<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Latest News Tamil - தமிழில் சமீபத்திய செய்திகள், தமிழ் செய்திகள் இன்று, Tamil News Online</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/latest-news/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/latest-news</link>
 <description>Latest News in Tamil: Latest news and headlines online in Tamil. தமிழ் செய்திகள். தமிழில் முக்கிய செய்திகளையும் சமீபத்திய தலைப்புச் செய்திகளையும் பெறுங்கள் Top headline from Tamil Nadu, India and the world in Tamil on tv9tamilnews.com</description><lastBuildDate>Wed, 13 May 2026 16:28:07 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>பேசில் &#8211; டொவினோ நடிப்பில் வெளியானது அதிரடி படத்தின் ட்ரெய்லர்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/basil-joseph-and-tovino-thomas-starring-athiradi-movie-trailer-out-now-78273.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 16:28:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/basil-joseph-and-tovino-thomas-starring-athiradi-movie-trailer-out-now-78273.html</guid>
		            
			

    	<description><![CDATA[Athiradi Movie Official Trailer | நடிகர்கள் பேசில் ஜோசஃப், டொவினோ தாமஸ் மற்றும் வினித் ஸ்ரீனிவாசனின் நடிப்பில் உருவாகி உள்ளது அதிரடி படம்.  நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/athiradi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பேசில் &#8211; டொவினோ நடிப்பில் வெளியானது அதிரடி படத்தின் ட்ரெய்லர்" /></figure>மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/basil-joseph-said-im-not-sure-about-minnal-murali-2-right-now-75345.html" target="_blank" rel="noopener">பேசில் ஜோசஃப்</a>, டொவினோ தாமஸ் மற்றும் வினித் ஸ்ரீனிவாசன். இதில் நடிகர்கள் பேசில் ஜோசஃப் மற்றும் வினித் ஸ்ரீனிவாசன் இருவரும் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை இயக்கவும் செய்து வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் தனித் தனியாக நடிக்கும் படங்களே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது இவர்கள் மூன்று பேரும் அதிரடி என்ற படத்தில் இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தமிழ் உட்பட தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி படத்தை இயக்குநர் அருண் அனிருதன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தினை தயாரிப்பாளர்கள் அனந்து மற்றும் பேசில் ஜோசஃப் இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்தப் படத்தில் நடிகர்கள் ஷரின் ஷிஹாப் மற்றும் ரியா ஷிபு முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். முன்னதாக சர்வம் மாயா படத்தில் நடிகை ரியா ஷிபு நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
<h3>அதிரடியாக வெளியானது அதிரடி படத்தின் ட்ரெய்லர்:</h3>
இந்த நிலையில் மலையாள சினிமாவில் உருவாகி உள்ள இந்த அதிரடி படம் நாளை 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தில் கல்லூரி மாணவனாக இருக்கு பேசில் ஜோசஃப் மற்றும் லோக்கல் ரவுடியாக இருக்கும் டொவினோ தாமஸ் இடையே நடக்கும் ரவுசான சண்டையே கதை என்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது புரிகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க மக்கள் ஆர்வத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-sriman-hails-cm-vijays-bold-move-to-close-717-liquor-shops-78067.html">Sriman: ரொம்ப பெருமையா இருக்கு.. மக்கள் எல்லாரும் உங்கள் பக்கம் நிற்கிறார்கள்.. முதல்வர் விஜய் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் ஸ்ரீமன்!</a></strong>
<h3>அதிரடி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The World of <a href="https://twitter.com/hashtag/Athiradi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Athiradi</a> is here...🔥 <a href="https://twitter.com/hashtag/Athiradi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Athiradi</a> Trailer Out Now! ⚡

🔗<a href="https://t.co/48Le9QwQbS">https://t.co/48Le9QwQbS</a>

🎶 <a href="https://twitter.com/hashtag/VishnuVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishnuVijay</a><a href="https://twitter.com/basiljoseph25?ref_src=twsrc%5Etfw">@basiljoseph25</a> <a href="https://twitter.com/ttovino?ref_src=twsrc%5Etfw">@ttovino</a> <a href="https://twitter.com/Vineethsreeni84?ref_src=twsrc%5Etfw">@Vineethsreeni84</a> <a href="https://twitter.com/riyashibu_?ref_src=twsrc%5Etfw">@riyashibu_</a> <a href="https://twitter.com/hashtag/ArunAnirudhan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ArunAnirudhan</a> <a href="https://t.co/PeP1zQoXQQ">pic.twitter.com/PeP1zQoXQQ</a></p>
— Saregama South (@saregamasouth) <a href="https://twitter.com/saregamasouth/status/2054419013468647899?ref_src=twsrc%5Etfw">May 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actress-rojas-daughter-anshu-malika-wins-top-indiana-university-award-78081.html">இந்திய வரலாற்றிலே முதல்.. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருதை வென்ற நடிகை ரோஜாவின் மகள்!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>IPL 2026: 600க்கு மேற்பட்ட போலி இணையதளங்கள்.. ஜோராக விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/ipl-tickets-scam-major-fraud-ticket-scam-perpetrated-via-over-600-fake-domains-78269.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 15:44:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/ipl-tickets-scam-major-fraud-ticket-scam-perpetrated-via-over-600-fake-domains-78269.html</guid>
		            
			

    	<description><![CDATA[IPL Fake Tickets: ஐபிஎல் தொடங்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே, டொமைன்களைப் பதிவுசெய்து சமூக ஊடகப் பக்கங்களை அமைத்து, தங்கள் வேலையை தொடங்குகிறார்கள். நட்சத்திர வீரர்கள் இடம்பெறும் மற்றும் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே அல்லது சிஎஸ்கே - எம்ஐ போன்ற முக்கியப் போட்டிகள்தான் மோசடிக்காரர்களின் முதல் இலக்கு.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ipl-fake-tickets.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="IPL 2026: 600க்கு மேற்பட்ட போலி இணையதளங்கள்.. ஜோராக விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-ms-dhoni-travel-to-lucknow-with-csk-team-hardik-pandya-not-travelled-with-mi-team-78258.html">ஐபிஎல் 2026 சீசனானது</a> <strong>(IPL 2026)</strong> இந்தியாவில் பல நகரங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. போட்டி எந்த மைதானத்தில் நடந்தாலும், ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. தங்களுக்குப் பிடித்தமான கிரிக்கெட் வீரர்களையும், விறுவிறுப்பான போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால் ரசிகர்கள் ஏமாற்றமடைகிறார்கள். இருப்பினும், பல வெப் சைட்களை பயன்படுத்தி சிலர் போலியான ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.  ராய்ப்பூரில் இன்று அதாவது 2026 மே 13ம் தேதி <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-57th-match-rcb-vs-kkr-head-to-head-shaheed-veer-narayan-singh-stadium-pitch-report-78149.html">ஆர்சிபி (RCB) மற்றும் கேகேஆர்</a> (KKR)<strong> (RCB - KKR)</strong> அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தபோது, ​​இவை அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு சில இணையதளத்தில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு இருப்பதாக கண்டறிந்து, மக்கள் வாங்க முற்பட்டனர். கடைசி அதுவும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-ms-dhoni-travel-to-lucknow-with-csk-team-hardik-pandya-not-travelled-with-mi-team-78258.html">அணியுடன் லக்னோவிற்கு கிளம்பும் தோனி.. சிஎஸ்கே CEO கொடுத்த ஹிண்ட்!</a>
<h3>600க்கும் மேற்பட்ட போலி டொமைன்கள்:</h3>
கிடைத்த தகவலின்படி, ஐபிஎல் போட்டிகளுக்கான போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்து மக்களை ஏமாற்றும் 600-க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  டிக்கெட்டுகளை வாங்கி மைதானத்திற்கு வந்த பிறகே இது தெரியவந்துள்ளது. உண்மையில், இந்தத் தளங்களில் பணம் செலுத்திய பிறகும், உங்களுக்கு ஒரு போலி டிக்கெட்டே வழங்குகிறது. இந்த போலி இணையதளங்களின் தளவமைப்பு, வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவை தொழில்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் இந்த மோசடி இணையதளங்களால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள்.

போலி டொமைன்கள் மட்டுமின்றி, உங்கள் தரவைத் திருடும் 400-க்கும் மேற்பட்ட இலவச ஸ்ட்ரீமிங் தளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த போலித் தளங்கள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தேடல் மேலோட்டங்கள் மூலமாகவும் அணுகப்பட்டு வந்துள்ளன. மேலும், இந்தத் தளங்கள் நிகழ்நேர முன்பதிவுத் தரவுகள், கைமுறையான கட்டணச் சரிபார்ப்பு, விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒரே கிளிக்கில் போலி டிக்கெட்டுகளை உருவாக்கும் வசதி ஆகியவற்றை வழங்கியதாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
<h3>பெரிய போட்டிகளே இலக்கு:</h3>
ஐபிஎல் தொடங்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே, டொமைன்களைப் பதிவுசெய்து சமூக ஊடகப் பக்கங்களை அமைத்து, தங்கள் வேலையை தொடங்குகிறார்கள். நட்சத்திர வீரர்கள் இடம்பெறும் மற்றும் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே அல்லது சிஎஸ்கே - எம்ஐ போன்ற முக்கியப் போட்டிகள்தான் மோசடிக்காரர்களின் முதல் இலக்கு. அதன்பிறகு, எஸ்எம்எஸ், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மக்களைத் தொடர்புகொள்கிறார்கள். ஐபிஎல் முடிந்த பிறகு, இந்த சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கப்பட்டு, வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-57th-match-rcb-vs-kkr-head-to-head-shaheed-veer-narayan-singh-stadium-pitch-report-78149.html">கொல்கத்தாவிற்கு வாழ்வா? சாவா? குழி பறிக்குமா பெங்களூரு? ஹெட் டூ ஹெட் விவரம்!</a>

இந்த போலி இணையதளங்கள், ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்கும் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதில், நீங்கள் பணம் செலுத்திய பிறகு, உங்கள் டிக்கெட்டின் PDF-ஐ அனுப்பும். ஆனால் மைதானத்திற்கு வந்த பிறகுதான் அந்த டிக்கெட் போலியானது என்றும் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள் என்றும் உணர்கிறீர்கள். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் &#8211; தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-grants-interim-stay-on-order-blocking-x-accounts-over-political-posts-78272.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 15:43:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-grants-interim-stay-on-order-blocking-x-accounts-over-political-posts-78272.html</guid>
		            
			

    	<description><![CDATA[Stay on Order Blocking X Accounts : அரசியல் பதிவுகளை வெளியிடும் 18 எக்ஸ் பக்கங்களை 3 மணி நேரத்தில் முடக்க எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/x-page-suspension.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் &#8211; தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை" /></figure><strong>சென்னை, மே 13 :</strong> அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும்<a href="https://www.tv9tamilnews.com/entertainment/r-parthiban-shares-a-humorous-post-about-sai-pallavi-teasing-him-58733.html" target="_blank" rel="noopener"> எக்ஸ்</a> தள கணக்குகளை முடக்கிய தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-transfers-senthil-balaji-case-to-cbi-over-alleged-power-transformer-scam-75026.html" target="_blank" rel="noopener">சென்னை உயர் நீதிமன்றம்</a>, முடக்கத்தை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் 18 சமூக வலைதள பக்கங்களின் முடக்கத்தை நீக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 8, 2026 அன்று தள்ளிவைத்தனர்.
<h3>அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம்</h3>
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக அரசு மே 13, 2026 அன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மயை நிரூபித்தது. இந்த நிலையில் அரசியல் பதிவுகளை வெளியிடும் 18 எக்ஸ் பக்கங்களை 3 மணி நேரத்தில் முடக்க எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/close-the-liquor-shops-soumya-anbumani-lashes-out-cm-vijay-takes-notes-78243.html">“மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு”.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!</a></strong>

மேலும் அப்படி முடக்கவில்லை என்றால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதில் சில பிரபல அரசியல் விமர்சகர்கள் பக்கங்களும் அடக்கம். இது அரசுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்கும் சர்வதிகார செயல் என அவர்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
<h3>தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை</h3>
இந்த நிலையில் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசியல் ரீதியான கருத்துக்களை பதிவிடும் எக்ஸ் கணக்குகளை முடக்கும் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையின் உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தன. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக பதிவிடும் கணக்குகளை மட்டும் குறி வைத்து முடக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் சைபர் கிரைம் காவல்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் வருகிற ஜூன் 8, 2026 இந்த வழக்கு விசா78247ரணைக்கு வரும் எனவும் தமிழக அரசும் காவல்துறையும் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/betrayal-for-a-ministerial-post-edappadi-palaniswami-levels-serious-allegations-against-velumani-and-cv-shanmugam-78248.html">“அமைச்சர் பதவிக்காகத் துரோகம்”.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!</a></strong>

விஜய் தலைமையிலான தவெக அரசு மே 13, 2026 அன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. மேலும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுகவினர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், சி.வி.சண்முகம் தரப்பும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.  மேலும் இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

&nbsp;

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>படுக்கையறைக்கான 5 வாஸ்து ரகசியங்கள் என்ன..?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/vastu-secrets-for-a-blissful-and-harmonious-bedroom-78276.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 15:41:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/vastu-secrets-for-a-blissful-and-harmonious-bedroom-78276.html</guid>
		            
			    	<description><![CDATA[Vastu Secrets for  Bedroom: வீட்டின் தென்மேற்கு திசையில் படுக்கையறை அமைப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் நிலைத்தன்மையையும் உருவாக்குவதுடன், தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளைத் தவிர்ப்பது தேவையற்ற தகராறுகள் மற்றும் வாஸ்து குறைபாடுகளைத் தடுக்க உதவும். சுவர்களுக்கு மஞ்சள், நீலம் அல்லது வெள்ளை போன்ற மென்மையான வண்ணங்களைப் பயன்படுத்துவதும் மனதிற்குப் பேரமைதியைத் தரும்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/vastu-secrets-for-a-blissful-and-harmonious-bedroom-78276.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gallery-tv9-19.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (19)" /></a></dt><p>வீட்டின் முதன்மைப் படுக்கையறை எப்போதும் தென்மேற்கு திசையிலேயே அமைய வேண்டும், இது வீட்டில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைபெறச் செய்யும். வடகிழக்கு திசை வழிபாட்டிற்கு உரியது என்பதால் அங்கு படுக்கையறை இருப்பதைத் தவிர்க்க வேண்டும், அதேபோல் தென்கிழக்கு திசையில் படுக்கையறை இருந்தால் தேவையற்ற குடும்பத் தகராறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/vastu-secrets-for-a-blissful-and-harmonious-bedroom-78276.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gallery-tv9-18.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (18)" /></a></dt><p>படுக்கையானது தென்மேற்கு திசையில் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும், இது உடலில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். படுக்கை எப்போதும் தரமான மரத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, அது வழக்கமான செவ்வக அல்லது சதுர வடிவில் இருப்பது வாஸ்து முறைப்படி மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/vastu-secrets-for-a-blissful-and-harmonious-bedroom-78276.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gallery-tv9-17.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (17)" /></a></dt><p>படுக்கையறையில் போதுமான காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கிடைக்க வடக்கு மற்றும் கிழக்கு திசை சுவர்களில் அதிகப்படியான ஜன்னல்கள் இருக்க வேண்டும். அறையின் கதவானது வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு பக்கச் சுவர்களில் அமைக்கப்பட வேண்டும் என்பதோடு, அது தடையின்றி முழுமையாக 90 டிகிரி கோணத்தில் திறக்கும்படி இருக்க வேண்டும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/vastu-secrets-for-a-blissful-and-harmonious-bedroom-78276.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gallery-tv9-16.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (16)" /></a></dt><p>படுக்கைக்கு நேர் எதிராக ஒருபோதும் கண்ணாடியை வைக்கக்கூடாது, ஏனெனில் இது தூக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்தி எதிர்மறை ஆற்றலை உருவாக்கக்கூடும். கண்ணாடிகளைப் பொருத்த விரும்பினால் அவற்றை வடக்கு அல்லது கிழக்கு திசைச் சுவர்களில் மட்டுமே பொருத்த வேண்டும், இது நேர்மறை அதிர்வுகளை அறைக்குள் தக்கவைக்க உதவும் ஒரு முக்கிய விதியாகும்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/lifestyle/vastu-secrets-for-a-blissful-and-harmonious-bedroom-78276.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gallery-tv9-15.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gallery Tv9 (15)" /></a></dt><p>படுக்கையறைக்கு நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் நம் மனநிலையை நேரடியாகப் பாதிக்கும் என்பதால் மென்மையான நிறங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் வெள்ளை போன்ற நிறங்கள் மனதிற்குப் பேரமைதியையும் மகிழ்ச்சியையும் தருவதுடன், அறையைச் சுற்றியுள்ள ஆற்றலை எப்போதும் நேர்மறையாக வைத்திருக்கப் பெரிதும் துணைபுரியும்.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>அதிரடிக்கு பெயர்போன அஸ்ராக் கார்க்.. தமிழக உளவுத்துறை ஐ.ஜி-ஆக நியமனம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/northern-zone-ig-asra-garg-has-been-appointed-as-the-ig-of-tamil-nadu-intelligence-78283.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 15:39:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/northern-zone-ig-asra-garg-has-been-appointed-as-the-ig-of-tamil-nadu-intelligence-78283.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Intelligence IG Asra Garg : தமிழக உளவுத்துறை ஐ. ஜி.யான அவினாஷ் குமார் மாற்றப்பட்டு புதிய ஐஜியாக அஸ்ராக் கார்க்கை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர், தற்போது, வடக்கு மண்டல ஐ. ஜி. ஆக பணிபுரிந்து வருகிறார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ig-asra-garg-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிரடிக்கு பெயர்போன அஸ்ராக் கார்க்.. தமிழக உளவுத்துறை ஐ.ஜி-ஆக நியமனம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/close-the-liquor-shops-soumya-anbumani-lashes-out-cm-vijay-takes-notes-78243.html" target="_blank" rel="noopener">தமிழகத்தின்</a> உளவுத்துறை ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் இருந்து வந்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி, இவரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்திருந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த நிலையில், தமிழகத்தின் உளவுத்துறை ஐ. ஜி.யாக வடக்கு மண்டல ஐஜியான அஸ்ராக் கார்க்கை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/betrayal-for-a-ministerial-post-edappadi-palaniswami-levels-serious-allegations-against-velumani-and-cv-shanmugam-78248.html" target="_blank" rel="noopener">தவெக அரசு</a> பொறுபேற்றுள்ள நிலையில், அரசு உயர் பதவிகளில் உள்ளவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உளவுத்துறை ஐஜி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் உளவுத்துறை முக்கிய துறையாக இருந்து வருகிறது. இந்த துறையின் ஐஜியாக அஸ்ராக் கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை பற்றிய விவரம் வருமாறு:- மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அஷ்ராக் படிப்பில் சிறந்து விளங்கி வந்தார்.
<h3>சட்டம் - ஒழுங்கு நடவடிக்கையில் அதிரடி</h3>
அதில், சிவில் சர்வீஸ் தேர்வில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடந்த 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்த இவர் தனது பணிக்காலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னை மாநகரில் டிராபிக் டிவிஷன், சட்டம் ஒழுங்கு பிரிவு, சைபர் குற்றப்பிரிவு போன்ற துறைகளில் பணியாற்றி உள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/c-v-shanmugam-says-eps-statement-is-false-over-aiadmk-legislature-leader-selection-claim-by-edappadi-k-palaniswami-78256.html" target="_blank" rel="noopener">திருமாவளவனை முதல்வராக்க திமுக அணுகியது – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு</a>
<h3>குற்ற புலனாய்வு - சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் மிகுந்த ஆர்வம்</h3>
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில், குறிப்பாக திருவள்ளூர் மதுரை வேலூர் போன்ற மாவட்டங்களில் கடுமையாக மேற்கொள்ளப்பட்ட சட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு பெயர் பெற்றவர். இது மட்டும் இன்றி மாநிலத்தின் குற்றவியல் புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றில் மிகுந்த அனுபவம் மிக்கவராவார்.
<h3>சைபர் குற்றங்களில் நவீன முறைகள்</h3>
முக்கியமான சட்ட விரோத செயல்கள், கொள்ளை கடத்தல், பெண்கள் பாதுகாப்பு சம்பவங்களில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும், சைபர் குற்றங்களில் நவீன முறைகளை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளும் திறமை, காவல்துறை செயல்பாடுகள் வெளிப்படையாகவும் கடுமையாகவும் நடத்தும் விதத்துக்காக புகழ்பெற்றவர் ஆவார்.
<h3>கரூர் சம்பவத்தில் எஸ்ஐடி குழுவின் தலைமை</h3>
தமிழகத்தின் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழக்கு மண்டல ஐஜியாக பணிபுரிந்து வரும் அஷ்ரா கார்க் தற்போது உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழு இவரது தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-grants-interim-stay-on-order-blocking-x-accounts-over-political-posts-78272.html" target="_blank" rel="noopener">அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>புதுச்சேரியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3- ஆம் இடம்.. முதல்வர் பதவியேற்பு விழாவில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-thai-vazhthu-is-sung-for-the-3rd-time-at-the-swearing-in-ceremony-of-the-cm-of-puducherry-78271.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 15:33:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-thai-vazhthu-is-sung-for-the-3rd-time-at-the-swearing-in-ceremony-of-the-cm-of-puducherry-78271.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Thai Vazhthu Sung : தமிழகத்தை போல, புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் என். ரங்கசாமி பதவியேற்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு பாடல் பாடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டி எழுந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cm-rengasamy.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="புதுச்சேரியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3- ஆம் இடம்.. முதல்வர் பதவியேற்பு விழாவில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-speaks-on-horse-trading-cvshanmugam-and-vijayabaskar-whisper-behind-his-back-78213.html" target="_blank" rel="noopener">புதுச்சேரியில்</a> நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று இன்று புதன்கிழமை ( மே 13- ஆம் தேதி) ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி 5- ஆவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, 2- ஆவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. 3- ஆவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விழாக்கள் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் என அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவது பாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
<h3>3- ஆவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து</h3>
ஆனால், வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை பாடிய பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. இதே போல, தமிழகத்தில் கடந்த மே 10- ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராக பதவி ஏற்றார். அப்போது, முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 3- ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதுவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை கிளப்பியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-government-gets-144-members-support-in-floor-test-where-118-is-needed-vijay-to-continue-as-tamilnadu-cm-78222.html" target="_blank" rel="noopener">தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு.. முதல்வர் விஜய்யின் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிப்பெற்றது என அறிவிப்பு..</a>
<h3>மத்திய அரசு அனுப்பிய நிகழ்ச்சி நிரல்</h3>
தமிழக அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆகியவற்றில் முதலாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் எனவும், இறுதியில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இதுபோன்று நடந்ததை அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு, தமிழக வெற்றி கழக அரசு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டு இருந்தது. அதில், மத்திய அரசு தயார் செய்து அனுப்பிய முதல்வர் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிரலில் முதலில் வந்தே மாதரம். 2- ஆவதாக தேசிய கீதம். 3- ஆவதாக தமிழ் தாய் வாழ்த்து என குறிப்பிடப்பட்டிருந்தது.
<h3>புதுச்சேரியில் நிகழ்ச்சி நிரல் மாற்றம்</h3>
அதன் அடிப்படையிலேயே தமிழ் தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரி முதல்வர் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின்னர் வந்தே மாதரம், தேசிய கீதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவதாக மாற்றப்பட்டு பாடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/a-democracy-with-a-conscience-cm-vijay-roars-after-winning-the-vote-of-confidence-78230.html" target="_blank" rel="noopener">“மனசாட்சி உள்ள மக்களாட்சி”.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் கர்ஜித்த முதல்வர் விஜய்..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Kamal Haasan: திரைப்பட நடிகராக மட்டுமே பார்க்கக்கூடாது&#8230; அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது &#8211; கமல்ஹாசன் பேச்சு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/kamal-haasan-says-he-is-proud-that-chief-minister-vijay-is-from-the-film-industry-78268.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 15:18:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/kamal-haasan-says-he-is-proud-that-chief-minister-vijay-is-from-the-film-industry-78268.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kamal Haasan Praises CM Vijay: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும், அரசியல்வதியாகவும் இருந்துவருபவர் கமல்ஹாசன். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் விஜய் மதுபான கடைகளை மூடப்பட்டது மற்றும் அவர் முதல்வராக பதிவியேற்றது பற்றியும் பேசியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kamal-haasan-and-cm-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kamal Haasan: திரைப்பட நடிகராக மட்டுமே பார்க்கக்கூடாது&#8230; அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது &#8211; கமல்ஹாசன் பேச்சு!" /></figure>கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் உலகநாயகன் என எப்போதும் அழைக்கப்பட்டுவருபவர் <strong><a href="https://www.tv9tamilnews.com/topic/kamal-haasan" target="_blank" rel="noopener">கமல்ஹாசன்</a> </strong>(Kamal Haasan). இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) என்ற அரசியல் கட்சித் தலைவராகவும் இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவரும் நிலையில், இறுதியாக 2025ம் ஆண்டில் தக் லைஃப் (Thug Life) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியில் முடிந்தது. அந்த வகையில் தற்போது புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர்கள் அன்பரீவ் (Anbariv) இயக்கத்தில் புது படத்தில் நடிக்கவுள்ள நிலையில், இதன் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்று 2026 மே 13ம் தேதியில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசன், செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பின்போது, <strong><a href="https://www.tv9tamilnews.com/topic/thalapathy-vijay" target="_blank" rel="noopener">முதல்வர் விஜய்</a></strong> (CM Vijay) மதுபான கடைகளை மூடியது மற்றும் அவர் திரைத்துறையில் இருந்துவந்தது குறித்து பேசியுள்ளார்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/director-ratnakumar-has-said-that-director-lokesh-kanagaraj-does-not-want-to-participate-in-any-interview-78246.html" target="_blank" rel="noopener">லோகேஷ் கனகராஜ் இனி இன்டெர்வியூ கொடுக்கமாட்டாரா? – இயக்குநர் ரத்னகுமார் சொன்ன விஷயம்!</a>
</strong>
<h3>முதலமைச்சர் தளபதி விஜய் குறித்து பேசிய கமல்ஹாசன்:</h3>
அந்த சந்திப்பின்போது பேசிய கமல்ஹாசன், "முதல்வர் விஜய், மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது, இது ரொம்பநாளாக பேசப்பட்டுவந்தது, தற்போது நடந்திருக்கிறது வாழ்த்துக்கள். முதல்வர் விஜயை திரைப்பட நடிகராக மட்டுமே பார்க்கக்கூடாது, அவருக்கு வேறு சில கடமைகளும் இருக்கிறது. அரசியலுக்கு எந்த துறையிலிருந்து வேடுமானாலும் வரலாம். எங்கள் துறையில் (சினிமா) இருந்து வந்திருக்கும் நிலையில் பெருமையாக இருக்கிறது" என அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது இவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/udhayanidhi-stalin-criticised-the-tvk-citing-a-scene-from-the-movie-pushpa-78216.html" target="_blank" rel="noopener">‘சோஃபா செல்கிறது.. புது முதல்வர் செல்கிறார்’.. புஷ்பா பட சீனை குறிப்பிட்டு தவெகவை விமர்சித்த உதயநிதி!</a>
</strong>
<h3>முதல்வர் தளபதி விஜயை பாராட்டி நடிகரும், அரசியல்கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் <a href="https://twitter.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> அவர்கள் பதவிக்கு…</p>
— Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/2054075940523942215?ref_src=twsrc%5Etfw">May 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாகவும், நடிகராகவும் தொடர்ந்து இருக்கிறார். இவரின் நடிப்பிலும் படங்கள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டில் எந்த படமும் வெளியீட்டிற்கு தயாராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நடிக்கவுள்ள புது பட ஷூட்டிங்கும், ஜூலை மதத்திற்கு பிறகே தொடங்கும் என வட்டாரங்கள் கூறுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து&#8230; முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறிய இயக்குநர் சங்கர்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/director-shankar-extended-his-wishes-to-chief-minister-joseph-vijay-78250.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 15:16:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/director-shankar-extended-his-wishes-to-chief-minister-joseph-vijay-78250.html</guid>
		            
			

    	<description><![CDATA[Director Shankar extended his wishes to Vijay | தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தளபதி விஜய் அவர்களுக்கு இயக்குநர் சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/shankar.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து&#8230; முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறிய இயக்குநர் சங்கர்" /></figure>தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தற்போது தமிழக அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் தளபதி விஜய். அதன்படி நடந்து முடிந்த 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் தளபதி விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிகப்படியான இடங்களில் வெற்றிப் பெற்று தற்போது ஆட்சியை அமைத்துள்ளது. அதன்படி நடிகர் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/karuppu-movie-team-thanks-chief-minister-joseph-vijay-for-granting-the-special-permission-for-the-9-am-shows-78136.html" target="_blank" rel="noopener">தளபதி விஜய்</a> தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே பல திட்டங்களில் கையெழுத்து இட்டு மக்களிடையேயும் பிரபலங்களிடையேயும் வாழ்த்துகளைப் பெற்று வருகிறார் முதலமைச்சர் சி ஜோசப் விஜய். தொடர்ந்து சட்டமன்ற கூட்டத் தொடர்களிலும் ஆளும் கட்சி தலைவர் விஜயின் பேச்சுகள் அதிக அளவில் இணையத்தில் வெளியாகி மக்களிடையே வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு மக்களும் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் விஜயின் திட்டங்களை வரவேற்று நடிகர்கள் விஷால், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் மக்களால் அதிக அளவில் வரவேற்பைப் பெறும் இயக்குநராக உள்ள இயக்குநர் சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
<h3>முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறிய இயக்குநர் சங்கர்:</h3>
அந்தப் பதிவில் இயக்குநர் சங்கர் கூறியதாவது, <span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3">இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் </span>அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் விருப்பம் நிறைவேறிவிட்டது; நீங்களும் மிகச் சிறப்பானதொரு தொடக்கத்தைப் பெற்றுள்ளீர்கள். தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள், சகோதரா என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/director-c-prem-kumar-talks-about-the-story-of-his-new-film-starring-fahadh-faasil-78045.html">ஃபஹத் ஃபாசிலை வைத்து நான் எடுக்கும் படம் இப்படிதான் இருக்கும் – இயக்குநர் பிரேம் குமார் அப்டேட்!</a></strong>
<h3>இயக்குநர் சங்கர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு <a href="https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://twitter.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

The people’s wish…</p>
— Shankar Shanmugham (@shankarshanmugh) <a href="https://twitter.com/shankarshanmugh/status/2054462588415795643?ref_src=twsrc%5Etfw">May 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/suriyas-karuppu-movie-trailer-crosses-25-million-views-on-youtube-78063.html">இரண்டு நாட்களில் கருப்பு பட ட்ரெயலர் செய்த சாதனை – கொண்டாட்டத்தில் படக்குழு</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>IPL 2026: அணியுடன் லக்னோவிற்கு கிளம்பும் தோனி.. சிஎஸ்கே CEO கொடுத்த ஹிண்ட்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-ms-dhoni-travel-to-lucknow-with-csk-team-hardik-pandya-not-travelled-with-mi-team-78258.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 15:00:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-ms-dhoni-travel-to-lucknow-with-csk-team-hardik-pandya-not-travelled-with-mi-team-78258.html</guid>
		            
			

    	<description><![CDATA[CSK MS Dhoni: எம்.எஸ். தோனி அணியுடன் லக்னோவுக்குப் பயணிக்கக்கூடும் என சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது . கால் தசை காயத்தால் அவதிப்படும் தோனி, இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும், சிஎஸ்கேவின் வெளியூர் போட்டிகளுக்காக, ஒருமுறை ஹைதராபாத்துக்கும், ஒருமுறை மும்பைக்கும் என 2 முறை மட்டுமே தோனி அணியுடன் பயணம் செய்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/hardik-pandya-msd.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="IPL 2026: அணியுடன் லக்னோவிற்கு கிளம்பும் தோனி.. சிஎஸ்கே CEO கொடுத்த ஹிண்ட்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-points-table-2026-gujarat-titans-at-1st-position-after-defeating-sunrisers-hyderabad-78219.html">ஐபிஎல் 2026 சீசனில்</a> <strong>(IPL 2026)</strong> ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியையும், 5ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால், இந்த 11 போட்டிகளில் எம்.எஸ்.தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாதது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ​​காயம் காரணமாக <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-lsg-vs-csk-will-ms-dhoni-play-in-the-match-against-lucknow-super-giants-78140.html">எம்.எஸ் தோனி</a> சிஎஸ்கே அணியில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும், அவரது ஆட்டம் குறித்த சமீபத்திய தகவல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் தோனி <strong>(MS Dhoni)</strong> விளையாடுவாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா குறித்தும் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை அதாவது 2026 மே 14ம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஹர்திக் இன்னும் இணையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-57th-match-rcb-vs-kkr-head-to-head-shaheed-veer-narayan-singh-stadium-pitch-report-78149.html">கொல்கத்தாவிற்கு வாழ்வா? சாவா? குழி பறிக்குமா பெங்களூரு? ஹெட் டூ ஹெட் விவரம்!</a>
<h3>லக்னோவுக்குப் பயணம் செய்யும் எம்.எஸ்.தோனி:</h3>
எம்.எஸ். தோனி அணியுடன் லக்னோவுக்குப் பயணிக்கக்கூடும் என சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது . கால் தசை காயத்தால் அவதிப்படும் தோனி, இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும், சிஎஸ்கேவின் வெளியூர் போட்டிகளுக்காக, ஒருமுறை ஹைதராபாத்துக்கும், ஒருமுறை மும்பைக்கும் என 2 முறை மட்டுமே தோனி அணியுடன் பயணம் செய்துள்ளார். தற்போது, ​​அவரது லக்னோ பயணம் குறித்த செய்தி வெளிவருகிறது.
<h3>சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பு விளக்கம்:</h3>
லக்னோ செல்லும் இண்டிகோவின் வர்த்தக விமானத்தில் தோனி உட்பட மொத்தம் 60 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வருகின்ற 2026 மே 15ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவில் மோதவுள்ள நிலையில், தோனியால் அங்கு பயணிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
<h3>ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக விளையாடுவாரா..?</h3>
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தர்மசாலாவுக்குப் பயணிக்கவில்லை என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. முதுகுத் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது, ​​அணியுடன் தர்மசாலாவுக்குச் செல்லாததால், நாளை அதாவது 2026 மே 14ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியையும் ஹர்திக் பாண்ட்யா தவறவிடலா,. இருப்பினும், இதற்கிடையில், அவரது காயத்திற்குப் பிறகு முதல் முறையாக, அவர் பேட்டிங் பயிற்சி செய்யும் படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த போட்டியின்போதும், ஹர்திக் அணியுடன் ராய்ப்பூருக்குப் பயணிக்கவில்லை. அவர் தாமதமாக அணியில் இணைந்தார். ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-points-table-2026-gujarat-titans-at-1st-position-after-defeating-sunrisers-hyderabad-78219.html">முதலிடத்தில் குஜராத்.. சிஎஸ்கே 5 வது இடத்தில்.. ஐபிஎல் புள்ளி பட்டியல்!</a>

ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மோசமான ஆட்டத்தினால், மும்பை இந்தியன்ஸ் புள்ளி அட்டவணையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளனர். மேலும் பிளேஆஃப் சுற்றுக்கான தகுதிப் போட்டியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிமுகவை பிளவுபடுத்தி உடைக்கும் எண்ணம் இல்லை&#8230; எஸ்.பி.வேலுமணி விளக்கம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-minister-s-p-velumani-clarified-that-he-has-no-intention-of-splitting-the-aiadmk-78262.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 14:57:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-minister-s-p-velumani-clarified-that-he-has-no-intention-of-splitting-the-aiadmk-78262.html</guid>
		            
			

    	<description><![CDATA[Former Minister S P Velumani : அதிமுகவை இரண்டாக பிளவு படுத்தி உடைக்கும் எண்ணம் எங்கள் தரப்பு எம். எல். ஏக்களுக்கு இல்லை என்று அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்தார். அவர் கூறியதை விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/eps-velumani.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிமுகவை பிளவுபடுத்தி உடைக்கும் எண்ணம் இல்லை&#8230; எஸ்.பி.வேலுமணி விளக்கம்" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmdk-mla-premalatha-vijayakanth-raised-questions-about-appointment-about-ricky-radhan-pandit-vetrivel-appointment-by-tamil-nadu-government-78244.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> பெரும்பான்மை இன்றி விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-led-tamilnadu-government-removes-astrologer-as-officer-on-special-duty-after-criticism-78240.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகம்</a> தனது பெரும்பான்மையே நிரூபிக்கும் கூட்டம் சட்டப்பேரவையில் இன்று புதன்கிழமை ( மே 13- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர்களான சி. வி. சண்முகம், எஸ். பி. வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான 22 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசு எதிராக வாக்களித்தனர். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இரு அணிகளும் மாறி மாறி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை எம். ஆர். சி. நகரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
<h3>அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை</h3>
அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. அதிமுகவை உடைக்கிறோம் என்பது அவதூறு பரப்புவதாகும். அதற்கு மாறாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். இதன் மூலம் கட்சியே முன்பு இருந்தவாறு பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கை ஆகும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-leader-stalin-criticizes-tvks-political-conduct-during-assembly-confidence-vote-78247.html" target="_blank" rel="noopener">கிளீன் பாலிடிக்ஸ் டூ டர்ட்டி பாலிடிக்ஸ்: தவெக-வை கேள்வி கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின்!</a>
<h3>அதிமுகவை மீண்டும் பலப்படுத்த வேண்டும்</h3>
கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சரான கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் பிரிந்து சென்ற போது நாங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். மேலும், கட்சியை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். தற்போதும், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் அரவணைத்து முன்பு இருந்ததைப் போல அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று கூறினார். அதிமுகவில் சட்டமன்ற குழு தலைவர் பதவியே பெறுவதற்கு எடப்பாடி மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
<h3>அதிமுகவில் உள்கட்சி பூசல் ஏற்பட காரணம்</h3>
மேலும், தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் தொடங்கியது. இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் ஒரு குழுவாகவும், எடப்பாடி தலைமையில் ஒரு குழுவாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/betrayal-for-a-ministerial-post-edappadi-palaniswami-levels-serious-allegations-against-velumani-and-cv-shanmugam-78248.html" target="_blank" rel="noopener">“அமைச்சர் பதவிக்காகத் துரோகம்”.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ வழக்கில் திடீர் திருப்பம்.. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/atrocious-supreme-court-stays-order-restraining-tvk-mla-from-floor-test-78263.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 14:55:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/atrocious-supreme-court-stays-order-restraining-tvk-mla-from-floor-test-78263.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாச சேதுபதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டைத் திகைப்புடன் கவனித்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tvk-mla-case.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ வழக்கில் திடீர் திருப்பம்.. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!" /></figure>தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற அதே வேளையில், நீதித்துறையிலும் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஆர்.சீனிவாச சேதுபதி, திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பனை விட வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/close-the-liquor-shops-soumya-anbumani-lashes-out-cm-vijay-takes-notes-78243.html">“மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு”.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!</a></strong></p>

<h3>உயர் நீதிமன்றத்தின் சர்ச்சை உத்தரவு:</h3>
இந்த வெற்றியை எதிர்த்து, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். குறிப்பாக, தபால் வாக்குகளை எண்ணுவதில் தவறு நடந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தில் நடைபெறும் எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது வாக்கெடுப்பு சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது எனத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
<h3>உச்ச நீதிமன்றத்தின் காட்டமான விமர்சனம்:</h3>
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாச சேதுபதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டைத் திகைப்புடன் கவனித்தது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவையில் வாக்களிப்பதைத் தடுப்பது என்பது மிகக்குறைந்தபட்சமாக சொன்னால் இது ஒரு அட்டூழியம் என்று நீதிபதிகள் விமர்சித்தனர். தேர்தல் முடிவுகளை எதிர்த்து 'தேர்தல் வழக்கு' மட்டுமே தொடர முடியும் என்ற நிலையில், உயர் நீதிமன்றம் ஒரு 'ரிட்' மனுவை ஏற்றுக்கொண்டு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்தது எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
<h3>உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை:</h3>
விசாரணையின் முடிவில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு தொடர்பான அனைத்து மேல் நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது. இதனையடுத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு இன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-led-tamilnadu-government-removes-astrologer-as-officer-on-special-duty-after-criticism-78240.html">ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப்பெற்றது தமிழக அரசு..</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>லோகேஷ் கனகராஜ் இனி இன்டெர்வியூ கொடுக்கமாட்டாரா? &#8211; இயக்குநர் ரத்னகுமார் சொன்ன விஷயம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/director-ratnakumar-has-said-that-director-lokesh-kanagaraj-does-not-want-to-participate-in-any-interview-78246.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 14:47:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/director-ratnakumar-has-said-that-director-lokesh-kanagaraj-does-not-want-to-participate-in-any-interview-78246.html</guid>
		            
			

    	<description><![CDATA[Rathna Kumar About Lokesh Kanagaraj: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது அல்லு அர்ஜுனின் AA23 படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இனிமேல் எந்த நேர்காணல்களில் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/rathnakumar-and-lokesh.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="லோகேஷ் கனகராஜ் இனி இன்டெர்வியூ கொடுக்கமாட்டாரா? &#8211; இயக்குநர் ரத்னகுமார் சொன்ன விஷயம்!" /></figure>கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மேயாத மான் (Meyadha Maan) என்ற படத்தை இயக்கி, தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/director-rathnakumar-reveals-director-lokesh-kanagarajs-vision-for-allu-arjuns-aa23-78125.html" target="_blank" rel="noopener">ரத்னகுமார்</a> </strong>(Rathnakumar) . இவர் தமிழில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும், அதிக படங்களில் வசனகர்த்தாவாகவும், கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/lokesh-kanagaraj-said-monica-song-was-included-in-coolie-movie-only-for-commercial-purposes-27194.html" target="_blank" rel="noopener">இயக்குநர் லோகேஷ் கனகராஜின்</a></strong> (Lokesh Kanagaraj) நெருங்கிய நண்பர் என்ற நிலையில், மாஸ்டர் (Master) முதல் கூலி (Coolie) வரை லோகேஷ் இயக்கிய படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் சமீபத்தில், 29 தி பிலிம் (29 The film) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது கடந்த 2026 மே 8ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

மேலும் இயக்குநர் ரத்னகுமார் அல்லு அர்ஜுனின் (Allu Arjun)  AA23 படத்திலும் எழுத்தாளராக லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ரத்னகுமார். லோகேஷ் கனகராஜ் தன்னிடம், இனி எந்த இண்டெர்வியூவிலும் கலந்துகொள்ள விரும்பவில்லை என கூறியதாக தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிங்க; <a href="https://www.tv9tamilnews.com/entertainment/rajinikanth-said-my-ego-was-crushed-during-a-visit-to-the-art-of-living-ashram-where-his-celebrity-status-went-unnoticed-78238.html" target="_blank" rel="noopener">என்னை யாருமே கண்டுக்கல.. ஸ்டார் வேல்யூ பற்றி கதை சொன்ன ரஜினிகாந்த்!</a>
</strong>
<h3>லோகேஷ் கனகராஜின் திடீர் முடிவு குறித்து இயக்குநர் ரத்னகுமார் சொன்ன விஷயம்:</h3>
அந்த நேர்காணலில் இயக்குநர் ரத்னகுமார் பேசும்போது, "29 படம் பற்றி பேசும்போதே என்னிடம் சொன்னார். டிசி படத்திற்காகவும் இன்டெர்வியூ கொடுக்கப்போவதில்லை, அல்லு அர்ஜுடன் பண்ணும் AA23 படத்திற்காகவும் இன்டெர்வியூ கொடுக்கப்போவதில்லை என்ற மனநிலையில் இருக்கிறேன் என என்னிடம் சொன்னார். அதற்கான உண்மையான விளக்கம் அவர்தான் சொல்லவேண்டும், எனக்கு தெரியாது. ஒருவேளை அல்லு அர்ஜுன் சாரின் AA23 திரைப்படத்தில் தீவிரமாக இருக்கவேண்டும் என்றும், எந்தவித தொந்தரவும் கமிட்மென்சும் இல்லாமல் என நினைத்ததனால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்" என அதில் அவர் கூறியிருந்தார்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-jailer-2-movie-is-now-planned-to-be-released-krishna-jayanthi-september-4th-2026-78209.html" target="_blank" rel="noopener">ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லையாம்… எப்போது தெரியுமா?</a>
</strong>
<h3>29 தி பிலிம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Its Time to Lead.</p>
Hearty congratulations to Chief Minister of Tamilnadu C. Joseph Vijay sir <a href="https://twitter.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a>. ♥️♥️

Team <a href="https://twitter.com/hashtag/29TheFilm?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#29TheFilm</a> <a href="https://t.co/pB5D5JSYbK">pic.twitter.com/pB5D5JSYbK</a>

— Rathna kumar (@MrRathna) <a href="https://twitter.com/MrRathna/status/2053381253114822917?ref_src=twsrc%5Etfw">May 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இயக்குநர் ரத்னகுமார் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் AA23 படத்திற்காக தீவிரமான பணிகளில் இருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் ராக்கா படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, AA23 படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கடலும் கல்லும் சேர்ந்து காக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்! எங்கே உள்ளது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/mahabalipurams-rock-cut-temples-showcase-pallava-art-heritage-78237.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 14:40:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/mahabalipurams-rock-cut-temples-showcase-pallava-art-heritage-78237.html</guid>
		            
			

    	<description><![CDATA[Mahabalipuram’s Rock-Cut Temples: மகாபலிபுரம் பல்லவர் கால பாறைக் குடைவு கோயில்கள் மற்றும் சிற்பங்களால் புகழ்பெற்ற வரலாற்று தலமாகும். அர்ஜுனன் தவம், பஞ்ச ரதங்கள் போன்ற சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. கடற்கரை கோயில் இப்பகுதியின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள மகாபலிபுரம் கலை மரபின் பெருமையை எடுத்துரைக்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கடலும் கல்லும் சேர்ந்து காக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்! எங்கே உள்ளது?" /></figure>மகாபலிபுரம் பல்லவர் கால கட்டிடக்கலை சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வரலாற்று நகரமாக திகழ்கிறது. பாறைகளை செதுக்கி உருவாக்கப்பட்ட கோயில்கள் மற்றும் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. அர்ஜுனன் தவம், பஞ்ச ரதங்கள் போன்ற சிற்பங்கள் புராண வரலாற்றை பிரதிபலிக்கின்றன. கடற்கரை கோயில் மகாபலிபுரத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது. ஒற்றை பாறையில் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் பல்லவர் கால தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்துகின்றன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றதால் இப்பகுதிக்கு உலகளாவிய முக்கியத்துவம் கிடைத்துள்ளது. வரலாறு, கலை மற்றும் கலாச்சாரத்தை இணைக்கும் அரிய சுற்றுலா தலமாக மகாபலிபுரம் விளங்குகிறது.

<strong>பல்லவர் காலத்தின் கலைச் சின்னம்</strong>

தமிழகத்தின் கடற்கரை வரலாற்றை உலக அரங்கில் உயர்த்திக் காட்டும் இடமாக மகாபலிபுரம் திகழ்கிறது. பல்லவர் அரசர்களின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பாறைக் குடைவு கோயில்கள் மற்றும் சிற்பங்கள், தமிழர் கட்டிடக்கலை திறமையை இன்று வரை எடுத்துரைக்கின்றன. கடற்கரையோர நகரமாக விளங்கும் இந்தப் பகுதி, கல்லில் உயிர் ஊட்டிய கலைஞர்களின் அதிசயப் படைப்புகளால் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. ஒற்றை பாறைகளை செதுக்கி உருவாக்கப்பட்ட கோயில்கள், அக்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சான்றாக பார்க்கப்படுகின்றன.

<strong>பாறைகளில் பொறிக்கப்பட்ட வரலாறு</strong>

மகாபலிபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் வெறும் அலங்காரங்களல்ல; அவை புராணக் கதைகள், சமய மரபுகள் மற்றும் அரச ஆட்சியின் பெருமையை வெளிப்படுத்துகின்றன. அர்ஜுனன் தவம், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை, பஞ்ச ரதங்கள் போன்ற அமைப்புகள் பாரம்பரிய கலைக்கான முக்கிய சின்னங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு சிற்பத்திலும் மனித உணர்வுகள், விலங்குகளின் இயல்புகள் மற்றும் இயற்கையின் வடிவங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. இதனால் மகாபலிபுரம் ஒரு திறந்தவெளி கலை அருங்காட்சியகமாகவே பார்க்கப்படுகிறது.

<strong>சுற்றுலா பயணிகளை கவரும் கட்டிடக்கலை</strong>

இந்தக் குடைவு கோயில்களின் தனிச்சிறப்பு, அவை முழுவதும் ஒரே பாறையிலிருந்து வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். கல் மேற்பரப்பில் ஆழமான செதுக்கல்களும், உயர்ந்த தூண்களும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. கடலலைகள் மோதும் பின்னணியில் அமைந்துள்ள கடற்கரை கோயில், மகாபலிபுரத்தின் அடையாளமாகவே மாறியுள்ளது. வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பல்லவர் கால கலை நுணுக்கங்களை ரசித்து செல்கின்றனர்.

<strong>உலக பாரம்பரிய பட்டியலில் மகாபலிபுரம்</strong>

மகாபலிபுரத்தின் தொன்மை மற்றும் கலைப் பெருமையை கருத்தில் கொண்டு, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இதற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் இந்தப் பகுதி மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பழமையான கலை மரபுகளை பாதுகாக்கும் நோக்கில் தொல்லியல் துறை பல்வேறு பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. வரலாறு, கலை, கட்டிடக்கலை ஆகிய மூன்றையும் ஒருங்கே காண முடியும் அரிய இடமாக மகாபலிபுரம் தொடர்ந்து திகழ்கிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திருமாவளவனை முதல்வராக்க திமுக அணுகியது  &#8211;  சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/c-v-shanmugam-says-eps-statement-is-false-over-aiadmk-legislature-leader-selection-claim-by-edappadi-k-palaniswami-78256.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 14:32:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/c-v-shanmugam-says-eps-statement-is-false-over-aiadmk-legislature-leader-selection-claim-by-edappadi-k-palaniswami-78256.html</guid>
		            
			

    	<description><![CDATA[C. V. Shanmugam Responses EPS Statement : சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனை எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், இப்படியானவரை பொதுச்செயலாளராக வைத்திருந்தால் என்ன செய்ய முடியும்? என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cv-shanmugam-on-eps.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திருமாவளவனை முதல்வராக்க திமுக அணுகியது  &#8211;  சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு" /></figure><strong>சென்னை, மே 13 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/betrayal-for-a-ministerial-post-edappadi-palaniswami-levels-serious-allegations-against-velumani-and-cv-shanmugam-78248.html" target="_blank" rel="noopener">எடப்பாடி பழனிசாமி</a> பொய் சொல்வதாக சி.வி.சண்முகம் விளக்கமளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/a-democracy-with-a-conscience-cm-vijay-roars-after-winning-the-vote-of-confidence-78230.html" target="_blank" rel="noopener">தவெக</a> அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏகள் 2 தரப்பாக பிரிந்து வாக்களித்தனர். அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 பேர் தவெக அரசுக்கு எதிராகவும், சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏகள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதிமுக எம்எல்ஏகளில் ஒரு தரப்பினர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் தான் உத்தரவிட்டேன், இதற்காகக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், சில முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டு கட்சிக்குத் துரோகம் விளைவிக்கும் வகையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர் என்றார்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/a-democracy-with-a-conscience-cm-vijay-roars-after-winning-the-vote-of-confidence-78230.html"> “மனசாட்சி உள்ள மக்களாட்சி”.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் கர்ஜித்த முதல்வர் விஜய்..</a></strong>

மேலும் பேசிய அவர், தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று கூறும் முதல்வர் விஜய், ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்னைகளை பயன்படுத்தி, பிரிந்து சென்றவர்களின் வீட்டிற்குச் செல்வது எந்த விதத்தில் நியாயம்? தமிழக வரலாற்றிலேயே இல்லாத ஒரு தவறான முன்னுதாரணத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
<h3>இபிஎஸ் குறித்து சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Chennai, Tamil Nadu | AIADMK MLA CV Shanmugam says, "On behalf of AIADMK, 25 MLAs have supported TVK Leader TN CM Vijay...EPS is lying on the issue of signature of 47 MLAs on the resolution to not support TVK. When did the 47 MLAs sign this resolution, as claimed by EPS? He… <a href="https://t.co/XT9dCgHYNd">pic.twitter.com/XT9dCgHYNd</a></p>
— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/2054478152735273417?ref_src=twsrc%5Etfw">May 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் தன்னை சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியது பொய். எம்எல்ஏக்கள் கூட்டம் எப்போது நடைபெற்றது? கூட்டமே நடைபெறாதபோது அவர் எப்படி கையெழுத்து வாங்கியிருக்க முடியும்? என்றார்.

மேலும் பேசிய அவர், புதுச்சேரி ரிசார்ட்டில் என்ன செய்தார் என்பதை ஈபிஎஸ் சொல்வாரா? புதுச்சேரி கூட்டத்தில் தான் முதல்வராக போவதாக தெரிவித்தார். திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறினார். ஆட்சியமைக்க டெல்லியில் பேசி, அனுமதி பெற்றுவிட்டதாகவும் சொன்னார். ஆனால் இன்று மறுக்கிறார். அவர் கூறும் அனைத்தும் பொய்.  திருமாவளவன் முதலமைச்சராக திமுக முன்மொழிந்தது... ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-speaks-on-horse-trading-cvshanmugam-and-vijayabaskar-whisper-behind-his-back-78213.html">குதிரைப்பேரம் குறித்து பேசிய இபிஎஸ்.. பின்னால் கிசுகிசுத்துகொண்ட சண்முகம் – விஜயபாஸ்கர்.. என்ன நடக்குது அதிமுகவில்?</a></strong>

தொடர்ந்து பேசிய அவர், 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதை மிகப்பெரிய வெற்றி என்கிறார். இப்படியானவரை பொதுச்செயலாளராக வைத்திருந்தால் என்ன செய்ய முடியும்? இது வெற்றியா? மிகப்பெரிய தோல்வி தோல்வியில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார் ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு&#8221;.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/close-the-liquor-shops-soumya-anbumani-lashes-out-cm-vijay-takes-notes-78243.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 14:12:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/close-the-liquor-shops-soumya-anbumani-lashes-out-cm-vijay-takes-notes-78243.html</guid>
		            
			

    	<description><![CDATA[தனது உரையில் பாமக-வின் முக்கிய கோரிக்கைகளை அவர் மீண்டும் நினைவுபடுத்தினார். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 80% முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். மணல் கொள்ளை மற்றும் கனிம வளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க வேண்டும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/soumiya-anbumani.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு&#8221;.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!" /></figure>தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பாமக சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி கலந்துகொண்டு உரையாற்றினார். மது ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் அவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதை சௌமியா அன்புமணி மனமாரப் பாராட்டினார். குறிப்பாக, தனது தர்மபுரி தொகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த 3 மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-led-tamilnadu-government-removes-astrologer-as-officer-on-special-duty-after-criticism-78240.html">ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப்பெற்றது தமிழக அரசு..</a></strong>
<h3>மதுக்கடையை மூடினால் 4, 5 சந்து கடைகள்:</h3>
இருப்பினும், "ஒரு மதுக்கடையை மூடினால், அதற்குப் பக்கத்திலேயே 4 அல்லது 5 'சந்து கடைகள்' திறக்கப்படுகின்றன. இது தமிழகம் முழுவதும் நடக்கிறது; இதை அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்" என்று அவர் எச்சரித்தார். மது ஒழிப்பு என்பது ஒரு தொடர் முயற்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
<h3>"சிங்கப்பெண்" பிரிவுக்குப் பாராட்டு:</h3>
பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், போதை மற்றும் மது பழக்கத்தால் இன்று பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கே அஞ்சும் நிலை உள்ளதாகக் குறிப்பிட்டார். டாஸ்மாக் கடைகளைக் கடக்கும்போது பெண்கள் பயந்து தலைகுனிந்து செல்லும் அவல நிலை மாற வேண்டும் என்றார். பெண்கள் பாதுகாப்பிற்காக முதலமைச்சர் அறிவித்துள்ள "சிங்கப்பெண்" என்ற தனிப் பிரிவை அவர் வரவேற்றார். மேலும், இதற்கெனத் தனியாக ஒரு டிஜிபி தலைமையில் குழு அமைத்தால், அது பெண்கள் பாதுகாப்பிற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்ற ஆலோசனையை வழங்கினார்.
<h3>பாமக-வின் கொள்கைகளும் கோரிக்கைகளும்:</h3>
தனது உரையில் பாமக-வின் முக்கிய கோரிக்கைகளை அவர் மீண்டும் நினைவுபடுத்தினார். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 80% முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். மணல் கொள்ளை மற்றும் கனிம வளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க வேண்டும்.
<h3>நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக-வின் நிலைப்பாடு:</h3>
தமிழக அரசின் சில கொள்கைகள் பாமக-வின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், மக்கள் நலனை முன்னிறுத்தி இந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.
<h3>குறிப்பெடுத்த முதல்வர் விஜய்:</h3>
சௌமியா அன்புமணி மிக ஆவேசமாகவும் தரவுகளோடும் இந்தப் புகாரைத் தெரிவித்துக் கொண்டிருந்தபோது, அவையில் இருந்த தமிழக முதல்வர் விஜய் அதனை மிகுந்த கவனத்துடன் செவிமடுத்தார். சௌமியா அன்புமணி குறிப்பிட்ட ‘ஒரு கடைக்கு நான்கு சந்து கடைகள்’ என்ற விவகாரத்தை முதல்வர் தனது டைரியில் மிக முக்கியக் குறிப்பாக எடுத்துக்கொண்டார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/admk-mla-sp-velumani-speaks-and-assembly-and-supports-tvk-government-in-floor-test-78215.html">தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு..</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;அமைச்சர் பதவிக்காகத் துரோகம்&#8221;.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/betrayal-for-a-ministerial-post-edappadi-palaniswami-levels-serious-allegations-against-velumani-and-cv-shanmugam-78248.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 13:56:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/betrayal-for-a-ministerial-post-edappadi-palaniswami-levels-serious-allegations-against-velumani-and-cv-shanmugam-78248.html</guid>
		            
			

    	<description><![CDATA[அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக உலவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. "அதிமுக உருவானதே திமுகவிற்கு எதிரான கொள்கையில்தான். திமுகவை எதிர்த்துத் தோன்றிய ஒரு இயக்கம், அந்த கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/eps-blames-cv-shanmugam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;அமைச்சர் பதவிக்காகத் துரோகம்&#8221;.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!" /></figure>தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட உத்தரவை மீறி, அக்கட்சியின் ஒரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிருப்தி உறுப்பினர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் தான் உத்தரவிட்டதாகவும், இதற்காகக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் பதிவுத் தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும் இபிஎஸ் தெரிவித்தார். ஆனால், சில முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டு கட்சிக்குத் துரோகம் விளைவிக்கும் வகையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-led-tamilnadu-government-removes-astrologer-as-officer-on-special-duty-after-criticism-78240.html">ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப்பெற்றது தமிழக அரசு..</a></strong></p>

<h3>அமைச்சர் பதவி ஆசை:</h3>
தமிழக வெற்றி கழகத் தலைமையிலான ஆட்சியில் தங்களுக்கு அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் கிடைக்கும் என்ற ஆசையில், சில முன்னாள் அமைச்சர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டினார். சுமார் 6 பேருக்கு அமைச்சர் பதவி, 10 பேருக்கு வாரியத் தலைவர் பதவி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, சுமார் 25-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்து "குதிரை பேரம்" நடத்தியுள்ளனர் என்று அவர் சாடினார்.
<h3>முதலமைச்சர் விஜய் மீதான விமர்சனம்:</h3>
"தூய்மையான ஆட்சி நடத்துவேன்" என்று கூறும் முதலமைச்சர் விஜய், ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சனையைப் பயன்படுத்தி, பிரிந்து சென்றவர்களின் வீட்டிற்குச் செல்வது எந்த விதத்தில் நியாயம்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழக வரலாற்றிலேயே இல்லாத ஒரு தவறான முன்னுதாரணத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார் .
<h3>திமுகவுடன் கூட்டணி பேசவில்லை:</h3>
அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக உலவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. "அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) உருவானதே திமுகவிற்கு எதிரான கொள்கையில்தான். திமுகவை எதிர்த்துத் தோன்றிய ஒரு இயக்கம், அந்த கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். இந்த வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், சிலர் தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையில் இதுபோன்ற தவறான செய்திகளை நிர்வாகிகளிடமும், மக்களிடமும் பரப்பி வருவதாகத் தெரிவித்தார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/admk-mla-sp-velumani-speaks-and-assembly-and-supports-tvk-government-in-floor-test-78215.html">தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு..</a></strong>
<h3>அதிமுகவின் பலம் மற்றும் எதிர்காலம்:</h3>
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது என்றும், 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதே ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சுமார் 1.34 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், அதிமுக ஒரு வலிமையான இயக்கம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறினார். துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கிளீன் பாலிடிக்ஸ் டூ டர்ட்டி பாலிடிக்ஸ்: தவெக-வை கேள்வி கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-leader-stalin-criticizes-tvks-political-conduct-during-assembly-confidence-vote-78247.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 13:53:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-leader-stalin-criticizes-tvks-political-conduct-during-assembly-confidence-vote-78247.html</guid>
		            
			

    	<description><![CDATA[TN Assembly Confidence Vote: ஜனநாயக முறைப்படி தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடாமல் இருக்க திமுக நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அரசியல் செய்வது "தூய்மையான அரசியல்" அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/stalin-mk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கிளீன் பாலிடிக்ஸ் டூ டர்ட்டி பாலிடிக்ஸ்: தவெக-வை கேள்வி கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின்!" /></figure>தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதைத் தடுக்க ஆதரவாக நின்ற தோழமைக் கட்சிகளின் நிலைப்பாட்டைத் தாம் மதிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, கொள்கை உறுதியுடன் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைவதற்கோ அல்லது தொடர்வதற்கோ திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் தடையாக இருக்காது என்ற தனது நிலைப்பாட்டை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த உயரிய ஜனநாயகப் பண்பின் அடிப்படையில், திமுக உறுப்பினர்கள் அனைவரும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தீர்ப்பை மதிப்பதே ஒரு சிறந்த அரசியல் இயக்கத்திற்கு அழகு என்பதை பறைசாற்றும் விதமாக இந்த நடவடிக்கை அமைந்திருந்தது.
<h3>தோழமைக் கட்சிகளின் ஆதரவும் நன்றியும்</h3>
இந்த அரசியல் நிகழ்வின் போது திமுகவுடன் கைகோர்த்து நின்ற தோழமை இயக்க உறுப்பினர்களான பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி மற்றும் நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்து தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். இவர்களது இந்தச் செயலுக்கு முதல்வர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதே வேளையில், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் முடிவையும் தாம் மதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
<h3>தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான கடுமையான விமர்சனம்</h3>
ஆட்சி அமைய வழிவகுத்த அனைவரது நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தற்போது செயல்பட்டு வருவதாக  ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். "தூய்மையான அரசியல்" (Clean Politics) என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது "அழுக்கான அரசியலில்" (Dirty Politics) ஈடுபட்டு வருவதாக அவர் சாடினார். குறிப்பாக, பிளவுபட்ட நிலையில் இருக்கும் அதிமுகவின் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி, அக்கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக ஆவணத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயல் வாக்களித்த மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/a-democracy-with-a-conscience-cm-vijay-roars-after-winning-the-vote-of-confidence-78230.html">“மனசாட்சி உள்ள மக்களாட்சி”.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் கர்ஜித்த முதல்வர் விஜய்..</a>
<h3>எதிர்க்கட்சியாக திமுகவின் உறுதிமொழி</h3>
தற்போதைய ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாகவும், அதிமுக உறுப்பினர்களுக்கு ஆளுங்கட்சி அளிக்கப்போகும் "பரிசு" என்னவாக இருக்கும் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். எது எப்படி இருப்பினும், திராவிட முன்னேற்றக் கழகம் தனது கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்.. அரசு பதவி எதற்கு? ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் குறித்து பேரவையில் பிரேமலதா விஜயகாந்த காட்டம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmdk-mla-premalatha-vijayakanth-raised-questions-about-appointment-about-ricky-radhan-pandit-vetrivel-appointment-by-tamil-nadu-government-78244.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 13:43:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmdk-mla-premalatha-vijayakanth-raised-questions-about-appointment-about-ricky-radhan-pandit-vetrivel-appointment-by-tamil-nadu-government-78244.html</guid>
		            
			

    	<description><![CDATA[‘அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை’ என முதலமைச்சர் சொல்லும்போது அனைவரும் வரவேற்றோம். ஆனால், அவருடைய ராஜகுருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் வெற்றிவேலை அரசு பதவியில் அமர்த்தியதற்கு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரேமலதா விஜய்காந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/prema.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்.. அரசு பதவி எதற்கு? ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் குறித்து பேரவையில் பிரேமலதா விஜயகாந்த காட்டம்.." /></figure><p data-start="0" data-end="338"><strong>மே 13, 2026:</strong> புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக அரசு பொறுப்பேற்ற உடனே, மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் பேசத் தொடங்கினர். அப்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த உரையாற்றினார்.</p>

<h3 data-start="0" data-end="338">குதிரை பேரம் நடந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது:</h3>
<p data-start="496" data-end="738">அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சிகளை எதிர்க்கட்சிகளாக நினைக்காமல், அரசியலில் ஒரு மாண்பை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் விஜய். 717 மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு, பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு படை உருவாக்கும் அறிவிப்பு ஆகியவை வரவேற்கத்தக்கது.</p>
<p data-start="740" data-end="919">தமிழக வெற்றிக்கழக அரசு தனது ஆட்சியை தக்கவைக்க குதிரைப் பேரம் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் குதிரைப் பேரம் நடைபெற்றுள்ளது.</p>
<p data-start="740" data-end="919">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/admk-mla-sp-velumani-speaks-and-assembly-and-supports-tvk-government-in-floor-test-78215.html">தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு..</a></p>
<p data-start="921" data-end="1184">‘முகமூடி அணிந்து எங்கும் செல்ல மாட்டோம்; வெளிப்படையான ஆட்சி வழங்குவோம்’ என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். அப்படி இருக்கையில், முதலமைச்சர் விஜயின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார் என்பதை பேரவையில் வெளிப்படையாக விளக்க வேண்டும்.</p>
<p data-start="1186" data-end="1389">குதிரைப் பேரம் நடந்ததாக ஏராளமானோர் கூறி வரும் நிலையில், அதுகுறித்து பேச வேண்டும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான நிகழ்வு தற்போது நடந்துள்ளது. இந்த செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது.</p>

<h3 data-start="1186" data-end="1389">ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்:</h3>
<p data-start="1391" data-end="1662">‘அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை’ என முதலமைச்சர் சொல்லும்போது அனைவரும் வரவேற்றோம். ஆனால், அவருடைய ராஜகுருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் வெற்றிவேலை அரசு பதவியில் அமர்த்தியதற்கு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p data-start="1664" data-end="1912">உங்கள் ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளுங்கள். அரசு பதவி எதற்கு? இதன் மூலம் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? இதற்கு முதலமைச்சர் நிச்சயம் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும். இந்த ஆட்சி ஒரு நேர்மையான ஆட்சியாகவும், அறிவியல் பூர்வமான ஆட்சியாகவும் இருக்க வேண்டும்,” என குறிப்பிட்டார்.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>என்னை யாருமே கண்டுக்கல.. ஸ்டார் வேல்யூ பற்றி கதை சொன்ன ரஜினிகாந்த்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/rajinikanth-said-my-ego-was-crushed-during-a-visit-to-the-art-of-living-ashram-where-his-celebrity-status-went-unnoticed-78238.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 13:38:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/rajinikanth-said-my-ego-was-crushed-during-a-visit-to-the-art-of-living-ashram-where-his-celebrity-status-went-unnoticed-78238.html</guid>
		            
			

    	<description><![CDATA[Rajinikanth speech at Art Of Living International Center in Bengaluru viral on social media | பெங்களூரில் அமைந்துள்ள 'ஆர்ட் ஆஃப் லிவிங்' சர்வதேச மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டார் வேல்யூ பற்றி பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/rajinikanth-1-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="என்னை யாருமே கண்டுக்கல.. ஸ்டார் வேல்யூ பற்றி கதை சொன்ன ரஜினிகாந்த்!" /></figure>தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அறிந்தவர்களுக்கு அவரின் ஆன்மீக பற்று குறித்தும் தெரியும். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட<a href="https://www.tv9tamilnews.com/entertainment/rajinikanth-folds-his-hands-in-salutation-and-walks-away-in-response-to-a-reporters-question-about-vijay-78026.html" target="_blank" rel="noopener"> நடிகர் ரஜினிகாந்த்</a> வருடத்திற்கு ஒரு முறையாவது இமையமலை செல்வதை வழக்கமாக வைத்து உள்ளார். மேலும் தான் கலந்துகொள்ளும் பல நிகழ்ச்சிகளிலும் ஆன்மீகம் சார்ந்த கதைகளை அதிக அளவில் அவர் பேசியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வந்தாலும் தனது ஆன்மீக பயணத்தின் சில விசயங்களை தொடர்ந்து செய்துக்கொண்டே இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதில் ஒன்றுதான் இமையமலை பயணம். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஆர்ட்ஸ் ஆஃப் லிவிங் ஃபௌண்டேஷன் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பெங்களூரில் அமைந்துள்ள ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையத்தில் நடைபெற்ற, லிவிங் ஆர்ட்ஸ் அறக்கட்டளையின் 45-வது ஆண்டு நிறைவு மற்றும் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், தலைவர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார்.
<h3>ஸ்டார் வேல்யூ பற்றி கதை சொன்ன ரஜினிகாந்த்:</h3>
அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது குருதேவ் தன்னை ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்தது குறித்து கூறினார். மேலும் இரண்டு நாட்களுக்கு அங்கு தங்கி இருக்க முடிவு செய்த நான் அந்த இடத்தின் அமைதி பிடித்துப்போக 15 நாட்கள் தங்கியதாக கூறினார். அப்படி தங்கி இருந்த ஒருநாள் குருதேவ் என்னை தன்னுடன் வருமாறு அழைத்தார். நான் அப்படி வந்தால் அவருக்கு தொந்தரவாக இருக்கும் மக்கள் என்னை சூழ்ந்து கொள்வார்கள் அது உங்களை தொந்தரவு செய்யும் என்று வர மறுத்தேன்.

ஆனால் அவர் அப்படி எதுவும் நடக்காது என்று என்னை அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். உண்மையைச் சொல்லப்போனால், அங்கே இருந்தவர்களில் ஒருவர்கூட என்னைப் திரும்பிப் பார்க்கவில்லை. நானே கைகளை அசைத்து வணக்கம் கூறினேன். அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை. அந்த நிகழ்வு ஒரு ஸ்டார்டம் என்ற எனது ஈகோவை உடைத்துவிட்டது. ஆன்மீகம் எவ்வளவு சிறந்தது என்பதையும் எனக்கு புரிய வைத்தது என்று தெரிவித்து இருதார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/the-film-crew-has-released-the-pooja-video-for-santhanams-movie-love-bite-78040.html">சந்தானத்தின் லவ் பைட் படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு</a></strong>
<h3>இணையத்தில் வைரலாகும் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">VIDEO | Recalling his earlier visit to the Art of Living, actor Rajinikanth (<a href="https://twitter.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a>) brought the house down with his humorous take, said, 'nobody even looked at me'.<a href="https://twitter.com/hashtag/Rajinikanth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Rajinikanth</a> <a href="https://t.co/JPZGgxtLMv">pic.twitter.com/JPZGgxtLMv</a></p>
— Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/2054254696962068624?ref_src=twsrc%5Etfw">May 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-vishal-thanks-cm-vijay-for-the-announcement-to-close-717-wine-shops-especially-the-ones-near-schools-78057.html">எத்தணை சிறப்பான ஒரு நடவடிக்கை இது… முதலமைச்சர் விஜயின் செயலைப் பாராட்டிய நடிகர் விஷால்!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சீறி எழுந்த பார்வதி&#8230; முகவாயைப் பிடித்து கொஞ்சிக் கெஞ்சிய ஈசன்! &#8211; ஓர் அபூர்வ தல வரலாறு</title>
		<link>https://www.tv9tamilnews.com/religion/the-divine-reconciliation-lord-shiva-calming-goddess-parvati-at-thirumeeyachur-temple-78234.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 13:10:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/religion/the-divine-reconciliation-lord-shiva-calming-goddess-parvati-at-thirumeeyachur-temple-78234.html</guid>
		            
			

    	<description><![CDATA[The Divine Reconciliation: திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், சிற்பக் கலைக்கும் புராண வரலாற்றுக்கும் பெயர்பெற்றது. அங்கே வடிக்கப்பட்டுள்ள ஒரு தனித்துவமான சிற்பம், உலகைக் காக்க இறைவன் தன் மனைவியிடமே மண்டியிட்டு சமாதானம் செய்த நெகிழ்ச்சியான கதையை நமக்கு விவரிக்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/parvathi-temple.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சீறி எழுந்த பார்வதி&#8230; முகவாயைப் பிடித்து கொஞ்சிக் கெஞ்சிய ஈசன்! &#8211; ஓர் அபூர்வ தல வரலாறு" /></figure>திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், சிற்பக் கலைக்கும் புராண வரலாற்றுக்கும் பெயர்பெற்றது. அங்கே வடிக்கப்பட்டுள்ள ஒரு தனித்துவமான சிற்பம், உலகைக் காக்க இறைவன் தன் மனைவியிடமே மண்டியிட்டு சமாதானம் செய்த நெகிழ்ச்சியான கதையை நமக்கு விவரிக்கிறது.சூரிய பகவானின் தேரைச் செலுத்தும் அருணன், உடல் குறைபாடு உடையவர். ஒருமுறை சிவ-பார்வதியை தரிசிக்க விரும்பி சூரியனிடம் அனுமதி கேட்டார். ஆனால் சூரியனோ, அருணனின் உடல் ஊனத்தைக் கேலி செய்து தடுத்தார். தனது பக்தனை ஏளனம் செய்த சூரியனின் செயலால் கோபமடைந்த சிவபெருமான், சூரியனின் ஒளியைப் பறித்தார். ஒளியிழந்த சூரியன் தன் தவறை உணர்ந்து, கயிலாயம் சென்று விமோசனம் வேண்டினார். அப்போது ஈசன், "என்னையும் உமையவளையும் யானை மீது அமர்த்தி, மேக மண்டலத்தில் இருந்து ஏழு மாதங்கள் பூஜித்து வா" என அருளினார்.
<h3>பொறுமையிழந்த சூரியனும் அம்பிகையின் ஆவேசமும்</h3>
ஈசன் சொன்னது போலவே சூரியன் பூஜைகளைச் செய்து வந்தார். ஆனால், ஏழு மாதங்கள் முடிவதற்கு முன்பே பொறுமையிழந்த சூரியன், ஈசனிடம் வந்து தன் சாபம் ஏன் இன்னும் நீங்கவில்லை என்று முறையிட்டார். சூரியனின் இந்த அவசர புத்தியைக் கண்டு அன்னை பார்வதி கடும் கோபம் கொண்டாள். "நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை கூட உன்னால் பொறுமையாக இருக்க முடியாதா?" என்று வினவி, அவருக்கு மீண்டும் சாபம் கொடுக்கத் துணிந்தாள். அம்பிகையின் ஆவேசம் உலகையே நடுங்கச் செய்தது.
<h3>உலகைக் காக்க பார்வதியை சமாதானம் செய்த சிவன்</h3>
பார்வதி மீண்டும் சபித்தால் உலகம் மீள முடியாத துயரத்தில் ஆழும் என்பதை உணர்ந்த ஈசன், உடனடியாகத் தலையிட்டார். ஏற்கனவே சூரியன் ஒளியிழந்ததால் உலகம் இருளில் தவிப்பதைப் பார்வதிக்கு எடுத்துரைத்தார். ஆவேசமாக இருந்த தேவியின் முகவாயை (தாடையை) மென்மையாகப் பற்றி, "தேவி, சாந்தமடை... உன் கோபம் உலகைத் தாங்காது" என்று அன்புடன் கொஞ்சி சமாதானம் செய்தார். ஒரு கணவனின் கனிவும், இறைவனின் கருணையும் கலந்த அந்தத் தருணமே இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
<h3>ஷேத்திர புராணேஸ்வரர்: சிற்பக் கலையின் உச்சம்</h3>
இந்த நெகிழ்ச்சியான புராணச் சம்பவம் திருமீயச்சூர் ஆலயத்தின் விமானத்தில் தெற்குப் பகுதியில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இதனை 'ஷேத்திர புராணேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள். சீற்றத்துடன் இருக்கும் பார்வதியின் முகத்தையும், அவளைக் கொஞ்சிச் சமாதானப்படுத்தும் சிவனின் பாவனையையும் இச்சிற்பத்தில் தத்ரூபமாகக் காணலாம். உலகிலேயே இத்தகைய எழில்மிக்க 'சமாதானச் சிற்பத்தை' வேறெங்கும் காண்பது அரிது. இத்தலத்திற்குச் சென்று இந்த சிற்பத்தைத் தரிசிப்பவர்களுக்குக் குடும்ப ஒற்றுமையும், மன அமைதியும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப்பெற்றது தமிழக அரசு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-led-tamilnadu-government-removes-astrologer-as-officer-on-special-duty-after-criticism-78240.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 13:08:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-led-tamilnadu-government-removes-astrologer-as-officer-on-special-duty-after-criticism-78240.html</guid>
		            
			

    	<description><![CDATA[முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதாக நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டிருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/2ricky-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப்பெற்றது தமிழக அரசு.." /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="relative w-full overflow-visible"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-12" data-turn-id-container="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-12" data-testid="conversation-turn-26" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" data-message-author-role="assistant" data-message-id="e93b8a2d-3fb4-48f8-8405-b8881998086b" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="172">முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதாக நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டிருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.</p>

<h3 data-start="0" data-end="172">ஜோதிடர் நியமனத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு:</h3>
</div>
தமிழக அரசு பொறுப்பேற்றவுடன், இரண்டாவது நாளிலேயே முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராஜன் பண்டிட் வெற்றிவேல் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. “ஜோதிடருக்கு எதற்கு அரசு பதவி?” என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், “ஜோதிடர் எப்படி அரசியல் ஆலோசனைகள் வழங்குவார்?” என்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து, இன்று சட்டசபை நிகழ்வின் போது இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? ஜோதிடருக்கு எதற்கு அரசு பணி? இதன் மூலம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என கடுமையாக கேள்வி எழுப்பினார்.
<h3>வாபஸ் பெறப்பட்ட நியமன ஆணை:</h3>
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்த நியமனத்தை திரும்பப் பெற்றுள்ளது. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் இந்த நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

முதலமைச்சரின் இந்த செயல்பாட்டை அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அதாவது, பிற கட்சிகளின் விமர்சனங்களை ஏற்று திருத்தம் செய்யும் அணுகுமுறை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், எதிர்கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் முதலமைச்சராக விஜய் இருந்து வருகிறார் என்றும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ரிக்கி ராஜன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் ஈரோட்டில் பிறந்தவர். ஜோதிடராக பணியாற்றி வந்த அவர், வேத ஜோதிடம், தியானம் சார்ந்த வழிகாட்டுதல் மற்றும் எண் கணிதம் ஆகியவற்றில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மேலும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் ஜோதிட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>முதலிடத்தில் குஜராத்.. சிஎஸ்கே 5 வது இடத்தில்.. ஐபிஎல் புள்ளி பட்டியல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/ipl-points-table-2026-gujarat-titans-at-1st-position-after-defeating-sunrisers-hyderabad-78219.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 12:57:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/ipl-points-table-2026-gujarat-titans-at-1st-position-after-defeating-sunrisers-hyderabad-78219.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஆறு அணிகள் கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளதால், புள்ளி அட்டவணை தற்போது கடும் போட்டிக்கு உள்ளாகியுள்ளது. எனவே, 16 புள்ளிகளை எட்டிய போதிலும், குஜராத் டைட்டன்ஸ் அணியால் இன்னும் இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்ய முடியவில்லை. சிஎஸ்கே தொடர்ந்து முன்னேறுமா என்பதை பார்க்கலாம்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ipl-2026-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முதலிடத்தில் குஜராத்.. சிஎஸ்கே 5 வது இடத்தில்.. ஐபிஎல் புள்ளி பட்டியல்!" /></figure>ஐபிஎல் 2026 தொடரில் பிளேஆஃப் இடங்களுக்கான போட்டி கடுமையாக உள்ளது. இந்த சீசனில் வலுவான தொடக்கத்திற்குப் பிறகு சில அணிகள் தங்கள் வேகத்தை இழந்துள்ளன. மோசமான தொடக்கத்தைக் கொண்டிருந்த மற்ற அணிகள், இப்போது மீண்டும் போட்டிக்குத் திரும்பியுள்ளன. இதன் விளைவாக, தற்போது குறைந்தது ஆறு அணிகள் பிளேஆஃப் இடங்களுக்காகப் போட்டியிடுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) இப்போது கணிசமான முன்னிலை பெற்றுள்ளது, மேலும் அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது.

மே 12 ஆம் தேதி அகமதாபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக பெற்ற ஒரு பெரிய வெற்றியின் மூலம், குஜராத் அணி பிளேஆஃப்களை நோக்கிய ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்தது. அந்தப் போட்டியில், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியால் ஒரு பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை, மேலும் சன்ரைசர்ஸ் அணி அவர்களை 168 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இருப்பினும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான SRH அணிக்கு இந்த இலக்கு ஒரு மாபெரும் சவாலாக அமைந்தது, மேலும் அந்த அணி தோல்வியடைந்தது. SRH அணி வெறும் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, மேலும் குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
<h3>ஜிடி முதலிடத்தில், ஆனால் பிளேஆஃப்கள் இன்னும் உறுதியில்லை.</h3>
இதன் மூலம், குஜராத் தனது ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவுசெய்து, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. தற்போது 12 போட்டிகளில் இருந்து மொத்தம் 16 புள்ளிகளைப் பெற்றுள்ள குஜராத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இனி, ஒரே ஒரு வெற்றி அல்லது ஒரு புள்ளி குஜராத்தின் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்யும். அணி இன்னும் போட்டியில் முன்னணியில் உள்ளது, ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் தோற்பதும், மற்ற அணிகளின் முடிவுகளும் இறுதி நான்கு இடங்களுக்கான வாய்ப்பை இழக்கச் செய்யலாம்.
<h3>தற்போது SRH-ன் நிலை என்ன?</h3>
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தைப் பொறுத்தவரை, இந்தத் தோல்விக்குப் பிறகும், அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் நீடிக்கின்றனர். அவர்கள் 12 போட்டிகளில் இருந்து 14 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அவர்களின் நிகர ரன் விகிதம் 0.331 ஆகக் குறைந்து, ஆர்சிபி-க்கு (1.103) அடுத்த மூன்றாவது இடத்தில் உள்ளது. அவர்கள் தங்களின் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற நல்ல வாய்ப்பு உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி, தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியடைந்த போதிலும், 13 புள்ளிகளுடன் தற்போது போட்டியில் நீடித்து, நான்காவது இடத்தில் உள்ளது ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை வெளியிட்ட கருப்பு டீம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/the-film-crew-has-released-the-song-verappa-extended-from-the-movie-karuppu-78226.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 12:40:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/the-film-crew-has-released-the-song-verappa-extended-from-the-movie-karuppu-78226.html</guid>
		            
			

    	<description><![CDATA[Verappa Extended Lyric Video Out Now | கருப்பு படத்தில் உருவான வீரப்பா பாடலின் எக்ஸ்டண்டட் வெர்ஷனை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ள நிலையில் தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/verappa.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை வெளியிட்ட கருப்பு டீம்" /></figure>நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/karuppu-movie-team-thanks-chief-minister-joseph-vijay-for-granting-the-special-permission-for-the-9-am-shows-78136.html" target="_blank" rel="noopener">கருப்பு</a>. இந்தப் படத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைப்பெற்று வந்த நிலையில் ஒரு வழியாக தற்போது ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி படம் நாளை மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் இந்தியா முழுவதும் மிகவும் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து ஹைதராபாத், கேரளா மற்றும் தமிழ் நாடு என்று படு பிசியாக படக்குழு சுற்றி வருகின்றது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் படக்குழு தினமும் ஒரு போஸ்டரை வெளியிட்டு வந்தது. இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ளார். இவரது இசையில் தமிழ் சினிமாவில் வெளியாகும் இரண்டாவது படம் கருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவரது இசையில் வெளியான டியூட் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
<h3>வீரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை வெளியிட்ட கருப்பு டீம்:</h3>
இந்த நிலையில் கருப்பு படத்தில் இருந்து அடுத்தடுத்தப் பாடல்களும் வெளியாகி முன்னதாக ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. அதில் குறிப்பாக வீரப்பா என்ற பாடல் தமிழ் மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த வீரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை தற்போது கருப்பு படக்குழு வெளியிட்டுள்ளது. அருண் ஸ்ரீனிவாசன் எழுதிய இந்தப் பாடலை பாடகர்கள் சாய் அபயங்கர் மற்றும் அறிவு இருவரும் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/rajinikanth-folds-his-hands-in-salutation-and-walks-away-in-response-to-a-reporters-question-about-vijay-78026.html">விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சென்ற ரஜினிகாந்த்</a></strong>
<h3>கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The roar has a rhythm 🦁
The rage has a sound 💥 <a href="https://twitter.com/hashtag/VerappaExtended?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VerappaExtended</a> from <a href="https://twitter.com/hashtag/Karuppu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Karuppu</a> out now.</p>
▶️ <a href="https://t.co/e4temSbCuc">https://t.co/e4temSbCuc</a><a href="https://twitter.com/hashtag/Karuppu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Karuppu</a> in theatres worldwide from TOMORROW!

A <a href="https://twitter.com/SaiAbhyankkar?ref_src=twsrc%5Etfw">@SaiAbhyankkar</a> Musical 🎵

Sung by <a href="https://twitter.com/Arivubeing?ref_src=twsrc%5Etfw">@Arivubeing</a> 🎙️
Lyrics by <a href="https://twitter.com/arunn_srini?ref_src=twsrc%5Etfw">@arunn_srini</a> ✍️<a href="https://twitter.com/Suriya_offl?ref_src=twsrc%5Etfw">@Suriya_offl</a> <a href="https://twitter.com/trishtrashers?ref_src=twsrc%5Etfw">@trishtrashers</a>… <a href="https://t.co/Pyp0KGWJRx">pic.twitter.com/Pyp0KGWJRx</a>

— DreamWarriorPictures (@DreamWarriorpic) <a href="https://twitter.com/DreamWarriorpic/status/2054434170647335255?ref_src=twsrc%5Etfw">May 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/a-fan-suddenly-climbing-on-stage-and-falling-on-suriyas-feet-at-telugu-pre-release-of-karuppu-movie-video-goes-viral-78033.html">கருப்பு பட நிகழ்ச்சியில் சூர்யாவின் காலில் விழுந்த ரசிகர்.. அடுத்த நொடியே அவர் செய்த விஷயம் – வைரலாகும் வீடியோ!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/temporary-ban-imposed-on-velliangiri-hill-trek-due-to-heavy-rain-alert-78224.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 12:32:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/temporary-ban-imposed-on-velliangiri-hill-trek-due-to-heavy-rain-alert-78224.html</guid>
		            
			

    	<description><![CDATA[Velliangiri Hills Heavy Rain Alert: கனமழை எச்சரிக்கையால் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 13-5-2026  இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை. தடையை மீறுவோருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/velliangiri-hills.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம்!" /></figure>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு இன்று முதல் (13-5-2026) தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகள் வழுக்கலாக மாறியுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மலையேற முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலை அடிவாரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
<h3>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை</h3>
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பரவலான மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கோவை மற்றும் அதனை ஒட்டிய மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, வழுக்கல் மற்றும் நீரோட்டம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
<h3>வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தற்காலிக தடை</h3>
பக்தர்கள் அதிகம் சென்று வரும் வெள்ளியங்கிரி மலையில் பாதுகாப்பு காரணங்களால் 13-5-2026 இன்று முதல் தற்காலிகமாக மலையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை காரணமாக மலைப்பாதைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் மலைப்பாதையில் செல்வது ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதால், யாரும் மலையேற முயற்சிக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
<h3>தடையை மீறினால் கடும் நடவடிக்கை</h3>
அரசு அறிவித்துள்ள இந்த தற்காலிக தடையை மீறி யாரேனும் மலையேற முயன்றால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பு பணியில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை அடிவார பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
<h3>பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்</h3>
மழை நிலைமை சீராகும் வரை பொதுமக்களும் பக்தர்களும் நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பக்தர்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சூழ்நிலை சீராகிய பிறகு மீண்டும் மலையேற்ற அனுமதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;மனசாட்சி உள்ள மக்களாட்சி&#8221;.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் கர்ஜித்த முதல்வர் விஜய்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/a-democracy-with-a-conscience-cm-vijay-roars-after-winning-the-vote-of-confidence-78230.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 12:27:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/a-democracy-with-a-conscience-cm-vijay-roars-after-winning-the-vote-of-confidence-78230.html</guid>
		            
			

    	<description><![CDATA[தனது அரசு பதவிக்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ அமைந்தது அல்ல, மாறாகத் தன்னை நம்பிய மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அமைந்தது என்றார். அதிகாரம் காட்டி மிரட்டாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனசாட்சி உள்ள மக்களாட்சியைத் தருவதே தனது ஒரே நிலைப்பாடு என்றும் கூறினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tvk-vijay-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;மனசாட்சி உள்ள மக்களாட்சி&#8221;.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் கர்ஜித்த முதல்வர் விஜய்.." /></figure>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, தவெக அரசுக்கு ஆதரவாக 144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல், 22 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றுவிட்டதாக சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் ஆற்றிய உரை, ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. தனது அரசை "சாமானியர்களின் அரசு" என்று குறிப்பிட்ட அவர், பல முக்கியமான கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-government-gets-144-members-support-in-floor-test-where-118-is-needed-vijay-to-continue-as-tamilnadu-cm-78222.html">தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு.. முதல்வர் விஜய்யின் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிப்பெற்றது என அறிவிப்பு..</a></strong></p>

<h3>வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி:</h3>
1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் அமைந்த சாமானியர்களின் ஆட்சியைப் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று விஜய் குறிப்பிட்டார். கட்சித் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில், சுமார் 1.72 கோடி வாக்குகளைப் பெற்று (34.92%), தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.
<h3>"சிறுபான்மை அரசு" - ஒரு புதிய விளக்கம்:</h3>
தனிப் பெரும்பான்மைக்குச் சற்று குறைவாக இடங்களைப் பெற்றதால், சிலர் இதைச் சிறுபான்மை அரசு என்று விமர்சிப்பதைக் குறித்துப் பேசிய விஜய், "ஆம், இது சிறுபான்மை அரசுதான் - சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசு" என்று அதற்குப் புதிய விளக்கம் அளித்தார். இது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்குமான அரசு என்று அவர் உறுதிபடக் கூறினார்.
<h3>கொள்கை வழிகாட்டியும் உத்தரவாதமும்:</h3>
தனது அரசின் செயல்பாடுகள் பின்வரும் தலைவர்களின் கொள்கை வழிகாட்டுதலுடன் இருக்கும் என்று அவர் அறிவித்தார். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் வழியில் சமூக நீதி, சமநீதி, மதச்சார்பற்ற கொள்கைகள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இன்றி இந்த அரசு செயல்படும் என்று அவர் உறுதியளித்தார்.
<h3>பாகுபாடற்ற நிர்வாகம்:</h3>
"எம்மதமும் சம்மதம், எல்லா மக்களும் நம் மக்களே" என்ற அடிப்படையில், தங்களுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்குமான அரசாக இது விளங்கும் என்று விஜய் கூறினார். அரசியல் காரணங்களுக்காக யாரையும் புண்படுத்தாத, பண்பட்ட அரசாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
<h3>மக்கள் நலனே முக்கியம்:</h3>
தனது அரசு பதவிக்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ அமைந்தது அல்ல, மாறாகத் தன்னை நம்பிய மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அமைந்தது என்று அவர் உணர்ச்சிகரமாகப் பேசினார். அதிகாரம் காட்டி மிரட்டாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனசாட்சி உள்ள மக்களாட்சியைத் தருவதே தனது ஒரே நிலைப்பாடு என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/astrology-and-sorcery-in-tamil-nadu-point-raised-by-the-vck-sparks-a-commotion-in-assembly-78201.html">தமிழ்நாட்டில் ஜோதிடம், மாந்திரீகம்.. விசிக சொன்ன அந்த பாய்ண்ட்.. சட்டப்பேரவையில் சலசலப்பு!</a></strong>

முதலமைச்சர் விஜய்யின் இந்த உரை, ஆக்ரோஷமான அரசியலை விட, அமைதியான மற்றும் கொள்கை ரீதியான அணுகுமுறையை அவர் கையில் எடுத்துள்ளதைக் காட்டுகிறது. "துள்ளி எழுந்து பதில் சொல்வதை விட, துணிச்சலுடன் செயலாற்றி வெற்றி பெறுவோம்" என்ற அவரது வரிகள் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>குதிரைப்பேரம் குறித்து பேசிய இபிஎஸ்.. பின்னால் கிசுகிசுத்துகொண்ட சண்முகம் &#8211; விஜயபாஸ்கர்.. என்ன நடக்குது அதிமுகவில்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-speaks-on-horse-trading-cvshanmugam-and-vijayabaskar-whisper-behind-his-back-78213.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 12:02:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-speaks-on-horse-trading-cvshanmugam-and-vijayabaskar-whisper-behind-his-back-78213.html</guid>
		            
			

    	<description><![CDATA[இதனிடயே, எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போது, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கரும் செய்கையில் பேசிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, விஜயபாஸ்கரை அருகே அழைத்த சி.வி.சண்முகம், அவரது காதில் முனுமுனுத்தார். தொடர்ந்து, விஜய்பாஸ்கர் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்ததும், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் இருக்கைக்கு எழுந்துச்சென்று பேசினார். அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர்கள் விவாதித்தாக தெரிகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/eps-cv-shanmugam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="குதிரைப்பேரம் குறித்து பேசிய இபிஎஸ்.. பின்னால் கிசுகிசுத்துகொண்ட சண்முகம் &#8211; விஜயபாஸ்கர்.. என்ன நடக்குது அதிமுகவில்?" /></figure>தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. குறிப்பாக, சட்டமன்ற மரபுகள் மீறப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், காலம் காலமாகப் பின்பற்றி வரும் மரபுகளைத் தற்போதைய பேரவைத் தலைவர் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தீர்மானங்களை வழிமொழிவதிலும், உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் பாரபட்சம் காட்டக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/8-ministerial-posts-for-aiadmk-in-exchange-for-supporting-tvk-who-features-on-the-list-78180.html">தவெகவுக்கு ஆதரவு.. அதிமுகவுக்கு 8 அமைச்சர் பதவிகள் நிபந்தனை?.. லிஸ்டில் யார் யார்?</a></strong>
<h3>குதிரை பேரத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டாம்:</h3>
தங்களது கட்சியில் நிலவும் சில உட்கட்சிப் பூசல்களைப் பயன்படுத்தி, ஆளுங்கட்சி ஒரு தரப்பிற்கு ஆதரவு அளிப்பது முறையாகாது என இபிஎஸ் சுட்டிக்காட்டினார். இது "குதிரை பேரத்திற்கு" வழிவகுத்துவிடும் என்றும், தூய்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதலமைச்சர் இதற்கு இடம் தரக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அதிமுக உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி இழுக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
<h3>சாதனைகளை வரிசைப்படுத்திய இபிஎஸ்:</h3>
தொடர்ந்து, பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது . குடிமராமத்துத் திட்டம், மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது மற்றும் காவேரி நதிப் பிரச்சனையில் விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டியது. டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது என்றார்.
<h3>தீர்மானத்திற்கு எதிர்ப்பு:</h3>
முடிவாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக மக்களுக்காகச் சேவை செய்யும் இயக்கம். எங்களைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி என்பது எதிரி கட்சி அல்ல, எதிர்கட்சி என்ற நிலைப்பாட்டில்தான் செயல்படுவோம்" என்று கூறினார். இருப்பினும், முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து வாக்களிப்போம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
<h3>காதில் முனுமுனுத்த சி.வி.சண்முகம்:</h3>
இதனிடயே, எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போது, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கரும் செய்கையில் பேசிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, விஜயபாஸ்கரை அருகே அழைத்த சி.வி.சண்முகம், அவரது காதில் முனுமுனுத்தார். தொடர்ந்து, விஜய்பாஸ்கர் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்ததும், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் இருக்கைக்கு எழுந்துச்சென்று பேசினார். அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர்கள் விவாதித்தாக தெரிகிறது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/astrology-and-sorcery-in-tamil-nadu-point-raised-by-the-vck-sparks-a-commotion-in-assembly-78201.html">தமிழ்நாட்டில் ஜோதிடம், மாந்திரீகம்.. விசிக சொன்ன அந்த பாய்ண்ட்.. சட்டப்பேரவையில் சலசலப்பு!</a></strong></p>

<h3>அவையில் பரபரப்பு:</h3>
இபிஎஸ் பேசி முடித்த பிறகு, அதிமுக உறுப்பினர்களுக்குள்ளேயே வாய்ப்பு வழங்குவதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. எஸ்.பி. வேலுமணி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் தலையிட்டு உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயன்றார். யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது பேரவைத் தலைவரின் உரிமை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த விவாதங்களால் சட்டமன்றத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8216;சோஃபா செல்கிறது.. புது முதல்வர் செல்கிறார்&#8217;.. புஷ்பா பட சீனை குறிப்பிட்டு தவெகவை விமர்சித்த உதயநிதி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/udhayanidhi-stalin-criticised-the-tvk-citing-a-scene-from-the-movie-pushpa-78216.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 11:53:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/udhayanidhi-stalin-criticised-the-tvk-citing-a-scene-from-the-movie-pushpa-78216.html</guid>
		            
			

    	<description><![CDATA[Udhayanidhi Stalin criticised TVK | தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை புஷ்பா படத்தின் சோஃபா காட்சியை வைத்து விமர்சனம் செய்து உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவர் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/udhayanidhi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8216;சோஃபா செல்கிறது.. புது முதல்வர் செல்கிறார்&#8217;.. புஷ்பா பட சீனை குறிப்பிட்டு தவெகவை விமர்சித்த உதயநிதி!" /></figure>தமிழ் நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றிப் பெற்று மற்ற கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சியை அமைத்துள்ளது <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-vishal-thanks-cm-vijay-for-the-announcement-to-close-717-wine-shops-especially-the-ones-near-schools-78057.html" target="_blank" rel="noopener">தளபதி விஜயின்</a> தமிழக வெற்றிக் கழகம். மொத்தம் 234 தொகுதிகளில் மேஜிக் நம்பர் என்று கூறப்படும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாமல் 108 இடங்களில் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வென்று இருந்தது. மற்ற இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிப் பெற்று இருந்தது. எந்த கட்சி உடனும் கூட்டணி இல்லாமலே தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 108 இடங்களில் வெற்றிப் பெற்று இருந்தது. அதில் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான தளபதி விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிப் பெற்று இருந்தார். அதனால அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யவேண்டிய காரணத்தால் மொத்தம் 107 தொகுதிகளே தவெகவின் கைவசம் உள்ளது.

இந்த தொகுதிகள் ஆட்சி அமைக்க போதுமானதாக இல்லை. இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக திமுக உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளிடம் ஆதரவு பெற்று தற்போது ஆட்சியையும் அமைத்தது விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்ந்து இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகின்றது. அப்படி இன்று தமிழக வெற்றிக் கழகம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது வைரலாகி வருகின்றது.
<h3>புஷ்பா பட சீனை குறிப்பிட்டு தவெகவை விமர்சித்த உதயநிதி:</h3>
மேஜிக் நம்பர்ஸ் இல்லாமல் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்ததாக தனது உறையை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் என்.டி.ஏ கூட்டணி கட்சியில் பிளவுபட்ட தலைவர்களை சந்தித்தது குறித்து விமர்சித்து பேசினார். அதன்படி என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள அதிமுக தற்போது ஒரு தலைமையின் கீழ் இல்லாமல் உட்கட்சி பூசலால் பிரிந்து இருப்பதாக செய்திகள் வருகின்றது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/amazon-resume-negotiations-with-the-jana-nayagan-film-crew-the-news-goes-viral-on-social-media-77999.html">மீண்டும் ஜன நாயகன் படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமேசான் நிறுவனம்? வைரலாகும் தகவல்</a></strong>

இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.பி. வேலுமணியின் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சர் விஜய் அவரை சந்தித்து பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலி விமர்சித்து பேசியுள்ளார். அதில் தெலுங்கு சினிமாவில் வெளியான புஷ்பா 2 படத்தின் சோஃபா காட்சியை குறிப்பிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினை விமர்சித்து உள்ளார்.

பிளவுபட்ட அதிமுக பிரிவு வீட்டுக்கு முதல்வர் சென்றதை மக்கள் விரும்பவில்லை. ஊழல் சக்தியோடு சேர்ந்த ஆளும்கட்சியை மக்கள் சோசியல் மீடியாவில் விமர்சிக்கின்றனர். மேலும் உங்களுக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் கூட்டணிகளும் வருத்தத்தில் உள்ளனர் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-sivakarthikeyans-seyon-film-is-planned-for-an-october-release-78014.html">அடுத்த வாரம் தொடங்கும் சேயோன் படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு.. முதல்வர் விஜய்யின் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிப்பெற்றது என அறிவிப்பு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-government-gets-144-members-support-in-floor-test-where-118-is-needed-vijay-to-continue-as-tamilnadu-cm-78222.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 11:46:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-government-gets-144-members-support-in-floor-test-where-118-is-needed-vijay-to-continue-as-tamilnadu-cm-78222.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு 144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/majority-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு.. முதல்வர் விஜய்யின் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிப்பெற்றது என அறிவிப்பு.." /></figure><p data-start="0" data-end="153">தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு 144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல், 22 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றுவிட்டதாக சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.</p>
<p data-start="0" data-end="282">புதிதாக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால், மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.</p>

<h3 data-start="0" data-end="282">6 பிரிவுகளாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு:</h3>
<p data-start="284" data-end="606">இதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து பேசத் தொடங்கினர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.</p>
<p data-start="608" data-end="813">அதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையின் அனைத்து நுழைவாயில்களையும் மூட சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் உத்தரவிட்டார்.</p>
<p data-start="815" data-end="985">இதனைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்களை எழுந்து நிற்க வைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.</p>
<p data-start="987" data-end="1313">முதல் பிரிவில் 30 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இரண்டாவது பிரிவில் 42 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். மூன்றாவது பிரிவில் 46 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். நான்காவது பிரிவில், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.</p>

<h3 data-start="987" data-end="1313">144 பேர் ஆதரவு:</h3>
<p data-start="1315" data-end="1586">ஐந்தாவது மற்றும் ஆறாவது பிரிவுகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தமிழக அரசை ஆதரித்து மொத்தம் 144 பேர் எழுந்து நின்றனர். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக்கழக அரசு வெற்றி பெற்றது. இதனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடரும் என தெரிவிக்கப்பட்டது.</p>
<p data-start="1588" data-end="1721">இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில், 22 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், 5 பேர் நடுநிலை வகித்தனர்.</p>
<p data-start="1723" data-end="1994" data-is-last-node="" data-is-only-node="">பெரும்பான்மையை நிரூபிக்க 118 பேரின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு 144 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனவே, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக சட்டசபையில் அறிவித்தார்.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>2026 வைகாசி ராசிபலன்: அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் ராசிகள் எவை?</title>
		<link>https://www.tv9tamilnews.com/religion/detailed-vaikasi-2026-horoscope-predictions-for-sagittarius-capricorn-aquarius-and-pisces-78214.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 11:40:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/religion/detailed-vaikasi-2026-horoscope-predictions-for-sagittarius-capricorn-aquarius-and-pisces-78214.html</guid>
		            
			

    	<description><![CDATA[Detailed Vaikasi 2026 Horoscope: கிரக மாற்றங்கள் உங்கள் ஜாதக ரீதியாகச் சிறு மாற்றங்களை ஏற்படுத்தலாம். உரிய தெய்வ வழிபாடுகள் மற்றும் நிதானமான செயல்பாடுகள் மூலம் இந்த வைகாசி மாதத்தை வெற்றிகரமான மாதமாக மாற்றிக்கொள்ளலாம். பராபவ வருடம் வைகாசி மாதத்தில் கிரகங்களின் சஞ்சார மாற்றங்கள், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய நான்கு ராசிகளுக்கு என்னென்ன நன்மைகளையும் சவால்களையும் கொண்டு வரப்போகிறது என்பதைக் காண்போம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/10/maha-parivartana-rasipalan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="2026 வைகாசி ராசிபலன்: அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் ராசிகள் எவை?" /></figure>2026 வைகாசி மாத கிரக மாற்றங்கள் தனுசு முதல் மீனம் வரையிலான ராசிகளுக்குப் பொருளாதார உயர்வையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் வாரி வழங்குகின்றன.மகர ராசியினர் ஏழரைச் சனியின் பிடியில் இருந்து விடுபட்டு முன்னேற, மீனம் மற்றும் கும்ப ராசியினருக்கு மாத இறுதியில் எதிர்பாராத சுப யோகங்கள் கைகூடும். தனுசு ராசியினர் மட்டும் மாதத்தின் பிற்பாதியில் தங்கள் ஆரோக்கியம் மற்றும் தேவையற்ற விரயங்களில் சற்று கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமாகும். உரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நான்கு ராசிகளும் வைகாசி மாதத்தில் வரும் சவால்களை முறியடித்து வெற்றிகரமான வாழ்வை அமைக்க முடியும்.
<h3>தனுசு: மாத பிற்பாதியில் கவனம் தேவை</h3>
தனுசு ராசி நேயர்களுக்கு இந்த மாதத்தின் தொடக்கம் குருவின் பார்வையால் மங்களகரமாக அமையும். இருப்பினும், மே 25-க்குப் பிறகு குரு பகவான் எட்டாம் வீட்டிற்கு (அஷ்டம குரு) பெயர்ச்சியாவதால், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தேவையற்ற மருத்துவச் செலவுகளும், மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மே 26-ல் புதனின் மாற்றத்தால் தொழில் ரீதியாக புதிய கூட்டாளிகளின் வருகை உற்சாகம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். பெண்களுக்குப் பொருளாதார நெருக்கடி வரக்கூடும் என்பதால் சிக்கனம் தேவை. வியாழக்கிழமை குரு வழிபாடும், ஆதியந்த பிரபு வழிபாடும் சோதனைகளைக் குறைக்கும்.
<h3>மகரம்: ஏழரைச் சனியின் பிடியில் இருந்து விடுதலை</h3>
மகர ராசி அன்பர்களுக்கு இது ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. ஏழரைச் சனி முழுமையாக விலகிவிட்டதால், நீண்ட நாள் முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் எடுக்கும். சுக்ரனின் சஞ்சாரத்தால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற அனுகூலங்கள் கிடைக்கும். அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மே 26-க்குப் பிறகு புதனின் மாற்றத்தால் எதிரிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், குடும்பத்தில் ஒற்றுமையும் மேலோங்கும். வராஹி அம்மனை வழிபடுவது உங்கள் வாழ்வின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும்.
<h3>கும்பம்: திட்டமிட்ட செயல்பாடுகளால் வெற்றி</h3>
கும்ப ராசி நேயர்களுக்கு மாதத் தொடக்கம் மிகுந்த சாதகமாக உள்ளது. குருவின் பார்வையால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். மே 15 முதல் சுக்ரன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீகச் சொத்து தொடர்பான சிக்கல்கள் தீரும். சகோதர வழி உறவுகள் மேம்படும். இருப்பினும், மாத இறுதியில் குரு ஆறாம் இடத்திற்கு வருவதால் கடன் சுமைகளும், வீண் விரயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்கள் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு மாறும் முயற்சியில் வெற்றி காண்பார்கள். பெண்களுக்குச் சொத்து சேர்க்கை உண்டாகும். சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்வது பாதுகாப்பை வழங்கும்.
<h3>மீனம்: மன உறுதியால் தடைகளைத் தாண்டுவீர்கள்</h3>
மீன ராசி நேயர்களுக்கு மாதத்தின் முதல் பாதி சற்றே சவாலாக இருக்கலாம். அர்த்தாஷ்டம குருவின் தாக்கத்தால் வேலைப்பளுவும், உடல் சோர்வும் ஏற்படக்கூடும். குறிப்பாக மே 15 முதல் சுக்ரனின் மாற்றத்தால் வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. ஆனால், மே 26-ல் குரு பகவான் கடக ராசிக்கு மாறி உங்கள் ராசியைப் பார்ப்பது மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். அதன் பிறகு இழந்த செல்வத்தையும் செல்வாக்கையும் மீண்டும் பெறுவீர்கள். தற்காலிகப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாகும் வாய்ப்பு உண்டு. முருகப்பெருமானை வழிபடுவது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/admk-mla-sp-velumani-speaks-and-assembly-and-supports-tvk-government-in-floor-test-78215.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 11:25:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/admk-mla-sp-velumani-speaks-and-assembly-and-supports-tvk-government-in-floor-test-78215.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக்கழக அரசின் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி பேசத் தொடங்கினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலையிட்டு, எஸ்.பி. வேலுமணிக்கு பேச அனுமதி வழங்கினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/spv-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு.." /></figure>தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக்கழக அரசின் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி பேசத் தொடங்கினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலையிட்டு, எஸ்.பி. வேலுமணிக்கு பேச அனுமதி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டும். நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல,” என்று தெரிவித்தார். மேலும், மக்கள் தீர்ப்பை மதித்து, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
<h3>தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு:</h3>
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால், பெரும்பான்மையுடன் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தது.

இதனைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த சூழலில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
<h3>நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி:</h3>
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி பேசத் தொடங்கினார். ஆனால், “ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் எப்படி பேசலாம்?” என பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் பிரபாகர் தலையிட்டு, “யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்வது எனது உரிமை. சட்டசபையில் கட்சித் தலைவர் எடுக்கும் முடிவு அல்ல; சபாநாயகராக நான் எடுப்பதே இறுதி முடிவு. பேச வாய்ப்பு தருங்கள் என எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்ததால், அவரை பேச அனுமதித்துள்ளேன்,” என குறிப்பிட்டார்.
<h3>எஸ்.பி வேலுமணி தரப்பு ஆதரவு:</h3>
அதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார். அதாவது, அதிமுக இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 14 சட்டமன்ற உறுப்பினர்களும், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக பிரிவில் 30 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

எனவே, எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். மேலும், “நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல. மக்கள் தீர்ப்பை மதித்து இந்த அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
<h3>இங்கே என்ன குதிரை பேரமா  நடக்கிறது?</h3>
சட்டசபையில் அதிமுக இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு இடையே வார்த்தைப் போர் வெடித்தது.

எஸ்.பி. வேலுமணி பேசி முடித்த பிறகு, எடப்பாடி பழனிசாமி, “நான் இருக்கும்போதே எனது அனுமதி இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? இங்கு என்ன குதிரைப் பேரமா நடக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லையாம்&#8230; எப்போது தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-jailer-2-movie-is-now-planned-to-be-released-krishna-jayanthi-september-4th-2026-78209.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 11:12:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinothini Aandisamy]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/sources-said-jailer-2-movie-is-now-planned-to-be-released-krishna-jayanthi-september-4th-2026-78209.html</guid>
		            
			

    	<description><![CDATA[Rajinikanths Jailer 2 Movie Release Update | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/jailer-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லையாம்&#8230; எப்போது தெரியுமா?" /></figure>தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் <a href="https://www.tv9tamilnews.com/entertainment/rajinikanth-folds-his-hands-in-salutation-and-walks-away-in-response-to-a-reporters-question-about-vijay-78026.html" target="_blank" rel="noopener">நடிகர் ரஜினிகாந்த்</a>. 75 வயதைத் கடந்தாலும் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படம் என்ற விகித்திலாவது படம் ரிலீஸ் ஆவதை உறுதி செய்து வருகிறார். சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி 50 வருடங்களைக் கடந்த ரஜினிகாந்த் இளம் தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கூலி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் உடன் கூட்டணி வைத்தார். இவர்களின் கூட்டணி இரண்டாவது முறையாக நடந்தது. முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து ஜெயிலர் படத்தில் பணியாற்றினர். அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் கூட்டணி அமைத்தனர்.

தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
<h3>கிருஷ்ண ஜெயந்தியை குறி வைக்கும் ஜெயிலர் 2 படக்குழு:</h3>
ஒரு மிகச்சிறந்த தொடர்ச்சியை வழங்குவதற்காக, இயக்குனர் நெல்சனுக்குப் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால், ஜெயிலர் 2 திரைப்படம் தற்போது செப்டம்பர் 4, 2026 அன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 2026-இல் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது; அதேவேளையில், சூரி நடிக்கும் பிரம்மாண்டமான பொழுதுபோக்குத் திரைப்படமான மண்டாட்டி என்பதும் ஆகஸ்ட் 2026-இல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் உலகளாவிய வெளியீட்டுப் பணிகளை ஆர்.எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் முழுமையாகக் கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/karthi-said-nobody-else-can-carry-this-kinda-role-in-god-mode-in-karuppu-movie-77994.html">கருப்பு படத்தை சூர்யா அண்ணாவால் மட்டுமே பண்ணமுடியும் – நடிகர் கார்த்தி புகழாரம்</a></strong>
<h3>இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">BUZZ – <a href="https://twitter.com/hashtag/Jailer2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2</a> is now planned to be released on September 4th, 2026 (Krishna Jayanthi), as director <a href="https://twitter.com/hashtag/Nelson?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nelson</a> requires more time for post-production work to deliver a perfect sequel 👌.<a href="https://twitter.com/hashtag/Suriya?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Suriya</a>’s <a href="https://twitter.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a> is now planned for a theatrical release in August 2026, while… <a href="https://t.co/DUmMHmmt1W">pic.twitter.com/DUmMHmmt1W</a></p>
— Movies Singapore (@MoviesSingapore) <a href="https://twitter.com/MoviesSingapore/status/2054151781006086232?ref_src=twsrc%5Etfw">May 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>Also Read... <a href="https://www.tv9tamilnews.com/entertainment/director-bala-explains-whether-he-hit-mamita-baiju-during-the-shooting-of-vanangaan-77829.html">Director Bala: மமிதாவை நான் அடிச்சேனா.. அவர் எனது மகள் மாதிரி.. உண்மையை சொன்ன இயக்குநர் பாலா!</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>துரோகம் உன்னைத் தனிமைப்படுத்துகிறதா? அல்லது உன்னைச் செதுக்குகிறதா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/power-of-determination-and-self-realization-in-life-78188.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 11:00:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/power-of-determination-and-self-realization-in-life-78188.html</guid>
		            
			

    	<description><![CDATA[Life Change: வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும் என்றால் முதலில் மனதில் உறுதியான தீர்மானம் இருக்க வேண்டும். பயம் மற்றும் தயக்கம் மனிதனை முன்னேற விடாமல் தடுக்கின்றன. போலியான அன்பும் பொய்யான உறவுகளும் வாழ்க்கையில் ஏமாற்றத்தை தரும் என்பதால் தெளிவாக மனிதர்களை புரிந்துகொள்ள வேண்டும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/05/life-success.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="துரோகம் உன்னைத் தனிமைப்படுத்துகிறதா? அல்லது உன்னைச் செதுக்குகிறதா?" /></figure>வாழ்வின் மாற்றத்திற்கும் தற்போதய நிலைக்கும் உள்ள தொலைவுக்குப் பெயரே தீர்மானம். மனித வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் முதலில் மனதில் உறுதியான முடிவு இருக்க வேண்டும் என்பதையே இந்த வரிகள் உணர்த்துகின்றன. பலர் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கான முதல் அடியை எடுக்க தயங்குகிறார்கள். ஆனால் மாற்றம் என்பது வெளியில் இருந்து வருவது அல்ல, அது நம்முள் இருந்து துவங்கும் ஒரு பயணம். நமக்கான மாற்றம் நம்மில் இருந்து தான் துவங்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்க்கையை புதிய திசைக்கு கொண்டு செல்லும் சக்தியாக அமைகிறது.
<h3>தீர்மானத்தின் வலிமை</h3>
மாற வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் மாற்றம் வரும், தயங்கித் தயங்கி அல்லது பயந்து பயந்து நிற்கும் தருணங்கள் பயனற்ற தருணங்களே என்று கூறப்படும் கருத்து வாழ்க்கையின் உண்மையை எடுத்துரைக்கிறது. வெற்றியை அடைந்த ஒவ்வொருவரின் பின்னாலும் தைரியமான முடிவுகள் இருக்கின்றன. பயம், குழப்பம், தாமதம் ஆகியவை மனிதனை ஒரே இடத்தில் நிறுத்திவிடும். ஆனால் ஒரு உறுதியான தீர்மானம் மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்லும். தீர்மானித்து ஒரு முடிவெடு வாழ்க்கையையே மாற்றிப் போடு என்ற வரிகள், தன்னம்பிக்கை கொண்ட வாழ்க்கைக்கு ஊக்கமாக அமைகின்றன.
<h3>உணர்வுகளின் உண்மை முகம்</h3>
பொய்யான கோபம் அழகானது, பொய்யான அன்பு ஆபத்தானது என்ற வரிகள் மனித உறவுகளின் மறைமுக உண்மையை வெளிப்படுத்துகின்றன. சில நேரங்களில் வெளிப்படையாக கோபம் காட்டுபவர்கள் உண்மையில் அக்கறை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் போலியான அன்பு காட்டுபவர்கள் மனதை காயப்படுத்தக்கூடியவர்களாக மாறலாம். இங்கே பொய்கள் அழகாக தெரியும், போலிகள் நிரந்தரமானதாக தெரியும் என்ற சிந்தனை, இன்றைய சமூகத்தில் மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏமாற்றங்களை பிரதிபலிக்கிறது.
<h3>தெளிவின் அவசியம்</h3>
நாம் தெளிவடையாத வரைக்கும் எதையும் மாற்றவோ திருத்தவோ முடியாது என்பதில் ஆழமான வாழ்க்கை அனுபவம் மறைந்துள்ளது. எந்த சூழலிலும் உண்மையை புரிந்துகொள்ளும் தெளிவு மிகவும் முக்கியமானது. எதுவுமே உண்மை இல்லை, ஒரே உண்மைக்கு பலரும் பலவிதமாக விளக்கம் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் அவ்வளவே என்ற கருத்து மனிதர்களின் பார்வை வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப உண்மையை புரிந்துகொள்கிறார்கள்.
<h3>உன்னுள் உன்னை கண்டறியும் பயணம்</h3>
ஒவ்வொரு கனிக்கும் தனித்தனி சுவையுண்டு, உனக்கும் வாழ ஒரு வழியும்முண்டு என்ற வரிகள் வாழ்க்கைக்கு நம்பிக்கையை தருகின்றன. ஒவ்வொருவருக்கும் தனித்திறன், தனிப்பாதை, தனி அடையாளம் உள்ளது என்பதை இது நினைவூட்டுகிறது. மற்றவர்களைப் போல ஆக முயற்சிப்பதற்குப் பதிலாக, உனக்குள் உன்னை நீ கண்டுபிடி என்ற சிந்தனை வாழ்க்கையின் உண்மையான வெற்றியை உணர்த்துகிறது. தன்னம்பிக்கை மற்றும் சுயஅறிவு சேர்ந்தால் மனிதன் எதையும் சாதிக்க முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழ்நாட்டில் ஜோதிடம், மாந்திரீகம்.. விசிக சொன்ன அந்த பாய்ண்ட்.. சட்டப்பேரவையில் சலசலப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/astrology-and-sorcery-in-tamil-nadu-point-raised-by-the-vck-sparks-a-commotion-in-assembly-78201.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 10:57:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/astrology-and-sorcery-in-tamil-nadu-point-raised-by-the-vck-sparks-a-commotion-in-assembly-78201.html</guid>
		            
			

    	<description><![CDATA[புதிய ஆட்சி அமைந்தால் இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தாம் பாதுகாக்க படுவோம் என நம்பி வாக்களித்துள்ளனர். நேற்றைய தினம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என கேட்டுகொண்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vck-supports-tvk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்நாட்டில் ஜோதிடம், மாந்திரீகம்.. விசிக சொன்ன அந்த பாய்ண்ட்.. சட்டப்பேரவையில் சலசலப்பு!" /></figure>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒரு 'தொங்கு சட்டசபை' உருவானது. இருப்பினும், அதிக இடங்களைப் பெற்ற தவெக, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் அளித்த காலக்கெடுவின்படி, (மே 13) இன்று சட்டமன்றத்தில் தவெக தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. அப்போது, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான இந்த அரசுக்கு 118க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தவெகவிற்கு விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tirupattur-tvk-candidate-srinivasa-sethupathi-files-appeal-in-supreme-court-78080.html"> தவெக அரசு பெரும்பான்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.. உச்சநீதிமன்றத்தில் திருப்பத்தூர் எம்எல்ஏ மேல்முறையீடு!</a></strong>
<h3>தவெகவுக்கு விசிக ஆதரவு:</h3>
அந்தவகையில், இன்று சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, விசிக சார்பில் பேசிய வன்னி அரசு தங்களது ஆதரவை தெரிவித்தார். ஆளுநர் ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறினார். தொடர்ந்து, மாநில உரிமைகளை பாதுகாப்பதில் சமரசம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
<h3>மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு:</h3>
புதிய ஆட்சி அமைந்தால் இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தாம் பாதுகாக்க படுவோம் என நம்பி வாக்களித்துள்ளனர். நேற்றைய தினம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என கேட்டுகொண்டார்.
<h3>மூட நம்பிக்கைகளுக்கு இடம் தரக்கூடாது:</h3>
தொடர்ந்து, பேசிய அவர் மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கைகள் மூலம் ஏமாற்றுவோருக்கு சிறை தண்டனை அளிக்கும் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மாந்திரீகம், சூனியம் ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜோதிடம், பல்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமல் அறிவியலை வளர்க்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/8-ministerial-posts-for-aiadmk-in-exchange-for-supporting-tvk-who-features-on-the-list-78180.html">தவெகவுக்கு ஆதரவு.. அதிமுகவுக்கு 8 அமைச்சர் பதவிகள் நிபந்தனை?.. லிஸ்டில் யார் யார்?</a></strong></p>

<h3>திமுகவின் திட்டங்கள் தொடர வேண்டும்:</h3>
தொடர்ந்து, தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. அதேபோல், இந்த ஆட்சியிலும் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கான சலுகைகள் தொடர வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அதோடு, திமுக அரசு கொண்டு வந்த காலை சிற்றுண்டி திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன், தமிழ்புதல்வன் திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடர வேண்டும் என்றும் விசிக தரப்பில் கோரிக்கை வைத்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. 120 பேர் ஆதரவு.. கிடைத்தது பெரும்பான்மை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilaga-vetri-kazhagam-government-grabs-majority-in-floor-test-cm-vijay-to-continue-in-tamil-nadu-78205.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 10:34:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilaga-vetri-kazhagam-government-grabs-majority-in-floor-test-cm-vijay-to-continue-in-tamil-nadu-78205.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Floor Test: தமிழகத்தில் ஒரு அரசு அமைய வேண்டுமெனில், அதற்கு குறைந்தது 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில், தற்போதைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் இடையூறு இன்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/floor-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. 120 பேர் ஆதரவு.. கிடைத்தது பெரும்பான்மை.." /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="relative w-full overflow-visible"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-6" data-turn-id-container="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-6" data-testid="conversation-turn-14" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="6eb9c0cd-83a6-43aa-a653-240f6be85e36" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="336"><strong>மே 13, 2026:</strong> பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இன்று மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், தமிழக அரசு அமைக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் கெடு விதித்திருந்த நிலையில், இன்று சட்டசபையில் அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும், முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.</p>
<p data-start="523" data-end="764">முதலில், காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய உறுப்பினர்கள், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, அக்கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.</p>

<h3 data-start="523" data-end="764">தமிழக வெற்றிக்கழக அரசுக்கு கிடைத்தது பெரும்பான்மை:</h3>
<p data-start="766" data-end="1048">தமிழகத்தில் ஒரு அரசு அமைய வேண்டுமெனில், அதற்கு குறைந்தது 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில், தற்போதைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் இடையூறு இன்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p data-start="1050" data-end="1287">காங்கிரஸைத் (5) தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் (2) தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.</p>
<p data-start="1289" data-end="1482">அதேபோல், சுயேச்சை எம்.எல்.ஏ. காமராஜும் (1) தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளார். 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 120 பேரின் ஆதரவு கிடைத்ததன் காரணமாக பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.</p>
<p data-start="1289" data-end="1482">மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது..</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="contents"></div>
</div>
</div>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பாவம் போக்கி நற்கதி தரும் ஏகாதசி விரதம்: முழுமையான வழிபாட்டு முறைகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/religion/the-spiritual-significance-and-rituals-of-ekadashi-fasting-78186.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 10:15:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/religion/the-spiritual-significance-and-rituals-of-ekadashi-fasting-78186.html</guid>
		            
			

    	<description><![CDATA[Ekadashi Fasting: ஸ்ரீகிருஷ்ணருக்கு உகந்த ஏகாதசி விரதம் பாவங்களை நீக்கி மனத்தூய்மை வழங்குவதுடன், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உன்னத விரதமாகும்; இந்த நாளில் அரிசி மற்றும் தானிய உணவுகளைத் தவிர்த்து பழங்கள் அல்லது நீர் மட்டும் உட்கொண்டு இறைச் சிந்தனையில் ஈடுபடுவது அவசியமாகும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/photo-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பாவம் போக்கி நற்கதி தரும் ஏகாதசி விரதம்: முழுமையான வழிபாட்டு முறைகள்!" /></figure>ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் ஏகாதசி விரதம் என்பது இந்து தர்மத்தில் மிக உயரிய இடத்தைப் பெறுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படும் ஏகாதசி, ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அமாவாசை மற்றும் பௌர்ணமியிலிருந்து 11-வது நாளில் வருகிறது. இந்த நன்னாளில் விரதமிருந்து இறைவனை வழிபடுவதன் மூலம், ஒருவரது குடும்பம் முழுமைக்கும் இறைவனின் திருவருள் கிடைப்பதுடன், இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
<h3>விரதத்தின் அறிவியல் மற்றும் ஆன்மீகப் பின்னணி</h3>
ஏகாதசி விரதம் என்பது வெறும் மதச் சடங்கு மட்டுமல்ல, அது உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் ஒரு அறிவியல் பூர்வமான செயலாகும். மாதத்திற்கு இருமுறை உணவைக் கட்டுப்படுத்தி விரதம் இருப்பது ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வளித்து, உடல் நலத்தை மேம்படுத்துகிறது. சாஸ்திரங்களின்படி, மற்ற அனைத்து விரதங்களைக் காட்டிலும் ஏகாதசி விரதமே அதிக பலன்களைத் தரக்கூடியது. இந்த நாளில் தானியங்களை உண்பது எதிர்மறை கர்மவினைகளை உண்டாக்கும் என்பதால், அரிசி உள்ளிட்ட தானிய உணவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படுகின்றன.
<h3>விரத முறைகளும் உணவு கட்டுப்பாடுகளும்</h3>
ஏகாதசி விரதத்தின் அடிப்படை நோக்கமே நாவடக்கம் மற்றும் இறைச் சிந்தனையாகும். தீவிரமாக விரதம் இருப்பவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் 'நிர்ஜல ஏகாதசி'யாக கடைப்பிடிப்பர். உடல்நிலை கருதி இது இயலாதவர்கள் துளசி தீர்த்தம், பால் அல்லது பழங்களை மட்டும் உட்கொள்ளலாம். குறிப்பாக, ஏகாதசியன்று அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் சில காய்கறிகளான மொச்சை, பீன்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். சமையலுக்குப் பசு நெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது சிறந்தது. கடையில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த காய்கறிக் கூட்டுகளை உண்ணலாம்.
<h3>விரதத்தை தொடங்குதல் மற்றும் நிறைவு செய்தல்</h3>
விரதமானது ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்றே தொடங்குகிறது. தசமி இரவு சூரிய அஸ்தமனத்திற்கு முன் லேசான உணவை உட்கொண்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி முழுவதும் உறக்கத்தைத் தவிர்த்து, விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது 'ஹரே கிருஷ்ண' மகா மந்திரத்தை உச்சரித்து இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும். மறுநாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பது மிக முக்கியம். துவாதசி பாரணை எனப்படும் விரத முடிவின் போது அகத்திக் கீரை, நெல்லிக்கனி மற்றும் சுண்டைக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது வயிற்றுப் புண்களை நீக்கி உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை&#8230; ஒரு கிராமிற்கு ரூ. 1,070 அதிகரித்து விற்பனை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/after-the-import-tax-on-gold-increased-gold-and-silver-rate-in-tamil-nadu-drastically-spiked-know-in-details-78202.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 10:06:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/after-the-import-tax-on-gold-increased-gold-and-silver-rate-in-tamil-nadu-drastically-spiked-know-in-details-78202.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,23,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30 அதிகரித்து ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை&#8230; ஒரு கிராமிற்கு ரூ. 1,070 அதிகரித்து விற்பனை.." /></figure><p data-start="0" data-end="207"><strong>மே 13, 2026:</strong> தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,23,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30 அதிகரித்து ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>

<h3 data-start="0" data-end="207">விலை உயர என்ன காரணம்?</h3>
<div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="relative w-full overflow-visible"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-7" data-turn-id-container="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-7" data-testid="conversation-turn-16" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="2c901add-e6c8-4c13-9461-e4d9a7adcdbf" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="381">ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான பாதிப்பை முன்னிட்டு, ஓராண்டு வரை தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">மோடி</span></span> மக்களிடம் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியுள்ளது.</p>
<p data-start="383" data-end="725">மத்திய அரசு 10 சதவீத அடிப்படை சுங்க வரியுடன், 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) விதித்துள்ளது. இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்தி, வர்த்தக பற்றாக்குறையை குறைத்து, ஆசியாவில் பலவீனமான செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக உள்ள இந்திய ரூபாயை வலுப்படுத்துவதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="383" data-end="725">ஒரு சவரன் தங்கம் ரூ. 8,560 அதிகரிப்பு:</h3>
<p data-start="727" data-end="994">தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள சூழலில், தங்கத்தின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.8,560 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p data-start="996" data-end="1210">அந்த வகையில், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,800க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.15,400க்கும், ஒரு சவரன் ரூ.1,23,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p data-start="996" data-end="1210">மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/india/gold-silver-imports-to-get-costlier-as-govt-hikes-customs-duty-after-pms-appeal-know-more-in-details-78182.html"> ஈரான் போர் எதிரொலி: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு…</a></p>
<p data-start="1212" data-end="1400">தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,30,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>
<p data-start="1402" data-end="1552" data-is-last-node="" data-is-only-node="">தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மூன்று நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பயணத்திட்டம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-is-likely-to-visit-delhi-for-three-days-and-meet-pm-modi-president-and-talk-schemes-related-to-tamil-nadu-78192.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 09:23:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-is-likely-to-visit-delhi-for-three-days-and-meet-pm-modi-president-and-talk-schemes-related-to-tamil-nadu-78192.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த மாத இறுதியில் 3 நாள் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cm-delhi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மூன்று நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பயணத்திட்டம் என்ன?" /></figure><p data-start="0" data-end="90"><strong>மே 13, 2026:</strong> தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/after-the-new-government-formation-cm-c-joseph-vijay-to-prove-majority-in-floor-test-at-assembly-today-78177.html">விஜய்</a>, 3 நாள் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், மே 10ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.</p>
<p data-start="465" data-end="599">அதனைத் தொடர்ந்து, மே 11ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.</p>

<h3 data-start="465" data-end="599">அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்:</h3>
<p data-start="601" data-end="904">இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், அன்று பொறுப்பேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்திய அவர், பின்னர் கி. வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.</p>
<p data-start="906" data-end="1180">அதனைத் தொடர்ந்து, மே 11ஆம் தேதி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்ற அவரை <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">உதயநிதி ஸ்டாலின்</span></span> கட்டியணைத்து வரவேற்றார்.</p>
<p data-start="906" data-end="1180">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/8-ministerial-posts-for-aiadmk-in-exchange-for-supporting-tvk-who-features-on-the-list-78180.html">தவெகவுக்கு ஆதரவு.. அதிமுகவுக்கு 8 அமைச்சர் பதவிகள் நிபந்தனை?.. லிஸ்டில் யார் யார்?</a></p>
<p data-start="1182" data-end="1483">பின்னர், மதிமுக பொதுச்செயலாளர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">வைகோ</span></span>, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">அன்புமணி ராமதாஸ்</span></span> மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.</p>
<p data-start="1485" data-end="1859">முதல்வர் விஜய், நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர், சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தார். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். முதல்வர் விஜய் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது இந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது என பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.</p>

<h3 data-start="1485" data-end="1859">3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்:</h3>
<p data-start="2025" data-end="2338">இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த மாத இறுதியில் 3 நாள் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, குடியரசுத் தலைவர், பிரதமர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">மோடி</span></span> மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>லாரி மீது கார் மோதி விபத்து.. காவலர் உட்பட 6 பேர் பலி.. திருப்பூரில் சோகம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/car-crashes-into-lorry-6-dead-including-a-police-constable-tragedy-strikes-in-tiruppur-78190.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 08:49:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/car-crashes-into-lorry-6-dead-including-a-police-constable-tragedy-strikes-in-tiruppur-78190.html</guid>
		            
			

    	<description><![CDATA[தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/car-accident-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="லாரி மீது கார் மோதி விபத்து.. காவலர் உட்பட 6 பேர் பலி.. திருப்பூரில் சோகம்!!" /></figure>திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், ஒரு காவலர் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் சோதனைச் சாவடிக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இந்த மோதலில் கார் லாரியின் அடியில் சிக்கி உருக்குலைந்தது.
<h3>மீட்புபணியின் போது மீண்டும் விபத்து:</h3>
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த போது அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர், விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த மற்றொரு அசம்பாவிதத்தில் அந்த காவலரும் உயிரிழந்தார். மொத்தம் இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
<h3>இடிபாடுகளுள் சிக்கயவர்கள் மீட்பு:</h3>
இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
<h3>தூக்கக் கலக்கத்தால் விபத்து?</h3>
இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்தவர் தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா அல்லது லாரி விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்ததா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரே விபத்தில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்களுக்குக் கொடுக்கக்கூடிய வாக்குறுதி இதுதான்.. கருப்பு படத்தின் கதை குறித்து ஓபனாக சொன்ன சூர்யா!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/suriya-reveals-what-the-first-half-and-second-half-of-the-film-karuppu-will-be-like-78054.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 08:36:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/suriya-reveals-what-the-first-half-and-second-half-of-the-film-karuppu-will-be-like-78054.html</guid>
		            
			

    	<description><![CDATA[Suriya About Karuppu First Half And Second Half: தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாகவே நடித்துவருபவர் சூர்யா. இவரின் கருப்பு திரைப்படமானது 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில், கருப்பு திரைப்படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சூர்யா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/suriya-about-karuppu-review.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்களுக்குக் கொடுக்கக்கூடிய வாக்குறுதி இதுதான்.. கருப்பு படத்தின் கதை குறித்து ஓபனாக சொன்ன சூர்யா!" /></figure>2026ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படம்தான் <strong><a href="https://www.tv9tamilnews.com/entertainment/veera-bhadrudu-a-karuppu-movie-telugu-trailer-is-out-now-77864.html" target="_blank" rel="noopener">கருப்பு</a> </strong>(Karuppu). இதை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ள நிலையில், படத்தில் <strong><a href="https://www.tv9tamilnews.com/topic/suriya" target="_blank" rel="noopener">சூர்யா</a> </strong>(Suriya) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா (Trisha) நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க நீதிமன்றத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா. திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் வழக்கறிஞராக நடித்துள்ளனர். இந்த படமானது நீதிமன்றத்தில் நடக்கும், தவறுகளை தகர்க்க தெய்வீக சக்தி வருவதை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர்.எஸ். பிரபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் இரு நாட்களில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகொண்டார். அப்போது அந்த மேடையில்பேசிய அவர், கருப்பு படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/a-fan-suddenly-climbing-on-stage-and-falling-on-suriyas-feet-at-telugu-pre-release-of-karuppu-movie-video-goes-viral-78033.html" target="_blank" rel="noopener">கருப்பு பட நிகழ்ச்சியில் சூர்யாவின் காலில் விழுந்த ரசிகர்.. அடுத்த நொடியே அவர் செய்த விஷயம் – வைரலாகும் வீடியோ!</a>
</strong>
<h3>கருப்பு படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சூர்யா பேசிய பதிவு:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/Karuppu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Karuppu</a> First Half will be a nice Emotional Courtroom drama.. But Second Half will be full of theatrical moments.. Mass masala moments.. Full Humour.. Full fun will be there.. That's the promise we can give you bef the release..💥 - <a href="https://twitter.com/hashtag/Suriya?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Suriya</a> 🤝 <a href="https://t.co/ls3WiQUgir">pic.twitter.com/ls3WiQUgir</a></p>
— Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://twitter.com/iammoviebuff007/status/2053877837132915155?ref_src=twsrc%5Etfw">May 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அந்த நிகழ்ச்சியின்போது சூர்யா பேசுகையில், " கருப்பு திரைப்படத்தின் முதல் பாதி ஒரு நல்ல உணர்ச்சிபூர்வமான நீதிமன்ற கதைக்களத்தில் இருக்கும். ஆனால் இரண்டாம் பாடகி முழுவதும், ஆக்ஷ்ன் டிராமா தருணங்கள், மாஸ் மசாலா தருணங்கள், முழு நகைச்சுவை, முழு வேடிக்கை நிறைந்திருக்கும். இந்த கருப்பு படம் வெளியாக்குவதற்கு முன், எங்களால் உங்களுக்கு கொடுக்கக்கூடிய வாக்குறுதி இதுதான்" என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார். இதுகுறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/karthi-said-nobody-else-can-carry-this-kinda-role-in-god-mode-in-karuppu-movie-77994.html" target="_blank" rel="noopener">கருப்பு படத்தை சூர்யா அண்ணாவால் மட்டுமே பண்ணமுடியும் – நடிகர் கார்த்தி புகழாரம்</a>
</strong>

கருப்பு படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழை கொடுத்திருக்கும் நிலையில், இதை 13+ வயதிற்கு மேற்பட்ட நபர்களே திரையரங்குகளுக்கு சென்று பார்க்கமுடியும். இப்படம் முழுக்க மாஸ் கமர்ஷியல் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியாகும் நிலையில், நிச்சயம் மக்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெளிநாடு செல்ல முடியாததால் விரக்தி.. நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி இளைஞர் தற்கொலை.. சென்னையில் ஷாக்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/frustrated-over-inability-to-travel-abroad-young-man-take-a-disastrous-decision-shocking-in-chennai-78185.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 08:30:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/frustrated-over-inability-to-travel-abroad-young-man-take-a-disastrous-decision-shocking-in-chennai-78185.html</guid>
		            
			

    	<description><![CDATA[லண்டன் சென்று தனது மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியது. தனது லண்டன் படிப்பு செலவிற்காகத் தாயிடம் ஜோதிமணி பணம் கேட்டுள்ளார். ஆனால், வசந்தா தன்னிடம் போதுமான பணவசதி இல்லை என்று கூறியுள்ளார். விடாப்பிடியாக இருந்த ஜோதிமணி, தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றாவது தனக்குப் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/crime-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெளிநாடு செல்ல முடியாததால் விரக்தி.. நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி இளைஞர் தற்கொலை.. சென்னையில் ஷாக்!!" /></figure>சென்னையில் வெளிநாடு சென்று கல்வி பயில வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறாத விரக்தியில், பட்டதாரி இளைஞர் ஒருவர் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கவரை தெருவைச் சேர்ந்தவர் வசந்தா (67). இவரது கணவர் ரவிசங்கர், சென்னை மாநகர காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2017-ஆம் ஆண்டு ரவிசங்கர் உடல்நலக் குறைவால் காலமானார். வசந்தா தனது 29 வயது மகன் ஜோதிமணியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். ஜோதிமணி கல்வியில் சிறந்து விளங்கிய பட்டதாரி ஆவார். அவர் கடந்த 2024-ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (M.Sc) மேற்படிப்பில் சேர்ந்தார். ஓராண்டு கல்வி பயின்ற நிலையில், சில காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர் சென்னைக்குத் திரும்பினார். ஓராண்டு காலமாக வீட்டிலேயே இருந்த ஜோதிமணிக்கு, மீண்டும் லண்டன் சென்று தனது மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியது.
<h3>பொருளாதார நெருக்கடியால் தாய் மறுப்பு:</h3>
தனது லண்டன் படிப்பு செலவிற்காகத் தாயிடம் ஜோதிமணி பணம் கேட்டுள்ளார். ஆனால், வசந்தா தன்னிடம் போதுமான பணவசதி இல்லை என்று கூறியுள்ளார். விடாப்பிடியாக இருந்த ஜோதிமணி, தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றாவது தனக்குப் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளார். கணவர் இல்லாத நிலையில், வசித்து வரும் வீட்டையும் விற்றுவிட்டால் வாழ்வதற்கு இடமில்லாமல் போகும் என்ற அச்சத்தில், வீட்டை விற்க வசந்தா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். லண்டன் சென்று படிக்க வேண்டும் என்ற தனது லட்சியத்திற்குப் பணம் கிடைக்காதது ஜோதிமணிக்கு மிகுந்த விரக்தியை அளித்தது. இந்த மன உளைச்சலின் உச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தார்.
<h3>திட்டமிட்ட தற்கொலை முறை:</h3>
ஜோதிமணி மிகவும் விபரீதமான முறையில் தனது உயிரை மாய்த்துக் கொள்ளத் திட்டமிட்டார். இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் மூலமாக 'நைட்ரஜன்' வாயு உருளையை ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தனது அறைக்குச் சென்ற அவர், தனது தலையில் பாலிதீன் கவரை வைத்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டார். பின்னர், சிலிண்டரில் இருந்த டியூப் மூலம் நைட்ரஜன் வாயுவை அந்தப் பாலிதீன் கவருக்குள் செலுத்தி அதனைச் சுவாசித்துள்ளார். சிறிது நேரத்தில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு அவர் சுயநினைவின்றி மயங்கி விழுந்தார்.
<h3>மீட்புப் போராட்டமும் மரணமும்:</h3>
அறையில் மகன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் வசந்தா, உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜோதிமணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஜோதிமணியின் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லண்டன் கனவு ஒரு இளைஞனை இத்தகைய விபரீத முடிவிற்குத் தள்ளியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

<strong>(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104</strong>
<strong>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)</strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>IPL 2026: கொல்கத்தாவிற்கு வாழ்வா? சாவா? குழி பறிக்குமா பெங்களூரு? ஹெட் டூ ஹெட் விவரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-57th-match-rcb-vs-kkr-head-to-head-shaheed-veer-narayan-singh-stadium-pitch-report-78149.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 08:00:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-57th-match-rcb-vs-kkr-head-to-head-shaheed-veer-narayan-singh-stadium-pitch-report-78149.html</guid>
		            
			

    	<description><![CDATA[RCB vs KKR Head to Head: ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்சமாக 20 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kkr-vs-rcb-h2h.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="IPL 2026: கொல்கத்தாவிற்கு வாழ்வா? சாவா? குழி பறிக்குமா பெங்களூரு? ஹெட் டூ ஹெட் விவரம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-lsg-vs-csk-will-ms-dhoni-play-in-the-match-against-lucknow-super-giants-78140.html">ஐபிஎல் 2026 சீசனின்</a><strong> (IPL 2026)</strong> 57-வது போட்டியில் இன்று அதாவது 2026 மே 13ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு<strong> (Royal Challengers Bengaluru)</strong> அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது . இந்தப் போட்டி, ஜெய்ப்பூரில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய சொந்த மைதானமான ஷஹீத் வீர் நாராயண் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பிளேஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாக உள்ளது. அதே சமயம், நடப்பு சாம்பியனான <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-shocking-statement-by-sanjay-manjrekar-on-rcb-star-batsman-virat-kohli-78064.html">ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு</a> அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-shocking-statement-by-sanjay-manjrekar-on-rcb-star-batsman-virat-kohli-78064.html">விமர்சனங்களுக்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர் கோலி.. மஞ்ச்ரேகர் கருத்தால் பரபரப்பு!</a>
<h3>இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:</h3>
ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்சமாக 20 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
<h3>யாருக்கு பிட்ச் சாதகமாக இருக்கும்?</h3>
ஐபிஎல் 2026-ல் ஷஹீத் வீர் நாராயண் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 167 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடிக்க கடைசி நேரம் வரை போராடி வென்றது. ஆடுகளம் மெதுவாகவும் மந்தமாகவும் இருப்பதால், பேட்ஸ்மேன்கள் நிலைபெற சிறிது நேரம் தேவைப்படும். பவர்பிளே ஓவர்கள் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். வேக பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் அதிகளவில் ஸ்விங் செய்யலாம். அதே சமயம், மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்யலாம்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-lsg-vs-csk-will-ms-dhoni-play-in-the-match-against-lucknow-super-giants-78140.html">லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவாரா? வெளியான முக்கிய அப்டேட்!</a>
<h3>கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:</h3>
<h3>ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :</h3>
விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல்/பில் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் தார்

இம்பாக்ட் வீரர்: தேவ்தத் படிக்கல்
<h3>கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :</h3>
அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஆங்கிரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ரோவ்மன் பவல், மனிஷ் பாண்டே, ரின்கு சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி

இம்பாக்ட் வீரர்: ஃபின் ஆலன் ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெகவுக்கு ஆதரவு.. அதிமுகவுக்கு 8 அமைச்சர் பதவிகள் நிபந்தனை?.. லிஸ்டில் யார் யார்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/8-ministerial-posts-for-aiadmk-in-exchange-for-supporting-tvk-who-features-on-the-list-78180.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 07:48:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/8-ministerial-posts-for-aiadmk-in-exchange-for-supporting-tvk-who-features-on-the-list-78180.html</guid>
		            
			

    	<description><![CDATA[இதனால், தேர்தலில் கடுமையாக எதிர்த்த திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடமே ஆதரவு கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளித்தாலும், மீதமுள்ள 2 உறுப்பினர்களின் ஆதரவை விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து பெறுவது தவெகவிற்குப் பெரும் சவாலாக அமைந்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/admk-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெகவுக்கு ஆதரவு.. அதிமுகவுக்கு 8 அமைச்சர் பதவிகள் நிபந்தனை?.. லிஸ்டில் யார் யார்?" /></figure>தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஒரு தொங்கு சட்டசபை உருவானது. இந்தச் சூழலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், அக்கட்சியின் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் தவெகவின் பலம் 107 ஆகக் குறைந்தது. ஆட்சி அமைப்பதற்கான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியாமல் தவெக பெரும் சிரமத்திற்குள்ளானது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tirupattur-tvk-candidate-srinivasa-sethupathi-files-appeal-in-supreme-court-78080.html"> தவெக அரசு பெரும்பான்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.. உச்சநீதிமன்றத்தில் திருப்பத்தூர் எம்எல்ஏ மேல்முறையீடு!</a></strong>
<h3>திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி:</h3>
இதனால், தேர்தலில் கடுமையாக எதிர்த்த திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடமே ஆதரவு கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளித்தாலும், மீதமுள்ள 2 உறுப்பினர்களின் ஆதரவை விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து பெறுவது தவெகவிற்குப் பெரும் சவாலாக அமைந்தது. இறுதியில், பல இழுபறிகளுக்குப் பிறகு மே 9-ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக் கடிதம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அஷ்டமி நாளான மே 10-ஆம் தேதி விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
<h3>கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு:</h3>
விஜய் தரப்பில் அமைச்சர் பதவி வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும், காங்கிரஸ் மட்டுமே அதற்கு உடன்பட்டது. ஆனால் கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகளும் தாங்கள் அடிப்படையில் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்றும், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வருவதைத் தவிர்க்கவே தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதாவது, தாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும், தவெகவுக்கு ஆதரவு மட்டும் தருவதாகவும் கூறினர்.
<h3>அதிமுகவின் ஆதரவும் நிபந்தனைகளும்:</h3>
திமுக கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பது கடினம் என்பதை உணர்ந்த முதலமைச்சர் விஜய், ஆரம்பத்தில் தான் கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றி, அதிமுகவின் ஆதரவைப் பெறச் சம்மதித்தார். இதைத்தொடர்ந்து, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அணியினர் தவெகவிற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இந்த ஆதரவிற்குப் பின்னால் அதிமுக தரப்பு சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதிமுக தரப்பிலிருந்து குறைந்தது 8 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும். சில அரசு வாரியங்களின் தலைவர் பதவிகளையும் அவர்கள் கோரியுள்ளனர். இக்கூட்டணி உறுதியானதை அடுத்து, முதலமைச்சர் விஜய் நேற்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வேலுமணி மற்றும் அவர்களது ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 26 பேரை நேரில் சந்தித்துப் பேசினார்.

<strong>இதையும் படிக்க :  <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-issues-strict-guidelines-to-cadres-against-public-disturbance-during-celebrations-78073.html">மக்களுக்கு இடையூறு – தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை</a></strong>
<h3>அமைச்சர்களாகும் வாய்ப்பு:</h3>
தவெக இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. அதன்படி, தவெக தரப்பிலும் 5 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட சம்மதம் தெரிவிகப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அமைந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்விதப் பிரச்சினையும் இன்றி விஜய் ஆட்சி செய்வதற்குத் தாங்கள் உறுதுணையாக இருப்போம் என அதிமுகவினர் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஈரான் போர் எதிரொலி: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு&#8230;</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/gold-silver-imports-to-get-costlier-as-govt-hikes-customs-duty-after-pms-appeal-know-more-in-details-78182.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 07:35:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/gold-silver-imports-to-get-costlier-as-govt-hikes-customs-duty-after-pms-appeal-know-more-in-details-78182.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Import Tax: மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியுள்ளது. மத்திய அரசு 10 சதவீத அடிப்படை சுங்க வரியுடன், 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) விதித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-import.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஈரான் போர் எதிரொலி: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு&#8230;" /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="relative w-full overflow-visible"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-2" data-turn-id-container="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-2" data-testid="conversation-turn-6" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="c555371b-56aa-4ab9-a08a-223625777df0" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="373"><strong>மே 13, 2026:</strong> ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான பாதிப்பை முன்னிட்டு, ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">மோடி</span></span> மக்களிடம் கேட்டுக் கொண்ட சில நாட்களிலேயே, மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியுள்ளது. மத்திய அரசு 10 சதவீத அடிப்படை சுங்க வரியுடன், 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) விதித்துள்ளது. இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்தி, வர்த்தக பற்றாக்குறையை குறைத்து, ஆசியாவில் பலவீனமான செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக உள்ள இந்திய ரூபாயை வலுப்படுத்துவதே நோக்கமாகும்.</p>
<p data-start="698" data-end="928">இந்த வரி உயர்வு குறித்து, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு பிறகும் உடனடியாக சுங்க வரியை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தரப்பிலிருந்து இந்த வார தொடக்கத்தில் ராய்ட்டர்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>

<h3 data-start="698" data-end="928">தங்கம் வெள்ளி மீது இறக்குமதி வரி அதிகரிப்பு:</h3>
<p data-start="930" data-end="1224">உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடாகவும், மிகப்பெரிய வெள்ளி நுகர்வோர் நாடாகவும் உள்ள இந்தியா, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய பெருமளவில் இறக்குமதியை நம்பியுள்ளது. ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை நுகர்வை குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p data-start="930" data-end="1224">Also Read: <a href="https://www.tv9tamilnews.com/business/prime-minister-narendra-modi-asked-people-to-cut-down-oil-usage-what-is-the-remedy-77880.html">சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?</a></p>
<p data-start="1226" data-end="1540">கடந்த ஒரு ஆண்டாக, பங்குச் சந்தையில் குறைந்த வருமானம் மற்றும் தங்கத்தின் உயர்ந்த விலை காரணமாக இந்தியாவில் தங்கத் தேவை அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் தகவலின்படி, இந்தியாவின் தங்க ETF-களில் முதலீடு கடந்த மார்ச் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 186 சதவீதம் உயர்ந்து, சாதனை அளவான 20 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.</p>
<p data-start="1542" data-end="1823">“எதிர்பார்த்தபடியே, நடப்புக் கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த அரசு வரியை உயர்த்தியுள்ளது. ஆனால் ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளதால், இது தேவையை பாதிக்கக்கூடும்,” என இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா தெரிவித்தார்.</p>

<h3 data-start="1542" data-end="1823">கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த தங்க இறக்குமதி:</h3>
<p data-start="1825" data-end="2159">இதற்கு முன்பே, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 3 சதவீத ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) விதித்து, தங்க இறக்குமதியை இந்தியா கட்டுப்படுத்தத் தொடங்கியது. இதனால் வங்கிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தற்காலிகமாக இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏப்ரல் மாத தங்க இறக்குமதி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது.</p>

<h3 data-section-id="skpilt" data-start="2797" data-end="2846">பிரதமர் மோடியின் வேண்டுகோள்:</h3>
<p data-start="2848" data-end="3119">ஈரான் - அமெரிக்கா மோதல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உருவாகும் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும் சூழலில், இந்தியர்கள் நடைமுறை சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பிரதமர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">மோடி</span></span> கேட்டுக் கொண்டார்.</p>
<p data-start="3121" data-end="3483">அவர் பரிந்துரைத்த நடவடிக்கைகளில், திருமணங்களுக்காக ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்ப்பது, அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைப்பது மற்றும் சாத்தியமான இடங்களில் மீண்டும் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை பின்பற்றுவது ஆகியவை இடம்பெற்றன. மேலும், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தவும், இறக்குமதி பொருட்களின் மீதான சார்பை குறைக்கவும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p data-start="3485" data-end="3729">தொடர்ச்சியான எண்ணெய் விலை அதிர்ச்சியால் பணவீக்கம் அதிகரித்து, பல துறைகளில் செலவுகள் உயரும் அபாயம் உள்ளதால், குடும்பங்களும் நாட்டின் பொருளாதாரமும் அதை சமாளிக்க இந்த நடவடிக்கைகள் உதவும் என பிரதமர் மோடி திங்கள்கிழமையும் மீண்டும் வலியுறுத்தினார்.</p>
<p data-start="3731" data-end="4081" data-is-last-node="" data-is-only-node="">ஈரான் போரின் தாக்கத்தால் அமெரிக்கா மற்றும் அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள சூழலில், பிரதமரின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்தியர்கள் இதுவரை அந்த தாக்கத்திலிருந்து பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், அடுத்த சில நாட்களில் விலைவாசி உயர்வு தொடங்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="contents"></div>
</div>
</div>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக முதல்வராக விஜய் தொடர்வாரா? இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. எத்தனை பேர் ஆதரவு?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/after-the-new-government-formation-cm-c-joseph-vijay-to-prove-majority-in-floor-test-at-assembly-today-78177.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 07:05:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/after-the-new-government-formation-cm-c-joseph-vijay-to-prove-majority-in-floor-test-at-assembly-today-78177.html</guid>
		            
			

    	<description><![CDATA[முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பலம் 106 ஆக குறைந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/floor-test-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக முதல்வராக விஜய் தொடர்வாரா? இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. எத்தனை பேர் ஆதரவு?" /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="relative w-full overflow-visible"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-1" data-turn-id-container="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-1" data-testid="conversation-turn-4" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="6591f208-e7b9-468e-9a5c-03c8d35ed227" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="274"><strong>மே 13, 2026:</strong> தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டப்பேரவையில் நடைபெற இருக்கிறது. இதில் எத்தனை பேர் <a href="https://www.tv9tamilnews.com/topic/tvk-tamilaga-vettri-kazhagam">தமிழக வெற்றிக்கழக</a> ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் தொடருவாரா என்பது தீர்மானிக்கப்படும். நடைபெற்று முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சந்தித்து மூன்று முறை ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.</p>

<h3 data-start="0" data-end="274">பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த தவெக:</h3>
<p data-start="655" data-end="967">ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. நான்காவது முறையாக, கடைசியில் 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து ஆளுநரை சந்தித்த நிலையில், அவருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி அவர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.</p>
<p data-start="969" data-end="1253">ஆனால், இரண்டு வாரங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதாக முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஆளுநர் ஏற்காமல், வரும் மே 13ஆம் தேதி, அதாவது இன்று, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>

<h3 data-start="969" data-end="1253">சட்டப்பேரவையில் தவெகவின் பலம் 106ஆக் குறைந்தது:</h3>
<p data-start="1255" data-end="1501">மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற பின்னர், மே 11ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் பலம் 108 இலிருந்து 106 ஆக குறைந்துள்ளது.</p>
<p data-start="1503" data-end="1862">அதாவது, முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பலம் 106 ஆக குறைந்துள்ளது.</p>
<p data-start="1864" data-end="2266">அதே சமயம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், சட்டசபையில் தமிழக வெற்றிக்கழக கூட்டணியின் பலம் 119 ஆக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் போதுமானது என்பதால், தற்போதைய சூழலில் அரசுக்கு தேவையான ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.</p>

<h3 data-start="1864" data-end="2266">இன்று காலை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு:</h3>
<p data-start="2268" data-end="2442">இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தால்தான் முதலமைச்சராக விஜய் தொடர முடியும்.</p>
<p data-start="2444" data-end="2647">தமிழக சட்டப்பேரவையில் காலை 9.30 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அரசின் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிய உள்ளார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் வாக்கெடுப்பை நடத்துவார்.</p>
<p data-start="2444" data-end="2647">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/will-the-tvk-government-survive-how-to-prove-a-majority-in-the-assembly-full-details-78178.html">சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி? விதிகளும், நடைமுறைகளும்.. முழு விவரம்!!</a></p>
<p data-start="2649" data-end="2987">நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் உள்ள அனைத்து கதவுகளும் மூடப்படும். மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் அடிப்படையில் பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அதில் சரிபாதிக்கும் மேலாக ஒரு வாக்கு கூடுதலாக கிடைத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.</p>

<h3 data-start="2649" data-end="2987">முதல்வராக விஜய் தொடர்வாரா?</h3>
<p data-start="2989" data-end="3312">தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், பிரிந்த அதிமுகவைச் சேர்ந்த 30 உறுப்பினர்களும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் ஒருவரும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். எனவே, இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.</p>
<p data-start="3314" data-end="3431" data-is-last-node="" data-is-only-node="">சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டவுடன், அதன் தகவல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="contents"></div>
</div>
</div>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி? விதிகளும், நடைமுறைகளும்.. முழு விவரம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/will-the-tvk-government-survive-how-to-prove-a-majority-in-the-assembly-full-details-78178.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 06:37:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/will-the-tvk-government-survive-how-to-prove-a-majority-in-the-assembly-full-details-78178.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ-க்களுக்கு 'கொறடா உத்தரவு' பிறப்பிக்கும். இந்த உத்தரவை மீறி வாக்களித்தாலோ அல்லது அவைக்கு வராமல் இருந்தாலோ, சட்டமன்ற விதிகளின்படி அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன்னதாக 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதே இதற்கு சான்றாகும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tn-assembly-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி? விதிகளும், நடைமுறைகளும்.. முழு விவரம்!!" /></figure>தமிழக அரசியல் சூழலில் ஒரு அரசு தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் எவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்பதற்கான நடைமுறைகள் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற விதிகளின்படி, ஒரு அரசு ஆட்சியில் தொடர கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம். சட்டமன்றம் கூடியதும் சபாநாயகர் முறையான அறிவிப்பை வெளியிடுவார். முதலமைச்சர் தனது அரசின் மீது நம்பிக்கை கோரி 'நம்பிக்கை தீர்மானம்' கொண்டு வருவார். தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் தனது தொடக்க உரையை ஆற்றுவார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/eps-loyalists-slam-opportunistic-leaders-for-betraying-the-party-and-alliance-integrity-78017.html">உண்ட வீட்டுக்கே இரண்டகம் – சண்முகம் அணியை கண்டித்து அதிமுக பதிவு</a></strong>
<h3>வாக்கெடுப்பு நடைபெறும் முறை:</h3>
சாதாரண மசோதாக்களுக்கு 'குரல் வாக்கெடுப்பு' நடத்தப்படும். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கும் முக்கியமான தருணங்களில் 'எண்ணிக்கணித்தல்' முறை பின்பற்றப்படும். இதற்காக சட்டமன்றம் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்படும். வாக்கெடுப்பு நடைபெறும் நாளில் சட்டமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும். திரைச்சீலைகள் இடப்பட்டு, மொபைல் போன் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களும் உள்ளே அனுமதிக்கப்படாது. தீர்மானத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் நடுநிலை வகிப்பவர்கள் என ஒவ்வொரு பிரிவாரியாக உறுப்பினர்கள் எழுந்து நிற்க, அவர்கள் எண்ணப்பட்டு சபாநாயகரால் குறிக்கப்படும்.
<h3>பெரும்பான்மைக்குத் தேவையான மேஜிக் எண்:</h3>
தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்களில், ஒரு அரசு வெற்றி பெற்று தொடர வேண்டுமெனில் குறைந்தபட்சம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அவசியம். அவையில் இருப்பவர்களில் பாதி பேர் என்பது விதியல்ல; மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்பது சட்டப்பேரவை விதியாகும்.
<h3>கொறடா உத்தரவு மற்றும் தகுதி நீக்கம்:</h3>
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ-க்களுக்கு 'கொறடா உத்தரவு' பிறப்பிக்கும். இந்த உத்தரவை மீறி வாக்களித்தாலோ அல்லது அவைக்கு வராமல் இருந்தாலோ, சட்டமன்ற விதிகளின்படி அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன்னதாக 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதே இதற்கு சான்றாகும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/opposition-leader-udhayanidhi-criticizes-sanatana-dharma-in-tamil-nadu-assembly-78016.html">மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!</a></strong>
<h3>தற்போதைய நிலவரம்:</h3>
தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்டோரின் பலம் 118-ஐத் தொடுவதாகத் தெரிகிறது. மன்னார்குடி எம்.எல்.ஏ போன்றோரின் கூடுதல் ஆதரவுடன் இந்த எண்ணிக்கை 119 ஆகவும் உயர்ந்துள்ளது. இறுதியாக, வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கும் சபாநாயகர், தீர்மானம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் கொட்டும் மழை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-stated-that-southwest-monsoon-will-start-by-this-weekend-and-heavy-rainfall-to-continue-in-tamil-nadu-78175.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 06:25:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-stated-that-southwest-monsoon-will-start-by-this-weekend-and-heavy-rainfall-to-continue-in-tamil-nadu-78175.html</guid>
		            
			

    	<description><![CDATA[சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/rain-13.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் கொட்டும் மழை.." /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="relative w-full overflow-visible"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-0" data-turn-id-container="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-0" data-testid="conversation-turn-2" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="b99a8de1-4bc0-44f6-8f82-0fbcbfe50069" data-turn-start-message="true" data-message-model-slug="gpt-5-5">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="166"><strong>மே 13, 2026:</strong> பொதுவாக தென்மேற்கு <a href="https://www.tv9tamilnews.com/topic/weather-forecast" target="_blank" rel="noopener">பருவமழை</a> என்பது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கக்கூடும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுப் பகுதிகளில் இந்த வார இறுதியில் தொடங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="410" data-end="679">அதேபோல், வடகிழக்கு கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="410" data-end="679">டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை:</h3>
<p data-start="681" data-end="977">இதன் காரணமாக, தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் கனமழை பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மே 13ஆம் தேதியான இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="979" data-end="1259">மே 14ஆம் தேதியான நாளை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 15ஆம் தேதியும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.</p>
<p data-start="979" data-end="1259">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-mlas-may-lose-their-post-if-they-go-against-party-whip-says-inbadurai-78158.html">பதவி பறிபோகும் – அதிமுக எம்எல்ஏகளுக்கு இன்பதுரை கடும் எச்சரிக்கை</a></p>
<p data-start="1261" data-end="1524">மே 16ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதியும் இதே நிலை நீடிக்கும் என்றும், ஏனைய தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
<p data-start="1526" data-end="1802">மே 18ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச வெப்பநிலை கணிசமாக குறைந்து பதிவாகி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="1526" data-end="1802">வெப்பநிலை எப்படி இருக்கும்?</h3>
<p data-start="1804" data-end="2108">சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>
<p data-start="2110" data-end="2371">தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.1 டிகிரி செல்சியஸ், கரூரில் 38.5 டிகிரி செல்சியஸ் மற்றும் தர்மபுரியில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p>
<p data-start="2373" data-end="2547" data-is-last-node="" data-is-only-node="">சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="contents"></div>
</div>
</div>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஒரே ஒரு தட்டு போதும்! உங்கள் வீட்டு டீயை ‘அமிர்தமாக’ மாற்றும் அந்த ரகசியம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/health/enhance-your-tea-the-secret-to-healthier-and-tastier-brewing-78138.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 06:06:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[உடல்நலம் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/health/enhance-your-tea-the-secret-to-healthier-and-tastier-brewing-78138.html</guid>
		            
			

    	<description><![CDATA[Enhance Your Tea: டீத்தூள் சேர்த்த பின் பாத்திரத்தை மூடி வைப்பதால், சத்துக்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் ஆவியாகாமல் தேநீரிலேயே முழுமையாகத் தங்கும். இஞ்சி, ஏலக்காய் போன்ற மசாலாக்களின் நறுமணம் மாறாமல் இருப்பதோடு, தேநீர் அதிகக் கசப்பாக மாறுவதும் (டானின்) தவிர்க்கப்படுகிறது. இந்த முறை அசிடிட்டி போன்ற செரிமானப் பிரச்சனைகளைக் குறைத்து, இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான நன்மைகளை அப்படியே வழங்குகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/08/tea.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஒரே ஒரு தட்டு போதும்! உங்கள் வீட்டு டீயை ‘அமிர்தமாக’ மாற்றும் அந்த ரகசியம் இதோ!" /></figure>பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்குக் காலைப் பொழுது ஒரு கோப்பை தேநீருடன் தான் தொடங்குகிறது. வெறும் சுவைக்காக மட்டுமன்றி, உடலில் ஒருவிதப் புத்துணர்ச்சியைத் தருவதற்கும் சோர்வை நீக்குவதற்கும் டீ முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், நாம் வழக்கமாகத் தயாரிக்கும் தேநீரில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதன் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, முழுமையான ஆரோக்கியப் பலன்களையும் பெற முடியும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. குறிப்பாக டீத் தூளில் உள்ள இயற்கையான சத்துக்கள் வீணாகாமல் தடுப்பது எப்படி என்பதை இங்கே காண்போம்.
<h3>மூடி வைத்து கொதிக்க வைப்பதன் முக்கியத்துவம்</h3>
தேயிலையில் 'பாலிபினால்கள்', 'ஃபிளேவனாய்டுகள்' மற்றும் 'கேடசின்' போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. நாம் டீயைத் தயாரிக்கும்போது, டீத் தூளைப் போட்டவுடன் பாத்திரத்தைத் திறந்து வைத்து கொதிக்க விடுவது வழக்கம். அவ்வாறு செய்யும்போது, அதில் உள்ள சத்துக்கள் ஆவியாக வெளியேறிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே, இனிமேல் டீத் தூள் போட்ட பிறகு அடுப்பைச் சிறு தீயாகக் குறைத்து (Sim), ஒரு தட்டு போட்டு மூடி வைத்து சில நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இவ்வாறு செய்வதால் தேயிலையின் முழுமையான நற்குணங்கள் நீரிலேயே தங்கிவிடும்.
<h3>மசாலாப் பொருட்களின் நறுமணத்தைப் பாதுகாக்க</h3>
நம்மில் பலர் கூடுதல் சுவைக்காக இஞ்சி, ஏலக்காய் அல்லது பட்டை போன்ற மசாலாப் பொருட்களைத் தேநீரில் சேர்ப்பதுண்டு. இந்த வாசனைப் பொருட்கள் பாலுடன் சேர்ந்து கொதிக்கும்போது ஒருவித அத்தியாவசிய எண்ணெய்களை (Essential Oils) வெளியிடுகின்றன. தட்டு போட்டு மூடி வைக்கும்போது, இந்த எண்ணெய்கள் ஆவியாகாமல் டீயுடன் முழுமையாகக் கலக்கும். இது தேநீருக்கு ஒரு அலாதியான நறுமணத்தையும், கூடுதல் சுவையையும் கொடுக்கும். இந்த எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம் வழக்கமான டீயை விட ஒரு மாறுபட்ட அனுபவத்தைப் பெறலாம்.
<h3>டானின் நச்சுகளைத் தவிர்த்தல்</h3>
டீயைத் திறந்து வைத்து நீண்ட நேரம் கொதிக்க வைப்பதில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. அவ்வாறு அதிகப்படியான வெப்பத்தில் நீண்ட நேரம் கொதிக்கும்போது, 'டானின்ஸ்' (Tannins) எனப்படும் வேதிப்பொருள் தேநீரில் அதிகமாகச் சேருகிறது. இது டீயை அதிகக் கருப்பாகவும், கசப்புத் தன்மை கொண்டதாகவும் மாற்றிவிடும். டானின்ஸ் அளவு அதிகரிக்கும்போது, அதை அருந்துபவர்களுக்கு நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற உடல்நல உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
<h3>ஆரோக்கியமான தேநீர் அருந்தும் முறை</h3>
எனவே, தேநீர் தயாரிக்கும்போது அந்தப் பாத்திரத்தைத் தட்டு போட்டு மூடி வைப்பது என்பது ஒரு சிறு மாற்றமாகத் தெரிந்தாலும், அது உங்கள் உடலுக்குப் பெரிய நன்மையைச் செய்யும். நச்சுத்தன்மை இல்லாத, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தேநீரை அருந்துவது இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதற்கும் உதவும். சுவைக்காகச் சமரசம் செய்யாமல் ஆரோக்கியத்தையும் பேண விரும்பும் டீ பிரியர்களுக்கு இந்தச் சிறு தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாகும். இனிமேல் உங்கள் வீட்டிலும் இதே முறையில் தேநீர் தயாரித்துப் பருகுங்கள்! ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காலை எழுந்தவுடன் குழந்தைகள் ஏன் அழுகின்றன? இதை மட்டும் செய்யுங்க போதும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-handle-babies-who-cry-immediately-after-waking-up-78120.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 05:10:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/lifestyle/how-to-handle-babies-who-cry-immediately-after-waking-up-78120.html</guid>
		            
			

    	<description><![CDATA[How to Handle Babies: காலை எழுந்தவுடன் குழந்தைகள் அழுவது பசி, அசௌகரியம் அல்லது பாதுகாப்பு உணர்வு தேவைப்படுவதால் ஏற்படலாம். பெற்றோர் அமைதியாக குழந்தையின் தேவையை புரிந்து கொண்டு மெதுவாக அணுக வேண்டும். சரியான தூக்க பழக்கமும் அன்பான அரவணைப்பும் குழந்தையை விரைவில் அமைதிப்படுத்த உதவும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/06/baby-eye.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காலை எழுந்தவுடன் குழந்தைகள் ஏன் அழுகின்றன? இதை மட்டும் செய்யுங்க போதும்!" /></figure>சில குழந்தைகள் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அழத் தொடங்குவது பெற்றோருக்கு கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். ஆனால் இது பெரும்பாலும் சாதாரணமான ஒன்றாகவே கருதப்படுகிறது. தூக்கத்திலிருந்து திடீரென விழித்தெழுதல், பசி, உடல் சோர்வு, டயப்பர் அசௌகரியம் அல்லது தாயின் அரவணைப்பை நாடுதல் போன்ற காரணங்களால் குழந்தைகள் அழக்கூடும். குறிப்பாக சில மாத குழந்தைகளுக்கு தங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் சொல்ல முடியாததால், அழுகை மூலமாகவே தேவைகளை வெளிப்படுத்துகின்றன. எனவே பெற்றோர் முதலில் பதற்றப்படாமல் குழந்தையின் நிலையை கவனமாக புரிந்துகொள்வது முக்கியம்.
<h3>குழந்தையின் தேவையை முதலில் புரிந்துகொள்ளுங்கள்</h3>
காலை எழுந்தவுடன் குழந்தை அழும்போது உடனே கோபப்படுவதோ அல்லது சத்தமாக பேசுவதோ தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைக்கு பசி இருக்கிறதா, உடை அல்லது டயப்பர் நனைந்துள்ளதா, உடலில் ஏதேனும் அசௌகரியம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். சில குழந்தைகள் இரவு முழுவதும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் காலையில் மிகவும் பசியுடன் எழலாம். அந்த நேரத்தில் தாய்ப்பால் அல்லது தேவையான உணவை கொடுத்தால் குழந்தை அமைதியாகிவிடும். குழந்தையின் உடல் மொழியை கவனிப்பது பெற்றோருக்கு காரணத்தை எளிதில் புரிய உதவும்.
<h3>மெதுவான அணுகுமுறை குழந்தையை அமைதிப்படுத்தும்</h3>
குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழும் நேரத்தில் மென்மையான சூழல் மிகவும் அவசியம். திடீரென வெளிச்சம் ஏற்றுவது அல்லது பெரிய சத்தம் போடுவது குழந்தையை பயமுறுத்தலாம். அதற்குப் பதிலாக மெதுவாக தழுவி பேசுவது, அரவணைப்பது, சிரித்த முகத்துடன் அணுகுவது போன்றவை குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வை தரும். குறிப்பாக தாயின் குரல் குழந்தைக்கு மிகுந்த நிம்மதியை தரக்கூடியது. சில நேரங்களில் குழந்தையை மடியில் தூக்கி சில நிமிடங்கள் நடந்தாலே அழுகை குறைந்து விடும்.
<h3>ஒழுங்கான தூக்க பழக்கம் முக்கியம்</h3>
குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்காதபோது அல்லது இரவில் அடிக்கடி விழித்துக்கொண்டால் காலையில் எரிச்சலுடன் எழுவது இயல்பாகும். அதனால் தினசரி ஒரே நேரத்தில் குழந்தையை தூங்க வைக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். தூங்குவதற்கு முன் அதிக சத்தம், மொபைல் ஒளி போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது. அமைதியான சூழல் மற்றும் போதிய தூக்கம் குழந்தையின் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும். இதனால் காலை நேர அழுகையும் குறைய வாய்ப்பு அதிகம்.
<h3>பெற்றோரின் பொறுமையே சிறந்த தீர்வு</h3>
குழந்தைகள் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை சந்திக்கும். அதனால் சில நாட்களில் அதிகமாக அழுவது இயல்பான ஒன்றாக இருக்கலாம். அந்த நேரத்தில் பெற்றோர் பொறுமையுடன் அணுகுவது மிகவும் அவசியம். குழந்தையை ஒப்பிட்டு பேசுவதோ அல்லது அடக்க முயல்வதோ நல்லதல்ல. குழந்தைக்கு அன்பும் பாதுகாப்பும் கிடைக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டால் அது விரைவாக அமைதியாகிவிடும். தொடர்ந்து அதிக நேரம் அழுதல், காய்ச்சல் அல்லது உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>IPL 2026: செதுக்கிய குஜராத் பந்துவீச்சாளர்கள்.. 86 ரன்களில் சுருண்டு ஹைதராபாத் தோல்வி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-gt-vs-srh-56th-match-gujarat-titans-won-by-82-runs-78172.html</link>	
		<pubDate>Tue, 12 May 2026 22:56:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-gt-vs-srh-56th-match-gujarat-titans-won-by-82-runs-78172.html</guid>
		            
			

    	<description><![CDATA[GT vs SRH Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 12ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14.5 ஓவர்களில் 86 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gt-spell.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="IPL 2026: செதுக்கிய குஜராத் பந்துவீச்சாளர்கள்.. 86 ரன்களில் சுருண்டு ஹைதராபாத் தோல்வி!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-lsg-vs-csk-will-ms-dhoni-play-in-the-match-against-lucknow-super-giants-78140.html">ஐபிஎல் 2026 சீசனில்</a> <strong>(IPL 2026)</strong> இன்று அதாவது 2026 மே 12ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-dc-vs-kkr-after-51th-match-sunrisers-hyderabad-still-in-top-lsg-last-place-77385.html">சன்ரைசர்ஸ் ஹைதராபாத்</a> <strong>(Sunrisers Hyderabad)</strong> அணி 14.5 ஓவர்களில் 86 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இதன்மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். அதே சமயம், ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சந்தித்த மிகப்பெரிய தோல்வியும் இதுவாகும். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்ஷன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் 168 ரன்கள் எடுத்தது. சுதர்ஷன் 61 ரன்களும், சுந்தர் 50 ரன்களும் பங்களித்தனர்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/former-indian-cricketer-sanjay-manjrekar-on-hardik-pandya-future-as-captain-mumbai-indians-78119.html">மும்பை அணி கேப்டனை மாற்ற வேண்டிய நேரம் இது.. ஹர்திக் எதிராக கிளம்பிய குரல்!</a>

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பேட்ஸ்மேன்களை குஜராத் பந்துவீச்சாளர்களான ஜேசன் ஹோல்டர் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரின் அபாயகரமான பந்துவீச்சு வீழ்த்தியது.
<h3>ஐபிஎல்-லில் குஜராத்தின் மிகப்பெரிய வெற்றி</h3>
குஜராத் டைட்டன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் இது அவர்களின் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன்னர், இதே சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத்தின் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருந்தது. அந்தப் போட்டியில், குஜராத் அணி ராஜஸ்தானை 77 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது.
<ul>
 	<li>82 ரன்கள் - குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்</li>
 	<li>77 ரன்கள் - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்</li>
 	<li>62 ரன்கள் - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்</li>
</ul>
குஜராத்தின் வெற்றிக்கு முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரே அடித்தளமிட்டனர். அவர்கள் இருவரும் இணைந்து, முதல் ஆறு ஓவர்களில் இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஸ்மிருதி ரவிச்சந்திரன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தனர்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-lsg-vs-csk-will-ms-dhoni-play-in-the-match-against-lucknow-super-giants-78140.html">லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவாரா? வெளியான முக்கிய அப்டேட்!</a>

இதற்குப் பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் அந்த ஆரம்பப் பின்னடைவிலிருந்து மீளவே முடியவில்லை. சிராஜ் 3 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனாலும் அவரால் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மிடில் ஓவர்களில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், தனது 4 ஓவர் பந்துவீச்சில் மூன்று ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை வெறும் 20 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து முன்னிலை வகித்தார். இந்த வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி, பிளேஆஃப் சுற்றுக்கான இடத்தையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>BAN vs PAK: டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு.. அசத்திய வங்கதேச அணி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/sports/ban-vs-pak-1st-test-bangladeshs-third-consecutive-test-win-against-pakistan-78168.html</link>	
		<pubDate>Tue, 12 May 2026 22:42:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Mukesh Kannan]]></dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/sports/ban-vs-pak-1st-test-bangladeshs-third-consecutive-test-win-against-pakistan-78168.html</guid>
		            
			

    	<description><![CDATA[Bangladesh vs Pakistan 1st Test: சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் வங்கதேசம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். வங்கதேச அணியின் இந்த வெற்றிப் பயணம் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நீடிக்கிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ban-vs-pak-1st-test.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="BAN vs PAK: டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு.. அசத்திய வங்கதேச அணி!" /></figure>டாக்காவில் நடந்த முதல்<a href="https://www.tv9tamilnews.com/sports/shubman-gill-led-indias-probable-test-squad-for-one-off-test-against-afghanistan-78051.html"> டெஸ்ட்</a> <strong>(Test Match)</strong> போட்டியில் வங்கதேசம் பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  வங்கதேசம் - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்டின் 4வது இன்னிங்ஸில் 268 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நான்காவது இன்னிங்ஸில், வங்கதேச பந்துவீச்சாளர் நஹீத் ராணா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். பாகிஸ்தானுக்கு <strong>(Pakistan Cricket Team)</strong> எதிராக வங்கதேசம் பெறும் மூன்றாவது தொடர்ச்சியான டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/shubman-gill-led-indias-probable-test-squad-for-one-off-test-against-afghanistan-78051.html">சுதர்சன் வெளியேற்றம்.. படிக்கலுக்கு வாய்ப்பு.. AFG எதிரான இந்திய உத்தேச அணி!</a>
<h3>வரலாறு படைத்த வங்கதேசம்:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Nahid Rana cleans up Mohammad Rizwan as Bangladesh close in on victory 🔥

(via <a href="https://twitter.com/BCBtigers?ref_src=twsrc%5Etfw">@BCBtigers</a>) <a href="https://twitter.com/hashtag/BANvPAK?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BANvPAK</a> <a href="https://t.co/uW6ptLjLvx">pic.twitter.com/uW6ptLjLvx</a></p>
— ESPNcricinfo (@ESPNcricinfo) <a href="https://twitter.com/ESPNcricinfo/status/2054149273617330427?ref_src=twsrc%5Etfw">May 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் வங்கதேசம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். வங்கதேச அணியின் இந்த வெற்றிப் பயணம் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நீடிக்கிறது. வங்கதேசத்திற்கு எதிரான 4வது இன்னிங்ஸில் பாகிஸ்தானுக்கு 268 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் ஓவரிலேயே இமாம்-உல்-ஹக்கை ஆட்டமிழக்கச் செய்து, டாஸ்கின் அகமது பாகிஸ்தானின் வெற்றி நம்பிக்கையைத் தகர்த்தார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருந்த அஜான் அவாய்ஸ், இம்முறை 15 ரன்கள் மட்டுமே எடுத்து அமைதியாக இருந்தார். பாகிஸ்தான் விரைவாக 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது, அப்போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இன்னும் 200 ரன்கள் தேவைப்பட்டன.

இக்கட்டான நேரத்தில் சல்மான் ஆகாவும் அப்துல்லா ஃபசலும் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது ஃபசல் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானுக்காக அரைசதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன் இவர்தான். ஃபசலின் விக்கெட் வீழ்ந்த உடனேயே, அடுத்தடுத்து பாகிஸ்தானின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் நஹீத் ராணா பேரழிவை ஏற்படுத்த, பாகிஸ்தான் தனது கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 44 ரன்களுக்குள் இழந்தது.

ALSO READ: <a href="https://www.tv9tamilnews.com/sports/ipl-2026-shocking-statement-by-sanjay-manjrekar-on-rcb-star-batsman-virat-kohli-78064.html">விமர்சனங்களுக்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர் கோலி.. மஞ்ச்ரேகர் கருத்தால் பரபரப்பு!</a>
<h3>சிறப்பாக பந்துவீசிய நஹீத் ராணா:</h3>
சுமார் 6.5 அடி உயரமுள்ள வேகப்பந்து வீச்சாளர் நஹீத் ராணா, நான்காவது இன்னிங்ஸில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். இதற்கிடையில், முதல் இன்னிங்ஸில், வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் பேட்டிங் வரிசையைச் சிதைத்திருந்தார். ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>