<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>சமீபத்திய வணிக செய்திகள் Business, Finance and Share Market News in Tamil,  வணிக தமிழ் செய்திகள்</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/business/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/business</link>
 <description>Business News in Tamil: வணிக தமிழ் செய்திகள்: Latest Business News and Breaking News live updates in Tamil Online at tv9tamilnews.com. Read இன்றைய முக்கிய தமிழ் தலைப்புச் செய்திகள், Top headline from Tamil Nadu, India and the world.</description><lastBuildDate>Fri, 03 Jul 2026 19:36:13 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>தங்கத்தில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. கை நிறைய லாபத்தை அள்ளலாம்.. கோட்டக் செக்யூரிட்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/2026-second-is-the-right-time-to-invest-in-gold-and-get-profit-says-kotak-security-photo-gallery-88720.html</link>	
		<pubDate>Fri, 03 Jul 2026 19:36:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/2026-second-is-the-right-time-to-invest-in-gold-and-get-profit-says-kotak-security-photo-gallery-88720.html</guid>
		            
			

    	<description><![CDATA[2026 Second Is The Right Time To Invest In Gold | 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது தங்கம் விலை குறைவாக உள்ளது. இந்த நிலையில், இதுதான் தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் என்று கோட்டக் செக்யூரிட்டி தெரிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/gold-10-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தங்கத்தில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. கை நிறைய லாபத்தை அள்ளலாம்.. கோட்டக் செக்யூரிட்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு!" /></figure>[gallery link="file" columns="1" size="full" ids="88725,88723,88724,88726,88727"] ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>7 நாட்களுக்கு மேலாக முடக்கப்பட்ட EPFO இணையதளம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. முக்கிய தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/when-will-epfo-website-services-will-resume-important-update-88603.html</link>	
		<pubDate>Fri, 03 Jul 2026 12:48:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/when-will-epfo-website-services-will-resume-important-update-88603.html</guid>
		            
			

    	<description><![CDATA[When Will EPFO Website Services Will Resume | இணையதளத்தை மேம்படுத்துவதற்காக இபிஎஃப்ஓ, தனது இணையதளத்தை 7 நாட்களாக முடக்கி வைத்துள்ளது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது முதல் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/epfo-website.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="7 நாட்களுக்கு மேலாக முடக்கப்பட்ட EPFO இணையதளம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. முக்கிய தகவல்!" /></figure>ஊழியர்கள் மிக விரைவாகவும், எளிதாகவும் பிஎஃப் <strong>(PF - Provident Fund)</strong> பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் வகையில் இபிஎஃப்ஓ 3.0<strong> (EPFO 3.0)</strong> அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் <strong>(EPFO - Employee Provident Fund Organization)</strong> மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்னும் ஒருசில நாட்களில் அந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சம் ஊழியர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், இபிஎஃப்ஓ இணையதளத்தை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் சேவையில் இருந்து முடக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ஊழியர்கள் இபிஎஃப்ஓ இணையதளத்தை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளனர்.

இந்த நிலையில், எப்போது இபிஎஃப்ஓ இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என ஊழியர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அது குறித்த முக்கிய தகவலை இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ளது.
<h3>ஜூன் 26 முதல் முடக்கப்பட்ட இபிஎஃப்ஓ இணையதளம் - காரணம் என்ன?</h3>
இந்தியாவில் பணியாற்றும் பெரும்பாலான தனியார் துறை ஊழியர்களுக்கு முதன்மை சேமிப்பாக பிஎஃப் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்களுக்கு திடீரென நிதி பற்றாக்குறை ஏற்படும்போது பிஎஃப் பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர். தற்போதைய நிலவரப்படி பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் இணையதளம் மூலம் விண்ணப்பித்து அது வங்கி கணக்கிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/are-you-going-to-invest-in-post-office-schemes-know-the-recent-interest-rates-88323.html">போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்ய போறீங்களா?.. சமீபத்திய வட்டி விகிதங்கள தெரிஞ்சுக்கோங்க!</a>

அதற்கு மூன்று நாட்கள் முதல் 10 நாட்கள் வரை எடுக்கும். இந்த நிலையில் தான், ஊழியர்கள் மிக விரைவாகவும், எளிதாகவும் பணத்தை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ 3.0 அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் யுபிஐ, ஏடிஎம் மூலம் ஒருசில நிமிடங்களில் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
<h3>ஜூலை 03, 12 மணி முதல் பயன்பாட்டுக்கு வரும் இபிஎஃப்ஓ இணையதளம்</h3>
இந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக இணையதளத்தை மேம்படுத்த வேண்டும் என்று அதற்கான பணிகளை இபிஎஃப்ஓ மேற்கொண்டது. அதற்காக ஜூன் 26, 2026 முதல் இபிஎஃப்ஓ இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டது. ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் மட்டுமே இணையதளம் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/when-will-epfo-website-services-resumes-important-update-88320.html">EPFO : இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்!</a>

பிறகு ஜூலை 02, 2026 அன்று நள்ளிரவு 12 மணி முதல் செயல்பாட்டுக்கு வரும் என கூறியது. ஆனால், நேற்றும் இணையதளம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் தான், மேலும் ஒரு நாள் அவகாசத்தை இபிஎஃப்ஓ நீட்டித்துள்ளது. அதாவது ஜூலை 03, 2026 அன்று நள்ளிரவு 12 மணி முதல் இணையதளம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அமலுக்கு வந்தது புதிய 2026 EPFO.. முக்கிய மாற்றங்கள் என்ன என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/new-2026-employee-provident-fund-organization-scheme-what-are-the-changes-made-88589.html</link>	
		<pubDate>Fri, 03 Jul 2026 11:40:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/new-2026-employee-provident-fund-organization-scheme-what-are-the-changes-made-88589.html</guid>
		            
			

    	<description><![CDATA[New 2026 Employee Provident Fund Organization Scheme | சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய 2026  ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/2026-epfo.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அமலுக்கு வந்தது புதிய 2026 EPFO.. முக்கிய மாற்றங்கள் என்ன என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>இந்தியாவில் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றுவதற்காகவும் 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் <strong>(EPFO - Employee Provident Fund Organization)</strong>. இந்த அமைப்பின் மூலம் இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த அமைப்பு 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 2026 அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அந்த மாற்றங்களை ஊழியர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது.
<h3>அமலுக்கு வந்த 2026 ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம்</h3>
இந்த 2026 ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அதேசமயம் ஏற்கனவே அமலில் இருந்த சில அம்சங்கள் மாற்றம் செய்யப்படாமல் தொடர்கின்றன.
<h3>12 சதவீதம் பிஎஃப் பங்களிப்பு</h3>
ஒரு ஊழியரின் சம்பளம் மற்றும் நிறுவணம் சார்பில் பங்களிக்கப்படும் 12 சதவீதம் அப்படியே உள்ளது. இந்த நிலையில் புதிய விதியின் படி, சட்டப்படியான ஊதிய வரம்பு ரூ.15,000-க்கு 12 சதவீதம் என பிஎஃப் பங்களிப்பு கணக்கிடப்படுகிறது. அதன்படி, ஒரு மாதத்திற்கு அந்த ஊழியரின் பிஎஃப் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பு ரூ.1,800 ஆக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/when-will-epfo-website-services-resumes-important-update-88320.html"> EPFO : இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்!</a>
<h3>ரூ.1,800-க்கு தானாக முன்வந்து செய்யப்படும் பங்களிப்பு</h3>
முன்னதாக, ஊழியர்கள் தங்களது நிறுவனத்தின் கொள்கை அல்லது ஒப்பந்தத்தின்படி, ரூ.15,000-க்கும் அதிகமான சம்பளத்திற்கு பிஎஃப் பங்களிப்பை மேற்கொண்டு வந்தனர். இதில் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது புதிய விதியின் படி, பிஎஃப் கணக்கில் ரூ.1,800-க்கு மேல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு பங்களிப்பும் தானாக முன்வந்து<strong> (Voluntary Contribution)</strong> மேற்கொள்ளப்படும் பங்களிப்பாக கருதப்படும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/why-gold-price-falling-continuously-will-it-continue-to-fall-88147.html">Gold Price : தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?</a>
<h3>ரூ.1,800-க்கு மேல் பங்களிப்பு மேற்கொள்ளலாம்</h3>
அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வுகால சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்றால், மாதாந்திர பிஎஃப் கணக்கில் ரூ.1,800-க்கு மேல் பங்களிப்பு செய்யலாம். இந்த சூழலில் ஊழியர்கள் அளிக்கும் பங்களிப்புக்கு நிகராக நிறுவனமும் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என புதிய விதி கூறுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : மீண்டும் உயர்வை சந்தித்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,200 உயர்வு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-1200-rupees-per-sovereign-on-july-03-2026-in-chennai-88583.html</link>	
		<pubDate>Fri, 03 Jul 2026 10:35:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-1200-rupees-per-sovereign-on-july-03-2026-in-chennai-88583.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Increased 1200 Rupees Per Sovereign | ஜூன் மாதம் முழுவதும் கடும் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாதத்தில் தொடர் உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் தங்கம் ரூ.1,200 உயர்வை சந்தித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/gold-price-8.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : மீண்டும் உயர்வை சந்தித்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,200 உயர்வு!" /></figure><strong>சென்னை, ஜூலை 03 :</strong> ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை <strong>(Gold Price)</strong>, ஜூலை மாதம் தொடங்கியது முதல் உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூலை 03, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்த தங்கம்</h3>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 2026, பிப்ரவரி மாதம் முதல் கடும் போர் நிலவி வந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், ஜூன் மாதம் தொடங்கியதும் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்த தொடங்கியது. ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவையே தங்கம் சந்தித்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/why-gold-price-falling-continuously-will-it-continue-to-fall-88147.html">Gold Price : தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?</a>

தங்கம் தொடர் சரிவை சந்தித்ததன் காரணமாக ஜனவரி மாதத்தில் ரூ.15,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட தங்கம், ஜூன் மாதத்தில் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் திடீரென டிவிஸ்ட் அடித்து மீண்டும் விலை உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,700-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி கூடுதலாக பணம் செலுத்தலாம்&#8230; வந்தாச்சு புதிய பிஎஃப் திட்டம் &#8211;  ஊழியர்களுக்கு என்ன மாற்றம்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/epfo-new-rule-pf-contribution-above-rs-1800-now-voluntary-88500.html</link>	
		<pubDate>Thu, 02 Jul 2026 21:26:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/epfo-new-rule-pf-contribution-above-rs-1800-now-voluntary-88500.html</guid>
		            
			

    	<description><![CDATA[மாத சம்பளம் பெறுபவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதில் சிறப்பம்சமாக பணியாளர்கள் விரும்பினால் ரூ.1800க்கு அதிகமாக பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு நிகராக நிறுவனங்கள் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/epfo-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி கூடுதலாக பணம் செலுத்தலாம்&#8230; வந்தாச்சு புதிய பிஎஃப் திட்டம் &#8211;  ஊழியர்களுக்கு என்ன மாற்றம்?" /></figure>மாத சம்பளம் பெறுபவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த பிஎஃப் திட்டத்திற்கு பதிலாக, 2026 ஆம் ஆண்டின் புதிய பிஎஃப் திட்டம் கடந்த ஜூன் 29, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பிஎஃப் பங்களிப்பு, அவசர தேவைகளுக்கு பணம் எடுக்கும் விதிகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
<h3>பிஎஃப் பங்களிப்பு தொகை குறித்த முக்கிய அறிவிப்பு</h3>
புதிய விதிகளின்படி, தற்போது சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள மாத ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 ஆகவே தொடர்கிறது. இதன்படி, ஊழியர்கள் கட்டாயமாக செலுத்த வேண்டிய பிஎஃப் தொகை, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவிகதமாகும். அதாவது ரூ.1,800 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதே அளவு தொகையை நமது நிறுவனமும் செலுத்தும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/kisan-vikas-patra-scheme-gives-double-the-return-how-to-invest-88011.html">இரண்டு மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. இத தெரிஞ்சுக்கோங்க!</a></strong>
<h3>கூடுதலாக செலுத்த முடியுமா?</h3>
இந்த நிலையில் பணியாளர்கள் விரும்பினால் ரூ.1800க்கு அதிகமாக பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை Voluntary Provident Fund என்ற விருப்ப பங்களிப்பாக கருதப்படும். அதே போல இந்த தொகைக்கு நிகராக நிறுவனங்கள் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பிஎஃப் திட்டத்தில் பங்களிப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. பணியாளரும், நிறுவனமும் தலா 12 சதவிகிதம் செலுத்தும் நடைமுறை தொடரும். ஏற்கனவே 10 சதவிகித பங்களிப்பு சலுகை பெறும் நிறுவனங்களுக்கு அந்த விதியே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் பகுதி தொகையை திரும்பப் பெறும் நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/business/is-government-withdrawing-10-20-50-and-100-rupees-notes-government-denied-87911.html"> ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?</a></strong>
<h3>3 பிரிவுகளின் கீழ் பணம் பெறலாம்</h3>
<ul>
 	<li>மருத்துவ அவசரத் தேவைகள், கல்வி மற்றும் திருமணம்</li>
 	<li>வீடு வாங்குதல் அல்லது வீடு கட்டுதல் தொடர்பான செலவுகள்</li>
 	<li>அரசால் அனுமதிக்கப்பட்ட சிறப்பு சூழ்நிலைகள்</li>
</ul>
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பிஎஃப் திட்டத்தை முழுமையாக டிஜிட்டலாக மாற்றுவது என கூறப்படுகிறது. ஆன்லைன் மூலம் பணம் எடுக்கும் கோரிக்கைகள், இ - பாஸ்புக் வசதிகள் ஆகியவை இனி எளிதாகும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பிஎஃப் தொகையை பெறுவதும் முன்பைக் காட்டிலும் எளிதாகும். இனி பிஎஃப் தொடர்பான பணிகளுக்கு இபிஎஃப்ஓ அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? புதியதாக கார் வாங்கி இருந்தால் உங்களுக்கு ரூ.10,000.. இத தெரிஞ்சுக்கோங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/if-you-bought-new-car-worth-above-10-lakh-rupees-you-can-get-10000-rupees-while-filing-itr-88346.html</link>	
		<pubDate>Thu, 02 Jul 2026 12:54:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/if-you-bought-new-car-worth-above-10-lakh-rupees-you-can-get-10000-rupees-while-filing-itr-88346.html</guid>
		            
			

    	<description><![CDATA[Income Tax Benefits For Buying New Car | ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மதிப்புக்கொண்ட புதிய கார் வாங்கி, வருமான வரி தாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த காருக்கு பிடித்தம் செய்யப்பட்ட டிசிஎஸ் தொகையை டேக்ஸ் ரீஃபண்டாக பெற்றுக்கொள்ளலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/tax-refund.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? புதியதாக கார் வாங்கி இருந்தால் உங்களுக்கு ரூ.10,000.. இத தெரிஞ்சுக்கோங்க!" /></figure>இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டினால் அந்த நபர் வருமான வரி <strong>(Income Tax)</strong> செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் மாதமே பலரும் தங்களது வருமான வரி தாக்கல் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கி விடுவர். காரணம், ஜூலை 31, 2026-க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. வருமான வரியை தாக்கல் செய்யும்போது அனைத்து விவரங்களும், ஆவணங்களும் சரியாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அரசே நமக்கு பணம் வழங்கும். இந்த நிலையில், கார் வாங்கும் நபர்களுக்கு அரசு வழங்கும் ஒரு சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கார் வாங்குபவர்களுக்கு சலுகை வழங்கும் அரசு</h3>
சமீப காலமாகவே இந்தியர்கள் மத்தியில் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவு பரவலாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது. அத்தகையவர்களுக்காகவே மத்திய அரசு ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது. அதாவது, ஒருவர் வருமான வரி தாக்கல் செய்யக்கூடிய ஆண்டில், புதியதாக கார் வாங்கியிருந்தார் என்றால் அவருக்கு அரசே ரூ.10,000 வழங்குகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/people-can-update-e-mail-address-in-aadhaar-card-for-free-88104.html">ஆதாரில் இலவசமாக Email Id-ஐ மாற்றம் செய்யலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. என்ன?</a>
<h3>கார் வாங்குபவர்களுக்கு ரூ.10,000 சலுகை வழங்கும் அரசு</h3>
இந்தியாவை பொருத்தவரை கார் வாங்கும்போது அதில் 1 சதவீதம் டிசிஎஸ் <strong>(TCS - Tax Collected At Source)</strong> பிடித்தம் செய்யப்படும். கார் விற்பனை செய்யும் நிறுவனமே இந்த பணத்தை பிடித்தம் செய்து, வருமான வரித்துறையிடம் வழங்கும். அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை கண்காணிப்பது, சட்டவிநோத பண பரிவர்த்தனைகளை தடுப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இவ்வாறு ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்புக்கொண்ட கார்களை வாங்கும்போது டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-100-per-gram-in-chennai-on-july-01-2026-88101.html">Gold Price : ரூ.800 விலை குறைந்த தங்கம்.. ஒரு கிராம் எவ்வளவு?.. இன்றைய விலை நிலவரம்!</a>

இந்த நிலையில், ரூ.10 லட்சம் மதிப்பிலான காரை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் உங்களிடம் இருந்து ரூ.10,000 வரியாக பிடித்தம் செய்யப்படும். இந்த தொகையை தான் அரசு டேக்ஸ் ரீஃபண்டாக<strong> (Tax Refund)</strong> வழங்குகிறது. இல்லை நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்றால் அதில் பிடித்தம் செய்யப்படும். பொதுமக்கள் கார் வாங்கும்போது, டீலரிடம் இருந்து 27டி படிவத்தை வாங்க வேண்டும். இந்த நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஆண்டு அறிக்கையை சோதனை செய்து பார்க்க வேண்டும்.

அதில் டிசிஎஸ் விவரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதில் டிசிஎஸ் தொகை இருக்கும் பட்சத்தில் ரீஃபண்ட் கோரி வருமானவரித்துறையிடம் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்ய போறீங்களா?.. சமீபத்திய வட்டி விகிதங்கள தெரிஞ்சுக்கோங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/are-you-going-to-invest-in-post-office-schemes-know-the-recent-interest-rates-88323.html</link>	
		<pubDate>Thu, 02 Jul 2026 11:45:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/are-you-going-to-invest-in-post-office-schemes-know-the-recent-interest-rates-88323.html</guid>
		            
			

    	<description><![CDATA[Post Office Schemes Interest Rates | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2026 ஜூலை முதல் செப்டம்பர் காலக்கட்டத்திற்கு இந்த திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/post-office-schemes.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்ய போறீங்களா?.. சமீபத்திய வட்டி விகிதங்கள தெரிஞ்சுக்கோங்க!" /></figure>பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும், பல மடங்கு உயர்ந்த வேண்டும் என்றால் சேமிப்பு <strong>(Saving)</strong> அல்லது முதலீடு <strong>(Investment)</strong> செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. இதற்காக தான் அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்து ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>அஞ்சலக திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள்</h3>
அஞ்சக திட்டங்களுக்கான ஜூலை முதல் ஆகஸ்ட் காலக்கட்டத்திற்கான வட்டி விகிதங்கள் வெளியாகியுள்ளது.
<ul>
 	<li>பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் <strong>(PPF - Public Provident Fund)</strong> - இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
 	<li>மூத்த குடிமக்கள் சேமிப்பு சான்றிதழ் திட்டம் <strong>(SCSS - Senior Citizen Saving Certificate)</strong> - இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
 	<li>சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் <strong>(SSY - Sukanya Samriddhi Yojana)</strong> - இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
 	<li>தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் <strong>(NSC - National Saving Certificate)</strong> - இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
 	<li>மாத வருமான திட்டம் <strong>(POMIS - Post Office Monthly Income Scheme)</strong> - இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
 	<li>கிசான் விகாஸ் பத்ரா திட்டம் <strong>(KVP - Kisan Vikas Patra)</strong> - இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-decreased-in-chennai-on-july-01-2026-88077.html">வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?</a></p>

<h3>டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்</h3>
<ul>
 	<li>1 ஆண்டுக்கான டெபாசிட் திட்டத்திற்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
 	<li>2 ஆண்டுகளுக்கான டெபாசிட் திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
 	<li>மூன்று ஆண்டுகளுக்கான டெபாசிட் திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
 	<li>ஐந்து ஆண்டுகளுக்கான டெபாசிட் திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/centre-retains-interest-rates-on-small-savings-schemes-for-july-september-quarter-88049.html">மத்திய அரசின் சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதத்தில் மாற்றம்? வெளியான தகவல்</a></p>
2026 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால்கட்டத்திற்கு வட்டி விகிதங்கள் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO : இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/when-will-epfo-website-services-resumes-important-update-88320.html</link>	
		<pubDate>Thu, 02 Jul 2026 10:50:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/when-will-epfo-website-services-resumes-important-update-88320.html</guid>
		            
			

    	<description><![CDATA[When Will EPFO Website Services Resumes | இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான மிக முக்கிய திட்டமாக இபிஎஃப்ஓ உள்ளது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ 3.0 அறிமுகத்திற்காக இபிஎஃப்ஓ இணையதளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/epfo-15.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="EPFO : இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்!" /></figure>ஊழியர்கள் மிக எளிதாகவும், விரைவாகவும் பிஎஃப் <strong>(PF - Provident Fund)</strong> பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் பட்சத்தில் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்ய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் <strong>(EPFO - Employee Provident Fund Organization)</strong> நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இபிஎஃப்ஓ தனது இணையதளத்தை மேம்படுத்தி வரும் நிலையில், இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக எப்போது இணையதளம் வழக்கம் போல செயல்படும் என பயனர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விரைவில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0 அம்சம்</h3>
தற்போதைய நிலவரப்படி ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், பயனர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பெரும்பாலானவர்கள் பிஎஃப் பணத்தையே தங்களது முதன்மை சேமிப்பாக நம்பியுள்ளனர். இதன் காரணமாக பிஎஃப் பணத்தை எடுக்க சில நாட்கள் ஆகும் நிலையில், அவர்களால் அவசர தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே தான், பயனர்கள் ஒருசில நிமிடங்களில் ஏடிஎம் <strong>(ATM - Automated Teller Machine)</strong> மற்றும் யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-decreased-in-chennai-on-july-01-2026-88077.html">வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?</a>
<h3>இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?</h3>
இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, இணையதளத்தை மேம்படுத்தும் பணிகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இறங்கியது. முன்னதாக ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரையிலான மூன்று நாட்கள் இபிஎஃப்ஓ இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்னும் இபிஎஃப்ஓ இணையதளம் பயன்பாட்டுக்கு வராததன் காரணமாக பயனர்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/centre-retains-interest-rates-on-small-savings-schemes-for-july-september-quarter-88049.html">மத்திய அரசின் சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதத்தில் மாற்றம்? வெளியான தகவல்</a>

இந்த நிலையில் தான் ஜூலை 02, 2026 வரை இபிஎஃப்ஓ இணையதளம் செயல்படாது என்றும், அதன் பிறகு பயனர்கள் வழக்கம் போல இணையதளத்தை பயன்படுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-chennai-gold-price-increased-to-rupees-1200-per-sovereign-88314.html</link>	
		<pubDate>Thu, 02 Jul 2026 10:27:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-chennai-gold-price-increased-to-rupees-1200-per-sovereign-88314.html</guid>
		            
			

    	<description><![CDATA[இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14,618 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,16,944 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/gold-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு" /></figure><p class="isSelectedEnd"><strong>சென்னை, ஜூலை 2, 2026: </strong>ஜூன் மாதம் முழுவதும் சரிவைக் கண்ட தங்கம் விலை, ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து மீண்டும் உயர்வை சந்தித்து வருகிறது. ஜூலை 2-ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்துள்ளது. நேற்றைய தினமும் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை மொத்தம் ரூ.1,600 வரை உயர்ந்துள்ளது.</p>

<h3><strong>இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:</strong></h3>
<p class="isSelectedEnd">இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14,618 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,16,944 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>
<p class="isSelectedEnd">ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15,000-ஐ நெருங்கிய நிலையில் விற்பனையானது. பின்னர் தொடர்ந்து விலை குறைந்து, தற்போது ரூ.13,400 என்ற நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும், ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது.</p>
மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/business/why-gold-price-falling-continuously-will-it-continue-to-fall-88147.html"> தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?</a>
<p class="isSelectedEnd">வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,50,000 ஆக உள்ளது.</p>

<h3><strong>விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம்?</strong></h3>
<p class="isSelectedEnd">சர்வதேச பொருளாதார நிலைமையில் நீடிக்கும் நிச்சயமற்ற சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.</p>
மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-decreased-in-chennai-on-july-01-2026-88077.html"> வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?</a>

இந்நிலையில், வரும் நாட்களில் தங்கம் விலையில் மீண்டும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் தங்கம் விலை குறைந்திருப்பதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/why-gold-price-falling-continuously-will-it-continue-to-fall-88147.html</link>	
		<pubDate>Wed, 01 Jul 2026 15:10:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/why-gold-price-falling-continuously-will-it-continue-to-fall-88147.html</guid>
		            
			

    	<description><![CDATA[Why Gold Price Falling Continuously | ஈரான் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால், ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கம் சரிவை சந்திக்க தொடங்கியது. அதன் காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/gold-price-10.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?" /></figure>2026, பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா<strong> (America)</strong> மற்றும் ஈரான் <strong>(Iran)</strong> இடையே மிக கடுமையான போர் நிலவி வந்தது. இந்த போரின் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கம் விலை <strong>(Gold Price)</strong> மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் சரிவை காண தொடங்கியது. அவ்வாறு தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை குறைய காரணம் என்ன, இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ரூ.15,000-ல் இருந்து ரூ.13,000-க்கு வந்த தங்கம் விலை</h3>
ஈரான் போரின் போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதன் காரணமாக உலக நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் கப்பல்கள் தடைபட்டு நின்றன. அதன் விளைவாக கச்சா எண்ணெய் பல மடங்கு உயர்வை சந்தித்த நிலையில், உலக நாடுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை எதிர்க்கொண்டன. இதன் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி மாதத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/kisan-vikas-patra-scheme-gives-double-the-return-how-to-invest-88011.html">இரண்டு மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. இத தெரிஞ்சுக்கோங்க!</a>
<h3>அமெரிக்காவில் வலுவான பொருளாதரம் மிகப்பெரிய காரணம்</h3>
வழக்கமாக சரவதேச அளவில் ஏதேனும் போர் நடைபெறும்போது தங்கம் விலை உயர்வை அடைய செய்யும். ஆனால், ஈரான் போரில் அது தலைகீழாக நடைபெற்றுள்ளது. அதற்கு காரணம், அமெரிக்காவின் வலுவான பொருளாதாரம் ஆகும். இந்த தரவுகள் அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வருவதை காட்டுவதால், அந்த நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/epfo-planning-to-provide-pm-linked-atm-card-to-employees-photo-gallery-87936.html">EPFO : பிஎஃப் பணத்தை எடுக்க தனி ஏடிஎம் கார்டு?.. ஆனால் இவையெல்லாம் கட்டாயம்!</a>

இதன் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து திரும்பியுள்ளது. இதன் காரணமாக தான் தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஆதாரில் இலவசமாக Email Id-ஐ மாற்றம் செய்யலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/people-can-update-e-mail-address-in-aadhaar-card-for-free-88104.html</link>	
		<pubDate>Wed, 01 Jul 2026 11:33:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/people-can-update-e-mail-address-in-aadhaar-card-for-free-88104.html</guid>
		            
			

    	<description><![CDATA[Free E Mail Address Update In Aadhaar Card | ஆதார் கார்டில் உள்ள விவரங்களை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது அப்டேட் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்ய இலவச சேவை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/aadhaar-card.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஆதாரில் இலவசமாக Email Id-ஐ மாற்றம் செய்யலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. என்ன?" /></figure>இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு <strong>(Aadhaar Card)</strong> உள்ளது. காரணம், ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் பணியில் சேறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லை என்றால் பல்வேறு சேவைகளை பெற முடியாத சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. இத்தகைய மிக முக்கிய ஆவணமாக உள்ள நிலையில், அதில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் துல்லியமாகவும், செயல்பாட்டில் இருக்கக்கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டு குறித்த முக்கிய அம்சம் இன்று (ஜூலை 01, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளது.
<h3>மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம்</h3>
ஜூலை 01, 2026 முதல் ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் <strong>(UIDAI - Unique Identification Authority Of India)</strong> அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் மன்னிஞ்சல் முகவரியை புதுப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருந்த நிலையில், தற்போது அது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க</strong> :<a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/epfo-planning-to-provide-pm-linked-atm-card-to-employees-photo-gallery-87936.html"> EPFO : பிஎஃப் பணத்தை எடுக்க தனி ஏடிஎம் கார்டு?.. ஆனால் இவையெல்லாம் கட்டாயம்!</a>
<h3>அடுத்த 6 மாதங்களுக்கு இந்த இலவச சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்</h3>
இந்த இலவச சேவையை புதியதாக மேம்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் மூலம் புதுப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவேளை நேரடியாக ஆதார் மையங்களுக்கு சென்று மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்கிறீர்கள் என்றால் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இன்று (ஜூலை 01, 2026) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கு பொதுமக்கள் இலவசமாக மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்துக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/is-government-withdrawing-10-20-50-and-100-rupees-notes-government-denied-87911.html">ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?</a>

இந்த செயலியை பொதுமக்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஆடோரை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து, கைபேசி எண்ணை உள்ளிட்டு, ஓடிபி சரிபார்ப்பு முடிந்த பிறகு முக அங்கீகாரத்தை நிறைவு செய்து பயன்படுத்த தொடங்கலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : ரூ.800 விலை குறைந்த தங்கம்.. ஒரு கிராம் எவ்வளவு?.. இன்றைய விலை நிலவரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-100-per-gram-in-chennai-on-july-01-2026-88101.html</link>	
		<pubDate>Wed, 01 Jul 2026 10:25:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-100-per-gram-in-chennai-on-july-01-2026-88101.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Reduced In Chennai | ஈரான் போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/gold-price-9.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : ரூ.800 விலை குறைந்த தங்கம்.. ஒரு கிராம் எவ்வளவு?.. இன்றைய விலை நிலவரம்!" /></figure><strong>சென்னை, ஜூலை 01 :</strong> ஈரான் போர்<strong> (Iran War)</strong> காரணமாக தங்கம் விலை <strong>(Gold Price)</strong> நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கியது முதலே தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம், இன்று (ஜூலை 01, 2026) மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜூன் மாதம் முழுவதும் கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை</h3>
2026, பிப்ரவரி மாதம் முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் போர் நிலவி வந்தது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை சரிவை சந்தித்த தொடங்கியது. உதாரணமாக, ஜனவரி மாதம் ரூ.15,000-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/is-government-withdrawing-10-20-50-and-100-rupees-notes-government-denied-87911.html">ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?</a>
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-decreased-in-chennai-on-july-01-2026-88077.html</link>	
		<pubDate>Wed, 01 Jul 2026 07:19:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-decreased-in-chennai-on-july-01-2026-88077.html</guid>
		            
			

    	<description><![CDATA[Commercial Gas Cylinder Price Decreased In Chennai | ஈரான் போர் காரணமாக கடும் விலை உயர்வை சந்தித்து வந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் தற்போது சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/commercial-gas-cylinder-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?" /></figure><strong>சென்னை, ஜூலை 01 :</strong> சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை<strong> (Commercial Gas Cylinder Price)</strong> அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது, வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்துள்ளது. ஈரான் போர் <strong>(Iran War)</strong> காரணமாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் கடும் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது.
<h3>கடும் விலை உயர்வை சந்தித்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்</h3>
ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் கரும் சிரமங்களை சந்தித்தது. அதில் மிக முக்கியமான ஒன்றுதா கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு. ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக எண்ணெய் கப்பல்கள் உலக நாடுகளுக்கு சென்று சேராமல் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய உள்ளிட்ட உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை பல மடங்கு உயர்வை சந்தித்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/is-government-withdrawing-10-20-50-and-100-rupees-notes-government-denied-87911.html">ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?</a>
<h3>விலை குறைந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்</h3>
ஈரான் போரின் போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், குடும்பங்களுக்கு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் செல்வதை உறுதி செய்யும் வகையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடுகளும் விலை உயர்வும் விதிக்கப்பட்டது. தற்போது நிலமை சீராகி வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை சரிந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-at-lowest-is-this-right-time-to-invest-in-gold-87893.html">கடும் சரிவில் தங்கம் விலை.. தற்போது முதலீடு செய்யலாமா?.. நிலவரம் என்ன?</a>
<h3>ரூ.172.50 குறைந்த வணிக கேஸ் சிலிண்டர் விலை</h3>
சென்னையில் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.172.50 குறைந்து ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில்  மாற்றமின்றி, ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உயர்ந்து வந்த வணிக கேஸ் சிலிண்டர் விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மத்திய அரசின் சேமிப்பு திட்டங்கள் &#8211; வட்டி விகிதத்தில் மாற்றம்? வெளியான தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/centre-retains-interest-rates-on-small-savings-schemes-for-july-september-quarter-88049.html</link>	
		<pubDate>Tue, 30 Jun 2026 22:00:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/centre-retains-interest-rates-on-small-savings-schemes-for-july-september-quarter-88049.html</guid>
		            
			

    	<description><![CDATA[மத்திய அரசு பல சேமிப்புத் திட்டங்களை நடத்தி, அவற்றுக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டிலும் அறிவித்து வருகிறது. அதன் படி 2026 -27 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/saving-scheme-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மத்திய அரசின் சேமிப்பு திட்டங்கள் &#8211; வட்டி விகிதத்தில் மாற்றம்? வெளியான தகவல்" /></figure>மத்திய அரசு பல சேமிப்புத் திட்டங்களை நடத்தி, அவற்றுக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டிலும் அறிவித்து வருகிறது. அதன் படி 2026 -27 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டிற்கான <a href="https://www.tv9tamilnews.com/business/do-you-have-savings-account-in-post-office-september-1-2026-is-the-last-date-to-do-this-87538.html" target="_blank" rel="noopener">சிறு சேமிப்புத் திட்டங்களின்</a> வட்டி விகிதங்களை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. தொடர்ந்து 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கு அறிவிக்கப்பட்ட அதே விகிதங்களே, ஜூலை 1 முதல் செப்டம்பர் 30, 2026 வரையிலான காலத்திற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
<h3>மத்திய அரசின் சேமிப்பு திட்டங்கள்</h3>
பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மேலும் 3 மாதங்களுக்கு மாற்றமின்றி தொடரும். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2 சதவிகிதமாகவும், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1 சதவிகிதமாகவும் உள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/who-file-the-itr-after-the-death-of-a-spouse-find-out-what-the-income-tax-rules-details-in-tamil-87679.html">வாழ்க்கைத் துணை இறந்த பிறகு யார் வருமான வரி தாக்கல் செய்வது? விதிகள் சொல்வது என்ன?</a></strong>

தேசிய சேமிப்புப் பத்திரத்திற்கான வட்டி விகிதம் 7.7 சதவிகிதமாக மாற்றமின்றி தொடர்கிறது. 115 மாத முதிர்வு காலம் கொண்ட கிசான் விகாஸ் பத்ரா திட்டம் 7.5 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. மாதாந்திர வருமானத் திட்டம் 7.4 சதவிகிதம் வட்டி விகிதத்தை அளிக்கிறது. மேலும் 3 ஆண்டு அஞ்சலக கால வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1 சதவிகிதமாகவும், அஞ்சலக சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும் உள்ளது. நிலையான வைப்புத் திட்டங்களைப் (Fixed Deposits) பொறுத்தவரை, ஓராண்டு வைப்புக்கு 6.9 சதவிகிதமாகவும் 2 ஆண்டு வைப்பு தொகைக்கு 7 சதவிகிதம் மற்றும் 3 ஆண்டு வைப்புக்கு 7.1 சதவிகிதம் வட்டி விகிதங்கள் உள்ளன.

ஐந்து ஆண்டு வைப்புத் திட்டங்கள் 7.5 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், 5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டங்கள் (Recurring Deposits) 6.7 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் வழங்குகின்றன. ஜனவரி-மார்ச் 2024 காலாண்டிலிருந்து பெரும்பாலான சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசித் திருத்தங்கள் ஏப்ரல் 2024-ல் நடைபெற்றன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/sent-money-in-upi-mistakenly-do-not-worry-do-this-instead-87586.html">யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!</a></strong>

அப்போது, ​​3 ஆண்டு தபால் அலுவலக கால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7 சவிகிதத்திலிருந்து 7.1 சவிகிதமாகவும், சுகன்யா சம்ரித்தி யோஜனாவுக்கான விகிதம் 8 சதவிகிதத்திலிருந்து 8.2 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டது. நிதி அமைச்சகம் ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மறுஆய்வு செய்கிறது. இந்த விகிதங்கள், அளவுகோல் வருவாய்களை விட ஒரு குறிப்பிட்ட பரவலுடன், அதற்கேற்ற முதிர்வுக் காலங்களைக் கொண்ட அரசாங்கப் பத்திரங்களின் வருவாய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. நிலவும் சந்தை நிலவரங்கள் மற்றும் பரந்த பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் அரசாங்கம் தற்போதைய விகிதங்களைத் தக்கவைக்கலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இரண்டு மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. இத தெரிஞ்சுக்கோங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/kisan-vikas-patra-scheme-gives-double-the-return-how-to-invest-88011.html</link>	
		<pubDate>Tue, 30 Jun 2026 20:53:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/kisan-vikas-patra-scheme-gives-double-the-return-how-to-invest-88011.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kisan Vikas Patra Scheme In Post Office | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அஞ்சலங்கள் மூலம் வழங்கும் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/kvp.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இரண்டு மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. இத தெரிஞ்சுக்கோங்க!" /></figure>மனிதர்கள் தங்களுக்கான பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றால் அவர்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இவ்வாறு பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு அரசு அஞ்சலங்கள் மூலம் சில பாதுகாப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், முதலீட்டுக்கு இரண்டு மடங்கு லாபம் தரும் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
<h3>அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கேவிபி திட்டம்</h3>
அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்று முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம். இது ஒரு பத்திர திட்டம். அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை அவர்கள் பத்திரமாக வழங்கிவிடுவார்கள். இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தில் முதலீடு செய்து இரண்டு மடங்கு லாபத்தை பெற முடியும் என்பதுதான்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/who-file-the-itr-after-the-death-of-a-spouse-find-out-what-the-income-tax-rules-details-in-tamil-87679.html">வாழ்க்கைத் துணை இறந்த பிறகு யார் வருமான வரி தாக்கல் செய்வது? விதிகள் சொல்வது என்ன?</a>
<h3>கிசான் விகாஸ் பத்ரா திட்டம் - முதலீடு செய்வது எப்படி?</h3>
இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட திட்டமாகவும், 100 சதவீதம் உத்தரவாதமான வருமானத்தை தரும் திட்டமாகவும் உள்ளது. இதன் காரணமாக தான் இந்த திட்டத்தில் பொதுமக்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, பல பிரபல வங்கிகள் வழங்குவதை விட அஞ்சலங்கள் வழங்கும் இந்த கிசான் விகாஸ் திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/sent-money-in-upi-mistakenly-do-not-worry-do-this-instead-87586.html">யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!</a>

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO : பிஎஃப் பணத்தை எடுக்க தனி ஏடிஎம் கார்டு?.. ஆனால் இவையெல்லாம் கட்டாயம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/epfo-planning-to-provide-pm-linked-atm-card-to-employees-photo-gallery-87936.html</link>	
		<pubDate>Tue, 30 Jun 2026 17:25:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/epfo-planning-to-provide-pm-linked-atm-card-to-employees-photo-gallery-87936.html</guid>
		            
			    	<description><![CDATA[EPFO Planning To Provide PM Linked ATM Card | இனிபிஎஃப்ஓ 3.0 அம்சம் ஜுலை மாதத்தின் முதல் வாரத்தில் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், பிஎஃப் பணத்தை எடுக்க பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/epfo-planning-to-provide-pm-linked-atm-card-to-employees-photo-gallery-87936.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-20-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (20)" /></a></dt><p>பயனர்கள் பல நாட்கள் காத்திருந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் முறையை மாற்றி, அவர்கள் ஒருசில நிமிடங்களில் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/epfo-planning-to-provide-pm-linked-atm-card-to-employees-photo-gallery-87936.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-21.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (21)" /></a></dt><p>தற்போதைய நிலவரப்படி பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் , ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்து வங்கி கணக்கிற்கு பணம் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், இனி வரும் காலங்களில் அதற்கான அவசியம் இல்லை.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/epfo-planning-to-provide-pm-linked-atm-card-to-employees-photo-gallery-87936.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-22.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (22)" /></a></dt><p>அதாவது பிஎஃப் பணத்தை ஒருசில நிமிடங்களிலேயே ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் எடுத்துக்கொள்ளும் அம்சத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில் தான் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்க பிரத்யேக ஏடிஎம் கார்டு  வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/epfo-planning-to-provide-pm-linked-atm-card-to-employees-photo-gallery-87936.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-23.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (23)" /></a></dt><p>பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு முறை பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பிஎஃப் பணத்தை எடுக்கும்போது அது நேரடியாக வங்கி கணக்கிற்கு வந்துவிடும். பின்னர் பிரத்யேக ஏடிஎம் கார்டு மூலம் அந்த பணத்தை எடுத்துக்கொள்ள வசதி செய்து தரப்படும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/epfo-planning-to-provide-pm-linked-atm-card-to-employees-photo-gallery-87936.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-24.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (24)" /></a></dt><p>இந்த சேவையை பெற வேண்டும் என்றால் பயனர்கள் தங்களது யுஏஎன் எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும். பான் கார்டு விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மேலும் சரியான ஐஎஃப்எஸ்சி குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/is-government-withdrawing-10-20-50-and-100-rupees-notes-government-denied-87911.html</link>	
		<pubDate>Tue, 30 Jun 2026 15:49:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/is-government-withdrawing-10-20-50-and-100-rupees-notes-government-denied-87911.html</guid>
		            
			

    	<description><![CDATA[Government Withdrawing Low Denomination Notes | இந்திய ரூபாய் நோட்டுக்கள் ரூ.10, ரூ.20, ரூ.50 என பல்வேறு வகைகளில் உள்ளன. இந்த நிலையில், குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை அரசு திரும்ப பெற உள்ளதாகவும், ஜூலை மாதம் முதல் அவை செல்லாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/indian-money.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?" /></figure>2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுக்களை மத்திய அரசு திரும்ப பெற உள்ளதாகவும், அதன் காரணமாக ஜூலை 01, 2026 முதல் அந்த நோட்டுக்கள் செல்லாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாய் நோட்டுக்கள் குறித்து வெளியாகியுள்ள இந்த தகவல், பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய ரூபாய் நோட்டுகள் குறித்து வெளியாகியுள்ள இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகள் திரும்பப்பெறப்படுகிறதா?</h3>
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா <strong>(Bank Of Maharashtra)</strong> இலட்சினையுடன் சமூக ஊடகங்களில் கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 ஆகிய நோட்டுக்கள் ஜூலை 01, 2026 முதல் செல்லாது என கூறப்பட்டுள்ளது. இந்த கடிதல் வைரலாகி வரும் நிலையில், மீண்டும் ஒரு பண மதிப்பிழப்பு நடைபெற கூடுமோ என பொதுமக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் உண்மையாகவே ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா <strong>(RBI - Reserve Bank Of India)</strong> அத்தகைய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதா என்பது தெரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர்.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/sent-money-in-upi-mistakenly-do-not-worry-do-this-instead-87586.html">யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!</a>
<h3>திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்த மத்திய அரசு</h3>
இந்திய ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக வைரலாகி வரும் அந்த கடிதம் முற்றிலும் பொய்யானது என்றும், அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும் அரசு கூறியுள்ளது. குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை நீக்குவதற்கான எந்த வித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் பிஐபி <strong>(PIB - Press Information Bureau)</strong> அமைப்பு உறுதி செய்துள்ளது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html">Gold : 2016 முதல் 2026 வரை.. 10 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது?</a>
<h3>விளக்கம் அளித்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா</h3>
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவும் இணையத்தில் பரவி வரும் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களது பெயரில் வைரலாகி வரும் தகவல் முழுவதும் பொய்யானது என்றும் முகாந்திரம் இல்லாதது என்றும் அந்த வங்கி கூறியுள்ளது. இத்தகைய வதந்திகளை நம்பவோ, பிறருக்கு பகிரவோ வேண்டாம் என்று அந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கடும் சரிவில் தங்கம் விலை.. தற்போது முதலீடு செய்யலாமா?.. நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-at-lowest-is-this-right-time-to-invest-in-gold-87893.html</link>	
		<pubDate>Tue, 30 Jun 2026 14:35:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-at-lowest-is-this-right-time-to-invest-in-gold-87893.html</guid>
		            
			

    	<description><![CDATA[Is This The Right Time To Invest In Gold | ஈரான் போரால் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், ஜூன் மாதம் தொடங்கியது முதலே கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது சரியா என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-investment-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கடும் சரிவில் தங்கம் விலை.. தற்போது முதலீடு செய்யலாமா?.. நிலவரம் என்ன?" /></figure>2026, ஜூன் மாதம் நகைப்பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மாதமாக அமைந்துள்ளது. காரணம், ஜனவரி மாதத்தில் ரூ.15,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் <strong>(Gold)</strong>, ஜூன் மாதத்தில் ரூ.13,000-க்கு விற்பனையாகி வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தங்கம் விலை இத்தகைய சரிவை கண்டு இருப்பது மகிழ்ச்சியை மட்டுமன்றி, குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தங்கம் விலை மேலும் குறையுமா, தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா என்பது குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜூன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை</h3>
பிப்ரவரி மாதம் முதலே ஈரான் போர்<strong> (Iran War)</strong> காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதாவது, தற்போதைய நிலவரப்படி சென்னையில் இன்று (ஜூன் 30, 2026) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.2,160 சரிவை சந்தித்துள்ளது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/sent-money-in-upi-mistakenly-do-not-worry-do-this-instead-87586.html">யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!</a>
<h3>தற்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா?</h3>
பொதுவாக புவிசார் பதற்றம், போர் காரணமாக தங்கம் விலை அதிகரிக்க தான் செய்யும். ஆனால், ஈரான் போரில் அது தலைகீழாக நடந்துள்ளது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. என்னவென்றால், இந்த முறை சந்தையின் கவனம் போர் பதற்றத்தை விட அதனால் ஏற்படும் பணவீக்கத்தின் மீதுதான் இருந்தது. குறிப்பாக போருக்கு மத்தியில் ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் தோன்றியது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html"> Gold : 2016 முதல் 2026 வரை.. 10 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது?</a>

பணவீக்கம் அதிகரிக்கும்போதெல்லாம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்காமல் வைத்திருக்கும். எனவே முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை விற்று அதிக வட்டி வழங்கப்படும் திட்டங்கள் பக்கம் திரும்புவார்கள். இவ்வாறு பல்வேறு காரணங்கள் காரணமாக தான் தங்கம் தொடர் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இனி வரும் காலங்களில் இதே நிலை தொடருமே என்பதை பொருத்திருந்து தான் பார்க்க முடியும்.

நீண்ட காலத்தை கருத்தில் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்தால் சிறந்த லாபத்தையே கொடுக்கும். ஆனால், குறுகிய காலத்தை கருத்தில் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் சூழலை பொருத்து முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>&#8216;இந்திய மாம்பழம் வேண்டும்&#8217;&#8230; அமெரிக்காவில் குவியும் ஆர்டர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/indian-mango-exports-to-the-us-surge-with-record-june-demand-87881.html</link>	
		<pubDate>Tue, 30 Jun 2026 13:35:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[லைஃப்ஸ்டைல் அப்டேட்ஸ்]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/indian-mango-exports-to-the-us-surge-with-record-june-demand-87881.html</guid>
		            
			

    	<description><![CDATA[Indian Mango Exports: அமெரிக்காவில் இந்திய மாம்பழங்களுக்கு இந்த ஆண்டு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூன் மாத ஏற்றுமதி கடந்த ஆண்டை விட அதிகரித்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. அல்போன்சா, கேசர் போன்ற ரகங்களுக்கு அதிக தேவை இருப்பதால் ஏற்றுமதியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த வளர்ச்சி இந்திய விவசாயிகள் மற்றும் மாம்பழ ஏற்றுமதி துறைக்கு புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/05/mango.png" class="attachment-large size-large wp-post-image" alt="&#8216;இந்திய மாம்பழம் வேண்டும்&#8217;&#8230; அமெரிக்காவில் குவியும் ஆர்டர்கள்!" /></figure>இந்திய மாம்பழங்கள் இந்த ஆண்டு அமெரிக்க சந்தையில் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே காலத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளதாக ஏற்றுமதித் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்த போக்குவரத்து செலவுகள் மற்றும் சர்வதேச சரக்கு கட்டண உயர்வு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்திய மாம்பழங்களின் மீதான அமெரிக்க நுகர்வோரின் ஆர்வம் குறையவில்லை. இதன் விளைவாக, இந்த பருவத்தில் இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
<h3>அல்போன்சா, கேசர் வகைகளுக்கு அதிக தேவை</h3>
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பழ விரும்பிகளும் இந்திய மாம்பழங்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். குறிப்பாக அல்போன்சா மற்றும் கேசர் போன்ற உயர்தர ரகங்கள் இனிப்பு சுவை, மணம் மற்றும் தரம் காரணமாக அதிகமாக விற்பனையாகின்றன. கோடை காலத்தில் இந்திய மாம்பழம் கிடைக்கும் நாட்களை பலரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலை இந்திய மாம்பழங்களுக்கு உலக சந்தையில் தனித்துவமான மதிப்பை உருவாக்கியுள்ளது.
<h3>போக்குவரத்து செலவு உயர்ந்தாலும் விற்பனை பாதிக்கவில்லை</h3>
சமீபத்திய சர்வதேச சூழ்நிலைகள் காரணமாக விமான சரக்கு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இருப்பினும், அமெரிக்க சந்தையில் மாம்பழங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், ஏற்றுமதியாளர்கள் இந்த கூடுதல் செலவுகளையும் சமாளித்து பொருட்களை அனுப்பி வருகின்றனர். தரமான பழங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்பு பொதியிடல் மற்றும் குளிர்சாதன போக்குவரத்து முறைகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் விலை உயர்ந்தாலும் விற்பனை வேகம் குறையாத நிலை உருவாகியுள்ளது.
<h3>புதிய சந்தைப்படுத்தல் முறைகள் வெற்றிக்கு காரணம்</h3>
இந்திய மாம்பழங்களை அமெரிக்க நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் பல்வேறு புதிய சந்தைப்படுத்தல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பெரிய சில்லறை விற்பனை சங்கிலிகள், சிறப்பு சலுகைகள், கவர்ச்சிகரமான பொதியிடல் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் ஆகியவை விற்பனையை அதிகரிக்க உதவியுள்ளன. இந்திய சுவையை வெளிநாட்டில் வாழும் மக்களிடம் உணர்வுப்பூர்வமாக இணைக்கும் முயற்சிகளும் நல்ல பலனை அளித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
<h3>இந்திய விவசாயிகளுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகள்</h3>
அமெரிக்க சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவை, இந்திய மாம்பழ விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வருமான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. சர்வதேச தரநிலைகளை பின்பற்றி உற்பத்தி செய்யும் தோட்டங்களுக்கு எதிர்காலத்தில் மேலும் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரமான பழங்களை உற்பத்தி செய்வது, சுகாதாரச் சான்றிதழ்களைப் பெறுவது மற்றும் உலகளாவிய விநியோகத் தரங்களை பின்பற்றுவது போன்ற அம்சங்கள் இந்திய மாம்பழங்களின் உலக சந்தை நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய வளர்ச்சி, இந்திய வேளாண் ஏற்றுமதிக்கு உற்சாகமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. தங்கம், வெள்ளி விலையில் தொடர் சரிவு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-in-chennai-gold-and-silver-price-drops-for-the-second-day-87853.html</link>	
		<pubDate>Tue, 30 Jun 2026 10:25:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-in-chennai-gold-and-silver-price-drops-for-the-second-day-87853.html</guid>
		            
			

    	<description><![CDATA[இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,215-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-rate.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. தங்கம், வெள்ளி விலையில் தொடர் சரிவு.." /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="" data-turn-id-container="request-WEB:8fb5881c-d715-49df-9567-d410eaa6b51a-23" data-is-intersecting="true"><section class="text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:8fb5881c-d715-49df-9567-d410eaa6b51a-23" data-turn-id-container="request-WEB:8fb5881c-d715-49df-9567-d410eaa6b51a-23" data-testid="conversation-turn-48" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn" data-conversation-screenshot-content="">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="03269a62-7968-4f65-840d-0de79ef08655" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p class="PDq2pG_selectionAnchorContainer" data-start="219" data-end="488"><strong>ஜூன் 30, 2026:</strong> ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. மாதத் தொடக்கத்தில் இருந்து சரிவை சந்தித்த தங்கம் விலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக உயர்ந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தங்கம் விலை சரிந்து வருகிறது. ஜூன் 30-ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.270 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு சவரனுக்கு ரூ.2,160 வரை விலை குறைந்துள்ளது.</p>

<h3 data-start="219" data-end="488">அதிரடியாக குறைந்த தங்கம் விலை:</h3>
<p data-start="660" data-end="792">அதன்படி, இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,215-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p data-start="915" data-end="1110">இதற்கிடையில், வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிராம் வெள்ளி ரூ.300 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.250-க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p data-start="915" data-end="1110">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html">2016 முதல் 2026 வரை.. 10 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது?</a></p>

<h3 data-start="1112" data-end="1245">தங்கம் விலை சரிய என்ன காரணம்?</h3>
<p data-start="1247" data-end="1444">பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான சூழலும் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. மேலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்து, பிற முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருவதால், சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான தேவை சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p data-start="1247" data-end="1444">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/business/3-important-itr-deadlines-in-july-2026-for-indians-what-are-those-87548.html">2026 ஜூலை மாதத்திற்கு தாக்கல் செய்ய வேண்டிய மூன்று முக்கிய வரிகள்.. என்ன என்ன?</a></p>
<p data-start="1644" data-end="1788" data-is-last-node="" data-is-only-node="">இதன் காரணமாக, வரவிருக்கும் நாட்களிலும் தங்கம் விலையில் மேலும் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்கள் தொடரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section></div>
</div>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div>
<div class="pointer-events-none translate-y-(--scroll-root-safe-area-inset-bottom) R6Vx5W_threadScrollVars min-h-(--gutter-remaining-height,0px) group-data-stream-active/scroll-root:h-[calc(var(--thread-response-height)-16*var(--spacing))]"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாழ்க்கைத் துணை இறந்த பிறகு யார் வருமான வரி தாக்கல் செய்வது? விதிகள் சொல்வது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/who-file-the-itr-after-the-death-of-a-spouse-find-out-what-the-income-tax-rules-details-in-tamil-87679.html</link>	
		<pubDate>Mon, 29 Jun 2026 12:11:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/who-file-the-itr-after-the-death-of-a-spouse-find-out-what-the-income-tax-rules-details-in-tamil-87679.html</guid>
		            
			

    	<description><![CDATA[ITR : வாழ்க்கைத் துணைவர் உயில் எழுதாமல் இறந்தால், அவருடைய வருமான வரி அறிக்கை (ITR) அவருடைய சட்டப்பூர்வ வாரிசால் தாக்கல் செய்யப்படும். நியமனப் பிரதிநிதி என்பவர் சொத்தின் பாதுகாவலர் மட்டுமே, அதன் உரிமையாளர் அல்ல. உங்கள் வருமான வரி அறிக்கையை உரிய நேரத்தில் தாக்கல் செய்யத் தவறினால், அது வரி மற்றும் சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/itr-filing-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாழ்க்கைத் துணை இறந்த பிறகு யார் வருமான வரி தாக்கல் செய்வது? விதிகள் சொல்வது என்ன?" /></figure>ஒருவர் உயில் எழுதாமல் இறந்தால், அவரது குடும்பம் எண்ணற்ற சட்ட மற்றும் நிதி சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்கிறது. இறந்தவரின் வருமான வரிக் கணக்கை (ITR) யார் தாக்கல் செய்வது, மற்றும் ஒரு வங்கி அல்லது டிமேட் கணக்கில் நியமனதாரருக்கு என்ன உரிமைகள் இருக்கும் என்பவை மிக முக்கியமான கேள்விகளாகும். வரி நிபுணர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற சூழ்நிலையில், நியமனதாரர் சொத்தின் உரிமையாளராக ஆவதில்லை, மாறாக சட்டப்பூர்வ வாரிசுகளின் சார்பாக ஒரு அறங்காவலராக மட்டுமே செயல்படுகிறார்.
<h3>இறந்தவரின் வருமான வரி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்பட வேண்டும்?</h3>
வருமான வரிச் சட்டத்தின்படி, இறந்தவரின் வருமானம் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலக்கு வரம்பை மீறினாலோ அல்லது பிற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாலோ, அவரது சட்டப்பூர்வ வாரிசு அவர் சார்பாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். தனிநபர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், அடிப்படை விலக்கு வரம்பு ₹4 லட்சம் ஆகும், அதேசமயம் பழைய வரி முறையின் கீழ், அது வயதுக்கு ஏற்ப மாறுபட்டது. மேலும், சில சந்தர்ப்பங்களில், மின்சாரத்திற்காக ₹1 லட்சத்திற்கும் அதிகமாகவோ அல்லது வெளிநாட்டுப் பயணத்திற்காக ₹2 லட்சத்திற்கும் அதிகமாகவோ செலவு செய்வது போன்ற வருமானம் குறைவாக இருந்தாலும், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது கட்டாயமாக இருக்கலாம்.

<strong>Also Read:</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/sent-money-in-upi-mistakenly-do-not-worry-do-this-instead-87586.html" target="_blank" rel="noopener">யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!</a>
<h3>உயில் இல்லாமல் என்ன நடக்கும்?</h3>
இறந்தவர் உயில் எழுதி வைக்கவில்லை என்றால், பொருந்தக்கூடிய தனிநபர் வாரிசுரிமைச் சட்டங்களின்படி, அவரது சொத்து மரணத்திற்குப் பிறகு சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் செல்லும். அத்தகைய நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மரணம் நிகழ்ந்த தேதி வரையிலான காலத்திற்கு ஒரே ஒரு வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் செய்தால் போதுமானது. அதன் பிறகு சொத்திலிருந்து கிடைக்கும் எந்தவொரு வருமானமும் அந்தந்த சட்டப்பூர்வ வாரிசுகளின் கைகளில் வரிக்கு உட்பட்டதாக இருக்கும்.
<h3>நியமனதாரருக்கும் சட்டப்பூர்வ வாரிசுக்கும் என்ன வேறுபாடு?</h3>
நிபுணர்களின் கூற்றுப்படி, வங்கி அல்லது டிமேட் கணக்கில் ஒரு வாரிசுதாரரை நியமிப்பது சொத்து பரிமாற்ற செயல்முறையை எளிதாக்குகிறது. இது அந்த வாரிசுதாரரை சொத்தின் இறுதி உரிமையாளராக ஆக்குவதில்லை. இறுதி உரிமைகள் எப்போதும் சட்டப்பூர்வ வாரிசுகளிடமே உள்ளன, மேலும் சொத்து சம்பந்தப்பட்ட வாரிசுரிமைச் சட்டங்களின்படி பிரிக்கப்படுகிறது.
<h3>வருமான வரி அறிக்கையை உரிய நேரத்தில் தாக்கல் செய்வது ஏன் முக்கியம்?</h3>
இறந்தவரின் பெயரில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வது கட்டாயமாகும், ஆனால் அவ்வாறு செய்யப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் வரி அறிவிப்புகள், பணம் திரும்பப் பெறுவதில் தாமதம் அல்லது பிற சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று வரி நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசுகள், வருமான வரி இணையதளத்தில் தங்களைச் சட்டப் பிரதிநிதிகளாகப் பதிவுசெய்து, தேவையான நடைமுறைகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-prices-on-the-first-day-of-the-week-surprise-for-jewelry-lovers-know-the-price-of-a-sovereign-in-chennai-87664.html</link>	
		<pubDate>Mon, 29 Jun 2026 10:28:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-prices-on-the-first-day-of-the-week-surprise-for-jewelry-lovers-know-the-price-of-a-sovereign-in-chennai-87664.html</guid>
		            
			

    	<description><![CDATA[பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், உலகளாவிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலுமே தங்கம் விலை இந்த அளவிற்குச் சரிவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து மற்ற துறைகளில் கவனம் செலுத்துவதால் உலக சந்தையில் தங்கத்திற்கான தேவை சற்றுக் குறைந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?" /></figure><strong>Gold Price Today:</strong> சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக, கடந்த சில நாட்களாக புதிய உச்சங்களைத் தொட்டு வந்த <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-thrice-within-24-hours-from-june-26-2026-to-june-27-2026-87368.html" target="_blank" rel="noopener">தங்கத்தின் விலையில்</a> இன்று அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 வரை குறைந்துள்ளதால் நுகர்வோர்களும், குறிப்பாக இல்லத்தரசிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-thrice-within-24-hours-from-june-26-2026-to-june-27-2026-87368.html">Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!</a></strong>
<h3>இன்றைய தங்கம் விலை நிலவரம்:</h3>
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறையத் தொடங்கியது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் சனிக்கிழமை விற்ற விலையில் இருந்து இன்று கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்து, சந்தையில் ₹1,06,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த நிலையில், இந்த திடீர் சரிவு நகை வாங்கக் காத்திருந்த பொதுமக்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
<h3>வெள்ளி விலை நிலவரம்:</h3>
தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.500-க்கு மேல் சரிந்துள்ள போதிலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை. சனிக்கிழமை விற்ற அதே விலையிலேயே இன்றும் நீடிக்கிறது. அதன்படி, இன்று சில்லறை விற்பனையில் வெள்ளி 1 கிராம் எவ்வித மாற்றமுமின்றி ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ தூய வெள்ளி ரூ.2,45,000க்கு வர்த்தகமாகி வருகிறது.
<h3>விலை குறைவிற்கான முக்கிய காரணங்கள்:</h3>
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், உலகளாவிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலுமே தங்கம் விலை இந்த அளவிற்குச் சரிவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து மற்ற துறைகளில் கவனம் செலுத்துவதால் உலக சந்தையில் தங்கத்திற்கான தேவை சற்றுக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ காலங்கள் நெருங்கி வருவதால், இந்த விலை வீழ்ச்சியைப் பயன்படுத்தி நகைக்கடைகளில் பொதுமக்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

<strong>இதையும் படிக்க:</strong><a href="https://www.tv9tamilnews.com/business/not-only-employee-these-9-should-pay-income-tax-in-india-87376.html"> <strong>வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல.. இந்த 9 பேரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. யார் யார்?</strong></a>
<h3>கடந்த 10 நாட்களில் தங்கம் விலை:</h3>
<div class="table-responsive">
<table class="css-g3m580" style="border-collapse: collapse; width: 35.0045%; height: 264px;" border="1">
<tbody>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;"><strong>தேதி</strong></td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;"><strong>கிராம்</strong></td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;"><strong>சவரன்</strong></td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; text-align: center; height: 24px;">ஜுன் 29</td>
<td style="width: 33.619%; text-align: center; height: 24px;">ரூ.13,300</td>
<td style="width: 36.1905%; text-align: center; height: 24px;">ரூ.1,06,400</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; text-align: center; height: 24px;">ஜுன் 27</td>
<td style="width: 33.619%; text-align: center; height: 24px;">ரூ.13,370</td>
<td style="width: 36.1905%; text-align: center; height: 24px;">ரூ.1,06,960</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; text-align: center; height: 24px;">ஜுன் 26</td>
<td style="width: 33.619%; text-align: center; height: 24px;">ரூ.13,300</td>
<td style="width: 36.1905%; text-align: center; height: 24px;">ரூ.1,06,400</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; text-align: center; height: 24px;">ஜுன் 25</td>
<td style="width: 33.619%; text-align: center; height: 24px;">ரூ.13,140</td>
<td style="width: 36.1905%; text-align: center; height: 24px;">ரூ.1,05,120</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 24</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,350</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,06,800</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 23</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,560</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,08,480</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 22</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,600</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,08,800</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 21</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,600</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,08,800</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 20</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,600</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,08,800</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;"></td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;"></td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;"></td>
</tr>
</tbody>
</table>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/sent-money-in-upi-mistakenly-do-not-worry-do-this-instead-87586.html</link>	
		<pubDate>Sun, 28 Jun 2026 19:30:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/sent-money-in-upi-mistakenly-do-not-worry-do-this-instead-87586.html</guid>
		            
			

    	<description><![CDATA[Do This If You Sent Money Mistakenly Through UPI | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி தான் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், யுபிஐ-ல் தவறாக பணம் அனுப்பினால் அதனை சரிசெய்ய சில வழிகள் உள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/upi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!" /></figure>முன்பெல்லாம் பணத்தை செலவு செய்ய வேண்டும் என்றால் வங்கி கணக்கில் இருந்தோ அல்லது ஏடிஎம் மையங்களில் இருந்தோ பணத்தை கையில் எடுத்து வைத்துக்கொண்டு செலவு செய்யும் நிலை தான் இருந்தது. ஆனால், தற்போது அதெற்கெல்லாம் அவசியமே இல்லை. காகிதம் இல்லாமல் அதாவது கையில் பணமே இல்லாமல் யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> செயலிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யலாம். இவ்வாறு மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே யுபிஐ செயலிகள் உள்ளன. இந்த நிலையில், யுபிஐ-ல் தவறாக பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்வதென்று விரிவாக பார்க்கலாம்.
<h3>யுபிஐ-ல் பணத்தை தவறாக அனுப்பிவிட்டீர்களா? - கவலை வேண்டாம்</h3>
தற்போதைய காலக்கட்டத்தில் ரூ.10 முதல் ஆயிரக்கணக்கிலான பிள்களை கூட பெரும்பாலானவர்கள் யுபிஐ மூலமே மேற்கொள்கின்றனர். நொடி பொழுதில் பண பரிமாற்றம் செய்ய முடியும் என்பதன் காரணமாக பலரும் இந்த யுபிஐ பண பரிவர்த்தனை முறையை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், அவசரத்தில் தொகையை மாற்றி அனுப்பும் சிக்கல்களை பலரும் எதிர்க்கொள்கின்றனர். அதற்கு ஒரு தீர்வு உள்ளது உங்களுக்கு தெரியுமா?

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/not-only-employee-these-9-should-pay-income-tax-in-india-87376.html"> வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல.. இந்த 9 பேரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. யார் யார்?</a>
<h3>தவறான பரிவர்த்தனை - பணத்தை திரும்ப பெறுவது எப்படி?</h3>
நீங்கள் அனுப்ப வேண்டிய தொகைக்கு பதிலாக அதிக தொகையை அனுப்பி விட்டீர்கள். உதாரணமாக ரூ.100 பணம் அனுப்ப வேண்டிய இடத்தில் ரூ.1,000 பணம் அனுப்பி விட்டீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். இந்த நேரத்தில் பதற்றமடையாமல் விரைவாக செயல்பட வேண்டும். அதாவது, நீங்கள் பணத்தை அனுப்பியவர் உங்களுக்கு தெரிந்தவர் என்றால், அவரையே அழைத்து பணத்தை நீங்கள் திருப்பி கேட்கலாம். ஒருவேளை நீங்கள் பணம் அனுப்பியவர் உங்களுக்கு தெரியாதவர் என்றால், அவரை தொடர்புக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-thrice-within-24-hours-from-june-26-2026-to-june-27-2026-87368.html">Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!</a>

ஒருவேளை நீங்கள் பணம் அனுப்பிய நபர் உங்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பவில்லை என்றால் நீங்கள் அது தொடர்பாக புகார் செய்யலாம். அதாவது, உங்கள் யுபிஐ செயலி மூலமாகவே நீங்கள் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும்போது நீங்கள் பணம் அனுப்பிய நபரின் யுபிஐ ஐடி, பெயர் உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படியும் இல்லை என்றால் உங்களின் வங்கியை தொடர்புக்கொள்ளலாம். அவர்களிடம் உங்களது பண பரிவர்த்தனை விவரங்களை வழங்குவதன் மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold : 2016 முதல் 2026 வரை.. 10 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html</link>	
		<pubDate>Sun, 28 Jun 2026 16:36:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html</guid>
		            
			    	<description><![CDATA[How Much Gold Gave Return In Last 10 Years | தங்கம் விலை உயர்ந்த உலோகமாக இருந்தாலும் அதன் மதிப்பு உயர்ந்துக்கொண்டே தான் செல்கிறது. இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் 5 கிராம் தங்கம் வாங்கியிருந்தால் அதன் மதிப்பு தற்போது என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-10-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold (10)" /></a></dt><p>தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் வாங்கிய 5 கிராம் தங்கத்தின் மதிப்பு தற்போது என்னவாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-9-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold (9)" /></a></dt><p>2016 ஆம் ஆண்டு தங்க ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்படும் 22 காரட் தங்கத்தின் மதிப்பு ஒரு கிராம் ரூ.2,600 முதல் ரூ.3,000 ஆக இருந்தது. அந்த விலை நிலவரப்படி ஒருவர் 5 கிராம் தங்க நாணயம் வாங்கியிருந்தால் அவர் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை செலுத்தி அந்த தங்கத்தை வாங்கியிருப்பார். 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-11-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold (11)" /></a></dt><p>தங்க நாணயங்களாக வாங்கும்போது விலை சற்று குறைவாக தான் இருக்கும். இதுவே ஆபரணமாக வாங்கும்போது அதற்கான செய்கூலி, சேதாரம் மற்றும் வரி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டியம் கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக தங்க நாணயத்தை வாங்குவதை விடவும் நகையாக வாங்கும்போது கூடுதலாக பணம் செலுத்த வேண்டும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-8-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold (8)" /></a></dt><p>தற்போது 2026 ஆண்டிற்கு வருவோம். இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 5 கிராம் தங்கம் வாங்க வேண்டும் என்றால் ஒருவர் சுமார் ரூ.66,880 செலவு செய்ய வேண்டும். இது வெறும் தங்கத்திற்கான மதிப்பு மட்டும் தான். இதனுடன் செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி இணைத்தால் ரூ.77,000 வரை செலவாகும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-gave-return-in-last-10-years-from-2016-to-2026-photo-gallery-87552.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-12-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold (12)" /></a></dt><p>2016 ஆம் ஆண்டில் வெறும் ரூ.15,000-க்கு வாங்கி ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு தற்போது ரூ.77,000 ஆக உள்ளது. அதாவது, 2016 முதல் 2026 வரையிலான இந்த 10 ஆண்டுகள் காலக்கட்டத்தில் தங்கம் மூன்று மடங்கு லாபத்தை தந்துள்ளது. அப்போது ரூ.15,000-க்கு 5 கிராம் வாங்கியவர்கள், தற்போது கூடுதலாக ரூ.60,000 லாபமாக பெற்றிருப்பர். </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>2026 ஜூலை மாதத்திற்கு தாக்கல் செய்ய வேண்டிய மூன்று முக்கிய வரிகள்.. என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/3-important-itr-deadlines-in-july-2026-for-indians-what-are-those-87548.html</link>	
		<pubDate>Sun, 28 Jun 2026 15:37:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/3-important-itr-deadlines-in-july-2026-for-indians-what-are-those-87548.html</guid>
		            
			

    	<description><![CDATA[3 Important ITR Deadlines In July 2026 | இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், 2026 ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மூன்று முக்கிய வருமான வரிகள் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/itr-filing-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="2026 ஜூலை மாதத்திற்கு தாக்கல் செய்ய வேண்டிய மூன்று முக்கிய வரிகள்.. என்ன என்ன?" /></figure>இந்தியாவில் ஒரு நிதியாண்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி <strong>(Income Tax)</strong> செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதில் பல விதமான வரி முறைகள் அமலில் உள்ளது. அந்த வகையில் இந்தியர்கள், 2026 ஜூலை மாதம் தவற விடக்கூடாத மூன்று முக்கிய வரி தாக்கல்கள் உள்ளன. ஜூலை மாதம் பிறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முன்கூட்டியே அதற்கான பணிகளை மேற்கொள்வது சிறப்பானதாக இருக்கும். இந்த நிலையில், அவை என்ன என்ன, அவற்றை தாக்கல் செய்வது ஏன் அவசியம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>2026 ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டிய 3 வரி டெட்லைன்ஸ்</h3>
இந்தியாவில் தற்போது வருமான வரி தாக்கல் செய்வதற்கான சீசன் தொடங்கியுள்ளது. பலரும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மூன்று முக்கிய வரிகள் குறித்து பார்க்கலாம்.
<h3>ஜூலை 07, 2026</h3>
டிடிஎஸ் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடுவாக ஜூலை 07, 2026 உள்ளது. வருமான வரி சட்டம் 2025-ன் கீழ் ஒருசிலருக்கு காலாண்டு அடிப்படையில் வரி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கும். அவ்வாறு அனுமதி பெற்றவர்கள், ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் வரியை டெபாசிட் செய்வதற்கு ஜூன் 07, 2026 அன்று காலக்கெடுவாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/epfo-online-services-will-be-suspended-from-june-26-2026-june-28-2026-87165.html">ஊழியர்கள் கவனத்திற்கு.. ஜூன் 26 முதல் 28 வரை.. பிஎஃப் ஆன்லைன் சேவைகள் ரத்து!</a>
<h3>ஜூலை 30, 2026</h3>
ஜூலை மாதத்திற்கான முக்கியமான காலக்கெடுவாக ஜூலை 30,2026 உள்ளது. குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் 2026-ல் பிடித்தம் செய்த செல்லான் மற்றும் அறிக்கை விவரங்களை ஜூலை 30, 2026 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/deregulation-of-commercial-gas-cylinders-central-government-announced-87137.html">வணிக கேஸ் சிலிண்டர்கள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு!</a>
<h3>ஜூலை 31, 2026</h3>
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக உள்ளது தான் ஜூலை 31, 2026. 2026 முதல் 2027 மதிப்பீட்டாண்டின் வருமான வரி கணக்கை ஐடிஆர் 1, ஐடிஆர் 2 படிவங்களை பயன்படுத்தி வரி தாக்கல் செய்யும் தனி நபர்களுக்கான கடைசி தேதியாகவும் இது உள்ளது.

இந்திய குடிமக்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மூன்று வரி தாக்கல் காலக்கெடுக்களை கட்டாயம் உரிய நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா.. செப்டம்பர் 1 தான் கடைசி.. அதக்குள்ள இத பண்ணிடுங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/do-you-have-savings-account-in-post-office-september-1-2026-is-the-last-date-to-do-this-87538.html</link>	
		<pubDate>Sun, 28 Jun 2026 15:10:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/do-you-have-savings-account-in-post-office-september-1-2026-is-the-last-date-to-do-this-87538.html</guid>
		            
			

    	<description><![CDATA[Important Announcement For Post Office Savings Account Holders | கிராமப்புறங்களில் உள்ள அஞ்சலகங்கள் வங்கிகளை போலவே செயல்படுகின்றன. இதன் காரணமாக தான், மத்திய அரசு புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதனை பெறுவதற்கு செப்டம்பர் 01, 2026-க்குள் இதனை செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/post-office.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா.. செப்டம்பர் 1 தான் கடைசி.. அதக்குள்ள இத பண்ணிடுங்க!" /></figure>சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு <strong>(Saving)</strong> அல்லது முதலீடு <strong>(Investment)</strong> செய்யும்போதுதான் பொருளாதார பாதுகாப்பை உருவாக்க முடியும். அவ்வாறு பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், அஞ்சலங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது செப்டம்பர் 01, 2026-க்கு ஒரு முக்கிய வேலையை செய்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அது என்ன வேலை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>அஞ்சலகத்தில் கணக்கு இருக்கா - செப்டம்பர் 01 தான் கடைசி தேதி</h3>
அஞ்சல் துறை, கிராமப்புற வங்கி செயல்பாடுகளை சரிசெய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத வாடிக்கையாளர்கள் ட்ரீம் ஆப் மூலமாக அல்லது ஆதார் ஆத்தன்டிகேஷன் மூலமாக டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ அவர்களுடைய சேவைகள் பிளாக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், வாடிக்கையாளர்கள் எந்த வித சிக்கல்களும் இன்றி பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும், அவ்வப்போது பரிவர்த்தனை தொடர்பான நோடிஃபிகேஷன்களை எஸ்எம்எஸ் மூலம் பெறுவதற்கு கட்டாயமாக மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/can-you-build-50-lakh-rupees-by-investing-in-sip-every-month-for-500-rupees-87140.html">SIP-ல் ரூ.500 முதலீடு செய்து ரூ.50 லட்சத்தை உருவாக்க முடியுமா?</a>
<h3>அஞ்சலக சேவை தொடர்பாக அறிமுகமான புதிய அம்சம்</h3>
கிராமப்புற பகுதிகளில் தற்போதைய காலக்கட்டத்திலும் கூட அஞ்சலகங்களே முதன்மை வங்கியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான், இந்திய பொதுமக்கள் எந்த அஞ்சலக கிளையின் மூலமாகவும் சேவையை பெற முடியும் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஒருவர் எந்த கிளையில் கணக்கு வைத்திருந்தாரோ அந்த கிளைக்கு மட்டுமே சென்று பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனி அதற்கான எந்த கட்டாயமும் இல்லை.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/epfo-online-services-will-be-suspended-from-june-26-2026-june-28-2026-87165.html">ஊழியர்கள் கவனத்திற்கு.. ஜூன் 26 முதல் 28 வரை.. பிஎஃப் ஆன்லைன் சேவைகள் ரத்து!</a>

இந்த புதிய அம்சத்தில் பயன்பெற ஆதார் அடிப்படையிலான இகேஒய்சி மற்றும் மொபைல் எண் இணைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பட்சத்தில் இந்தியாவின் எந்த ஒரு கிளை அலுவலகத்தில் இருந்து வேண்டுமானாலும் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். செப்டம்பர் 01, 2026 முதல் அஞ்சலங்களின் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக மாறுவதன் காரணமாக, ஆதார் மற்றும் அஞ்சலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO : தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினால் இபிஎஃப்ஓவில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 16:30:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html</guid>
		            
			    	<description><![CDATA[Pension Amount For EPFO Members Works In Private Company | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மூலம் ஊழியர்கள் ஏராளமான பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஒரு ஊழியர் சுமார் 10 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினால் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-15-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (15)" /></a></dt><p>இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ள ஒரு திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். இந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றும் ஊழியருக்கு இபிஎஃப்ஓவில் எவ்வளவு ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-16-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (16)" /></a></dt><p>ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் மாதம்தோறும் ஓய்வூதியம் பெற ஒரு நபர் குறைந்தது 10 ஆண்டுகளாவது தனியார் நிறுவனத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். அதாவது அந்த நபர் தொடர்ந்து 10 ஆண்டுகள் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-17-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (17)" /></a></dt><p>தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்றால் ஒரே நிறுவனத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றினாலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-18-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (18)" /></a></dt><p>10 ஆண்டுகளுக்கு பிறகு ஊழியரின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய நிதிக்கு செல்ல தொடங்கும். இந்த பணம், அந்த ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/if-a-person-works-in-private-company-for-10-years-how-much-pf-money-he-or-she-will-get-photo-gallery-87392.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-19-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (19)" /></a></dt><p>நீங்கள் தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளீர்கள், உங்கள் சராசரி ஓய்வூதிய சம்பளம் ரூ.15,000 என்றால், மாதம் தோறும் உங்களுக்கு ரூ.2,143 ஓய்வூதியமாக கிடைக்கும். ஊழியர்கள் தங்களது 58 வயதை அடைந்த பிறகு இந்த ரூ.2,143 தொகை மாதம் மாதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல.. இந்த 9 பேரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. யார் யார்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/not-only-employee-these-9-should-pay-income-tax-in-india-87376.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 15:48:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/not-only-employee-these-9-should-pay-income-tax-in-india-87376.html</guid>
		            
			

    	<description><![CDATA[These 9 Should Pay Income Tax In India | இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் பெறும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், வேலைக்கு செல்லும் நபர்கள் மட்டுமன்றி, இந்த 9 பேர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/itr-filing.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல.. இந்த 9 பேரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. யார் யார்?" /></figure>இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமான பெறும் நபர்கள் வருமான வரி <strong>(Income Tax)</strong> செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் தொழில் செய்யும் நபர்கள் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. வேலைக்கு செல்லும் நபர்கள் மட்டுமன்றி, இந்த 9 பேரும் வருமான வரி செலுத்த வேண்டும். இந்த நிலையில், இது குறித்து வருமான வரி விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்த 9 பேரும் வருமான வரி செலுத்த வேண்டும்</h3>
<h3>வெளிநாட்டு சொத்துக்கள்</h3>
நீங்கள் இந்திய குடிமகனாக இருந்து வெளிநாட்டில் ஏதேனும் சொத்து வைத்திருந்தால், அந்த வெளிநாட்டு சொத்தில் இருந்து பயன்பெற்று வந்தால், வெளிநாட்டு வங்கி கணக்கில் கையெழுத்திடும் அதிகாரம் வைத்திருந்தால் நீங்கள் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
<h3>அதிக வெளிநாட்டு பயண செலவு</h3>
நீங்கள் ஒரு நிதியாண்டில் வெளிநாட்டு பயணத்திற்காக உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நீங்கள் ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளீர்கள் என்றால் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.
<h3>அதிக டிடிஎஸ் பிடித்தம்</h3>
உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டினால் அந்த நபர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
<ul>
 	<li>சாதாரண நபர் : ரூ.25,000</li>
 	<li>மூத்த குடிமக்கள் : ரூ.50,000</li>
</ul>
<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/deregulation-of-commercial-gas-cylinders-central-government-announced-87137.html">வணிக கேஸ் சிலிண்டர்கள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு!</a>
<h3>சேமிப்பு கணக்கில் அதிக தொகை இருப்பு</h3>
ஒருவர் ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளில் சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணம் இருப்பு வைத்திருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
<h3>நடப்பு கணக்கில் அதிக வைப்பு</h3>
வங்கிகளில் வழங்கப்படும் <strong>Current Account</strong>-ல் ரூ.1 கோடிக்கு மேல் பணம் வைத்திருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அந்த நபரின் வருமானம் குறைவாகவே இருந்தாலும் அவர் இத்தகைய சூழலில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
<h3>வணிக வருவாய்</h3>
நீங்கள் ஒரு தொழில் செய்பவராக இருந்து, உங்களது ஆண்டு வருமானம் ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/rbi-decision-digital-fraud-victims-to-get-compensation-up-to-rs-25000-87085.html">டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு – இந்திய ரிசர்வ் வங்கி முடிவு</a>
<h3>தொழில்முறை வருமானம்</h3>
மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள், ஃப்ரீலான்ஸர்கள் போன்ற தொழில் முறையினராக இருந்தால் உங்களது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயம்.
<h3>அதிக மின்சார கட்டணம்</h3>
ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் மின்சார கட்டணம் செலுத்துகிறார் என்றால் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டும்.
<h3>அடிப்படை வரி விலக்கு வரம்பை தாண்டுதல்</h3>
ஒருவருடைய மொத்த வருமானம் எந்த ஒரு முதலீட்டு விலக்குகளையும், அதாவது 80சி, 80டி போன்றவற்றை கழிப்பதற்கு முன்பு அரசாங்கள் நிர்ணயித்துள்ள அடிப்படை வரி விலக்கு வரம்பிற்கு மேல் இருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் கீழ் வரும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியம் என்பது குறிப்பிடத்தகது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-thrice-within-24-hours-from-june-26-2026-to-june-27-2026-87368.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 14:55:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-thrice-within-24-hours-from-june-26-2026-to-june-27-2026-87368.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Increased Thrice Within 24 Hours | ஜூன் மாதம் முதல் கடும் சரிவை சந்தித்து வந்த தங்கம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று முறை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை திடீர் உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-8-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!" /></figure>2026, ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை<strong> (Gold Price)</strong> கடும் சரிவை சந்தித்து வந்தது. இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் தங்கம் விலை ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் விலை தற்போது டிவிஸ்ட் அடித்துள்ளது. அதாவது, நேற்று (ஜூன் 26, 2026) முதல் இன்று (ஜூன் 27, 2026) வரை மொத்தம் மூன்று முறை தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த தங்கம் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திடீர் தங்கம் விலை உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>டிவிஸ்ட் அடித்த தங்கம் - திடீர் விலை உயர்வு</h3>
ஈரான் போர் <strong>(Iran War)</strong> காரணமாக கடந்த சில மாதங்களாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், ஜூன் மாதம் தொடங்கியது முதலே கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. அதாவது ஜுன் 20, 2026 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் தங்கம் விலை 6 சதவீதம் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் தங்கம் விலை மேலும் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான், பொதுமக்களுக்கு தங்கம் ஷாக் கொடுத்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/rbi-decision-digital-fraud-victims-to-get-compensation-up-to-rs-25000-87085.html">டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு – இந்திய ரிசர்வ் வங்கி முடிவு</a>
<h3>24 மணி நேரத்தில் மூன்று முறை உயர்வை சந்தித்த தங்கம்</h3>
சென்னையில் நேற்று (ஜூன் 26, 2026) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்வை சந்தித்தது. அதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு மாலையில் தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று ஒரு நாள் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்வை சந்தித்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/from-june-26-to-28-will-banks-have-three-days-continuous-holidays-86944.html">ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?</a>
<h3>இன்று மீண்டும் உயர்வை சந்தித்த தங்கம்</h3>
தங்கம் இன்று (ஜூன் 27, 2026) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் கிராமுக்கு ரூபாய் 70 அதிகரிப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-in-chennai-gold-price-increased-for-the-second-day-and-silver-price-remains-unchanged-87320.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 11:29:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-in-chennai-gold-price-increased-for-the-second-day-and-silver-price-remains-unchanged-87320.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஜூன் 27-ஆம் தேதி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் 70 உயர்ந்து 13,370-க்கும், ஒரு சவரன் 560 உயர்ந்து 1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 14,585-க்கும், ஒரு சவரன் 1,16,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-1-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் கிராமுக்கு ரூபாய் 70 அதிகரிப்பு" /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="" data-turn-id-container="request-WEB:f315c786-e220-4a98-82d3-37d1efd6a71c-7" data-is-intersecting="true"><section class="text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:f315c786-e220-4a98-82d3-37d1efd6a71c-7" data-turn-id-container="request-WEB:f315c786-e220-4a98-82d3-37d1efd6a71c-7" data-testid="conversation-turn-16" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn" data-conversation-screenshot-content="">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="9a6ab034-2861-41b0-8c80-200781283102" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p class="PDq2pG_selectionAnchorContainer" data-start="75" data-end="410"><strong>ஜூன் 27, 2026:</strong> ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் அதிரடி உயர்வைக் கண்டு வருகிறது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் என்ற அச்சம் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை.</p>
<p data-start="412" data-end="680">அந்த வகையில், ஜூன் 27-ஆம் தேதியான இன்று, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 70 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்குவோர் மீண்டும் கூடுதல் செலவைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஜூன் 26-ஆம் தேதியைப் பொருத்தவரையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 80 உயர்ந்து 13,300-க்கும், ஒரு சவரன் 1,06,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p>

<h3 data-start="412" data-end="680">அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை:</h3>
<p data-start="845" data-end="1025">இந்த நிலையில், ஜூன் 27-ஆம் தேதி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் 70 உயர்ந்து 13,370-க்கும், ஒரு சவரன் 560 உயர்ந்து 1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 14,585-க்கும், ஒரு சவரன் 1,16,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p data-start="1165" data-end="1312">வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி 245-க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>

<h3 data-start="1165" data-end="1312">ஜூன் மாதத்தில் கடுமையான சரிவை சந்தித்த தங்கம் விலை:</h3>
<p data-start="1314" data-end="1713">ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்கள் மற்றும் முதலீட்டு சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைக் கண்டது. ஒரு கட்டத்தில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 14,000-க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டதால், நகை வாங்குவோர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலரும் இந்த விலை சரிவைப் பயன்படுத்தி தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்களை வாங்க ஆர்வம் காட்டினர்.</p>
<p data-start="1715" data-end="2014">ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நிலைமை மாறியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. குறிப்பாக, திருமண நிகழ்வுகள் மற்றும் பிற விசேஷங்களுக்கு நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் தற்போதைய விலை உயர்வால் கவலை அடைந்துள்ளனர்.</p>
<p data-start="2016" data-end="2377" data-is-last-node="" data-is-only-node="">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார சூழல் போன்ற காரணிகளைப் பொறுத்தே தங்கம் விலையில் அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, தங்கம் விலை அடுத்த சில நாட்களிலும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section></div>
</div>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>SIP-ல் ரூ.500 முதலீடு செய்து ரூ.50 லட்சத்தை உருவாக்க முடியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/can-you-build-50-lakh-rupees-by-investing-in-sip-every-month-for-500-rupees-87140.html</link>	
		<pubDate>Fri, 26 Jun 2026 19:17:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/can-you-build-50-lakh-rupees-by-investing-in-sip-every-month-for-500-rupees-87140.html</guid>
		            
			

    	<description><![CDATA[500 SIP Investment To Build 50 Lakh Rupees | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் எஸ்ஐபி திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், எஸ்ஐபி திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்து ரூ.50 லட்சத்தை உருவாக்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/sip-investment.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="SIP-ல் ரூ.500 முதலீடு செய்து ரூ.50 லட்சத்தை உருவாக்க முடியுமா?" /></figure>விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவை காரணமாக மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பொருளாதார சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய பொருளாதார சிக்கல்களை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களது எதிர்காலத்திற்காக சேமிப்பு<strong> (Saving)</strong> அல்லது முதலீடு <strong>(Investment)</strong> செய்ய வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால், சமீப காலமகாம பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு திட்டம் தான் எஸ்.ஐ.பி இந்த நிலையில், எஸ்.ஐ.பி <strong>(SIP - Systematic Investment Fund)</strong> திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்வதன் மூலம் எத்தனை ஆண்டுகளில் ரூ.50 லட்சம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>மாதம் மாதம் ரூ.500 எஸ்ஐபி முதலீடு</h3>
தற்போதைய காலத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள முதலீட்டு திட்டம் தான் எஸ்ஐபி. இந்த திட்டத்தில் வெறும் ரூ.500 முதலே முதலீடு செய்ய முடியும். மாதம் ரூ.500 மட்டுமே முதலீடு செய்வதன் மூலம் ரூ.50 லட்சத்தை உருவாக்குவது சற்று சவாலானது. காரணம், அதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும். நீங்கள் மாதம் ரூ.500 மட்டுமே எஸ்ஐபியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது சராசரியாக 12 சதவீதம் லாபம் தரக்கூடிய திட்டமாக இருக்க வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/from-june-26-to-28-will-banks-have-three-days-continuous-holidays-86944.html">ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?</a>
<h3>ரூ.50 லட்சத்தை உருவாக்க 40 ஆண்டுகள் தேவைப்படும்</h3>
12 சதவீதம் லாபம் தரக்கூடிய ஒரு திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.500 முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒரு ஆண்டுக்கு மொத்தமாக ரூ.6,000 முதலீடு செய்வீர்கள். அந்த வகையில் ரூ.50 லட்சம் பணத்தை உருவாக்க வேண்டும் என்றால் உங்களுக்கு சுமார் 40 ஆண்டுகள் தேவைப்படும். இதுவே நீங்கள் குறுகிய காலத்தில் இலக்கை எட்ட வேண்டும் என்றால் ஸ்டெப் அப் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஊழியர்கள் கவனத்திற்கு.. ஜூன் 26 முதல் 28 வரை.. பிஎஃப் ஆன்லைன் சேவைகள் ரத்து!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/epfo-online-services-will-be-suspended-from-june-26-2026-june-28-2026-87165.html</link>	
		<pubDate>Fri, 26 Jun 2026 14:40:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/epfo-online-services-will-be-suspended-from-june-26-2026-june-28-2026-87165.html</guid>
		            
			

    	<description><![CDATA[EPFO Online Services Will Be Suspended | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இணையதளத்தை மேம்படுத்துவதன் காரணமாக மூன்று நாட்களுக்கு இபிஎஃப்ஓ ஆன்லைன் சேவைகளை பெற முடியாது என அறிவித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-announcement.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஊழியர்கள் கவனத்திற்கு.. ஜூன் 26 முதல் 28 வரை.. பிஎஃப் ஆன்லைன் சேவைகள் ரத்து!" /></figure>இந்தியாவில் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின்<strong> (EPFO - Employee Provident Fund Organization)</strong> பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளம் சில நாட்கள் செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ சேவைகளை பெற விரும்பும் பயனர்கள் அதற்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மொத்தம் எத்தனை நாட்கள் செயல்படாது, அது குறித்து இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்ச இணையதளம் 3 நாட்கள் செயல்படாது</h3>
முன்பெல்லாம் இபிஎஃப்ஓ சார்ந்த தேவைகளை பெற ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது அதெற்கெல்லாம் தேவை இல்லை. காரணம், இணையதளத்தின் மூலம் வீட்டில் இருந்துக்கொண்டே மிக சுலபமாக இபிஎஃப்ஓ சேவைகளை பெற முடியும். இந்த நிலையில் தான், இபிஎஃப்ஓ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நான்கு நாட்களுக்கு இபிஎஃப்ஓ இணையதளம் செயல்படாது என்று அறிவித்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/important-changes-to-be-implemented-from-july-01-2026-86902.html">கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. ஜூலை மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!</a>
<h3>ஜூன் 26 முதல் இபிஎஃப்ஓ இணையதளம் செயல்படாது</h3>
ஊழியர்கள் மிக விரைவாக பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ 3.0 என்ற அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் மிக விரைவில் எடுத்துக்கொள்ளலாம். இந்த அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக இபிஎஃப்ஓ இணையதளத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதன் காரணமாக நான்கு நாட்களுக்கு இபிஎஃப்ஓ இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/7-days-holidays-declared-for-banks-in-india-full-list-here-86892.html">Bank Holiday : ஜூலை மாதத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!</a>
<h3>ஜூன் 26 முதல் 28 பிஎஃப் ஆன்லைன் சேவைகள் தற்காலிக ரத்து</h3>
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் மென்பொருள் மற்றும் தரவுத்தள மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதன் காரணமாக ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை பிஎஃப் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வணிக கேஸ் சிலிண்டர்கள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/deregulation-of-commercial-gas-cylinders-central-government-announced-87137.html</link>	
		<pubDate>Fri, 26 Jun 2026 11:40:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/deregulation-of-commercial-gas-cylinders-central-government-announced-87137.html</guid>
		            
			

    	<description><![CDATA[Deregulation of Commercial Gas Cylinders | ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டை சரிசெய்ய வணிக கேஸ் சிலிண்டர்கள் மீது மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில், தற்போது ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ளதால் அந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/commercial-gas-cylinder.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வணிக கேஸ் சிலிண்டர்கள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு!" /></figure>அமெரிக்கா மற்றும் ஈரான் <strong>(America and Iran)</strong> இடையே உருவான போர் காரணமாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்தது. இதன் காரணமாக உலக நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல முடியாத சூழல் உருவான நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்ட நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு குறித்து மத்திய அரசு சில முக்கிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதிலும் குறிப்பாக வணிக சிலிண்டர்களுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.
<h3>வணிக கேஸ் சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு</h3>
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தொழில் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான எல்பிஜி விநியோகத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. மேற்கு ஆசியா நெருக்கடிக்கு முன்பாக இருந்த நிலைக்கு விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெருக்கடியின் தொடக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த எல்பிஜி விநியோகமும் நெருக்கடிக்கு முந்தைய நுகர்வு அளவுகளில் 50 சதவீதத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/7-days-holidays-declared-for-banks-in-india-full-list-here-86892.html">Bank Holiday : ஜூலை மாதத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!</a>
<h3>வணிக சிலிண்டர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் என்ன என்ன?</h3>
ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், வணிக கேஸ் சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, வணிக சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்திம் வைக்கப்பட்டது. அதன் பிறகு 20 சதவீதம், 50 சதவீதம் என படிப்படியாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் மீண்டும்  இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-1680-rupees-per-sovereign-on-june-25-2026-86884.html">Gold Price : ஒரே நாளில் ரூ.1,680 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?</a>

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த கடும் போர் மூன்று மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் சிக்கல்கள் முடிவு பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதன் காரணமாக மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-increased-in-chennai-on-june-26-2026-87124.html</link>	
		<pubDate>Fri, 26 Jun 2026 11:15:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-increased-in-chennai-on-june-26-2026-87124.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price Increased | 2026, ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-14.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, ஜுன் 26 :</strong> ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை <strong>(Gold Price)</strong> கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஜூன் 26, 2026) தங்கம் விலை சில நாட்களுக்கு பிறகு உயர்வை சந்தித்துள்ளது. தங்கம் மட்டுமன்றி, வெள்ளியும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜூன் மாதம் தொடங்கியது முதலே சரிவை சந்திக்கும் தங்கம்</h3>
2026, ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் ஈரான் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், ஜூன் மாதம் முதல் தொடர் சரிவையே சந்தித்து வருகிறது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம், தற்போது ரூ.13,000-க்கு விற்பனையாகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-invest-115-rupees-everyday-you-can-get-2-5-lakh-rupees-in-post-office-rd-scheme-86497.html">தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!</a>
<h3>உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.235-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு &#8211; இந்திய ரிசர்வ் வங்கி முடிவு</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/rbi-decision-digital-fraud-victims-to-get-compensation-up-to-rs-25000-87085.html</link>	
		<pubDate>Thu, 25 Jun 2026 22:04:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/rbi-decision-digital-fraud-victims-to-get-compensation-up-to-rs-25000-87085.html</guid>
		            
			

    	<description><![CDATA[டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரிசர்வ் வங்கி குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும், இவற்றின் கீழ் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இழப்பீட்டைக் கோர முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/rbi-decision-victims-of-digital-fraud-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு &#8211; இந்திய ரிசர்வ் வங்கி முடிவு" /></figure>ஆன்லைன் மோசடியால் உங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை நீங்கள் இழந்திருந்தால், உங்களுக்கு நிவாரணம் வழங்க <a href="https://www.tv9tamilnews.com/business/how-rbi-repo-rate-at-5-25-percent-impacts-your-home-loan-and-emi-83161.html" target="_blank" rel="noopener">ரிசர்வ் வங்கி</a> முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் மோசடி தொடர்பான விதிமுறைகளின் வரம்பை விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. மிரட்டல் அல்லது கட்டாயத்தின் பேரில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவங்கள் உட்பட, குறைந்த மதிப்புள்ள டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு முறையை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
<h3>டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு</h3>
இது குறித்து வெளியான தகவலின் படி திருத்தப்பட்ட விதிகளின் கீழ், மின்னணு வங்கிப் பரிவர்த்தனை மோசடிகளில் ரூ. 50,000 வரை இழப்பைச் சந்திக்கும் தனிநபர்கள், தங்கள் மொத்த இழப்பில் 85 சதவிகிதம் வரை இழப்பீட்டைப் பெறலாம். இந்த இழப்பீடு அதிகபட்சம் ரூ.25,000 வரை மட்டுமே வழங்கப்படும். மேலும், ஒரு தனிநபர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இதைக் கோர முடியும்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/business/if-you-invest-115-rupees-everyday-you-can-get-2-5-lakh-rupees-in-post-office-rd-scheme-86497.html"> தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!</a></strong>

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பாஸ்வேர்டு அல்லது ஓடிபி ஆகியவை மோசடியாகப் பெறப்பட்ட பிறகு பரிவர்த்தனை செய்யப்பட்ட நிகழ்வுகளை இந்த புதிய விதிகள் உள்ளடக்கியுள்ளன. மேலும், அழுத்தம் அல்லது கட்டாயத்தின் பேரில் பாதிக்கப்பட்டவர் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்த நிகழ்வுகளும் இதில் அடங்கும்.
<h3>45 முதல் 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு</h3>
புதிய நடைமுறையின் கீழ், மோசடிக்குள்ளாகும் மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான புகார்களை, உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு 45 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு 60 நாட்களுக்குள்ளும் வங்கிகள் விசாரிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விட விசாரணைக்கு அதிக காலம் தேவைப்பட்டால், தாமதத்திற்கான காரணத்தை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/business/banks-provides-lowest-interest-rates-for-education-loan-full-list-86220.html"> குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!</a></strong>

மோசடியான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வாடிக்கையாளரிடமிருந்து தகவல் கிடைத்த ஐந்து நாட்களுக்குள், சர்ச்சைக்குரிய தொகைக்கு இணையான ஷேடோ ரிவர்சல் தொகையை வங்கிகள் வழங்க வேண்டும். கூடுதலாக, ரூ.500க்கு மேற்பட்ட மின்னணுப் பரிவர்த்தனைகளுக்கு உடனடி எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கைகளை அனுப்ப வேண்டும் என்ற கட்டாய விதியை ஆர்பிஐ தொடர்ந்து அமலில் வைத்துள்ளது.

ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லாத தனிநபர்களுக்கு, தகவல் தொடர்பிற்கான ஒரே மின்னணு வழியாக எஸ்எம்எஸ் மட்டுமே உள்ளது என்பதை ஆர்பிஐ சுட்டிக்காட்டியுள்ளது.  இது டிஜிட்டல் மோசடியால் மிகப்பெரிய தொகையை இழக்கும் நபர்களுக்கு குறைந்த பட்ச நிவாரணத்தை இந்த திட்டம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/from-june-26-to-28-will-banks-have-three-days-continuous-holidays-86944.html</link>	
		<pubDate>Thu, 25 Jun 2026 14:40:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/from-june-26-to-28-will-banks-have-three-days-continuous-holidays-86944.html</guid>
		            
			

    	<description><![CDATA[Three Days Continuous Holidays For Banks | வங்கிகளுக்கு சில காரணங்களால் சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், மொகரம் பண்டிகை காரணமாக ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/bank-holiday-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?" /></figure>பண்டிகைகள், அரசு விழாக்கள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்காக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வங்கிகளுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை மூன்று நாட்கள் விடுமுறை</h3>
மொஹரம் பண்டிகை காரணமாக வங்கிகள் ஜூன் 25 அன்று மூடப்படுமா அல்லது ஜூன் 26 அன்று மூடப்படும என்ற குழப்பம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் <strong>(RBI - Reserve Bank Of India)</strong> விடுமுறை பட்டியலின்படி, ஜூன் 26, 2026 அன்று தான் மொஹரம் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, ஜூன் 26 அன்று விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என கூறப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-invest-115-rupees-everyday-you-can-get-2-5-lakh-rupees-in-post-office-rd-scheme-86497.html">தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!</a>
<h3>தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது</h3>
ஜூன் 26, 2026 அன்று மொஹரம் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை அளிக்கப்படும். காரணம், ஜூன் 27, 2026 மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதனை தொடர்ந்து ஜூன் 28, 2026 ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறை அளிகப்படும். இதன் காரணமாக தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/did-not-get-pm-kisan-23rd-installment-yet-make-sure-these-things-86408.html">பிஎம் கிசான் பணம் ரூ.2,000 இன்னும் வரவில்லையா?.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!</a>
<h3>பிற சேவைகளை தடையின்றி பெறலாம்</h3>
வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்த நிலையில், ஏடிஎம் <strong>(ATM - Automated Teller Machine)</strong>, யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> செயலிகள், வங்கிகளின் செயலிகள் ஆகியவை வழக்கம் போல பயன்பாட்டில் இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் அந்த சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. ஜூலை மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/important-changes-to-be-implemented-from-july-01-2026-86902.html</link>	
		<pubDate>Thu, 25 Jun 2026 13:23:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/important-changes-to-be-implemented-from-july-01-2026-86902.html</guid>
		            
			

    	<description><![CDATA[July Month Changes | ஒவ்வொரு மாதத்திலும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் 2026, ஜூலை மாதம் முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்ன மாற்றங்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/july-changes.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. ஜூலை மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!" /></figure>ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம், பெட்ரோல், டீசல் விலை மாற்றம், ஆதார் கார்டு <strong>(Aadhaar Card)</strong>, பான் கார்டு <strong>(PAN Card)</strong> ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். 2026, ஜூன் மாதம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜூலை மாதத்தில் என்ன என்ன முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜுலை மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்</h3>
கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் 2026, ஜூலை மாதம் முதல் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கேஸ் சிலிண்டர் விலை</h3>
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், ஜூலை 01, 2026 அன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/did-not-get-pm-kisan-23rd-installment-yet-make-sure-these-things-86408.html">பிஎம் கிசான் பணம் ரூ.2,000 இன்னும் வரவில்லையா?.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!</a>
<h3>ஆதார் மின்னஞ்சல் முகவரி</h3>
ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகவும், இலவசமாக மின்னஞ்சல் புதுப்பிக்கும் சேவை ஜூலை 01, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/banks-provides-lowest-interest-rates-for-education-loan-full-list-86220.html">குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!</a>
<h3>கிரெடிட் கார்டு சலுகை விதிமுறைகள்</h3>
ஜூலை முதல் கிரெடிட் கார்டுகளுக்கான சலுகை விதிமுறைகள் மாற்றப்படுகின்றன. அதாவது, குறிப்பிட்ட அளவு செலவினை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கே சில சிறப்பு பயண வசதிகள் கிடைக்கும். இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் இதனை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

மேற்குறிப்பிட்ட இந்த முக்கிய மாற்றங்கள் ஜூலை 01, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. எனவே பொதுமக்கள் அவற்றை குறித்து தெரிந்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Bank Holiday : ஜூலை மாதத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/7-days-holidays-declared-for-banks-in-india-full-list-here-86892.html</link>	
		<pubDate>Thu, 25 Jun 2026 11:35:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/7-days-holidays-declared-for-banks-in-india-full-list-here-86892.html</guid>
		            
			

    	<description><![CDATA[7 Days Bank Holidays For July 2026 | ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், ஜூலை மாதம் வங்கிகளுக்கு மொத்தம் 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியல் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/july-bank-holiday.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Bank Holiday : ஜூலை மாதத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!" /></figure>இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வார விடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை <strong>(Bank Holiday)</strong> வழங்கப்படும். விரைவில் 2026, ஜூன் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜூலை மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறித்த விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியல்</h3>
<ul>
 	<li>ஜுலை 05, 2026 - ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</li>
 	<li>ஜூலை 11, 2026 - மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</li>
 	<li>ஜூலை 12, 2026 -  ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</li>
 	<li>ஜூலை 16, 2026 - ரத யாத்ரா என்பதால் மனிப்பூர் மற்றும் ஒடிசாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</li>
 	<li>ஜூலை 19, 2026 - ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</li>
 	<li>ஜூலை 25, 2026 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</li>
 	<li>ஜூலை 26, 2026 - ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</li>
</ul>
இந்தியாவில் ஜூலை மாதம் இந்த 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/did-not-get-pm-kisan-23rd-installment-yet-make-sure-these-things-86408.html"> பிஎம் கிசான் பணம் ரூ.2,000 இன்னும் வரவில்லையா?.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!</a></p>

<h3>வங்கி விடுமுறை நாட்களில் என்ன செய்யலாம்</h3>
ஜூலை மாதத்தில் இந்த 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் முன்கூட்டியே தங்களது வங்கி சேவைகளை முடித்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும். இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாதே தவிற ஏடிஎம் <strong>(ATM - Automated Teller Machine)</strong>, யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> செயலிகள், வங்கிகளின் செயலிகள் ஆகியவை வழக்கம் போல செயல்படும். எனவே பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி எந்தவித தடையுமின்றி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : ஒரே நாளில் ரூ.1,680 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-1680-rupees-per-sovereign-on-june-25-2026-86884.html</link>	
		<pubDate>Thu, 25 Jun 2026 10:35:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-1680-rupees-per-sovereign-on-june-25-2026-86884.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Reduced 1,680 Rupees Per Sovereign | ஜுன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-14.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : ஒரே நாளில் ரூ.1,680 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, ஜூன் 25 :</strong> ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை <strong>(Gold Price)</strong> கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 25, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது இன்றைய தினம் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.210 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜூன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்து வரும் தங்கம்</h3>
ஈரான் போர்<strong> (Iran War)</strong> காரணமாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், ஜூன் மாதம் தொடங்கியது முதலே கடும் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் தங்கம் விலை 6 சதவீதம் சரிவை சந்தித்தது. அதாவது 10 நாட்களுக்கு தலா 3 சதவீதம் வரை சரிந்தது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஜூன் மாதம் முடிவடைவதற்குள் தங்கம் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/banks-provides-lowest-interest-rates-for-education-loan-full-list-86220.html"> குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!</a>
<h3>ஒரே நாளில் ரூ.1,680 குறைந்த தங்கம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140-க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தங்கம் விலை மளமளவென குறைவு.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-prices-have-dropped-sharply-know-the-price-of-a-sovereign-in-chennai-today-86700.html</link>	
		<pubDate>Wed, 24 Jun 2026 09:50:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-prices-have-dropped-sharply-know-the-price-of-a-sovereign-in-chennai-today-86700.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold price: சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது போன்ற உலகளாவிய காரணங்களால் தங்கம் மீதான முதலீடுகள் சற்று சரிந்துள்ளன. இதன் எதிரொலியாகவே இந்தியாவிலும் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை மளமளவெனக் குறைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-jewel.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தங்கம் விலை மளமளவென குறைவு.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?" /></figure><strong>Gold Price Today:</strong> கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த <a href="https://www.tv9tamilnews.com/business/gold-prices-on-the-first-day-of-the-week-know-the-price-of-a-sovereign-in-chennai-86302.html" target="_blank" rel="noopener">தங்கத்தின் விலை</a>, இன்று அதிரடியாகக் குறைந்து நடுத்தரக் குடும்பங்களுக்கும், நகைப்பிரியர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 வரை மளமளவெனக் குறைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், தங்கம் விலை தொடர்ந்து குறைய வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

<strong>இதையும் படிங்க:</strong> <strong><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html">வெறும் ரூ.75-க்கு பிவிசி ஆதார் கார்டு.. வீட்டில் இருந்தே சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்!</a></strong>
<h3>ஆபரணத்தங்கம் விலை குறைவு:</h3>
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் 13,350க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1.10 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக ரூ.1,08,480 என்ற அளவில் தங்கம் விலை கட்டுக்குள் இருந்தது.
<h3>வெள்ளி விலையும் குறைவு:</h3>
தங்கத்தை தொடர்ந்து இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
<h3>விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?</h3>
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது போன்ற உலகளாவிய காரணங்களால் தங்கம் மீதான முதலீடுகள் சற்று சரிந்துள்ளன. இதன் எதிரொலியாகவே இந்தியாவிலும் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை மளமளவெனக் குறைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் போர் முடிவுற்ற நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
<h3>முதலீடு செய்வதில் நீடிக்கும் குழப்பம்:</h3>
இருப்பினும், உலக சந்தையில் பொருளாதார நிலை சரியாகும் வரை தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்கின்றனர் நிபுணர்கள். அதோடு, இந்த குறுகிய கால விலை சரிவு எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும் என்று கணிக்க முடியாது என்றும், அதுவே விலை ஏற தொடங்கினால் கணிசமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் நகை வாங்குவதற்கு உகந்த நேரமா? இப்போது பெரிய அளவில் முதலீடு செய்யலாமா? என்ற குழப்பம் நிலவி வருகிறது.Gold prices have dropped sharply know the price of a sovereign in Chennai today
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-invest-115-rupees-everyday-you-can-get-2-5-lakh-rupees-in-post-office-rd-scheme-86497.html">தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!</a></strong></p>

<h3>கடந்த 10 நாட்களில் தங்கம் விலை:</h3>
<div class="table-responsive">
<table class="css-g3m580" style="border-collapse: collapse; width: 35.0045%; height: 240px;" border="1">
<tbody>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;"><strong>தேதி</strong></td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;"><strong>கிராம்</strong></td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;"><strong>சவரன்</strong></td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 24</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,350</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,06,800</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 23</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,560</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,08,480</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 22</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,600</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,08,800</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 21</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,600</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,08,800</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 20</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,600</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,08,800</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 19</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,570</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,08,560</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 18</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 13,950</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,11,600</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 17</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 14,030</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,12,240</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 27.9047%; height: 24px; text-align: center;">ஜூன் 16</td>
<td style="width: 33.619%; height: 24px; text-align: center;">ரூ. 14,060</td>
<td style="width: 36.1905%; height: 24px; text-align: center;">ரூ. 1,12,480</td>
</tr>
</tbody>
</table>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/if-you-invest-115-rupees-everyday-you-can-get-2-5-lakh-rupees-in-post-office-rd-scheme-86497.html</link>	
		<pubDate>Tue, 23 Jun 2026 13:15:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/if-you-invest-115-rupees-everyday-you-can-get-2-5-lakh-rupees-in-post-office-rd-scheme-86497.html</guid>
		            
			

    	<description><![CDATA[Invest 115 Rupees To Get 2.5 Lakh | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றான தொடர் வைப்பு நிதியில் ரூ.115 முதலீடு செய்து மொத்தமாக ரூ.2.50 லட்சம் பெற முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/rd-scheme.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!" /></figure>பாதுகப்பான மற்றும் நிலையான வருமானம் பெற வேண்டும் சேமிப்பு<strong> (Saving)</strong> அல்லது முதலீடு <strong>(Investment)</strong> செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. காரணம், வருமானமாக பெறும் பணத்தை செலவு மட்டும்  செய்தால் கையில் பணம் இருக்காது. இதன் காரணமாக எதிர்பாராத காலங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே தான், சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், தினமும் ரூ.115 முதலீடு செய்வதன் மூலம் ரூ.2.5 லட்சத்தை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தினமும் ரூ.115 முதலீடு செய்து ரூ.2.5 லட்சம் பெறலாம்</h3>
பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு அரசு அஞ்சலங்கள் மூலம் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக தொடர் வைப்பு நிதி <strong>(RD - Recurring Deposit)</strong> திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். பலரும் மொத்தமாக முதலீடு செய்ய முடியாது என நினைத்துக்கொண்டு முதலீடு செய்யாமலே இருப்பர். அத்தகையவர்களுக்கான திட்டம் தான் இது. அதாவது, இந்த திட்டத்தில் குறைந்த தொகையை மாதம் மாதம் முதலீடு செய்ய முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/you-can-easily-apply-for-pvc-aadhaar-card-by-sitting-at-home-step-by-step-guide-86193.html">பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?.. வீட்டில் இருந்தே சுலபமாக செய்யலாம்!</a>
<h3>மாதம் ரூ.3,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?</h3>
இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் ரூ.115 முதலீடு செய்யும் பட்சத்தில் ஒரு ஆண்டில் ரூ.3,500 முதலீடு செய்ய முடியும். இந்த திட்டம் 5 ஆண்டுகளுக்கான திட்டம் என்பதால் நீங்கள் தொடர்ந்து 60 மாதங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் மாதம் மாதம் ரூ.3,500 முதலீடு செய்தால் மொத்தமாக ரூ.2,10,000 முதலீடு செய்திருப்பீர்கள்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/when-will-petrol-diesel-price-reduce-minister-hardeep-singh-puri-answered-86175.html">பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்?.. மத்திய அமைச்சர் பதில்!</a>

இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு வட்டியாக மட்டும் ரூ.39,000 கிடைக்கும். அதன்படி, நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.2,10,000 மற்றும் அதற்கான வட்டி ரூ.39,000 சேர்த்து மொத்தமாக ரூ.2,49,000 கிடைக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-40-rupees-per-gram-in-chennai-on-june-23-2026-86469.html</link>	
		<pubDate>Tue, 23 Jun 2026 10:35:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-40-rupees-per-gram-in-chennai-on-june-23-2026-86469.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Reduced 40 Rupees Per Gram | ஈரான் போரால் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 சரிவை சந்தித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-13.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, ஜூன்ன்23 :</strong> ஈரான் போரால் <strong>(Iran War)</strong> தங்கம் விலை<strong> (Gold Price)</strong> நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜுன் மாதம் முதலே கடும் சரிவை சந்திக்க தொடங்கிய தங்கம்,  இன்று (ஜூன் 23, 2026) மீண்டு சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜூன் மாதம் முதலே கடும் சரிவை சந்தித்து வரும் தங்கம்</h3>
ஈரான் போரால் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் 2026, ஜூன் மாதம் முதல் தொடர் சரிவை சந்திக்க தொடங்கியது. அதாவது, ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே சரிவை சந்தித்து வரும் தங்கம், இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/when-will-petrol-diesel-price-reduce-minister-hardeep-singh-puri-answered-86175.html">பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்?.. மத்திய அமைச்சர் பதில்!</a>
<h3>இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் தங்கம் 6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிஎம் கிசான் பணம் ரூ.2,000 இன்னும் வரவில்லையா?.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/did-not-get-pm-kisan-23rd-installment-yet-make-sure-these-things-86408.html</link>	
		<pubDate>Mon, 22 Jun 2026 20:10:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/did-not-get-pm-kisan-23rd-installment-yet-make-sure-these-things-86408.html</guid>
		            
			

    	<description><![CDATA[Did Not Get PM Kisan 23rd Installment Yet | பிஎம் கிசான் யோனதா திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஜூன் 20, 2026 அன்று 23வது தவணை பணம் வரவு வைக்கப்பட்டது. இருப்பினும் சில விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்படாமல் உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/pm-kisan-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிஎம் கிசான் பணம் ரூ.2,000 இன்னும் வரவில்லையா?.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!" /></figure>இந்தியாவில் ஏழை, எளிய விவசாயிகளுக்கான வரப்பிரசாதமான திட்டமாக பிஎம் கிசான் யோஜனா<strong> (PM Kisan Yojana)</strong> திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என ஒரு ஆண்டுக்கு மொத்தமாக ரூ.6,000 வரவு வைக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 23 தவணைகள் பணம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜூன் 20, 2026 அன்று தான் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவு வைகக்கப்பட்டது. இருப்பினும் சில விவசாயிகளுக்கு பணம் கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில், பணம் வராத விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜூன் 20, 2026 அன்று வரவு வைக்கப்பட்ட ரூ.2,000</h3>
பிஎம் கிசான் யோஜனா திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஜூன் 20, 2026 அன்று பணம் வரவு வைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்தார். அன்றைய தினம் சுமார் 9.44 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் மொத்தமாக ரூ.18,880 கோடி வரவு வைக்கப்பட்டது. ஆனால், சிலருக்கு இன்னும் பிஎம் கிசான் பணம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அவ்வாறு பணம் வராதவர்கள் அது குறித்து கவலைப்பட வேண்டாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/your-pan-card-can-be-misused-know-how-to-check-it-86030.html">உங்கள் பான் கார்டு மோசடிக்கு உள்ளாகலாம்.. இதனை கட்டாயம் செய்யுங்கள்!</a>
<h3>இந்த விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்</h3>
நீங்கள் செய்த சில தவறுகள் காரணமாக உங்களுக்கு பிஎம் கிசான் 23வது தவணை வரவு வைக்கப்படாமல் இருக்கலாம்.
<h3>தவறான வங்கி கணக்கு விவரங்கள்</h3>
ஒருசிலர் தவறான வங்கி கணக்கு விவரங்களை வழங்கியிருப்பார்கள். அல்லது அவர்களது வங்கி கணக்கு செயலற்ற நிலையில் இருக்கும். இத்தகைய சூழலில் ரூ.2,000 பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, பிஎம் கிசான் இணையதளத்திற்கு சென்று நீங்கள் சரியான வங்கி கணக்கு விவரங்களை கொடுத்துள்ளீர்களா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/make-sure-these-things-before-filing-itr-important-tips-85973.html">வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!</a>
<h3>இ கேஒய்சி சரிபார்ப்பு</h3>
பிஎம் கிசான் கணக்கில் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றாலும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்படும். இதற்காக விவசாயிகள் ஓடிபி அடிப்படையிலான கேஒய்சி செயல்முறையை மேற்கொள்ளலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-prices-on-the-first-day-of-the-week-know-the-price-of-a-sovereign-in-chennai-86302.html</link>	
		<pubDate>Mon, 22 Jun 2026 10:22:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-prices-on-the-first-day-of-the-week-know-the-price-of-a-sovereign-in-chennai-86302.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold price: சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய முதலீட்டாளர்களின் தேவை மற்றும் மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தினசரி தங்கம், வெள்ளி விலை மாற்றங்கள் ஏற்படுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-today.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?" /></figure><strong>Gold Rate Today:</strong> சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/will-gold-price-continue-to-reduce-by-june-2026-end-photo-gallery-86162.html" target="_blank" rel="noopener">ஆபரணத் தங்கத்தின் விலை</a>, வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இது நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் விலை ரூ.2,080 வரை குறைந்தது. தொடர்ந்து, இந்த வாரமும் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

<strong>இதையும் படிக்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/farmers-will-get-2000-rupees-on-june-20-2026-as-pm-kisan-23rd-installment-85867.html">பிஎம் கிசான் 23வது தவணை.. நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவுள்ள ரூ.2,000!</a>
<h3>ஆபரணத் தங்கம் விலை நிலவரம்:</h3>
நேற்று (ஜூன் 21) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,600-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,55,000-க்கு விற்பனையானது. தொடர்ந்து, இன்று (ஜூன் 22) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. அதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,600-க்கு விற்பனையாகிறது.
<h3>சொக்கத் தங்கம் விலை நிலவரம்:</h3>
தூய தங்கமான 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.22 வரை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,618க்கும், 10 கிராம் தங்கம் ரூ.1,46,180க்கும் விற்கப்படுகிறது. அதேபோல், குறைந்த எடையிலான ஆபரணத் தயாரிப்புகளுக்குப் பயன்படும் 18 கேரட் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.11,370க்கும், ஒரு சவரன் ரூ.90,960க்கும் விற்பனையாகிறது.
<h3>வெள்ளி விலை நிலவரம்:</h3>
தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளியின் விலையிலும் மாற்றமின்றி காணப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.255 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது. (கடந்த வார இறுதி வீழ்ச்சிக்கு பின் இன்று சந்தை நிலைபெற்றுள்ளது).

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html">வெறும் ரூ.75-க்கு பிவிசி ஆதார் கார்டு.. வீட்டில் இருந்தே சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்!</a>
<h3>விலை மாற்றத்திற்கான காரணங்கள்:</h3>
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய முதலீட்டாளர்களின் தேவை மற்றும் மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தினசரி விலை மாற்றங்கள் ஏற்படுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/banks-provides-lowest-interest-rates-for-education-loan-full-list-86220.html</link>	
		<pubDate>Sun, 21 Jun 2026 19:45:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/banks-provides-lowest-interest-rates-for-education-loan-full-list-86220.html</guid>
		            
			

    	<description><![CDATA[Lowest Interest Rates For Education Loan | வங்கிகள் பல்வேறு வகையான கடன் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் அவற்றின் பட்டியல் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/education-loan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!" /></figure>இந்தியாவில் உள்ள வங்கிகள் பொதுமக்களின் பணத்தை பாதுகாப்பாக நிர்வகிப்பது மட்டுமன்றி, கடன் உதவிகளையும் வழங்குகிறது. தனிநபர் கடன் <strong>(Personal Loan)</strong>, வீட்டு கடன்<strong> (Home Loan)</strong>, தொழில் கடன் <strong>(Business Loan)</strong> உள்ளிட்ட பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் எந்த எந்த வங்கிகளில் கல்வி கடனுக்கு குறைந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கல்வி கடனுக்கு குறைவான வட்டி வழங்கும் வங்கிகள்</h3>
இந்தியாவில் உள்ள வங்கிகள் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு கடன் வழங்குகின்றன. மாணவர்கள் படிப்பை முடித்தபிறகு அந்த கடனை திருப்பி செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், எந்த எந்த வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.
<h3>பொதுத்துறை வங்கிகள்</h3>
<div class="table-responsive">
<table class="css-g3m580" style="width: 81.1347%; border-collapse: collapse; border-style: solid; border-color: #030000; height: 144px;" border="1">
<tbody>
<tr style="height: 24px;">
<td style="width: 14.5909%; text-align: center; height: 24px;"><strong>வ.எண் </strong></td>
<td style="width: 41.5557%; text-align: center; height: 24px;"><strong>வங்கிகள் </strong></td>
<td style="width: 24.4945%; text-align: center; height: 24px;"><strong>வட்டி விகிதம் </strong></td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.5909%; text-align: center; height: 24px;">1</td>
<td style="width: 41.5557%; text-align: center; height: 24px;">ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா</td>
<td style="width: 24.4945%; text-align: center; height: 24px;">8.90 சதவீதம்</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.5909%; text-align: center; height: 24px;">2</td>
<td style="width: 41.5557%; text-align: center; height: 24px;">பஞ்சாப் நேஷனல் வங்கி</td>
<td style="width: 24.4945%; text-align: center; height: 24px;">8.10 சதவீதம்</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.5909%; text-align: center; height: 24px;">3</td>
<td style="width: 41.5557%; text-align: center; height: 24px;">கனரா பேங்க்</td>
<td style="width: 24.4945%; text-align: center; height: 24px;">9.25 சதவீதம்</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.5909%; text-align: center; height: 24px;">4</td>
<td style="width: 41.5557%; text-align: center; height: 24px;">யூனியன் பேங்க்</td>
<td style="width: 24.4945%; text-align: center; height: 24px;">9.25 சதவீதம்</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.5909%; text-align: center; height: 24px;">5</td>
<td style="width: 41.5557%; text-align: center; height: 24px;">பேங்க் ஆஃப் பரோடா</td>
<td style="width: 24.4945%; text-align: center; height: 24px;">10.25 சதவீதம்</td>
</tr>
</tbody>
</table>
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பொதுத்துறை வங்கிகள் கல்வி கடனுக்கு குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/pm-kisan-how-to-check-for-the-23rd-installment-credited-or-not-86012.html">பிஎம் கிசான் 23வது தவணை.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?</a></p>

<h3>தனியார் துறை வங்கிகள்</h3>
<div class="table-responsive">
<table class="css-g3m580" style="width: 81.8622%; border-collapse: collapse; border-style: solid; border-color: #050101; height: 144px;" border="1">
<tbody>
<tr style="height: 24px;">
<td style="width: 14.7118%; text-align: center; height: 24px;"><strong>வ.எண் </strong></td>
<td style="width: 42.0394%; text-align: center; height: 24px;"><strong>வங்கிகள் </strong></td>
<td style="width: 24.7987%; text-align: center; height: 24px;"><strong>வட்டி விகிதம் </strong></td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.7118%; text-align: center; height: 24px;">1</td>
<td style="width: 42.0394%; text-align: center; height: 24px;">ஐசிஐசிஐ வங்கி</td>
<td style="width: 24.7987%; text-align: center; height: 24px;">9 சதவீதம்</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.7118%; text-align: center; height: 24px;">2</td>
<td style="width: 42.0394%; text-align: center; height: 24px;">ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி</td>
<td style="width: 24.7987%; text-align: center; height: 24px;">9.50 சதவீதம்</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.7118%; text-align: center; height: 24px;">3</td>
<td style="width: 42.0394%; text-align: center; height: 24px;">ஐடிபிஐ வங்கி</td>
<td style="width: 24.7987%; text-align: center; height: 24px;">9.90 சதவீதம்</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.7118%; text-align: center; height: 24px;">4</td>
<td style="width: 42.0394%; text-align: center; height: 24px;">ஆக்சிஸ் பேங்க்</td>
<td style="width: 24.7987%; text-align: center; height: 24px;">10.81 சதவீதம்</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 14.7118%; text-align: center; height: 24px;">5</td>
<td style="width: 42.0394%; text-align: center; height: 24px;">எச்டிஎஃப்சி வங்கி</td>
<td style="width: 24.7987%; text-align: center; height: 24px;">12.50 சதவீதம்</td>
</tr>
</tbody>
</table>
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த தனியார் வங்கிகள் கல்வி கடனுக்கு குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/farmers-can-get-up-to-3-lakh-rupees-loan-without-any-wager-in-kisan-credit-card-scheme-85987.html">வெறும் 4% வட்டி.. பிணையம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன்.. விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்!</a>
<h3>குறைந்த வட்டி கடனை தேர்வு செய்வது எப்படி?</h3>
அதிக வட்டியில் கடனை வாங்கும்போது அதிக தொகையை திருப்பி செலுத்த வேண்டும். இதுவே குறைந்த வட்டியில் கடன் வாங்கும்போது மிக விரைவாக கடனை அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

</div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?.. வீட்டில் இருந்தே சுலபமாக செய்யலாம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/you-can-easily-apply-for-pvc-aadhaar-card-by-sitting-at-home-step-by-step-guide-86193.html</link>	
		<pubDate>Sun, 21 Jun 2026 17:04:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/you-can-easily-apply-for-pvc-aadhaar-card-by-sitting-at-home-step-by-step-guide-86193.html</guid>
		            
			

    	<description><![CDATA[Apply For PVC Aadhaar Card | இந்திய குடிமக்களுக்கு ஆதார் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் இல்லை என்றால் பல வேலைகளை செய்து முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்தே பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/pvc-aadhaar-card.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?.. வீட்டில் இருந்தே சுலபமாக செய்யலாம்!" /></figure>இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு <strong>(Aadhaar Card)</strong>. ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், வங்கியில் கடன் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. சில இடங்களுக்கு செல்லும்போது ஒருவர் இந்திய குடிமகன் தானா என்பதை சோதிக்கவும், 18 வயதை தாண்டியர் தானா என்பதை சோதிக்கவும் ஆதார் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு பல இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய முக்கிய ஆவணமாக அதார் கார்டு எளிதில் கிழிந்துவிடாமல் இருக்க தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் <strong>(UIDAI - Unique Identification Authority Of India)</strong> பிவிசி ஆதார் கார்டுகளை<strong> (PVC Aadhaar Card)</strong> அறிமுகம் செய்தது.

இந்த வகை ஆதார் கார்டுகள் ஏடிஎம் கார்டுகளை போல உறுதியானதாக இருக்கும். இவற்றை பல வருடங்கள் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் பயன்படுத்தலாம். இந்த நிலையில், பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?</h3>
<ol>
 	<li>இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.</li>
 	<li>அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ஆதார் சர்வீஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.</li>
 	<li>அதில் உங்களது ஆதார் எண் மற்றும் அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவிட்டு அவற்றுடன் கேப்ட்சாவையும் பதிவிட வேண்டும்.</li>
 	<li>தற்போது ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபியை உள்ளிட வேண்டும்.</li>
 	<li>பிறகு உங்களிடம் எது உள்ளதோ கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் உள்ளிட்ட ஏதேனும் ஒரு டிஜிட்டல் கட்டண முறையை தேர்வு செய்ய வேண்டும். பிறகு பிவிசி ஆதார் கார்டு விண்ணப்பிப்பதற்காக கட்டணம் ரூ.75 செலுத்த வேண்டும்.</li>
</ol>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/farmers-can-get-up-to-3-lakh-rupees-loan-without-any-wager-in-kisan-credit-card-scheme-85987.html"> வெறும் 4% வட்டி.. பிணையம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன்.. விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்!</a></p>
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி மிக எளிதாக நீங்கள் பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 5 முதல் 7 நாட்களுக்குள்ளாக உங்களது வீடு தேடி பிவிசி ஆதார் கார்டு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்?.. மத்திய அமைச்சர் பதில்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/when-will-petrol-diesel-price-reduce-minister-hardeep-singh-puri-answered-86175.html</link>	
		<pubDate>Sun, 21 Jun 2026 15:13:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/when-will-petrol-diesel-price-reduce-minister-hardeep-singh-puri-answered-86175.html</guid>
		            
			

    	<description><![CDATA[When Will Petrol, Diesel Price Reduce | ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/petrol-diesel-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்?.. மத்திய அமைச்சர் பதில்!" /></figure>ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு<strong> (Iran and America)</strong> இடையே நிலவி வந்த போரில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின், பெட்ரோல் மற்றும் டீசல்<strong> (Petrol and Diesel)</strong> தேவைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து பலமுறை உயர்த்தப்பட்டது. அதன் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களது அன்றாட செலவுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலையில் உள்ளனர். இதன் காரணமாக எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என அவர்கள அவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/farmers-will-get-2000-rupees-on-june-20-2026-as-pm-kisan-23rd-installment-85867.html">பிஎம் கிசான் 23வது தவணை.. நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவுள்ள ரூ.2,000!</a>
<h3>மே 15 முதல் விலை உயர்த்த தொடங்க எண்ணெய் நிறுவனங்கள்</h3>
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் - அமெரிக்கா இடையேன்  பிப்ரவரி 28, 2026 முதல் சண்டை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கடும் தட்டுப்பாடு நிலவியபோதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமலே வைத்திருந்தன. இந்த நிலையில் தான், மே 15, 2026 முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/make-sure-these-things-before-filing-itr-important-tips-85973.html">வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!</a>
<h3>பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் - அமைச்சர் பதில்</h3>
பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, தற்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. என்வே, இப்போது அவர்கள் அவற்றை தான் சுத்திகரிப்பு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் சரிவில் உள்ள நிலையில், இந்த குறைந்த விலையிலான கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு மையங்களை வந்தடையும்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : ஜூன் இறுதிக்குள் தங்கம் விலை மேலும் குறையுமா?.. நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/will-gold-price-continue-to-reduce-by-june-2026-end-photo-gallery-86162.html</link>	
		<pubDate>Sun, 21 Jun 2026 14:40:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/will-gold-price-continue-to-reduce-by-june-2026-end-photo-gallery-86162.html</guid>
		            
			    	<description><![CDATA[Will Gold Price Continue To Reduce | ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் தங்கம் விலை குறையுமா?, தங்கம் விலை நிலவரம் என்னவாக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/will-gold-price-continue-to-reduce-by-june-2026-end-photo-gallery-86162.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (1)" /></a></dt><p>ஈரான் போரால் கடந்த சில நாட்களாக தங்கம் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான், ஜூன் இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/will-gold-price-continue-to-reduce-by-june-2026-end-photo-gallery-86162.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-10.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (10)" /></a></dt><p>தமிழ்நாட்டில் ஜூன் 01, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, ஒரு சவரன் ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தான் தங்கம் படிப்படியாக விலை குறைய தொடங்கியது. குறிப்பாக, ஜூன் 11, 2026 அன்று குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.13,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/will-gold-price-continue-to-reduce-by-june-2026-end-photo-gallery-86162.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-11.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (11)" /></a></dt><p>அதாவது ஜூன் 11, 2026 அன்று தங்கம் கிராமுக்கு ரூ.1,000 சரிவை சந்தித்த நிலையில், சவரனுக்கு ரூ.8,000 சரிவை சந்தித்தது. இதன் காரணமாக தான் ஜூன் மாதத்திலேயே தங்கம் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நாளாக அது உள்ளது. அதுவரை தங்கம் ரூ.14,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அன்றைய தினம் ரூ.13,000-க்கு வந்தது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/will-gold-price-continue-to-reduce-by-june-2026-end-photo-gallery-86162.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-12.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (12)" /></a></dt><p>இந்த நிலையில் தான், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, தங்கம் விலை லேசான உயர்வை சந்தித்தது. ஆனால், ஜூன் 15, 2026-க்கு பிறகு தங்கம் விலை மீண்டும் குறைய தொடங்கியது. அதன் காரணமாக, இன்று (ஜூன் 21, 2026) தங்கம் ஒரு கிராம் ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/will-gold-price-continue-to-reduce-by-june-2026-end-photo-gallery-86162.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-13.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (13)" /></a></dt><p>ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை 6.21 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, 10 நாட்களுக்கு ஒருமுறை என பிரித்து பார்க்கும் பட்சத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை தலா 3 சதவீதம் தங்கம் சரிவை சந்தித்துள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் அடுத்த 10 நாட்களில் அதாவது ஜூன் மாதம் முடிவடைவதற்குள்ளாக தங்கள் மேலும் 3 சதவீதம் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>உங்கள் பான் கார்டு மோசடிக்கு உள்ளாகலாம்.. இதனை கட்டாயம் செய்யுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/your-pan-card-can-be-misused-know-how-to-check-it-86030.html</link>	
		<pubDate>Sat, 20 Jun 2026 20:06:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/your-pan-card-can-be-misused-know-how-to-check-it-86030.html</guid>
		            
			

    	<description><![CDATA[Your PAN Card Can Be Misused | இந்தியாவில் குடிமக்கள் சில ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அத்தகைய ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு. இத்தகைய முக்கியமான பான் கார்டை பயன்படுத்தி மோசடிகள் நடைபெறும் ஆபத்து உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/pan-card-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்கள் பான் கார்டு மோசடிக்கு உள்ளாகலாம்.. இதனை கட்டாயம் செய்யுங்கள்!" /></figure>இந்திய குடிமக்கள் ஆதார் கார்டு<strong> (Aadhaar Card)</strong>, வாக்காளர் அடையாள அட்டை <strong>(Voter ID)</strong> உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அத்தகைய ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு <strong>(PAN Card)</strong>. வருமான வரித்துறை ஒருவரின் பண பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் முக்கிய அம்சமாக பான் கார்டு உள்ளது. இத்தகைய மிக முக்கிய ஆவணமாக உள்ள பான் கார்டை பயன்படுத்தி மோசடிகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. அதாவது, ஒருவரின் பான் கார்டை பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அது குறித்து கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
<h3>பான் கார்டு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?</h3>
புதிய வங்கி கணக்கு தொடங்குவது, அதிக அளவிலான பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது என சில முக்கிய இடங்களில் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், உங்கள் பான் கார்டை பயன்படுத்தி நீங்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவில்லை என்றாலும், உங்களது பான் கார்டை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/farmers-will-get-2000-rupees-on-june-20-2026-as-pm-kisan-23rd-installment-85867.html">பிஎம் கிசான் 23வது தவணை.. நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவுள்ள ரூ.2,000!</a>
<h3>போலி பண பரிவர்த்தனைகளை கண்டறிவது எப்படி?</h3>
உங்களது பான் கார்டை பயன்படுத்தி போலி அல்லது மோசடி பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா என்பதை கண்டறிய கிரெடிட் ரிப்போர்டை சரிப்பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கிரெடிட் ரிப்போர்டில் பான் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்ய சிபில் ரிப்போர்டை சரிப்பார்க்கலாம். அந்த ரிப்போர்டில் உங்கள் பெயரில் நடைபெற்ற அனைத்து பண பரிவர்த்தனைகளும் இடம்பெற்றிருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html">வெறும் ரூ.75-க்கு பிவிசி ஆதார் கார்டு.. வீட்டில் இருந்தே சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்!</a>

அந்த கிரெடிட் ரிப்போர்டை பார்க்கும்போது நீங்கள் செய்த பரிவர்த்தனை எது, நீங்கள் செய்யாத பரிவர்த்தனை எது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம். அப்போது நீங்கள் அல்லாமல் வேறு யாரேனும் பண பரிவர்த்தனை மேற்கொண்டு இருந்தால், உங்கள் பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். அத்தகைய நடவடிக்கைகளை கண்டறிந்தால் உடனடியான வருமான வரித்துறையில் புகார் அளிக்கலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிஎம் கிசான் 23வது தவணை.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/pm-kisan-how-to-check-for-the-23rd-installment-credited-or-not-86012.html</link>	
		<pubDate>Sat, 20 Jun 2026 17:36:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/pm-kisan-how-to-check-for-the-23rd-installment-credited-or-not-86012.html</guid>
		            
			

    	<description><![CDATA[PM Kisan 23rd Installment | இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் பிஎம் கிசான். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு மூன்று முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 23வது தவணை வரவு வைக்கப்பட்டதா என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/pm-kisan-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிஎம் கிசான் 23வது தவணை.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?" /></figure>இந்திய விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் ஒரு அட்டகாசமான திட்டமாக பிஎம் கிசான் யோஜனா <strong>(PM Kisan Yojana)</strong> உள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணம் மொத்தமாக வரவு வைக்கப்படாமல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும். அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
<h3>பிஎம் கிசான் 23வது தவணை</h3>
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் 22 தவணைகளாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், 23வது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக்கொண்டு இருந்தனர். அந்த வகையில், இன்று (ஜூன் 20, 2026) மதியம் 3.45 மணிக்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் பிஎம் கிசான் 23வது தவணை வரவு வைக்கப்படும் என பிஎம் கிசான் இணையதளத்தில் கூறப்பட்டு இருந்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html">வெறும் ரூ.75-க்கு பிவிசி ஆதார் கார்டு.. வீட்டில் இருந்தே சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்!</a>

இந்த நிலையில், விவசாயிகளின் வங்கி கணக்கில் 23வது தவணை பணம் வரவு வைக்கப்பட்டதா, அதனை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>23வது தவணை பிஎம் கிசான் பணம் வரவு வைக்கப்பட்டதா?</h3>
<ol>
 	<li>முதலில் பிஎம் கிசானின் <a href="https://pmkisan.gov.in/">pmkisan.gov.in</a> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.</li>
 	<li>அதில் கொடுக்கப்பட்டுள்ள<strong> Farmers Corner</strong> என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, <strong>Know Your Status</strong> என்பதை கிளிக் செய்ய வேண்டும்.</li>
 	<li>அங்கு பதிவு எண் மற்றும் செக்யூரிட்டி கோடு உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும்.</li>
 	<li>இதனை செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.</li>
 	<li>அந்த ஓடிபியை பதிவு செய்து பிஎம் கிசான் பணம் வந்துவிட்டதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.</li>
</ol>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-3040-rupees-per-sovereign-in-chennai-today-will-price-continue-to-drop-85792.html">Gold Price : ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?</a></p>
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி உங்களுக்கு பிஎம் கிசான் 23வது தவணை பணம் விடுவிக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெறும் 4% வட்டி.. பிணையம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன்.. விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/farmers-can-get-up-to-3-lakh-rupees-loan-without-any-wager-in-kisan-credit-card-scheme-85987.html</link>	
		<pubDate>Sat, 20 Jun 2026 15:40:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/farmers-can-get-up-to-3-lakh-rupees-loan-without-any-wager-in-kisan-credit-card-scheme-85987.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kisan Credit Card Scheme | மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் கிரெடிட் கார்டு. இந்த திட்டத்தில் விவசாயிகள் பிணையம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/farmers-scheme.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெறும் 4% வட்டி.. பிணையம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன்.. விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்!" /></figure>இந்தியாவின் முக்கிய தூணாக உள்ள விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக ஏழை, எளிய விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிஎம் கிசான் யோஜனா <strong>(PM Kisan Yojana)</strong> திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறனர். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் கிரெடிட் கார்டு <strong>(Kisan Credit Card).</strong> வேளாண் உற்பத்திக்கு தாராளமாக பணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது, இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், விவசாயிகளுக்கான வரப்பிரசாதமாக உள்ள இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விவசாயிகளுக்கான அட்டகாசமான கிசான் கிரெட் கார்டு திட்டம்</h3>
இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது இந்த திட்டத்தில் ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு பிணையம் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, கடனை பெற்ற விவசாயி அதனை முறையாக திருப்பி செலுத்தும் பட்சத்தில் வட்டி விகிதம் வெறும் 4 சதவீதமாக குறைக்கப்படும். பயிர் சாகுபடி, பால் பண்ணை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்யும் விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று பயனடையலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-3040-rupees-per-sovereign-in-chennai-today-will-price-continue-to-drop-85792.html">Gold Price : ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?</a>
<h3>7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறையும் வட்டி</h3>
இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், கடனை முறையாகவும், உரிய நேரத்திலும் திருப்பி செலுத்தும் பட்சத்தில் அரசு வட்டி மானியம் வழங்கும். இதன் மூலம் 7 சதவீத வட்டிக்கு நீங்கள் வாங்கும் கடன் வெறும் 4 சதவீதமாக குறையும். மற்ற கடன்களுக்கு பிணையமாக ஏதேனும் ஒன்றின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் பிணையம் எதுவுமின்றி ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/make-sure-these-things-before-filing-itr-important-tips-85973.html</link>	
		<pubDate>Sat, 20 Jun 2026 15:05:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/make-sure-these-things-before-filing-itr-important-tips-85973.html</guid>
		            
			

    	<description><![CDATA[Make Sure These Things Before Filing ITR | வருமான வரி தாக்கல் செய்வதற்கான போர்டல்களை இந்திய வருமான வரித்துறை திறந்துள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/income-tax-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!" /></figure>இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி <strong>(Income Tax)</strong> செலுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது. அந்த வகையில், 2026 - 2027 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் தொடங்கியுள்ளது. அதற்காக இந்திய வருமான வரித்துறை போர்டல்களை திறந்துள்ளது. எனவே, வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் அதற்கான பணிகளை தொடங்கலாம். அனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த ஒரு விஷயத்தை செய்ய மறக்க கூடாது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வருமான வரி தாக்கல் - போர்டல்களை திறந்த வருமான வரித்துறை</h3>
இந்தியாவில் ஒவ்வொரு நிதியாண்டும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியாமாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஃபார்ம் 16 வழங்கிவிட்டன. இதனை தொடர்ந்து வருமான வரித்துறையும், ஐடிஆர் - 1, ஐடிஆர் - 2 மற்றும் ஐடிஆர் - 4 தாக்கல் செய்வதற்கான போர்டல்களை திறந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/epfo-server-would-be-down-for-three-days-says-source-85780.html">EPFO சர்வர்கள் மூன்று நாட்கள் செயல்படாதா?.. வெளியான முக்கிய தகவல்!</a>
<h3>ஃபார்ம் 16-ஐ ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அவசியம்</h3>
வருமான வரி தாக்கல் செய்யும்போது எந்தவித தவறும் நடக்காமல் இருக்க ஃபார்ம் 16-ஐ வருடாந்திர தகவல் அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் என கூறப்பட்டுகிறது. அதாவது, ஒருவர் தான் செய்த பெரிய அளவிலான பண பரிவர்த்தனை மற்றும் சேமிப்பு கணக்கு வட்டி விவரங்களை வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் <strong>(TIS - Taxpayer Information Summary) </strong>மூலம் எளிதாக தெரிந்துக்கொள்ள முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/users-needs-to-complete-ekyc-for-gas-cylinder-to-get-subsidy-within-june-30-2026-85716.html">கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஜூன் 30-க்குள் இதனை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் சிக்கல்!</a>

இதேபோல பிடித்தம் செய்யப்பட்ட வரி அனைத்தும் கணக்கில் சரியாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை ஃபார்ம் 26AS மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை இந்த டிஜிட்டல் அறிக்கைகளில் ஏதேனும் முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில், நோட்டீஸ் வருவதற்கோ அல்லது நீஃபண்ட் கிடைப்பதற்கோ தாமதம் ஏற்படும். எனவே வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த சில விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சற்று அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் இதோ..</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-hike-gold-price-hiked-after-drstic-drop-in-chennai-silver-price-remains-unchanged-85928.html</link>	
		<pubDate>Sat, 20 Jun 2026 11:00:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-hike-gold-price-hiked-after-drstic-drop-in-chennai-silver-price-remains-unchanged-85928.html</guid>
		            
			

    	<description><![CDATA[தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை, இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 அதிகரித்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலையும் உயர்வுடன் காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.14,836-க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,18,688-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-5th-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சற்று அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் இதோ.." /></figure><p class="isSelectedEnd"><strong>ஜூன் 20, 2026:</strong> ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல், புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை தினசரி அடிப்படையில் மாற்றமடைந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து விற்பனை செய்யப்படுவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>

<h3>மீண்டும் விலை உயர்ந்த தங்கம்:</h3>
<p class="isSelectedEnd">தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை, இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 அதிகரித்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>
மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-3040-rupees-per-sovereign-in-chennai-today-will-price-continue-to-drop-85792.html">ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?</a>
<p class="isSelectedEnd">24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலையும் உயர்வுடன் காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.14,836-க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,18,688-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டு நோக்கத்திற்காக தங்கம் வாங்குபவர்கள் மற்றும் தங்க நாணயங்கள் வாங்குபவர்கள் இந்த விலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p>

<h3>வெள்ளி விலை நிலவரம் என்ன?</h3>
<p class="isSelectedEnd">வெள்ளி விலையைப் பொறுத்தவரை, எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொழில்துறை பயன்பாடு மற்றும் முதலீட்டு தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளி விலையும் எதிர்காலத்தில் மாற்றங்களை சந்திக்கக்கூடும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p class="isSelectedEnd">இந்திய தங்கச் சந்தையில் தற்போது மந்தமான வர்த்தக சூழல் நிலவி வருகிறது. ஆபரணத் தங்கத்திற்கான தேவை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது, தங்க இறக்குமதி குறைந்திருப்பது, தங்க இ.டி.எஃப். (ETF) முதலீடுகளில் லாபம் ஈட்டும் நோக்கில் முதலீட்டாளர்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. மேலும், உலகளாவிய பொருளாதார நிலை, வட்டி விகித முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை அணுகுமுறையும் தங்க விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p>
&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிஎம் கிசான் 23வது தவணை.. நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவுள்ள ரூ.2,000!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/farmers-will-get-2000-rupees-on-june-20-2026-as-pm-kisan-23rd-installment-85867.html</link>	
		<pubDate>Fri, 19 Jun 2026 20:52:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/farmers-will-get-2000-rupees-on-june-20-2026-as-pm-kisan-23rd-installment-85867.html</guid>
		            
			

    	<description><![CDATA[PM Kisan 23rd Installment | பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் இதுவரை 22 தவணைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 23வது தவணை பணம் நாளை வரவு வைக்கப்பட உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/pm-kisan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிஎம் கிசான் 23வது தவணை.. நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவுள்ள ரூ.2,000!" /></figure>இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் பிஎம் கிசான் யோஜனா<strong> (PM Kisan Yojana)</strong>. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்த பணம் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இதுவரை 22 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 23வது தவணை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தான், பிஎம் கிசான் 23வது தவணையை நாளை (ஜூன் 20, 2026) விவசாயிகளின் வங்கி கணக்கில் பிரதமர் மோடி வரவு வைக்க உள்ளார்.
<h3>விவசாயிகளின் வங்கி கணக்கில் நாளை வரவுள்ள ரூ.2,000</h3>
சிறு, குரு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிஎம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு 22 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை 23வது தவணை பணம் வரவு வைக்கப்பட உள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தாரகேஸ்வர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பணத்தை வரவு வைக்க உள்ளார். அதாவது, சுமார் 9.44 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்பட உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/users-needs-to-complete-ekyc-for-gas-cylinder-to-get-subsidy-within-june-30-2026-85716.html">கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஜூன் 30-க்குள் இதனை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் சிக்கல்!</a>
<h3>ரூ.18,880 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது</h3>
இந்த 23வது தவணையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.18,880 கோடி வரவு வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019, பிப்ரவரி 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதுமுதல் இந்த திட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.4.46 லட்சம் கோடி பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/how-much-a-person-can-invest-if-he-or-she-earns-50000-rupees-every-month-85606.html">மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும்?</a>

இந்த 23வது தவணையை பெற விவசாயிகள் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெறும் ரூ.75-க்கு பிவிசி ஆதார் கார்டு.. வீட்டில் இருந்தே சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html</link>	
		<pubDate>Fri, 19 Jun 2026 19:25:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html</guid>
		            
			    	<description><![CDATA[Get PVC Aadhaar Card With Just 75 Rupees | இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. பெரும்பாலான மக்கள் எளிதில் கிழிந்துவிடும் பேப்பர் ஆதார் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், எளிதில் கிழியாத பிவிசி ஆதார் கார்டு பெறுவது எப்படி என பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/aadhaar-7.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Aadhaar (7)" /></a></dt><p>இந்தியாவில் பொதுமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது தான் ஆதார் கார்டு. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டு பிரதானமாக உள்ளது. இத்தகைய மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/aadhaar-8.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Aadhaar (8)" /></a></dt><p>ஆதார் கார்டு எப்போதும் கையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. பெரும்பாலான மக்கள் வழக்கமான பேப்பரால் செய்யப்பட்ட ஆதார் கார்டுகளை தான் பயன்படுத்துகின்றனர். இந்த ஆதார் கார்டுகள் எளிதில் கிழிந்துவிடும். எனவே அவற்றை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியாது என்பதற்காக தான் இந்திய தனித்துவ அடையாள ஆணைய ஒரு அசத்தல் அம்சத்தை வழங்குகிறது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/aadhaar-9.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Aadhaar (9)" /></a></dt><p>அதாவது, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பிவிசி ஆதார் கார்டுகளை வழங்குகிறது. இந்த ஆதார் கார்டுகள் சாதாரனமாக காகிதத்தால் செய்யப்பட்டவை அல்ல. இந்த வகை ஆதார் கார்டு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போலவே எளிதில் சேதமாகாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/aadhaar-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Aadhaar (6)" /></a></dt><p>இந்த பிவிசி ஆதார் கார்டை ஏடிஎம் கார்டை போல எப்போதுமே கையில் வைத்துக்கொள்ளலாம். இந்த வகை ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே விண்ணப்பித்து வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/get-pvc-aadhaar-card-with-just-75-rupees-by-applying-through-uidai-photo-gallery-85854.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/aadhaar-10.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Aadhaar (10)" /></a></dt><p>இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று ரூ.75 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் பட்சத்தில், 15 நாட்களுக்குள்ளாக மிகவும் பாதுகாப்பான, எளிதில் கிழியத இந்த பிவிசி ஆதார் கார்டு உங்களது வீடு தேடி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>Gold Price : ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-3040-rupees-per-sovereign-in-chennai-today-will-price-continue-to-drop-85792.html</link>	
		<pubDate>Fri, 19 Jun 2026 15:28:08 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-reduced-3040-rupees-per-sovereign-in-chennai-today-will-price-continue-to-drop-85792.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Reduced 3040 Rupees Per Sovereign | ஈரான் போர் காரணமாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று 22 காரட் தங்கம் ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-price-9.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?" /></figure>ஈரான் போர் <strong>(Iran War)</strong> காரணமாக தங்கம் விலை<strong> (Gold Price)</strong> நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த மூன்று மாதங்களுக்கு மேலான போர் முடிவுக்கு வந்துள்ளது. அதாவது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இன்று (ஜூன் 19, 2026) சுவிட்சர்லாந்தில் வைத்து அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகிறது. தங்கம் விலை கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தி வந்த ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

அதாவது, இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் ரூ.3,040 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன, இனி வரும் நாட்களில் தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஓரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்</h3>
ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ள இந்த சூழலில் தங்கம் கடும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570-க்கும், சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தங்கம் விலை இன்று ஒரே நாளில் மட்டும் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், தற்போது தங்கம் வாங்குவது சரியா, தவறா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-we-buy-with-1-lakh-rupees-photo-gallery-85599.html">தற்போதைய சூழலில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?</a>
<h3>இனி வரும் காலங்களில் தங்கம் விலை என்னவாக இருக்கும்?</h3>
தற்போதைய சூழலில் இந்திய தங்க சந்தையில் மந்தமான சூழல் நிலவி வருகிறது. அதாவது, ஆபரண தங்கத்திற்கான தேவை குறைந்து, இறக்குமதி சரிவு மற்றும் ஈடிஎஃப் முதலீடுகளில் லாபம் ஈட்டுதல் உள்ளிட்டவற்றின் காரணமாக இத்தகைய சூழல் நிலவுகிறது. ஆனால், தங்கத்தின் இந்த சூழல் விரைவில் மாற உள்ளது. காரணம், முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக 2026, ஆகஸ்ட் மாதம் முதல் தங்கம் விலை மீண்டும் சூடுபிடிக்கும் என உலக தங்க கவுன்சில் <strong>(WGC - World Gold Council)</strong> கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO சர்வர்கள் மூன்று நாட்கள் செயல்படாதா?.. வெளியான முக்கிய தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/epfo-server-would-be-down-for-three-days-says-source-85780.html</link>	
		<pubDate>Fri, 19 Jun 2026 14:39:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/epfo-server-would-be-down-for-three-days-says-source-85780.html</guid>
		            
			

    	<description><![CDATA[EPFO Server Would Be Down For Three Days | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது புதிய சேவைகளை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ இணையதளம் மூன்று நாட்கள் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/epfo-20.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="EPFO சர்வர்கள் மூன்று நாட்கள் செயல்படாதா?.. வெளியான முக்கிய தகவல்!" /></figure>இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக வரப்பிரசாதமாக உள்ள திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் <strong>(EPFO - Employee Provident Fund Organization)</strong>. இந்த திட்டத்தில், ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் விதமாக இபிஎஃப்ஓ இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தான், பெரும்பாலான மக்கள் இதனை தங்களது தனிப்பட்ட மற்றும் முதன்மை சேமிப்பாக வைத்துள்ளனர். இவ்வாறு மிக முக்கிய அம்சமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
<h3>மூன்று நாட்களுக்கு இபிஎஃப்ஓ சர்சர் செயல்படாது</h3>
முன்பெல்லாம் இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், விண்ணப்பித்து வங்கி கணக்கிற்கு பணம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இது சற்று கால தாமதத்தை ஏற்படுத்தும் நிலையில், ஊழியர்கள் ஒருசில நிமிடங்களிலேயே பிஎஃப் பணத்தை எடுப்பதற்காக ஏற்பாடுகளை இபிஎஃப்ஓ மேற்கொண்டு வருகிறது. அதாவது, பிஎஃப் பணத்தை யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> அல்லது ஏடிஎம்<strong> (ATM - Automated Teller Machine)</strong> மூலம் ஒருசில நிமிடங்களில் எடுத்துக்கொள்ளும் அம்சம் தான் அது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-we-buy-with-1-lakh-rupees-photo-gallery-85599.html">தற்போதைய சூழலில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?</a>
<h3>சர்வர்களை மேம்படுத்தி வரும் இபிஎஃப்ஓ அமைப்பு</h3>
பிஎஃப் பணத்தை மிக விரைவாக எடுக்கக்கூடிய புதிய சேவையை நடைமுறைப்படுத்துவதற்காக இபிஎஃப்ஓ அமைப்பு சர்வர்களை மேம்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், இந்த பணிக்காக தொடர்ந்து மூன்று நாட்கள் பிஎஃப் சர்வர்கள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/flex-fuel-revolution-begins-with-e85-and-e100-fuels-85539.html">இந்தியாவில் E85, E100 எரிபொருள் – வாகனங்களின் விலை உயருமா? மைலேஜ் குறையுமா?</a>

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் எப்போது வேண்டுமானாலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இதன் காரணமாக ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு இபிஎஃப்ஓ இணையதளத்தை பயன்படுத்தி எந்த சேவையையும் செய்ய முடியாமல் போகும் நிலை உருவாகும். எனவே ஊழியர்கள் தங்களுக்கு ஏதேனும் சேவைகளை பெற வேண்டும் என்றால் முன்கூட்டியே முடித்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 3,040 குறைந்து விற்பனை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-rate-chennai-gold-rate-reduced-drastically-and-silver-price-drops-to-15-rupees-per-gram-85733.html</link>	
		<pubDate>Fri, 19 Jun 2026 10:26:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-rate-chennai-gold-rate-reduced-drastically-and-silver-price-drops-to-15-rupees-per-gram-85733.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதியான இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,570 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,08,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gold-11-ju-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 3,040 குறைந்து விற்பனை.." /></figure><p class="isSelectedEnd"><strong>ஜூன் 19, 2026:</strong> ஜூன் 19ஆம் தேதியான இன்று தங்கம் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 380 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கணிசமான சரிவை சந்தித்து, ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க திட்டமிட்டு இருந்த பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>
<p class="isSelectedEnd">நேற்றைய தினம் சற்று உயர்வைக் கண்ட தங்கம் விலை, இன்று அதிரடியாக சரிந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 3,040 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு நகை சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>

<h3>கடுமையாக சரிந்தட தங்கம் விலை:</h3>
<p class="isSelectedEnd">ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதியான இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,570 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,08,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p class="isSelectedEnd">அதேவேளையில், தூய தங்கமாக கருதப்படும் 24 கேரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 14,804 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,432 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குபவர்களும் இந்த விலை சரிவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.</p>
மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-we-buy-with-1-lakh-rupees-photo-gallery-85599.html"> தற்போதைய சூழலில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?</a>
<p class="isSelectedEnd">வெள்ளி விலையைப் பொருத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொழில்துறை பயன்பாடு மற்றும் முதலீட்டு தேவைகள் காரணமாக வெள்ளி விலையிலும் கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.</p>

<h3>ஏற்ற இறக்கத்தில் தங்கம் வெள்ளி விலை:</h3>
<p class="isSelectedEnd">ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன. இடையில் ஒரு சில நாட்களில் மட்டுமே விலை உயர்வைக் கண்டிருந்தாலும், பெரும்பாலான நாட்களில் விலை சரிவே பதிவாகியுள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக நகைகள் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் தற்போது சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p>
<p class="isSelectedEnd">சர்வதேச சந்தை நிலவரங்களும் தங்கம் விலை குறைவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கில் நீடித்து வந்த போர் பதற்றம் குறைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் சற்று குறைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p class="isSelectedEnd">மேலும், உலகளாவிய பொருளாதார சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகித கொள்கைகள் போன்ற பல்வேறு காரணிகளும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஜூன் 30-க்குள் இதனை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் சிக்கல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/users-needs-to-complete-ekyc-for-gas-cylinder-to-get-subsidy-within-june-30-2026-85716.html</link>	
		<pubDate>Thu, 18 Jun 2026 23:40:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/users-needs-to-complete-ekyc-for-gas-cylinder-to-get-subsidy-within-june-30-2026-85716.html</guid>
		            
			

    	<description><![CDATA[Subsidy For Gas Cylinders | இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கு மானியம் பெற சாதாரண மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கேஸ் சிலிண்டர்களை பெறும் நபர்கள் ஜூன் 30, 2026-க்குள் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்களால் தொடர்ந்து மானியம் பெற முடியாது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gas-cylinder-kyc.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஜூன் 30-க்குள் இதனை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் சிக்கல்!" /></figure>ஈரான் போர் <strong>(Iran War)</strong> காரணமாக கேஸ் சிலிண்டர் <strong>(Gas Cylinder)</strong> தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. வாடிக்கையாளர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது முதல் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கனவே பல கடுமையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், ஜூன் 30, 2026-க்குள் இந்த வேலையை செய்து முடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>எல்பிஜி சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் மானியம்</h3>
இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை வாங்குவதற்கு பொதுமக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதாவது, சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ரூ.25 மானியம் வழங்கப்படுகிறது. இதுவே, உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு சில திட்டங்கள் மூலம் இந்திய குடிமக்கள் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை பெற்று வரும் நிலையில், ஜூன் 30, 2026-க்குள் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/indian-railways-waiting-room-rules-explained-entry-time-and-stay-duration-85509.html">ரயில் நிலையங்களில் இலவச காத்திருப்பு அறைகள் – எவ்வளவு நேரம் தங்கலாம்?</a>
<h3> கேஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு</h3>
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகள் மற்றும் இதுவரை கேஒய்சி செய்து முடிக்காத பொது எல்பிஜி பயனர்கள் உடனடியாக கேஒய்சி <strong>(KYC - Know Your Customer)</strong> செய்து முடிக்க வேண்டும். ஏற்கனவே கேஒய்சி முடித்தவர்களுக்கு இது அவசியம் இல்லை. இந்தியன் ஆயில், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கேஸ் சிலிண்டர்களுக்கு தொடர்ந்து மானியம் பெற விரும்பும் பொது மற்றும் உஜ்வாலா பயணிகள் இந்த கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/how-much-a-person-can-invest-if-he-or-she-earns-50000-rupees-every-month-85606.html</link>	
		<pubDate>Thu, 18 Jun 2026 14:20:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/how-much-a-person-can-invest-if-he-or-she-earns-50000-rupees-every-month-85606.html</guid>
		            
			

    	<description><![CDATA[Investment Idea For 50000 Rupees Salary | பெரும்பாலான மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணம் மிக குறைவாக உள்ளது என நினைத்து சேமிப்பு அல்லது முதலீடு செய்யாமல் உள்ளனர். இந்த நிலையில், மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/saving.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும்?" /></figure>சேமிப்பு<strong> (Saving)</strong> மற்றும் முதலீடு <strong>(Investment)</strong> என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக மாறிவிட்டது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்றால் என்றால் சேமிப்பு மற்றும் முதலீடு தான் கைகொடுக்கும் சிறந்த அம்சங்களாக உள்ளன. எனவே சிறிய தொகையாக இருந்தாலும் அதனை சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் ஒருவர் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>மாதம் ரூ.50,000 சம்பளம் - எப்படி முதலீடு செய்யலாம்</h3>
மாத சம்பளம் வாங்கும் பலரும் தங்களது மாத செலவுகளுக்கே பணம் சரியாகிவிடுகிறது என்றும், இதனால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முடியவில்லை என்ற மனநிலையில் முதலீடு செய்ய சேமிப்பு செய்யாமல் உள்ளனர். ஆனால், பொருளாதார வல்லுநர்கள் கூறும் இந்த 50 : 30 : 20 விதியை பின்பற்றுவதன் மூலம் அனைவரும் தங்களது எதிர்காலத்துக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/post-office-rd-calculator-how-investing-rs-333-daily-can-help-you-build-rs-17-lakh-85501.html">அஞ்சலக ஆர்டி திட்டம் – ரூ. 300 செலுத்தி ரூ. 17 லட்சம் லாபம் பெறலாம் – எப்படி தெரியுமா?</a>
<h3>அடிப்படை தேவைகளுக்காக 50 சதவீதம்</h3>
மாத வருமானம் ரூ.50,000-ல் 50 சதவீதம் என்றால் ரூ.25,000 வரும். இந்த பணத்தை அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, வீட்டு வாடகை, மளிகை பொருட்கள், மாத தவணை, கட்டணங்கள் ஆகியவற்றுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
<h3>பொழுதுபோக்குக்காக 30 சதவீதம்</h3>
மனமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக 30 சதவீத பணத்தை அதற்காக செலவு செய்யலாம். வெளியே செல்வது, சாப்பிடுவது, திரைப்படம் பார்ப்பது, ஷாப்பிங் செலவது ஆகியவை ஆகும். மீதமுள்ள ரூ.25,000 பணத்தில் 30 சதவீதம் என்றால் 15,000 ஆகும். அதனை இந்த தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/how-to-register-your-new-business-online-from-gst-filing-to-legal-formalities-85483.html">புதிய தொழில் தொடங்கப் போகிறீர்களா? ஆன்லைனில் தொழிலை பதிவு செய்வது எப்படி?</a>
<h3>சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு 20 சதவீதம்</h3>
முன்பு கூறியதை போலவே சேமிப்பு மற்றும் முதலீடு மனிதர்களின் வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 20 சதவீத பணத்தை அதாவது, ரூ.10,000-த்தை சேமிப்பு அல்லது முதலீட்டுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்டபடி திட்டமிட்டு மாத சம்பளத்தை செலவு செய்யும் பட்சத்தில் பாதுகாப்பான எதிர்காலத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>