<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Latest News Tamil - தமிழில் சமீபத்திய செய்திகள், தமிழ் செய்திகள் இன்று, Tamil News Online</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/latest-news/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/latest-news</link>
 <description>Latest News in Tamil: Latest news and headlines online in Tamil. தமிழ் செய்திகள். தமிழில் முக்கிய செய்திகளையும் சமீபத்திய தலைப்புச் செய்திகளையும் பெறுங்கள் Top headline from Tamil Nadu, India and the world in Tamil on tv9tamilnews.com</description><lastBuildDate>Sat, 27 Jun 2026 23:40:07 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>ரூ.1-க்கு விற்பனை என வதந்தி.. வணிக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மக்கள்.. மும்பையில் பரபரப்பு சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/hundreds-of-people-gathered-in-front-of-shopping-complex-due-to-fake-new-in-mumbai-87476.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 23:40:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/hundreds-of-people-gathered-in-front-of-shopping-complex-due-to-fake-new-in-mumbai-87476.html</guid>
		            
			

    	<description><![CDATA[Hundreds Of People Gathered In Front Of Shopping Complex | மும்பையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ரூ.1-க்கு விற்பனை என போலி தகவல் வெளியான நிலையில், ஏராளமான பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/shopping-complex.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரூ.1-க்கு விற்பனை என வதந்தி.. வணிக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மக்கள்.. மும்பையில் பரபரப்பு சம்பவம்!" /></figure><strong>மும்பை, ஜூன் 27 :</strong> மும்பையில் <strong>(Mumbai)</strong> உள்ள ஒரு வணிக வளாகத்தில் ரூ.1-க்கு விற்பனை என தகவல் வெளியான நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், வணிக வளாக விற்பனை தொடர்பாக ஏற்பட்ட குழப்பம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வணிக வளாகத்தில் ரூ.1-க்கு விற்பனை என வெளியான தகவல்</h3>
மகாராஷ்டிரா மாநிலம், மலாட் புறநகர் பகுதியில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் ரூ.1-க்கு விற்பனை என வதந்தி பரவியுள்ளது. இந்த நிலையில், தகவல் தீயாக பரவிய நிலையில், ஏராளமான பொதுமக்கள் இந்த வணிக வளாகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஆண், பெண் என சாரை சாரையாக கடை முன்பு குவிந்த பொதுமக்கள், பொருட்களை வாங்குவதற்காக தங்களது வாகனங்களை கடைக்கு முன்பு நிறுத்தி வைத்துவிட்டு காத்திருந்துள்ளனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/teen-dies-minutes-after-tetanus-shot-family-blames-vaccine-87331.html">தடுப்பூசி போட்ட 17 வயது மாணவி.. சில நிமிடங்களில் மயங்கி விழுந்து மரணம்.. துடிக்கும் பெற்றோர்!</a>
<h3>இணையத்தில் வைரலாகும் வீடியோ</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DaFQp4uvgyA/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/DaFQp4uvgyA/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mumbai Culture ™ (@mumbaiculture.in)</a></p>

</div></blockquote>
இவ்வாறு ஏராளமான மக்கள் அந்த வணிக வளாகத்தின் முன்பு குவிந்ததன் காரணமாக, அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வதந்தி பரவியதை போல அந்த வணிக வளாகத்தில் எந்த வித விற்பனையும் நடைபெறவில்லை என அறிவித்துள்ளனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/union-home-minister-amit-shah-unveils-drug-control-vision-document-2026-to-2029-87248.html">3 ஆண்டுகளில் போதைப்பொருள் நெட்வொர்க்கை முற்றிலுமாக ஒழிப்போம்… அமித் ஷா உறுதி!</a>

போலீசார் கூறியதை கேட்டு ஏமாற்றத்திற்கு உள்ளான பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றுள்ளனர். பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இளம் பெண்ணை காருக்குள் வைத்து கத்தியால் குத்த முயன்ற நபர்.. அடுத்து நடந்த ஷாக் சம்பவம்.. பெங்களூரில் பரபரப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/man-tried-to-kill-young-woman-by-stabbing-died-in-car-blast-after-few-minutes-of-attack-in-karnataka-87475.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 22:50:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/man-tried-to-kill-young-woman-by-stabbing-died-in-car-blast-after-few-minutes-of-attack-in-karnataka-87475.html</guid>
		            
			

    	<description><![CDATA[Young Man Died By Car Blast In Karnataka | கர்நாடகாவில் 30 வயது நபர் ஒருவர் காரில் வைத்து இளம் பெண் ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் காரில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு கீழே இறங்கிய நிலையில் அந்த நபர் பரிதாபமாக பலியானார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/car-blast.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இளம் பெண்ணை காருக்குள் வைத்து கத்தியால் குத்த முயன்ற நபர்.. அடுத்து நடந்த ஷாக் சம்பவம்.. பெங்களூரில் பரபரப்பு!" /></figure><strong>பெங்களூரு, ஜூன் 27 :</strong> கர்நாடகாவில்<strong> (Karnataka)</strong> காருக்குள் வைத்து இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபர் கார் வெடித்ததில் பரிதாபமாக பலியாகியுள்ளார். காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் இளம் பெண் காரில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்த நிலையில், காருக்குள் இருந்த அந்த நபர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>காருக்குள் வைத்து பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நபர்</h3>
கர்நாடகாவில் உள்ள துமகூரு மாவட்டத்தில் நாகேந்திரா என்ற 30 வயது நபர், ரம்யா உல்லாஸ் என்ற 23 வயது இளம் பென்ணை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். இந்த நிலையில், துமகூரு பகுதி அருகே கார் வந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை குத்தியுள்ளார். அப்போது ரம்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/union-home-minister-amit-shah-unveils-drug-control-vision-document-2026-to-2029-87248.html">3 ஆண்டுகளில் போதைப்பொருள் நெட்வொர்க்கை முற்றிலுமாக ஒழிப்போம்… அமித் ஷா உறுதி!</a>
<h3>காரில் திடீரென வெடித்த வெடிகுண்டு</h3>
இந்த நிலையில் தான், காரில் வெடிகுண்டி இருப்பதாக கூறிவிட்டு காரில் இருந்து ரம்யா கீழே இறங்கியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநரும் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். ரம்யா கூறியவாரே காருக்குள் நாட்டு வெடிகுண்டு இருந்துள்ளது. ஆனால், நாகேந்திரா காருக்குள்ளே இருந்துள்ளார். அப்போது காரில் இருந்த வெடிகுண்டு வெடித்து கார் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/india/bank-officer-lost-1-23-crores-in-investment-scam-in-puducherry-87197.html">முதலீட்டு மோசடியில் சிக்கி ரூ1.23 கோடியை இழந்த வங்கி அதிகாரி.. ஷாக் சம்பவம்!</a>

கார் வெடித்து விபத்துக்குள்ளான நிலையில், நாகேந்திரா உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து காருக்குள் வெடிகுண்டு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரம்யா மற்றும் அவரது காதலர் வாடகை காரில் அங்கோலா நகர் நோக்கி சென்றுக்கொண்டு இருந்தபோது இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>FIFA World Cup 2026: ரசிகர்கள் அதிர்ச்சி! நிலநடுக்கத்தில் மிஸ்ஸான குடும்பம்.. சோகத்தில் கால்பந்து வீரர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/fifa-world-cup-2026-cordoban-footballer-lucas-trejo-is-searching-for-his-missing-family-is-left-87453.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 22:11:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/fifa-world-cup-2026-cordoban-footballer-lucas-trejo-is-searching-for-his-missing-family-is-left-87453.html</guid>
		            
			

    	<description><![CDATA[Lucas Trejo Family: கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பம் வசிக்கும் லா குவைரா வீடு நிலநடுக்கத்தால் தாக்கப்பட்டு இடிந்து விழுந்தது. தனது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். வீட்டின் நிலையைப் பார்க்கும்போது, ​​யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்பில்லை என்று தெரிகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/lucas-trejo-family.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="FIFA World Cup 2026: ரசிகர்கள் அதிர்ச்சி! நிலநடுக்கத்தில் மிஸ்ஸான குடும்பம்.. சோகத்தில் கால்பந்து வீரர்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/sports/2026-fifa-world-cup-cape-verde-made-history-by-becoming-smallest-nation-in-world-to-qualify-for-knockout-stage-87361.html">2026 ஃபிஃபா உலகக் கோப்பையில்</a> <strong>(FIFA World Cup 2026)</strong> வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லூகாஸ் ட்ரெஜோவை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் <strong>(Landslides)</strong> அவரது குடும்பம் முழுவதும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2026 ஜூன் 24ம் தேதி வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவானது. அதைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், அர்ஜென்டினாவின் நட்சத்திர <a href="https://www.tv9tamilnews.com/sports/nepal-football-team-banned-from-fifa-world-cup-2026-86946.html">கால்பந்து</a> வீரரான லூகாஸ் ட்ரெஜோ, கோபா வெனிசுலா போட்டிக்காக கராகஸ் நகரில் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, ​​நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. மேலும், கட்டிடங்கள் இலைகளைப் போல சரிந்து விழுந்தன. இந்த சமயத்தில், லூகாஸின் குடும்பம் வசித்து வந்த பல மாடிக் கட்டிடம் ஒன்றும் இடிந்து விழுந்தது. அதில் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர். ஒருவேளை கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால், தனது குடும்பத்திற்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று லூகாஸ் ட்ரெஜோ தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/nepal-football-team-banned-from-fifa-world-cup-2026-86946.html">விதிகளை மீறிய நேபாள கால்பந்து அணி.. இடைநீக்கம் செய்த ஃபிஃபா.. காரணம் என்ன?</a>
<h3>லூகாஸ் குடும்பத்திற்கு என்ன ஆனது..?</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="es">DIFUNDAN URGENTE! 🚨 Caso futbolista Lucas Trejo. AHORA me informan que el grupo de rescatistas de El Salvador logró conectar con señales de vida de algún o algunos integrantes de la familia, previamente este lugar fue monitoreando por otros grupos de rescatistas sin éxito.… <a href="https://t.co/eXEcVVCOwP">pic.twitter.com/eXEcVVCOwP</a></p>
— César Moreno (@CesarMorenoOK1) <a href="https://x.com/CesarMorenoOK1/status/2070742150967390505?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பம் வசிக்கும் லா குவைரா வீடு நிலநடுக்கத்தால் தாக்கப்பட்டு இடிந்து விழுந்தது. தனது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். வீட்டின் நிலையைப் பார்க்கும்போது, ​​யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்பில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து லூகாஸ் தனது குடும்பத்தைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் மனதை நொறுக்கும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்து அவருக்கு உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு கிடைத்துள்ளது. லா குவைரா வீட்டைச் சுற்றி யாராவது இருந்தால், அவரது மனைவி யனினா மரானில்லா, மகன் ஆரோன் மற்றும் மகள் ஐன்ஹோவா ஆகியோரின் பாதுகாப்பைப் பற்றித் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அவரது பதிவு அர்ஜென்டினா மற்றும் வெனிசுலாவில் வைரலாகியுள்ளது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/2026-fifa-world-cup-cape-verde-made-history-by-becoming-smallest-nation-in-world-to-qualify-for-knockout-stage-87361.html">நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற உலகின் மிகச்சிறிய நாடு.. வரலாறு படைத்த கேப் வெர்டே!</a>
<h3>யார் இந்த லூகாஸ் ட்ரெஜோ?</h3>
38 வயதான லூகாஸ் ட்ரெஜோ, வெனிசுலாவின் செகுண்டா டிவிஷன் கிளப்பான மரிடிமோ அணிக்காக டிபெண்டர் வீரராக விளையாடுகிறார். மேலும், லூகாஸ் வெனிசுலாவின் மொனாகாஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்காகவும் விளையாடுகிறார். லூகாஸ் ட்ரெஜோ இதற்கு முன்பு ஐரோப்பா, அமெரிக்கா, கொலம்பியா, பெரு மற்றும் மெக்சிகோவில் உள்ள கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/vivo-launched-vivo-x-fold-6-smartphone-in-china-know-full-details-87469.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 21:45:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/vivo-launched-vivo-x-fold-6-smartphone-in-china-know-full-details-87469.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vivo Launched Vivo X Fold 6 Smartphone In China | விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய ஸ்மார்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vivo-x-fold-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்!" /></figure>இந்திய ஸ்மார்ட்போன்<strong> (Smartphone)</strong> சந்தையில் முக்கியமான ஒரு நிறுவனமாக உள்ளது தான் விவோ <strong>(Vivo)</strong>. காரணம், இந்தியர்கள் மத்தியில் விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு பொதுமக்கள் மத்தில் விவோ ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக உள்ளதன் காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை<strong> (Vivo X Fold 6 Smartphone)</strong> சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்</h3>
விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மாட்போன் 8.02 இன்ச் மடிக்க கூடிய OLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 நிட்ஸ் வரை பிரைட்னஸ் அம்சம் உள்ளது. இந்த விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/venezuela-earthquake-shows-why-you-should-enable-google-earthquake-alerts-87016.html">வெனிசுலா நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த கூகுள் – எப்படி பயன்படுத்துவது?</a>
<h3>விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The vivo X Fold 6 has launched</p>
- 8.02" 120Hz LTPO 2504x2312 Inner Screen
- 6.51" 120Hz LTPO 2528x1120 Outer Screen
- Dimensity 9500 Super Edition
- 12GB LPDDR5X Ultra RAM
- 256GB UFS4.1 Storage
- 7000mAh battery (Biggest in a foldable)
- 80W Wired Charging, 40W Wireless Charging… <a href="https://t.co/cQF9CmUk4A">pic.twitter.com/cQF9CmUk4A</a>

— Beebom (@beebomco) <a href="https://x.com/beebomco/status/2070484039207944321?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
இந்த ஸ்மார்ட்போன் 7,000 mAh சிலிக்கான் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த விவோ எக்ஸ் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 7,999 யென் ஆக உள்ளது. அதாவது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,10,966-க்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 10,999 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,52,584 ஆகும். மேலும், 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 11,299 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,56,768 ஆகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>SK-வின் படத்திலிருந்து எஸ்கேப்பான வெங்கட் பிரபு.. அடுத்த படம் இவருடனா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/venkat-prabhu-to-direct-film-starring-dhanush-based-on-story-told-to-sivakarthikeyan-source-says-87444.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 21:30:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/venkat-prabhu-to-direct-film-starring-dhanush-based-on-story-told-to-sivakarthikeyan-source-says-87444.html</guid>
		            
			

    	<description><![CDATA[Dhanush - Venkat Prabhu Alliance: பிரபல இயக்குநர்களின் வரிசையில் இருந்துவருபவர் வெங்கட் பிரபு. இவர் இறுதியாக தளபதி விஜய்யின் கோட் படத்தை இயக்கியிருந்த நிலையில், அதன் பின் சிவகார்த்திகேயனுடன் புது படத்தில் இணைந்ததாக கூறினார். தற்போது ஆபத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படும் நிலையில், யாருடன் புது படத்தில் இணைகிறாr என பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/dhanush-venkat-prabhu-alliance.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="SK-வின் படத்திலிருந்து எஸ்கேப்பான வெங்கட் பிரபு.. அடுத்த படம் இவருடனா?" /></figure><strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/director-venkat-prabhu-shares-his-experience-of-watching-ajith-kumars-car-race-in-dubai-60104.html" target="_blank" rel="noopener">இயக்குநர் வெங்கட் பிரபு </a></strong> (Venkat Prabhu) இயக்கத்தில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கோட் (The GOAT). இதில் முன்னாள் நடிகரும், தமிழக முதல்வருமான விஜய் நாயகனாக (CM Vijay) நடித்திருந்தார். இப்படம் 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், தமிழில் அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) புதிய திரைப்படத்தில் இணைவதாக தெரிவித்திருந்தார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், இதன் டெஸ்ட் லுக் போட்டோஷூட் எல்லாமே நடைபெற்றிருந்தது.

ஆனால் தற்போது இப்படத்திலிருந்து சிவகார்த்திகேயன் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. அவர் இயக்குநர் சிவகுமார் முருகேசனின் இயக்கத்தில் சேயோன் (Seyon) என்ற படத்தில் திடீரென இணைந்த நிலையில், வெங்கட் பிரபுவின் படத்தின் ஷூட்டிங் தள்ளிபோனதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு வேறு நடிகரை வைத்து அந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அது வேறுயாருமில்லை நடிகர் தனுஷ் தான்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/dhanushs-om-movie-release-date-changed-due-to-rajinikanths-jailer-2-movie-release-sources-say-87424.html" target="_blank" rel="noopener">ஓம் படத்துடன் மோதுகிறதா ரஜினியின் ஜெயிலர் 2?.. தனுஷ் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!</a>
</strong>
<h3>தனுஷை வைத்து புது படம் இயக்கும் வெங்கட் பிரபு :</h3>
இயக்குநர் வெங்கட் பிரபு, தற்போது தனுஷை வைத்து புது படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படம் குறித்து தனுஷிடமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. தனுஷ் ஏற்கனவே கிட்டத்தட்ட 3 படங்களுக்கும் மேல் தொடர்ந்து ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது நடைபெறும் என தெளிவாக தெரியவில்லை. இந்த கூட்டணி படத்திற்கு முன் சிறிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/vijay-tv-kana-kandenadi-serial-ends-in-6-months-and-fans-upset-87416.html" target="_blank" rel="noopener">விஜய் டிவியில் தொடங்கிய ஆறு மாதத்திலே முடிவுக்கு வந்த சீரியல்.. அட இதுவா?</a>
</strong>
<h3>தனுஷ் மற்றும் வெங்கட் பிரபு படம் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">SK is completely out of the Project 👀</p>
- Now, <a href="https://x.com/hashtag/Dhanush?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dhanush</a> is said to do a Film with Director <a href="https://x.com/hashtag/VenkatPrabhu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VenkatPrabhu</a> 🔥

It's going to be a 100% VP Film 🤝 <a href="https://t.co/5KxVkaXqVq">pic.twitter.com/5KxVkaXqVq</a>

— Movie Verse (@_MovieVerse) <a href="https://x.com/_MovieVerse/status/2070756227211223480?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உடனடியாக உருவாகும் படம்:</h3>
சிவகார்திகேயனுடனான படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டுவரும் நிலையில், தற்போது வெங்கட் பிரபு, நடிகர் ஜெய் மற்றும் மிர்ச்சி சிவா உள்ளிட்ட நடிகர்களை கொண்டு சென்னை28 பாகம் 3 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான பணிகளில் அவர் இருப்பதாகவும் விரைவில், இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் கிரிக்கெட் மற்றும் குடும்பத்தை மையமாக கொண்டு ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். மேலும் தற்போது இது தொடர்பான தகவல்களும் இணையத்தில் பரவிவருகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எங்களுடன் உறுதியாக நின்றவர்  &#8211; ஜனநாயகன் தயாரிப்பாளர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-nirmal-kumar-clarifies-jana-nayagan-producers-appointment-as-tamil-nadu-special-representative-to-delhi-87450.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 21:09:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-nirmal-kumar-clarifies-jana-nayagan-producers-appointment-as-tamil-nadu-special-representative-to-delhi-87450.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசு பதவி வழங்கியிருப்பது சர்ச்சியானது. இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார் , கடந்த காலங்களில் எங்கள் மீதும், எங்கள் தலைவர் மீதும் குற்றம் சுமத்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், வெங்கட நாராயணா உறுதியாக நின்றவர் என்றார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/minister-nirmal-kumar-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எங்களுடன் உறுதியாக நின்றவர்  &#8211; ஜனநாயகன் தயாரிப்பாளர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்" /></figure><strong>சென்னை, ஜூன் 27 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/karnataka-businessman-as-tamil-nadu-representative-political-leaders-strongly-condemn-cm-vijays-decision-87289.html" target="_blank" rel="noopener">ஜனநாயகன்</a> பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசு பதவி வழங்கியிருப்பது சர்ச்சியானது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார் , கடந்த காலங்களில் எங்கள் மீதும், எங்கள் தலைவர் மீதும் குற்றம் சுமத்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், வெங்கட நாராயணா உறுதியாக நின்றவர். முன்பு இந்த பதவி வெறும் அலங்காரத்திற்காக கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மிகவும் நம்பிக்கையானவருக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியலும் இல்லை என்று தெரிவித்தார்.
<h3>ஜனநாயகன் தயாரிப்பாளர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</h3>
இதுகுறித்து மதுரையில் ஜூன் 27, 2026 செய்தியாளர்களை சந்தித் அவர், “ தவறான நபருக்கு பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அவர் கர்நாடகாவை சேர்ந்தவர் இல்லை. ஆந்திராவை சேர்ந்தவர். கர்நாடகாவில் தொழில் தான் செய்கிறார். அவர் தமிழகத்தில் வேலை பார்க்கப் போவதில்லை. டெல்லியில் தான் இருக்கப் போகிறார் என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/manickam-tagore-appointed-tamil-nadu-congress-president-87413.html">தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர் – காங்கிரஸ் தலைமை அறிவிப்பு</a></strong>
<h3>அமைச்சர் நிர்மல்குமாரின் பேட்டி</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Madurai: On meeting with officials at the district collectorate, Tamil Nadu Minister Nirmal Kumar says, "... We held a review meeting for all departments in Madurai district. All department heads attended, and it was chaired by the District Collector, the Corporation… <a href="https://t.co/hjCZsyCdGc">pic.twitter.com/hjCZsyCdGc</a></p>
— ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2070860266712277221?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும், அவர் டெல்லியில் ஒரு பிரதிநிதியாக, ஒருங்கிணைப்புக்கு இருக்கப் போகிறார். எந்தப் பெரிய முடிவுகளும் எடுக்கப் போவதில்லை, எந்த ஒப்புதலும் வழங்கப் போவதில்லை. அவர் ஒருங்கிணைப்புக்காக இருக்கப்போகிறார், அதில் நம்பிக்கையானவர்கள் இருப்பதில் தவறு இல்லை என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் இந்த பொறுப்பில் இருந்துள்ளனர். முன்பு இது அலங்கார பதவியாக மட்டுமே இருந்தது. எம்எல்ஏவாக வெற்றி பெறாதவர்களுக்கு  இந்த பதவியை அளிப்பது வழக்கம். இந்த பொறுப்பை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் உண்மையிலேயே நம்பிக்கையானவர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/kadayanallur-mdmk-mla-rajendran-rejects-resignation-demand-87401.html">ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?</a></strong>

எல்லா அழுத்தங்களையும் தாண்டி எங்கள் தலைவருடன் நிற்பவர். அவருக்கு பணமும், பொறுப்பும் ஒரு பெரிய விஷயம் கிடையாது. அவர் நம்பிக்கையான நபர், அதனால் இதில் தவறேதும் இல்லை. அவர் எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை. எனவே அரசியலுக்காக இதை பூதாகரமாக்குவதில் தவறு ஏதும் இல்லை என்று விளக்கமளித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>IND W vs AUS W: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து சம்பவம்.. ஸ்மிருதி மந்தனா ரன் வேட்டை தொடருமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/icc-womens-t20-world-cup-2026-indian-star-batsman-smriti-mandhana-record-against-australia-87423.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 20:59:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/icc-womens-t20-world-cup-2026-indian-star-batsman-smriti-mandhana-record-against-australia-87423.html</guid>
		            
			

    	<description><![CDATA[Womens T20 World Cup 2026: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இதுவரை மொத்தம் 38 டி20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 38 போட்டிகளில், இந்தியா வென்ற 9 ஆட்டங்களில், ஸ்மிருதி மந்தனா 8 போட்டிகளில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்று, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/smriti-mandhana-vs-aus.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="IND W vs AUS W: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து சம்பவம்.. ஸ்மிருதி மந்தனா ரன் வேட்டை தொடருமா?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/sports/womens-t20-world-cup-2026-ind-w-vs-ban-w-india-women-won-by-5-wkts-87081.html">2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின்</a><strong> (ICC Womens T2o World Cup 2026)</strong> அரையிறுதிப் போட்டியில் இடத்தைப் பிடிக்க, <a href="https://www.tv9tamilnews.com/sports/icc-womens-t20-world-cup-2026-ind-w-vs-aus-w-india-womens-semi-final-equation-87384.html">இந்திய மகளிர் கிரிக்கெட் அணி</a> <strong>(Indian Womens Cricket Team)</strong> தனது கடைசி லீக் ஸ்டேஜ் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். இந்தப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இந்தியாவிற்கு ஒரு துருப்புச் சீட்டாக அமையக்கூடும். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஸ்மிருதி மந்தனாவின் பேட்டிங் கைகொடுத்தால், இந்திய அணியின் அரையிறுதிப் போட்டி உறுதியாகிவிட்டதாகக் கருதலாம். மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறும் நோக்கில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை நாளை அதாவது 2026 ஜூன் 28ம் தேதி 'ஏ' பிரிவு ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. அதன்படி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு இந்த ஆட்டம் ஒரு காலிறுதிப் போட்டிக்குச் சற்றும் குறைவானதல்ல என்றே கூறலாம்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/womens-t20-world-cup-2026-ind-w-vs-ban-w-india-women-won-by-5-wkts-87081.html">வங்கதேசத்திற்கு எதிராக வெற்றியை தொட்ட இந்திய அணி.. அரையிறுதிக்குள் நுழைந்ததா?</a>
<h3>ஸ்மிருதி மந்தனா பலத்தை வெளிப்படுத்துவாரா..?</h3>
அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற, இந்தியா தனது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பலவீனங்களை சரிசெய்து, ஆஸ்திரேலிய அணியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும். மிகுந்த பரபரப்பும் அழுத்தமும் நிறைந்த இந்தப் போட்டியில், அனைவரின் பார்வையும் இந்திய அணியின் துணை கேப்டனும் நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா மீதுதான் இருக்கும். ஆஸ்திரேலியா போன்ற ஒரு வலுவான அணிக்கு எதிராக மந்தனாவின் சாதனைப் பட்டியல் சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக, இந்திய அணி வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய நம்பிக்கையாக மந்தனா உருவெடுத்துள்ளார். ஐசிசி போன்ற பெரிய போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மந்தனாவின் பேட்டிங் எப்போதும் கைகொடுத்துள்ளது.
<h3>ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மந்தனா செய்த சம்பவம்:</h3>
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இதுவரை மொத்தம் 38 டி20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 38 போட்டிகளில், இந்தியா வென்ற 9 ஆட்டங்களில், ஸ்மிருதி மந்தனா 8 போட்டிகளில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்று, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வென்ற ஒவ்வொரு போட்டியிலும், மந்தனாவின் விக்கெட்டை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு எப்போதுமே ஒரு கடினமான பணியாக இருந்துள்ளது. இந்த வெற்றிகள் அனைத்திலும், ஸ்மிருதி மந்தனா ஒரே ஒரு முறை மட்டுமே 29 ரன்களுக்கும் குறைவாக ஆட்டமிழந்துள்ளார். இதன் பொருள், இந்தியா வென்ற போதெல்லாம், ஸ்மிருதி மந்தனா அணிக்கு ஒரு வலுவான தொடக்கத்தை அளித்துள்ளார்.
<h3>ஸ்மிருதி மந்தனா செயல்திறன்:</h3>
ஸ்மிருதி மந்தனா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 29 போட்டிகளில் விளையாடி 32.07 சராசரி மற்றும் 124.78 ஸ்டிரைக் ரேட்டுடன் 8 அரைசதங்கள் அடித்து 866 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வென்ற போட்டிகளில், அவர் 58.5 சராசரி மற்றும் 122.29 ஸ்டிரைக் ரேட்டுடன் 351 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 அரை சதங்களும் அடங்கும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/icc-womens-t20-world-cup-2026-ind-w-vs-aus-w-india-womens-semi-final-equation-87384.html">இன்னும் ஒரே ஒரு போட்டி.. இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு செல்லுமா? சமன்பாடு என்ன?</a>

இதன் பொருள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்மிருதி மந்தனாவின் பேட்டிங் சிறப்பாக அமைந்து, அவர் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாடினால், 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அரையிறுதிப் போட்டிக்கான தகுதி உறுதி செய்யப்படும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Kajal Aggarwal: நடிகர்களை விட நடிகைகளுக்கே சவால்கள் அதிகம் &#8211; மனம்திறந்த காஜல் அகர்வால்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/kajal-aggarwal-says-that-actresses-face-more-challenges-than-actors-in-cinema-87432.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 20:42:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/kajal-aggarwal-says-that-actresses-face-more-challenges-than-actors-in-cinema-87432.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kajal Aggarwal About Actresses challenges: தென்னிந்திய சினிமாவில் தற்போதுவரையிலும் சினிமாவில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவருபவர் காஜல் அகர்வால். இவரின் நடிப்பில் தி இந்தியா ஸ்டோரி என்ற புதிய திரைப்படமானது உருவாகியுள்ளது. இது தொடர்பாக அவர் பேசுகையில், சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/kajal-aggarwal-about-actresses-challenges.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kajal Aggarwal: நடிகர்களை விட நடிகைகளுக்கே சவால்கள் அதிகம் &#8211; மனம்திறந்த காஜல் அகர்வால்!" /></figure><strong><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/kajal-aggarwal-says-its-not-wrong-for-actresses-to-show-off-their-glamour-charm-photo-gallery-60330.html" target="_blank" rel="noopener">நடிகை காஜல் அகர்வால்</a></strong> (Kajal Aggarwal) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்துவருகிறார். இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) போன்ற பல்வேறு பிரபாலங்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அவரின் திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறிந்துகொண்ட நிலையில், தற்போது இந்தி சினிமாவில் சிறப்பான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து லீட் வேடத்தில் நடித்துவருகிறார். இவர் இறுதியாக இந்தியில் சிக்கந்தர் (Sikandar) என்ற படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தை அடுத்ததாக இந்தி மொழியை மையமாக கொண்டு இவர் நடித்துள்ள படம்தான் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/kajal-aggarwals-the-india-story-movie-teaser-out-82991.html" target="_blank" rel="noopener">தி இந்தியா ஸ்டோரி</a></strong> (The India Story).

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அது தொடர்பாக பேசுகையில், காஜல் அகர்வால் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான தகவல் அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/vishnu-vishal-explains-the-controversy-surrounding-his-use-of-rajinikanth-as-an-example-87391.html" target="_blank" rel="noopener">தலைவரே மைக்-ஆ பிடிச்சி உண்மைய சொல்லவேண்டிய நிலை.. சர்ச்சையை கிளப்பிய விஷ்ணு விஷால்!</a>
</strong>
<h3>சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து பேசிய காஜல் அகர்வால்:</h3>
நடிகை காஜல் அகர்வால் பேசுகையில், "நடிகர்களை விட நடிகைகளுக்கு சினிமாவில் சவால்கள் அதிகம். இங்கு நம்மை நிலைநிறுத்தி கொள்ள மிகவும் போராடவேண்டியிருக்கிறது. எனவே முழு திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை கவருவேன் என தெரிவித்தார்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/singer-v-m-mahalingam-shares-emotional-moment-when-suriya-gifted-him-a-gold-chain-87406.html" target="_blank" rel="noopener">ஐயா கருப்பனே வாருமையா.. பாடகர் மகாலிங்கத்திற்கு பல லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!</a>
</strong>

பின் தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் குறித்து அவர் பேசுகையில், பூச்சி கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும், ஆபத்தா உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஒரு சிறந்த படைப்பாக இந்த படமானது உருவாகியிருக்கிறது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
<h3>தி இந்தியா ஸ்டோரி திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="et"><a href="https://x.com/hashtag/TheIndiaStory?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheIndiaStory</a>, yeh Kahaani Hindustan ke har ek ghar ki hai, aur isse sunna bohot hi jaroori hain!</p>
Witness the truth unfold in <a href="https://x.com/hashtag/TheIndiaStory?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheIndiaStory</a>, Slow Poison In Progress… releasing in cinemas on 24th July 2026, in 3 languages Hindi, Tamil, and Telugu.<a href="https://x.com/hashtag/IndiasMostShockingTruth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IndiasMostShockingTruth</a>… <a href="https://t.co/MsjCpPj2gI">pic.twitter.com/MsjCpPj2gI</a>

— Zee Studios (@ZeeStudios_) <a href="https://x.com/ZeeStudios_/status/2070401849069609381?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

காஜல் அரகவாலின் தி இந்தியா ஸ்டோரி படத்தை டி.கே.சேட்டன் இயக்க, ஜீ ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமானது சிறப்பாக தயாரித்துவருகிறது. இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் ஸ்ரேயாஸ் தல்படே ஹீரோவாக நடித்துள்ளார். விவசாயம் மற்றும் பூச்சிக்கொல்லி பின்னணி கதையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gmail : ஸ்டோரேஜ் சிக்கலா?.. ஜிமெயிலில் தேவையற்ற மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-delete-unwanted-messages-in-gmail-by-bulk-step-by-step-guide-87439.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 20:38:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-delete-unwanted-messages-in-gmail-by-bulk-step-by-step-guide-87439.html</guid>
		            
			

    	<description><![CDATA[How To Delete Unwanted Messages In Gmail By Bulk | ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் சிக்கல் ஏற்படும்போது அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அத்தகைய சூழலில் ஜிமெயிலில் உள்ள தேவையற்ற மெயில்களை கிளியர் செய்வதன் மூலம் செயலியை தடையில்லாமல் பயன்படுத்த முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gmail.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gmail : ஸ்டோரேஜ் சிக்கலா?.. ஜிமெயிலில் தேவையற்ற மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?" /></figure>ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது தான் ஸ்டோரேஜ் சிக்கல். காரணம், ஸ்மார்போனில் ஸ்டோரேஜ் நிறைந்துவிட்டது என்றால் ஸ்மார்ட்போன் செயல்படாமல் போய்விடும். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயனர்கள் கடும் சிரமத்தை சந்திக்க கூடும். இத்தகைய சிக்கல்களை சந்திக்க கூடாது என்றால், ஸ்டோரேஜை சீராக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். அந்த வகையில், ஸ்டோரேஜை மேம்படுத்த ஜிமெயிலில் மொத்தமாக இமெயில்களை டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விரைவில் நிரம்பிவிடும் ஜிமெயில் - பயனர்கள் சந்திக்கும் சிக்கல்</h3>
உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மிக முக்கிய செயலியாக உள்ளதுதான் ஜிமெயில் <strong>(Gmail)</strong>. கடைகளுக்கு சென்றாலோ, ஏதேனும் செயலிகளை பதிவிறக்கம் செய்தாலோ தகவல்களை பகிர்ந்துக்கொள்ள ஜிமெயில் ஐடி கேட்கப்படுகிறது. அவ்வாறு ஜிமெயில் ஐடி கொடுப்பதன் மூலம், ஏராளமான மெயில்கள் வந்து குவிந்துவிடும். இதன் காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால், இந்த சிக்கல்களை சரிசெய்ய ஒரு தீர்வு உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/venezuela-earthquake-shows-why-you-should-enable-google-earthquake-alerts-87016.html">வெனிசுலா நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த கூகுள் – எப்படி பயன்படுத்துவது?</a>
<h3>ஜிமெயிலில் மொத்தமாக மெயில்களை டெலிட் செய்வது எப்படி?</h3>
<ol>
 	<li>அதற்கு முதலில் வெப் பிரவுசரில் ஜிமெயில் செயலியை திறக்க வேண்டும்.</li>
 	<li>அதில் சர்ச் பாருக்கு சென்று <strong>Unsubscribe</strong> என டைப் செய்ய வேண்டும்.</li>
 	<li>இப்போது Unsubscribe அம்சத்துடன் வணிக ரீதியிலான ஜிமெயில்கள் தோன்றும்.</li>
 	<li>அதில் தோன்றும் அனைத்து மெயில்களும் தேவையற்றது என உங்களுக்கு தோன்றினால். மேலே இடது பக்கம் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தை கிளிக் செய்ய வேண்டும்.</li>
 	<li>அவ்வாறு செய்வதன் மூலம் அந்த பக்கத்தில் இருக்கும் அனைத்து மெயிகளும் தேர்வு செய்யப்படும்.</li>
 	<li>அனைத்து இமெயில்களையும் தேர்வு செய்த பிறகு, மேலே கொடுக்கப்பட்டுள்ள டெலிட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.</li>
</ol>
<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/meta-testing-new-feature-to-secure-users-safety-in-whatsapp-photo-gallery-86952.html">பயனர்களின் பாதுக்காப்பை மேம்படுத்த வாட்ஸ்அப் புதிய நடவடிக்கை.. விரைவில் வரும் புதிய அம்சம்!</a>

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி, உங்களுக்கு தேவை இல்லாத வணிக ரீதியான மெயில்களை சுலபமாக டெலிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆதாரம் இருந்தால் அரசியலை விட்டே விலகத் தயார்  &#8211; அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/bjp-state-chief-nainar-nagendran-challenges-minister-sengottaiyan-over-college-claim-87441.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 20:02:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/bjp-state-chief-nainar-nagendran-challenges-minister-sengottaiyan-over-college-claim-87441.html</guid>
		            
			

    	<description><![CDATA[பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், அந்த விண்ணப்பத்தை வெளியிட்டால் அரசியலை விட்டு விலக தயார். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? சவால் விடுத்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/nainar-nagendran-challenges-minister-sengottaiyan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆதாரம் இருந்தால் அரசியலை விட்டே விலகத் தயார்  &#8211; அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்" /></figure><strong>சென்னை, ஜூன் 27 :</strong> பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக அமைச்சர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/id-cards-for-school-students-to-include-caste-details-minister-sengottaiyans-announcement-sparks-strong-opposition-87281.html" target="_blank" rel="noopener">செங்கோட்டையன்</a> தெரிவித்திருந்த நிலையில், அந்த விண்ணப்பத்தை வெளியிட்டால் அரசியலை விட்டு விலக தயார். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? சவால் விடுத்துள்ளார். திருநெல்வேலியில் ஜூன் 27, 2026 இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஸ்டுடியோ ஆட்சியை தவெக நடத்தி வருகிறது என்றார்.
<h3>அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்</h3>
மேலும் பேசிய அவர், சிங்கப்பெண் படை அமைக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், குழந்தைக்கு மருந்து பொடித்துக் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆனால் அவரது அருகில் குழந்தையே இல்லை. சட்டமன்ற தலைவரின் சில கருத்துகள், நடவடிக்கைகளை வரவேற்கிறேன். ஆனால் ஆதாரமற்ற கருத்துகளை முதல்வர் பேசுவதை சட்டமன்ற தலைவர் அனுமதிக்க கூடாது என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/kadayanallur-mdmk-mla-rajendran-rejects-resignation-demand-87401.html">ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?</a></strong>

தொடர்ந்து பேசிய அவர், டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரை முதல்வர் விஜய் நியமித்துள்ளார். அவர் கர்நாடகாவை சேர்ந்தவர். கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் நண்பர். தமிழக அரசின் திட்டங்களையும் தேவையான நிதியையும் பெற்று தர வேண்டிய இடத்தில் உள்ள டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒருவரை நியமிப்பது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுகிறது என்றார்.
<h3>நயினார் நாகேந்திரன் பேட்டி</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Thoothukudi, TN | On the Tamil Nadu government's Special Representative at New Delhi, BJP TN State President Nainar Nagendran says, "... Appointing Venkat Narayana, who hails from Karnataka, as the Tamil Nadu government's Delhi Special Representative is unjustified and a 'great… <a href="https://t.co/VujL2zfwf5">pic.twitter.com/VujL2zfwf5</a></p>
— ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2070558404817637568?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும், அமைச்சர் செங்கோட்டையனுக்கு கணக்கு சரியாக வராது. பாஜக வாக்கு வங்கி சரிந்துவிட்டதாக சொல்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலைவிட தற்போது 0.8 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். இந்தக் கணக்கு கூட தெரியாதவர் வருவாய்த் துறையில் என்ன சாதிக்கப் போகிறார் என கேள்வி எழுப்பினார்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/education-minister-rajmohan-clarifies-id-card-caste-name-row-87369.html"> மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</a></strong>

மேலும், நான் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக கூறப்படும் கடிதம் செங்கோட்டையனிடம் இருந்தால் அதை வெளியிடட்டும். அது உண்மையாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? என்றார். மாணவர்களின் அடையாள அட்டைகளில் சாதி பெயரை குறிப்பிடுவது கண்டனத்திற்குரியது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிக்கான மரியாதையைகூட இந்த அரசின் அமைச்சர்கள் கொடுப்பதில்லை” என்று அவர் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விஜய் டிவியில் தொடங்கிய ஆறு மாதத்திலே முடிவுக்கு வந்த சீரியல்.. அட இதுவா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/vijay-tv-kana-kandenadi-serial-ends-in-6-months-and-fans-upset-87416.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 19:55:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/vijay-tv-kana-kandenadi-serial-ends-in-6-months-and-fans-upset-87416.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vijay TV Serial End: தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகளிடையே டிஆர்பி ரேட்டிங் போட்டிகள் நடப்பது சகஜமே. அதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாத அல்லது டிஆர்பி ரேட்டிங் குறைவான சீரியல்களை தொலைக்காட்சி நிறுவனம் விரைவில் முடிப்பதுண்டு. இந்நிலையில் விஜய் டிவியில் தொடங்கிய ஆறே மாதத்தில் முடிவுக்குவந்த சீரியல் எது என பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/kana-kandenadi-serial-end.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விஜய் டிவியில் தொடங்கிய ஆறு மாதத்திலே முடிவுக்கு வந்த சீரியல்.. அட இதுவா?" /></figure><strong><a href="https://www.tv9tamilnews.com/topic/tv-shows" target="_blank" rel="noopener">சின்னத்திரை</a> </strong>தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு புகழ்பெற்ற டிவியாக இருப்பதுதான் ஸ்டார் விஜய் (Star Vijay TV). இந்த தொலைக்காட்சியானது கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியாக இருந்துவருகிறது. இந்த டிவியில் சீரியல்கள் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரை தொடேன்ற்து பிரபலமானவை பலவும் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. அந்த விதத்தில், விஜய் டிவி மற்றும் சன் டிவி (Sun Tv) இடையே டிஆர்பி ரேட்டிங் மோதல்கள் எப்போதுமே இருந்துவருகிறது. இந்நிலையில் எந்த தொலைக்காட்சி சீரியல் டாப் 5 இடத்தை பிடிக்கும் என போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொடங்கிய 6 மாதத்திலே புது சீரியல் ஒன்று நிறைவடைந்துள்ளது.

தற்போது அந்த சீரியல் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது. அந்த சீரியல் வேறு எதுவும் இல்லை. விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் "கனா கண்டேனடி" (Kana Kandenadi) என்ற சீரியல்தான். இது குறித்து ரசிகர்கள் பெர்ம் சோகத்தில் உள்ளனர்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/vishnu-vishal-explains-the-controversy-surrounding-his-use-of-rajinikanth-as-an-example-87391.html" target="_blank" rel="noopener">தலைவரே மைக்-ஆ பிடிச்சி உண்மைய சொல்லவேண்டிய நிலை.. சர்ச்சையை கிளப்பிய விஷ்ணு விஷால்!</a>
</strong>
<h3>கனா கண்டேனடி சீரியல் தொடர்பாக வெளியான பதிவு:</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DaDs02Po9Nz/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/DaDs02Po9Nz/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p>

</div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script>

இந்த கனா கண்டேனடி சீரியலானது, மூன்று பெண் தோழிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டுவந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10:30 மணியளவில் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிவந்தது. தற்போது இந்த சீரியலானது முடிவடைந்துள்ளதாம். கடந்த 2026ம் ஜனவரி 19ம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 121 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகியிருக்கிறது.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-that-after-completing-the-first-schedule-of-kiruthika-udhayanidhis-film-vijay-sethupathi-will-next-join-the-shooting-of-arasan-87404.html" target="_blank" rel="noopener">அரசன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி எப்போது இணைவார்? வைரலாகும் தகவல்</a>
</strong>

இந்நிலையில், தற்போது இந்த சீரியலை சீரியல் குழு நிறைவு செய்துள்ளது. இனிமையான முடிவதன் சீரியலை நிறைவு செய்துள்ளனர். இந்த சீரியயலுக்கு தமிழில் ரசிகர்கள் பலரும் இருக்கும் நிலையில், இந்த சீரியலின் நிறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகிறாராம். தற்போது இது தொடர்பான தகவல்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
<h3>விஜய் டிவியில் ஒளிபரப்பாக காத்திருக்கும் புது சீரியல்கள் :</h3>
விஜய் டிவியில் ஏற்கனவே மகாநதி என்ற சீரியல் நிறைவடைந்த நிலையில், அதையடுத்து கனா கண்டேனடி என்ற சீரியலும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மேலும் விஜய் டிவியில் "காதல் காதல் காதல்" மற்றும் "ஒண்ணா இருக்க கத்துக்கணும்" என இரு சீரியல்கள் ஒளிபரப்பாக தயாராகியுள்ளது. இதில் ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற சீரியல் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி முதல் தினமும் மாலை 6:30 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Viral Video : முதுமையிலும் மாறாத காதல்.. நிலநடுக்கத்தின் போது மனைவியை பாதுகாத்த முதியவர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/trending/elderly-man-holds-his-elderly-wife-during-twin-earthquake-in-venezuela-video-goes-viral-on-internet-87408.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 19:32:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வைரல் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/trending/elderly-man-holds-his-elderly-wife-during-twin-earthquake-in-venezuela-video-goes-viral-on-internet-87408.html</guid>
		            
			

    	<description><![CDATA[Elderly Man Holds His Elderly Wife During Earthquake | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில், முதியவர் ஒருவர் தனது மனைவியின் கைகளை பிடித்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/viral-video-19-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Viral Video : முதுமையிலும் மாறாத காதல்.. நிலநடுக்கத்தின் போது மனைவியை பாதுகாத்த முதியவர்!" /></figure>சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். உலக அளவில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் வெனிசுலாவில் <strong>(Venezuela)</strong> ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது முதியர் ஒருவர் தனது மனைவியை பாதுகாப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>முதுமையிலும் மாறாத காதல் - மனைவியை பாதுகாத்த முதியவர்</h3>
நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவு சம்பவங்கள் உலகெங்கிலும் அவ்வப்போது நடந்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், அத்தகைய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக தொடங்கும். அந்த வகையில் தான் வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின் போது முதியவர் ஒருவர் தனது மனைவியை பாதுகாப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/trending/open-toilet-in-balcony-bengaluru-flat-video-goes-viral-on-internet-86201.html">Viral Video : பால்கனியில் திறந்த வெளியில் கழிவறை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பெங்களூரு பிளாட்!</a>
<h3>இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Elderly couple caught on camera comforting each other during the catastrophic earthquake in Venezuela ❤️ <a href="https://t.co/3qQu12yNFR">pic.twitter.com/3qQu12yNFR</a></p>
— Humans Being Wholesome (@UNIVERSE_FEEDS) <a href="https://x.com/UNIVERSE_FEEDS/status/2070492947942883636?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முதியவர்கள் இருவர் வீட்டில் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த வீடு குலுங்க தொடங்குகிறது. அதன் காரணமாக அந்த மூதாட்டி அச்சமடைகிறார். உடனே அந்த முதியவர் தனது மனைவியின் அருகே சென்று அவரது கைகளை பிடித்துக்கொள்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/trending/baby-threw-mothers-iphone-in-lake-video-goes-viral-on-internet-86022.html">Viral Video : தாயின் ஐபோனை குளத்தில் வீசிய குழந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!</a>

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், மனிதர்கள் இப்படிதான் காதலிக்க வேண்டும் என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்&#8230; வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/strong-earthquake-tremors-felt-in-delhi-87436.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 19:23:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/strong-earthquake-tremors-felt-in-delhi-87436.html</guid>
		            
			

    	<description><![CDATA[தலைநகர் டெல்லியில் ஜூன் 27, 2026 இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 26, 2026 இன்று மாலை டெல்லி - என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tremors-felt-in-kashmir-and-delhi-ncr.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்&#8230; வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்" /></figure>தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் 27, 2026 இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 26, 2026 இன்று மாலை டெல்லி - என்சிஆர் பகுதி மற்றும் ஜம்மு - காஷ்மீர் முழுவதும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும், ஜூன் 27, 2026 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் டெல்லி - என்சிஆர் பகுதியில் வலுவான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
<h3>டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்</h3>
ஜம்மு - காஷ்மீர் மற்றும் டெல்லி - என்சிஆர் ஆகிய இரு பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தியது. ஜம்மு-காஷ்மீர் மட்டுமின்றி டெல்லி-என்சிஆர், பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் நில அதிர்வுகள் பதிவானதை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியது. சமூக ஊடகங்களில் மக்கள் இதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வுகளால் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே அவசரமாக ஓடி வந்தனர்.

ஆரம்பகட்டத் தகவல்களின்படி, ஜூன் 27, 2026 இன்று மாலை ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 7:04 மணிக்கு 215 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
<h3>நிலநடுக்கம் குறித்து வெளியான தகவல்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">EQ of M: 6.2, On: 27/06/2026 19:04:51 IST, Lat: 36.442 N, Long: 70.672 E, Depth: 215 Km, Location: Afghanistan.
For more information Download the BhooKamp App <a href="https://t.co/5gCOtjdtw0">https://t.co/5gCOtjdtw0</a> <a href="https://x.com/DrJitendraSingh?ref_src=twsrc%5Etfw">@DrJitendraSingh</a> <a href="https://x.com/OfficeOfDrJS?ref_src=twsrc%5Etfw">@OfficeOfDrJS</a> <a href="https://x.com/DrNKalaiselvi?ref_src=twsrc%5Etfw">@DrNKalaiselvi</a> <a href="https://x.com/GSuresh_NCS?ref_src=twsrc%5Etfw">@GSuresh_NCS</a> <a href="https://x.com/ndmaindia?ref_src=twsrc%5Etfw">@ndmaindia</a> <a href="https://t.co/lD494VYeiW">pic.twitter.com/lD494VYeiW</a></p>
— National Center for Seismology (@NCS_Earthquake) <a href="https://x.com/NCS_Earthquake/status/2070865587539161266?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கலாஃப்கானிலிருந்து சுமார் 81 கிலோமீட்டர் தொலைவில் உருவான நிலையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

நில அதிர்வு ஆய்வாளர்கள் 6.2 அளவுள்ள நிலநடுக்கத்தை கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வலிமையான நிகழ்வாக வகைப்படுத்துகின்றனர். இருப்பினும், அதன் தாக்கத்தின் தீவிரமானது நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழம், அமைவிடம் மற்றும் உள்ளூர் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என கூறப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் மா இண்டி பங்காரம் படம் &#8211; இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/the-film-crew-has-officially-announced-that-samantha-ruth-prabhus-movie-maa-inti-bangaram-has-grossed-rs-73-crore-worldwide-so-far-87429.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 19:21:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/the-film-crew-has-officially-announced-that-samantha-ruth-prabhus-movie-maa-inti-bangaram-has-grossed-rs-73-crore-worldwide-so-far-87429.html</guid>
		            
			

    	<description><![CDATA[Maa Inti Bangaaram Movie Box Office Collection | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான மா இண்டி பங்காரம் படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/maa-indi-bangaaram.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் மா இண்டி பங்காரம் படம் &#8211; இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா" /></figure>தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக ம்ட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இவர் படங்களில் மட்டும் இன்றி இணையதள தொடர்களிலும் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. சொந்த வாழ்க்கை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அப்படி அவர் மா இண்டி பங்காரம் படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போதே ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு மீண்டும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். இப்படி இருக்கும் சூழலில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கு சினிமாவில் மா இண்டி பங்காரம் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தற்போது விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
<h3>உலக அளவில் ரூபாய் 73 கோடிகளை வசூலித்தது மா இண்டி பங்காரம் படம்:</h3>
ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் உருவான இந்தப் படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கலிடையேயும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, மா இண்டி பங்காரம் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்ரது. மேலும் இந்தப் படம் உலக அளவில் ரூபாய் 73 கோடிகள் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/96-fame-aadhitya-baaskar-and-gouri-g-kishan-are-reuniting-for-a-new-film-called-love-and-war-87247.html">மீண்டும் இணைந்த 96 பிரபல ஜோடி.. வெளியானது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!</a></strong>
<h3>மா இண்டி பங்காரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en"><a href="https://x.com/hashtag/MaaIntiBangaaram?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MaaIntiBangaaram</a> continues its golden run at the box office 💥

A GROSS OF 73 CRORES WORLDWIDE &amp; COUNTING ❤‍🔥

Superb bookings all over for this weekend 💥

Watch the BLOCKBUSTER 𝐒𝐀𝐌BHAVAM <a href="https://x.com/hashtag/MaaIntiBangaaram?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MaaIntiBangaaram</a> in theatres today ❤‍🔥

Book your tickets now!
🎟️… <a href="https://t.co/ya5wtPGi5j">pic.twitter.com/ya5wtPGi5j</a></p>
— Tralala Moving Pictures (@TralalaPictures) <a href="https://x.com/TralalaPictures/status/2070821060233347344?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/natty-nataraj-shares-an-interesting-scene-from-working-with-dhanush-in-the-film-raanjana-87254.html">Dhanush: அப்போவே ராஞ்சனா படம் ஹிட்டாகிடுனு எனக்கு தெரியும் – தனுஷ் குறித்து நட்டி நடராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>டிஜிட்டல் இந்தியா&#8230; மிகச்சிறந்த 11 ஆண்டுப் பயணம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/digital-india-programme-completes-over-11-years-of-transformation-87434.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 19:17:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/digital-india-programme-completes-over-11-years-of-transformation-87434.html</guid>
		            
			

    	<description><![CDATA[டிஜிட்டல் இந்தியா' முன்னெடுப்பு 2026-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. 2015-க்கு முந்தைய காலகட்டத்தில், அரசு சேவைகளைப் பெறுவதில் நீண்ட வரிசைகள், காகித ஆவணப் பணிகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இணைப்பு வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருந்தன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/digital-india.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டிஜிட்டல் இந்தியா&#8230; மிகச்சிறந்த 11 ஆண்டுப் பயணம்!" /></figure>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஜூலை 1, 2015 அன்று தொடங்கப்பட்ட 'டிஜிட்டல் இந்தியா' திட்டம், 11 ஆண்டுகால அற்புதமான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த 11 ஆண்டுகளில், தொழில்நுட்பத்தை வெறும் பயன்பாட்டாளராகக் கொண்டிருந்த நிலையிலிருந்து, உலகளாவிய டிஜிட்டல் புரட்சியை வழிநடத்தும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

அதிகாரமளித்தலே ஆற்றல்என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், நாட்டின் மிகத் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையையும் முழுமையாக மாற்றியமைத்துள்ளது. அடையாள அட்டைகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் முதல் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் வரை, 'டிஜிட்டல் இந்தியா' உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
<h3>முக்கிய சாதனைகள்</h3>
ஜூலை 1, 2026 அன்று டிஜிட்டல் இந்தியா திட்டம் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். 2015-க்கு முன்பு, அரசு சேவைகளைப் பெறுவதில் நீண்ட வரிசைகள், காகித வேலைகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள் போன்ற சவால்கள் இருந்தன. இணைய வசதியை விரிவுபடுத்தி சேவைகளை இணையம் வாயிலாகக் கொண்டு வருவதன் மூலம், டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க 'டிஜிட்டல் இந்தியா' உதவியுள்ளது.

இது டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்தி, சேவைகளை விரைவானதாகவும், வெளிப்படையானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றியுள்ளது. தற்போது லட்சக்கணக்கான மக்கள் சுகாதாரம், கல்வி, வங்கிச் சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் உள்கட்டமைப்பில் அரசு மேற்கொண்ட முதலீடுகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா முழுவதும் இணைப்பு வசதியை மேம்படுத்தியுள்ளன.

மலிவு விலை இணையம் மற்றும் பரவலான டிஜிட்டல் இணைப்பு வசதிகள் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இத்திட்டம் சாமானிய மக்களுக்கும் கிடைக்கச் செய்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிற்கான அடித்தளமாக 'டிஜிட்டல் இந்தியா' மாறியுள்ளது. நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் இந்தியா இப்போது உலக அளவில் முன்னணியில் உள்ளது; உலகளாவிய பரிவர்த்தனை எண்ணிக்கையில் UPI-ன் பங்கு கிட்டத்தட்ட 49% ஆக உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) டிஜிட்டல் பொருளாதாரம் சுமார் 12-14% பங்களிப்பை வழங்குகிறது; வரும் பத்தாண்டுகளில் இப்பங்கு ஐந்தில் ஒரு பங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் புதுமை, ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை 'டிஜிட்டல் இந்தியா' துரிதப்படுத்தியுள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியாவின் திறன்களையும் இது வலுப்படுத்தியுள்ளது. 'விக்சித் பாரத் 2047' (வளர்ந்த இந்தியா 2047) இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கும் வேளையில், நாடு முழுவதும் உள்ளடக்கிய வளர்ச்சி, தொழில்நுட்பத் தன்னிறைவு மற்றும் குடிமக்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றை 'டிஜிட்டல் இந்தியா' தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

<strong>ஆதார்:</strong> நாட்டின் 144 கோடிக்கும் அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குவதில் இது முக்கியப் பங்காற்றியுள்ளது.

<strong>UPI:</strong> 2025-26 நிதியாண்டில் UPI மூலம் 24,162 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

<strong>DigiLocker:</strong> 70.69 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள இது, 850 கோடிக்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆவணங்களைச் சேமித்து வைப்பதை எளிதாக்குகிறது.

<strong>eSanjeevani</strong>: 48 கோடிக்கும் அதிகமான தொலை-மருத்துவ (ஆன்லைன் மருத்துவ ஆலோசனை) சேவைகளை வழங்குவதன் மூலம், இது ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார சேவையை நெருக்கமாக்கியுள்ளது.

<strong>DIKSHA:</strong> 2 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களுடன், இது அனைவருக்கும் தரமான டிஜிட்டல் கல்வியை வழங்கி வருகிறது.

<strong>ONDC:</strong> இது சுமார் 1,000 நகரங்களில் 20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய, ஒரு புதிய மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் வர்த்தகச் சூழலை உருவாக்கி வருகிறது.
அகலப்பட்டை (Broadband) வழித்தடங்கள்

நாடு முழுவதும் உள்ள டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதில் மொபைல் இணைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பாரத்நெட்-1 (BharatNet-1) மற்றும் பாரத்நெட்-2 (BharatNet-2) திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் 2.22 லட்சத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகளை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜனவரி 2026-க்குள், நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை அமைப்பதன் மூலம், ஏறக்குறைய 97 சதவீதத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 2.15 லட்சம் கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. இது கிராமப்புற இந்தியாவில் மின்னணு நிர்வாகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், ஆன்லைன் கல்வி, தொலை-மருத்துவம் மற்றும் உள்ளூர் தொழில்முனைவு ஆகியவற்றை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.

ஜன் தன் யோஜனா திட்டம் நாடு முழுவதும் வங்கிச் சேவைகளை விரைவாக விரிவுபடுத்தியது. வங்கி கணக்குகளின் எண்ணிக்கை மார்ச் 2015-ல் 14.72 கோடியாக இருந்த நிலையில், பிப்ரவரி 2026-க்குள் 57.78 கோடியாக உயர்ந்தது. அதே காலகட்டத்தில், வைப்புத்தொகை ₹15,670 கோடியிலிருந்து ₹2.94 லட்சம் கோடியாக அதிகரித்தது. கூடுதலாக, பாதுகாப்பான மற்றும் உடனடி டிஜிட்டல் அங்கீகாரத்திற்கான நம்பகமான பயோமெட்ரிக் அடையாளத் தளத்தை ஆதார் உருவாக்கியது.

ஆதார் பதிவு எண்ணிக்கை 2010-11-ல் 0.42 கோடியாக இருந்த நிலையில், மார்ச் 2026-க்குள் 144 கோடிக்கும் அதிகமாக உயர்ந்தது. இந்தியா முழுவதும் டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம் மொபைல் இணைப்பு 'JAM' (Jan Dhan-Aadhaar-Mobile) சூழலமைப்பை மேலும் வலுப்படுத்தியது. மார்ச் 2026-க்குள், 85.5% இந்தியக் குடும்பங்கள் குறைந்தது ஒரு ஸ்மார்ட்போனையேனும் கொண்டிருந்தன.

அதேவேளையில், 109 கோடிக்கும் அதிகமான மக்கள் இணைய வசதியைப் பெற்றிருந்தனர். 'JAM' (ஜன்-தன், ஆதார், மொபைல்) எனும் இந்த மும்முனைத் தொகுப்பு, 'டிஜிட்டல் இந்தியா'வின் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகக் கட்டமைப்பிற்கு முதுகெலும்பாக அமைந்தது. ஜூன் 2026-க்குள், 176 கோடி குடிமக்களுக்கு ₹51 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நேரடிப் பலன்கள் நேரடியாக வழங்கப்பட்டன; இதன் மூலம் நாடு முழுவதும் வெளிப்படைத்தன்மையும் டிஜிட்டல் நிர்வாகமும் மேம்படுத்தப்பட்டன. இவை மட்டுமின்றி, 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் வேறு பல குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.

&nbsp;

&nbsp;

&nbsp;

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஓம் படத்துடன் மோதுகிறதா ரஜினியின் ஜெயிலர் 2?.. தனுஷ் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/dhanushs-om-movie-release-date-changed-due-to-rajinikanths-jailer-2-movie-release-sources-say-87424.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 19:06:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/dhanushs-om-movie-release-date-changed-due-to-rajinikanths-jailer-2-movie-release-sources-say-87424.html</guid>
		            
			

    	<description><![CDATA[OM vs Jailer 2: தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமியின் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் படம்தான் ஓம். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகிறது. தற்போது இதே தேதியில் ரஜினியின் ஜெயிலர் 2 படம் ரிலீசாகுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/om-movie-and-jailer-2-movie.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஓம் படத்துடன் மோதுகிறதா ரஜினியின் ஜெயிலர் 2?.. தனுஷ் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!" /></figure>தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகராக இருந்துவருபவர் <strong><a href="https://www.tv9tamilnews.com/topic/dhanush" target="_blank" rel="noopener">தனுஷ்</a> </strong>(Dhanush). இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டமல்லாமல், இயக்குநர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருகிறார். அந்த வகையில், இவர் தற்போது அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasami) இயக்கத்தில், ஓம் (OM Movie) என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி (Sai Pallavi), ஸ்ரீலீலா (Sreeleela), மம்முட்டி (Mammooty) உள்ளிட்ட பல்வேறு உச்ச பிரபலங்களும் இணைந்து நடித்துவருகிறார். இப்படமானது ஆரம்பத்தில் D55 என அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இப்படத்திற்கு ஓம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் செம்மரம் கடத்தல்கள் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்புடன் இப்படத்தின் ரிலீஸ் தேதி தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் இப்படம் வெளியாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்துடன் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-hrithik-roshan-has-arrived-in-chennai-to-participate-in-the-shooting-of-jailer-2-86477.html" target="_blank" rel="noopener"><strong>ஜெயிலர் 2</strong> </a>படம் மோதுவதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/vishnu-vishals-next-is-a-boxing-sports-drama-directed-by-arunraj-kamaraj-with-a-strong-social-message-87415.html" target="_blank" rel="noopener">விஷ்ணு விஷால் – அருண்ராஜ் காமராஜின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா?</a>
</strong>
<h3>ஓம் படத்துடன் மோதும் ஜெயிலர் 2 - தனுஷின் முடிவு என்ன:</h3>
ஆரம்பத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 படமானது 2026ம் ஆண்டி தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், தற்போது அதை ஆயுத பூஜை விடுமுறைகளில் வெளியிடலாம் என திட்டமிட்டுவருகிறதாம். அந்த வகையில், தனுஷின் ஓம் படமும் ஆயுத பூஜா விடுமுறையில் வெளியாகவுள்ளதாம்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/singer-v-m-mahalingam-shares-emotional-moment-when-suriya-gifted-him-a-gold-chain-87406.html" target="_blank" rel="noopener">ஐயா கருப்பனே வாருமையா.. பாடகர் மகாலிங்கத்திற்கு பல லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!</a>
</strong>

தற்போது தனுஷிடம் ஜெயிலர் 2 படக்குழு பேசிவருகின்றனர். இதனால தனுஷ் ஓம் படத்தின் ரிலீஸ் தேதியை அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இது தொடர்பான தகவல்கள் வட்டாரங்களில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
<h3>ஓம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Release data shuffle for <a href="https://x.com/hashtag/Jailer2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2</a> &amp; <a href="https://x.com/hashtag/OM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#OM</a>🔁</p>
As Per Valaipechu,<a href="https://x.com/hashtag/Jailer2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2</a> which was initially planned as Diwali release has now shifted to Pooja Holidays release !!

Jailer2 team communicated it to <a href="https://x.com/hashtag/Dhanysh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dhanysh</a> &amp; he is in discussion to shift his <a href="https://x.com/hashtag/OM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#OM</a> for Diwali as Superstar <a href="https://x.com/hashtag/Rajinikanth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Rajinikanth</a>… <a href="https://t.co/sl8CBRxCwU">pic.twitter.com/sl8CBRxCwU</a>

— AmuthaBharathi (@CinemaWithAB) <a href="https://x.com/CinemaWithAB/status/2070456807093571631?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

ஓம் படமானது ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில் சாய் பல்லவி போலீஸ் வேடத்தில் நடித்துவரும் நிலையில், மம்முட்டி நெகடிவ் வேடத்தில் நடித்துவருகிறாராம். இப்படத்தின் பாடல்களுக்கு சாய் அபயங்கர் இசையமைக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் பாடல் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நாளை இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு &#8211; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-predicts-heavy-rain-in-four-tamil-nadu-districts-tomorrow-87428.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 19:04:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-predicts-heavy-rain-in-four-tamil-nadu-districts-tomorrow-87428.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஜூன் 28, 2026 கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/imd-predicts-heavy-rain-alert.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நாளை இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு &#8211; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை" /></figure><strong>சென்னை, ஜூன் 27 :</strong> தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் <a href="https://www.tv9tamilnews.com/videos/pudukottai-man-arrested-for-cheating-woman-of-rs-2-crore-on-marriage-promise-87422.html" target="_blank" rel="noopener">கோவை</a> மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஜூன் 28, 2026 <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issues-yellow-alert-to-chennai-and-4-more-districts-and-no-change-in-temperature-87273.html" target="_blank" rel="noopener">கனமழை</a> பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
<h3>நாளை இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு</h3>
மேலும் அந்த அறிக்கையில் கடலோர ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை, வடக்கு தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 28, 2026 நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/education-minister-rajmohan-clarifies-id-card-caste-name-row-87369.html">மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</a></strong>

மேலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஜூன் 28, 2026 நாளை கனமழை பெய்யக்கூடும். வருகிற ஜூன் 29, 2026 நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 30, 2026 முதல் ஜூலை 3, 2026 தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 28, 2026 நாளை முதல் ஜூலை 1, 2026 தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/ramanathapuram-controversy-arose-after-the-driver-and-conductor-stopped-the-bus-and-went-to-have-a-meal-87338.html">கல்யாண வீட்டில் ஸ்டாப்.. விருந்தில் பங்கேற்க சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்.. பின்னாடியே வந்த ஆப்பு!</a></strong>

தமிழகத்தில் ஜூன் 27, 2026 இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், விருதுநகர் மாவட்டம் புல்வாய்க்கரையில் தலா 5 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ஆவியூர், சிவங்கை மாவட்டம் திருப்புவனம், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங் எபோது முடியும்? வைரலாகும் தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/the-shooting-of-mahesh-babus-varanasi-is-scheduled-to-be-completed-by-october-87426.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 18:59:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/the-shooting-of-mahesh-babus-varanasi-is-scheduled-to-be-completed-by-october-87426.html</guid>
		            
			

    	<description><![CDATA[Varanasi Movie Shooting Update | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வாரணாசி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/varanasi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங் எபோது முடியும்? வைரலாகும் தகவல்" /></figure>பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மகன் தான் நடிகர் மகேஷ் பாபு. தனது தந்தை தெலுங்கு சினிமாவில் ஜாம்பவனாகா இருந்த காரணத்தால் மகேஷ் பாபு குழந்தை நட்சத்திரமாக கடந்த 1979-ம் ஆண்டு முதலே நடிக்கத் தொடங்கினார், அதன்படி தொடர்ந்து 1990-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர் மகேஷ் பாபு கடந்த 1999-ம் ஆண்டு முதல் படத்தில் நாயகனாக ஆக தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு சினிமாவில் வருடத்திற்கு ஒரு படமாவது நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான படம் குண்டூர் காரம். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப்படம்  கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் மகேஷ் பாபு.
<h3>மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங் எபோது முடியும்?</h3>
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு வாரணாசி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தில் நடிகர் மகேஷ் பாபு உடன் இணைந்து நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/joju-george-starring-madhuram-movie-streaming-on-sonyliv-ott-87240.html">இப்படி ஒரு காதல் யாருக்குதான் பிடிக்காது… மலையாள சினிமாவில் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உள்ள இந்த மதுரம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்!</a></strong>
<h3>இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The shooting of <a href="https://x.com/hashtag/MaheshBabu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MaheshBabu</a>'s <a href="https://x.com/hashtag/Varanasi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Varanasi</a> is scheduled to be completed by October. <a href="https://t.co/lsX9nB7XqU">pic.twitter.com/lsX9nB7XqU</a></p>
— Movie Tamil (@_MovieTamil) <a href="https://x.com/_MovieTamil/status/2070554069757038673?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/96-fame-aadhitya-baaskar-and-gouri-g-kishan-are-reuniting-for-a-new-film-called-love-and-war-87247.html">மீண்டும் இணைந்த 96 பிரபல ஜோடி.. வெளியானது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்&#8230; பெண்ணிடம் ரூ.2 கோடி பறித்த இளைஞர் கைது</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/pudukottai-man-arrested-for-cheating-woman-of-rs-2-crore-on-marriage-promise-87422.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 18:26:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sekaran S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/pudukottai-man-arrested-for-cheating-woman-of-rs-2-crore-on-marriage-promise-87422.html</guid>
		            
														<description><![CDATA[டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சுமார் ரூ.2 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். , அவரிடம் இருந்து சுமார் ரூ. 2 கோடி வரை பணத்தைப் பெற்று மோசடி செய்து உள்ளார்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/man-arrested-for-cheating-woman.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்&#8230; பெண்ணிடம் ரூ.2 கோடி பறித்த இளைஞர் கைது" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/893HhmbB-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சுமார் ரூ.2 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (36). இவர் அப்பகுதியில் கால்பந்து அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு டேட்டிங் செயலி மூலம் கோவையைச் சேர்ந்த, கணவரை இழந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்பவைத்த விக்னேஷ்வரன், அவரிடம் இருந்து சுமார் ரூ. 2 கோடி வரை பணத்தைப் பெற்று மோசடி செய்து உள்ளார். மேலும், அவரிடம் இருந்து கார் மற்றும் ஐபேட் போன்ற விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கி உள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ்வரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>விஷ்ணு விஷால் &#8211; அருண்ராஜ் காமராஜின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/vishnu-vishals-next-is-a-boxing-sports-drama-directed-by-arunraj-kamaraj-with-a-strong-social-message-87415.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 18:25:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/vishnu-vishals-next-is-a-boxing-sports-drama-directed-by-arunraj-kamaraj-with-a-strong-social-message-87415.html</guid>
		            
			

    	<description><![CDATA[Arunraj Kamaraj next is a boxing sports drama | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அருண் ராஜ் காமராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/arunraja-kamaraj.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விஷ்ணு விஷால் &#8211; அருண்ராஜ் காமராஜின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா?" /></figure>தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார் அருண்ராஜா காமராஜ். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி இருந்தாலும் அடுத்தடுத்து இவர் இயக்குநராக இயக்கிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கனா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் கிரிக்கெட்டை மையமயாக வைத்து ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான நெச்சுக்கு நீதி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இன்றி மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு திரைக்கதை எழுதும் பணிகளையும் பாடல்கள் எழுதுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அருண் ராஜா காமராஜ். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நபராக வலம் வரும் அருண் ராஜா காமராஜ் அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் வைத்து படத்தை இயக்க உள்ளார். அந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
<h3>பாக்ஸிக் படத்தை இயக்கும் அருண்ராஜா காமராஜ்:</h3>
விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் பேசும் போது, விளையாட்டு சார்ந்த உணர்வுகளைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால், நான் இதுவரை குத்துச்சண்டை போட்டிகளைத் தொலைக்காட்சியில் கூடப் பார்த்ததோ அல்லது அவற்றைப் பின்தொடர்ந்ததோ இல்லை. இருப்பினும், எனது அடுத்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டது. கதையைக் கேட்டபோது, ​​முதல் 20 நிமிடங்களிலேயே அந்த குத்துச்சண்டை சார்ந்த உணர்வு என்னுடன் ஒன்றிப்போனது.  அதனால், அந்தத் திரைக்கதையுடன் நான் எளிதாகவே ஈர்க்கப்பட்டேன்.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/superstar-rajinikanth-smiles-enjoying-varman-and-gang-dance-rehearsal-87225.html">ஜெயிலர் பட ஷூட்டிங்கில் வர்மன் &amp; கேங்ஸ் டான்ஸை பார்த்து ரசிக்கும் ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ</a></strong>
<h3>இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en"><a href="https://x.com/hashtag/VishnuVishal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishnuVishal</a>’s next is a boxing 🥊 sports drama directed by <a href="https://x.com/hashtag/ArunrajKamaraj?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ArunrajKamaraj</a> with a strong social message.<a href="https://x.com/hashtag/VishnuVishal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishnuVishal</a> recently opened up about his next film during the <a href="https://x.com/hashtag/GattaKusthi2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#GattaKusthi2</a> promotions:
“I know sports emotions, but I’ve never watched boxing 🥊, even on TV, or followed… <a href="https://t.co/Of2N3fbMR3">pic.twitter.com/Of2N3fbMR3</a></p>
— Movies Singapore (@MoviesSingapore) <a href="https://x.com/MoviesSingapore/status/2070432018396320168?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/superstar-rajinikanth-smiles-enjoying-varman-and-gang-dance-rehearsal-87225.html">Ravi Mohan: யாஷுடன் மோதும் ரவி மோகன்.. கராத்தே பாபு பட ரிலீஸ் எப்போது தெரியுமா?</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஐயா கருப்பனே வாருமையா.. பாடகர் மகாலிங்கத்திற்கு பல லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/singer-v-m-mahalingam-shares-emotional-moment-when-suriya-gifted-him-a-gold-chain-87406.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 18:20:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/singer-v-m-mahalingam-shares-emotional-moment-when-suriya-gifted-him-a-gold-chain-87406.html</guid>
		            
			

    	<description><![CDATA[Suriya Gift Gold Chain To V.M. Mahalingam: சூர்யாவின் நடிப்பில் கடந்த மே மாதத்தில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் கருப்பு. இப்படத்தில் கருப்பா கூட வா மற்றும் ராத்து ராசன் போன்ற பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர் வி.எம்.மகாலிங்கம். இவருக்கு கருப்பு பட வெற்றியின் காரணமாக சூர்யா தங்க சங்கிலியை பரிசாக வழங்கியிருக்கிறார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/suriya-gifts-to-mahalingam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஐயா கருப்பனே வாருமையா.. பாடகர் மகாலிங்கத்திற்கு பல லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!" /></figure>இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில், தி ஒன் <strong><a href="https://www.tv9tamilnews.com/topic/suriya" target="_blank" rel="noopener">சூர்யா</a></strong> (The One Suriya) நடித்திருந்த திரைப்படம்தான் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/it-has-been-announced-that-suriyas-film-karuppu-has-grossed-a-total-of-rs-191-crore-in-tamil-nadu-alone-87096.html" target="_blank" rel="noopener">கருப்பு</a> </strong>(Karuppu). இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன், திரிஷா (Trisha), ஸ்வாசிகா, ஷிவதா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ் மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முழுக்க ஆக்ஷன் மற்றும் தெய்வீகமான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, வேட்டை கருப்பசாமியாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நிஜ கருப்பனே வந்தது போலவே சூர்யாவின் ஆக்ஷன் சண்டை மற்றும் நடன காட்சிகள் திரையரங்கையே தீப்பிடிக்க வைத்திருந்தது என கூறலாம். அவ்வாறு அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் அமைந்த நிலையில், இப்படத்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக இயக்குநர் முதல் இசையமைப்பாளர்கள் அனைவருக்கு சூர்யா விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருந்தார்.

அந்த வகையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கிளைமேக்ஸ் பாடல் கருப்பா கூட வா பாடலை பாடிய வி.எம்.மகாலிங்கத்திற்கு (VM.Mahalingam)பல லட்சம் மதிப்பிலான தங்க செயினை பரிசாக வழங்கியிருக்கிறார். இதை சமீபத்தில் மகாலிங்கம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/nivin-pauly-reunites-with-alphonse-puthren-for-his-50th-film-vijayam-87379.html" target="_blank" rel="noopener">தனது 50-வது படத்திற்காக மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி</a>
</strong>
<h3>சூர்யாவின் பரிசு குறித்து பாடகர் மகாலிங்கம் சொன்ன விஷயம்:</h3>
அந்த நேர்காணலில் பேசிய மகாலிங்கம், "சூர்யா சாரின் அன்பிற்கு எதுவும் ஈடில்லை. கருப்பு படத்தில் நான் பாடிய பாடல் பாடல்கள் மற்றும் கிளைமேக்ஸ் பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்தின் தூணாக அதுவும் கருத்தப்பட்டிருந்தது. சூர்யா சாருக்கு ரொம்பவே நல்ல மனசு. அவர் எனக்கு சங்க செயினை பரிசாக கொடுத்திருந்தார். அவர் அவரின் உதவியாளரிடம் சொல்லி என்னை அழைத்திருந்தார்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/late-k-bhagyarajs-family-reveals-when-his-funeral-will-be-87381.html" target="_blank" rel="noopener">திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இறுதி சடங்கு எப்போது? – குடும்பத்தினர் தெரிவித்த விஷயம்!</a>
</strong>

அப்போது நான் மற்றொரு நிகழ்ச்சியில் இருந்தேன். அதை முடித்துவிட்டு அவரை சந்திக்க சென்றேன். அப்போதுதான் கையில் தங்க சங்கிலியுடன் அவர் காத்திருந்தார். அவரை பார்த்த நான், கட்டிபிடித்துவிட்டு அவரை விடவே இல்லை. அதற்கு பிம் அவர் எனக்கு இந்த தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தார். அளித்து எனது மன நிலை ரொம்பவே வித்தியாசமாக இருந்தது" எமோஷனலாக அவர் பகிர்ந்துள்ளார்.
<h3>பாடகர் வி.எம்.மகாலிங்கத்தின் கருப்பு பட குறித்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DZm57BJKGTq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/DZm57BJKGTq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mahalingam VM (@vm_mahalingam)</a></p>

</div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script>

பாடகர் வி.எம்.மகாலிங்கம் கருப்பு படத்தில் ராத்து ராசன் மற்றும் கருப்பா கூட வா போன்ற இரு பாடல்களை பாடியிருந்தார். இந்த இரு பாடல்களும் தற்போதுவரையிலும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>IND vs IRE: கேப்டனாக முதல் போட்டியில் தோல்வி.. மோசமான சாதனை பட்டியலில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/ind-vs-ire-1st-t20-shreyas-iyer-has-become-4th-indian-captain-to-lose-his-debut-match-87417.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 18:06:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/ind-vs-ire-1st-t20-shreyas-iyer-has-become-4th-indian-captain-to-lose-his-debut-match-87417.html</guid>
		            
			

    	<description><![CDATA[Shreyas Iyer Captaincy: ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்பு, விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்தப் பட்டியலில் இருந்தனர். இந்திய டி20 அணிக்கு 15 வீரர்கள் தலைமை தாங்கியுள்ளனர். இவர்களில், 11 கேப்டன்கள் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/iyer-captaincy.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="IND vs IRE: கேப்டனாக முதல் போட்டியில் தோல்வி.. மோசமான சாதனை பட்டியலில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!" /></figure>2026 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் <a href="https://www.tv9tamilnews.com/sports/ind-vs-ire-2nd-t20-vaibhav-sooryavanshi-debut-or-not-india-vs-ireland-2nd-t20-playing-11-prediction-87393.html">அயர்லாந்து சுற்றுப்பயணம்</a> <strong>(IND vs IRE)</strong> மேற்கொண்டுள்ள <a href="https://www.tv9tamilnews.com/sports/india-lose-to-ireland-by-34-runs-in-1st-t20-87258.html">இந்திய அணி</a> <strong>(Indian Cricket Team)</strong>, தனது முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது. பலவீனமான அயர்லாந்து அணியிடம் அடைந்த இந்தத் தோல்வி, இந்திய அணிக்கும்,  கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் ஒரு விரும்பத்தகாத மோசமான சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, வைபவ் சூர்வன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறாததும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ind-vs-ire-2nd-t20-vaibhav-sooryavanshi-debut-or-not-india-vs-ireland-2nd-t20-playing-11-prediction-87393.html">முதல் போட்டி தோல்வியால் அதிர்ச்சி.. அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?</a>
<h3>கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் போட்டி:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Ireland win the first T20I in Belfast by 34 runs.<a href="https://x.com/hashtag/TeamIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> will now aim to level the series on Sunday.

Scorecard ▶️ <a href="https://t.co/gdoXw2dAKR">https://t.co/gdoXw2dAKR</a><a href="https://x.com/hashtag/IREvIND?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IREvIND</a> <a href="https://t.co/kxnHM9ApeV">pic.twitter.com/kxnHM9ApeV</a></p>
— BCCI (@BCCI) <a href="https://x.com/BCCI/status/2070541314241016231?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
2026 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணியின் தலைமைப் பொறுப்பு சூர்யகுமார் யாதவிடமிருந்து ஷ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆனால், அவரது தலைமையின் கீழ் இந்தியா ஒரு மோசமான மற்றும் ஏமாற்றமளிக்கும் தொடக்கத்தைக் கொண்டிருந்தது. பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து, இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தத் தோல்விக்குப் பிறகு, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் பெயரில் ஒரு விரும்பத்தகாத சாதனை படைக்கப்பட்டுள்ளது.

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக தனது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்த 4வது வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர், 3 இந்திய கேப்டன்கள் தங்களது அறிமுக டி20 சர்வதேசப் போட்டியில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/india-lose-to-ireland-by-34-runs-in-1st-t20-87258.html">சொதப்பிய பேட்ஸ்மேன்கள் – அயர்லாந்துக்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வி</a>

ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்பு, விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்தப் பட்டியலில் இருந்தனர். இந்திய டி20 அணிக்கு 15 வீரர்கள் தலைமை தாங்கியுள்ளனர். இவர்களில், 11 கேப்டன்கள் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், ஷ்ரேயாஸ் ஐயர் உட்பட 4 கேப்டன்கள் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றொரு விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார். எந்தவொரு வடிவத்திலும் அயர்லாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் தோற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தியா, அயர்லாந்துக்கு எதிராக எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கைக்குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் தலை உச்சியில் நூல் வைப்பது ஏன்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/scientific-reason-behind-placing-wet-thread-on-a-hiccuping-babys-head-87405.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 18:00:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/scientific-reason-behind-placing-wet-thread-on-a-hiccuping-babys-head-87405.html</guid>
		            
			

    	<description><![CDATA[கைக்குழந்தைகளின் நரம்பு மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடையாததால், பால் குடிக்கும் போது காற்றை உள்ளிழுப்பதன் காரணமாக உதரவிதான தசை சுருங்கி அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. குழந்தையின் மென்மையான தலை உச்சியில் ஈரமான நூலை வைக்கும் போது ஏற்படும் திடீர் குளிர்ச்சி உணர்வு, குழந்தையின் மூளையை சட்டென்று திசைதிருப்புகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/02/new-born-baby-sleeping.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கைக்குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் தலை உச்சியில் நூல் வைப்பது ஏன்?" /></figure>தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு சுவாரசியமான வீட்டு வைத்தியம், கைக்குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களின் தலை உச்சியில் நூலை நனைத்து வைப்பதாகும். குழந்தை பிறந்த சில மாதங்களில் அடிக்கடி விக்கல் எடுப்பது இயல்பான ஒரு நிகழ்வுதான். அவ்வாறு விக்கல் எடுக்கும் போதெல்லாம், வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு சிறிய நூல் துண்டையோ, துணி நூலையோ எடுத்து, அதில் தாய்ப்பாலையோ அல்லது நீரயோ நனைத்து குழந்தையின் தலை உச்சியில் (சுழி இருக்கும் பகுதியில்) வைப்பார்கள். இவ்வாறு செய்த சில நிமிடங்களிலேயே குழந்தையின் விக்கல் நின்றுவிடுவதை நாம் பலமுறை பார்த்திருப்போம். இந்த எளிய செயல்முறைக்கு பின்னால் மூடநம்பிக்கை ஏதேனும் இருக்கிறதா அல்லது ஏதேனும் தர்க்கரீதியான காரணம் இருக்கிறதா என்று பலருக்கும் சந்தேகம் எழுவதுண்டு.
<h3>மூளையின் கவனத்தை திசைதிருப்புதல்</h3>
இந்த வழக்கத்தின் பின்னணியில் உள்ள மிக முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுவது குழந்தையின் கவனத்தை திசைதிருப்புவதாகும் (Distraction). கைக்குழந்தைகளின் நரம்பு மண்டலம் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. விக்கல் என்பது உதரவிதானம் (Diaphragm) எனப்படும் தசை சுருங்குவதால் ஏற்படும் ஒரு தன்னிச்சையான செயலாகும். குழந்தையின் உச்சந்தலையில் ஈரமான நூலை வைக்கும் போது, திடீரென ஏற்படும் அந்த குளிர்ச்சியான உணர்வு மற்றும் தொடுதல் உணர்வை குழந்தையின் மூளை சட்டென்று கவனிக்கும். இந்த திடீர் மாற்றத்தால் மூளையின் கவனம் விக்கலில் இருந்து விலகி, உச்சந்தலையின் குளிர்ச்சிக்கு மாறுகிறது. இதன் காரணமாக உதரவிதானத்தின் சுருக்கம் சீராகி விக்கல் உடனடியாக நின்றுவிடுகிறது.
<h3>உச்சந்தலை மென்மை மற்றும் உடல் வெப்பநிலை</h3>
குழந்தைகளின் தலை உச்சிப் பகுதி (Fontanelle) மிகவும் மென்மையாகவும், நரம்புகள் அதிகம் நிறைந்த பகுதியாகவும் காணப்படும். உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் இந்த பகுதிக்கு முக்கியப் பங்கு உண்டு. விக்கல் எடுக்கும் போது குழந்தையின் சுவாசத்திலும், உடல் இயக்கத்திலும் லேசான மாற்றம் ஏற்படும். அந்த நேரத்தில் உச்சந்தலையில் ஈரமான நூலை வைப்பதன் மூலம், அந்த குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலை சற்றே குறைகிறது. இந்த லேசான வெப்பநிலை மாற்றம் குழந்தையின் நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது. பெரியவர்கள் செய்யும் இந்த எளிய செயல், குழந்தையின் உடலை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மறைமுகமாகத் துணைபுரிகிறது என்பதே உண்மை.
<h3>அறிவியல் ரீதியான மருத்துவப் பார்வை</h3>
நவீன மருத்துவ உலகம் இந்த நூல் வைக்கும் பழக்கத்தை ஒரு பெரிய மருத்துவத் தீர்வாகப் பார்க்கவில்லை என்றாலும், இதனால் குழந்தைக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஆபத்துகளும் ஏற்படுவதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, கைக்குழந்தைகளின் செரிமான மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் வளரும் பருவத்தில் இருப்பதால், பால் குடிக்கும் போது காற்றை உள்ளிழுப்பதனால் விக்கல் வருவது சகஜம். பொதுவாகவே விக்கல் என்பது சில நிமிடங்களில் தானாகவே நின்றுவிடக்கூடிய ஒன்றுதான். நாம் நூல் எடுத்து நனைத்து வைக்கும் நேரத்திற்குள் விக்கல் தானாகவே நிற்கும் நிலையை அடைந்திருக்கலாம் என்றும், அல்லது கவனத் திசைதிருப்பல் மூலமாக அது நின்றிருக்கலாம் என்றும் கூறப்ப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அரசன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி எப்போது இணைவார்? வைரலாகும் தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-that-after-completing-the-first-schedule-of-kiruthika-udhayanidhis-film-vijay-sethupathi-will-next-join-the-shooting-of-arasan-87404.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 17:18:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-that-after-completing-the-first-schedule-of-kiruthika-udhayanidhis-film-vijay-sethupathi-will-next-join-the-shooting-of-arasan-87404.html</guid>
		            
			

    	<description><![CDATA[Actor Vijay Sthupathi | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அரசன் படத்தின் படப்பிடிப்பில் அவர் எப்போது கலந்துகொள்ள உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vijay-sethupathi-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அரசன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி எப்போது இணைவார்? வைரலாகும் தகவல்" /></figure>தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் வருடத்திற்கு குறைந்தது மூன்று படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் முதலாவதாக வெளியானது காந்தி டால்க்ஸ் படம். இந்தப் படம் முழுக்க முழுக்க வசனம் இல்லாமல் சைகை மொழியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வித்யாசமான பாணியில் உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது, இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மட்டும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி அவ்வபோது இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பும் மக்களிடையே பாராட்டப் படுகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி உள்ளது.
<h3>அரசன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி எப்போது இணைவார்?</h3>
விஜய் சேதுபதி தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்த பிறகு, நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் எழுதி இயக்கிவரும் அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/director-ashwath-marimuthu-denies-reports-that-rajinikanths-dharman-film-is-in-the-making-based-on-the-good-doctor-web-series-87201.html">Dharman: குட் டாக்டர் வெப் தொடரின் கதையில் உருவாகிறதா ரஜினியின் தர்மன் திரைப்படம்? அஸ்வத் மாரிமுத்து சொன்ன பதில் என்ன தெரியுமா?</a></strong>
<h3>இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">New Film — <a href="https://x.com/hashtag/VijaySethupathi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VijaySethupathi</a> is currently acting in a film directed by <a href="https://x.com/hashtag/KiruthigaUdhayanidhi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KiruthigaUdhayanidhi</a>. The shooting of this film is currently happening in Chennai. After completing the first schedule of this film, Vijay Sethupathi will join the shooting of <a href="https://x.com/hashtag/ARASAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ARASAN</a> next. <a href="https://t.co/N7Bw4mKSFA">pic.twitter.com/N7Bw4mKSFA</a></p>
— Movie Tamil (@_MovieTamil) <a href="https://x.com/_MovieTamil/status/2070700922188312882?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/mandaadi-team-releases-character-introduction-video-of-telugu-actor-suhas-87215.html">Mandaadi: டோலிவுட் நடிகர் சுஹாஸின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட மண்டாடி படக்குழு!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர் &#8211; காங்கிரஸ் தலைமை அறிவிப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/manickam-tagore-appointed-tamil-nadu-congress-president-87413.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 17:08:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/manickam-tagore-appointed-tamil-nadu-congress-president-87413.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை இருந்த நிலையில் அவரை மாற்றி  புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அறிவித்துள்ளது.  மேலும், புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/manickam-tagore-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர் &#8211; காங்கிரஸ் தலைமை அறிவிப்பு" /></figure><strong>சென்னை, ஜூன் 27 :</strong> தமிழ்நாடு <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/congress-praveen-chakravarty-took-office-as-a-rajya-sabha-mp-with-tvk-support-87021.html" target="_blank" rel="noopener">காங்கிரஸ்</a> தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை இருந்த நிலையில் அவரை மாற்றி புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அறிவித்துள்ளது. புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-promised-to-help-mdmk-win-two-assembly-seats-says-vaiko-87380.html" target="_blank" rel="noopener">தவெகவுடன்</a> காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தவெக அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனையடுத்து அவர் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
<h3>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர்</h3>
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போதே அவர் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கட்சி தலைமையை அவர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சட்டமன்ற தேர்தலில்திமுக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/education-minister-rajmohan-clarifies-id-card-caste-name-row-87369.html">மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</a></strong>

தேர்தலுக்கு முன்பே தவெக கூட்டணிக்கு ஆதரவு அளித்தவர் என்ற வகையில், தவெக தரப்பினருக்கும் மாணிக்கம் தாகூர் மீது நன்மதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தவெக அரசு மீது அவ்வப்போது செல்வப்பெருந்தகை விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

இந்த ​நிலை​யில், தேர்​தலுக்கு பிறகு கட்​சி​யின் மாநில தலை​வர் பதவியி​லிருந்து வில​கு​வ​தாக செல்​வப்​பெருந்தகை அறி​வித்​திருந்​தார். இந்த நிலையில் ஜூன் 26, 2026 அன்று சசெய்​தி​யாளர்​களை சந்தித்த அவர், நான் தேர்​தல் நடப்​ப​தற்கு முன்​பே, வாக்​காளர்​கள் மற்​றும் பத்​திரி​கை​யாளர் மத்​தி​யில் தேர்​தல் முடிந்​தவுடன் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என அறிவித்திருந்தேன். இதில் என்ன சந்​தேகம் இருக்​கிறது. பதவி வில​கு​வ​தில் 100 சதவீதம் உறு​தி​யாக இருக்​கிறேன். எல்​லோருக்​கும் ஒரு காலத்​தில் காங்​கிரஸ் மாநில தலை​வ​ராக பணி​யாற்ற வேண்​டும் என்ற ஆசை இருக்​கும். பதவி கிடைத்த பிறகு மனநிறைவோடு வில​கி​விட வேண்​டும் என்று தெரிவித்திருந்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mdmk-withdraws-from-dmk-alliance-bold-resolution-passed-at-general-council-meeting-87351.html">திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!!</a></strong>

மேலும் பேசிய அவர், கடந்த வாரம் காங்கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கேவை சந்​தித்​த​ு, மாநில தலை​வர் பதவியி​லிருந்து என்னை விடுவிக்​கு​மாறு கோரிக்கை வைத்​தேன். நான் பதவி விலக வேண்​டும் என்று எந்த நெருக்​கடி​யும் இல்லை. பதவியில் இருப்​பதை விட, பதவி​யில் இல்​லாத போது தான் மகிழ்ச்​சி​யாக இருப்​போம். அடுத்த மாநில தலை​வரை அகில இந்​திய தலை​மை தான்​ முடிவு செய்​யும்​ என்று தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திருப்பத்தூரில் வாகன ஓட்டிகளுக்கு தக்காளி கொடுத்த போலீசார்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/traffic-police-reward-helmet-wearing-two-wheeler-riders-with-tomatoes-87407.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 17:02:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinoth V]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/traffic-police-reward-helmet-wearing-two-wheeler-riders-with-tomatoes-87407.html</guid>
		            
														<description><![CDATA[திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரவின் குமார் தலைமையிலான போலிசார் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜின்னா சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தங்களின் பாதுகாப்பிற்காக கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகளை வழங்கினார்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/traffic-police-reward-helmet-wearing-two-wheeler.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருப்பத்தூரில் வாகன ஓட்டிகளுக்கு தக்காளி கொடுத்த போலீசார்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/HZcFEjAe-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பத்தூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்தநிலையில் ​திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரவின் குமார் தலைமையிலான போலிசார் ஜின்னா சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தங்களின் பாதுகாப்பிற்காக கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகளை வழங்கினார். விபத்து அபாயத்தை உணர்ந்து முறையாக தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை போலிசார் அவர்களின் பொறுப்புணர்வை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக தக்காளிப் பழங்களை பரிசாக
கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தலைவரே மைக்-ஆ பிடிச்சி உண்மைய சொல்லவேண்டிய நிலை.. சர்ச்சையை கிளப்பிய விஷ்ணு விஷால்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/vishnu-vishal-explains-the-controversy-surrounding-his-use-of-rajinikanth-as-an-example-87391.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 17:01:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/vishnu-vishal-explains-the-controversy-surrounding-his-use-of-rajinikanth-as-an-example-87391.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vishnu Vishal Clarifies controversy Comment: நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பிரதபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் அண்மையில், கட்ட குஸ்தி 2 பட ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில், ரஜினியின் பேச்சு குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறிய விஷயம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. மேலும் அந்த சர்ச்சைக்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vishnu-vishal-controversy.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தலைவரே மைக்-ஆ பிடிச்சி உண்மைய சொல்லவேண்டிய நிலை.. சர்ச்சையை கிளப்பிய விஷ்ணு விஷால்!" /></figure>தமிழில் வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/vishnu-vishal-said-i-did-lal-salaam-as-i-want-to-do-a-film-with-rajinikanth-sir-87098.html" target="_blank" rel="noopener">விஷ்ணு விஷால்</a></strong> (Vishnu Vishal). இப்படத்தில் இவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றே கூறலாம். அந்த வகையில் இவரின் நடிப்பில் உருவாகிவந்த புது படம்தான் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-vishnu-vishal-said-gatta-kusthi-2-film-made-in-a-way-that-appeals-to-family-audiences-85356.html" target="_blank" rel="noopener">கட்டா குஸ்தி 2</a> </strong>(Gatta Kusthi 2). இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்துள்ளார். இப்படமானது சிறப்பாக தயாராகியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் லால் சலாம் (Lal Salaam) படம் மற்றும் ரஜினிகாந்த் (Rajinikanth) குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.

மேலும் அதில் அவர் சோஷியல் மீடியாவின் மற்றும் ரஜினிகாந்த் உண்மையை நிரூபிக்க மைக் பிடித்து பேசவேண்டியிருக்கிறது என அதில் கொஞ்சம் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். இது தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுவரும் நிலையில், தான் பேசிய காரணம் குறித்து விளக்கமாக பதிலளித்திருக்கிறார்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/late-k-bhagyarajs-family-reveals-when-his-funeral-will-be-87381.html" target="_blank" rel="noopener">திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இறுதி சடங்கு எப்போது? – குடும்பத்தினர் தெரிவித்த விஷயம்!</a>
</strong>
<h3>ரஜினிகாந்தை எடுத்துக்காட்டாக கூறிய சர்ச்சை குறித்து விளக்கமளித்த விஷ்ணு விஷால்:</h3>
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்த விஷ்ணு விஷால், "நான் அந்த நேர்காணலில் தொகுப்பாளர் என்னிடம், சோஷியல் மீடியா கமெடு பற்றி கேட்டிருந்தார். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் நான் ரஜினிகாந்த் சாறை ஏகூறியிருந்தேன். யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாருக்கே விளக்கம் தரவேண்டிய நிலை இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று கூறினேன்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/nivin-pauly-reunites-with-alphonse-puthren-for-his-50th-film-vijayam-87379.html" target="_blank" rel="noopener">தனது 50-வது படத்திற்காக மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி</a>
</strong>

இதுபோன்ற சூழ்நிலையை சோஷியல் மீடியா யார் முதலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ, அதுவே உண்மையாகிவிடுகிறது. அதற்கு நாம் பதிலளிக்காவிட்டால் அதுவும் உண்மையாகிவிடுகிறது. அனைவருக்கும் தங்களின் கருத்தை தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரம் நடிகர்களுக்கும்தான் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, நடிகர்கள் நாங்கள் பேசினால் மட்டும் ஏன் தவறாகிவிடுகிறது?" என அதில் அவர் கூறியுள்ளார்.
<h3>கட்டா குஸ்தி 2 படம் குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">A song for every dad. A smile for every daughter ❤️ <a href="https://x.com/hashtag/Magaraasi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Magaraasi</a> - our second single from <a href="https://x.com/hashtag/GattaKusthi2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#GattaKusthi2</a> out now. A <a href="https://x.com/RSeanRoldan?ref_src=twsrc%5Etfw">@RSeanRoldan</a> musical.
<a href="https://t.co/gxA8ttkfb6">https://t.co/gxA8ttkfb6</a></p>
See you all in theatres on July 3 🥊 <a href="https://t.co/2cSxkii97o">pic.twitter.com/2cSxkii97o</a>

— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) <a href="https://x.com/TheVishnuVishal/status/2067920945424240677?ref_src=twsrc%5Etfw">June 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த படமானது கட்டா குஸ்தி 1 பட தொடச்சியில் தயாராகிவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சூர்யா 47 படம் குறித்து இசையமைப்பாளர் சொன்ன முக்கிய விசயம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/music-director-sushin-shyam-talks-about-suriya-47-movie-87386.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 16:47:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/music-director-sushin-shyam-talks-about-suriya-47-movie-87386.html</guid>
		            
			

    	<description><![CDATA[Music Director Sushin Shyam Recent Interview | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் சூர்யா 47. இந்தப் படம் குறித்து படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் சமீபத்திய பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/sushin-shyam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சூர்யா 47 படம் குறித்து இசையமைப்பாளர் சொன்ன முக்கிய விசயம்" /></figure>தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் கருப்பு படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து <a href="https://www.tv9tamilnews.com/entertainment/it-has-been-announced-that-suriyas-film-karuppu-has-grossed-a-total-of-rs-191-crore-in-tamil-nadu-alone-87096.html" target="_blank" rel="noopener">நடிகர் சூர்யா</a> நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. முன்னதாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் 47-வது படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் சமீபத்தில் பேட்டி ஒன்றி சூர்யா 47 படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
<h3>சூர்யா 47 படம் குறித்து இசையமைப்பாளர் சொன்ன முக்கிய விசயம்:</h3>
சூர்யா 47 படத்திற்காக நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன். பாலன் படத்திற்குப் பிறகு, இசை ரீதியாக சூர்யா 47 எனக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக அமைகிறது. இதன் இசைத் தொகுப்பு மிகவும் சுவாரஸ்யமாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும், அதே சமயம் வணிக ரீதியான பாணியிலும் இருக்கும். ஆவேஷம் படத்தில் இருந்த துடிப்பான இசைத்தன்மைகள் இதிலும் இடம்பெறுவதால், அதே சமயம் இது புதுமையாகவும் இருக்க வேண்டும் என்பதையும், முன்பு செய்தவற்றையே மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்வது எனக்கு ஒரு சவாலாக உள்ளது. இது எனது முதல் தமிழ்ப் படம் என்பதால், தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் ஒரு சிறந்த இசைத் தொகுப்பை உருவாக்க எனது முழு முயற்சியையும் அளித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/the-movie-crew-has-confirmed-that-baahubali-3-is-happening-87199.html">பாகுபலி 3 படம் உருவாக உள்ளதா? வைரலாகும் தகவல்</a></strong>
<h3>இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Music Director <a href="https://x.com/hashtag/SushinShyam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SushinShyam</a> about <a href="https://x.com/hashtag/Suriya47?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Suriya47</a>

- I'm super excited for Suriya47 After completing Balan, <a href="https://x.com/hashtag/Suriya?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Suriya</a> 47 is a complete contrast for me musically. The album will be fun, entertaining, and rooted in a commercial space.

- S47 will carry some of the energetic flavours of… <a href="https://t.co/ur9inTnJYd">pic.twitter.com/ur9inTnJYd</a></p>
— Movie Tamil (@_MovieTamil) <a href="https://x.com/_MovieTamil/status/2070793072653602836?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/love-oh-love-movie-official-trailer-released-by-anirudh-ravichandar-87206.html">எப்புட்றா இவகூட நாளு வருஷம் ரிலேஷன்ஷிப்ல இருந்த – வெளியானது லவ் ஓ லவ் படத்தின் ட்ரெய்லர்</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>IND vs IRE: முதல் போட்டி தோல்வியால் அதிர்ச்சி.. அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/ind-vs-ire-2nd-t20-vaibhav-sooryavanshi-debut-or-not-india-vs-ireland-2nd-t20-playing-11-prediction-87393.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 16:43:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/ind-vs-ire-2nd-t20-vaibhav-sooryavanshi-debut-or-not-india-vs-ireland-2nd-t20-playing-11-prediction-87393.html</guid>
		            
			

    	<description><![CDATA[IND vs IRE 2nd T20 Playing 11 Prediction: லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகத்திற்காகக் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தக் காத்திருப்பு இன்னும் சில நாட்கள் தொடரலாம். முதல் டி20 போட்டிக்கு முன்பு, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆகியோர் வைபவ் குறித்து இதே உணர்வுகளை தெரிவித்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ind-vs-ire-2nd-t20-playing-11.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="IND vs IRE: முதல் போட்டி தோல்வியால் அதிர்ச்சி.. அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?" /></figure>இந்திய அணி ஒரு அதிர்ச்சிகரமான தோல்வியை நேற்று அதாவது 2026 ஜூன் 26ம் தேதி சந்தித்தது. முதல் டி20 போட்டியில் டக்கர் தலைமையிலான அயர்லாந்து அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான <a href="https://www.tv9tamilnews.com/sports/india-lose-to-ireland-by-34-runs-in-1st-t20-87258.html">இந்திய அணியை</a> <strong>(Indian Cricket Team)</strong> 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்து அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல் முறை என்பதால், இந்த வெற்றி அவர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்தது. இதற்காக சமூக வலைதளங்களில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், மற்ற பேட்ஸ்மேன்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், <a href="https://www.tv9tamilnews.com/sports/vaibhav-sooryavanshi-fever-hits-ireland-as-t20i-tickets-sell-out-in-minutes-87180.html">இந்தியா மற்றும் அயர்லாந்து</a> அணிகளுக்கு (<strong>IND vs IRE)</strong>இடையேயான 2வது டி20 போட்டி வருகின்ற 2026 ஜூன் 28ம் தேதி பெல்ஃபாஸ்டில் நடைபெற உள்ளது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/vaibhav-sooryavanshi-fever-hits-ireland-as-t20i-tickets-sell-out-in-minutes-87180.html">களமிறங்கும் முன்பே சம்பவம் செய்த வைபவ் – அயர்லாந்து அணி அதிர்ச்சி</a>

முதல் போட்டியில் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டு, பல குறைபாடுகள் அம்பலப்படுத்தப்பட்டன. இவற்றைக் கருத்தில் கொண்டு, 2வது டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் இந்திய அணி மாற்றங்களைச் செய்யலாம். மேலும், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதையும் தெரிந்துகொள்வோம்.
<h3>வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவாரா?</h3>
லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகத்திற்காகக் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தக் காத்திருப்பு இன்னும் சில நாட்கள் தொடரலாம். முதல் டி20 போட்டிக்கு முன்பு, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆகியோர் வைபவ் குறித்து இதே உணர்வுகளை தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், “இந்திய அணியில் ஏற்கனவே சிறந்த மற்றும் சிறப்பான ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன்கள் உள்ளனர். திடீரென அவர்களை மாற்றுவது முற்றிலும் நியாயமற்றது. வைபவ் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இருப்பினும், அவர் தனது வாய்ப்புக்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்." என்றார். இதன் விளைவாக, வைபவ் இரண்டாவது டி20 போட்டியையும் தவறவிட வாய்ப்புள்ளது.
<h3>பிரின்ஸ் யாதவின் அறிமுகம்</h3>
முதல் போட்டியில் பிரசித் கிருஷ்ணா தனது 4 ஓவர்களில் 57 ரன்களை விட்டுக்கொடுத்து மிகவும் அதிக ரன்களைக் கொடுத்தார். அவருக்குப் பதிலாக பிரின்ஸ் யாதவ் களமிறங்கி தனது டி20 அறிமுகத்தை பெறலாம்.  இதற்கிடையில், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சூர்யான்ஷ் ஷெட்ஜ் இந்திய அணிக்காக அறிமுகமாக வாய்ப்புள்ளது. முதல் டி20 போட்டியில் 6வது இடத்தில் களமிறங்கிய சுந்தர், வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசினார்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/india-lose-to-ireland-by-34-runs-in-1st-t20-87258.html">சொதப்பிய பேட்ஸ்மேன்கள் – அயர்லாந்துக்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வி</a>
<h3>2வது டி20க்கு இந்தியாவின் சாத்தியமான ஆடும் லெவன்:</h3>
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ராஜினாமா செய்ய மாட்டேன்! &#8211;  மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு  &#8211; என்ன நடந்தது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/kadayanallur-mdmk-mla-rajendran-rejects-resignation-demand-87401.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 16:40:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/kadayanallur-mdmk-mla-rajendran-rejects-resignation-demand-87401.html</guid>
		            
			

    	<description><![CDATA[திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மதிமுக எம்எல்ஏகள் 2 பேருமே பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதிமுக எம்எல்ஏ ராசேந்திரன் ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/kadayanallur-mla-rajendran.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ராஜினாமா செய்ய மாட்டேன்! &#8211;  மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு  &#8211; என்ன நடந்தது?" /></figure><strong>சென்னை, ஜூன் 27 :</strong> திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-promised-to-help-mdmk-win-two-assembly-seats-says-vaiko-87380.html" target="_blank" rel="noopener">மதிமுக</a> பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மதிமுக எம்எல்ஏகள் 2 பேருமே பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, 2 மதிமுக எம்எல்ஏகளை ராஜினாமா செய்ய சொன்னதாகவும், 2 பேரையும் வெற்றி பெற செய்வது தனது பொறுப்பு என <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-mp-wilson-has-accused-chief-minister-joseph-vijay-of-violating-the-oath-of-secrecy-87343.html" target="_blank" rel="noopener">முதல்வர் விஜய்</a> உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மதிமுக எம்எல்ஏகள் 2 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நிலையில் 2 பேரையும் ராஜினாமா செய்ய வைக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
<h3>ராஜினாமா செய்ய மதிமுக எம்எல்ஏ மறுப்பு</h3>
இந்த நிலையில் மதிமுக எம்எல்ஏ இராசேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்சி, சாதி, மதம் கடந்து வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் உணர்வுகளை மதித்து, பதவி விலக முடியாது என வைகோவிடம் தெரிவித்துவிட்டேன். அவசரம் வேண்டாம். 6 மாதங்கள் பொறுத்திருப்போம் என நான் கூறியதை அவர் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/passing-of-bhagyaraj-political-leaders-cm-vijay-to-thirumavalavan-offer-heartfelt-condolences-87346.html">பாக்யராஜ் மறைவு.. முதல்வர் விஜய் முதல் திருமாவளவன் வரை தலைவர்கள் உருக்கமாக இரங்கல்!</a></strong>

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், அன்புத் தலைவர் வைகோ உங்களை உண்மையாக நேசிக்கிறேன். கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றிபெறச்செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வருகின்ற உணர்வினை மதித்தும், தலைவர் வைகோ மீதோ, சட்டமன்ற உறுப்பினரான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்கள் அறிவுரைப்படி சட்டமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. கட்சி உணர்வோடு நான் இயங்கி வருவதையும், பேசியதையும் பாராட்டிச் சொன்னீர்கள். எனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம். இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாதம் பொறுத்திருப்போம்.
தவிர, கூட்டணி குறித்து தாங்களும்,கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். மேற்கண்ட தகவல்களையும், இன்னும் சில பல செய்திகளையும் ஜூன் 26, 2026 நேற்று பிற்பகல் 2 மணிக்கு தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் கண்ணீருடன் முறையிட்டேன் என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-mp-wilson-has-accused-chief-minister-joseph-vijay-of-violating-the-oath-of-secrecy-87343.html">முதல்வர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அந்த இருவர் யார்? வில்சன் எம்பி ஆவேசம்!</a></strong>

அதன் பின்னர் இரவு தலைவர் வைகோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக்குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை கழகப் பொருளாளர் மூலம் தலைவர் கவனத்திற்கு சொல்லி உள்ளேன். 42 ஆண்டுகளாக தலைவர் வைகோ அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது. என்றார்.

அதேபோல் "வாக்களித்த மக்கள் பெருமைப்படுகின்ற வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கின்ற வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், தலைவர் வைகோ அவர்களும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது. எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.. தலைவரே எனது மேற்கண்ட கருத்துகள் உங்கள் நலனையும் உள்ளடக்கியது என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO : தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினால் இபிஎஃப்ஓவில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 16:30:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html</guid>
		            
			    	<description><![CDATA[Pension Amount For EPFO Members Works In Private Company | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மூலம் ஊழியர்கள் ஏராளமான பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஒரு ஊழியர் சுமார் 10 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினால் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-15-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (15)" /></a></dt><p>இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ள ஒரு திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். இந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றும் ஊழியருக்கு இபிஎஃப்ஓவில் எவ்வளவு ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-16-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (16)" /></a></dt><p>ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் மாதம்தோறும் ஓய்வூதியம் பெற ஒரு நபர் குறைந்தது 10 ஆண்டுகளாவது தனியார் நிறுவனத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். அதாவது அந்த நபர் தொடர்ந்து 10 ஆண்டுகள் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-17-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (17)" /></a></dt><p>தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்றால் ஒரே நிறுவனத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றினாலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-18-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (18)" /></a></dt><p>10 ஆண்டுகளுக்கு பிறகு ஊழியரின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய நிதிக்கு செல்ல தொடங்கும். இந்த பணம், அந்த ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-19-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (19)" /></a></dt><p>நீங்கள் தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளீர்கள், உங்கள் சராசரி ஓய்வூதிய சம்பளம் ரூ.15,000 என்றால், மாதம் தோறும் உங்களுக்கு ரூ.2,143 ஓய்வூதியமாக கிடைக்கும். ஊழியர்கள் தங்களது 58 வயதை அடைந்த பிறகு இந்த ரூ.2,143 தொகை மாதம் மாதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>Indian Womens Team: இன்னும் ஒரே ஒரு போட்டி.. இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு செல்லுமா? சமன்பாடு என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/icc-womens-t20-world-cup-2026-ind-w-vs-aus-w-india-womens-semi-final-equation-87384.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 16:06:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/icc-womens-t20-world-cup-2026-ind-w-vs-aus-w-india-womens-semi-final-equation-87384.html</guid>
		            
			

    	<description><![CDATA[Team India Womens Semi Final Scenario: 'ஏ' பிரிவின் 2 போட்டிகளும் 2026 ஜூன் 28ம் தேதியான நாளை நடைபெறும். வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், 8 புள்ளிகள் கிடைக்கும். இந்த நிலையில், அரையிறுதிக்குச் செல்ல இந்திய அணிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதன்படி, எப்படியாவது ஆஸ்திரேலியாவைத் தோற்கடிப்பதுதான்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/india-womens-semi-final-scenario.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Indian Womens Team: இன்னும் ஒரே ஒரு போட்டி.. இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு செல்லுமா? சமன்பாடு என்ன?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/sports/eng-w-vs-wi-w-match-controversy-erupted-after-west-indies-captain-hayley-matthews-wicket-87002.html">2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின்</a><strong> (2026 Womens T20 World Cup)</strong> அரையிறுதிப் போட்டிக்கு இதுவரை இங்கிலாந்து அணி மட்டுமே தகுதி பெற்றுள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் மகளிர் அணி உட்பட 4 அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், 'ஏ' பிரிவில் <a href="https://www.tv9tamilnews.com/sports/womens-t20-world-cup-2026-ind-w-vs-ban-w-india-women-won-by-5-wkts-87081.html">இந்திய அணி</a><strong> (Indian Womens Cricket Team)</strong> அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 2ம் இடத்தில் இருந்தாலும், அதன் அரையிறுதித் தகுதி மற்ற அணிகளைப் பொறுத்தே உள்ளது. இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருந்த போதிலும், இந்திய அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளது.

ALSO READ:<a href="https://www.tv9tamilnews.com/sports/eng-w-vs-wi-w-match-controversy-erupted-after-west-indies-captain-hayley-matthews-wicket-87002.html"> பேட்டில் பட்டதா..? விக்கெட் விழுந்ததா..? சர்ச்சையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விக்கெட்.. வைரலாகும் வீடியோ!</a>
<h3>ஆஸ்திரேலிய அணி முதலிடம்:</h3>
ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவு புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ளன, ஆனால் நிகர ரன் ரேட் அடிப்படையில் இந்திய மகளிர் அணி முன்னிலை வகிக்கிறது. லீக் சுற்றில் 3 அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மீதமுள்ளது. இதன் காரணமாக, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நிகர ரன் ரேட் அடிப்படையில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பது தெரியவரும்.
<h3>இந்தியா ஒரே ஒரு போட்டியில் தோற்றாலும் என்ன ஆகும்..?</h3>
இந்திய மகளிர் அணியின் கடைசி லீக் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை அதாவது 2026 ஜூன் 28ம் தேதி நடைபெற உள்ளது. 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் களத்தில் இருப்பதால், இந்திய அணிக்கு ஏற்கனவே தலைவலி அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவின் கடைசி போட்டி வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறுவது, இந்திய அணியின் தலைவலியை மேலும் இரட்டிப்பாக்கும்.

'ஏ' பிரிவின் இரண்டு போட்டிகளும் 2026 ஜூன் 28ம் தேதியான நாளை நடைபெறும். வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், 8 புள்ளிகள் கிடைக்கும். இந்த நிலையில், அரையிறுதிக்குச் செல்ல இந்திய அணிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதன்படி, எப்படியாவது ஆஸ்திரேலியாவைத் தோற்கடிப்பதுதான். தென்னாப்பிரிக்கா 8 புள்ளிகளை எட்டினால், ஆஸ்திரேலியாவிடம் தோற்பது இந்திய அணியை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றிவிடும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/womens-t20-world-cup-2026-ind-w-vs-ban-w-india-women-won-by-5-wkts-87081.html">வங்கதேசத்திற்கு எதிராக வெற்றியை தொட்ட இந்திய அணி.. அரையிறுதிக்குள் நுழைந்ததா?</a>

ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்காமலேயே இந்தியா அரையிறுதிக்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், அவ்வாறு செய்ய வேண்டுமானால், தென்னாப்பிரிக்கா வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோற்க வேண்டும் என இந்திய அணி நம்ப வேண்டியிருக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>K Bhagyaraj: திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இறுதி சடங்கு எப்போது? &#8211; குடும்பத்தினர் தெரிவித்த விஷயம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/late-k-bhagyarajs-family-reveals-when-his-funeral-will-be-87381.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 16:04:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/late-k-bhagyarajs-family-reveals-when-his-funeral-will-be-87381.html</guid>
		            
			

    	<description><![CDATA[K Bhagyaraj Funeral: கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, பின் நடிகராகவும் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியவர் பாக்யராஜ் . இவர் இன்று (27/06/2026) உடல்நல குருவின் காரணமாக காலமானார். இவரின் மறைவு திரையுலகினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தற்போது இவரின் இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/k-bhagyaraj-funeral.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="K Bhagyaraj: திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இறுதி சடங்கு எப்போது? &#8211; குடும்பத்தினர் தெரிவித்த விஷயம்!" /></figure>ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவின் இழப்பாக இந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதம் அமைந்துள்ளது என கூறலாம். இயக்குநர் இமையம் பாரதிராஜா (Bharathiraja) கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 10ம் தேதியில், உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவரிடம் உதவி இயக்குநராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வளர்ந்தவர்தான் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/veteran-director-and-actork-bhagyaraj-passed-away-due-to-heart-attack-know-more-in-details-87313.html" target="_blank" rel="noopener">கே பாக்யராஜ்</a> </strong>(K. Bhagyaraj). இவர் உதவி இயக்குநராக பாரதிராஜாவுடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில், குருவை தொடர்ந்து, சிஷியனும் காலமானார். ஆமாம் இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜ் (73) உடல்நல குறைவின் காரணமாக இன்று 2026ம் ஆண்டு ஜூன் 27ம் தேதியில் காலமானார். இவரின் இறப்பு கோலிவுட் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரை அனைவரும் "<strong>திரைக்கதை மன்னன்</strong>" மற்றும் "<strong>திரைக்கதை ஜாம்பவான்</strong>" என அழைக்கப்பட்டுவந்தவர். தற்போது அவரே இல்லை என்ற நிலையில், மேலும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவருகிறது. இவரின் இறப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்துவருகிறார்கள்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/celebrities-from-kollywood-to-bollywood-express-condolences-over-bhagyarajs-passing-87349.html" target="_blank" rel="noopener">கோலிவுட் முதல் பாலிவுட் வரை… பாக்யராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்</a>
</strong>
<h3>மறைந்த கே பாக்யராஜின் இறுதிச்சடங்கு எப்போது, எங்கு நடைபெறுகிறது:</h3>
தற்போது இயக்குநர் கே பாக்யராஜின் உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவரின் உடலுக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள். மேலும் முதல்வர் விஜய் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/veteran-director-and-actork-bhagyaraj-passed-away-due-to-heart-attack-know-more-in-details-87313.html" target="_blank" rel="noopener">திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்.. திரையுலகில் பெரும் துயரம்</a>
</strong>

அந்த வகையில், அவரின் உடல் நாளை (28/06/2026) சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பல நட்சத்திர நடிகர்களும் மற்றும் அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
<h3>பாக்யராஜின் மறைவிற்கு முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.6.2026) மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். <a href="https://t.co/l1wraf4ZkB">pic.twitter.com/l1wraf4ZkB</a></p>
— CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2070790437766562078?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>கே பாக்யராஜ் இறுதியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி:</h3>
இயக்குநர் கே பாக்யராஜ் இறுதியாக, சுந்தர் சி மற்றும் குஷ்புவின் மக்கள் அவந்திகாவின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் கோவாவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த விழாவில்தான் இறுதியாக கே.பாக்யராஜா தனது குடும்பத்துடன் கலந்துகொண்டிருக்கிறார். இதன் பிறகே உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மாரடைப்பின் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல.. இந்த 9 பேரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. யார் யார்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/not-only-employee-these-9-should-pay-income-tax-in-india-87376.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 15:48:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/not-only-employee-these-9-should-pay-income-tax-in-india-87376.html</guid>
		            
			

    	<description><![CDATA[These 9 Should Pay Income Tax In India | இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் பெறும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், வேலைக்கு செல்லும் நபர்கள் மட்டுமன்றி, இந்த 9 பேர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/itr-filing.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல.. இந்த 9 பேரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. யார் யார்?" /></figure>இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமான பெறும் நபர்கள் வருமான வரி <strong>(Income Tax)</strong> செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் தொழில் செய்யும் நபர்கள் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. வேலைக்கு செல்லும் நபர்கள் மட்டுமன்றி, இந்த 9 பேரும் வருமான வரி செலுத்த வேண்டும். இந்த நிலையில், இது குறித்து வருமான வரி விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்த 9 பேரும் வருமான வரி செலுத்த வேண்டும்</h3>
<h3>வெளிநாட்டு சொத்துக்கள்</h3>
நீங்கள் இந்திய குடிமகனாக இருந்து வெளிநாட்டில் ஏதேனும் சொத்து வைத்திருந்தால், அந்த வெளிநாட்டு சொத்தில் இருந்து பயன்பெற்று வந்தால், வெளிநாட்டு வங்கி கணக்கில் கையெழுத்திடும் அதிகாரம் வைத்திருந்தால் நீங்கள் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
<h3>அதிக வெளிநாட்டு பயண செலவு</h3>
நீங்கள் ஒரு நிதியாண்டில் வெளிநாட்டு பயணத்திற்காக உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நீங்கள் ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளீர்கள் என்றால் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.
<h3>அதிக டிடிஎஸ் பிடித்தம்</h3>
உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டினால் அந்த நபர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
<ul>
 	<li>சாதாரண நபர் : ரூ.25,000</li>
 	<li>மூத்த குடிமக்கள் : ரூ.50,000</li>
</ul>
<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/deregulation-of-commercial-gas-cylinders-central-government-announced-87137.html">வணிக கேஸ் சிலிண்டர்கள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு!</a>
<h3>சேமிப்பு கணக்கில் அதிக தொகை இருப்பு</h3>
ஒருவர் ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளில் சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணம் இருப்பு வைத்திருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
<h3>நடப்பு கணக்கில் அதிக வைப்பு</h3>
வங்கிகளில் வழங்கப்படும் <strong>Current Account</strong>-ல் ரூ.1 கோடிக்கு மேல் பணம் வைத்திருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அந்த நபரின் வருமானம் குறைவாகவே இருந்தாலும் அவர் இத்தகைய சூழலில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
<h3>வணிக வருவாய்</h3>
நீங்கள் ஒரு தொழில் செய்பவராக இருந்து, உங்களது ஆண்டு வருமானம் ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/rbi-decision-digital-fraud-victims-to-get-compensation-up-to-rs-25000-87085.html">டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு – இந்திய ரிசர்வ் வங்கி முடிவு</a>
<h3>தொழில்முறை வருமானம்</h3>
மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள், ஃப்ரீலான்ஸர்கள் போன்ற தொழில் முறையினராக இருந்தால் உங்களது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயம்.
<h3>அதிக மின்சார கட்டணம்</h3>
ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் மின்சார கட்டணம் செலுத்துகிறார் என்றால் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டும்.
<h3>அடிப்படை வரி விலக்கு வரம்பை தாண்டுதல்</h3>
ஒருவருடைய மொத்த வருமானம் எந்த ஒரு முதலீட்டு விலக்குகளையும், அதாவது 80சி, 80டி போன்றவற்றை கழிப்பதற்கு முன்பு அரசாங்கள் நிர்ணயித்துள்ள அடிப்படை வரி விலக்கு வரம்பிற்கு மேல் இருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் கீழ் வரும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியம் என்பது குறிப்பிடத்தகது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>2 எம்எல்ஏகள் ராஜினமா&#8230; வெற்றி என் பொறுப்பு&#8230; விஜய் அளித்த உத்தரவாதம்   &#8211; வைகோ பரபரப்பு தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-promised-to-help-mdmk-win-two-assembly-seats-says-vaiko-87380.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 15:48:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-promised-to-help-mdmk-win-two-assembly-seats-says-vaiko-87380.html</guid>
		            
			

    	<description><![CDATA[திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக மதிமுக விலகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,  2 உறுப்பினர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார் என்று தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vaiko-about-cm-vijay-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="2 எம்எல்ஏகள் ராஜினமா&#8230; வெற்றி என் பொறுப்பு&#8230; விஜய் அளித்த உத்தரவாதம்   &#8211; வைகோ பரபரப்பு தகவல்" /></figure><strong>சென்னை, ஜூன் 27 :</strong> திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mlas-rajendran-and-senthil-selvan-have-boycotted-the-mdmk-general-council-meeting-87333.html" target="_blank" rel="noopener">மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்</a> கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-mp-wilson-has-accused-chief-minister-joseph-vijay-of-violating-the-oath-of-secrecy-87343.html" target="_blank" rel="noopener"> தவெக</a> கூட்டணியில் மதிமுக இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை உறுதிபடுத்தும் வகையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
<h3>திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?</h3>
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னை சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார். நேரம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் கூறினார். பாஜகவை எதிர்க்க தான் திமுகவை ஆதரித்தோம். ஆனால் ஈபிஎஸ்ஸை முதல்வராக்க திமுக முயற்சி செய்தது. இந்திய முஸ்லீம் லீக், விசிக ஆதரவு கொடுத்து அமைச்சர்கள் ஆனார்கள். நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் ஏன் எங்களை கேவலமாக பேசுனீர்கள் நாங்கள் என்ன செய்தோம்? கேட்டார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-mp-wilson-has-accused-chief-minister-joseph-vijay-of-violating-the-oath-of-secrecy-87343.html">முதல்வர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அந்த இருவர் யார்? வில்சன் எம்பி ஆவேசம்!</a></strong>

மேலும், 2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசி கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை என்று பேசினார்.
<h3>முதல்வர் விஜய் அளித்த உத்தரவாதம்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chennai, Tamil Nadu: A high-level committee meeting of the MDMK commenced at the party headquarters in Chennai. MDMK chief Vaiko and other leaders were present in the meeting. The two-day meeting will decide the alliance stance of the party. <a href="https://t.co/fQy6xkKF3C">pic.twitter.com/fQy6xkKF3C</a></p>
— ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2070427376987869675?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும்,  மதிமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினமா செய்யலாமே என த.வெ.க தரப்பில் பேசினர். ஆனால் நான் வாய்ப்பு இல்லை என கூறினேன். 2 உறுப்பினர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார் என்று தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/from-tamil-nadu-budget-consultations-to-free-travel-for-women-cm-vijays-series-initiatives-87340.html">தமிழக பட்ஜெட் ஆலோசனை முதல் மகளிர் இலவச பயணம் வரை.. முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்!!</a></strong>

தொடர்ந்து பேசிய அவர்,  பேசிய அவர், நான் முதல்வர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். பட்டினப்பாக்கம் இல்லத்தில் 1 மணிநேரம் 20 நிமிடம் அவரிடம் பேசினேன். உங்களின் 2 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்யும் பட்சத்தி மீண்டும் தேர்தல் வரும்போது, நீங்கள் எங்கு சொல்கிறீர்களோ, அங்கு வந்து பிரசாரம் செய்கிறேன்! என்று முதலமைச்சர் சொன்னார் என்று தெரிவித்தார்.

&nbsp;

&nbsp;

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தனது 50-வது படத்திற்காக மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/nivin-pauly-reunites-with-alphonse-puthren-for-his-50th-film-vijayam-87379.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 15:43:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/nivin-pauly-reunites-with-alphonse-puthren-for-his-50th-film-vijayam-87379.html</guid>
		            
			

    	<description><![CDATA[Actor Nivin Pauly 50th Movie Vijayam Update | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் 50-வது படமாக உருவாக உள்ள விஜயம் படம் குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vijayam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தனது 50-வது படத்திற்காக மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி" /></figure>மலையாள சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் நிவின் பாலி. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார். மேலும் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக தமிழ் மொழியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள மொழியில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் நிவின் பாலி கடந்த 21017-ம் ஆண்டு முதல் தமிழ்  மொழியிலும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி 2017-ம் ஆண்டு ரிச்சி என்ற படத்தில் நிவின் பாலி நடித்தார். அதனைத் தொடர்ந்து ஏழு கடல் ஏழு மலை மற்றும் பென்ஸ் ஆகிய தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகராக வலம் வரும் நிவின் பாலி அவ்வபோது படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் தற்போது அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் பெத்லகேம் குடும்ப யூனிட் என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது நிவின் பாலி நடிப்பில் உருவாக உள்ள அவரது 50-வது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.
<h3>மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி:</h3>
அதன்படி நடிகர் நிவின் பாலியின் 50-வது படத்திற்கு விஜயம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் எழுதி, இயக்குவது மட்டும் இன்றி எடிட்டிங் பணியையும் மேற்கொள்கிறார். மேலும் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வீடியோவைப் பார்க்கும் போது நடிகர் நிவின் பாலி ஒரு பைக் ரேஸராக நடித்து இருப்பது தெரிகிறது. இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/madonna-sebastian-and-sananth-reddys-love-triangular-hearting-movie-reviews-in-tamil-87175.html">Heartin: எதிர்பாராத டுவிஸ்ட்.. முக்கோண காதல் கதையில் ஒரு அழகான படம்.. மடோனா செபாஸ்டியனின் ஹார்டின் படம் எப்படி இருக்கு?</a></strong>
<h3>நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Every great ride begins with a little faith..and someone willing to take the first turn with you.
Back with the friend who started this journey with me.

Presenting the official first look poster in Malayalam , English and Tamil of <a href="https://x.com/hashtag/Vijayam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Vijayam</a>

A <a href="https://x.com/puthrenalphonse?ref_src=twsrc%5Etfw">@puthrenalphonse</a> Film❤️… <a href="https://t.co/UnOtscTbnB">pic.twitter.com/UnOtscTbnB</a></p>
— Nivin Pauly (@NivinOfficial) <a href="https://x.com/NivinOfficial/status/2070787609476186265?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/arjun-das-says-he-didnt-expect-director-lokesh-kanagaraj-to-act-in-his-films-87192.html">Arjun Das: லோகேஷ் அப்படி பண்ணுவாருனு நா சாத்தியமா எதிர்பாக்கல – அர்ஜுன் தாஸ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Mari Selvaraj: மஞ்சணத்தி படத்தில் எங்க அம்மா இருப்பாங்க.. இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்ந்த விஷயம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/director-mari-selvaraj-reveals-mothers-role-in-female-centric-film-manjanathi-87355.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 15:01:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/director-mari-selvaraj-reveals-mothers-role-in-female-centric-film-manjanathi-87355.html</guid>
		            
			

    	<description><![CDATA[Mari Selvarajs Female-Centric Storyline: தனது வித்தியாசமான திரைக்கதைகள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் தற்போது மஞ்சணத்தி என்ற புதிய திரைப்படமானது உருவாக காத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், மஞ்சணத்தி படம் குறித்து சுவாரஸ்ய அப்டேட்டை தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/mari-selvaraj-talks-manjanathi-movie.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Mari Selvaraj: மஞ்சணத்தி படத்தில் எங்க அம்மா இருப்பாங்க.. இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்ந்த விஷயம்!" /></figure>கடந்த 2018ம் ஆண்டில் வெளியான பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal) என்ற திரைப்படத்தின் மூலம், கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்தவர் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/director-mari-selvaraj-has-openly-stated-that-the-film-naangal-had-a-profound-impact-on-him-49051.html" target="_blank" rel="noopener">மாரி செல்வராஜ்</a></strong> (Mari Selvaraj). இவருக்கு இப்படமானது எதிர்ப்பாராத வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் சூப்பர் ஹிட்டிற்கு பின் தனுஷை (Dhanush) வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது, தொடர்ந்து மாமன்னன், வாழை மற்றும் பைசன் போன்ற படங்களை இயக்கி வெற்றி இயக்குநராக மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படங்களின் வரிசையாக தனது இயக்கத்தில், 6-வது உருவாகிவரும் புது படம்தான் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/director-mari-selvaraj-says-that-the-film-manjanathi-will-be-a-film-about-the-story-of-our-village-women-82284.html" target="_blank" rel="noopener">மஞ்சணத்தி</a> </strong>(Manjanathi).

இப்படமானது பெண்ணியம் சார்ந்த கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இதில் பிரியங்கா மோகன் (Priyanka Mohan) மற்றும் கயாடு லோஹர் (Kayadu Lohar) போன்ற நடிகைகள் இணைந்து நடிக்கிறார்கள். அந்த வகையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், மஞ்சணத்தி படம் குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/silambarasans-arasan-movie-big-schedule-wrapped-and-movie-team-celebration-video-goes-viral-87324.html" target="_blank" rel="noopener">ஒரு ராஜ்யம் தயாராகி வருகிறது… அரசன் படத்தின் பெரிய ஷெடியூலை முடித்த படக்குழு</a>
</strong>
<h3>மஞ்சணத்தி திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய விஷயம்:</h3>
அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், "மஞ்சணத்தி படத்தில் எனது அம்மா இருப்பாங்க" என அவர் கூறியிருக்கிறார். இவர் இதுவரை இயக்கியிருந்த பரியேறும் பெருமாள், மாமன்னன், பைசன் போன்ற திரைப்படங்களில் தனது தந்தையை நினைவுபடுத்தும் வகையில், ஹீரோக்களின் அப்பாவின் கதாபாத்திரங்களை மாரி செல்வராஜ் சித்தரித்திருந்தார். அதுபோல, மஞ்சணத்தி படத்தில் தனது தாயின் கதாபாத்திரத்தை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த தகவல் அவரின் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
<h3>மஞ்சணத்தி படம் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல் குறித்த வீடியோ பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Dir <a href="https://x.com/hashtag/MariSelvaraj?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MariSelvaraj</a>:
- The father characters in Pariyerum Perumal, Karnan, and Maamannan all remind me of my father.
- Among them, I feel the deepest connection with the father character in Pariyerum Perumal.<a href="https://x.com/hashtag/D56?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#D56</a><a href="https://t.co/Si0Mt9wh45">pic.twitter.com/Si0Mt9wh45</a></p>
— Movie Tamil (@_MovieTamil) <a href="https://x.com/_MovieTamil/status/2070570703850774554?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

மாரி செல்வராஜ் தொடர்ந்து ஆண்களை மையமாக கொண்ட திரைப்படங்களை இயக்கிவருகிறார். இந்நிலையில் இதற்கு மாற்றாக இவர் இயக்கிவரும் புதிய திரைப்படம்தான் மஞ்சணத்தி. இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் போன்ற பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளார்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-meenakshi-chaudhary-is-on-board-in-rajinikanths-dharman-movie-87336.html" target="_blank" rel="noopener">ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகை? வைரலாகும் தகவல்</a>
</strong>

இப்படமானது பெண்ணியம் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவரும் நிலையில், இதில் இசைஞானி இளையராஜா இசையமைத்துவருகிறார். மேலும் இப்படமானது 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-thrice-within-24-hours-from-june-26-2026-to-june-27-2026-87368.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 14:55:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-thrice-within-24-hours-from-june-26-2026-to-june-27-2026-87368.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Increased Thrice Within 24 Hours | ஜூன் மாதம் முதல் கடும் சரிவை சந்தித்து வந்த தங்கம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று முறை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை திடீர் உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-8-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!" /></figure>2026, ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை<strong> (Gold Price)</strong> கடும் சரிவை சந்தித்து வந்தது. இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் தங்கம் விலை ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் விலை தற்போது டிவிஸ்ட் அடித்துள்ளது. அதாவது, நேற்று (ஜூன் 26, 2026) முதல் இன்று (ஜூன் 27, 2026) வரை மொத்தம் மூன்று முறை தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த தங்கம் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திடீர் தங்கம் விலை உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>டிவிஸ்ட் அடித்த தங்கம் - திடீர் விலை உயர்வு</h3>
ஈரான் போர் <strong>(Iran War)</strong> காரணமாக கடந்த சில மாதங்களாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், ஜூன் மாதம் தொடங்கியது முதலே கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. அதாவது ஜுன் 20, 2026 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் தங்கம் விலை 6 சதவீதம் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் தங்கம் விலை மேலும் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான், பொதுமக்களுக்கு தங்கம் ஷாக் கொடுத்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/rbi-decision-digital-fraud-victims-to-get-compensation-up-to-rs-25000-87085.html">டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு – இந்திய ரிசர்வ் வங்கி முடிவு</a>
<h3>24 மணி நேரத்தில் மூன்று முறை உயர்வை சந்தித்த தங்கம்</h3>
சென்னையில் நேற்று (ஜூன் 26, 2026) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்வை சந்தித்தது. அதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு மாலையில் தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று ஒரு நாள் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்வை சந்தித்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/from-june-26-to-28-will-banks-have-three-days-continuous-holidays-86944.html">ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?</a>
<h3>இன்று மீண்டும் உயர்வை சந்தித்த தங்கம்</h3>
தங்கம் இன்று (ஜூன் 27, 2026) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/education-minister-rajmohan-clarifies-id-card-caste-name-row-87369.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 14:48:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/education-minister-rajmohan-clarifies-id-card-caste-name-row-87369.html</guid>
		            
			

    	<description><![CDATA[அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது, அடையாள அட்டையில் மாணவர்களின் சாதி விவரம் டிஜிட்டல் முறையில் ஒன்றாக இணைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அது அவரது கருத்து சர்ச்சையான நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/rajmohan-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்" /></figure><strong>சென்னை, ஜூன் 27 :</strong> தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் சாதி விவரங்களை உள்ளடக்கிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/id-cards-for-school-students-to-include-caste-details-minister-sengottaiyans-announcement-sparks-strong-opposition-87281.html" target="_blank" rel="noopener">செங்கோட்டையன்</a> தெரிவித்திருந்தார். மேலும், முதல்வர் விஜய்யின் உத்தரவின்பேரில் இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
<h3>அடையாள அட்டையில் சாதிப் பெயர்?</h3>
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது, பள்ளிக்குச் செல்லும் மாணவக் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் உயர் கல்வி மற்றும் இதர தேவைகளுக்காகப் புதியதாகச் சாதிச் சான்றிதழ் வாங்குவதில் உள்ள நடைமுறைச் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக அரசு புதிய மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்து வருகிறது என்றார். இதன் முதற்கட்டமாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/from-tamil-nadu-budget-consultations-to-free-travel-for-women-cm-vijays-series-initiatives-87340.html">தமிழக பட்ஜெட் ஆலோசனை முதல் மகளிர் இலவச பயணம் வரை.. முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்!!</a></strong>

இந்த அடையாள அட்டையில் மாணவர்களின் மாணவரின் தற்போதைய முகவரி, சாதி விவரம், இரத்த வகை, ஆதார் அட்டை எண் தொலைபேசி எண் ஆகிய முக்கிய விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஒன்றாக இணைக்கப்படும். இந்த விவரங்கள் அனைத்தும் அட்டையில் இணைக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் எளிதாகத் தங்களின் விவரங்களைப் பயன்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அடையாள அட்டையில் மாணவர்களின் மாணவரின் தற்போதைய முகவரி, சாதி விவரம், இரத்த வகை, ஆதார் அட்டை எண் தொலைபேசி எண் ஆகிய முக்கிய விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஒன்றாக இணைக்கப்படும். இந்த விவரங்கள் அனைத்தும் அட்டையில் இணைக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் எளிதாகத் தங்களின் விவரங்களைப் பயன்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mlas-rajendran-and-senthil-selvan-have-boycotted-the-mdmk-general-council-meeting-87333.html"> மதிமுக பொதுக்குழு கூட்டம்.. டிமிக்கி கொடுத்த இரு எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் வைகோ-துரை வைகோ!</a></strong>

இந்த நிலையில் தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அமைச்சரின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளத்துடன் கடிய அடையாள அட்டை வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது. மாணவர்களின் ரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூக நீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதி சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>FIFA World Cup 2026: நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற உலகின் மிகச்சிறிய நாடு.. வரலாறு படைத்த கேப் வெர்டே!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/2026-fifa-world-cup-cape-verde-made-history-by-becoming-smallest-nation-in-world-to-qualify-for-knockout-stage-87361.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 14:44:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/2026-fifa-world-cup-cape-verde-made-history-by-becoming-smallest-nation-in-world-to-qualify-for-knockout-stage-87361.html</guid>
		            
			

    	<description><![CDATA[Cape Verde: தனது முதல் ஃபிஃபா உலகக் கோப்பையில் போட்டியிட்ட கேப் வெர்டே, மிகவும் கடினமான ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தாலும், ஒருபோதும் மனம் தளரவில்லை. முதல் போட்டியில், 2010 உலக சாம்பியனான ஸ்பெயினை 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. பின்னர், 2 முறை உலக சாம்பியனான உருகுவேயுடன் 2-2 என்ற பரபரப்பான சமன் ஆட்டத்தில் விளையாடியது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/cape-verde-history.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="FIFA World Cup 2026: நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற உலகின் மிகச்சிறிய நாடு.. வரலாறு படைத்த கேப் வெர்டே!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/sports/nepal-football-team-banned-from-fifa-world-cup-2026-86946.html">2026 ஃபிஃபா உலகக் கோப்பையில்</a> <strong>(FIFA World Cup 2026)</strong> சிறிய நாடான <a href="https://www.tv9tamilnews.com/sports/fifa-world-cup-2026-cape-verde-goal-keeper-vozinha-wins-fifa-man-of-the-match-award-cape-verde-vs-spain-85223.html">கேப் வெர்டே</a> <strong>(Cape Verde)</strong> தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சரித்திரம் படைத்துள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள, சுமார் 5,50,000 மக்கள்தொகை கொண்ட இந்தச் சிறிய நாடு, சவூதி அரேபியாவுக்கு எதிராக 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் , உலகக் கோப்பை வரலாற்றில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய மிகச்சிறிய நாடு என்ற பெருமையை கேப் வெர்டே பெற்றுள்ளது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/fifa-world-cup-2026-cape-verde-goal-keeper-vozinha-wins-fifa-man-of-the-match-award-cape-verde-vs-spain-85223.html">40 வயதில் ஸ்பெயினுக்கு எதிரான நங்கூரம்.. ஒரே நாளில் ஹீரோவான கேப் வெர்டே கோல் கீப்பர்!</a>
<h3>தோல்வியடையாமல் ஹெவிவெயிட் பிரிவில் கேப் வெர்டே:</h3>
தனது முதல் ஃபிஃபா உலகக் கோப்பையில் போட்டியிட்ட கேப் வெர்டே, மிகவும் கடினமான ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தாலும், ஒருபோதும் மனம் தளரவில்லை. முதல் போட்டியில், 2010 உலக சாம்பியனான ஸ்பெயினை 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. பின்னர், 2 முறை உலக சாம்பியனான உருகுவேயுடன் 2-2 என்ற பரபரப்பான சமன் ஆட்டத்தில் விளையாடியது. 3வது போட்டியில், சவுதி அரேபியா கோல் அடிக்க வாய்ப்பளிக்காமல், 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்து 3 புள்ளிகளைப் பெற்று, குழுவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதற்கிடையில், ஸ்பெயின் உருகுவேயை வீழ்த்தி குழுவில் முதலிடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில், கேப் வெர்டே ஒரு லீக் சுற்றில் ஒரு தோல்வியை சந்திக்காமல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
<h3>காலிறுதியில் கேப் வெர்டே யாரை எதிர்கொள்கிறது..?</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Cape Verde celebrate history. 🇨🇻

Fans and players together after sealing a historic knockout qualification on their World Cup debut.

Pure emotion. ❤️<a href="https://x.com/hashtag/WorldCupwithMicky?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WorldCupwithMicky</a><a href="https://x.com/hashtag/CapeVerde?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CapeVerde</a> <a href="https://t.co/lHSmGwh9eC">pic.twitter.com/lHSmGwh9eC</a></p>
— Micky Jnr (@MickyJnr__) <a href="https://x.com/MickyJnr__/status/2070700093859082512?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கேப் வெர்டேயின் அடுத்த சவாலாக, நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த காலிறுதி போட்டி வருகின்ற 2026 ஜூலை 3ம் தேதி மியாமியில் நடைபெறும். இந்தப் போட்டியில் கேப் வெர்டே ஒரு அதிர்ச்சி வெற்றியைப் பதிவுசெய்தால், ஃபிஃபா உலகக் கோப்பையில் மிகப்பெரிய வரலாறு மாறும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/nepal-football-team-banned-from-fifa-world-cup-2026-86946.html">விதிகளை மீறிய நேபாள கால்பந்து அணி.. இடைநீக்கம் செய்த ஃபிஃபா.. காரணம் என்ன?</a>
<h3>கேப் வெர்டேவின் வெற்றி பயணத்திற்கு யார் காரணம்..?</h3>
40 வயதான கோல்கீப்பர் வோஜின்ஹா, கேப் வெர்டேயின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். போட்டித்தொடர் முழுவதும் அவரது சிறப்பான ஆட்டங்கள் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில், 3 அற்புதமான தடுப்புகளின் மூலம் அவர் தனது அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். முதல் பாதியின் கூடுதல் நேரத்தில், முகமது கன்னோவின் தலையால் முட்டியே பந்தை தடுத்தார். பின்னர், 2ம் பாதியில், முகமது அபு அல்-ஷமாத்தின் அபாயகரமான ஷாட்டை வோஜின்ஹா திறமையாகத் தடுத்தார். 92-வது நிமிடத்தில், அப்துல்லா அல்-ஹம்தானின் கச்சிதமான தடுப்பிலிருந்து கேப் வெர்டே அணியையே காப்பாற்றினார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோலிவுட் முதல் பாலிவுட் வரை&#8230; பாக்யராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/celebrities-from-kollywood-to-bollywood-express-condolences-over-bhagyarajs-passing-87349.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 14:26:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/celebrities-from-kollywood-to-bollywood-express-condolences-over-bhagyarajs-passing-87349.html</guid>
		            
			

    	<description><![CDATA[Celebrities express condolences over Bhagyarajs passing | பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த கே. பாக்யராஜ் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/bhagyaraj-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோலிவுட் முதல் பாலிவுட் வரை&#8230; பாக்யராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்" /></figure>தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி பிறகு இந்தி மொழிகளிலும் படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/a-look-at-the-journey-of-k-bhagyaraj-achieving-success-in-both-acting-and-directing-87318.html" target="_blank" rel="noopener">கே. பாக்யராஜ்</a>. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வந்த இவர் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து உள்ளார். தனது வித்யாசனமான திரைக்கதையின் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான பாக்யராஜ் ரசிகர்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையேயும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று உள்ளார். தொடர்ந்து பல பிரபலங்களை இந்த திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்த கே பாக்யராஜ் இன்று தனது 73-வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு அவரது குடும்பம் மற்றும் திரையுலகினரை மட்டும் இன்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாக்யராஜின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கல் பதிவை வெளியிட்டு வருகின்றனர். அதனை தற்போது பார்க்கலாம்.
<h3>நடிகரும் முதலமைச்சருமான விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தி:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.</p>
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த… <a href="https://t.co/Nun0KZ3biV">pic.twitter.com/Nun0KZ3biV</a>

— CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2070752120664703378?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
<h3>இயக்குநர் மோகன்ராஜா வெளியிட்ட இரங்கல் பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">My ‘manaseega guru’ K. Bhagyaraj sir.</p>
To audiences he introduced the word SCREENPLAY.
To the industry he taught its worth.

Can’t believe the man who breathed cinema is breathless now.

His inspiration lives on.

Deepest condolences to brother <a href="https://x.com/imKBRshanthnu?ref_src=twsrc%5Etfw">@imKBRshanthnu</a> and family

Rest… <a href="https://t.co/pNc1kLH0zy">pic.twitter.com/pNc1kLH0zy</a>

— Mohan Raja (@jayam_mohanraja) <a href="https://x.com/jayam_mohanraja/status/2070784970931704215?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

எனது மானசீக குரு கே. ​​பாக்யராஜ் சார். திரைக்கதைஎன்ற வார்த்தையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே; அதன் முக்கியத்துவத்தை திரைத்துறைக்குக் கற்றுக்கொடுத்தவரும் அவரே. சினிமாவையே தன் மூச்சாகக் கொண்டிருந்தவர் இன்று மூச்சற்றுப் போனார் என்பதை நம்பவே முடியவில்லை. ஆனால், அவர் அளித்த உத்வேகம் என்றும் நிலைத்திருக்கும். சகோதரர் சாந்தனு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
<h3>இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட இரங்கல் பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The master of screenplay. One of the greatest storytellers Indian cinema has ever witnessed and an inspiration to every screenwriter. Can’t believe you’re no more. Deepest condolences to your family and friends. Rest in peace <a href="https://x.com/hashtag/KBhagyaraj?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KBhagyaraj</a> saar🙏🏽🙏🏽🙏🏽 sorry for ur loss bro… <a href="https://t.co/PFaEcbe9e9">pic.twitter.com/PFaEcbe9e9</a></p>
— venkat prabhu (@vp_offl) <a href="https://x.com/vp_offl/status/2070757125131997233?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

திரைக்கதை அமைப்பதில் ஒரு மேதை. இந்தியத் திரையுலகம் கண்ட மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவராகவும், ஒவ்வொரு திரைக்கதை எழுத்தாளருக்கும் ஒரு உத்வேகமாகவும் திகழ்ந்தவர். நீங்கள் இனி இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். கே. பாக்யராஜ் சார், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் இழப்பிற்கு வருந்துகிறேன் சகோதரா.
சாந்தனு.
<h3>கமல் ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தி:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.</p>
— Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://x.com/ikamalhaasan/status/2070770224023101906?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/celebrities-gathered-at-the-wedding-of-the-eldest-daughter-of-the-sundar-c-khushbu-couple-87166.html">சுந்தர் சி – குஷ்பூ தம்பதியின் மூத்த மகள் திருமணம்… ஒன்று கூடிய பிரபலங்கள்</a></strong>
<h3>மம்முட்டி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="hu">RIP Bhagyaraj. Heartfelt condolences. <a href="https://t.co/HhoTlxw3XY">pic.twitter.com/HhoTlxw3XY</a></p>
— Mammootty (@mammukka) <a href="https://x.com/mammukka/status/2070781786368745883?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

ஆர்ஐபி பாக்யராஜ். இதயப்பூர்வமான இரங்கல்கள்.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/aishwarya-lekshmi-said-not-everyone-is-rashmika-mandanna-87184.html">அந்த நடிகை மாதிரி என்னால் ஒருநாளும் செய்ய முடியாது – நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நெஞ்செரிச்சலுக்கு குட்பை சொல்லும் மேஜிக் திரவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/the-amazing-health-benefits-and-uses-of-buttermilk-87358.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 14:20:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/the-amazing-health-benefits-and-uses-of-buttermilk-87358.html</guid>
		            
			    	<description><![CDATA[Uses of Buttermilk: மோர் என்பது உடலின் உஷ்ணத்தைக் குறைத்து நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் ஒரு சிறந்த இயற்கை பானமாகும். இது கோடைக் காலத்தில் கண்களிலும் தோலிலும் ஏற்படும் எரிச்சலை நீக்கி உடனடியாகக் குளிர்ச்சியைத் தரவல்லது. மேலும் அசிடிட்டி மற்றும் செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்த மிளகு, சீரகத்துடன் மோரைச் சேர்த்துக் குடிக்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/the-amazing-health-benefits-and-uses-of-buttermilk-87358.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gallery-tv9-45-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (45)" /></a></dt><p>மோர் என்பது நமது உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த ஆரோக்கியமான இயற்கை உணவாகக் கருதப்படுகிறது. இந்த மோருடன் தேவையான அளவு உப்பு, சர்க்கரை மற்றும் புதினா போன்றவற்றைச் சேர்த்துக் குடிப்பதன் மூலம் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன.
இவ்வாறு தொடர்ந்து பருகுவதால் கோடை காலத்தில் ஏற்படும் ஆபத்தான நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் முழுமையாகத் தவிர்க்கப்படுகின்றன.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/the-amazing-health-benefits-and-uses-of-buttermilk-87358.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gallery-tv9-46-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (46)" /></a></dt><p>கோடை காலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தின் காரணமாகப் பல நேரங்களில் நம்முடைய கண்களில் கடுமையான எரிச்சல் உணர்வு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். அத்தகைய அசௌகரியமான நேரங்களில் ஒரு கிளாஸ் குளிர்ந்த மோரைக் குடிப்பதால் நம்முடைய உடலுக்கு உள்ளிருந்து மிகச் சிறந்த குளிர்ச்சித் தன்மை உடனடியாகக் கிடைக்கிறது. இந்த குளிர்ச்சியானது கண்களில் ஏற்படும் எரிச்சலை முழுமையாக நீக்குவதுடன் ஒட்டுமொத்தக் கண்களுக்கும் நல்ல ஓய்வையும் நிம்மதியையும் தரக்கூடிய ஒரு எளிய வழியாக அமைகிறது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/the-amazing-health-benefits-and-uses-of-buttermilk-87358.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gallery-tv9-47-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (47)" /></a></dt><p>கண்களைப் போலவே சில மனிதர்களுக்கு வெயில் மற்றும் உடல் சூட்டின் காரணமாகத் தங்களின் சருமத்தில் ஒருவித எரிச்சல் உணர்வு அடிக்கடி ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட சரும எரிச்சல் ஏற்படும் சமயங்களில் சிறிதளவு மோரை எடுத்துப் பாதிப்பு உள்ள தோலின் மேற்பரப்பில் நன்றாகத் தடவி வர வேண்டும்.
இவ்வாறு மோரைச் சருமத்தில் தடவுவதன் மூலம் தோலில் உள்ள எரிச்சல் நீங்கி உடனடியாக ஒரு மிகச்சிறந்த நிவாரணமும் குளிர்ச்சியும் நமக்குக் கிடைக்கிறது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/the-amazing-health-benefits-and-uses-of-buttermilk-87358.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gallery-tv9-44-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (44)" /></a></dt><p>நாம் அன்றாட வாழ்வில் உண்ணும் சில ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை பிரச்சனை இப்போது பலருக்கும் பொதுவானதாகிவிட்டது. குறிப்பாகக் கோடை காலங்களில் நாம் வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாக உணவைச் சாப்பிட்டாலும் உடலில் உடனடியாக அமிலத்தன்மை அதிகரித்து அசிடிட்டி ஏற்பட்டு விடுகிறது. மோர் என்பது இந்த அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு மிகச்சிறந்த இயற்கை அரும்மருந்தாகக் கருதப்படுகிறது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/the-amazing-health-benefits-and-uses-of-buttermilk-87358.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gallery-tv9-43-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (43)" /></a></dt><p>உடலில் அசிடிட்டி ஏற்படும் நேரங்களில் மோருடன் கொஞ்சம் கல் உப்பு, கருப்புமிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றைக் கலந்து நன்றாகக் குடிக்க வேண்டும். இவற்றைச் சேர்த்துக் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள அமிலத்தன்மை மிக விரைவாகக் காணாமல் போய் உடல் பழையபடி ஆரோக்கியமடையும். இத்தகைய அற்புதமான மருத்துவக் குணங்கள் மோரில் நிறைந்துள்ளதால் தான் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் மதிய வேளையில் மோர் குடிக்க வேண்டும்.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>மாதம் ரூ.8,000 வட்டி ஆசைவார்த்தை.. திருப்பூரில் ரூ.5.5 கோடி சுருட்டிய தம்பதி.. சொந்த குடும்பமும் ஏமாந்த அதிர்ச்சி!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/lured-by-the-promise-of-rs-8000-monthly-interest-a-couple-swindles-5-5-crore-a-scam-that-has-rocked-tiruppur-87359.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 14:19:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/lured-by-the-promise-of-rs-8000-monthly-interest-a-couple-swindles-5-5-crore-a-scam-that-has-rocked-tiruppur-87359.html</guid>
		            
			

    	<description><![CDATA[இவர்களின் பேச்சை நம்பி முதலில் ரூ.50,000, ரூ.1 லட்சம் எனப் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் வட்டிப் பணமாக தலா ரூ.8,000 கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள், தங்களது வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்தும், நிலப் பத்திரங்களை கொடுத்தும் கூடுதல் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tiruppur-scam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மாதம் ரூ.8,000 வட்டி ஆசைவார்த்தை.. திருப்பூரில் ரூ.5.5 கோடி சுருட்டிய தம்பதி.. சொந்த குடும்பமும் ஏமாந்த அதிர்ச்சி!!" /></figure><strong>திருப்பூர், ஜுன் 27:</strong> அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 5.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் தம்பதியினர் தங்களது சொந்த குடும்பத்தினரையே ஏமாற்றியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி ஜெயசுகன்யா. இவர் திருப்பூரில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதாகக் கூறி, அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்களிடமும் பழகியுள்ளார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-vijayalakshmi-inspected-the-dye-factories-that-had-been-sealed-in-namakkal-87282.html" target="_blank" rel="noopener">பெண் அமைச்சரின் நள்ளிரவு ரெய்டு.. “சீல்” உடைத்து இயங்கிய 2 ஆலைகள்.. கலகலத்துபோன உரிமையாளர்கள்!</a></strong>
<h3>லோன் எடுத்து தருவதாக ஆசைவார்த்தை:</h3>
தங்கள் நிறுவனம் மூலம் லோன் (கடன்) வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்து ஆவணங்களைப் பெற்றுள்ளார். அந்த ஆவணங்களை வைத்து தனியார் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பெயரிலேயே ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லோன் எடுத்துள்ளார். பின்னர் அந்தப் பணத்தை வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 8,000 ரூபாய் வட்டி கிடைக்கும் என்றும், நீண்ட கால முதலீடாக வைக்கும் போது அந்தத் தொகை மூன்று மடங்காகத் திருப்பித் தரப்படும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
<h3>நகைகளை அடகு வைத்து ஏமாந்த பொதுமக்கள்:</h3>
இவர்களின் பேச்சை நம்பி முதலில் ரூ.50,000, ரூ.1 லட்சம் எனப் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் வட்டிப் பணமாக தலா ரூ.8,000 கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள், தங்களது வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்தும், நிலப் பத்திரங்களை கொடுத்தும் கூடுதல் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, வங்கி ஜப்தி செய்த ஒரு வீட்டை காட்டி, "2 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீட்டை ரூ.90 லட்சத்திற்கு முடித்துத் தருகிறேன்" என்று கூறி ஒரு பெண்ணிடம் மட்டும் சுமார் ரூ.70 லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து சுமார் ஐந்தரை கோடி ரூபாய் வரை இந்த தம்பதி சுருட்டியுள்ளது.
<h3>சொந்தக் குடும்பத்தையே விட்டுவைக்காத கொடுமை:</h3>
இந்த மோசடியில் தம்பதியினர் தங்களது சொந்தக் குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் விஜயகுமாரின் உடன் பிறந்த தங்கையிடம், மூன்று மடங்காகத் தருவதாகக் கூறி ஜெயசுகன்யா ரூ.25 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து கண்ணீருடன் பேசிய பாதிக்கப்பட்ட தங்கை, "எனக்குத் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, குழந்தைக்கு உடல்நலக் குறைவு (Wheezing) உள்ளது. வேலைக்குப் போக வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி என் அண்ணியும் அண்ணனும் ஏமாற்றிவிட்டனர். என்னையும் ஏமாற்றிவிட்டு, எனது வயதான தாயிடமிருந்தும் 13 லட்சம் ரூபாயை அண்ணனே ஏமாற்றி வாங்கியுள்ளார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/ramanathapuram-controversy-arose-after-the-driver-and-conductor-stopped-the-bus-and-went-to-have-a-meal-87338.html" target="_blank" rel="noopener">கல்யாண வீட்டில் ஸ்டாப்.. விருந்தில் பங்கேற்க சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்.. பின்னாடியே வந்த ஆப்பு!</a></strong>
<h3>தம்பதி கைது - கமிஷனரிடம் மனு:</h3>
கடந்த இரண்டு வருடங்களாக இந்த மோசடி அரங்கேறி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் தம்பதியின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால், பணத்தைத் திருப்பித் தருவது குறித்து ஜெயசுகன்யா எவ்வித பதிலும் கூறவில்லை.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கடந்த வாரம் விஜயகுமார் மற்றும் ஜெயசுகன்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து, தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>செஷெல்ஸ் பயணத்தில் அரிய சந்திப்பு&#8230; உலகின் மூத்த ஆமையை பார்க்கும் பிரதமர் மோடி</title>
		<link>https://www.tv9tamilnews.com/world/pm-narendra-modi-to-begin-three-day-seychelles-visit-today-national-day-celebrations-and-meetup-with-worlds-oldest-animal-87354.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 14:13:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/world/pm-narendra-modi-to-begin-three-day-seychelles-visit-today-national-day-celebrations-and-meetup-with-worlds-oldest-animal-87354.html</guid>
		            
			

    	<description><![CDATA[பிரதமர் மோடியின் இந்தப் பயணம் இந்தியா - செஷெல்ஸ் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என செஷெல்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பாரி ஃபோர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு (Cyber Security), பரஸ்பர சட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/pm-s.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="செஷெல்ஸ் பயணத்தில் அரிய சந்திப்பு&#8230; உலகின் மூத்த ஆமையை பார்க்கும் பிரதமர் மோடி" /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="" data-turn-id-container="request-WEB:f315c786-e220-4a98-82d3-37d1efd6a71c-11" data-is-intersecting="true"><section class="text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:f315c786-e220-4a98-82d3-37d1efd6a71c-11" data-turn-id-container="request-WEB:f315c786-e220-4a98-82d3-37d1efd6a71c-11" data-testid="conversation-turn-24" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn" data-conversation-screenshot-content="">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="cffd140e-f51a-403f-a11b-1c36a5c18531" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p class="PDq2pG_selectionAnchorContainer" data-start="100" data-end="304"><strong>ஜூன் 27, 2026:</strong> இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 27 முதல் 29 வரை நடைபெறும் தனது செஷெல்ஸ் பயணத்தின் போது, உலகின் மிக வயதான நில வாழ் உயிரினமாகக் கருதப்படும் 'ஜோனதன்' என்ற ஆமையை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செஷெல்ஸ் அதிபர் பாட்ரிக் ஹெர்மினியின் அழைப்பின் பேரில், அந்நாட்டின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக செஷெல்ஸ் செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, செஷெல்ஸ் தேசிய தாவரவியல் பூங்காவிற்கும் அவர் செல்ல உள்ளார். அங்கு நினைவாக ஒரு மரக்கன்றையும் நட உள்ளார்.</p>

<h3 data-section-id="vu9x1p" data-start="639" data-end="664"><span role="text">யார் இந்த ஜோனதன்?</span></h3>
<p data-start="666" data-end="887">உலகின் மிக வயதான நில வாழ் உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'ஜோனதன்' என்ற மாபெரும் ஆமை, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயிண்ட் ஹெலினா தீவில் வசித்து வருகிறது. இதன் வயது சுமார் 193 என மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p data-start="889" data-end="1028">1882-ஆம் ஆண்டு, பரிசாக செயிண்ட் ஹெலினா தீவுக்கு கொண்டு வரப்பட்ட ஜோனதன், அன்றிலிருந்து அங்குள்ள ஆளுநர் மாளிகை வளாகத்திலேயே வசித்து வருகிறது.</p>
<p data-start="1030" data-end="1353">உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் உலக சாதனை (Guinness World Records), ஜோனதனை ஒரு "சின்னம்" (Icon) என அங்கீகரித்துள்ளது. வயது முதிர்ந்திருந்தாலும், நல்ல உடல்நிலையுடனும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடனும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முதுமை காரணமாக அதற்கு மோப்ப சக்தி (மணம் அறியும் திறன்) குறைந்துள்ளது.</p>
<p data-start="1355" data-end="1533">மேலும், மனிதர்களின் செல்களைப் போல இல்லாமல், ஜோனதனின் உடல் செல்கள் எளிதில் மாற்றமடைவதில்லை என்பதால், அதன் டி.என்.ஏ. குறித்து தற்போது ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p data-start="1535" data-end="1757">சமீபத்தில் ஜோனதன் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால், அந்த தகவலை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் மறுத்ததுடன், ஆளுநர் மாளிகை தோட்டத்தில் மேலும் மூன்று ஆமைகளுடன் ஜோனதன் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தது.</p>

<h3 data-section-id="crd53b" data-start="1759" data-end="1808"><span role="text">இந்தியா - செஷெல்ஸ் உறவு மேலும் வலுப்படும்:</span></h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Leaving for Seychelles, where I will take part in their National Day celebrations. This year, it is even more special because it is the Golden Jubilee celebrations.

Seychelles is a valued maritime neighbour and a key partner in our Vision MAHASAGAR, as well as in advancing the…</p>
— Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2070714406976295115?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<p data-start="1810" data-end="1970">பிரதமர் மோடியின் இந்தப் பயணம் இந்தியா - செஷெல்ஸ் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என செஷெல்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பாரி ஃபோர் தெரிவித்துள்ளார்.</p>
<p data-start="1972" data-end="2209">குறிப்பாக, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு (Cyber Security), பரஸ்பர சட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p data-start="2211" data-end="2449">இந்தியாவின் 'விஷன் மகாசாகர்' (Vision MAHASAGAR) திட்டத்தில் செஷெல்ஸ் முக்கிய கடல்சார் கூட்டாளியாக இருப்பதாகவும், உலக தெற்கு நாடுகளின் (Global South) முன்னேற்றத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p data-start="2451" data-end="2657" data-is-last-node="" data-is-only-node="">மேலும், இரு நாடுகளின் மக்களின் முன்னேற்றம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளமான வளர்ச்சிக்காக இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section></div>
</div>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/mdmk-withdraws-from-dmk-alliance-bold-resolution-passed-at-general-council-meeting-87351.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 14:02:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/mdmk-withdraws-from-dmk-alliance-bold-resolution-passed-at-general-council-meeting-87351.html</guid>
		            
			

    	<description><![CDATA[தேர்தல் தோல்வியால் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதலே திமுகவின் கூட்டணிக்குள் சலசலப்புகள் நிலவி வந்தன. தற்போது தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றாகக் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறி வரும் வரிசையில், வைகோ தலைமையிலான மதிமுகவும் வெளியேறியிருப்பது திமுக தலைமைக்குப் பெரும் பின்னடைவாகவும், பேரதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/mdmk-vaiko.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!!" /></figure><strong>சென்னை, ஜுன் 27:</strong> தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mlas-rajendran-and-senthil-selvan-have-boycotted-the-mdmk-general-council-meeting-87333.html" target="_blank" rel="noopener">மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்</a> (மதிமுக) அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வரும் நிலையில், மதிமுகவின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/after-finance-and-electricity-a-white-paper-for-agriculture-sector-too-tvk-govts-next-bold-move-87316.html">நிதி, மின்சாரத்தைத் தொடர்ந்து வேளாண் துறையிலும் ‘வெள்ளை அறிக்கை’.. தவெக அரசின் அடுத்த அதிரடி!!</a></strong>
<h3>பொதுக்குழுவில் அதிரடி முடிவு:</h3>
திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்துக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முறைப்படி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று மதிமுகவின் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில், மிக முக்கிய முதல் தீர்மானமாக திமுக கூட்டணியில் இருந்து மதிமுக முற்றிலும் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
<h3>கூட்டணி முறிவுக்கு மதிமுக கூறும் காரணங்கள் என்ன?</h3>
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்த மதிமுக, உதயசூரியன் சின்னத்திலேயே களம் கண்டது. அந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. எனினும், ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்து ஆட்சிப் பொறுப்பை இழந்தது.

இன்றைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இதற்கான காரணங்கள் குறித்து மதிமுக விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. கடந்த தேர்தலில் மக்கள் தங்களது கூட்டணிக்குப் போதிய அளவு வாக்குகள் அளிக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே தமிழக வெற்றிக்கழகம் (தவெக) புதிய ஆட்சி அமைக்கக்கூடிய அரசியல் சூழல் தமிழகத்தில் உருவானது என்றும் மதிமுக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தேர்தல் தோல்விக்குப் பிந்தைய தற்போதைய காலகட்டத்தில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு உரிய அங்கீகாரமும், முறையான மரியாதையும் வழங்கப்படவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டையும் கட்சித் தலைமை முன்வைத்துள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-conflicting-voices-within-the-dmk-m-k-stalin-deeply-deliberating-on-the-by-election-arena-87302.html">திமுகவுக்குள் ஒலிக்கும் இருவேறு குரல்கள்.. இடைத்தேர்தல் களம் குறித்து தீவிர யோசனையில் மு.க.ஸ்டாலின்!</a></strong>
<h3>திமுக முகாமிற்கு அடுத்தடுத்துப் பேரிடி:</h3>
தேர்தல் தோல்வியால் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதலே திமுகவின் கூட்டணிக்குள் சலசலப்புகள் நிலவி வந்தன. தற்போது தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றாகக் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறி வரும் வரிசையில், வைகோ தலைமையிலான மதிமுகவும் வெளியேறியிருப்பது திமுக தலைமைக்குப் பெரும் பின்னடைவாகவும், பேரதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த இந்த இரு கட்சிகளின் கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளதால், மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் தொற்றிக்கொண்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோவையில் கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/acting-on-information-regarding-the-illegal-transport-of-gravel-soil-in-coimbatore-district-the-police-conducted-intensive-vehicle-checks-throughout-the-night-and-siezed-30-lorries-87352.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 13:52:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/acting-on-information-regarding-the-illegal-transport-of-gravel-soil-in-coimbatore-district-the-police-conducted-intensive-vehicle-checks-throughout-the-night-and-siezed-30-lorries-87352.html</guid>
		            
														<description><![CDATA[கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நள்ளிரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வருவாய்த் துறை மற்றும் கனிம வளத் துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/lorrys.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவையில் கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/xX10NN3W-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p data-start="74" data-end="496" data-is-last-node="" data-is-only-node="">கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நள்ளிரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வருவாய்த் துறை மற்றும் கனிம வளத் துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.</p>]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>பாக்யராஜ் மறைவு.. முதல்வர் விஜய் முதல் திருமாவளவன் வரை தலைவர்கள் உருக்கமாக இரங்கல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/passing-of-bhagyaraj-political-leaders-cm-vijay-to-thirumavalavan-offer-heartfelt-condolences-87346.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 13:46:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/passing-of-bhagyaraj-political-leaders-cm-vijay-to-thirumavalavan-offer-heartfelt-condolences-87346.html</guid>
		            
			

    	<description><![CDATA[தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது லேக் ஏரியா இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடல், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி, அப்பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/bhagyaraj.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பாக்யராஜ் மறைவு.. முதல்வர் விஜய் முதல் திருமாவளவன் வரை தலைவர்கள் உருக்கமாக இரங்கல்!" /></figure><strong>சென்னை, ஜுன் 27:</strong> தமிழ் திரையுலகில் "திரைக்கதை மன்னன்" என்று போற்றப்படும் பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் (வயது 73) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த பாக்யராஜ், இன்று அதிகாலை அங்குள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் வழக்கம்போல உடற்பயிற்சிக்காக வாக்கிங் சென்றுள்ளார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/a-look-at-the-journey-of-k-bhagyaraj-achieving-success-in-both-acting-and-directing-87318.html">நடிப்பிலும் இயக்கத்திலும் பல வெற்றிகளைப் பெற்ற பாக்யராஜின் பயணம் – ஒரு பார்வை</a></strong>
<h3>அதிகாலையில் திடீரென மாரடைப்பு:</h3>
அப்போது அவருக்கு திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இது குறித்து அவர் தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த குடும்பத்தினர், அவரைத் தங்களது வாகனத்திலேயே ஏற்றி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் ஏற்கனவே சில உடல்நலக் குறைபாடுகள் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
<h3>பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல்:</h3>
தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது லேக் ஏரியா இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடல், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி, அப்பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
<h3>முதல்வர் விஜய் இரங்கல்:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த… <a href="https://t.co/Nun0KZ3biV">pic.twitter.com/Nun0KZ3biV</a></p>
— CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2070752120664703378?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அவரது பங்களிப்பு அளப்பரியது. பொழுதுபோக்கோடு சமூக விழுமியங்களைப் பேசிய அவரது படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவரது மறைவு திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது கலைப் பங்களிப்பைப் போற்றும் வகையில், இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
<h3>மு.க.ஸ்டாலின் இரங்கல்:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!

இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய… <a href="https://t.co/UgpbuWDwC5">pic.twitter.com/UgpbuWDwC5</a></p>
— M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2070745622500753423?ref_src=twsrc%5Etfw">June 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

ஆசான் (பாரதிராஜா) மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரான பாக்யராஜையும் தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டது வேதனையளிக்கிறது. இந்திய சினிமாவின் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, யதார்த்த நாயகனாக, அசாத்திய இயக்குநராக வலம் வந்த அவர், தன்னைப் போலவே பல இயக்குநர்களை வளர்த்தெடுத்தவர். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த விழாவில், முதலமைச்சராக மட்டுமின்றி அவரது ரசிகனாகவும் நான் கலந்துகொண்டு பேசிய நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. இன்னும் பல ஆண்டுகள் திரைத்துறையில் பங்களித்திருக்க வேண்டிய அவரது மறைவு பெரும் இழப்பாகும். அவரது மனைவி பூர்ணிமா, சாந்தனு, சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் தமது படைப்புகளால் மக்கள் மனதில் என்றும் வாழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/veteran-director-and-actork-bhagyaraj-passed-away-due-to-heart-attack-know-more-in-details-87313.html">திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்.. திரையுலகில் பெரும் துயரம்</a></strong></p>

<h3>திருமாவளவன் இரங்கல்:</h3>
"இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைமை மாணாக்கரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் 'எனது கலை வாரிசு' என்று பிரகடனப்படுத்தப்பட்டவருமான திரையுலகப் பேராளுமை கே.பாக்யராஜின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அண்மைக் காலம் வரை ஒரு இளைஞரைப் போலச் சுற்றிச் சுழன்று, சினிமா நிகழ்வுகளில் பங்கேற்றுப் பணியாற்றிய அவரது மரணத்தை மனம் ஏற்க மறுக்கிறது. பெண்களை வெகுவாக ஈர்த்த குடும்பப் பின்னணிப் படங்களையும், எவராலும் வெல்ல முடியாத தனித்துவமான திரைக்கதைகளையும் தமிழுக்கு அளித்த மாபெரும் கலை ஆளுமையைத் தமிழ் சமூகம் இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் ஹாயாக உலா வந்த 3 காட்டு யானைகள்.. வைரலாகும் வீடியோ</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/a-video-showing-three-wild-elephants-leisurely-grazing-and-wandering-along-the-roadside-on-the-mettupalayam-coonoor-hill-road-is-going-viral-87339.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 13:39:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/a-video-showing-three-wild-elephants-leisurely-grazing-and-wandering-along-the-roadside-on-the-mettupalayam-coonoor-hill-road-is-going-viral-87339.html</guid>
		            
														<description><![CDATA[மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மூன்று காட்டு யானைகள் சாலையோரத்தில் நிதானமாக மேய்ந்தபடி உலா வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வார இறுதி என்பதால் வாகனங்கள் அதிகமாக இருந்தபோதும், ஹாரன் சத்தத்தை பொருட்படுத்தாமல் யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டன. இந்த காட்சியை பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். மலைப்பாதையில் யானைகளைக் கண்டால் ஹாரன் அடித்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/conoor.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் ஹாயாக உலா வந்த 3 காட்டு யானைகள்.. வைரலாகும் வீடியோ" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/mNF1loVG-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p data-start="98" data-end="516" data-is-last-node="" data-is-only-node="">மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மூன்று காட்டு யானைகள் சாலையோரத்தில் நிதானமாக மேய்ந்தபடி உலா வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வார இறுதி என்பதால் வாகனங்கள் அதிகமாக இருந்தபோதும், ஹாரன் சத்தத்தை பொருட்படுத்தாமல் யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டன. இந்த காட்சியை பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். மலைப்பாதையில் யானைகளைக் கண்டால் ஹாரன் அடித்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகை? வைரலாகும் தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-meenakshi-chaudhary-is-on-board-in-rajinikanths-dharman-movie-87336.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 13:39:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-meenakshi-chaudhary-is-on-board-in-rajinikanths-dharman-movie-87336.html</guid>
		            
			

    	<description><![CDATA[Meenakshi Chaudhary is on board in Dharman Movie | தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தர்மன். இந்தப் படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/dharman-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகை? வைரலாகும் தகவல்" /></figure>தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டது நடிகர் ரஜினிகாந்தின் 173-வது படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி தான். அதன்படி நடிகர் ரஜினிகாந்தி 173-வது படத்தை தயாரிப்பதாக நடிகர் கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் அந்த அறிவிப்பின் போது சுந்தர் சி இயக்குநராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என்று சுந்தர் சி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குநராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரும் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்ட் தொடர்ந்து ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்குநர்கள் தேசிங் பெரியசாமி அல்லது அஸ்வத் மாரிமுத்து இயக்க வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் அந்தப் படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படி இருக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் தலைவர் 173 படத்திற்கு தர்மன் என்று பெயர் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
<h3>ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகை?</h3>
அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி தர்மனில் மீனாட்சி சௌத்ரி இணைந்துள்ளார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஏற்கனவே சிலம்பரசன்படத்திற்காக மீனாட்சியை முடிவு செய்திருந்தார், எனவே இப்போது தர்மன் படத்திலும் அவரை நடிக்க வைத்துள்ளார். இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் சிபியின் திட்டத்துடன் தொடர்புடைய சிம்ரன் இந்தப் படத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-arjun-das-con-city-movie-review-here-87156.html">அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ</a></strong>
<h3>இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">As Per VP,

- <a href="https://x.com/hashtag/MeenakshiChaudhary?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MeenakshiChaudhary</a> OnBoard in Dharman, Dir <a href="https://x.com/hashtag/AshwathMarimuthu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AshwathMarimuthu</a> had already locked Meenakshi for his film with SilambarasanTR (STR51) and So now he has cast her in <a href="https://x.com/hashtag/Dharman?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dharman</a> as well.

- <a href="https://x.com/hashtag/Simran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Simran</a> and <a href="https://x.com/hashtag/RaashiKhanna?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RaashiKhanna</a> are also part of the film. Simran, who was initially… <a href="https://t.co/bZPILYnAon">pic.twitter.com/bZPILYnAon</a></p>
— Movie Tamil (@_MovieTamil) <a href="https://x.com/_MovieTamil/status/2070464540995944462?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/kavins-per-sollum-pillai-film-shooting-begins-with-a-pooja-directed-by-thandatti-director-ram-sangaiah-87150.html">Kavin: தண்டட்டி பட இயக்குநரின் இயக்கத்தில் கவினுடன் இணைத்த சஞ்சனா.. டைட்டில் இதுவா?</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கண் திருஷ்டி போக உப்பு, மிளகாய் சுற்றும் பழக்கத்தின் பின்னணி என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/religion/ancient-home-remedies-traditional-wisdom-for-everyday-health-87341.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 13:34:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/religion/ancient-home-remedies-traditional-wisdom-for-everyday-health-87341.html</guid>
		            
			

    	<description><![CDATA[Ancient Remedies: முன்னோர்கள் இயற்கை மூலிகைகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல்நலத்தை பாதுகாத்தனர். மஞ்சள், இஞ்சி, துளசி போன்றவை பல பிரச்சினைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்பட்டன. நோய் வராமல் தடுப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இன்றும் அந்த பாரம்பரிய அறிவு பலருக்கு பயனளித்து வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/thirushti.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கண் திருஷ்டி போக உப்பு, மிளகாய் சுற்றும் பழக்கத்தின் பின்னணி என்ன?" /></figure>நவீன மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் முன்னோர்கள் இயற்கை மூலிகைகள் மற்றும் வீட்டில் கிடைக்கும் பொருட்களையே நம்பி உடல்நலத்தை பராமரித்தனர். மஞ்சள், இஞ்சி, பூண்டு, துளசி போன்றவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு பயன்பட்டன. சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்றவற்றிற்கு எளிய வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்தப்பட்டன. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, நோய் வராமல் தடுப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. பருவநிலைக்கு ஏற்ற உணவுப் பழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் கடைபிடிக்கப்பட்டன. மூலிகைகளின் பயன்பாடு உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவியது. இன்றும் இந்த பாரம்பரிய அறிவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது.
<h3>அன்றாட வாழ்க்கையில் பிறந்த இயற்கை தீர்வுகள்</h3>
மருத்துவமனைகள் மற்றும் நவீன மருந்துகள் பரவலாக கிடைக்காத காலங்களில், நம் முன்னோர்கள் இயற்கையையே மருத்துவராகக் கொண்டு வாழ்ந்தனர். வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த மூலிகைகள், சமையலறையில் இருந்த மசாலாப் பொருட்கள் மற்றும் எளிய உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாக பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர். இவை வெறும் நம்பிக்கைகள் அல்ல; பல தலைமுறைகளின் அனுபவங்களால் உருவான நடைமுறைகளாக இருந்தன.
<h3>சமையலறையே சிறிய மருந்தகம்</h3>
மஞ்சள், பூண்டு, இஞ்சி, மிளகு, துளசி போன்ற பொருட்கள் நம் சமையலறையில் சுவைக்காக மட்டுமல்ல, உடல்நலத்தை பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டன. தொண்டை எரிச்சல், சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டபோது, உடனடியாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கஷாயங்கள் மற்றும் பாரம்பரிய பானங்கள் உதவியாக இருந்தன. இந்த வழிமுறைகள் உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன.
<h3>மூலிகைகளின் மறக்கப்பட்ட மகத்துவம்</h3>
தமிழகத்தின் பல பகுதிகளில் துளசி, தூதுவளை, முடக்கத்தான் போன்ற மூலிகைகள் வீடுகளின் அருகிலேயே வளர்க்கப்பட்டன. உடல் வலி, சளி, மூட்டு பிரச்சினைகள் போன்றவற்றுக்கு இவற்றை பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. இத்தகைய மூலிகைகள் உடனடி அதிசய பலனை வழங்காவிட்டாலும், நீண்டகால உடல் நல பராமரிப்பில் முக்கிய பங்காற்றியதாக கருதப்படுகிறது.
<h3>நோயைத் தடுப்பதே முக்கிய நோக்கம்</h3>
முன்னோர்களின் வைத்திய முறைகளில் நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட, நோய் வராமல் தடுப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பருவநிலைக்கு ஏற்ற உணவுகள், உடலின் தன்மைக்கு பொருத்தமான மூலிகைகள் மற்றும் காலநிலைக்கு ஏற்ப உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வது போன்ற நடைமுறைகள் வழக்கமாக இருந்தன. இதன் மூலம் உடலின் சமநிலையைப் பேண முயன்றனர்.
<h3>நவீன வாழ்க்கையிலும் பயன்படும் பாரம்பரிய அறிவு</h3>
இன்றைய வேகமான வாழ்க்கை முறையிலும் முன்னோர்களின் சில பழக்கவழக்கங்கள் பொருத்தமுடையவையாகவே உள்ளன. இருப்பினும், எந்த வீட்டு வைத்தியத்தையும் மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகக் கருதாமல், உடல்நலக் குறைபாடுகள் தீவிரமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். அதே நேரத்தில், இயற்கையோடு இணைந்திருந்த முன்னோர்களின் வாழ்க்கை முறையிலிருந்து ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொள்வது நமக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>