<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>சமீபத்திய வணிக செய்திகள் Business, Finance and Share Market News in Tamil,  வணிக தமிழ் செய்திகள்</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/business/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/business</link>
 <description>Business News in Tamil: வணிக தமிழ் செய்திகள்: Latest Business News and Breaking News live updates in Tamil Online at tv9tamilnews.com. Read இன்றைய முக்கிய தமிழ் தலைப்புச் செய்திகள், Top headline from Tamil Nadu, India and the world.</description><lastBuildDate>Wed, 19 Aug 2026 20:36:16 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பிரத்யேக மின்னணு வணிக தளம்.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-announces-in-assembly-creation-of-dedicated-e-commerce-platform-for-women-self-help-groups-99146.html</link>	
		<pubDate>Wed, 19 Aug 2026 20:36:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-announces-in-assembly-creation-of-dedicated-e-commerce-platform-for-women-self-help-groups-99146.html</guid>
		            
			

    	<description><![CDATA[E- commerce Platform For women Self Help Groups : தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருள்களை சர்வதேச சந்தையில் சந்தைப்படுத்துவதற்காக மின்னணு வணிக தளம் அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/cm-vijay-in-assembly.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பிரத்யேக மின்னணு வணிக தளம்.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!" /></figure>தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மீதான விவாதம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில், மேற்கண்ட துறைகள் சார்பில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை சர்வதேச சந்தைகளில் சந்தைப்படுத்தும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பிரத்தியேகமான மின்னணு வணிக தளம் அமைக்கப்படும். நிகழாண்டில் சிறப்பாக செயல்படும் ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் வீதம் ஊக்கத்தொகையாக வெற்றி பெண்கள் சுய உதவி குழு விருது வழங்கப்படும். திருநர்களின் நலனுக்காக ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் ஒரு விரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், ஊரக பகுதிகளில் உள்ள 6,800 சுய உதவி குழுக்களுக்கு ரூ.102 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
<h3>13 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 கோடி சுழல் நிதி</h3>
மேலும், ஊரக பகுதிகளில் உள்ள சுமார் 13,333 சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ. 20 கோடி வழங்கப்படும். அத்துடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 2 கொடி மதிப்பீட்டின் மூலப்பொருள்கள் ஆதரவு வங்கி அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் பள்ளிகள் மற்றும் ஆயிரம் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மனநலம் காத்தல், மது மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதற்காக ரூ. 60 லட்சம் கேடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/chief-minister-joseph-vijay-assigned-the-role-of-vice-chairman-in-the-south-indian-chief-ministers-conference-committee-99109.html" target="_blank" rel="noopener">தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு… அமித் ஷா தலைமையிலான குழுவில் சிஎம் விஜய்க்கு முக்கிய பொறுப்பு.. என்ன அது!</a>
<h3>தமிழகம் முழுவதும் 100 வேலை வாய்ப்பு முகாம்கள்</h3>
மேலும், சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் வேலை வாய்ப்புகளுடன் கூடிய திறன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். தமிழக முழுவதும் மாவட்ட அளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 100 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதே போல, கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் வயிற்றுநர்கள் பணியிடங்களை மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தில் இறப்பின் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
<h3>சென்னை அரசு அருங்காட்சியகம் டிஜிட்டல் மையம்</h3>
சிறந்த கலைஞர்கள் ஆசிரியர்களாக ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மாத ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது சென்னை அரசு அருங்காட்சியகம் முழுமையாக டிஜிட்டல் மையமாகப்பட்டு இணையதள அருங்காட்சியகமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/karnataka-forest-department-shooting-died-david-kumar-daughter-send-video-message-to-cm-joseph-vijay-99105.html" target="_blank" rel="noopener">“விஜய் மாமா” எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.. கர்நாடகாவில் சுட்டு கொல்லப்பட்டவரின் மகள் உருக்கமான வீடியோ!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>லலிதா ஜுவல்லரி ஐபிஓ ஏலமிடல் முடிவு.. பங்கு ஒதுக்கீடு மற்றும் பட்டியலிடல் விவரங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/lalithaa-jewellery-mart-ipo-closed-63x-subscription-40-gmp-and-listing-date-details-in-tamil-99147.html</link>	
		<pubDate>Wed, 19 Aug 2026 20:04:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/lalithaa-jewellery-mart-ipo-closed-63x-subscription-40-gmp-and-listing-date-details-in-tamil-99147.html</guid>
		            
			

    	<description><![CDATA[லலிதா ஜுவல்லரி மார்ட்டின் ஐபிஓ-விற்கு முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆகஸ்ட் 19 அன்று ஏலம் முடிவடைந்தபோது, ​​இந்த வெளியீடு 62.97 மடங்கு சந்தா பெறப்பட்டது. QIB பிரிவு 145.38 மடங்கும், NII பிரிவு 73.89 மடங்கும், மற்றும் சில்லறைப் பிரிவு 11.81 மடங்கும் சந்தா பெறப்பட்டன. கிரே மார்க்கெட்டில் இதன் GMP ரூ. 40 ஆகப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பங்குப் பட்டியல் ஆகஸ்ட் 24 அன்று நடைபெற வாய்ப்புள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/lalithaa.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="லலிதா ஜுவல்லரி ஐபிஓ ஏலமிடல் முடிவு.. பங்கு ஒதுக்கீடு மற்றும் பட்டியலிடல் விவரங்கள்!" /></figure>லலிதா ஜுவல்லரி மார்ட் லிமிடெட்டின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 17 அன்று தொடங்கிய மூன்று நாள் ஏல செயல்முறை ஆகஸ்ட் 19 அன்று முடிவடைந்தது. ஒரு பங்குக்கு ரூ.190 முதல் ரூ.201 வரை விலை நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,700 கோடி மதிப்பிலான இந்த வெளியீடு, கடைசி நாள் மாலை 5 மணிக்குள் 62.97 மடங்கு சந்தா பெறப்பட்டது.
<h3>எந்தப் பிரிவில் சந்தாக் கட்டணம் எவ்வளவு?</h3>
முதலீட்டாளர் பிரிவுகளைப் பார்க்கும்போது, ​​தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIB) பிரிவு 145.38 மடங்கு சந்தா பெறப்பட்டது. நிறுவனசாரா முதலீட்டாளர்கள் (NII) பிரிவு 73.89 மடங்கு சந்தா பெறப்பட்டது மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு 11.81 மடங்கு பதிவு செய்யப்பட்டது. மொத்த வெளியீட்டு மதிப்பு ரூ. 1,700 கோடி ஆகும், இதில் ரூ. 1,200 கோடி மதிப்பிலான புதிய வெளியீடும், ரூ. 500 கோடி மதிப்பிலான விற்பனைக்கான சலுகையும் அடங்கும்.
<h3>ரூ.40 கூடுதல்</h3>
இதற்கிடையில், லலிதா ஜுவல்லரி மார்ட் ஐபிஓ மீதான கிரே மார்க்கெட் மனநிலையும் சாதகமாக உள்ளது. சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 19 அன்று இப்பங்குகள் ரூ. 40 என்ற ஜிஎம்பி (கிரே மார்க்கெட் பிரீமியம்) விலையில் வர்த்தகமாகின்றன. ஐபிஓ-வின் அதிகபட்ச விலை ரூ. 201 ஆக இருக்கும் நிலையில், இந்த ஜிஎம்பி-யின் அடிப்படையில் இது சுமார் ரூ. 241-க்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள், வெளியீட்டு விலையுடன் ஒப்பிடும்போது இது சுமார் 20 சதவிகித பிரீமியம் ஆகும். இருப்பினும், ஜிஎம்பி என்பது அதிகாரப்பூர்வ பட்டியலிடல் விலைக்கு உத்தரவாதம் அல்ல.
<h3>தரகு நிறுவனங்களின் 'சந்தா' மதிப்பீடு</h3>
ஐபிஓ மதிப்பீடு மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகளை ஆய்வு செய்த பல தரகு நிறுவனங்கள், சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. நிறுவனத்தின் பிராண்ட், விரிவாக்கக்கூடிய வணிக மாதிரி, வருவாய் விகிதங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நகை சில்லறை விற்பனைத் துறையில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, சில நிறுவனங்கள் 'சந்தா செலுத்துங்கள்' (Subscribe) என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளன. இருப்பினும், முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் நிதிநிலை, மதிப்பீடு மற்றும் சந்தை அபாயங்களைத் தாங்களாகவே கருத்தில் கொள்ள வேண்டும்.
<h3>ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஒதுக்கீடு.. 24-ஆம் தேதி பட்டியலிடப்படுகிறதா?</h3>
திட்டமிடப்பட்ட கால அட்டவணைப்படி, லலிதா ஜுவல்லரி மார்ட் ஐபிஓ-விற்கான பங்கு ஒதுக்கீடு ஆகஸ்ட் 20 அன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குகளைத் திரும்ப அளிப்பதும், டிமேட் கணக்கில் வரவு வைப்பதும் ஆகஸ்ட் 21 அன்று செய்யப்படும். பங்குகள் ஆகஸ்ட் 24, 2026 அன்று பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஐபிஓ-வில் மிகப்பெரிய சந்தா மற்றும் ஜிஎம்பி இருந்தபோதிலும், பட்டியலிடல் மூலம் கிடைக்கும் லாபத்தை உறுதியானதாகக் கருதக்கூடாது. கிரே மார்க்கெட் பிரீமியம் மாறுபடுவதால், முதலீட்டாளர்கள் தங்களின் இடர் தாங்கும் திறனின் அடிப்படையில் முடிவெடுப்பது மிகவும் முக்கியம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>குறைந்த தங்கம் விலை &#8211; தங்கம் வாங்க சரியான தருணமா? இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-dips-slightly-in-chennai-check-todays-latest-rates-99023.html</link>	
		<pubDate>Wed, 19 Aug 2026 11:10:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-dips-slightly-in-chennai-check-todays-latest-rates-99023.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Update : கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை ஆகஸ்ட் 19, 2026 இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலையை மட்டும் வைத்து நகை வாங்க திட்டமிடுவது சரியாக இருக்காது. ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-rate-today-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="குறைந்த தங்கம் விலை &#8211; தங்கம் வாங்க சரியான தருணமா? இன்றைய நிலவரம் என்ன?" /></figure>தொடர்ந்து உயர்ந்து வந்த <a href="https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-17-august-2026-gold-increases-by-2000-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-98524.html" target="_blank" rel="noopener">தங்கம்</a> விலை ஆகஸ்ட் 19, 2026 இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனையாகிறது. ஈரான் போர், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஜூலை, 2026 மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அந்த வகையில் ஆகஸ்ட் 17, 2026 நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபய் அதிகரித்து ஒரு சவரன் 1,14,160 ரூபாய்க்கு விற்பனையானது.
<h3>குறைந்த தங்கம் விலை</h3>
அதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஆகஸ்ட் 18, 2026 நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 1,14,320 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் ஆகஸ்ட் 19, 2026 தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 85 குறைந்து, ஒரு கிராம் 14,205 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 5,000 ரூபாய் குறைந்து 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/business/important-rules-changed-in-epfo-know-what-are-those-98530.html"> EPFO : இபிஎஃப்ஓ விதிகளில் வந்த மேஜர் மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?</a></strong>

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும்  போர் சூழல்  மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு ஆகியவை இந்தியாவில் தங்கத்தின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு சரிவு ஆகியவையும் தங்கத்தின் விலை உயர்வு காரணமாகின்றன. உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் வரும் நாட்களில் தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/are-you-sending-documents-like-aadhaar-and-pan-through-whatsapp-know-this-issue-98676.html">வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a></strong>

தங்கத்தின் விலையை மட்டும் வைத்து நகை வாங்க திட்டமிடுவது சரியாக இருக்காது.  நகைகளை வாங்கும்போது, ​​செய்கூலி ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்களும் விலையில் கூடுதலாக சேரும்.  எனவே, ஒரு சவரன் தங்கத்தின் விலையும், நகைக்காகச் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையும் ஒன்றாக இருக்காது. ஒவ்வொரு நகைக்கும் நகைக்கடைக்காரர்கள் வெவ்வேறு அளவிலான செய்கூலியை வசூலிக்கிறார்கள். தற்போதைய சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால், அதிக அளவில் தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் தினசரி விலையைச் சரிபார்ப்பதுடன், பல்வேறு நகைக்கடைக்காரர்களின் செய்கூலி போன்ற இதர கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO : பிஎஃப் கணக்குகளில் கேட்பாரற்று கிடைக்கும் ரூ.8,000 கோடி.. இபிஎஃப்ஓ வெளியிட்ட தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/8000-crore-rupees-remain-unclaimed-in-employee-provident-fund-organization-98865.html</link>	
		<pubDate>Tue, 18 Aug 2026 16:38:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/8000-crore-rupees-remain-unclaimed-in-employee-provident-fund-organization-98865.html</guid>
		            
			

    	<description><![CDATA[8,000 Crores Unclaimed Money In EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்குகளில் பிஎஃப் பணம் வரவு வைக்கப்படுகிறது. அவ்வாறு சுமார் ரூ.8,000 கோடி பணம் கேட்பாரற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pf-money.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="EPFO : பிஎஃப் கணக்குகளில் கேட்பாரற்று கிடைக்கும் ரூ.8,000 கோடி.. இபிஎஃப்ஓ வெளியிட்ட தகவல்!" /></figure>இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் அமைப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் <strong>(EPFO - Employee Provident Fund Organization)</strong> செயல்பட்டு வருகிறது. அதாவது இபிஎஃப்ஓ அமைப்பில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களது பணியின் போதே எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ரூ.8,000 கோடி பணம் கேட்பாரற்று கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கேட்பாரற்று கிடக்கும் ரூ.8,000 கோடி பணம்</h3>
கடந்த 4 ஆண்டுகளில் பிஎஃப்<strong> (PF - Provident Fund)</strong> கணக்குகளில் சுமார் ரூ.8,000 கோடி பணம் கேட்பாரற்று கிடப்பதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 13, 2026 அன்று சட்டமன்றத்தில் பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறியதாவது, 2024 ஆம் நிதியாண்டில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளின் எண்ணிக்கை 84 சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/are-you-sending-documents-like-aadhaar-and-pan-through-whatsapp-know-this-issue-98676.html">வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>
<h3>தொடர்ந்து அதிகரித்து வரும் தொகை</h3>
குறிப்பாக ஒவ்வொரு கணக்கில் இருக்கும் பணமும் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். உதாரணமாக 2021 ஆம் நிதியாண்டில் ரூ.33,513 ஆக இருந்த தொகை, 2024 ஆம் நிதியாண்டில் ரூ.39,460 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2021 ஆம் நிதியாண்டு முதல் 2024 ஆம் நிதியாண்டு வரை செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கைகள் எவ்வளவு, கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பது குறித்த முக்கிய தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gas-cylinder-ekyc-last-date-extended-to-august-23-2026-how-to-do-it-in-online-98507.html">கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!</a>
<h3>கணக்குகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது</h3>
2021 ஆம் நிதியாண்டில் 11,72,923 ஆக இருந்த செயல்படாத கணக்குகளில் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டில் 13,41,848 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல 2023 ஆம் நிதியாண்டில் 17,44,518 ஆக இருந்த செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு 21,55,387 ஆக அதிகரித்துள்ளது. 2021 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 84 சதவீத கணக்குகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொன்ற சம்பவம்.. குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்.. வனத்துறை அமைச்சர்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-ranjith-kumar-announced-that-rs-30-lakh-would-be-provided-to-the-families-of-the-three-tamils-shot-dead-in-karnataka-98787.html</link>	
		<pubDate>Tue, 18 Aug 2026 11:26:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-ranjith-kumar-announced-that-rs-30-lakh-would-be-provided-to-the-families-of-the-three-tamils-shot-dead-in-karnataka-98787.html</guid>
		            
			

    	<description><![CDATA[Minister Ranjith Kumar announced Rs 30 lakh : கர்நாடகாவில் வனத்துறை அதிகாரிகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட 3  தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வருடன் ஆலோசித்து வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/minister-ranjith-kumar.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொன்ற சம்பவம்.. குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்.. வனத்துறை அமைச்சர்!" /></figure>தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், கர்நாடகா மாநிலத்தில் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டவர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது, கர்நாடகாவில் சுட்டு கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்படுமா என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி கவனம் ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கேள்வி எழுப்பினார். அப்போது, அவர் பேசுகையில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
<h3>கர்நாடக அரசு அறிவித்த நிதி குறைவு</h3>
கர்நாடகா அரசு அறிவித்துள்ள நிதி மிக மிக குறைவாகும். எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார். இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் பேசுகையில், கர்நாடக மாநில வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/case-registered-against-ranipet-district-sholinghur-mla-kapil-under-3-sections-98748.html" target="_blank" rel="noopener">தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்கு.. ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பு.. என்ன காரணம்!</a>
<h3>3 தமிழர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி</h3>
இதற்கு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் எழுந்து, இதற்கு பதில் அளித்தார். இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆணைக்கு இணங்க சுட்டு கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்க வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் வனப் பகுதியில் மான் வேட்டையாடுவதற்காக 4 தமிழர்கள் நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது.
<h3>கர்நாடகாவில் நிகழ்ந்த என்கவுண்டர் சம்பவம்</h3>
இது குறித்து தகவல் அறிந்த கர்நாடக மாநில வனத்துறை சம்பவ இடத்துக்கு சென்றது. அங்கு, வனத்துறை அதிகாரிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் 3 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் குண்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
<h3>முதல்வருடன் ஆலோசித்து நிதியுதவி</h3>
இந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு, தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். தற்போது, தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,3 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijays-new-office-tender-faces-rule-violation-allegations-98772.html" target="_blank" rel="noopener">முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்? வெளியான பரபரப்பு தகவல்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வட்டியே இல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம்.. சிம்பிள் டிப்ஸ் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-use-credit-card-without-interest-rate-how-photo-gallery-98771.html</link>	
		<pubDate>Tue, 18 Aug 2026 10:50:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-use-credit-card-without-interest-rate-how-photo-gallery-98771.html</guid>
		            
			    	<description><![CDATA[You Can Use Credit Card Without Interest Rate | கிரெடிட் கார்டு என்றாலே பலரும் அதில் விதிக்கப்படும் வட்டி விகிதம் குறித்து தான் கவலைப்படுவர். ஆனால், கிரெடிட் கார்டை வட்டியே இல்லாமல் பயன்படுத்த முடியும். அது எப்படி என தெரியுமா?.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-use-credit-card-without-interest-rate-how-photo-gallery-98771.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/credit-card-repayment-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card Repayment (1)" /></a></dt><p>மாத சம்பளம் வாங்கும் பலருக்கும் கிரெடிட் கார்டு மிகப்பெரிய உதவியாக உள்ளது. அதாவது, பொருட்களை முன்கூட்டியே வாங்கிக்கொண்டு அதற்கான தொகையை மாத தவணை மூலம் திருப்பி செலுத்த கிரெடிட் கார்டு அனுமதி வழங்கும் நிலையில், பலருக்கும் தங்களது பொருளாதார சிக்கல்களை சரிசெய்ய மிகவும் உதவியாக உள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-use-credit-card-without-interest-rate-how-photo-gallery-98771.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/credit-card-repayment-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card Repayment (2)" /></a></dt><p>கிரெடிட் கார்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், பலரும் கவலைப்படக்கூடிய ஒரு முக்கிய அம்சமாக கிரெடிட் கார்டு வட்டி உள்ளது. கிரெடி கார்டு பயன்படுத்தினால், அதிக வட்டி செலுத்த வேண்டும் என்ற அச்சத்தில் பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்த பயப்படுகின்றனர். ஆனால், முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்தினால்  சிறப்பு பலன்களை பெறலாம்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-use-credit-card-without-interest-rate-how-photo-gallery-98771.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/credit-card-repayment-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card Repayment (3)" /></a></dt><p>வங்கிகள் கிரெடிட் கார்டில் பயன்படுத்திய பணத்தை திருப்பி செலுத்த 45 முதல் 50 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கும். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி பயனர்கள் தங்களது மாத தவணையை முறையாக செலுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் பயனர்கள் ரூ.1 கூட கூடுதலாக செலுத்த வேண்டாம்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-use-credit-card-without-interest-rate-how-photo-gallery-98771.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/credit-card-repayment-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card Repayment (4)" /></a></dt><p>இதனை ஒவ்வொரு மாதமும் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், மாத தவணை செலுத்தும் தேதிக்கு முன்னதாகவோ அல்லது உரிய நேரத்திலோ பணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு பணத்தை திருப்பி செலுத்துவதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஓன்று உள்ளது. அதுதான் மினிமம் டியூ. </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-use-credit-card-without-interest-rate-how-photo-gallery-98771.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/credit-card-repayment-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card Repayment (5)" /></a></dt><p>கிரெடிட் கார்டு மூலம் பயன்படுத்தும் பணத்திற்கு மினிமம் டியூ செலுத்தும் ஆப்ஷனை வங்கிகள் வழங்கும். அதாவது, செலவு செய்த பணத்தை 5 சதவீதம் மட்டுமே திருப்பி செலுத்தும் அம்சம் தான். ஒருவேளை நீங்கள் அந்த மினிமம் டியூ அம்சத்தை தேர்வு செய்து மாத தவணை செலுத்தினால், நீங்கள் அதிகப்படியான வட்டியை திருப்பி செலுத்த வேண்டும். </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>Gold Price : நான்காவது நாளாக உயர்வை சந்தித்த தங்கம்.. எவ்வளவு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-18th-august-gold-increases-by-2000-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-98767.html</link>	
		<pubDate>Tue, 18 Aug 2026 10:13:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-18th-august-gold-increases-by-2000-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-98767.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Hiked And Silver Price Remain Same In Chennai | தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-34.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : நான்காவது நாளாக உயர்வை சந்தித்த தங்கம்.. எவ்வளவு தெரியுமா?" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 18 :</strong> புவிசார் பதற்றம் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை<strong> (Gold Price)</strong> நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று (ஆகச்ட் 18, 2026) தங்கம் விலை உயர்ந்துள்ளது. நான்காவது நாளாக உயர்வை சந்தித்துள்ள தங்கம், கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் <strong>(Silver Price)</strong> எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்திக்கும் தங்கம்</h3>
ஈரான் போரால் ஏற்பட்ட புவிசார் பதற்றம், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/gas-cylinder-ekyc-last-date-extended-to-august-23-2026-how-to-do-it-in-online-98507.html"> கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!</a>

ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காமல் தங்கம் இருந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இன்று (ஆகஸ்ட் 18, 2026) தொடர்ந்து நான்காவது நாளாக  தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,290-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO : இபிஎஃப்ஓ விதிகளில் வந்த மேஜர் மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/important-rules-changed-in-epfo-know-what-are-those-98530.html</link>	
		<pubDate>Mon, 17 Aug 2026 18:56:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/important-rules-changed-in-epfo-know-what-are-those-98530.html</guid>
		            
			

    	<description><![CDATA[Important Rules Changed In EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஃப் பணம் எடுப்பது தொடர்பாக சில முக்கிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/epfo-changes.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="EPFO : இபிஎஃப்ஓ விதிகளில் வந்த மேஜர் மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?" /></figure>ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. நவீன் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஊழியர்கள் சேவைகளை பெறும் வகையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், ஊழியர்கள் பிஎஃப் பணத்தை எடுப்பது குறித்த விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பிஎஃப் பணத்தை எடுப்பதில் வந்த முக்கிய மாற்றங்கள்</h3>
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான விதிகளிலும், முறைகளிலும் பெரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் பிஎஃப் பணத்தை விரைவாக எடுப்பது மட்டுமன்றி, பல்வேறு சிக்கல்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
<h3>75 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்</h3>
புதிய விதி மூலம் வேலைவாய்ப்பு இழப்பு, மருத்துவ செலவுகள், கல்வி, வீடு வாங்குவது, வீட்டுக் கடனை அடைப்பது போன்ற முக்கியமான விஷயங்களுக்கு பண தேவை ஏற்படும் பட்சத்தில் எந்தவித தடையுமின்றி 75 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gas-cylinder-ekyc-last-date-extended-to-august-23-2026-how-to-do-it-in-online-98507.html">கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!</a>
<h3>13 காரணங்கள்</h3>
பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கான காரணங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மொத்தமுள்ள 13 காரணங்கள் அடிப்படை தேவை, வீடு விவகாரம், தனிப்பழை சூழ்நிலை ஆகியவை என வெறும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
<h3>கால அளவு குறைப்பு</h3>
பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க ஊழியர்கள் 36 மாதங்கள் பணியில் இருந்தாக வேண்டும் என்ற விதி இருந்தது. அது தற்போது வெறும் 12 மாதங்களாக குறைகப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/how-to-download-aadhaar-card-through-whatsapp-step-by-step-by-guide-98480.html">வாட்ஸ்அப்பிலேயே ஆதார் கார்டை Download செய்யலாம்.. அட இவ்வளவு ஈசியா?</a>
<h3>பணத்தை எடுக்கும் எண்ணிக்கை</h3>
ஊழியர் தனது பிஎஃப் பணத்தை கல்வி தொடர்பான தேவைகளுக்கு மொத்தம் 10 முறை பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல திருமணம் தொடர்பாக 5 முறை பிஎஃப் பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
<h3>25 சதவீதம் தொகை முடக்கம் செய்யப்படும்</h3>
ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 25 சதவீதம் பணம் இருப்பில் இருக்க வேண்டும் என்பதை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/health-minister-arunraj-stated-that-2500-nursing-posts-would-be-created-98642.html</link>	
		<pubDate>Mon, 17 Aug 2026 16:16:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/health-minister-arunraj-stated-that-2500-nursing-posts-would-be-created-98642.html</guid>
		            
			

    	<description><![CDATA[Health Minister Arunraj : தமிழகத்தில் கூடுதலாக 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பான அறிவிப்புகளை இந்தப் பதவில் விரிவாக பார்க்கலாம் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/arun-raj-nurse-posts.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்" /></figure>தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பட்ஜெட் மீதனா விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது, மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், தமிழகத்தில் 2,500 செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். 3,594 மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 1,695 தொகுப்பூதிய செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும். சமூகம், குடும்பம், தனி மனித அளவில் ஆரோக்கியம் மேம்படுத்த "பாசிட்டிவ் ஹெல்த் பாலிசி" உருவாக்கப்படும். இது தொடர்பாக அனைத்து தகவல்களும் மக்களுக்கு கிடைக்க "நலம் 360" செயலி அறிமுகம் செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் ரூ. 10 கோடியில் மருத்துவ கட்டமைப்புக்கான வடிவமைப்பு திட்டம் கொண்டு வரப்படும். தமிழ்நாடு மருத்துவ நகரம் உருவாக்கப்பட்டு மருத்துவ சேவை ஆராய்ச்சி சேவைகள் வழங்கப்படும். செவிலியர்களுக்கு தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்தில் பணி வழங்கப்படும்.
<h3>உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள்</h3>
மருத்துவ துறையில் முதன்மை இடத்தை அடைய மருத்துவ நகரம் அமைக்கப்படும். உலக தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் ஆயுஷ் மருத்துவம் வழங்கப்படும். மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக ஒப்பந்த செவிலியர்களாக தேர்வு செய்யப்பட்டு தற்போது பணியில் இருந்து வரும் செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை ஊதியத்தில் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி உள்ளனர்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/kkssr-ramachandran-speaks-in-the-legislative-assembly-about-m-k-stalin-and-chief-minister-vijay-98591.html" target="_blank" rel="noopener">மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!</a>
<h3>பணி மூப்பு அடிப்படையில் செவிலியர்கள் நியமனம்</h3>
இதனை, பரிசீலனை செய்து அவர்களின் சேவையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 2500 பணியிடங்கள் காலமுறை ஊதியத்தில் உருவாக்கப்படும். இந்த பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.  மேலும், 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
<h3>115 அறிவிப்புகளை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்</h3>
ரூ. 51 கோடியில் நலம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டணமில்லா உடல் நல பரிசோதனை. 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை 14 அடிப்படை பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட 115 புதிய அறிவிப்புகளை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/assembly-speaker-jcd-prabhakar-clarifies-the-protocol-regarding-standing-up-upon-the-chief-ministers-arrival-in-the-legislative-assembly-98583.html" target="_blank" rel="noopener">முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/are-you-sending-documents-like-aadhaar-and-pan-through-whatsapp-know-this-issue-98676.html</link>	
		<pubDate>Mon, 17 Aug 2026 15:15:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/are-you-sending-documents-like-aadhaar-and-pan-through-whatsapp-know-this-issue-98676.html</guid>
		            
			

    	<description><![CDATA[Sending Documents Through WhatsApp | வாட்ஸ்அப் மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அனுப்புகிறீர்களா. அது மிகவும் சுலபமாக இருந்தாலும், அதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/documents.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் ஆதார் கார்டு <strong>(Aadhaar Card)</strong>, பான் கார்டு <strong>(PAN Card)</strong> உள்ளிட்ட ஆவணங்கள் பல்வேறு சேவைகளுக்கு கேட்கப்படுகிறது. இதன் காரணமாக ஹார்டு காப்பியை வைத்திருக்க தேவையில்லை என்றாலும்,  டிஜிட்டல் காப்பியையாவது வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. குறிப்பாக, கடனுக்கு முயற்சி செய்வது உள்ளிட்டவற்றுக்காக இந்த ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்ப கோரப்படுகிறது. அவ்வாறு, பலரும் தங்களது ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வருகின்றனர். ஆனால், அவ்வாறு ஆவணங்களை அனுப்புவதற்கு பின்னால் சில ஆபத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.
<h3>வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள்</h3>
வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை தொடர்ப்புக்கொண்டு கடன் வேண்டும் என்றால் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என கேட்பார்கள். அதனை நம்பி வாடிக்கையாளர்களும் தங்களது ஆவணங்கள் மற்றும் விவரங்களை அனுப்பி வைப்பார்கள். அவ்வாறு அனுப்புவதில் எந்தவித சிக்கலும் இல்லை. நீங்கள் ஆவணங்களை அனுப்பும் நபர் நம்பகத்தன்மை உடையவராகவும், மிகவும் நேர்மையானவராகவும் இருக்கலாம். ஆனால், நீங்கள் அனுப்பும் ஆவணம் அந்த நபரின் கிளவுடில் சேகரிக்கப்படும். அது பிற்காலத்தில் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gas-cylinder-ekyc-last-date-extended-to-august-23-2026-how-to-do-it-in-online-98507.html">கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!</a>
<h3>ஆவணங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன</h3>
நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு ஆவணங்களை அனுப்புகிறீர்கள் என்றால் அதில் எந்த சிக்கல்களும் இருக்காது. இதுவே நீங்கள் ஒரு தனிநபருக்கு ஆவணங்களை அனுப்பும் பட்சத்தில், அந்த ஆவணங்கள் திருடப்பட்டு அது, வேறு எங்கேனும் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தவறான நபர்களின் உங்களின் ஆவணங்கள் சிக்கிக்கொள்ளும் பட்சத்தில் உங்களது மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலம் மோசடி அழைப்புகள் உள்ளிட்டவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/how-to-download-aadhaar-card-through-whatsapp-step-by-step-by-guide-98480.html">வாட்ஸ்அப்பிலேயே ஆதார் கார்டை Download செய்யலாம்.. அட இவ்வளவு ஈசியா?</a>

இத்தகைய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஆவணங்களை நேராக ஒரு நபரின் மொபைல் எண்ணுக்கு அனுப்புவதற்கு பதிலாக, டிஜி லாக்கர் மூலம்  வெஃரிபை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க&#8230; கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/kkssr-ramachandran-speaks-in-the-legislative-assembly-about-m-k-stalin-and-chief-minister-vijay-98591.html</link>	
		<pubDate>Mon, 17 Aug 2026 14:50:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/kkssr-ramachandran-speaks-in-the-legislative-assembly-about-m-k-stalin-and-chief-minister-vijay-98591.html</guid>
		            
			

    	<description><![CDATA[KKSSR Ramachandran : முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்று பேரைவக்கு வரும் போது பாதி பேர் இருக்க மாட்டார்கள் என்று பரபரப்பாக பேசினார். பேரவையில் அப்பாவை காணோம் என சிலர் கூறிய கருத்துக்கு இந்த கருத்தை முன் வைத்திருந்தார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/kkssr-ramachandran.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க&#8230; கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!" /></figure>தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று திங்கள்கிழமை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பேசினார். அப்போது, சட்டப்பேரவையில் சிலர் அப்பாவை காணும் என்று சொல்கின்றனர். அவர் ( முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின்) இங்கு வரும்போது பாதி பேர் இருக்க மாட்டார்கள். ஆனால், நாங்கள் இருப்போம் என்று தெரிவித்தார். அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும், அவை முன்னவருமான கே. ஏ. செங்கோட்டையன் எழுந்து, எங்கள் முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் இருக்கும் வரை இனி தமிழகத்தில் உங்களால் தலை தூக்க முடியாது.
<h3>திமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை</h3>
சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். இதற்கு, பதில் அளித்து பேசிய கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் தோல்வியுற்று விழுந்து உள்ளது. ஆனால், விழுந்த வேகத்தில் மீண்டும் நிச்சமாக எழும். அதுதான் திராவிட முன்னேற்ற கழகம் என்று தெரிவித்தார். இதற்கு, அவை முன்னவர் கே. ஏ. செங்கோட்டையன், முன்னாள் முதல்- அமைச்சர் எம். ஜி. ஆர். இருந்தவரை திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறவில்லை.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-assembly-speech-tvk-minister-shows-fir-proof-against-dmk-over-pocso-cases-98552.html" target="_blank" rel="noopener">“ஆதாரம் என்கிட்ட இருக்கு!”.. பேரவையில் புள்ளிவிவரங்களுடன் பாய்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. திமுக-வினருடன் கடும் வாக்குவாதம்!</a>
<h3>எம்ஜிஆர் இருந்த வரை திமுக வெற்றி பெறவில்லை</h3>
புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிருடன் இருந்த வரை திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்று தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் கே. என். நேரு, கடந்த 1980- ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றது. இதேபோல, 1986- ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றியே பதிவு செய்தது என்று தெரிவித்தார்.
<h3>ஆட்சி கலைப்பில் ஈடுபட்ட திமுக</h3>
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சரும், அவை முன்னவருமான கே. ஏ. செங்கோட்டையன், கடந்த 1980- ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றனர். அங்கு, ஆட்சியையும் கலைத்தனர். ஆனால், மீண்டும் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை எம்ஜிஆர் தான் படைத்தார் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-apologizes-in-assembly-and-announces-crop-loan-waiver-98565.html" target="_blank" rel="noopener">திமுகவினரிடம் SORRY கேட்ட முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?.. முழு விவரம்!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/assembly-speaker-jcd-prabhakar-clarifies-the-protocol-regarding-standing-up-upon-the-chief-ministers-arrival-in-the-legislative-assembly-98583.html</link>	
		<pubDate>Mon, 17 Aug 2026 14:29:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/assembly-speaker-jcd-prabhakar-clarifies-the-protocol-regarding-standing-up-upon-the-chief-ministers-arrival-in-the-legislative-assembly-98583.html</guid>
		            
			

    	<description><![CDATA[Legislative Assembly Protocol : தமிழக சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகையின் போது, சட்டமன்ர எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்திருக்க வேண்டுமா என்பது குறித்து சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கமளித்துள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/jcd-prabhar-cm-vijay.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!" /></figure>தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகையின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என்று அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு, திமுக எம்எல்ஏ ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்ததுடன், கேள்வியும் எழுப்பி இருந்தார்.  இதில், அறநிலையத்துறை அமைச்சர் திடீரென எழுந்து முதல்வர் வரும் பொழுது எதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து மரியாதை செலுத்தவில்லை என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த அவைக்கு பேரவை தலைவர் தான் தலைவர். பேரவை தலைவர் வரும்போது கட்சி வித்தியாசம் இன்றி அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பது காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்ற ஒரு மரமாகும்.
<h3>பேரவையில் அங்கும் இங்கும் சென்று வணக்கும் செலுத்தும் முதல்வர்</h3>
முதல் அமைச்சராக இருப்பவர்கள் இந்த அவைக்குள் நுழைந்தவுடன் நேராக தங்கள் இருக்கைக்கு சென்று அங்கிருந்து வணக்கம் செலுத்தி விட்டு அமர்வது தான் மரபாகும். ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவைக்குள் நுழைந்து நடந்து சென்று அங்கும், இங்கும் திரும்பி வணக்கம் செலுத்தி விட்டு பின்னர் தனது இருக்கைக்கு சென்று அமருகிறார். இது, புதிய வழக்கமாக இருக்கிறது. அதே வகையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகையின் போது எழுந்து நிற்க வேண்டும் என்றால் இந்த அவைக்குள் எதிர்க் கட்சித் தலைவர் வரும் போதும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டுமா என்பதையும் பேரவை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-clash-udhayanidhi-vs-minister-sarath-over-drug-allegations-98539.html" target="_blank" rel="noopener">ஐபிஎல் ஸ்டேடியத்தில் போதைப்பொருளா?.. பேரவையில் உதயநிதி vs அமைச்சர் சரத் கடும் மோதல்..</a>
<h3>எதிர்க்கட்சி தலைவர் வரும்போது எழுந்து நிற்பார்களா</h3>
இதனை ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் எழுந்து நிற்பார்களா என விளக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு, சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்து பேசுகையில், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பேரவைக்கு வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், அவ்வாறு எழுந்து நின்று மரியாதை செலுத்துவது நமது பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகும்.
<h3>முதல்வர்- எதிர்க்கட்சி தலைவர் வரும் போது எழுந்துநிற்க தேவையில்லை</h3>
அந்த கண்ணியத்தை காப்பாற்ற வேண்டுமா இல்லையா என்பதை உறுப்பினர்களின் விருப்பத்துக்கு விட்டு விடுகிறேன். எனவே, யாரும் மரியாதை செலுத்தி ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அவரவர்கள் கொடுக்க வேண்டிய மரியாதையை தங்களது மனதுக்கு ஏற்ப கொடுப்பது அவர்களது விருப்பம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/cm-vijay-apologizes-in-assembly-and-announces-crop-loan-waiver-98565.html" target="_blank" rel="noopener">திமுகவினரிடம் SORRY கேட்ட முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?.. முழு விவரம்!!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?.. இதுதான் நிலவரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-17-august-2026-gold-increases-by-2000-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-98524.html</link>	
		<pubDate>Mon, 17 Aug 2026 10:02:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-17-august-2026-gold-increases-by-2000-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-98524.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Hiked Silver Price Remain Same | சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-hike-4-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?.. இதுதான் நிலவரம்!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 17 :</strong> சென்னையில் தங்கம் விலை <strong>(Gold Price)</strong> நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17, 2026) தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் <strong>(Silver Price)</strong> மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை</h3>
2024, 2025 ஆம் ஆண்டுகளை போல 2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சாதகமான ஆண்டாக அமையவில்லை. காரணம், இந்த ஆண்டு தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது. ஆனால், ரூ,14,000-த்தை தாண்டாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/you-can-get-more-than-10-services-in-atm-machines-what-are-the-services-98447.html">ATM : ஏடிஎம்-ல் இத்தனை சேவைகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!</a>

இந்த சூழலில் தங்கம் விலை உயராது, இதே விலையில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாதம் தொடங்கியதும் தங்கம் மேலும் ஷாக் கொடுத்தது. அதாவது, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் சரசரவென உயர்ந்த தங்கம், இடையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது. அந்த வகையில், இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை</h3>
சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு சவரன் ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு..  கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gas-cylinder-ekyc-last-date-extended-to-august-23-2026-how-to-do-it-in-online-98507.html</link>	
		<pubDate>Mon, 17 Aug 2026 07:40:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gas-cylinder-ekyc-last-date-extended-to-august-23-2026-how-to-do-it-in-online-98507.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gas Cylinder eKYC Last Date Extended | எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சி மேற்கொள்ள கடைசி தேதி ஆகஸ்ட் 23, 2026 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gas-cylinder-ekyc.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு..  கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!" /></figure>எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை<strong> (LPG Gas Cylinders)</strong> தொடர்ந்து பெற இகேஒய்சி<strong> (eKYC - Know Your Customer)</strong> கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இகேஒய்சி முடிக்க ஆகஸ்ட் 15, 2026 தான் கடைசி தேதி என கூறப்பட்ட நிலையில், தற்போது தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் இகேஒய்சி முடிக்க எவ்வளவு நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சி கட்டாயம்</h3>
ஈரான் போரின்போது, இந்தியா மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடை எதிர்க்கொண்டது. இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் தான் கேஸ் சிலிண்டர்களுக்கான இகேஒய்சி முறையை கட்டாயப்படுத்தியது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/what-happens-when-you-miss-loan-payments-and-how-far-banks-can-go-to-recover-dues-98367.html">இஎம்ஐ செலுத்தத் தவறினால் வங்கி உங்கள் வீட்டை ஜப்தி செய்ய முடியுமா? உண்மை என்ன?</a>

பின்னர், கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் ஆகஸ்ட் 15, 2026-க்குள் அவற்றுக்கான இகேஒய்சியை முடிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, கேஸ் சிலிண்டர்களுக்கான இகேஒய்சி காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சி மேற்கொள்ள கடைசி தேதி ஆகஸ்ட் 23, 2026 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/sbi-har-ghar-lakhpati-scheme-lets-you-build-rs-1-lakh-with-small-monthly-deposits-98313.html">மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் – ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்</a>
<h3>கேஸ் சிலிண்டர் இகேஒய்சி மேற்கொள்வது எப்படி?</h3>
<ol>
 	<li>நீங்கள் எந்த நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகிறீர்களோ அதன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.</li>
 	<li>அதேபோல <strong>Aadhaar FaceRD</strong> செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.</li>
 	<li>பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.</li>
 	<li>முகப்பு பக்கத்தில் உள்ள <strong>LPG e-KYC</strong> என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.</li>
 	<li>அதில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை படித்துவிட்டு, ஒப்புதல் அளித்து, முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.</li>
 	<li>முகம் ஸ்கேன் வெற்றிகரமாக முடிந்ததும், e-KYC விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.</li>
</ol>
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி வீட்டில் இருந்தே மிக சுலபமாக கேஸ் சிலிண்டர்களுக்கான இகேஒய்சியை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப்பிலேயே ஆதார் கார்டை Download செய்யலாம்.. அட இவ்வளவு ஈசியா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/how-to-download-aadhaar-card-through-whatsapp-step-by-step-by-guide-98480.html</link>	
		<pubDate>Sun, 16 Aug 2026 20:30:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/how-to-download-aadhaar-card-through-whatsapp-step-by-step-by-guide-98480.html</guid>
		            
			

    	<description><![CDATA[How To Download Aadhaar Card Through WhatsApp | இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் மூலம் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/aadhaar-card-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப்பிலேயே ஆதார் கார்டை Download செய்யலாம்.. அட இவ்வளவு ஈசியா?" /></figure>இந்திய பொதுமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு<strong> (Aadhaar Card)</strong> உள்ளது. ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், மருத்துவ சிகிச்சை பெறுவது வரை என அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாக கேட்கப்படுகிறது. இந்த சூழலில் எப்போதும் ஆதார் கார்டை கையில் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருவேளை நீங்கள் ஆதார் கார்டை எடுத்துச் செல்லவில்லை என்றால் கவலை வேண்டாம். வாட்ஸ்அப்பில் <strong>(WhatsApp)</strong> வெறும் இரண்டு நிமிடங்களில் உங்களால் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில்  ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வாட்ஸ்அப்பில் ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி?</h3>
<ol>
 	<li> முதலில் <strong>+91-9013151515</strong> என்ற எண்ணை உங்களது ஸ்மார்ட்போனில் பதிவு செய்ய வேண்டும்.</li>
 	<li>எளிதாக அடையாளம் காணக்கூடிய வகையில் அந்த எண்ணை பதிவு செய்துக்கொள்ளுங்கள்.</li>
 	<li>பிறகு வாட்ஸ்அப்பில் அந்த எண்ணின் சாட்டை திறந்து<strong> "ஹாய்"</strong> அல்லது <strong>"நமஸ்தே"</strong> என குறுஞ்செய்தி அனுப்புங்கள்.</li>
 	<li> நீங்கள் தான் உண்மையிலேயே ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்கிறீர்களா என்பதை சோதனை செய்ய உங்களது டிஜி லாக்கர் தகவல்கள் கேட்கப்படும்.</li>
 	<li>அதன்படி, அதில் கேட்கும் அனைத்து விவரங்களையும் பதிவிடுங்கள்.</li>
 	<li>அதனுடன் சேர்த்து உங்களுடைய ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.</li>
 	<li>நீங்கள் மொபைல் எண்ணை பதிவிட்ட பிறகு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.</li>
 	<li>அதனை உள்ளிடும் பட்சத்தில், உங்களது டிஜி லாக்கரில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் தோன்றும்.</li>
 	<li>அந்த பட்டியலில் உங்களது ஆதார் கார்டு இருந்தால் அதனை தேர்வு செய்ய வேண்டும்.</li>
 	<li>பிறகு உங்களது வாட்ஸ்அப்புக்கு தானாகவே ஆதார் பிடிஎஃப் வந்து சேர்ந்துவிடும்.</li>
</ol>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/sbi-har-ghar-lakhpati-scheme-lets-you-build-rs-1-lakh-with-small-monthly-deposits-98313.html">மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் – ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்</a></p>
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றி ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கு முதலில் உங்களது டிஜி லாக்கரில் நீங்கள் உங்களது ஆதார் கார்டை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் சிபில் ஸ்கோர் குறையுமா?.. இதனை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/will-credit-score-reduce-if-you-pay-monthly-rent-using-credit-card-98450.html</link>	
		<pubDate>Sun, 16 Aug 2026 16:40:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/will-credit-score-reduce-if-you-pay-monthly-rent-using-credit-card-98450.html</guid>
		            
			

    	<description><![CDATA[Factors Which Affects Your Credit Score | வங்கி கணக்கு நடைமுறைகள், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் காரணமாக கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் ஏற்படும். இந்த நிலையில், கிரெடிட் கார்டில் வீட்டு வாடகை செலுத்துவது கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/credit-score.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் சிபில் ஸ்கோர் குறையுமா?.. இதனை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பண தேவைக்காக கிரெடிட் கார்டு <strong>(Credit Card)</strong> பயன்படுத்தி வருகின்றனர். மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் பலரும், கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பிறகு மாத தவணை முறையில் திருப்பி செலுத்திக்கொள்ளலாம். இவ்வாறு பல தேவைகளுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படும் நிலையில், கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் கிரெடிட் ஸ்கோர் <strong>(Credit Score)</strong> குறையுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கிரெடிட் ஸ்கோரை கடுமையாக பாதிக்கும் கிரெடிட் கார்டு தவறுகள்</h3>
கிரெடிட் கார்டில் நாம் செய்யும் சில தவறுகள், நமக்கே தெரியாமல் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதாவது, சில பரிவர்த்தனைகள் கிரெடிட் ஸ்கோரை வெகுவாக குறைய செய்யும். அவற்றை குறித்து கவமாக இருக்க வேண்டும். அந்த வகையில், கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவது எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/sbi-har-ghar-lakhpati-scheme-lets-you-build-rs-1-lakh-with-small-monthly-deposits-98313.html">மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் – ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்</a>
<h3>வீட்டு வாடகை - மறைமுக கட்டணங்கள்</h3>
சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு மூலம் வீட்டி வாடகை செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவது மிகவும் எளிதாக தோன்றினாலும், அதில் சில மறைமுக கட்டணங்கள் விதிக்கப்படும். அதாவது, கிரெடிட் கார்டு மற்றும் பிராப்பர்ட்டி நிறுவனங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு <strong>Processing Fee</strong> வசூல் செய்கின்றன.

<strong>இதையும் படிங்க</strong> :<a href="https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-complete-ekyc-today-you-will-not-get-gas-cylinders-from-august-16-2026-98254.html"> இன்று தான் கடைசி தேதி.. இகேஒய்சி செய்யவில்லை என்றால் நாளை முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!</a>

Processing Fee வாடகை தொகையில் இருந்து 1 முதல் 3 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அதாவது, நீங்கள் வீட்டு வாடகை செலுத்த கிரெடிட் கார்டில் இருந்து ரூ.20,000 செலுத்தி இருந்தால், அதில் 2 சதவீதம் என்பது ரூ.400 ஆகும். இந்த நிலையில், மாதம் மாதம் ரூ.20,000 கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் நபராக நீங்கள் இருந்தீர்கள் என்றால் மாதம் மாதம் கூடுதலாக ரூ.400 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் கார்டில் மொத்த லிமிட்டில் 30 சதவீதத்திற்கு கீழ் மாத செலவு இருப்பது தான் கிரெடிட் ஸ்கோரில் எந்தவித சிக்கலும் இல்லாமல் கணக்கை முறையாக பராமரிக்க உதவும். எனவே நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது 30 சதவீதத்திற்கும் மேல் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ATM : ஏடிஎம்-ல் இத்தனை சேவைகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/you-can-get-more-than-10-services-in-atm-machines-what-are-the-services-98447.html</link>	
		<pubDate>Sun, 16 Aug 2026 15:25:31 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/you-can-get-more-than-10-services-in-atm-machines-what-are-the-services-98447.html</guid>
		            
			

    	<description><![CDATA[ATM Services | பெரும்பாலான பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரங்களை பணம் எடுப்பதற்கும், பணம் செலுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால்ம் ஏடிஎம் மையங்கள் மூலம் 10-க்கும் மேற்பட்ட சேவைகளை பெற முடியும். அது என்ன என்ன சேவைகள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/atm-services.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ATM : ஏடிஎம்-ல் இத்தனை சேவைகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!" /></figure>வங்கிக்கு சென்று படிவத்தை நிரப்பி, வரிசையில் காத்திருந்து பணத்தை எடுக்க வேண்டிய சூழலை மாற்றி, 24 மணி நேரமும் எந்தவித சிக்கல்களும் இன்றி பணத்தை எடுத்துக்கொள்ள ஏடிஎம் <strong>(ATM - Automated Teller Machine)</strong> மையங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் தங்களின் அன்றாட பண தேவைகளுக்கு ஏடிஎம் மையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், ஏடிஎம் மையங்கள் வெறும் பணம் செலுத்துவதற்கு மற்றும் பணம் எடுப்பதற்கு மட்டுமல்ல. அதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஏடிஎம் - 10-க்கும் மேற்பட்ட சேவைகளை பெறலாம்?</h3>
ஏடிஎம் மையங்கள் மூலம் பணம் எடுப்பது, பணம் செலுத்துவது மட்டுமன்றி 10-க்கும் மேற்பட்ட சேவைகளை பெற முடியும்.
<ol>
 	<li>பணம் எடுப்பது</li>
 	<li>பணம் டெபாசிட் செய்வது</li>
 	<li>இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்துவது</li>
 	<li>மொபைல் ரீச்சார்ஜ் செய்வது</li>
 	<li>பேலன்ஸ் செக் செய்வது</li>
 	<li>மினி ஸ்டேட்மென்ட் பெறுவது</li>
 	<li>ஏடிஎம் பின் எண்ணை மாற்றுவது</li>
 	<li>செக் புக் பெறுவது</li>
 	<li>ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்வது</li>
 	<li>கணக்குகளில் இருந்து பணத்தை மாற்றுவது</li>
</ol>
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 10 சேவைகளை ஏடிஎம் மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-complete-ekyc-today-you-will-not-get-gas-cylinders-from-august-16-2026-98254.html">இன்று தான் கடைசி தேதி.. இகேஒய்சி செய்யவில்லை என்றால் நாளை முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!</a></p>

<h3>சேவைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளனவா?</h3>
இந்த சேவைகள் தற்போதும் கூட ஏடிஎம் மையங்கள் மூலம் கிடைக்கின்றனவா என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் உள்ளது. ஏடிஎம் மையங்கள் மூலம் வழங்கப்படும் இந்த சேவைகள் குறித்து அந்த அந்த வங்கிகள் தான் பொதுமக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இவ்வாறு, போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக இந்த சேவைகள் பயன்படுத்தப்படுவதே இல்லை.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/pm-svanidhi-scheme-offers-street-vendors-collateral-free-loans-up-to-rs-90000-98178.html">பிஎம் ஸ்வநிதி திட்டம் – சிறு வியாபாரிகளுக்கு ரூ.90,000 கடன் – எப்படி பெறுவது?</a>

என்னதான் பொதுமக்கள் ஏடிஎம்-ல் கிடைக்கும் இந்த பிற சேவைகளை பயன்படுத்தவில்லை என்றாலும், பொதுமக்கள் மத்தியில் ஏடிஎம் செயலிகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது, இந்தியாவில் இதுவரை சுமார் 2,65,000 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>KVP : முதலீட்டை டபுள் ஆக்கும் கேவிபி திட்டம்.. முழு விவரம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/make-your-investment-double-by-investing-kisan-vikas-patra-scheme-98439.html</link>	
		<pubDate>Sun, 16 Aug 2026 14:42:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/make-your-investment-double-by-investing-kisan-vikas-patra-scheme-98439.html</guid>
		            
			

    	<description><![CDATA[Kisan Vikas Patra Scheme Investment | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்று முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அரசு வழங்கும் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்து உங்களது பணத்தை இரண்டு மடங்காக உயர்த்துங்கள்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/kvp-scheme.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="KVP : முதலீட்டை டபுள் ஆக்கும் கேவிபி திட்டம்.. முழு விவரம் இதோ!" /></figure>அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு <strong>(Saving)</strong> மற்றும் முதலீட்டு <strong>(Investment)</strong> திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் திட்டங்களில் முதலீடு செய்வதை விடவும், அரசின் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெறுவது மட்டுமன்றி, முதலீடு செய்த பணம் பாதுகாப்பாகவும் இருக்கும். இந்த நிலையில், முதலீடு செய்த பணத்தை இரண்டு மடங்காக மாற்றும் ஒரு அசத்தல் திட்டம் ஒன்று உள்ளது. அது என்ன திட்டம், அதில் எவ்வளவு முதலீடு செய்து, எவ்வளவு லாபத்தை பெறுவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கிசான் விகாஸ் பத்ரா திட்டம் - முதலீட்டு இரண்டு மடங்கு லாபம்</h3>
அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம்<strong> (KVP - Kisan Vikas Patra Scheme).</strong> இந்த திட்டத்தில் முதலீடு செய்து இரண்டு மடங்கு லாபத்தை பெற முடியும். அதாவது, இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது அப்படியே ரூ.20 லட்சமாக மாறும். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/pm-svanidhi-scheme-offers-street-vendors-collateral-free-loans-up-to-rs-90000-98178.html">பிஎம் ஸ்வநிதி திட்டம் – சிறு வியாபாரிகளுக்கு ரூ.90,000 கடன் – எப்படி பெறுவது?</a>
<h3>திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வட்டி மாற்றி அமைக்கப்படும். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் சுமார் 9 ஆண்டுகள், 7 மாதங்கள் ஆகும். இந்த காலம் முழுவதும் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டுமே அதன் பனல்களை பெற முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/what-is-hybrid-loan-know-before-getting-loan-from-bank-98054.html">ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>

இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 115 மாதங்களாக உள்ள நிலையில், அது முடிவடையும் வரை பணத்தை எடுக்க முடியும். இவ்வாறு முறையாக முதலீடு செய்யும் பட்சத்தில் பணத்தை இரண்டு மடங்காக மாற்ற முடியும். அதாவது, ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் பெறலாம். இதேபோல ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 லட்சமாக மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இஎம்ஐ செலுத்தத் தவறினால் வங்கி உங்கள் வீட்டை ஜப்தி செய்ய முடியுமா? உண்மை என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/what-happens-when-you-miss-loan-payments-and-how-far-banks-can-go-to-recover-dues-98367.html</link>	
		<pubDate>Sat, 15 Aug 2026 19:12:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/what-happens-when-you-miss-loan-payments-and-how-far-banks-can-go-to-recover-dues-98367.html</guid>
		            
			

    	<description><![CDATA[Loan Recovery Rules : வீட்டுக் கடன், வாகனக் கடன், தங்கக் கடன் அல்லது சொத்து மீதான கடன் வாங்கியவர்களுக்கு, கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால்,  உங்களது பொருட்களை கையகப்படுத்த வங்கிகளுக்கு உரிமை உள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/bank-loan-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இஎம்ஐ செலுத்தத் தவறினால் வங்கி உங்கள் வீட்டை ஜப்தி செய்ய முடியுமா? உண்மை என்ன?" /></figure>ஏதேனும் ஒரு காரணத்தினால் உங்களால் <a href="https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-planning-for-new-loan-pricing-rules-97864.html" target="_blank" rel="noopener">கடனுக்கான</a> மாதத் தவணையை செலுத்த முடியாவிட்டால், வங்கிகள் உங்கள் எஸ்எம்எஸ், இமெயில் அனுப்பலாம், அபராதம் விதிக்கலாம் மற்றும் கடன் வசூல் நடவடிக்கைகளைத் தொடங்கலாம். இருப்பினும், ஒரே ஒரு <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-happens-if-you-miss-any-emi-by-chance-these-will-be-the-consequences-photo-gallery-97463.html" target="_blank" rel="noopener">மாதத் தவணையை</a> தவறவிடுவது மட்டும் உங்கள் சொத்துக்களை ஜப்தி செய்வதற்கான உரிமையை வங்கிக்கு அளித்துவிடாது. மிக முக்கியமாக, கடனை வசூலிக்கும் முயற்சியில் லோன் ஏஜெண்ட் உங்கள் குடும்பத்தினரை மிரட்டவோ, தகாத வார்த்தைகளால் திட்டவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என விதிமுறை சொல்கிறது.
<h3>வங்கி எப்போது உங்கள் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்?</h3>
வீட்டுக் கடன், வாகனக் கடன், தங்கக் கடன் அல்லது சொத்து மீதான கடன் வாங்கியவர்களுக்கு, கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், அதற்கான பிணையமாக உள்ள சொத்து மீது வங்கி சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கலாம். இருப்பினும், இதற்கென வரையறுக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். சர்ஃபாசி சட்டத்தின் படி ஒரு பிணையம் கொண்ட கடன் செயலற்ற சொத்துஎன வகைப்படுத்தப்பட்ட பிறகு, நிலுவைத் தொகையை 60 நாட்களுக்குள் செலுத்துமாறு வங்கி எழுத்துப்பூர்வமான அறிவிப்பை அனுப்பலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/pm-svanidhi-scheme-offers-street-vendors-collateral-free-loans-up-to-rs-90000-98178.html">பிஎம் ஸ்வநிதி திட்டம் – சிறு வியாபாரிகளுக்கு ரூ.90,000 கடன் – எப்படி பெறுவது?</a></strong>

கடன் வாங்கியவர் இந்த அறிவிப்புக்கு ஆட்சேபனை அல்லது பதிலைச் சமர்ப்பித்தால், வங்கி அதைப் பரிசீலித்து, ஆட்சேபனையை நிராகரிப்பதற்கான காரணங்களை 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். எனவே, ஒரு தவணையைத் தவறவிடுவது என்பது வங்கி உடனடியாக உங்கள் வீட்டையோ அல்லது வாகனத்தையோ ஜப்தி செய்யும் என்று அர்த்தமல்ல.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கடனை வசூலிக்கும்போது வங்கிகளும் அவற்றின் லோன் ஏஜென்ட்களும் மிரட்டல் அல்லது துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடன் வாங்கியவரைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவது அல்லது அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது ஆகியவை அடங்கும்.

இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/business/what-is-hybrid-loan-know-before-getting-loan-from-bank-98054.html"> ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>
<h3>வங்கி உங்களைத் துன்புறுத்தினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?</h3>
ஒரு லோன் ஏஜெண்ட் உங்களைத் துன்புறுத்தினால், அழைப்புப் பதிவுகள், வாட்ஸ்அப் செய்திகள், குரல் அஞ்சல்கள் மற்றும் பிற பதிவுகள் போன்ற ஆதாரங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும். முதலில், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அமைப்பில் புகார் அளிக்கப்பட வேண்டும். அங்கு பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், இந்த விஷயத்தை ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பு அமைப்புக்குக் கொண்டு செல்லலாம். கடுமையான அச்சுறுத்தல்கள், வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைதல் அல்லது உடல்ரீதியான வன்முறை போன்ற நிகழ்வுகளில், காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஒரே நெடுஞ்சாலையில் மாறுபடும் வேக வரம்புகள் &#8211; காரணம் என்ன தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/why-speed-limits-change-on-highways-and-expressways-explained-98338.html</link>	
		<pubDate>Sat, 15 Aug 2026 17:07:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/why-speed-limits-change-on-highways-and-expressways-explained-98338.html</guid>
		            
			

    	<description><![CDATA[Highway Speed Limits : நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சில இடங்களில் வேகக் கட்டுப்பாடு மாறுபட்டிருக்கும். சில இடங்களில் அதிகபட் வேகம் 120 கி.மீ எனவும் சில இடங்களில் அதிகபட்ச வேகம் 100 அல்லது 80 கி.மீ எனவும் குறிப்பிட்டிருக்கும். அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/highway-speed-limits.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஒரே நெடுஞ்சாலையில் மாறுபடும் வேக வரம்புகள் &#8211; காரணம் என்ன தெரியுமா?" /></figure>நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சாலைப்போக்குவரத்து மேம்பாடு அடைந்துள்ளது. <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/high-court-orders-that-no-harsh-action-taken-against-e-v-velu-in-the-highways-department-irregularities-case-98137.html" target="_blank" rel="noopener">நெடுஞ்சாலைகளின்</a> தரத்தால் வெகுவாக நம் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடிகிறது. இருப்பினும் சாலைகளில் சில இடங்களில் வேக வரம்பு 120 கி.மீ எனவும், சில இடங்களில் 100 கி.மீ அல்லது. 80 கி.மீ என்றும் இருக்கலாம். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி யோசித்து இருக்கிறீர்களா? அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
<h3>ஒரே நெடுஞ்சாலையில் மாறுபடும் வேக வரம்புகள்</h3>
உதாரணமாக அதிவிரைவு சாலைகளில் கார்களுக்கு மணிக்கு 120 கி.மீ வரையிலான அதிகபட்ச வேகம் அனுமதிக்கப்படுகிறது. அதே நேரம் பல சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த வரம்பு மணிக்கு 100 கி.மீ அல்லது 80 கி.மீ ஆக குறைக்கப்பட்டிருக்கும். ஏன் இந்த மாற்றம் என உங்களுக்கு கேள்வி எழுந்திருக்கலாம். வேக வரம்புகளை தீர்மானிப்பதில் ​​சாலையின் அமைப்பு, வடிவமைப்பு, போக்குவரத்து, வளைவுகள் அதிகம் கொண்ட சாலைகள் மற்றும் மிக முக்கியமாகப் பொதுப் பாதுகாப்பு போன்ற காரணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் கருத்தில் கொள்கின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/what-is-hybrid-loan-know-before-getting-loan-from-bank-98054.html">ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!</a></strong>

குறிப்பாக அதிவிரைவு சாலைகள், வாகனங்களோ அல்லது நடந்துசெல்லும் திடீரெனச் சாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. அதாவது பெரும்பாலும் ஊர் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் சாலை இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். வழியில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சாலையைக் கடப்பது போன்ற சிக்கல்கள் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாகவே அங்கு அதிக வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதற்கு மாறாக, சாதாரண தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாகச் செல்கின்றன. அவற்றில் சாலையை கடக்க உதவும் சந்திப்புகள் அதிகம் இருக்கும். இப்பகுதிகளில் வாகனங்கள், பாதசாரிகள் அல்லது விலங்குகள் திடீரெனச் சாலையை கடக்கலாம். எனவே, விபத்து அபாயத்தைக் குறைக்க வேக வரம்புகள் குறைவாக வைக்கப்படுகின்றன.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/business/sukanya-samriddhi-yojana-you-can-invest-5000-rupees-monthly-and-can-get-28-lakh-rupees-return-98014.html"> SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?</a></strong>

சாலைகளை வடிவமைக்கும்போது, ​​ஒரு வாகனம் வளைவில் பாதுகாப்பாகச் செல்லக்கூடிய வேகத்தை பொறியாளர்கள் கருத்தில் கொள்கின்றனர். விரைவுச் சாலைகள் பொதுவாக ஓட்டுநர்களுக்கு சிறந்த பார்வைத்திறனை வழங்கும் வகையிலான பரந்த வளைவுகளைக் கொண்டுள்ளன. இதனால் ஓட்டுநர்கள் சாலையைத் தெளிவாகப் பார்க்கவும், அதிவேகத்திலும் வாகனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடிகிறது.

இதற்கு மாறாக, சாதாரண சாலைகளில், குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில், வளைவுகள் மிகவும் கூர்மையாக இருக்கலாம். அத்தகைய இடங்களில், வாகனம் சறுக்குவதற்கோ அல்லது கட்டுப்பாட்டை இழப்பதற்கோ வழிவகுக்கும். எனவே, வளைவுகள், பாலங்கள், சரிவுகள் மற்றும் பிற முக்கியமான பகுதிகளில் வேக வரம்புகள் குறைக்கப்படுகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் &#8211; ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/sbi-har-ghar-lakhpati-scheme-lets-you-build-rs-1-lakh-with-small-monthly-deposits-98313.html</link>	
		<pubDate>Sat, 15 Aug 2026 16:18:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/sbi-har-ghar-lakhpati-scheme-lets-you-build-rs-1-lakh-with-small-monthly-deposits-98313.html</guid>
		            
			

    	<description><![CDATA[SBI Savings Scheme : ஸ்டேட் வங்கியின் ஹர் கர் லக்பதி  வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி,குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்கலாம். வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான தேர்வு காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/sbi-savings-scheme-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் &#8211; ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்" /></figure>மாதம் சிறிய தொகையாக சேமித்து எதிர்காலத்தில் மிகப்பெரிய லாபம் பெற நினைப்பவர்களுக்கு இந்திய ஸ்டேட்<a href="https://www.tv9tamilnews.com/business/rbi-keeps-repo-rate-unchanged-what-it-means-for-your-home-loan-23991.html" target="_blank" rel="noopener"> வங்கி</a> பஹ் கர் லக்பதி என்ற தொடர் வைப்பு திட்டத்தை வழங்குகிறது. குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால நிதி தேவைகளுக்கு திட்டமிட்டு சேமிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய ஸ்டேட் வங்கி ஹர் கர் லக்பதி (Har Ghar Lakhpati) என்ற தொடர் வைப்பு நிதி திட்டம் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலத்தில் மிகப்பெரிய லாபம் தரும் திட்டமாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி,குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்கலாம். வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான தேர்வு காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது திட்டத்தின் முடிவில் எவ்வளவு தொகையை பெற வேண்டும் என்பதை திட்டமிட்டு அதற்கு ஏற்ப சேமிப்பு காலத்தை முடிவு செய்துகொள்ளலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/what-is-hybrid-loan-know-before-getting-loan-from-bank-98054.html">ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!</a></strong>
<h3>யாரெல்லாம் கணக்கு தொடங்கலாம்?</h3>
இந்தத் திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் தனிநபராகவும் அல்லது தனது மனைவி அல்லது குடும்பத்தில் ஒருவருடன் இணைந்து தொடங்கலாம். மேலும் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகள் தங்களது பெயரில் கணக்கு தொடங்கலாம். அதற்கு குறைவான குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் கணக்கு தொடங்க முடியும். இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தில் உயர்கல்வி செலவுகளுக்கு இப்போது இருந்தே சேமிக்க முடியும்.
<h3>ரூ.1 லட்சம் பெற மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்?</h3>
இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் என்ற இலக்கை அடைய விரும்புகிறவர்களுக்கு காலத்தை பொறுத்து மாதம் செலுத்த வேண்டிய தொகையும் மாறுபடும். குறிப்பாக இந்த திட்டத்தில் 8 சதவிகித வருமானம் கிடைக்கும் என வைத்துக்கொண்டால் அதற்கு ஏற்ப மாதம் கால அளவை பொறுத்து மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என பார்க்கலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/sukanya-samriddhi-yojana-you-can-invest-5000-rupees-monthly-and-can-get-28-lakh-rupees-return-98014.html">SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?</a></strong>
<ul>
 	<li>உதாரணமாக 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் பெற வேண்டும் என்றால் மாதம் ரூ.2,510 செலுத்த வேண்டும்.</li>
 	<li>அதே போல 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் என்ற இலக்கை அடைய மாதம் ரூ.1.420 சேமிக்க வேண்டும்.</li>
 	<li>மேலும் 10 ஆண்டுகளில் 1 லட்சம் பெற வேண்டும் என்றால் மாதம் ரூ.610 செலுத்த வேண்டும்.</li>
</ul>
அதாவது நீண்ட காலத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் செலுத்த வேண்டிய தொகையும் குறையும். நம் மாத வருமானம், வீட்டுக்கு ஆகும் செலவுகள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு நம்மால் மாதம் எவ்வளவு மிச்சமாகும் என்பதற்கு திட்டத்தின் கால அளவை தேர்ந்தெடுக்கலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இன்று தான் கடைசி தேதி.. இகேஒய்சி செய்யவில்லை என்றால் நாளை முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-complete-ekyc-today-you-will-not-get-gas-cylinders-from-august-16-2026-98254.html</link>	
		<pubDate>Sat, 15 Aug 2026 12:20:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-complete-ekyc-today-you-will-not-get-gas-cylinders-from-august-16-2026-98254.html</guid>
		            
			

    	<description><![CDATA[Complete eKYC To Get Gas Cylinders | இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 15, 2026) கேஸ் சிலிண்டருக்கான இகேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gas-cylinder-kyc-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இன்று தான் கடைசி தேதி.. இகேஒய்சி செய்யவில்லை என்றால் நாளை முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!" /></figure>இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் தங்களது சமையல் தேவைக்கு, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை <strong>(LPG Gas Cylinders)</strong> பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு சிலிண்டர் கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது. அதாவது, கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள அனைவரும், இன்று (ஆகஸ்ட் 15, 2026) தங்களது கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான இகேஒய்சியை <strong>(KYC - Know Your Customer)</strong> மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்களால் நாளை (ஆகஸ்ட் 16, 2026) முதல் கேஸ் சிலிண்டர் பெற முடியாது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் கேஒய்சி மேற்கொள்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கேஸ் இணைப்புகளுக்கு இகேஒய்சி கட்டாயம்</h3>
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளிட்டவற்றின் மூலம் இந்திய பொதுமக்கள் மத்தியில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு பரவலாக அதிகரித்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் தங்களது சமையல் தேவைகளுக்கு கேஸ் சிலிண்டர்களை தான் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஈரான் போரின் போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக இந்தியா மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்டது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-around-5000-rupees-in-just-10-days-is-this-right-time-to-invest-98029.html">Gold Price : 10 நாட்களில் ரூ.5,000 வரை உயர்ந்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இது சரியான நேரமா?</a>

இந்த நிலையில் தான் அனைத்து குடும்பங்களுக்கு எந்தவித சிக்கல்களும் இன்றி கேஸ் சிலிண்டர்கள் சென்று சேறுவதை உறுதி செய்யும் விதமாக அரசு சில முக்கிய விதிகளை அறிமுகம் செய்தது. குறிப்பாக கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் நபர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை நிர்ணயம் செய்தது.
<h3>கேஸ் சிலிண்டர் இகேஒய்சி மேற்கொள்வது எப்படி?</h3>
இந்த நிலையில் தான் கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சியை கட்டாயமாக மாற்றியது. இன்றுடன் அதற்கான கால அவகாசம் நிறைவடையும் நிலையில், நாளை முதல் இகேஒய்சி மேற்கொள்ளாதவர்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது.
<ol>
 	<li>முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில்<strong> Aadhaar FaceRD</strong> செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.</li>
 	<li>பிறகு நீங்கள் எந்த நிறுவனத்தின் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அந்த நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.</li>
 	<li>அதில் உங்களது நுகர்வோர் எண் அல்லது கேஸ் இணைப்புக்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.</li>
 	<li>செயலிக்குள் சென்று அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் <strong>Re-eKYC</strong> அல்லது <strong>Aadhaar e-KYC</strong> என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.</li>
 	<li>அங்கு உங்களது ஆதார் எண்ணை உள்ளிட்டு, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை ஏற்று <strong>Face Scan</strong> என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.</li>
 	<li>இப்போது <strong>Aadhaar FaceRD</strong> கேமரா திரையில் தோன்றும். அதனை பயன்படுத்தி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.</li>
 	<li>ஸ்கேன் முடிந்ததும், உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். கடைசியாக Submit பட்டனை அழுத்தி உங்களது இகேஒய்சியை முடிக்க வேண்டும்.</li>
</ol> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-15th-august-gold-increases-by-160-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-98243.html</link>	
		<pubDate>Sat, 15 Aug 2026 10:25:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-15th-august-gold-increases-by-160-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-98243.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Hiked In Chennai Today | சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-28.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 15 :</strong> சென்னையில் தங்கம் விலை <strong>(Gold Price)</strong> நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 14, 2026) தங்கம் விலை கடும்  சரிவை சந்தித்த நிலையில், இன்று (ஆகச்ட் 15, 2026) விலை உயர்ந்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் <strong>(Silver Price)</strong> மாற்றமில்லாமல் உள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை</h3>
புவிசார் பதற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில், தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/sukanya-samriddhi-yojana-you-can-invest-5000-rupees-monthly-and-can-get-28-lakh-rupees-return-98014.html">SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?</a>

ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும் ஒரு கிராம் தங்கம் ரூ.14,000-த்தை தாண்டாமல் இருந்தது. இந்த நிலையில் தான், ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை ரூ.14,000-த்தை தாண்டியுள்ளது.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.255-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிஎம் ஸ்வநிதி திட்டம் &#8211; சிறு வியாபாரிகளுக்கு ரூ.90,000 கடன்  &#8211; எப்படி பெறுவது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/pm-svanidhi-scheme-offers-street-vendors-collateral-free-loans-up-to-rs-90000-98178.html</link>	
		<pubDate>Fri, 14 Aug 2026 21:59:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/pm-svanidhi-scheme-offers-street-vendors-collateral-free-loans-up-to-rs-90000-98178.html</guid>
		            
			

    	<description><![CDATA[PM SVANidhi Scheme  : சாலையோர வியாபாரிகளுக்காக மத்திய அரசு பிஎம் ஸ்வநிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம், வியாபாரிகள் எவ்வித உத்தரவாதமும் அல்லது பிணையமும் இன்றி ரூ.90,000 வரை கடன் பெறலாம். குறிப்பாக புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pm-svanidhi-scheme.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிஎம் ஸ்வநிதி திட்டம் &#8211; சிறு வியாபாரிகளுக்கு ரூ.90,000 கடன்  &#8211; எப்படி பெறுவது?" /></figure>சிறு தொழில்முனைவோருக்காக மத்திய அரசு <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurai-street-vendor-receives-appreciation-letter-from-pm-modi-under-pm-svanidhi-scheme-95294.html" target="_blank" rel="noopener">பிஎம் ஸ்வநிதி</a> என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், எவ்வித பிணையமும் இன்றி கடனைப் பெறலாம். சிக்கலான ஆவணங்கள் ஏதுமின்றி எளிதாகக் கடன்களைப் பெறும் வசதி இதில் உள்ளது. சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு மானியங்கள் மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதிகள் உள்ளிட்ட பல நன்மைகளை மத்திய அரசு வழங்குகிறது.

அந்த வகையில் சாலையோர வியாபாரிகளுக்காக மத்திய அரசு பிஎம் ஸ்வநிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம், வியாபாரிகள் எவ்வித உத்தரவாதமும் அல்லது பிணையமும் இன்றி ரூ.90,000 வரை கடன் பெறலாம். இதற்கென ஒரு சிறப்பு கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது, இதன் மூலம் பயனாளிகள் தேவைப்படும்போது பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஜூன் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகளுக்குப் பெரிதும் உதவியது. இத்திட்டம் மார்ச் 2030 வரை செயல்பாட்டில் இருக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-planning-for-new-loan-pricing-rules-97864.html">இனி வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி போட முடியாது.. செக் வைத்த ஆர்பிஐ!</a></strong>
<h3>எப்படி கடன் பெறுவது?</h3>
இக்கடனைப் பெறச் சிறப்பு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை; ஆதார் அட்டை போதுமானது. உங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்களைச் சமர்ப்பித்தாலே போதுமானது. இக்கடனை மாதத் தவணைகளாக திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், இக்கடனைப் பெற அருகிலுள்ள எந்தவொரு வங்கிக்கும் நீங்கள் செல்லலாம். பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் அங்கு உங்கள் தகுதி சரிபார்க்கப்பட்டு, கடன் விரைவாக அனுமதிக்கப்படும்.

இதுவரை நாடு முழுவதும் 75.5 லட்சம் பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.17,800 கோடிக்கும் அதிகமான கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் 55 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் பலன்களைப் பெற்றுள்ளனர். கடனுக்கான வட்டியைச் சரியான நேரத்தில் செலுத்துவோருக்கு வட்டி மானியம் மற்றும் 'கேஷ்பேக்' சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் பயனாளிகள் மொத்தம் ரூ.800 கோடி நிதியைப் பெற்றுள்ளனர். பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் வரம்பு முன்பு ரூ.80,000 ஆக இருந்த நிலையில், மத்திய அரசு அதை மேலும் ரூ.10,000 அதிகரிக்க முடிவு செய்தது. தற்போது, ​​சிறு தொழில்முனைவோர் ரூ.90,000 வரை கடன் பெறலாம். கடன் வழங்குவதற்கு முன் அதற்கான தகுதி சரிபார்க்கப்படுகிறது. கடன் தொகையை மூன்று கட்டங்களாகப் பெறலாம்: முதலில் ரூ.15,000, அதைத் தொடர்ந்து ரூ.25,000, மற்றும் இறுதியாக மூன்றாம் கட்டத்தில் ரூ.50,000 எனத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-do-kyc-for-your-gas-cylinder-connection-you-will-not-get-gas-cylinder-and-subsidy-as-well-97820.html">இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!</a></strong>
<h3>ரூ.30,000 வரம்பு கொண்ட கிரெடிட் கார்டு</h3>
பயனாளிகளுக்கு யுபிஐயுடன் இணைக்கப்பட்ட ரூபே கிரெடிட் கார்டும் வழங்கப்படுகிறது. முதல் இரண்டு கடன் தவணைகளைச் சரியாகச் செலுத்துபவர்கள், ரூ.30,000 வரம்பு கொண்ட கிரெடிட் கார்டைப் பெறத் தகுதி பெறுகிறார்கள். பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கார்டை யுபிஐ உடன் இணைக்கலாம். மேலும், சில்லறை மற்றும் மொத்த விற்பனைப் பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் கட்டணச் செலுத்துதல்களுக்கு 'கேஷ்பேக்' சலுகையும் வழங்கப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் கிடுகிடுவென உயர்வு &#8211; எவ்வளவு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/chennai-gold-price-surges-in-evening-after-sharp-morning-fall-98154.html</link>	
		<pubDate>Fri, 14 Aug 2026 19:35:49 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/chennai-gold-price-surges-in-evening-after-sharp-morning-fall-98154.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Rate : கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஆகஸ்ட் 14, 2026 இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்த நிலையில் மாலையே மீண்டும் ரூ.1,280 உயர்ந்தது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-rate-in-chennai-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் கிடுகிடுவென உயர்வு &#8211; எவ்வளவு தெரியுமா?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/dmk-rs-bharathi-has-sparked-a-major-controversy-by-criticizing-the-voters-who-defeated-m-subramanian-in-the-saidapet-constituency-stating-they-will-not-have-a-good-death-98062.html" target="_blank" rel="noopener">சென்னையில்</a> தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 14, 2026 இன்று காலை குறைந்த <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-around-5000-rupees-in-just-10-days-is-this-right-time-to-invest-98029.html" target="_blank" rel="noopener">தங்கம்</a> விலை மாலையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இது நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் தங்க நகை என்பது வெறும் அலங்காரப் பொருள் அல்ல. அது ஒரு சிறந்த முதலீடு. எப்போதுமே தங்கம் விலை ஏற்றத்தில் இருக்கும் என்பதால், தற்சமயம் தங்கம் வாங்கினால் எதிர்காலத்தில் நமக்கு பெரிதும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. அந்த வகையில் ஆகஸ்ட் 12, 2026 அன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13, 2026 நேற்றும் தங்கம் விலை ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760க்கு விற்பனை செய்யப்பட்டது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-planning-for-new-loan-pricing-rules-97864.html">இனி வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி போட முடியாது.. செக் வைத்த ஆர்பிஐ!</a></strong>
<h3>காலையில் குறைந்த தங்கம் விலை</h3>
இந்த நிலையில், ஆகஸ்ட் 14, 2026 இன்று காலை தங்கம் விலை குறைந்தது. அதன் படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதே போல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.180 குறைந்து ரூ.14,040க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்தது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியது.
<h3>மாலையில் மீண்டும் உயர்வு</h3>
விலை குறைந்த நிலையில் தங்கம் வாங்க இது சரியான தருணம் என தங்கம் வாங்க திட்டமிட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 14, 2026 இன்று மாலையே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. காலையுடன் ஒப்பிடுகையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனையாகிறது. காலையில் ஒரு சவரன் தங்கம் விலை குறைந்து ரூ.1,12,320க்கு விற்பனையான நிலையில், மாலையிலேயே மீண்டும் உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனையாகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-do-kyc-for-your-gas-cylinder-connection-you-will-not-get-gas-cylinder-and-subsidy-as-well-97820.html">இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!</a></strong>
<h3>வெள்ளி விலை நிலவரம்</h3>
தங்கத்தை போல வெள்ளியின் விலையும் ஆகஸ்ட் 14, 2026 இன்று காலை குறைந்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.255க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து 2,55,000க்கும் விர்பனை செய்யப்பட்டது. ஆனால் வெள்ளியின் விலை மாற்றம் செய்யப்படவில்லை. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/what-is-hybrid-loan-know-before-getting-loan-from-bank-98054.html</link>	
		<pubDate>Fri, 14 Aug 2026 13:55:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/what-is-hybrid-loan-know-before-getting-loan-from-bank-98054.html</guid>
		            
			

    	<description><![CDATA[What Is Hybrid Loan | வீட்டு கடன், வாகன கடன் என வாங்கி பெரும்பாலான மக்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். இந்த நிலையில், ஹைபிரிட் லோன் என்றால் என்ன, அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/hybrid-loan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சொந்த வீடு கனவை வங்கி கடன் மூலமே நிறைவேற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு வங்கி கடன் வாங்க நினைக்கும் நபர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய குழப்பம் ஒன்று உள்ளது. அதுதான் நிலையான வட்டியில் <strong>(Fixed Rate)</strong> வீட்டு கடன் வாங்குவதா அல்லது ஃப்ளோடிங் ரேட் <strong>(Floating Rate)</strong> எனப்படும் மாறிக்கொண்டே இருக்கும் வட்டி முறையில் வீட்டு கடன் வாங்குவதா என்பதுதான். இந்த சூழலில், பொதுமக்களின் குழப்பத்தை போக்கி அவர்கள் தெளிவான முடிவை எடுக்க உதவுவதுதான் ஹைபிரிட் ஹோம் லோன்<strong> (Hybrid Home Loan)</strong> முறை. இந்த முறை குறித்து பலருக்கும் தெரியாமல் இருக்கும்.

இந்த நிலையில், ஹைபிரிட் ஹோம் லோன் என்றால் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஹைபிரிட் ஹோம் லோன் என்றால் என்ன?</h3>
ஹைபிரிட் ஹோம் லோன் என்பது நிலையான வட்டி, ஃப்ளோடிங் வட்டி இவை இரண்டையும் சேர்த்து வழங்கும் அம்சமாகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி வீட்டு கடன் வாங்கும் நபர்கள், ஒரே நேரத்தில் இரண்டு பலன்களையும் பெற முடியும். அதாவது, சந்தையின் நிலவரத்தை பொருத்து கடனின் ஒரு பகுதியை நிலையான வட்டி கொண்டதாகவும், மற்றொரு பகுதியை ஃப்ளோடிங் வட்டி முறை கொண்டதாகவும் மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-do-kyc-for-your-gas-cylinder-connection-you-will-not-get-gas-cylinder-and-subsidy-as-well-97820.html">இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!</a>
<h3>இந்த கடன் எப்படி செயல்படும்?</h3>
ஹைபிரிட் முறையில் நீங்கள் வீட்டு கடன் பெற்றால், நீங்கள் அதற்கு ஏற்ப வங்கிகளிடம் பேசி முடிவை எடுக்கலாம். உதாரணமாக நீங்கள் 5 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் கால அளவீட்டில் கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் முதல் 3 ஆண்டுகள் நீங்கள் நிலையான வட்டியை தேர்வு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, உங்களது வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/gold-price-will-cross-1-lakh-30-thousand-rupees-says-peter-schiff-photo-gallery-97787.html">Gold Price : தங்கம் விலை ரூ.1.30 லட்சத்தை தாண்டும்.. பீட்டர் ஷிப் கணிப்பு!</a>

மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு நீங்கள் ஃப்ளோடிங் வட்டியை தேர்வு செய்யும் பட்சத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை மாற்றம் செய்யும்போதெல்லாம் உங்களது கடனுக்கான வட்டியில் மாற்றம் ஏற்பட்டு மாத தவணையில் பிரதிபலிக்கும்.

இவ்வாறு நிலையான வட்டி மற்றும் ஃப்ளோடிங் வட்டி என இரண்டு பலன்களையுமே பெறுவது தான் ஹைபிரிட் ஹோம் லோன் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : 10 நாட்களில் ரூ.5,000 வரை உயர்ந்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இது சரியான நேரமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-around-5000-rupees-in-just-10-days-is-this-right-time-to-invest-98029.html</link>	
		<pubDate>Fri, 14 Aug 2026 12:40:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-around-5000-rupees-in-just-10-days-is-this-right-time-to-invest-98029.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Increased Around 5000 Rupees | தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் ரூ.5,000 விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா என பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-27.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : 10 நாட்களில் ரூ.5,000 வரை உயர்ந்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இது சரியான நேரமா?" /></figure>தங்கம் விலை <strong>(Gold Price)</strong> ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. குறிப்பாக ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து மந்தமான நிலையில் விற்பனையானது. தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இடையில் அவ்வப்போது சற்று சரிவையும் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா, இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்தித்து வரும் தங்கம்</h3>
<div class="table-responsive">
<table class="css-g3m580" style="border-collapse: collapse; width: 73.275%;" border="1">
<tbody>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;"><strong>தேதி </strong></td>
<td style="width: 24.6271%; text-align: center;"><strong>ஒரு கிராம் </strong></td>
<td style="width: 26.0782%; text-align: center;"><strong>ஒரு சவரன் </strong></td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">05 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.13,480</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,07,840</td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">06 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.13,750</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,10,000</td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">07 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.13,900</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,11,200</td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">08 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.13,965</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,11,720</td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">09 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.13,965</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,11,720</td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">10 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.13,950</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,11,600</td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">11 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.14,150</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,13,200</td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">12 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.14,200</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,13,600</td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">13 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.14,220</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,13,760</td>
</tr>
<tr>
<td style="width: 22.5715%; text-align: center;">14 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 24.6271%; text-align: center;">ரூ.14,040</td>
<td style="width: 26.0782%; text-align: center;">ரூ.1,12,320</td>
</tr>
</tbody>
</table>
ஆகஸ்ட் 05, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் வெறும் ரூ.13,480-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே இன்று (ஆகஸ்ட் 14, 2026) ஒரு கிராம் ரூ.14,040-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.560 உயர்ந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.4,480 உயர்வை சந்தித்துள்ளது.
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/gold-price-will-cross-1-lakh-30-thousand-rupees-says-peter-schiff-photo-gallery-97787.html">Gold Price : தங்கம் விலை ரூ.1.30 லட்சத்தை தாண்டும்.. பீட்டர் ஷிப் கணிப்பு!</a></p>

<h3>தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது சரியானதா?</h3>
ஜூன் மாதத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்திருந்தாலும், தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது சரியான நேரமாக இருக்கும் என்றும் இனி வரும் காலங்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/are-you-going-to-buy-car-with-loan-do-not-do-these-mistakes-97777.html"> லோன் வாங்கி கார் வாங்க போறீங்களா?.. இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!</a>

எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தற்போதே முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/sukanya-samriddhi-yojana-you-can-invest-5000-rupees-monthly-and-can-get-28-lakh-rupees-return-98014.html</link>	
		<pubDate>Fri, 14 Aug 2026 11:20:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/sukanya-samriddhi-yojana-you-can-invest-5000-rupees-monthly-and-can-get-28-lakh-rupees-return-98014.html</guid>
		            
			

    	<description><![CDATA[Sukanya Samriddhi Yojana Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ssy-scheme.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?" /></figure>அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மூத்த குடிமக்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் தனித்தனி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் குழந்தைகளுக்காக அரசு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தி வரும் திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதற்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா <strong>(SSY - Sukanya Samriddhi Yojana)</strong> என பெயர்.

இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>செல்வமகள் சேமிப்பு திட்டம் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
முழுக்க முழுக்க பெண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சலங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் முதலீட்டு திட்டமாக இது உள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு 10 வயது நிறைவடைவதற்குள் கணக்கு தொடங்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/are-you-going-to-buy-car-with-loan-do-not-do-these-mistakes-97777.html">லோன் வாங்கி கார் வாங்க போறீங்களா?.. இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!</a>
<h3>ரூ.28 லட்சம் நிதியை உருவாக்குவது எப்படி?</h3>
இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.5,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களால் ஆண்டுக்கு ரூ.60,000 முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாக இருந்தாலும், 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்வதே போதுமானதாக உள்ளது. அவ்வாறு 15 ஆண்டுகள், ஆண்டுக்கு ரூ.60,000 என முதலீடு செய்தால் மொத்தமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html">5 கிலோ கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி.. என்ன என்ன ஆவணங்கள் தேவை?</a>

நீங்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்ய வேண்டாம். ஆனால், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு அடுத்த 6 ஆண்டுகளுக்கு வட்டி வழங்கப்படும். உதாரணமாக 15 ஆண்டுகளில் நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்துள்ளீர்கள் என்றால் அதற்கான வட்டியாக மட்டும் ரூ.19,72,848 கிடைக்கும். இதன் மூலம் திட்டத்தின் முடிவில் நீங்கள் மொத்தமாக ரூ.28,72,848 பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,440 சரிவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-14th-august-gold-decreases-by-1440-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-98009.html</link>	
		<pubDate>Fri, 14 Aug 2026 10:14:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-14th-august-gold-decreases-by-1440-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-98009.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price In Chennai Today | சென்னையில் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 14, 2026) சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-33.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,440 சரிவு!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 14 :</strong> சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை <strong>(Gold Price)</strong> தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 14, 2026) அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்துள்ள நிலையில்,  வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை <strong>(Silver Price)</strong> நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம்</h3>
ஈரான் போரால் ஏற்பட்ட புவிசார் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிரடி உயர்வை சந்தித்தது உள்ளிட்டவற்றின் காரணமாக உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து விலகி இருந்தது. இதன் காரணமாக, தங்கம் விலை கடந்த இரண்டு மாதங்களாக சற்று மந்தமாக இருந்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/are-you-going-to-buy-car-with-loan-do-not-do-these-mistakes-97777.html">லோன் வாங்கி கார் வாங்க போறீங்களா?.. இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!</a>

தற்போது ஈரான் போரால் ஏற்பட்ட பதற்றம் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் சீராக உள்ளது. அதுமட்டுமன்றி, அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றின் காரணமாக உலக முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்</h3>
உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதன் காரணமாக 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.180 சரிந்து ஒரு கிராம் ரூ.14,040-க்கும், சவரனுக்கு ரூ.1,440 சரிவை சந்தித்து ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html">5 கிலோ கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி.. என்ன என்ன ஆவணங்கள் தேவை?</a>

முன்னதாக ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜுலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை கண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டு விலை உயர்வை அடைய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி போட முடியாது.. செக் வைத்த ஆர்பிஐ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-planning-for-new-loan-pricing-rules-97864.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 17:25:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-planning-for-new-loan-pricing-rules-97864.html</guid>
		            
			

    	<description><![CDATA[RBI Planning New Rules For Banks | இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் வட்டி விகிதம் குறித்த புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/rbi-rules.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி போட முடியாது.. செக் வைத்த ஆர்பிஐ!" /></figure>வங்கிகள் மற்றும் கடன் விதிகள் தொடர்பான பல்வேறு முக்கிய மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி<strong> (RBI - Reserve Bank Of India)</strong> மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஒரு புதிய விதிமுறையை அறிமுகம் செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தெளிவான மற்றும் வெளிப்படையான வட்டி முறையை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும் என்பதை ஆர்பிஐ வலியுறுத்துகிறது. இந்த நிலையில், வங்கிகளில் வட்டி விகிதம் தொடர்பாக ஆர்பிஐ அறிமுகம் செய்ய உள்ள முக்கிய விதி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்</h3>
தற்போது வங்கிகள் இரண்டு முறைகளில் வட்டி வசூல் செய்கின்றன. ஒன்று நிலையான வட்டி <strong>(Fixed Interest Rate)</strong> மற்றொன்று ஃப்ளோடிங் வட்டி <strong>(Floating Interest Rate)</strong>. நிலையான வட்டி என்பது, வாடிக்கையாளர்கள் வங்கி கடன் வாங்கியது முதல், அதனை முழுமையாக திருப்பி செலுத்துவதை ஒரே வட்டி விகிதத்தை கடைபிடிப்பது ஆகும். இதுவே ஃப்ளோடிங் வட்டி முறை என்றால் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி<strong> (Repo Rate)</strong> விகிதத்தை மாற்றம் செய்யும் பட்சத்தில் வங்கி கடனுக்கான வட்டியில் மாற்றம் ஏற்படும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html">5 கிலோ கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி.. என்ன என்ன ஆவணங்கள் தேவை?</a>

கடன் வாங்கும் நபர்கள், தாங்கள் எவ்வளவு கடன் பெறுகிறோம், எவ்வளவு வட்டி செலுத்துகிறோம் என்பதை வங்கிகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும், அதேபோல வங்கிகளும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வட்டியில் மாற்றத்தை மேற்கொள்ளாமல் ஆர்பிஐ-ன் விதிமுறையின் கீழ் வட்டியை கடைபிடிக்க வேண்டும் என்றும், ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படும்போதெல்லாம் அதனுடைய பலன் உடனடியாக பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முக்கிய விதியை அறிமுகம் செய்ய உள்ளது.
<h3>வங்கிகள் என்ன செய்ய வேண்டும்?</h3>
ஆர்பிஐ-ன் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு வங்கியும் வட்டி தொடர்பான ஒரு பாலிசியை உருவாக்கி அந்த அந்த நிர்வாக குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதனை ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்து ஒப்புதல் பெற வேண்டும். பிக்சட் வட்டி மற்றும் ஃப்ளோடிங் வட்டி எதுவாக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள பென்ச்மார்க் விகிதத்தின் கீழ் எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் கடன் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த புதிய விதி இருக்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-do-kyc-for-your-gas-cylinder-connection-you-will-not-get-gas-cylinder-and-subsidy-as-well-97820.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 13:53:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-do-kyc-for-your-gas-cylinder-connection-you-will-not-get-gas-cylinder-and-subsidy-as-well-97820.html</guid>
		            
			

    	<description><![CDATA[KYC Mandatory For Gas Cylinder and Subsidy | இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பங்கள் கேஸ் சிலிண்டர் இணைப்பை வைத்துள்ளனர். இந்த நிலையில், கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் ஆகஸ்ட் 16-ல் இருந்து இருந்து கேஸ் சிலிண்டர் மற்றும் மானியம் கிடைக்காது என கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/lpg.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து குடும்பங்களிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் <strong>(LPG Gas Cylinders)</strong> பயன்படுத்தப்படுகிறது. அரசின் திட்டங்கள் மூலம் பெரிய நகரங்கள் மட்டுமன்றி, கடைகோடி கிராமங்கள் வரை இந்த கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான், ஆகஸ்ட் 15, 2026-க்குள் இதனை செய்து முடிக்கவில்லை என்றால், தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெற முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கேஸ் சிலிண்டர்களுக்கு கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது</h3>
இந்தியாவில் உஜ்வாலா திட்டம் மற்றும் வழக்கமான கேஸ் இணைப்புகள் மூலம், கோடிக்கணக்கான குடும்பங்கள் கேஸ் சிலிண்டர்களை பெற்று வருகின்றனர். 2026, மார்ச் மாதம் ஈரான் போர் காரணமாக இந்தியாவில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. தற்போது ஈரான் போரின் பதற்றம் ஓய்ந்து, நிலமை சீராக இருந்தாலும் கேஸ் சிலிண்டர்களை பெற கேஒய்சி மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/airtel-deletes-4-prepaid-recharge-plans-starting-from-rs-299-pack-new-plans-with-higher-prices-coming-97723.html">ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக்.. ரூ.299 உள்ளிட்ட 4 ரீசார்ஜ் திட்டங்கள் திடீர் நீக்கம்!</a>
<h3>ஆகஸ்ட் 15-க்குள் முடிக்கவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் இல்லை</h3>
வீட்டு உபயோகத்திற்காக கேஸ் சிலிண்டர் பெற்றுள்ள அனைவரும், தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெற வேண்டும் என்றால் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 15, 2026 தான் கடைசி தேதியாக உள்ளது. ஒருவேளை எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயனர்கள் ஆகஸ்ட் 15, 2026-க்குள் கேஸ் சிலிண்டர்களுக்கான கேஒய்சி <strong>(KYC - Know Your Customer)</strong> மேற்கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெறுவது மற்றும் மானியம் பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/artificial-intelligence-will-decide-whether-to-give-loan-or-not-says-rbi-governor-97569.html">இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!</a>

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.300 என்ற அளவில் மானியம் வழங்கப்படும் நிலையில், கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் அந்த மானியம் கிடைக்காமல் போகலாம். எனவே, பயனர்கள் தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெற வேண்டும் அல்லது கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் பெற வேண்டும் என்றால் கட்டாயம் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : தங்கம் விலை ரூ.1.30 லட்சத்தை தாண்டும்.. பீட்டர் ஷிப் கணிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/gold-price-will-cross-1-lakh-30-thousand-rupees-says-peter-schiff-photo-gallery-97787.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 11:36:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/gold-price-will-cross-1-lakh-30-thousand-rupees-says-peter-schiff-photo-gallery-97787.html</guid>
		            
			    	<description><![CDATA[Gold Price Will Cross 1 Lakh 30 Thousand Rupees | தங்கம் விலை ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை விரைவில் ரூ.1.30 லட்சத்தை தாண்டும் என கூறப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/gold-price-will-cross-1-lakh-30-thousand-rupees-says-peter-schiff-photo-gallery-97787.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (2)" /></a></dt><p>ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 12 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,000 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. இதேபோல உலக சந்தையிலும் தங்கம் விலை உயர்வை சந்தித்து 4,000 டாலர்களில் இருந்து 4,400 டாலர்களாக  விற்பனை செய்யப்படுகிறது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/gold-price-will-cross-1-lakh-30-thousand-rupees-says-peter-schiff-photo-gallery-97787.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (1)" /></a></dt><p>தங்கம் இவ்வாறு தொடர் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் குறித்து உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், முதலீட்டாளருமான பீட்டர் ஷிப் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/gold-price-will-cross-1-lakh-30-thousand-rupees-says-peter-schiff-photo-gallery-97787.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (3)" /></a></dt><p>தங்கத்தில் விலை குறுகிய காலத்தில் சரிவை சந்தித்தாலும், அது வெறும் தற்காலிக திருத்தமே என கூறி வந்தோம். அதற்கு ஏற்ப, தற்போது தங்கம் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நீண்ட கால அடிப்படையில் தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்திக்கும் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார். 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/gold-price-will-cross-1-lakh-30-thousand-rupees-says-peter-schiff-photo-gallery-97787.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (4)" /></a></dt><p>2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியின் போது தங்கம் எவ்வாறு சரிவை சந்தித்து, பிறகு பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்ததோ அதேபோல தற்போதும் தங்கம் மிகப்பெரிய விலை உயர்வை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அப்போது 32 சதவீதம் சரிந்த தங்கம், சில ஆண்டுகளில் 178 சதவீதம் வளர்ச்சியை சந்தித்தது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/gold-price-will-cross-1-lakh-30-thousand-rupees-says-peter-schiff-photo-gallery-97787.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price (5)" /></a></dt><p>சர்வதேச சந்தையில் தங்கம் விலை 5,000 டாலர்களை கடக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தங்கம் விலை தற்போதுள்ள விலையை விட 13.64 சதவீதம் விலை உயர்வை சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது தங்கம் விலை ரூ.1,13,760 ஆக உள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.30 லட்சம் என்ற அளவை எட்டும் என அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>லோன் வாங்கி கார் வாங்க போறீங்களா?.. இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/are-you-going-to-buy-car-with-loan-do-not-do-these-mistakes-97777.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 10:55:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/are-you-going-to-buy-car-with-loan-do-not-do-these-mistakes-97777.html</guid>
		            
			

    	<description><![CDATA[Mistakes To Avoid In Car Loan | பெரும்பாலான மக்கள் லோன் வாங்கியாவது கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கார் வாங்குகின்றனர். அப்போது அவர்கள் இந்த சில விஷயங்களை கவனத்தில் கொள்வதில்லை. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/car-loan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="லோன் வாங்கி கார் வாங்க போறீங்களா?.. இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் காரும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக வங்கிகளில் கார் லோன்<strong> (Car Loan)</strong> பெற்று, மாத தவணை முறையில் <strong>(EMI - Every Month Installment)</strong> பலரும் கார் வாங்குகின்றனர். இதேபோல, வங்கிகளும் பொதுமக்களுக்கு கார் கடன்களை வழங்கி வருகின்றனர். ஆனால், அவ்வாறு வங்கியில் கடன் பெற்று கார் வாங்கும்போது இந்த  விஷயங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுவது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கார் லோன் - செய்யவே கூடாத முக்கிய விஷயங்கள்</h3>
லோன் வாங்கி கார் வாங்கும்போது இந்த சில தவறுகளை செய்வதன் மூலம் பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றை குறித்து தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
<h3>மாத தவணை தொகையை மட்டும் பார்ப்பது</h3>
பெரும்பாலான நபர்கள் மாத தவணை தொகை குறைவாக இருக்கிறது என கார் லோன் வாங்கி விடுகின்றனர். ஆனால், அது அப்படி அல்ல. மாத தவணை குறைவாக இருந்தால், எத்தனை ஆண்டுகளுக்கு மாத தவணை செலுத்த வேண்டும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். ஒருவேளை அதிக ஆண்டுகள் மாத தவணை செலுத்த வேண்டிய சூழல் இருந்தால், குறைந்த மாத தவணையுடன் சேர்த்து அதிக வட்டி செலுத்த வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/artificial-intelligence-will-decide-whether-to-give-loan-or-not-says-rbi-governor-97569.html">இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!</a>
<h3>முதல் லோன் ஆஃபர்</h3>
பெரும்பாலான நபர்கள் கார் வாங்கும் ஆர்வத்தில் தங்களுக்கு கிடைக்கும் முதல் லோன் ஆஃபரிலேயே கார் லோன் வாங்கிவிடுகின்றனர். அப்படி செய்யாமல், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து எது சிறப்பாக உள்ளது என தேர்வு செய்து கடன் பெற வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/new-rules-in-withdrawing-pf-money-from-epfo-government-explained-in-lok-sabha-97555.html">பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய விதிகள்.. மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!</a>
<h3>குறைந்த முன்பணம் செலுத்துவது</h3>
பெரும்பாலான நபர்கள் குறைந்த அளவு முன்பணம் செலுத்தி கார் வாங்கிக்கொண்டு, பிறகு மாத தவணை முறையில் பணத்தை திருப்பி செலுத்தலாம் என நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி இல்லை. குறைந்த முன்பணம் செலுத்தும் பட்சத்தில் அதிக வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, கார் வாங்கும்போது அதிக முன்பணம் செலுத்துவது அதிக வட்டி உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் வெள்ளி விலை.. ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து விற்பனை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/chennai-gold-and-silver-rate-13th-august-2026-gold-price-hiked-for-120-rupees-97775.html</link>	
		<pubDate>Thu, 13 Aug 2026 10:45:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/chennai-gold-and-silver-rate-13th-august-2026-gold-price-hiked-for-120-rupees-97775.html</guid>
		            
			

    	<description><![CDATA[ஆகஸ்ட் 13ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.15,513-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,104-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-aug-13.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் வெள்ளி விலை.. ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து விற்பனை.." /></figure><p class="isSelectedEnd"><strong>ஆகஸ்ட் 13, 2026:</strong> சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒரு கிராம் தங்கம் மீண்டும் ரூ.14 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஒரு கட்டத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13 ஆயிரம் வரை சரிந்தது.</p>

<h3>இன்றைய தங்கம் விலை:</h3>
<p class="isSelectedEnd">அந்த வகையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.15,513-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,104-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/business/artificial-intelligence-will-decide-whether-to-give-loan-or-not-says-rbi-governor-97569.html">இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!</a>
<h3>வெள்ளி விலையும் உயர்வு</h3>
<p class="isSelectedEnd">வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த மாதங்களில் பெரிய அளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.</p>
<p class="isSelectedEnd">இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>

<h3>மீண்டும் தங்கம் பக்கம் திரும்பிய கவனம்:</h3>
<p class="isSelectedEnd">தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p class="isSelectedEnd">எனினும், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது சரியான நேரமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2026ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.</p>
மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/business/airtel-deletes-4-prepaid-recharge-plans-starting-from-rs-299-pack-new-plans-with-higher-prices-coming-97723.html"> ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக்.. ரூ.299 உள்ளிட்ட 4 ரீசார்ஜ் திட்டங்கள் திடீர் நீக்கம்!</a>

ஈரான் போர் பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில், அமெரிக்க மத்திய வங்கி உடனடியாக வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதில்லை என்ற தகவலும் வெளியாகி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதால், தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>5 கிலோ கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி.. என்ன என்ன ஆவணங்கள் தேவை?</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 23:10:58 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html</guid>
		            
			    	<description><![CDATA[How To Get 5 KG LPG Gas Cylinders | பொதுமக்களின் வசதிக்காக 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டருக்கு விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gas-cylinder-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (1)" /></a></dt><p>கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் 5 கிலோ எடை கொண்ட சிறிய எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை அறிமுகம் செய்ய உள்ளன. இந்த நிலையில், இந்த 5 கிலோ கேஸ் சிலிண்டர்களை பெறுவது எப்படி, அதற்கு என்ன என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gas-cylinder-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (2)" /></a></dt><p>இந்த 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி கேஸ் சிலிண்டரை வாங்க பெரிதாக ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. ஒருசில நிமிடங்களிலேயே உங்களுடைய அடையாள ஆவணங்களை பயன்படுத்தி இந்த கேஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம். மற்ற வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை போல இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gas-cylinder-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (3)" /></a></dt><p>உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பாரத் கேஸ் விற்பனையாளரை அணுகி பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தால் போதுமானது. பான் அல்லது ஆதார் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து சிலிண்டரை பெறுவதற்கான செக்யூரிட்டி டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gas-cylinder-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (4)" /></a></dt><p>இந்த இரண்டு விஷயங்களை மட்டும் செய்தால் போதும், உங்களுக்கு 5 கிலோ எடை கொண்ட சிறிய கேஸ் சிலிண்டர் கிடைத்துவிடும். இந்த கேஸ் சிலிண்டரை நேரடியாக சென்று வாங்க முடியாத நபர்கள், பாரத் கேஸ்-ன் கட்டணமில்லா டோல் ப்ரீ எண்ணான 1800 22 4344 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு விண்ணப்பிக்கலாம்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-to-get-5-kg-lpg-gas-cylinders-what-are-the-documents-require-photo-gallery-97698.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gas-cylinder-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (5)" /></a></dt><p>ஹெச்பி அல்லது இன்டேன் கேஸ் சிலிண்டரை வாங்க வேண்டும் என்றால் அருகில் உள்ள பெட்ரோல் பங்க், சில்லறை விற்பனை நிலையங்களுக்கு செல்லலாம். அவற்றுக்கும் ஆதார் அல்லது பேன் ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிறுவனங்களின் இணையதளங்கள் மூலம் மீண்டும் சிலிண்டர்களை ரீஃபில் செய்துக்கொள்ளலாம். </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக்.. ரூ.299 உள்ளிட்ட 4 ரீசார்ஜ் திட்டங்கள் திடீர் நீக்கம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/airtel-deletes-4-prepaid-recharge-plans-starting-from-rs-299-pack-new-plans-with-higher-prices-coming-97723.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 21:38:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/airtel-deletes-4-prepaid-recharge-plans-starting-from-rs-299-pack-new-plans-with-higher-prices-coming-97723.html</guid>
		            
			

    	<description><![CDATA[இந்த மாற்றங்கள், இந்திய தொலைத்தொடர்பு துறையில் கட்டண உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நேரத்தில் வெளியாகியுள்ளன. சமீபத்திய Centrum Institutional Research அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களில் பிரீபெய்டு கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/aitel.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக்.. ரூ.299 உள்ளிட்ட 4 ரீசார்ஜ் திட்டங்கள் திடீர் நீக்கம்!" /></figure><strong>ஆகஸ்ட் 12, 2026:</strong> இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் தனது சில பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. ரூ.299, ரூ.579, ரூ.619 மற்றும் ரூ.649 ஆகிய 4 ரீசார்ஜ் திட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் தற்போது அதிக விலை கொண்ட மாற்றுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட திட்டங்களுக்கு மாற்றாக வழங்கப்படும் சில திட்டங்களின் விலை சுமார் 5 முதல் 16 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. இதில் ரூ.299 திட்டத்திற்கு பதிலாக வழங்கப்படும் புதிய திட்டத்தில் அதிகபட்சமாக சுமார் 16 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
<h3>ரூ.299 திட்டத்திற்கு பதிலாக ரூ.349 திட்டம்:</h3>
ஏர்டெல்லின் ரூ.299 பிரீபெய்டு திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு மாற்றாக ரூ.349 திட்டம் உள்ளது.

ரூ.349 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் முன்பை விட ரூ.50 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சுமார் 16 சதவீத விலை அதிகரிப்பாகும்.மேலும், நடுத்தர விலை கொண்ட சில ரீசார்ஜ் திட்டங்களும் நீக்கப்பட்டுள்ளதால், பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் விலைத் தேர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குறைந்த விலை பிரிவில் ரூ.199 திட்டம் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 2 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்ததாக ரூ.219 திட்டம் உள்ளது. இதில் 28 நாட்களுக்கு மொத்தம் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
<h3>விரைவில் டாரிஃப் உயருமா?</h3>
இந்த மாற்றங்கள், இந்திய தொலைத்தொடர்பு துறையில் கட்டண உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நேரத்தில் வெளியாகியுள்ளன. சமீபத்திய Centrum Institutional Research அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களில் பிரீபெய்டு கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால், ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய நடவடிக்கை எதிர்கால கட்டண உயர்வுக்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் அனைத்து பிரீபெய்டு திட்டங்களுக்குமான பொதுவான கட்டண உயர்வை இதுவரை அறிவிக்கவில்லை. தற்போது குறிப்பிட்ட சில திட்டங்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/business/artificial-intelligence-will-decide-whether-to-give-loan-or-not-says-rbi-governor-97569.html">இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!</a>

எனவே, இதை முழுமையான டாரிஃப் உயர்வாகக் கருத முடியாது என்றும், இது பெரிய அளவிலான கட்டண மாற்றத்திற்கான சாத்தியமான முன்னோட்டமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏர்டெல்லைத் தொடர்ந்து ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியாவும் இதேபோன்ற மாற்றங்களை மேற்கொள்கிறார்களா என்பதைப் பொறுத்தே தொலைத்தொடர்பு துறையில் புதிய கட்டண உயர்வு ஏற்படுமா என்பது தெரியவரும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சட்டப்பேரவைக்கு 4 நாள்கள் பிரேக்&#8230; ஆக.17-இல் மீண்டும் பரபரக்கும் சட்டமன்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/debate-on-demands-for-grants-in-tamil-nadu-legislative-assembly-resumes-on-august-17-following-a-4-day-break-97613.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 14:32:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/debate-on-demands-for-grants-in-tamil-nadu-legislative-assembly-resumes-on-august-17-following-a-4-day-break-97613.html</guid>
		            
			

    	<description><![CDATA[Tamil Nadu Legislative Assembly : தமிழக சட்டமன்றத்துக்கு 4 நாள்கள் விடுமுறை எனவும், ஆகஸ்ட் 17- இல் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற இருப்பதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்து உள்ளார் .]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/tn-assembly-2-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சட்டப்பேரவைக்கு 4 நாள்கள் பிரேக்&#8230; ஆக.17-இல் மீண்டும் பரபரக்கும் சட்டமன்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!" /></figure>தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி ( புதன்கிழமை) கூடியது. முதல் நாளான அன்று தமிழக அரசின் பொது நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து சுமார் 2:30 மணி நேரம் பேசி இருந்தார். இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 6- ஆம் தேதி ( வியாழக்கிழமை) வேளாண் நிதி நிலை அறிக்கையை உழவர் நலன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசி இருந்தார். இந்த இரு நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்த போது, பல்வேறு திட்டங்கள் மற்றும் மற்றும் பல்வேறு அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது, இந்த இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
<h3>இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம்</h3>
அதன்படி, கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இவர்களுக்கு, துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று ஆகஸ்ட் 12- ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். பின்னர், இன்றைய கூட்டம் நிறைவடைவதாக பேரவை தலைவர் அறிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-speech-support-for-cm-vijays-assembly-resolution-on-delimitation-97598.html" target="_blank" rel="noopener">“50% எம்.பி இடங்கள் அதிகரித்தாலும் ஆபத்துதான்!”.. தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!</a>
<h3>தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை</h3>
தொடர்ந்து, நாளை ஆகஸ்ட் 13- ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 14- ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது. அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் என்பதாலும், அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர்ச்சியாக 4 நாட்கள் சட்டப் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பின்னர் ஆகஸ்ட் 17- ஆம் தேதி ( திங்கள்கிழமை) சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது. அன்றைய தினம் முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற உள்ளது.
<h3>ஆக. 17- இல் மானிய கோரிக்கை விவாதம்</h3>
முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, மற்ற துறைகள் வாரியான கோரிக்கை விவாதம் நடைபெறும் என்று பேரவை தலைவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-assembly-vetri-veedu-scheme-allowance-increased-finance-minister-budget-speech-97608.html" target="_blank" rel="noopener">“வெற்றி வீடு திட்டத்திற்கு இனி ரூ.5 லட்சம்!”.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/artificial-intelligence-will-decide-whether-to-give-loan-or-not-says-rbi-governor-97569.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 12:55:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/artificial-intelligence-will-decide-whether-to-give-loan-or-not-says-rbi-governor-97569.html</guid>
		            
			

    	<description><![CDATA[Artificial Intelligence Will Decide Providing Loan | தற்போது வங்கிகளின் கடன் பெற வேண்டும் என்றால் சில அடிப்படை தகுதிகளை கொண்டு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அவற்றை பார்த்து தான் வங்கிகள் கடன் வழங்கும். ஆனால், இனி ஏஐ தான் கடனை தீர்மானிக்கப்போகிறது என ஆர்பிஐ கவர்னர் கூறியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ai-interference.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!" /></figure>இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு பண தேவை ஏற்படும்போது வங்கிகளை நாடுகின்றனர். இதற்காக வங்கிகள் தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. இவ்வாறு வங்கிகளில் கடன் பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. கடனுக்கு விண்ணப்பிக்கும் நபரிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா, அவரது கடன் வரலாறு முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகுதான் வங்கிகள் கடன் வழங்கும்.

இந்த நிலையில், இனி கடன் வழங்குவதை ஏஐ<strong> (AI - Artificial Intelligence)</strong> தான் தீர்மானிக்கப்போகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வங்கி கடன் வழங்குவதை முடிவு செய்யும் ஏஐ</h3>
மும்பையில் நடைபெற்ற தேசிய வங்கி மாநாட்டில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பங்கேற்று பேசினார். அப்போது கூறிய அவர், தற்போது பலருக்கும் முறையான கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் வரலாறு இல்லாததன் காரணமாக வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது கடினமாக உள்ளது. இந்த சிக்கலை சரிசெய்ய செயற்கை நுண்ணறிவு அம்சம் உதவி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/invest-166-rupees-daily-to-get-public-provident-fund-to-get-16-lakhs-97442.html">தினம் ரூ.166 முதலீடு செய்தால் போதும்.. ரூ.16.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?</a>
<h3>ஏஐ மூலம் எளிதாக வங்கி கடன் பெற முடியும்</h3>
தற்போதைய நிலவரப்படி ஒரு நபர் ஏற்கனவே வாங்கிய கடன்கள், கிரெடிட் கார்டு ஆகியவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு அடுத்த கடன் வழங்கப்படுகிறது. இதனால், இதுவரை கடனே வாங்காத நபர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இல்லை என கூறி வங்கிக் கடன் வழங்க மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் தான், வங்கிகளுக்கு செயற்கை நுண்ணறிவு அம்சம் உதவி செய்ய உள்ளது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/fmgc-companies-planning-to-hike-price-for-products-in-september-2026-says-source-97089.html">அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!</a>

அதாவது ஒருவர் ஜிஎஸ்டி தாக்கல் செய்த விவரங்கள், அவரது பண புழக்கம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்திய விவரங்கள் மற்றும் தரவுகளை பயன்படுத்தி கடன் பெற தகுதியான புதிய நபர்களை அடையாளம் காண வங்கிகளுக்கு ஏஐ உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய விதிகள்.. மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/new-rules-in-withdrawing-pf-money-from-epfo-government-explained-in-lok-sabha-97555.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 11:25:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/new-rules-in-withdrawing-pf-money-from-epfo-government-explained-in-lok-sabha-97555.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Rules In Withdrawing PF Money From EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பிஎஃப் பணம் எடுப்பது தொடர்பாக சில முக்கிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அது குறித்து மக்களவையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pf-rules.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய விதிகள்.. மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!" /></figure>இந்தியாவில் பணியாற்றும் கோடிக்கணக்கான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய அம்சமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் <strong>(EPFO - Employee Provident Fund Organization)</strong> உள்ளது. இந்த நிலையில் தான், பிஎஃப் <strong>(PF - Provident Fund)</strong> பணத்தை எடுப்பது தொடர்பான சில முக்கிய விதிகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என அனைவரும் அது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.

இந்த நிலையில், பிஎஃப் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் செய்ய உள்ளதாக அரசு கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பிஎஃப் பணத்தை எடுக்க புதிய விதிகள் - என்ன என்ன?</h3>
பிஎஃப் பணத்தை எடுப்பது தொடர்பாக மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பிஎஃப் பணத்தை எடுப்பது தொடர்பான புதிய விதிகள் குறித்து விளக்கமளித்தார். அதில், இனி ஊழியர்கள் பணியில் இருந்து விலகிய பிறகு தங்களது முழு பிஎஃப் தொகையையும் பெற 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/invest-166-rupees-daily-to-get-public-provident-fund-to-get-16-lakhs-97442.html">தினம் ரூ.166 முதலீடு செய்தால் போதும்.. ரூ.16.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?</a>
<h3>ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்கும் விதி</h3>
ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பணத்தை எடுப்பதற்கு 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த புதிய காத்திருப்பு விதிகள் அமலில் இருந்தாலும், ஊழியர்கள் தங்களது அவசர தேவைகளுக்கு பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு ஏற்ப விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/fmgc-companies-planning-to-hike-price-for-products-in-september-2026-says-source-97089.html">அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!</a>

தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது கணக்கில் உள்ள பிஎஃப் பணத்தை 75 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், எந்த காரணமும் குறிப்பிடாமலே ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-12th-august-gold-increases-by-400-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-97549.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 10:37:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-12th-august-gold-increases-by-400-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-97549.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price In Chennai Today | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையி, வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-32.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12 :</strong> ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 12, 2026) தங்கம் விலை <strong>(Gold Price)</strong> மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் <strong>(Silver Price)</strong> மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்தித்து வரும் தங்கம்</h3>
ஜூன் மாதத்தில் கடும் உயர்வை சந்தித்து வந்த தங்கம் ஒரு கிராம் ரூ.15,000-ல் இருந்து ரூ.13,000 ஆக குறைந்தது. பின்னர் ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும், தங்கம் விலை ரூ.14,000-த்தை தாண்டாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் தான், ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை ரூ.14,000-த்தை கடந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/fmgc-companies-planning-to-hike-price-for-products-in-september-2026-says-source-97089.html">அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!</a>

ஈரான் போர் சற்று தணிந்துள்ளது, அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தபோவதில்லை என தகவல் வெளியாகி வருவது இவை அனைத்தும் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்ப செய்துள்ளதன் காரணமாக தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெட்ரோல் பங்குகளில் G-Pay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறுத்தம்?.. அதிர்ச்சி செய்தி!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-petrol-bunks-warn-stop-upi-digital-payments-bank-accounts-frozen-97524.html</link>	
		<pubDate>Wed, 12 Aug 2026 06:38:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Esakkiraja Selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-petrol-bunks-warn-stop-upi-digital-payments-bank-accounts-frozen-97524.html</guid>
		            
			

    	<description><![CDATA[Petrol Bunk UPI Payment: சைபர் க்ரைம் புகார்களின் பேரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. முழு கணக்கையும் முடக்குவதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய தொகையை மட்டும் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/petrol-bunk.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெட்ரோல் பங்குகளில் G-Pay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறுத்தம்?.. அதிர்ச்சி செய்தி!!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 12:</strong> இந்தியாவில் <a href="https://www.tv9tamilnews.com/business/upi-merchant-charges-explained-no-extra-cost-for-consumers-says-government-96654.html" target="_blank" rel="noopener">டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின்</a> வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பெட்ரோல் பங்குகளில் யூபிஐ மற்றும் கியூஆர் கோடு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

சைபர் க்ரைம் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் எவ்வித முன்அறிவிப்புமின்றி காவல் துறை மற்றும் வங்கிகளால் திடீரென முடக்கப்படுவதே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது.

<strong><a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/former-admk-mp-singai-ramachandran-joined-tvk-in-front-of-cm-vijay-97495.html">இதையும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..</a></strong>
<h3>வங்கி கணக்குகள் முடக்கப்படுவதன் பின்னணி:</h3>
ஆன்லைன் வழிப் பணமோசடிகளில் ஈடுபடும் நபர்கள், தாங்கள் திருடிய அல்லது மோசடி செய்த தொகையில் ஒரு சிறு பகுதியை (உதாரணமாக 500 அல்லது 1000 ரூபாயை) பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்புவதற்காக யூபிஐ மூலமாகச் செலுத்துகின்றனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளும்போது, அந்த மோசடிப் பணம் கைமாறிய வழியைக் கண்காணித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளைக் கண்டறிகின்றனர். ஆனால், காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் வங்கிகள், குறிப்பிட்ட அந்த சிறிய சந்தேகத்திற்குரிய தொகையை மட்டும் முடக்குவதற்குப் பதிலாக, லட்சக்கணக்கில் பணம் இருக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் முழு வங்கிக் கணக்கையும் முற்றிலுமாக முடக்கிவிடுகின்றன.
<h3>பங்க் உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:</h3>
தமிழ்நாட்டில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் கீழ் 5,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் தினமும் சராசரியாக 200 முதல் 500 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் பெட்ரோல் பங்குகளில் தினமும் ஈட்டப்படும் வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையானது ஆன்லைன் வழியிலேயே பெறப்படுகிறது. இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த வங்கிக் கணக்கும் முடக்கப்படுவதால் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பணம் செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமலும், அன்றாட வணிக நடைமுறைகளைத் தொடர முடியாமலும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
<h3>பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை:</h3>
பெட்ரோல் பங்கிற்கு எரிபொருள் நிரப்ப வரும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களில் யார் நேர்மையானவர், யாருடைய டிஜிட்டல் பணம் மோசடியானது என்பதைத் தங்களால் சரிபார்க்க முடியாது என உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தும்போது, முழு வங்கிக் கணக்கையும் முடக்காமல், குறிப்பிட்ட அந்தச் சர்ச்சைக்குரிய தொகையை மட்டும் முடக்கி வைக்க வேண்டும் என்று காவல் துறைக்கும் வங்கிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

<strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/senior-bjp-leader-vanathi-srinivasan-has-stated-that-there-are-no-permanent-enemies-or-permanent-friends-in-politics-97450.html">திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..</a></strong>

மேலும், இதுகுறித்து மாநில அரசு உடனடியாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட அனைத்து வகையான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EMI : மாத தவணை மிஸ் ஆனால் என்ன ஆகும்.. இவ்வளவு சிக்கல்கள் இருக்கா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/what-happens-if-you-miss-any-emi-by-chance-these-will-be-the-consequences-photo-gallery-97463.html</link>	
		<pubDate>Tue, 11 Aug 2026 20:05:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/what-happens-if-you-miss-any-emi-by-chance-these-will-be-the-consequences-photo-gallery-97463.html</guid>
		            
			    	<description><![CDATA[What Happens If You Miss Any EMI By Chance | தற்போதைய சூழலில் பெரும்பாலான நபர்கள் மாத தவணை முறையில் பொருட்கள், கடன் பெறுகின்றனர். இந்த நிலையில், ஏதேனும் ஒரு மாத தவணையை மிஸ் செய்தால் என்ன ஆகும் என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-happens-if-you-miss-any-emi-by-chance-these-will-be-the-consequences-photo-gallery-97463.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/missing-emi-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Missing Emi (3)" /></a></dt><p>தற்போதைய காலக்கட்டத்தில் மாத தவணை செலுத்தாத நபர்களை பார்க்கவே முடியாது. வீடு, கார், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் மாத தவணை முறையில் வாங்கி பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், ஏதேனும் ஒரு மாதம் மாத தவணை கட்ட செலுத்த தவறினால் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியுமா?
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-happens-if-you-miss-any-emi-by-chance-these-will-be-the-consequences-photo-gallery-97463.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/missing-emi-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Missing Emi (2)" /></a></dt><p>வங்கியில் மாத தவணை முறையில் கடன் வாங்கும்போது வங்கிகள் எத்தகைய விதிகளை கூறுகின்றனவோ அதேபோல அந்த கடன்களை திருப்பி செலுத்த வங்கிகள் சில விதிகளை பின்பற்றும். அதுதான், உரிய நேரத்தில் மாத தவணை செலுத்துவது. வங்கிகள் கடன் வாங்கியவர்களுக்கு ஒரு தேதியை முடிவு செய்து அந்த தேதிக்குள் அவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என கூறும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-happens-if-you-miss-any-emi-by-chance-these-will-be-the-consequences-photo-gallery-97463.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/missing-emi-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Missing Emi (1)" /></a></dt><p>பெரும்பாலான மாத சம்பளம் வாங்கும் நபர்கள் தான், இவ்வாறு மாத தவணை செலுத்துவதில் சிக்கல்களை எதிர்க்கொள்வர். உரிய நேரத்தில் வங்கி கணக்குக்கு சம்பளம் வராதது, ஆட்டோ பேமெண்ட் முறையில் மாத தவணை பிடித்தம் செய்யப்படும் பட்சத்தில் அந்த நேரத்தில் கணக்கில் பணம் இல்லாமல் போவது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-happens-if-you-miss-any-emi-by-chance-these-will-be-the-consequences-photo-gallery-97463.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/missing-emi-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Missing Emi (4)" /></a></dt><p>சில காரணங்களால் மாத தவணைகளை தவறவிடுவது பலருக்கு வழக்கமாக உள்ளது. இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களாக இருந்தாலும், வங்கிகள் தரப்பில் இருந்து இந்த காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒருவேளை நீங்கள் ஏதேனும் ஒரு மாத தவணையை தவற விடும் பட்சத்தில் நீங்கள் மாத தவணை, தாமத கட்டணம் உள்ளிட்டவற்றை சேர்த்தே செலுத்த வேண்டும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-happens-if-you-miss-any-emi-by-chance-these-will-be-the-consequences-photo-gallery-97463.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/missing-emi-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Missing Emi (5)" /></a></dt><p>இத்தகைய சூழலில் வழக்கத்தை விட கடன் பெற்றவர் அதிக தொகையை செலுத்த நேரிடும். அப்போது நிலுவையில் இருக்கும் தொகை வரை முறையாக மாத தவணை செலுத்தவில்லை என்றால், அந்த நபரின் கிரெடிட் ஸ்கோர் மிக கடுமையாக பாதிக்கும். இதன் காரணமாக எதிர்காலத்தில் கடன் வாங்க முடியாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>Gold : இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.14,000-த்தை தாண்டிய தங்கம்.. காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-crossed-14000-rupees-after-two-months-what-is-the-reason-behind-the-sudden-price-hike-97445.html</link>	
		<pubDate>Tue, 11 Aug 2026 17:15:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-crossed-14000-rupees-after-two-months-what-is-the-reason-behind-the-sudden-price-hike-97445.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Crossed 14000 Rupees After Two Months | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ரூ.14,000-த்தை தாண்டியுள்ளது. அது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-14000.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold : இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.14,000-த்தை தாண்டிய தங்கம்.. காரணம் என்ன?" /></figure>தங்கம் விலை <strong>(Gold Price)</strong> நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு மாதம் கடும் சரிவை சந்திக்கும் தங்கம் அடுத்த மாதம் தொடர் உயர்வை சந்திக்கிறது. இல்லையென்றால் பெரிய விலையேற்றம் எதுவும் இல்லாமல், ஒரே விலையிலே நீடித்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஜூன் மாதத்தில் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் ஒரே அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது.

அதன்படி, ஜூலை மாதம் முதல் ரூ.13,000-த்தில் நீடித்து வந்த தங்கம், தற்போது ரூ.14,000-த்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், தங்கம் திடீர் விலை உயர்வை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>மீண்டும் ரூ.14,000-த்தை தாண்டிய தங்கம் விலை</h3>
<div class="table-responsive">
<table class="css-g3m580" style="border-collapse: collapse; width: 63.3615%; height: 264px;" border="1">
<tbody>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;"><strong>தேதி </strong></td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;"><strong>ஒரு கிராம் </strong></td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;"><strong>ஒரு சவரன் </strong></td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">02 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.13,220</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,05,760</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">03 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.13,250</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,06,000</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">04 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.13,200</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,05,600</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">05 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.13,480</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,07,840</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">06 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.13,750</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,10,000</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">07 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.13,900</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,11,200</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">08 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.13,965</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,11,720</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">09 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.13,965</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,11,720</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">10 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.13,950</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,11,600</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 19.2803%; text-align: center; height: 24px;">11 ஆகஸ்ட் 2026</td>
<td style="width: 20.391%; text-align: center; height: 24px;">ரூ.14,250</td>
<td style="width: 21.1251%; text-align: center; height: 24px;">ரூ.1,14,000</td>
</tr>
</tbody>
</table>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/post-office-monthly-income-scheme-get-9250-as-monthly-income-photo-gallery-96743.html">மாதம் ரூ.9,250 வருமானம்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம்!</a></p>

<h3>தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?</h3>
ஈரான் போரால் ஏற்பட்ட புவிசார் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை சற்று சரிவை சந்தித்தது. ஆனால், தற்போது ஈரான் போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இதுதவிர அமெரிக்க மத்திய வங்கியும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தபோவதில்லை என தகவல் வெளியாகி வருகிறது. இவற்றின் காரணமாக உலக முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/house-owners-can-not-reduce-advance-money-for-these-reasons-96736.html">இந்த விஷயங்களுக்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் பிடிக்க முடியாது.. முழு விவரம்!</a>

இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தங்கம் விலை ரூ.14,000-த்தை தாண்டியுள்ளது.

</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தினம் ரூ.166 முதலீடு செய்தால் போதும்.. ரூ.16.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/invest-166-rupees-daily-to-get-public-provident-fund-to-get-16-lakhs-97442.html</link>	
		<pubDate>Tue, 11 Aug 2026 16:20:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/invest-166-rupees-daily-to-get-public-provident-fund-to-get-16-lakhs-97442.html</guid>
		            
			

    	<description><![CDATA[Public Provident Fund Scheme Investment | அரசு அன்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிபிஎஃப் திட்டத்தில் தினமும் ரூ.166 முதலீடு செய்து ரூ.16.26 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/ppf-investment.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தினம் ரூ.166 முதலீடு செய்தால் போதும்.. ரூ.16.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா?" /></figure>சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்யும் பட்சத்தில் தான் நிதி பாதுகாப்பு பெற முடியும். இதற்காக தான் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், தாங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்று தெரியாமல் பலரும் பயத்திலேயே சேமிப்பு அல்லது முதலீடு செய்வதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால், அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தும் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் அது குறித்து கவலைப்பட தேவையில்லை.

காரணம் அரசின் திட்டங்கள் நிதி பாதுகாப்புடன் சிறந்த வருமானத்தை தரும். எனவே அத்தகைய திட்டம் ஒன்றில் தினமும் ரூ.166 முதலீடு செய்து ரூ.16.27 லட்சம் லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்</h3>
அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி <strong>(PPF - Public Provident Fund)</strong>. இந்த திட்டம் 1986 முதலே செயல்பாட்டில் உள்ளது. கூட்டு வட்டி என்ற சிறப்பு அம்சம் இதில் உள்ளதன் காரணமாக முதலீடு செய்வதன் மூலம் இந்த திட்டத்தில் இருந்து நல்ல லாபத்தை பெற முடியும். அதாவது, முதலீடு செய்த தொகைக்கு வட்டி வழங்கப்படும் நிலையில், அடுத்த முறை அந்த வட்டிக்கும் சேர்த்து வட்டி வழங்கப்படும். அதுதான் கூட்டு வட்டி.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/house-owners-can-not-reduce-advance-money-for-these-reasons-96736.html">இந்த விஷயங்களுக்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் பிடிக்க முடியாது.. முழு விவரம்!</a>
<h3>ரூ.166 முதலீடு செய்து ரூ.16.27 லட்சம் முதலீடு செய்யலாம்</h3>
இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் தினமும் ரூ.166 முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, மாதம் ரூ.5,000 சேமிக்கும் பட்சத்தில் ஒரு வருடத்திற்கு ரூ.60,000 முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செய்யும் பட்சத்தில் மொத்தமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்துவிடலாம்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/lpg-ekyc-alert-no-gas-supply-if-ekyc-and-subsidy-requirements-are-not-completed-96837.html"> KYC-ஐ முடிக்காவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது – எப்படி செய்வது?</a>

இந்த முதலீட்டு ரூ.7.27 லட்சம் வட்டி மட்டுமே கிடைக்கும். அதன்படி, இந்த திட்டம் முடியும்போது முதலீடு மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.16.27 லட்சம் பெறலாம் என்பது குறிப்பிட்டத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/fmgc-companies-planning-to-hike-price-for-products-in-september-2026-says-source-97089.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 12:20:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/fmgc-companies-planning-to-hike-price-for-products-in-september-2026-says-source-97089.html</guid>
		            
			

    	<description><![CDATA[FMGC Companies Planning For Price Hike | பணவீக்கம் உள்ளிட்டவை விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த நிலையில், 2026 செப்டம்பர் மாதத்தில் FMGC நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/groceries.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!" /></figure>விலைவாசி உயர்வு பொதுமக்களின் வாழ்வில் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்வில் பால், டீ தூள், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர். இந்த பொருட்களை தவிர்க்க முடியாது என்பதால், இவற்றின் விலை உயரும்போது பொதுமக்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

ஏற்கனவே விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்கள் கவலையில் உள்ள நிலையில், தற்போது அடுத்த சில மாதங்களில் பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு வெளியாக உள்ளது.
<h3>பொருட்களின் விலையை உயர்த்த உள்ள FMGC நிறுவனங்கள்</h3>
2026, செப்டம்பர் காலாண்டில் தங்களின் உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்த உள்ளதாக FMGC <strong>(Fast Moving Consumer Goods)</strong> நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சில நிறுவனங்கள் 2 முதல் 5 சதவீதம் வரை பொருட்களின் விலையை அதிகரித்தன. இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திலும் சில நிறுவனங்கள் தங்களது பொருட்களுக்கான விலையை அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/employees-need-not-to-submit-cancelled-cheque-or-bank-account-passbook-to-claim-pf-money-96730.html">EPFO : பிஎஃப் பணம் எடுக்க இனி இது அவசியம் இல்லை.. வந்தது அதிரடி மாற்றம்!</a>
<h3>Shrinkflation-ஐ கடைபிடிக்க உள்ள நிறுவனங்கள்</h3>
சில நிறுவனங்கள் பொருட்களுக்கான விலையை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள்<strong> Shrinkflation-ஐ</strong> கையாள உள்ளன. அதாவது பொருட்களின் விலையை உயர்த்தாமல் அவற்றின் அளவை குறைப்பதுதான் Shrinkflation. இந்த முறையில் பெரும்பாலான நிறுவனங்கள் ரூ.10 மற்றும் ரூ.5 பாக்கெட்டுகளில் அளவை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/rbi-introduces-new-loan-recovery-rules-strict-call-and-visit-timings-from-january-1-2027-96657.html">லோனுக்கான தவணையை செலுத்த தவறினால் உங்களுக்கு மிரட்டல் வருகிறதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதி</a>

இந்த முறையை பிரிட்டானியா நிறுவனம் கையில் எடுக்க உள்ளது. அதாவது, அந்த நிறுவனம் தனது ரூ.5 மற்றும் ரூ.10 பிஸ்கெட் பாக்கெட்டுகளின் அளவை குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி சர்க்கரை மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை உயர்த்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சமானிய மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : சரிந்தது தங்கம் விலை.. எவ்வளவு?.. இன்றைய நிலவரம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-10th-august-gold-decreased-by-120-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-97080.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 10:30:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-10th-august-gold-decreased-by-120-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-97080.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Price Decreased Silver Price Remain Same | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-31.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : சரிந்தது தங்கம் விலை.. எவ்வளவு?.. இன்றைய நிலவரம் இதோ!" /></figure><strong>சென்னை, ஆகச்ட் 10 :</strong> சென்னையில் <strong>(Chennai)</strong> நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை <strong>(Gold and Silver Price)</strong> ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (ஆகஸ்ட் 10, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்</h3>
புவிசார் பதற்றம், பங்குச்சந்தை உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஈரான் போர் காரணமாக நிலவிய பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்க டாலரின் மதிப்பும் உயர்ந்ததன் காரணமாக தங்கம் சற்று மந்தமாக இருந்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/rbi-introduces-new-loan-recovery-rules-strict-call-and-visit-timings-from-january-1-2027-96657.html">லோனுக்கான தவணையை செலுத்த தவறினால் உங்களுக்கு மிரட்டல் வருகிறதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதி</a>

குறிப்பாக ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜுலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து ரூ.13,000-க்கே விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு, சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/upi-merchant-charges-explained-no-extra-cost-for-consumers-says-government-96654.html">இனி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? பிசிஐ விளக்கம்</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO : ஊழியர்களுக்கு எப்படி பிஎஃப் பணம் வழங்கப்படுகிறது?.. முழு விவரம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-government-provides-interest-for-employees-pf-money-photo-gallery-97118.html</link>	
		<pubDate>Mon, 10 Aug 2026 00:34:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-government-provides-interest-for-employees-pf-money-photo-gallery-97118.html</guid>
		            
			    	<description><![CDATA[How PF Interest Credited To Employees Accounts | பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு மத்திய அரசு வட்டி வழங்கும். இந்த நிலையில், பிஎஃப் பணத்திற்கு மத்திய அரசு எப்படி வட்டி வழங்குகிறது, எப்படி வட்டி கணக்கிடப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-government-provides-interest-for-employees-pf-money-photo-gallery-97118.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/images-of-news-16.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Images Of News (16)" /></a></dt><p>இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு என இரண்டுமே வரவு வைக்கப்படும். </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-government-provides-interest-for-employees-pf-money-photo-gallery-97118.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/images-of-news-15.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Images Of News (15)" /></a></dt><p>இவ்வாறு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு அரசு வட்டி வழங்கும். அதாவது, பிஎஃப் பணத்தை அரசு பல்வேறு இடங்களில் முதலீடு செய்யும். அவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் லாபமாக கிடைக்கும் பணத்தை வைத்துதான், அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வட்டியை வழங்குகிறது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-government-provides-interest-for-employees-pf-money-photo-gallery-97118.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/images-of-news-14.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Images Of News" /></a></dt><p>ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களின் பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல முதலீட்டை தரும் திட்டங்களில் முதலீடு செய்யும். இவ்வாறு ஊழியர்களின் பிஎஃப் பணத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், மத்திய அமைச்சகம் வெளியிடும் வழிமுறைகளின்படி நடைபெறும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-government-provides-interest-for-employees-pf-money-photo-gallery-97118.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/images-of-news-13.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Images Of News (13)" /></a></dt><p>பாதுகாப்பான மற்றும் நல்ல லாபத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் பணத்தை இரண்டு வகைகளில் முதலீடு செய்கிறது. பெரும்பாலும் அரசு பத்திரங்கள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் தான் மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் பணத்தை முதலீடு செய்யும்.

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-government-provides-interest-for-employees-pf-money-photo-gallery-97118.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/images-of-news-12.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Images Of News (12)" /></a></dt><p>இது தவிர ஊழியர்களின் பிஎஃப் தொகையில் 15 சதவீதம் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. மத்திய அரசு பிஎஃப் பணத்தை நேரடியாக BSE SENSEX மற்றும் NSE NIFTY-50 குறியீடுகளை பிரதிபலிக்கும் ETFகளில் தான் முதலீடு செய்கிறது. இவ்வாறு முதலீடு செய்யப்படும் பணத்தில் தான் ஊழியர்களுக்கு பிஎஃப் வட்டி வழங்கப்படுகிறது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>மாதம் ரூ.9,250 வருமானம்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/post-office-monthly-income-scheme-get-9250-as-monthly-income-photo-gallery-96743.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 23:20:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/post-office-monthly-income-scheme-get-9250-as-monthly-income-photo-gallery-96743.html</guid>
		            
			    	<description><![CDATA[Post Office Monthly Income Scheme | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அஞ்சலக மாத வருமான திட்டத்தில் முதலீடு செய்து ரூ.9,250 வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/post-office-monthly-income-scheme-get-9250-as-monthly-income-photo-gallery-96743.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pomis-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Pomis (2)" /></a></dt><p>சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்தால் மட்டும்தான், நிதி பாதுகாப்பை பெற முடியும். அதுமட்டுமன்றி, கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதனை பல மடங்காக உயர்த்த முடியும். இந்த நிலையில், ஆஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து மாதம் ரூ.9,250 பெறுவது எப்படி என்பது குறித்தும், எந்த திட்டத்தில் முதலீடு செய்வது இத்தகைய சிறந்த லாபத்தை தரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/post-office-monthly-income-scheme-get-9250-as-monthly-income-photo-gallery-96743.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pomis-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Pomis (3)" /></a></dt><p>அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்றுதான் தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம். இது நிலையான வட்டி தரும் ஒரு சிறந்த திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்து, அதற்கு மாதம் மாதம் வட்டி பெற முடியும். மாத வருமானம் பெற இது சிறந்த திட்டமாக இருக்கும்.

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/post-office-monthly-income-scheme-get-9250-as-monthly-income-photo-gallery-96743.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pomis-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Pomis (4)" /></a></dt><p>இந்த திட்டத்தின் முதிர்வு காலம் மொத்தம் ஐந்து ஆண்டுகளாக உள்ள நிலையில், முதலீடு செய்த தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி பெற முடியும். இந்த திட்டத்தில் தனியாகவோ, தம்பதிகள் கூட்டு கணக்கை திறந்த முதலீடு செய்து லாபம் பெற முடியும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 மில்லியன் வரை முதலீடு செய்யலாம்.

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/post-office-monthly-income-scheme-get-9250-as-monthly-income-photo-gallery-96743.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pomis-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Pomis (5)" /></a></dt><p>அதாவது ரூ.15 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் அதிக தொகையை முதலீடு செய்வதன் மூலம் முதலீடு காலம் வரை மாதம் மாதம் நல்ல லாபத்தை பெற முடியும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/post-office-monthly-income-scheme-get-9250-as-monthly-income-photo-gallery-96743.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/pomis-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Pomis (1)" /></a></dt><p>உதாரணமாக 7.4 சதவீதம் வட்டி கொண்ட இந்த திட்டத்தில் நீங்கள் மொத்தமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,11,000 வட்டி வழங்கப்படும். இதன் மூலம் இந்த மாத தவணையாக ரூ.9,250 வட்டியாக மட்டுமே பெற முடியும். </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>இந்த விஷயங்களுக்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் பிடிக்க முடியாது.. முழு விவரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/house-owners-can-not-reduce-advance-money-for-these-reasons-96736.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 22:21:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/house-owners-can-not-reduce-advance-money-for-these-reasons-96736.html</guid>
		            
			

    	<description><![CDATA[House Advance Amount Reduction | வீட்டு உரிமையாளர்கள் அட்வான்ஸ் தொகையை பல்வேறு காரணங்களுக்காக பிடித்தம் செய்கின்றனர். இந்த நிலையில், வீட்டு உரிமையாளர்கள் இந்த சில காரணங்களுக்காக அட்வான்ஸ் தொகையை பிடித்தம் செய்ய முடியாது. அவை என்ன என்ன காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/advance-rules.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இந்த விஷயங்களுக்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் பிடிக்க முடியாது.. முழு விவரம்!" /></figure>சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் பிரதான தொழிலாக உள்ளது வாடகை விடுவதுதான். கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுகின்றனர். அவ்வாறு நகர்ப்புறங்களில் குடியேறும் அவர்கள், தாங்கள் தற்காலிகமாக வசிக்க வாடகை வீடுகளில் குடி புகுகின்றனர். அவ்வாறு வாடகை வீட்டில் இருக்கும் பொதுமக்கள் ஏராளமான சிரமங்களை சந்திக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக வீட்டை காலி செய்யும்போது தாங்கள் வழங்கிய அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற படாத பாடு படுகின்றனர். இந்த நிலையில் தான், நீதிமன்றம் அது குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>அட்வான்ஸ் தொகையில் முறைகேடு செய்யும் வீட்டு உரிமையாளர்கள்</h3>
வாடகை வீட்டில் குடியிருக்கும் நபர்கள் அந்த வீட்டை காலி செய்யும்போது, வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு காரணங்களை கூறி அட்வான்ஸ் தொகையை பிடித்தம் செய்துக்கொள்வர். இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தாங்கம் செலுத்திய டெபாசிட் தொகையில் இருந்து, பாதி அளவு தொகையை கூட பெற முடியாத சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/upi-merchant-charges-explained-no-extra-cost-for-consumers-says-government-96654.html">இனி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? பிசிஐ விளக்கம்</a>
<h3>நீதிமன்ற தீர்ப்பில் முக்கிய உத்தரவுகள்</h3>
ஒரு வீட்டை காலி செய்யும்போது சுவறில் பெயிண்ட் மங்கியிருப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றுக்கு வீட்டு ஓனர்கள் பணத்தை பிடித்தம் செய்யக்கூடாது. இவை அனைத்தும் வீட்டை பயன்படுத்தும்போது இயற்கையாக நடைபெறும் Wear and Tear விஷயம் ஆகும். இதற்கு வீட்டின் உரிமையாளர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>KYC-ஐ முடிக்காவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது  &#8211; எப்படி செய்வது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/lpg-ekyc-alert-no-gas-supply-if-ekyc-and-subsidy-requirements-are-not-completed-96837.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 18:07:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/lpg-ekyc-alert-no-gas-supply-if-ekyc-and-subsidy-requirements-are-not-completed-96837.html</guid>
		            
			

    	<description><![CDATA[எல்பிஜி வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16, 2026 அன்றுக்குள் தங்கள் e-KYC பணிகளை முடிக்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் KYC செயல்முறையை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறை மிகவும் எளிமையானது. இதை ஆன்லைனில் எப்படி முடிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/lpg-gas-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="KYC-ஐ முடிக்காவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது  &#8211; எப்படி செய்வது?" /></figure>நீங்கள் எல்பிஜி <a href="https://www.tv9tamilnews.com/business/central-government-of-india-planning-to-collect-extra-money-for-gas-cylinders-to-construct-lpg-storage-96395.html" target="_blank" rel="noopener">கேஸ் சிலிண்டர்</a> பயன்படுத்துபவர் என்றால், இந்த முக்கியத் தகவலைக் கவனத்தில் கொள்ளுங்கள். எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் தடையற்ற விநியோகம் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு e-KYC செயல்முறையை முடிப்பது அவசியம். எல்பிஜி வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16, 2026 e-KYC-ஐ முடிப்பது கட்டாயமாகும். இச்செயல்முறையை முடிக்கத் தவறினால், எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் மற்றும் மானியங்கள் நிறுத்தப்படலாம். e-KYC செயல்முறையை முடிப்பது எளிது; இதை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் (நேரடியாகச் சென்று) மூலமாகவும் செய்யலாம்.

நாடு முழுவதும் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் விவரங்களைப் புதுப்பிக்கவும், கள்ளச்சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் e-KYC முகாம் நடத்தப்பட்டு வருகிறது. எல்பிஜி ஏஜென்சிகள் நிலையங்கள் தொலைபேசி அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்துத் தெரிவித்து வருகின்றன. வாடிக்கையாளர்களுக்குச் சேவையில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யவே இச்செயல்முறை செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 16, 2026 என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள் e-KYC-ஐ முடிக்கத் தவறினால் சிக்கல்கள் ஏற்படலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/what-will-happen-to-your-pf-account-if-you-took-career-break-96526.html">EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a></strong>
<h3>எவ்வாறு அப்டேட் செய்வது?</h3>
உங்கள் ஆதார் அட்டை மற்றும் எரிவாயு இணைப்புப் புத்தகத்துடன் கேஸ் ஏஜென்சி நிலையத்திற்குச் செல்லவும். அங்குள்ள ஊழியர் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களைச் சரிபார்ப்பார். பயோமெட்ரிக் ஸ்கேன் மூலம் e-KYC செயல்முறை முடிக்கப்பட்டு, உங்கள் தரவுகள் புதுப்பிக்கப்படும்.
<h3>ஆன்லைனில் எப்படி செய்வது?</h3>
இந்தச் செயல்முறைக்குச் சிக்கலான முயற்சிகள் எதுவும் தேவையில்லை. ஸ்மார்ட்போன் மூலம் வீட்டிலிருந்தே e-KYC-ஐ ஆன்லைனில் முடிக்கலாம். கேஸ் ஏஜென்சி நிலையத்திற்குச் சென்று வரிசையில் நிற்பதைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் வீட்டிலிருந்தே இந்தச் செயல்முறையை முடிக்கலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-kept-repo-rate-remain-unchanged-for-next-two-months-96460.html">ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!</a></strong>
<ul>
 	<li>முதலில், இண்டேன், பாரத் கேஸ், அல்லது எச்பி கேஸ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பார்வையிடவும்.</li>
 	<li>உங்கள் கணக்கில் லாகின் செய்து உள்நுழைந்து, ‘eKYC’ அல்லது ‘KYC Update’ என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.</li>
 	<li>உங்கள் எல்பிஜி நுகர்வோர் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.</li>
 	<li>அடுத்து, OTP சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும்.</li>
 	<li>உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த OTP-ஐ உள்ளிடவும்.</li>
</ul>
<h3>தேவையான ஆவணங்கள்</h3>
<ul>
 	<li>ஆதார் கார்டு</li>
 	<li>எரிவாயு இணைப்புப் புத்தகப் புத்தகம் அல்லது எல்பிஜி (LPG) நுகர்வோர் எண்</li>
 	<li>ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்</li>
 	<li>பிற அடையாளச் சான்று</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO : பிஎஃப் பணம் எடுக்க இனி இது அவசியம் இல்லை.. வந்தது அதிரடி மாற்றம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/employees-need-not-to-submit-cancelled-cheque-or-bank-account-passbook-to-claim-pf-money-96730.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 10:40:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/employees-need-not-to-submit-cancelled-cheque-or-bank-account-passbook-to-claim-pf-money-96730.html</guid>
		            
			

    	<description><![CDATA[Important Update In EPFO | நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/update-in-epfo.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="EPFO : பிஎஃப் பணம் எடுக்க இனி இது அவசியம் இல்லை.. வந்தது அதிரடி மாற்றம்!" /></figure>இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான முக்கிய சேமிப்பாத இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் <strong>(EPFO - Employee Provident Fund Organization)</strong> செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு ஊழியர் வருங்கால வைப்பு  நிதி அமைச்சகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு புதிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விரைவாக தீர்த்துவைக்கப்படும் பிஎஃப் க்ளெய்ம்கள்</h3>
2025 - 2026 நிதியாண்டில் மட்டும் இபிஎஃப்ஓ அமைப்பு மொத்தம் சுமார் 8.3 கோடி கிளைம்களை தீர்த்து வைத்துள்ளது. இதுவே முந்தைய நிதியாண்டு (2024 - 2025) இது வெறும் 6 கோடியாக மட்டுமே இருந்தது. டிஜிட்டல் ஆட்டோமேஷன்<strong> (Digital Automation)</strong> மற்றும் விரைவான செயலாக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக கடந்த நிதியாண்டில் பெரும்பாலான கிளைம்கள் தீர்த்து வைக்கப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவலை வெளியிட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/what-will-happen-to-your-pf-account-if-you-took-career-break-96526.html"> EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>
<h3>இனி பிஎஃப் பணத்தை எடுக்க Cancelled Cheque தேவையா?</h3>
பொதுவாக இபிஎஃப்ஓவின் இணையதளம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க ஊழியர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது வங்கி கணக்கை உறுதி செய்வதற்காக ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி கணக்கு பாஸ்புக் நகலை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், அது குறித்த முக்கிய அறிவிப்பை இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-kept-repo-rate-remain-unchanged-for-next-two-months-96460.html">ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!</a>

இபிஎஃப்ஓவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின்படி, இந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் முறை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்யும் ஊழியர்கள் இனி தங்களது வங்கி கணக்கு புத்தக நகலையோ அல்லது கேன்சல் செய்யப்பட்ட செக் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இந்த மாற்றம் கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : மீண்டும் ரூ.14,000-த்தை நெருங்கிய தங்கம்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-8th-august-gold-increases-by-560-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-96720.html</link>	
		<pubDate>Sat, 08 Aug 2026 10:16:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-8th-august-gold-increases-by-560-check-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-96720.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price In Chennai On August 08, 2026 | சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-august-08.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : மீண்டும் ரூ.14,000-த்தை நெருங்கிய தங்கம்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 08 :</strong> கடந்த சில நாட்களாக தங்கம் விலை <strong>(Gold Price)</strong> சரசரவென விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 08, 2026) தங்கம் விலை மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>சரசரவென உயர்வை சந்தித்து வரும் தங்கம் விலை இ</h3>
ஜுன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரசரவென விலை உயர்ந்து வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/what-will-happen-to-your-pf-account-if-you-took-career-break-96526.html">EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>

அதுமட்டுமன்றி, ஹோர்முஸ் நீரிணையும் விரைவில் திறந்துவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான முதலீட்டான தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தான் ரூ.13,000-க்குள்ளேயே நீடித்து வந்த தங்கம் விலை தற்போது ரூ.14,000-த்தை நெருங்கியுள்ளது.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை</h3>
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 08, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>லோனுக்கான தவணையை செலுத்த தவறினால் உங்களுக்கு மிரட்டல் வருகிறதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதி</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/rbi-introduces-new-loan-recovery-rules-strict-call-and-visit-timings-from-january-1-2027-96657.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 21:53:19 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/rbi-introduces-new-loan-recovery-rules-strict-call-and-visit-timings-from-january-1-2027-96657.html</guid>
		            
			

    	<description><![CDATA[கடனுக்கான  மாதத் தவணையை வசூலிக்க வங்கிகள் பெரும்பாலும் தினமும் போனில் அழைப்பதையோ அல்லது நேரில் சென்று பார்ப்பதையோ வழக்கமாகக் கொண்டுள்ளன. .இத்தகைய நடைமுறைகளைக் கட்டுப்படுத்த, புதிய கடன் வசூல் விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/emi.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="லோனுக்கான தவணையை செலுத்த தவறினால் உங்களுக்கு மிரட்டல் வருகிறதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதி" /></figure>கடன் வாங்கியவர் தனது தவணைத் தொகையை உரிய நேரத்தில் செலுத்தத் தவறினால், வங்கிகள் அவரை கடன் செலுத்தாதவர் என்று வகைப்படுத்துகின்றன. நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கிகள் பெரும்பாலும் தினமும் போனில் அழைப்பதையோ அல்லது நேரில் சென்று பார்ப்பதையோ வழக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், பணம் செலுத்தாதது தொடர்பாகத் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இத்தகைய நடைமுறைகளைக் கட்டுப்படுத்த, புதிய கடன் வசூல் விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் <a href="https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-kept-repo-rate-remain-unchanged-for-next-two-months-96460.html" target="_blank" rel="noopener">ரிசர்வ் வங்கி</a> ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
<h3>லோனுக்கான தவணையை செலுத்த தவறினால் உங்களுக்கு மிரட்டல் வருகிறதா?</h3>
போனில் அழைப்பதற்கோ அல்லது கடன் வாங்கியவரின் வீட்டிற்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்பட்ட நேரங்கள் குறித்து இந்த விதிமுறைகள் கடுமையான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளன. இந்த விதிகள் ஜனவரி 1, 2027 முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரவுள்ள மாற்றங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-kept-repo-rate-remain-unchanged-for-next-two-months-96460.html">ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!</a></strong>

அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய கடன் வசூல் வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடன் வசூல் தொடர்பான தொலைபேசி அழைப்புகளை காலை 8:00 மணி முதல் மாலை 7:00 மணிக்குள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்திற்கு பிறகு அழைப்பது விதிமீறலாகும். அதேபோல, நேரில் சென்று சந்திப்பதும் இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ளேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், இருப்பினும், கடன் வாங்கியவர் ஒப்புக்கொண்டால் மற்ற நேரங்களிலும் தொடர்பு கொள்ளலாம். உடல்நல அவசரநிலை, குடும்பத்தில் மரணம் அல்லது திருமண நிகழ்வுகள் போன்ற நேரங்களில் கடன் வசூல் முகவர்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளக்கூடாது. மேலும், தொடர்ந்து அழைப்பதன் மூலம் துன்புறுத்துதல், பொதுவெளியில் அவமானப்படுத்துதல் அல்லது குடும்ப உறுப்பினர்களை மிரட்டுதல் போன்ற நடைமுறைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

கடன் வசூல் முகவர்கள் தரக்குறைவான அல்லது மிரட்டும் மொழியைப் பயன்படுத்தவோ, துன்புறுத்தலில் ஈடுபடவோ அல்லது வாடிக்கையாளருக்குத் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவோ ​​கூடாது. கடன் வாங்கியவரின் வீட்டிற்குச் செல்ல விரும்பினால், முகவர்கள் குறைந்தது ஒரு நாள் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வழக்கை கையாளும் ஏஜென்சி குறித்த தகவல்களை வங்கி வழங்க வேண்டும். மேலும் முகவர்கள் தங்கள் அடையாள அட்டைகள், அங்கீகாரக் கடிதங்கள் மற்றும் தொடர்புடைய வசூல் அறிவிப்பு ஆகியவற்றை உடன் வைத்திருக்க வேண்டும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/from-which-bank-you-can-exchange-the-old-and-teared-rupee-notes-into-new-96458.html">கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் மாற்றம் செய்யலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a></strong>

இந்த ஆவணங்களில் முகமை மற்றும் கடன் வழங்குநரின் குறைகளைத் தீர்க்கும் அதிகாரி ஆகியோரின் தொடர்பு விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பொதுவாகக் கடன் வாங்கியவரை அவர்கள் விரும்பும் இடத்தில் தொடர்பு கொள்ள வேண்டும்; இருப்பினும், கடன் வாங்கியவர் எந்த இடத்தையும் குறிப்பிடாத பட்சத்திலோ அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட இடத்திற்குத் தொடர்ந்து வராத பட்சத்திலோ, முகவர்கள் கடன் வாங்கியவரின் வீட்டிற்கோ அல்லது பணியிடத்திற்கோ செல்லலாம் என்று ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடன் வசூல் தொடர்பான தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? பிசிஐ விளக்கம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/upi-merchant-charges-explained-no-extra-cost-for-consumers-says-government-96654.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 21:15:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/upi-merchant-charges-explained-no-extra-cost-for-consumers-says-government-96654.html</guid>
		            
			

    	<description><![CDATA[சமீப நாட்களாக யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான சாத்தியமான கட்டணங்கள் குறித்து பல விவாதங்களும் வதந்திகளும் பரவின. இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிஐ எனப்படும் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு ட்வீட் மூலம் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/upi-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? பிசிஐ விளக்கம்" /></figure>டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. சாலையோர டீ கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை, நாம் எந்தத் தயக்கமும் இன்றி இயல்பாகவே நமது அலைபேசியை எடுத்து, QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்துகிறோம். இருப்பினும், சமீப நாட்களாக <a href="https://www.tv9tamilnews.com/india/upi-charges-only-for-merchants-not-customers-says-finance-minister-nirmala-sitharaman-on-new-bill-96486.html" target="_blank" rel="noopener">யுபிஐ</a> பரிவர்த்தனைகள் மீதான சாத்தியமான கட்டணங்கள் குறித்து பல விவாதங்களும் வதந்திகளும் பரவின. இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிஐ எனப்படும் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு ட்வீட் மூலம் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளது.
<h3>இனி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா?</h3>
இனி யுபிஐயை பயன்படுத்த பயனர்கள் பணம் செலுத்த வேண்டுமா என்பதுதான் இந்த விவகாரத்தில் எழுந்த மிக முக்கியமான கேள்வி. இந்த நிலையில் பேமெண்ட்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட எக்ஸ் பதிவில் விளக்கமளித்துள்ளது. அதன்படி யுபிஐ பயன்படுத்த பணம் செலுத்த தேவையில்லை என விளக்கமளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, பொதுமக்களுக்கு இது முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/from-which-bank-you-can-exchange-the-old-and-teared-rupee-notes-into-new-96458.html">கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் மாற்றம் செய்யலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a></strong>

முன்பைப் போலவே, எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி நீங்கள் உடனடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். குடும்பத்தினருக்குப் பணம் அனுப்புவதோ அல்லது பொருட்கள் வாங்கியதற்கான கட்டணத்தைச் செலுத்துவதோ எதுவாக இருந்தாலும், இந்தச் சேவை வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இலவசமாகவே இருந்து வருகிறது. இப்போதும் இலவசமாகவே உள்ளது. எதிர்காலத்திலும் இதற்குக் கட்டணம் விதிக்கும் திட்டம் ஏதுமில்லை.
<h3>சிறு கடைகளுக்கான பணப் பரிவர்த்தனை</h3>
உள்ளூர் மளிகைக் கடை உரிமையாளர்கள் அல்லது தெருவோர வியாபாரிகள் போன்ற சிறு வணிகர்களுக்குக் கவலைப்படத் தேவையில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். யுபிஐ மூலம் பணம் பெறுவதற்குச் சிறு கடைக்காரர்களிடம் மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்அல்லது கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. உண்மையில், பெரிய மற்றும் சிறிய என அனைத்து அளவிலான வணிகங்களையும் இந்த நெட்வொர்க்கில் இணைப்பதற்காகவே இந்த டிஜிட்டல் அமைப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
<h3>பிசிஐ விளக்கம்</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">There has been considerable discussion around UPI and merchant charges. Here are the facts behind the conversation what it means for consumers, merchants, and India's digital payment ecosystem.

1. Will I have to pay to use UPI?
No. UPI has always been free for consumers since…</p>
— PCI - Payments Council of India (@PCIUpdates) <a href="https://x.com/PCIUpdates/status/2085696047448502682?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/central-government-of-india-planning-to-collect-extra-money-for-gas-cylinders-to-construct-lpg-storage-96395.html">கேஸ் சிலிண்டருக்கு புதிய வரி.. ஆலோசனை மேற்கொண்டு வரும் அரசு.. வெளியான முக்கிய தகவல்!</a></strong>

கடந்த 10 ஆண்டுகளில், யுபிஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய கொடுப்பனவு கழகம் மற்றும் ரிசர்வ் வங்கிஆகியவை இணைந்து பெருமளவில் முதலீடு செய்துள்ளன. வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் இந்த அமைப்பை இணையவழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடு அவசியமாகிறது. தற்போது, ​​இந்த ஒட்டுமொத்தக் கட்டமைப்புடன் தொடர்புடைய செலவுகளை வங்கிகளும் பணப் பரிவர்த்தனை நிறுவனங்களுமே ஏற்றுக்கொண்டு வருகின்றன.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/tamil-nadu/premalatha-vijayakanth-urged-in-legislative-assembly-that-virudhachalam-be-declared-a-separate-district-96566.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 15:24:06 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Gowtham Kannan s]]></dc:creator>
				<category><![CDATA[Tamil Nadu Budget 2026]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/tamil-nadu/premalatha-vijayakanth-urged-in-legislative-assembly-that-virudhachalam-be-declared-a-separate-district-96566.html</guid>
		            
			

    	<description><![CDATA[Premalatha Vijayakanth : விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறிய கருத்துக்களை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரந்து கொள்ளலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/premalatha.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!" /></figure>தமிழக அரசு தாக்கல் செய்த பொது நிதிநிலை அறிக்கை மற்றும் விவசாய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. பேசியதாவது: தமிழக சட்டமன்றம் கூடிய முதல் நாளிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். இதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கினால்தான் தனி மாவட்டமாக அறிவிக்க முடியும். விருதாச்சலம் தொகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல்கள் உரிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்து கொண்டிருக்கின்றன. இதனை துறை சார்ந்த அமைச்சரும், அரசும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் சுமார் இரு நாட்களில் நெல்களை கொள்முதல் செய்து விடுவர்.
<h3>நெல்கள் மழையில் நனைந்து வீணாகின்றன</h3>
ஆனால், தற்போது புதிய ஆட்சி அமைந்திருப்பதால் நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதனால், பல லட்சம் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். வேளாண் துறை அமைச்சர் வினோத்தின் சொந்த ஊரான கும்பகோணத்திலும் பல்வேறு இடங்களில் நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. தமிழகத்தில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இதனை சேமித்து வைக்கும் வகையில் குளம், ஏரிகள் உள்ளிட்டவற்றை தூர்வார வேண்டும்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/minister-n-aanand-has-stated-that-all-the-necessary-actions-will-be-taken-in-cauvery-issue-96520.html" target="_blank" rel="noopener">காவிரி உரிமையில் எந்த சமரசமும் இல்லை; மேகதாது அணையை தடுக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி</a>
<h3>தண்ணீருக்காக கையேந்தி நிற்க வேண்டாம்</h3>
தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதன் மூலம் மற்ற மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்தி நிற்பது தவிர்க்கப்படும். தமிழக முதல்வர் விஜய் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக திரட்டி நீட் தேர்வு, காவிரி நீர் உள்ளிட்ட விவரங்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாய பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரும் பெரிதாக எதிர்பார்த்த விவசாய கடன் முழு தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
<h3>முதல்வர் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் நிற்கும்</h3>
காவிரி நீர் நமது உரிமை. அதை தர வேண்டியது கர்நாடக அரசின் கடமை. இதனை யாரும் மாற்ற முடியாது. காவிரி நீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் பின்னால் நிற்கும். முதல்வர் கர்நாடகா செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தேமுதிக துணை நிற்கும். முதல்வருக்கு தலைகுனிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டெழும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aadhav-arjuna-criticized-m-k-stalin-in-the-legislative-assembly-regarding-the-tasmac-corruption-issue-96559.html" target="_blank" rel="noopener">அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!</a> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/what-will-happen-to-your-pf-account-if-you-took-career-break-96526.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 14:10:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/what-will-happen-to-your-pf-account-if-you-took-career-break-96526.html</guid>
		            
			

    	<description><![CDATA[What Happen To Your PF Account During Career Break | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பிஎஃப் கணக்கு வைத்துள்ள ஊழியர்களுக்கு பண வரவு வைக்கப்பட்டு அதற்கான வட்டியும் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், கெரியர் பிரேக் எடுத்தால் பிஎஃப் பணம் என்னவாகும் என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/career-gap.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வாழ்வாதாரமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்<strong> (EPFO - Employee Provident Fund Organization)</strong> இயங்கி வருகிறது. ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யும் இபிஎஃப்ஓ, அதனை ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கி வரவு வைக்கிறது. இந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் சில தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஊழியர்கள் இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்து விலகி இருந்தால் அவர்களது பிஎஃப் <strong>(PF - Provident Fund)</strong> பணம் என்னவாகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இரண்டு ஆண்டுகள் கெரியர் கேப் பிஎஃப் பணத்தை என்ன செய்யும்?</h3>
பிஎஃப் பணம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், அதற்காக வட்டியும் வழங்கப்படும். இந்த நிலையில், ஒருவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்து விலகி இருந்தால் பிஎஃப் பணத்திற்கு என்ன ஆகும், கணக்கில் இருக்கும் பிஎஃப் பணத்திற்கு வட்டி வருமா என்பதெல்லாம் பலருக்கும் கேள்வியாக உள்ளது. ஆனால், ஊழியர்கள் கவலைக்கொள்ளும் வகையில் கெரியர் பிரேக் எடுத்தால் பிஎஃப் கணக்கிற்கும், அதில் இருக்கும் பணத்திற்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-5000-rupees-in-just-two-days-what-is-the-reason-behind-sudden-hike-96376.html">Gold : இரண்டு நாட்களில் ரூ.5,000 விலை உயர்வை சந்தித்த தங்கம்.. திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?</a>
<h3>எந்த பங்களிப்பும் செய்யப்படாது</h3>
நீங்கள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் உங்களது பிஎஃப் பணத்தை பயன்படுத்தவில்லை என்றாலும் உங்கள், பிஎஃப் கணக்கிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது. ஆனால், உங்கள் பிஎஃப் கணக்கில் எந்தவித பங்களிப்பும் மேற்கொள்ளப்படாது என்பதையும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/will-pre-closing-bank-loans-hike-credit-score-photo-gallery-96361.html">வங்கி கடனை Pre Close செய்தால் Credit Score உயருமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>
<h3>தொடர்ந்து வட்டி வரவு வைக்கப்படும்</h3>
இபிஎஃப்ஓ விதிகளின்படி, ஒருவர் பணியில் இருந்து இடை நின்றாலும் தொடர்ந்து அந்த நபருக்கு வட்டி வழங்கப்பட்டு வரும். எனவே நீங்கள் இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்து பிரேக் எடுத்தாலும், உங்களுக்கு உங்களது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்துக்கு வட்டி வழங்கப்படும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-7th-august-gold-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-96495.html</link>	
		<pubDate>Fri, 07 Aug 2026 10:31:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-silver-price-on-7th-august-gold-gold-silver-rate-in-chennai-coimbatore-madurai-96495.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price Remain Same In Chennai | சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/gold-price-30.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!" /></figure><strong>சென்னை, ஆகஸ்ட் 07 :</strong> கடந்த இரண்டு நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வந்த தங்கம், இன்று (ஆகஸ்ட் 07, 2026) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் <strong>(Gold and Silver Price)</strong> எந்தவித மாற்றமுமின்றி, நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை</h3>
2026, ஜூலை மாதம் முதலே தங்கம் வில தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தாலும், ரூ.13,000 என்ற அடிப்படியிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், ஆகஸ்ட் 05, 2026 மற்றும் ஆகஸ்ட் 06, 2026 ஆகிய தேதிகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி விலை உயர்வை சந்தித்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-price-increased-5000-rupees-in-just-two-days-what-is-the-reason-behind-sudden-hike-96376.html">Gold : இரண்டு நாட்களில் ரூ.5,000 விலை உயர்வை சந்தித்த தங்கம்.. திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?</a>

ஈரான் போர் முடிவுக்கு வரும் தருவாயை எட்டிய நிலையில், தங்கம் இத்தகைய அதிரடி உயர்வை எட்டியது. ஆனால், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மிகப்பெரிய டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று விலையில் மாற்றமின்றி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-kept-repo-rate-remain-unchanged-for-next-two-months-96460.html</link>	
		<pubDate>Thu, 06 Aug 2026 23:36:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-kept-repo-rate-remain-unchanged-for-next-two-months-96460.html</guid>
		            
			

    	<description><![CDATA[Reserve Bank Of India Kept Repo Rate Remain Unchanged | ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்பிஐ கூறியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/repo-rate-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!" /></figure>இந்திய ரிசர்வ் வங்கி<strong> (RBI - Reserve Bank Of India)</strong> ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரெப்போ வட்டி விகிதம்<strong> (Repo Rate)</strong> குறித்த அறிவிப்பை வெளியிடும். ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் நடைபெறும் நிலையில், அந்த கூட்டத்திற்கு பிறகு ஆர்பிஐ கவர்னர் ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார். அந்த வகையில், இந்த இரண்டு மாதங்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருப்பதாக ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ</h3>
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமல் உள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே தொடரும் என அவர் கூறியுள்ளார். நாட்டின் பணவீக்கம் டார்கெட் அளவை விட அதிகமாக உள்ளது. பணவீக்கம் அளவு 4 சதவீதத்திற்கு மேல் உள்ளதற்கு முக்கிய காரணம் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு தான் என்று கூறியுள்ள அவர், கோர் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/budget/mk-stalin-slams-agriculture-budget-says-government-is-just-rebranding-old-schemes-96364.html">திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்</a>
<h3>என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?</h3>
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம். இந்த வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படும்போது, வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன் மற்றும் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யும். அதாவது, ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் கடன்களுக்கான மற்றும் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயரும். இதுவே, ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் கடன்களுக்கான மற்றும் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறையும். தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் மாற்றம் செய்யலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/from-which-bank-you-can-exchange-the-old-and-teared-rupee-notes-into-new-96458.html</link>	
		<pubDate>Thu, 06 Aug 2026 23:18:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/from-which-bank-you-can-exchange-the-old-and-teared-rupee-notes-into-new-96458.html</guid>
		            
			

    	<description><![CDATA[Teared Rupee Notes Exchange In Banks | பலரும் ரூபாய் நோட்டுகள் கிழிந்துவிட்டால் அவற்றுக்கு மதிப்பு இல்லை என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய மற்றும் நல்ல ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/indian-rupees.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் மாற்றம் செய்யலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>இந்திய ரூபாய் நோட்டுக்கள்<strong> (Indian Rupees Notes)</strong> காகிதத்தால் செய்யப்பட்டவை. இதன் காரணமாக அது மிக எளிதாக கிழிந்துவிடும் தன்மையை கொண்டுள்ளது. தண்ணீர், நீர் என எதில் பட்டாலும் இந்திய ரூபாய் நோட்டுகள் பாழாகிவிடும். சற்று கடினமாக கையாண்டாலோ அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் என்றாலோ மிக எளிதில் கிழிந்துவிடும். ரூபாய் நோட்டுக்கள் கிழிந்தாலும் அதற்கு மதிப்பு உண்டு. இந்த நிலையில், கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் கொடுத்து மாற்றலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் மாற்றுவது?</h3>
உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அது குறித்து கவலைப்பட வேண்டாம். அவற்றை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி <strong>(RBI - Reserve Bank Of India)</strong> சில விதிகளை வகுத்துள்ளது. அதனை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. கிழிந்த ரூபாய் நோட்டை திரும்ப பெறும் விதிகள் 2009-ன் கீழ் ஒருவர், கிழிந்த ரூபாய் நோட்டை கொடுத்தால் வங்கியின் சார்பில் அதனை கட்டாயம் மாற்றி தர வேண்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-agricultural-budget-2026-new-college-in-tanjore-in-the-name-of-nammazhwar-rupees-5-crore-alloted-96319.html">தஞ்சையில் நம்மாழ்வார் பெயரில் கல்லூரி.. விவசாயிகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள்!</a>
<h3>கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு செல்ல வேண்டுமா?</h3>
பெரும்பாலான நபர்கள் தங்களிடம் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அவற்றை தாங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு சென்றால் மட்டுமே மாற்ற முடியும் என நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி அல்ல. எந்த ஒரு வங்கி கிளைக்கும் சென்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அனுமதி உள்ளது. இவ்வாறு கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளிடம் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெற எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-general-secretary-edappadi-palaniswami-stated-that-tvk-government-agriculture-budget-is-disappointing-96314.html">விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!</a>

எனவே உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதனை வீண் என நினைத்து கீழே தூக்கிப்போடாமல் அதனை வங்கியில் கொடுத்து மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கேஸ் சிலிண்டருக்கு புதிய வரி.. ஆலோசனை மேற்கொண்டு வரும் அரசு.. வெளியான முக்கிய தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/central-government-of-india-planning-to-collect-extra-money-for-gas-cylinders-to-construct-lpg-storage-96395.html</link>	
		<pubDate>Thu, 06 Aug 2026 16:40:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/central-government-of-india-planning-to-collect-extra-money-for-gas-cylinders-to-construct-lpg-storage-96395.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Tax For LPG Gas Cylinders | இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு சேமிப்பு கிடங்கு இருப்பதை போல எல்பிஜி-க்கு இல்லை. இதன் காரணமாக ஈரான் போரின் போது இந்தியா கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்ட நிலையில், எல்பிஜி சேமிப்பு கிடங்கை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/08/lpg-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கேஸ் சிலிண்டருக்கு புதிய வரி.. ஆலோசனை மேற்கொண்டு வரும் அரசு.. வெளியான முக்கிய தகவல்!" /></figure>ஈரான் போர் <strong>(Iran War)</strong> காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அமெரிக்கா <strong>(America)</strong> நடத்திய தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக ஹோர்முஸ் நீரிணையை <strong>(Strait Of Hormuz)</strong> மூடிய ஈரான், உடல நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துச் செல்ல தடை விதித்தது. இதுவே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடுக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இந்த சூழலை சமாளிக்க இந்திய அரசு கேஸ் சிலிண்டர் புக் செய்வது தொடர்பான புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், எதிர்கால கேஸ் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>எல்பிஜி-க்கு வளைகுடா நாடுகளை நம்பியுள்ள இந்தியா</h3>
இந்தியா தனது எல்பிஜி <strong>(LPG - Liquified Petroleum Gas)</strong> தேவைகளுக்கு வளைகுடா நாடுகளையே பெரிய அளவில் நம்பியுள்ளன. இதன் காரணமாக தான், ஈரான் போரின் போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய முடியாமல் இந்தியா தவித்தது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தேவையான கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்படுவதை போல எல்பிஜி சேமித்து வைக்கப்படாதது தான். இவ்வாறு சேமிக்கப்படும் கச்சா எண்ணெய், வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் வராத அவசர காலங்களின் போது பயன்படுத்தப்படும். ஆனால், அத்தகைய சேமிப்பு எல்பிஜி-க்கு இல்லாததன் காரணமாக தான் ஈரான் போரின் போது இந்தியா சவால்களை எதிர்க்கொண்டது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/aiadmk-general-secretary-edappadi-palaniswami-stated-that-tvk-government-agriculture-budget-is-disappointing-96314.html">விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!</a>
<h3>கேஸ் சேமிப்பு கிடங்கை உருவாக்க மத்திய அரசு திட்டம்</h3>
கச்சா எண்ணெயை போல கேஸ் சிலிண்டருக்கும் சேமிப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, சுமார் 42 மில்லியன் டாலர் முதலீட்டில் கேஸ் சேமித்து வைக்கும் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு நிதி திரட்ட எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் பெறுவது தொடர்பாகவும் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/tamilnadu-agriculture-budget-2026-farmer-cash-prizes-and-nammazhvar-award-announced-96296.html">அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு லட்சங்களில் ரொக்கப் பரிசு.. அரசின் முக்கிய விருதுகள் &amp; தகுதிகள்</a>

இதன் மூலம் நாம் கேஸ் சிலிண்டர் வாங்கும்போது செலுத்தும் கட்டணத்திற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>