<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Latest News Tamil - தமிழில் சமீபத்திய செய்திகள், தமிழ் செய்திகள் இன்று, Tamil News Online</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/latest-news/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/latest-news</link>
 <description>Latest News in Tamil: Latest news and headlines online in Tamil. தமிழ் செய்திகள். தமிழில் முக்கிய செய்திகளையும் சமீபத்திய தலைப்புச் செய்திகளையும் பெறுங்கள் Top headline from Tamil Nadu, India and the world in Tamil on tv9tamilnews.com</description><lastBuildDate>Wed, 12 Aug 2026 16:23:30 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>பழனி நில மோசடி.. சிக்கலில் சஸ்பெண்ட் சார்-பதிவாளர்.. அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-case-filed-against-sub-registrar-justin-manikandan-for-registering-private-land-using-a-forged-document-97652.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 16:23:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/new-case-filed-against-sub-registrar-justin-manikandan-for-registering-private-land-using-a-forged-document-97652.html</guid>
		            
			

    	<description><![CDATA[Palani Sub Registrar Justin Manikandan : பழனி கோயில் நில முறைகேட்டில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனியார் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/palani-sub-registrar.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பழனி நில மோசடி.. சிக்கலில் சஸ்பெண்ட் சார்-பதிவாளர்.. அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!" /></figure>பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, இவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில், வழக்கறிஞர் அன்வர்தீன் உடல் நல குறைவு காரணமாக சிறையில் மரணமடைந்தார். சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சு வலிப்பதாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், பழனி அருகே ஆயக்குடியில் தனியார் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது.
<h3>சஸ்பெண்ட் சார் பதிவாளர் மீது புதிய வழக்கு</h3>
இது தொடர்பாக சார்பதிவாளர் ஈஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த மணி, நிலத்தை வாங்கிய கந்தசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலமானது கோவிலுக்கு சொந்தமானது என்று தகவல் பரவிய நிலையில், தற்போது, தனியார் நிலம் என பதிவுத்துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி கோவில் நிலம் முறைகேடு வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சிவகாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-die-of-suspected-suffocation-after-anti-dengue-mosquito-spraying-in-coimbatore-97529.html" target="_blank" rel="noopener">கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி மரணம் – முதியவர்களுக்கு நேர்ந்த கதி</a>
<h3>சார் பதிவாளரை கைது செய்ய போலீசார் தீவிரம்</h3>
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜஸ்டின் மணிகண்டனிடம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக, அவரை போலீசார் கைது செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில், பழனி நிலம் முறைகேடு வழக்கில் ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
<h3>ஜாமீன் ரத்து செய்த உயர்நீதிமன்றம்</h3>
இதில், நில முறைகேடு பத்திரப்பதிவில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக கருதிய நீதிமன்றம் அவரது ஜாமீனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் தான் அவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் மீது புதிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/erode-government-school-student-dies-of-electrocution-headmistress-suspended-97533.html" target="_blank" rel="noopener">அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – பரபரப்பு தகவல்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இந்த வயதில் எதுக்கு இத்தனை நாடகம்&#8230; வைரலாகும் த்ரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டா பதிவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/trisha-krishnans-instagram-post-went-viral-on-social-media-97645.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 16:07:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/trisha-krishnans-instagram-post-went-viral-on-social-media-97645.html</guid>
		            
			

    	<description><![CDATA[Trisha Krishnans instagram post went viral | நடிகை த்ரிஷா கிருஷ்ணா படங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வரும் அதே வேலையில் அவரது சொந்த வாழ்க்கை மற்றும் அவர் குறித்து மற்றவர்கள் பேசுவது என தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/trisha-krishnan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இந்த வயதில் எதுக்கு இத்தனை நாடகம்&#8230; வைரலாகும் த்ரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டா பதிவு!" /></figure>தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை <a href="https://www.tv9tamilnews.com/entertainment/trisha-krishnan-has-stated-that-she-has-even-forgotten-that-she-acted-in-the-film-karuppu-75528.html" target="_blank" rel="noopener">த்ரிஷா கிருஷ்ணன்</a>. தமிழ் சினிமாவில் சுமார் 24 ஆண்டுகளாக நாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தமிழக ரசிகர்களிடையே எவர்கிரீன் நாயகியாக வலம் வருகிறார். இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் இவருடன் போட்டி நாயகிகலாக வலம் வந்த பலர் தற்போது சினிமா துறையிலேயே இல்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளாக தனது நாயகி என்ற பதவியை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நடித்து வரும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் த்ரிஷாவின் நடிப்பில் அடுத்தடுத்து பலப் படங்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் கருப்பு படம் வெளியாகி இருந்த நிலையில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. ஒரு பக்கம் அவரது சினிமா தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் மற்றொரு பக்கம் த்ரிஷா குறித்து மற்றவர்கள் கிளப்பும் வதந்திகளும் வைரலாகி வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-lokesh-kanagarajs-dc-movie-collected-50-crores-in-4-days-worldwide-97547.html">4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? கொண்டாட்டத்தில் படக்குழு</a></strong>
<h3>இந்த வயதில் எதுக்கு இத்தனை நாடகம்... வைரலாகும் த்ரிஷா பதிவு:</h3>
தொடர்ந்து சமீபத்தில் த்ரிஷா குறித்து உதயநிதியின் சர்ச்சை கருத்து பெரும் சலசப்பை ஏற்படுத்தி வைரலான நிலையில் பலரும் பலவிதமாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இரண்டு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று இந்த வயதில் இத்தகைய நாடகங்கள் சங்கடமானவை... போய் பணம் சம்பாதித்து நிம்மதியைத் தேடுங்கள் என்று தெரிவித்து இருந்தார். மற்றொன்று, ஒரு காலத்தில் நீங்கள் வேண்டிப் பிரார்த்தித்த ஒரு வாழ்க்கையால் நெகிழ்ந்து போவது எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று தெரிவித்து இருந்தார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-rio-rajs-ram-in-leela-movie-trailer-out-now-97561.html">ரியோ ராஜ் நடிப்பில் மீண்டும் ஒரு ஃபன் என்டர்டெயின்மென்ட் படம்… வெளியானது ராம் இன் லீலா படத்தின் ட்ரெய்லர் – வைரலாகும் வீடியோ</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>IND vs SL: நிசான்கா விலகல்! யார் கேப்டன்? இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான இலங்கை அணி அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/ind-vs-sl-test-series-sri-lanka-squad-announced-for-the-first-test-against-india-97646.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 15:54:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/ind-vs-sl-test-series-sri-lanka-squad-announced-for-the-first-test-against-india-97646.html</guid>
		            
			

    	<description><![CDATA[Sri Lanka Test Squad vs India 1st Test: காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும் இலங்கையும் இதுவரை மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா இரண்டிலும், இலங்கை மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 2017-ல் நடைபெற்றது, அதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/sri-lanka-test-squad-vs-india.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="IND vs SL: நிசான்கா விலகல்! யார் கேப்டன்? இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான இலங்கை அணி அறிவிப்பு!" /></figure>இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியை <a href="https://www.tv9tamilnews.com/sports/india-vs-sri-lanka-test-series-ind-vs-sl-1st-test-live-broadcast-and-streaming-details-97464.html">இலங்கை கிரிக்கெட் வாரியம்</a> <strong>(IND vs SL)</strong> அறிவித்துள்ளது. தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக பதும் நிஸ்ஸங்கா அணியில் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். <a href="https://www.tv9tamilnews.com/sports/ind-vs-sl-test-series-shubman-gill-led-indian-cricket-team-special-practice-session-97479.html">இந்திய அணி</a><strong> (Indian Cricket Team)</strong> நேற்று அதாவது 2026 ஆகஸ்ட் 11ம் தேதி காலிக்கு வந்தடைந்தது. அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 33 வயதான டிக்வெல்லா, 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 96 இன்னிங்ஸ்களில் 22 அரை சதங்கள் உட்பட 2,757 ரன்கள் எடுத்துள்ளார். அறிமுக வீரரான ஆஃப்-ஸ்பின்னர் கேசரா நுவந்தாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் காலியின் பிட்ச் சூழல்களில் அவர் முக்கியப் பங்காற்றக்கூடும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ind-vs-sl-test-series-shubman-gill-led-indian-cricket-team-special-practice-session-97479.html">தீவிர பயிற்சியில் சுப்மன் கில் படை.. ஆடுகளத்தில் அசால்ட் செய்யும் பந்துவீச்சாளர்கள்!</a>
<h3>முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி</h3>
தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ் (துணை கேப்டன்), லஹிரு உதார, நிஷான் மதுஷ்கா, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, கேஷார ரத்னாயகே, லஹிரு ரத்னாயகே, அஸ்லாஹி ரத்னாயகே, விஷ்வா பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க.
<h3>காலியில் இலங்கை - இந்தியா டெஸ்ட் போட்டிகளின் சாதனை எப்படி உள்ளது?</h3>
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும் இலங்கையும் இதுவரை மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா இரண்டிலும், இலங்கை மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 2017-ல் நடைபெற்றது, அதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இருப்பினும், இந்தியாவின் தற்போதைய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இலங்கையில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு இலங்கையில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவர்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/india-vs-sri-lanka-test-series-ind-vs-sl-1st-test-live-broadcast-and-streaming-details-97464.html">இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. ஜியோ ஹாட்ஸ்டாரில் காண முடியாதா?</a>
<h3>இந்திய டெஸ்ட் அணி</h3>
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நெல்லையில் கவர்ச்சி வலை விரித்து லட்சக்கணக்கில் மோசடி.. போலீசிடம் சிக்கிய 2 ஜகஜால இளம் பெண்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tirunelveli-junction-police-arrested-2-young-women-involved-in-a-money-fraud-case-97631.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 15:48:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tirunelveli-junction-police-arrested-2-young-women-involved-in-a-money-fraud-case-97631.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tirunelveli 2 Women Arrested : திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தை தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட இரு இளம் பெண்களை சந்திப்பு காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/womens-arrest.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நெல்லையில் கவர்ச்சி வலை விரித்து லட்சக்கணக்கில் மோசடி.. போலீசிடம் சிக்கிய 2 ஜகஜால இளம் பெண்கள்!" /></figure>திருநெல்வேலி மாவட்டம், காரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் சண்முக லட்சுமி ( 23 வயது) மற்றும் இதே பகுதியை சேர்ந்தவர் பூரணசெல்வி ( 30 வயது). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தை தொடங்கி அதில், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக அளவில் வருமானம் ஈட்டலாம் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். இதனை நம்பிய ஏராளமான மக்கள் அவர்களிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர், அவர்கள் கூறியபடி லாபத் தொகையை பணம் செலுத்திய மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, முதலீடு செய்த ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் சண்முக லட்சுமி, பூரண செல்வி ஆகியோரிடம் கேட்டனர். அவர்கள், விரைவில் லாபத் தொகையை தருவதாக தெரிவித்துள்ளனராம்.
<h3>நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார்</h3>
இதை நம்பிய அந்த மக்கள் சில மாதங்களுக்கு அவர்களிடம் லாபத் தொகை குறித்து கேட்காமல் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் குறித்த மாதங்களை தாண்டியும் லாபத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த ஏராளமான மக்கள் அந்த நிறுவனத்தையும் முற்றுகையிட்டனர். ஆனால், அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், இது தொடர்பாக திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-petrol-bunks-warn-stop-upi-digital-payments-bank-accounts-frozen-97524.html" target="_blank" rel="noopener">பெட்ரோல் பங்குகளில் G-Pay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறுத்தம்?.. அதிர்ச்சி செய்தி!!</a>
<h3>லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இரு பெண்கள் கைது</h3>
இதில், தனியார் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்த சண்முக லட்சுமி மற்றும் பூரண செல்வி ஆகியோர் கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்ததை ஒத்துக்கொண்டனர்.
<h3>இருவரும் மகளிர் சிறையில் அடைப்பு</h3>
புகார் அளித்தவர்கள் போக, வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பூரண செல்வி மற்றும் சண்முக லட்சுமி ஆகியோரை திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மகளிர் சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இளம் பெண்கள் இருவர் ஏராளமான பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவமும், அவர்கள் கைதான சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-die-of-suspected-suffocation-after-anti-dengue-mosquito-spraying-in-coimbatore-97529.html" target="_blank" rel="noopener">கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி மரணம் – முதியவர்களுக்கு நேர்ந்த கதி</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய சனிப் பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/religion/saturn-transit-lucky-zodiac-signs-and-astrological-predictions-97624.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 15:34:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/religion/saturn-transit-lucky-zodiac-signs-and-astrological-predictions-97624.html</guid>
		            
			

    	<description><![CDATA[Saturn Transit: 2027-ஆம் ஆண்டு நிகழும் அரிய சனிப் பெயர்ச்சியினால் ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் துலாம் ஆகிய நான்கு ராசிகளுக்குப் பெரும் அதிர்ஷ்டமும் நிதி வளர்ச்சியும் கிடைக்கவுள்ளது. இந்த கிரக மாற்றமானது இந்த ராசியினரின் கடன் சுமைகளையும் ஆரோக்கியக் குறைபாடுகளையும் நீக்கி, தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சத்தை அடைய வழிவகுக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/sani-peyarchi-2026-2-1-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய சனிப் பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்!" /></figure>நவகிரகங்களில் மிக மெதுவாக நகர்ந்து மனிதர்களின் கர்மாவுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் சனிபகவான், ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். தற்போது மீன ராசியில் இயங்கி வரும் சனிபகவான், வரும் 2027-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி அதிசாரமாக மேஷ ராசிக்கு நுழைகிறார். பின்னர் அதே ஆண்டு அக்டோபர் 20 அன்று வக்ர இயக்கத்தில் மீண்டும் மீன ராசிக்குத் திரும்புகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த அரிய கிரகப் பெயர்ச்சியானது, அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டத்தையும் நிதி உயர்வையும் கொண்டு வரவுள்ளது.
<h3>ரிஷப ராசி: தொழில் வளர்ச்சி மற்றும் பண வரவு</h3>
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனுக்கும் சனிபகவானுக்கும் இடையே நட்பு ரீதியான தொடர்பு இருப்பதால், இந்த இடப்பெயர்ச்சி ரிஷப ராசியினருக்குப் பொற்காலமாக அமையவுள்ளது. நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பண நிலுவைகள் அனைத்தும் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். மேலும், குடும்பத்தில் நிலவிவந்த சச்சரவுகள் முடிவுக்கு வந்து, பூர்வீகச் சொத்துக்கள் மூலம் பெரிய அளவிலான லாபம் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
<h3>கடக ராசி: தடைகள் விலகி புதிய சுபிட்சம்</h3>
கடக ராசியினருக்கு இதுவரை தொழில் மற்றும் பணிகளில் இருந்துவந்த மந்தநிலை முழுமையாக மறையும். சனிபகவானின் அருளால் உழைப்புக்கேற்ற முழு பலன்களும் கிடைக்கத் தொடங்கும். புதிய தொழில் முதலீடுகள் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு லாபத்தை ஈட்டித் தரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் வேளையில், புதிய வீடு, மனை அல்லது வாகனங்கள் வாங்கும் கனவும் நனவாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
<h3>விருச்சிக ராசி: கடன் நிவர்த்தியும் வணிக முன்னேற்றமும்</h3>
விருச்சிக ராசியினரை நீண்டகாலமாக வாட்டி வதைத்து வந்த பழைய சிக்கல்களும் கடன் சுமை சார்ந்த தடைகளும் இந்த கிரக நகர்வினால் தகர்க்கப்படும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த வளர்ச்சிப் பாதையை அமைத்துக் கொடுக்கும். புதிய முயற்சிகளில் பெரிய அளவில் முதலீடு செய்து வெற்றி பெற சாதகமான சூழல் நிலவும். மேலும், நாட்பட்ட நோய்களில் இருந்து பூரண குணமடைவதோடு, பழைய நண்பர்களின் ஆதரவால் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
<h3>துலாம் ராசி: அதிர்ஷ்ட மழையும் பதவி உயர்வும்</h3>
சனிபகவானின் உச்ச ராசியான துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த இடைப்பட்ட பெயர்ச்சிக் காலம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு நன்மைகளை அள்ளித்தரும். கடந்த காலத்தில் சந்தித்த நிதி இழப்புகள் அனைத்தும் ஈடுசெய்யப்பட்டு, மன உளைச்சலைத் தந்த கடன்கள் படிப்படியாக அடங்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுடன் தகுதிக்கு ஏற்ற உயர்பதவிகளும் ஊதிய உயர்வு யோகமும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி திரும்புவதுடன், சொந்தமாக வீடு வாங்கும் யோகமும் உறுதியாகும்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நடுவானில் 300 அடி சரிந்த விமானம்.. போதைப்பொருளை பயன்படுத்திய விமானி &#8211; பரிசோதனையில் உறுதி</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/air-india-pilot-accused-of-being-high-before-flight-as-phuket-delhi-plane-plunged-300-feet-97629.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 15:26:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/air-india-pilot-accused-of-being-high-before-flight-as-phuket-delhi-plane-plunged-300-feet-97629.html</guid>
		            
			

    	<description><![CDATA[ம்பவத்துக்குப் பிறகு இரு விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. துணை விமானியின் பரிசோதனை முடிவு தெளிவாக இருந்த நிலையில், கேப்டன் இரண்டு பரிசோதனைகளிலும் தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது பரிசோதனையில் மரிஜுவானா (கஞ்சா) பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/delhi-phuket-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நடுவானில் 300 அடி சரிந்த விமானம்.. போதைப்பொருளை பயன்படுத்திய விமானி &#8211; பரிசோதனையில் உறுதி" /></figure><strong>ஆகஸ்ட் 12, 2026:</strong> புகெட்-டெல்லி இடையே சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி உயரம் சரிந்த சம்பவத்தில், விமானத்தின் கேப்டன் புறப்படுவதற்கு முன்பே போதையில் இருந்ததாக பயணி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், சம்பவத்திற்குப் பிறகு பயணிகளை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என விமானி கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் AI-2379 விமானம் 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் ஆகஸ்ட் 4ஆம் தேதி புகெட்டில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. பயணத்தின் நடுவே விமானம் திடீரென 300 அடி உயரம் சரிந்ததில், குறைந்தது 20 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் காயமடைந்தனர்.
<h3>மது போதையில் விமானி - பயணிகள் பரபரப்பு குற்றச்சாட்டு:</h3>
தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய பயணி ஒருவர், தானும் தனது சகோதரரும் கடைசியாக விமானத்தில் ஏறியதாகவும், அப்போது விமானியும் தங்களுடன் விமானத்தில் ஏறியதாகவும் கூறினார். விமானத்திற்கான நேரம் குறித்து விமானியிடம் பேசியபோது, அவர் மெதுவாக பதிலளித்ததாகவும், அவரது கண்கள் சிவந்து காணப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் விமானி போதையில் இருப்பது போல் தெரிகிறது என தனது சகோதரரிடம் அப்போதே கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

விமானம் திடீரென கீழே சரிந்தபோது, பயணிகள் பலர் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும், தனது சகோதரர் பலமுறை விமானத்தின் மேற்கூரையில் மோதியதாகவும் பயணி கூறினார். பலர் காயமடைந்து உதவி கோரி அலறியதாகவும் தெரிவித்தார்.

சம்பவத்திற்குப் பிறகு விமானி கேபினுக்கு வந்து பயணிகளை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும், “இதை பெரிதாக்கவேண்டாம் எனக் கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைக்க அவசரமாக வேறு விமான நிலையத்தில் தரையிறங்காமல் டெல்லிக்கே சென்றது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
<h3>விமான திடீரென கீழே சரிய என்ன காரணம்?</h3>
இதற்கிடையில், விமானப் பாதுகாப்புத் துறையின் அறிக்கையின்படி, விமானம் திடீரென ஸ்டால் நிலையை எதிர்கொண்டபோது ஆட்டோபைலட் துண்டிக்கப்பட்டது. அப்போது விமானத்தை இயக்கிய துணை விமானி, பயிற்சியின்படி விமானத்தின் மூக்குப் பகுதியை கீழ்நோக்கித் தள்ளி வேகத்தை அதிகரித்தார். இதனால் விமானம் சில நொடிகளுக்கு கடுமையான எதிர்மறை ஈர்ப்பு விசையை எதிர்கொண்டு, அதிகபட்சமாக 300 அடி உயரத்தை இழந்தது.

மேலும், மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்ததற்கான அறிகுறிகள், ஆட்டோபைலட் துண்டிப்பு மற்றும் எலிவேட்டர் கோளாறு பதிவாகியுள்ளன. இதனால் விமானத்தின் உயரக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
<h3>போதைப்பொருளை பயன்படுத்திய விமானி - பரிசோதனையில் உறுதி:</h3>
இதனிடையே, சம்பவத்துக்குப் பிறகு இரு விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. துணை விமானியின் பரிசோதனை முடிவு தெளிவாக இருந்த நிலையில், கேப்டன் இரண்டு பரிசோதனைகளிலும் தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது பரிசோதனையில் மரிஜுவானா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு விமானிகளும் பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/mumbai-kurla-landslide-gaushiya-chawl-death-toll-updates-97539.html">மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!</a>

இந்த சம்பவத்தை தீவிரமான விமானப் பாதுகாப்பு நிகழ்வாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வகைப்படுத்தியுள்ளது. விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB), ஏர்பஸ் மற்றும் பிரான்சின் BEA ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறது. அனைத்து தொழில்நுட்ப, செயல்பாட்டு, மருத்துவ மற்றும் மனிதக் காரணிகள் தொடர்பான ஆதாரங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் ஒன்பிளஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/oneplus-nord-6-smartphone-selling-with-11000-discount-97612.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 15:20:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/oneplus-nord-6-smartphone-selling-with-11000-discount-97612.html</guid>
		            
			

    	<description><![CDATA[OnePlus Nord 6 Smartphone Discount | அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் சுதந்திர தின சேலை நடத்தி வரும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி வழங்கியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/oneplus-nord-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் ஒன்பிளஸ்!" /></figure>அமேசான் <strong>(Amazon)</strong>, பிளிப்கார்ட்<strong> (Flipkart)</strong> ஆகிய நிறுவனங்கள் தங்களின் ப்ரீடம் சேலை <strong>(Freedom Sale)</strong> நடத்தி வருவதை போலவே, சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒன்பிளஸ் <strong>(OnePlus)</strong> நிறுவனமும் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சேலில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு <strong>(OnePlus Nord 6 Smartphone)</strong> ரூ.11,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. ஒன்பிளஸின் இந்த அதிரடி தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி</h3>
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன் தற்போது ஒன்பிளஸ் இணையதளத்தில் ரூ.44,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.52,999-க்கு அறிமுகமான நிலையில், தற்போது ரூ.8,500 குறைவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதவிர சுதந்திர தின சிறப்பு சலுகையான ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.2,500 கூடுதல் உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் மொத்த ரூ.11,000 தள்ளுபடியில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-avoid-fake-discounts-when-shopping-online-price-tracker-tools-you-should-know-96871.html">அமேசான் – ஃபிளிப்கார்ட் வழங்கும் தள்ளுபடிகள் உண்மையா? எப்படி கண்டுபிடிப்பது?</a>
<h3>இரண்டு முறை விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்</h3>
ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா மற்றும் ஐடிஎஃப்சி வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் இந்த உடனடி சலுகையான ரூ.2,500 பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.42,000-க்கு தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், சமீப காலமாக நிலவி வரும் மெமரி சிப் சிக்கல்கள் காரணமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக தான் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.52,999 ஆக இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸின் இந்த சலுகையை பயன்படுத்தி பழைய விலைக்கே இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ள முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/amazon-great-freedom-sale-2026-discount-and-offers-on-smartphones-laptops-tabs-and-gadgets-a-96750.html">ஸ்மார்ட்போன்கள் முதல் கேட்ஜெட்ஸ் வரை.. அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்ன?</a>
<h3>ஒன்பிளஸ் நோர்டு 6 - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K AMLOED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் கென் 4 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள ஸ்மார்ட்போன் அசத்தல் சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாழ வேணும் நாம மழ காத்து பூமியா&#8230; 10 ஆண்டுகளைக் கடந்தது ஜோக்கர் படம் &#8211; கொண்டாடும் படக்குழு</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/the-film-crew-is-celebrating-the-10th-anniversary-of-the-movie-joker-theatrical-release-97614.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 15:19:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/the-film-crew-is-celebrating-the-10th-anniversary-of-the-movie-joker-theatrical-release-97614.html</guid>
		            
			

    	<description><![CDATA[10 Years Of Joker Movie | தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்த படம் ஜோக்கர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அதனை கொண்டாடி வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/joker.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாழ வேணும் நாம மழ காத்து பூமியா&#8230; 10 ஆண்டுகளைக் கடந்தது ஜோக்கர் படம் &#8211; கொண்டாடும் படக்குழு" /></figure>தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜோக்கர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜு முருகன் எழுதி இயக்கி இருந்தார். பொலிட்டிகள் சட்டையர் பாணியில் திரையரங்குகளில் வெளியான படம் ஜோக்கர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் காயத்ரி கிருஷ்ணா,
மு ராமசுவாமி, பி.வி.ஆனந்தகிருஷ்ணன், பாவா செல்லதுரை, கனியப்பன், வி.தாமரைசெல்வன், விமலா, எஸ்.ஏ.லெட்சுமணன், எஸ்.மகாலட்சுமி மற்றும் கலை கண்ணன் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
<h3>10 ஆண்டுகளைக் கடந்தது ஜோக்கர் படம்:</h3>
பொலிட்டிகள் சட்டையர் படமாக உருவாகி இருந்த இந்தப் படத்தில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கிண்டலடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் அரசு வழங்கும் நிவாரணம் எந்த அளவிற்கு தரமானதாக இருக்கும் என்பது குறித்து மக்களுக்கு புரியும் வகையில் எடுக்கப்பட்டு இருந்ததால் படம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தினை குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-vikram-gets-into-trouble-for-posting-video-of-playing-with-monkey-cub-97489.html">குரங்குடன் வீடியோ வெளியிட்டு சிக்கலில் சிக்கிய நடிகர் விக்ரம்</a></strong>
<h3>ஜோக்கர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Celebrating 10 years of <a href="https://x.com/hashtag/Joker?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Joker</a> with heartfelt gratitude to the incredible cast and crew who brought this film to life, and to the audiences who embraced it with so much love.

Thank you all for making this journey truly unforgettable. ❤<a href="https://x.com/hashtag/10YearsOfJoker?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#10YearsOfJoker</a> <a href="https://x.com/gurusoms?ref_src=twsrc%5Etfw">@gurusoms</a>… <a href="https://t.co/CBpwhlkVxL">pic.twitter.com/CBpwhlkVxL</a></p>
— DreamWarriorPictures (@DreamWarriorpic) <a href="https://x.com/DreamWarriorpic/status/2087434067306545645?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/director-shares-an-emotional-post-about-parthen-rasithen-movie-marks-over-26-years-97501.html">26 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படம் – இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோவையில் கல்லூரி மாணவர் சித்ரவதை கொலை.. சக மாணவர்கள் 5 பேர் கைது.. அதிர்ச்சிகரமான பின்னணி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/6-students-arrested-for-the-murder-of-a-college-student-in-coimbatore-97616.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 15:16:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/6-students-arrested-for-the-murder-of-a-college-student-in-coimbatore-97616.html</guid>
		            
			

    	<description><![CDATA[Coimbatore College Student Murder : கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் கொலையில் தொடர்புடையதாக சக மாணவர்கள் 5 பேரை செட்டிபாளையம் போலீசார் வழக்கு ப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/murder-arrest.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவையில் கல்லூரி மாணவர் சித்ரவதை கொலை.. சக மாணவர்கள் 5 பேர் கைது.. அதிர்ச்சிகரமான பின்னணி!" /></figure>கள்ளக்குறிச்சி மாவட்டம், வள்ளலார் வீதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் ( 19 வயது). இவர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். அவரது அறையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமன் ( 19 வயது) உள்பட 4 பேர் தங்கி இருந்தனர். இந்த நிலையில், அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனது நண்பரின் அறையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்கள் இருவரும் சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு செல்ல மலுமிச்சம்பட்டி பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே கல்லூரியில் பயின்று வரும் சுமார் 20- க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்தனர்.
<h3>பைக்கில் அழைத்து சென்று கொடூர தாக்குதல்</h3>
அவர்கள், அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரை தங்களது இருசக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது, எங்கள் அறையில் அத்துமீறி நுழைந்து எங்களை தாக்கி செல்போனை பறித்து விட்டது நீங்கள் தானே என்று அவர்கள் கேட்டுள்ளனர். இதில், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அமுதனை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/erode-government-school-student-dies-of-electrocution-headmistress-suspended-97533.html" target="_blank" rel="noopener">அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – பரபரப்பு தகவல்</a>
<h3>விடுதியில் வைத்து மாணவர் மீது தாக்குதல்</h3>
தொடர்ந்து, அமுதனை இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்று விடுதியில் உள்ள அவரது அறைக்கு அழைத்து சென்றனர். அங்கும், அவரை கத்தி, அரிவாளை மாற்றி பிடித்து தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அமுதன் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே, அந்த மாணவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தொடர்ந்து, மதிய உணவு இடைவேளைக்காக மற்ற மாணவர்கள் அறைக்கு வந்த போது அமுதன் மயங்கி கிடந்ததை பார்த்தனர். உடனே, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
<h3>கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது</h3>
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் ஆராமுதன், சிவரோகித், அரவிந்த், மணி பாலு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/special-trains-between-chennai-and-kollam-for-onam-festival-97578.html" target="_blank" rel="noopener">பயணிகள் கவனத்திற்கு! ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அடுத்த 7 நாட்களுக்கு சில்லென மாறப்போகும் தமிழகம்.. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issues-rainfall-warning-to-next-7-days-in-tamil-nadu-including-chennai-97617.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 14:52:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issues-rainfall-warning-to-next-7-days-in-tamil-nadu-including-chennai-97617.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/wea-12.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அடுத்த 7 நாட்களுக்கு சில்லென மாறப்போகும் தமிழகம்.. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.." /></figure><strong>ஆகஸ்ட் 12, 2026:</strong> தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு வளிமண்டலத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
<h3> 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:</h3>
ஆகஸ்ட் 13ஆம் தேதி, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>18ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மழை:</h3>
ஆகஸ்ட் 15ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-speech-support-for-cm-vijays-assembly-resolution-on-delimitation-97598.html"> “50% எம்.பி இடங்கள் அதிகரித்தாலும் ஆபத்துதான்!”.. தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!</a>

ஆகஸ்ட் 18ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
<h3>3 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை:</h3>
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாகப் பதிவாகக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-vetri-veedu-scheme-allowance-increased-finance-minister-budget-speech-97608.html"> “வெற்றி வீடு திட்டத்திற்கு இனி ரூ.5 லட்சம்!”.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!</a>

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தினமும் காலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பது நல்லதா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/sesame-oil-on-an-empty-stomach-health-benefits-and-precautions-97615.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 14:50:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/sesame-oil-on-an-empty-stomach-health-benefits-and-precautions-97615.html</guid>
		            
			

    	<description><![CDATA[Sesame Oil: எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகளும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளதால், காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் உட்கொள்வது செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தணிக்க உதவும். மேலும், இதில் உள்ள லினோலிக் அமிலம் மற்றும் தாதுக்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், மூட்டு அழற்சியைக் குறைக்கவும் துணைபுரிகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/oil-to-drink.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தினமும் காலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பது நல்லதா?" /></figure>காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு சிறிய தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய் அருந்துவது குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. இது குடலின் உட்பகுதியை மென்மையாக்கி, செரிமானப் பாதையில் உணவு எளிதாக நகர வழிவகுக்கிறது. இதனால் நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு இயற்கையான தற்காலிக தீர்வாக அமையக்கூடும். இருப்பினும், நபருக்கு நபர் இதன் தாக்கம் மாறுபட வாய்ப்புள்ளது.
<h3>இதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு</h3>
நல்லெண்ணெயில் லினோலிக் அமிலம் போன்ற நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் பெருமளவில் நிறைந்துள்ளன. இதனை அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக்கொள்ளும்போது, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை உயர்த்த இது துணைபுரிகிறது. இதன் மூலம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் தடுக்கப்பட்டு, இதயத்தின் ஒட்டுமொத்த செயல்பாடும் பாதுகாக்கப்படுகிறது.
<h3>ரத்த அழுத்தத்தை சீராக பராமரித்தல்</h3>
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதில் நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன. எனினும், ஏற்கனவே ரத்த அழுத்தத்திற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்பவர்கள், எண்ணெயை மட்டுமே நம்பி மருந்துகளை நிறுத்தவோ அல்லது அளவைக் குறைக்கவோ கூடாது.
<h3>எலும்புகளின் வலிமை மற்றும் மூட்டு ஆரோக்கியம்</h3>
எள்ளில் இயல்பாகவே கால்சியம், துத்தநாகம் (Zinc) போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. நல்லெண்ணெயை மிதமான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் உடலின் வீக்கங்கள் மற்றும் அழற்சிகள் (Inflammation) குறைகின்றன. இது மூட்டு வலியைத் தணிப்பதோடு, எலும்புகளின் வலிமைக்கும் ஆதரவளிக்கிறது. ஆனால், எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான முழுச் சத்தையும் நல்லெண்ணெயிலிருந்து மட்டுமே பெற முடியாது என்பதால், பிற ஊட்டச்சத்து உணவுகளும் அவசியமாகும்.
<h3>ஆயில் புல்லிங் எனும் வாய் சுகாதாரம்</h3>
நல்லெண்ணெயைக் குடிப்பதற்குப் பதிலாக, அதனை வாயில் ஊற்றி சில நிமிடங்கள் கொப்பளிக்கும் 'ஆயில் புல்லிங்' முறை பழங்காலம் தொட்டே பின்பற்றப்பட்டு வருகிறது. இது வாயில் உள்ள நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இருந்தாலும், இது தினமும் பல் துலக்குதல் மற்றும் வழக்கமான பல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு மாற்றாக அமையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Also Read<a href="https://www.tv9tamilnews.com/lifestyle/uncontacted-tribes-earths-most-isolated-communities-and-their-survival-97580.html">: மனிதர்களைக் கண்டாலே அம்பு எய்வது ஏன்? தீவுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்தான ரகசியம்!</a>
<h3>மருத்துவ ஆலோசனை மற்றும் எச்சரிக்கை</h3>
நல்லெண்ணெய் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், தினமும் வெறும் வயிற்றில் அதனைக் குடிப்பதால் மட்டுமே அனைத்து நோய்களும் குணமாகிவிடும் என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எனவே, ஏதேனும் தீவிர உடலநலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது தொடர்ந்து மருந்துகள் உட்கொள்பவர்கள், நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் பருகத் தொடங்கும் முன் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சட்டப்பேரவைக்கு 4 நாள்கள் பிரேக்&#8230; ஆக.17-இல் மீண்டும் பரபரக்கும் சட்டமன்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/debate-on-demands-for-grants-in-tamil-nadu-legislative-assembly-resumes-on-august-17-following-a-4-day-break-97613.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 14:32:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/debate-on-demands-for-grants-in-tamil-nadu-legislative-assembly-resumes-on-august-17-following-a-4-day-break-97613.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Legislative Assembly : தமிழக சட்டமன்றத்துக்கு 4 நாள்கள் விடுமுறை எனவும், ஆகஸ்ட் 17- இல் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற இருப்பதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்து உள்ளார் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tn-assembly-2-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சட்டப்பேரவைக்கு 4 நாள்கள் பிரேக்&#8230; ஆக.17-இல் மீண்டும் பரபரக்கும் சட்டமன்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!" /></figure>தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி ( புதன்கிழமை) கூடியது. முதல் நாளான அன்று தமிழக அரசின் பொது நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து சுமார் 2:30 மணி நேரம் பேசி இருந்தார். இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 6- ஆம் தேதி ( வியாழக்கிழமை) வேளாண் நிதி நிலை அறிக்கையை உழவர் நலன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசி இருந்தார். இந்த இரு நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்த போது, பல்வேறு திட்டங்கள் மற்றும் மற்றும் பல்வேறு அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது, இந்த இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
<h3>இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம்</h3>
அதன்படி, கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இவர்களுக்கு, துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று ஆகஸ்ட் 12- ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். பின்னர், இன்றைய கூட்டம் நிறைவடைவதாக பேரவை தலைவர் அறிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-speech-support-for-cm-vijays-assembly-resolution-on-delimitation-97598.html" target="_blank" rel="noopener">“50% எம்.பி இடங்கள் அதிகரித்தாலும் ஆபத்துதான்!”.. தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!</a>
<h3>தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை</h3>
தொடர்ந்து, நாளை ஆகஸ்ட் 13- ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 14- ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது. அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் என்பதாலும், அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர்ச்சியாக 4 நாட்கள் சட்டப் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பின்னர் ஆகஸ்ட் 17- ஆம் தேதி ( திங்கள்கிழமை) சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது. அன்றைய தினம் முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற உள்ளது.
<h3>ஆக. 17- இல் மானிய கோரிக்கை விவாதம்</h3>
முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, மற்ற துறைகள் வாரியான கோரிக்கை விவாதம் நடைபெறும் என்று பேரவை தலைவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-vetri-veedu-scheme-allowance-increased-finance-minister-budget-speech-97608.html" target="_blank" rel="noopener">“வெற்றி வீடு திட்டத்திற்கு இனி ரூ.5 லட்சம்!”.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அந்த சம்பவத்திற்கு பிறகு என் அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் &#8211; நடிகர் சூர்யா ஓபன் டாக்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/actor-suriya-said-i-stopped-watching-my-fathers-movies-after-that-incident-97601.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 14:18:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/actor-suriya-said-i-stopped-watching-my-fathers-movies-after-that-incident-97601.html</guid>
		            
			

    	<description><![CDATA[Actor Suriya talks about his father movies | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது அப்பாவின் படங்களை பார்ப்பதை தவிர்த்த அனுபவம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/suriya-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அந்த சம்பவத்திற்கு பிறகு என் அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் &#8211; நடிகர் சூர்யா ஓபன் டாக்" /></figure>தமிழ் சினிமாவில் இரண்டாம் தலைமுறை நாயகனாக உள்ளார் <a href="http://itha-baiju-said-i-watched-suriya-sirs-sillunu-oru-kaadhal-when-i-was-in-the-5th-grade-and-that-was-the-first-movie-of-his-that-i-ever-watched-97455.html" target="_blank" rel="noopener">நடிகர் சூர்யா</a>. இவரது தந்தை பழம்பெரும் நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் பல நூறு படங்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்த இவர் தனது மகன்கள் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன பிறகு நடிப்பதில் இருந்து விலகி உள்ளார். அதன்படி சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில் இரண்டாவது மகன் கார்த்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர்கள் இருவரின் நடிப்பிலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் படக்குழுவினர் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது தந்தையின் படங்களை பார்ப்பதை தவிர்த்து விட்டது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
<h3>அந்த சம்பவத்திற்கு பிறகு அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்:</h3>
ஒருமுறை என் நண்பரின் குடும்பத் திருமணத்தில் கலந்துகொண்டபோது அந்தச் சூழல் ஏற்பட்டது. அவர் ஒரு அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நான் அழைப்பிதழ் கொடுத்தபோது, ​​நான் யார் என்று அவர் கேட்டார். சிவகுமாரின் மகன் என்று என்னை அறிமுகப்படுத்தினார்கள். அப்போதுதான் நான் நடிப்பில் அடியெடுத்து வைத்திருந்தேன். அதற்கு அந்த அமைச்சர், நீயும் உன் அப்பா செய்வதையேதானே செய்யப் போகிறாய்? என்று கேட்டார். அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. அதனால் நான் என் அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். அவருடன் எந்தவிதமான ஒற்றுமையும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், எனக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்தேன் என்று நடிகர் சூர்யா வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைராகி வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-suriyas-vishwanath-and-sons-movie-ticket-booking-open-now-97470.html">செல்லங்களா ரெடியா… தொடங்கியது விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்தின் டிக்கெட் புக்கிங்!</a></strong>
<h3>இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">When <a href="https://x.com/hashtag/Suriya?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Suriya</a>'s Ego Got Triggered🔥:

"There was one incident, where my friends family wedding was there &amp; he was related to minister family. While we gave invitation, he asked me whom I was. They introduced as Sivakumar's son &amp; I was just going to act. That minister said 'You are…</p>
— AmuthaBharathi (@CinemaWithAB) <a href="https://x.com/CinemaWithAB/status/2086845339496247717?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/oru-pere-varalaru-from-the-jana-nayagan-movie-full-video-song-is-out-now-97472.html">ஜன நாயகன் படத்திலிருந்து வெளியானது ஒரு பேரே வரலாறு பாடல் வீடியோ</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;வெற்றி வீடு திட்டத்திற்கு இனி ரூ.5 லட்சம்!&#8221;.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-vetri-veedu-scheme-allowance-increased-finance-minister-budget-speech-97608.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 14:01:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-vetri-veedu-scheme-allowance-increased-finance-minister-budget-speech-97608.html</guid>
		            
			

    	<description><![CDATA[TN Budget Debate: தமிழக சட்டமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர், வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3.11 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். மேலும், நிதி நிலைமை சீரடைந்ததும் அரசின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என அவையில் உறுதி அளித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/maria-willson-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;வெற்றி வீடு திட்டத்திற்கு இனி ரூ.5 லட்சம்!&#8221;.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-speech-support-for-cm-vijays-assembly-resolution-on-delimitation-97598.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றத்தில்</a> பட்ஜெட் மற்றும் வரவு செலவு திட்டங்கள் மீதான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கும் நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் விரிவாக பதிலளித்துப் பேசினார். அப்போது, அரசு ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் அண்ணன் சீர் திட்டம் போன்ற முக்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன், முந்தைய அரசு செயல்படுத்திய திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு நகலெடுக்கப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், திட்டங்களின் பயன்களை உயர்த்தும் வகையிலான முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

<strong>இதையும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html">முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!</a></strong>
<h3>வெற்றி வீடு திட்டம் நிதி உயர்வு:</h3>
அவையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், முந்தைய அரசின் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு வெறுமனே நகலெடுக்கவில்லை என்றும், மக்களின் பயன்பாட்டிற்காக அத்திட்டங்களை மேலும் மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதற்கு உதாரணமாக, 'வெற்றி வீடு' திட்டத்தின் கீழ் முந்தைய ஆட்சியில் வீடு ஒன்றுக்கு வழங்கி வந்த ரூ.3.11 லட்சம் நிதி ஒதுக்கீட்டை, தற்போதைய அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உள்ளதாக அறிவித்தார். மேலும், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு, வருவாய் திரட்டல் மற்றும் செலவின மேலாண்மைக்காக உயர்மட்டக் குழுக்களை அமைத்துள்ளது என்றும், நிதி ஆதாரம் சீரடைந்தவுடன் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதிபடக் கூறினார்.
<h3>மகளிர் உரிமைத்தொகை திட்ட ஒப்பீடு:</h3>
கடந்த ஆட்சியில் வாக்குறுதிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை ஒப்பீட்டு ரீதியாக விளக்கிய அமைச்சர், 2021 தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம், ஆட்சிக்கு வந்து சுமார் 28 மாதங்கள் கழித்தே (செப்டம்பர் 15, 2023) தொடங்கப்பட்டது என்பதை நினைவூட்டினார். அப்போது மாநிலத்தின் நிதிநிலை சரியாக இல்லை என்ற காரணத்தினாலேயே தாமதம் ஏற்பட்டது எனக் கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், நிதிநிலையைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் தற்போதைய அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று குறிப்பிட்டார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>
<h3>முந்தைய ஆட்சி முறைகேடுகள்:</h3>
முந்தைய அரசின் மூலதன செலவினங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், முந்தைய ஆட்சியில் மதிப்பீடுகள் அதிகப்படுத்தப்பட்டுக் காட்டப்பட்டதாகவும், டெண்டர்கள் ஒதுக்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றஞ்சாட்டினார். அந்த முறைகேடுகளைத் தற்போதைய அரசு ஒவ்வொன்றாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 2026-27 நிதியாண்டில் மூலதனச் செலவின வளர்ச்சி விகிதம் 11.25 சதவீதமாக உயர்ந்து ரூ.56,985 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் விளக்கிய அமைச்சர், உண்மையான மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை உருவாக்குவதில் தங்கள் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காபி பிரியரா நீங்கள்? தினமும் காபி குடிப்பது நல்லதா? அறிவியலின் அசத்தல் உண்மை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/scientific-studies-reveal-surprising-daily-health-benefits-of-coffee-97599.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 14:00:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/scientific-studies-reveal-surprising-daily-health-benefits-of-coffee-97599.html</guid>
		            
			

    	<description><![CDATA[Benefits of Coffee: காபி குடிப்பது இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைப்பதாகச் சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காபியிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் காஃபின் உடலின் அழற்சியைக் குறைப்பதோடு, மூளையின் செயல்பாட்டை அதிகரித்து அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/06/coffee-time.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காபி பிரியரா நீங்கள்? தினமும் காபி குடிப்பது நல்லதா? அறிவியலின் அசத்தல் உண்மை!" /></figure>கடந்த சில தசாப்தங்களுக்கு முன்பு வரை, காபி அருந்துவது உடலுக்கும் இதயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்றும் மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய விரிவான அறிவியல் ஆராய்ச்சிகள் காபி குறித்த இந்த பரவலான மூடநம்பிக்கையை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளன. காபி அருந்துவது ஆபத்தானது அல்ல, மாறாக மிதமான அளவில் தினமும் காபி குடிப்பது மனித உடலுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்கிறது என்பதை சர்வதேச ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
<h3>இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நோய் தடுப்பு ஆற்றல்</h3>
நாள்தோறும் இரண்டு முதல் மூன்று கோப்பை வரை காபி அருந்துபவர்களுக்கு, காபி குடிக்காதவர்களை விட இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், காபியில் நிறைந்துள்ள 'குளோரோஜெனிக் அமிலம்' (Chlorogenic acid) போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன. இதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஏற்படுவதற்கான வாய்ப்பு சுமார் 10% முதல் 15% வரை தடுக்கப்படுவதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.
<h3>மூளையின் சுறுசுறுப்பும் நீண்ட ஆயுளுக்கான நன்மைகளும்</h3>
காபியிலுள்ள காஃபின் (Caffeine) நரம்பு மண்டலத்தைத் தூண்டி மூளையின் கவனத்தையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது. இது வயதான காலத்தில் ஏற்படும் அல்சைமர் (Alzheimer's) மற்றும் பார்்கின்சன் (Parkinson's) போன்ற நரம்பியல் சார்ந்த ஞாபக மறதி நோய்களின் அபாயத்தைக் குறைக்க வல்லது. அதுமட்டுமன்றி, காலை வேளையில் காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு முன்கூட்டிய மரணத்திற்கான வாய்ப்பு குறைவதாகவும், உடலின் செல்களில் ஏற்படும் அழற்சியைக் (Inflammation) குறைத்து ஒட்டுமொத்த ஆயுளை நீட்டிக்க காபியிலுள்ள பயோ-ஆக்டிவ் சேர்மங்கள் உதவுவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/safe-steps-to-defrost-your-fridge-freezer-and-reduce-electricity-bills-97423.html">ஃப்ரீசரில் குவியும் ஐஸ்கட்டி: கத்தி இல்லாமல் பாதுகாப்பாக அகற்றுவது எப்படி?</a>
<h3>அளவோடு அருந்துவதன் முக்கியத்துவமும் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையும்</h3>
காபியில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்திருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாகவோ அல்லது அதிக சர்க்கரை, அதிக கொழுப்புள்ள பால் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்தோ அருந்துவது உடலுக்கு எதிர்மறையான விளைவுகளைத் தரக்கூடும். ஒரு ஆரோக்கியமான மனிதர் நாளொன்றுக்கு 3 முதல் 4 கோப்பைகளுக்கு மிகாமல் (சுமார் 400 மிகிராம் காஃபின்) மிதமான அளவில் காபி அருந்துவது முற்றிலும் பாதுகாப்பானது. சரியான நேரத்தில் மற்றும் சரியான அளவில் காபியை எடுத்துக்கொள்வது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த இயற்கை பானமாகத் திகழ்கிறது.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;50% எம்.பி இடங்கள் அதிகரித்தாலும் ஆபத்துதான்!&#8221;.. தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-speech-support-for-cm-vijays-assembly-resolution-on-delimitation-97598.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 13:43:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-speech-support-for-cm-vijays-assembly-resolution-on-delimitation-97598.html</guid>
		            
			

    	<description><![CDATA[தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை வரவேற்பதாகத் தவெகவின் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எம்பி இடங்கள் 50% உயர்த்தப்பட்டாலும் அது வடமாநில ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்பதால், 543 தொகுதிகளிலேயே உறைநிலையை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/aadhav-arjuna-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;50% எம்.பி இடங்கள் அதிகரித்தாலும் ஆபத்துதான்!&#8221;.. தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong> தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாப்பது தொடர்பான <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-assembly-speech-delimitation-resolution-oppose-97579.html" target="_blank" rel="noopener">தொகுதி மறுவரையறை</a> விவகாரம் சட்டமன்றத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தச் சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்தும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

<strong>இதையும் படிக்க:</strong> <strong>“தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு எதிர்ப்பு”.. அதிமுகவின் நிலைப்பாட்டை விளக்கிய இபிஎஸ்!!</strong>
<h3>பணி மற்றும் அமெரிக்க உதாரணம்:</h3>
நாடாளுமன்ற உறுப்பினர்களின் முதன்மைப் பணி நாட்டின் சட்டங்களை இயற்றுவதே அன்றி, உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களைப் போல உள்ளூர் நிர்வாகப் பணிகளைச் செய்வது அல்ல என்று சுட்டிக்காட்டிய ஆதவ் அர்ஜுனா, அமெரிக்க ஜனநாயக முறையை உதாரணமாக்கினார். அமெரிக்காவில் மக்கள் தொகை உயர்ந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றுவதில்லை என்பதை நினைவூட்டினார். உலகிலேயே வலிமையான அயைக் கொண்ட அமெரிக்காவைப் போலவே, புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பிலும் அனைத்து மக்களுக்கும் மாநிலங்களுக்கும் சமத்துவத்தைப் பேணுவதே முதன்மையான நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.
<h3>முந்தைய எதிர்ப்புகளும் தற்போதைய சூழலும்:</h3>
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முந்தைய காலங்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பையும், திமுகவின் நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டிய அவர், இதில் தவெக தலைவரும் 2025 முதல் தொடர்ந்து அறிக்கைகள் வாயிலாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவித்தார். 50% உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்ற கருத்து வந்தாலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களை ஒன்றிணைத்தாலே, உயர்த்தப்படும் பெரும்பான்மை இடங்களை அவை கைப்பற்றிவிடும். இதனால் இந்தியத் தேர்தல் அரசியலில் மீண்டும் வட மாநிலங்களின் ஆதிக்கம் உருவெடுக்கும் என்று எச்சரித்தார்.

<strong>இதையும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html">முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!</a></strong>
<h3>முதலமைச்சர் தீர்மானத்திற்கு ஆதரவு:</h3>
முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் ஆகியோர் ஆட்சிக்காலத்தில் மாநில சுயாட்சியைக் காக்கத் தொகுதி எண்ணிக்கையில் 'உறைநிலை' பின்பற்றப்பட்டதைப் போல, தற்போதும் 543 நாடாளுமன்றத் தொகுதிகள் என்பதையே தொடர வேண்டும் என வலியுறுத்தினார். மாநில சுயாட்சியையும் தென் மாநிலங்களின் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் வரும்போது தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் இணைந்து நின்று எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கோவை மாணவர் மரணம் &#8211; கோஷ்டி மோதலா? அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-opposes-minister-rajmohans-explanation-over-student-amuthans-death-in-coimbatore-97595.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 13:36:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-opposes-minister-rajmohans-explanation-over-student-amuthans-death-in-coimbatore-97595.html</guid>
		            
			

    	<description><![CDATA[சட்டமன்றததில் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் 20 பேரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரச் சம்பவத்திற்குத் தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/minister-rajmohan-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கோவை மாணவர் மரணம் &#8211; கோஷ்டி மோதலா? அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12 :</strong> மத்திய அரசின் தொகுதி மறுவரையறை முடிவுக்கு எதிராக ஆகஸ்ட் 12, 2026 இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நீர்மானத்துக்கு திமுக ஆதரவளிப்பதாக எதிர்கட்சித் தலைவர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/udhayanidhi-stalin-assembly-speech-dmk-stance-on-delimitation-and-women-reservation-97572.html" target="_blank" rel="noopener">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்தார். அப்போது கோவையில் போதைப்பொருள் விற்பனை பற்றி போலீசில் தகவல் அளித்த மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.
<h3>அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு</h3>
அதற்கு விளக்கமளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சம்மந்தப்பட்ட மாணவர்கள் இடையே ஏற்கனவே இருந்த 'கோஷ்டி மோதல்' காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவித்தார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டமன்றததில் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் 20 பேரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரச் சம்பவத்திற்குத் தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற கொடூர சம்பவங்கள் எங்கும் நடைபெறாமல் இருக்கத் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட மாணவன் அமுதன் குடும்பத்திற்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-government-allocates-6-85-crore-annually-for-vip-visits-across-districts-97563.html">விஐபி, விவிஐபிகளின் வருகைக்காக ஆண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு</a></strong>

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டம் தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உருவான சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவரோடு பிற மாணவர்களுக்கு இருந்த கோஸ்டி மோதல் காரணமாக ஏற்பட்டது என அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்ப்பு கிளம்பியது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் என்பவர், கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இதனையடுத்து அவரை சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமுதன் உயிரிழந்தார். இது குறித்து அமுதனின் நண்பர் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-moves-resolution-in-assembly-to-keep-lok-sabha-seats-at-543-amid-delimitation-debate-97541.html">தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்</a></strong>

இச்சம்பவம் தொடர்பாக 5 கல்லூரி மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் அடையாளம் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 வயது மாணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கையாக இயந்திரங்கள், வாகனங்களை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/greater-chennai-corporation-inspects-monsoon-preparedness-equipment-ahead-of-northeast-monsoon-in-chennai-97594.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 13:29:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/greater-chennai-corporation-inspects-monsoon-preparedness-equipment-ahead-of-northeast-monsoon-in-chennai-97594.html</guid>
		            
														<description><![CDATA[தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பருவமழையை முன்னிட்டு இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/monsoon-inspection.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கையாக இயந்திரங்கள், வாகனங்களை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/6GqHJi3L-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பருவமழை முன்னெச்சரிக்கை நடமுவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பருவமழையை முன்னிட்டு இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>விஜய் சேதுபதியின் 56-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி &#8211; வைரலாகும் பதிவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/director-atlee-releases-the-poster-for-vijay-sethupathis-56th-film-and-the-post-is-going-viral-97586.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 13:15:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/director-atlee-releases-the-poster-for-vijay-sethupathis-56th-film-and-the-post-is-going-viral-97586.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vijay Sethupathis 56th Movie Name Is Baththa | பான் இந்திய மொழிகளில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது 56-வது படத்தின் தலைப்பு பத்தா என்பதை போஸ்டர் வெளியிட்டு அட்லி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/baththa-movie.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விஜய் சேதுபதியின் 56-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி &#8211; வைரலாகும் பதிவு!" /></figure>தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/vijay-sethupathi-said-i-completed-train-1-5-years-ago-due-to-some-work-and-business-it-has-been-delayed-95670.html" target="_blank" rel="noopener">நடிகர் விஜய் சேதுபதி</a>. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டு அடுத்தடுத்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் அடுத்தடுத்து தெலுங்கு, மலையளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து அடுத்தடுத்துப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கேமியோ வேடத்தில் நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி இனி அந்த மாதிரி நடிக்கப் போவதில்லை என பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

மேலும் இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் 56-வது படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநர் அட்லி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
<h3>விஜய் சேதுபதியின் 56-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட அட்லி:</h3>
அதன்படி நடிகர் விஜய் சேதுபதியின் 56-வது படத்திற்கு பத்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இவர்களின் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதாகாதி ஆகியப் படங்கள் வெளியாகி இருந்தது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/mamitha-baiju-said-i-watched-suriya-sirs-sillunu-oru-kaadhal-when-i-was-in-the-5th-grade-and-that-was-the-first-movie-of-his-that-i-ever-watched-97455.html">நான் முதன்முதாலாக பார்த்த சூர்யா சார் படம் அதுதான் – நடிகை மமிதா பைஜூ ஓபன் டாக்</a></strong>
<h3>இயக்குநர் அட்லீ வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">K-town history la nadula konjam pakkatha skip pannama paatha…

You know it’s going to be a banger when this combo reunites for the third time 🔥<a href="https://x.com/hashtag/Baththa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Baththa</a> will meet you on October 1st ❤️<a href="https://x.com/hashtag/VJSxBalajiCombo?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VJSxBalajiCombo</a><a href="https://x.com/hashtag/BaththaFromOct1?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BaththaFromOct1</a>

Makkal Selvan <a href="https://x.com/VijaySethuOffl?ref_src=twsrc%5Etfw">@VijaySethuOffl</a> <a href="https://x.com/hashtag/BalajiTharaneetharan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BalajiTharaneetharan</a>… <a href="https://t.co/ETJo60SzcL">pic.twitter.com/ETJo60SzcL</a></p>
— atlee (@Atlee_dir) <a href="https://x.com/Atlee_dir/status/2087427040517521901?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/vishnu-vishal-confirms-split-with-arunraja-kamaraj-and-the-post-goes-viral-on-social-media-97465.html">அருண்ராஜா காமராஜுடனான கூட்டணி முறிவை உறுதி செய்த விஷ்ணு விஷால் – வைரலாகும் போஸ்ட்!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தினமும் சாதம் சாப்பிட்டாலும் எடை குறையுமா?  5 முக்கிய விஷயங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/can-you-eat-rice-daily-and-still-lose-weight-2-97587.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 13:05:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/can-you-eat-rice-daily-and-still-lose-weight-2-97587.html</guid>
		            
			    	<description><![CDATA[Eat Rice Daily: தினமும் சாதம் சாப்பிட்டாலும், அதன் அளவை கட்டுப்படுத்தி காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறைப்பு இலக்கை பின்பற்ற முடியும். அதிக கலோரி கொண்ட துணை உணவுகளை குறைத்து, மொத்த தினசரி கலோரி அளவில் கவனம் செலுத்துவது முக்கியம். இதனுடன் வழக்கமான உடற்பயிற்சியையும் சேர்த்தால் ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு உதவலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/can-you-eat-rice-daily-and-still-lose-weight-2-97587.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gallery-tv9-8-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (8)" /></a></dt><p>அளவுதான் முக்கியம்
தினமும் சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்க முடியும்.
ஆனால் ஒரே நேரத்தில் அதிக அளவு சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உடலுக்குத் தேவையான கலோரிக்குள் உணவை எடுத்துக்கொள்வது முக்கியம்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/can-you-eat-rice-daily-and-still-lose-weight-2-97587.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gallery-tv9-6-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (6)" /></a></dt><p>சாதத்துடன் காய்கறிகள்
சாதத்துடன் காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
இவை நார்ச்சத்து வழங்கி நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தரும்.
இதனால் தேவையற்ற நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கம் குறையலாம்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/can-you-eat-rice-daily-and-still-lose-weight-2-97587.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gallery-tv9-7-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (7)" /></a></dt><p>புரதச்சத்து அவசியம்
சாதத்துடன் பருப்பு, பயறு, முட்டை அல்லது தயிர் போன்ற புரத உணவுகளை சேர்க்கலாம்.
புரதச்சத்து தசைகளை பராமரிக்கவும், பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சமச்சீரான உணவு உடல் எடை குறைப்பு இலக்குக்கு துணையாக இருக்கும்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/can-you-eat-rice-daily-and-still-lose-weight-2-97587.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gallery-tv9-5-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (5)" /></a></dt><p>சமைக்கும் முறையிலும் கவனம்
சாதம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்க்கப்படும் குழம்பு, பொரியல் மற்றும் வறுவலின் அளவும் முக்கியம்.
அதிக எண்ணெய், சர்க்கரை மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளை குறைப்பது நல்லது.
உணவை அளவோடு எடுத்துக்கொள்வது எடை மேலாண்மைக்கு உதவும்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/can-you-eat-rice-daily-and-still-lose-weight-2-97587.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gallery-tv9-9-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (9)" /></a></dt><p>உடற்பயிற்சியையும் சேர்க்கவும்
சரியான உணவுடன் வழக்கமான உடற்பயிற்சியும் இருந்தால் எடை குறைப்புக்கு உதவலாம்.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது தினசரி உடல் இயக்கத்தை அதிகரிக்கலாம்.
எனவே சாதத்தை முழுமையாக தவிர்ப்பதைவிட அளவோடு சாப்பிடுவது சிறந்த அணுகுமுறையாக இருக்கலாம்.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/artificial-intelligence-will-decide-whether-to-give-loan-or-not-says-rbi-governor-97569.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 12:55:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/artificial-intelligence-will-decide-whether-to-give-loan-or-not-says-rbi-governor-97569.html</guid>
		            
			

    	<description><![CDATA[Artificial Intelligence Will Decide Providing Loan | தற்போது வங்கிகளின் கடன் பெற வேண்டும் என்றால் சில அடிப்படை தகுதிகளை கொண்டு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அவற்றை பார்த்து தான் வங்கிகள் கடன் வழங்கும். ஆனால், இனி ஏஐ தான் கடனை தீர்மானிக்கப்போகிறது என ஆர்பிஐ கவர்னர் கூறியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ai-interference.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!" /></figure>இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு பண தேவை ஏற்படும்போது வங்கிகளை நாடுகின்றனர். இதற்காக வங்கிகள் தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. இவ்வாறு வங்கிகளில் கடன் பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. கடனுக்கு விண்ணப்பிக்கும் நபரிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா, அவரது கடன் வரலாறு முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகுதான் வங்கிகள் கடன் வழங்கும்.

இந்த நிலையில், இனி கடன் வழங்குவதை ஏஐ<strong> (AI - Artificial Intelligence)</strong> தான் தீர்மானிக்கப்போகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வங்கி கடன் வழங்குவதை முடிவு செய்யும் ஏஐ</h3>
மும்பையில் நடைபெற்ற தேசிய வங்கி மாநாட்டில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பங்கேற்று பேசினார். அப்போது கூறிய அவர், தற்போது பலருக்கும் முறையான கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் வரலாறு இல்லாததன் காரணமாக வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது கடினமாக உள்ளது. இந்த சிக்கலை சரிசெய்ய செயற்கை நுண்ணறிவு அம்சம் உதவி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/invest-166-rupees-daily-to-get-public-provident-fund-to-get-16-lakhs-97442.html">தினம் ரூ.166 முதலீடு செய்தால் போதும்.. ரூ.16.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?</a>
<h3>ஏஐ மூலம் எளிதாக வங்கி கடன் பெற முடியும்</h3>
தற்போதைய நிலவரப்படி ஒரு நபர் ஏற்கனவே வாங்கிய கடன்கள், கிரெடிட் கார்டு ஆகியவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு அடுத்த கடன் வழங்கப்படுகிறது. இதனால், இதுவரை கடனே வாங்காத நபர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இல்லை என கூறி வங்கிக் கடன் வழங்க மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் தான், வங்கிகளுக்கு செயற்கை நுண்ணறிவு அம்சம் உதவி செய்ய உள்ளது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/fmgc-companies-planning-to-hike-price-for-products-in-september-2026-says-source-97089.html">அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!</a>

அதாவது ஒருவர் ஜிஎஸ்டி தாக்கல் செய்த விவரங்கள், அவரது பண புழக்கம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்திய விவரங்கள் மற்றும் தரவுகளை பயன்படுத்தி கடன் பெற தகுதியான புதிய நபர்களை அடையாளம் காண வங்கிகளுக்கு ஏஐ உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு எதிர்ப்பு&#8221;.. அதிமுகவின் நிலைப்பாட்டை விளக்கிய இபிஎஸ்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-assembly-speech-delimitation-resolution-oppose-97579.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 12:53:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-assembly-speech-delimitation-resolution-oppose-97579.html</guid>
		            
			

    	<description><![CDATA[Edappadi Palaniswamy Assembly Speech: சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் 7.18% எம்பி பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை எதிர்த்த அவர், மகளிருக்கான 33% இடஒதுக்கீடு அம்சத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாகப் பிரகடனப்படுத்தினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/eps-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு எதிர்ப்பு&#8221;.. அதிமுகவின் நிலைப்பாட்டை விளக்கிய இபிஎஸ்!!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong> தமிழக சட்டமன்றத்தில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/premalatha-vijayakant-speech-tamil-nadu-assembly-delimitation-women-reservation-97556.html" target="_blank" rel="noopener">தொகுதி மறுவரையறை</a> தொடர்பான விவகாரங்களும், மகளிர்க்கான 33 சதவீத இடஒதுக்கீடு குறித்த விவாதங்களும் தீவிரமடைந்து வருகின்றன. அரசின் சார்பில் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீது அதிமுகவின் நிலைப்பாட்டைப் பதிவுசெய்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குத் தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் அதிமுக தெளிவாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசிடம் அதிமுக நடத்திய வலியுறுத்தல்கள் மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட உறுதிமொழிகளைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

<strong>இதையும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html">முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!</a></strong>
<h3>7.18% விகிதாச்சாரம் உயர்வு:</h3>
சட்டமன்றத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 7.18 சதவீத விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டிற்குப் பாதியாகக் குறையக் கூடாது என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 543 இடங்களில் தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் கொண்ட இந்த விகிதாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதன் பேரில், அவையில் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதை நினைவுகூர்ந்தார். இந்த விகிதாச்சாரம் தொடர்ந்தால், தமிழ்நாட்டிற்குத் தற்போதுள்ள 39 எம்பி இடங்களுடன் கூடுதலாக 20 இடங்கள் சேர்ந்து மொத்தம் 59 எம்பி இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
<h3>நிர்வாக வசதிக்கான தேவை:</h3>
தொடர்ந்து பேசிய அவர், பெரிய ஊராட்சிகள், ஒன்றியங்கள், வட்டங்கள் மற்றும் மாவட்டங்கள் எவ்வாறு நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்படுகின்றனவோ, அதேபோல அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளையும் சீரமைப்பதில் தவறு ஏதும் இல்லை என்று விளக்கினார். புதுச்சேரி மாநிலம் முழுமைக்குமே 10.25 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் (20.20 லட்சம்), திருவள்ளூர் (19.60 லட்சம்) போன்ற ஒரே நாடாளுமன்றத் தொகுதியிலேயே இரட்டிப்பு வாக்காளர்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை சோழிங்கநல்லூரில் மட்டும் 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே வாக்காளர் எண்ணிக்கை மற்றும் பரப்பளவின் அடிப்படையில் 7.18% பிரதிநிதித்துவம் குறையாமல் தொகுதி மறுவரையறை செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.
<h3>மகளிர் இடஒதுக்கீட்டு வரலாறு:</h3>
மகளிர் இடஒதுக்கீடு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, 1998-ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் அதிமுகவின் தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக இருந்தபோதே ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வரலாற்றைக் குறிப்பிட்டார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>

மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யாத நிலையில், அரசியல் லாபத்திற்காகவும் பரபரப்பை ஏற்படுத்தவும் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தைத் தேர்தல் காரணங்களுக்காக அதிமுக முழுமையாக எதிர்ப்பதாக அறிவித்தார். இருப்பினும், வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்ற அந்த ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாகத் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மனிதர்களைக் கண்டாலே அம்பு எய்வது ஏன்? தீவுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்தான ரகசியம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/uncontacted-tribes-earths-most-isolated-communities-and-their-survival-97580.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 12:40:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/uncontacted-tribes-earths-most-isolated-communities-and-their-survival-97580.html</guid>
		            
			

    	<description><![CDATA[Uncontacted Tribes: அந்தமான் சென்டினல் மக்கள் உட்பட உலகில் வாழும் சில பழங்குடியின சமூகங்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக வெளி நாகரிகத் தொடர்புகள் ஏதுமின்றி முற்றிலும் தனித்து வாழ்கின்றன. வெளி நபர்களால் பரவும் கொடிய நோய்களிலிருந்தும், தங்களின் பாரம்பரியப் பண்பாட்டிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இவர்கள் வெளி மனிதர்களின் வருகையைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/tribes.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மனிதர்களைக் கண்டாலே அம்பு எய்வது ஏன்? தீவுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்தான ரகசியம்!" /></figure>நவீன நாகரிக உலகத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் வாழும் மனித சமூகங்களில், அந்தமானின் 'வடக்கு சென்டினல்' தீவில் வாழும் சென்டினல் மக்கள் முதன்மையானவர்கள் ஆவர். பல்லாயிரம் ஆண்டுகளாக இவர்கள் வெளி மனிதர்களின் வருகையைத் தவிர்த்து, தங்களது சுயசார்பு இயற்கை வாழ்வியலையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர். இவர்களைத் தவிர தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளிலும், பப்புவா நியூ கினியாவிலும் சில தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினக் குழுக்கள் வாழ்கின்றன. கடந்த காலத்தில் வெளி மனிதர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், நோய்களின் பரவலுமே இவர்கள் வெளிநபர்களைக் கண்டால் அம்பு எய்து விரட்டுவதற்குக் முக்கியக் காரணமாகும். நவீன மனிதர்களின் சாதாரண தொற்று நோய்கள் கூட, நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத இந்தச் சமூகங்களை முற்றிலும் அழித்துவிடும் அபாயம் உள்ளது.

இவர்கள் காடுகளில் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் இயற்கை உணவுகளைச் சேகரித்தல் மூலமே தங்களின் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்கின்றனர். இவர்களின் தனித்துவமான வாழ்வியலைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசு வடக்கு சென்டினல் தீவைச் சுற்றி ஐந்து கடல் மைல் தூரத்திற்குச் செல்லக் கடுமையான தடை விதித்துள்ளது.
<h3>உலகின் மிகத் தனிமையான மனித சமூகம்</h3>
நவீன நாகரிக உலகத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் வாழும் பழங்குடியின மக்களில், இந்தியாவின் அந்தமான் தீவுக் கூட்டத்தில் உள்ள 'வடக்கு சென்டினல்' தீவில் வாழும் சென்டினல் மக்கள் (Sentinelese) முதன்மையானவர்கள் ஆவர். பல்லாயிரம் ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்பை முற்றிலும் தவிர்த்து, தங்களது சுயசார்பு வாழ்க்கை முறையையே இவர்கள் பின்பற்றி வருகின்றனர். இவர்களைத் தவிர தென் அமெரிக்காவின் அமேசான் காடுகள் மற்றும் பப்புவா நியூ கினியா பகுதிகளிலும் சில தனிமைப்படுத்தப்பட்ட குழுக்கள் வாழ்கின்றனர்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/5-unique-monsoon-destinations-in-india-you-must-explore-97144.html">மழைக்காலத்தில் மாயாஜாலம் காட்டும் இந்தியாவின் 5 அசத்தல் இடங்கள்!</a>
<h3>வெளிநபர்களைத் தடுப்பதற்கான வரலாற்று பின்னணி</h3>
சென்டினல் மக்கள் தங்களின் தீவை நெருங்கும் வெளிநபர்களைக் கண்டால் அம்பு எய்து விரட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் மற்றும் வெளி மனிதர்களால் பரவிய நோய்களே இவர்களின் கடும் எதிர்ப்பிற்குக் காரணம் என மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். நவீன மனிதர்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி இவர்களுக்கு இல்லாததால், சிறிய தொற்று நோய் கூட இச்சமூகத்தையே முழுமையாக அழிக்கும் அபாயம் கொண்டது.
<h3>பாரம்பரிய வாழ்வியலும் அரசின் பாதுகாப்பு விதியும்</h3>
இயற்கையோடு இயைந்து வாழும் இவர்கள், வேட்டையாடுதல், கடல் மீன்பிடித்தல் மற்றும் காட்டு உணவுகளைச் சேகரித்தல் மூலம் தங்களது வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்கின்றனர். இந்திய அரசு இவர்களின் தனித்துவமான வாழ்வியலையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், வடக்கு சென்டினல் தீவைச் சுற்றி 5 கடல் மைல் (சுமார் 9 கி.மீ) தூரத்திற்கு யாரும் செல்லக் கூடாது எனச் சட்டப்பூர்வத் தடை விதித்துள்ளது.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விரைவில் வெளியாகும் மண்டாட்டி படத்தின் 2-வது சிங்கிள் &#8211; சூரி கொடுத்த சூப்பர் அப்டேட்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/actor-soori-posted-an-x-post-about-the-mandaadi-movie-2nd-single-97573.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 12:33:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/actor-soori-posted-an-x-post-about-the-mandaadi-movie-2nd-single-97573.html</guid>
		            
			

    	<description><![CDATA[Mandaadi Movie 2nd Single Update Viral On Social Media | நடிகர் சூரி தற்போது நாயகனாக நடித்து வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/mandaadi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விரைவில் வெளியாகும் மண்டாட்டி படத்தின் 2-வது சிங்கிள் &#8211; சூரி கொடுத்த சூப்பர் அப்டேட்" /></figure>சினிமாவில் நாயகனாக நடித்து தோல்வியை சந்திப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கும் போது ஒரு பக்கம் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிறகு நாயகனாக உச்சத்தில் செல்பவர்களும் உண்டு. அந்த வகையில் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-soori-and-ravikumar-movies-entire-budget-is-said-to-be-around-rupees-60-cr-94008.html" target="_blank" rel="noopener">நடிகர் சூரி</a>. இவர் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவரது நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தற்போது அவர் நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை நடிகர் சூரி தற்போது தவிர்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல அடுத்ததாக வெளியாக உள்ள மண்டாட்டி படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
<h3>விரைவில் வெளியாகும் மண்டாட்டி படத்தின் 2-வது சிங்கிள்:</h3>
இந்தப் படத்தின் முதல் சிங்கிள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இரண்டாவதாக உருவாகி உள்ள சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இனையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/runtime-and-censor-update-for-the-movie-toxic-goes-viral-online-97434.html">இணையத்தில் வைரலாகும் டாக்ஸிக் படத்தின் ரன் டைம் மற்றும் சென்சார் அப்டேட்</a></strong>
<h3>நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">A new melody is on its way. 🎵 <a href="https://x.com/hashtag/Mandaadi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mandaadi</a> Second Single Coming Soon. 🎵❤️

A <a href="https://x.com/gvprakash?ref_src=twsrc%5Etfw">@gvprakash</a> musical 🎼<a href="https://x.com/hashtag/Mandaadi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mandaadi</a> in cinemas worldwide on September 10, 2026. 🎬🔥<a href="https://x.com/sooriofficial?ref_src=twsrc%5Etfw">@sooriofficial</a> <a href="https://x.com/hashtag/Suhas?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Suhas</a> <a href="https://x.com/hashtag/sathyaraj?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#sathyaraj</a> <a href="https://x.com/Mahima_Nambiar?ref_src=twsrc%5Etfw">@Mahima_Nambiar</a><a href="https://x.com/RavindraVijay1?ref_src=twsrc%5Etfw">@RavindraVijay1</a> <a href="https://x.com/MithunJS5?ref_src=twsrc%5Etfw">@MithunJS5</a>
<a href="https://x.com/Bala_actor?ref_src=twsrc%5Etfw">@bala_actor</a> <a href="https://x.com/Kritika_Bala?ref_src=twsrc%5Etfw">@Kritika_Bala</a><a href="https://x.com/elredkumar?ref_src=twsrc%5Etfw">@elredkumar</a>… <a href="https://t.co/ZU2x0db9fB">pic.twitter.com/ZU2x0db9fB</a></p>
— Actor Soori (@sooriofficial) <a href="https://x.com/sooriofficial/status/2087155723537113196?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/arun-matheswaran-had-initially-narrated-the-story-of-dc-to-vijay-deverakonda-who-reportedly-liked-the-script-97447.html">டிசி படத்தின் கதையை அருண் மாதேஸ்வரன் முதலில் யாருக்கு சொன்னார் தெரியுமா? வைரலாகும் தகவல்</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பயணிகள் கவனத்திற்கு! ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/special-trains-between-chennai-and-kollam-for-onam-festival-97578.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 12:32:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/special-trains-between-chennai-and-kollam-for-onam-festival-97578.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஓணம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/special-train-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பயணிகள் கவனத்திற்கு! ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/entertainment/the-bethlehem-kudumba-unit-movie-starring-nivin-pauly-has-joined-the-onam-race-96752.html" target="_blank" rel="noopener">ஓணம்</a> பண்டிகை கேரள தேசத்தினர் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த 2026 ஆம் ஆண்டு திருவோணம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 26, 2026 அன்று கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/train-services-in-southern-districts-to-be-affected-several-trains-cancelled-and-diverted-due-to-maintenance-work-97307.html" target="_blank" rel="noopener">ரயில்</a> இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்</h3>
இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஆகஸ்ட் 25, 2026 அன்று மாலை 6.30 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்படும் ஹூப்பள்ளி - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 07351) மறுநாள் மாலை 4.40 மணிக்கு கோட்டயம் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 26, 2026 அன்று இரவு 10.30 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்படும் கோட்டயம் - ஹூப்பள்ளி சிறப்பு ரயில் (எண்: 07352) மறுநாள் இரவு 8 மணிக்கு ஹூப்பள்ளி நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூரு, பிரூர் உள்ளிட்ட நிலையங்களில்
நின்று செல்லும்.

<strong>இதையும் படிக்க : “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-neet-resolution-debate-tvk-congress-and-dmk-clash-over-neet-history-97534.html">நீட்டை கொண்டு வந்தது யாருங்க?”.. சட்டசபையில் வெடித்த விவாதம்.. தவெக, காங்கிரஸ், திமுக இடையே காரசாரம்!</a></strong>
<h3>தெற்கு ரயில்வே அறிவிப்பு</h3>
<h3></h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">South Western Railway introduces Onam Festival Special Trains between Hubballi and Kottayam to make your festive travel convenient and comfortable.</p>
🎟️ Advance Reservation opens at 08:00 hrs on 30.07.2026.<a href="https://x.com/hashtag/SouthernRailway?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SouthernRailway</a> <a href="https://x.com/hashtag/IndianRailways?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IndianRailways</a> <a href="https://x.com/hashtag/Onam2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Onam2026</a> <a href="https://x.com/hashtag/Onam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Onam</a> <a href="https://t.co/yYWUnCH4IU">pic.twitter.com/yYWUnCH4IU</a>

— Southern Railway (@GMSRailway) <a href="https://x.com/GMSRailway/status/2082375790487048660?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரயில்</h3>
இதேபோல ஆகஸ்ட் 12, 2026 முதல் செப்டம்பர் 2, 2026 வரை புதன்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் -கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/erode-government-school-student-dies-of-electrocution-headmistress-suspended-97533.html">அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – பரபரப்பு தகவல்</a></strong>

மறுமார்க்கமாக, ஆகஸ்ட் 13, 2026 முதல் செப்டம்பர் 3, 2026 தேதி வரை வியாழக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் கொல்லம்-சென்னை சென்ட்ரல் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06120) மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் மாவேலிக்கரை, செங்கணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும்&#8221;.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/udhayanidhi-stalin-assembly-speech-dmk-stance-on-delimitation-and-women-reservation-97572.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 12:10:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/udhayanidhi-stalin-assembly-speech-dmk-stance-on-delimitation-and-women-reservation-97572.html</guid>
		            
			

    	<description><![CDATA[Udhayanidhi Stalin Assembly Speech: தொகுதி மறுவரையறையால் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் 25 ஆண்டுகளுக்கு இதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/udhayanidhi-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும்&#8221;.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong> தமிழக சட்டமன்றத்தில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/premalatha-vijayakant-speech-tamil-nadu-assembly-delimitation-women-reservation-97556.html" target="_blank" rel="noopener">தொகுதி மறுவரையறை</a> விவகாரம் மற்றும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த முக்கிய விவாதத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்குத் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என்பதில் திமுக தெளிவாக இருப்பதாகத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை இந்தியாவுக்கே முதன்முதலில் சுட்டிக்காட்டியது திமுகதான் என்பதை நினைவூட்டிய அவர், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் திமுக ஆட்சியில் எடுத்த தொடர் நடவடிக்கைகள் குறித்து அவையில் விரிவாகப் பேசினார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/premalatha-vijayakant-speech-tamil-nadu-assembly-delimitation-women-reservation-97556.html">“தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி-க்கள் வேண்டும்”.. தொகுதி மறுவரையறை குறித்து சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!!</a></strong></p>

<h3>திமுக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள்:</h3>
சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையக் கூடாது என முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டம், தென் மாநிலங்கள் மற்றும் பிற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுதல், மற்றும் டெல்லியில் 'நியாயமான தொகுதி மறுவரையறை' என்ற தலைப்பில் இணை நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தியது வரை திமுக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளை அவர் அடுக்கினார். இந்தக் கூட்டத்தில், 2026 மக்கள் தொகை அடிப்படையில் எம்பி தொகுதிகளை நிர்ணயித்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துவிடும் என்ற உண்மையை விளக்கிக் கூறியதை நினைவுகூர்ந்தார்.
<h3>1971 கணக்கெடுப்பே தொடர வேண்டும்:</h3>
தொகுதி மறுவரையறைப் பணிகளை அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தள்ளிவைக்க வேண்டும் என்றும், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தினார். சட்டத்திருத்தம் கொண்டு வரப்படாவிட்டால் 2027-ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு மாநில உரிமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரித்தார். அதேவேளையில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை திமுக முழுமையாக வரவேற்பதாகவும், ஒருவேளை மகளிர் இடஒதுக்கீட்டிற்காகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும், அது 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.

<strong>இதையும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html">முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!</a></strong>
<h3>மாநில உரிமையில் உறுதியான நிலைப்பாடு:</h3>
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதாச்சாரமான 7.18 சதவீதம் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானத்திற்குத் தனது முழு ஆதரவை வழங்கினார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்வீட் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல் வருமா? மருத்துவர் சொல்வது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/health/can-white-sugar-cause-acidity-in-chest-or-acid-reflux-in-body-health-tips-in-tamil-97574.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 12:09:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[உடல்நலம் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/health/can-white-sugar-cause-acidity-in-chest-or-acid-reflux-in-body-health-tips-in-tamil-97574.html</guid>
		            
			

    	<description><![CDATA[Acidity in chest : நெஞ்செரிச்சல், அஜீரணம், அல்லது வயிறு உப்புசம் என இந்தியாவில் ஏராளமான மக்கள் செரிமானக் குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். இது GRED (அமிலப் பின்னோட்டம்) என்று அழைக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், சுமார் 10 பேரில் 5 பேர் பாதிக்கப்படுகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/acid-reflux.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்வீட் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல் வருமா? மருத்துவர் சொல்வது என்ன?" /></figure>வயிற்றில் அமிலத்தன்மை திடீரெனத் தொடங்குவதில்லை. நீண்ட கால செரிமானக் குறைபாட்டிற்குப் பிறகு இது உருவாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது, மேலும் கவனிக்காமல் விட்டால், அது பல் சிதைவுக்குக்கூட வழிவகுக்கும். இது தவிர வேறு பல உடல்நலப் பிரச்சனைகளும் உள்ளன. உணவுமுறை தவறுகள் அமிலத்தன்மைக்கு நேரடியாக வழிவகுக்கின்றன. ஆனால், பொரித்த மற்றும் காரமான உணவுகளுடன் சேர்த்து இனிப்புகளைச் சாப்பிடுவதும் அமிலத்தன்மையை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது.
<h3>சர்க்கரை அமிலத்தன்மையை அதிகரிக்குமா?</h3>
இது குறித்து TV9க்கு கைலாஷ் தீபக் மருத்துவமனையின் இரைப்பை மற்றும் கல்லீரல் துறை மூத்த ஆலோசகரான டாக்டர் ஜதிந்திர சிங் போகல் கூறுகையில், சர்க்கரை சாப்பிடுவது நேரடியாக அமிலப் பின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. சர்க்கரை மட்டுமே அமிலப் பின்னோட்டத்தின் நேரடிக் காரணமாகக் கருதப்படுவதில்லை. இருப்பினும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் நிச்சயமாக உங்கள் பிரச்சனையை மோசமாக்கக்கூடும்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/the-truth-about-ors-4-dangerous-myths-you-need-to-stop-believing-97326.html" target="_blank" rel="noopener">ORS பற்றி இதெல்லாம் உங்களுக்கும் தெரியாதா? உஷார் மக்களே!</a>
<h3>அமிலத்தன்மை ஏன் ஏற்படுகிறது?</h3>
உணவுக்குழலுக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள கீழ் உணவுக்குழல் சுருக்குத்தசை பலவீனமடையும்போது அல்லது சரியாக மூடாதபோது அமிலப் பின்னோட்டம் ஏற்படுகிறது. இதனால் வயிற்று அமிலம் மீண்டும் உணவுக்குழலுக்குள் பாய்கிறது. இது நெஞ்செரிச்சல், வாயில் புளிப்புச் சுவை அல்லது அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
<h3>சர்க்கரையின் பங்கு என்ன?</h3>
கேக்குகள், பேஸ்ட்ரிகள், சாக்லேட், ஐஸ்கிரீம், இனிப்பான பானங்கள் மற்றும் பிற இனிப்புகள் போன்ற சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளில் பெரும்பாலும் கொழுப்பும் கலோரிகளும் அதிகமாக இருக்கும். இந்த உணவுகள் வயிற்றைக் காலி செய்வதை தாமதப்படுத்துகின்றன அல்லது காலப்போக்கில் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எடை அதிகரிக்கும்போது, ​​வயிற்றின் மீதான அழுத்தம் அதிகரித்து, வயிற்று அமிலம் உணவுக்குழாய்க்குள் எளிதாகப் பாய்கிறது. எனவே, சர்க்கரை மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த உணவுப் பழக்கங்களும் அமிலப் பின்னோட்டத்தை அதிகரிப்பதில் ஒரு பங்கு வகிக்கக்கூடும்.
<h3>இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்</h3>
இனிப்பு சாப்பிட்ட பிறகு உங்கள் இனிப்பு மீதான ஆசை அதிகரிப்பதை நீங்கள் கண்டறிந்தால், உங்கள் உணவு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதும், எந்தெந்த உணவுகள் உங்களுக்கு இனிப்பு ஆசையைத் தூண்டுகின்றன என்பதைக் கண்டறிய ஒரு உணவு நாட்குறிப்பைப் பராமரிப்பதும் சிறந்தது. மேலும், அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், சாப்பிட்ட பிறகு குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குப் படுப்பதைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், அடிக்கடி ஏற்படும் இனிப்பு ஆசைகளைக் கட்டுப்படுத்தவும்.

இந்த மாற்றங்களுக்குப் பிறகும் நெஞ்செரிச்சல் அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது குறையாமல் இருந்தாலோ, கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். ஏனெனில், நீண்டகால அமிலப் பின்னோட்டத்திற்கு முறையான நோயறிதலும் சிகிச்சையும் தேவைப்படலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Independence Day 2026: 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நடந்தது என்ன? வரலாற்றின் அறியப்படாத பக்கங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-untold-stories-of-indias-midnight-independence-in-1947-97559.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 11:57:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-untold-stories-of-indias-midnight-independence-in-1947-97559.html</guid>
		            
			

    	<description><![CDATA[India Independence 1947: ஜோதிடர்களின் ஆலோசனைகளாலும் ஆங்கிலேயர்களின் முடிவாலும் 1947 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது. இத்தருணத்தில் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையுடன், தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய புனிதச் செங்கோல் மூலமாக அதிகாரப் பகிர்வு முறைப்படி நடைபெற்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/india-day.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Independence Day 2026: 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நடந்தது என்ன? வரலாற்றின் அறியப்படாத பக்கங்கள்!" /></figure>பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயான லார்ட் மவுண்ட்பேட்டன், இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியை இந்தியாவின் சுதந்திர தினமாக அறிவித்தார். ஆனால், இந்திய ஜோதிடர்கள் அந்த நாளை அசுப நாளாகக் கருதியதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆங்கிலேயர்களின் முடிவை மாற்ற முடியாத நிலையில், ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட நள்ளிரவு 12 மணிக்கு அதிகாரப் பகிர்வு செய்ய ஜோதிட வல்லுநர்கள் ஒப்புக்கொண்டனர். இரவின் தொடக்கம் ஆகஸ்ட் 14 ஆகவும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகஸ்ட் 15 ஆகவும் மாறுவதால் இந்த வரலாற்று முடிவு எட்டப்பட்டது.
<h3>நள்ளிரவு நேரம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி</h3>
ஆகஸ்ட் 14, இரவு 11:00 மணிக்கு புதுடெல்லியிலுள்ள அரசியலமைப்பு மன்றக் கூடத்தில் சிறப்புச் சபை கூடியது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த ஜவஹர்லால் நேரு, வரலாற்றுச் சிறப்புமிக்க "விதியுடன் ஒரு சந்திப்பு" (Tryst with Destiny) என்ற புகழ்பெற்ற உரையை ஆற்றினார். நள்ளிரவு சரியாக 12 மணி அடித்தவுடன் சங்கு முழங்கப்பட்டு, 'வந்தே மாதரம்' பாடலுடன் சுதந்திர இந்தியாவின் பிறப்பு அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
<h3>காந்தியடிகளின் அமைதிப் போராட்டம்</h3>
நாடு முழுவதும் சுதந்திரக் கொண்டாட்டங்கள் உச்சத்திலிருந்த நள்ளிரவில், விடுதலைப் போராட்டத்தின் முதன்மைத் தலைவரான மகாத்மா காந்தி டெல்லியில் இருக்கவில்லை. மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருந்த கொல்கத்தாவின் பெலியாகட்டா பகுதியில் அமைதியை நிலைநாட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். சுதந்திரப் பிரகடன நிகழ்வில் பங்கேற்காமல், வன்முறையைக் கட்டுப்படுத்த இரவு முழுதும் அவர் மக்கள் சேவையில் ஈடுபட்டது பலரும் அறியாத ஒரு செய்தியாகும்.
<h3>தமிழ்நாட்டின் 'செங்கோல்' பாரம்பரியம்</h3>
சுதந்திரப் பகிர்வின் குறியீடாக, திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தங்கச் செங்கோல் லார்ட் மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. சோழர் காலப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, தமிழ்நாட்டின் ஆன்மீகச் சடங்குகளுடன் இந்திய அதிகாரம் கைமாறியது இந்த நள்ளிரவு நிகழ்வின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

<a href="https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-know-about-date-importance-and-history-of-freedom-struggle-in-tamil-97543.html">Also Read: Independence Day 2026: ஆங்கிலேயர்களை வெளியேற்ற வைத்த அந்த ஒரு முடிவு எது தெரியுமா?</a>
<h3>செங்கோட்டையில் ஆகஸ்ட் 16 கொடியேற்றம்</h3>
பலரும் நினைப்பது போல ஆகஸ்ட் 15 நள்ளிரவில் செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றப்படவில்லை. ஆகஸ்ட் 15 அன்று காலை நாடாளுமன்ற வளாகத்திலேயே தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற டெல்லி செங்கோட்டையில் பண்டித ஜவஹர்லால் நேரு முதல்முறையாக ஆகஸ்ட் 16, 1947 அன்று காலையிலேயே மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரியோ ராஜ் நடிப்பில் மீண்டும் ஒரு ஃபன் என்டர்டெயின்மென்ட் படம்&#8230; வெளியானது ராம் இன் லீலா படத்தின் ட்ரெய்லர் &#8211; வைரலாகும் வீடியோ</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/actor-rio-rajs-ram-in-leela-movie-trailer-out-now-97561.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 11:45:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/actor-rio-rajs-ram-in-leela-movie-trailer-out-now-97561.html</guid>
		            
			

    	<description><![CDATA[Ram In Leela Movie Trailer Out Now | தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ராம் இன் லீலா படத்தின் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ram-in-leela-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரியோ ராஜ் நடிப்பில் மீண்டும் ஒரு ஃபன் என்டர்டெயின்மென்ட் படம்&#8230; வெளியானது ராம் இன் லீலா படத்தின் ட்ரெய்லர் &#8211; வைரலாகும் வீடியோ" /></figure>தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/rio-raj-starring-ram-in-leela-movie-shooting-wrapped-67248.html" target="_blank" rel="noopener">ரியோ ராஜ்</a>. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தற்போதைய இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாவதால் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஆண் பாவம் பொல்லாதது. இந்தப் படத்தில் விவாகரத்து கோரும் மனைவி கணவனை எந்த அளவிற்கு பிரச்சனையில் சிக்க வைப்பார் என்றும் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்துகொள்ளும் பெண்கள் திருமண வாழ்க்கையை எப்படி கையாழ்கிறார்கள் என்பதை மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து இருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் மற்றும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்க உள்ள படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
<h3>வெளியானது ராம் இன் லீலா படத்தின் ட்ரெய்லர்:</h3>
ரியோ ராஜிற்கு ஜோடியாக நடிகை வர்த்திகா நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் முனிஷ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், மகபா ஆனந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன், தாஃபியா அபு, கவின் ஜிடி, நயனா எல்சா, குஷிதா கலப்பு, சூப்பர் சுப்பராயன் மாஸ்டர், சுவாமிநாதன், காத்தாடி ராமமூர்த்தி, புஜ்ஜி பாபு, பிரியங்கா நாயர், சுதன், ராஜவேல், விக்கி, விக்கி, சிவன்குமார், விக்கி அதியமான் ஏ, கண்ணன் இ என பலர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ற 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/kalathur-kannamma-the-film-that-marked-the-debut-of-ulaganayagan-kamal-haasan-as-a-child-star-has-completed-66-years-97409.html">உலக நாயகன் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன களத்தூர் கண்ணம்மா 66 ஆண்டுகளை நிறைவு செய்தது!</a></strong>
<h3>நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Meet the madness, match the mood. 🔥<a href="https://x.com/hashtag/RamInLeela?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RamInLeela</a> official trailer OUT NOW

▶️<a href="https://t.co/OfWPx8RGPD">https://t.co/OfWPx8RGPD</a><a href="https://x.com/rio_raj?ref_src=twsrc%5Etfw">@rio_raj</a> <a href="https://x.com/tridentartsoffl?ref_src=twsrc%5Etfw">@tridentartsoffl</a> <a href="https://x.com/eywaent?ref_src=twsrc%5Etfw">@eywaent</a> <a href="https://x.com/sude_v?ref_src=twsrc%5Etfw">@sude_v</a> <a href="https://x.com/sanjayvijayragh?ref_src=twsrc%5Etfw">@sanjayvijayragh</a> <a href="https://x.com/SriKumaranFilms?ref_src=twsrc%5Etfw">@srikumaranfilms</a> <a href="https://x.com/Ramachandr5017?ref_src=twsrc%5Etfw">@ramachandr5017</a> <a href="https://x.com/thinkmusicindia?ref_src=twsrc%5Etfw">@thinkmusicindia</a> <a href="https://x.com/APInternational?ref_src=twsrc%5Etfw">@apinternational</a> <a href="https://x.com/024vartika?ref_src=twsrc%5Etfw">@024vartika</a> <a href="https://x.com/i_nayan_aElza?ref_src=twsrc%5Etfw">@i_nayan_aElza</a> <a href="https://t.co/wL0S9V1PZH">pic.twitter.com/wL0S9V1PZH</a></p>
— Rio raj (@rio_raj) <a href="https://x.com/rio_raj/status/2087414189098983606?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/radhika-sarathkumar-compares-mamitha-baiju-to-sai-pallavi-in-acting-97388.html">Radhika Sarathkumar: சாய் பல்லவியை போல.. மமிதா பைஜூவின் நடிப்பு தன்னை கவர்ந்த விஷயம் குறித்து பகிர்ந்த ராதிகா சரத்குமார்!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய விதிகள்.. மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/new-rules-in-withdrawing-pf-money-from-epfo-government-explained-in-lok-sabha-97555.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 11:25:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/new-rules-in-withdrawing-pf-money-from-epfo-government-explained-in-lok-sabha-97555.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Rules In Withdrawing PF Money From EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பிஎஃப் பணம் எடுப்பது தொடர்பாக சில முக்கிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அது குறித்து மக்களவையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pf-rules.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய விதிகள்.. மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!" /></figure>இந்தியாவில் பணியாற்றும் கோடிக்கணக்கான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய அம்சமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் <strong>(EPFO - Employee Provident Fund Organization)</strong> உள்ளது. இந்த நிலையில் தான், பிஎஃப் <strong>(PF - Provident Fund)</strong> பணத்தை எடுப்பது தொடர்பான சில முக்கிய விதிகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என அனைவரும் அது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.

இந்த நிலையில், பிஎஃப் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் செய்ய உள்ளதாக அரசு கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பிஎஃப் பணத்தை எடுக்க புதிய விதிகள் - என்ன என்ன?</h3>
பிஎஃப் பணத்தை எடுப்பது தொடர்பாக மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பிஎஃப் பணத்தை எடுப்பது தொடர்பான புதிய விதிகள் குறித்து விளக்கமளித்தார். அதில், இனி ஊழியர்கள் பணியில் இருந்து விலகிய பிறகு தங்களது முழு பிஎஃப் தொகையையும் பெற 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/invest-166-rupees-daily-to-get-public-provident-fund-to-get-16-lakhs-97442.html">தினம் ரூ.166 முதலீடு செய்தால் போதும்.. ரூ.16.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?</a>
<h3>ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்கும் விதி</h3>
ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பணத்தை எடுப்பதற்கு 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த புதிய காத்திருப்பு விதிகள் அமலில் இருந்தாலும், ஊழியர்கள் தங்களது அவசர தேவைகளுக்கு பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு ஏற்ப விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/fmgc-companies-planning-to-hike-price-for-products-in-september-2026-says-source-97089.html">அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!</a>

தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது கணக்கில் உள்ள பிஎஃப் பணத்தை 75 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், எந்த காரணமும் குறிப்பிடாமலே ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி-க்கள் வேண்டும்&#8221;.. தொகுதி மறுவரையறை குறித்து சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/premalatha-vijayakant-speech-tamil-nadu-assembly-delimitation-women-reservation-97556.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 11:22:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/premalatha-vijayakant-speech-tamil-nadu-assembly-delimitation-women-reservation-97556.html</guid>
		            
			

    	<description><![CDATA[Premalatha Assembly Speech: தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்த தீர்மானங்கள் மீது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத்தில் உரையாற்றினார். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் எம்பி எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயர வேண்டும் என்றும், எம்பிக்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நிலை வரக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/premalatha-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி-க்கள் வேண்டும்&#8221;.. தொகுதி மறுவரையறை குறித்து சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-moves-resolution-in-assembly-to-keep-lok-sabha-seats-at-543-amid-delimitation-debate-97541.html" target="_blank" rel="noopener"> தமிழக சட்டமன்றத்தில்</a> தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானம் மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா ஆகிய இரு முக்கிய விவகாரங்கள் குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்றும், மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்திற்குத் தேமுதிக சார்பிலும் பெண்கள் சார்பிலும் தனது முழு ஆதரவைப் பதிவு செய்தார்.

<strong>இதையும் படிக்க: “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html">முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!</a></strong>
<h3>தமிழ்நாட்டின் எம்.பி-க்கள் எண்ணிக்கை:</h3>
சட்டமன்றத்தில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், மத்திய அரசு தொகுதி மறுவரையறை தொடர்பான அதிகாரப்பூர்வ சட்ட முன்வடிவை இதுவரை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். வெறும் மக்கள் தொகையை மட்டுமே காரணியாக வைத்துத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், பிற மாநிலங்களை விடக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்ற அச்சத்தைப் பதிவிட்டார். எனவே, மத்திய மாநில அரசுகள் கலந்து பேசி அனைத்து மாநிலங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைச் சமமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தற்போது தமிழ்நாட்டில் 39 மக்களவை உறுப்பினர்கள் உள்ள நிலையில், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயர வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தினார். தற்சமயம் 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி என்ற விகிதத்தில் பிரதிநிதித்துவம் உள்ளது. தொகுதி மறுவரையறைக்குப் பின் 7 முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி என்ற நிலை உருவானால், தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு அறிந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டுவர ஏதுவாக இருக்கும் என்று அவர் விளக்கமளித்தார்.
<h3>விஜயகாந்தின் தொலைநோக்குப் பார்வை:</h3>
தொடர்ந்து பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் குறித்துப் பேசிய பிரேமலதா, ஒரு பெண் உறுப்பினராகவும், அரசியல் கட்சியின் தலைவராகவும் இத்தீர்மானத்தை முழு மனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்தார். முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் பெண்கள் மாநாட்டை நடத்திக் காட்டியதையும், பெண்களுக்குச் சீருடை வழங்கி உரிய மரியாதை அளித்ததையும் நினைவுகூர்ந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முதுகெலும்பாக விளங்குவதால், அவர்கள் அரசியலிலும் கோலோச்ச வேண்டும் என்று குறிப்பிட்டார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து 815 ஆக உயர்த்தப்பட்டு, அதில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், பெண் எம்பிக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டிற்கும் அதிக அளவிலான பெண் எம்பிக்கள் கிடைப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் எனத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு சட்ட முன்வடிவைக் கொண்டு வர வேண்டும் என்றும், 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விஐபி, விவிஐபிகளின் வருகைக்காக ஆண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு &#8211; தமிழக அரசு அறிவிப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-government-allocates-6-85-crore-annually-for-vip-visits-across-districts-97563.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 11:17:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-government-allocates-6-85-crore-annually-for-vip-visits-across-districts-97563.html</guid>
		            
			

    	<description><![CDATA[முதலமைச்சர், அமைச்சர்களை தவிர்த்து பிற முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி ஏ பிரிவில் உள்ள கோவை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/cm-vijay-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விஐபி, விவிஐபிகளின் வருகைக்காக ஆண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு &#8211; தமிழக அரசு அறிவிப்பு" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-moves-resolution-in-assembly-to-keep-lok-sabha-seats-at-543-amid-delimitation-debate-97541.html" target="_blank" rel="noopener">முதலமைச்சர்</a>, அமைச்சர்களை தவிர்த்து பிற முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி ஏ பிரிவில் உள்ள <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-die-of-suspected-suffocation-after-anti-dengue-mosquito-spraying-in-coimbatore-97529.html" target="_blank" rel="noopener">கோவை</a>, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், பி பிரிவில் உள்ள நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், சி பிரிவில் உள்ள மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
<h3>விஐபி, விவிஐபிகளின் வருகைக்காக ஆண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு</h3>
தமிழகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தவிர்த்து முக்கிய தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் மாவட்ட ஆய்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக செல்லும்போது அவர்களுக்கான போக்குவரத்து மற்றும் உபசரிப்பு போன்றவற்றுக்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/erode-government-school-student-dies-of-electrocution-headmistress-suspended-97533.html">அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – பரபரப்பு தகவல்</a></strong>

முன்னதாக கோயில்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரும்போது, பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதில் திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வருவது தெரிந்தால் குறைந்தது ஒரு நாளைக்கு முன்பே அது குறித்து ஆணையர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் வருகை நேரம் மற்றும் அவர்களுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற முழு விவரத்தையும் கட்டாயம் அளிக்க வேண்டும். விஐபி-க்கள் வருகையின்போது, கோயில் வளாகத்துக்குள் புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.

மேலும், பிரபலங்களின் வருகையால் பொது பக்தர்களின் தரிசனத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது. அவர்களின் நுழைவு மற்றும் நடமாட்டத்தை முறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும். கோயிலின் புனிதத் தன்மை, மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் மட்டுமே விஐபி-க்களுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-debate-edappadi-palaniswami-ev-velu-protest-speaker-jcd-prabhakar-remark-97531.html"> “திமுக – அதிமுக ஒன்னா சேர்ந்துடுச்சா?”.. சபாநாயகர் கூறிய வார்த்தை.. சட்டமன்றத்தில் வெடித்த திடீர் பரபரப்பு!</a></strong>

தேவையில்லாத நபர்களைத் தவிர்க்க வேண்டும். இந்த விதிமுறைகளை அனைத்துக் கோயில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித விதிவிலக்கும் இன்றி அனைத்துச் செயல் அலுவலர்களும் மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் விஐபி கலாச்சாரத்தால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்துசமய அறநிலையத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள் ளதாகத் தெரிகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான புது ரூல்.. பஞ்சாயத்தை கிளப்பும் இரு நாடுகள்..  ஐசிசி முடிவு என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/scotland-netherlands-criticise-icc-over-2027-odi-world-cup-format-changes-sports-detail-in-tamil-97557.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:55:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/scotland-netherlands-criticise-icc-over-2027-odi-world-cup-format-changes-sports-detail-in-tamil-97557.html</guid>
		            
			

    	<description><![CDATA[2027 odi world cup :  2027 உலகக் கோப்பையின் வடிவத்தில் சூப்பர் சீரிஸ் கட்டத்தைச் சேர்த்ததன் மூலம் ஐசிசி சமீபத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. குறிப்பிட்ட நாடுகள் இதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஏன் இந்த எதிர்ப்பு என பார்க்கலாம்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/2027-odi-world-cup-format-change.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான புது ரூல்.. பஞ்சாயத்தை கிளப்பும் இரு நாடுகள்..  ஐசிசி முடிவு என்ன?" /></figure>தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள 2027 ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 18 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளது. இருப்பினும், இந்த மாபெரும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய போட்டி வடிவ மாற்றங்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. கிரிக்கெட் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை, ஐசிசியின் கடைசி நேர மாற்றங்களை ஏமாற்றமளிப்பதாகவும், அவமானகரமானதாகவும் கூறி, அவற்றுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
<h3>சர்ச்சை மற்றும் சூப்பர் சீரிஸ் என்றால் என்ன?</h3>
ஐசிசி சமீபத்தில் 2027 உலகக் கோப்பையின் வடிவத்தில் ஒரு திடீர் மாற்றத்தைச் செய்து, ஒரு சூப்பர் சீரிஸ் கட்டத்தைச் சேர்த்துள்ளது. இந்த புதிய விதியின்படி, தகுதிபெற்ற 12, 13 மற்றும் 14-வது அணிகள் ஒரு முத்தரப்புத் தொடரில் விளையாடும். அதிலிருந்து ஒரே ஒரு அணி மட்டுமே உலகக் கோப்பையின் பிரதான போட்டிக்கு முன்னேறும். அங்கு, 12 அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். இந்தத் திடீர் மாற்றம், வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பையில் தங்களை நிரூபித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளைக் கணிசமாகக் குறைக்கும் என்று அசோசியேட் நாடுகள் நம்புகின்றன.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/sports/west-indies-misses-direct-qualification-for-2027-odi-world-cup-and-play-qualifiers-full-details-in-tamil-97331.html" target="_blank" rel="noopener">5 ஐசிசி கோப்பைகளை வென்ற அணியின் மோசமான நிலை.. மீண்டும் பின்னடைவு.. எந்த அணி</a>
<h3>ஐசிசி இரண்டு வாரங்களாகப் பதிலளிக்கவில்லை.</h3>
ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து வாரியங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, போட்டி வடிவ மாற்றத்தைத் தொடர்ந்து, அசோசியேட் உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமான எழுத்துப்பூர்வ தகவல்களையும் வெளிப்படைத்தன்மையையும் கோரி ஐசிசியுடன் இரண்டு கூட்டங்களை நடத்தினர். இருப்பினும், இரண்டாவது கூட்டம் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும், ஐசிசி இன்னும் பதிலளிக்கவில்லை. அந்தக் கூட்டறிக்கையில், "முக்கிய தகுதிச் சுற்றின் நடுவில் விதிகளையும் போட்டி வடிவத்தையும் மாற்றுவது, எந்தவொரு அணியின் பல ஆண்டுகால கடின உழைப்பை வீணாக்குவதற்குச் சமம். இந்த நடவடிக்கை அசோசியேட் கிரிக்கெட்டைப் பின்னுக்குத் தள்ளுகிறது. போட்டித்தொடர் முடிய 18 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்த திடீர் மாற்றம் அணிகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளின் தலைவர்களும் உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (WCA) மூலம் இந்த முடிவுக்குத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். உலகக் கோப்பை லீக் 2-இன் கீழ் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகள் ஏற்கனவே தங்களது இடங்களை உறுதி செய்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. நமீபியா, கனடா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடும். போட்டி வடிவத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், துணை அணிகளைப் பதற்றமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? கொண்டாட்டத்தில் படக்குழு</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/actor-lokesh-kanagarajs-dc-movie-collected-50-crores-in-4-days-worldwide-97547.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:46:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/actor-lokesh-kanagarajs-dc-movie-collected-50-crores-in-4-days-worldwide-97547.html</guid>
		            
			

    	<description><![CDATA[DC Movie Boxoffice Collection For 4 Days | லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆன டிசி படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் 4 நாட்களில் எத்தனை கோடிகள் வசூலித்தது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/dc-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? கொண்டாட்டத்தில் படக்குழு" /></figure>தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்து தற்போது நாயகனாக உறுவெடுத்து உள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் முன்பு அவர் இயக்கும் படங்களில் சின்ன சின்ன கேமியோ வேடங்களில் நடித்து வந்தார். தற்போது மற்றொரு இயக்குநரின் இயக்கத்தில் நாயகனாக நடித்து உள்ளார். அதன்படி <a href="https://www.tv9tamilnews.com/entertainment/arun-matheswaran-had-initially-narrated-the-story-of-dc-to-vijay-deverakonda-who-reportedly-liked-the-script-97447.html" target="_blank" rel="noopener">இயக்குநர் அருண் மாதேஸ்வரன்</a> எழுதி இயக்கி உள்ள படம் டிசி. இந்தப் படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து உள்ளார். இந்த டிசி படத்தின் மூலமாக அவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், அவினாஷ் ரகுதேவன், ஸ்ரீகிருஷ்ண தயாள், பாலாஜி தேவிபிரசாத், ஜவஹர் சக்தி, பிரணவ் தியோபின் மற்றும் கஸ்தூரி ராஜா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படம் கடந்த 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
<h3>4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா?</h3>
தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இந்த டிசி படம் 4 நாட்களில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் 4 நாட்களில் உலக அளவில் சுமார் 50 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்ப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/the-director-has-stated-that-a-scene-in-the-movie-vishwanath-and-sons-is-based-on-an-incident-that-actually-happened-in-suriyas-life-97389.html">விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்தில் வரும் அந்த காட்சி உண்மையிலேயே சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம் – வைரலாகும் தகவல்</a></strong>
<h3>டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en"><a href="https://x.com/hashtag/DC?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DC</a> is exploding at the Box Office!💥

Watch it now in theatres near you! 🌹<a href="https://x.com/Dir_Lokesh?ref_src=twsrc%5Etfw">@Dir_Lokesh</a> <a href="https://x.com/ArunMatheswaran?ref_src=twsrc%5Etfw">@ArunMatheswaran</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/hashtag/WamiqaGabbi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WamiqaGabbi</a> <a href="https://x.com/isanjkayy?ref_src=twsrc%5Etfw">@isanjkayy</a> <a href="https://x.com/mukesh_DOP?ref_src=twsrc%5Etfw">@mukesh_DOP</a> <a href="https://x.com/editor_prasanna?ref_src=twsrc%5Etfw">@editor_prasanna</a> <a href="https://x.com/skannanartdir?ref_src=twsrc%5Etfw">@skannanartdir</a> <a href="https://x.com/PC_stunts?ref_src=twsrc%5Etfw">@PC_stunts</a> <a href="https://x.com/kabilanchelliah?ref_src=twsrc%5Etfw">@kabilanchelliah</a> <a href="https://x.com/kuchirayar73?ref_src=twsrc%5Etfw">@kuchirayar73</a> <a href="https://x.com/RIAZtheboss?ref_src=twsrc%5Etfw">@RIAZtheboss</a> <a href="https://t.co/66arYyhHE2">pic.twitter.com/66arYyhHE2</a></p>
— Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2087138361731666199?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/g-v-prakash-kumar-has-listed-the-films-he-thought-would-win-him-a-national-award-as-a-music-director-photo-gallery-97372.html">GV Prakash: எனது அந்த படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தேன் – ஜி.வி. பிரகாஷ்!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-12th-august-gold-increases-by-400-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-97549.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:37:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-12th-august-gold-increases-by-400-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-97549.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price In Chennai Today | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையி, வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-32.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12 :</strong> ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 12, 2026) தங்கம் விலை <strong>(Gold Price)</strong> மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் <strong>(Silver Price)</strong> மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்தித்து வரும் தங்கம்</h3>
ஜூன் மாதத்தில் கடும் உயர்வை சந்தித்து வந்த தங்கம் ஒரு கிராம் ரூ.15,000-ல் இருந்து ரூ.13,000 ஆக குறைந்தது. பின்னர் ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும், தங்கம் விலை ரூ.14,000-த்தை தாண்டாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் தான், ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை ரூ.14,000-த்தை கடந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/fmgc-companies-planning-to-hike-price-for-products-in-september-2026-says-source-97089.html">அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!</a>

ஈரான் போர் சற்று தணிந்துள்ளது, அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தபோவதில்லை என தகவல் வெளியாகி வருவது இவை அனைத்தும் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்ப செய்துள்ளதன் காரணமாக தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Independence Day 2026: ஆங்கிலேயர்களை வெளியேற்ற வைத்த அந்த ஒரு முடிவு எது தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-know-about-date-importance-and-history-of-freedom-struggle-in-tamil-97543.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:34:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/indian-independence-day-know-about-date-importance-and-history-of-freedom-struggle-in-tamil-97543.html</guid>
		            
			

    	<description><![CDATA[Independence Day 2026: பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. காந்தியடிகள், நேதாஜி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வ.உ.சி, பாரதியார் போன்ற பல தியாகிகளின் தியாகத்தால் சாத்தியமான இந்நாளில் தில்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/india.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Independence Day 2026: ஆங்கிலேயர்களை வெளியேற்ற வைத்த அந்த ஒரு முடிவு எது தெரியுமா?" /></figure>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது. 1947 ஆம் ஆண்டு இதே நாளில், சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவிற்கு முழுமையான விடுதலை கிடைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் தில்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்ற பல முன்னணித் தலைவர்கள் வீரியமிக்கப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்ற தியாகிகளும் விடுதலைக் கனவை வளர்த்தெடுக்க முக்கியப் பங்காற்றினர்.

அகிம்சை, ஒத்துழையாமை மற்றும் வெள்ளையனே வெளியேறு போன்ற மக்கள் இயக்கங்கள் ஆங்கிலேயரின் ஆட்சியை வீழ்த்தி நாட்டிற்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன. இந்நாள் நமது நாட்டின் தேசபக்தியை புதுப்பிப்பதோடு, வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாகவும் போற்றப்படுகிறது.
<h3>சுதந்திர தினத் தேதி மற்றும் அறிவிப்பு</h3>
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக உதயமானது. இந்நாளில் தில்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவது வழக்கமாகும்.
<h3>நீண்ட விடுதலைப் போராட்ட வரலாறு</h3>
இந்தியாவின் சுதந்திரம் என்பது எளிதில் கிடைத்த ஒன்று அல்ல; தியாகங்கள் நிறைந்த நீண்ட போராட்டத்தின் முடிவாகும். 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் தொடங்கி, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்ற தலைவர்களின் தீவிரப் போராட்டங்கள் வரை இந்திய விடுதலை இயக்கம் தீவிரமடைந்தது. அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார் போன்ற முன்னோடிகளும் சுதந்திரக் கனவை வளர்த்தெடுத்தனர். அகிம்சை, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற தொடர் மக்கள் போராட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சியை அதிர வைத்தன.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/india/independence-day-2026-flag-code-rules-to-remember-before-hoisting-the-tricolour-97383.html">ஆகஸ்ட் 15ம் தேதி மூவண்ணக்கொடி ஏற்றுவீர்களா? இந்த ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க!</a>
<h3>நாட்டின் சுதந்திர தின முக்கியத்துவம்</h3>
இந்த நாள் வெறும் விடுமுறை தினம் மட்டுமல்ல; உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாகும். நமது நாட்டின் ஜனநாயக மதிப்புகள், அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை நினைவு கூர்வதோடு, ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வலுப்படுத்தும் உன்னத நாளாகவும் இது திகழ்கிறது. அகிம்சை, ஒத்துழையாமை மற்றும் வெள்ளையனே வெளியேறு போன்ற மக்கள் இயக்கங்கள் ஆங்கிலேயரின் ஆட்சியை வீழ்த்தி நாட்டிற்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன. இந்நாள் நமது நாட்டின் தேசபக்தியை புதுப்பிப்பதோடு, வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாகவும் போற்றப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/mumbai-kurla-landslide-gaushiya-chawl-death-toll-updates-97539.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:24:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/mumbai-kurla-landslide-gaushiya-chawl-death-toll-updates-97539.html</guid>
		            
			

    	<description><![CDATA[Mumbai Landslide: மும்பை குரலா அருகே உள்ள காவ்ஷியா சாவ்ல் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். சுமார் 4 முதல் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/land-slide.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!" /></figure><strong>மும்பை, ஆகஸ்ட் 12:</strong> மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை, மாநகரின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. குறிப்பாக, தாழ்வான மற்றும் குன்றுப் பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இந்த மழை மாறியுள்ளது. இந்தச் சூழலில், இன்று புதன்கிழமை (ஆக.12) அதிகாலை மும்பையின் குரலா மேற்குப் பகுதியில் உள்ள சிராக் நகர், காவ்ஷியா சாவ்ல் குடியிருப்பின் மீது மலைப் பகுதி சரிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/india-ev-industry-to-create-more-than-4-crore-jobs-by-2030-know-more-in-details-97187.html">2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை</a></strong>
<h3>சம்பவம் நடந்த விதம்:</h3>
இன்று அதிகாலை சுமார் 3:48 மணியளவில், மும்பையின் சிராக் நகர் பகுதியில் உள்ள காவ்ஷியா சாவ்ல் குடியிருப்பில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழையினால் நனைந்து பலவீனமடைந்திருந்த மலைப்பகுதியின் ஒரு பகுதி, மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் குடியிருப்புகள் மீது திடீரெனச் சரிந்து விழுந்தது. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்தச் சம்பவம் 'நிலை-2' பேரிடராக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
<h3>காயமடைந்தவர்கள் விவரம்:</h3>
இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த இருவர் சகில் அன்சாரி (28), முகமது சமீர் (14) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், காயமடைந்த சோஹேல் அன்சாரி (18) மற்றும் முகமது அன்சாரி (14) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, குரலாவில் உள்ள பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
<h3>தீவிரமடைந்த மீட்புப் பணிகள்:</h3>
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மும்பை தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சுமார் 4 முதல் 6 பேர் வரை இன்னும் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். மும்பை மாநகராட்சி மேயர் ரிது தாவ்டே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/pm-narendra-modi-meets-and-hosts-cwg-2026-medal-winner-indian-athletes-in-his-residence-video-here-97096.html">சாதித்த இந்தியர்கள்.. காமன்வெல்த் பதக்கம் வென்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி</a></strong>
<h3>மற்றொரு துயர சம்பவம்:</h3>
நிலச்சரிவு அபாயம் உள்ள இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழைக் காலத்திற்கு முன்பே வீடுகளைக் காலி செய்யும்படி மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர் மழையினால் நேற்று இரவு மும்பையின் வைல் பார்லே பகுதியில் உள்ள 12 மாடி கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்கள் மும்பை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை ..மரபுச் சின்னம் என பிரதமர் மோடி புகழாரம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/pm-modi-releases-ram-nath-kovind-autobiography-recalls-former-presidents-guidance-97544.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:21:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/pm-modi-releases-ram-nath-kovind-autobiography-recalls-former-presidents-guidance-97544.html</guid>
		            
			

    	<description><![CDATA[முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கைப் பயணமும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் முக்கியமானவை என்று பிரதமர் மோடி கூறினார். நான் விரிவாகப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், இந்தப் புத்தக வெளியீடு ஒரு முன்னோட்டமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pm-modi-releases-ram-nath-kovind-autobiography.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை ..மரபுச் சின்னம் என பிரதமர் மோடி புகழாரம்" /></figure>பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையான 'இந்தியக் குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்' என்ற நூலை புதன்கிழமை வெளியிட்டார். புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவரின் போராட்டங்களை விவரித்ததோடு, அவரது புத்தகம் ஜனநாயகத்திற்கு ஒரு மரபுச் சின்னமாக அமையும் என்றும் கூறினார். இளைய தலைமுறையினர் இந்நூலைப் படிக்க வேண்டும் என்றார்.

மேலும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவருடைய வாழ்க்கைப் பயணத்தை அவருடைய சொந்த வார்த்தைகள், எழுத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம் அறிந்து, நாட்டின் புதிய தலைமுறையினர் அவற்றைப் படிக்கட்டும். இதிலிருந்து அனைவரும் நிறைய கற்றுக்கொள்வார்கள். இந்த சுயசரிதைக்காக கோவிந்திற்கு எனது வாழ்த்துகள். நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாகப் போராடினார்கள். மகாத்மா காந்தி, பாபா சாகேப் அம்பேத்கர், ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே என எத்தனையோ மாபெரும் ஆளுமைகள் இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்பக் கனவு கண்டனர். ஏழையிலும் ஏழையான, மிகவும் நலிவடைந்த மக்கள்கூட உச்சத்தை அடைய வாய்ப்புள்ள ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு" என்றார்.

"கோவிந்த் போன்ற தனிநபர்கள், தங்களின் கடின உழைப்பு மற்றும் திறமையின் மூலம், தங்கள் சொந்த வாழ்க்கையை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், பல நூற்றாண்டுகள் பழமையான அந்தக் கனவையும் தொலைநோக்குப் பார்வையையும் நனவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இந்தத் திசையில் எங்களின் முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன," என்று பிரதமர் கூறினார்.
<h3>இந்தப் புத்தகம் ஜனநாயகத்தின் ஒரு மரபுச் சின்னமாக மாறும்: மோடி</h3>
முன்னதாக, புத்தக வெளியீட்டிற்குப் பிறகு பிரதமர் மோடி கூறுகையில், "இன்று ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையை வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு கோவிந்தை நீண்ட காலமாகத் தெரியும், அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. குடியரசுத் தலைவராக அவர் அளித்த வழிகாட்டுதலும், என் மீது அவர் காட்டிய சிறப்புப் பாசமும் அன்பும் எனக்குப் பெரும் சொத்தாக அமைந்துள்ளன. அவரது வாழ்க்கையையும் சாதனைகளையும் நான் புரிந்துகொண்ட நிலையில், கோவிந்தின் சுயசரிதை இந்திய ஜனநாயகத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் ஒரு பொக்கிஷமாக அமையும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்," என்றார்

முன்னதாக, நேற்று பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த சுயசரிதையின் வெளியீடு, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட பொதுத்துறை ஆளுமைகளில் ஒருவரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பை நினைவுகூரும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என்று கூறப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதியின் சுயசரிதையானது, அவரது இளமைக் காலம் முதல் புகழ்பெற்ற பொது வாழ்க்கை, பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக அவர் ஆற்றிய சேவை வரை, அவரது அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை உள்ளடக்கி, அவரது புகழ்பெற்ற வாழ்க்கைப் பயணத்தின் ஒரு ஆழமான தனிப்பட்ட விவரத்தை வழங்குகிறது.

கோவிந்தின் வாழ்க்கைப் பயணத்தையும் பொதுச் சேவையையும் , அனுபவங்கள் மற்றும் சூழ்நிலைகளை இந்நூல் ஆராய்கிறது.
<h3>வீடியோ</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Speaking at the release of 'Triumph of the Indian Republic: My Life, My Struggles,' the autobiography of former President Shri Ram Nath Kovind Ji. His journey reflects a life dedicated to public service and the progress of our nation.<a href="https://x.com/ramnathkovind?ref_src=twsrc%5Etfw">@ramnathkovind</a>
<a href="https://t.co/SCsPxznLG7">https://t.co/SCsPxznLG7</a></p>
— Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2087394225193398783?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-moves-resolution-in-assembly-to-keep-lok-sabha-seats-at-543-amid-delimitation-debate-97541.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 09:51:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-moves-resolution-in-assembly-to-keep-lok-sabha-seats-at-543-amid-delimitation-debate-97541.html</guid>
		            
			

    	<description><![CDATA[மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் ஜோசப் விஜய் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/cm-vijay-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12 :</strong> மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">முதல்வர் ஜோசப் விஜய்</a> அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.
<h3>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்</h3>
தீர்மானம் நிறைவேற்றிய பிறகு பேசிய அவர், பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுடைய ஜனநாயக உரிமை. ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயர்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது ஒரு நாடே உயர்கிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள மசோதா 50% இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை உயர்த்தினாலும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுக்கு பின் நடைபெறும் தொகுதி மறுவரையில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்களவையில் தற்போதுள்ள எண்ணிக்கையே அப்படியே இருக்க வேண்டும் என்றார்.

<strong>இதையும் படிக்க : “<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html">முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!</a></strong>

தொடர்ந்து பேசிய அவர், நாட்டு மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள் தான். அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும். நம் வீட்டு பெண்கள் அரசியலில் முன்னேற இட ஒதுக்கீடு தர வேண்டும். மக்கள் தொகுதி கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டாலும், அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஆகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை காரணம் காட்டி நிறுத்தக் கூடாது என்றார்.

கடந்த 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>

எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக தொடர்வதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைப்பைத உறுதி செய்ய வேண்டும். அதே நேரம், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது என்றார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இன்றைய சூரியகிரகணம் சிறப்பு வாய்ந்ததா? கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக விஷயங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/religion/surya-grahanam-tamil-tips-read-solar-eclipse-guidelines-should-be-followed-97537.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 09:35:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/religion/surya-grahanam-tamil-tips-read-solar-eclipse-guidelines-should-be-followed-97537.html</guid>
		            
			

    	<description><![CDATA[Solar Eclipse 2026: கடக ராசியில் நிகழும் சூரிய கிரகணம் என்பது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். இது சில ராசிகளில் ஆழமான ஜோதிட ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, மன மற்றும் நிதி ரீதியான பாதிப்புகளைத் தவிர்க்க அவசரப்படுவதைத் தவிர்க்கவும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/surya-grahanam-tamil-tips.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இன்றைய சூரியகிரகணம் சிறப்பு வாய்ந்ததா? கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக விஷயங்கள்!" /></figure>இன்று வரவுள்ள சூரிய கிரகணம், ஐரோப்பா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இன்று தெளிவாகத் தெரியவரும் என்பதால், இந்த சூரிய கிரகணம் மிகவும் அரிதான மற்றும் விசேஷமான ஒன்றாகும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த கிரகணம் கடக ராசியில் நிகழ்கிறது. இதன் விளைவாக, இதன் தாக்கங்களை உலகளவில் மற்றும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு உணர முடியும். இந்த கிரகணம் ராசிக்காரர்களின் மன மற்றும் நிதி வாழ்க்கையைப் பாதிக்கிறது, எனவே இந்த நேரத்தில் எந்தவொரு வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நாளை முறையான தகவல்களுடனும் எச்சரிக்கையுடனும் அனுசரிப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.
<h3>கிரகணத்தின் விளைவுகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</h3>
இந்த முழு சூரிய கிரகணம் இந்தியாவைப் பாதிக்காது என்றாலும், அதன் விளைவுகள் வெவ்வேறு ராசிகளின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும். இதன் தாக்கம் முதன்மையாக மக்களின் மன மற்றும் நிதி வாழ்க்கையில் உணரப்படும். இதனால்தான் இந்த நேரத்தில் எந்தவொரு பெரிய அல்லது முக்கியமான முடிவுகளையும் அவசரமாக எடுக்கக்கூடாது. எந்தவொரு சிக்கலையும் தவிர்க்க, ஒவ்வொரு செயலையும் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். கிரகணத்தின் போது அமைதியான மனதைப் பேணுவது மிகவும் அவசியம். ஒருவர் நிதானத்தைக் கடைப்பிடித்து, எந்தவிதமான மன அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், கிரகணத்தின் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

Also Read : <a href="https://www.tv9tamilnews.com/religion/solar-eclipse-rasipalangal-impact-on-zodiac-signs-explained-in-tamil-96584.html" target="_blank" rel="noopener">சூரிய கிரகணம் ராசிபலன்.. இந்த 3 ராசிகள் கவனமா இருக்கணும்!</a>
<h3>கிரகணத்தின் போது உச்சரிக்க வேண்டிய முக்கியமான மந்திரங்கள்</h3>
கிரகணத்தின் போது மன அமைதியைப் பேணுவதற்கு, மத விதிகளைப் பின்பற்றுவது மிகவும் நல்லது எனக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில், "ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி தன்னோ சூர்யஹ ப்ரசோதயாத்" என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும். மேலும், மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை மனதிற்குள் உச்சரிப்பதும் மிகவும் நன்மை பயக்கும். கிரகணத்தின் போது, ​​மந்திரத்தை சத்தமாக உச்சரிப்பதை விட மனதிற்குள் ஓதுவது சிறந்தது. இந்த முறையில் மந்திரங்களை உச்சரிப்பது மனதில் நேர்மறை ஆற்றலைப் பேணுவதோடு, கிரகணத்தின் எதிர்மறை விளைவுகளையும் குறைக்கிறது. எனவே, இந்த புனிதமான நேரத்தில் ஒருவர் இறைவனின் நாமத்தை இடைவிடாமல் நினைவில் கொள்ள வேண்டும்.
<h3>கிரகணம் முடிந்த பிறகு நன்கொடைகள் மற்றும் சடங்குகள்</h3>
<ul>
 	<li>கிரகணம் முடிந்த பிறகு சில பொருட்களை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.</li>
 	<li>கோதுமை, வெல்லம், செப்புப் பாத்திரங்கள் அல்லது சிவப்பு நிற ஆடைகளை கிரகணம் முடிந்த உடனேயே தானம் செய்ய வேண்டும்.</li>
 	<li>தேவைப்படுபவர்களுக்கு இந்தப் பொருட்களை தானம் செய்வது மங்களகரமான பலன்களைத் தருவதோடு, வாழ்க்கையில் உள்ள தடைகளையும் நீக்குகிறது.</li>
 	<li>தானம் செய்வதற்கு முன் ஒருவர் குளித்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றி, கிரகணத்திற்குப் பிறகு தானம் செய்வது, கிரகணத்தின் விளைவுகளைச் சமன் செய்யவும், வீட்டில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டவும் உதவுகிறது.</li>
 	<li>இந்த விஷயங்களை மனதில் கொள்வது, கிரகணத்தின் போது ஒரு வெற்றிகரமான அனுபவத்தை உறுதி செய்ய உதவும்.</li>
</ul>
<em>பொறுப்புத்துறப்பு: இந்தச் செய்தியில் உள்ள தகவல்கள் மத நம்பிக்கைகள் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை</em> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;நீட்டை கொண்டு வந்தது யாருங்க?&#8221;.. சட்டசபையில் வெடித்த விவாதம்.. தவெக, காங்கிரஸ், திமுக இடையே காரசாரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-neet-resolution-debate-tvk-congress-and-dmk-clash-over-neet-history-97534.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 08:52:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-neet-resolution-debate-tvk-congress-and-dmk-clash-over-neet-history-97534.html</guid>
		            
			

    	<description><![CDATA[NEET Exemption Resolution: தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு தனித்தீர்மானம் மீதான விவாதத்தில், "நீட் தேர்வை நாட்டிற்குள் கொண்டு வந்தது யார்?" என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசாரமான வார்த்தைப் போர் வெடித்தது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்கு பெறப்பட்ட வரலாறு குறித்து அவையில் விரிவாக விளக்கப்பட்டது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/aadhav-arjuna-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;நீட்டை கொண்டு வந்தது யாருங்க?&#8221;.. சட்டசபையில் வெடித்த விவாதம்.. தவெக, காங்கிரஸ், திமுக இடையே காரசாரம்!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-debate-edappadi-palaniswami-ev-velu-protest-speaker-jcd-prabhakar-remark-97531.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றத்தில்</a> மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி உரிமை தொடர்பான நீட் விலக்கு குறித்த விவாதம் நடைபெறும் போது, அது குறித்த விவாதங்கள் அவையைச் சூடேற்றுவது வழக்கமாகும். அந்த வகையில், சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நீட் விலக்கு தனித்தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்கள், இதில் அரசியல் வேண்டாம் என்றும் மாணவர்களின் எதிர்காலப் பிரச்சினையை ஒருமனதாக அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இருப்பினும், நீட் தேர்வு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணி, கடந்த காலத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் நீட் வரலாற்றுப் பதிவுகள் குறித்துத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே அவையில் கடுமையான காரசார விவாதம் வெடித்தது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html">“முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!</a></strong>
<h3>தவெக உறுப்பினரின் விமர்சனமும் கேள்விகளும்:</h3>
விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாமல் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்ததுடன், திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது என்ற பழைய வரலாறுகளைப் பேச விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தேர்தலுக்கு முன்பே நீட் பாதிப்புகள் குறித்து குரல் கொடுத்ததையும், அனிதா மரணத்திற்கு நேரில் சென்றதையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர், சமீபத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட சேலம் கோபிகா, தர்மபுரி ரோஷினி, கிருஷ்ணகிரி வெற்றி ஆனந்தன் ஆகிய மூன்று தமிழ்நாட்டு மாணவர்கள் உயிரிழந்த போது அரசு சார்பில் யார் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள் எனக் கேள்வி எழுப்பி அவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
<h3>காங்கிரஸ் - திமுக அளித்த வரலாற்று விளக்கம்:</h3>
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட வரலாறு குறித்து அவையில் தெளிவுபடுத்தினர். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுகவின் காந்தி செல்வன் இணையமைச்சராக இருந்தபோது அவர்தான் நீட் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார் என்ற கூற்றை மறுத்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போதைய சுகாதாரத் துறை மூத்த அமைச்சர் குலாம் நபி ஆசாத் தான் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார் என்றும், அப்போது மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவும், தமிழக முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு ஒத்து வராது எனக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினர் என்றும் எ.வ.வேலு சுட்டிக்காட்டினார்.

<strong>இதையும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html"> அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>
<h3>தமிழ்நாட்டிற்குப் பெறப்பட்ட விலக்கு:</h3>
கலைஞரின் உறுதியான எதிர்ப்புக் காரணமாகவே, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக உத்தரவாதம் அளித்ததாகவும், அதனால் கலைஞர் ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு நுழையவே இல்லை என்றும் திமுக சார்பில் பெருமிதத்துடன் பதிவு செய்யப்பட்டது. தங்கள் தரப்பில் நீட் தேர்வு எப்போதுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவையில் முன்வைத்து, இந்த விவாதத்தை உறுப்பினர்கள் நிறைவு செய்தனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி &#8211; தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்  &#8211; பரபரப்பு தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/erode-government-school-student-dies-of-electrocution-headmistress-suspended-97533.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 08:40:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/erode-government-school-student-dies-of-electrocution-headmistress-suspended-97533.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஈரோடு மாவட்டம் பவானி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/school-student-died.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி &#8211; தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்  &#8211; பரபரப்பு தகவல்" /></figure><strong>ஈரோடு, ஆகஸ்ட் 12 :</strong> ஈரோடு மாவட்டம் பவானி அருகே <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chicken-biryani-in-school-nutritious-meal-scheme-proposal-tamil-nadu-govt-decision-94228.html" target="_blank" rel="noopener">அரசு உயர்நிலைப் பள்ளியில்</a> 6 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே குசி்சிப்பாளையம் என்ற ஊரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
<h3>அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி</h3>
இந்த பள்ளியில் ஏமம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பவர் 6 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் ஆகஸ்ட் 11, 2026 நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது மதிய உணவுக்கு பின் குடிநீர் குழாயில் டிபன் பாக்ஸ் கழுவ சென்றுள்ளார். பள்ளியில் தண்ணீர் வராததால், அருகிலுள்ள அரசு துவக்கப்பள்ளிக்கு யோகேஷ் சென்றிருக்கிறார். அப்போது தண்ணீரில் மின்சார வயர் அறுந்து விழந்திருக்கிறது. இதனை கவனிக்காத யோகேஷ் அதில் காலை வைத்திருக்கிறார். அதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-warns-of-moderate-rain-in-tamil-nadus-western-ghats-districts-on-august-12-and-13-97522.html">தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14 வரை தொடரும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை</a></strong>

அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மயிலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதனையடுத்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்த சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலாவை இடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குச்சிப்பாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>

இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த ஈரோடு ஆட்சியர் கந்தசாமி, பவானியில் அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவத்தில் விசாரணைக்காக 2 குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவன் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரி மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். ஒருவர் உயிரிழந்தாலும் சாதாரணமாக எடுத்து கொள்ளமாட்டோம் என்று தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;திமுக &#8211; அதிமுக ஒன்னா சேர்ந்துடுச்சா?&#8221;.. சபாநாயகர் கூறிய வார்த்தை.. சட்டமன்றத்தில் வெடித்த திடீர் பரபரப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-debate-edappadi-palaniswami-ev-velu-protest-speaker-jcd-prabhakar-remark-97531.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 08:26:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-debate-edappadi-palaniswami-ev-velu-protest-speaker-jcd-prabhakar-remark-97531.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Assembly: தமிழக சட்டமன்றத்தில் "திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன" என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறிய கருத்து பெரும் புயலைக் கிளப்பியது. இந்த கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் எ.வ. வேலுவும் அவையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து விவாதம் ஓய்ந்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/assembly.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;திமுக &#8211; அதிமுக ஒன்னா சேர்ந்துடுச்சா?&#8221;.. சபாநாயகர் கூறிய வார்த்தை.. சட்டமன்றத்தில் வெடித்த திடீர் பரபரப்பு!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில்</a> பல்வேறு மக்கள் பிரச்சினைகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதங்கள் சூடுபிடித்து வருகின்றன. அந்த வகையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியதைத் தொடர்ந்து, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்தச் சூழலை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன" என்ற தொனியில் கூறிய கருத்து அவையில் பெரும் புயலைக் கிளப்பியது. சபாநாயகரின் இந்த பேச்சைக் கேட்டு ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பு உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் கொந்தளித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவிட்டனர்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html">“முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!</a></strong></p>

<h3>அவையில் வெடித்த அமளியும் சபாநாயகரின் கருத்தும்:</h3>
சட்டமன்றத்தில் சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது பேச்சின் நிறைவில் தவெக அமைத்த கூட்டணிக் குறித்து மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக எம்.எல்.ஏ முக்கூர் சுப்பிரமணியன் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்ததற்குச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கண்டனம் தெரிவித்தார். அந்தச் சூழலில், அவையைக் கட்டுப்படுத்த முற்பட்ட சபாநாயகர், திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தக் கருத்து இரு தரப்புக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
<h3>எ.வ. வேலு மற்றும் இபிஎஸ்-ன் கொந்தளிப்பு:</h3>
சபாநாயகரின் இந்த பேச்சுக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்த திமுக கொறடா மற்றும் அமைச்சருமான எ.வ. வேலு, "திமுகவும் அதிமுகவும் ஒன்றாகச் சேர வேண்டிய அவசியம் எக் காலத்திலும் எங்களுக்கு இல்லை; அது எங்களுக்குத் தேவையில்லாத ஒன்று" எனக் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், அதிமுக உறுப்பினர்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைச்சர்கள் பேசுவதாகவும், சபாநாயகர் நடுநிலையாகத் தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர, இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்துவிட்டதாகக் கூறக் கூடாது என்றும் வலியுறுத்தினார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எழுந்து நின்று, "எந்தக் காலத்திலும் அதிமுக திமுகவுடன் ஒன்றாகச் சேர்ந்ததில்லை. சபாநாயகர் இருந்த காலத்திலும் நாங்கள் சேர்ந்ததில்லை, நாங்கள் இருக்கும் காலத்திலும் சேர்ந்ததில்லை" எனத் திட்டவட்டமாக விளக்கம் அளித்தார்.

<strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">இதையும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>
<h3>சபாநாயகர் அளித்த தெளிவுரை:</h3>
இரு தரப்பு தலைவர்களும் ஒரே நேரத்தில் சபாநாயகரின் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது. நிலைமையைப் புரிந்துகொண்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அவையில் ஒரு விவாதத்தின் போது திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருமே ஒன்றாக எழுந்து நின்று பேசியதால் அப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறினார். தன்னுடைய பேச்சுக்கு வேறு எந்த அரசியல் அர்த்தத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட சபாநாயகர், அவையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Hockey WC 2026: ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை.. முழு அட்டவணை விவரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/2026-mens-and-womens-hockey-world-cup-full-group-stage-schedule-details-97514.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 08:00:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/2026-mens-and-womens-hockey-world-cup-full-group-stage-schedule-details-97514.html</guid>
		            
			

    	<description><![CDATA[2026 Mens and Womens Hockey World Cup Schedule: ஆண்கள் போட்டியைப் போலவே, மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையிலும் தலா 4 அணிகள் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 16 அணிகள் இடம்பெறும். குழு A-வில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு B-யில் அர்ஜென்டினா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/hockey-wc-2026.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Hockey WC 2026: ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை.. முழு அட்டவணை விவரம்!" /></figure>2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 16-வது ஹாக்கி உலகக் கோப்பைக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இப்போட்டித் தொடர் 2026 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்குகிறது. மகளிர் மற்றும் <a href="https://www.tv9tamilnews.com/sports/indian-hockey-team-name-a-20-member-squad-for-the-2026-asian-games-94269.html">ஆடவர் அணிகளுக்கான</a> போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறும். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக, இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் 2026 ஆகஸ்ட் 15 முதல் 2026 ஆகஸ்ட் 30 வரையிலான ஒரே காலகட்டத்தில் கூட்டாக நடைபெறவுள்ளன. ஆண்கள் மற்றும் மகளிர் <a href="https://www.tv9tamilnews.com/sports/fih-mens-hockey-world-cup-2026-india-vs-pakistan-date-timing-all-details-here-95763.html">ஹாக்கி உலகக் கோப்பை</a> <strong>(FIH World Cup 2026)</strong> போட்டிகளில் தலா 16 அணிகள் பங்கேற்கும். லீக் போட்டிகள் 2026 ஆகஸ்ட் 15 முதல் 20 வரை நடைபெறும். அதன்பிறகு, கிராஸ்ஓவர் போட்டிகள் 2026 ஆகஸ்ட் 21 முதல் 24 வரை நடைபெறும். அரையிறுதிப் போட்டிகளில் ஒரு சிறிய மாற்றம் உள்ளது.

மகளிர் அரையிறுதிப் போட்டிகள் 2026 ஆகஸ்ட் 27-ஆம் தேதியும், ஆண்கள் அரையிறுதிப் போட்டிகள் 2026 ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டியிலும் ஒரு சிறிய மாற்றம் உள்ளது. மகளிர் இறுதிப் போட்டி 2026 ஆகஸ்ட் 29 ஆம் தேதியும், ஆண்கள் இறுதிப் போட்டி 2026 ஆகஸ்ட் 30 ஆம் தேதியும் நடைபெறும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/fih-mens-hockey-world-cup-2026-india-vs-pakistan-date-timing-all-details-here-95763.html">ஹாக்கி உலகக் கோப்பை.. இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது..?</a>
<h3>ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2026</h3>
ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் உள்ளன. இவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு A-வில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு B-யில் பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு C-யில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு D-யில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இருப்பதால், குழுநிலைப் போட்டிகளில் அவை ஒன்றையொன்று எதிர்கொள்ளும்.
<h3>இந்திய ஆண்கள் அணி போட்டிகள்</h3>
<ul>
 	<li>15 ஆகஸ்ட் 2026, இந்தியா - வேல்ஸ், மாலை 4:30 மணி</li>
 	<li>17 ஆகஸ்ட் 2026, இந்தியா - இங்கிலாந்து போட்டி, மாலை 6:30 மணி</li>
 	<li>19 ஆகஸ்ட் 2026, இந்தியா - பாகிஸ்தான், மாலை 6:30 மணி</li>
</ul>
<h3>மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை 2026</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The countdown is almost over. The challenge is set. 🇮🇳🏑

Here's the road that awaits the Indian Men's and Women's Hockey Teams in the pool stage of the FIH Hockey World Cup Belgium &amp; Netherlands 2026.

📺 Star Select 2 (SD+HD) + Khel &amp; JioHotstar
🗓️ August 15–30<a href="https://x.com/hashtag/HockeyIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HockeyIndia</a>… <a href="https://t.co/RLubPPxPCm">pic.twitter.com/RLubPPxPCm</a></p>
— Hockey India (@TheHockeyIndia) <a href="https://x.com/TheHockeyIndia/status/2085991099596943655?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
ஆண்கள் போட்டியைப் போலவே, மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையிலும் தலா 4 அணிகள் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 16 அணிகள் இடம்பெறும். குழு A-வில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு B-யில் அர்ஜென்டினா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு C-யில் பெல்ஜியம், ஸ்பெயின், நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு D-யில் இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/indian-hockey-team-name-a-20-member-squad-for-the-2026-asian-games-94269.html">விரைவில் ஆசிய விளையாட்டு போட்டிகள்.. பலமிக்க இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!</a>
<h3>இந்திய மகளிர் அணி போட்டிகள்</h3>
<ul>
 	<li>16 ஆகஸ்ட் 2026 (ஞாயிறு), இந்தியா vs சீனா, மாலை 4:30, வாக்னர் ஸ்டேடியம், ஆம்ஸ்டெல்வீன்</li>
 	<li>18 ஆகஸ்ட் 2026 (செவ்வாய்க்கிழமை), இந்தியா - தென்னாப்பிரிக்கா, மாலை 6:30 மணி, வாக்னர் மைதானம், ஆம்ஸ்டெல்வீன்</li>
 	<li>20 ஆகஸ்ட் 2026 (வியாழன்), இந்தியா vs இங்கிலாந்து, மாலை 6:30, வாக்னர் ஸ்டேடியம், ஆம்ஸ்டெல்வீன்</li>
</ul>
<h3>2026 ஹாக்கி உலகக் கோப்பையை எங்கே பார்க்கலாம்?</h3>
2026 ஹாக்கி உலகக் கோப்பையானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிடி ஸ்போர்ட்ஸில் நேரலையாக ஒளிபரப்பப்படும். மேலும், இது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிற்கும் கிடைக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி மரணம் &#8211; முதியவர்களுக்கு நேர்ந்த கதி</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-die-of-suspected-suffocation-after-anti-dengue-mosquito-spraying-in-coimbatore-97529.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 07:39:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-die-of-suspected-suffocation-after-anti-dengue-mosquito-spraying-in-coimbatore-97529.html</guid>
		            
			

    	<description><![CDATA[கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து பணியாளர்கள் அடித்தது தான் அவர்களது மரணத்துக்கு காரணம் என கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/dengue-mosquito-spraying.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி மரணம் &#8211; முதியவர்களுக்கு நேர்ந்த கதி" /></figure><strong>கோயம்புத்தூர், ஆகஸ்ட் 12 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/health/from-mosquito-to-illness-the-hidden-danger-of-west-nile-fever-74848.html" target="_blank" rel="noopener">கொசு</a> மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து பணியாளர்கள் அடித்தது தான் அவர்களது மரணத்துக்கு காரணம் என கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/revised-toll-collection-at-coimbatore-madukkarai-toll-plaza-from-2025-august-1st-check-the-fare-details-22705.html" target="_blank" rel="noopener">கோயம்புத்தூர்</a> மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
<h3>கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி மரணம்</h3>
இதனையடுத்து அன்னூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய், குப்பை தொட்டி இருக்கும் இடங்கள் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் வீடுகளுக்கும் சென்றும் கொசு மருந்து அடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 11, 2026 நேற்று உப்பு தோட்டம் பகுதியில் கொசு மருந்து அடித்த போது அந்த பகுதியில் வசித்த மோகன் என்பவரும், ராணி என்பவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-high-court-has-filed-a-petition-suo-moto-for-removal-of-caste-name-from-streets-and-roads-97458.html">தெருக்கள், சாலைகளுக்கு சாதி பெயர்கள்.. தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம்..</a></strong>

தங்களுக்கு ஏற்கனவே நுரையீலல் பாதிப்பு இருந்தததாகவும் தங்கள் வீட்டில் கொசு மருந்து அடிக்க வேண்டாம் என அவர்கள் கேட்டும் பேரூராட்சி ஊழியர்கள் அவர்களது வீட்டில் கொசு மருந்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்து கலந்து அடித்தது தான் அவர்கள் மரணத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senior-bjp-leader-vanathi-srinivasan-has-stated-that-there-are-no-permanent-enemies-or-permanent-friends-in-politics-97450.html">திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..</a></strong>

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக அப்பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களது பேச்சுவார்த்தையில் மக்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 4 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே கொசு மருந்து அடிக்கப்பட்டது எனவும் இறந்தவர்களுக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் இருந்தாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக இறந்த மோகன் கடந்த 2 நாட்களுக்கு முன் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;முதலில் கட்சி மாறியது யார்?&#8221;.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 07:23:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-assembly-debate-sengottaiyan-ops-party-switch-pocket-photo-controversy-97527.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Assembly Debate: தமிழக சட்டமன்றத்தில் "முதலில் கட்சி மாறியது யார்?", "சட்டைப் பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது?" என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் திமுக எம்.எல்.ஏ ஓ. பன்னீர்செல்வம் இடையே சுவாரசியமாகவும் காரசாரமாகவும் நடைபெற்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சபாநாயகர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/sengottiyan-vs-ops.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;முதலில் கட்சி மாறியது யார்?&#8221;.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong> தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், எப்போதாவது அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் கடந்த கால நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் அவையில் நகைச்சுவையையும் அதே நேரத்தில் காரசாரமான விவாதங்களையும் உருவாக்கும். அந்த வகையில், தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senior-bjp-leader-vanathi-srinivasan-has-stated-that-there-are-no-permanent-enemies-or-permanent-friends-in-politics-97450.html" target="_blank" rel="noopener">திமுக</a> சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் இடையே "யார் முதலில் இடம் மாறினார்கள்?", "சட்டைப் பையில் யாருடைய படம் இருக்கிறது?" என்பது தொடர்பாக நடந்த சுவாரசியமான வார்த்தைப் போர் அவையைச் சூடேற்றியது.

<strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">இதையும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>
<h3>திமுக அரசு மீதான விமர்சனமும் பதிலடியும்:</h3>
விவாதத்தைத் தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை முதன்மைத் திட்டங்களாகச் சட்டமன்றத்தில் அறிவிக்கவில்லை என்றும், இதனால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்து நிற்பதாகவும் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக மக்கள் அனைவரும் பாராட்டும் ஒரு தூய ஆட்சியை ஏமாற்றம் அளிக்கும் ஆட்சி என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார். மேலும், ஓ. பன்னீர்செல்வம் திமுக பக்கத்திற்கு இடம் மாறிவிட்டதால், அவ்வாறு ஆளுங்கட்சியைத் துதிபாட வேண்டிய அவசியமில்லை என்றும் மறைமுகமாகச் சாடினார்.
<h3>கட்சி மாற்றமும் சட்டைப் பை படமும்:</h3>
இதற்குப் பதிலடி கொடுத்த ஓபிஎஸ், சட்டமன்றத்தில் "முதலில் இடத்தை மாற்றியதே நமது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இடம் மாறிய போதிலும் செங்கோட்டையன் தனது இதயத்திற்கு அருகே வைத்திருந்த தலைவரின் நிழற்படத்தை மாற்றவில்லை என்று சுட்டிக்காட்டியதுடன், ஓபிஎஸ்-ன் சட்டைப் பையைப் பார்க்கும்போது இடமும் மாறி, இதயமும் மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது என விமர்சித்தார்.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பேசிய அதிமுக தரப்பு, "செங்கோட்டையன் இடம் மாறியிருக்கலாம்; ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் படத்தை இன்னமும் தனது சட்டைப் பையில் வைத்திருக்கிறார். ஆனால் அம்மாவால் முதலமைச்சராக்கப்பட்ட ஓபிஎஸ்-ன் சட்டைப் பையில் இப்போது யாருடைய படம் இருக்கிறது என்பது நாட்டுக்கே தெரியும்" எனச் சாடினர்.
<h3>ஓபிஎஸ்-ன் விளக்கமும் சபாநாயகரின் தலையீடும்:</h3>
அதிமுக உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகிய அனைவரையும் தங்கள் இதயத்தில் நிலையாக வைத்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்தார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senior-bjp-leader-vanathi-srinivasan-has-stated-that-there-are-no-permanent-enemies-or-permanent-friends-in-politics-97450.html">திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..</a></strong>

மேலும், "படத்தைக் காட்டி ஏமாற்றுகின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை" என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். இந்த விவாதம் எல்லை மீறிச் சென்று காரசாரமாக மாறிய நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குறுக்கிட்டு, "இரு தரப்பும் நயமான கருத்துக்களை நகைச்சுவையாகப் பேசிவிட்டீர்கள்" என்று கூறி, விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து பேச அனுமதித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெட்ரோல் பங்குகளில் G-Pay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறுத்தம்?.. அதிர்ச்சி செய்தி!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-petrol-bunks-warn-stop-upi-digital-payments-bank-accounts-frozen-97524.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 06:38:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-petrol-bunks-warn-stop-upi-digital-payments-bank-accounts-frozen-97524.html</guid>
		            
			

    	<description><![CDATA[Petrol Bunk UPI Payment: சைபர் க்ரைம் புகார்களின் பேரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. முழு கணக்கையும் முடக்குவதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய தொகையை மட்டும் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/petrol-bunk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெட்ரோல் பங்குகளில் G-Pay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறுத்தம்?.. அதிர்ச்சி செய்தி!!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong> இந்தியாவில் <a href="https://www.tv9tamilnews.com/business/upi-merchant-charges-explained-no-extra-cost-for-consumers-says-government-96654.html" target="_blank" rel="noopener">டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின்</a> வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பெட்ரோல் பங்குகளில் யூபிஐ மற்றும் கியூஆர் கோடு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

சைபர் க்ரைம் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் எவ்வித முன்அறிவிப்புமின்றி காவல் துறை மற்றும் வங்கிகளால் திடீரென முடக்கப்படுவதே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது.

<strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">இதையும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>
<h3>வங்கி கணக்குகள் முடக்கப்படுவதன் பின்னணி:</h3>
ஆன்லைன் வழிப் பணமோசடிகளில் ஈடுபடும் நபர்கள், தாங்கள் திருடிய அல்லது மோசடி செய்த தொகையில் ஒரு சிறு பகுதியை (உதாரணமாக 500 அல்லது 1000 ரூபாயை) பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்புவதற்காக யூபிஐ மூலமாகச் செலுத்துகின்றனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளும்போது, அந்த மோசடிப் பணம் கைமாறிய வழியைக் கண்காணித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளைக் கண்டறிகின்றனர். ஆனால், காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் வங்கிகள், குறிப்பிட்ட அந்த சிறிய சந்தேகத்திற்குரிய தொகையை மட்டும் முடக்குவதற்குப் பதிலாக, லட்சக்கணக்கில் பணம் இருக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் முழு வங்கிக் கணக்கையும் முற்றிலுமாக முடக்கிவிடுகின்றன.
<h3>பங்க் உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:</h3>
தமிழ்நாட்டில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் கீழ் 5,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் தினமும் சராசரியாக 200 முதல் 500 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் பெட்ரோல் பங்குகளில் தினமும் ஈட்டப்படும் வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையானது ஆன்லைன் வழியிலேயே பெறப்படுகிறது. இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த வங்கிக் கணக்கும் முடக்கப்படுவதால் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பணம் செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமலும், அன்றாட வணிக நடைமுறைகளைத் தொடர முடியாமலும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
<h3>பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை:</h3>
பெட்ரோல் பங்கிற்கு எரிபொருள் நிரப்ப வரும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களில் யார் நேர்மையானவர், யாருடைய டிஜிட்டல் பணம் மோசடியானது என்பதைத் தங்களால் சரிபார்க்க முடியாது என உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தும்போது, முழு வங்கிக் கணக்கையும் முடக்காமல், குறிப்பிட்ட அந்தச் சர்ச்சைக்குரிய தொகையை மட்டும் முடக்கி வைக்க வேண்டும் என்று காவல் துறைக்கும் வங்கிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senior-bjp-leader-vanathi-srinivasan-has-stated-that-there-are-no-permanent-enemies-or-permanent-friends-in-politics-97450.html">திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..</a></strong>

மேலும், இதுகுறித்து மாநில அரசு உடனடியாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட அனைத்து வகையான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வயதை பாதியாக குறைக்கும் ஃபேஷன் சீக்ரெட்ஸ்: இளமையாக மிளிர எளிய ஸ்டைலிங் டிப்ஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/fashion-mistakes-that-make-you-look-older-and-how-to-fix-them-97429.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 06:30:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/fashion-mistakes-that-make-you-look-older-and-how-to-fix-them-97429.html</guid>
		            
			

    	<description><![CDATA[Fashion Mistakes: ஆடைகளின் தவறான அளவுகள், தொடர்ச்சியாக அடர் கருப்பு நிறங்களை மட்டுமே அணிவது மற்றும் பழமையான அணிகலன்கள் அல்லது தேய்ந்த காலணிகளைப் பயன்படுத்துவது போன்றவை ஒருவரை வயதானவராகக் காட்டக்கூடும். உடலுக்குச் சரியாகப் பொருந்தக்கூடிய ஆடைகள், முகத்திற்குப் பொலிவு தரும் வெளிர் வண்ணங்கள் மற்றும் எளிமையான நவீன அணிகலன்களைத் தேர்ந்தெடுப்பது தோற்றத்திற்குப் புத்துணர்ச்சியளிக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/fashion.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வயதை பாதியாக குறைக்கும் ஃபேஷன் சீக்ரெட்ஸ்: இளமையாக மிளிர எளிய ஸ்டைலிங் டிப்ஸ்!" /></figure>நாம் அணியும் ஆடைகளும் அணிகலன்களும் நமது தோற்றத்தையும் வயதையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலுக்குச் சரியாகப் பொருந்தாத அதிக தளர்வான அல்லது இறுக்கமான ஆடைகள் தோற்றப் பொலிவைக் குறைத்து வயதானவராகக் காட்டக்கூடும். எப்போதும் கருப்பு நிற ஆடைகளையே அணிவதைத் தவிர்த்து, பிரகாசமான மற்றும் வெளிர் வண்ண ஆடைகளைத் தேர்வு செய்வது முகத்திற்குப் புத்துணர்ச்சி தரும். பழமையான மாடல் கண்ணாடிகள் மற்றும் பெரிய அளவிலான நகைகளுக்குப் பதிலாக எளிய நவீன அணிகலன்களைப் பயன்படுத்தலாம். அதேபோல், சுத்தமான மற்றும் சரியான அளவில் பொருந்தும் காலணிகளை அணிவது ஒட்டுமொத்த தோற்றத்தையும் மெருகேற்றும். கண்களுக்குக் கீழ் அதிகப்படியான அடர்ந்த மேக்கப் போடுவதைத் தவிர்த்து, இயற்கைத்தன்மையான லேசான மேக்கப் முறையைக் கையாள்வது இளமையான தோற்றத்தைத் தரும்.
<h3>இளமையான தோற்றத்தைப் பெற எளிய வழிகள்</h3>
நமது உடைகளும், உடை அணியும் முறைகளும் நமது ஆளுமையையும் அகவையையும் வெளிப்புற உலகிற்கு வெளிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முறையான ஆடைத் தேர்வைச் செய்யாதபோது, அது ஒருவரை உண்மையான வயதை விட முதிர்ச்சியடைந்தவராகக் காட்டக்கூடும். அன்றாட ஆடைகள் மற்றும் அணிகலன்களைத் தேர்ந்தெடுக்கும்போது தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்தும், இளமையான தோற்றத்தைப் பெறுவதற்கான எளிய வழிகள் குறித்தும் செய்தித் தொகுப்பாகக் கீழே விரிவாகக் காண்போம்.
<h3>பொருத்தம் இல்லாத ஆடைகளைத் தவிர்த்தல்</h3>
உடலுக்குச் சரியாகப் பொருந்தாத உடைகளை அணிவது தோற்றப் பொலிவைக் கெடுக்கும். அளவுக்கு அதிகமான தளர்வான ஆடைகள் உடல் அமைப்பை மறைத்து, வயதான தோற்றத்தை உண்டாக்கும். அதேபோன்று, மிதமிஞ்சிய இறுக்கமான ஆடைகளும் சௌகரியத்தைக் குறைத்துத் தோற்றப் பொலிவைப் பாதிக்கும். எனவே, அவரவர் உடல் அமைப்புக்கேற்ப சரியான அளவில் (Fit) தைக்கப்பட்ட உடைகளைத் தேர்ந்தெடுப்பதே நேர்த்தியான தோற்றத்தைத் தரும்.
<h3>அடர் நிறங்களுக்குப் பதிலாகப் பிரகாசமான வண்ணங்கள்</h3>
கருப்பு நிறம் ஒரு உன்னதமான தேர்வாக இருந்தாலும், எப்போதும் முழுமையாகக் கருப்பு நிற ஆடைகளையே அணிவது முகத்தின் பிரகாசத்தைக் குறைத்துக் காட்டும். இதற்கு மாற்றாக, இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை போன்ற வெளிர் மற்றும் பிரகாசமான வண்ணங்களை ஆடைகளில் இணைத்துக் கொள்ளும்போது, அது தோற்றத்திற்குப் புத்துணர்ச்சியையும் இளமையையும் அளிக்கிறது.
<h3>நவீன அணிகலன்கள் மற்றும் காலணிகளின் பயன்பாடு</h3>
பழைய மாடல் கண்ணாடிகள், அளவுக்கு அதிகமான எடைகொண்ட நகைகள் மற்றும் தேய்ந்த காலணிகள் ஒட்டுமொத்த ஆடைத் தேர்வின் அழகையும் பாழாக்கிவிடும். எனவே, எளிமையான மற்றும் நவீன வடிவமைப்பு கொண்ட அணிகலன்களையும், தூய்மையாகப் பராமரிக்கப்பட்ட சரியான காலணிகளையும் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/mastering-confident-communication-6-phrases-to-avoid-in-professional-speech-97378.html">தன்னம்பிக்கையைத் தகர்க்கும் 6 சொற்கள்: உங்கள் பேச்சில் இவை இருக்கிறதா?</a>
<h3>இயல்பான மேக்கப் மற்றும் கைக்கடிகாரத் தேர்வு</h3>
கண்களுக்குக் கீழ் அடர்ந்த மேக்கப் அல்லது அதிகப்படியான ஐலைனர் பயன்படுத்துவது முகத்தில் உள்ள சுருக்கங்களை வெளிப்படுத்தக்கூடும். குறைந்த அளவிலான இயல்பான மேக்கப் முகத்தைப் பிரகாசமாகக் காட்டும். அதேபோல், அளவுக்கு மீறிய தடிமனான டயல்கள் கொண்ட கடிகாரங்களைத் தவிர்த்து, கைகளுக்குப் பொருத்தமான நேர்த்தியான கடிகாரங்களை அணிவது தோற்றத்தை மெருகேற்றும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14 வரை தொடரும் மழை &#8211; வானிலை மையம் எச்சரிக்கை</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-warns-of-moderate-rain-in-tamil-nadus-western-ghats-districts-on-august-12-and-13-97522.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 06:11:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/imd-warns-of-moderate-rain-in-tamil-nadus-western-ghats-districts-on-august-12-and-13-97522.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை, ஆகஸ்ட் 12 : தமிழ்நாட்டில்  நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலைமையம் அறிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/rain-alert-og-11.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14 வரை தொடரும் மழை &#8211; வானிலை மையம் எச்சரிக்கை" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12 :</strong> தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 12, 2026 இன்றும், ஆகஸ்ட் 13, 2026 நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-issued-moderate-rainfall-warning-in-tamil-nadu-till-august-17th-and-temperature-to-raise-in-certain-parts-97406.html" target="_blank" rel="noopener">மழை</a> பெய்யக்கூடும் எனவும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
<h3>தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14 வரை தொடரும் மழை</h3>
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14, 2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 15, 2026 முதல் ஆகஸ்ட் 17, 2026 தேதி வரை 3 நாட்களுக்கு மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-corporation-plans-to-impose-a-fine-of-25000-on-owners-who-abandon-pet-dogs-on-streets-or-in-public-places-97439.html">வளர்ப்பு நாய்களைத் தெருவில் விடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..</a></strong>
<h3>வெப்பநிலை நிலவரம்</h3>
வட உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஆகஸ்ட் 14, 2026 வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை ஆகஸ்ட் 12, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
<h3>மீனவர்களுக்கான எச்சரிக்கை</h3>
குமரிக்கடலின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 12, 2026 வரையும், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 15, 2026 வரையும், தென் மேற்கு வங்கக்கடலின் சில பகுதி, அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதியில் ஆகஸ்ட் 15, 2026 தேதி வரையும், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் ஆக.15-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மேல் குறிப்பிட்டுள்ள தேதிகள் வரை செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/as-foret-fire-erupts-in-sathuragiri-forest-ban-implemented-for-pilgrims-to-climb-and-have-darshan-97433.html">கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. சதுரகிரியில் பக்தர்கள் மலையேற தடை..</a></strong>

இதற்கிடையில் ஆகஸ்ட் 11, 2026 நேற்றிரவு சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், பம்மல் அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் அலுவலகம் முடிந்து செல்லும் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதியடைந்தனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஃப்ரீசரில் குவியும் ஐஸ்கட்டி: கத்தி இல்லாமல் பாதுகாப்பாக அகற்றுவது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/safe-steps-to-defrost-your-fridge-freezer-and-reduce-electricity-bills-97423.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 05:30:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/safe-steps-to-defrost-your-fridge-freezer-and-reduce-electricity-bills-97423.html</guid>
		            
			

    	<description><![CDATA[Fridge Freezer: ஃப்ரீசரில் அதிக அளவு ஐஸ்கட்டி சேர்வது அதன் செயல்திறனைக் குறைத்து உங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கிறது. கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தாமல், முதலில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு வெதுவெதுப்பான நீராவி மூலம் ஐஸ்கட்டிகளைப் பாதுகாப்பாக உருக வைக்க வேண்டும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/fridge-freezer.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஃப்ரீசரில் குவியும் ஐஸ்கட்டி: கத்தி இல்லாமல் பாதுகாப்பாக அகற்றுவது எப்படி?" /></figure>குளிர்சாதனப் பெட்டியின் (Fridge) ஃப்ரீசர் பகுதியில் அதிகளவில் பனிப்பாறை போல் ஐஸ்கட்டி சேருவது பல வீடுகளில் தினமும் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சனையாகும். ஃப்ரீசரின் கதவை அடிக்கடி திறப்பது, கதவின் ரப்பர் சீல் (Rubber Seal) தளர்வடைந்து காற்று உள்ளே செல்வது மற்றும் சூடான உணவுகளை நேரடியாக உள்ளே வைப்பது போன்ற தவறுகளே இதற்குக் முதன்மைக் காரணங்களாகும். இவ்வாறு அதிகளவில் பனி சேரும்போது, குளிரூட்டும் அமைப்பு (Cooling system) அதிக நேரம் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் ஃப்ரீசரின் செயல்திறன் குறைவதுடன், மின்சாரக் கட்டணமும் கணிசமாக அதிகரிக்கும்.
<h3>கத்தி மற்றும் கூர்மையான பொருட்கள் பயன்படுத்தாமல் ஐஸ்கட்டியை நீக்கும் வழிகள்</h3>
ஃப்ரீசரில் உறைந்துள்ள ஐஸ்கட்டிகளை உடனடியாக அகற்ற கூர்மையான கத்திகளையோ, ஸ்க்ரூ டிரைவர்களையோ அல்லது இரும்புச் சாதனங்களையோ பயன்படுத்துவது குளிரூட்டும் குழாய்களைச் சேதப்படுத்தி மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும். எனவே, முதலில் ஃப்ரீசரின் மின்சார இணைப்பைத் துண்டித்து விட்டு, உள்ளிருக்கும் உணவுப் பொருட்களைப் பத்திரமாக வெளியேற்ற வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீர் நிரப்பிய பாத்திரங்களை ஃப்ரீசருக்குள் வைத்து கதவைச் சில நிமிடங்கள் மூட வேண்டும். அந்த நீராவியானது ஐஸ்கட்டியை மெதுவாக உருக வைக்கும். பனி தளர்ந்த பிறகு பிளாஸ்டிக் ஸ்கிரேப்பர் (Plastic Scraper) கொண்டு எளிதாக அகற்றிவிடலாம்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/lifestyle/benefits-of-nattu-sarkkarai-and-why-moderation-matters-97363.html">வெள்ளை சர்க்கரையை ஓரங்கட்டும் நாட்டு சர்க்கரை! பெண்களுக்கு இத்தனை நன்மைகளா?</a>
<h3>ஐஸ்கட்டியை அகற்றிய பிறகு செய்ய வேண்டிய அத்தியாவசிய பராமரிப்பு முறைகள்</h3>
பனி முழுமையாக உருகியதும், வெதுவெதுப்பான சோப்பு நீர் அல்லது வினிகர் கரைசலைக் கொண்டு ஃப்ரீசரின் உட்புறப் பகுதியைச் சுத்தமாகத் துடைக்க வேண்டும். சுத்தம் செய்த பிறகு, உட்புறத்தில் சிறிதும் ஈரம் இல்லாதவாறு உலர்வான துணியைக் கொண்டு நன்றாகத் துடைப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், சிறிதளவு ஈரம் தங்கியிருந்தாலும் அது மீண்டும் வேகமாகப் பனியாக மாறக்கூடும். இதன் பிறகு மின் இணைப்பைக் கொடுத்து, ஃப்ரீசர் தேவையான அளவுக்குக் குளிர்ந்த பின்னரே உணவுப் பொருட்களை மீண்டும் உள்ளே வைக்க வேண்டும்.
<h3>மீண்டும் பனி சேருவதைத் தடுக்கும் வழிகள் மற்றும் நிபுணர்களின் முக்கிய அறிவுரைகள்</h3>
எரிசக்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி (ENERGY STAR), ஃப்ரீசரில் பனியின் தடிமன் கால் அங்குலத்தை (0.6 செ.மீ) மீறும்போது defrost செய்வது மின்சாரச் சேமிப்பிற்கு மிகவும் அவசியமாகும். உணவுகளை எப்போதும் அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்த பிறகே ஃப்ரீசரில் வைக்க வேண்டும். மேலும், கதவு ரப்பர் சீலில் காற்று கசிவு உள்ளதா என்பதை அவ்வப்போது பரிசோதிப்பதும், அளவுக்கு அதிகமான பொருட்களைத் திணிக்காமல் இருப்பதும் காற்றோட்டத்தைச் சீராக்கும். இத்தகைய எளிய பராமரிப்பு வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் குளிர்சாதனப் பெட்டியின் ஆயுளை அதிகரிப்பதோடு, தேவையற்ற மின்கட்டண உயர்த்தையும் தவிர்க்க முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>