Crime
பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு காதலனுடன் சென்ற இளம் பெண்.. சரமாரியாக சுட்டுக் கொலை செய்த தந்தை!
Young Woman Brutally Killed By Her Father | மத்தியா பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமணத்திற்கு பிறகு தனது கணவரை கைவிட்டுவிட்டு காதலனுடன் சென்றுள்ளார். இதன் காரணமாக கடும் ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் தந்தை அவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jan 15, 2026
- 09:09 am IST
புதுச்சேரி அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து…பொங்கலுக்கு ஊருக்கு சென்ற 10 பயணிகள் காயம்!
Omni Bus Accident: சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்புட்ட தனியார் ஆம்னி பேருந்தானது புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பயணிகள் காயம் அடைந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நேரிட்டது.
- Gowtham Kannan
- Updated on: Jan 14, 2026
- 15:51 pm IST
“வேலியே பயிரை மேய்ந்த கதை”..பெண்ணுக்கு அத்துமீறி பாலியல் தொல்லை…முதல் நிலை காவலர் கைது!
Kallakurichi Policeman Arrested: கள்ளக்குறிச்சியில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முதல் நிலை காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவிட்டுள்ளார் .
- Gowtham Kannan
- Updated on: Jan 13, 2026
- 10:32 am IST
15 வயது மூத்த பெண் மீது காதல்.. ஆசைக்கு இணங்க மறுத்ததால் கல்லூரி மாணவர் செய்த கொடூரம்!
34 Years Old Woman Killed By College Student | பெங்களூரில் சர்மிளா என்ற 34 வயது பெண் தனியாக வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை ஒருதலையாக காதலித்து வந்த 19 வயது கல்லூரி மாணவர் அவருக்கு கொடூர செயலை செய்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jan 13, 2026
- 07:19 am IST
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரபல ரவிடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சியூட்டும் பின்னணி.. 8 பேர் கைது..
Chennai Crime: ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட இடத்தில், சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார். இணை ஆணையர் பண்டிட் கங்காதர், மருத்துவக் கல்லூரி RMO வாணி மற்றும் மருத்துவ அதிகாரி பாஸ்கர் ஆகியோருடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 12, 2026
- 20:43 pm IST
+2 படிக்கும் மகளை அடித்தே கொன்ற தந்தை.. குடிபோதையில் நடந்த கொடூரம்..
Father's brutal attack: இதனிடையே, படுகாயமடைந்த மாணவி வைஷ்ணவி டிசம்பர் மாதம் முதல் கடந்த 26 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், காயம் கடுமையாக இருந்ததால், சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், நேற்று காலை வைஷ்ணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 12, 2026
- 10:00 am IST
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி வெட்டிக்கொலை.. சென்னையில் பகீர்!!
Shocking incident in Chennai: உடனடியாக கீழ்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரை சிகிச்சை அனுமதித்துள்ளனர். எனினும், அவர் ஏற்கெனவே, உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 12, 2026
- 08:07 am IST
காதல் ஜோடியை வீடு புகுந்து தாக்கிய பெண் வீட்டார்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!
Girl's Parent Brutally Attacked Her Lover's Family | தூத்துக்குடியில் இளம் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண் வீட்டார், அவரின் காதலன் வீட்டிற்குள் நுழைந்து இளம் பெண் மற்றும் அவரது காதலரின் குடும்பத்தினரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jan 11, 2026
- 08:45 am IST
11 மாத குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தாய்.. கணவரின் துன்புறுத்ததால் பெண் விபரீத முடிவு!
Mother Killed 11 Months Old Baby | தெலங்கானாவில் கணவரின் துன்புறுத்தல் தாங்காமல் தனது 11 மாத பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jan 11, 2026
- 08:07 am IST
சிறுமிகளை துப்பாக்கி முணையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. 6 பேரை சுட்டுக் கொன்ற நபர் அதிரடி கைது!
American Man Killed 6 with Gun | அமெரிக்காவை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தனது வீட்டில் இருந்த மூவரை சுட்டுக் கொலை செய்த நிலையில், 7 வயது சிறுமி, பாதிரியார் உட்பட மேலும் மூன்று பேரை கொலை செய்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jan 11, 2026
- 11:40 am IST
வளர்த்து ஆளாக்கிய சித்தி இறந்ததால் சிறப்பு காவல் ஆய்வாளர் விபரீத முடிவு.. திருவள்ளூரில் சோகம்!!
நான்கு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வேதவல்லி மரணமடைந்தார். அவரது இழப்பு குமரனை மனரீதியாக மிகவும் பாதித்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் குமரன் தன் கடமைகளை ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலையத்தில் செய்தார். பிறகு இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 10, 2026
- 11:18 am IST
பழிக்கு பழி… ஜாமினில் வந்த 21 நாட்களில் கணவன் – மனைவி கொலை – ஒரே நேரத்தில் 2 இடங்களில் வெறிச்செயல்
Revenge Double Murder: திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவை நிர்வகிப்பது தொடர்பான பிரச்னையில் பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Karthikeyan S
- Updated on: Jan 10, 2026
- 06:40 am IST
‘பணத்தால் சிதைந்த நட்பு’.. நண்பனை கொடூரமாக கொன்ற நபர்.. திடுக் சம்பவம்!!
கிருஷ்ணகிரியில் பணப் பிரச்சினை காரணமாக நீண்ட நாள் நட்பு பகையாகி, நண்பர் முன்னாள் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கூலி படையுடன் இணைந்து குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வலைவீசி தேடிவருகின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 9, 2026
- 14:05 pm IST
திடீர் இருமலால் முச்சுத் திணறல்…தாயிடம் பால் அருந்திய பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
Coimbatore Crime: கோவை மாவட்டத்தில் தாயிடம் பால் அருந்திய பச்சிளம் பெண் குழந்தை இருமலால் ஏற்பட்ட மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரழந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Jan 9, 2026
- 12:41 pm IST
2 பிள்ளைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்த தந்தை.. தானும் விபரீத முடிவு.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!
Man Killed His Children and Himself | தெலங்கானாவை சேர்ந்த சிவராமுலு என்ற நபர் தனது இரண்டு பிள்ளைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்த நிலையில், தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மனைவி விவாகரத்து பெற்றுச் சென்ற நிலையில், பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் அவர் இந்த செயலை செய்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jan 9, 2026
- 08:03 am IST