
UPI
UPI (Unified Payments Interface) என்பது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் கட்டண முறை ஆகும். NPCI (National Payment Corporation of India) எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் யுபிஐ திட்டத்தை அறிமுகம் செய்து அதனை செயல்படுத்தி வருகிறது. இந்த யுபிஐ அம்சம் மூலம் மொபைல் செயலியில் பல வங்கி கணக்குகளை இணைத்து மொபைல் எண், யுபிஐ ஐடி மூலம் வங்கி விவரங்களை பதிவிட்டு பணம் அனுப்பலாம். பணம் அனுப்புவது மட்டுமன்றி, வங்கி கணக்கு இருப்பு, வங்கி கணக்கில் இருந்து யார் யாருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது, யார் யாரிடம் இருந்து வங்கி கணக்கிற்கு பணம் வந்துள்ளது உள்ளிட்ட அனைத்தையும் இதில் தெரிந்துக் கொள்ள முடியும். வங்கிகளுக்கு சென்று படிவம் நிரப்பி பணம் செலுத்துவது மற்றும் பணத்தை பெறுவது, ஏடிஎம் சென்டரில் மற்றவர்கள் கணக்கிற்கு பணம் செலுத்துவது தொடர்பான நடைமுறையை இது மிகவும் எளிமையாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள யுபிஐ பயன்படுத்துகின்றனர். யுபிஐ தொடர்பான செய்திகளை நாம் காணலாம்.
இனி UPI மூலம் பணம் அனுப்புறவங்க கவனம் – ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்
New UPI Guidelines : இந்தியர்கள் மத்தியில் பணப்பரிவர்த்தனை செய்ய யுபிஐ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் வருகிற ஜுன் 30, 2025 அன்று முதல் யுபிஐ மூலம் பணம் அனுப்பவுதற்கு இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் முதிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. அது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: May 31, 2025
- 15:34 pm