கேரளத்தில் வெளுத்து வாங்கும் கனமழை – 7 பேர் மரணம் – அதிர்ச்சி தகவல்
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் வரை உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாாம்.
கேரளத்தில் ஆகஸ்ட் 1, 2026 இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் வரை உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 2, 2026 நாளையும் கனமழை வாய்ப்புள்ளதால், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை கிரீன் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கேரளாவின் எந்த மாவட்டத்திலும் சிறப்பு மழை எச்சரிக்கை எதுவும் இல்லை.
இதையும் படிக்க : “தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!”.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!




கனமழை காரணமாக 7 பேர் மரணம்
கனமழையால் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்கள் வெள்ள அபாயத்தில் உள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழையால் இந்த மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பம்பையாறு நிரம்பியதையடுத்து, குடியிருப்பு பகுதிகள் மற்றும் ரன்னி நகரம் முற்றிலும் நீரில் மூழ்கியது. மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பலத்த மழையும், மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மற்ற மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : தேர்வு வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை… புதிய சட்ட மசோதாவை வரவேற்று பிரதமர் மோடி வீடியோ வெளியீடு!
கேரள முழுவதும் நேற்றும் இன்றும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மண்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தாயும் மகனும் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பத்தனம்திட்டா ரன்னி அனைத்து பகுதிகளிலும் மூழ்கியது.