AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாடு முழுவதும் கனமழை தீவிரம் – அசாமில் 80 பேர் பலி… கேரளாவில் வெள்ளப்பெருக்கு

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை பல மாநிலங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கேரளாவில் வெறும் இரண்டு மணி நேரத்தில் 300 மி.மீ மழை பெய்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நாடு முழுவதும் கனமழை தீவிரம் – அசாமில் 80 பேர் பலி… கேரளாவில் வெள்ளப்பெருக்கு
நாடு முழுவதும் கனமழை தீவிரம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Aug 2026 22:52 PM IST

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அசாம், கேரளா, குஜராத், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு, பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளன. பல பகுதிகளில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அசாமில் வெள்ளம் காரணமாக 80 பேர் பலி

அசாமில் வெள்ள நிலைமை தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது. சிவசாகர் மற்றும் சாரைடியோ மாவட்டங்களில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. பேரிடர் மேலாண்மை அமைப்பின் தகவலின்படி, சிவசாகர், கோலாகாட், ஜோர்ஹாட், நாகான் மற்றும் சாரைடியோ ஆகிய மாவட்டங்களில் 1.92 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 379 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், 15,430 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன

இதையும் படிக்க : காவிரி விவகாரம்.. முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்… டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பு!

கேரளத்தில் கனமழை தீவிரம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் வெறும் 2 மணி நேரத்தில் 300 மி.மீ அதிகமான மழை பதிவானதைத் தொடர்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ரன்னி நகரின் பல பகுதிகள் இடுப்பளவு நீரில் மூழ்கின. இந்த நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் காவல்துறை, தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத்தில் மழையின் பாதிப்புகள்

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள அவுரங்கா ஆற்றின் அருகே வெள்ள நீரில் சிக்கியிருந்த 3 பேரை தீயணைப்புத் துறையினர் வெற்றிகரமாக மீட்டனர். ஜூலை 23 முதல் 27, 2026 வரை பெய்த கனமழையால் மூடப்பட்ட சாலைகள் ஏற்கனவே மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்தது. தென் குஜராத் அதிக பாதிப்புகளைச் சந்தித்த போதிலும், போர்க்கால அடிப்படையில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்களும் கனரக இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டு, 98 சதவிகிதத்திற்கும் அதிகமான சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் தீவுகளாக மாறிய கிராமங்கள்

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள கனாஸ் வட்டாரத்தில் உள்ள டோகந்தர் கிராம மக்கள், தங்கள் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பெரும்பாலான கிராமங்கள் தீவுகளாக மாறியுள்ளன. குடிநீர், மின்சாரம் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ பகுதியில் ஆகஸ்ட் 1, 2026 இன்று அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் பல கடைகள் சேதமடைந்தன. இருப்பினும், உயிரிழப்பு ஏதுமில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

இதையும் படிக்க : “தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!”.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!

இமாச்சலப் பிரதேசத்தில் தொடரும் மழை

தொடர் மழையால் இமாச்சலப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 4, 2026 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்எச்சரித்துள்ளது. இதற்கிடையில், பாண்டோ அணையிலிருந்து கூடுதலாக 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால், பியாஸ் ஆற்றில் நீர்வரத்து சுமார் 36,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஆற்றங்கரைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் கனமழை

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில், நாக்பூர்-மும்பை நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்திற்கான இணைப்புச் சாலை கனமழையால் இடிந்து விழுந்தது. அதிகாரிகள் பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us