<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Election 2026 Result News in Tamil, தேர்தல் முடிவுகள் நேரலை 2026 - Tamil Nadu, West Bengal, Assam, Kerala and Puducherry Assembly Election Result Latest News, Photos, Videos in Tamil</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/elections/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/elections</link>
 <description>Get Assembly Election Result 2026 Live Counting News and Updates in Tamil online at tv9tamilnews.com. Tamil Nadu, West Bengal, Assam, Kerala and Puducherry Assembly Election Results, Tamil Nadu Assembly Election Result news, Candidate, Constituencies, Photos and Videos Online</description><lastBuildDate>Thu, 28 May 2026 20:37:31 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>தேர்தல் தோல்வி.. திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்.. முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/dmk-should-self-examine-puducherry-election-defeat-says-v-narayanasamy-81315.html</link>	
		<pubDate>Thu, 28 May 2026 20:37:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/dmk-should-self-examine-puducherry-election-defeat-says-v-narayanasamy-81315.html</guid>
		            
			

    	<description><![CDATA[Puducherry V. Narayanasamy : புதுச்சேரி மாநிலத்தில் இண்டியா கூட்டணி தோல்வியை திராவிட முன்னேற்றக் கழகம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார். தவெக கூட்டணியை தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/12/narayanasamy.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தேர்தல் தோல்வி.. திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்.. முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!" /></figure>புதுச்சேரி மாநிலத்தில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-aiadmk-minister-c-vijayabaskar-responded-regarding-joining-tvk-81255.html" target="_blank" rel="noopener">இண்டியா கூட்டணி</a> தோல்வி தொடர்பாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் இண்டியா கூட்டணி தோல்வி அடைந்ததற்கான பொறுப்பை ஏற்று உள்ளோம். கூட்டணி கட்சியை சேர்ந்த சிலர் காங்கிரஸ் மீது தோல்விக்கு பழி போட்டு வருகின்றனர். கூட்டணி தலைவர்களின் பேராசை காரணமாகவே இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரியும். தொகுதி பங்கீடு பிரச்சனை, காலதாமதம் ஆகியவை ஒரு காரணமாகும். காங்கிரஸ் முதுகில் குத்தி விட்டதாக சிலர் குறை கூறுகின்றனர். புதுச்சேரியில் இண்டியா கூட்டணி வெல்லும் தொகுதிகளில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-ministers-and-mlas-will-be-stripped-of-their-positions-if-they-commit-corruption-says-n-anand-81274.html" target="_blank" rel="noopener">தவெக கணிசமான வாக்கு பெற்றதால்</a> தோல்வி அடைந்துள்ளது. காங்கிரசை விமர்சிப்பது புதுச்சேரி மக்களை விமர்சிப்பதற்கு சமமாகும். தோல்விக்கான காரணம் என்ன என்பதை திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
<h3>பிற கட்சிகளும் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்</h3>
காங்கிரஸ் கட்சியை குறை கூறுவதால் அவர்களின் தவறை மறைக்கவோ, மறக்கவோ முடியாது. தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு ஒரு சில தலைவர்களை மிகப் படுத்தி பேசி அழுத்தம் தந்ததால் கூட்டணி பேச்சுவார்த்தை காலதாமதம் ஏற்பட்டு கடைசி நேரத்தில் கையில் இருந்த ஆட்சி பறிபோயுள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகளில் பிரதான கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும். தோல்விக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றது போல, இதர கட்சிகளும் பெருந்தன்மையோடு பொறுப்பேற்க வேண்டும். கூட்டணியில் சில கட்சிகள் சேர்வதும், பிரிவதும் அரசியலில் நடக்கும் சாதாரணமானது தான்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/ntk-chief-coordinator-seeman-expressed-his-views-on-the-mekedatu-dam-issue-in-karnataka-81306.html" target="_blank" rel="noopener">கர்நாடகத்திடம் தண்ணீருக்காக தமிழகம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை.. நாதக சீமான் சீற்றம்!</a>
<h3>தோல்விக்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும்</h3>
இதற்காக காங்கிரஸ் கட்சியை திமுகவினர் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு பேசினால் இரு கட்சியினர் இடையே தேவையில்லாத மனக்கசப்பு ஏற்படும். எனவே, அரசியல் சூழல் எப்போது வேண்டுமானாலும் மாற வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட வெறுப்பு இருக்கக் கூடாது. தாங்கள் புனிதர்கள் போலவும், காங்கிரஸ் துரோகம் செய்தது போலவும் மக்கள் மத்தியில் பிரம்மையை ஏற்படுத்தக் கூடாது. யாருடைய பேராசையின் காரணமாக ஆட்சியை இழந்தோம் என்பது மக்களுக்கு தெரியும்.
<h3>தவெகவுடன் கூட்டணியை தலைவர்கள் முடிவு செய்வார்கள்</h3>
புதுச்சேரி மாநிலத்தில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அதில் ஈடுபட்ட தலைவர்கள் தான் தோல்விகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். கூட்டணி கட்சித் தலைவர்களின் தவறான அணுகு முறையால் தான் தோல்வி ஏற்பட்டது என்பதை உணர வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் இண்டியா கூட்டணி உள்ளதா என்பது முடிவெடுத்த பின்னர் தெரிவிக்கப்படும். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது மற்றும் தவெகவுடன் கூட்டணி அமைப்பதா என்பது கட்சி தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilisai-soundararajan-criticizes-power-cuts-during-tamilaga-vettri-kazhagam-party-rule-81312.html" target="_blank" rel="noopener">தமிழக மக்களுக்கு தவெக அரசு கொடுத்த ஒரே பரிசு மின்வெட்டுதான்.. பொங்கிய தமிழிசை சௌந்தரராஜன்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>புதுச்சேரியில் விரைவில் இடைத்தேர்தல்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வர் ரங்கசாமி.. என்ன காரணம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/chief-minister-rangasamy-thattanchavady-mla-resigns-from-his-post-in-puducherry-79155.html</link>	
		<pubDate>Mon, 18 May 2026 07:32:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/chief-minister-rangasamy-thattanchavady-mla-resigns-from-his-post-in-puducherry-79155.html</guid>
		            
			

    	<description><![CDATA[CM Rangasamy Resign Thattanchavady MLA Post : புதுச்சேரி மாநிலத்தில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக அந்த தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/02/puducherry-cm-rengasamy.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="புதுச்சேரியில் விரைவில் இடைத்தேர்தல்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வர் ரங்கசாமி.. என்ன காரணம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/narayanasamy-alleges-that-up-to-rs-150-crore-is-being-negotiated-for-a-ministerial-post-in-puducherry-79087.html" target="_blank" rel="noopener">புதுச்சேரி மாநிலத்தில்</a> கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தின் புதிய அரசாக என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல் அமைச்சராக என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/narayanasamy-alleges-that-up-to-rs-150-crore-is-being-negotiated-for-a-ministerial-post-in-puducherry-79087.html" target="_blank" rel="noopener">முதல்வர்</a> ரங்கசாமி ராசியாக கருதி வருகிறார். அதன்படி, தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதியிலும், முன்னாள் வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மங்களம் ஆகிய இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டு இருந்தார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார்.
<h3>தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வர்</h3>
இந்த நிலையில், மங்கலம் தொகுதி எம்எல்ஏ பதவியை வைத்துக்கொண்டு தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியே ரங்கசாமி ராஜினாமா செய்து உள்ளார். இதற்கான, ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சட்ட பேரவை செயலாளர் தயாளனிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், விரைவில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, விரைவில் தட்டஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/some-people-drowned-in-the-cauvery-river-in-paravur-area-of-erode-79107.html" target="_blank" rel="noopener">காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி.. மீன்பிடி வலையில் கால் சிக்கியதால் விபரீதம்?</a>
<h3>இரு தொகுதிகளில் போட்டியிடுவதை ராசியாக கருதும் முதல்வர்</h3>
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை ராசியாக கருதி வரும் முதல்வர் ரங்கசாமி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதி மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏனாம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டு இருந்தார். ஆனால், தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றியை பதிவு செய்த முதல்வர் ரங்கசாமி, ஏனாம் தொகுதியில் தோல்வியை தழுவினார்.
<h3>18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக கூட்டணி</h3>
இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என். ஆர். காங்கிரஸ் கட்சி 12 இடங்கள், பாஜக 4 இடங்கள், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/5-people-died-in-a-car-accident-near-madurai-79111.html" target="_blank" rel="noopener">மதுரை அருகே பயங்கர சாலை விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>புதுச்சேரியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3- ஆம் இடம்.. முதல்வர் பதவியேற்பு விழாவில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-thai-vazhthu-is-sung-for-the-3rd-time-at-the-swearing-in-ceremony-of-the-cm-of-puducherry-78271.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 15:33:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-thai-vazhthu-is-sung-for-the-3rd-time-at-the-swearing-in-ceremony-of-the-cm-of-puducherry-78271.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Thai Vazhthu Sung : தமிழகத்தை போல, புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் என். ரங்கசாமி பதவியேற்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு பாடல் பாடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டி எழுந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cm-rengasamy.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="புதுச்சேரியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3- ஆம் இடம்.. முதல்வர் பதவியேற்பு விழாவில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/edappadi-palaniswami-speaks-on-horse-trading-cvshanmugam-and-vijayabaskar-whisper-behind-his-back-78213.html" target="_blank" rel="noopener">புதுச்சேரியில்</a> நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று இன்று புதன்கிழமை ( மே 13- ஆம் தேதி) ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி 5- ஆவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, 2- ஆவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. 3- ஆவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விழாக்கள் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் என அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவது பாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
<h3>3- ஆவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து</h3>
ஆனால், வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை பாடிய பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. இதே போல, தமிழகத்தில் கடந்த மே 10- ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராக பதவி ஏற்றார். அப்போது, முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 3- ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதுவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை கிளப்பியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-government-gets-144-members-support-in-floor-test-where-118-is-needed-vijay-to-continue-as-tamilnadu-cm-78222.html" target="_blank" rel="noopener">தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு.. முதல்வர் விஜய்யின் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிப்பெற்றது என அறிவிப்பு..</a>
<h3>மத்திய அரசு அனுப்பிய நிகழ்ச்சி நிரல்</h3>
தமிழக அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆகியவற்றில் முதலாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் எனவும், இறுதியில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இதுபோன்று நடந்ததை அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு, தமிழக வெற்றி கழக அரசு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டு இருந்தது. அதில், மத்திய அரசு தயார் செய்து அனுப்பிய முதல்வர் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிரலில் முதலில் வந்தே மாதரம். 2- ஆவதாக தேசிய கீதம். 3- ஆவதாக தமிழ் தாய் வாழ்த்து என குறிப்பிடப்பட்டிருந்தது.
<h3>புதுச்சேரியில் நிகழ்ச்சி நிரல் மாற்றம்</h3>
அதன் அடிப்படையிலேயே தமிழ் தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரி முதல்வர் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின்னர் வந்தே மாதரம், தேசிய கீதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவதாக மாற்றப்பட்டு பாடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/a-democracy-with-a-conscience-cm-vijay-roars-after-winning-the-vote-of-confidence-78230.html" target="_blank" rel="noopener">“மனசாட்சி உள்ள மக்களாட்சி”.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் கர்ஜித்த முதல்வர் விஜய்..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>முதல்வர் விஜய்யின் சிறப்பு ( அரசியல்) அதிகாரியாக பிரபல ஜோதிடர் நியமனம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/ricky-radhan-pandit-vettrivel-has-been-appointed-as-the-special-political-officer-to-tamil-nadu-chief-minister-joseph-vijay-78036.html</link>	
		<pubDate>Tue, 12 May 2026 13:41:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/ricky-radhan-pandit-vettrivel-has-been-appointed-as-the-special-political-officer-to-tamil-nadu-chief-minister-joseph-vijay-78036.html</guid>
		            
			

    	<description><![CDATA[Ricky Radhan Pandit vettrivel : தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ( அரசியல்)  ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை முதன்மை செயலாளர் பிறப்பித்துள்ளார். இவருக்கு வழங்கப்பட்டது அரசுப் பதவியாகும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ricky-radhan-pandit-vettrivel-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முதல்வர் விஜய்யின் சிறப்பு ( அரசியல்) அதிகாரியாக பிரபல ஜோதிடர் நியமனம்!" /></figure>தமிழக முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ( அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பிரபல ஜோதிடராகவும், தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான உத்தரவை முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அலுவலகத்தில் புதிய அதிகாரிகளை நியமனம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, முதல்வர் பொறுப்பேற்ற நாளில் அவரது முதன்மைச் செயலாளர் 1,2 ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதே போல, முந்தைய நாளில் அவரது அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய சுமார் 14 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
<h3>அரசியல் சார்ந்த பணியில் ரிக்கி ரத்தன் நியமனம்</h3>
இந்த நிலையில், முதல்வர் விஜயின் நெருங்கிய வட்டாரத்தில் நம்பக்கூடிய நபராக இருக்க கூடிய ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல் அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள ரிக்கி ரத்தன் பண்டிட் முதல்வர் விஜயுடன் செல்பவராகவும், முதல்வர் பங்கேற்கும் நிகழச்சிகளில் அவருக்கான பேச்சுகள் அவரிடம் வழங்கப்பட்டு படித்து விட்டு முதல்வரிடம் வழங்கும் பணியை மேற்கோள்வார்.
<h3>விஜய் - ரிக்கி ரத்தன் இடையே 7 ஆண்டு கால பழக்கம்</h3>
இதுபோன்ற முக்கிய பணிகளை சிறப்பு அதிகாரி மேற்கொள்வார். தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் சார்ந்த நபரை அரசியல் சார்ந்த பணிகளில் நியமனம் செய்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த பணியானது ரிக்கி ரத்தன் பண்டிட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆகியோருக்கு இடையே சுமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தனிப்பட்ட முறையில் பழக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் விஜய் நம்பக்கூடிய நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவராக ரிக்கி ரத்தன் பண்டிட் இருந்து வருகிறார்.

[caption id="attachment_78039" align="alignnone" width="246"]<img class="size-medium wp-image-78039" src="https://www.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ricky-radhan-pandit-vettrivel-246x300.jpeg" alt="Ricky Radhan Pandit Vettrivel" width="246" height="300" /> முதல்வர் சிறப்பு அதிகாரி நியமனம்[/caption]
<h3>யார் இந்த ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றி வேல்</h3>
இதில், விஜயின் நெருங்கிய நண்பராக விஷ்ணு ரெட்டி என்பவர் இருந்து வருகிறார். அவரிடம் அரசியல் சார்ந்த அனைத்து முடிவுகளிலும் விஷ்ணு ரெட்டியின் பின்புறம் என்பது இருந்து வருகிறது. கட்சி சார்ந்து எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் முக்கிய நபராகவும் ரிக்கி ரத்தன் இருந்து வருகிறார். அதன் அடிப்படையிலேயே, தற்போது அவருக்கு முதல்வரின் சிறப்பு அதிகாரி (அரசியல்) என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு அரசு பதவி ஆகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு.. திருப்பத்தூர் எம்எல்ஏ பங்கேற்க திடீர் சிக்கல்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-bans-tirupattur-mla-srinivasa-sethupathi-from-participating-in-proving-tvk-majority-78008.html</link>	
		<pubDate>Tue, 12 May 2026 11:25:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/madras-high-court-bans-tirupattur-mla-srinivasa-sethupathi-from-participating-in-proving-tvk-majority-78008.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tirupattur Mla Srinivasa Sethupathi : தமிழக வெற்றிக் கழக அரசு நாளை புதன்கிழமை பெரும்பான்மை நிரூபிக்க இருக்கும் நிலையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க. எம்எல்ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/srinivasa-sethupathi-case.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு.. திருப்பத்தூர் எம்எல்ஏ பங்கேற்க திடீர் சிக்கல்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு!" /></figure>தமிழக சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தோல்வியை தழுவி இருந்தார். இதில் தபால் வாக்கை வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.  மேலும், தபால் வாக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
<h3>திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏவுக்கு நீதிமன்றம் திடீர் தடை</h3>
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு நாளை புதன்கிழமை ( மே 13- ஆம் தேதி) சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கு திருப்பத்தூர் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறுவது கற்பனையானது என்று தங்களது தரப்பு விவாதத்தை முன் வைத்தார்.
<h3>நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம்</h3>
இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆஜராகி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி தபால் வாக்கு மாறி வந்ததாக கூறியுள்ளார் என்று எதிர் தரப்பு வாதத்தை முன் வைத்தார். இதனை கேட்ட நீதிபதி விக்டோரியா நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 375 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் 83 ஆயிரத்து 374 வாக்குகள் பெற்றிருந்தார்.
<h3>எம்எல்ஏ-வாக பதவி ஏற்பதற்கு இடைக்கால தடை</h3>
இவர்களுக்கு இடையே 1 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் ஆகும். இதில், குளறுபடி ஏற்பட்டதாக கூறிய கே. ஆர். பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதன் காரணமாகவே தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும்.. முதல்வர் விஜய்யின் முதல் உரை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/chief-minister-joseph-vijay-speech-in-the-tamil-nadu-legislative-assembly-77995.html</link>	
		<pubDate>Tue, 12 May 2026 10:47:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/chief-minister-joseph-vijay-speech-in-the-tamil-nadu-legislative-assembly-77995.html</guid>
		            
			

    	<description><![CDATA[CM Joseph Vijay Speech : ஜனநாயகத்தின் இதயமாக சட்டப் பேரவை செயல்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உரையாற்றினார். மேலும், தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் முழு ஒத்துழைப்பை தருவார்கள் என்றார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cm-vijay-speech.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும்.. முதல்வர் விஜய்யின் முதல் உரை!" /></figure>தமிழக சட்டப்பேரவை கூட்டம் 2- ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை ( மே 12- ஆம் தேதி ) கூடியது. இதில், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் முதல்முறையாக உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் சமமாகும். ஒரு உறுப்பினர் உள்ள கட்சிக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படும். தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை தருவார்கள். பேரவையின் மாண்பு கண்ணியத்தை காக்க வேண்டும். ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகருக்கு உதவியாக செயல்படுவார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும். இங்கு அனைவரும் சமம்.
<h3>ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும்</h3>
மக்களின் எதிர்பார்ப்புகளை பேரவையின் கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் சட்டங்களை அமல்படுத்தவேண்டி பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. நல்லது ஏற்கப்பட்டு, தீயவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இந்த பேரவை செயல்பட வேண்டும். அதற்குரிய வகையில் பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு கொண்ட இந்த பேரவையே நடத்திச் செல்லும் பண்பை பெற்றுள்ளவரையை தமிழக வெற்றிக்கழகம் முன்மொழிந்து தாங்கள் இன்றைக்கு இந்த ஆசனத்தில் அமர்ந்து உள்ளீர்கள் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
<h3>பேரவையில் முதல்வர் விஜய் கூறிய குட்டி கதை</h3>
சபாநாயகரை அவை முன்னவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கையை பிடித்து அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கும் சம்பிரதாயம் குறித்து விஜய் விளக்கினார். அதில், இங்கிலாந்தில் உள்ள பாராளுமன்ற நடைமுறைகளை போன்றதே தமிழகத்திலும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மன்னராட்சி இருந்த காலத்திலேயே இங்கிலாந்தில் பாராளுமன்றம் செயல்பட்டுள்ளது. அந்த காலத்தில் அனைத்து அதிகாரங்களை பெற்ற மன்னரும் இருந்தார். பாராளுமன்றமும் செயல்பட்டு வந்தது. அங்கு மன்னர் செய்ய விரும்பும் பணிகளை பாராளுமன்றம் நிராகரித்து விடும்.
<h3>சபாநாயகர் பதவியை விரும்பாதற்கு காரணம்</h3>
இந்த செய்தியை மன்னருக்கு தெரிவிக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பு ஆகும். தான் விரும்பிய பணிகளை பாராளுமன்றம் நிராகரித்த தகவலை கூறும் சபாநாயகருக்கு மன்னர் மரண தண்டனை விதித்து உத்தரவிடுவார். இதன் காரணமாக யாருமே சபாநாயகர் பதவிக்கு வருவதற்கு விரும்ப மாட்டார்கள். எனவே, புதிய பாராளுமன்றம் அமையும் போது சபாநாயகர் பதவிக்கு அறிவிக்கப்படும் நபர் தவித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபாகும். ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இந்த மரபு தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சட்டமன்றத் தலைவராக பதவியேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்.. துணைத் தலைவரானார் எம்.ரவி சங்கர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-parthy-jcd-prabhakar-elected-as-tamil-nadu-speaker-unopposed-77986.html</link>	
		<pubDate>Tue, 12 May 2026 09:39:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-parthy-jcd-prabhakar-elected-as-tamil-nadu-speaker-unopposed-77986.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Speaker Jcd Prabhakar: தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ஜே. சி. டி. பிரபாகர் என்பவரும், துணை சபாநாயகராக எம். ரவி சங்கர் என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை முன்னின்று நடத்தினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/jcd-prabhakar-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சட்டமன்றத் தலைவராக பதவியேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்.. துணைத் தலைவரானார் எம்.ரவி சங்கர்!" /></figure>தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அடைவதற்கு விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 9 எம் எல் ஏக்கள் அமைச்சராக பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) தமிழக சட்டப் பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏவான கருப்பையா என்பவர் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 232 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக உறுதி மொழி ஏற்று பதவி ஏற்று கொண்டனர். பின்னர், தமிழக சட்டப்பேரவைக்கு நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை நியமனம் செய்வதற்கான பணிகள் தொடங்கியது.
<h3>போட்டியின்றி தேர்வான சபாநாயகர் - துணை சபாநாயகர்</h3>
அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவான ஜே. சி. டி. பிரபாகர் துணை சபாநாயகராக எம். ரவிசங்கர் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த பதவிகளுக்கு மற்ற கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் மனுக்களை தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக, ஜே. சி. டி. பிரபாகர் மற்றும் எம். ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவித்தார். இதை தொடர்ந்து, ஜே. சி. டி. பிரபாகரை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
<h3>துணை சபாநாயகர் தேர்வு - பதவி ஏற்பு</h3>
இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவர் தேர்வு நடைபெற்றது. இதனை, சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் நடத்தினார். அப்போது, துணை சபாநாயகர் பதவிக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஆதரவாக முதல்வர் விஜய் முன்மொழிந்திருந்தார். அவை முன்னவரான கே. ஏ. செங்கோட்டையன் வழிமொழிந்திருந்தார். இதை தொடர்ந்து, துணை சபாநாயகர் பதவிக்கு ரவிசங்கர் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்த காரணத்தால் அவர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவதாக சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்தார். அதன்படி, ரவிசங்கர் துணை சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/dmdk-general-secretary-premalatha-vijayakanth-said-that-they-cannot-vote-in-favor-of-the-tvk-government-77792.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 13:53:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/dmdk-general-secretary-premalatha-vijayakanth-said-that-they-cannot-vote-in-favor-of-the-tvk-government-77792.html</guid>
		            
			

    	<description><![CDATA[Premalatha Vijayakanth : தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிருபிக்கும் போது, அந்த அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று தே. மு. தி. க. பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம். எல். ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/02/prema.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/first-tamilnadu-legislative-assembly-session-of-the-vijay-government-convenes-mlas-to-take-oath-today-77738.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்ற தேர்தலில்</a> வெற்றி பெற்ற 233 தொகுதிகளின் வேட்பாளர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர். அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து, விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. வாக பதவி ஏற்றார். அப்போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, முதல் அமைச்சர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/first-tamilnadu-legislative-assembly-session-of-the-vijay-government-convenes-mlas-to-take-oath-today-77738.html" target="_blank" rel="noopener">ஜோசப் விஜய்</a> பதிலுக்கு எழுந்து நின்றதுடன் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தினார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் வெளியே செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
<h3>விருத்தாசலம் மக்களுக்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்</h3>
விருதாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக நான் இன்று பதவி ஏற்று உள்ளேன். என்னை வெற்றி பெற வைத்த விருதாச்சலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலினுக்கும், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெற்ற வெற்றியை தேமுதிகவின் முன்னாள் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் உரித்தாக்குகிறேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது விருதாச்சலம் தொகுதி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/swearing-in-of-mlas-what-transpired-on-day-one-of-the-legislative-assembly-session-77755.html" target="_blank" rel="noopener">கோட் சூட் போட்ட விஜய்.. எம். எல்.ஏ.க்கள் பதவியேற்பு.. முதல் நாள் சட்டப்பேரவையில் நடந்தது என்ன?</a>
<h3>தமிழக வெற்றிக் கழக அரசு ஆதரவு கிடையாது</h3>
தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் விஜய் பெரும்பான்மை நிரூபிப்பதற்கு கட்டாயம் நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு உரிய கால அவகாசத்தை கொடுப்போம். நாளை மறுநாள் மே 13- ஆம் தேதி ( புதன்கிழமை) நடைபெற உள்ள பெரும்பான்மை நிரூபிப்பின் போது, நான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டேன். திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிக்கே ஆதரவு தெரிவிப்பேன்.
<h3>தவெகவுக்கு எதற்காக ஆதரவு கிடையாது</h3>
சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால் எனது வாக்கை அந்த கட்சிக்கே செலுத்துவேன் என்று தெரிவித்தார். அதன் பிறகு மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம். தேர்தல் நேரத்தில் தவெகவுடன், தேமுதிக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக திமுவில் இணைந்தது. இதில், ஒரு மாநிலங்களை உறுப்பினர் இடம், 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-legislative-assembly-speaker-election-cm-vijay-fields-jcd-prabhakaran-on-behalf-of-tvk-77779.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டசபை சபாநாயகர் தேர்தல்.. தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகரை களமிறக்கிய முதல்வர் விஜய்!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சட்டபேரவையில் நெகிழ்ச்சி சம்பவம்.. கண்ணீர் மல்க பதவியேற்ற மோகன் எம்எல்ஏ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/aiadmk-mla-from-panruti-constituency-mohan-burst-into-tears-in-the-assembly-77783.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 12:53:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/aiadmk-mla-from-panruti-constituency-mohan-burst-into-tears-in-the-assembly-77783.html</guid>
		            
			

    	<description><![CDATA[Panruti MLA Mohan : தமிழக சட்டப் பேரவையில் எம். எல். ஏ.வாக பதவி ஏற்ற பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ மோகன் ஜெயலலிதா படத்தை பார்த்து கண்ணீர் மல்க அழுததுடன், பதவி ஏற்றார். இந்த நிகழ்வு சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியான சம்பவமாக பதிவானது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/mohan-mla.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சட்டபேரவையில் நெகிழ்ச்சி சம்பவம்.. கண்ணீர் மல்க பதவியேற்ற மோகன் எம்எல்ஏ!" /></figure>தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 233 வேட்பாளர்கள் சட்ட பேரவையில் எம்எல்ஏக்களாக இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) பதவி ஏற்றனர். இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இவரை தொடர்ந்து, தியாகராய நகர் எம்எல்ஏவாக என். ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏவாக ஆதவ் அர்ஜுனா, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி தொகுதி எம்எல்ஏவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட பலர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். அப்போது, கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்எல்ஏ மோகன் உறுதிமொழி கூறி பதவியேற்றார். அப்போது, ஜெயலலிதா படத்தை கையெடுத்து கும்பிட்டு வணங்கியதுடன், கண்ணீர் மல்க பதவி ஏற்றார்.
<h3>கண்ணீர் மல்க அழுதவாறு பதவியேற்ற அதிமுக எம்எல்ஏ</h3>
இது சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியான சம்பவமாக நிகழ்ந்தது. இதில், மோகன் எம்எல்ஏ, பதவி ஏற்கும் போது கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கா. மோகன் என்னும் நான் சட்டமுறைப்படி நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம். அந்த சட்டத்தின் உண்மையான நம்பிக்கையும், பற்றுறுதியையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டு ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையாக நிலை நிறுத்துவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
<h3>சட்டப்பேரவையில் வழக்கமாக இருந்து வரும் நிகழ்வு</h3>
அப்போது, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா நான் முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் வந்துள்ளேன் என்று கண்ணீர் மல்க இரு கைகளை எடுத்து கும்பிட்டு தெரிவித்தார். பொதுவாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம் எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்களாக பதவி ஏற்கும் வேட்பாளர்கள் தங்களது கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரை நினைவு கூர்ந்து கண்ணீர் மல்க பதவி ஏற்பதும், அவர்கள் பெயரை குறிப்பிட்டு பதவி ஏற்பதும் வழக்கமாக உள்ளது.
<h3>விஜய்யை பார்த்து கடவுள் அறிய என கூறிய பதவியேற்ற வேட்பாளர்</h3>
அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதவி ஏற்கும் போது, கடவுள் ஆணையாக என்று கூறுகையில், தவெக தலைவரும், முதல்வருமான விஜயை நோக்கி கை காண்பித்து பதவி ஏற்றார். இதே போல, தமிழக வெற்றி கழகத்தின் மற்றொரு எம்எல்ஏவும் விஜயை நோக்கி கடவுள் எனக்கூறி பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக உறுதி மொழி ஏற்று பதவி ஏற்று கொண்டனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதல்வர் ஜோசப் விஜய்.. பரபரப்பில் அரசியல் களம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/chief-minister-joseph-vijay-to-meet-dmk-leader-mk-stalin-77770.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 11:46:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/chief-minister-joseph-vijay-to-meet-dmk-leader-mk-stalin-77770.html</guid>
		            
			

    	<description><![CDATA[CM Joseph Vijay Meet MK Stalin : திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலினை, தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vijay-stalin-meet.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதல்வர் ஜோசப் விஜய்.. பரபரப்பில் அரசியல் களம்!" /></figure>தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பதவி செய்திருந்தது. ஆனால், பெரும்பான்மை இல்லாத நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் திராவிட கழக தலைவர் கீ. வீரமணியை சந்தித்திருந்தார். இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டில் அவரை விஜய் சந்திக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அத்துடன் இந்த சந்திப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள திராவிட முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
<h3>மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்</h3>
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு மு. க. ஸ்டாலின் தரப்பில் இருந்து நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் இன்று மு. க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
<h3>திமுக மற்றும் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த விஜய்</h3>
தமிழக அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம், அதன் தலைவர் விஜய் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார். தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநில மாநாடு முதல் தற்போது வரை திராவிட முன்னேற்ற கழக அரசையும், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையே தான் போட்டி என தெரிவித்திருந்தார்.
<h3>திமுக ஒரு தீய சக்தி - தவெக தூய சக்தி</h3>
அத்துடன், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தீய சக்தி, தமிழக வெற்றி கழகம் ஒரு தூய சக்தி என்பன உள்ளிட்ட வார்த்தைகளால் கடுமையான விமர்சனங்களை விஜய் முன்வைத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலினை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாக வெளியான தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜெயலலிதா படத்தை நெஞ்சில் சுமந்து வந்து பதவியேற்ற தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/k-a-sengottaiyan-mla-takes-oath-with-jayalalithaa-photo-77766.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 11:36:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/k-a-sengottaiyan-mla-takes-oath-with-jayalalithaa-photo-77766.html</guid>
		            
			

    	<description><![CDATA[K. A. Sengottaiyan : தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது, அவர் தனது சட்டை பையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருந்தது பேசும் பொருளாகி உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/k-a-sengottayan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜெயலலிதா படத்தை நெஞ்சில் சுமந்து வந்து பதவியேற்ற தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!" /></figure>தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை ( மே 10- ஆம் தேதி) பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து, 233 சட்டமன்ற தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள கருப்பையா முன்னிலையில் புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர். இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளரும், தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளரும், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.
<h3>ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற கே.ஏ.செங்கோட்டையன்</h3>
இதில், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் எம். எல். ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, அவர் தனது சட்டை பையில் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருந்தார். ஜெயலலிதா புகைப்படத்துடன் கே. ஏ. செங்கோட்டையன் எம். எல். ஏ. பதவியேற்றது பேசும் பொருளாகியுள்ளது.
<h3>அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியம்</h3>
அதிமுகவில் முன்னாள் அமைச்சராகவும், கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவுமாக இருந்து வந்த கே. ஏ. செங்கோட்டையன், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
<h3>11- ஆவது முறையாக செங்கோட்டையன் பதவியேற்பு</h3>
அத்துடன் ஈரோடு மாவட்ட செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதேபோல, சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்கோட்டையன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்படி, 11- ஆவது முறையாக சட்டமன்றத்துக்கு செங்கோட்டையன் தேர்வாகி எம்எல்ஏ பதவியை அலங்கரித்து வருகிறார். அதிமுகவில் இருந்தது போல தற்போதும் தமிழக வெற்றி கழகத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எம்.எல்.ஏ. பதவியேற்பில் பரபர.. வெற்றிசான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-minister-keerthana-did-not-bring-victory-certificate-at-the-oath-taking-ceremony-of-mlas-77751.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 10:20:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-minister-keerthana-did-not-bring-victory-certificate-at-the-oath-taking-ceremony-of-mlas-77751.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tvk Minister Keerthana: தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகாசி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான கீர்த்தனா வெற்றி சான்றிதழை எடுத்து வர மறந்து விட்டார். இதனால், அவரால் பதவி ஏற்க முடியாமல் போனது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/keerthana.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எம்.எல்.ஏ. பதவியேற்பில் பரபர.. வெற்றிசான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா!" /></figure>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், டி. நகர் எம்எல்ஏவுமான என்.ஆனந்த் எம்எல்ஏவாக பதவியேற்றார். இதே போல, ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி. ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். இதில், சிவகாசி தொகுதி எம்எல்ஏவான கீர்த்தனா பதவி ஏற்க வந்திருந்தார். ஆனால், அவர் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழை எடுத்து வர மறந்திருந்தார்.
<h3>வெற்றி சான்றிதழை மறந்து வந்த அமைச்சர்</h3>
இதன் காரணமாக கீர்த்தனாவால் எம்எல்ஏ பதவி ஏற்க முடியாமல் போனது. இதனால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 17 சி படிவம் என்ற வெற்றி சான்றிதழை வழங்கி இருந்தனர். இந்த சான்றிதழை எம்எல்ஏ பதவி ஏற்கும் போது, கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு கட்சிகள் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக வெற்றி கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களது வெற்றி சான்றிதழை சட்டப்பேரவை செயலரிடம் சமர்ப்பித்து எம்எல்ஏ பதவி ஏற்புக்கான உறுதி மொழியை ஏற்று பதவி ஏற்று கொண்டனர்.
<h3>சிவகாசி தாெகுதி எம்எல்ஏவால் பதவி ஏற்க முடியாமல் போனது</h3>
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகாசி தொகுதி பெண் எம்எல்ஏவான கீர்த்தனா தனது வெற்றி சான்றிதழை எடுத்து வர மறந்ததால் அவர் பதவியேற்க முடியாமல் போனது. மேலும், வெற்றி சான்றிதழை கொண்டு வருவதற்காக அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை செலலரிடம் வெற்றி சான்றிதழை சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனா சமர்ப்பித்த பின்னர் எம்எல்ஏவாக பதவி ஏற்பார் என்று சட்டப்பேரவை நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
<h3>தவெக அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சர்</h3>
தமிழக வெற்றி கழகம் சார்பில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் வியூக வகுப்பாளரான கீர்த்தனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். அதன்படி, அந்த தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்கப்பட்டது. இதன் மூலம், விஜய் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சர் என்ற பெயரையும் சிவகாசி தொகுதி எம்எல்ஏ கீர்த்தனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிமுக உள்கட்சி பூசல்.. சட்டப்பேரவையில் இரு குழுவாக அமர்ந்திருந்த எம்எல்ஏக்கள்..!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/aiadmk-mlas-in-the-tamil-nadu-assembly-have-split-into-two-groups-77750.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 10:17:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/aiadmk-mlas-in-the-tamil-nadu-assembly-have-split-into-two-groups-77750.html</guid>
		            
			

    	<description><![CDATA[Aiadmk Mlas Two Groups: தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்வில் அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இரு குழுக்களாக பிரிந்து அமர்ந்துள்ளனர். அவர்கள் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் பிரிந்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/aiadmk-mlas-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிமுக உள்கட்சி பூசல்.. சட்டப்பேரவையில் இரு குழுவாக அமர்ந்திருந்த எம்எல்ஏக்கள்..!" /></figure>தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். இதில், திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 233 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். இதற்கு முன்னதாக, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு குழுவாகவும் வருகை தந்தனர்.
<h3>அதிமுகவில் இரு குழுவாக பிரிந்த எம்எல்ஏக்கள்</h3>
அத்துடன் சட்டப் பேரவையின் உள்ளே இரு குழுவை சேர்ந்த எம்எல்ஏக்களும் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். அதிமுகவில் தலைமை பதவிக்கு அந்த கட்சியினர் இடையே மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இணைய வேண்டும் என்று சில எம்எல்ஏக்கள் போர் கொடி தூக்கியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 5 பேருடன் ஒரு குழுவாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும் வருகை தந்திருந்தனர். அவர்கள் சட்டப்பேரவையின் உள்ளே இரு குழுவாக பிரிந்து அமர்ந்திருந்தனர்.
<h3>தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தல்</h3>
அதிமுக தொடர்ச்சியாக 11 தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்த கட்சியை சேர்ந்தவர்கள் விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களான எஸ். பி. வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோர் தலைமையிலான எம்எல்ஏக்கள் ஒரு குழுவாக பிரிந்ததுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும், அமைச்சர் பதவிகளை கேட்டு பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக எஸ் பி வேலுமணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியை சந்தித்ததாகவும் தெரிகிறது.
<h3>தவெகவுக்கு ஆதரவாக 34 அதிமுக எம்எல்ஏக்கள்</h3>
மேலும், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் தலைமையில் சுமார் 34 எம்எல்ஏக்கள் ஆலோசனை மேற்கொண்டதுடன், தமிழக வெற்றி கழகத்துக்கான தங்களது ஆதரவு கடிதத்தை முதல்வர் விஜய்யிடம் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த மோதல் போக்கை வெளிப்படுத்தும் விதமாகவே சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் 2 குழுக்களாக பிரிந்து அமர்ந்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்தின் இளம் வயது முதல்வர்&#8230; ஜோசப் விஜய் எந்த இடத்தில் உள்ளார் தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/where-is-tvk-leader-vijay-among-the-youngest-chief-ministers-of-tamil-nadu-77725.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 07:21:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/where-is-tvk-leader-vijay-among-the-youngest-chief-ministers-of-tamil-nadu-77725.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Youngest Chief Ministers: தமிழகத்தில் 1969- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 18 முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் யார் இளம் வயதில் முதல் அமைச்சராக பதவி ஏற்றனர் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vijay-8.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்தின் இளம் வயது முதல்வர்&#8230; ஜோசப் விஜய் எந்த இடத்தில் உள்ளார் தெரியுமா?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-says-thanks-to-the-childrens-on-the-stage-where-he-assumed-oath-as-chief-minister-77594.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> கடந்த 1969- ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல் முதல்வராக கா.ந. அண்ணாதுரை பதவி ஏற்றார். இவரைத் தொடர்ந்து, சுமார் 60 ஆண்டு காலம் 17 முதலமைச்சர்கள் ஆட்சி அமைத்து தமிழகத்தை ஆண்டுள்ளனர். இவர்களில் 18- ஆவதாக <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-cm-vijay-swearing-in-ceremony-full-speech-details-in-tamil-77577.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்</a> நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 10- ஆம் தேதி) தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். தமிழகத்தின் 18 முதல்வர்களின் யார் குறைந்த வயதில் முதல்வராக பதவி ஏற்றார். அப்படி முதல்வராக பதவி ஏற்கும் போது, அவர்களது வயது என்ன என்பது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் நாம் சற்று விரிவாக பார்க்கலாம். இதில், 1991- ஆம் ஆண்டில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 43- ஆவது வயதில் முதல்வராக பொறுப்பேற்று முதலிடத்தில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் மு. கருணாநிதி 44 வயதில் பதவி ஏற்று 2- ஆவது இடத்தில் உள்ளார்.
<h3>தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு எந்த இடம்</h3>
ஓ. பன்னீர்செல்வம் 50 வயதில் பதவி ஏற்று 3- ஆவது இடத்திலும், காமராஜர் 51 வயதில் பதவி ஏற்று 4- ஆவது இடத்திலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 51 வயதில் தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்று 5- ஆவது இடத்திலும், அண்ணாதுரை 57 வயதில் பதவி ஏற்று 6- ஆவது இடத்திலும், எம். ஜி. ஆர். 60 வயதில் பதவி ஏற்று 7- ஆவது இடத்திலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி 62 வயதில் பதவி ஏற்று 8- ஆவது இடத்திலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் 68 வயதில் பதவி ஏற்று 9-ஆவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-leader-vijay-lifts-table-on-stage-in-cm-oath-taking-ceremony-77635.html" target="_blank" rel="noopener">மேஜையை தூக்கிய முதல்வர் விஜய்.. பதறிப்போன அதிகாரிகள்.. விழா மேடையில் நடந்த சம்பவம்!</a>
<h3>சாதனை செய்த வரலாற்றில் இடம் பிடித்த முதல்வர்கள்</h3>
இதில, காமராஜர் எளிமை, கல்வி வளர்ச்சி மற்றும் நிர்வாக திறன் காரணமாக "கல்வி கண் திறந்த தலைவர்" என்ற பெயரை பெற்றார். இதே போல, அறிஞர் அண்ணா காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுகவை முதல் முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்த தலைவராக வரலாற்றில் இடம் பிடித்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி தமிழக அரசியலில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய தலைவராக உருவெடுத்தார்.
<h3>கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதல்வர் பதவி</h3>
தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா மிகவும் இளம் வயதில் ஆட்சியை பிடித்த தலைவர்களில் ஒருவராகவும் தமிழக அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராகவும் இருந்தார். இதே போல, தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததுடன், முதல்வரானதும் புதிய அரசியல் அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/leaders-wishes-new-tamil-nadu-chief-minister-c-joseph-vijay-77570.html" target="_blank" rel="noopener">தமிழக முதல்வராக பதவி ஏற்றார் விஜய்.. தலைவர்கள் வாழ்த்து!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்தில் சிங்கப் பெண்கள் கர்ஜனை&#8230; களமிறங்குகிறது சிறப்பு அதிரடிப்படை.. அரசாணை வெளியீடு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/government-order-issued-to-form-a-singapengal-special-task-force-in-tamil-nadu-77722.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 06:43:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/government-order-issued-to-form-a-singapengal-special-task-force-in-tamil-nadu-77722.html</guid>
		            
			

    	<description><![CDATA[Singapengal Special Task Force : தமிழகத்தில் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல்வராக பதவியேற்ற விஜய் கையெழுத்திட்டிருந்த நிலையில், இந்த திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/women-police.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்தில் சிங்கப் பெண்கள் கர்ஜனை&#8230; களமிறங்குகிறது சிறப்பு அதிரடிப்படை.. அரசாணை வெளியீடு!" /></figure>தமிழக சட்டமன்றத் தேர்தலில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/supporting-leaders-of-tvk-government-condemn-lack-of-priority-for-tamil-thai-vazhthu-at-tamil-nadu-government-oath-ceremony-77662.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றிக் கழகம்</a> மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், விசிக உள்ளிட்ட 5 கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் முதல்வராக நேற்று ஞாயிற்றுக்கிழமை ( மே 10) பொறுப்பேற்றார். அப்போது, தவெகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை செயல்படுத்தும் விதமாக<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-government-clarifies-free-electricity-scheme-existing-100-unit-free-power-plan-will-continue-77650.html" target="_blank" rel="noopener"> 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்</a>. இதில், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது. அதன்படி, தமிழகத்தில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை அமைப்பதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசகன் வெளியிட்டார். அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அளிக்கும் வகையிலும் தனி சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட உள்ளது.
<h3>சிங்கப் பெண்கள் சிறப்பு படை செயல்படும் விதம்</h3>
இதில், ஆபத்தில் சிக்கியுள்ள பெண்களுக்கு விரைந்து உதவிகளை வழங்கவும், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இந்த சிங்கப் பெண்கள் சிறப்பு அதன் அடிப்படையில் செயல்படும். இந்த படையில் தமிழகம் முழுவதும் போதிய போலீசார் மற்றும் அதிநவீன வசதிகள் அமைக்கப்படும். முதல்வர் ஜோசப் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும் இந்த சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படைக்கு ஐ.ஜி. தலைமையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர், 4 காவல் ஆய்வாளர்கள், 8 காவல் உதவி ஆய்வாளர்கள், பிற பதவிகளை சேர்ந்த 20 போலீசார் பணியில் இருப்பார்கள்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/udhayanidhi-stalin-elected-as-dmk-legislature-party-leader-77671.html" target="_blank" rel="noopener">திமுக சட்டமன்றக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு – வெளியான அறிவிப்பு</a>
<h3>குற்றச்சம்பவங்கள் நிகழும் இடங்களில் கண்காணிப்பு</h3>
தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும். மேலும், பொது இடங்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதுடன், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில், போலீசாரின் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேம்படுத்தப்படும். இதை தவிர்த்து, ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் நெரிசல் மிகுந்த பகுதிகளில் அதிக அளவிலான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
<h3>பாதிக்கப்பட்டவர்கள் புகார் மீது விரைந்து நடவடிக்கை</h3>
இதில், ஏதேனும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு புகார் அளிக்கும் பட்சத்தில், அந்த புகார் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களை மீட்டு பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன் பிற உதவிகளும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். சமூக நலத்துறை, கல்வித்துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/prime-minister-modi-personally-called-and-wished-chief-minister-joseph-vijay-77686.html" target="_blank" rel="noopener">பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து – வெளியான தகவல்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Ministers List: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு என்ன துறை? உத்தேச பட்டியல்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-ministers-who-took-oath-of-office-in-swearing-in-ceremony-event-and-their-portfolio-77371.html</link>	
		<pubDate>Sun, 10 May 2026 10:44:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-ministers-who-took-oath-of-office-in-swearing-in-ceremony-event-and-their-portfolio-77371.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக வெற்றி கழகத்திற்கு 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நேற்று ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு விஜய்க்கு தமிழ்நாடு ஆளுநர் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மேலும், மே 13ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tn-ministers-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Ministers List: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு என்ன துறை? உத்தேச பட்டியல்.." /></figure><p data-start="0" data-end="120"><strong>சென்னை, மே 10, 2026:</strong> தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த 2026 <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election">சட்டப்பேரவைத்</a> தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும், ஆட்சி அமைக்க முடியாத சூழல் நீடித்தது. தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 118 இடங்கள் தேவை. ஆனால், தமிழக வெற்றி கழகத்திடம் 108 இடங்கள் மட்டுமே இருந்த சூழலில், பிற கட்சிகளின் ஆதரவை கோரி கடிதம் எழுதப்பட்டது.</p>

<h3 data-start="0" data-end="120">பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த தவெக:</h3>
<p data-start="475" data-end="898">அதில், 22 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி அதிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது. இதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. மேலும் ஆறு இடங்கள் தேவைப்பட்ட சூழலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்திருந்தன.</p>
<p data-start="475" data-end="898">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/what-does-it-mean-to-prove-a-majority-how-does-this-take-place-in-the-legislative-assembly-details-here-77520.html">பெரும்பான்மையை நிரூபித்தல் என்றால் என்ன? சட்டமன்றத்தில் அது எப்படி நடக்கும்?</a></p>

<h3 data-start="475" data-end="898">மே 13 ஆம் தேதிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்:</h3>
<p data-start="900" data-end="1281">இந்த வகையில், தமிழக வெற்றி கழகத்திற்கு 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நேற்று ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு விஜய்க்கு தமிழ்நாடு ஆளுநர் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மேலும், மே 13ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p data-start="900" data-end="1281">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/cm-vijay-swearing-in-ceremony-2026led-screens-in-public-places-convoy-on-standby-details-of-special-arrangements-77527.html">பொது இடங்களில் LED திரைகள்.. தயார் நிலையில் கான்வாய்.. விஜய் பதவியேற்பு சிறப்பு ஏற்பாடுகள் விவரம்!</a></p>

<h3 data-start="1283" data-end="1524">9 அமைச்சர்கள் பதவியேற்பு:</h3>
<p data-start="1283" data-end="1524">தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதில் முக்கியமாக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.</p>
<p data-start="1526" data-end="1610">இவர்களுக்கான துறைகள் குறித்து உத்தேசப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,</p>

<ul>
 	<li data-section-id="aughym" data-start="1612" data-end="1666">அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் – மின்சாரத்துறை</li>
 	<li data-section-id="hu4n65" data-start="1667" data-end="1726">அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – விளையாட்டு மற்றும் மதுவிலக்கு துறை</li>
 	<li data-section-id="dqfuj1" data-start="1727" data-end="1771">அமைச்சர் ராஜமோகன் – ஆதிதிராவிடர் நலத்துறை</li>
 	<li data-section-id="1616dtd" data-start="1772" data-end="1816">அமைச்சர் அருண்ராஜ் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை</li>
 	<li data-section-id="pzj8m9" data-start="1817" data-end="1880">அமைச்சர் செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை</li>
 	<li data-section-id="17zex7u" data-start="1881" data-end="1918">அமைச்சர் ஆனந்த் – நகராட்சி நிர்வாகத்துறை</li>
 	<li data-section-id="4zzaok" data-start="1919" data-end="1970">அமைச்சர் வெங்கட்ரமணன் – பள்ளிக்கல்வித்துறை</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Chief Minister Vijay : புது அரசு தொடக்கம்.. தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-chief-minister-joseph-vijay-swearing-in-oath-ceremony-2026-77544.html</link>	
		<pubDate>Sun, 10 May 2026 10:19:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-chief-minister-joseph-vijay-swearing-in-oath-ceremony-2026-77544.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Government Formation: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய் தனது வசம் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை ஆகிய முக்கியத் துறைகளை வைத்துள்ளார். அவரது அமைச்சரவையில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/joseph-vijay-cm-oath.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Chief Minister Vijay : புது அரசு தொடக்கம்.. தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!" /></figure>தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற கண்கவர் விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்லேகர் தவெக தலைவர் விஜய்க்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். "தமிழகத்தின் முதலமைச்சராகிய சி.ஜோசப் விஜய் எனும் நான்..." என அவர் உறுதிமொழி ஏற்றபோது, அரங்கமே அதிர்ந்தது. இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். விழாவைக் காண சென்னை மாநகரம் முழுவதும் தொண்டர்கள் வெள்ளமெனத் திரண்டனர். தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ம் ஆண்டு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக மாறியுள்ளது. சுமார் 60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு மாற்றாக, ஒரு தனி மனிதன் தனது நிதானமான நகர்வுகளாலும், மக்களின் மீதான அக்கறையாலும் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்திருக்கிறார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamil-nadu-cm-vijay-swearing-in-oath-ceremony-live-from-chennai-latest-news-in-tamil-77514.html">CM Vijay Swearing-in Ceremony Live: முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.. அமைச்சர்கள் யார் யார்?</a></strong></p>

<h3>அமைச்சரவை மற்றும் துறைகள்:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="fi"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chennai: Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay takes oath as the Chief Minister of Tamil Nadu. <a href="https://t.co/8yGuYEAkfj">pic.twitter.com/8yGuYEAkfj</a></p>
— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/2053337062733185172?ref_src=twsrc%5Etfw">May 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய் தனது வசம் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை ஆகிய முக்கியத் துறைகளை வைத்துள்ளார். அவரது அமைச்சரவையில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
<h3>தவெகவுக்கு ஆதரவு 120ஆக உயர்வு:</h3>
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 107 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க வருமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். முன்னதாக, தவெக தலைவர் விஜய் நேற்று மாலை ஆளுநரைச் சந்தித்து, காங்கிரஸ், சிபிஎம் (CPM), சிபிஐ (CPI), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இன்று காலை 10 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும், வரும் மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
<h3>வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கையெழுத்து:</h3>
முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், விஜய் கோட்டைக்குச் சென்று எந்த கோப்பில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளின்படி, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிர் உதவித்தொகை மாதம் ரூ.2,500, இலவசப் பேருந்து பயணம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் அவரது முதல் கையெழுத்து அமையும் என்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
<h3>தமிழக அரசியலில் நடந்த மாற்றம்:</h3>
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியலில், ஒரு புதிய மாற்றுச் சக்தியாகத் தவெக உருவெடுத்துள்ளது. இளைஞர்கள் மற்றும் 'ஜென்-சி' (Gen-Z) வாக்காளர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள விஜய், "மதச்சார்பற்ற சமூக நீதி" மற்றும் "நிர்வாகச் சீர்திருத்தம்" ஆகியவற்றைத் தனது அரசின் கொள்கைகளாக அறிவித்துள்ளார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/launching-tvk-party-to-becoming-chief-minister-of-tamilnadu-a-rewind-of-vijays-political-journey-77513.html">“விஜய் என்னும் ஆளுமை”.. இயக்கமாக தொடங்கி முதலமைச்சர் மகுடம் வரை.. ஒரு ரீவைண்ட்!</a></strong></p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>முதலமைச்சராகும் விஜய்.. ஒடிசாவில் மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த கலைஞர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/india/sand-sculpture-to-support-tvk-leader-to-become-chief-minister-of-tamil-nadu-in-odisha-77529.html</link>	
		<pubDate>Sun, 10 May 2026 09:40:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/india/sand-sculpture-to-support-tvk-leader-to-become-chief-minister-of-tamil-nadu-in-odisha-77529.html</guid>
		            
			

    	<description><![CDATA[Sand Sculpture to Support CM Vijay | 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை பெற்று கூட்டணி அமைத்து, கட்சிகள் இடம் ஆதரவு பெற்று தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ஒடிசாவில் மணல் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/sand-sculpture.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முதலமைச்சராகும் விஜய்.. ஒடிசாவில் மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த கலைஞர்!" /></figure><strong>பூரி, மே 10 :</strong> தமிழகத்தின் <strong>(Tamil Nadu)</strong> 17வது முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் <strong>(TVK - Tamilaga Vettri Kazhagam)</strong> தலைவர் விஜய்க்கு, ஒடிசாவில் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒடிசாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் இதனை செய்துள்ளார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு ஒடிசாவில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம்</h3>
2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 04, 2026 அன்று வெளியானது. இதில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று சாதனை படைத்தது. பல ஆண்டுகளாக தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளாக வளம் வந்த திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி சுமார் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், தவெக உள்ள எந்த கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறி விட்ட நிலையில், தொங்கு சட்டசபை ஏற்பட்டது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/launching-tvk-party-to-becoming-chief-minister-of-tamilnadu-a-rewind-of-vijays-political-journey-77513.html">“விஜய் என்னும் ஆளுமை”.. இயக்கமாக தொடங்கி முதலமைச்சர் மகுடம் வரை.. ஒரு ரீவைண்ட்!</a>

இந்த நிலையில் தான் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் தவெகவுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் பணியை தவெக கையில் எடுத்தது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கியதன் அடிப்படையில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/india/rahul-vijay-alliance-will-dmk-congress-split-rip-apart-india-bloc-up-polls-to-hold-clue-77112.html">ராகுல் – விஜய் கூட்டணி ‘இந்தியா’ கூட்டணியைத் தகர்க்குமா?.. தேசிய அரசியலில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்</a>
<h3>விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் மணல் சிற்பம்</h3>
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, ஒடிசாவின் புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிற்பம் அமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் விஜயின் உருவப்படம், தவெக கொடி, வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பொது இடங்களில் LED திரைகள்.. தயார் நிலையில் கான்வாய்.. விஜய் பதவியேற்பு சிறப்பு ஏற்பாடுகள் விவரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/cm-vijay-swearing-in-ceremony-2026led-screens-in-public-places-convoy-on-standby-details-of-special-arrangements-77527.html</link>	
		<pubDate>Sun, 10 May 2026 08:42:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/cm-vijay-swearing-in-ceremony-2026led-screens-in-public-places-convoy-on-standby-details-of-special-arrangements-77527.html</guid>
		            
			

    	<description><![CDATA[தவெக ஆட்சி அமைக்கப் பல கட்சிகள் கரம் கோர்த்துள்ளன. அந்தவகையில், திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் மே 6ஆம் தேதி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் மதச்சார்பற்ற மற்றும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/joseph-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பொது இடங்களில் LED திரைகள்.. தயார் நிலையில் கான்வாய்.. விஜய் பதவியேற்பு சிறப்பு ஏற்பாடுகள் விவரம்!" /></figure>தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப்பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 107 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க வருமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். முன்னதாக, தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து, காங்கிரஸ், சிபிஎம் (CPM), சிபிஐ (CPI), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இன்று காலை 10 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மேலும், வரும் மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
<h3>நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய கட்சிகள்:</h3>
தவெக ஆட்சி அமைக்கப் பல கட்சிகள் கரம் கோர்த்துள்ளன. அந்தவகையில், திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் மே 6ஆம் தேதி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் மதச்சார்பற்ற மற்றும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளன. இதேபோல், இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் திமுக-வுடன் கூட்டணி தொடர்ந்தாலும், தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி அமைய தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளது.
<h3>உத்தேச அமைச்சரவை மற்றும் துறைகள்:</h3>
புதிய அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட 9 அமைச்சர்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கசிந்துள்ள உத்தேசப் பட்டியலின் படி, விஜய் (முதலமைச்சர்): பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை. என். ஆனந்த்: நகராட்சி நிர்வாகத் துறை. செங்கோட்டையன்: பொதுப்பணித் துறை. நிர்மல் குமார்: மின்சாரத் துறை. வெங்கட் ரமணன்: பள்ளிக் கல்வித் துறை. அருண் ராஜ்: வணிகவரித் துறை. ஆதவ் அர்ஜுனா: விளையாட்டு மேம்பாடு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை. ராஜ்மோகன்: ஆதி திராவிடர் நலத்துறை. முஸ்தபா: சிறுபான்மையினர் நலத்துறை.
<h3>முதல் கையெழுத்து எதில்?</h3>
தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் எது முதலில் நிறைவேற்றப்படும் என்ற ஆவல் மக்களிடையே எழுந்துள்ளது. ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள். 200 யூனிட் இலவச மின்சாரம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை. இலவசப் பேருந்து பயணம்.
இந்த நான்கு முக்கிய திட்டங்களில் முதலமைச்சர் விஜய் எதில் முதல் கையெழுத்திடுவார் என்பது இன்று மதியம் தெரியவரும்.
<h3>நேரடி ஒளிபரப்பு வசதிகள்:</h3>
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். பொதுமக்கள் வசதிக்காகச் சென்னை மாநகராட்சியின் முக்கிய 20 இடங்களில் (மெரினா, அண்ணா நகர், கோயம்பேடு, சென்ட்ரல் உள்ளிட்ட இடங்கள்) பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மூலம் விழா நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்பது, மாநில அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
<h3>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:</h3>
விஜய் முதல்வராகப் பதவியேற்பதையொட்டி, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரது இல்லத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் ஏராளமான காவலர்கள் வீட்டின் நுழைவு வாயில் மற்றும் சாலை நெடுகிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடுப்புகள் (Barricades) அமைக்கப்பட்டுப் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் சீர்செய்யப்பட்டு வருகிறது.
<h3>முக்கிய பிரமுகர்கள் வருகை:</h3>
அதிகாலை முதலே விஜய் அவர்களின் இல்லத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரத் தொடங்கினர். பல முக்கிய பிரமுகர்கள் தங்களது வாகனங்களில் வந்து விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துச் செல்வதை வீடியோவில் காண முடிகிறது. விஜய் வீட்டின் முன்புறம் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்குப் புறப்படுவதற்கு முன்னதாக, அவரது இல்லத்தில் வழக்கமான உற்சாகமும் சுறுசுறுப்பும் காணப்பட்டது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெரும்பான்மையை நிரூபித்தல் என்றால் என்ன? சட்டமன்றத்தில் அது எப்படி நடக்கும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/what-does-it-mean-to-prove-a-majority-how-does-this-take-place-in-the-legislative-assembly-details-here-77520.html</link>	
		<pubDate>Sun, 10 May 2026 08:16:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/what-does-it-mean-to-prove-a-majority-how-does-this-take-place-in-the-legislative-assembly-details-here-77520.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஆளுநர் மாளிகையில் கையெழுத்திட்ட கடிதங்களை வழங்குவது மட்டும் பெரும்பான்மையாகக் கருதப்படாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு அரசாங்கத்தின் பலம் சட்டமன்றத்தின் தளத்தில் தான் (Floor of the House) நிரூபிக்கப்பட வேண்டும். இதையே 'தரைச் சோதனை' அல்லது 'நம்பிக்கை வாக்கெடுப்பு' என்கிறோம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tn-assembly.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெரும்பான்மையை நிரூபித்தல் என்றால் என்ன? சட்டமன்றத்தில் அது எப்படி நடக்கும்?" /></figure>இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு முதல்வர் அல்லது அவரது அமைச்சரவை, மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் வரை மட்டுமே ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருக்க முடியும். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதை விட, சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதே அதன் அதிகாரப்பூர்வமான இருப்பைத் தீர்மானிக்கிறது. தேர்தல் முடிவுகள் ஒரு கட்சியை ஆட்சியின் வாசல் வரை அழைத்துச் செல்லலாம்; ஆனால், சட்டமன்றத்தின் தளத்தில் நிரூபிக்கப்படும் 'பெரும்பான்மை' மட்டுமே அந்த அரசு அரியணையில் அமர்வதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது.
<h3>பெரும்பான்மை என்றால் என்ன?</h3>
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால், மொத்த இடங்களில் பாதியை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு, 118 என்ற எண்ணிக்கையே தமிழகத்தின் 'மேஜிக் எண்' ஆகும். பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் இந்தத் தனிப்பெரும் பலம் கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் (Hung Assembly) அமையும்போது , ஆளுநர் அதிக இடங்களைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணியை ஆட்சி அமைக்க அழைத்து, பலத்தை நிரூபிக்க உத்தரவிடுவார்.
<h3>'நம்பிக்கை வாக்கெடுப்பு' என்றால் என்ன?</h3>
ஆளுநர் மாளிகையில் கையெழுத்திட்ட கடிதங்களை வழங்குவது மட்டும் பெரும்பான்மையாகக் கருதப்படாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு அரசாங்கத்தின் பலம் சட்டமன்றத்தின் தளத்தில்தான் (Floor of the House) நிரூபிக்கப்பட வேண்டும். இதையே 'தரைச் சோதனை' அல்லது 'நம்பிக்கை வாக்கெடுப்பு' என்கிறோம். தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். அவருக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க குறிப்பிட்ட கால அவகாசம் (உதாரணமாக 15 நாட்கள்) வழங்கப்படும். புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கவும், வாக்கெடுப்பை நடத்தவும் அனுபவம் வாய்ந்த ஒரு உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார்.
<h3>நம்பிக்கை தீர்மானம்:</h3>
முதல்வர் "இந்த அவை என் தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது" என்ற தீர்மானத்தை முன்மொழிவார். குரல் வாக்கெடுப்பு சபாநாயகர் தீர்மானத்தை வாசிப்பார். ஆதரவு தெரிவிப்பவர்கள் "ஆம்" என்றும், எதிர்ப்பவர்கள் "இல்லை" என்றும் முழங்குவார்கள். சத்தம் அதிகமாக இருக்கும் தரப்பு வென்றதாக அறிவிக்கப்படும். (இது சர்ச்சைக்குரியது என்பதால் பெரும்பாலும் அடுத்த நிலைக்குச் செல்லும்). பிரிவு வாக்கெடுப்பு: இது மிகவும் துல்லியமானது. உறுப்பினர்கள் வரிசை வாரியாக எழுந்து நின்று தங்கள் வாக்கைப் பதிவு செய்வார்கள் அல்லது மின்னணு முறையில் பொத்தான்களை அழுத்துவார்கள்.
<h3>கொறடா உத்தரவும் அதன் தாக்கமும்:</h3>
ரகசிய வாக்கெடுப்பு நடப்பது என்பது அரிதானது. பெரும்பாலும் கட்சித் தாவல் தடைச்சட்டம் அமலில் இருப்பதால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படாது. ஒவ்வொரு கட்சியும் தனது எம்.எல்.ஏ.க்களுக்கு 'கொறடா உத்தரவு' பிறப்பிக்கும். இதன்படி, கட்சித் தலைமை யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறதோ, அவருக்குத்தான் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். மீறி வாக்களித்தால் அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் போனால், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும்.
<h3>வெற்றி அல்லது தோல்வி?</h3>
நம்பிக்கை வாக்கெடுப்பில், 118 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், முதல்வர் தனது பதவியைத் தொடர்வார். தோல்வி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், முதல்வர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆளுநர் அடுத்த பெரிய கூட்டணியை அழைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்கலாம்.

அந்தவகையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அடைய கூட்டணிக் கட்சிகளின் (காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக போன்றவை) ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்து, முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார். தொடர்ந்து, 3 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் அவர் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இபிஎஸ் பதவி விலக எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. அதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. நள்ளிரவில் பரபரப்பு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/edappadi-palaniswami-must-step-down-from-general-secretary-post-mlas-raise-the-banner-of-revolt-77507.html</link>	
		<pubDate>Sun, 10 May 2026 06:38:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/edappadi-palaniswami-must-step-down-from-general-secretary-post-mlas-raise-the-banner-of-revolt-77507.html</guid>
		            
			

    	<description><![CDATA[புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/eps-admk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இபிஎஸ் பதவி விலக எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. அதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. நள்ளிரவில் பரபரப்பு!!" /></figure>கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்தது. கடந்த 2021 தேர்தலில் 66 இடங்களை வென்று இருந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்றெடுத்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி இழந்துள்ளது. அதோடு, இதுவரை இல்லாதவகையில், பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/m-k-stalin-welcomes-vcks-support-for-tvk-while-continuing-in-dmk-led-alliance-77409.html">ஆதரவு தவெகவுக்கு… இருப்பது திமுக கூட்டணி – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி</a></strong>
<h3>இபிஎஸ் முதலமைச்சராக வாய்ப்பு?</h3>
இதனிடையே, விஜய் ஒரு புறம் முதலமைச்சராக திமுக கூட்டணி கட்சிகளிடம் பேசிக்கொண்டு இருந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இரு தரப்பிலும் தீவிரமாக நடப்பதாக தீவிர பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. எனினும், அதில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக திமுக கூட்டணி கட்சிகள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்கள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தனர்.
<h3>இபிஎஸ் வீட்டில் ஆஜரான எம்எல்ஏக்கள்:</h3>
புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர். இதில் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்து முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினர். அப்போதே எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக சிலர் குற்றம் சுமத்தி பேசி உள்ளதாக தெரிகிறது. பின்னர் இந்த கூட்டம் நிறைவடைந்தது. எனவே அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
<h3>சி.வி.சண்முகம் வீட்டில் கூட்டம்:</h3>
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் ஒன்று கூடினர். இரவு சுமார் 2.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட சுமார் 37 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவருக்கு எதிராக சிலர் பேசியதாக கூறப்படுகிறது.
<h3>நள்ளிரைவை தாண்டி நடந்த ஆலோசனை:</h3>
இதையறிந்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு எம்எல்ஏக்களும் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தனர். இருப்பினும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இரவு 10.30 மணியை தாண்டியும் ஆலோசனை நடத்தினர்.
<h3>இபிஎஸ் பதவியில் இருந்து விலக வேண்டும்:</h3>
இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தானாக விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியை, நீக்குவதற்கு எம்எல்ஏ கூட்டத்தில் எப்படி முடிவு எடுக்க முடியும்? அது கட்சி கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்று சிலர் கூறுகின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/thirumavalavan-says-he-informed-dmk-leader-mk-stalin-before-extending-support-to-tvk-77419.html">ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு – திருமாவளவன் பகிர்ந்த தகவல்</a></strong>

அதிமுகவில் ஏற்பட்டு உள்ள இந்த பிரச்சினை, இன்னும் ஓரிரு நாளில் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னரும் அதிமுகவில் இதேபோல் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு.. ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/iuml-president-kader-mohideen-extended-his-support-to-tvk-to-form-government-77453.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 21:22:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/iuml-president-kader-mohideen-extended-his-support-to-tvk-to-form-government-77453.html</guid>
		            
														<description><![CDATA[தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 108 என்ற அதிக தொகுதிகளை பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிப்பதில் தொடர் இழுபறிகள் நீடித்து வந்தது. இந்த நிலையில் "சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளை தொடர்ந்து ஐயுஎம்எல் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது" என்று அந்த கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/iuml-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு.. ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/QTntZVvv-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 108 என்ற அதிக தொகுதிகளை பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிப்பதில் தொடர் இழுபறிகள் நீடித்து வந்தது. இந்த நிலையில் "சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளை தொடர்ந்து ஐயுஎம்எல் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது" என்று அந்த கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>ஆட்சி அமைக்க அதிகாரம்.. ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/tvk-leader-vijay-meets-governor-rajendra-vishwanath-arlekar-to-form-government-77448.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 21:08:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/tvk-leader-vijay-meets-governor-rajendra-vishwanath-arlekar-to-form-government-77448.html</guid>
		            
														<description><![CDATA[நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக பெரும்பான்மை கொண்ட கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. இந்த நிலையில், ஆட்சி அமைக்க அதிகாரம் கோரி தவெக தலைவர் விஜய் இன்று நான்காவது முறையாக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vijay-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆட்சி அமைக்க அதிகாரம்.. ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்!" /></figure><p><iframe title="YouTube video player" class="VideoColumn" src="https://www.youtube.com/embed/S0BNIslz" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக பெரும்பான்மை கொண்ட கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. இந்த நிலையில், ஆட்சி அமைக்க அதிகாரம் கோரி தவெக தலைவர் விஜய் இன்று நான்காவது முறையாக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>மே 10-க்குள் புதிய அரசு அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்?.. என்ன நடக்கும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/presidents-rule-if-a-new-government-is-not-formed-by-may-10-what-will-happen-next-details-here-77370.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 15:05:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/presidents-rule-if-a-new-government-is-not-formed-by-may-10-what-will-happen-next-details-here-77370.html</guid>
		            
			

    	<description><![CDATA[தந்துள்ள தகவல்களின்படி, வரும் 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்கவில்லை என்றால், தமிழகத்தில் பின்வரும் சூழல்கள் உருவாக வாய்ப்புள்ளது. யாரும் பதவியேற்காத பட்சத்தில், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும், குதிரை பேரம் நடப்பதாகவும் குறிப்பிட்டு, அரசியலமைப்புச் சட்டம் Article 356-ஐ அமல்படுத்த ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை கடிதம் எழுதுவார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tvk-vijay-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மே 10-க்குள் புதிய அரசு அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்?.. என்ன நடக்கும்?" /></figure>தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வரும் நிலையில், சட்டப்பூர்வமான காலக்கெடு நெருங்கி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 10-ஆம் தேதியுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. இந்தநிலையில், புதிய அரசு அமைவதில் நீடிக்கும் சிக்கல்கள் காரணமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்தன. இதனால், தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. விஜய் ஆட்சி அமைப்பாரா மாட்டாரா? அவருக்கு தேவையான ஆதரவு கிடைக்குமா? என இன்று காலை முதல் தமிழகமே முடிவை அறிய காத்திருக்கிறது.

<strong>இதையும் படிக்க : “<a href="https://www.tv9tamilnews.com/elections/video-released-by-tvk-is-fake-it-may-have-been-generated-using-ai-ttv-dhinakaran-alleges-77339.html">தவெக வெளியிட்ட வீடியோ போலியானது”.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்”.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!</a></strong>
<h3>மே 10க்குள் பதவியேற்காவிட்டால் என்ன நடக்கும்?</h3>
தந்துள்ள தகவல்களின்படி, வரும் 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்கவில்லை என்றால், தமிழகத்தில் பின்வரும் சூழல்கள் உருவாக வாய்ப்புள்ளது. யாரும் பதவியேற்காத பட்சத்தில், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும், குதிரை பேரம் நடப்பதாகவும் குறிப்பிட்டு, அரசியலமைப்புச் சட்டம் Article 356-ஐ அமல்படுத்த ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை கடிதம் எழுதுவார். தமிழக சட்டமன்றம் செயல்படாது; தமிழகத்திற்கான சட்டங்களை நாடாளுமன்றமே இயற்றும் நிலை உருவாகும். 6 மாதத்திற்கு ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆட்சியைப் புதுப்பித்துக்கொண்டே செல்லலாம்; அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை தேர்தல் நடத்தாமல் குடியரசுத் தலைவர் ஆட்சியில் தமிழகம் இருக்க நேரிடும். இதன் மூலம் தமிழகம் முழுமையாக டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.
<h3>குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பில்லை:</h3>
அதேசமயம், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பில்லை என சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, மாநிலத்தில் நிலையான ஆட்சி அமையுமா என்பதை ஆராய்வது ஆளுநரின் கடமையாகும். ஆட்சி அமைப்பதற்கான உரிய அவகாசத்தை வழங்கிய பிறகும், எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மட்டுமே ஜனாதிபதி ஆட்சியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதுவரை தற்போதைய காபந்து அரசே தொடர்ந்து செயல்படும்.
<h3>விஜய்யும் 118 என்ற மேஜிக் நம்பரும்:</h3>
விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை வென்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்டன. காங்கிரஸ் (5 இடங்கள்) மற்றும் இடதுசாரிகள் (4 இடங்கள்) ஆதரவு அளித்த நிலையில் தவெக-வின் பலம் 117-ஐ எட்டியது. 2 இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), கடந்த 3 நாட்களாக தனது இறுதி முடிவை அறிவிக்காமல் இழுபறி நிலையை நீடிக்கச் செய்துள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpm-and-cpi-say-no-alliance-with-tvk-extend-outside-support-only-for-government-formation-77205.html">தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்</a></strong>
<h3>இதுநடந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி தான்:</h3>
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வெறும் வாய்மொழி ஆதரவை ஏற்க மறுத்து, 118 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்திட்ட கடிதத்தைக் கோரியுள்ளார். விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்து கிடைத்தால் மட்டுமே விஜய்யால் ஆட்சி அமைக்க முடியும். இன்று (மே 9) மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளார். ஒருவேளை விசிக ஆதரவு அளிக்காவிட்டால், தமிழகம் தேர்தலைச் சந்திக்காமல் நேரடியாகக் குடியரசுத் தலைவர் ஆட்சிக் குடைக்குள் செல்லும் அபாயம் உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இன்னும் ‘இரண்டே’ சீட்.. 3 நாட்களாக ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் விஜய்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/just-two-more-seats-vijay-struggles-to-form-a-government-for-three-days-vck-will-announce-today-77353.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 14:15:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/just-two-more-seats-vijay-struggles-to-form-a-government-for-three-days-vck-will-announce-today-77353.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நீடித்த இழுபறிக்கு விசிக  ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்க முன்வந்துள்ளது. 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விசிக, கடந்த 72 மணி நேரமாகத் தமிழக அரசியலின் "மையப்புள்ளியாக" மாறி, ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒருவித அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலக் காத்திருக்க வைத்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tvk-vijay-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இன்னும் ‘இரண்டே’ சீட்.. 3 நாட்களாக ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் விஜய்!!" /></figure>திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து, தற்போது அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் 'சினிமா டூ முதலமைச்சர்' என்ற லட்சியப் பயணம், நேற்றிரவு மீண்டும் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஐயுஎம்எல் மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து மொத்தம் 3 இடங்களை வென்றுள்ளன. இதில் இரண்டு இடங்கள் தங்களுக்குக் கிடைக்கும் என விஜய் நம்பியிருந்தார். தவெக தற்போது 108 இடங்களை வைத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இந்த ஆதரவு மிக அவசியமாக இருந்தது.
<h3>ஒட்டுமொத்த கவனமும் விசிக மீது:</h3>
ஆனால், ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை நேற்று மாலை விஜய் சந்தித்த சில மணி நேரங்களிலேயே இந்த 'டீல்' முறிந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, 118 ஆதரவுக் கடிதங்களை நேரடியாகக் காட்ட வேண்டும் என ஆளுநர் பிடிவாதம் காட்டியது தவெகவுக்குப் பின்னடைவாக அமைந்தது. இந்த சூழ்நிலையில், தற்போது ஒட்டுமொத்த கவனமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் அதன் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் பக்கம் திரும்பியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்னும் ஊசலாட்டத்திலேயே உள்ளார்.
<h3>இன்று மாலை 4 மணிக்கு விசிக அறிவிப்பு:</h3>
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நீடித்த இழுபறிக்கு விசிக  ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்க முன்வந்துள்ளது. 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விசிக, கடந்த 72 மணி நேரமாகத் தமிழக அரசியலின் "மையப்புள்ளியாக" மாறி, ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒருவித அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலக் காத்திருக்க வைத்தது. இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு விஜய் மற்றும் திருமாவளவன் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<h3>திமுக கொடுத்த 'கிரீன் சிக்னல்' - நடந்தது என்ன?</h3>
கடந்த புதன்கிழமை விசிக மற்றும் இடதுசாரி தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசித்தனர். அப்போது, கட்சிகள் தங்கள் சுய விருப்பத்தின்படி முடிவெடுக்கலாம் என ஸ்டாலின் 'கிரீன் சிக்னல்' கொடுத்ததாகத் தெரிகிறது. இதனிடையே, சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் கோரினார். காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த நிலையில், விஜய்க்கு இன்னும் 6 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டன. வியாழக்கிழமை வரை இடதுசாரி கட்சிகள் தயக்கம் காட்டினாலும், இறுதியில் 'ஆட்சி அமைக்க ஆதரவு' அளிக்க ஒப்புக்கொண்டன. ஆனால், விசிக ஒரு அமைச்சரவை பதவியோடு சேர்த்து, திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவியும் வேண்டும் என நிபந்தனை விதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<h3>வெள்ளிக்கிழமை அரங்கேறிய அதிரடி திருப்பங்கள்:</h3>
வெள்ளிக்கிழமை மாலை 'விஜய்க்கு ஆதரவு' என அறிவித்த விசிக, திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் 120 இடங்கள் (பெரும்பான்மைக்கும் அதிகம்) இருப்பதாகக் கருதி ஆளுநரைச் சந்திக்கத் தயாரான விஜய்க்கு, ஐயுஎம்எல் மற்றும் அமமுக பின்வாங்கியது பேரிடியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து விசிகவும் தனது ஆதரவை நிறுத்தி வைத்ததால், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
<h3>முடிவுக்கு வரும் காலக்கெடு:</h3>
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 10 (திங்கட்கிழமை) உடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு பதவியேற்காவிட்டால், ஆளுநர் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட நேரிடும். இதனால் கடந்த மாதம் விஜய் ஈட்டிய தேர்தல் வெற்றி வீணாகும் சூழல் உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்பதே தமிழக மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;ரூட்டை மாற்றும் காங்கிரஸ்&#8221;.. விஜய்க்காக ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-government-formation-congress-changes-the-route-rahul-gandhi-takes-a-bold-decision-for-vijay-77346.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 13:36:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-government-formation-congress-changes-the-route-rahul-gandhi-takes-a-bold-decision-for-vijay-77346.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை எட்ட இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில், 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/rahul-gandhi-and-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;ரூட்டை மாற்றும் காங்கிரஸ்&#8221;.. விஜய்க்காக ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு!!" /></figure>தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் தற்போது உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக டெல்லியில் இருந்து காங்கிரஸ் மேலிடம் முக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று முதலில் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியது காங்கிரஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு, தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரஸின் ஈடுபாடு அதிகரித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/video-released-by-tvk-is-fake-it-may-have-been-generated-using-ai-ttv-dhinakaran-alleges-77339.html">“தவெக வெளியிட்ட வீடியோ போலியானது”.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்”.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!</a></strong></p>

<h3>ராகுல் காந்தியின் 'டி பிளான்':</h3>
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், ஆளுநர் ஆர்லேகர் இதுவரை ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக ராகுல் காந்தி நேரடியாகத் தலையிட்டுள்ளதாகவும், தவெகவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஆளுநர் தொடர்ந்து அழைப்பு விடுக்கத் தாமதப்படுத்தினால், அடுத்தகட்டமாக இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடவும் காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
<h3>விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு:</h3>
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை எட்ட இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில், 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

நேற்று இணைய வழியாகக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய திருமாவளவன், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்த தனது இறுதி முடிவை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.
<h3>தவெக ஆதரவு நிலவரம்:</h3>
ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் (கம்யூனிஸ்டுகள்) தலா 2 தொகுதிகள் என மொத்தம் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் நிபந்தனையற்ற ஆதரவைத் தவெகவுக்கு வழங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விசிகவின் முடிவு ஆட்சியமைப்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpm-and-cpi-say-no-alliance-with-tvk-extend-outside-support-only-for-government-formation-77205.html">தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்</a></strong>

கடந்த சில நாட்களில் மூன்று முறை ஆளுநரைச் சந்தித்துள்ள விஜய், நேற்று நேரில் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஆளுநர் மாளிகையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் திருமாவளவனின் அறிவிப்புக்காகத் தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு.. ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/suvendu-adhikari-takes-oath-as-bjps-first-bengal-chief-minister-77344.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 13:02:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/suvendu-adhikari-takes-oath-as-bjps-first-bengal-chief-minister-77344.html</guid>
		            
			

    	<description><![CDATA[294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றி, திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. சுவேந்து அதிகாரியின் தொடக்கக் கால அமைச்சரவையில் பாஜகவின் முக்கிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்தத் தேர்வு அமைந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/suvendhu-aadhikari.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு.. ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்!" /></figure>கம்யூனிஸ்டுகளின் பிடியில் இருந்து மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால அதிரடி அரசியல் வரை, பல போராட்டங்களைக் கண்ட மேற்கு வங்க தேர்தல் வரலாற்றில், முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இன்று அக்கட்சியின் தலைவர் சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். தன் வாழ்நாள் முழுவதும், அல்லது குறைந்தபட்சம் தனது அரசியல் வாழ்க்கையிலாவது இந்த ஒரு நாளுக்காகத்தான் சுவேந்து அதிகாரி காத்திருந்திருப்பார். ஒரு காலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக சுவேந்து அதிகாரி பணியாற்றினார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/bjps-historic-beginning-west-bengals-new-chief-minister-who-is-this-suvendu-adhikari-77323.html">பாஜகவின் வரலாற்றுத் தொடக்கம்.. மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுவேந்து அதிகாரி?</a></strong></p>

<h3>முதல்வர் நாற்காலியில் சுவேந்து அதிகாரி:</h3>
காலச்சக்கரம் சுழன்றதில், இன்று தான் யாருக்கு உதவியாளராக இருந்தாரோ, அதே நபர் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் இன்று சுவேந்து அதிகாரி அமர்ந்துள்ளார். வங்காள அரசியலில் சுவேந்து அதிகாரியின் இந்த வளர்ச்சி ஒரு சினிமா பாணியிலான திருப்பங்களைக் கொண்டது. தோற்கடிக்கப்பட்ட ஒரு முதலமைச்சரின் உதவியாளர், திரிணாமுல் காங்கிரஸின் மூத்த வழிகாட்டி, நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் வாக்காளர்களின் நாயகன் எனப் பல முகங்களைக் கொண்டவர் அவர். நீதிக்காகத் திரும்பி வந்த ஒரு ரோமானிய தளபதியைப் போல அவரது அரசியல் எழுச்சி அமைந்துள்ளது.
<h3>பாஜகவின் கனவு நனவான நாள்:</h3>
இன்று சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட வெற்றி நாள் மட்டுமல்ல, பாஜக நீண்ட காலக் கனவு நனவான நாளுமாகும். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டது, வங்காளத்தின் அரசியல் விதியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது. ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளான இன்று, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் உளவுத்துறை அதிகாரியும், தற்போதைய ஆளுநருமான ஆர்.என்.ரவி, சுவேந்து அதிகாரிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பதவியேற்பு பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
<h3>15 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு:</h3>
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றி, திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. சுவேந்து அதிகாரியின் தொடக்கக் கால அமைச்சரவையில் பாஜகவின் முக்கிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்தத் தேர்வு அமைந்துள்ளது. திலீப் கோஷ்: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (OBC) சேர்ந்தவர்; 2014-க்குப் பிறகு பாஜகவின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தியவர். அக்னிமித்ரா பால் காயஸ்த் (Kayast) சமூகத்தைச் சேர்ந்தவர்; 2019-ல் இணைந்ததிலிருந்து பாஜகவின் முக்கியப் பெண் ஆளுமையாகத் திகழ்கிறார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/once-again-a-support-from-outside-political-strategy-what-is-the-past-history-of-the-communists-77320.html">மறுபடியும் ஒரு ‘வெளியிலிருந்து ஆதரவு’ அரசியல்.. இடதுசாரிகளின் கடந்த கால வரலாறு என்ன?</a></strong>

அசோக் கிர்தானியா: தெற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான 'மத்துவா' (Matua) சமூகத்தின் பிரதிநிதி/ க்ஷுதிராம் துடு: பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ராணிபந்த் தொகுதியின் பிரதிநிதி; மேற்கு வங்கத்தின் பழங்குடி மக்களிடையே பாஜகவை கொண்டு சென்றவர். நிசித் பிரமானிக்: ராஜ்வன்ஷி (Rajbonshi) சமூகத்தைச் சேர்ந்தவர்; இளைஞர்களிடையே பெரும் செல்வாக்கு கொண்டவர்.

வங்காளத்தின் அரசியல் பாதையை மாற்றியமைத்துள்ள இந்த புதிய அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறது என்பதை இனி வரும் காலம் சொல்லும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;தவெக வெளியிட்ட வீடியோ போலியானது&#8221;.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்&#8221;.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/video-released-by-tvk-is-fake-it-may-have-been-generated-using-ai-ttv-dhinakaran-alleges-77339.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 12:36:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/video-released-by-tvk-is-fake-it-may-have-been-generated-using-ai-ttv-dhinakaran-alleges-77339.html</guid>
		            
			

    	<description><![CDATA[தவெகவினர் வெளியிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் கிளப்பிய தினகரன், "திமிரிலும் வன்மத்துடனும் தவெகவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறி அவர்கள் வெளியிட்ட வீடியோ, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கூட இருக்கலாம்" என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ttv-dhinakaran-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;தவெக வெளியிட்ட வீடியோ போலியானது&#8221;.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்&#8221;.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!" /></figure>அமமுக எம்எல்ஏ காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறி <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-releases-video-of-ammk-mla-kamaraj-signing-letter-in-favour-of-tvk-goes-viral-after-ttvk-dinakaran-allegations-77298.html" target="_blank" rel="noopener">தவெக வெளியிட்ட வீடியோ</a>, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கூட இருக்கலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, நேற்று மாலை ஆளுநர் அர்லேகரை சந்தித்த டிடிவி தினகரன் அதிரடி புகார் ஒன்றை அளித்தார். அதில், மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தவெக தரப்பில் ஆளுநருக்கு போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ராவணன் சீதையைத் தூக்கியது போல, தவெக மோசடி வேலையில் ஈடுபட்டு எங்கள் எம்எல்ஏவைக் கடத்தப் பார்க்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-releases-video-of-ammk-mla-kamaraj-signing-letter-in-favour-of-tvk-goes-viral-after-ttvk-dinakaran-allegations-77298.html">உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.. அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட த.வெ.க..</a></strong>
<h3>நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் பரபரப்பு:</h3>
காமராஜ் அதிமுகவை ஆதரிக்கவே கடிதம் கொடுத்துள்ளார். தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தில் உள்ளது அவரது கையெழுத்தே அல்ல. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தினகரன் குற்றம் சாட்டினார். அதோடு, தனது எம்எல்ஏவை காணவில்லை எனவும் ஆளுநரிடம் புகார் அளித்தார். இதனிடையே, மாயமான காமராஜ் நள்ளிரவில் திடீரென ஆளுநர் இல்லம் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து, டிடிவி தினகரனும் ஆளுநர் இல்லம் வருகை தந்தார். இருவரும் ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தனர்.
<h3>தவெக வெளியிட்ட வீடியோ:</h3>
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரிடம் தவெக கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது என்றார். அமமுக ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர். ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை. அதோடு, ஒரேயொரு எம்எல்ஏ எங்களிடம் உள்ளார். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தவெக தரப்பில் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர். ஏற்கெனவே, குதிரைப் பேரம் நடந்ததாக டிடிவி தினகரன் கூறிய நிலையில், தவெக தரப்பே வீடியோவை வெளியிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
<h3>குதிரை பேரப் புகார்:</h3>
இந்நிலையில், சென்னை அடையாறில் இன்று காலை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தவெக தலைவர் விஜய் மீதும் அக்கட்சியினர் மீதும் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார். சர்ச்சை வீடியோ குறித்து பேசிய அவர், "காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் அசல் கடிதம் எங்கே? காரில் அமர்ந்து கையெழுத்திட்டது போன்ற வீடியோவை எடுத்தது யார்?" எனக் கேள்வி எழுப்பினார்.
<h3>AI தொழில்நுட்பம் குறித்த சந்தேகம்:</h3>
தவெகவினர் வெளியிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் கிளப்பிய தினகரன், "திமிரிலும் வன்மத்துடனும் தவெகவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறி அவர்கள் வெளியிட்ட வீடியோ, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கூட இருக்கலாம்" என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpm-and-cpi-say-no-alliance-with-tvk-extend-outside-support-only-for-government-formation-77205.html">தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்</a></strong>
<h3>விஜய் மீது கடும் விமர்சனம்:</h3>
தமிழக வெற்றிக் கழகம் தங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகக் குறிப்பிட்ட அவர், "விஜய் 108 தொகுதிகளில் வென்றிருந்தால் எனக்கு என்ன? அவர் எனக்கு மாமனா, மச்சானா? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? விஜய் பெரிய ஹீரோவாக இருக்கலாம், ஆனால் முதல்வர் ஆவதற்காக இது போன்ற மோசடிகளில் ஈடுபடக் கூடாது" என்று காரசாரமாகப் பேசினார். எம்எல்ஏ உண்மையில் ஆதரவு அளித்திருந்தால், அவரை ஏன் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லவில்லை? எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாகப் பொய் பரப்புவது ஏன்? இந்த விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பாஜகவின் வரலாற்றுத் தொடக்கம்.. மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுவேந்து அதிகாரி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/bjps-historic-beginning-west-bengals-new-chief-minister-who-is-this-suvendu-adhikari-77323.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 11:27:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/bjps-historic-beginning-west-bengals-new-chief-minister-who-is-this-suvendu-adhikari-77323.html</guid>
		            
			

    	<description><![CDATA[சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பதவியேற்பதன் மூலம் இரண்டு முக்கிய வரலாற்றுச் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒன்று, மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராகும் முதல் நபர் இவராவார். மற்றொன்று, கடந்த 55 ஆண்டுகளில், கொல்கத்தாவைச் சாராமல் மாவட்டப் பின்னணியில் இருந்து மாநில நிர்வாகத்தை வழிநடத்தும் முதல் முதலமைச்சர் இவராவார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/suvendhu-adhikari.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பாஜகவின் வரலாற்றுத் தொடக்கம்.. மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுவேந்து அதிகாரி?" /></figure>மேற்குவங்க அரசியலில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து, பின்னாளில் அவருக்கே சவாலாக உருவெடுத்த சுவேந்து அதிகாரி, தற்போது அம்மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். 55 வயதான சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சிசிர் அதிகாரி முன்னாள் மத்திய அமைச்சராகப் பணியாற்றியவர். சுவேந்து தனது அரசியல் பயணத்தை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான 'சத்ர பரிஷத்' மூலம் தொடங்கினார். இடதுசாரிக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்தில், மாவட்ட அளவில் ஒரு வலுவான இளைஞர் தலைவராக அவர் உருவெடுத்தார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/once-again-a-support-from-outside-political-strategy-what-is-the-past-history-of-the-communists-77320.html">மறுபடியும் ஒரு ‘வெளியிலிருந்து ஆதரவு’ அரசியல்.. இடதுசாரிகளின் கடந்த கால வரலாறு என்ன?</a></strong></p>

<h3>மம்தாவின் நம்பிக்கைக்குரிய தளபதி:</h3>
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு, மம்தா பானர்ஜியின் மிக நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய அரசியல் உதவியாளராகச் செயல்பட்டார். குறிப்பாக 2007-ல் நந்திகிராம் பகுதியில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை முன்னின்று நடத்தியதில் சுவேந்துவின் பங்கு அளப்பரியது. திரிணாமுல் கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். மம்தா அமைச்சரவையில் முக்கியத் துறைகளைக் கையாண்ட இவர், சிறந்த நிர்வாகியாகவும் அறியப்பட்டார்.
<h3>பாஜகவில் இணைவு மற்றும் வளர்ச்சி:</h3>
திரிணாமுல் காங்கிரஸில் நிலவிய சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, சுவேந்து அதிகாரி அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவின் மிக வலுவான எதிர்ப்பாளராக உருவெடுத்த இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவையே நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
<h3>ஒரு வரலாற்று சாதனை:</h3>
சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பதவியேற்பதன் மூலம் இரண்டு முக்கிய வரலாற்றுச் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒன்று, மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராகும் முதல் நபர் இவராவார். மற்றொன்று, கடந்த 55 ஆண்டுகளில், கொல்கத்தாவைச் சாராமல் மாவட்டப் பின்னணியில் இருந்து மாநில நிர்வாகத்தை வழிநடத்தும் முதல் முதலமைச்சர் இவராவார். இதற்கு முன் 1971-ல் அஜய் முகர்ஜி இத்தகைய பின்னணியைக் கொண்டிருந்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/communist-party-of-india-marxist-party-extends-support-to-vijays-tvk-77174.html">தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு – மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை எவ்வளவு?</a></strong>
<h3>அமித் ஷாவின் பாராட்டு:</h3>
சுவேந்து அதிகாரி ஒரு சிறந்த "போராளி" என்றும், நிர்வாகத் திறமை மிக்கவர் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழ்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக பெற்றுள்ள 207 இடங்கள் என்ற வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரியின் தலைமையில் மாநிலம் நிலையான மற்றும் வளர்ச்சியை நோக்கிய ஆட்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, "பயம் விலகிவிட்டது, நம்பிக்கை பிறந்துவிட்டது" என்ற முழக்கத்துடன் மேற்கு வங்கத்தின் 9-வது முதலமைச்சராக அவர் அரியணை ஏறுகிறார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்க நினைத்தாலும், நாங்களே மைய்யம் &#8211; வன்னியரசு பதிவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/vck-mla-vanni-arasu-has-posted-in-x-hinting-support-to-tvk-party-77327.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 10:50:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/vck-mla-vanni-arasu-has-posted-in-x-hinting-support-to-tvk-party-77327.html</guid>
		            
			

    	<description><![CDATA[விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான Vanniarasu நேற்று முதல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். நேற்றைய தினம் தனது முகநூல் பக்கத்தில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு; இது திருமாவின் காலம், இனி உயர்வும் மேலும் மேலும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vanni.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்க நினைத்தாலும், நாங்களே மைய்யம் &#8211; வன்னியரசு பதிவு.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:82bd9c4b-4ecf-4d73-a9bc-53e8a556f057-5" data-testid="conversation-turn-12" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="979c5589-0e86-47eb-b2a9-a82363d0b367" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="166"><strong>மே 9, 2026:</strong> தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவது குறித்து இன்று காலை அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த சூழலில், <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">வன்னியரசு</span></span>, “எம்மை ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்க நினைத்தாலும், நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம்” என குறிப்பிட்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில், இந்த பதிவு சூசகமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது.</p>
<p data-start="436" data-end="782">நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், தற்போது வரை ஆட்சி அமைக்க முடியாத சூழல் நீடித்து வருகிறது. ஆளுநரை மூன்று முறை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்தித்திருந்தாலும், தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை.</p>

<h3 data-start="436" data-end="782">தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்குமா?</h3>
<p data-start="784" data-end="1062">ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றி கழகத்துடன் தற்போது வரை 116 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றவுடன், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தது.</p>
<p data-start="1064" data-end="1479">இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்திருந்தன. குறிப்பாக, “திமுக கூட்டணியில்தான் இருப்போம்; ஆனால் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>

<h3 data-start="1064" data-end="1479">திருமா சொல்லப்போகும் முடிவு என்ன?</h3>
<p data-start="1481" data-end="1663">இந்த சூழலில், மீதமுள்ள இரண்டு இடங்கள் தேவைப்படும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆவல் நிலவி வருகிறது.</p>
<p data-start="1481" data-end="1663">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/amid-rising-political-tension-admk-mla-meeting-is-conducted-in-chennai-regarding-next-phase-of-actions-77317.html">ஒரு பக்கம் த.வெ.க.. மற்றொரு பக்கம் அதிமுக.. இன்று சென்னையில் நடக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..</a></p>
<p data-start="1665" data-end="1879">இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.</p>
<p data-start="1881" data-end="2341">இதற்கு முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">Vanniarasu</span></span> நேற்று முதல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். நேற்றைய தினம் தனது முகநூல் பக்கத்தில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு; இது திருமாவின் காலம், இனி உயர்வும் மேலும் மேலும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>

<h3 data-start="1881" data-end="2341">நாங்களே மைய்யம் - வன்னியரசு:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta">எம்மை-
ஓரங்கட்ட நினைத்தாலும்
ஒதுக்க நினைத்தாலும்
நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம்!<a href="https://twitter.com/hashtag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#எழுச்சித்தமிழர்</a> <a href="https://t.co/N0DOf0UR13">pic.twitter.com/N0DOf0UR13</a></p>
— வன்னி அரசு (@VanniTamizhVCK) <a href="https://twitter.com/VanniTamizhVCK/status/2052941171098554729?ref_src=twsrc%5Etfw">May 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<p data-start="2343" data-end="2760" data-is-last-node="" data-is-only-node="">இந்த சூழலில், மீண்டும் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “எம்மை ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்க நினைத்தாலும், நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம்” என குறிப்பிட்டுள்ளார். இது, தமிழக வெற்றி கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தற்போது வரை கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மறுபடியும் ஒரு &#8216;வெளியிலிருந்து ஆதரவு&#8217; அரசியல்.. இடதுசாரிகளின் கடந்த கால வரலாறு என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/once-again-a-support-from-outside-political-strategy-what-is-the-past-history-of-the-communists-77320.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 08:47:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/once-again-a-support-from-outside-political-strategy-what-is-the-past-history-of-the-communists-77320.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழகத்திலும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக அரசுக்கு காங்கிரஸ், பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம் போன்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. தற்போது தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், ‘தொங்கு சட்டமன்றம்’ அமைந்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vijay-met-communists.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மறுபடியும் ஒரு &#8216;வெளியிலிருந்து ஆதரவு&#8217; அரசியல்.. இடதுசாரிகளின் கடந்த கால வரலாறு என்ன?" /></figure>சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், காங்கிரஸ் முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்ட தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. தொடர்ந்து, நேற்றைய தினம் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தவெகவுக்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. கூட்டணி எதுவும் கிடையாது, வெளியே இருந்து மட்டும் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. இத்தகைய அரசியல் நகர்வின் வரலாற்று பின்னணியையும், இடதுசாரிகள் இத்தகைய ஆதரவின் மூலம் சாதித்த முக்கிய மாற்றங்களையும் இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/communist-party-of-india-marxist-party-extends-support-to-vijays-tvk-77174.html">தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு – மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை எவ்வளவு?</a></strong>
<h3>1996 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்:</h3>
1996 நாடாளுமன்றத் தேர்தலில் 32 இடங்களைப் பெற்றிருந்த CPM கட்சிக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், அக்கட்சியின் மத்திய குழு அந்த வாய்ப்பை நிராகரித்து, ஐக்கிய முன்னணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. அதே சமயம், CPI கட்சி அந்த கூட்டணியில் இணைந்து, அக்கட்சியின் மூத்தத் தலைவர் இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
<h3>2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு:</h3>
2004 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தனர். இந்த ஆதரவின் நிபந்தனையாக, ‘குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டம்’ உருவாக்கப்பட்டு, அது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான சட்டங்களை அறியலாம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்): ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம்: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர இந்தச் சட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. வன உரிமைச் சட்டம்: பழங்குடியின மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/what-the-congress-did-to-the-dmk-was-an-act-of-betrayal-vanathi-srinivasan-lashes-out-77143.html">“திமுகவுக்கு காங்கிரஸ் செய்தது துரோகம்”.. திடீரென கொந்தளித்த வானதி சீனிவாசன்!!</a></strong>
<h3>தமிழக அரசியலில் இடதுசாரிகள்:</h3>
தமிழகத்திலும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக அரசுக்கு காங்கிரஸ், பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம் போன்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. தற்போது தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், ‘தொங்கு சட்டமன்றம்’ அமைந்தது. இந்தச் சூழலில், தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க, இடதுசாரி கட்சிகள் மீண்டும் ஒருமுறை வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

இவ்வாறு, இடதுசாரிகள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதும், மக்கள் நலன் சார்ந்த சட்டங்களைக் கொண்டு வருவதில் மிக முக்கியமான பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>த.வெ.க ஆட்சி அமைக்க தேவைப்படும் 2 இடங்கள்.. திருமாவளவன் எடுக்கப்போகும் முடிவு என்ன? இன்று அறிவிப்பு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/vck-leader-thiruma-will-announce-vck-party-decision-regarding-the-support-to-tvk-by-today-77313.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 07:43:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/vck-leader-thiruma-will-announce-vck-party-decision-regarding-the-support-to-tvk-by-today-77313.html</guid>
		            
			

    	<description><![CDATA[முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு 112 ஆக உயர்ந்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/thol.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="த.வெ.க ஆட்சி அமைக்க தேவைப்படும் 2 இடங்கள்.. திருமாவளவன் எடுக்கப்போகும் முடிவு என்ன? இன்று அறிவிப்பு.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:82bd9c4b-4ecf-4d73-a9bc-53e8a556f057-3" data-testid="conversation-turn-8" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="057a0a77-4617-43ed-9733-05583a413feb" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="252"><strong>மே 9, 2026:</strong> நடந்து முடிந்த <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election">சட்டப்பேரவைத்</a> தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில், தமிழகத்தில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 118 இடங்கள் தேவை. ஏற்கனவே இது தொடர்பாக மூன்று முறை தமிழக ஆளுநரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்தித்து, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரியுள்ளார். ஆனால், தற்போது வரை பெரும்பான்மை இல்லாததன் காரணமாக ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="0" data-end="252">தவெகவிற்கு ஆதரவாக இடதுசாரிகள்:</h3>
<p data-start="511" data-end="682">இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்திற்கு தற்போது வரை 116 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு உறுப்பினர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p data-start="684" data-end="1032">முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு 112 ஆக உயர்ந்தது.</p>
<p data-start="684" data-end="1032">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-releases-video-of-ammk-mla-kamaraj-signing-letter-in-favour-of-tvk-goes-viral-after-ttvk-dinakaran-allegations-77298.html">உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.. அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட த.வெ.க..</a></p>
<p data-start="1034" data-end="1400">அதனைத் தொடர்ந்து, இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்திருந்தன. எனவே, தற்போது வரை தமிழக வெற்றி கழகத்திற்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், இதை தீர்மானிக்கப் போகும் முக்கிய காரணியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது.</p>

<h3 data-start="1034" data-end="1400">திருமாவளவன் எடுக்கப்போகும் முடிவு என்ன?</h3>
<p data-start="1402" data-end="1791">விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்றைய தினம் நல்வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு; இனி நம்ம காலம்தான்” என குறிப்பிட்டிருந்தார்.</p>
<p data-start="1793" data-end="2123">இதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரும் என கூறப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை திருமாவளவன் திடீரென நேரில் சந்தித்தார். மேலும், கூட்டணி அமைப்பது தொடர்பாக அல்லது ஆதரவு தருவது தொடர்பாக இன்று காலை அறிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.</p>
<p data-start="2125" data-end="2289" data-is-last-node="" data-is-only-node="">எனவே, திருமாவளவன்  அறிவிக்கப் போகும் அந்த முடிவில்தான் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்குமா அல்லது அமைக்காதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>5வது முறையாக முதலமைச்சராகும் ரங்கசாமி.. மே 13ல் பதவியேற்பு.. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/puducherry-rangasamy-set-to-become-cm-for-the-5th-time-swearing-in-on-may-13-letter-sent-to-governor-77312.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 07:42:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/puducherry-rangasamy-set-to-become-cm-for-the-5th-time-swearing-in-on-may-13-letter-sent-to-governor-77312.html</guid>
		            
			

    	<description><![CDATA[Puducherry Rangasamy Set to Become CM for the 5th Time: இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதற்கான முன்னோட்டமாக, முதலமைச்சர் ரங்கசாமி தனது முந்தைய பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ரங்கசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/rangasamy-puducherry.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="5வது முறையாக முதலமைச்சராகும் ரங்கசாமி.. மே 13ல் பதவியேற்பு.. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம்!!" /></figure>புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 16வது சட்டசபையை அமைப்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜனநாயகக் கடமையான தேர்தல் முடிவடைந்த நிலையில், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), மக்கள் செல்வாக்குடன் மீண்டும் அரியணை ஏறத் தயாராகி வருகிறது. புதுச்சேரியின் மொத்தமுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில், ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்தபட்ச இடங்களின் எண்ணிக்கை 16 ஆகும். நடந்து முடிந்த தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அபார வெற்றி பெற்றுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpm-and-cpi-say-no-alliance-with-tvk-extend-outside-support-only-for-government-formation-77205.html">தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்</a></strong>
<h3>பதவியை பங்கிடுவதில் குழப்பம்:</h3>
இதில், என்.ஆர்.காங்கிரஸ் - 12 தொகுதிகள், பாஜக - 4 தொகுதிகள், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதி வெற்றி பெற்றன. மொத்தம் 18 இடங்களைப் பெற்றுள்ள இந்தக் கூட்டணி, ஆட்சியமைக்கத் தேவையான 16 இடங்களை விட கூடுதல் பலத்துடன் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் மீண்டும் ஒரு நிலையான ஆட்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சர் பதவியை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பாஜக மேலிட பொறுப்பாளர்கள் புதுவை வந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச திட்டமிட்டனர். ஆனால் ரங்கசாமி நேரம் ஒதுக்கி கொடுக்காததால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை.
<h3>ஆட்சியமைப்பதற்கான நகர்வுகள்:</h3>
இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதற்கான முன்னோட்டமாக, முதலமைச்சர் ரங்கசாமி தனது முந்தைய பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ரங்கசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ரங்கசாமி, 18 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் உடனிருந்து தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதன் மூலம் ரங்கசாமி புதுச்சேரியில் (2001, 2006, 2011, 2021) 5வது முறையாக பதவியேற்க உள்ளார்.
<h3>பதவியேற்பு விழாவும் எதிர்பார்ப்புகளும்:</h3>
வரும் மே 13ம் தேதி புதன்கிழமை, புதுச்சேரியின் முதலமைச்சராக ரங்கசாமி மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான விழா ஏற்பாடுகள் தற்போது ஆளுநர் மாளிகை மற்றும் பொது இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான அமைச்சர் பதவி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடக்கத்தில் சற்று இழுபறியாக இருந்தாலும், தற்போது சுமூகமான முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. சபாநாயகர் பதவி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு பதவியேற்புக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவு மற்றும் புதிய ஆட்சியின் உதயம், புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் புதிய வேகத்தைத் தரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மாநில அந்தஸ்து மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற முக்கிய கோரிக்கைகளில் இந்தக் கூட்டணி அரசு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mk-stalin-urges-governor-to-immediately-begin-process-for-forming-new-government-77212.html"> காலத்தின் கட்டாயம் – தவெகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.. அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட த.வெ.க..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-releases-video-of-ammk-mla-kamaraj-signing-letter-in-favour-of-tvk-goes-viral-after-ttvk-dinakaran-allegations-77298.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 07:02:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-releases-video-of-ammk-mla-kamaraj-signing-letter-in-favour-of-tvk-goes-viral-after-ttvk-dinakaran-allegations-77298.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக வெற்றி கழகத்திற்கு போலி கடிதம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்எல்ஏ காமராஜ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்து கையெழுத்திடும் வீடியோவை தமிழக வெற்றி கழகம் வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாக பரவி வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ammk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.. அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட த.வெ.க.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:82bd9c4b-4ecf-4d73-a9bc-53e8a556f057-2" data-testid="conversation-turn-6" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="0d2d2877-ec7e-4eb9-b66d-61f9f8818d84" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="395"><strong>மே 9, 2026:</strong> தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்து வருகிறது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மூன்று முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், தற்போது வரை ஆளுநர் தரப்பில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை.</p>

<h3 data-start="0" data-end="395">இடதுசாரிகளிடம் ஆதரவு கோரிய தவெக:</h3>
<p data-start="397" data-end="803">இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே காங்கிரஸ் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைந்திருக்கக்கூடிய சூழலில், மேலும் ஆதரவளிக்க இடதுசாரி கட்சிகள் முன்வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளன. ஆனால், கூட்டணியில் இல்லை என்றும், திமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.</p>
<p data-start="805" data-end="1121">இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றிருக்கும் இரண்டு இடங்கள் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தால், 118 என்ற மெஜாரிட்டி கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விஜயால் ஆட்சி அமைக்க முடியும்.</p>

<h3 data-start="805" data-end="1121">குதிரை பேரம் பேசும் தவெக - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு:</h3>
<p data-start="1123" data-end="1512">இதற்கிடையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்த கடிதத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குறிப்பிட்டு ஆளுநர் மாளிகையில் புகார் அளித்தார். மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும் புகார் அளித்திருந்தார். அதோடு, எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்திருந்தார்.</p>
<p data-start="1514" data-end="1818">இவரைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை விரைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கடிதம் வழங்கவில்லை என்றும் கூறினார். தன் பெயரில் போலி கடிதம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>

<h3 data-start="1514" data-end="1818">ஆதாரத்தை வெளியிட்ட தவெக:</h3>
<p data-start="1820" data-end="2123">இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்திற்கு போலி கடிதம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்எல்ஏ காமராஜ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்து கையெழுத்திடும் வீடியோவை தமிழக வெற்றி கழகம் வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாக பரவி வருகிறது.</p>
<p data-start="2125" data-end="2414">அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்களின் ஒப்புதலுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கடிதத்தை எழுதவில்லை என்று தகவல் பரவி வருகிறது. இது உண்மைக்கு புறம்பானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.</p>
<p data-start="2416" data-end="2699" data-is-last-node="" data-is-only-node="">இவை அனைத்தையும் மறைத்துவிட்டு டிடிவி தினகரன் தவறான செய்திகளையும் தகவல்களையும் தெரிவித்து வருகிறார். தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவை இல்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழக வெற்றி கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்.. நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் நடந்த உச்சகட்ட பரபரப்பு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-government-formation-ammk-dhinakaran-refutes-partys-support-to-tvk-meets-media-at-lok-bhavan-in-midnight-77308.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 06:56:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-government-formation-ammk-dhinakaran-refutes-partys-support-to-tvk-meets-media-at-lok-bhavan-in-midnight-77308.html</guid>
		            
			

    	<description><![CDATA[அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆளுநரைச் சந்தித்து அதிரடி புகார் ஒன்றை அளித்தார். அதில், மன்னார்குடி அ.ம.மு.க எம்.எல்.ஏ எஸ். காமராஜின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தவெக தரப்பில் ஆளுநருக்கு போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தவெக மோசடி வேலையில் ஈடுபட்டு எங்கள் எம்.எல்.ஏ-வைக் கடத்தப் பார்ப்பதாக குற்றச்சாட்டு.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ttv-dhinakaran.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்.. நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் நடந்த உச்சகட்ட பரபரப்பு.." /></figure>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், காங்கிரஸ் முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு, தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. தொடர்ந்து, நேற்றைய தினம் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தவெகவுக்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. தவெகவுடன் கூட்டணி எதுவும் கிடையாது, வெளியே இருந்து மட்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளன. இதனிடையே, விசிகவும் ஆதரவு தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/mk-stalin-urges-governor-to-immediately-begin-process-for-forming-new-government-77212.html"> காலத்தின் கட்டாயம் – தவெகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்</a></strong>
<h3>மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்:</h3>
இந்நிலையில், நேற்று மாலை தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகாரை சந்தித்து ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரினார். அப்போது தனக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் ஆதரவு உள்ளதாகவும் ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளார். அதில், காங்கிரஸ் - 5, மா.கம்யூ., - 2, இந்திய கம்யூ., - 2, விசிக -2, ஐயூஎம்எல் - 1, அமமுக -1 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் விஜய் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டதால், அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் ஐயூஎம்எல் கட்சி தரப்பில் தாங்கம் தவெகவுக்கு எந்த ஆதரவும் வழங்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, விசிகவும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.
<h3>ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்:</h3>
இதனிடையே, ஆளுநரும் முறையாக அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், மேலும் பரபரப்பு அதிகரித்து வந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆளுநரைச் சந்தித்து அதிரடி புகார் ஒன்றை அளித்தார். அதில், மன்னார்குடி அ.ம.மு.க எம்.எல்.ஏ எஸ். காமராஜின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தவெக தரப்பில் ஆளுநருக்கு போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ராவணன் சீதையைத் தூக்கியது போல, தவெக மோசடி வேலையில் ஈடுபட்டு எங்கள் எம்.எல்.ஏ-வைக் கடத்தப் பார்க்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.
<h3>அமமுக எம்எல்ஏ-வை காணவில்லை:</h3>
காமராஜ் அ.தி.மு.க-வை (எடப்பாடி பழனிசாமி தரப்பு) ஆதரிக்கவே கடிதம் கொடுத்துள்ளார். த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தில் உள்ளது அவரது கையெழுத்தே அல்ல. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தினகரன் குற்றம் சாட்டினார். அதோடு, தனது எம்எல்ஏவை காணவில்லை எனவும் ஆளுநரிடம் புகார் அளித்தார். உடனே காணாமல்போன அமமுக எம்எல்ஏவை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவரது செல்போன் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டதாக டிடிவி தினகரன் பரபரப்பை கிளப்பினார். இந்த பரபரப்பு சம்பவங்கள் நடக்கும்போதே இரவு 9 மணியை கடந்துவிட்டது.
<h3>நள்ளிரவில் ஆளுநர் மாளிகை வந்த அமமுக எம்எல்ஏ:</h3>
இந்நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆளுநர் இல்லம் வருகை தந்ததார். இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனும் நள்ளிரவில் ஆளுநரை மீண்டும் சந்தித்தார். இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர். ஆளுநரை சந்தித்தபின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cpm-and-cpi-say-no-alliance-with-tvk-extend-outside-support-only-for-government-formation-77205.html">தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்</a></strong>
<h3>காமராஜ் தவெகவுக்கு ஆதரவு தரவில்லை:</h3>
அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, ஆளுநரிடம் தவெக கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது என்றார். உங்களுக்கு 108 எம்எல்ஏக்களே உள்ளனர். அறுதி பெரும்பான்மையே இன்னும் இல்லை. நீங்கள் தூய சக்தி. தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள். ஆனால், ராவணன் சீதையை தூக்கியதுபோல், ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்எல்ஏவை தூக்க பார்த்துள்ளனர். அமமு.க. ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர். ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை. அதோடு, ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெகவுக்கு சிபிஐ, சிபிஎம் ஆதரவு.. தொண்டர்கள் கொண்டாட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/tvk-members-celebrates-outside-of-tvk-headquarters-in-chennai-after-receiving-support-from-cpi-and-cpm-77291.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 23:39:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/tvk-members-celebrates-outside-of-tvk-headquarters-in-chennai-after-receiving-support-from-cpi-and-cpm-77291.html</guid>
		            
														<description><![CDATA[தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க கூடுதல் இடங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tvk-celebration.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெகவுக்கு சிபிஐ, சிபிஎம் ஆதரவு.. தொண்டர்கள் கொண்டாட்டம்!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/tfAljkN9-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க கூடுதல் இடங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>&#8220;திமுகவுக்கு காங்கிரஸ் செய்தது துரோகம்&#8221;.. திடீரென கொந்தளித்த வானதி சீனிவாசன்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/what-the-congress-did-to-the-dmk-was-an-act-of-betrayal-vanathi-srinivasan-lashes-out-77143.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 14:09:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/what-the-congress-did-to-the-dmk-was-an-act-of-betrayal-vanathi-srinivasan-lashes-out-77143.html</guid>
		            
			

    	<description><![CDATA[திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துப் பேசிய அவர், "இவை அனைத்தும் ஊடகங்களில் உலவும் யூகங்களே. இது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதுவும் தெரியாது" என்று கூறினார். மேலும், இது போன்ற முக்கிய முடிவுகளைத் தேசியத் தலைமைதான் எடுக்கும் என்றார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vanathi-seenivasan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;திமுகவுக்கு காங்கிரஸ் செய்தது துரோகம்&#8221;.. திடீரென கொந்தளித்த வானதி சீனிவாசன்!!" /></figure>தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில தினங்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் தமிழக அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளும், அதற்கு எதிராகத் திராவிடக் கட்சிகள் முன்னெடுக்கும் வியூகங்களும் வியப்பை தருகின்றன. சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட இன்னும் அக்கட்சிக்கு 6 இடங்கள் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தற்போது தவெக பக்கம் சென்று, தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. காங்கிரஸ் இத்தேர்தலில் 5 இடங்களில் வென்றுள்ளது. தொடர்ந்து, விசிக, கம்யூனிஸ்டுகள் ஆதரவை எதிர்நோக்கி விஜய் காத்திருக்கிறார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/condition-imposed-by-the-dmk-on-the-aiadmk-is-a-historic-compromise-between-the-dmk-and-aiadmk-possible-77124.html">அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. ‘வரலாற்றுச் சமரசம்’ ஏற்பட வாய்ப்பு?</a></strong>
<h1 class="article-HD"><span style="font-size: 16px;">தவெக-வின் எழுச்சி மற்றும் மக்களின் தீர்ப்பு:</span></h1>
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இருந்த வாய்ப்புகளில், பெரும்பான்மையான மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன; நாங்களும் மக்களிடம் பேசி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
<h3>"திமுக-வுக்கு இழைக்கப்படும் துரோகம்":</h3>
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மறுவாழ்வு அளித்ததே திமுக தான் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது திமுக-வுக்குச் செய்யும் துரோகம் என்று விமர்சித்தார் . காங்கிரஸ் தற்போது அதிகாரத்திற்காகவும் பதவி சுகத்திற்காகவும் ஏங்கி இத்தகைய முடிவுகளை எடுப்பதாக அவர் சாடினார்.
<h3>ஆளுநரின் நடவடிக்கை குறித்து விளக்கம்:</h3>
ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த வானதி சீனிவாசன், "ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படுபவர். சட்டம் என்ன சொல்கிறதோ, என்ன அதிகாரம் இருக்கிறதோ அதைத்தான் அவர் பின்பற்ற முடியும்" என்றார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அதற்கு முன்னதாக ஆளுநர் கேட்கும் ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அந்தந்தக் கட்சியின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
<h3>திமுக - அதிமுக கூட்டணி யூகங்கள்:</h3>
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துப் பேசிய அவர், "இவை அனைத்தும் ஊடகங்களில் உலவும் யூகங்களே. இது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதுவும் தெரியாது" என்று கூறினார். மேலும், இது போன்ற முக்கிய முடிவுகளைத் தேசியத் தலைமைதான் எடுக்கும் என்றும், யூகங்களுக்குத் தன்னால் பதில் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
<h3>பாஜக-வின் எதிர்காலப் பணி:</h3>
அரசியல் வெற்றி தோல்விகளைப் பார்த்து பாஜக தனது செயல்பாடுகளைத் தீர்மானிப்பதில்லை என்றும், தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் மக்களுக்கான பணிகளைத் தடையின்றித் தொடர்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijay-faces-political-test-as-standoff-with-tn-governor-continues-what-options-lie-ahead-2-76955.html">தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?&#8221;.. விஜய் நேரில் வராதது ஏன்?.. தவெகவுக்கு விசிக சரமாரி கேள்வி!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/seeking-support-via-whatsapp-why-did-vijay-not-appear-in-person-vck-fires-a-barrage-of-questions-at-tvk-77135.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 13:42:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/seeking-support-via-whatsapp-why-did-vijay-not-appear-in-person-vck-fires-a-barrage-of-questions-at-tvk-77135.html</guid>
		            
			

    	<description><![CDATA[விஜய் தனது இரண்டாம் கட்டத் தலைவர்களின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் அவரை ஒரு 'இளவரசரைப் போல' முடக்கி வைத்துத் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். திமுகவை "மன்னராட்சி" என்று விமர்சித்துவிட்டு, ஐந்து தலைமுறை வாரிசு அரசியலைச் சுமக்கும் காங்கிரஸுடன் விஜய் கைகோர்த்திருப்பது மிகப் பெரிய நகைமுரண் என்று சிந்தனைச் செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/thiruma-vs-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?&#8221;.. விஜய் நேரில் வராதது ஏன்?.. தவெகவுக்கு விசிக சரமாரி கேள்வி!!" /></figure>தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அசாதாரண சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் எடுத்து வரும் நடவடிக்கைகள் அரசியல் முதிர்ச்சியின்றி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். "கொள்ளைப்புற வழியாகத் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியைத் திணிக்க பாஜக முயலும் வேளையில், தவெக-வின் செயல்பாடுகள் ஆபத்தானவை" என்று அவர் எச்சரித்துள்ளார். ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் மிகவும் கவனமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசாமல், 'வாட்ஸ்அப்' மூலம் ஆதரவு கடிதம் அனுப்பிவிட்டு பதில் கோருவது என்ன வகையான அரசியல் நாகரிகம்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/condition-imposed-by-the-dmk-on-the-aiadmk-is-a-historic-compromise-between-the-dmk-and-aiadmk-possible-77124.html">அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. ‘வரலாற்றுச் சமரசம்’ ஏற்பட வாய்ப்பு?</a></strong></p>

<h3>வாரிசு அரசியல் - நகைமுரண் பேச்சு:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழகத்தில் கொல்லைப்புறவழியாக கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சி. தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
_____________________________________
தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் <a href="https://twitter.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள்… <a href="https://t.co/MNABVodFiE">pic.twitter.com/MNABVodFiE</a></p>
— Sinthanai Selvan (@sinthanaivck) <a href="https://twitter.com/sinthanaivck/status/2052631432355586139?ref_src=twsrc%5Etfw">May 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதுகுறித்து அவரது எக்ஸ் பதவில், விஜய் தனது இரண்டாம் கட்டத் தலைவர்களின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் அவரை ஒரு 'இளவரசரைப் போல' முடக்கி வைத்துத் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். திமுகவை "மன்னராட்சி" என்று விமர்சித்துவிட்டு, ஐந்து தலைமுறை வாரிசு அரசியலைச் சுமக்கும் காங்கிரஸுடன் விஜய் கைகோர்த்திருப்பது மிகப் பெரிய நகைமுரண் என்று சிந்தனைச் செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திமுக தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இடதுசாரிகளையும், விசிக-வையும் எவ்விதத் தர்க்க நியாயமுமின்றி ஆதரவு கோரி அழைப்பது அரசியல் அறமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
<h3>ஆணவத்தின் உச்சமா கைது மிரட்டல்?</h3>
"ஆட்சிக்கு வந்த மறுநிமிடமே திமுக, அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தவெக தரப்பில் பிதற்றுவது ஆணவத்தின் உச்சம்" என்று குறிப்பிட்ட அவர், விசிக தொண்டர்களைத் தங்களின் 'ஸ்லீப்பர் செல்கள்' என்று தவெக-வினர் கூறுவது அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் புரிதலாலும் அன்பாலும் தனது சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைக்கத் தவறிய விஜய், தமிழ்நாட்டில் மீண்டும் 'ரிசார்ட் அரசியல்' கலாச்சாரத்தைக் கொண்டு வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் விமர்சித்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijay-faces-political-test-as-standoff-with-tn-governor-continues-what-options-lie-ahead-2-76955.html">தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?</a></strong>
<h3>மக்கள் முன் உள்ள சவால்:</h3>
ஜனநாயக நெறிமுறைகளை மீறி பாஜக ஆளுநர் ஆட்சியைத் திணிக்க முயன்று வரும் சூழலில், அந்த ஆபத்தை உணர்ந்து தமிழ்நாட்டைப் பாதுகாப்பதே மக்கள் முன் உள்ள தற்போதைய சவால் என்று சிந்தனைச் செல்வன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். விஜய் தனது ஆலோசகர்களின் தவறான அணுகுமுறையை உணர்ந்து, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே விசிக முன்வைக்கும் கருத்தாக உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் &#8211; காங்கிரஸ் தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/congress-holds-protest-against-governor-and-asked-to-call-tvk-for-formation-of-government-77123.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 13:18:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/congress-holds-protest-against-governor-and-asked-to-call-tvk-for-formation-of-government-77123.html</guid>
		            
			

    	<description><![CDATA[நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/congress-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் &#8211; காங்கிரஸ் தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:e2b800c2-747a-4ca7-a8b2-d5c886ad9afc-10" data-testid="conversation-turn-22" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="33f30d77-9065-4986-9060-830aa8b07fc5" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="156"><strong>மே 8, 2026:</strong> தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காங்கிரஸ் தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தற்போது வரை ஆட்சி அமைக்க ஆளுநர் தரப்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை.</p>
<p data-start="480" data-end="682">இரண்டு முறை நேரில் சந்தித்தும், ஆளுநர் தரப்பில் எந்த ஒரு பதிலும் இல்லை. இதைத் தொடர்ந்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைவரும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.</p>
<p data-start="480" data-end="682">மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/elections/edappadi-palaniswami-will-once-again-be-sworn-in-as-chief-minister-just-wait-and-see-thambidurai-sparks-a-sensation-77105.html"> “இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்”.. பொறுத்திருந்து பாருங்கள்.. பரபரப்பை கிளப்பிய தம்பிதுரை</a></p>

<h3 data-start="480" data-end="682">ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்:</h3>
<p data-start="684" data-end="938">இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழகத்துடன் புதிதாக கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>

<h3 data-start="684" data-end="938">ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும்:</h3>
<p data-start="940" data-end="1144">இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோலங்கி மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக்கழகத்தை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.</p>
<p data-start="940" data-end="1144">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/condition-imposed-by-the-dmk-on-the-aiadmk-is-a-historic-compromise-between-the-dmk-and-aiadmk-possible-77124.html">அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. ‘வரலாற்றுச் சமரசம்’ ஏற்பட வாய்ப்பு?</a></p>
<p data-start="1146" data-end="1493" data-is-last-node="" data-is-only-node="">நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.</p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. &#8216;வரலாற்றுச் சமரசம்&#8217; ஏற்பட வாய்ப்பு?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/condition-imposed-by-the-dmk-on-the-aiadmk-is-a-historic-compromise-between-the-dmk-and-aiadmk-possible-77124.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 13:06:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/condition-imposed-by-the-dmk-on-the-aiadmk-is-a-historic-compromise-between-the-dmk-and-aiadmk-possible-77124.html</guid>
		            
			

    	<description><![CDATA[இருப்பினும், வாக்காளர்களிடமிருந்து வரக்கூடிய கடுமையான எதிர்ப்பை இரு தரப்பும் உணர்ந்துள்ளன. விஜய் 35 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதும், இரு கட்சிகளின் தீவிரத் தொண்டர்களும் இந்த வினோதமான கூட்டணியை ஏற்கமாட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். முரணாக, இந்த இணைப்புக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகப் பலர் கருதுகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/eps-stalin-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. &#8216;வரலாற்றுச் சமரசம்&#8217; ஏற்பட வாய்ப்பு?" /></figure>தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறி, முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக மற்றும் அதிமுக இடையே ஒரு கூட்டணி உருவாவதற்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அதிமுக தனது முந்தைய கூட்டணிக் கட்சியான பாஜக உடனான உறவைத் துண்டித்தால் மட்டுமே எந்தவொரு பேச்சுவார்த்தையும் சாத்தியம் என்று திமுக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. அதன் பிறகே, அதிமுகவுக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) போன்ற சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் திமுக அதிமுகவுக்கு ஆதரவு வழங்க சம்மதித்ததாகவும் தெரிகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijay-faces-political-test-as-standoff-with-tn-governor-continues-what-options-lie-ahead-2-76955.html">தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?</a></strong>
<h3>திமுக பக்கம் விசிக?</h3>
விஜய்க்கு விசிக தனது இரண்டு இடங்களை வழங்குவதைத் தடுக்கும் நோக்கில் திமுக இந்தத் திட்டத்தை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் திட்டம் ஓரளவுக்குப் பலன் அளிப்பது போலவும் தெரிகிறது; நேற்று வரை விஜய்யின் பக்கம் சாய்ந்திருந்த விசிக தலைமை, தற்போது மீண்டும் திமுக முகாமிற்குத் திரும்பிவிட்டதாகவும், இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவற்றையும் சமாதானப்படுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் + இடதுசாரிகள் + விசிக என்ற ஃபார்முலா மூலம் 11 இடங்களைப் பெற்று, 118 என்ற பெரும்பான்மை இலக்கை நெருங்க விஜய் திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அணுகியிருந்தார்.
<h3>திமுகவை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ்:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்.</p>
ஒரே இரவில் ஒன்றானார்கள்.

தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த

விஜய்யை.

காங்கிரஸ் தெளிவாக பார்த்தது

வெளியேறியது.

RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல… <a href="https://t.co/3KZJNscFIr">https://t.co/3KZJNscFIr</a>

— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://twitter.com/manickamtagore/status/2052596288244633982?ref_src=twsrc%5Etfw">May 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

காங்கிரஸ் ஏற்கனவே தனது 5 இடங்களை விஜய்க்கு வழங்க உறுதி அளித்துவிட்டது. இதன் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில் மூன்று தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தந்த திமுக-வை எதிர்த்து காங்கிரஸ் இப்போது களம் காண்கிறது. விஜய்யின் வெற்றியை முன்கூட்டியே கணித்து, தேர்தலுக்கு முன்பே அவருடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய மாணிக்கம் தாகூர், இன்று காலை எக்ஸ் தளத்தில் காரமான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில், 'பாஜக-வின் B-டீம் அதிமுக-வுடன் கைகோர்த்ததன் மூலம் திமுக 'மதச்சார்பின்மைக்குத் துரோகம்' இழைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம்,இடதுசாரிகளும் திமுக-அதிமுக கூட்டணியை ஆதரிக்கவில்லை; அவர்கள் நடுநிலை வகிக்கவோ அல்லது விஜய்யுடன் கைகோர்க்கவோ விரும்புவதாகத் தெரிகிறது.
<h3>திமுக-அதிமுக 'கூட்டணி':</h3>
இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் ஒரே அச்சத்தால்தான் ஒன்று சேரத் துடிக்கின்றன - அதாவது விஜய்யின் எழுச்சி தங்கள் இருவரையும் வரும் காலங்களில் அதிகாரத்திலிருந்து விலக்கிவிடும் என்பதே அந்த பயம். திமுகவைப் பொறுத்தவரை, இது 1977-87 காலக்கட்டத்தை நினைவுபடுத்துகிறது. அப்போது எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, அவர் மறையும் வரை திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்திருந்தது. அதிமுக-வைப் பொறுத்தவரை, ஸ்டாலின் தலைமையிலான திமுக கடந்த பத்து ஆண்டுகளில் தங்களை வீழ்த்தி மூன்று முறை தொடர் வெற்றிகளைப் பெற்றதை ஒரு கவலையாகப் பார்க்கிறது.
<h3>மக்களின் எதிர்ப்பை உணர்ந்த கட்சிகள்:</h3>
இருப்பினும், வாக்காளர்களிடமிருந்து வரக்கூடிய கடுமையான எதிர்ப்பை இரு தரப்பும் உணர்ந்துள்ளன. விஜய் 35 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதும், இரு கட்சிகளின் தீவிரத் தொண்டர்களும் இந்த வினோதமான கூட்டணியை ஏற்கமாட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். முரணாக, இந்த இணைப்புக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதை எந்த விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தவெக மற்றும் ஆளுநர் அர்லேகருக்கு இடையிலான இழுபறிக்கும் பாஜக-வுக்கும் தொடர்பு இருப்பதாக ஊகங்கள் நிலவுகின்றன.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-arunraj-alleges-dmk-and-aiadmk-attempted-to-join-hands-to-form-government-77070.html">தவெகவுக்கு எதிராக “திமுக – அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி”.. புயலை கிளப்பிய அருண்ராஜ்..</a></strong>

ஆனால், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இதனை மறுத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது ஒரு பிளவுபட்ட தீர்ப்பு... தவெக-விடம் பெரும்பான்மை இல்லை. விஜய் பெரும்பான்மையை நிரூபித்தால், ஆளுநர் அரசியல் சாசனப்படி அதனை ஏற்பார். இதில் குழப்பம் எதுவும் இல்லை" என்று தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்&#8221;.. பொறுத்திருந்து பாருங்கள்.. பரபரப்பை கிளப்பிய தம்பிதுரை</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/edappadi-palaniswami-will-once-again-be-sworn-in-as-chief-minister-just-wait-and-see-thambidurai-sparks-a-sensation-77105.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 10:58:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/edappadi-palaniswami-will-once-again-be-sworn-in-as-chief-minister-just-wait-and-see-thambidurai-sparks-a-sensation-77105.html</guid>
		            
			

    	<description><![CDATA[தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளும், அதற்கு எதிராகத் திராவிடக் கட்சிகள் முன்னெடுக்கும் வியூகங்களும் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/edappadi-palaniswami-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்&#8221;.. பொறுத்திருந்து பாருங்கள்.. பரபரப்பை கிளப்பிய தம்பிதுரை" /></figure>"எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்" என அதிமுக எம்.பி தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில தினங்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் தமிழக அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளும், அதற்கு எதிராகத் திராவிடக் கட்சிகள் முன்னெடுக்கும் வியூகங்களும் முக்கிய கவனம் பெற்றுள்ளன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijay-faces-political-test-as-standoff-with-tn-governor-continues-what-options-lie-ahead-2-76955.html">தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?</a></strong>
<h3>தவெகவுக்கு ஆதரவு கிடைக்குமா?</h3>
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட, இன்னும் 6 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதன்மூலம், காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது.
<h3>திமுக - அதிமுக ஒன்றிணைய திட்டம்?</h3>
இதனிடையே,  தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. திமுக கூட்டணியை உடைத்து தவெக முன்னேறுவது ஸ்டாலினின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், அதிமுக-வுடன் இணைந்து தவெக-வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
<h3>மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி:</h3>
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில்,  சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி தம்பிதுரை,  "எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்" என்று கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும், நல்லாட்சி வரும்,  நல்லாட்சி தருவார் எடப்பாடி பழனிசாமி என்று கூறிய அவர், அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார். சில ஆலோசனைகள் நடக்கின்றன, ஆனால் அதை இப்போது வெளியே சொல்ல முடியாது என்றும் அவர் சூசகமாக கூறினார்.
<h3>திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி?</h3>
இதன் மூலம் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதா? அல்லது அதிமுக இரண்டரை ஆண்டு கால ஆட்சி, திமுக இரண்டரை ஆண்டு கால ஆட்சி என்ற முடிவுடன் ஆட்சி அமைய உள்ளதா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது. காங்கிரஸ் செய்த துரோகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், திராவிட கட்சிகள் இல்லாத மூன்றாவது கட்சியை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவதற்கு எதிராகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த முடிவுக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் முடிவை வைத்தே அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.
<h3>மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்:</h3>
இதுகுறித்து சென்னையில் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டனர். ஜனநாயகத்தில் இதுதான் மிக முக்கியமான விஷயம். மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் மக்கள் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். அதிமுக - திமுக கூட்டணி என வரும் ஆதாரமற்ற செய்திகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-arunraj-alleges-dmk-and-aiadmk-attempted-to-join-hands-to-form-government-77070.html">தவெகவுக்கு எதிராக “திமுக – அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி”.. புயலை கிளப்பிய அருண்ராஜ்..</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் தவெக.. முட்டுக்கட்டை போடும் திராவிட கட்சிகள்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-struggles-to-form-government-are-dravidian-parties-creating-roadblocks-details-here-77072.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 07:18:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-struggles-to-form-government-are-dravidian-parties-creating-roadblocks-details-here-77072.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. திமுக கூட்டணியை உடைத்து தவெக முன்னேறுவது ஸ்டாலினின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vijay-1-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் தவெக.. முட்டுக்கட்டை போடும் திராவிட கட்சிகள்?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-governor-questions-dgp-over-basis-for-providing-vijay-with-convoy-additional-security-76976.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றத் தேர்தல்</a> முடிவுகள் வெளியாகி சில தினங்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் தமிழக அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளும், அதற்கு எதிராகத் திராவிடக் கட்சிகள் முன்னெடுக்கும் வியூகங்களும் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்டது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/vijay-faces-political-test-as-standoff-with-tn-governor-continues-what-options-lie-ahead-2-76955.html">தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?</a></strong>
<h3>பெரும்பான்மைக்கு தேவை 6 இடங்கள்:</h3>
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதன்மூலம், காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது. இதில், 2 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் ஒரு இடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், தவெகவின் பலன் 112 ஆக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
<h3>விஜய்யின் 'மாஸ்டர் பிளான்':</h3>
ஆட்சி அமைப்பதற்கான தனது முதல் தேர்வாக, திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றின் ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக நீண்டகால கொள்கை உறவைப் பற்றிப் பேசினாலும், தேர்தல் நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை இணைத்துக் கொண்ட திமுக-வின் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டி, தவெக-வுடன் இணைவதில் தவறில்லை என்ற வாதத்தை இரண்டாம் கட்ட நிர்வாகிகள் முன்வைக்கின்றனர்.
<h3>திமுக - அதிமுக ரகசியக் கைகோர்ப்பு?</h3>
தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. திமுக கூட்டணியை உடைத்து தவெக முன்னேறுவது ஸ்டாலினின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், அதிமுக-வுடன் இணைந்து தவெக-வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
<h3>அதிமுக-வின் நிலைப்பாடு:</h3>
அதிமுக தரப்பில் ஒரு பிரிவினர் தவெக-வுடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுக்க விரும்புவதாகவும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-governor-says-tvk-has-not-proved-majority-support-for-government-formation-76927.html">தவெக இதை செய்யணும்.. தெளிவாக சொன்ன தமிழ்நாடு ஆளுநர்.. அதிகாரப்பூர்வ அறிக்கையில் சொன்னது என்ன?</a></strong>
<h3>ஆளுநர் வைத்த 'ட்விஸ்ட்':</h3>
தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும், இன்னும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. பெரும்பான்மையை உறுதி செய்த பின்னரே அழைப்பு விடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பின்னணியில் இருந்து பாஜக அரசியல் செய்வதாகத் திமுக கூட்டணித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை நோக்கிச் செல்லும் இந்த நகர்வுகள், விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுக &#8211; அதிமுக கூட்டணி ஆட்சி.. தவெக எம்.எல்.ஏக்கள் 107 பேர் ராஜினாமா செய்ய திட்டம்? என்ன நடக்கிறது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/it-is-reported-that-if-admk-and-dmk-forms-coalition-government-107-tvk-mlas-likely-to-resign-77066.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 07:05:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/it-is-reported-that-if-admk-and-dmk-forms-coalition-government-107-tvk-mlas-likely-to-resign-77066.html</guid>
		            
			

    	<description><![CDATA[நேற்றைய தினம் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்தனியாக தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டன. இதில், இரண்டு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் சூசகமாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, கட்சியின் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/107-mla.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுக &#8211; அதிமுக கூட்டணி ஆட்சி.. தவெக எம்.எல்.ஏக்கள் 107 பேர் ராஜினாமா செய்ய திட்டம்? என்ன நடக்கிறது?" /></figure><p data-start="0" data-end="213"><strong>மே 8, 2026:</strong> அதிமுக - திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தால், தமிழக வெற்றி கழகத்துடன் இருக்கக்கூடிய 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தமிழக அரசாக இன்னும் பொறுப்பேற்க முடியாமல் இருக்கிறது. ஏனென்றால், ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்ற பெரும்பான்மை தேவைப்படும் சூழல் உள்ளது.</p>

<h3 data-start="0" data-end="213">பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க முடியாத சூழல்:</h3>
<p data-start="0" data-end="213">தற்போது வரை தமிழக வெற்றி கழகத்துடன் 108 எம்.எல்.ஏ.க்கள், கூடுதலாக திமுகவிலிருந்து பிரிந்து வந்த காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 112 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். மேலும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர்.</p>
<p data-start="698" data-end="952">இதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் எழுதியிருக்கிறார். அவர்களது முடிவு இன்று கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="954" data-end="1184">இதற்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என தமிழக ஆளுநர் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.</p>

<h3 data-start="954" data-end="1184">அதிமுக - திமுக கூட்டணி ஆட்சி?</h3>
<p data-start="1186" data-end="1394">தமிழக வெற்றி கழகம் ஒரு பக்கம் ஆட்சி அமைக்க முயன்று வந்தாலும், மற்றொரு பக்கம் திமுக மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய திருப்பமாக அமைந்திருக்கிறது.</p>
<p data-start="1396" data-end="1830">இதற்கு மத்தியில், நேற்றைய தினம் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்தனியாக தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டன. இதில், இரண்டு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் சூசகமாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, கட்சியின் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p data-start="1832" data-end="2051">இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி நிச்சயம் அமையும்” என ஒரு குறியீட்டையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.</p>

<h3 data-start="1832" data-end="2051">இரண்டு கட்சிகளும் சொன்ன சூசக மெசேஜ்:</h3>
<p data-start="2053" data-end="2388">திமுக தரப்பில் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய சூழல் வந்தாலும் அதை ஏற்க தயார்” என குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்கும் வகையில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.</p>
<p data-start="2053" data-end="2388">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-arunraj-alleges-dmk-and-aiadmk-attempted-to-join-hands-to-form-government-77070.html">தவெகவுக்கு எதிராக “திமுக – அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி”.. புயலை கிளப்பிய அருண்ராஜ்..</a></p>
<p data-start="2390" data-end="2671">மறுபக்கம், இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது வரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. இந்த சூழலில், பெரும்பான்மையுடன் திமுக மற்றும் அதிமுக இணைந்து வந்தாலும் ஆட்சி அமைக்கலாம் என தமிழக ஆளுநர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p>

<h3 data-start="2390" data-end="2671">தவெகவின் அடுத்த மூவ்:</h3>
<p data-start="2673" data-end="2903">இந்த நிலையில், இதுபோன்ற அரசியல் மாற்றங்கள் நடைபெறும் பட்சத்தில், தமிழக வெற்றி கழகத்தின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p data-start="2905" data-end="3052" data-is-last-node="" data-is-only-node="">தமிழக அரசியல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வரும் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெகவுக்கு எதிராக &#8220;திமுக &#8211; அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி&#8221;.. புயலை கிளப்பிய அருண்ராஜ்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-arunraj-alleges-dmk-and-aiadmk-attempted-to-join-hands-to-form-government-77070.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 06:36:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-arunraj-alleges-dmk-and-aiadmk-attempted-to-join-hands-to-form-government-77070.html</guid>
		            
			

    	<description><![CDATA[தேர்தலுக்கு முன்பிருந்தே திட்டமிட்ட சதி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றையெல்லாம் தாண்டி இன்று மக்கள் ஆதரவுடன் ஒரு தனிப்பெரும் சக்தியாகத் தவெக உருவெடுத்துள்ளது என்றார். "தலைவர் (விஜய்) கூறியது போல, இதெல்லாம் அவருக்குப் பழகிவிட்டது; நீதியை யாராலும் தடுக்க முடியாது, நீதி கண்டிப்பாக வெல்லும்" என்றார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tvk-arunraj.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெகவுக்கு எதிராக &#8220;திமுக &#8211; அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி&#8221;.. புயலை கிளப்பிய அருண்ராஜ்.." /></figure><strong>சென்னை, மே 08:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-governor-questions-dgp-over-basis-for-providing-vijay-with-convoy-additional-security-76976.html" target="_blank" rel="noopener">தவெகவுக்கு</a> எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சிப்பதாக தவெக நிர்வாகி அருண்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்காமல் உள்ளார். இதற்கு விசிக, மதிமுக சிபிஎம் என பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும், தவெக தரப்பில் இவ்விவகாரம் குறித்து வாய்திறக்காமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் தலைவர் விஜய், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின் மக்களுக்கு நன்றி தெரிவித்த பின் தற்போது வரை எதுவும் பொதுவெளியில் பேசவில்லை.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-governor-says-tvk-has-not-proved-majority-support-for-government-formation-76927.html">தவெக இதை செய்யணும்.. தெளிவாக சொன்ன தமிழ்நாடு ஆளுநர்.. அதிகாரப்பூர்வ அறிக்கையில் சொன்னது என்ன?</a></strong>
<h3>சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும்:</h3>
இந்த பரப்பான அரசியல் சூழ்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி அருண்ராஜ், சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் அரசியல் சாசனக் கடமை என்று வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாகக் கூறுகின்றன. எனவே, ஆளுநர் காலதாமதம் செய்யாமல் சட்டவிதிகளின்படி நடக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
<h3>திமுக - அதிமுக ரகசியக் கூட்டணி?</h3>
இதனிடையே, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக எழுந்துள்ள தகவல்கள் உண்மை தான். இது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்று அவர் குற்றம் சாட்டினார். மக்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளை இந்த இரு கட்சிகளும் மதிக்கவில்லை என்றும், அவர்களின் இந்த முயற்சி முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக மக்கள் இதை எல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஓபிஎஸ்-ஐ ஏன் எடப்பாடி பழனிசாமி வெளியே அனுப்பினார்கள். இப்போது ஏன் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார் என்று ஊருக்கே தெரியும் என்றார்.
<h3>தவெக-வுக்கு எதிரான சதி:</h3>
தமிழக வெற்றி கழகத்தின் மீது தேர்தலுக்கு முன்பிருந்தே திட்டமிட்ட சதி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றையெல்லாம் தாண்டி இன்று மக்கள் ஆதரவுடன் ஒரு தனிப்பெரும் சக்தியாகத் தவெக உருவெடுத்துள்ளது என்றார். "தலைவர் (விஜய்) கூறியது போல, இதெல்லாம் அவருக்குப் பழகிவிட்டது; நீதியை யாராலும் தடுக்க முடியாது, நீதி கண்டிப்பாக வெல்லும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-governor-questions-dgp-over-basis-for-providing-vijay-with-convoy-additional-security-76976.html">எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய்? டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்</a></strong>
<h3>ஆதரவு கோரும் படலம்:</h3>
தற்போது தமிழக வெற்றி கழகம் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக ஐயூஎம்எல் (IUML) கட்சியின் தேசியத் தலைவரைச் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும், நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். மேலும், பாஜக போன்ற கட்சிகள் குறித்து சரியான நேரத்தில் தகுந்த முடிவை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றும், தற்போது தாங்கள் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காலத்தின் கட்டாயம்.. மாநிலத்தின் நலனுக்காகவே தவெகவுக்கு ஆதரவு &#8211; காங்கிரஸ் விளக்கம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/congress-explains-why-it-extended-its-support-to-tamilaga-vetri-kazhagam-and-stated-that-its-necessity-of-time-76907.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 13:25:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/congress-explains-why-it-extended-its-support-to-tamilaga-vetri-kazhagam-and-stated-that-its-necessity-of-time-76907.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக வெற்றி கழகம் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய், பெருந்தலைவர் காமராஜரை தனது கொள்கைத் தலைவராக ஏற்று, அவர் காட்டிய வழியில் சமூக நீதிக்காக தொடர்ச்சியாக பயணிப்போம் என்ற கொள்கையை பிரகடனப்படுத்தியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/congress.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காலத்தின் கட்டாயம்.. மாநிலத்தின் நலனுக்காகவே தவெகவுக்கு ஆதரவு &#8211; காங்கிரஸ் விளக்கம்" /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:edf8ac2a-0134-454c-aa2a-5f012888ed2c-5" data-testid="conversation-turn-12" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="7976f9e4-02a0-4831-98d4-133838c06ce5" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="0" data-end="177"><strong>மே 7, 2026:</strong> தமிழ்நாடு சட்டமன்ற <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-chief-vijay-to-take-oath-as-tamil-nadu-chief-minister-tomorrow-rahul-gandhi-likely-to-attend-76795.html">காங்கிரஸ்</a> தலைவர் ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஏன் ஆதரவு அளித்தது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றி கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன.</p>

<h3 data-start="0" data-end="177">முற்றிலும் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்:</h3>
<p data-start="0" data-end="177">குறிப்பாக, பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிலர் கூறுவது முற்றிலும் தவறானது. மேலும், ‘முதுகில் குத்திவிட்டது’ போன்ற குற்றச்சாட்டுகளையும் இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது.</p>
<p data-start="614" data-end="948">தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்தனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.</p>

<h3 data-start="614" data-end="948">மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவு:</h3>
<p data-start="950" data-end="1186">ஜனநாயக நாட்டில் மக்கள் எண்ணங்கள் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளை வழங்குகின்றன. அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்கு தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.</p>
<p data-start="950" data-end="1186">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/makkal-needhi-maiam-kamal-haasan-condemns-tn-governor-rajendra-vishwanath-arlekar-tvk-for-not-inviting-it-to-form-the-government-76913.html">தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்துகு பெரிய சேதமாகும்.. மநீம தலைவர் கமல்ஹாசன்!</a></p>
<p data-start="1188" data-end="1464">தமிழக வெற்றி கழகம் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய், பெருந்தலைவர் காமராஜரை தனது கொள்கைத் தலைவராக ஏற்று, அவர் காட்டிய வழியில் சமூக நீதிக்காக தொடர்ச்சியாக பயணிப்போம் என்ற கொள்கையை பிரகடனப்படுத்தியுள்ளார்.</p>
<p data-start="1466" data-end="1675">பெருந்தலைவர் காமராஜரின் லட்சியங்களை உள்வாங்கி சமூகநீதிப் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ள ஒரு இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சார்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் கொண்டுள்ளது.</p>

<h3 data-start="1466" data-end="1675">காலத்தின் கட்டாயம் - மாநிலத்தின் நலன்:</h3>
<p data-start="1677" data-end="1966">ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் எந்த காலத்திலும் காலூன்ற விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது. மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து திரள வேண்டும். தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம்.</p>
<p data-start="1968" data-end="2268">இதில் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தமிழக மக்களின் நலனையும் மாநிலத்தின் அமைதியையும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="2270" data-end="2429" data-is-last-node="" data-is-only-node="">காங்கிரஸ் கட்சி என்றும் மதவாதத்திற்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், சமூகநீதியை காக்கவும் தனது பயணத்தை தொடரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்துகு பெரிய சேதமாகும்.. மநீம தலைவர் கமல்ஹாசன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/makkal-needhi-maiam-kamal-haasan-condemns-tn-governor-rajendra-vishwanath-arlekar-tvk-for-not-inviting-it-to-form-the-government-76913.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 12:55:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/makkal-needhi-maiam-kamal-haasan-condemns-tn-governor-rajendra-vishwanath-arlekar-tvk-for-not-inviting-it-to-form-the-government-76913.html</guid>
		            
			

    	<description><![CDATA[Makkal Needhi Maiam Kamal Haasan: தமிழக வெற்றிக் கழகத்தை ஆளுநர் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது ஏற்படும் மிகப்பெரிய சேதம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டை முன் வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியது]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/08/kamalhaasan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்துகு பெரிய சேதமாகும்.. மநீம தலைவர் கமல்ஹாசன்!" /></figure>தமிழகத்தில் நடைபெற்ற <a href="https://www.tv9tamilnews.com/elections/dmk-mp-kalanidhi-veeraswamy-stated-that-dmk-will-continue-as-strong-opposition-and-condemned-the-action-of-admk-and-bjp-76878.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தலில்</a> தமிழக வெற்றிக் கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில், 1.70 கோடிக்கும் அதிமான வாக்குகளுடன் 34.8 சதவீத வாக்கு வங்கியை முதல் தேர்தலிலேயே பெற்றது. இதனால், பெரும்பான்மை உள்ள முதல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கடிதம் மூலமாகவும், நேரில் சந்தித்தும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், 2- ஆவது நாளாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து தவெக தலைவர் விஜய் வலியுறுத்திய நிலையில், தற்போதும், ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், <a href="https://www.tv9tamilnews.com/elections/dmk-mp-kalanidhi-veeraswamy-stated-that-dmk-will-continue-as-strong-opposition-and-condemned-the-action-of-admk-and-bjp-76878.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றிக் கழக</a> தலைவர் விஜய்க்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
<h3>சுதந்திரமாக ஆட்சி அமைக்கும் உரிமையில்லை</h3>
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் சுதந்திரமாக ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். இதனிடையே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் நாங்கள் மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். நாங்கள் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று அறிவித்துள்ளார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். தற்போது, அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் இப்போது அதே கடமையை நிறைவேற்ற வேண்டும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/vck-general-secretary-sinthanai-selvan-said-thirumavalavan-should-become-cm-of-tamil-nadu-76893.html" target="_blank" rel="noopener">தமிழக முதல்வராக திருமாவளவன் வர வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்.. சிந்தனைச் செல்வன்!</a>
<h3>தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது அவமதிப்பாகும்</h3>
இது ஒரு கோரிக்கை அல்ல, மாறாக அவர்களின் அரசியலமைப்பு கடமையை நினைவூட்டுவதாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்றுள்ளது. அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது, தமிழ்நாடு மக்களின் ஆணையை அவமதிப்பதற்கு சமமாகும். சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் உள்ளனர். இது மாநிலத்திற்கே ஒரு அவமானம் ஆகும்.
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.

என் சகோதரர் திரு. <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று…</p>
— Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/2052279349467140586?ref_src=twsrc%5Etfw">May 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>ஜனநாயகத்தின் மீது ஏற்படும் மிகப்பெரிய சேதமாகும்</h3>
இது ஜனநாயகத்திற்கு ஏற்படும் மிகப்பெரிய சேதம் ஆகும். எஸ்.ஆர். பொம்மை வழக்கில், பெரும்பான்மை சட்டமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும், ராஜ்பவனில் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. நான் பேசுவது கட்சி அரசியல் அல்ல. இது ஒரு இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல். தமிழக மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-should-call-for-government-formation-says-vck-leader-thol-thirumavalavan-76909.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும்… தொல்.திருமாவளவன்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும்&#8230; தொல்.திருமாவளவன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-should-call-for-government-formation-says-vck-leader-thol-thirumavalavan-76909.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 12:41:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-should-call-for-government-formation-says-vck-leader-thol-thirumavalavan-76909.html</guid>
		            
			

    	<description><![CDATA[VCK Leader Thol Thirumavalavan : தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்களால் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/vijay-thiruma.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும்&#8230; தொல்.திருமாவளவன்!" /></figure>தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழக வெற்றி கழகத்தை பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும். அதுவே அரசியலமைப்பு சட்டம் காட்டுகிற வழிகாட்டுதல்கள் ஆகும். விஜய் ஆட்சி அமைப்பதற்கு கடிதம் அளித்துள்ள நிலையில் ஆளுநர் அழைப்பு விடுக்காமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு எந்தெந்த எம்எல்ஏக்கள் ஆதரவு தருகின்றனர் என்பது குறித்த தகவலை ஆளுநர் கேட்க முடியாது. இதில், 118 எம்எல்ஏக்கள் ஆதரவை நிரூபித்து விட்டு பதவி ஏற்கலாம் என்று ஆளுநர் கூற முடியாது.
<h3>தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்</h3>
தமிழகத்தில் பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருப்பதை கூறும் நிலையில், அந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். அந்த கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை சட்டமன்றத்தில் மட்டுமே நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து விட்டு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுப்பதில் தாமதம் ஏற்படுத்துவது பாஜக திரை மறைவில் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.
<h3>மக்கள் தீர்ப்பின்படி விஜய் பதவி ஏற்பதே சரியாகும்</h3>
மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் பதவி ஏற்பது தான் சரி ஆகும். அதற்கு ஒருபோதும் நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பம் முதல் பாரதிய ஜனதா கட்சி கையாண்டு வருகிறது. தற்போதும், தமிழக வெற்றிக் கழகத்தை கையாளுவதற்கு பாஜக துடித்து வருகிறது. அந்த கட்சியையும், கட்சியின் தலைவர் விஜயையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள பாஜக திட்டமிட்டு வருகிறது. இது என்னுடைய கருத்தாகும்.
<h3>தவெகவை கையாளும் முயற்சியில் பாஜக</h3>
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் கும்பல் ஆகியவை தமிழக வெற்றி கழகத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட இடதுசாரி கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக விஜய் கூறியதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். இதில், உள்ள அரசியல் எதிர்காலம் உள்ளிட்டவற்றை நாங்கள் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளோம். இது தொடர்பான முடிவை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்க முடியாது. எங்கள் கட்சியில் உள்ள முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்கள் எடுத்த கருத்தியலின் அடிப்படையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் சேர்த்து முடிவெடுப்போம் என்றார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு? முதல்வராகிறாரா விஜய்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-meets-tamil-nadu-governor-vishwanath-arlekar-for-the-2nd-day-regarding-government-formation-76896.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 11:43:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-meets-tamil-nadu-governor-vishwanath-arlekar-for-the-2nd-day-regarding-government-formation-76896.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vijay Meets Governor Vishwanath Arlekar: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை கட்சியின் தலைவர் விஜய் இன்று 2- ஆவது நாளாக சந்தித்தார். இது குறித்த முழு விவரம் இந்தப்பதிவில்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tvk-leader-vijay-meets-governor-vishwanath-arlekar.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு? முதல்வராகிறாரா விஜய்?" /></figure>தமிழக சட்டமன்ற தேர்தலில் <a href="http://தமிழக முதல்வராக திருமாவளவன் வர வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்.. சிந்தனைச் செல்வன்!" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகம்</a> 108 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ் ஆதரவுடன் சேர்த்து 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று புதன்கிழமை விஜய் சந்தித்து கடிதம் அளித்தார். அப்போது, பெரும்பான்மையே நிரூபிப்பதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று வியாழக்கிழமை ( மே 7- ஆம் தேதி) மீண்டும் தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்தித்துள்ளார். இதில், தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு <a href="http://தமிழக முதல்வராக திருமாவளவன் வர வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்.. சிந்தனைச் செல்வன்!" target="_blank" rel="noopener">விஜய்</a> வலியுறுத்த இருப்பதாக முதலில் கூறப்படுகிறது.
<h3>தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு</h3>
பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகம் பதவி ஏற்றதும் சட்டமன்றத்தில் விரைவில் பெரும்பான்மையே நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று வியாழக்கிழமை ( மே 7- ஆம் தேதி) தமிழக வெற்றி கழக தலைவர் முதல்வராக பதவியேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/vck-general-secretary-sinthanai-selvan-said-thirumavalavan-should-become-cm-of-tamil-nadu-76893.html" target="_blank" rel="noopener">தமிழக முதல்வராக திருமாவளவன் வர வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்.. சிந்தனைச் செல்வன்!</a>
<h3>விஜய்யிடம் ஆளுநர் எழுப்பிய கேள்விகள்</h3>
இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் அர்லேகர் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு, தவெக தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார். அவை என்ன மாதிரியான கேள்விகள் என்பதை பார்க்கலாம்.
<ul>
 	<li>113 எம். எல். ஏ-க்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்.</li>
 	<li>தமிழக வெற்றிக் கழக அரசை வேறு எந்த கட்சி ஆதரிக்கும்.</li>
 	<li>113 எம். எல். ஏ-க்களை வைத்து நிலையான அரசு அமைக்க முடியுமா.</li>
 	<li>பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என எப்படி நம்புகிறீர்கள்.</li>
 	<li>பெரும்பான்மை கிடைத்து விடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா.</li>
</ul>
<h3>45 நிமிடங்கள் நடந்த ஆளுநர் - விஜய் சந்திப்பு</h3>
என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு தவெக தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், தவெக ஆட்சி அமைப்பதற்குக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு பனையூரில் நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு விஜய் புறப்பட்டு சென்றார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/in-between-rising-tension-tvk-holding-high-level-meeting-with-its-mla-at-panaiyur-office-76889.html" target="_blank" rel="noopener">பனையூரில் அவசர ஆலோசனை கூட்டம்.. தவெக எம்.எல்.ஏகளுக்கு உடனடி அழைப்பு..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பனையூரில் அவசர ஆலோசனை கூட்டம்.. தவெக எம்.எல்.ஏகளுக்கு உடனடி அழைப்பு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/in-between-rising-tension-tvk-holding-high-level-meeting-with-its-mla-at-panaiyur-office-76889.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 10:54:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/in-between-rising-tension-tvk-holding-high-level-meeting-with-its-mla-at-panaiyur-office-76889.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து உரிமைக் கோரிக்கை வைத்தார். ஆனால், ஆளுநர் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/panaiyur.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பனையூரில் அவசர ஆலோசனை கூட்டம்.. தவெக எம்.எல்.ஏகளுக்கு உடனடி அழைப்பு.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:edf8ac2a-0134-454c-aa2a-5f012888ed2c-4" data-testid="conversation-turn-10" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="62bb14cf-1eb6-431b-9421-55111841f414" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="0" data-end="281"><strong>சென்னை, மே 7, 2026:</strong> நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த சூழலில், ஆட்சி அமைப்பதற்கு 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், தமிழக வெற்றி கழகத்திடம் தற்போது 108 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவதாக தெரிவித்திருந்த சூழலில், தற்போது வரை தமிழக வெற்றி கழகத்திற்கு கூடுதலாக 12 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் 6 இடங்களின் ஆதரவு தேவைப்படுகிறது.</p>

<h3 data-start="0" data-end="281">தவெகவிற்கு யார் ஆதரவு கொடுப்பார்கள்?</h3>
<p data-start="569" data-end="750">இந்த சூழலில், இடதுசாரி கட்சிகளுக்கு தமிழக வெற்றி கழகம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு பின்னர் முடிவுகள் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="752" data-end="1047">இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து உரிமைக் கோரிக்கை வைத்தார். ஆனால், ஆளுநர் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p data-start="752" data-end="1047">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/dmk-mp-kalanidhi-veeraswamy-stated-that-dmk-will-continue-as-strong-opposition-and-condemned-the-action-of-admk-and-bjp-76878.html">திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்.. தவெக அரசு அமைக்க முட்டுக்கட்டை போடும் அதிமுக பாஜக – எம்.பி கலாநிதி வீராசாமி..</a></p>
<p data-start="1049" data-end="1334">அதேபோல், திமுக மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக யூகங்கள் வெளியானது. ஆனால், “திமுக வலுவான எதிர்க்கட்சியாகவே செயல்படும். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு எந்தவித இடையூறும் செய்ய மாட்டோம்” என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p>

<h3 data-start="1049" data-end="1334">பனையூரில் அவசர ஆலோசனை கூட்டம்:</h3>
<p data-start="1336" data-end="1519">இந்த சூழலில், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p data-start="1521" data-end="1743">பரபரப்பான அரசியல் சூழலில், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் அனைவரையும் வரவழைத்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பொதுச்செயலாளர் என். ஆனந்தன் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.</p>
<p data-start="1745" data-end="1958" data-is-last-node="" data-is-only-node="">இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன, உயர் நீதிமன்றத்தை நாடலாமா வேண்டாமா, பெரும்பான்மையை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக முதல்வராக திருமாவளவன் வர வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்.. சிந்தனைச் செல்வன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/vck-general-secretary-sinthanai-selvan-said-thirumavalavan-should-become-cm-of-tamil-nadu-76893.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 10:42:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/vck-general-secretary-sinthanai-selvan-said-thirumavalavan-should-become-cm-of-tamil-nadu-76893.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vck General Secretary Sinthanai Selvan: தமிழகத்தின் முதல் அமைச்சராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை பதவி ஏற்க வைக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தெரிவித்தார். அவர் கூறியதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/thirumavalavan-vck-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக முதல்வராக திருமாவளவன் வர வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்.. சிந்தனைச் செல்வன்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-governor-gives-tvk-until-friday-to-prove-majority-reports-76851.html" target="_blank" rel="noopener">தமிழகத்தின் முதல்வராக</a> திருமாவளவன் வர வேண்டு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வியக்கத் தகுந்த அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இது திராவிட கட்சிகளுக்கு எதிரான மக்களின் கோபம் என்று சிலர் கூறுகின்றனர். மேலும், விஜய் மீதான ரசிக மனோபாவத்தால் ஒரு ஜென்சி அலை உருவாகியுள்ளது. ஆனால், இது அர்த்தமுள்ள அரசியல் மாற்றம் கிடையாது. இது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்று சிலர் கூறுகின்றனர். இந்த தேர்தலானது மனிதனுக்கும், வாக்குச்சாவடி இயந்திரத்துக்கும் இடையே நடைபெற்ற தேர்தல் ஆகும். <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-governor-gives-tvk-until-friday-to-prove-majority-reports-76851.html" target="_blank" rel="noopener">மத்திய அரசு</a> நியாயமான தேர்தலை நடத்துவதற்காக குறுக்கு வழியில் ஞானேஷ்குமாரை தலைமை தேர்தலாக நியமித்தது. பாஜகவுக்கு எதிரான மாநிலங்களில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடைபெற்றுள்ளது.
<h3>கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது வாக்குச்சாவடி இயந்திர மோசடியால்</h3>
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது வாக்குச்சாவடி இயந்திரத்தில் நடைபெற்ற மோசடி ஆகும். இதை தவிர வாக்காளர்களின் உணர்வு அல்ல என்பதை அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்த நிலையில், பொது இடங்களில் தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்கள் மது போதையில் நடனம் ஆடுவதும், தவெகவின் 2- ஆம் கட்ட தலைவர்களின் பின்னணி இவற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் அதிமுகவை குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திமுக ஆதரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-cm-mk-stalin-has-stated-that-let-tvk-form-the-government-and-we-wont-disturb-till-six-months-76869.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் – மு.க ஸ்டாலின்..</a>
<h3>திருமாவளவனை தமிழக முதல்வராக்க வேண்டும்</h3>
ரசிக மனநிலை உருவாக்கிய ஆபத்தில் இருந்து தமிழகத்தை காக்க திமுக அதிமுக கூட்டணி அமைத்தால் தான் நல்லது என்று பலர் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை முதல்வராக முன்மொழிந்து, அதை நோக்கி நகர்த்துவது தான் திராவிட கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய சரியான நிலைப்பாடாக இருக்கும் என எனக்கு தோன்றுகிறது. மாற்றம் வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்பியதால் தன் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்துள்ள அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவளவனை முதல்வர் ஆக்குவது தான் சரியாக இருக்கும்.
<h3>திருமா முதல்வராவது காலத்தின் கட்டாயமாகும்</h3>
சமூக நீதி மண் என்று பெருமை பேசும் நபர்கள் தமிழகத்தை காப்பாற்றுவதற்கு இப்படி ஒரு முடிவு எடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இது தமிழக மீது படிந்துள்ள அனைத்து கறைகளையும் நீக்கிவிடும். இரு பெரும் எதிர் துருவ இரு திராவிட கட்சிகளின் இடையே இது மட்டும் தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தமாக இருக்கும் என்று சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/dmk-mp-kalanidhi-veeraswamy-stated-that-dmk-will-continue-as-strong-opposition-and-condemned-the-action-of-admk-and-bjp-76878.html" target="_blank" rel="noopener">திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்.. தவெக அரசு அமைக்க முட்டுக்கட்டை போடும் அதிமுக பாஜக – எம்.பி கலாநிதி வீராசாமி..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்டாலின் தோல்வி எதிரொலி.. மனமுடைந்த திமுக தொண்டர் தற்கொலை; நிர்வாகி மாரடைப்பால் மரணம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/cuddalore-dmk-worker-commits-suicide-by-consuming-poison-after-mk-stalin-defeat-76882.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 09:23:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/cuddalore-dmk-worker-commits-suicide-by-consuming-poison-after-mk-stalin-defeat-76882.html</guid>
		            
			

    	<description><![CDATA[Cuddalore Crime: தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ளமுடியாத அந்தக் கட்சியின் தொண்டர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேலத்தில் திமுக அவைத்தலைவர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/death.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்டாலின் தோல்வி எதிரொலி.. மனமுடைந்த திமுக தொண்டர் தற்கொலை; நிர்வாகி மாரடைப்பால் மரணம்!" /></figure><a href="http://ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் – பதவி ஏற்பு எப்போது?" target="_blank" rel="noopener">கடலூர் மாவட்டம்</a>, சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி. புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், திமுகவில் தொண்டராக இருந்து வந்த நிலையில், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் உதவியாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கடந்த மே 4- ஆம் தேதி ( திங்கள் கிழமை) தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதை தனது வீட்டில் இருந்து டிவி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திராவிட முன்னேற்ற கழக கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்ததை பார்த்து மிகவும் மன வருத்தம் அடைந்தார். அத்துடன், மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததை எண்ணியும் மிகவும் மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது. அன்று முதல் ஆறுமுகம் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
<h3>தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோல்வி</h3>
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததையும், கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததையும் ஏற்றுக் கொள்ள முடியாத கட்சியின் தொண்டர் ஆறுமுகம் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். அந்த நிலையில், வெளியே சென்றிருந்த அவரது குடும்பத்தினர் வீடு திரும்பிய போது ஆறுமுகம் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-chief-vijay-meets-governor-to-stake-claim-to-form-government-when-will-swearing-in-take-place-76754.html" target="_blank" rel="noopener">ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் – பதவி ஏற்பு எப்போது?</a>
<h3>தற்கொலை செய்து கொண்ட திமுக தொண்டர்</h3>
பின்னர், ஆறுமுகத்தை மீட்ட அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், திமுக தொண்டர் ஆறுமுகம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
<h3>நெஞ்சு வலியால் திமுக அவைத்தலைவர் பலி</h3>
இந்தச் சம்பவம் குறித்து ஆறுமுகம் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல, சேலம், சாமிநாத புரத்தை சேர்ந்தவர் சில்வஸ்டார். மாநகராட்சியின் 26- ஆவது வார்டு திமுக அவைத் தலைவராக இருந்த இவர், மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் மயங்கி விழுந்தார். அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

மேலும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/admk-kp-munusamy-says-party-will-never-back-vijays-tvk-76837.html" target="_blank" rel="noopener">தவெகவுக்கு ஆதரவு இல்லை, காரணம் இதுதான் – அதிமுகவின் கே.பி.முனுசாமி பரபரப்பு கருத்து</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்தில் புதிய ஆட்சி அமையாத நிலை.. டிஜிபிக்கு பறந்த உத்தரவு.. மத்திய உளவுத்துறை அதிரடி எச்சரிக்கை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/central-intelligence-agency-warns-of-increased-security-in-tamil-nadu-as-new-government-not-formed-76877.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 08:22:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/central-intelligence-agency-warns-of-increased-security-in-tamil-nadu-as-new-government-not-formed-76877.html</guid>
		            
			

    	<description><![CDATA[Central Intelligence Agency Warns: தமிழகத்தில் தற்போது வரை புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருவதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதன் காரணமாக தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/central-intelligence-agency-warns-increased-security-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்தில் புதிய ஆட்சி அமையாத நிலை.. டிஜிபிக்கு பறந்த உத்தரவு.. மத்திய உளவுத்துறை அதிரடி எச்சரிக்கை!" /></figure>தமிழக சட்டமன்றத் தேர்தலில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/who-will-get-a-place-in-vijay-cabinet-key-names-likely-in-tvk-ministry-76788.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகம்</a> மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. தவெகவுக்கு கிடைத்த 108 தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவளித்த 5 தொகுதிகள் என 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம், விஜய் வழங்கினார். ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 பெரும்பான்மை இடங்கள் இல்லாத காரணத்தால் ஆளுநர் தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. அத்துடன், விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஆளுநர் 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இதனால், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/who-will-get-a-place-in-vijay-cabinet-key-names-likely-in-tvk-ministry-76788.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில் புதிய ஆட்சி</a> அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
<h3>தமிழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்</h3>
இந்த நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையால், தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை டி. ஜி. பி. சந்தீப் ராய்ரத்தோருக்கு மத்திய உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது. அதில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்காத சூழ்நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழ வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடித்து வருவதால், திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-reportedly-unsatisfied-with-vijays-claim-to-form-government-over-lack-of-support-letters-76802.html" target="_blank" rel="noopener">அதிருப்தியில் ஆளுநர்? விஜய் பதவியேற்பதில் சிக்கல்? வெளியான பரபரப்பு தகவல்</a>
<h3>திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி</h3>
இது தொடர்பாகவே, இரு கட்சிகளும் தனித்தனியே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணி அமைப்பதற்கு அச்சாரமாக நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலுக்கு தற்போது வரை திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்காத நிலை இருந்து வருகிறது. அத்துடன் இந்த தகவல் உண்மை என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
<h3>தவெக தலைவர் விஜய் பதவி ஏற்பதில் நீடிக்கும் இழுபறி</h3>
இதனால், தமிழக வெற்றிக் கழகத்துக்கு தற்போது வரை 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்காத நிலை நீடித்து வருவதால் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருவதுடன், அவர் முதல் அமைச்சராக பதவி ஏற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே அரசியல் கட்சியினர் இடையே மோதல் போக்கு நிலவி சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-and-dmk-likely-to-hold-talks-over-alliance-government-formation-in-tamil-nadu-76844.html" target="_blank" rel="noopener">தொடங்கிய திமுக – அதிமுக பேச்சுவார்த்தை – கூட்டணி ஆட்சியா? பரபரப்பு தகவல்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்.. தவெக அரசு அமைக்க முட்டுக்கட்டை போடும் அதிமுக பாஜக &#8211; எம்.பி கலாநிதி வீராசாமி..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/dmk-mp-kalanidhi-veeraswamy-stated-that-dmk-will-continue-as-strong-opposition-and-condemned-the-action-of-admk-and-bjp-76878.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 08:12:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/dmk-mp-kalanidhi-veeraswamy-stated-that-dmk-will-continue-as-strong-opposition-and-condemned-the-action-of-admk-and-bjp-76878.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்த பரபரப்பான அரசியல் சூழலில், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. 1979ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், சில காரணங்களால் அது பின்னர் கைவிடப்பட்டதாகவும் அரசியல் வரலாறு கூறுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kalanidhi-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்.. தவெக அரசு அமைக்க முட்டுக்கட்டை போடும் அதிமுக பாஜக &#8211; எம்.பி கலாநிதி வீராசாமி.." /></figure><p data-start="0" data-end="93"><strong>மே 7, 2026:</strong> திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையான கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="0" data-end="93">விஜய் பதவியேற்பில் நீடிக்கும் சிக்கல்:</h3>
<p data-start="432" data-end="637">தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரியிருந்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாத சூழலில் தற்போது வரை அவருக்கு முதலமைச்சராக பதவியேற்க அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.</p>
<p data-start="432" data-end="637">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-cm-mk-stalin-has-stated-that-let-tvk-form-the-government-and-we-wont-disturb-till-six-months-76869.html">தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் – மு.க ஸ்டாலின்..</a></p>
<p data-start="639" data-end="849">இந்த சூழல் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் திமுக மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டது.</p>

<h3 data-start="639" data-end="849">திமுக அதிமுக பேச்சுவார்த்தை?</h3>
<p data-start="851" data-end="1079">முன்னதாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கலாம் என பேச்சுகள் எழுந்தன. ஆனால், “அதிமுக ஒருபோதும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தராது” என கே.பி. முனுசாமி தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.</p>
<p data-start="1081" data-end="1353">இந்த பரபரப்பான அரசியல் சூழலில், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. 1979ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், சில காரணங்களால் அது பின்னர் கைவிடப்பட்டதாகவும் அரசியல் வரலாறு கூறுகிறது.</p>

<h3 data-start="1081" data-end="1353">திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">DMK has decided to function as an effective opposition despite congress betrayal (and perhaps other alliance parties) . ADMK IS PUSHING BJP TO STOP TVK FORMING GOVT. That is disrespecting people’s mandate. Hope democracy prevails <a href="https://twitter.com/DMK4TN?ref_src=twsrc%5Etfw">@DMK4TN</a></p>
— Dr.Kalanidhi Veeraswamy (@DrKalanidhiV) <a href="https://twitter.com/DrKalanidhiV/status/2052073562593448097?ref_src=twsrc%5Etfw">May 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<p data-start="1355" data-end="1565">இந்த வரலாறு மீண்டும் திரும்புமா? திமுக - அதிமுக இணையுமா? என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சூழலில், “திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்” என திமுக எம்பி கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.</p>
<p data-start="1567" data-end="1892">இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “காங்கிரஸ் மற்றும் துரோக அரசியலுக்கு மத்தியில் திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைப்பதிலிருந்து தடுக்க முயற்சிக்கின்றன. இது மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்” என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p data-start="1894" data-end="2079" data-is-last-node="" data-is-only-node="">மேலும், அதிமுகவும் பாஜகவும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க இடையூறு செய்வதாகவும், தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிமுக தலைமை உத்தரவு.. புதுச்சேரியில் முகாமிட்டுள்ள கட்சி எம்எல்ஏக்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/aiadmk-mlas-have-been-accommodated-in-a-hotel-in-puducherry-76871.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 07:43:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/aiadmk-mlas-have-been-accommodated-in-a-hotel-in-puducherry-76871.html</guid>
		            
			

    	<description><![CDATA[AIADMK MLAs Accommodated Puducherry: அதிமுகவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தவெகவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், அவர்கள் அந்த மாநிலத்தில் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/aiadmk-mlas.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிமுக தலைமை உத்தரவு.. புதுச்சேரியில் முகாமிட்டுள்ள கட்சி எம்எல்ஏக்கள்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-reportedly-unsatisfied-with-vijays-claim-to-form-government-over-lack-of-support-letters-76802.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்ற தேர்தலில்</a> தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு 118 என்ற பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளிடம் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆதரவு கடிதம் அனுப்பியதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு உள்ள 5 எம்எல்ஏக்களின் ஆதரவை நிபந்தனையுடன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-reportedly-unsatisfied-with-vijays-claim-to-form-government-over-lack-of-support-letters-76802.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகத்தின்</a> ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113- ஆக உயர்ந்துள்ளது. இதில், மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை உள்ளது.
<h3>சி.வி. சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தனியாக ஆலோசனை</h3>
இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் தனது கட்சியின் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், தற்போதைய எம்எல்ஏவுமான சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இது அதிமுக இரண்டாக உடைய போவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, எஸ். பி. வேலுமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-chief-vijay-to-take-oath-as-tamil-nadu-chief-minister-tomorrow-rahul-gandhi-likely-to-attend-76795.html" target="_blank" rel="noopener">விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ராகுல் காந்தி? வெளியான தகவல்</a>
<h3>தவெகவுக்கு ஆதரவளிக்க எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்</h3>
அப்போது, அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக, அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டலில் தங்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி தெரிவித்திருந்தார்.
<h3>புதுச்சேரியில் முகாமிட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள்</h3>
அதன்படி, விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலர் புதுச்சேரி அருகே உள்ள புது குப்பம் மற்றும் பூரணாங்குப்பம் பகுதிகளில் அமைந்திருக்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அதிமுக மாபெரும் கட்சி என்பதால் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார். இதேபோல, அக்கட்சியை சேர்ந்த பொன்னையனும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-cm-mk-stalin-has-stated-that-let-tvk-form-the-government-and-we-wont-disturb-till-six-months-76869.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் – மு.க ஸ்டாலின்..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் &#8211; மு.க ஸ்டாலின்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-cm-mk-stalin-has-stated-that-let-tvk-form-the-government-and-we-wont-disturb-till-six-months-76869.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 07:11:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-cm-mk-stalin-has-stated-that-let-tvk-form-the-government-and-we-wont-disturb-till-six-months-76869.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக சட்டப்பேரவையில் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தற்போது வரை தமிழக வெற்றி கழகத்துக்கு 113 இடங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 6 இடங்கள் தேவைப்படுவதால், அக்கட்சியின் தலைவர் விஜய் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/mks-tvk-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் &#8211; மு.க ஸ்டாலின்.." /></figure><div class="relative basis-auto flex-col -mb-(--composer-overlap-px) pb-(--composer-overlap-px) [--composer-overlap-px:28px] grow flex">
<div class="flex flex-col text-sm"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:edf8ac2a-0134-454c-aa2a-5f012888ed2c-1" data-testid="conversation-turn-4" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="c5040ecd-3976-4404-a3b9-c641970105e0" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="0" data-end="300"><strong>மே 7, 2026:</strong> தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கட்டும் என்றும், ஆறு மாதங்களுக்கு எந்தவித தொந்தரவும் செய்யாமல் பார்ப்போம் என்றும் திமுக தலைவர் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-and-dmk-likely-to-hold-talks-over-alliance-government-formation-in-tamil-nadu-76844.html">மு.க. ஸ்டாலின்</a> தனியார் செய்தி நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி செயல்பட அனுமதிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக, இரண்டாவது பெரிய கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="0" data-end="300">பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கும் தவெக:</h3>
<p data-start="554" data-end="920">இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவையில் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தற்போது வரை தமிழக வெற்றி கழகத்துக்கு 113 இடங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 6 இடங்கள் தேவைப்படுவதால், அக்கட்சியின் தலைவர் விஜய் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரியுள்ளார்.</p>
<p data-start="922" data-end="1353">ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்குமா இல்லையா என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த முதல்வர் கன்வாய் மற்றும் உயர்தர பாதுகாப்பு நேற்று இரவு முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>

<h3 data-start="922" data-end="1353">தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கட்டும் - மு.க ஸ்டாலின்:</h3>
<p data-start="1355" data-end="1587">இந்த பரபரப்பான அரசியல் சூழலில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், “தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கட்டும். ஆறு மாதங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி பார்க்கிறோம்” என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.</p>
<p data-start="1589" data-end="1861">திமுக ஒரு அரசியலமைப்பு நெருக்கடியோ அல்லது மற்றொரு தேர்தலையோ விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், புதிய அரசு திமுக அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடர்வதோடு, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p>
<p data-start="1589" data-end="1861">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/convoy-vehicles-provided-to-tamilaga-vettri-kazhagam-leader-vijay-have-been-withdrawn-76864.html">தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் அந்தஸ்து பாதுகாப்பு ரத்து? கான்வாய் வாகனங்கள் வாபஸ்.. என்ன காரணம்!</a></p>

<h3 data-start="1589" data-end="1861">திமுக கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டும்:</h3>
<p data-start="1863" data-end="2254">மேலும், தனது முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எது என்று கேட்டபோது, “புதிய அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவு திட்டத்தை தொடர வேண்டும். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். தமிழக வெற்றி கழகம் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்குவதாக உறுதி அளித்திருந்த சூழலில், அது கடினமாக இருந்தாலும் குறைந்தபட்சம் ரூ.1000 வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p>
<p data-start="2477" data-end="2719">மேலும், 2021 தேர்தல் அறிக்கையில் கட்சி அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை தனது அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக நீட் தேர்வை ரத்து செய்வது போன்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p data-start="2721" data-end="3029" data-is-last-node="" data-is-only-node="">“இந்த தேர்தலிலும் எங்களால் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை மட்டுமே வழங்கினோம். தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்குவது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவது சற்று கடினமான விஷயம்தான். ஆனால் அதை செய்தால் மகிழ்ச்சிதான்” எனவும் அவர் பேசியுள்ளார்.</p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>118-ஐ தொடாத தவெக.. விஜய் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்.. அடுத்தக்கட்ட நகர்வு என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/why-didnt-the-governor-invite-tvk-leader-vijay-to-form-the-government-76868.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 07:02:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/why-didnt-the-governor-invite-tvk-leader-vijay-to-form-the-government-76868.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை எதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைக்கவில்லை என்ற பரபரப்பு காரணங்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 2 நாள்கள் அவகாசம் வழங்கி உள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tvk-leader-vijay-speech-in-nellai.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="118-ஐ தொடாத தவெக.. விஜய் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்.. அடுத்தக்கட்ட நகர்வு என்ன?" /></figure>தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-reportedly-unsatisfied-with-vijays-claim-to-form-government-over-lack-of-support-letters-76802.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகம்</a> 1.50 கோடிக்கு மேலான வாக்குகளை பெற்று 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் இல்லாத காரணத்தால் பிற கட்சிகளுடன் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-reportedly-unsatisfied-with-vijays-claim-to-form-government-over-lack-of-support-letters-76802.html" target="_blank" rel="noopener">காங்கிரஸ்</a> கட்சி தனது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமிழக வெற்றிக் கழகத்துக்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதில், ஒரு எம்எல்ஏ சட்டப்பேரவை தலைவராக நியமனம் செய்யப்படும்போது, அவரால் தவெக பெரும்பான்மையை நிரூபிக்கும் போது வாக்களிக்க முடியாது. இதன் காரணமாக, கூடுதலாக ஒரு எம்எல்ஏ ஆதரவு தேவைப்படும் நிலை உள்ளது. அதன்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு மொத்தம் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை உள்ளது.
<h3>ஆளுநரிடம் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கிய விஜய்</h3>
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று புதன்கிழமை ( மே 7) தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க கோரி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் என மொத்தம் 113 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் விஜய் வழங்கினார். அதனை ஆளுநர் அர்லேகர் பெற்றுக் கொண்டார். இருந்தாலும், விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைக்கவில்லை.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-and-dmk-likely-to-hold-talks-over-alliance-government-formation-in-tamil-nadu-76844.html" target="_blank" rel="noopener">தொடங்கிய திமுக – அதிமுக பேச்சுவார்த்தை – கூட்டணி ஆட்சியா? பரபரப்பு தகவல்</a>
<h3>விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது ஏன்</h3>
அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 2 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார். தற்போது, எதற்காக தவெக தலைவர் விஜயை ஆளுநர் பதவி ஏற்பதற்கு அழைப்பு விடுக்க வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது உள்ள 108 எம்எல்ஏக்களில், ஒரு இடம் குறைந்து 107 எம்எல்ஏக்கள் ஆக இருக்கும்.
<h3>பெரும்பான்மையே நிரூபிக்க முடியாத நிலை</h3>
காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 5 பேர், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு என 118- ஆக இருக்கும். இதில், ஒரு எம்எல்ஏ சபாநாயகர் ஆக நியமனம் செய்யப்படும்போது, ஆதரவு எம்எல்ஏக்கள் 117- ஆகக் குறையும். இதனால் விஜய் பெரும்பான்மையே நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாகவே ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் வருமாறு ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-governor-gives-tvk-until-friday-to-prove-majority-reports-76851.html" target="_blank" rel="noopener">பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு அவகசாம் வழங்கிய ஆளுநர் – எப்போ வரை தெரியுமா?</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் அந்தஸ்து பாதுகாப்பு ரத்து? கான்வாய் வாகனங்கள் வாபஸ்.. என்ன காரணம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/convoy-vehicles-provided-to-tamilaga-vettri-kazhagam-leader-vijay-have-been-withdrawn-76864.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 06:25:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/convoy-vehicles-provided-to-tamilaga-vettri-kazhagam-leader-vijay-have-been-withdrawn-76864.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vijay Have Been Withdrawn Convoy Vehicles : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதே போல, நீலாங்கரை வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/convoy-vehicles-withdrawn.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் அந்தஸ்து பாதுகாப்பு ரத்து? கான்வாய் வாகனங்கள் வாபஸ்.. என்ன காரணம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/admk-kp-munusamy-says-party-will-never-back-vijays-tvk-76837.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்ற தேர்தலில்</a> புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் இல்லாத காரணத்தால் சில கட்சிகளிடம் ஆதரவு கோரி தமிழக வெற்றி கழகம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 112 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் மேலும், 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மே 4- ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/governor-reportedly-unsatisfied-with-vijays-claim-to-form-government-over-lack-of-support-letters-76802.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகம்</a> 108 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. அப்போது, விஜயின் வீட்டுக்கு போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கூடுதல் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
<h3>தவெக தலைவர் விஜய்க்கு கான்வாய் வாகன பாதுகாப்பு</h3>
இதைத் தொடர்ந்து, காவல் துறையின் உயர் அதிகாரிகள் விஜயின் வீட்டின் வெளியே குவிய தொடங்கினர். பின்னர், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, தவெக தலைவர் விஜய் வெற்றி சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது, விஜயின் வாகனத்தின் முன்னும், பின்னும் முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்கும் கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அதாவது, முதல்வருக்கு வழங்கும் பாதுகாப்பு விஜய்க்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களாக தவெக தலைவர் விஜய்க்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-and-dmk-likely-to-hold-talks-over-alliance-government-formation-in-tamil-nadu-76844.html" target="_blank" rel="noopener">தொடங்கிய திமுக – அதிமுக பேச்சுவார்த்தை – கூட்டணி ஆட்சியா? பரபரப்பு தகவல்</a>
<h3>விஜய்க்கான கான்வாய் வாகனங்கள் வாபஸ்</h3>
அதன்படி, நேற்று புதன்கிழமை ( மே 6) பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்னதாகவே கான்வாய் வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அவை தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டு சென்றது. இதில், 4 கான்வாய் வாகனங்கள் புறப்பட்ட நிலையில், அதில் காவல் துறையினர் மட்டுமே பாதுகாப்பில் இருந்தனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு முதல்வருக்கு வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பு எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக கான்வாய் வாகனங்கள் எதுவும் இல்லாமல் விஜய் தனது நீலாங்கரை வீட்டிற்கு தனது காரில் புறப்பட்டு சென்றார்.
<h3>நீலாங்கரை வீட்டுக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டன</h3>
இதே போல, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், முதல்வர் பதவியில் இருப்பவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதில், கான்வாய் வாபஸ் பெறப்பட்டதற்கு விஜய் தாமாக முன்வந்து கான்வாய் வாகனங்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tn-governor-gives-tvk-until-friday-to-prove-majority-reports-76851.html" target="_blank" rel="noopener">பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு அவகசாம் வழங்கிய ஆளுநர் – எப்போ வரை தெரியுமா?</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்? விஜய்யின் முடிவு என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/vijay-likely-to-give-congress-a-cabinet-minister-post-in-tvk-government-after-60-years-in-tamil-nadu-76744.html</link>	
		<pubDate>Wed, 06 May 2026 14:56:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/vijay-likely-to-give-congress-a-cabinet-minister-post-in-tvk-government-after-60-years-in-tamil-nadu-76744.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Vijay : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் முழு ஆதரவை அளித்தனர். இந்த நிலையில் காங்கிஸ் கட்சிக்கு ஒரு அமைச்சரவை பதவி வழங்க விஜய் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tvk-congress-alliance.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்? விஜய்யின் முடிவு என்ன?" /></figure><strong>சென்னை, மே 6 :  </strong>தமிழ்நாட்டில் 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-conditional-support-for-tvk-congress-makes-biggest-announcement-76717.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழக</a>ம் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில்,  பெரும்பான்மையை நிரூபிக்க தவெக மற்ற கட்சிகளுடன் பேசி வருகிறது. மேலும் மே 6,  2026 அன்று ஆட்சியமைக்க உரிமை கோர தவெக தலைவர் <a href="https://www.tv9tamilnews.com/elections/congress-party-extends-alliance-support-to-tvk-with-condition-that-it-contests-local-body-and-lok-sabha-elections-76720.html" target="_blank" rel="noopener">விஜய்</a> ஆளுநரை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தவெகவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவளித்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அக்கட்சிக்கு 1 அமைச்சர் பதவி வழங்க விஜய் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
<h3>60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்?</h3>
இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள நிலையில் அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறவுள்ளதாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-sends-letter-to-left-parties-seeking-support-to-form-government-76699.html">விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக கடிதம்.. என்ன நிலைபாட்டில் உள்ளது இடதுசாரிகள்!</a></strong>

மற்றொரு பக்கம் அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும இதற்காக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த  தகவல் இரு தரப்பிலும் உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
<h3>விஜய்யை சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கிய காங்கிரஸ் தலைவர்கள்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Congress leaders hand over the letter of support to TVK chief Vijay at the TVK Headquarters in Chennai.</p>
Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government.… <a href="https://t.co/1Bi3Ik06Ky">pic.twitter.com/1Bi3Ik06Ky</a>

— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/2051947093678489744?ref_src=twsrc%5Etfw">May 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதற்கிடையில் மே 7, 2026 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மே 6, 2026 மாலை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான கடிததத் அவர் அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனையடுத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை வந்துள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-vijays-very-first-signature-will-be-upon-assuming-office-as-chief-minister-76695.html">முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய்யின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?..</a></strong>

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை தவெக தலைவர் விஜய்யிடம் காங்கிரஸ் தலைவர்கள் வழங்கினர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டடோர் விஜயை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எடப்பாடியுடன் தவெக பொதுச்செயலர் ஆனந்த் சந்திப்பு? ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-general-secretary-anand-meets-edappadi-k-palaniswami-76719.html</link>	
		<pubDate>Wed, 06 May 2026 13:02:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-general-secretary-anand-meets-edappadi-k-palaniswami-76719.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Anand Meet Edappadi K Palaniswami : தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், ஆதரவு குறித்து கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/eps-anand-meet.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எடப்பாடியுடன் தவெக பொதுச்செயலர் ஆனந்த் சந்திப்பு? ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-will-the-congress-support-vijay-to-form-a-government-with-strict-conditions-76669.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்ற தேர்தலில்</a> தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 சட்டமன்ற தொகுதிகள் இல்லாத காரணத்தால் தமிழக வெற்றிக் கழகம் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி கடிதம் அனுப்பியதுடன், தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, அந்த வகையில் முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்குமாறு விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இது மட்டுமின்றி, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-arrested-for-stabbing-and-killing-a-lawyer-in-palayankottai-nellai-district-76666.html" target="_blank" rel="noopener">விடுதலை சிறுத்தைகள்</a> கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சி 2 மன்ற உறுப்பினர்கள் இருப்பதால் அந்த கட்சிகளிடமும் ஆதரவு அளிக்குமாறு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
<h3>எடப்பாடியுடன் என்.ஆனந்த் திடீர் சந்திப்பு</h3>
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் இன்று திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவை அதிமுக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/aiadmk-candidates-lose-deposits-in-101-seats-in-tamil-nadu-assembly-elections-76663.html" target="_blank" rel="noopener">101 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த அதிமுக வேட்பாளர்கள்.. யார்.. யார்.. தெரியுமா?</a>
<h3>நாளை பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா</h3>
இதில், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதா அல்லது ஆதரவு தெரிவிக்காமல் திமுக கூட்டணியில் தொடர்வதா என்பது தொடர்பான முடிவை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் அறிவிக்க உள்ளார். மேலும், இன்று பிற்பகல் 2 மணிக்கு கேரள மாநிலத்தில் இருந்து சென்னை திரும்பும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்து பேச உள்ளார். இதில், ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், நாளை பதவி ஏற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
<h3>தீவிரமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை</h3>
இதில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காங்கிரஸ் ஆதரவை பெற போகிறாரா அல்லது அதிமுக ஆதரவை பெற போகிறாரா அல்லது இடதுசாரி கட்சிகளின் ஆதரவை பெற போகிறாரா என்பது விஜய் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, தவெக ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை அனைத்து கட்சிகள் சார்பிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-executive-arrested-for-harrassment-minor-girl-in-kasimedu-area-of-chennai-76708.html" target="_blank" rel="noopener">சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி அதிரடி கைது.. பெரும் பரபரப்பு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு.. உள்ளாட்சி முதல் மக்களவை வரை தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் உறுதி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/congress-party-extends-alliance-support-to-tvk-with-condition-that-it-contests-local-body-and-lok-sabha-elections-76720.html</link>	
		<pubDate>Wed, 06 May 2026 12:37:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Election Results 2026 Live]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/congress-party-extends-alliance-support-to-tvk-with-condition-that-it-contests-local-body-and-lok-sabha-elections-76720.html</guid>
		            
			

    	<description><![CDATA[Congress TVK Alliance: தமிழக வெற்றிக் கழகத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் உள்ளாட்சி மற்றும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/tvk-congress-allaince.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு.. உள்ளாட்சி முதல் மக்களவை வரை தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் உறுதி!" /></figure>தமிழகத்தில் நடைபெற்ற <a href="https://www.tv9tamilnews.com/elections/2026-tamil-nadu-assembly-election-results-details-of-seats-won-by-parties-region-wise-breakdown-76711.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தலில்</a> தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டதுடன் 108 சட்டமன்ற தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் இல்லாத காரணத்தால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் கேட்டு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஆதரவு தருமாறு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இதேபோல, அதிமுக, விசிக, <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-sends-letter-to-left-parties-seeking-support-to-form-government-76699.html" target="_blank" rel="noopener">கம்யூனிஸ்ட் கட்சிகள்</a> ஆகிய கட்சிகளிடமும் ஆதரவு கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. இதில், தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று காங்கிரஸ் தலைமை ஒருமனதாக முடிவு எடுத்தது. இதனை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் உறுதிப்படுத்தி இருந்தார்.
<h3>காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை</h3>
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி முடிவெடுக்கலாம் என்று அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்காக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பான அறிவிப்பை பிற்பகலில் வெளியிடுவதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-general-secretary-anand-meets-edappadi-k-palaniswami-76719.html" target="_blank" rel="noopener">எடப்பாடியுடன் தவெக பொதுச்செயலர் ஆனந்த் சந்திப்பு… ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை!</a>
<h3>உள்ளாட்சி - மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி</h3>
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். இதில், மதவாத கட்சியுடன் எந்த தேர்தலிலும் கூட்டணி அமைக்க கூடாது என்றும், வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைத்து தேர்தலில் சந்திக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டார்.
<h3>தவெகவுடன் - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம்</h3>
இதைத் தொடர்ந்து, பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவு குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். இதன் மூலம், கடந்த 2016, 2019, 2021, 2024, 2026 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்த நிலையில், 10 ஆண்டு கால கூட்டணி முடிவடைந்துள்ளது.

மேலும்: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-talks-with-aiadmk-for-an-alliance-lalgudi-mla-leemaros-said-76659.html" target="_blank" rel="noopener">அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை.. நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்?</a> ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>