<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>Tamil Nadu Election 2026: தேர்தல் செய்திகள் Live: Elections 2026 Latest News, Assembly Elections, Opinion Polls, Exit polls Result Date and Latest News in Tamil</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/elections/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/elections</link>
 <description>Tamil Nadu Assembly Election 2026 – தொகுதி வாரியாக செய்திகள், வேட்பாளர்கள் பட்டியல், வாக்குப்பதிவு நாள், தேர்தல் முந்தைய கணிப்புகள் (Pre Poll), தேர்தல் பிந்தைய கணிப்புகள் (exit poll) மற்றும் அரசியல் ரீதியான நிகழ்வுகள் அனைத்தும் இங்கே. Elections 2026: சட்டமன்ற தேர்தல்கள் - Check Assembly elections, dates and candidates list. Assembly Elections, Opinion Polls, Exit polls Result Date, time and Latest News in Tamil on tv9tamilnews.com</description><lastBuildDate>Sun, 26 Apr 2026 22:41:04 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>வாக்காளர்களுக்கு ரூ.4,000 வரை பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது &#8211; கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/puthiya-thamilagam-katchi-leader-k-krishnasamy-speaks-on-tamil-nadu-assembly-elections-2026-74494.html</link>	
		<pubDate>Sun, 26 Apr 2026 22:41:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/puthiya-thamilagam-katchi-leader-k-krishnasamy-speaks-on-tamil-nadu-assembly-elections-2026-74494.html</guid>
		            
														<description><![CDATA[புதிய தமிழகம் கட்சி தலைவர் கே. கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஒரு கட்சி ரூ.2000 கொடுத்தால் இன்னொரு கட்சி ரூ. 4000 கொடுக்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று பேசினார். அவர் பேசிய தற்போது பரபரப்பாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/krishnasamy-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்காளர்களுக்கு ரூ.4,000 வரை பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது &#8211; கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/zEOUKxXB-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>புதிய தமிழகம் கட்சி தலைவர் கே. கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஒரு கட்சி ரூ.2000 கொடுத்தால் இன்னொரு கட்சி ரூ. 4000 கொடுக்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று பேசினார். அவர் பேசிய தற்போது பரபரப்பாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>&#8220;தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக&#8221;..  ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/dmk-resorts-to-thuggery-out-of-fear-of-defeat-tvk-adhav-arjuna-levels-severe-allegation-74404.html</link>	
		<pubDate>Sun, 26 Apr 2026 13:58:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/dmk-resorts-to-thuggery-out-of-fear-of-defeat-tvk-adhav-arjuna-levels-severe-allegation-74404.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: தேர்தலுக்கு முந்தைய கடைசி நான்கு நாட்களில் தமிழகத்தின் அரசியல் சூழலே முழுமையாக மாறியுள்ளது. தமிழக மக்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/aadhav-arjuna-tvk-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக&#8221;..  ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!" /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-lowest-rate-of-growth-in-voter-turnout-in-two-decades-74347.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றத் தேர்தல்</a> வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4ஆம் தேதியை எதிர்கொள்ளத் தமிழக வெற்றி கழகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இது தொடர்பாக விஜய் இட்டுள்ள அதிரடி உத்தரவுகள் குறித்துக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விரிவாகப் பேசியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிப்பதில் கட்சி மிகத் தீவிரமாக இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html">எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..</a></strong>
<h3>முறைகேட்டிற்கும் இடமளிக்கக் கூடாது:</h3>
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும், பாதுகாப்பு அறைகளைக் கண்காணிக்க 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என மொத்தம் மூன்று ஷிப்ட் அடிப்படையில் கட்சித் தொண்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஸ்ட்ராங் ரூம்களை ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என விஜய் அறிவுறுத்தியதாக அவர் கூறினார். எந்தவொரு முறைகேட்டிற்கும் இடமளிக்கக் கூடாது என்பதில் தலைவர் விஜய் மிக உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு தொகுதிக்கும் 14 வாக்கு எண்ணிக்கை முகவர்களை உடனடியாக நியமிக்கவும், அவர்களுடன் ஒரு சட்ட வல்லுநர் குழுவை இணைக்கவும் வேட்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
<h3>கடைசி நேரத்தில் மாறிய டிரெண்ட்:</h3>
தேர்தல் களம் குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, "தேர்தலுக்கு முந்தைய கடைசி நான்கு நாட்களில் தமிழகத்தின் அரசியல் சூழலே முழுமையாக மாறியுள்ளது. தமிழக மக்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்," எனத் தெரிவித்தார்.
<h3>சேகர் பாபு மீது நேரடித் தாக்குதல்:</h3>
தேர்தல் நாளன்று சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சேகர் பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோரிடையே ஏற்பட்ட நேரடி மோதல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமானது. இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா கூறியதாவது, திமுக எப்போதெல்லாம் தோல்வி பயத்தைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் ரௌடிசத்தைக் கையில் எடுப்பார்கள். முன்னாள் அமைச்சர் சேகர் பாபு 30 முதல் 40 பேரைத் திரட்டி வந்து தவெக வேட்பாளர் அசோக்கை நேரடியாகத் தாக்கியுள்ளார்" என்று சாடியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த வேட்பாளர் அசோக் மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் தாக்கப்பட்ட வழக்கறிஞர்கள் தற்போதுதான் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html">தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?</a></strong>
<h3>பண நாயகம் vs ஜனநாயகப் புரட்சி:</h3>
திமுகவின் தேர்தல் வியூகம் குறித்துப் பேசிய அவர், ஒரு வாக்கிற்கு 5,000 ரூபாய் வரை திமுகவினர் விநியோகம் செய்துள்ளதாகவும், அந்தப் பணத்தை மட்டுமே அவர்கள் நம்பியிருப்பதாகவும் விமர்சித்தார். "ஆனால், தமிழக மக்கள் இந்த ரௌடிசத்தையும், பண விநியோகத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தவெக எந்த இடத்திலும் பணம் கொடுக்கவில்லை. நாங்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் ஏற்படுத்திய புரட்சிக்கு ஜூன் 4-ஆம் தேதி மகத்தான ரிசல்ட் கிடைக்கும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரயில், பேருந்துகளில் இடமில்லை&#8230; விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/airline-ticket-prices-have-increased-sharply-due-to-the-tamil-nadu-assembly-elections-74370.html</link>	
		<pubDate>Sun, 26 Apr 2026 11:06:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/airline-ticket-prices-have-increased-sharply-due-to-the-tamil-nadu-assembly-elections-74370.html</guid>
		            
			

    	<description><![CDATA[Airline Ticket Prices: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேரம் என்பதால் விமானங்களில் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பொது மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த டிக்கெட் கட்டணம் எப்போது குறையும் என புலம்பி வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/01/12000-flights-canceled-due-to-major-storm-in-us.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரயில், பேருந்துகளில் இடமில்லை&#8230; விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-lowest-rate-of-growth-in-voter-turnout-in-two-decades-74347.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளியூர்கள் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான வாக்காளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருகை தந்தனர். இதன் காரணமாக, தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான நிறுவனங்கள் தங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை அதிகளவு உயர்த்தியது. இந்த நிலையில், தேர்தல் முடிந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், தற்போதும் விமான கட்டணம் குறைந்தபாடில்லை. ஏனென்றால், வாக்குப் பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் மீண்டும் தாங்கள் வேலை பார்க்கும் ஊர்களுக்கு செல்லும் நிலையில், <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-lowest-rate-of-growth-in-voter-turnout-in-two-decades-74347.html" target="_blank" rel="noopener">விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள்</a> குறைக்கப்படாமல் அதிக விலையிலேயே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், விமானங்களுக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
<h3>ரூ.15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ள விமான கட்டணம்</h3>
அதன்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி விமான நிலையம் செல்வதற்கு சாதாரண நாட்களில் சுமார் ரூ.9,000- ஆக இருக்கும் கட்டணம், தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரூ.15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதே போல, திருச்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை விமான நிலையம் செல்வதற்கு சாதாரண நாட்களில் சுமார் ரூ.6 ஆயிரமாக இருந்த விமான கட்டணம், தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையத்துக்கு ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/food-prices-rise-sharply-in-thanjavur-due-to-shortage-of-commercial-cylinders-74355.html" target="_blank" rel="noopener">சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!</a>
<h3>சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள்</h3>
இதே போல, ஹைதராபாத் செல்வதற்கு விமான கட்டணம் ரூ.8 ஆயிரமாகவும், சென்னை விமான நிலையம் செல்வதற்கு ரூ.7 ஆயிரமாகவும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.7,500- ஆக இருந்த விமான கட்டணம், தற்போது ரூ.11,500- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை செல்வதற்கு சாதாரண நாட்களில் ரூ.6 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரூ.7,500- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
<h3>கடும் அதிர்ச்சியில் விமான பயணிகள்</h3>
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்திருந்த பொது மக்களின் வருகையை வைத்து விமான நிறுவனங்கள் அதிக அளவு டிக்கெட் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக, வெளியூர் செல்லும் பொதுமக்கள் அதிகளவு விமான கட்டணம் காரணமாக கடும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். ஏற்கனவே, வெளியூர்களில் இருந்து தமிழகம் வருவதற்கான விமான கட்டணம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருந்து வெளிநாடுகள் செல்வதற்கான விமான கட்டணமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/auto-lpg-shortage-drivers-in-chennai-wait-in-queues-for-hours-indian-oil-corporation-clarifies-74352.html" target="_blank" rel="noopener">ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத் தேர்தல் களம்.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு உயர்வு விகிதம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-lowest-rate-of-growth-in-voter-turnout-in-two-decades-74347.html</link>	
		<pubDate>Sun, 26 Apr 2026 08:07:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-lowest-rate-of-growth-in-voter-turnout-in-two-decades-74347.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: தற்போதைய தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் மட்டுமே கூடுதலாகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், புதிய வாக்காளர்களின் பங்களிப்பு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையின் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பது அரசியல் ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/lowest-rate-of-growth-in-voter-turnout.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத் தேர்தல் களம்.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு உயர்வு விகிதம்.." /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-85-percent-turnout-a-milestone-truth-revealed-by-statistics-74068.html" target="_blank" rel="noopener">தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்</a> வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 2026-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 85.15% ஆக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தொடர் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தச் சதவீத உயர்வுக்குப் பின்னால் ஒரு முக்கியமான கவலைக்குரிய புள்ளிவிவரமும் மறைந்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தாலும், முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html">எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..</a></strong>
<h3>வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவு:</h3>
கடந்த காலத் தேர்தல்களைப் பார்க்கும்போது, 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதற்கு முந்தைய 2001ம் ஆண்டை விட சுமார் 48 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருந்தனர். இது 17.24% என்ற அபாரமான வளர்ச்சியாகப் பார்க்கப்பட்டது. அதேபோல், 2011ல் 11.4% மற்றும் 2016ல் 18.5% என வாக்களித்தவர்களின் எண்ணிக்கை விகிதம் ஆரோக்கியமான உயர்வைக் கண்டு வந்தது. ஆனால், 2021-ல் இந்த விகிதம் 6.22% ஆகக் குறைந்த நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் அது மேலும் சரிந்து 5.53% என்ற நிலையை எட்டியுள்ளது.
<h3>20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு:</h3>
தற்போதைய தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் மட்டுமே கூடுதலாகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், புதிய வாக்காளர்களின் பங்களிப்பு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையின் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பது அரசியல் ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் வாக்களித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு விகிதம் இப்போதுதான் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது என்பதைப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
<h3>வாக்குச்சாவடிக்கு வரும் ஆர்வம் குறைவு:</h3>
இதன் மூலம், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலோர் வாக்களித்திருந்தாலும், புதிய வாக்காளர்களின் சேர்க்கை அல்லது அவர்கள் வாக்குச்சாவடிக்கு வரும் ஆர்வம் முந்தைய ஆண்டுகளை விடக் குறைந்திருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தில் சாதனை படைத்திருந்தாலும், மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்ப வாக்காளர் எண்ணிக்கையின் உயர்வு விகிதம் சரிவடைந்திருப்பது இந்தத் தேர்தலின் ஒரு முக்கிய கவனிக்கத்தக்க அம்சமாக மாறியுள்ளது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html">தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?</a></strong>
<h3>வரலாற்று ரீதியான வளர்ச்சி:</h3>
கடந்த 25 ஆண்டுகாலத் தரவுகளைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. 1996-ல் 2.71 கோடி வாக்குகளாக இருந்தது, 2001-ல் 2.80 கோடியாக உயர்ந்தது. 2006-ல் அதற்கு முந்தைய தேர்தலை விட 50 லட்சம் வாக்குகள் அதிகரித்தது. 2016 தேர்தலில் மிக அதிகபட்சமாக 64 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவானது. தற்போது பதிவாகியுள்ள 30 லட்சம் கூடுதல் வாக்குகள் என்பது, “இயல்பான வளர்ச்சி” போலவே காட்சியளிக்கிறது. குறிப்பாக, இந்தத் தரவுகளின்படி பார்த்தால், இந்த முறை பதிவான 30 லட்சம் கூடுதல் வாக்குகள் என்பது கடந்த கால சராசரி வளர்ச்சியே தவிர, இது ஒரு அசாதாரணமான உயர்வு அல்ல என்பது தெளிவாகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;விரக்தியின் விளிம்பில் திமுக&#8221;.. அதிமுக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/edappadi-palaniswami-strongly-condemns-attacks-on-aiadmk-cadres-dmk-on-the-brink-of-despair-74340.html</link>	
		<pubDate>Sun, 26 Apr 2026 07:34:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/edappadi-palaniswami-strongly-condemns-attacks-on-aiadmk-cadres-dmk-on-the-brink-of-despair-74340.html</guid>
		            
			

    	<description><![CDATA[Edappadi Palaniswami Condemns: இந்தத் தாக்குதல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, "திமுகவின் ஆட்சி முடியப்போகும் நிலையில், தோல்வி பயம் மற்றும் விரக்தியின் விளிம்பில் அவர்கள் இத்தகைய அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று அவர் சாடியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/edappadi-palaniswami-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;விரக்தியின் விளிம்பில் திமுக&#8221;.. அதிமுக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!" /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/5-death-sentences-for-the-convict-in-the-indecent-assault-case-of-5-girls-that-shook-tamil-nadu-74079.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காகப் பாடுபட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாகப் பொள்ளாச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி ஒன்றிய அதிமுக தொண்டர் மாரிமுத்து என்பவர் மீது, பொள்ளாச்சி ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல் என்பவர் தனது காரை ஏற்றித் தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் போது அதிமுகவின் வெற்றிக்காக மாரிமுத்து தீவிரமாகப் பணியாற்றியதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என அதிமுக தரப்பு குற்றம் சாட்டுகிறது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/swathi-murder-case-madras-hc-dismisses-plea-against-nhrc-closure-of-probe-into-ramkumars-death-74071.html">ராம்குமார் மரண வழக்கு.. 10 ஆண்டு கால சட்டப் போராட்டம் நிறைவு.. உயர்நீதிமன்றம் கூறியது என்ன?</a></strong>
<h3>அதிமுக நிர்வாகி மீது கார் ஏற்றி மோதல்:</h3>
உடுமலைப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார். அதில், 24.4.2026 அன்று அதிமுக நிர்வாகி மாரிமுத்து, தனது மாற்றுத்திறனாளி மகனைப் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துகொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், தேர்தல் நாளில் தனக்கு எதிராகப் பணியாற்றியதைக் கூறி, மாரிமுத்துவின் வாகனம் மீது தனது காரை ஏற்றியுள்ளார்.
<h3>தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்:</h3>
இந்தத் தாக்குதலில் மாரிமுத்துவும் அவரது மகனும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அருண், ஜெகநாதன் உள்ளிட்ட நால்வர் மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கதிர்வேல், அவரது மனைவி பானுமதி, தந்தை கோபால்சாமி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் இவர்களின் வாகனத்தைச் சேதப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தற்போது மாரிமுத்துவும் அவரது மகனும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
<h3>கிருஷ்ணகிரியில் தாக்குதல் சம்பவம்:</h3>
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் வாக்குச்சாவடி முகவராக சிறப்பாகச் செயல்பட்ட இதயாத் என்பவர், திமுகவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி பணியாற்றிய ஒரு முகவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
<h3>தோல்வி பயத்தில் திமுக:</h3>
இந்தத் தாக்குதல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, "திமுகவின் ஆட்சி முடியப்போகும் நிலையில், தோல்வி பயம் மற்றும் விரக்தியின் விளிம்பில் அவர்கள் இத்தகைய அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று அவர் சாடியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதிமுக தொண்டர்களைத் திட்டமிட்டு இலக்கு வைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்தகைய அச்சுறுத்தல்களையும் மீறி கட்சியின் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்குத் தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/load-lifting-worker-was-hacked-to-death-at-rajaji-vegetable-market-in-chinna-kanchipuram-74245.html" target="_blank" rel="noopener">இரவில் நண்பர்களுடன் மது விருந்து.. காலையில் ரத்த வெள்ளத்தில் கொலை.. காஞ்சிபுரத்தில் நடுங்க வைக்கும் சம்பவம்!</a>
<h3>சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்:</h3>
மேலும், இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரை (DGP) அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே மோதல்கள் வெடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சென்னை போறீங்களா.. இன்று முதல் அதிரடி போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் உள்ளே!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/traffic-changes-in-chennai-on-april-26th-and-27th-in-tamil-nadu-assembly-election-voting-concludes-74333.html</link>	
		<pubDate>Sun, 26 Apr 2026 06:22:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/traffic-changes-in-chennai-on-april-26th-and-27th-in-tamil-nadu-assembly-election-voting-concludes-74333.html</guid>
		            
			

    	<description><![CDATA[Traffic Changes In Chennai: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்காக சொந்த ஊர் சென்ற பொது மக்கள் சென்னை திரும்ப உள்ளனர். இதனால், இன்று மற்றும் நாளை சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/chennai-traffic.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னை போறீங்களா.. இன்று முதல் அதிரடி போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் உள்ளே!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/young-woman-commits-suicide-after-being-refused-ac-in-thiruvallur-74169.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் தங்களது வாக்குகளை செலுத்துவதற்காக சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 19.50 லட்சம் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) மற்றும் நாளை திங்கள்கிழமை (ஏப்ரல் 27) ஆகிய தேதிகளில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரே நாளில் ஏராளமான பொதுமக்கள் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/young-woman-commits-suicide-after-being-refused-ac-in-thiruvallur-74169.html" target="_blank" rel="noopener">சென்னை</a> திரும்பும் நிலையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், குறித்த நேரத்தில் பொதுமக்கள் தங்களது இடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, இதனை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்று பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நகரை சென்றடையலாம்.
<h3>சிங்கப்பெருமாள் கோவில் வழியாக போக்குவரத்து</h3>
இதே போல, சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பி விடப்படும். அந்தப் பகுதியில் இருந்து அந்த வாகனங்கள் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை சென்று சேரலாம். மேலும், புதுச்சேரி மாநிலம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை வழியாக சென்னைக்கு வந்து சேரலாம்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/load-lifting-worker-was-hacked-to-death-at-rajaji-vegetable-market-in-chinna-kanchipuram-74245.html" target="_blank" rel="noopener">இரவில் நண்பர்களுடன் மது விருந்து.. காலையில் ரத்த வெள்ளத்தில் கொலை.. காஞ்சிபுரத்தில் நடுங்க வைக்கும் சம்பவம்!</a>
<h3>சென்னையில் 2 நாள்களை போக்குவரத்து மாற்றம்</h3>
எனவே, சென்னையில் இரு நாட்கள் மாற்றி அமைக்கப்பட்ட இந்த போக்குவரத்து மாற்றங்களை பின்பற்றி பொதுமக்கள் தங்களது இடங்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று சேரலாம். மேலும், போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்றவாறு சீரான போக்குவரத்துக்கு பொதுமக்கள் உதவி அளிக்க வேண்டும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். பொதுவாகவே, பண்டிகை காலங்கள், அரசு விடுமுறைகள், கோடைகால விடுமுறைகள் ஆகிய காலங்களில் சென்னையில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கமாகும்.
<h3>போக்குவரத்தால் பல மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பிப்பு</h3>
அதன்படி, அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்புவது வழக்கம். இதில், ஒரே நாளில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வாகனங்களில் சென்னையை நோக்கி வரும்போது, பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகி வருகிறது. தற்போது, சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/convict-sentenced-to-16-years-in-prison-for-harassment-15-year-old-girl-in-thoothukudi-74247.html" target="_blank" rel="noopener">சிறுமி பாலியல் வழக்கு.. குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை.. 9 ஆண்டுகளுக்கு பின் நீதி.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திட்டமிட்டு பேருந்து சேவைக்கு தடை &#8211; தவெக நிர்வாகி நிர்மல் குமார் பரபரப்பு புகார்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/ctr-nirmalkumar-reacts-to-tamil-nadu-84-69-percent-voter-turnout-stalin-and-vijay-statements-74296.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 22:08:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/ctr-nirmalkumar-reacts-to-tamil-nadu-84-69-percent-voter-turnout-stalin-and-vijay-statements-74296.html</guid>
		            
														<description><![CDATA[சென்னை விமான நிலையத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டே பேருந்து வசதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்திய ஒரு சில அதிகாரிகள் தான் இதற்கு காரணம். போக்குவரத்து துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் மூலம் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டு பேருந்து சேவையை நிறுத்தி உள்ளனர் என்று தெரிவித்தார்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/nirmal-kumar-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திட்டமிட்டு பேருந்து சேவைக்கு தடை &#8211; தவெக நிர்வாகி நிர்மல் குமார் பரபரப்பு புகார்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/6leOpogS-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>சென்னை விமான நிலையத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டே பேருந்து வசதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்திய ஒரு சில அதிகாரிகள் தான் இதற்கு காரணம். போக்குவரத்து துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் மூலம் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டு பேருந்து சேவையை நிறுத்தி உள்ளனர் என்று தெரிவித்தார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தேர்தல் முறைக்கேடு தொடர்பாக வேட்பாளர் கே.ராகுல் காந்தி பரபரப்பு புகார்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/aiptmmk-candidate-k-raghul-gandhi-alleges-malpractice-by-independent-candidates-in-coimbatore-north-74293.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 21:55:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/aiptmmk-candidate-k-raghul-gandhi-alleges-malpractice-by-independent-candidates-in-coimbatore-north-74293.html</guid>
		            
														<description><![CDATA[கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள அகில இந்திய புரட்சி தலைவர் வேட்பாளர்  மக்கள் முன்னேற்ற கழக  கே.ராகுல் காந்தி தேர்தல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், 13 சுயேட்சை வேட்பாளர்கள் மூலம் திமுக மற்றும் பாஜக கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/k-rahul-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தேர்தல் முறைக்கேடு தொடர்பாக வேட்பாளர் கே.ராகுல் காந்தி பரபரப்பு புகார்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/0Hl57iFJ-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள அகில இந்திய புரட்சி தலைவர் வேட்பாளர்  மக்கள் முன்னேற்ற கழக  கே.ராகுல் காந்தி தேர்தல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், 13 சுயேட்சை வேட்பாளர்கள் மூலம் திமுக மற்றும் பாஜக கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்த அஇபுதமமுக வேட்பாளர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/raghul-gandhi-contested-in-the-coimbatore-north-constituency-filed-a-complaint-to-the-election-officer-of-coimbatore-74323.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 20:26:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/raghul-gandhi-contested-in-the-coimbatore-north-constituency-filed-a-complaint-to-the-election-officer-of-coimbatore-74323.html</guid>
		            
			    	<description><![CDATA[அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோயம்புத்தூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ராகுல் காந்தி, 2026 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களை குழப்பமடைய செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் 13 வேட்பாளர்களை நிறுத்தியதாக கோயம்புத்தூர் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/videos/raghul-gandhi-contested-in-the-coimbatore-north-constituency-filed-a-complaint-to-the-election-officer-of-coimbatore-74323.html"><img width="1280" height="720" src="https://www.tv9tamilnews.com/wp-content/uploads/2025/03/IPL-DK-Without-Frame.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Ipl Dk Without Frame" /></a></dt><p>Ipl Dk Without Frame</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/videos/raghul-gandhi-contested-in-the-coimbatore-north-constituency-filed-a-complaint-to-the-election-officer-of-coimbatore-74323.html"><img width="1280" height="720" src="https://www.tv9tamilnews.com/wp-content/uploads/2025/03/logo-tamil.png" class="attachment-large size-large wp-post-image" alt="Logo Tamil" /></a></dt><p>Logo Tamil</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/videos/raghul-gandhi-contested-in-the-coimbatore-north-constituency-filed-a-complaint-to-the-election-officer-of-coimbatore-74323.html"><img width="1280" height="720" src="https://www.tv9tamilnews.com/wp-content/uploads/2025/03/tv9tamil-60x60-1.webp" class="attachment-large size-large wp-post-image" alt="Tv9tamil 60x60 1" /></a></dt><p>Tv9tamil 60x60 1</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/videos/raghul-gandhi-contested-in-the-coimbatore-north-constituency-filed-a-complaint-to-the-election-officer-of-coimbatore-74323.html"><img width="1280" height="720" src="https://www.tv9tamilnews.com/wp-content/uploads/2025/03/images-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Images" /></a></dt><p>Images</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/videos/raghul-gandhi-contested-in-the-coimbatore-north-constituency-filed-a-complaint-to-the-election-officer-of-coimbatore-74323.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/03/20121918/images-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Images" /></a></dt><p>Images</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>வாக்குப்பதிவு நாளில் பேருந்துகள் நிறுத்தம் திட்டமிட்ட சதி.. தவெக நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-ctr-nirmal-kumar-said-bus-services-were-suspended-on-day-of-polling-for-tn-assembly-elections-74238.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 18:59:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-ctr-nirmal-kumar-said-bus-services-were-suspended-on-day-of-polling-for-tn-assembly-elections-74238.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK CTR Nirmal Kumar Latest Press meet : தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நாளில் திட்டமிட்டே அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டினார் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/08/ctr-nirmal-kumar-tvk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்குப்பதிவு நாளில் பேருந்துகள் நிறுத்தம் திட்டமிட்ட சதி.. தவெக நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/speculation-over-tvk-chief-vijay-planning-australia-trip-on-may-4-tamil-nadu-election-result-day-74168.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்ற தேர்தல்</a> வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டே பேருந்து சேவை தடை செய்யப்பட்டுள்ளதா தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொது செயலாளர் <a href="https://www.tv9tamilnews.com/elections/speculation-over-tvk-chief-vijay-planning-australia-trip-on-may-4-tamil-nadu-election-result-day-74168.html" target="_blank" rel="noopener">சி. டி. ஆர். நிர்மல் குமார்</a> குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 25) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டே பேருந்து வசதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்திய ஒரு சில அதிகாரிகள் தான் இதற்கு காரணம். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேல், உமாநாத் ஐஏஎஸ் போன்ற ஒரு சில அதிகாரிகள் சேர்ந்துதான் மொத்த சட்டமன்ற தேர்தலையும் நடத்தி இருந்தனர். பொதுவாக, மு. க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு தேர்தல் என்றாலே என்னவென்று தெரியாது. அவர்கள் இருவருக்கும் பின்னணியாக மேற்கண்ட அதிகாரிகள் தான் செயல்பட்டுள்ளனர். போக்குவரத்து துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் மூலம் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டு பேருந்து சேவையை நிறுத்தி உள்ளனர்.
<h3>20 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை</h3>
இதே போல, முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த முக்கிய பேருந்துகள் அனைத்தும் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து பேருந்துகளும் அந்தந்த பனிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால், தமிழக முழுவதும் சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் நடுரோட்டில் நிற்கதியாக நின்றுள்ளனர். இதில், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் சுமார் 15 மணி நேரத்துக்கு மேலாக உணவு மற்றும் நீரின்றி தவித்தனர். எனவே, இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-elections-2026-no-need-for-re-polling-election-commission-official-announcement-74095.html" target="_blank" rel="noopener">தமிழகத் தேர்தல் 2026.. மறுவாக்குப்பதிவு அவசியமில்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!</a>
<h3>தமிழகத்தில் திட்டமிட்டே பேருந்து நிறுத்தம்</h3>
ஏனென்றால், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தமிழக தேர்தல் ஆணையம் போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. அதை காற்றில் பறக்க விட்டு விட்டு வேண்டுமென்றே வாக்குப்பதிவு நாளில் போதிய பேருந்து ஏற்பாடுகள் செய்யாமல், வந்த பேருந்துகளையும் திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகளான டேவிட்சன் தேவாசீர்வாதம், செந்தில்வேல், உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்கள், திமுகவினர் என அனைவரும் துணை நின்று செயல்பட்டுள்ளனர்.
<h3>மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் மே 4- இல் வரும்</h3>
இவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உரிய தண்டனை வழங்க வேண்டும். இதன் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும். 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய கும்பலிடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மக்களும் வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்பார்க்கும் விடுதலை மே 4-ஆம் தேதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/potential-for-power-shortage-in-tamil-nadu-starting-next-month-union-ministry-of-power-issues-warning-74109.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு.. மத்திய மின்சார அமைச்சகம் எச்சரிக்கை!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அறைகள் காலி.. கார்கள் ஒப்படைப்பு.. விடைபெறும் புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/ministers-and-mlas-vacate-chambers-in-puducherry-legislative-assembly-74222.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 18:22:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/ministers-and-mlas-vacate-chambers-in-puducherry-legislative-assembly-74222.html</guid>
		            
			

    	<description><![CDATA[Puducherry Ministers And MLA: புதுச்சேரி மாநிலத்தில் அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் உள்ள தங்களது அறைகளை காலி செய்து வருகின்றனர். கார்களையும் ஒப்படைத்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/puducherry-assemply.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அறைகள் காலி.. கார்கள் ஒப்படைப்பு.. விடைபெறும் புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-stated-that-tamil-nadu-polling-is-a-historic-event-and-conveyed-his-wishes-to-people-73902.html" target="_blank" rel="noopener">தமிழகம்</a>, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலை அறிவித்தது. இதில், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி (வியாழக்கிழமை) <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-stated-that-tamil-nadu-polling-is-a-historic-event-and-conveyed-his-wishes-to-people-73902.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்</a> நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 1,099 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 34 பேர், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 117 என மொத்தம் 294 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியில் திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்தன.
<h3>புதுச்சேரியில் 4 முனை போட்டி - வரலாற்று வாக்குப்பதிவு</h3>
இதே போல, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட்டன. இதனால், தமிழகத்தை போல புதுச்சேரியிலும் 4 முனை போட்டி நிலவியது. புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் அதிகபட்சமாக 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி ஒரு வரலாற்றை பதிவு செய்திருந்தது. கடந்த 1964- ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தலில் இதுவே மிக உயர்ந்த வாக்கு பதிவாகும். இந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 4- ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட உள்ளன.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/peta-india-has-sent-a-letter-to-tvk-leader-vijay-regarding-pigeon-issue-at-trichy-campaign-73967.html" target="_blank" rel="noopener">தவெக தலைவர் விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்.. பீட்டா அமைப்பு அனுப்பிய கடிதம்..</a>
<h3>முதல்வர் முதல் - எம்எல்ஏக்கள் வரை அறைகள்</h3>
இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவை துணைத் தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு அலுவலகங்கள் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த காரணத்தால், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்கள் அலுவலகங்களை பூட்டிவிட்டு தேர்தல் பணிகளுக்கு சென்று விட்டனர். இதே போல, அவர்கள் பயன்படுத்தி வந்த கார்களும் அரசு செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
<h3>சட்டப்பேரவையில் அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்</h3>
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு 8 நாள்களே உள்ள நிலையில், தங்களது அலுவலகங்களை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் காலி செய்து வருகின்றனர். மேலும், அலுவலகத்தில் பயன்படுத்திய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை வாகனங்கள் மூலம் ஏற்றி செல்கின்றனர். தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு மீண்டும் அந்த அறைகள் புதுப்பிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-elections-2026-no-need-for-re-polling-election-commission-official-announcement-74095.html" target="_blank" rel="noopener">தமிழகத் தேர்தல் 2026.. மறுவாக்குப்பதிவு அவசியமில்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-proposed-cabinet-list-is-going-viral-on-social-media-74204.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 17:35:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilaga-vettri-kazhagam-proposed-cabinet-list-is-going-viral-on-social-media-74204.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tvk Proposed Cabinet List: தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேச அமைச்சரவை பட்டியல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது அந்தக் கட்சியினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், யார் யாருக்கு எந்த துறை இலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tvk-proposed-cabinet-list.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/after-a-hectic-election-campaign-cm-mk-stalin-to-spend-one-week-vacation-at-kodaikanal-74080.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி அமைதியான முறையில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 4- ஆம் தேதி ( திங்கள் கிழமை) நடைபெற உள்ளது. இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-mk-stalin-holds-meeting-with-dmk-candidates-and-issues-advisory-for-may-4th-result-day-73925.html" target="_blank" rel="noopener">திமுக கூட்டணி</a>, தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தல் கணிப்புகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேச அமைச்சரவை பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இதில்,

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/income-tax-department-stated-in-high-court-that-deputy-cm-udhayanidhi-stalin-property-details-will-be-verified-after-election-result-74072.html" target="_blank" rel="noopener">துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்.. தேர்தல் முடிவுக்கு பின் சரிபார்க்கப்படும் – வருமான வரித்துறை..</a>
<ul>
 	<li>பெரம்பூர் விஜய் - முதல்வர், உள்துறை, மகளிர் நலன், குழந்தைகள் மேம்பாடு துறை அமைச்சர்.</li>
 	<li>கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் - பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அமைச்சர்.</li>
 	<li>வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா- செய்தி, விளம்பரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.</li>
 	<li>டி. நகர் என்.ஆனந்த் - போக்குவரத்து துறை அமைச்சர்.</li>
 	<li>மயிலாப்பூர் வெங்கட் ரமணன் - நிதித்துறை அமைச்சர்.</li>
 	<li>திருச்செங்கோடு அருண்ராஜ் - உணவுத்துறை அமைச்சர்.</li>
 	<li>ஆர். கே. நகர் மரிய வில்சன் - உயர் கல்வித்துறை அமைச்சர்.</li>
 	<li>திருப்பரங்குன்றம் சி.டி.ஆர். நிர்மல் குமார் - பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை அமைச்சர்.</li>
 	<li>காரைக்குடி பிரபு - பால்வளத்துறை அமைச்சர்.</li>
 	<li>மயிலம் விஜய் நிரஞ்சன் - தகவல் தொடர்புத்துறை அமைச்சர்.</li>
 	<li>மதுராந்தகம் எழில் கேத்தரின் - சுகாதாரத்துறை அமைச்சர்.</li>
 	<li>மதுரை மத்தி முஸ்தபா - சத்துணவுத் துறை அமைச்சர்.</li>
</ul>
[caption id="attachment_74213" align="alignnone" width="200"]<img class="size-medium wp-image-74213" src="https://www.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/proposed-cabinet-list-200x300.jpg" alt="Proposed Cabinet List" width="200" height="300" /> தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்[/caption]
<h3>வேளாண் துறை முதல் ஊரக வளர்ச்சி துறை வரை</h3>
<ul>
 	<li>திருப்பூர் தெற்கு - வேளாண்மை துறை அமைச்சர்.</li>
 	<li>சிவகங்கை குழந்தை ராணி நாச்சியார் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்.</li>
 	<li>சேலம் மேற்கு பார்த்திபன் - தொழில்துறை அமைச்சர்.</li>
 	<li>வால்பாறை ஸ்ரீதரன் - வனத்துறை அமைச்சர்.</li>
 	<li>லால்குடி கு.ப. கிருஷ்ணன் - வருவாய்த்துறை அமைச்சர்.</li>
 	<li>ராசிபுரம் லோகேஷ் - அறநிலையத்துறை அமைச்சர்.</li>
 	<li>அவிநாசி கமலி - விளையாட்டு துறை அமைச்சர்.</li>
 	<li>கும்பகோணம் வினோத் - கூட்டுறவுத்துறை அமைச்சர்.</li>
 	<li>சீர்காழி கோபிநாத் - பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்.</li>
 	<li>திருத்தணி சத்ய குமார் - பட்டியல் இனத்தவர் நலன் துறை அமைச்சர்.</li>
 	<li>ஆண்டிப்பட்டி லெஃப்ட் பாண்டி - சட்டத்துறை அமைச்சர்.</li>
 	<li>கம்பம் ஜெகநாத் மிஸ்ரா - சமூக நீதித்துறை அமைச்சர்.</li>
 	<li>சோழவந்தான் கருப்பையா - ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்.</li>
</ul>
<h3>நெடுஞ்சாலை துறை முதல் வெளிநாடு வாழ் தமிழர் நலன் வரை</h3>
<ul>
 	<li>திருநெல்வேலி ஆர். எஸ். முருகன் - நெடுஞ்சாலை துறை அமைச்சர்.</li>
 	<li>ஆலங்குளம் விபின் சக்கரவர்த்தி - கனிமவளத்துறை அமைச்சர்.</li>
 	<li>குளச்சல் பிரேம் அலெக்ஸ் - சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்.</li>
 	<li>கடையநல்லூர் ஜலீல் - வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர். என கட்சியில் உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தவெக தொண்டர்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</li>
</ul>
மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-edappadi-palaniswami-issues-key-instructions-to-aiadmk-booth-agents-74133.html" target="_blank" rel="noopener">“வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது”.. அதிமுக முகவர்களுக்கு இபிஎஸ் முக்கிய அறிவுறுத்தல்..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/technical-glitch-in-cctv-camera-in-security-room-of-tiruppur-lrg-government-womens-college-74196.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 16:51:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/technical-glitch-in-cctv-camera-in-security-room-of-tiruppur-lrg-government-womens-college-74196.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tiruppur LRG Government Womens College: திருப்பூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமராக்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 2 மணி நேரம் வீடியோ காட்சிகள் பின்னோக்கி சென்றதாக கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/camera.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-2026-who-benefits-from-the-rise-in-vote-share-heated-debates-among-political-parties-74084.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில்</a> பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கியமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு, தமிழக போலீஸ், சிறப்பு காவல் படை, மத்திய பாதுகாப்பு படை என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் உள்ளே 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதே போல, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-elections-2026-no-need-for-re-polling-election-commission-official-announcement-74095.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தொகுதிகளில்</a> பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல். ஆர். ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 25) அதிகாலை 4 மணி முதல் சிசிடிவி காட்சிகளின் நேரம் மாறியதாக கூறப்படுகிறது.
<h3>2 மணி நேரம் பின்னோக்கி சென்ற வீடியோ காட்சி</h3>
அத்துடன், சிசிடிவி காட்சிகள் தற்போதைய நேரப்படி சுமார் 2 மணி நேரம் பின்னோக்கி ஓடுவதாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, நேற்று இரவு 2 மணி நேரம் இன்டர்நெட் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி மற்றும் தமிழக வெற்றி கழக கட்சியின் முகவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல். ஆர். ஜி. அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/greater-chennai-corporation-has-decided-to-install-sign-board-for-20-crore-rupees-in-chennai-74097.html" target="_blank" rel="noopener">ரூ. 20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகைகள்.. சென்னை மாநகராட்சி தகவல்..</a>
<h3>கண்காணிப்பு கேமரா இணைப்பில் தொழில் நுட்ப கோளாறு</h3>
அப்போது, ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் ஆய்வு மேற்கொண்ட போது, அனைத்தும் சரியாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் சி. சி. டி. வி. கேமரா இணைப்பில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு சுமார் 2 மணி நேரம் பின்னோக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, கண்காணிப்பு கேமராக்கள் ஆப் செய்யப்படாமல் 2 மணி நேரம் பின்னோக்கி செல்லாது எனவும், 2 மணி நேரம் கேமராக்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் ஆன் செய்யப்பட்ட காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
<h3>வாக்குப்பதிவு இயந்திரத்து பாதுகாப்பில்லை</h3>
மேலும், இந்த இடைப்பட்ட நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மற்ற கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கான தெளிவான காரணத்தை முறைப்படி தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்தச் சம்பவத்தால் அந்த பாதுகாப்பு அறை வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/speculation-over-tvk-chief-vijay-planning-australia-trip-on-may-4-tamil-nadu-election-result-day-74168.html" target="_blank" rel="noopener">வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்? வெளியான தகவல்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்? வெளியான தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/speculation-over-tvk-chief-vijay-planning-australia-trip-on-may-4-tamil-nadu-election-result-day-74168.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 15:28:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/speculation-over-tvk-chief-vijay-planning-australia-trip-on-may-4-tamil-nadu-election-result-day-74168.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Vijay : சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து வருகிற மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் அன்றைய தினம் தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலேயா செல்லவிருப்பதாகவும் அதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tvk-vijay-og-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்? வெளியான தகவல்" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 25 :</strong> தமிழ்நாடு <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-dmk-rule-is-once-again-assured-says-vck-thirumavalavan-74139.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்</a> கடந்த ஏப்ரல் 23, 2026 அன்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அன்று மாலையே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் புதிதாக <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html" target="_blank" rel="noopener">விஜய்யின்</a> தமிழக வெற்றிக் கழகம் களம் காணுகிறது. இதனால் அந்த கட்சி இந்த தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
<h3>வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்?</h3>
தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பணிகளில் இருந்து சிறிது ஓய்வெடுப்பதற்காக சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது கொடைக்கானலுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-mk-stalin-holds-meeting-with-dmk-candidates-and-issues-advisory-for-may-4th-result-day-73925.html">திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. சொல்லப்பட்ட முக்கிய விஷயம்..</a></strong>

அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் வருகிற மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விமான டிக்கெட்டும் அவர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய தேவை இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மே 4, 2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

<strong>இதையும் படிக்க :  <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-stated-that-tamil-nadu-polling-is-a-historic-event-and-conveyed-his-wishes-to-people-73902.html">85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..</a></strong>

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பட்ட கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டிகள் நிலவுகிறது.  எந்த கட்சிகள் அதிக தொகுதியில் வென்று ஆட்சியமைக்கப்போகிறது என்ற கேள்வி மக்களிடையே அதிகரித்துள்ளது.  இந்த முறை புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யின் தவெக எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கான விடைகள் வருகிற மே 4, 2026 அன்று தெரிய வரும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மீண்டும் திமுக ஆட்சி உறுதி.. &#8220;தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் சூழல் மாறும்&#8221;.. திருமாவளவன்</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-dmk-rule-is-once-again-assured-says-vck-thirumavalavan-74139.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 14:24:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-dmk-rule-is-once-again-assured-says-vck-thirumavalavan-74139.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: "தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்று நான் கூறியது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் வருகையை மட்டும் குறிக்கவில்லை. குறிப்பாக, விஜய் பெறப்போகும் வாக்கு சதவீதம் மற்றும் அது யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறது என்பதைப் பொறுத்தே எதிர்கால அரசியல் நகர்வுகள் இருக்கும்" என்று அவர் சூசகமாகத் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/09/thirumavalavan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மீண்டும் திமுக ஆட்சி உறுதி.. &#8220;தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் சூழல் மாறும்&#8221;.. திருமாவளவன்" /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-2026-who-benefits-from-the-rise-in-vote-share-heated-debates-among-political-parties-74084.html" target="_blank" rel="noopener">தமிழகச் சட்டமன்றத் தேர்தலில்</a> பதிவாகியுள்ள 85.15% வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இது வழக்கமான வாக்குப்பதிவுதான் என்றும், இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பது குறித்துப் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பக் காரணங்களை விளக்கினார். இந்த வாக்குப்பதிவு உயர்வு ஒரு 'மாயத் தோற்றம்' என்றும், இதன் பின்னணியில் தேர்தல் ஆணையத்தின் சில முக்கியப் பணிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-2026-who-benefits-from-the-rise-in-vote-share-heated-debates-among-political-parties-74084.html">2026 தேர்தல் களம்.. வாக்கு சதவீத உயர்வு யாருக்கு சாதகம்? அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்கள்!</a></strong></p>

<h3>காரணத்தை விளக்கிய திருமா:</h3>
அதன்படி, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்' (SIR) மூலம் லட்சக்கணக்கான போலி மற்றும் தேவையற்ற வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குகள் நீக்கப்படாமல் இருந்திருந்தால், பழைய சதவீதமே நீடித்திருக்கும். தற்போது மொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், பதிவான வாக்குகளின் சதவீதம் கூடுதலாகத் தெரிகிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் சராசரியாக 20 முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைவார்கள். அந்த இயற்கை வளர்ச்சி இந்தத் தேர்தலிலும் நடந்துள்ளது என்றார்.
<h3>தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்பு:</h3>
இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். களத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்த அனுபவத்தின் அடிப்படையில் இதனைத் தாம் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரச்சாரத்தின் போது மக்களை நேரடியாகச் சந்தித்த போது அவர்களின் ஆதரவு ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருந்ததை உணர முடிந்ததாக கூறிய அவர், கொள்கை ரீதியான பலம் மற்றும் கடந்த ஐந்தாண்டு காலத் திட்டங்கள் தங்களுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தரும் என்று அவர் கூறினார்.
<h3>தமிழக அரசியல் சூழலில் மாற்றம் வருமா?</h3>
தமிழக அரசியலில் புதிதாகக் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்துத் திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார். "தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்று நான் கூறியது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் வருகையை மட்டும் குறிக்கவில்லை. குறிப்பாக, விஜய் பெறப்போகும் வாக்கு சதவீதம் மற்றும் அது யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறது என்பதைப் பொறுத்தே எதிர்கால அரசியல் நகர்வுகள் இருக்கும்" என்று அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html">தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?</a></strong>

வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதை ஆளுங்கட்சிக்குச் சாதகமான அலையாகப் பார்க்காமல், அதை ஒரு தொழில்நுட்ப ரீதியான மாற்றமாகவே திருமாவளவன் முன்வைக்கிறார். அதேசமயம், திமுக கூட்டணியின் வெற்றி உறுதி என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார். வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதுதான் இந்த மாற்றங்கள் யாருக்குச் சாதகமாக முடிந்துள்ளன என்பது தெரியவரும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது&#8221;.. அதிமுக முகவர்களுக்கு இபிஎஸ் முக்கிய அறிவுறுத்தல்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-edappadi-palaniswami-issues-key-instructions-to-aiadmk-booth-agents-74133.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 14:01:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-edappadi-palaniswami-issues-key-instructions-to-aiadmk-booth-agents-74133.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தபால் வாக்குகளை எண்ணும் போது கூடுதல் கவனத்துடன் இருந்து, ஒவ்வொரு வாக்கையும் முறைப்படி கண்காணிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/11/edappadi-k-palaniswami-2.png" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது&#8221;.. அதிமுக முகவர்களுக்கு இபிஎஸ் முக்கிய அறிவுறுத்தல்.." /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-2026-who-benefits-from-the-rise-in-vote-share-heated-debates-among-political-parties-74084.html" target="_blank" rel="noopener">தமிழகச் சட்டமன்றத் தேர்தலில்</a> ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாற்றிய தொண்டர்களுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். அத்துடன், மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html">தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?</a></strong>
<h3>வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி:</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள… <a href="https://t.co/NR2PskAhYw">pic.twitter.com/NR2PskAhYw</a></p>
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) <a href="https://twitter.com/EPSTamilNadu/status/2047950880725414252?ref_src=twsrc%5Etfw">April 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச் சாவடிகளுக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்றிய பொதுமக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் களத்தில் அயராது உழைத்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
<h3>முகவர்களுக்குப் பத்துக் கட்டளைகள்:</h3>
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், முகவர்களுக்காகச் சில முக்கிய நடைமுறைகளைப் பட்டியலிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்ல வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து, வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது.
<h3>கூடுதல் கவனம் வேண்டும்:</h3>
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தபால் வாக்குகளை எண்ணும் போது கூடுதல் கவனத்துடன் இருந்து, ஒவ்வொரு வாக்கையும் முறைப்படி கண்காணிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html">எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..</a></strong>
<h3>வெற்றி வாய்ப்பு குறித்த நம்பிக்கை:</h3>
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை முகவர்கள் எவ்விதத் தொய்வுமின்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதிமுக முகவர்கள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் களத்தில் காட்டிய அதே வேகத்தை வாக்கு எண்ணிக்கையின் போதும் காட்ட வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கையின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத் தேர்தல் 2026.. மறுவாக்குப்பதிவு அவசியமில்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-elections-2026-no-need-for-re-polling-election-commission-official-announcement-74095.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 11:31:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-elections-2026-no-need-for-re-polling-election-commission-official-announcement-74095.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: சில இடங்களில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அவை வாக்குப்பதிவை நிறுத்தும் அளவிற்குத் தீவிரமாக இல்லை எனப் பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளனர். மறுவாக்குப்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் கூடிய காப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/eci-announces-no-re-poll.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத் தேர்தல் 2026.. மறுவாக்குப்பதிவு அவசியமில்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!" /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற 234 தொகுதிகளுக்கான <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-2026-who-benefits-from-the-rise-in-vote-share-heated-debates-among-political-parties-74084.html" target="_blank" rel="noopener">சட்டமன்றத் தேர்தலில்</a> எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்ற நாளன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள், சில இடங்களில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் அனுப்பப்பட்டன. இந்தப் புகார்கள் குறித்து அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html">தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?</a></strong>
<h3>ஆணையத்தின் விளக்கம்:</h3>
ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் பெறப்பட்ட 'ஸ்க்ரூட்டினி' அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, தேர்தல் ஆணையம் பின்வரும் முடிவுகளை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 68,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் விதிமுறைகளின்படியே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்ட இடங்களில் உடனடியாக மாற்று இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு தடையின்றித் தொடர்ந்தது. இது வாக்குப்பதிவின் முடிவைப் பாதிக்கும் வகையில் அமையவில்லை.
<h3>அமைதியான சூழலும், வரலாற்றுச் சாதனையும்:</h3>
சில இடங்களில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அவை வாக்குப்பதிவை நிறுத்தும் அளவிற்குத் தீவிரமாக இல்லை எனப் பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தத் தேர்தலில் தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2021 தேர்தலை விட 11.52% அதிகமாகும். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல்'சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்' (SIR) காரணமாகப் போலி மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால்தான் இந்த அதிகப்படியான வாக்கு சதவீதம் சாத்தியமானது என்பதும் அதிகாரப்பூர்வத் தகவலாகும்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html">எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..</a></strong>
<h3>மே 4 வாக்கு எண்ணிக்கை:</h3>
மறுவாக்குப்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் கூடிய காப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வருகிற மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது எந்தத் தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு இல்லை என்பது உறுதியாகிவிட்டதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போது நேரடியாக வாக்கு எண்ணிக்கை தினத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>2026 தேர்தல் களம்.. வாக்கு சதவீத உயர்வு யாருக்கு சாதகம்? அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-2026-who-benefits-from-the-rise-in-vote-share-heated-debates-among-political-parties-74084.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 09:51:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-2026-who-benefits-from-the-rise-in-vote-share-heated-debates-among-political-parties-74084.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: மக்கள் தற்போதைய ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளதாகவும், வாக்குகள் சில இடங்களில் பிரிந்திருந்தாலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். தேசிய அரசியலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகள் மத்திய அரசிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/dmk-vs-admk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="2026 தேர்தல் களம்.. வாக்கு சதவீத உயர்வு யாருக்கு சாதகம்? அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்கள்!" /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html" target="_blank" rel="noopener">தமிழக அரசியல் வரலாற்றில்</a> 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. "ஆட்சித் தொடர்ச்சியா அல்லது ஆட்சி மாற்றமா?" என்ற ஒற்றைக் கேள்வியைச் சுற்றிச் சுழலும் இந்தத் தேர்தலில், இதுவரை கண்டிராத வகையில் 85.15% வாக்குகள் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பதிவான வாக்கு சதவீதம் மற்றும் அதன் தாக்கம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களிடையே காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. 2021-ஐ விட இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது தங்களுக்குத்தான் சாதகம் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி உரிமை கொண்டாடி வருகின்றன.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html">எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..</a></strong>
<h3>"ஆட்சித் தொடர்ச்சிக்கான வாக்குகள்"</h3>
ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தரப்பில், இந்த வாக்கு சதவீத உயர்வுக்குத் தற்போதைய திமுக அரசே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் வழங்கிய அதே ஆதரவு தற்போதும் தொடர்வதாகவும், 40-க்கு 40 என்ற வெற்றியைப் போலவே, மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவது உறுதி என்றும் அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதே அவர்களின் பிரதான வாதமாக உள்ளது.
<h3>"ஆட்சி மாற்றத்திற்கான அலை"</h3>
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இந்த வாக்கு சதவீத உயர்வை வேறு விதமாகப் பார்க்கிறது. மக்கள் தற்போதைய ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளதாகவும், வாக்குகள் சில இடங்களில் பிரிந்திருந்தாலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். சட்டம் ஒழுங்குப் பிரச்சனை மற்றும் போதைப்பொருள் புழக்கம் போன்ற காரணங்களால் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதே இந்த அதிகப்படியான வாக்குப்பதிவுக்குக் காரணம் என்பது அவர்களின் கருத்தாகும்.
<h3>தேர்தல் முறைகேடு புகார்களும் தேசிய அரசியலும்:</h3>
தேர்தல் களத்தில் நிலவிய முறைகேடுகள் குறித்தும் சில அரசியல் பிரமுகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கோயம்புத்தூர் போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணமும், தங்க நாணயங்களும் வழங்கப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேசிய அரசியலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகள் மத்திய அரசிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன. ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான கூட்டணி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முக்கிய முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html">தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?</a></strong>

ஒட்டுமொத்தமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வாக்கு சதவீத உயர்வு யாருக்கு வெற்றிக் கனியைத் தரும் என்பது வரும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்.. தேர்தல் முடிவுக்கு பின் சரிபார்க்கப்படும் &#8211; வருமான வரித்துறை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/income-tax-department-stated-in-high-court-that-deputy-cm-udhayanidhi-stalin-property-details-will-be-verified-after-election-result-74072.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 07:33:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/income-tax-department-stated-in-high-court-that-deputy-cm-udhayanidhi-stalin-property-details-will-be-verified-after-election-result-74072.html</guid>
		            
			

    	<description><![CDATA[தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களை வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையை தொடங்க வேண்டும். மேலும், 150 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/us.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்.. தேர்தல் முடிவுக்கு பின் சரிபார்க்கப்படும் &#8211; வருமான வரித்துறை.." /></figure><p data-start="0" data-end="321"><strong>சென்னை, ஏப்ரல் 25, 2026:</strong> தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஸ்டாலினின் வேட்புமனு சொத்து மதிப்பு விவரங்களில் முரண்பாடு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தாமாக முன்வந்து சரிபார்க்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என வருமான வரித்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.</p>

<h3 data-start="0" data-end="321">உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு தொடர்பான வழக்கு:</h3>
<p data-start="323" data-end="693">சென்னை சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில், துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களும், அவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து மதிப்பு விவரங்களும் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி, ஆர். குமரவேல் என்றவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.</p>
<p data-start="323" data-end="693">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-85-percent-turnout-a-milestone-truth-revealed-by-statistics-74068.html">தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு ஒரு மைல்கல்லா?.. புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் உண்மைப் பின்னணி!</a></p>
<p data-start="695" data-end="1000">இந்த வழக்கில், வருமான வரித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுக்களில் குறிப்பிடப்படும் சொத்து விவரங்களை சரிபார்க்க, மத்திய நேரடி வரிகள் வாரியம் 2019ஆம் ஆண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.</p>

<h3 data-start="695" data-end="1000">வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில்:</h3>
<p data-start="1002" data-end="1272">அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களை வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையை தொடங்க வேண்டும். மேலும், 150 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="1002" data-end="1272">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chennai-imd-has-stated-there-will-be-rise-in-temperature-and-heat-wave-warning-74006.html">கொளுத்தும் வெயில்.. உள் தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என எச்சரிக்கை..</a></p>
<p data-start="1274" data-end="1650">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சொத்து விவரங்களைப் பொருத்தவரை, விரிவான ஆய்வு மேற்கொள்ளாமல் 2021 மற்றும் 2026 ஆண்டுகளின் சொத்து மதிப்புகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது. மேலும், அவரது நிதி தொடர்பான ஆவணங்கள் தற்போது வருமான வரித்துறை வசம் இல்லை. தற்போதைய நிலையில் எளிமையாக முடிவு எடுக்க முடியாததால், ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="1652" data-end="1764" data-is-last-node="" data-is-only-node="">இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு ஒரு மைல்கல்லா?.. புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் உண்மைப் பின்னணி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-85-percent-turnout-a-milestone-truth-revealed-by-statistics-74068.html</link>	
		<pubDate>Sat, 25 Apr 2026 06:42:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-85-percent-turnout-a-milestone-truth-revealed-by-statistics-74068.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Assembly Election 2026: இதுவரை வாக்குச்சாவடி பக்கமே வராத வாக்காளர்கள் கூட இந்த முறை பெருமளவில் வந்து வாக்களித்துள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து வாக்களித்தது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சிகரமான நிகழ்வு என்றும் அவர் பாராட்டியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/polling-turnout-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு ஒரு மைல்கல்லா?.. புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் உண்மைப் பின்னணி!" /></figure><strong>Tamil Nadu Election Poll Percentage:</strong> நடந்து முடிந்த 2026-ஆம் ஆண்டு <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html" target="_blank" rel="noopener">தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்</a>, மாநில வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கண்டிராத வகையில் 85.15% வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அதீத வாக்குப்பதிவு சதவீதம் குறித்த அரசியல் ரீதியான பார்வைகளையும், அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பக் காரணங்களையும் கீழே விரிவாகக் காணலாம்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html">எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..</a></strong>
<h3>அரசியல் தலைவர்களின் வரவேற்பு:</h3>
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். "இதுவரை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தனர். ஆனால் இந்த முறை, தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக, குழந்தைகளுடன் வந்து திருவிழா போல வாக்களித்துள்ளனர். இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சிகரமான நிகழ்வு" என அவர் பாராட்டியுள்ளார்.
<h3>கடந்த 25 ஆண்டுகால தேர்தல் தரவுகள்:</h3>
சமூக வலைதளங்களில் இந்த வாக்கு சதவீத உயர்வு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கடந்த காலத் தரவுகளை ஆய்வு செய்யும் போது சில முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. அதன்படி, 2021 தேர்தலில் 4 கோடியே 58 லட்சம் பேர் வாக்களித்தனர். 2026 தேர்தலில் 4 கோடியே 88 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த முறையை விட இந்த முறை 30 லட்சம் வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது.
<h3>வரலாற்று ரீதியான வளர்ச்சி (1996 - 2026):</h3>
கடந்த 25 ஆண்டுகாலத் தரவுகளைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. 1996-ல் 2.71 கோடி வாக்குகளாக இருந்தது, 2001-ல் 2.80 கோடியாக உயர்ந்தது. 2006-ல் அதற்கு முந்தைய தேர்தலை விட 50 லட்சம் வாக்குகள் அதிகரித்தது. 2016 தேர்தலில் மிக அதிகபட்சமாக 64 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவானது. தற்போது பதிவாகியுள்ள 30 லட்சம் கூடுதல் வாக்குகள் என்பது, "இயல்பான வளர்ச்சி" போலவே காட்சியளிக்கிறது. குறிப்பாக, இந்தத் தரவுகளின்படி பார்த்தால், இந்த முறை பதிவான 30 லட்சம் கூடுதல் வாக்குகள் என்பது கடந்த கால சராசரி வளர்ச்சியே தவிர, இது ஒரு அசாதாரணமான உயர்வு அல்ல என்பது தெளிவாகிறது.
<h3>85% வாக்கு சதவீதம் - மாயமா? உண்மையா?</h3>
பதிவான வாக்குகளின் எண்ணிக்கை (30 லட்சம்) பெரிய அளவில் மாற்றம் அடையாத போது, 'வாக்கு சதவீதம்' மட்டும் எப்படி 85.15% என உயர்ந்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கான முக்கியமான காரணம் இதுதான். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி (SIR). இந்தத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தூய்மைப்பணிகளின் காரணமாக, சுமார் 74.07 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. போலி வாக்காளர்கள், இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html">தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?</a></strong>
<h3>மக்கள் ஆர்வமும் முக்கிய காரணம்:</h3>
வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை குறையும் போது, பதிவான வாக்குகளின் சதவீதம் தானாகவே உயர்கிறது. இதனால் தான் 2021-ல் இருந்த 73% என்பது, தற்போது 85.15% ஆக அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தது உண்மை என்றாலும், இந்த 85% சாதனை என்பது பெருமளவு தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கையினால் விளைந்ததே ஆகும். கடந்த தேர்தலை விட 30 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருப்பது, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/evms-sealed-in-strong-rooms-in-thoothukudi-in-the-presence-of-officials-74049.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 22:48:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/evms-sealed-in-strong-rooms-in-thoothukudi-in-the-presence-of-officials-74049.html</guid>
		            
														<description><![CDATA[தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்றுடன் நிறைவடைந்தது. இதனைத்  தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக  தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஸ்ட்ராங் ரூம்களில் முத்திரையிடப்பட்டு வைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/evms-sealed-in-strong-rooms-in-thoothukudi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/Q2B2pY1D-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்றுடன் நிறைவடைந்தது. இதனைத்  தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக  தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஸ்ட்ராங் ரூம்களில் முத்திரையிடப்பட்டு வைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி உறுதி &#8211; நாராயணன் திருப்பதி கருத்து</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/narayanan-thirupathy-reacts-to-tamil-nadu-84-69-percent-voter-turnout-vijay-statement-and-aap-mps-joining-bjp-74047.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 22:43:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/narayanan-thirupathy-reacts-to-tamil-nadu-84-69-percent-voter-turnout-vijay-statement-and-aap-mps-joining-bjp-74047.html</guid>
		            
														<description><![CDATA[தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 84.69 சதவீத வாக்குப்பதிவு பதிவானது குறித்து பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த வாக்குப்பதிவு மக்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது சாதகமான அறிகுறியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/narayanan-thirupathi-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி உறுதி &#8211; நாராயணன் திருப்பதி கருத்து" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/5UF1kADi-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p data-start="169" data-end="347">தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 84.69 சதவீத வாக்குப்பதிவு பதிவானது குறித்து பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த வாக்குப்பதிவு மக்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது சாதகமான அறிகுறியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.</p>
<p data-start="522" data-end="798"></p>]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>இந்த தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை.. டிகேஎஸ் இளங்கோவன் கருத்து!</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/there-is-no-much-hike-in-voting-for-2026-assembly-election-says-dmk-tks-elangovan-74041.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 22:19:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/there-is-no-much-hike-in-voting-for-2026-assembly-election-says-dmk-tks-elangovan-74041.html</guid>
		            
														<description><![CDATA[இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை. ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையை மையப்படுத்தி வாக்கு பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. எஸ்ஐஆர்-க்கு பிறகு 1 கோடியே 5 லட்சத்திற்கு மேலான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன என்று திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tks-elangovan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இந்த தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை.. டிகேஎஸ் இளங்கோவன் கருத்து!" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/wkb4DHHx-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை. ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையை மையப்படுத்தி வாக்கு பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. எஸ்ஐஆர்-க்கு பிறகு 1 கோடியே 5 லட்சத்திற்கு மேலான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன என்று திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>ஐ.டி ரெய்டு குறித்த ஆதாரத்தை வெளியிட்ட செல்வப்பெருந்தகை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/congress-leader-selvaperunthagai-released-proof-of-income-tax-raid-happened-at-his-residence-73986.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 20:49:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/congress-leader-selvaperunthagai-released-proof-of-income-tax-raid-happened-at-his-residence-73986.html</guid>
		            
														<description><![CDATA[தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் ராகுல் காந்தியின் நிகழ்வில் பங்கேற்பதை தடுத்ததாகவும் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு வருமான வரித்துறை தரப்பில் சோதனை மேற்கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது தொடர்பாக ஆதாராங்களை வெளியிடுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/selva-perundurai-explanation-regarding-it-raid.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஐ.டி ரெய்டு குறித்த ஆதாரத்தை வெளியிட்ட செல்வப்பெருந்தகை.." /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/ELNGiPCR-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் ராகுல் காந்தியின் நிகழ்வில் பங்கேற்பதை தடுத்ததாகவும் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு வருமான வரித்துறை தரப்பில் சோதனை மேற்கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது தொடர்பாக ஆதாராங்களை வெளியிடுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>தவெக தலைவர் விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்.. பீட்டா அமைப்பு அனுப்பிய கடிதம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/peta-india-has-sent-a-letter-to-tvk-leader-vijay-regarding-pigeon-issue-at-trichy-campaign-73967.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 18:42:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/peta-india-has-sent-a-letter-to-tvk-leader-vijay-regarding-pigeon-issue-at-trichy-campaign-73967.html</guid>
		            
			

    	<description><![CDATA[பிரச்சாரத்தின் போது புறாவை பறக்க விட்ட சம்பவம் தொடர்பாக பீட்டா இந்தியா, விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆலோசனையை மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/bird-cam.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தவெக தலைவர் விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்.. பீட்டா அமைப்பு அனுப்பிய கடிதம்.." /></figure><p data-start="96" data-end="198"><strong>ஏப்ரல் 24, 2026:</strong> தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு, விலங்குகள் நல அமைப்பான பீட்டா இந்தியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் ரோடு ஷோ நடத்தினார். வழக்கமாக அவர் ரோடு ஷோ நடத்தும் போது, தொண்டர்கள் பல்வேறு வகையான பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம்.</p>

<h3 data-start="96" data-end="198">திருச்சி பிரச்சாரத்தின் போது புறாவை பறக்கவிட்ட விஜய்:</h3>
<p data-start="457" data-end="707">அவ்வாறு ஒரு தொண்டர் வெள்ளைப் புறா ஒன்றை விஜய்க்கு வழங்கினார். அதை உடனடியாக வாங்கிய விஜய் பறக்க விட்டார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், அந்த புறாவின் இறக்கைகளில் கட்சிக் கொடியின் நிறங்கள் பூசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p data-start="457" data-end="707">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html">எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..</a></p>
<p data-start="709" data-end="1051">இந்த நிலையில், பிரச்சாரத்தின் போது புறாவை பறக்க விட்ட சம்பவம் தொடர்பாக பீட்டா இந்தியா, விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆலோசனையை மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="709" data-end="1051">விஜய்க்கு பிட்டா அமைப்பு கடிதம்:</h3>
<p data-start="1053" data-end="1308">மேலும், புறாக்கள் அதிக உணர்வுத்திறன் கொண்டவை என்றும், அவற்றுக்கு வண்ணம் பூசுதல், அடைத்து வைத்தல், கூட்ட நெரிசலுக்குள் திடீரென விடுவித்தல் போன்ற செயல்கள் கடுமையான மன அழுத்தம், குழப்பம் மற்றும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
<p data-start="1053" data-end="1308">மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-stated-that-tamil-nadu-polling-is-a-historic-event-and-conveyed-his-wishes-to-people-73902.html"> 85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..</a></p>
<p data-start="1310" data-end="1448">இத்தகைய செயல்கள், 1960ஆம் ஆண்டு விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தை மீறக்கூடும் என்றும் பீட்டா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p>

<h3 data-start="1310" data-end="1448">பறவைகள் இருந்தால் ஒப்படைக்க வேண்டும்:</h3>
<p data-start="1450" data-end="1692">அத்துடன், விஜய் தன்னிடம் பறவைகள் இருந்தால் அவற்றை மறுவாழ்வு மையங்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்தாத தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p data-start="1694" data-end="2095">இது குறித்து பீட்டா இந்தியா அமைப்பின் சட்ட ஆலோசகர் விக்ரம் சந்திர வன்சி கூறுகையில், “விலங்குகளுக்கு அரசியல் சார்பு இல்லை. அவற்றின் நலன் மனிதர்களின் இரக்கம் மற்றும் கருணையைப் பொறுத்தது. உயிருள்ள பறவைகளை காட்சிப் பொருளாக பயன்படுத்துவது, அவற்றுக்கு வண்ணம் பூசுவது மற்றும் இரைச்சல் மிகுந்த சூழலில் பறக்க விடுவது அவற்றை அச்சமடையச் செய்யலாம்; காயப்படுத்தலாம் அல்லது நோய்வாய்ப்படுத்தலாம்,” என தெரிவித்தார்.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. சொல்லப்பட்ட முக்கிய விஷயம்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-mk-stalin-holds-meeting-with-dmk-candidates-and-issues-advisory-for-may-4th-result-day-73925.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 15:39:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-mk-stalin-holds-meeting-with-dmk-candidates-and-issues-advisory-for-may-4th-result-day-73925.html</guid>
		            
			

    	<description><![CDATA[CM MK Stalin Meeting: தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்த இந்த வாக்குப்பதிவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.92 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.46 சதவீத வாக்குப்பதிவு இடம் பெற்றுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/meeet-mks.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. சொல்லப்பட்ட முக்கிய விஷயம்.." /></figure><p data-start="113" data-end="429"><strong>சென்னை, ஏப்ரல் 24, 2026:</strong> 2026ஆம் ஆண்டு தமிழக <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election">சட்டமன்றத்</a> தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 85 சதவீத வாக்குப்பதிவு பதிவானது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்ச வாக்குப்பதிவு இந்த தேர்தலிலேயே பதிவாகியுள்ளது.</p>
<p data-start="431" data-end="647">குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின் தமிழகத்தில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைந்துள்ளது.</p>

<h3 data-start="431" data-end="647">தமிழகத்தில் நிலவும் 4 முனைப்போட்டி:</h3>
<p data-start="649" data-end="851">மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.</p>
<p data-start="853" data-end="1234">திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால், திமுக 164 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 70 இடங்கள் காங்கிரஸ், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 169 இடங்களில் போட்டியிடுகிறது; மீதமுள்ள 65 இடங்கள் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="853" data-end="1234">85.15% வாக்குப்பதிவு:</h3>
<p data-start="1236" data-end="1435">நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றிக்கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் சுமார் 20 லட்சம் பேர் அதிகமாக வாக்களித்துள்ளனர்.</p>
<p data-start="1236" data-end="1435">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-stated-that-tamil-nadu-polling-is-a-historic-event-and-conveyed-his-wishes-to-people-73902.html">85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..</a></p>
<p data-start="1437" data-end="1703">தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்த இந்த வாக்குப்பதிவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.92 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.46 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.</p>

<h3 data-start="1437" data-end="1703">திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை:</h3>
<p data-start="1705" data-end="1859">இந்த நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பது தெளிவாகும்.</p>
<p data-start="1861" data-end="2099">இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.</p>
<p data-start="2101" data-end="2338">இந்த ஆலோசனையில் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், நாசர், எபினேசர், மயிலை தா. வேலு, காஞ்சிபுரம் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.</p>
<p data-start="2340" data-end="2466">மே 4ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-stated-that-tamil-nadu-polling-is-a-historic-event-and-conveyed-his-wishes-to-people-73902.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 14:51:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-stated-that-tamil-nadu-polling-is-a-historic-event-and-conveyed-his-wishes-to-people-73902.html</guid>
		            
			

    	<description><![CDATA[இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவீத வாக்குகள் வாக்குச்சாவடி பக்கம் வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. 85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று என விஜய் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tvk-pol-vi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்.." /></figure><p data-start="105" data-end="506"><strong>சென்னை, ஏப்ரல் 24, 2026:</strong> தமிழக <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election">சட்டப்பேரவை</a> தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வாக்குப்பதிவு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சியாக மாறியுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமான வாக்குப்பதிவு சதவீதம் பதிவாகியுள்ளது. மொத்தமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.</p>

<h3 data-start="105" data-end="506">தவெக தலைவர் போட்ட போஸ்ட்:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="ta">என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.

அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக்…</p>
— TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://twitter.com/TVKVijayHQ/status/2047595066013913149?ref_src=twsrc%5Etfw">April 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<p data-start="508" data-end="644">இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்: "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசாதாரண சூரர்களுக்கானது மட்டுமே, அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே, பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே என்று ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.</p>
<p data-start="965" data-end="1187">அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கியுள்ளது. இது எப்போது தொடங்கியது என்பதை நடுநிலை மனம் கொண்டோர் அனைவரும் உணர்வர்.</p>

<h3 data-start="965" data-end="1187">85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று:</h3>
<p data-start="1189" data-end="1422">இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவீத வாக்குகள் வாக்குச்சாவடி பக்கம் வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. 85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.</p>
<p data-start="1483" data-end="1804">வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம் போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தைகளுடன் வந்து வாக்களித்ததை கண்டு வியக்காதோர் யாரும் இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வெளிமாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?</p>
<p data-start="1806" data-end="1954">‘தேர்தல் திருவிழா’, ‘ஜனநாயகத் திருவிழா’ என்று சொல்லப்படுவதன் அர்த்தம் உணரப்பட்ட நாள் நேற்று தான் — 2026 ஏப்ரல் 23. எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.</p>

<h3 data-start="1806" data-end="1954">குட்டீஸ்க்கு விஜய் மாமாவின் நன்றி:</h3>
<p data-start="1956" data-end="2170">தமிழக தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.</p>
<p data-start="1956" data-end="2170">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html">எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..</a></p>
<p data-start="2172" data-end="2302">குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா, நண்பீஸ்களுக்கு என் — உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.</p>
<p data-start="2304" data-end="2669">மேலும், நன்றி செலுத்த வேண்டியது நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தான். ‘இவர்களுக்கு என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப்பிடிப்பார்கள்?’ என்று ஏளனம் செய்தோருக்கு செயலில் பதிலடி தந்த தோழர்களே — உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்,.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 13:30:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-what-happens-if-opposition-votes-are-fragmented-two-key-lessons-from-political-history-73893.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: 232 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், திமுக தனது கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் களம் இறங்கியது. எதிர்க்கட்சிகள் பலமாகப் பிரிந்து நின்றதால், திமுக 150 இடங்களைப் பிடித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tamilnadu-election-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்.." /></figure><strong>Tamilnadu Polls:</strong> <a href="https://www.tv9tamilnews.com/topic/tamil-nadu-assembly-election" target="_blank" rel="noopener">தமிழகச் சட்டமன்றத் தேர்தல்</a> விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும்போது அது தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்குச் சான்றாக, தமிழக அரசியல் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்த 1971 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களை விரிவான வரலாற்று உதாரணங்களாகக் காணலாம்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html">தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?</a></strong></p>

<h3>காங்கிரஸ் பிளவும், திமுகவின் இமாலய வெற்றியும்:</h3>
1971-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இந்திரா காந்தி தலைமையிலான 'இந்திரா காங்கிரஸ்', அப்போது ஆட்சியில் இருந்த திமுகவுடன் கூட்டணி அமைத்தது. மறுபுறம், காமராஜர் தலைமையிலான 'ஸ்தாபன காங்கிரஸ்' மற்றும் ராஜாஜியின் 'சுதந்திரா கட்சி' ஆகியவை இணைந்து பலமான எதிர்க்கட்சியாகத் தேர்தலைச் சந்தித்தன.

முந்தைய தேர்தல்களில் காங்கிரஸை ஆதரித்து வந்த தந்தை பெரியார், இந்தத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிரப் பரப்புரை செய்தார். சுமார் 72.10% வாக்குகள் பதிவான இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பிளவால் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 184 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் திமுக பெற்ற 48.58% வாக்குகள் என்பது, தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி பெற்ற அதிகபட்ச வாக்கு விழுக்காடாகவும், அதிக இடங்களாகவும் இன்றுவரை நீடிக்கிறது.
<h3>அதிமுக பிளவும் திமுகவின் மீள்வருகையும்:</h3>
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், வாக்குச் சிதறல் ஒரு கட்சிக்கு எப்படிப் பலன் தரும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. 1987-ல் எம்.ஜி.ஆர். காலமானதைத் தொடர்ந்து அதிமுக 'ஜானகி அணி' மற்றும் 'ஜெயலலிதா அணி' என இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையிலான அணி 'சேவல்' சின்னத்திலும், ஜானகி தலைமையிலான அணி 'இரட்டைப் புறா' சின்னத்திலும் களம் கண்டன. இதில் ஜெயலலிதா அணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஜானகி அணியைச் சிவாஜி கணேசனின் 'தமிழக முன்னேற்ற முன்னணி'யும் ஆதரித்தன. இந்த இரு அணிகள் தவிர, காங்கிரஸ் கட்சி தனித்து ஒரு அணியாகப் போட்டியிட்டது. இதனால் எதிர்க்கட்சி வாக்குகள் மூன்று பக்கமாகப் பிரிந்தன.
<h3>திமுக வகுத்த வியூகம்:</h3>
232 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், திமுக தனது கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் களம் இறங்கியது. எதிர்க்கட்சிகள் பலமாகப் பிரிந்து நின்றதால், திமுக 150 இடங்களைப் பிடித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்தது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திமுக பெற்ற வாக்குகள் வெறும் 33.2% மட்டுமே. ஆனால், அதிமுகவின் இரு அணிகளும் காங்கிரஸும் தனித்தனியாகப் பிரிந்து நின்றதால், குறைவான வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தாலும் திமுகவால் அதிக இடங்களை வெல்ல முடிந்தது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களையும், காங்கிரஸ் 26 இடங்களையும் வென்றன. ஜானகி அணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-highlights-from-an-80-member-family-arriving-on-a-tractor-to-robots-offering-a-welcome-73845.html">தமிழகத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசியங்கள்.. டிராக்டரில் வந்த 80 பேர் குடும்பம் முதல் வரவேற்பு அளித்த ரோபோக்கள் வரை..</a></strong>
<h3>அரசியல் படிப்பினை சொல்வது என்ன?:</h3>
இந்த இரு வரலாற்றுத் தரவுகளும் ஒரு முக்கியமான உண்மையை உரக்கச் சொல்கின்றன. எதிர்க்கட்சிகள் கொள்கை ரீதியாகவோ அல்லது தலைமைப் போட்டியாலோ பிரிந்து நின்று தேர்தலைச் சந்திக்கும்போது, அது ஆளுங்கட்சிக்குக் கூடுதல் பலத்தைத் தருகிறது. 1971-ல் காங்கிரஸ் பிளவு திமுகவுக்குப் பெரும்பான்மையைத் தந்தது என்றால், 1989-ல் அதிமுக பிளவு திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றியது. தற்போதைய அரசியல் சூழலிலும், இந்த வரலாற்றுப் பாடங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அஜித்தின் ஓட்டு செல்லுமா?.. கிளம்பிய சர்ச்சை.. தேர்தல் ஆணையம் அதிரடி விசாரணை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-will-ajiths-vote-be-valid-controversy-erupts-election-commission-enquiry-73865.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 11:56:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-will-ajiths-vote-be-valid-controversy-erupts-election-commission-enquiry-73865.html</guid>
		            
			

    	<description><![CDATA[அஜித் முன்கூட்டியே வாக்களித்த விவகாரம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ரசிகர்கள் கூட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் அவர் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டதாக ஒரு தரப்பு கூறுகிறது. இருப்பினும், "நேரம் தொடங்கும் முன்பே ஒரு தனிநபரை எப்படி வாக்களிக்க அனுமதிக்கலாம்?" என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/ajith.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அஜித்தின் ஓட்டு செல்லுமா?.. கிளம்பிய சர்ச்சை.. தேர்தல் ஆணையம் அதிரடி விசாரணை!" /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்குப் பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திரைத்துறையின் முன்னணி நட்சத்திரமான <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-actor-ajith-kumar-sporting-a-white-suit-arrives-as-the-very-first-person-to-cast-his-vote-73509.html" target="_blank" rel="noopener">நடிகர் அஜித்குமார்</a> அதற்கு முன்பே தனது வாக்கைப் பதிவு செய்தது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மையூரில் உள்ள பாரதிதாசன் மாநகராட்சிப் பள்ளியில் அஜித்குமார் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுவாகத் திரைப் பிரபலங்கள் வரும்போது கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், அஜித்குமார் அதிகாலையிலேயே அங்கு வரத் திட்டமிட்டிருந்தார்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-actor-ajith-kumar-sporting-a-white-suit-arrives-as-the-very-first-person-to-cast-his-vote-73509.html">Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!</a></strong>
<h3>அதிகாலையிலேயே ஆஜரான 'தல':</h3>
அதன்படி, காலை 6.45 மணிக்கே வெள்ளை நிற கோட்-சூட் அணிந்து, கம்பீரமான தோற்றத்தில் தனது காரில் வாக்குச்சாவடிக்கு வந்து இறங்கினார். அவரைப் பார்த்ததும் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் "தல.. தல.." என உற்சாக முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
<h3>5 நிமிடம் முன்பே வாக்குப்பதிவு - நடந்தது என்ன?</h3>
சரியாக காலை 7 மணிக்குத்தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், அஜித்குமார் வந்தபோது அங்கு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, அங்கிருந்த தேர்தல் அலுவலர்களின் சிறப்பு அனுமதியுடன், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே (6.55 மணிக்கு) அவர் வாக்குச்சாவடிக்குள் சென்றார்.

அங்குள்ள தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில், தமிழகத்திலேயே முதல் நபராக அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வெளியேறினார். அவர் விரைவாக வந்து வாக்களித்துச் சென்றது மற்ற வாக்காளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
<h3>விதிமீறல் புகாரும் தேர்தல் ஆணையத்தின் விசாரணையும்:</h3>
நடிகர் அஜித் முன்கூட்டியே வாக்களித்த விவகாரம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ரசிகர்கள் கூட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் அவர் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டதாக ஒரு தரப்பு கூறுகிறது.

இருப்பினும், "நேரம் தொடங்கும் முன்பே ஒரு தனிநபரை எப்படி வாக்களிக்க அனுமதிக்கலாம்?" என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இது ஒரு தேர்தல் விதிமீறலா? என்பது குறித்து தற்போது தேர்தல் ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர்களிடம் இதுகுறித்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/did-ajith-kumar-say-no-need-for-change-in-tamil-nadu-here-are-the-details-73624.html">No Need என்று சொன்னாரா அஜித்? என்ன நடந்தது – முழு விவரம் இதோ!</a></strong>
<h3>வைரலாகும் அஜித் வாக்களித்த வீடியோ:</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Elections 2026 | Actor S. Ajith Kumar casts his vote at a polling station in Thiruvanmiyur, Chennai. <a href="https://t.co/5nmbDQnk1S">pic.twitter.com/5nmbDQnk1S</a></p>
— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/2047141315360768252?ref_src=twsrc%5Etfw">April 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அஜித்குமார் வாக்குச்சாவடிக்கு வந்தது முதல் வாக்களித்துவிட்டுச் சென்றது வரையிலான காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. ரசிகர்கள் அவரது "நேரந்தவறாமை" மற்றும் "ஜனநாயகக் கடமையை" பாராட்டி வந்தாலும், விதிமுறை தொடர்பான சர்ச்சை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் &#8216;பெண் சக்தி&#8217;: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 09:24:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/women-power-to-determine-tamil-nadu-election-victory-will-womens-votes-spark-a-silent-revolution-73855.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முதல் சாதாரண வாக்காளர் வரை, தேர்தலின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும். இது பாலின சமத்துவத்தை (Gender Equality) நோக்கிய ஒரு முக்கியப் படிக்கட்டாகக் கருதப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/women-voters.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் &#8216;பெண் சக்தி&#8217;: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?" /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/topic/tamil-nadu-assembly-election" target="_blank" rel="noopener">தமிழகச் சட்டமன்றத் தேர்தல்</a> களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பெண் வாக்காளர்கள் ஒரு மௌனப் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர். வெறும் வாக்காளர்களாக மட்டுமே பார்க்கப்பட்ட பெண்கள், இன்று தமிழக அரசியலின் வெற்றியைத் தீர்மானிக்கும் 'மையவிசையாக' உருவெடுத்துள்ளனர். அவ்வாறு, இந்த தேர்தலிலும் பெண் வாக்காளர்கள் ஒரு மௌனப் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர் என்றே கூறலாம்.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-highlights-from-an-80-member-family-arriving-on-a-tractor-to-robots-offering-a-welcome-73845.html">தமிழகத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசியங்கள்.. டிராக்டரில் வந்த 80 பேர் குடும்பம் முதல் வரவேற்பு அளித்த ரோபோக்கள் வரை..</a></strong></p>

<h3>ஆண்களை விட 13 லட்சம் அதிகம்:</h3>
தமிழகத்தின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ளது. இதில் மிகவும் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 13 லட்சம் அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கைப் பலம், தேர்தல் களத்தில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாகப் பெண்களை மாற்றியுள்ளது. இந்த மிகப்பெரிய வாக்கு வங்கி, எந்த ஒரு அரசியல் கட்சியின் வெற்றியையும் தலைகீழாக மாற்றக்கூடிய வலிமை கொண்டது. இதனால், அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்கள் அனைத்தும் பெண்களைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன.
<h3>வேட்பாளர் தேர்விலும் புதிய வரலாறு:</h3>
பெண்கள் வெறும் வாக்காளர்களாக மட்டுமே இல்லாமல், அதிகாரத்தை நோக்கிப் பயணிக்கும் வேட்பாளர்களாகவும் இம்முறை ஜொலிக்கின்றனர். மாநிலம் முழுவதும் இம்முறை போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 443-ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நான்கு முக்கியக் கட்சிகளுமே பெண் வேட்பாளர்களையே களமிறக்கியுள்ளன. இது ஒரு மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாக இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
<h3>பெண்களை நோக்கிய வாக்குறுதிகள்:</h3>
பெண் வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களை மையப்படுத்திய பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை உயர்வு, சுய உதவி குழுக்களுக்கான பிணையில்லா கடன்கள் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் தேர்தல் களத்தில் முன்னிலை பெற்றுள்ளன.
<h3>பாலின சமத்துவத்தை நோக்கிய நகர்வு:</h3>
தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முதல் சாதாரண வாக்காளர் வரை, தேர்தலின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும். இது பாலின சமத்துவத்தை (Gender Equality) நோக்கிய ஒரு முக்கியப் படிக்கட்டாகக் கருதப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html">வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!</a></strong>

ஒட்டுமொத்தமாக, தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாகப் பெண்கள் மாறியிருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரலாறு: 1952 முதல் 2026 வரை&#8230;</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/evolution-of-tamil-nadu-assembly-election-voter-turnout-a-historic-journey-from-1952-to-2026-73852.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 09:00:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/evolution-of-tamil-nadu-assembly-election-voter-turnout-a-historic-journey-from-1952-to-2026-73852.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Assembly Election: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் வாக்குப்பதிவு சதவீதம் என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அது மக்களின் அரசியல் எழுச்சியின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. 1952 முதல் 2026 வரை தமிழகம் கடந்து வந்த தேர்தல் பயணத்தை விரிவான புள்ளிவிவரங்களுடன் இங்கே காண்போம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/03/election-7.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரலாறு: 1952 முதல் 2026 வரை&#8230;" /></figure>தமிழகத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் ஜனநாயகத் திருவிழாவாக எழுச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் தமிழக தேர்தல் வரலாற்றிலேயே ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் 17-வது சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தைப் பரீட்சிக்கக் களம் கண்டனர். இதற்காகத் தமிழகத் தேர்தல் ஆணையம் மாநிலம் தழுவிய அளவில் 75,064 வாக்குச்சாவடிகளை அமைத்து விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. காலையிலிருந்தே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
<h3>வாக்காளர் எண்ணிக்கையும் பாலின விகிதமும்</h3>
இந்தத் தேர்தலின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆக உள்ளது. இதில் பாலின வாரியாகப் பார்க்கும்போது, பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட சற்று அதிகமாகவே உள்ளது. மொத்த வாக்காளர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்களும், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்களும் ஆவர். மேலும், 7,728 மூன்றாம் பாலினத்தவர்களும் இந்தத் தேர்தலில் தங்களின் வாக்கினைப் பதிவு செய்யத் தகுதி பெற்றிருந்தனர்.
<h3>தொடக்க கால தேர்தல்கள்: ஜனநாயகத்தின் முதல் காலடி (1952 - 1957)</h3>
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் 1952-ல் நடைபெற்றபோது, தமிழகத்தில் (அப்போதைய சென்னை மாகாணம்) 56.41% வாக்குகள் பதிவாகின. கல்வியறிவு மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் குறைவாக இருந்த அக்காலத்தில் இது ஒரு ஆரோக்கியமான தொடக்கமாகவே கருதப்பட்டது. ஆனால், அடுத்த தேர்தலான 1957-ல் இந்த சதவீதம் 46.84% ஆகக் குறைந்தது. இது தமிழக தேர்தல் வரலாற்றிலேயே பதிவான மிகக்குறைந்த வாக்கு சதவீதமாகும்.
<h3>அரசியல் மாற்றம் மற்றும் எழுச்சிக் காலம் (1962 - 1971)</h3>
1960-களில் தமிழக அரசியலில் மொழிப்போர் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசியது. இதன் விளைவாக, 1962-ல் வாக்குப்பதிவு முதன்முறையாக 70 சதவீதத்தைக் கடந்து 70.65% ஆகியது. அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடித்த 1967 தேர்தலில், வரலாறு காணாத வகையில் 76.57% வாக்குகள் பதிவாகின. இது மக்களின் அரசியல் ஆர்வத்தை உலகுக்குக் காட்டியது. பின்னர் 1971-ல் இது 71.82% எனத் தொடர்ந்தது.
<h3>எம்.ஜி.ஆர். காலமும் அதன் பின்னரும் (1977 - 1991)</h3>
புதிய அரசியல் சக்தியாக எம்.ஜி.ஆர் உருவெடுத்த 1977 தேர்தலில் 61.58% வாக்குகளே பதிவாகின. இருப்பினும், அவர் மீண்டும் ஆட்சியைப் பிடித்த 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வாக்குப்பதிவு முறையே 70.74% மற்றும் 73.47% என அதிகரித்தது. 1989-ல் பலமுனைப் போட்டியின் போது 69.69% வாக்குகளும், ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின் 1991-ல் நடைபெற்ற தேர்தலில் 63.08% வாக்குகளும் பதிவாகின.
<h3>நவீன கால மாற்றங்கள் (1996 - 2021)</h3>
1996-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது 66.95% வாக்குகளும், 2001-ல் 59.07% வாக்குகளும் பதிவாகின. 2011-ம் ஆண்டு தேர்தல் ஒரு முக்கிய மைல்கல்லாகும்; அப்போது 78.02% வாக்குகள் பதிவாகி அனைவரையும் வியக்க வைத்தது. அதன் பிறகு 2016-ல் 74.81% மற்றும் 2021-ல் 73.63% என ஓரளவிற்கு நிலையான வாக்குப்பதிவு நீடித்தது.
<h3>2026: சரித்திர சாதனை படைத்த 85 சதவீதம்</h3>
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலான 2026-ல், தமிழகம் தன் முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளது. 85% வாக்குப்பதிவு என்பது ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள ஒரு மாநிலத்தில், இத்தனை பெரிய சதவீதத்தினர் வாக்களித்திருப்பது, மக்கள் மாற்றத்தை நோக்கியோ அல்லது தங்களின் உரிமையை நிலைநாட்டவோ எவ்வளவு தீவிரமாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விஜய்யுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது&#8230; தேசிய தலைவர் நிதின் நபீன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/bjp-national-leader-nitin-nabin-said-no-situation-where-bjp-will-form-alliance-with-tvk-leader-vijay-73853.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 08:43:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/bjp-national-leader-nitin-nabin-said-no-situation-where-bjp-will-form-alliance-with-tvk-leader-vijay-73853.html</guid>
		            
			

    	<description><![CDATA[Bjp National Leader Nitin Nabin: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்துடன், பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமைக்கும் நிலை ஏற்படாது என்று அந்தக் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபீன் தெரிவித்தார். மேலும், திமுகவை விமர்சித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/nithin-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விஜய்யுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது&#8230; தேசிய தலைவர் நிதின் நபீன்!" /></figure>தமிழகத்தில் <a href="http://“ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!" target="_blank" rel="noopener">தவெகவுடன்</a>, பாஜக கூட்டணி அமைக்காது என்று அந்தக் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்தார். இது தொடர்பாக தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்திருந்த அவர் கூறியதாவது: 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் நிலவரம் வெவ்வேறு விதமாக உள்ளது. இருந்தாலும் அந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான சூழல் நிலவி வருவதாக தெரிகிறது. இதில், புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் பாஜக அரசு நிச்சயமாக ஆட்சி அமைக்கும். மேற்கு வங்க மாநிலத்தை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக ஆச்சரியம் அளிக்கும் தேர்தல் முடிவுகள் வரப்போகிறது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும். இதில், 100 சதவீதம் அளவுக்கு வெற்றி பெறுவது உறுதி. 5 மாநில மக்களின் மனநிலையை பார்க்கும் போது நிச்சயம் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது தெரிகிறது.
<h3>தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக ஆட்சியமைக்கும்</h3>
இந்த தேர்தல்களில் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது தற்போது கூற முடியாது. போகப்போக தெளிவான நிலை உருவாகும். தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். இதேபோல, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது. நாங்கள் தலைமை கட்சி கிடையாது. ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 ஆண்டு கால ஆட்சியில் ஊழல், சனாதன எதிர்ப்பு, அராஜகம் ஆகியவற்றிற்கு எதிரான மக்கள் மனநிலை காணப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-fear-at-first-then-excitement-first-time-voters-election-experiences-73664.html" target="_blank" rel="noopener">“ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!</a>
<h3>திமுகவுக்கு எதிரான அலை வீசி வருகிறது</h3>
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு எதிரான அலை வீசி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தேன். அந்த அனுபவத்தில் கூறுகிறேன், நிச்சயமாக இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான பின்னடைவு ஏற்படும். தமிழக அரசியல் களத்துக்கு நடிகர் விஜய் புதிதாக வந்துள்ளார். இதனால், வந்த வேகத்தில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
<h3>தவெகவுடன் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்படாது</h3>
தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி மிக மிக வலிமையாக உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது. மொத்தத்தில் தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி அமைக்க தேவையில்லை. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் போட்டியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணி தனித்தே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/nanguneri-as-people-boycott-election-at-perumpathu-poll-booth-a-younsgter-cast-her-vote-73689.html" target="_blank" rel="noopener">Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நெரிசலில் சிக்காமல் சென்னை திரும்பனுமா? இந்த விஷயங்களை கொஞ்சம் பிளான் பண்ணுங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/what-can-the-public-do-to-return-to-chennai-without-getting-stuck-in-traffic-jams-73849.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 08:16:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/what-can-the-public-do-to-return-to-chennai-without-getting-stuck-in-traffic-jams-73849.html</guid>
		            
			

    	<description><![CDATA[Public Return To Chennai : தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்னை திரும்புவதற்கு என்ன செய்யலாம் என்ற விவரத்தை இந்த ப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/chennai-traffic.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நெரிசலில் சிக்காமல் சென்னை திரும்பனுமா? இந்த விஷயங்களை கொஞ்சம் பிளான் பண்ணுங்க!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/chennai-election-officer-kumaraguruparan-stated-that-people-at-chennai-can-wait-and-vote-till-9pm-73762.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்ற தேர்தலில்</a> வாக்களிப்பதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதில், சென்னையில் இருந்து அதிகபட்சமாக 19.50 லட்சம் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இவர்களில் பலர் போதிய சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இல்லாத காரணத்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக காத்துக் கிடக்கும் சூழல் உருவானது. சில இடங்களில் போதிய பேருந்துகளை இயக்க கோரி போராட்டமும் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு திரும்பிய <a href="https://www.tv9tamilnews.com/elections/chennai-election-officer-kumaraguruparan-stated-that-people-at-chennai-can-wait-and-vote-till-9pm-73762.html" target="_blank" rel="noopener">பொதுமக்கள்</a>, ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) முதல் தங்களது ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு திரும்புவதற்கு திட்டமிட்டு இருப்பார்கள். அன்றைய நாளில் அனைவரும் வெளியூர் திரும்புவதால் அதிகளவு போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படும்.
<h3>கார் வைத்திருக்கும் பொது மக்கள் செய்ய வேண்டியது</h3>
இதனை தவிர்ப்பதற்கு சில ஐடியாக்களை இந்த பதிவில் பார்க்கலாம். சொந்த ஊர் சென்ற பொதுமக்களில் கார்கள் வைத்திருக்கும் நபர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்படாமல், அதிகாலையிலேயே காரில் புறப்பட்டால் பெரிதளவில் போக்குவரத்து நெரிசல் இன்றி அன்று மாலைக்குள் சென்னையை சென்றடைய முடியும். இதே போல, பேருந்துகளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பொதுமக்கள் இரவு நேர பயணத்தை தேர்வு செய்யாமல், பகல் நேர பயணத்தை தேர்வு செய்தால் எந்தவித கூட்ட நெரிசலும் இன்றி சென்னையை எளிதாக சென்றடைய முடியும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-assembly-election-2026-more-than-84-percent-polling-done-highest-in-tamilnadu-history-73783.html" target="_blank" rel="noopener">Tamil Nadu Election Polling Percent: வரலாறு படைத்த தமிழகம்.. 84.51% வாக்குகள் பதிவு..</a>
<h3>போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் பயணம்</h3>
அத்துடன், கார் மற்றும் பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கும் பொதுவான வழியில் செல்லாமல் கூகுள் மேப்பில் போக்குவரத்து நெரிசல் இல்லாத புதிதாக ஒரு வழியை தேர்வு செய்து அந்தப் பாதையில் பயணம் மேற்கொள்ளலாம். அவ்வாறு செல்லும் போது கூட்ட நெரிசலில் தங்களது வாகனம் சிக்கிக் கொள்ளாமலும், அதிகளவு எரிபொருள் விரயம் ஏற்படுவதில் இருந்தும், தேவையற்ற டென்ஷன்களில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
<h3>சங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல வாய்ப்பு</h3>
பொதுவாகவே, சென்னை பயணம் என்றால் அனைவரும் இரவு நேர பயணத்தை தான் தேர்வு செய்வார்கள். ஆனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு பகல் நேர பயணமும், போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதையும் டென்ஷன் ஏற்படுத்தாத பயணத்தை நமக்குத் தரும். அத்துடன் கூகுள் மேப் மூலமாக போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதையை தேர்வு செய்தால் டோல் கேட்டில் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-weather-update-summer-rains-are-set-to-pour-down-in-these-districts-chennai-imd-alert-73835.html" target="_blank" rel="noopener">இந்த மாவட்டங்களில் கோடை மழை கொட்டப்போகுது.. இன்றைய வானிலை ரிப்போர்ட் இதோ..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசியங்கள்.. டிராக்டரில் வந்த 80 பேர் குடும்பம் முதல் வரவேற்பு அளித்த ரோபோக்கள் வரை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-highlights-from-an-80-member-family-arriving-on-a-tractor-to-robots-offering-a-welcome-73845.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 08:14:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-highlights-from-an-80-member-family-arriving-on-a-tractor-to-robots-offering-a-welcome-73845.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: சென்னை தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்த 72 வயதான மனோன்மணி என்ற மூதாட்டி, தனது குடும்பத்தின் மீதான பிணைப்பையும் ஜனநாயகத்தின் மீதான பற்றையும் வெளிப்படுத்தினார். அவர் தனது மகன், பேரன், பேத்திகள் என மொத்தம் 18 வாக்காளர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/robo-tractor.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசியங்கள்.. டிராக்டரில் வந்த 80 பேர் குடும்பம் முதல் வரவேற்பு அளித்த ரோபோக்கள் வரை.." /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-breaks-75-year-record-85-15-percent-voter-turnout-in-assembly-elections-73841.html" target="_blank" rel="noopener">தமிழகச் சட்டமன்றத் தேர்தலில்</a> நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு, வெறும் அரசியல் நிகழ்வாக மட்டுமல்லாமல், மக்களின் உணர்வுப்பூர்வமான பங்களிப்போடும் நவீனத் தொழில்நுட்பத்தின் வரவோடும் ஒரு பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதில் இடம்பெற்ற சில சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-election-2026-voting-percentage-in-key-cm-candidate-constituencies-73810.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி – எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?</a></strong>
<h3>சிவகாசியில் டிராக்டரில் வந்த 80 வாக்காளர்கள்:</h3>
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதிக்குட்பட்ட பூசாரிப்பட்டி கிராமத்தில் ஒரு வியக்கத்தக்கச் சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள சுமார் 150 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரும் கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக டிராக்டரில் வாக்குச்சாவடிக்கு வந்தனர். அந்தக் குடும்பத்தில் வாக்களிக்கத் தகுதியுள்ள 80 பேரும் வரிசையாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
<h3>18 உறவினர்களுடன் வந்து வாக்களித்த சென்னை மூதாட்டி:</h3>
சென்னை தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்த 72 வயதான மனோன்மணி என்ற மூதாட்டி, தனது குடும்பத்தின் மீதான பிணைப்பையும் ஜனநாயகத்தின் மீதான பற்றையும் வெளிப்படுத்தினார். அவர் தனது மகன், பேரன், பேத்திகள் என மொத்தம் 18 வாக்காளர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். இத்தனை உறவினர்களுடன் வந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
<h3>வாக்காளர்களை வரவேற்ற நவீன ரோபோக்கள்:</h3>
தேர்தல் ஆணையம் இம்முறை வாக்காளர்களைக் கவரவும் உற்சாகப்படுத்தவும் பல இடங்களில் ரோபோக்களைப் பயன்படுத்தியது. அவ்வாறு, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள நகராட்சிப் பள்ளியில், பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சேலை அணிந்த ரோபோ ஒன்று பணியமர்த்தப்பட்டது. அது வாக்காளர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி அழகிய தமிழில் வரவேற்றது.

அதேபோல், மற்றொரு இடத்தில் வேஷ்டி, துண்டு அணிந்து தமிழ்ப் பண்பாட்டுடன் காட்சியளித்த ஆண் ரோபோ, வாக்காளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு அவர்களுக்குக் கை கொடுத்தும் மகிழ்வித்தது. கோவையில் 'டீனா' என்ற ரோபோ வாக்காளர்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தியது.
<h3>பசுமை வாக்குச்சாவடியும் தனிமனித உறுதியும்:</h3>
புதுக்கோட்டை மச்சுவாடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியைத் தேர்தல் அதிகாரிகள் முழுமையாக 'பசுமை வாக்குச்சாவடியாக' மாற்றியிருந்தது பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது.

<strong>மேலும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html">வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!</a></strong>

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையிலும், ஜனநாயகக் கடமையே முக்கியம் எனக் கருதி ஒரு வாக்காளர் மூன்று சக்கர நாற்காலியில் வந்தார். பின்னர் அங்கிருந்து ஒற்றைக் காலில் துள்ளிச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்த அவரது உறுதி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

ஒட்டுமொத்தமாக, தமிழகத்தின் இந்தப் புதிய தேர்தல் வரலாறு மக்களிடையே ஒரு பெரும் எழுச்சியையும், புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதற்கு சிறப்பு ரயில்.. இரு நாள்கள் இயக்கம்.. முழு விவரம் உள்ளே!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/special-train-operation-from-podanur-in-coimbatore-district-to-chennai-egmore-on-april-25th-and-26th-73846.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 07:37:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/special-train-operation-from-podanur-in-coimbatore-district-to-chennai-egmore-on-april-25th-and-26th-73846.html</guid>
		            
			

    	<description><![CDATA[Special Train Operation : தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்ற வாக்காளர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக போத்தனூரில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு இரு நாள்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/train-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதற்கு சிறப்பு ரயில்.. இரு நாள்கள் இயக்கம்.. முழு விவரம் உள்ளே!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/clash-between-minister-sekarbabu-and-tvk-candidate-sinora-ashok-sparks-tension-in-thuraimugam-constituency-73764.html" target="_blank" rel="noopener">தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல்</a> சுமூகமான முறையில் நடைபெற்றது. முன் எப்போதும் இல்லாமல் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏராளமான வாக்காளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். இதில், ஏராளமான பொதுமக்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் குறித்த நேரத்தில் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமலும், வாக்களிக்க முடியாமலும் போனது. அத்துடன், <a href="https://www.tv9tamilnews.com/elections/clash-between-minister-sekarbabu-and-tvk-candidate-sinora-ashok-sparks-tension-in-thuraimugam-constituency-73764.html" target="_blank" rel="noopener">வாக்காளர்களின்</a> வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஆகியவை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டன. இருந்தாலும், அதிக அளவிலான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், அனைத்து பொது மக்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
<h3>சென்னை திரும்புவதற்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு</h3>
இந்த நிலையில், சென்னையில் இருந்து வாக்களிப்பதற்காக சொந்த ஊர் சென்ற வாக்காளர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்ற வாக்காளர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக நாளை சனிக்கிழமை ( ஏப்ரல் 25) மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/highest-voting-percentage-districts-in-tamil-nadu-assembly-election-73794.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல் – அதிக வாக்குகள் பதிவான டாப் 10 மாவட்டங்கள்</a>
<h3>சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் நிலையம்</h3>
இந்த சிறப்பு ரயிலானது ஏப்ரல் 25, 26- ஆம் தேதிகளில் காலை 7:40 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக அன்று மாலை 5 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இதே போல, மேற்கண்ட நாட்களில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 4 மணியளவில் போத்தனூர் ரயில் நிலையத்தை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<h3>சிறப்பு ரயில்கள் -பேருந்துகளில் நிரம்பி வழியும் கூட்டம்</h3>
தமிழகத்தில் தேர்தல் நேரங்களில் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் ஆகும். அதன் அடிப்படையிலேயே சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், வழக்கத்தை விட இந்த தேர்தலில் அதிக அளவிலான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாகவே பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சிறப்பு பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-breaks-75-year-record-85-15-percent-voter-turnout-in-assembly-elections-73841.html" target="_blank" rel="noopener">75 ஆண்டுகால சாதனையை முறியடித்த தமிழகம்.. சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குப்பதிவு..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>75 ஆண்டுகால சாதனையை முறியடித்த தமிழகம்.. சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குப்பதிவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-breaks-75-year-record-85-15-percent-voter-turnout-in-assembly-elections-73841.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 07:24:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-breaks-75-year-record-85-15-percent-voter-turnout-in-assembly-elections-73841.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Election 2026 Voting Updates: தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 84% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆர்.கே.நகர் தொகுதி 91 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் 90% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மயிலாப்பூரில் மிகக் குறைவாக 75 சதவீதமும், சைதாப்பேட்டையில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tn-election-turnout.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="75 ஆண்டுகால சாதனையை முறியடித்த தமிழகம்.. சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குப்பதிவு.." /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/topic/tamil-nadu-assembly-election" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றத் தேர்தல்</a> வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 85.15% வாக்குகள் பதிவாகி புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் இந்தத் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை அதிக ஆர்வத்துடன் நிறைவேற்றியுள்ளனர். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1952-ம் ஆண்டு சென்னை மாகாணமாக இருந்தபோது நடந்த தேர்தலில் 54.75% வாக்குகள் பதிவாகின. பின்னர், 1971-ல் தமிழ்நாடு சட்டப்பேரவையாகப் பெயர் மாற்றப்பட்ட பிறகு 70.65% வாக்குகள் பதிவாகின.

இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குகளே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த 13 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து 85.15% வாக்குப்பதிவு என்ற புதிய மைல்கல்லை தமிழகம் எட்டியுள்ளது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-election-2026-voting-percentage-in-key-cm-candidate-constituencies-73810.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி – எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?</a></strong>
<h3>மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரம்:</h3>
வாக்குப்பதிவில் மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, சில மாவட்டங்கள் 90 சதவீதத்தைத் தாண்டி அசத்தியுள்ளன. அதிகபட்சமாக கரூர் மாவட்டம் 93 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் 91 சதவீதம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகக் குறைவாக 76% வாக்குகள் பதிவாகியுள்ளன. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 77% வாக்குகளும், திருநெல்வேலியில் 78% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
<h3>தொகுதி வாரியான முக்கியப் புள்ளிவிவரங்கள்:</h3>
சட்டமன்றத் தொகுதிகளில் வீரபாண்டி தொகுதி 93.40 சதவீத வாக்குப்பதிவுடன் மாநிலத்திலேயே முதலிடம் வகிக்கிறது. குமாரபாளையம், குளித்தலை, பாலக்கோடு ஆகிய தொகுதிகளில் தலா 93% வாக்குகளும், கிருஷ்ணராயபுரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் தலா 92% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மிகக்குறைந்த வாக்குப்பதிவாக பாளையங்கோட்டை தொகுதியில் 69% பதிவாகியுள்ளது. கிள்ளியூரில் 71%, மதுரை வடக்கில் 73%, காரைக்குடி மற்றும் மதுரை மத்திய தொகுதிகளில் தலா 74% வாக்குகள் பதிவாகியுள்ளன.
<h3>சென்னை மாவட்ட நிலவரம்:</h3>
தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 84% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆர்.கே.நகர் தொகுதி 91 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் 90% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மயிலாப்பூரில் மிகக் குறைவாக 75 சதவீதமும், சைதாப்பேட்டையில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
<h3>இந்தச் சாதனைக்குக் காரணம் என்ன?</h3>
இந்த இமாலய வாக்குப்பதிவு சாதனைக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு (SIR) தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தீவிர சரிபார்ப்புப் பணியின் மூலம் முறையற்ற 74.72 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாகக் குறைந்தது.

<strong>மேலும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html">வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!</a></strong>

இரண்டாவதாக இளைஞர்களின் ஆர்வம், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றியது இந்த வரலாற்றுச் சாதனைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் இந்த உயரிய வாக்குப்பதிவு சதவீதம் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கழுத்தில் அணிந்திருந்த விசில்.. திமுகவினர் திடீர் பிடிவாதம்.. திகைத்து நின்ற துணை ராணுவ வீரர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/dmk-opposed-use-of-whistle-by-paramilitary-personnel-in-karur-and-perambur-constituencies-73839.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 07:01:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/dmk-opposed-use-of-whistle-by-paramilitary-personnel-in-karur-and-perambur-constituencies-73839.html</guid>
		            
			

    	<description><![CDATA[Whistle Symbol: தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ படை வீரர்கள் வைத்திருந்த விசிலை அகற்ற கோரி திமுகவினர் பிடிவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வாக்குச்சாவடிகளில் பதற்றம் தொற்றிக் கொண்டது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/dmk-opposed-use-of-whistle.png" class="attachment-large size-large wp-post-image" alt="கழுத்தில் அணிந்திருந்த விசில்.. திமுகவினர் திடீர் பிடிவாதம்.. திகைத்து நின்ற துணை ராணுவ வீரர்கள்!" /></figure>தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ( வியாழக்கிழமை) <a href="http://Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்.." target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்</a> சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவியதுடன், சில வாக்குச்சாவடிகளின் சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறின. இதில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை முதல் ஏராளமான பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ படையினர் தங்களது சீருடையில் விசிலை பொருத்தியிருந்தனர். இதனைப் பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் தமிழ் தெரியாத அந்த பாதுகாப்பு படை வீரரிடம் விசிலை அகற்றுமாறு ஆக்ரோஷமாக கூறினார். இதனை எதிர்பாராத அந்த நபர் சற்று அதிர்ச்சியில் உறைந்து போனார். அப்போது, திமுகவைச் சேர்ந்த நபர் கூறுகையில், பாதுகாப்பு படை வீரர் வைத்திருப்பது அரசியல் கட்சியின் சின்னமாகும்.
<h3>அரசியல் கட்சியின் சின்னமான விசில்</h3>
அவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் அரசியல் கட்சியின் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது. இவர் வைத்திருப்பது கார்ப்பரேஷன் விசில் ஆகும். விசில் தேவை எனில், போலீஸ் விசிலை பயன்படுத்த வேண்டும். உடனே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக போலீசார் அந்த நபரிடம் சமரசத்தில் ஈடுபட்டனர். பின்னர், பாதுகாப்பு படை வீரரிடம் விசிலை அகற்றுமாறு தமிழக போலீசார் கூறினர். இதைத் தொடர்ந்து, அந்த பாதுகாப்பு படை வீரர் தனது விசிலை சீருடைகள் இருந்து அகற்றினார். பின்னர், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/nanguneri-as-people-boycott-election-at-perumpathu-poll-booth-a-younsgter-cast-her-vote-73689.html" target="_blank" rel="noopener">Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..</a>
<h3>துணை ராணுவ வீரர் விசிலால் பரபரப்பு</h3>
இதே போல, சென்னை, பெரம்பூர் தொகுதியில் மகாகவி பாரதியார் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி பகுதியில் ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க வந்த காரணத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது. இதனை பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ வீரர் ஒருவர் விசில் ஊதி போக்குவரத்தை சீரமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, காவல் துணை ஆணையர் பதவியில் இருக்கும் போலீசார் மற்றும் சில கட்சியினர் மத்திய துணை ராணுவ படை வீரரிடம் நீங்கள் அணிந்திருப்பது ஒரு கட்சியின் சின்னமாகும்.
<h3>தமிழ் தெரியாமல் விழி பிதுங்கி நின்ற ராணுவ வீரர்</h3>
எனவே, அந்த விசிலை அகற்றுமாறும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியை நாங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். தமிழ் தெரியாத அந்த துணை ராணுவ வீரர் எதுவும் புரியாமல் சற்று விழி பிதுங்கி நின்றார். பின்னர், ஒரு கட்டத்துக்குப் பிறகு துணை ராணுவ படை வீரர் தான் கழுத்தில் அணிந்திருந்த விசிலை அகற்றினார். இந்த இரு நிகழ்வுகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/clash-between-minister-sekarbabu-and-tvk-candidate-sinora-ashok-sparks-tension-in-thuraimugam-constituency-73764.html" target="_blank" rel="noopener">துறைமுகம் தொகுதயில் அமைச்சர் சேகர் பாபு – தவெக வேட்பாளரிடையே மோதல்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜனநாயக கடமையை புறக்கணித்த செந்தில் பாலாஜி.. திமுக நிர்வாகிகள் கூறிய காரணம்&#8230;!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/former-dmk-minister-senthil-balaji-did-not-vote-in-the-assembly-elections-73836.html</link>	
		<pubDate>Fri, 24 Apr 2026 06:25:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/former-dmk-minister-senthil-balaji-did-not-vote-in-the-assembly-elections-73836.html</guid>
		            
			

    	<description><![CDATA[Senthil Balaji Did Not Vote : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடைசி வரை தனது வாக்கை செலுத்தவில்லை. இதற்கான காரணத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும், அவரது ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளது. என்ன அது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/12/senthil-balaji-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜனநாயக கடமையை புறக்கணித்த செந்தில் பாலாஜி.. திமுக நிர்வாகிகள் கூறிய காரணம்&#8230;!" /></figure>திராவிட முன்னேற்றக் கழகத்தில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர், கரூர் <a href="https://www.tv9tamilnews.com/elections/2026-tamil-nadu-assembly-election-polling-ends-by-6pm-and-evm-machines-sealed-73766.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தொகுதியில்</a> இருந்து கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வானார். பின்னர், அமைச்சராக இருந்து வந்த போது, ஊழல் புகாரில் கைதாகி சிறை சென்ற நிலையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு கரூர் தொகுதியில் இருந்து தீவிர தேர்தல் பணி மற்றும் கட்சி பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்ற <a href="https://www.tv9tamilnews.com/elections/chennai-election-officer-kumaraguruparan-stated-that-people-at-chennai-can-wait-and-vote-till-9pm-73762.html" target="_blank" rel="noopener">சட்டமன்றத் தேர்தலில்</a> கரூர் தொகுதியில் இருந்து கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதனிடையே, கோயம்புத்தூர் மற்றும் கரூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் செந்தில் பாலாஜி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
<h3>கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி</h3>
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டாலும், அவருக்கு கரூர் தொகுதியில் தான் வாக்கு உள்ளது. எனவே, அவர் வாக்குப்பதிவு நாளில் கோயம்புத்தூரில் இருந்து கரூருக்கு சென்று தனது வாக்கை செலுத்தி விட்டு பின்னர் மீண்டும் கோயம்புத்தூர் திரும்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கரூர் தொகுதிக்குள்பட்ட ராமேஸ்வரபட்டி புதுப்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் செந்தில் பாலாஜி வாக்கு பதிவு செய்வது வழக்கமாகும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/highest-voting-percentage-districts-in-tamil-nadu-assembly-election-73794.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல் – அதிக வாக்குகள் பதிவான டாப் 10 மாவட்டங்கள்</a>
<h3>கடைசி வரை வாக்களிக்க வராத செந்தில் பாலாஜி</h3>
ஆனால், வாக்குப்பதிவு நாளில் காலை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வாக்களிப்பதற்காக வந்திருந்தார். அவர் தனது வாக்கை செலுத்தி விட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறிய போது, செந்தில் பாலாஜி எப்போது வாக்களிக்க வருவார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அண்ணன் செந்தில் பாலாஜி பிறகு வந்து தனது வாக்கை செலுத்துவார் என்று கூறி சென்றார். ஆனால், மாலை 6 மணி வரை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவும் ஆன செந்தில் பாலாஜி கடைசி வரை தனது வாக்கை செலுத்துவதற்கு வரவில்லை.
<h3>செந்தில்பாலாஜி வாக்களிக்காததற்கு காரணம்</h3>
கோயம்புத்தூர் தொகுதியில் திமுக பொறுப்பாளராக இருந்து வரும் செந்தில் பாலாஜி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த காரணத்தால், அவர் வாக்களிக்க வரவில்லை என்றும், வாக்குப்பதிவின் போது, கோவை தெற்கு தொகுதியில் ஏதேனும் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டால் அதனை முன் நின்று சமரசம் செய்வதற்காக அவர் வாக்குப்பதிவு செய்ய செல்லாமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாகவே கரூரில் ஓட்டு போடுவதற்காக செந்தில் பாலாஜி செல்லவில்லை என்று திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-election-2026-voting-percentage-in-key-cm-candidate-constituencies-73810.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி – எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்னை</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/voting-halted-in-erode-due-to-technical-glitch-in-evm-control-unit-73831.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 22:35:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/voting-halted-in-erode-due-to-technical-glitch-in-evm-control-unit-73831.html</guid>
		            
														<description><![CDATA[தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தபோது இந்த கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சில நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தேர்தல் அதிகாரிகள் வந்து இயந்திரத்தை சரி செய்தனர். ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/voting-halted-in-erode.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்னை" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/mi20ONl0-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p data-start="126" data-end="346">தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தபோது இந்த கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சில நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தேர்தல் அதிகாரிகள் வந்து இயந்திரத்தை சரி செய்தனர்.</p>
<p data-start="769" data-end="907" data-is-last-node="" data-is-only-node=""></p>]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>சென்னை அரும்பாக்கத்தில் வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/voting-concludes-for-tamil-nadu-assembly-election-2026-visuals-from-chennai-middle-school-arumbakkam-73829.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 22:28:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/voting-concludes-for-tamil-nadu-assembly-election-2026-visuals-from-chennai-middle-school-arumbakkam-73829.html</guid>
		            
														<description><![CDATA[தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் காலை முதல் மாலை வரை வாக்காளர்கள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையின் அரும்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மிடில் ஸ்கூல் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்களித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/chennai-arumbakkam-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சென்னை அரும்பாக்கத்தில் வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்கள்" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/YLDAFKk9-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் காலை முதல் மாலை வரை வாக்காளர்கள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையின் அரும்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மிடில் ஸ்கூல் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்களித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>வாக்காளர்களுக்கு அழுத்தம் கூடாது &#8211; அதிமுக வேட்பாளர் சரவணன் கருத்து</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/aiadmk-candidate-p-saravanan-reacts-to-chief-election-commissioner-gyanesh-kumar-statement-in-madurai-73827.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 22:22:57 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/aiadmk-candidate-p-saravanan-reacts-to-chief-election-commissioner-gyanesh-kumar-statement-in-madurai-73827.html</guid>
		            
														<description><![CDATA[மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பி.சரவணன், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்துள்ளார்.  தேர்தல் தொடர்பான முக்கிய அம்சங்களைப் பற்றி கருத்து தெரிவித்த அவர், தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், வாக்காளர்கள் எந்தவித அழுத்தமுமின்றி வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/saravanan-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்காளர்களுக்கு அழுத்தம் கூடாது &#8211; அதிமுக வேட்பாளர் சரவணன் கருத்து" /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/3272YDDp-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-69c9ede1-b408-8322-bbf7-1c484fd052d0-1" data-testid="conversation-turn-1158" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="e15f051c-a16a-42e8-91ed-edd2564a5e74" data-message-model-slug="gpt-5-3" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="161" data-end="320">மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பி.சரவணன், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்துள்ளார்.  தேர்தல் தொடர்பான முக்கிய அம்சங்களைப் பற்றி கருத்து தெரிவித்த அவர், தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், வாக்காளர்கள் எந்தவித அழுத்தமுமின்றி வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div>]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>வாக்குப்பதிவின் போது பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரம்.. நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/erode-tamil-nadu-assembly-election-2026-polling-stopped-due-to-technical-glitch-in-evm-73816.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 21:48:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/erode-tamil-nadu-assembly-election-2026-polling-stopped-due-to-technical-glitch-in-evm-73816.html</guid>
		            
														<description><![CDATA[தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அப்பகுதியில் சற்று நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/polling-machine-brokend.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்குப்பதிவின் போது பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரம்.. நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு.." /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/EYwKylNu-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p data-start="123" data-end="211">தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அப்பகுதியில் சற்று நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>எழும்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்து சீல் வைக்கப்பட்ட EVM..</title>
		<link>https://www.tv9tamilnews.com/videos/2026-assembly-election-tamil-nadu-egmore-constituency-polling-over-and-evm-sealed-73815.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 21:42:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[வீடியோ - Tamil News Videos]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/videos/2026-assembly-election-tamil-nadu-egmore-constituency-polling-over-and-evm-sealed-73815.html</guid>
		            
														<description><![CDATA[2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ]]></description>
						<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/seal.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எழும்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்து சீல் வைக்கப்பட்ட EVM.." /></figure><p><iframe class="jwplatform" title="Jw Video Player" id="video-custom" data-src="https://content.jwplatform.com/players/pCjN8JHy-i3kV1w3s.html" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது.]]></content:encoded>	
						
					
				
   				</item>





        
<item>
		<title>சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி  &#8211; எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-election-2026-voting-percentage-in-key-cm-candidate-constituencies-73810.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 21:36:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-election-2026-voting-percentage-in-key-cm-candidate-constituencies-73810.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி, திமு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகின்றன.  இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என பார்க்கலாம். ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/cm-canditates-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி  &#8211; எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?" /></figure>சென்னை, ஏப்ரல்  23 : தமிழ்நாடு <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-assembly-election-2026-more-than-84-percent-polling-done-highest-in-tamilnadu-history-73783.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்</a> இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மாலை 6 மணியுடன் தேர்தல் நிறைவடைந்துள்ளது. ஒரு சில தொகுதிகளில் மட்டும் தாமதமாக வந்த வாக்காளர்களுக்காக டோக்கன் வழங்கப்பட்டு 8 மணி வரை <a href="https://www.tv9tamilnews.com/elections/2026-tamil-nadu-assembly-election-polling-ends-by-6pm-and-evm-machines-sealed-73766.html" target="_blank" rel="noopener">வாக்குப்பதிவு</a>  நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலை 6 மணி வரை தமிழ்நாட்டில்  84.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
<h3>முதல்வர் வேட்பாளர்கள் தொகுதி நிலவரம்</h3>
இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி, திமு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகின்றன.  இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என பார்க்கலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html">வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!</a></strong>
<ul>
 	<li>முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 86.1 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 92.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 74.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>தவெக தலைவர் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 81.77  சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
</ul>
<h3>தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் விவரம்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Tamil Nadu, with 84.69% and West Bengal (Phase-I), with 91.78%, recorded the highest-ever poll-participation since Independence. Previously, the highest poll participation in Tamil Nadu was 78.29% (2011) and in West Bengal was 84.72% (2011), respectively.</p>
In both West Bengal and… <a href="https://t.co/LLZhUuxQyR">pic.twitter.com/LLZhUuxQyR</a>

— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/2047325873167323604?ref_src=twsrc%5Etfw">April 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகள் காரணமாக முதன்முறையாக 84.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட சுமார் 29 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் அதிகபட்சமாக 93.05 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.  குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/elections/independent-candidate-including-4-people-arrested-for-breaking-voting-machine-in-kalasappakkam-73706.html"> வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!</a></strong>

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 6 மணிக்கு மேலும் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள் வாக்களித்து முடித்த பின் எந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சட்டமன்ற தேர்தல் &#8211; அதிக வாக்குகள் பதிவான டாப் 10 மாவட்டங்கள்</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/highest-voting-percentage-districts-in-tamil-nadu-assembly-election-73794.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 20:32:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/highest-voting-percentage-districts-in-tamil-nadu-assembly-election-73794.html</guid>
		            
			

    	<description><![CDATA[TN Election 2026 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலான வாக்குசாவடிகளில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 84.51 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மாவட்ட வாரியாக விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/vote-percentage-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சட்டமன்ற தேர்தல் &#8211; அதிக வாக்குகள் பதிவான டாப் 10 மாவட்டங்கள்" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 23 :</strong> தமிழ்நாடு <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-assembly-election-2026-more-than-84-percent-polling-done-highest-in-tamilnadu-history-73783.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்</a> இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மாலை 6 மணியுடன் தேர்தல் நிறைவடைந்துள்ளது. ஒரு சில தொகுதிகளில் மட்டும் தாமதமாக வந்த வாக்காளர்களுக்காக டோக்கன் வழங்கப்பட்டு 8 மணி வரை <a href="https://www.tv9tamilnews.com/elections/2026-tamil-nadu-assembly-election-polling-ends-by-6pm-and-evm-machines-sealed-73766.html" target="_blank" rel="noopener">வாக்குப்பதிவு</a>  நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலை 6 மணி வரை தமிழ்நாட்டில்  84.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
<h3>அதிக வாக்குகள் பதிவாகிய டாப் 10 மாவட்டங்கள்</h3>
தமிழ்நாட்டில் 84.51 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழ்நாட்டில் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இது தான் அதிகம் என கூறப்படுகிறது.இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது . அதே போல மாவட்ட வாரியாக அதிக வாக்குகள் குறித்து விவரங்களும் வெளியாகியுள்ளன. அதில் டாப் 10 மாவட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html">வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!</a></strong>
<ol>
 	<li>கரூரில் அதிகபட்சமாக 91.92 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>சேலத்தில் 90.19 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>3வதாக திருப்பூரில் 89.8 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>ஈரோட்டில் 89.77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>நாமக்கல்லில் 89.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>திண்டுக்கல்லில் 88.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>ராணிப்பேட்டையில் 88.58 சதவிகித வாக்குள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>திருப்பத்தூரில் 88.22 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>வேலூரில் 87.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
 	<li>விழுப்புரத்தில் 87.67 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.</li>
</ol>
<h3>தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் விவரம்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Tamil Nadu, with 84.69% and West Bengal (Phase-I), with 91.78%, recorded the highest-ever poll-participation since Independence. Previously, the highest poll participation in Tamil Nadu was 78.29% (2011) and in West Bengal was 84.72% (2011), respectively.

In both West Bengal and… <a href="https://t.co/LLZhUuxQyR">pic.twitter.com/LLZhUuxQyR</a></p>
— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/2047325873167323604?ref_src=twsrc%5Etfw">April 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகள் காரணமாக முதன்முறையாக 84.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட சுமார் 29 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் அதிகபட்சமாக 93.05 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.  குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/elections/independent-candidate-including-4-people-arrested-for-breaking-voting-machine-in-kalasappakkam-73706.html"> வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!</a></strong>

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 6 மணிக்கு மேலும் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள் வாக்களித்து முடித்த பின் எந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Election Polling Percent: வரலாறு படைத்த தமிழகம்.. 84.51% வாக்குகள் பதிவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-assembly-election-2026-more-than-84-percent-polling-done-highest-in-tamilnadu-history-73783.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 19:32:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-assembly-election-2026-more-than-84-percent-polling-done-highest-in-tamilnadu-history-73783.html</guid>
		            
			

    	<description><![CDATA[2026 Assembly Election Poll Percent: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை இல்லாத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை தமிழக மக்கள் படைத்துள்ளனர். மாலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக முழுவதும் கிட்டத்தட்ட 84.51% வாக்குகள் பதிவாகியுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/per.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Election Polling Percent: வரலாறு படைத்த தமிழகம்.. 84.51% வாக்குகள் பதிவு.." /></figure><p data-start="123" data-end="246"><strong>ஏப்ரல் 23, 2026:</strong> தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை இல்லாத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை தமிழக மக்கள் படைத்துள்ளனர். மாலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக முழுவதும் கிட்டத்தட்ட 84.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேர்தலிலிருந்து இதுவரை பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாகும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-இல் அதிகபட்சமாக 4.83 கோடி பேர் வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், சுமார் 20 லட்சம் பேர் அதிகமாக வாக்குப்பதிவு செய்துள்ளனர்.</p>
<p data-start="296" data-end="584">வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இந்த பணிகளுக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைக்கப்பட்டது. இதற்கு முன்பு 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p data-start="296" data-end="584">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/chennai-election-officer-kumaraguruparan-stated-that-people-at-chennai-can-wait-and-vote-till-9pm-73762.html">6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் காத்திருந்து வாக்களிக்கலாம் – சென்னை தேர்தல் அலுவலர் குமரகுருபரன்..</a></p>

<h3 data-start="296" data-end="584">நிறைவடைந்த வாக்குப்பதிவு:</h3>
<p data-start="586" data-end="663">காலை 7:00 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.</p>
<p data-start="816" data-end="945">1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களை ஒப்பிடுகையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில்தான் அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.</p>

<ul data-start="947" data-end="1054">
 	<li data-section-id="lz6k6w" data-start="947" data-end="964">2001 – 59.07%</li>
 	<li data-section-id="qgq7i1" data-start="965" data-end="982">2006 – 70.82%</li>
 	<li data-section-id="pj5sn0" data-start="983" data-end="1000">2011 – 78.01%</li>
 	<li data-section-id="2fppio" data-start="1001" data-end="1018">2016 – 74.24%</li>
 	<li data-section-id="vzeju8" data-start="1019" data-end="1036">2021 – 72.73%</li>
 	<li data-section-id="ev49j2" data-start="1037" data-end="1054">2026 – 84.51%</li>
</ul>
<p data-start="1056" data-end="1174">தொகுதி வாரியாக பார்க்கும்போது, தமிழகத்தில் அதிகபட்சமாக வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.50% வாக்குகள் பதிவாகியுள்ளன.</p>
<p data-start="1176" data-end="1402">வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் சுற்றுவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்யப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான நாள் மே 4 ஆகும்.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகம் முழுவதும் நிறைவடைந்த வாக்குப்பதிவு.. சீல் வைக்கப்பட்ட EVM..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/2026-tamil-nadu-assembly-election-polling-ends-by-6pm-and-evm-machines-sealed-73766.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 19:08:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/2026-tamil-nadu-assembly-election-polling-ends-by-6pm-and-evm-machines-sealed-73766.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Assembly Election: வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில், EVM கருவிகளுக்கு தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 4 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 123 பேர் வாக்களித்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/seal.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகம் முழுவதும் நிறைவடைந்த வாக்குப்பதிவு.. சீல் வைக்கப்பட்ட EVM.." /></figure><p data-start="125" data-end="345"><strong>ஏப்ரல் 23, 2026:</strong> 2026 <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election">சட்டப்பேரவைத்</a> தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன், நீண்ட வரிசையில் காத்திருந்து, வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர்.</p>
<p data-start="584" data-end="745">இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் துறை பிரபலங்கள் கூட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.</p>

<h3 data-start="584" data-end="745">விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு:</h3>
<p data-start="747" data-end="1069">இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சமாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது அது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆக குறைக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="747" data-end="1069">தமிழக தேர்தலில் அதிக வாக்குப்பதிவு:</h3>
<p data-start="1071" data-end="1381">காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 1952 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அதிகபட்சமாக பதிவான வாக்குப்பதிவு 77.80% ஆக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாகும்.</p>
<p data-start="1383" data-end="1773">மக்கள் அனைவரும் காலை முதல் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்தனர். சென்னை குறித்து பேசும்போது, தேர்தல் அலுவலர் குமரகுருபரன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதாவது, மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அனைவரும் இரவு 8 மணி ஆகிய பின்னரும் காத்திருந்து வாக்களிக்கலாம் என தெரிவித்தார். யாரும் தங்களது வாக்குரிமையை இழக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கூறினார்.</p>

<h3 data-start="1383" data-end="1773">வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்:</h3>
<p data-start="1775" data-end="1932">வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில், EVM கருவிகளுக்கு தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 4 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 123 பேர் வாக்களித்துள்ளனர்.</p>
<p data-start="1775" data-end="1932">மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/elections/chennai-election-officer-kumaraguruparan-stated-that-people-at-chennai-can-wait-and-vote-till-9pm-73762.html"> 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் காத்திருந்து வாக்களிக்கலாம் – சென்னை தேர்தல் அலுவலர் குமரகுருபரன்..</a></p>
<p data-start="2051" data-end="2282">வாக்குப்பதிவு முடிந்ததும், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p data-start="2284" data-end="2456">24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மின்தடை ஏற்பட்டாலும் செயல்படும் வகையில் நவீன கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.</p>

<h3 data-start="2458" data-end="2575">மே.4 வாக்கு எண்ணிக்கை:</h3>
<p data-start="2577" data-end="2802">வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் சுற்றுவாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் EVM-களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.</p>
<p data-start="2804" data-end="2896">இதன் மூலம், 2026 ஆம் ஆண்டுக்கான ஜனநாயக திருவிழா நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>துறைமுகம் தொகுதயில் அமைச்சர் சேகர் பாபு &#8211; தவெக வேட்பாளரிடையே மோதல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/clash-between-minister-sekarbabu-and-tvk-candidate-sinora-ashok-sparks-tension-in-thuraimugam-constituency-73764.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 19:04:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/clash-between-minister-sekarbabu-and-tvk-candidate-sinora-ashok-sparks-tension-in-thuraimugam-constituency-73764.html</guid>
		            
			

    	<description><![CDATA[துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றதாகவும், அதைத் தடுத்ததால் அவருக்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அசோக்கிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தவெகவினர் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதற்கு தவெகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/sekar-babu-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="துறைமுகம் தொகுதயில் அமைச்சர் சேகர் பாபு &#8211; தவெக வேட்பாளரிடையே மோதல்" /></figure><strong>சென்னை, ஏப்ரல் 23 :</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/2026-tamil-nadu-assembly-election-polling-ends-by-6pm-and-evm-machines-sealed-73766.html" target="_blank" rel="noopener">தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்</a> ஏப்ரல் 23, 2026 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.  மேலும் மாலை 5 மணி நிலவரப்படி  4.71 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.  இந்த நிலையில் துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றதாகவும், அதைத் தடுத்ததால் அவருக்கும் <a href="https://www.tv9tamilnews.com/elections/voters-dressed-as-tvk-leader-vijay-in-trichy-east-constituency-73687.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றிக் கழக</a> வேட்பாளர் அசோக்கிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தவெகவினர் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபுவுக்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அசோக்கிற்கும் இன்று மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அமைச்சர் சேகர் பாபு தனது ஆதரவாளர்களுடன் துறைுகம் தொகுதி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்றதாகவும் அதனை அசோக் தட்டிக்கேட்டதால் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கன்றன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html">வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!</a></strong>
<h3>அமைச்சர் சேகர் பாபு  -  தவெக வேட்பாளர் மோதல்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">BREAKING 🚨
A video circulating on social media appears to show an altercation involving <a href="https://twitter.com/hashtag/DMK?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DMK</a> leader &amp; former minister Sekar Babu and <a href="https://twitter.com/hashtag/TVK?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TVK</a> <a href="https://twitter.com/hashtag/Harbour?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Harbour</a> candidate P.S. Ashok.</p>
The exact cause of the incident is not yet officially confirmed. Authorities are expected to look into the… <a href="https://t.co/ngiM1mtTVx">pic.twitter.com/ngiM1mtTVx</a>

— Shining India News (@shiningindnews) <a href="https://twitter.com/shiningindnews/status/2047296756275421315?ref_src=twsrc%5Etfw">April 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த நிலையில் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகளை தவெகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.  சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த சில நிமிடங்களில் இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/elections/independent-candidate-including-4-people-arrested-for-breaking-voting-machine-in-kalasappakkam-73706.html">வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!</a></strong>

இந்த நிலையில் மற்றொரு புறம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை அதிமுகவினர் தாக்க முயன்றதாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து திமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காலையில் இருந்து தேர்தல் அமைதியாக நடைபெற்ற நிலையில் தற்போது வேட்பாளர்களிடையே மோதல் அதிகரித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தேசிய அளவில் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் காத்திருந்து வாக்களிக்கலாம் &#8211; சென்னை தேர்தல் அலுவலர் குமரகுருபரன்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/chennai-election-officer-kumaraguruparan-stated-that-people-at-chennai-can-wait-and-vote-till-9pm-73762.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 18:40:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/chennai-election-officer-kumaraguruparan-stated-that-people-at-chennai-can-wait-and-vote-till-9pm-73762.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Assembly Election: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இரவு 8 மணி, 9 மணி ஆகிய நேரங்களிலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/6pm.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் காத்திருந்து வாக்களிக்கலாம் &#8211; சென்னை தேர்தல் அலுவலர் குமரகுருபரன்.." /></figure><p data-start="125" data-end="269"><strong>சென்னை, ஏப்ரல் 23, 2026:</strong> தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவர்கள் வரிசையில் காத்திருந்து இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் அறிவித்துள்ளார்.</p>

<h3 data-start="125" data-end="269">2026 ஜனநாயக திருவிழா:</h3>
<p data-start="538" data-end="768">2026 சட்டமன்றத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.</p>
<p data-start="881" data-end="1053">தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதாவது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.</p>
<p data-start="881" data-end="1053">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html">வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!</a></p>

<h3 data-start="881" data-end="1053">காலை முதல் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்:</h3>
<p data-start="1055" data-end="1259">இந்த தேர்தலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முன்பு 6 கோடிக்கு மேல் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, இந்த பணிகளுக்குப் பிறகு 5.73 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="1261" data-end="1538">காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து வாக்களித்துள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.</p>

<h3 data-start="1261" data-end="1538">சென்னையில் 9 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு:</h3>
<p data-start="1540" data-end="1794">மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இரவு 8 மணி, 9 மணி ஆகிய நேரங்களிலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p data-start="1796" data-end="1958">வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகளை சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p data-start="1960" data-end="2058">இதனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் 90% ஐ கடந்த வாக்குப்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கடைசி கட்டத்தில் 2026 தேர்தல்.. மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/2026-assembly-election-tamil-nadu-5pm-status-more-than-82-percent-polling-done-73750.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 17:52:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/2026-assembly-election-tamil-nadu-5pm-status-more-than-82-percent-polling-done-73750.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடைய உள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 90% வாக்குப்பதிவை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/5pm.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கடைசி கட்டத்தில் 2026 தேர்தல்.. மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு.." /></figure><p data-start="123" data-end="264">தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடைய உள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 90% வாக்குப்பதிவை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், காலை முதல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.</p>

<h3 data-start="123" data-end="264">82% வாக்குப்பதிவு:</h3>
<p data-start="123" data-end="349">மாலை 5 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 4 கோடியே 71 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியதாக சொல்லலாம். இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது 82% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.</p>
<p data-start="123" data-end="349">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/independent-candidate-including-4-people-arrested-for-breaking-voting-machine-in-kalasappakkam-73706.html">வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!</a></p>
<p data-start="351" data-end="594">காலை முதல் அமைதியான முறையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். வெளியூர்களில் இருந்தும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து வாக்களித்து வருகின்றனர். அதேபோல், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் வாக்களிக்க தமிழகத்திற்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.</p>

<h3 data-start="351" data-end="594">தலைவர்கள் போட்டியிடும் தொகுதியின் நிலவரம்:</h3>
<p data-start="717" data-end="945">முக்கியமாக, தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 83.58% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.</p>
<p data-start="947" data-end="1097">அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 89.09% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.</p>
<p data-start="947" data-end="1097">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html">வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!</a></p>
<p data-start="1099" data-end="1306">நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 71.88% வாக்குப்பதிவும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 86.72% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது.</p>
<p data-start="1308" data-end="1404">மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் 79.32% வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளது.</p>
<p data-start="1406" data-end="1568">ஜனநாயக திருவிழா நிறைவடைய இன்னும் சில மணி நேரங்கள் உள்ள நிலையில், வாக்காளர்கள் தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.</p>
<p data-start="1570" data-end="1727">2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், அதிகபட்ச வாக்குப்பதிவு 72% ஆக இருந்த நிலையில், தற்போது அது 82% ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 17:37:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/ex-army-man-stabs-policeman-at-polling-station-in-mayiladuthurai-district-73730.html</guid>
		            
			

    	<description><![CDATA[Mayiladuthurai Police Stabbed: மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை முன்னாள் ராணுவ வீரர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/mayiladuthurai-policeman-stabs.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!" /></figure>தமிழகத்தில் <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-2026-assembly-election-polling-percentage-till-1-pm-district-wise-details-73675.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்</a> வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை எந்தவித அசம்பாவிதமும் இன்றி சமூகமான முறையில் நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருந்தாலும், சில வாக்குச்சாவடி மையங்களில் கட்சியினர் இடையே மோதல், கள்ள ஓட்டு செலுத்துவது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பொறையார் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-2026-assembly-election-polling-percentage-till-1-pm-district-wise-details-73675.html" target="_blank" rel="noopener">வாக்குச்சாவடி மையத்தில்</a> காலை முதல் ஏராளமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். அந்த வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதில், குத்தாலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
<h3>தலைமை காவலருக்கு சரமாரி கத்திக்குத்து</h3>
அப்போது, வாக்குச்சாவடிக்கு வந்த ஒரு நபர் திடீரென தலைமை காவலர் விக்னேஷ் கத்தியால் குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத காவலருக்கு கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிவிட்டார். பின்னர், தலைமை காவலரை மீட்டு பொறையார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வாக்குச்சாவடி பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் காட்டிச்சேரி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/nanguneri-as-people-boycott-election-at-perumpathu-poll-booth-a-younsgter-cast-her-vote-73689.html" target="_blank" rel="noopener">Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..</a>
<h3>முன்னாள் ராணுவ வீரர் கைது - விசாரணை</h3>
இதில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், கடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீசாரை கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. தற்போது, வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் விக்னேஷை அவர் எதற்காக கத்தியால் குத்தினார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த முழுவான தகவல் போலீசார் தரப்பில் இருந்து தற்போது வெளியாகவில்லை.
<h3>கட்டுப்பாடுகள் மிகுந்த வாக்குச்சாவடிக்குள் கத்திக்குத்து</h3>
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்துக்குள் புகுந்து காவலரை, முன்னாள் ராணுவ வீரர் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரகாசனஹள்ளி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தவெக நிர்வாகிகள் 3 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-election-poll-percent-3-pm-status-more-than-70-percent-polling-has-been-done-73703.html" target="_blank" rel="noopener">Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாக்குப்பதிவு இடத்துக்கு விசிட் அடித்த யானை.. ஷாக்கான வாக்காளர்கள்&#8230; மேற்கு வங்கத்தில் சம்பவம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/wild-elephant-suddenly-camped-in-a-polling-station-area-in-west-bengal-73720.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 16:35:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/wild-elephant-suddenly-camped-in-a-polling-station-area-in-west-bengal-73720.html</guid>
		            
			

    	<description><![CDATA[West Bengal Wild Elephant: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி அருகே திடீரென காட்டு யானை முகாமிட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடியி வாக்களிக்க வந்த வாக்காளர்கள் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/wild-elephant-suddenly-camped-in-west-bengal.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்குப்பதிவு இடத்துக்கு விசிட் அடித்த யானை.. ஷாக்கான வாக்காளர்கள்&#8230; மேற்கு வங்கத்தில் சம்பவம்!" /></figure>தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவது போல <a href="https://www.tv9tamilnews.com/india/wild-elephant-killed-with-bomb-infused-jackfruit-in-keralam-old-man-arrested-73226.html" target="_blank" rel="noopener">மேற்கு வங்க மாநிலத்திலும்</a> இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சுமார் 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் அந்த மாநிலத்தை சேர்த்த வாக்காளர்கள் காலை முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஜார்கிராமில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே <a href="https://www.tv9tamilnews.com/india/wild-elephant-killed-with-bomb-infused-jackfruit-in-keralam-old-man-arrested-73226.html" target="_blank" rel="noopener">திடீரென யானை ஒன்று வந்தது</a>. இதை பார்த்த வாக்காளர்கள் சற்று அதிர்ச்சிக்குள்ளாகினர். ஜார்கிராமில் ஜிதுசோல் தொடக்கப் பள்ளிக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும் என்று அதிகாரிகள் முன்னதாகவே எச்சத்தில் எச்சரித்து இருந்த காரணத்தால், எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை. வாக்குச்சாவடி அருகே யானை நடமாடியதை வாக்களிக்க வந்த வாக்காளர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தார்.
<h3>யானை வந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்</h3>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விற்பனை கூடத்திற்கு வெளியே யானை சிறிது நேரம் நின்று கொண்டிருந்தது. மேலும், அந்த வீடியோவில் யானையை பார்த்த வாக்காளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்ததுடன், அந்த பகுதியில் உள்ள கட்டடங்களுக்குள் ஓடி சென்று ஒளிந்து கொண்டனர். ஆனால், அந்த யானை யாரையும் தொந்தரவு செய்யாமல், அங்கிருந்து விலகி சென்றது. இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் வழக்கமாக காணப்பட்டு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/india-will-not-bow-to-any-form-of-terror-says-pm-modi-on-pahalgam-attack-anniversary-73259.html" target="_blank" rel="noopener">இந்தியா பயங்கரவாதத்திற்கு தலைவணங்காது – பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி பதிவு</a>
<h3>தேர்தல் ஆணையம் தொடர் அறிவுறுத்தல்</h3>
அத்துடன், தற்போது தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சற்று கவனத்துடன் வந்து செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தன. இதே போல, அந்த பகுதிகளில் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். முன்னதாக, இந்த பகுதி மட்டுமின்றி யானைகள் நடமாடும் பாதைகளுக்கு அருகில் உள்ள தெற்கு வங்காளத்தில் உள்ள சுமார் 25 வாக்குச்சாவடிகள் பாதிப்புக்கு உள்ளாக கூடியவை என அடையாளம் காணப்பட்டிருந்தன.
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">VIDEO | West Bengal Polls: An elephant entered the area near the polling station at Jitusol Primary School in Jhargram.

(Source: Third Party)<a href="https://twitter.com/hashtag/AssemblyPollsWithPTI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AssemblyPollsWithPTI</a> <a href="https://twitter.com/hashtag/WestBengalPollsWithPTI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WestBengalPollsWithPTI</a>

(Full video available on PTI Videos - <a href="https://t.co/n147TvrpG7">https://t.co/n147TvrpG7</a>) <a href="https://t.co/UN6axPscmO">pic.twitter.com/UN6axPscmO</a></p>
— Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/2047138644167893121?ref_src=twsrc%5Etfw">April 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<h3>யானைகள் நடமாடும் 60 சதவீத பகுதிகள்</h3>
இந்த இடங்களில் கிட்டத்தட்ட சுமார் 60 சதவீதம் ஜார்க்கிராமில் அமைந்துள்ள பகுதி ஆகும். தமிழகத்துடன் சேர்த்து மேற்குவங்க மாநிலம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மேற்குவங்க மாநிலம் மற்றும் தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/west-bengal-assembly-election-2026-first-phase-voting-starts-today-73513.html" target="_blank" rel="noopener">மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>2026 தமிழக தேர்தல்.. வாக்குகளை செலுத்திய சின்னத்திரை பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/entertainment/list-of-tamil-small-screen-celebrities-who-voted-in-the-2026-assembly-elections-73704.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 16:21:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Barath Murugan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/entertainment/list-of-tamil-small-screen-celebrities-who-voted-in-the-2026-assembly-elections-73704.html</guid>
		            
			

    	<description><![CDATA[Small Screen Celebrities Vote: தமிழகமே இன்று 2026 ஏப்ரல் 23ம் தேதியில் பரபரப்பாக, தங்களின் ஜன நாயகக் கட்டமையை செய்துவருகிறார்கள். அந்த வகையில் சினிமா பிரபலங்கள் வாக்குகளை செலுத்திவரும் நிலையில், மேலும் சின்னத்திரை பிரபலங்கள் யார் வாக்குகளை செலுத்தியுள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/2026-assembly-elections-tamil-small-screen-celebrities-vote.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="2026 தமிழக தேர்தல்.. வாக்குகளை செலுத்திய சின்னத்திரை பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!" /></figure>தமிழகத்தில் இன்று 2026 ஏப்ரல் 23ம் தேதியில் பரபரப்பாக, தேர்தல் வாக்குகள் செலுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்று (23/04/2026) அதிகாலை முதல பல்வேறு சினிமா பிரபலங்கள் (Cinema celebrity) மற்றும் சீரியல் பிரபாலங்கள் (Small Screen) என பலரும் தங்களின் ஜன நாயகக் கடமையை செலுத்துவருகிறார்கள். அந்த வகையில் பிரபலங்களை தங்களின் வாக்குகளை செலுத்திவருகிறார்கள். <strong><a href="https://www.tv9tamilnews.com/topic/tv-shows" target="_blank" rel="noopener">சின்னத்திரை</a> </strong>சீரியல் நடிகர்கள் (Serial Actors) மற்றும் இதர பிரபலங்களும் தங்களின் ஜன நாயாக கடமையை நிறைவேற்றியதாக பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்கள். தமிழில் பிரபல சீரியல் நடிகையாகவும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளர்தான் திவ்யா கணேஷன் (Divya Ganesh).

இவர் இன்று 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்தியதாக பதிவை வெளியிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், "நீங்களும் வாக்கு செலுத்துங்கள் " என அவர் கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/actor-sooris-post-on-x-after-casting-his-vote-in-the-tamil-nadu-assembly-elections-73678.html" target="_blank" rel="noopener">நல்ல எதிர்காலத்திற்காக என் உரிமையும் கடமையும் நிறைவேற்றினேன் – நடிகர் சூரி</a>
</strong>
<h3>நடிகை திவ்யா கணேசன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DXd_p97Ev4m/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/DXd_p97Ev4m/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Divya Ganesan (@divya_ganesan_official)</a></p>

</div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script>

மேலும் பிரபல பாடகியும், சின்னத்திரை தொகுப்பாளராகவும் இருந்துவருபவர் ஷிவாங்கி. இவரும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்களித்துவிட்டதாக, ஆள்காட்டி விரலை காண்பித்து பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் தனது முதல் வாக்கை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
<h3>ஷிவாங்கி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோ பதிவு:</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DXd_0aAAf37/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/DXd_0aAAf37/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sivaangi Krishnakumar (@sivaangi.krish)</a></p>

</div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script>

<strong>இதையும் படிங்க: <a href="https://www.tv9tamilnews.com/entertainment/tamil-celebrities-who-voted-in-the-2026-assembly-elections-photo-gallery-73655.html" target="_blank" rel="noopener">தமிழக தேர்தல்.. ஜன நாயகக் கடமையாக ஆற்றிய தமிழ் பிரபலன்கள்.. யார் யாருனு பாருங்க!</a>
</strong>

தமிழ் சின்னத்திரை நடிகருக்கும், நிஜ ஜோடியான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்தே தங்களின் வாக்கை செலுத்தியுள்ளனர். அதில் நடிகை ஆலியா மானசா, வா தலைவா வா.. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
<h3>நடிகை ஆலியா மானசா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:</h3>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DXdZVtHEbGf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">

&nbsp;
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
&nbsp;
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/DXdZVtHEbGf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by alya_manasa (@alya_manasa)</a></p>

</div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script>

மேலும் குக் வித் கோமாளி புகழ், பிக்பாஸ் பிரபலம் கனி திரு, நடிகை ஜனனி அசோக்குமார், நடிகை கண்மணி, தொகுப்பாளர் அஸ்வத், நடிகை காயத்ரி மற்றும் அவரின் கணவர் யுவராஜ் என பல்வேறு பிரபலங்கள் தங்களின் வாக்குகளை செலுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக பதிவுகளையும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாக்குச்சாவடியில் ரகளை&#8230; வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு&#8230; சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/independent-candidate-including-4-people-arrested-for-breaking-voting-machine-in-kalasappakkam-73706.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 15:58:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/independent-candidate-including-4-people-arrested-for-breaking-voting-machine-in-kalasappakkam-73706.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kalasapakkam Voting Machine Break: திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக சுயேட்சை வேட்பாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/voting-machine-break.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாக்குச்சாவடியில் ரகளை&#8230; வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு&#8230; சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!" /></figure><a href="http://Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்.." target="_blank" rel="noopener">தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்</a> விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதே போல, கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கீழ்பாலூர் ஊராட்சியில் உள்ள அமைக்கப்பட்டுள்ள 193- ஆவது வாக்குச்சாவடியில் திடீரென சிலர் சுயேச்சை வேட்பாளரின் முகவர்கள் எனக் கூறிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அப்போது, அவர்கள் ரகளையில் ஈடுபட்டதுடன் தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவியை தூக்கிப்போட்டு உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனால், வாக்குச்சாவடியில் பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கை சென்று விசாரணை மேற்கொண்டனர்.
<h3>சுயேட்சை வேட்பாளர் உள்பட 4 பேர் கைது</h3>
இதில், வாக்குச்சாவடி மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கலசப்பாக்கம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் உள்பட 4 பேரை கலசப்பாக்கம் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/nanguneri-as-people-boycott-election-at-perumpathu-poll-booth-a-younsgter-cast-her-vote-73689.html" target="_blank" rel="noopener">Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..</a>
<h3>கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்</h3>
கலசப்பாக்கம் தொகுதியில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட காரணத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அத்துடன் சிறிது நேரம் வாக்குப்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதே போல, சென்னை ஆழ்வார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதே போல, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே வாக்காளர்கள் தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது.
<h3>தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்</h3>
அத்துடன், அவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் உள்ள பெரும்பத்து கிராமத்தில் 2 கொலை சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல, திருச்சியிலும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-election-poll-percent-3-pm-status-more-than-70-percent-polling-has-been-done-73703.html" target="_blank" rel="noopener">Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-election-poll-percent-3-pm-status-more-than-70-percent-polling-has-been-done-73703.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 15:40:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-assembly-election-poll-percent-3-pm-status-more-than-70-percent-polling-has-been-done-73703.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காலை 7:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம் என கூறப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/3pm-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு.." /></figure><p data-start="123" data-end="328"><strong>ஏப்ரல் 23, 2026:</strong> தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காலை 7:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம் என கூறப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடி என இருக்கும் நிலையில், அதில் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். தொடர்ந்து பலரும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.</p>
<p data-start="585" data-end="802">2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி 55.35% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது கிட்டத்தட்ட 15% அதிகரித்து, 70% வாக்குப்பதிவு எட்டியுள்ளது. இந்த ஆண்டு வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.</p>
<p data-start="585" data-end="802">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/independent-candidate-including-4-people-arrested-for-breaking-voting-machine-in-kalasappakkam-73706.html">வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!</a></p>

<h3 data-start="585" data-end="802">70 சதவீதம் கடந்த வாக்குப்பதிவு:</h3>
<p data-start="302" data-end="486">ஏனெனில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ளது. இந்த நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் மூன்று மணி நேரம் இருப்பதால், 90% வரை வாக்குப்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.</p>
<p data-start="302" data-end="486">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/voters-dressed-as-tvk-leader-vijay-in-trichy-east-constituency-73687.html">விஜய் கெட்டப்பில் வந்து வாக்கு செலுத்திய வாக்காளர்கள்… திருச்சி கிழக்கு தொகுதியில் சுவாரஸ்யம்!</a></p>

<ul>
 	<li data-section-id="mxw1wj" data-start="163" data-end="181">கரூர் – 76.08%</li>
 	<li data-section-id="1v6olf4" data-start="182" data-end="200">சேலம் – 75.79%</li>
 	<li data-section-id="1v89qbc" data-start="201" data-end="219">ஈரோடு – 75.61%</li>
 	<li data-section-id="p97ejl" data-start="220" data-end="243">திருப்பூர் – 75.38%</li>
 	<li data-section-id="8z7yu7" data-start="244" data-end="293">தர்மபுரி – 74.68% <em data-start="264" data-end="291">(திருத்தம் செய்யப்பட்டது)</em></li>
 	<li data-section-id="ajry3w" data-start="294" data-end="318">திண்டுக்கல் – 74.35%</li>
 	<li data-section-id="j4trqs" data-start="319" data-end="343">காஞ்சிபுரம் – 72.51%</li>
 	<li data-section-id="11d2sq2" data-start="344" data-end="369">ராணிப்பேட்டை – 72.46%</li>
 	<li data-section-id="1xxp8lc" data-start="370" data-end="396">திருப்பத்தூர் – 71.65%</li>
 	<li data-section-id="1sksy17" data-start="397" data-end="416">வேலூர் – 71.46%</li>
 	<li data-section-id="1omddw4" data-start="417" data-end="434">கோவை – 71.23%</li>
 	<li data-section-id="1g24mee" data-start="435" data-end="460">திருவண்ணாமலை – 71.19%</li>
 	<li data-section-id="1nzkhy6" data-start="461" data-end="488">கள்ளக்குறிச்சி – 71.11%</li>
 	<li data-section-id="1a5aomj" data-start="489" data-end="510">திருச்சி – 71.50%</li>
 	<li data-section-id="1ue2tq" data-start="511" data-end="534">பெரம்பலூர் – 70.54%</li>
 	<li data-section-id="jymoun" data-start="535" data-end="558">விருதுநகர் – 70.24%</li>
 	<li data-section-id="1gzdx7b" data-start="559" data-end="583">கிருஷ்ணகிரி – 70.07%</li>
 	<li data-section-id="275hpi" data-start="584" data-end="610">நாகப்பட்டினம் – 69.96%</li>
 	<li data-section-id="ez7b6n" data-start="611" data-end="636">புதுக்கோட்டை – 69.85%</li>
 	<li data-section-id="18wzym1" data-start="637" data-end="662">செங்கல்பட்டு – 69.46%</li>
 	<li data-section-id="1qwlk2g" data-start="663" data-end="684">அரியலூர் – 68.97%</li>
 	<li data-section-id="8gbhtr" data-start="685" data-end="704">கடலூர் – 68.53%</li>
 	<li data-section-id="99f2bb" data-start="705" data-end="728">திருவாரூர் – 68.43%</li>
 	<li data-section-id="126le11" data-start="729" data-end="748">சென்னை – 68.13%</li>
 	<li data-section-id="1gh5tpw" data-start="749" data-end="773">திருவள்ளூர் – 68.07%</li>
 	<li data-section-id="1u2line" data-start="774" data-end="791">தேனி – 67.68%</li>
 	<li data-section-id="1kh5zom" data-start="792" data-end="810">மதுரை – 67.15%</li>
 	<li data-section-id="ne7py4" data-start="811" data-end="832">தென்காசி – 67.14%</li>
 	<li data-section-id="fiki5m" data-start="833" data-end="855">தஞ்சாவூர் – 66.65%</li>
 	<li data-section-id="1onuiob" data-start="856" data-end="880">மயிலாடுதுறை – 65.80%</li>
 	<li data-section-id="k7oe4" data-start="881" data-end="906">தூத்துக்குடி – 65.18%</li>
 	<li data-section-id="1qlx7p9" data-start="907" data-end="928">சிவகங்கை – 64.74%</li>
 	<li data-section-id="uxvu23" data-start="929" data-end="949">நீலகிரி – 63.76%</li>
 	<li data-section-id="ftyg62" data-start="950" data-end="975">கன்னியாகுமரி – 63.95%</li>
 	<li data-section-id="1wmd1jx" data-start="976" data-end="1001">இராமநாதபுரம் – 63.14%</li>
 	<li data-section-id="1u1posc" data-start="1002" data-end="1027">திருநெல்வேலி – 62.84%</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/nanguneri-as-people-boycott-election-at-perumpathu-poll-booth-a-younsgter-cast-her-vote-73689.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 15:29:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/nanguneri-as-people-boycott-election-at-perumpathu-poll-booth-a-younsgter-cast-her-vote-73689.html</guid>
		            
			

    	<description><![CDATA[இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பல மணி நேரம் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த சூழலில், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வாக்குச்சாவடியில் ஷீலா என்ற பெண் தனியாக சென்று வாக்களித்துள்ளார். அந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சூழலில், அவர் மட்டும் தனியாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/sheela-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்.." /></figure><p data-start="125" data-end="427"><strong>ஏப்ரல் 23, 2026:</strong> 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 50 சதவீதத்தை கடந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், சென்னையில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 59.0 ஆக இருந்தது. ஆனால் தற்போது பிற்பகல் 1 மணி நிலவரப்படி மட்டும் 54.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.</p>

<h3 data-start="125" data-end="427">தனி ஒரு ஆளாக வாக்களித்த இளம்பெண்:</h3>
<p data-start="601" data-end="714">இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பல மணி நேரம் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த சூழலில், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வாக்குச்சாவடியில் ஷீலா என்ற பெண் தனியாக சென்று வாக்களித்துள்ளார். அந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சூழலில், அவர் மட்டும் தனியாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p data-start="601" data-end="714">மேலும் படிக்க:  <a href="https://www.tv9tamilnews.com/elections/56-percent-voter-turnout-recorded-in-tamil-nadu-assembly-elections-as-of-one-o-clock-73657.html">சட்டமன்ற தேர்தல்… ஒரு மணி நிலவரம்… 56.81 சதவீதம் வாக்குகள் பதிவு!</a></p>
<p data-start="932" data-end="1173">நாங்குநேரி பெரும்பத்து வாக்குச்சாவடியில், பொதுமக்கள் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என புறக்கணித்து வந்துள்ளனர். ஆனால் அதே பகுதியை சேர்ந்த ஷீலா என்ற இளம் பெண், அந்தப் புறக்கணிப்பையும் மீறி தனியாக சென்று வாக்களித்துள்ளார்.</p>
<p data-start="1175" data-end="1349">இதனால், கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர். “கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், நீங்கள் ஏன் தனியாக சென்று வாக்களித்தீர்கள்?” என கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கிருந்த போலீசார் தலையிட்டு, அந்த இளம் பெண்ணை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>

<h3 data-start="1175" data-end="1349">ராமநாதபுரத்தில் 2 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு:</h3>
<p data-start="1495" data-end="1615">நாங்குநேரி பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு நடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.</p>
<p data-start="1617" data-end="1830">ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள இளஞ்சியமங்கலம் மற்றும் கிடங்கூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இரண்டு கிராமங்களை இணைக்கும் ஆற்று பாலம் அமைக்கப்படவில்லை எனக் கூறி, இந்த முடிவை எடுத்துள்ளனர்.</p>
<p data-start="1617" data-end="1830">மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-fear-at-first-then-excitement-first-time-voters-election-experiences-73664.html"> “ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!</a></p>
<p data-start="1832" data-end="1954">இந்த நிலையில், திருவாடானை தாசில்தார் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.</p>
<p data-start="1956" data-end="2143">காலை முதல் தற்போது வரை வாக்குப்பதிவு நடைபெறாதது, தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நிலைமை சீராகும் வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விஜய் கெட்டப்பில் வந்து வாக்கு செலுத்திய வாக்காளர்கள்&#8230; திருச்சி கிழக்கு தொகுதியில் சுவாரஸ்யம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/voters-dressed-as-tvk-leader-vijay-in-trichy-east-constituency-73687.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 15:20:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/voters-dressed-as-tvk-leader-vijay-in-trichy-east-constituency-73687.html</guid>
		            
			

    	<description><![CDATA[TVK Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அணிந்திருக்கும் உடை மாதிரியை அணிந்து கொண்டு அவரது ஆதரவாளர்கள் திருச்சி கிழக்கு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கச்சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக வந்திருந்தனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/tvk-supporter.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விஜய் கெட்டப்பில் வந்து வாக்கு செலுத்திய வாக்காளர்கள்&#8230; திருச்சி கிழக்கு தொகுதியில் சுவாரஸ்யம்!" /></figure><a href="https://www.tv9tamilnews.com/elections/minister-ptr-casts-vote-with-madurai-jasmine-highlighting-festive-public-enthusiasm-73648.html" target="_blank" rel="noopener">தமிழகத்தில்</a> அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனால், கடந்த சட்டமன்ற தேர்தல்கள் போல அல்லாமல் இந்த சட்டமன்றத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி வாக்கு சதவீதமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, தமிழக அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரது மத்தியிலும் முக்கிய இடம் பிடித்துள்ளார். ஏனென்றால், <a href="https://www.tv9tamilnews.com/elections/tvk-leader-vijay-urges-election-commission-to-extend-voting-time-by-2-hours-73575.html" target="_blank" rel="noopener">தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்</a> நடை, உடை, பாவனை ஆகியவற்றை அவரது ரசிகர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் பின்பற்றி வருகின்றனர்.
<h3>தவெக தலைவர் விஜய்யை பின்பற்றும் ஆதரவாளர்கள்</h3>
சிலர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவெக தலைவர் விஜய் பேசுவது போலவும், அவர் அணிந்திருக்கும் ஆடைகள் போல அணிந்து வருவதும், அவரது வலது கையில் அணிந்திருக்கும் காப்பு போல அணிந்து கொள்வதும் என்பன உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அவரது நடைகளை பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்லும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் வேட்பாளர்கள் முதல் ஆதரவாளர்கள் வரை அனைவரும் ஜனநாயகன் கடமை ஆற்ற போவதாக தெரிவித்து வந்தனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-fear-at-first-then-excitement-first-time-voters-election-experiences-73664.html" target="_blank" rel="noopener">“ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!</a>
<h3>விஜய் போல உடை அணிந்து வந்த ஆதரவாளர்கள்</h3>
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் அந்த கட்சிக்கு ஆதரவான பெண்கள் மற்றும் ஆண்கள் தவெக தலைவர் விஜய் அணைந்திருக்கும் ஆடையை போன்று, அதாவது வெள்ளை நிற சட்டை, காக்கி நிற பேண்ட் அணிந்தவாறு வாக்களிப்பதற்காக அணிவகுத்து வந்திருந்தனர். அவர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று தங்களுக்கான வாக்குகளை செலுத்திவிட்டு வாக்குச்சாவடியின் வெளியே குழுவாக செல்பி எடுத்துக் கொண்டனர்.
<h3>சமூக வலைதளங்களில் வைரலாகும் செல்பி</h3>
இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு தொகுதிகள் வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அவர் மேற்கொண்ட பிரச்சாரங்களில், வெள்ளை நிற சட்டை மற்றும் காக்கி நிற பேண்ட் அணிந்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படியே, சட்டமன்ற தேர்தலில் தவெக ஆதரவாளர்கள் குழுவாக ஒரே மாதிரியான சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வாக்களிக்க வந்துள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-2026-assembly-election-polling-percentage-till-1-pm-district-wise-details-73675.html" target="_blank" rel="noopener">விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. ஒரு மணி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு?</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Tamil Nadu Polling: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. ஒரு மணி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-2026-assembly-election-polling-percentage-till-1-pm-district-wise-details-73675.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 14:38:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-2026-assembly-election-polling-percentage-till-1-pm-district-wise-details-73675.html</guid>
		            
			

    	<description><![CDATA[பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் அதிகமாகும். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது அது சுமார் 7% அதிகமாக பதிவாகியுள்ளது. ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/polling-23.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Tamil Nadu Polling: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. ஒரு மணி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு?" /></figure><p data-start="125" data-end="302"><strong>ஏப்ரல் 23, 2026:</strong> தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் காலை முதலே மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் அதிகமாகும். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது அது சுமார் 7% அதிகமாக பதிவாகியுள்ளது. மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று, வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்திற்கு திரும்பி வந்து வாக்களித்து வருகின்றனர்.</p>
<p data-start="710" data-end="1232">சென்னையில் மட்டும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 54.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி,</p>

<ul>
 	<li data-section-id="6353c8" data-start="821" data-end="848">விருகம்பாக்கம் – 59.30%</li>
 	<li data-section-id="vs91ho" data-start="849" data-end="876">தியாகராய நகரம் – 58.01%</li>
 	<li data-section-id="1fdhyks" data-start="877" data-end="901">அண்ணா நகரம் – 56.61%</li>
 	<li data-section-id="gp330q" data-start="902" data-end="924">குளத்தூர் – 56.59%</li>
 	<li data-section-id="1nrglxv" data-start="925" data-end="947">வேளச்சேரி – 56.26%</li>
 	<li data-section-id="lnu49r" data-start="948" data-end="970">பெரம்பூர் – 56.24%</li>
 	<li data-section-id="1blfjo7" data-start="971" data-end="996">ஆர்.கே. நகர் – 55.68%</li>
 	<li data-section-id="avum31" data-start="997" data-end="1023">வில்லிவாக்கம் – 55.66%</li>
 	<li data-section-id="138s6r2" data-start="1024" data-end="1054">ஆயிரம் விளக்குகள் – 55.05%</li>
 	<li data-section-id="kjngqm" data-start="1055" data-end="1077">துறைமுகம் – 54.39%</li>
 	<li data-section-id="i7rz96" data-start="1078" data-end="1100">எழும்பூர் – 53.67%</li>
 	<li data-section-id="1ss269i" data-start="1101" data-end="1125">சேப்பாக்கம் – 53.55%</li>
 	<li data-section-id="v9wep" data-start="1126" data-end="1151">சைதாப்பேட்டை – 52.76%</li>
 	<li data-section-id="se2r9h" data-start="1152" data-end="1173">ராயபுரம் – 49.67%</li>
 	<li data-section-id="1lesfci" data-start="1174" data-end="1198">மயிலாப்பூர் – 48.86%</li>
 	<li data-section-id="o31lye" data-start="1199" data-end="1227">திரு.வி.க. நகர் – 48.76%</li>
</ul>
மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-fear-at-first-then-excitement-first-time-voters-election-experiences-73664.html"> “ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!</a>

அதேபோல் ஒட்டுமொத்த தமிழகத்தில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் அதிகமாகும். அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
<ul>
 	<li data-section-id="1mp3cv6" data-start="1282" data-end="1305">திருப்பூர் – 62.97%</li>
 	<li data-section-id="9gpv8a" data-start="1306" data-end="1327">நாமக்கல் – 62.51%</li>
 	<li data-section-id="1hk7kb8" data-start="1328" data-end="1346">ஈரோடு – 61.79%</li>
 	<li data-section-id="s8ubzx" data-start="1347" data-end="1365">சேலம் – 61.42%</li>
 	<li data-section-id="1ccasz0" data-start="1366" data-end="1384">கரூர் – 60.77%</li>
 	<li data-section-id="18wpkkr" data-start="1385" data-end="1409">திண்டுக்கல் – 59.79%</li>
 	<li data-section-id="1b42i5p" data-start="1410" data-end="1431">தர்மபுரி – 59.02%</li>
 	<li data-section-id="hyrpnd" data-start="1432" data-end="1456">காஞ்சிபுரம் – 58.98%</li>
 	<li data-section-id="26bns4" data-start="1457" data-end="1482">ராணிப்பேட்டை – 58.62%</li>
 	<li data-section-id="1bfgblk" data-start="1483" data-end="1500">கோவை – 58.24%</li>
 	<li data-section-id="626iuc" data-start="1501" data-end="1526">திருவண்ணாமலை – 58.23%</li>
 	<li data-section-id="ytt7y4" data-start="1527" data-end="1551">விழுப்புரம் – 58.23%</li>
 	<li data-section-id="1i57nhm" data-start="1552" data-end="1573">திருச்சி – 57.66%</li>
 	<li data-section-id="1osibmy" data-start="1574" data-end="1597">பெரம்பலூர் – 57.55%</li>
 	<li data-section-id="1klfti8" data-start="1598" data-end="1617">வேலூர் – 57.49%</li>
 	<li data-section-id="poqgei" data-start="1618" data-end="1644">திருப்பத்தூர் – 57.49%</li>
 	<li data-section-id="1qrfpwp" data-start="1645" data-end="1668">விருதுநகர் – 57.27%</li>
 	<li data-section-id="1w49bq6" data-start="1669" data-end="1696">கள்ளக்குறிச்சி – 57.15%</li>
 	<li data-section-id="1ri8cta" data-start="1697" data-end="1714">நாகை – 57.07%</li>
 	<li data-section-id="74oea9" data-start="1715" data-end="1740">புதுக்கோட்டை – 56.78%</li>
 	<li data-section-id="6ui3r1" data-start="1741" data-end="1764">திருவாரூர் – 56.00%</li>
 	<li data-section-id="1wn8e59" data-start="1765" data-end="1790">செங்கல்பட்டு – 56.28%</li>
 	<li data-section-id="18w2e3b" data-start="1791" data-end="1815">கிருஷ்ணகிரி – 56.21%</li>
 	<li data-section-id="1f4r9uk" data-start="1816" data-end="1840">திருவள்ளூர் – 55.45%</li>
 	<li data-section-id="1ne2jkh" data-start="1841" data-end="1862">அரியலூர் – 55.18%</li>
 	<li data-section-id="5321h" data-start="1863" data-end="1882">கடலூர் – 55.13%</li>
 	<li data-section-id="gm749s" data-start="1883" data-end="1900">தேனி – 55.63%</li>
 	<li data-section-id="19vyqyr" data-start="1901" data-end="1923">தஞ்சாவூர் – 54.83%</li>
 	<li data-section-id="14v1ts" data-start="1924" data-end="1942">மதுரை – 54.75%</li>
 	<li data-section-id="17s4qv9" data-start="1943" data-end="1962">சென்னை – 54.58%</li>
 	<li data-section-id="18str7j" data-start="1963" data-end="1984">தென்காசி – 54.24%</li>
 	<li data-section-id="11gp3fj" data-start="1985" data-end="2006">சிவகங்கை – 53.50%</li>
 	<li data-section-id="bv0dsa" data-start="2007" data-end="2031">மயிலாடுதுறை – 53.59%</li>
 	<li data-section-id="ni5qgh" data-start="2032" data-end="2057">தூத்துக்குடி – 52.55%</li>
 	<li data-section-id="1kd3mt4" data-start="2058" data-end="2083">இராமநாதபுரம் – 51.54%</li>
 	<li data-section-id="1y214ad" data-start="2084" data-end="2109">திருநெல்வேலி – 50.73%</li>
 	<li data-section-id="1wtq9vw" data-start="2110" data-end="2130">நீலகிரி – 50.42%</li>
 	<li data-section-id="1hi8po0" data-start="2131" data-end="2156">கன்னியாகுமரி – 50.35%</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8220;ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!&#8221; &#8211; முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-fear-at-first-then-excitement-first-time-voters-election-experiences-73664.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 14:21:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-fear-at-first-then-excitement-first-time-voters-election-experiences-73664.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamilnadu Assembly Election: ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காகப் பல மைல்கள் கடந்து வந்த நிகழ்வுகளும் பதிவாகின. குறிப்பாக, பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர், தனது முதல் வாக்கைச் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சென்னைக்கு வந்துள்ளார். "மத்தியான வெயிலுக்கு முன்னரே வாக்களித்துவிட வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே வந்துவிட்டேன்" என்று அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/new-gen-voters.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="&#8220;ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!&#8221; &#8211; முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!" /></figure><strong>Tamilnadu Polls 2026:</strong> <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-2026-voting-live-updates-assembly-voter-turnout-poll-percentage-dmk-aiadmk-inc-bjp-tvk-latest-news-in-tamil-73425.html" target="_blank" rel="noopener">தமிழக சட்டமன்றத் தேர்தல்</a> 2026-ன் ஒரு பகுதியாக, இன்று மாநிலம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். "வாக்களிப்பது நமது உரிமை" என்பதை உணர்ந்து, வெளியூர்களில் இருந்தும் கூட வந்து வாக்களித்த இளம் தலைமுறையினரின் அனுபவங்கள் கவனம் ஈர்க்கின்றன. வாக்குச்சாவடிக்கு முதல்முறையாகச் சென்ற பல இளைஞர்கள் தங்களது ஆரம்பக்கட்ட அனுபவங்களைப் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிகளிலும் பகிர்ந்து கொண்டனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamilnadu-election-tina-the-robot-welcomes-voters-with-chocolates-a-initiative-in-coimbatore-urging-100-percent-voter-turnout-73614.html">சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ‘டீனா’ ரோபோ.. 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் புதுமை!!</a></strong>
<h3>நர்வஸ் டூ ஹேப்பி:</h3>
வாக்குச்சாவடிக்கு உள்ளே நுழைவதற்கு முன்னால் "ஏதாவது கேள்விகள் கேட்பார்களா?", "எப்படி வாக்களிக்க வேண்டும்?" என்ற சிறிய பதட்டம் இருந்ததாகவும், ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் மிகவும் கனிவாக வழிநடத்தியதால் எளிதாக வாக்களிக்க முடிந்ததாகவும் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்திய பின் வரும் அந்தச் சத்தம் (Beep sound) கேட்ட பின்னரே வெளியே வர வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது தங்களுக்குப் புதிய அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டனர்.
<h3>வெளியூர்களில் இருந்து வந்து ஆர்வம்:</h3>
ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காகப் பல மைல்கள் கடந்து வந்த நிகழ்வுகளும் பதிவாகின. குறிப்பாக, பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர், தனது முதல் வாக்கைச் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சென்னைக்கு வந்துள்ளார். "மத்தியான வெயிலுக்கு முன்னரே வாக்களித்துவிட வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே வந்துவிட்டேன்" என்று அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
<h3>இளம் வாக்காளர்கள் சொல்லும் செய்தி:</h3>
வாக்களித்த பின் இளம் தலைமுறையினர் சமூகத்திற்கு வைத்த சில முக்கிய வேண்டுகோள்கள். உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள். "இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை, வரிசையில் நின்று உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்" என வலியுறுத்தினர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கான தீர்மானம்: "நாம் செய்யும் இந்த ஒரு நாள் செயல் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மாற்றத்தைத் தீர்மானிக்கப் போகிறது. எனவே, வேலையாக இருந்தாலும் ஒரு நாள் விடுப்பு எடுத்து வந்து வாக்களியுங்கள்" எனத் தெரிவித்தனர்.

அனைவரும் யோசித்து, தங்களுக்குப் பிடித்த சின்னத்திற்கு வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். முதல்முறை வாக்காளர்களின் இந்த எழுச்சியும், தெளிவான பார்வையும் தமிழகத் தேர்தலின் ஒரு முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

<strong>மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-2026-voting-live-updates-assembly-voter-turnout-poll-percentage-dmk-aiadmk-inc-bjp-tvk-latest-news-in-tamil-73425.html">Tamil Nadu Election 2026 LIVE: தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இது என்ன புதுசா? கை முழுவதும் மல்லிகைப்பூ.. வித்தியாசமாக வாக்கு செலுத்திய திமுக பிடிஆர்.. ஏன் தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/elections/minister-ptr-casts-vote-with-madurai-jasmine-highlighting-festive-public-enthusiasm-73648.html</link>	
		<pubDate>Thu, 23 Apr 2026 14:02:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[Election 2026 News]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/elections/minister-ptr-casts-vote-with-madurai-jasmine-highlighting-festive-public-enthusiasm-73648.html</guid>
		            
			

    	<description><![CDATA[PTR Palanivel Thiaga Rajan: மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன், கையில் மதுரையின் அடையாளமான மல்லிகைப்பூவை அணிந்து வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். தேர்தல் களம் ஒரு அரசியல் நிகழ்வாக இல்லாமல், பிரிந்திருந்த உறவினர்கள் மீண்டும் இணையும் ஒரு மகிழ்ச்சியான குடும்ப விழா போன்ற சூழலில் இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/madurai-vote.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இது என்ன புதுசா? கை முழுவதும் மல்லிகைப்பூ.. வித்தியாசமாக வாக்கு செலுத்திய திமுக பிடிஆர்.. ஏன் தெரியுமா?" /></figure>தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாநகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வழக்கமாக மிகவும் மிடுக்காகவும், புள்ளிவிவரங்களுடன் பேசக்கூடிய பிடிஆர், இன்று கைகளில் மல்லிகைப்பூ அணிந்தபடி வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மதுரையின் பாரம்பரியமான மல்லிகைப்பூவை கையில் ஏந்தியபடி, ஒரு சாதாரண குடிமகனாக வரிசையில் நின்று அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
<h3>மக்களின் எழுச்சியும் குடும்ப விழா போன்ற கொண்டாட்டமும்</h3>
வாக்கு செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர், கடந்த 20 முதல் 25 நாட்களாகத் தான் மதுரையில் முகாமிட்டு மக்களின் மனநிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்தார். களத்தில் உள்ள சூழல் குறித்துப் பேசிய அவர், "தற்போது நிலவும் சூழல் வெறும் தேர்தல் பிரச்சாரம் போலத் தெரியவில்லை; மாறாக இது ஒரு மிகப்பெரிய குடும்ப விழா போல உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் ஒன்று கூடும் ஒரு மறுசந்திப்பு (Reunion) போல மக்கள் எங்களை உற்சாகமாக வரவேற்கிறார்கள்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Madurai, Tamil Nadu: Minister Palanivel Thiaga Rajan says, "...The mood on the ground is like a family celebration, like welcoming us back for a gathering. It has been highly infectious, happy, and like a reunion. So I'm very delighted and excited about the outcome." <a href="https://t.co/ziebKUOUYS">pic.twitter.com/ziebKUOUYS</a></p>
— IANS (@ians_india) <a href="https://twitter.com/ians_india/status/2047208976404894023?ref_src=twsrc%5Etfw">April 23, 2026</a></blockquote>
தொகுதி மக்களின் அமோக ஆதரவும் வெற்றிக் கணிப்பும்

மதுரை மண்ணின் மைந்தராக, மக்களின் உணர்வுகளை நன்கு அறிந்த அவர், "மக்களிடம் காணப்படும் இந்த மகிழ்ச்சியும், வரவேற்பும் ஒரு தொற்றும் வியாதி போல (Infectious) ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவி வருகிறது. இவ்வளவு நேர்மறையான மற்றும் உற்சாகமான சூழலை நான் இதுவரை கண்டதில்லை" என்றார். இந்த உற்சாகம் தேர்தலின் முடிவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகப் பிரதிபலிக்கும் என்பதில் தமக்கு எள்ளளவும் ஐயமில்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

Also Read:<a href="https://www.tv9tamilnews.com/elections/tamil-nadu-election-2026-voting-live-updates-assembly-voter-turnout-poll-percentage-dmk-aiadmk-inc-bjp-tvk-latest-news-in-tamil-73425.html"> Tamil Nadu Election 2026 LIVE: தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வேகமாக நடக்கும் வாக்குப்பதிவு</a>
<h3>ஜனநாயகக் கடமையும் மல்லிகைப் பூவின் பின்னணியும்</h3>
அமைச்சர் பிடிஆர் கையில் மல்லிகைப் பூவுடன் வந்து வாக்கு செலுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை என்றாலே மல்லிகைப் பூதான் நினைவுக்கு வரும் என்ற நிலையில், மண்ணின் மணத்தோடு அவர் தேர்தலை அணுகுவது மதுரைக் காரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் காட்டிய எளிமை மற்றும் தன்னம்பிக்கை, இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக, "இந்தத் தேர்தலின் முடிவுகள் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும், உற்சாகமூட்டுவதாகவும் அமையும்" என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார். ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>