AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு – தீவிரமடையும் காவிரி பிரச்னை

தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதல்வர் விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு – தீவிரமடையும் காவிரி பிரச்னை
முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் பட போஸ்டர் கிழிப்பு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Jul 2026 15:16 PM IST

தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதல்வர் விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இதற்கிடையில் மேகதாது அணை விவகாரம் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்னையை மேலும் தீவிரமடைய செய்துள்ளது. இந்த நிலையில் மேகதாது குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க : விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு.. ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

 

டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் சமீபத்தில் நடை​பெற்​றது. இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களை சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் பங்​கேற்​றனர்.

இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி நீர் ஒழுங்​காற்று குழு, உச்சநீதிமன்ற உத்​தர​வின்​படி தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்து​விட வேண்​டும். மழை பற்​றாக்​குறை காரண​மாக அணைகளில் உள்ள நீர் இருப்​பின் அளவுக்கு ஏற்​ற​வாறு நீரை பங்கிட்​டுக் கொள்ள வேண்​டும். கிருஷ்ண​ ராஜ​சாகர் மற்​றும் கபினி ஆகிய இரு அணை​களில் இருந்​தும் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு தின​மும் 3500 கன அடி நீரை திறந்​து​விட வேண்டும் என உத்​தர​விட்​டது.

இதையும் படிக்க : தொழில்துறையில் மாபெரும் பாய்ச்சல்.. முதல்வர் விஜய் முன்னிலையில் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

இந்த நிலையில் கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில்,  கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தியேட்டர் முன் இருந்த ஜனநாயகன் பட போஸ்டரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் வருகிற ஆகஸ்ட் 3, 2026  அன்று முதல்வர் விஜய் கர்நாடகா சென்று முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்தித்து காவிரி நீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

Follow Us