nellai Car Accident Three Killed: திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 1, 2026
- 06:51 am IST
தென்காசி – நெல்லையில் அடுத்தடுத்து அரிவாள் வெட்டு.. 2 நாளில் 12 பேர் அதிரடி கைது.. ரவுடி சுட்டுப்பிடிப்பு!
Tenkasi And Nellai Sickle Attack: தென்காசி மற்றும் திருநெல்வேலியில் பொது மக்கள் மீது பயங்கர ஆயுதங்களால் கொடூர தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில், ஒருவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.
- Gowtham Kannan s
- Updated on: May 31, 2026
- 21:27 pm IST
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை? நெஞ்சில் சுட்டு விடுவதாக மிரட்டல்.. ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்!
Arumuganeri Inspector Thileepan: தூத்துக்குடி மாவட்டத்தில் பணி புரிந்து வரும் இன்ஸ்பெக்டர் திலீபன் சக பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட காவலரின் கணவரை துப்பாக்கியில் சுட்டுவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக மாவட்ட எஸ்பி.யிடம் பெண் காவலர் புகார் அளித்துள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: May 31, 2026
- 20:36 pm IST
சேலம் சிறையில் விசாரணை கைதி மர்ம சாவு… வார்டர் மீது பாய்ந்த கடும் நடவடிக்கை.. ஆன் ஸ்பாட்டில் நீதிபதி ரைடு!
Salem Central Jail Warder Suspend: சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் வார்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சம்பவத்துன்று மது போதையில் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- Gowtham Kannan s
- Updated on: May 31, 2026
- 16:32 pm IST
மயிலாடுதுறை அருகே கார் மரத்தில் மோதி விபத்து.. கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்.. மருத்துவ மாணவி பலியான சோகம்!
Mayiladuthurai Car Accident : மயிலாடுதுறை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- Gowtham Kannan s
- Updated on: May 31, 2026
- 15:52 pm IST