AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? பிசிஐ விளக்கம்

சமீப நாட்களாக யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான சாத்தியமான கட்டணங்கள் குறித்து பல விவாதங்களும் வதந்திகளும் பரவின. இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிஐ எனப்படும் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு ட்வீட் மூலம் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

இனி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? பிசிஐ விளக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Aug 2026 21:15 PM IST

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. சாலையோர டீ கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை, நாம் எந்தத் தயக்கமும் இன்றி இயல்பாகவே நமது அலைபேசியை எடுத்து, QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்துகிறோம். இருப்பினும், சமீப நாட்களாக யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான சாத்தியமான கட்டணங்கள் குறித்து பல விவாதங்களும் வதந்திகளும் பரவின. இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிஐ எனப்படும் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு ட்வீட் மூலம் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளது.

இனி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா?

இனி யுபிஐயை பயன்படுத்த பயனர்கள் பணம் செலுத்த வேண்டுமா என்பதுதான் இந்த விவகாரத்தில் எழுந்த மிக முக்கியமான கேள்வி. இந்த நிலையில் பேமெண்ட்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட எக்ஸ் பதிவில் விளக்கமளித்துள்ளது. அதன்படி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த தேவையில்லை என விளக்கமளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, பொதுமக்களுக்கு இது முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகிறது.

இதையும் படிக்க : கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் மாற்றம் செய்யலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

முன்பைப் போலவே, எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி நீங்கள் உடனடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். குடும்பத்தினருக்குப் பணம் அனுப்புவதோ அல்லது பொருட்கள் வாங்கியதற்கான கட்டணத்தைச் செலுத்துவதோ எதுவாக இருந்தாலும், இந்தச் சேவை வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இலவசமாகவே இருந்து வருகிறது. இப்போதும் இலவசமாகவே உள்ளது. எதிர்காலத்திலும் இதற்குக் கட்டணம் விதிக்கும் திட்டம் ஏதுமில்லை.

சிறு கடைகளுக்கான பணப் பரிவர்த்தனை

உள்ளூர் மளிகைக் கடை உரிமையாளர்கள் அல்லது தெருவோர வியாபாரிகள் போன்ற சிறு வணிகர்களுக்குக் கவலைப்படத் தேவையில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். யுபிஐ மூலம் பணம் பெறுவதற்குச் சிறு கடைக்காரர்களிடம் மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்அல்லது கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. உண்மையில், பெரிய மற்றும் சிறிய என அனைத்து அளவிலான வணிகங்களையும் இந்த நெட்வொர்க்கில் இணைப்பதற்காகவே இந்த டிஜிட்டல் அமைப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.

பிசிஐ விளக்கம்

 

இதையும் படிக்க : கேஸ் சிலிண்டருக்கு புதிய வரி.. ஆலோசனை மேற்கொண்டு வரும் அரசு.. வெளியான முக்கிய தகவல்!

கடந்த 10 ஆண்டுகளில், யுபிஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய கொடுப்பனவு கழகம் மற்றும் ரிசர்வ் வங்கிஆகியவை இணைந்து பெருமளவில் முதலீடு செய்துள்ளன. வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் இந்த அமைப்பை இணையவழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடு அவசியமாகிறது. தற்போது, ​​இந்த ஒட்டுமொத்தக் கட்டமைப்புடன் தொடர்புடைய செலவுகளை வங்கிகளும் பணப் பரிவர்த்தனை நிறுவனங்களுமே ஏற்றுக்கொண்டு வருகின்றன.

 

Follow Us