AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Crime

Crime

 

பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Read More

கணவன் – மனைவி தகராறு.. குறுக்கே வந்த மாமியார்.. போட்டுத் தள்ளிய மருமகன்.. கொலையில் முடிந்த வாக்குவாதம்!

Dindigul Crime: திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவி, குழந்தைகள் குடும்பம் நடத்த அனுப்பி வைக்காத ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்தார். இந்தச் சம்பவத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

காதல் விவகாரம்.. ஆட்டோ ஓட்டுநரை குறி வைத்த தந்தை – மகன்.. ரத்த களறியான சம்பவம்!

Nilgiris Crime: நீலகிரி மாவட்டத்தில் மகளை காதலிப்பதை கைவிடக்கோரி எச்சரித்ததை ஏற்க மறுத்த ஆட்டோ ஓட்டுநரை தந்தை மற்றும் அவரது 17 வயது மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் கைதாகினர்.

800 அடி பள்ளம்.. உருண்டு விழுந்த வேன்.. 9 பேர் பலியான பெரும் சோகம்.. வால்பாறை விபத்து நடந்தது எப்படி.. நேரில் பார்த்தவர்கள் கூறுவதென்ன?

Valparai Accident: கேரள மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் சுற்றுலா வந்த வேன் வால்பாறையில் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது, விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

5 வயது பேத்தியை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட பாட்டி.. அதிர்ச்சி சம்பவம்!

Grandmother Tied Hand and Leg of Fiver Years Old Grand Daughter | பஞ்சாப்பில் உள்ள பாரித்கோட் பகுதியில் தனது 5 வயது பேத்தியை பெண் துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவர் வீட்டின் வெளியே கட்டிப்போட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் பயங்கரம்: மனைவி வெட்டிக்கொலை.. மகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை!

Tragic Family Murder-Suicide in Salem: சேலத்தில் சந்தேகத்தின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியையை அவரது கணவரே பள்ளிக்குள் புகுந்து வெட்டிக்கொலை செய்தார். மனைவியைக் கொன்ற ஆத்திரத்தில், தனது 3 வயது மகளையும் அழைத்துச் சென்று விஷம் கொடுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு வெட்டு.. மீஞ்சூரில் போதை கும்பலின் அட்டூழியம்..

ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், இதுவரை காவல்துறையினர் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ள நிலையில், மேலும் இருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் சோக சம்பவம்… பெண்ணுக்கு எமனாக மாறிய நாய்க்குட்டி..!

Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டத்தில் நாய்க் குட்டியின் நக கீரல் பட்டதை சாதாரமாக எடுத்துக் கொண்ட பெண் ரேபிஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உறவினர்களுக்கும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது

நெல்லை – செங்கோட்டை ரயிலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. குற்றாலநாதர் கோயில் தமிழ் புலவர் கைது!

Tenkasi Crime : திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலில் பயணம் செய்த பெண் பயணியிடம் நகை பறிக்க முயன்றதாக குற்றாலநாதர் கோயிலில் தமிழ் புலவராக பணி புரிந்து வரும் கருப்பசாமி என்பவரை தென்காசி ரயில்வே போலீசார் கைது செய்தனர் .

சேலத்தில் கொடூரம்.. அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியையை வெட்டிக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்..

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியையாக ஸ்ரீவித்யா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் விஜயமுருகனுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பேட்டரி வெடித்ததால் நேர்ந்த விபரீதம்.. உடல் கருகி தம்பதி பலி.. ஆற்காட்டில் சோகம்!

Ranipet Fire Accident: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐஸ்கிரீம் தயார் செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்தனர். கடையில் இருந்த பேட்டரி வெடித்த காரணத்தால் இந்த தீ விபத்து நிகழ்ந்தது விசாரணையில் தெரிய வந்தது.

கண்ணியம் இல்லாமல் வாழ முடியாது.. எயிட்ஸ் பாதிப்பு ரத்தம் உடலில் செலுத்தப்பட்டதால் இளம் பெண் விபரீதம்!

Man Injected HIV Infected Blood In Young Woman Body | தெலங்கானாவை சேர்ந்த 22வது இளம் பெண் ஒருவர் தனது தூரத்து உறவினர் ஒருவரை காதலித்துள்ளார். அவருக்கு எயிட்ஸ் பாதிப்பு இருந்ததால் காதலை முறித்த நிலையில், அந்த நபர் இளம் பெண்ணின் உடலில் எயிட்ஸ் பாதிப்பு ரத்தத்தை செலுத்தியுள்ளார்.

வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலர்.. அதிரடி வழக்குப்பதிவு!

Thoothukudi Crime : தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிப்காட் காவல் நிலையத்தில் பணி புரியும் ஏட்டு மீது போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

லாரி வடிவில் வந்த எமன்.. மகளை பறிகொடுத்து நடுரோட்டில் கதறிய தந்தை.. குமரியில் மனதை ரணமாக்கும் சம்பவம்!

Kanyakumari Crime: கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மீது கனிம வளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரர் கண் முன்னே அவரது மகள் பரிதாபமாக துடிக்க துடிக்க உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆண் வாரிசு ஆசை: இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற கல்நெஞ்சக்கார தந்தை….

Telangana Crime: தெலங்கானாவில் ஆண் வாரிசு இல்லாத ஆத்திரத்தில் தந்தை ஒருவரே தனது இரட்டைப் பெண் குழந்தைகளை விஷம் கொடுத்துக் கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான ஸ்ரீசைலம், பெண் குழந்தைகள் பிறந்த காரணத்தால் தனது மனைவியுடன் தொடர் சண்டையில் ஈடுபட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு… எஸ்.ஐ. இசக்கி ராஜா உள்பட 3 போலீசாருக்கு செக் வைத்த தென்காசி எஸ்.பி.!

Tenkasi Crime: தென்காசி அருகே ஆலங்குளம் பகுதியில் பனை மரம் ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்பட 3 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.