<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>சமீபத்திய வணிக செய்திகள் Business, Finance and Share Market News in Tamil,  வணிக தமிழ் செய்திகள்</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/business/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/business</link>
 <description>Business News in Tamil: வணிக தமிழ் செய்திகள்: Latest Business News and Breaking News live updates in Tamil Online at tv9tamilnews.com. Read இன்றைய முக்கிய தமிழ் தலைப்புச் செய்திகள், Top headline from Tamil Nadu, India and the world.</description><lastBuildDate>Mon, 18 May 2026 17:00:02 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகள் பழமையானதா? உடனே அப்டேட் பண்ணுங்க  &#8211; மத்திய அரசு எச்சரிக்கை</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/aadhaar-card-older-than-10-years-update-it-soon-to-avoid-service-issues-79235.html</link>	
		<pubDate>Mon, 18 May 2026 17:00:02 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/aadhaar-card-older-than-10-years-update-it-soon-to-avoid-service-issues-79235.html</guid>
		            
			

    	<description><![CDATA[Aadhaar Update : ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கல், மொபைல் சிம் சரிபார்ப்பு, KYC சேவைகள் போன்ற பல சேவைகள் பாதிக்கப்படலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எச்சரித்துள்ளது.  அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/aadhaar-update.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகள் பழமையானதா? உடனே அப்டேட் பண்ணுங்க  &#8211; மத்திய அரசு எச்சரிக்கை" /></figure>இன்றைய காலத்தில்<a href="https://www.tv9tamilnews.com/technology/uidai-shuts-down-maadhaar-app-launches-new-app-with-better-privacy-features-78962.html" target="_blank" rel="noopener"> ஆதார் அட்டை</a> என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல், அரசின் அனைத்து முக்கிய சேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/sbi-fd-scheme-gives-up-to-rs-64227-interest-on-rs-1-lakh-deposit-79225.html" target="_blank" rel="noopener">வங்கி</a> கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது, அரசு நலத்திட்டங்களை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இல்லையென்றால் முக்கிய சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஏன் ஆதார் அப்டேட் அவசியம்?</h3>
ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கல், மொபைல் சிம் சரிபார்ப்பு, KYC சேவைகள் போன்ற பல சேவைகள் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நேரங்களில் வெரிஃபிகேஷன் கூட செய்யமுடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-the-use-of-itr-1-and-itr-4-know-the-usage-before-filing-itr-photo-gallery-78875.html">வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா?.. ஐடிஆர்-1, ஐடிஆர்-4 படிவங்கள் குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a></strong>
<h3>புதிய ஆதார் செயலி</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The <a href="https://twitter.com/hashtag/mAadhaar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#mAadhaar</a> App is retiring soon. Now experience a smarter, faster, and more secure digital journey with the new <a href="https://twitter.com/hashtag/AadhaarApp?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AadhaarApp</a>. From secure QR-based <a href="https://twitter.com/hashtag/Aadhaar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Aadhaar</a> sharing to enhanced privacy controls and seamless access to Aadhaar services — the new app is designed to make your… <a href="https://t.co/snfeUx4Rgr">pic.twitter.com/snfeUx4Rgr</a></p>
— Aadhaar (@UIDAI) <a href="https://twitter.com/UIDAI/status/2055184740484018327?ref_src=twsrc%5Etfw">May 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

நம்மிடம் உள்ள ஆதார் கார்டின் கீழே இடது பக்கத்தில் அது எப்போது வழங்கப்பட்டது என்ற தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். நம்மிடம் உள்ள ஆதார் கார்டு 2016 அல்லது அதற்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தால் அதனை உடனே அப்டேட் செய்வது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரில் தகவல்களை ஆன்லைன் மூலம் இலவசமாக அப்டேட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற ஜூன் 14, 2026 வரை ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் ஆதார் மையங்களுக்கு சென்று அப்டேட் செய்ய சுமார் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஜூன் 14, 2026க்கு பிறகு ஆன்லைனில் அப்டேட் செய்பவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/husband-and-wife-can-invest-in-this-scheme-and-get-9250-rupees-per-month-78838.html">மாதம் ரூ.9,250 வருமானம் பெறலாம்.. கணவன் – மனைவி இணைந்து முதலீடு செய்ய அசத்தல் திட்டம்!</a></strong>

ஆதார் அப்டேட் செய்யும் முன் கீழ்க்கண்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அடையாள சான்றாக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் இவற்றை ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும். முகவரி சான்றாக மின்சார கட்டண ரசிது, வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை பயன்படுத்தலாம். ஆவணங்களை JPEG, PNG, PDF ஃபைல்களாக அப்லோடு செய்யலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.64,227 வரை லாபம் &#8211; எஸ்பிஐயின் ஃபிக்சட் டெபாசிட் திட்டம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/sbi-fd-scheme-gives-up-to-rs-64227-interest-on-rs-1-lakh-deposit-79225.html</link>	
		<pubDate>Mon, 18 May 2026 16:14:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/sbi-fd-scheme-gives-up-to-rs-64227-interest-on-rs-1-lakh-deposit-79225.html</guid>
		            
			    	<description><![CDATA[பங்குச்சந்தை சரிவுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பலர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உறுதியான வருமானம் தரும் ஃபிக்சட் திட்டங்களுக்கு மீண்டும் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த கட்டுரையில் எஸ்பிஐயின் எஃப்டி திட்டம் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/sbi-fd-scheme-gives-up-to-rs-64227-interest-on-rs-1-lakh-deposit-79225.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/sbi-fd-scheme-1-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Sbi Fd Scheme 1" /></a></dt><p>பங்குச்சந்தையில் தொடர்ந்து நிலவும் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார பதற்றம் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை நோக்கி திரும்பி வருகின்றனர்.  இந்த நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் நிரந்தர வைப்பு திட்டம் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அதிகபட்சமாக ரூ.64,227 வரை நிரந்தர வட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/sbi-fd-scheme-gives-up-to-rs-64227-interest-on-rs-1-lakh-deposit-79225.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/sbi-fd-scheme-2-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Sbi Fd Scheme 2" /></a></dt><p>பங்குச்சந்தை சரிவுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பலர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் எந்தவித ஆபத்தும் இல்லாமல் உறுதியான வருமானம் தரும் ஃபிக்சட் திட்டங்களுக்கு மீண்டும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/sbi-fd-scheme-gives-up-to-rs-64227-interest-on-rs-1-lakh-deposit-79225.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/sbi-fd-scheme-3-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Sbi Fd Scheme 3" /></a></dt><p>எஸ்பிஐ வங்கி தற்போது ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3.05 சதவீதம் முதல் 7.15 சதவீதம் வரை வட்டி வழங்கி வருகிறது. பிச்சட் டெபாசிட் திட்டங்களில் குறைந்தபட்சமாக 7 நாட்கள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/sbi-fd-scheme-gives-up-to-rs-64227-interest-on-rs-1-lakh-deposit-79225.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/sbi-fd-scheme-4-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Sbi Fd Scheme 4" /></a></dt><p>5 முதல் 10 ஆண்டுகள் கால ஃபிக்சட் திட்டங்களுக்கு, பொதுமக்களுக்கு 6.05 சவிகிதம்,  மூத்த குடிமக்களுக்கு 7.05 சதவிகிதம் மற்றும் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 7.15 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதனைடுத்து  ஒருவர் எஸ்பிஐ வங்கியின் 7 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 7 ஆண்டுகளுக்கு பிறகு மொத்தமாக ரூ.1,52,246 கிடைக்கும். அதாவது, ரூ.52,246 வட்டி கிடைக்கும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/sbi-fd-scheme-gives-up-to-rs-64227-interest-on-rs-1-lakh-deposit-79225.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/sbi-fd-scheme-5-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Sbi Fd Scheme 5" /></a></dt><p>மூத்த குடிமக்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக ரூ.1,63,101 கிடைக்கும். இதில் ரூ.63,101 வட்டியாக கிடைக்கும். சூப்பர் சீனியர் குடிமக்கள் இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 7 ஆண்டுகள் முடிவில் ரூ.1,64,227 கிடைக்கும்.  அதாவது, ரூ.64,227 வரை நிரந்தர வட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>பிடிகொடுக்காத ட்ரம்ப்.. அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. எதிர்காலம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/crude-oil-prices-rise-for-third-session-straight-amid-us-iran-war-uncertainty-details-here-79172.html</link>	
		<pubDate>Mon, 18 May 2026 10:07:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/crude-oil-prices-rise-for-third-session-straight-amid-us-iran-war-uncertainty-details-here-79172.html</guid>
		            
			

    	<description><![CDATA[Crude Oil Prices : சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் ஒருமுறை கடுமையாக உயர்ந்துள்ளன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் எரிசக்தி சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தி, பிரென்ட் கச்சா எண்ணெய் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 110 டாலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/crude-oil-prices-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிடிகொடுக்காத ட்ரம்ப்.. அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. எதிர்காலம் என்ன?" /></figure>உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் இந்த அளவிற்கு வேகமாக உயரும்போதெல்லாம், அது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் ஒரு சராசரி நபரின் மாதாந்திர பட்ஜெட்டை நேரடியாகப் பாதிக்கிறது. இந்த சமீபத்திய உயர்வுக்கு முக்கிய காரணம், முடிவெடுப்பதற்கான நேரம் குறைந்து வருகிறது என்று ஈரானுக்கு டிரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கையே ஆகும். பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால விலை பேரலுக்கு 1.32 சதவீதம் (சுமார் $1.44) உயர்ந்து, $110.70-ஐ எட்டியது. இது மே 5-ஆம் தேதிக்குப் பிறகு அதன் மிக உயர்ந்த அளவாகும். அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் இதற்குச் சற்றும் சளைத்ததல்ல. அது 1.75 சதவீதம் ($1.84) உயர்ந்து, பேரலுக்கு $107.26 என்ற விலையில் வர்த்தகமானது; இது மே 4-ஆம் தேதிக்குப் பிறகு அதன் மிக உயர்ந்த அளவாகும். உண்மையில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தங்களது முதல் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, கச்சா எண்ணெய் விலைகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.
<h3>சந்தையில் பீதியை ஏற்படுத்திய டிரம்பின் எச்சரிக்கை</h3>
டொனால்ட் டிரம்பின் சமீபத்திய அறிக்கைகள் இந்த நெருப்பில் எண்ணெயை ஊற்றியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை, டிரம்ப் சமூக ஊடகங்களில் ஈரானை வெளிப்படையாக எச்சரித்தார். நேரம் குறைந்து வருவதாகவும், அவர்கள் விரைவாக ஒரு முடிவை எடுக்க வேண்டும், இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மிஞ்சாது என்றும் அவர் எழுதியிருந்தார். ஆக்சியோஸ் அறிக்கையின்படி, டிரம்ப் ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறார். சனிக்கிழமையன்று, அவர் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சிஐஏ தலைவர் ஜான் ராட்க்ளிஃப் மற்றும் வெள்ளை மாளிகை தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தார்.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-you-keep-at-home-without-penalty-in-india-79072.html" target="_blank" rel="noopener">வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? கூடுதலாக இருந்தால் அபராதம் விதிக்கப்படுமா</a>

செவ்வாய்க்கிழமை தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் அவருக்கு மற்றொரு முக்கியமான சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. டிரம்ப் ஈரானிடமிருந்து ஒரு புதிய முன்மொழிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆனால் ஈரான் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
<h3>வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் விநியோக நெருக்கடி</h3>
இந்த முன்னெப்போதும் இல்லாத விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள கடுமையான இடையூறு ஆகும். ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் வரத்து குறைந்துள்ளதால், பாரசீக வளைகுடா உற்பத்தியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. மோர்கன் ஸ்டான்லி போன்ற முக்கிய நிதி நிறுவனங்கள் எதிர்காலம் குறித்து எச்சரித்துள்ளன. இந்த முக்கிய கடல்வழி ஜூன் மாதம் வரை மூடப்பட்டிருந்தால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும்.

மேலும், கால நீட்டிப்பு கோரிய இந்தியாவின் கோரிக்கையையும் மீறி, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான விலக்கை முடிவுக்குக் கொண்டுவரும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு, விநியோகத்தில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள அணுமின் நிலையம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல், எரிசக்தி உள்கட்டமைப்புக்கான அச்சுறுத்தல் தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? கூடுதலாக இருந்தால் அபராதம் விதிக்கப்படுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-you-keep-at-home-without-penalty-in-india-79072.html</link>	
		<pubDate>Sun, 17 May 2026 16:42:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-you-keep-at-home-without-penalty-in-india-79072.html</guid>
		            
			    	<description><![CDATA[Gold Rules India : திருவிழா மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் தங்கம் வாங்குவது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.  ஆனால் ஒருவர்  வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?  அதிகமாக இருந்தால் அபராதம் விதிக்கப்படுமா என்ற கேள்விகள் மக்களிடையே உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-you-keep-at-home-without-penalty-in-india-79072.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-can-you-keep-at-home-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gold Can You Keep At Home 5" /></a></dt><p>இல்லையெனில், அந்த தங்கம்  கணக்கில் காட்டப்படாத சொத்து என கருதப்படலாம்.  வருமான வரித்துறை சோதனையின் போது சரியான ஆவணங்கள் இல்லாமல் அதிக தங்கம் இருந்தால்,  தங்கம் பறிமுதல் செய்யப்படலாம்,  அபராதம் விதிக்கப்படலாம் 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-you-keep-at-home-without-penalty-in-india-79072.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-can-you-keep-at-home-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gold Can You Keep At Home 4" /></a></dt><p>இந்த வரம்பை விட அதிகமாக தங்கம் வைத்திருந்தால், அதற்கான சரியான ஆவணங்கள் மற்றும் வருமான ஆதாரம் இருக்க வேண்டும். தங்கம் வாங்கிய பில், அதற்கான வருமான ஆதாரம், பரிசாக வந்திருந்தால் அதற்கான ஆதாரம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.  
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-you-keep-at-home-without-penalty-in-india-79072.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-can-you-keep-at-home-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gold Can You Keep At Home 3" /></a></dt><p>இதற்காக திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறை விதிப்படி, திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம்.  திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணமானவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-you-keep-at-home-without-penalty-in-india-79072.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-can-you-keep-at-home-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gold Can You Keep At Home 2" /></a></dt><p>வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) சில முக்கிய விதிகளை வகுத்துள்ளது.  பொதுவாக, இந்தியாவில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய மொத்த தங்கத்திற்கு தனியாக சட்ட வரம்பு எதுவும் இல்லை.  ஆனால், அந்த தங்கம் எவ்வாறு வாங்கப்பட்டது என்பதை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறுகிறது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/how-much-gold-can-you-keep-at-home-without-penalty-in-india-79072.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-can-you-keep-at-home.jpg" class="attachment-large size-large wp-post-image" alt=" Gold Can You Keep At Home" /></a></dt><p>இந்தியாவில் தங்கம் வாங்குவது என்பது வெறும் முதலீடாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. குறிப்பாக திருமணம், திருவிழா மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் தங்கம் வாங்குவது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.  ஆனால் ஒருவர்  வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?  அதிகமாக இருந்தால் அபராதம் விதிக்கப்படுமா என்ற கேள்விகள் மக்களிடையே உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம். 
</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>இந்தியாவில் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு.. இந்திய ரிசர்வ் வங்கி தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/indias-forex-reserves-jumps-says-reserve-bank-of-india-78842.html</link>	
		<pubDate>Sat, 16 May 2026 15:51:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/indias-forex-reserves-jumps-says-reserve-bank-of-india-78842.html</guid>
		            
			

    	<description><![CDATA[India's Forex Reserves Jumps | மே 08, 2026 அன்று நிலவரப்படி நாட்டின் அன்னிய செலாவணி 6.295 டாலர்கள் உயர்ந்து 696.988 அமெரிக்க டாலர்களாக இருந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியா போர் காரணமாக பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/forex.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இந்தியாவில் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு.. இந்திய ரிசர்வ் வங்கி தகவல்!" /></figure><strong>மும்பை, மே 16 :</strong> மேற்கு ஆசியா போர் <strong>(West Asia War)</strong> காரணமாக இந்தியாவின் அன்னிய செலாவணி கடும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி <strong>(RBI - Reserve Bank Of India)</strong> கூறியுள்ளது. அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>மேற்கு ஆசியா போர் காரணமாக கடும் சவால்களை எதிர்க்கொள்ளும் உலக நாடுகள்</h3>
மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றின் காரணமாக கடும் சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இதில் இந்தியா எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகிய சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி, நாட்டின் அந்நிய செலாவணியும் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/daily-usage-products-including-vegetables-and-fruits-will-get-costlier-followed-by-petrol-diesel-price-78585.html">பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்</a>
<h3>பெரும் வீழ்ச்சி அடைந்த இந்திய ரூபாய் மதிப்பு</h3>
ஈரான் போர் தொடங்கியது முதலே இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. இதனை சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி, டாலரை அதிக அளவில் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாக அன்னிய செலாவணி கையிருப்பு மெல்ல மெல்ல கரைந்து வந்தது. அதன்படி, மே 01, 2026 அன்றைய நிலவரத்தின் படி நாட்டின் அன்னிய செலாவணி 690.693 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது அடுத்த வாரமே உயர்வை சந்தித்ததாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/fuel-price-hike-risk-of-rising-prices-for-essential-commodities-lorry-owners-association-warns-78566.html">எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை</a>

அதாவது மே 08, 2026 அன்றுடன் நிறைவடைந்த வர்த்தகத்தின் அடிப்படையில், நாட்டின் அன்னிய செலாவணி 6.295 டாலர்கள் உயர்ந்து 696.988 அமெரிக்க டாலர்களாக இருந்ததாக கூறியுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.66 லட்சம் கோடியாக இருந்ததாக ஆர்பிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா?.. ஐடிஆர்-1, ஐடிஆர்-4 படிவங்கள் குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-the-use-of-itr-1-and-itr-4-know-the-usage-before-filing-itr-photo-gallery-78875.html</link>	
		<pubDate>Sat, 16 May 2026 15:15:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-the-use-of-itr-1-and-itr-4-know-the-usage-before-filing-itr-photo-gallery-78875.html</guid>
		            
			    	<description><![CDATA[ITR 1 and ITR 4 For Income Tax Filing | வருமான வரி தாக்கல் செய்ய ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 ஆகிய படிவங்கள் உள்ளன. இந்த நிலையில், எந்த படிவத்தை பயன்படுத்தி யார் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-the-use-of-itr-1-and-itr-4-know-the-usage-before-filing-itr-photo-gallery-78875.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/income-tax-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Income Tax (1)" /></a></dt><p>இந்தியாவில் 2026 - 2027 ஆம் நிதியாண்டு தொடங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் காலம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தான் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களுக்கான எக்செல் பயன்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-the-use-of-itr-1-and-itr-4-know-the-usage-before-filing-itr-photo-gallery-78875.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/income-tax-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Income Tax (2)" /></a></dt><p>2026 - 2027 ஆம் நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், எந்தவித தாமதமும் இன்றி வருமான வரி தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு படிவங்களை பயன்படுத்தி யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-the-use-of-itr-1-and-itr-4-know-the-usage-before-filing-itr-photo-gallery-78875.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/income-tax-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Income Tax (3)" /></a></dt><p>வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தப்படும் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 ஆகிய படிவங்கள் மாத சம்பளம் மற்றும் சிறு வணிகம் மூலம் வருமான ஈட்டும் நபர்களுக்கான பிரத்யேக படிவங்களாக உள்ளன. இவற்றில் வருமானத்திற்கு ஏற்ப அவர்கள் படிவங்களை தேர்தெடுப்பதற்கான அம்சம் உள்ளது. </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-the-use-of-itr-1-and-itr-4-know-the-usage-before-filing-itr-photo-gallery-78875.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/income-tax-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Income Tax (4)" /></a></dt><p>அதாவது, ஐடிஆர்-1 படிவம் ரூ.50 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கும், அவர்களின் வருமானம் வீடு, வட்டி உள்ளிட்ட பிற ஆதாரங்களாக இருப்பவர்களுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதேபோல ஐடிஆர்-4 படிவம் மொத்த வருமானம் ரூ.50 லட்சம் வரை உள்ள தனிநபர்கள், கூட்டு குடும்பங்களுக்கு ஆகியவற்றுக்கு பொருந்தும்.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-the-use-of-itr-1-and-itr-4-know-the-usage-before-filing-itr-photo-gallery-78875.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/income-tax-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Income Tax (5)" /></a></dt><p>வருமான வரி தாக்கல் செய்யும்போது இணையத்தில் உங்களது தகவல்களை உள்ளிட விரும்பினால் ஆன்லைன் முறையை பயன்படுத்தலாம். ஒருவேளை ஆஃப்லைனில் வேலை செய்ய விரும்பினால் எக்செல் முறையை பயன்படுத்தலாம். இந்த இரண்டு அம்சங்களும் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ளன.  </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>மாதம் ரூ.9,250 வருமானம் பெறலாம்.. கணவன் &#8211; மனைவி இணைந்து முதலீடு செய்ய அசத்தல் திட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/husband-and-wife-can-invest-in-this-scheme-and-get-9250-rupees-per-month-78838.html</link>	
		<pubDate>Sat, 16 May 2026 11:50:44 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/husband-and-wife-can-invest-in-this-scheme-and-get-9250-rupees-per-month-78838.html</guid>
		            
			

    	<description><![CDATA[Post Office Monthly Income Scheme | அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றாக அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் உள்ளது. இதில் முதலீடு செய்து அதிக லாபம் பெற முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/mis.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மாதம் ரூ.9,250 வருமானம் பெறலாம்.. கணவன் &#8211; மனைவி இணைந்து முதலீடு செய்ய அசத்தல் திட்டம்!" /></figure>வருமானத்தை முதலீடு செய்து பாதுகாப்பான பொருளாதாரத்தை உருவாக்க அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு <strong>(Saving)</strong> மற்றும் முதலீட்டு <strong>(Investment)</strong> திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதால் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் <strong>(MIS - Monthly Income Scheme)</strong>. இந்த திட்டத்தில் கணவன் - மனைவி இணைந்து முதலீடு செய்து மாதம் ரூ.9,000 வரை வருமானம் பெற முடியும். இந்த நிலையில், அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்</h3>
அஞ்சலகங்கள் மூலம் வழங்கப்படும் இந்த அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தில் தனிநபராகவும், கணவன் - மனைவியாகவும் இணைந்து முதலீடு செய்யலாம். இதன்படி, தனிநபராக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே கூட்டு கணக்கு தொடங்கி முதலீடு செய்தால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/daily-usage-products-including-vegetables-and-fruits-will-get-costlier-followed-by-petrol-diesel-price-78585.html">பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்!</a>
<h3>மாதம் ரூ.9,250 வருமானமாக பெறலாம் - எப்படி?</h3>
கணவன் - மனைவி இணைந்து முதலீடு செய்ய இது சிறந்த திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த 5 ஆண்டுகளுக்கு உங்களால் முதலீடு செய்த அந்த பணத்தை எடுக்க முடியாது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/fuel-price-hike-risk-of-rising-prices-for-essential-commodities-lorry-owners-association-warns-78566.html">எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை</a>

5 ஆண்டுகளுக்கு ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.5.55 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் மாதம் ரூ.9,250 வருமானமாக பெற முடியும். ஒருவேளை திட்டம் முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாக வேண்டும் என்றாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : தங்கம், வெள்ளி விலை சரிவை சந்தித்தது.. இன்றைய விலை நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-reduced-in-chennai-on-may-16-2026-78824.html</link>	
		<pubDate>Sat, 16 May 2026 10:29:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-reduced-in-chennai-on-may-16-2026-78824.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price Reduced | தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-price-18.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : தங்கம், வெள்ளி விலை சரிவை சந்தித்தது.. இன்றைய விலை நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, மே 16 :</strong> மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்</h3>
மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதன் விளைவாக நேற்று (மே 15, 2026) இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்தது. இத்தகைய சூழலில் தற்போது சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/fuel-price-hike-risk-of-rising-prices-for-essential-commodities-lorry-owners-association-warns-78566.html">எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை</a>
<h3>இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.290-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சாதாரண பெட்ரோலுக்கும் பிரீமியம் பெட்ரோலுக்கும் என்ன வித்தியாசம்?  எது சிறந்தது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/normal-petrol-vs-premium-petrol-difference-benefits-and-price-explained-78684.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 17:10:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/normal-petrol-vs-premium-petrol-difference-benefits-and-price-explained-78684.html</guid>
		            
			

    	<description><![CDATA[Normal Petrol vs Premium Petrol : வாகன தயாரிப்பு நிறுவனம் சாதாரண  பெட்ரோலைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தால்,  நீங்கள் வழக்கமான பெட்ரோலையே பயன்படுத்த வேண்டும். இருப்பினும், ஸ்போர்ட்ஸ் பைக்குகள், சொகுசு கார்கள் அல்லது டர்போ இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு, தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் 'உயர் ஆக்டேன் பெட்ரோலையே  பரிந்துரைக்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/petrol-vs-premium-petrol-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சாதாரண பெட்ரோலுக்கும் பிரீமியம் பெட்ரோலுக்கும் என்ன வித்தியாசம்?  எது சிறந்தது?" /></figure>இப்போதெல்லாம், பெட்ரோல் குறித்து நாடு முழுவதும் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எரிபொருள் நுகர்வைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததிலிருந்து, பெட்ரோல் விலைகள் உயரக்கூடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். வாகன ஓட்டிகள் கணித்தபடியே, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தலா ரூ.3 உயர்ந்துள்ளன. இந்தியாவில், சாதாரண பெட்ரோல் மற்றும் பிரீமியம் பெட்ரோல் என முக்கியமாக இரண்டு வகையான பெட்ரோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இவை தனித்துவமான பண்புகளைக் கொண்டிருப்பதுடன், இவற்றின் விலையிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
<h3>சாதாரண பெட்ரோல் என்றால் என்ன?</h3>
வழக்கமான பெட்ரோல் என்பது பைக்குகள் மற்றும் கார்கள் போன்ற அன்றாடப் பயன்பாட்டு வாகனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளாகும். இது எளிமையாக சாதாரண பெட்ரோல் என்றே குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில், இந்த சாதாரண வகை பெட்ரோலின் ஆக்டேன் அளவு பொதுவாக 91 ஆக இருக்கும். நிலையான இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு இதுவே பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.
<h3>பிரீமியம் பெட்ரோல் என்றால் என்ன?</h3>
பிரீமியம் பெட்ரோல் என்பது ஒரு சிறப்பு வகை எரிபொருளாகும். வழக்கமான பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, ​​இது அதிக ஆக்டேன் அளவையும், சில மேம்பட்ட சேர்க்கைப் பொருட்களையும் கொண்டுள்ளது. அதிக செயல்திறன் கொண்ட வாகனங்களுக்கு இதுவே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில், பிரீமியம் பெட்ரோல் பொதுவாக 95 அல்லது அதற்கு மேற்பட்ட ஆக்டேன் அளவைக் கொண்டிருக்கும்.
<h3>வழக்கமான பெட்ரோலுக்கும் பிரீமியம் பெட்ரோலுக்கும் என்ன வித்தியாசம்?</h3>
இவற்றுக்கு இடையிலான முதன்மையான வித்தியாசம் அவற்றின் ஆக்டேன் அளவிலேயே உள்ளது. இந்த அளவு, எரிபொருள் இன்ஜினுக்குள் எவ்வளவு சீராகவும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுகிறது என்பதைக் குறிக்கிறது. அதிக ஆக்டேன் அளவு கொண்ட பெட்ரோல், உயர் செயல்திறன் கொண்ட இன்ஜின்களில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும், இது இன்ஜினில் வழக்கத்திற்கு மாறான சத்தங்கள் எழுதல் போன்ற சிக்கலைக் குறைக்கிறது.

பிரீமியம் பெட்ரோலில், இன்ஜினைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும், கார்பன் படிவுகளைத் தடுப்பதற்கும், இன்ஜினின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்கும் உதவும் குறிப்பிட்ட சேர்க்கைப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கும். இதன் விளைவாக, சில சமயங்களில் வாகனத்தின் இயக்கம் இன்னும் சீராகவும், எரிபொருள் சிக்கனம் சற்று மேம்பட்டதாகவும் அமையக்கூடும்.

உங்கள் வாகனம் ஒரு சாதாரண வகை இன்ஜினைக் கொண்டிருந்தால், வாகன நிறுவனம் சாதாரண பெட்ரோலைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தால் நீங்கள் சாதாரண பெட்ரோலையே பயன்படுத்த வேண்டும். இருப்பினும், ஸ்போர்ட்ஸ் பைக்குகள், சொகுசு கார்கள் அல்லது டர்போசார்ஜ் செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்ட வாகனங்கள் போன்றவற்றுக்கு, உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் உயர் ஆக்டேன் எரிபொருளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர். இத்தகைய வாகனங்களில், பிரீமியம் பெட்ரோல் மிகச் சிறந்த செயல்திறனை வழங்குகிறது.

பிரீமியம் பெட்ரோலின் விலை, சாதாரண பெட்ரோலின் விலையை விட லிட்டருக்கு எப்போதும் 8 முதல் 15 ரூபாய் வரை அதிகமாக இருக்கும். இந்த விலை வித்தியாசம், நகரம் மற்றும் எரிபொருள் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி மொத்த செட்டில்மெண்டும் வெறும் 3 நாளில்.. இபிஎஃப்ஓவில் வரும் முக்கிய மாற்றம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/users-can-get-final-settlement-within-3-days-employee-provident-fund-organizations-update-photo-gallery-78670.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 16:50:34 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/users-can-get-final-settlement-within-3-days-employee-provident-fund-organizations-update-photo-gallery-78670.html</guid>
		            
			    	<description><![CDATA[Users Can Get Final Settlement Within 3 Days | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை ஊழியர்கள் மூன்று நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ள நிலையில், அதேபோல மொத்த பணத்தையும் மூன்று நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளும் வசதி வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/users-can-get-final-settlement-within-3-days-employee-provident-fund-organizations-update-photo-gallery-78670.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/epfo-7.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (7)" /></a></dt><p>இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியரகளுக்கான அசத்தல் திட்டமாக உள்ளது தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் பணி செய்யும்போதும், பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட பல்வேறு நலன்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை பெற முடியும். </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/users-can-get-final-settlement-within-3-days-employee-provident-fund-organizations-update-photo-gallery-78670.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/epfo-8.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (8)" /></a></dt><p>ஊழியர்கள் பணியாற்றும்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் அவர்கள் பெயரில் தொடங்கப்படும் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். அவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை பணியின் போதோ அல்லது பணி ஓய்வு பெற்ற பிற்கோ பயனர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/users-can-get-final-settlement-within-3-days-employee-provident-fund-organizations-update-photo-gallery-78670.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/epfo-9.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (9)" /></a></dt><p>பெரும்பாலான நபர்கள் தங்களது பணி காலம் முழுவதும் பிஎஃப் பணத்தை எடுக்காமல் பணி ஓய்வுக்கு பிறகு எடுத்து தங்களது பணி ஓய்வின் போது பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், பிஎஃப் இறுதி தொகையை திரும்ப பெறுவதற்கான நடைமுறையை விரைவில் தானியங்கி முறைக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/users-can-get-final-settlement-within-3-days-employee-provident-fund-organizations-update-photo-gallery-78670.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/epfo-10.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (10)" /></a></dt><p>பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களின் இறுதி தொகையை எடுப்பதற்காக விண்ணப்பம் செய்யும்போது எந்தவித தாமதமும் இல்லாமல் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு உடனடியாக பணம் சென்று சேருவதை உறுதி செய்யும் ஆட்டோ செட்டில்மெண்ட் முறை தான் அது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/users-can-get-final-settlement-within-3-days-employee-provident-fund-organizations-update-photo-gallery-78670.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/epfo-11.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Epfo (11)" /></a></dt><p>தற்போது ரூ.5 லட்சம் வரை பகுதி அளவு பணத்தை விண்ணப்பித்து மூன்றே நாட்களில் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இந்த நிலையில் தான், பணி ஓய்வு பெற்ற பிறகு பிஎஃப் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்துக்கொள்ளும் முறை அமலுக்கு வர உள்ளதாக இபிஎஃப்ஓ தலைவர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>அஞ்சல சேமிப்பு திட்டங்கள் போதும்.. சுலபமாக ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம்.. எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/you-can-create-1-crore-rupees-by-investing-post-office-scheme-know-how-to-do-it-78616.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 14:05:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/you-can-create-1-crore-rupees-by-investing-post-office-scheme-know-how-to-do-it-78616.html</guid>
		            
			

    	<description><![CDATA[Create 1 Crore Rupees With Government Schemes | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து ரூ.1 கோடி நிதியை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/1-crore-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அஞ்சல சேமிப்பு திட்டங்கள் போதும்.. சுலபமாக ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம்.. எப்படி?" /></figure>அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதார வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பலர் இரவு, பகல் பாராது அயராது உழைப்பர். என்னதான் உழைத்து வருமானத்தை ஈட்டிக்கொண்டே இருந்தாலும், பலராலும் தாங்கள் நினைத்த இலக்கை அடைய முடியாமல் போய்விடும். அதற்கு காரணம், சம்பாதிக்கும் பணத்தை பெருக்காமல் விடுவதுதான். இதற்காக தான் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி என்ற இலக்கை சாமானிய மக்கள் கூட மிக சுலபமாக எட்டிவிட முடியும். இந்த நிலையில், எந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது ரூ.1 கோடி இலக்கை அடைய உதவும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்</h3>
அரசின் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து ரூ.1 கோடி நிதியை உருவாக்க வேண்டும் என்றால் ஒருவர் 2 திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஒன்று அஞ்சலக டைம் டெபாசிட் திட்டம், மற்றொன்று அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம்.
<h3>அஞ்சலக டைம் டெபாசிட் திட்டம்</h3>
பிக்சட் டெபாசிட் திட்டம் மற்றும் டைம் டெபாசிட் திட்டம் ஆகிய இரண்டுமே ஒரே திட்டம் தான். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.1 கோடி பணத்தை உருவாக்க வேண்டும் என்றால் 5 ஆண்டுகள் திட்டத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். இந்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் ரூ.14,49,948 ஆக  இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/amul-and-mother-dairy-milk-pockets-prices-hiked-all-over-india-78475.html">நாடு முழுவதும் அமுல், மதர் டெய்ரி பால் விலை அதிரடி உயர்வு.. பொதுமக்கள் ஷாக்!</a>

பிறகு இந்த திட்டத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். அதவாது மொத்தமாக சுமார் 20 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். 20 ஆண்டுகள் கழித்து உங்களுடைய 10 லட்சம் முதலீடு மொத்தமாக ரூ.44,19,877 ஆக மாறியிருக்கும்.
<h3>அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம்</h3>
மேலே குறிப்பிடப்பட்டதை போலவே இந்த அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திலும் 20 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இதில் மாதத்திற்கு ரூ.10,000 முதலீடு செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு இதேபோல முதலீடு செய்யும் பட்சத்தில் மொத்தமாக ரூ.67,31,607 கிடைக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html"> 7.5% வட்டி.. வெறும் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம்.. சிறந்த பலன்களை பெற முடியும்!</a>

இவ்வாறு இரண்டு திட்டங்களிலும் இந்த முறைப்படி முதலீடு செய்யும் பட்சத்தில் அதிக லாபத்தை பெற முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/daily-usage-products-including-vegetables-and-fruits-will-get-costlier-followed-by-petrol-diesel-price-78585.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 11:20:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/daily-usage-products-including-vegetables-and-fruits-will-get-costlier-followed-by-petrol-diesel-price-78585.html</guid>
		            
			

    	<description><![CDATA[Daily Usage Products Price Will Be Increased | நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/price-hike.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்!" /></figure>மேற்கு ஆசிய போர்<strong> (West Asia War)</strong> காரணமாக உலக நாடுகள் மிக கடுமையான கச்சா எண்ணெய் <strong>(Crude Oil)</strong> பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் வெறும் 63 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது இரண்டு மடங்கு உயர்வை சந்தித்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் 107 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மேலும் சில பொருட்களின் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்</h3>
கச்ச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்தன. இருப்பினும், இந்தியாவில் எந்த வித மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் மிக கடுமையான நஷ்டத்தை எதிர்க்கொண்டு வந்தன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள்  கடந்த இரண்டு மாதங்களாக ரூ.30,000 கோடி இழப்பீட்டை சந்தித்து வந்தன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html">7.5% வட்டி.. வெறும் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம்.. சிறந்த பலன்களை பெற முடியும்!</a>

இந்த நிலையில் தான், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை உயர்வுக்கான நடவடிக்கையை எண்ணெய் நிறுவங்கள் கையில் எடுத்துள்ளன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.100.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் ரூ.3.14 விலை உயர்வை சந்தித்து தற்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.3.11 விலை உயர்வை சந்தித்து ரூ.95.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-coin-sale-stopped-tamil-nadu-jewellers-federation-announced-78467.html">தங்க நாணய விற்பனை நிறுத்தம்.. தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளம் முக்கிய முடிவு.. காரணம் என்ன?</a>
<h3>வேறு என்ன என்ன பொருட்கள் விலை உயர வாய்ப்பு?</h3>
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரிப்பதன் காரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலையும் உயரும் வாய்ப்பு உள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் லாரிகள் மூலம் வெளி மாநிலங்கள், வெளி ஊர்களில் இருந்து எடுத்து வரப்படுகிறது. இந்த நிலையில் டீசல் விலை ஏறும்போது சரக்கு கட்டணம் உயர்வதால் காய்கறிகளின் விலை உடனடியாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : அதிரடியாக சரிந்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-reduced-in-chennai-today-may-15-2026-78581.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 10:21:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-reduced-in-chennai-today-may-15-2026-78581.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price Reduced In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-price-reduced.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : அதிரடியாக சரிந்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, மே 15 :</strong> மேற்கு ஆசியா போர் காரணமாக பல்வேறு சிக்கல்களை உலக நாடுகள் சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தங்கம் வாங்குவதில் இந்தியர்களுக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய சிக்கல்</h3>
ஏற்கனவே மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் மற்றும்  வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இந்திய பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, அந்நிய செலாவணியை கட்டுப்படுத்த ஒரு ஆண்டுக்கு தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html">7.5% வட்டி.. வெறும் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம்.. சிறந்த பலன்களை பெற முடியும்!</a>
<h3>தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்</h3>
இந்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தாத வரை ரூ.15,000-க்குள் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், வரி உயர்வுக்கு பிறகு ரூ.15,000-க்கு மேல் உயர்ந்தது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தான் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/gold-coin-sale-stopped-tamil-nadu-jewellers-federation-announced-78467.html">தங்க நாணய விற்பனை நிறுத்தம்.. தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளம் முக்கிய முடிவு.. காரணம் என்ன?</a>

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/fuel-price-hike-risk-of-rising-prices-for-essential-commodities-lorry-owners-association-warns-78566.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 08:51:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/fuel-price-hike-risk-of-rising-prices-for-essential-commodities-lorry-owners-association-warns-78566.html</guid>
		            
			

    	<description><![CDATA[Petrol, Diesel Prices Hike: டீசல் விலை உயர்வு என்பது வெறும் லாரிகளுடன் நின்றுவிடுவதில்லை. காய்கறிகள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலமே ஏற்றி வரப்படுவதால், அவற்றின் விலையும் சந்தையில் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களின் மாதந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/fuel-price.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!" /></figure>சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தத் திடீர் விலை உயர்வு சாமானிய மக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு நிலவரத்தின் படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ₹3.10 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ₹103.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ₹3.00 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ₹95.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/business/hike-in-fuel-prices-across-the-country-know-the-petrol-and-diesel-prices-in-chennai-today-78551.html">நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு!!</a></strong></p>

<h3>விலை உயர்வுக்கான காரணங்கள்:</h3>
மேற்காசிய நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக, அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், எரிபொருள் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
<h3>லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் குமுறல்:</h3>
இந்த திடீர் விலை உயர்வு குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த யுவராஜ் கூறுகையில், இந்த அறிவிப்பு தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும், டீசல் விலை உயர்வு போக்குவரத்துத் துறையை நிலைகுலையச் செய்யும் என்று தெரிவித்தார். ஒரு லாரியின் மொத்த வாடகையில் 50% முதல் 60% வரை டீசலுக்காகவே செலவிடப்படுகிறது. தற்போது லிட்டருக்கு ₹3 உயர்த்தப்பட்டுள்ளதால், லாரி உரிமையாளர்களுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதுடன், பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

லாரிகள் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளதால், உடனடியாக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் வாடகையைக் கேட்க முடியாது. இது சிறு குறு லாரி உரிமையாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எரிபொருள் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, டயர்கள் மற்றும் இதர வாகன உதிரிபாகங்களின் விலையும் ஏற்கனவே உயர்ந்துவிட்டதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
<h3>அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு:</h3>
டீசல் விலை உயர்வு என்பது வெறும் லாரிகளுடன் நின்றுவிடுவதில்லை. காய்கறிகள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலமே ஏற்றி வரப்படுவதால், அவற்றின் விலையும் சந்தையில் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களின் மாதந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
<h3>போராட்ட அறிவிப்பு மற்றும் கோரிக்கைகள்:</h3>
எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல, பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறையினருக்கு மானிய விலையில் டீசல் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/pm-modi-asked-people-to-now-buy-gold-for-one-year-do-you-know-why-77802.html">தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?</a></strong>

அதோடு, இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஜூன் மாதத்தில் அகில இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கங்கள் மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/hike-in-fuel-prices-across-the-country-know-the-petrol-and-diesel-prices-in-chennai-today-78551.html</link>	
		<pubDate>Fri, 15 May 2026 06:43:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/hike-in-fuel-prices-across-the-country-know-the-petrol-and-diesel-prices-in-chennai-today-78551.html</guid>
		            
			

    	<description><![CDATA[அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.103.98க்கும், டீசல் ஒரு லிட்டர் 95.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/petrol-diesel-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு!!" /></figure>அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் <a href="https://www.tv9tamilnews.com/business/rbi-governor-warns-of-petrol-and-diesel-price-hike-if-middle-east-crisis-continues-78295.html" target="_blank" rel="noopener">பெட்ரோல், டீசல் விலை</a> உயர்ந்துள்ளது. பல நாட்கள் நீடித்த எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலைகளை மத்திய அரசு இறுதியாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை (மே 15) முதல் அமலுக்கு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் சில்லறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.3.14,  ஒரு லிட்டர் டீசல் விலையை ரூ.3.11 உயர்த்தியுள்ளது. சிஎன்ஜி விலையும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.103.98க்கும், டீசல் ஒரு லிட்டர் 95.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
<p class="article-HD"><strong>இதையும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/business/rbi-governor-warns-of-petrol-and-diesel-price-hike-if-middle-east-crisis-continues-78295.html">பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு தகவல்</a></strong></p>
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என்ற தகவல் கடந்த சில நாட்களாகவே பரவி வந்தது. இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அலைமோதி வந்தனர்.
<h3>விலை உயர்வுக்கு காரணம்:</h3>
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 105 டாலருக்கும் மேலாக அதிகரித்துள்ளதால், மே 15-ம் தேதி முதல் இந்தியாவில் எரிபொருள் விலையை லிட்டருக்கு ₹5 முதல் ₹20 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. எனினும், தற்போது ரூ.3 வரை மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக விலையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், இந்தத் திடீர் உயர்வு குறித்த செய்தி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
<h3>சந்தை நிலவரம்:</h3>
எண்ணெய் சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ₹1,600 கோடி முதல் ₹1,700 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பைச் சரிசெய்ய விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து,  சமையல் எரிவாயு (LPG) விலையும் சிலிண்டருக்கு ₹50 வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
<h3>மத்திய அரசின் நிலைப்பாடு:</h3>
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்தில் அதிகப்படியான எரிபொருளை வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. இருப்பினும், சர்வதேச சூழல் காரணமாக விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/pm-modi-asked-people-to-now-buy-gold-for-one-year-do-you-know-why-77802.html">தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?</a></strong> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நாடு முழுவதும் அமுல், மதர் டெய்ரி பால் விலை அதிரடி உயர்வு.. பொதுமக்கள் ஷாக்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/amul-and-mother-dairy-milk-pockets-prices-hiked-all-over-india-78475.html</link>	
		<pubDate>Thu, 14 May 2026 22:02:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/amul-and-mother-dairy-milk-pockets-prices-hiked-all-over-india-78475.html</guid>
		            
			

    	<description><![CDATA[Amul and Mother Dairy Milk Pockets Prices Hiked | இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் பால் மிக முக்கிய உணவு பொருளாக உள்ளது. இந்த நிலையில், அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகிய நிறுவனங்கள் தங்களின் பால் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/milk-price.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நாடு முழுவதும் அமுல், மதர் டெய்ரி பால் விலை அதிரடி உயர்வு.. பொதுமக்கள் ஷாக்!" /></figure>இந்தியர்களின் அன்றாட வாழ்வில் பால், தயிர் போன்றவை தவிர்க்க முடியாதவையாக உள்ளது. பலரது காலை பால், டீ அல்லது காப்பியில் தான் விடியும். இத்தகைய முக்கிய உணவு பொருளாக பால் உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகியவை பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இந்தியா முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அமுல் மற்றும் மதர் டெய்ரி நிறுவங்கள் பால் விலையை உயர்த்தியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பால் விலையை உயர்த்திய இரண்டு முன்னணி இந்திய நிறுவனங்கள்</h3>
கால்நடை தீவனங்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக பால் விலை மொத்தமாக  உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, அந்த இரண்டு நிறுவனங்களும் பல வகையான பால்களின் விலைகளை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளன. அமுலின் பல்வேறு வகையான பால்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக அமுலின் டாசா, கோல்டு, பசும்பால், எருமை பால் மற்றும் டீ ஸ்பெஷல் ஆகிய பால்களுக்கான விலை அதிரடியாக உயர்த்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/after-the-import-tax-on-gold-increased-gold-and-silver-rate-in-tamil-nadu-drastically-spiked-know-in-details-78202.html">அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு கிராமிற்கு ரூ. 1,070 அதிகரித்து விற்பனை</a>
<h3>உயர்த்தப்பட்ட அமுல் பால் பாக்கெட்டுகளின் விலை - புதிய விலை பட்டியல் இதோ</h3>
<ul>
 	<li>500 எம்.எல் அளவு கொண்ட அமுல் பால் ரூ.29-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</li>
 	<li>500 எம்.எல் அளவு கொண்ட அமுல் சக்தி பால் ரூ.31-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</li>
 	<li>1 லிட்டர் அளவிலான டீ ஸ்பெஷல் பாலின் விலை ரூ.63-ல் இருந்து ரூ.66 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.</li>
 	<li>500 எம்.எல் அளவு கொண்ட அமுல் கோல்டு பால் ரூ.34-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</li>
 	<li>500 எம்.எல் அளவு கொண்ட அமுல் டாசா பால் ரூ.28-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/prime-minister-narendra-modi-asked-people-to-cut-down-oil-usage-what-is-the-remedy-77880.html">சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?</a></p>
அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகிய நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ள நிலையில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>7.5% வட்டி.. வெறும் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம்.. சிறந்த பலன்களை பெற முடியும்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html</link>	
		<pubDate>Thu, 14 May 2026 21:10:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html</guid>
		            
			    	<description><![CDATA[Kisan Vikas Patra Scheme Investment | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த நிலையில், 7.5 சதவீதம் வட்டி கொண்ட கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வெறும் ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kvp-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kvp (1)" /></a></dt><p>இந்த திட்டம் முதிர்வடைய 115 மாதங்கள் ஆகும். ஆனால், பயனர்களுக்கு ஏதேனும் பண தேவை ஏற்படும் பட்சத்தில் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆதார், பான், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இந்த திட்டத்திற்கான அடையாள சான்றாக கோரப்படும். </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kvp-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kvp (2)" /></a></dt><p>சில அஞ்சலக திட்டங்களுக்கு வழங்கப்படுவதை போல இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படாது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்தில் முதலீடு செய்து பெறும் வட்டி முழுவதும் வரிக்கு உட்பட்டது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்தில் வரவு வைக்கப்படும் வட்டிக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kvp-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kvp (3)" /></a></dt><p>இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம். ஆனால், இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. தனிநபர்கள், கூட்டு கணக்குகள் மற்றும் 10 வயதுக்கும் மேற்பட்ட மைனர்கள் ஆகியோர் இதன் அஞ்சலக வழிகாட்டி மூலம் முதலீடு செய்யலாம். </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kvp-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kvp (4)" /></a></dt><p>இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் வெறும் 115 மாதங்களில்  இரண்டு மடங்காக மாற்ற முடியும். அதாவது, 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இதற்கான பலனை பெற முடியும். இந்த திட்டம் ஆண்டுதோறும் கூட்டு வட்டியுடன் அதிக லாபத்தை வழக்கும் திட்டமாக உள்ளது.</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/invest-from-1000-rupees-in-kisan-vikas-patra-scheme-which-gives-7-5-percentage-78505.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/kvp-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Kvp (5)" /></a></dt><p>அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம். அஞ்சல் துறையால் வழங்கப்படும் மிகவும் பாதுகாப்பான திட்டமாக இது உள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>தங்க நாணய விற்பனை நிறுத்தம்.. தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளம் முக்கிய முடிவு.. காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-coin-sale-stopped-tamil-nadu-jewellers-federation-announced-78467.html</link>	
		<pubDate>Thu, 14 May 2026 16:20:15 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-coin-sale-stopped-tamil-nadu-jewellers-federation-announced-78467.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Coin Sale Stopped | முதலீட்டு நோக்கத்திற்காக மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்யும் நபர்கள் தங்க நாணயங்களில் முதலீடு செய்வர். இந்த நிலையில், மேற்கு ஆசிய போர் காரணமாக தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதாக தமிழ்நாடு ஜீவல்லர்ஸ் சம்மேளனம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-coin.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தங்க நாணய விற்பனை நிறுத்தம்.. தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளம் முக்கிய முடிவு.. காரணம் என்ன?" /></figure>தங்க நாணய <strong>(Gold Coin)</strong> விற்பனையை நிறுத்துவதாக தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்தயர்கள் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி <strong>(Indian Prime Minister Narendra Modi)</strong> கூறியுள்ள நிலையில், அதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்க நாணய விற்பனையை நிறுத்துவதாக சம்மேளனம் அறிவித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் - பொதுமக்களுக்கு அரசு அறிவுரை</h3>
மேற்கு ஆசியா போர் <strong>(West Asia War)</strong> காரணமாக உலக நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய்க்கு இறக்குமதியை நம்பியுள்ள நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பான சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், அந்நிய செலாவணியை குறைக்க பிரதமர் மோடி பொதுமக்களுக்கு தங்கம் வாங்க வேண்டாம், வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/prime-minister-narendra-modi-asked-people-to-cut-down-oil-usage-what-is-the-remedy-77880.html">சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?</a>
<h3>தங்க நாணய விற்பனை நிறுத்தம் - ஜூவல்லர்ஸ் சம்மேளனம் அறிவிப்பு</h3>
இந்த நிலையில், 85 நகைக்கடைகளின் கூட்டமைப்பான தமிழ்நாடு ஜூவல்லர்ஸ் சம்மேளன தலைவர் சபரிநாதன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அந்நிய செலாவணியை பாதுகாக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குறியது. அதற்காக, தங்கம் போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-invest-in-this-way-you-can-get-10000-rupees-per-month-in-fixed-deposit-scheme-77847.html">FD-ல் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 வருமானமாக பெறலாம்.. எப்படி?</a>

இது 2027 மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கிறோம். அரசின் நடவடிக்கை ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தின் நகைக்கடை உரிமையாளர்கள், தங்க நாணயம் விற்பனையை உடனடியாக நிறுத்துகிறோம் என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தங்க தொழிலை சார்ந்து வாழும் நபர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தங்கத்தை உலோக வடிவிலேயே வாங்கி சேமிக்கும் தங்க ஈடிஎஃப் மற்றும் டிஜி கோல்டு ஆகியவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து விற்பனை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/after-the-import-tax-for-gold-increased-gold-rate-spiked-drastically-on-14th-may-400-rupees-increased-for-one-sovereign-78420.html</link>	
		<pubDate>Thu, 14 May 2026 11:18:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/after-the-import-tax-for-gold-increased-gold-rate-spiked-drastically-on-14th-may-400-rupees-increased-for-one-sovereign-78420.html</guid>
		            
			

    	<description><![CDATA[மே 14ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15,050 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து விற்பனை.." /></figure><div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="relative w-full overflow-visible"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:6cb1d75d-26f2-4198-a33e-06d279c0e093-5" data-turn-id-container="request-WEB:6cb1d75d-26f2-4198-a33e-06d279c0e093-5" data-testid="conversation-turn-12" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="5888d5fd-dbe2-4b90-8611-e89e4bf152ee" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="219"><strong>மே 14, 2026:</strong> கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது. நேற்று மட்டும் தங்கம் ஒரு சவரனுக்கு 8,000 ரூபாய் வரை அதிகரித்தது. அதேபோல், மாலையில் 3,000 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், இன்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்திற்கு 50 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.</p>

<h3 data-start="0" data-end="219">ஏன் இந்த விலை உயர்வு:</h3>
<p data-start="469" data-end="797">மத்திய நிதி அமைச்சகம் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி குறித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீதான சுங்கவரி 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.</p>
<p data-start="469" data-end="797">மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/india/gold-silver-imports-to-get-costlier-as-govt-hikes-customs-duty-after-pms-appeal-know-more-in-details-78182.html">ஈரான் போர் எதிரொலி: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு…</a></p>
<p data-start="799" data-end="1139">நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாப்பதன் அவசியத்தை பிரதமர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">நரேந்திர மோடி</span></span> வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் தங்கச் செலவுகள் மிக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு மக்கள் குறைந்தது ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>

<h3 data-start="799" data-end="1139">மீண்டும் உயர்ந்த தங்கம் விலை:</h3>
<p data-start="1141" data-end="1415">இந்த நிலையில், மே 14ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15,050 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p data-start="1141" data-end="1415">மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/business/rbi-governor-warns-of-petrol-and-diesel-price-hike-if-middle-east-crisis-continues-78295.html"> பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு தகவல்</a></p>
<p data-start="1417" data-end="1548">அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் 16,418 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24 காரட் தங்கம் 1,31,344 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p data-start="1550" data-end="1782" data-is-last-node="" data-is-only-node="">தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும், வெள்ளியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஹேப்பி நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை &#8211; எவ்வளவு தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-price-drops-in-chennai-after-morning-surge-as-22k-rate-falls-by-rs-3200-per-sovereign-78310.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 17:41:54 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-price-drops-in-chennai-after-morning-surge-as-22k-rate-falls-by-rs-3200-per-sovereign-78310.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Rate : 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சற்று சரிவை நோக்கி இருந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-rate-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஹேப்பி நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை &#8211; எவ்வளவு தெரியுமா?" /></figure>5 மாநில <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/a-democracy-with-a-conscience-cm-vijay-roars-after-winning-the-vote-of-confidence-78230.html" target="_blank" rel="noopener">சட்டமன்ற தேர்தல்</a> முடிந்த பிறகு சற்று சரிவை நோக்கி இருந்த <a href="https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-increased-in-chennai-on-may-12-2026-77989.html" target="_blank" rel="noopener">தங்கம்</a> விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மே 13, 2026 இன்று காலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400க்கும் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,23,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிடுபவர்களுக்கு இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
<h3>அதிரடியாக குறைந்த தங்கம் விலை</h3>
மத்திய நிதியமைச்சகம் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கம் விலை மே 13, 2026 இன்று ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-invest-in-this-way-you-can-get-10000-rupees-per-month-in-fixed-deposit-scheme-77847.html">FD-ல் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 வருமானமாக பெறலாம்.. எப்படி?</a></strong>

அதன்படி மே 13, 2026 காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400க்கும் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,23,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.910 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,860க்கும் சவரனுக்கு ரூ. 7,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,880க்கும் விற்பனையானது. மேலும்வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.330க்கும், ஒரு கிலோ ரூ.3,30,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மே 13, 2026 மாலை தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.15,000க்கும், சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.12,560க்கும் சவரனுக்கு ரூ. 2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.320க்கும், ஒரு கிலோ ரூ.3,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/new-gas-cylinder-scam-going-on-in-india-oil-companies-asked-customer-to-beware-77834.html">கேஸ் சிலிண்டர் விநியோக மோசடி.. கவனமாக இருங்கள்.. பொதுமக்களை எச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!</a></strong>
<h3>ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்</h3>
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதார நலனை மனதில் கொண்டு, மக்கள் குறைந்தது ஓராண்டு காலத்திற்காவது தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு &#8211; ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/rbi-governor-warns-of-petrol-and-diesel-price-hike-if-middle-east-crisis-continues-78295.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 16:49:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/rbi-governor-warns-of-petrol-and-diesel-price-hike-if-middle-east-crisis-continues-78295.html</guid>
		            
			

    	<description><![CDATA[Fuel Price Hike Warning : மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் நீடித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/petrol-and-deisel-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு &#8211; ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு தகவல்" /></figure>மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் நீடித்தால் இந்தியாவில் <a href="https://www.tv9tamilnews.com/business/petrol-diesel-price-rise-know-what-government-says-about-it-75708.html" target="_blank" rel="noopener">பெட்ரோல்</a>, டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-repay-30-years-home-loan-in-just-17-years-photo-gallery-74961.html" target="_blank" rel="noopener">இந்திய ரிசர்வ் வங்கி</a> ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், “இந்த நிலைமை நீண்ட காலம் தொடர்ந்தால், எரிபொருள் விலை உயர்வை அரசு ஒருகட்டத்தில் மக்களிடம் மாற்றித் தர வேண்டிய நிலை உருவாகும் என்று கூறினார். இந்த மாநாட்டை சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஸ்விஸ் தேசிய வங்கி இணைந்து நடத்தின.
<h3>பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு</h3>
இந்த நிகழ்வில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு தற்போது மிகப்பெரிய சவாலாக ஹார்முஸ் நீரிணை பிரச்சனை உருவாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளில் ஒன்றான இந்தியா, வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்படும் எந்த பதற்றமும் இந்திய சந்தையை நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/new-gas-cylinder-scam-going-on-in-india-oil-companies-asked-customer-to-beware-77834.html">கேஸ் சிலிண்டர் விநியோக மோசடி.. கவனமாக இருங்கள்.. பொதுமக்களை எச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!</a></strong>

ஹார்முஸ் நீரிணை வழியாக உலகளவில் பெருமளவு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. இந்தப் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பதோடு, போக்குவரத்து, உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளிலும் செலவுகள் உயரும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், பணவீக்கம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பிலும் அழுத்தம் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது வரை மத்திய அரசும், அரசு எண்ணெய் நிறுவனங்களும் இந்த கூடுதல் செலவினை தங்களே ஏற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் எரிபொருள் மீதான உற்பத்தி வரிகள் குறைக்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள முழுமையான விலை உயர்வு இன்னும் சில்லறை விற்பனையில் எதிரொலிக்கவில்லை என்றார்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/pm-modi-asked-people-to-now-buy-gold-for-one-year-do-you-know-why-77802.html">தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?</a></strong>

ஆனால் சில எரிபொருள் சார்ந்த பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளன. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர், தொழிற்துறை டீசல், 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வழங்கப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சமீபத்தில் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.993 வரை உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை&#8230; ஒரு கிராமிற்கு ரூ. 1,070 அதிகரித்து விற்பனை..</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/after-the-import-tax-on-gold-increased-gold-and-silver-rate-in-tamil-nadu-drastically-spiked-know-in-details-78202.html</link>	
		<pubDate>Wed, 13 May 2026 10:06:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/after-the-import-tax-on-gold-increased-gold-and-silver-rate-in-tamil-nadu-drastically-spiked-know-in-details-78202.html</guid>
		            
			

    	<description><![CDATA[தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,23,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30 அதிகரித்து ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை&#8230; ஒரு கிராமிற்கு ரூ. 1,070 அதிகரித்து விற்பனை.." /></figure><p data-start="0" data-end="207"><strong>மே 13, 2026:</strong> தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,23,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30 அதிகரித்து ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>

<h3 data-start="0" data-end="207">விலை உயர என்ன காரணம்?</h3>
<div class="qMYqUG_convSearchResultHighlightRoot">
<div class="relative w-full overflow-visible"><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-7" data-turn-id-container="request-WEB:072b512b-bb45-42ad-adef-6d89a4e8a3fb-7" data-testid="conversation-turn-16" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="2c901add-e6c8-4c13-9461-e4d9a7adcdbf" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling">
<p data-start="0" data-end="381">ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான பாதிப்பை முன்னிட்டு, ஓராண்டு வரை தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">மோடி</span></span> மக்களிடம் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியுள்ளது.</p>
<p data-start="383" data-end="725">மத்திய அரசு 10 சதவீத அடிப்படை சுங்க வரியுடன், 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) விதித்துள்ளது. இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்தி, வர்த்தக பற்றாக்குறையை குறைத்து, ஆசியாவில் பலவீனமான செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக உள்ள இந்திய ரூபாயை வலுப்படுத்துவதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<h3 data-start="383" data-end="725">ஒரு சவரன் தங்கம் ரூ. 8,560 அதிகரிப்பு:</h3>
<p data-start="727" data-end="994">தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள சூழலில், தங்கத்தின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.8,560 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p data-start="996" data-end="1210">அந்த வகையில், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,800க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.15,400க்கும், ஒரு சவரன் ரூ.1,23,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p data-start="996" data-end="1210">மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/india/gold-silver-imports-to-get-costlier-as-govt-hikes-customs-duty-after-pms-appeal-know-more-in-details-78182.html"> ஈரான் போர் எதிரொலி: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு…</a></p>
<p data-start="1212" data-end="1400">தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,30,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>
<p data-start="1402" data-end="1552" data-is-last-node="" data-is-only-node="">தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>

</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</section></div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-increased-in-chennai-on-may-12-2026-77989.html</link>	
		<pubDate>Tue, 12 May 2026 10:11:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-increased-in-chennai-on-may-12-2026-77989.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-12.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, மே 12 :</strong> மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை <strong>(Gold and Silver Price)</strong> நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.15 உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தங்கம், வெள்ளி மீது தாக்கம் ஏற்படுத்தும் மேற்கு ஆசியா போர்</h3>
மேற்கு ஆசியா போர் காரணமாக சர்வதே அளவில் புவிசார் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோ மற்றும் டீசல் விலை தட்டுப்பாடு என பல சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டு வருகின்றனர். மேற்கு ஆசியா போர் சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/pm-modi-asked-people-to-now-buy-gold-for-one-year-do-you-know-why-77802.html">தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?</a>
<h3>இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,330-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்தும் ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/prime-minister-narendra-modi-asked-people-to-cut-down-oil-usage-what-is-the-remedy-77880.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 21:57:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/prime-minister-narendra-modi-asked-people-to-cut-down-oil-usage-what-is-the-remedy-77880.html</guid>
		            
			

    	<description><![CDATA[PM Asked People To Cut Down Oil Usage | மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியா பல்வேறு இறக்குமதி சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் சமையல் எண்ணெயைன் குறைவாக பயன்படுத்த கூறியுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/oil.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?" /></figure>சமையலுக்கு பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி <strong>(Indian Prime Minister Narendra Modi)</strong> கூறியுள்ளார். இது தவிர தங்கம் வாங்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார். இந்த நிலையில், தாவர எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளது ஏன், தாவர எண்ணெய்க்கு பதிலாக என்ன பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தாவர எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம் - பிரதமர் மோடி</h3>
2025 - 2026 காலக்கட்டத்தில் இந்தியா 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தாவர எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இந்திய மக்கள் தங்களது சமையல் அறையில் தினசரி பயன்படுத்தும் பொருளை இந்தியா மிகப்பெரிய அந்நிய செலவாணியை சாந்துள்ளது. இந்த செலவை குறைப்பது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க நேரடியாக உதவி செய்யும். இது குறைக்கப்படும் பட்சத்தில் இந்திய ரூபாய் மீதான அழுத்தம் குறையும்.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/who-is-responsible-for-the-debt-if-card-holder-dies-suddenly-photo-gallery-77469.html">கிரெடிட் கார்டு பயனர் இறந்துவிட்டால் கடனை யார் செலுத்த வேண்டும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>

இந்திய பிரதமர் தனது உரைகளில் பல்வேறு முறை குறைவாக எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களை அறிவுறுத்தி வருகிறார். இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் அத்தகைய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
<h3>உலக சிக்கலை கருத்தில் கொண்டு முக்கிய முடிவு எடுக்கும் அரசு</h3>
தற்போது நடைபெற்று வரும் மேற்கு ஆசியா போர் காரணமாக சர்வதேச சக்தி மற்றும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், தவிர்க்கக்கூடிய இறக்குமதிகளை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தவிர்க்க கூடிய இறக்குமதியில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் எண்ணெயும் ஒன்றாகும்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/important-changes-to-made-in-passenger-reservation-system-after-40-years-in-tamil-nadu-77402.html"> ரயில் டிக்கெட் முன்பதிவு.. 40 ஆண்டுகளாக இருந்த முறையில் வரும் முக்கிய மாற்றம்!</a>
<h3>சமையல் எண்ணெய்க்கு மாற்று என்ன?</h3>
சமையல் எண்ணெயை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால், அதனை பயன்படுத்தும் விதத்தை மாற்றும்போது நிச்சயம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். உதாரணமாக சமையல் எண்ணெயை வறுத்தல், பொறித்தல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தாமல் இருக்கலாம். பெரும்பாலும் வேக வைத்த உணவுகளை சிறிது அளவு எண்ணெய் கலந்து சமையல் செய்யலாம். இவ்வாறு சமையல் முறையில் மேற்கொள்ளும் சிறிய மாற்றங்கள் சமையல் எண்ணெயின் தேவையை சற்று குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>FD-ல் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 வருமானமாக பெறலாம்.. எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/if-you-invest-in-this-way-you-can-get-10000-rupees-per-month-in-fixed-deposit-scheme-77847.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 17:45:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/if-you-invest-in-this-way-you-can-get-10000-rupees-per-month-in-fixed-deposit-scheme-77847.html</guid>
		            
			

    	<description><![CDATA[10,000 Rupees Return In Fixed Deposit Scheme | இந்தியாவில் ஏராளமான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாதம் ரூ.10,000 வருமானம் பெறும் வகையில் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/fd-16.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="FD-ல் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 வருமானமாக பெறலாம்.. எப்படி?" /></figure>ஒருவர் தனது பொருளாதாரத்தை  பாதுகாக்க வேண்டும், உயர்த்த வேண்டும் என்றால் சேமிப்பு <strong>(Saving)</strong> அல்லது முதலீடு<strong> (Investment)</strong> செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. இதற்காக ஏராளமான அரசு மற்றும் தனியார் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம் <strong>(FD - Fixed Deposit Scheme)</strong>. இந்த திட்டத்தில் முதலீடு செய்து மாதம் ரூ.10,000 வருமானம் பெற முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>நிலையான வைப்பு நிதி திட்டம் எப்படி செயல்படும்?</h3>
நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஒருவர் முதலில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி வழங்கப்படும். இந்த நிலையில், முதலீட்டு காலம் முழுவதும் முதலீடு செய்து திட்டத்தின் முடிவில் முதலீடு மற்றும் அதற்காக வட்டி ஆகியவற்றை சேர்த்து பெற்றுக்கொள்ளலாம். திட்டத்தின் முடிவில் தான் மொத்த தொகையையும் பெற முடியும் என்றால் மாத மாதம் பணம் பெறுவது எப்படி என பலருக்கும் தோன்றும். அதற்கு ஒரு வழி உள்ளது. அதுதான், <strong>Non Cumulative Fixed Deposit</strong> திட்டம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/important-changes-to-made-in-passenger-reservation-system-after-40-years-in-tamil-nadu-77402.html">ரயில் டிக்கெட் முன்பதிவு.. 40 ஆண்டுகளாக இருந்த முறையில் வரும் முக்கிய மாற்றம்!</a>
<h3>Non Cumulative FD - முதலீடு செய்து ரூ.10,000 பெறுவது எப்படி?</h3>
நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஒருவர் மாதம் ரூ.10,000 வருமானம் பெற வேண்டும் என்றால், அவர் வட்டியாக மட்டுமே ரூ.1,20,000 பெற வேண்டும். அப்போதுதான் அவரால் மாதம் ரூ.10,000 பெற முடியும். ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் வருமானத்தை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள திட்டம் தான் Non Cumulative FD திட்டம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/users-can-transfer-up-to-5-lakh-rupees-through-upi-for-these-transactions-upi-new-rules-77387.html">இனி ரூ.1 லட்சம் லிமிட் இல்லை.. UPI-ல் மாறிய ரூல்ஸ்.. புதிய விதிகள் கூறுவது என்ன?</a>
<h3>8  சதவீதம் வட்டி திட்டத்தில் சிறந்த லாபம்</h3>
மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் வரை சில வங்கிகள் வட்டி வழங்குகின்றன. இந்த நிலையில், 8 சதவீதம் வட்டி வழங்கக்கூடிய நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஒருவர் ரூ.15 லட்சம் பணத்தை முதலீடு செய்யும் பட்சத்தில் அவருக்கு மாதம் ரூ.10,000 வட்டியாக பெறலாம். தனியார் துறையில் பணியாற்றும் நபர்கள் தங்களது ஓய்வு காலத்தில் மாத ஊதியத்தை பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கேஸ் சிலிண்டர் விநியோக மோசடி.. கவனமாக இருங்கள்.. பொதுமக்களை எச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/new-gas-cylinder-scam-going-on-in-india-oil-companies-asked-customer-to-beware-77834.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 16:30:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/new-gas-cylinder-scam-going-on-in-india-oil-companies-asked-customer-to-beware-77834.html</guid>
		            
			

    	<description><![CDATA[Oil Companies Asked Customer To Beware | மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் ஓடிபி முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அந்த ஓடிபி மூலம் புதிய வகை மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gas-cylinder-9.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கேஸ் சிலிண்டர் விநியோக மோசடி.. கவனமாக இருங்கள்.. பொதுமக்களை எச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!" /></figure>மேற்கு ஆசிய போர் <strong>(West Asia War)</strong> காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை<strong> (Crude Oil Price)</strong> உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் பெட்ரோல், டீசல் விலை, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக சில உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் முன்பதிவில் மாற்றங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர்கள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளன. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கேஸ் சிலிண்டர் விநியோக்கத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள்</h3>
மேற்கு ஆசிய போர் பதற்றம் காரணமாக கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படும் என்ற பதற்றத்தில் பொதுமக்கள், நிறுவனங்கள், உணவனங்கள் என கூடுதலாக கேஸ் சிலிண்டர்களை வாங்கி பதுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான், கேஸ் சிலிண்டர் முன்பதிவு குறித்து சில முக்கிய விதிகளை அரசு அறிமுகம் செய்தது. அதாவது கிராமப்புரங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், நகரத்தில் உள்ளவர்கள் 25 நாட்களுக்கு பிறகே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என முக்கிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/users-can-transfer-up-to-5-lakh-rupees-through-upi-for-these-transactions-upi-new-rules-77387.html">இனி ரூ.1 லட்சம் லிமிட் இல்லை.. UPI-ல் மாறிய ரூல்ஸ்.. புதிய விதிகள் கூறுவது என்ன?</a>
<h3>ஓடிபி மூலம் நடைபெறும் மோசடி - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை</h3>
கேஸ் சிலிண்டர்கள் முறையாக விநியோகம் செய்யப்படும் வேண்டும் என்பதற்காக ஓடிபி முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியரிடம் பயனர்கள் தங்களது மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை உள்ளிட்டால் மட்டுமே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என கூறப்பட்டு அந்த முறை தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில், இந்த ஓடிபி முறையை பயன்படுத்தி புதிய மோசடி ஒன்று உருவெடுத்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/petrol-and-diesel-price-may-increase-before-may-15-2026-says-source-77300.html">மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்!</a>

இது தொடர்பாக கூறியுள்ள ஹெச்பி நிறுவனம், <strong>VM-HPGASc-S</strong> என்று வரக்கூடிய ஓடிபி தான் நாங்கள் உண்மையாக அனுப்பக்கூடிய ஓடிபி. இது தவிர வேறு பெயரில் உங்களுக்கு ஓடிபி வருகிறது அல்லது உங்களை யாரேனும் மொபைல் போனில் தொடர்ப்புக்கொண்டு கேஸ் டெலிவரிக்காக என ஓடிபி கேட்டால் கவனமாக இருங்கள். அது மோசடிக்காரர்கள் உங்களுக்கு விரிக்கும் வலை. அதற்கு இரையாகும் பட்சத்தில் உங்களது பணம் கொள்ளை அடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/pm-modi-asked-people-to-now-buy-gold-for-one-year-do-you-know-why-77802.html</link>	
		<pubDate>Mon, 11 May 2026 15:20:00 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/pm-modi-asked-people-to-now-buy-gold-for-one-year-do-you-know-why-77802.html</guid>
		            
			

    	<description><![CDATA[PM Modi Asked Not To Buy Gold | இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆண்டுக்கு நாட்டு மக்களை தங்கம் வாங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் கூறியுள்ளது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-11.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?" /></figure>இந்திய பிரதமர் நரேந்திர மோடி <strong>(Indian Prime Minister Narendra Modi)</strong> இந்திய மக்களை ஒரு ஆண்டுக்கு தங்கம்<strong> (Gold)</strong> வாங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தங்கம் வாங்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளது ஏன், அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள் - பிரதமர் முக்கிய அட்வைஸ்</h3>
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதாவது, திருமணங்களுக்காக தங்கம் வாங்க வேண்டாம், தேசநலன் கருதி பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், வீட்டில் இருந்து பணி செய்யும் நடைமுறையை நாம் தொடர்வது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்திருந்தார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/petrol-and-diesel-price-may-increase-before-may-15-2026-says-source-77300.html">மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்!</a>
<h3>தங்கம் வாங்க வேண்டாம் - பிரதமர் சொன்னதன் காரணம் என்ன?</h3>
மேற்கு ஆசியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடும் உச்சத்தில் உள்ளது. அதாவது 2025 ஆம் ஆண்டு வெறும் 75 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், தற்போது 110 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா தனது எண்ணெய் தேவையை வெளிநாடுகளின் மூலமே இறக்குமதி செய்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய டாலர்களில் பணம் செலுத்த வேண்டியது உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-have-these-things-you-will-not-get-pf-money-77170.html">இந்த தவறை செய்தால் உங்களுக்கு பிஎஃப் பணம் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>

இதேபோல தங்கத்தின் தேவையையும் இந்தியா இறக்குமதி செய்து பூர்த்தி செய்து வருகிறது. உலக அளவில் அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கச்சா எண்ணெயை போலவே தங்கத்தையும் இந்தியா டாலர்கள் மதிப்பில் இறக்குமதி செய்து வரும் நிலையில், கூடுதல் அமெரிக்க டாலர்களில் பணத்தை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக தான் இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டுவர எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டவே அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிக வட்டி வழங்கும் அரசின் முதலீட்டு திட்டங்கள்.. யோசிச்சு முதலீடு செய்யுங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/these-government-schemes-with-above-8-percentage-interest-rate-77495.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 23:55:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/these-government-schemes-with-above-8-percentage-interest-rate-77495.html</guid>
		            
			

    	<description><![CDATA[High Interest Government Schemes | அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அதிக வட்டியுடன் கூடிய சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/saving.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிக வட்டி வழங்கும் அரசின் முதலீட்டு திட்டங்கள்.. யோசிச்சு முதலீடு செய்யுங்க!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் மத்தியில் சேமிப்பு<strong> (Saving)</strong> மற்றும் முதலீடு <strong>(Investment)</strong> குறித்த தெளிவும், அறிவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்து உயர்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த நிலையில், பணத்தை வளர்ச்சியடைய உதவி செய்யும் அரசின் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>8.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் அரசு செமிப்பு திட்டங்கள்</h3>
அரசு பல்வேறு வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அதிக வட்டி கொண்ட திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்</h3>
பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட ஒரு மிகச்சிறந்த திட்டமாக சுகன்யா சம்ரித்தி யோஜனா <strong>(SSY - Sukanya Samriddhi Yojana)</strong> உள்ளது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-have-these-things-you-will-not-get-pf-money-77170.html">இந்த தவறை செய்தால் உங்களுக்கு பிஎஃப் பணம் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>
<h3>தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்</h3>
பாதுகாப்பான முதலீடு செய்து அதிக லாபம் பெற சிறந்ததாக உள்ள திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ் <strong>(NCS - National Savings Certificate)</strong>. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வெறும் ரூ.1,000 முதலே முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முடியும்.
<h3>கிசான் விகாஸ் பத்ரா திட்டம்</h3>
சாமானிய மக்கள் முதலீடு செய்வதற்காக சிறந்த திட்டமாக இந்த கிசான் விகாஸ் பத்ரா <strong>(KVP - Kisan Vikas Patra)</strong> உள்ளது. முதலீட்டை இரண்டு மடங்காக உயர்த்த இந்த திட்டம் உதவி செய்கிறது. ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் ரூ.1,000 முதலே முதலீடு செய்ய முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/tamil-nadu-government-important-announcement-on-name-removal-in-ration-card-77150.html">இனி புதிய ரேஷன் கார்டு பெற கூடுதல் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்!</a>
<h3>மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்</h3>
மூத்த குடிமக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டம் தான் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு <strong>(SCSS - Senior Citizen Saving Scheme)</strong> திட்டம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வெறும் ரூ.1,000 முதலே முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கிரெடிட் கார்டு பயனர் இறந்துவிட்டால் கடனை யார் செலுத்த வேண்டும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/who-is-responsible-for-the-debt-if-card-holder-dies-suddenly-photo-gallery-77469.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 22:41:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/who-is-responsible-for-the-debt-if-card-holder-dies-suddenly-photo-gallery-77469.html</guid>
		            
			    	<description><![CDATA[Important Facts About Credit Card | தற்போதைய சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது கூடுதல் நிதிக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயனர் திடீரென உயிரிழந்துவிட்டால் அவர் பெற்ற கடனுக்கு யார் பொறுப்பாவார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/who-is-responsible-for-the-debt-if-card-holder-dies-suddenly-photo-gallery-77469.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-17.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (17)" /></a></dt><p>தற்போதைய காலக்கட்டத்தில் தங்களது கூடுதல் நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கிரெடிட் கார்டு பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் பரவாலக உள்ளது. இருப்பினும் பலருக்கு எவ்வாறு முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்துவது என்று தெரியவில்ல. </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/who-is-responsible-for-the-debt-if-card-holder-dies-suddenly-photo-gallery-77469.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-16.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (16)" /></a></dt><p>அந்த வகையில் பலருக்கும் தெரியாத ஒன்று தான், கிரெடிட் கார்டு பயனர் இறந்த பிறகு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்பது. இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயனர் உயிரிழந்துவிட்டால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் அதற்கான விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/who-is-responsible-for-the-debt-if-card-holder-dies-suddenly-photo-gallery-77469.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-18.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (18)" /></a></dt><p>வங்கிகள் மூலம் பெறும் பெரும்பாலான கடன்களுக்கு பிணையம் அவசியமான ஒன்றாக உள்ளது. உதாரணமாக நகை கடனுக்கு நகை, வீட்டு கடனுக்கு வீட்டின் பத்திரம் ஆகியவற்றை பிணையமாக வழங்க வேண்டும். இந்த நிலையில், கிரெடிட் கார்டுக்கு எந்த வகை பிணையமும் கேட்கப்படுவதில்லை. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/who-is-responsible-for-the-debt-if-card-holder-dies-suddenly-photo-gallery-77469.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-19.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (19)" /></a></dt><p>இந்த நிலையில், கிரெடிட் கார்டு யாரின் பெயரில் உள்ளதோ அவர் தான் அந்த கிரெடிட் கார்டு கடனுக்கான பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதி அந்த நபர் கிரெடிட் கார்டு கடன் பெற்றுவிட்டு உயிரிழந்துவிட்டாலும் பொருந்தும். உதாரணமாக ஒருவர் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றுவிட்டு உயிரிழந்துவிட்டால் அவரின் அசையா சொத்துக்களை வைத்து வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம். 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/who-is-responsible-for-the-debt-if-card-holder-dies-suddenly-photo-gallery-77469.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-20.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (20)" /></a></dt><p>கிரெடிட் கார்டு கடனை வாரிசுகள் செலுத்த வேண்டுமா என்பது குறித்த கவலை தான் பலருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு எந்தவிதமான கட்டாயமும் இல்லை. இந்த விவகாரத்தில் ஒருவர் கிரெடிட் கார்டு கடன் பெற்றுவிட்டு உயிரிழந்துவிட்டால் அவரது மனைவி, பிள்ளைகள்  என யாரும் அந்த கடனை செலுத்த வேண்டும் என்று வங்கிகள் நெருக்கடி கொடுக்காது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>ரயில் டிக்கெட் முன்பதிவு.. 40 ஆண்டுகளாக இருந்த முறையில் வரும் முக்கிய மாற்றம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/important-changes-to-made-in-passenger-reservation-system-after-40-years-in-tamil-nadu-77402.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 18:10:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/important-changes-to-made-in-passenger-reservation-system-after-40-years-in-tamil-nadu-77402.html</guid>
		            
			

    	<description><![CDATA[Passenger Reservation System Change | இந்தியாவில் பொதுமக்களுக்கு மிகவும் பிரதானமாக உள்ளது தான் ரயில் போக்குவரத்து. இந்த நிலையில், பிஆர்எஸ் எனப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவு அம்சத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு நடவடிகை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/train-ticket.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரயில் டிக்கெட் முன்பதிவு.. 40 ஆண்டுகளாக இருந்த முறையில் வரும் முக்கிய மாற்றம்!" /></figure>இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. குறிப்பக உலக அளவில் மிகப்பெரிய ரயில் போக்குவரத்தாக இந்திய ரயில் போக்குவரத்து உள்ளது. காரணம், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். இவ்வாறு மிக முக்கிய சேவையாக ரயில் போக்குவரத்து உள்ள நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வரும் முக்கிய மாற்றம்</h3>
இந்திய ரயில் போக்குவரத்தில் உள்ள ஒரு முக்கிய அம்சம் தான் <strong>PRS (Passenger Reservation System)</strong> எனப்படும் பயணிகள் முன்பதிவு அமைப்பு. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறை அமலில் உள்ள நிலையில், இதனை மாற்றி அமைப்பதற்கான முயற்சியை தான் மத்திய அரசு தற்போது கையில் எடுத்துள்ளது. அதாவது, 1986 முதல் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு 2026 ஆகஸ்ட் மாதம் முதல் முக்கிய மாற்றத்தை சந்திக்க உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/not-using-credit-card-can-create-big-impact-know-why-photo-gallery-76819.html">கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது சிக்கல்.. இந்த விஷயம் குறித்து தெரியுமா?</a>
<h3>தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றம் கொண்டுவர திட்டம்</h3>
இந்த அம்சம் நடைமுறைக்கு வந்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இந்த 40 ஆண்டுகளில் இணையதள தொழில்நுட்பம் வளர்த்துவிட்டது, மொபைல் போன்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகியவை தற்போது அமலில் உள்ளன. இந்த நிலையில், இந்த வளர்ச்சிகளுக்கு ஏற்ப பிஆர்எஸ் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையிலும் முக்கிய மாற்றம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/get-5000-rupees-as-pension-in-atal-pension-yojana-scheme-76799.html"> தினமும் ரூ.7 முதலீடு போதும்.. மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறலாம்.. அரசின் அட்டகாசமான திட்டம்!</a>

இந்தியாவில் 2000-க்கு பிறகு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை அமலில் உள்ளது. குறிப்பாக 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அம்சம் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், சுமார் 88 சதவீதம் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு தான் நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் தான் பிஆர்எஸ் ரயில் டிக்கெட் முன்பதிவு அம்சத்தை தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி ரூ.1 லட்சம் லிமிட் இல்லை.. UPI-ல் மாறிய ரூல்ஸ்.. புதிய விதிகள் கூறுவது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/users-can-transfer-up-to-5-lakh-rupees-through-upi-for-these-transactions-upi-new-rules-77387.html</link>	
		<pubDate>Sat, 09 May 2026 17:25:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/users-can-transfer-up-to-5-lakh-rupees-through-upi-for-these-transactions-upi-new-rules-77387.html</guid>
		            
			

    	<description><![CDATA[UPI New Rules For Money Transaction | மனிதர்களின் வாழ்வில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/upi-transaction.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி ரூ.1 லட்சம் லிமிட் இல்லை.. UPI-ல் மாறிய ரூல்ஸ்.. புதிய விதிகள் கூறுவது என்ன?" /></figure>டிஜிட்டல் இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா மிக வேகமாக நகர்ந்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக பண பரிவர்த்தனையை மிக எளிதானதாகவும், விரைவானதாகவும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அமலில் உள்ளது. இதற்காக தான் யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> சேவையை அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே யுபிஐயில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், அரசு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் <strong>(NPCI - National Payment Corporation Of India)</strong> யுபிஐ-ல் புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
<h3>யுபிஐ-ல் வந்த முக்கிய மாற்றம்</h3>
தற்போதைய நிலவரப்படி யுபிஐ வழியாக மேற்கொள்ளப்படும் தினசரி பண பரிமாற்றங்களுக்கான வரம்பு ரூ.1 லட்சமாக உள்ளது. இந்த நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், அரசு பண பரிவர்த்தனைகளுக்கான விதிவிலக்கை உருவாக்கியுள்ளது. அதாவது, வரி செலுத்தும் நபர்கள் வருமான வரி மற்றும் பிற அரசு நிலுவைகளுக்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/not-using-credit-card-can-create-big-impact-know-why-photo-gallery-76819.html">கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது சிக்கல்.. இந்த விஷயம் குறித்து தெரியுமா?</a>
<h3>ரூ.1 லட்சம் என்ற உட்ச வரம்பு உடைக்கப்பட்டுள்ளது</h3>
புதுப்பிக்கப்பட்ட 2026 வழிகாட்டுதல்களின்படி, வருமான வரித்துறை உப்டப அரசு துறையில் உள்ள சரிப்பார்க்கப்பட்ட வணிகர்கள், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் என்ற உயர்த்தப்பட்ட வரம்புக்கு தகுதி உடையவர்களாக மாறுகின்றனர். இது பயனர்கள் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பீக் கீழ் செயல்படும் யுபிஐ செயலிகள் கணிசமான வரிப்பொறுப்புகளை உடனடியாக செலுத்த அனுமதின் வழங்குகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/get-5000-rupees-as-pension-in-atal-pension-yojana-scheme-76799.html">தினமும் ரூ.7 முதலீடு போதும்.. மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறலாம்.. அரசின் அட்டகாசமான திட்டம்!</a>
<h3>அனைவரலாலும் இதனை செய்ய முடியுமா?</h3>
என்சிபிஐ அதிக வரம்பை அனுமதித்தாலும், உங்கள் பணப்பரிவர்த்தனையின் வெற்றி பெற்றாலும் உங்கள் தனிப்பட்ட வங்கியை பொருத்தது ஆகும். சில கடன் வழங்கும் வங்கிகள் மோசடியை தடுப்பதற்காக இன்னும் வரம்புகள் பின்பற்றப்படுகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/petrol-and-diesel-price-may-increase-before-may-15-2026-says-source-77300.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 21:41:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/petrol-and-diesel-price-may-increase-before-may-15-2026-says-source-77300.html</guid>
		            
			    	<description><![CDATA[Petrol and Diesel Price | மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், மே 15, 2026-க்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/petrol-and-diesel-price-may-increase-before-may-15-2026-says-source-77300.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/petrol-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Petrol (1)" /></a></dt><p>இந்தியாவில் மே 15, 2026-க்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் ரூ.30,000 கோடி வரை ஒரு மாதத்தில் இழப்பை சந்திக்க நேரிடும் என்ற நிலை உருவாகியுள்ளதால் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/petrol-and-diesel-price-may-increase-before-may-15-2026-says-source-77300.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/petrol-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Petrol (2)" /></a></dt><p>பிப்ரவரி மாத தொடக்கத்தில் உருவான மேற்கு ஆசியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை இரண்டு மடங்கு உயர்வு கடும் உச்சத்தில் உள்ளது. அதுமட்டுமன்றி, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதன் காரணமாக உலக நாடுகள் மிக கடுமையான எண்ணெய் தட்டுப்பாடை எதிர்க்கொண்டு வருகின்றன. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/petrol-and-diesel-price-may-increase-before-may-15-2026-says-source-77300.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/petrol-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Petrol (3)" /></a></dt><p>இவ்வாறு கச்சா எண்ணெய்  தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகிய சிக்கல்கள் நிலவும் நிலையில் பல நாடுகள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோ, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து வருகிறது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/petrol-and-diesel-price-may-increase-before-may-15-2026-says-source-77300.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/petrol-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Petrol (4)" /></a></dt><p>ஹோர்முஸ் நீரிணை சிக்கல் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/petrol-and-diesel-price-may-increase-before-may-15-2026-says-source-77300.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/petrol-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Petrol (5)" /></a></dt><p>அதாவது 2026-ல் கச்சா எண்ணெய் 2025-ஐ விடவும் இரண்டு மடங்கு உயர்வை சந்தித்து புதிய உச்சத்தில் உள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.30,000 கோடி வரை இழப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>இந்த தவறை செய்தால் உங்களுக்கு பிஎஃப் பணம் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-have-these-things-you-will-not-get-pf-money-77170.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 15:20:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/if-you-do-not-have-these-things-you-will-not-get-pf-money-77170.html</guid>
		            
			

    	<description><![CDATA[Important Aspects To Get PF Money | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த சில விஷயங்கள் இல்லை என்றால் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/epfo-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இந்த தவறை செய்தால் உங்களுக்கு பிஎஃப் பணம் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி<strong> (EPFO - Employee Provident Fund Organization)</strong> திட்டத்தில் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அந்த தொகை ஊழியர்களின் பிஎஃப் <strong>(PF - Provident Fund) </strong>கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இந்த பணத்தை எடுக்க பயனர்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த ஒரு தவறை செய்வதன் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாமல் போகலாம். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பிஎஃப்-ல் பணம் எடுக்கும்போது இந்த தவறை செய்யாதீங்க</h3>
இந்தியாவில் அனைத்து துறைகளும் விரைவானதாகவும், டிஜிட்டல் மயமாகப்பட்டதாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகமும் விரைவானதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் எடுத்துக்கொள்ளும் வசதியை இபிஎஃப்ஓ வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாகவே நீங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த சில விஷயங்கள் அவசியமாக உள்ளன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/investment-vs-home-loan-how-to-use-bonus-money-in-a-better-way-76791.html">முதலீடு Vs வீட்டு கடன்.. போனஸ் பணத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?</a>
<h3>இந்த விஷயங்கள் இல்லை என்றால் பிஎஃப் பணம் கிடைக்காது</h3>
பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க சில அம்சங்கள் முக்கியமானவையாக உள்ளன.
<ol>
 	<li>12 இல்ல எண்கள் உடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் யுஏஎன் எண் இருக்க வேண்டும்.</li>
 	<li>ஆதார் எண் மற்றும் வங்கி எண் ஆகியவை பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும்.</li>
 	<li>பிஎஃப் கணக்கிற்கு கேஒய்சி சரிப்பார்ப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்.</li>
 	<li>ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இருக்க வேண்டும்.</li>
 	<li>அந்த மொபைல் எண் ஓடிபி மெசேஜ் பெறும் வகையில் ஆக்டிவாக இருக்க வேண்டும்.</li>
</ol>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/total-due-vs-minimum-due-which-is-best-way-to-repay-credit-card-bill-76537.html">மினிமம் டியூ Vs டோட்டல் டியூ.. கிரெடிட் பில் கட்டணத்தை செலுத்த தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!</a></p>
மேற்குறிப்பிட்ட இந்த அம்சங்கள் இல்லாமல் பிஎஃப் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் பட்சத்தில் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி புதிய ரேஷன் கார்டு பெற கூடுதல் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/tamil-nadu-government-important-announcement-on-name-removal-in-ration-card-77150.html</link>	
		<pubDate>Fri, 08 May 2026 14:50:28 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/tamil-nadu-government-important-announcement-on-name-removal-in-ration-card-77150.html</guid>
		            
			

    	<description><![CDATA[Name Removal In Ration Card | ரேஷன் அட்டையில் ஒருவரது பெயரை இணைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பெயரை நீக்கம் செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/ration-card-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி புதிய ரேஷன் கார்டு பெற கூடுதல் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்!" /></figure>இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய திட்டம் தான் ரேஷன் அட்டை <strong>(Ration Card)</strong> திட்டம். இந்த திட்டத்தின் மூலம் வருமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் மாநிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய முக்கிய அம்சமாக இந்த ரேஷன் அட்டை உள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் இது குறித்து கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
<h3>ரேஷன் அட்டை குறித்து அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு</h3>
ரேஷன் அட்டை குறித்து அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் பெயர்களை நீக்கம் செய்வதற்கு இனி மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த விதிமுறை மாற்றத்தின் மூலம், பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளில் எப்போது பெயர்களை நீக்கினாலும் மாத இறுதியில் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்த பிறகு மட்டுமே நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/total-due-vs-minimum-due-which-is-best-way-to-repay-credit-card-bill-76537.html"> மினிமம் டியூ Vs டோட்டல் டியூ.. கிரெடிட் பில் கட்டணத்தை செலுத்த தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!</a>
<h3>புதிய ரேஷன் கார்டு வாங்குபவர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்</h3>
ரேஷன் அட்டையில் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரது பெயரும் இடம்பெற்று இருக்கும். ஒருவேளை அந்த குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவரது பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டியது முக்கியாமக உள்ளது. இந்த நிலையில், தான் அது குறித்து அரசு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/invest-in-this-way-in-fixed-deposit-scheme-to-get-high-return-photo-gallery-76608.html">எஃப்டி திட்டத்தில் அதிக லாபம் பெற வேண்டுமா?.. அப்போ இப்படி முதலீடு செய்யுங்கள்!</a>

அரசின் இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் இனி புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு..</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-rate-gold-rate-spiked-for-rupees-50-per-gram-know-more-in-details-76883.html</link>	
		<pubDate>Thu, 07 May 2026 10:00:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-rate-gold-rate-spiked-for-rupees-50-per-gram-know-more-in-details-76883.html</guid>
		            
			

    	<description><![CDATA[தங்கத்தின் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கத்தின் விலை மே 7ஆம் தேதியான இன்று உயர்வுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,436க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,23,488க்கு விற்பனை செய்யப்படுகிறது. ]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு.." /></figure><section class="text-token-text-primary w-full focus:outline-none [--shadow-height:45px] has-data-writing-block:pointer-events-none has-data-writing-block:-mt-(--shadow-height) has-data-writing-block:pt-(--shadow-height) [&amp;:has([data-writing-block])&gt;*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]" dir="auto" data-turn-id="request-WEB:edf8ac2a-0134-454c-aa2a-5f012888ed2c-3" data-testid="conversation-turn-8" data-scroll-anchor="false" data-turn="assistant">
<div class="text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)">
<div class="[--thread-content-max-width:40rem] @w-lg/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn">
<div class="flex max-w-full flex-col gap-4 grow">
<div class="min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+&amp;]:mt-1" dir="auto" tabindex="0" data-message-author-role="assistant" data-message-id="11b06c75-ce9d-42f1-8344-004363a768f4" data-message-model-slug="gpt-5-5" data-turn-start-message="true">
<div class="flex w-full flex-col gap-1 empty:hidden">
<div class="markdown prose dark:prose-invert w-full wrap-break-word light markdown-new-styling">
<p data-start="0" data-end="310"><strong>தங்கம் விலை, மே 7, 2026:</strong> தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த சூழலில், மே 7ஆம் தேதியான இன்று சற்று உயர்வைக் கண்டுள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் பூகோள அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து நிலைமாறுபாட்டுடன் காணப்படுகிறது.</p>

<h3 data-start="0" data-end="310">தங்கம் விலை உயர என்ன காரணம்?</h3>
<p data-start="0" data-end="310">தங்கத்தின் விலை என்பது உள்நாட்டு தேவையை மட்டும் பொறுத்தது அல்ல. மாறாக, சர்வதேச பொருளாதார நிலைமைகள், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், அமெரிக்க டாலரின் மதிப்பு போன்ற காரணிகளும் அதனை தீர்மானிக்கின்றன.</p>
<p data-start="0" data-end="310">மேலும் படிக்க:<a href="https://www.tv9tamilnews.com/business/investment-vs-home-loan-how-to-use-bonus-money-in-a-better-way-76791.html"> முதலீடு Vs வீட்டு கடன்.. போனஸ் பணத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?</a></p>
<p data-start="678" data-end="957">அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும் போது தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். அதேபோல், போர் சூழல் அல்லது நாடுகளுக்கிடையிலான மோதல்கள் போன்ற பூகோள அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும் போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர்.</p>

<h3 data-start="678" data-end="957">சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரிப்பு:</h3>
<p data-start="959" data-end="1104">தங்கத்தின் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கத்தின் விலை மே 7ஆம் தேதியான இன்று உயர்வுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,436க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,23,488க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,150க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>

<h3 data-start="959" data-end="1104">வெள்ளி விலையில் மாற்றமில்லை:</h3>
<p data-start="1380" data-end="1605" data-is-last-node="" data-is-only-node="">வெள்ளியின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.275க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>

</div>
</div>
</div>
</div>
<div class="z-0 flex min-h-[46px] justify-start"></div>
<div class="mt-3 w-full empty:hidden">
<div class="text-center"></div>
</div>
</div>
</div>
</section>
<div class="pointer-events-none -mt-px h-px translate-y-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom)-14*var(--spacing))]" aria-hidden="true"></div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது சிக்கல்.. இந்த விஷயம் குறித்து தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/not-using-credit-card-can-create-big-impact-know-why-photo-gallery-76819.html</link>	
		<pubDate>Wed, 06 May 2026 18:15:46 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/not-using-credit-card-can-create-big-impact-know-why-photo-gallery-76819.html</guid>
		            
			    	<description><![CDATA[Common Credit Card Mistake | தற்போது பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், கிரெடிட் கார்டை பயன்படுத்தாமலே வைத்திருப்பது தேவையற்ற கட்டணத்தை வழிவகுக்கும் என கூறப்பட்டுகிறது. இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே உள்ளது குறித்த சிக்கல் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/not-using-credit-card-can-create-big-impact-know-why-photo-gallery-76819.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-11.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (11)" /></a></dt><p>தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே கிரெடிட் கார்டு மாறிவிட்டது. விலைவாசி உயர்வு காரணமாக செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதனை பூர்த்தி செய்ய பலரு  கிரெடிட் கார்டு உதவியை நாடுகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு குறித்து கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/not-using-credit-card-can-create-big-impact-know-why-photo-gallery-76819.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-12.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (12)" /></a></dt><p>அத்தகைய விஷயங்களில் ஒன்றுதான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமலே வைத்திருப்பது. கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துவது எவ்வளவு சிக்கல்களை உண்டாக்குமோ அதேபோல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் இருப்பதும் உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/not-using-credit-card-can-create-big-impact-know-why-photo-gallery-76819.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-13.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (13)" /></a></dt><p>நீங்கள் கிரெடிட் கார்டை வாங்கிவிட்டு அதனை பயன்படுத்தாமலே வைத்துள்ளீர்கள். தொடர்ந்து 3 முதல் 12 மாதங்கள் வரை உங்களது கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்தாமலே இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு கிரெடிட் கார்டை வழங்கிய வங்கி, உங்களது செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கும். 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/not-using-credit-card-can-create-big-impact-know-why-photo-gallery-76819.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-14.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (14)" /></a></dt><p>கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கிய விதிகளை விதித்துள்ளது. அதாவது, உங்களது கிரெடிட் கார்டை நிரந்தரமாக க்ளோஸ் செய்வதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்க வெண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு இடைபட்ட காலத்தில் நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/not-using-credit-card-can-create-big-impact-know-why-photo-gallery-76819.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card-15.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Credit Card (15)" /></a></dt><p>இந்த நிலையில், நீங்கள் கிரெடிட் கார்டை வாங்கிவிட்டு, அதை வைத்து எந்த செலவும் செய்யாமல் இருந்துக்கொண்டு வெறும் பின் நம்பர் மற்றும் மாற்றம் செய்தாலோ அல்லது ஸ்டேட்மெண்ட்டை அவ்வப்போது சோதனை செய்தாலோ அது பயன்பாட்டில் உள்ளதாக கருதப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>தினமும் ரூ.7 முதலீடு போதும்.. மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறலாம்.. அரசின் அட்டகாசமான திட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/get-5000-rupees-as-pension-in-atal-pension-yojana-scheme-76799.html</link>	
		<pubDate>Wed, 06 May 2026 17:47:27 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/get-5000-rupees-as-pension-in-atal-pension-yojana-scheme-76799.html</guid>
		            
			

    	<description><![CDATA[Atal Pension Yojana Scheme | பொதுமக்கள் பென்ஷன் பெறுவதற்கான அட்டகாசமான திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா. இந்த திட்டத்தில் தினமும் ரூ.7 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/apy.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தினமும் ரூ.7 முதலீடு போதும்.. மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறலாம்.. அரசின் அட்டகாசமான திட்டம்!" /></figure>இந்தியாவில் தற்போதுள்ள நிலவரப்படி தனியார் மற்றும் அரசு என எந்த துறையில் பணியாற்றினாலும், ஒருவர் அதிகபட்சமாக 60 வயது வரை மட்டுமே பணியாற்ற முடியும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவரால் அதிகபட்சமாக 60 வயது வரை மட்டுமே வேலை செய்து வருமானம் ஈட்ட முடியும். 60 வயதை கடந்தவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இதுவே தனியார் துறை ஊழியராக இருந்தால் 60 வயதுக்கு பிறகு அவரது மாத ஊதியம் கேள்விக்குறியாக மாறிவிடும். இந்த நிலையில், ஓய்வுக்கு பிறகு பொதுமக்கள் நிதி சிக்கல்கள் இல்லாமல் இருக்க பல வகையான  பென்ஷன் திட்டங்கள் அமலில் உள்ளன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் <strong>(APY - Atal Pension Yojana)</strong>. இந்த திட்டத்தில் தினமும் ரூ.7 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 பென்ஷன் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>அடல் பென்ஷன் யோஜனா திட்டம்</h3>
குடிமக்கள் தங்களது ஓய்வு காலத்தை பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வழங்கும் அற்புதமான திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா. இந்த திட்டம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். காரணம், இந்த திட்டத்தில் தினமும் ரூ.7 முதலீடு செய்வதன் மூலம் மாதத்திற்கு ரூ.5,000 வரை பென்ஷன் பெற முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/mobile-number-plays-major-role-in-safeguarding-and-risking-your-finance-know-how-76497.html">பணத்தை பாதுகாக்கவும், அழிக்கவும் முக்கிய ஆயுதமாக உள்ள மொபைல் எண்.. கண்டிப்பா தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>
<h3>அடல் பென்ஷன் யோஜனா - சிறப்பு அம்சங்கள் என்ன?</h3>
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வயதான காலத்தில் உங்களால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பென்ஷன் பெற முடியும். இந்த திட்டத்தில் ஒருவர் தனது ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில், அந்த நபருக்கு 60 வயதுக்கு பிறகு பென்ஷன் தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யகிறீர்களோ, அவ்வவு குறைவான தொகையை முதலீடாக செலுத்தலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/follow-these-two-simple-rules-to-clear-your-debt-photo-gallery-76351.html">கடனை அடைக்க இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!</a>

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். உதாரணமாக 18 வயதில் ஒருவர் தனது அடல் பென்ஷன் முதலீட்டை தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தில் அவர் மாதம் ரூ.210 செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளுக்கு ரூ.7 முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் 42 வயதுக்குள் அந்த நபர் ரூ.8.5 லட்சம் முதலீடு செய்திருப்பார். அதன் மூலம் அவர் 42 வயதுக்கு பிறகு மாதம் மாதம் ரூ.5,000 பென்ஷன் பெறலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>முதலீடு Vs வீட்டு கடன்.. போனஸ் பணத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/investment-vs-home-loan-how-to-use-bonus-money-in-a-better-way-76791.html</link>	
		<pubDate>Wed, 06 May 2026 16:05:20 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/investment-vs-home-loan-how-to-use-bonus-money-in-a-better-way-76791.html</guid>
		            
			

    	<description><![CDATA[How To Use Bonus Money In A Better Way | அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என இருவருக்குமே போனஸ் வழங்கப்படும். இந்த நிலையில், போனஸ் பணத்தை முறையாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/bonus.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முதலீடு Vs வீட்டு கடன்.. போனஸ் பணத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?" /></figure>அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் நபர்களுக்கு கிடைக்கும் ஒரு கூடுதல் அம்சம் தான் போனஸ் மற்றும் சமபள உயர்வு. சம்பள உயர்வு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் நிலையில், போனஸ் அந்த நிறுவனத்தின் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்படும். உதாரணமாக ஒரு நிறுவனம் 6 மாதங்களுக்கு ஒருமுறை போனஸ் வழங்குவதை கொள்கையாக வைத்திருந்தால் அதற்கு ஏற்ப வழங்கப்படும். இந்த நிலையில், அவ்வாறு போனஸ் பெறுபவர்கள் அதனை செலவு செய்யலாமா அல்லது முதலீடு செய்யலாமா என்ற குழப்பத்தில் இருப்பர். இந்த குழப்பத்தை சரிசெய்து பணத்தை முறையாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>போனஸை என்ன செய்வது - கடனை அடைக்கலாமா? அல்லது முதலீடா?</h3>
போனஸ் வாங்கும் ஊழியர்கள் பலருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி தான் இது. தங்களுக்கு கிடைக்கும் கூடுதல் பணத்தை முறையாக செலவு செய்ய வேண்டும் என பலரும் கருதுகின்றனர். நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறீர்கள் உங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை போனஸ் வழங்கப்படுகிறது என்றால் உங்களது சூழலுக்கு ஏற்ப அதனை பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/follow-these-two-simple-rules-to-clear-your-debt-photo-gallery-76351.html">கடனை அடைக்க இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!</a>
<h3>யார் முதலீடு செய்யலாம்?</h3>
நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். உங்களுக்கு வீட்டு கடன் உள்ளது. ஆனால், உங்களது வயது 30-க்கும் குறைவாக உள்ளது என்றால் நீங்கள் தாராளமாக முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். காரணம் அதிக ஆண்டுகள் முதலீடு செய்யும்போது அதிக லாபத்தை பெற முடியும். எனவே உங்களுக்கு வயது இருக்கும் பட்சத்தில் உங்களது எதிர்கால தேவைகளுக்காக நீங்கள் உங்கள் போனஸ் பணத்தை முதலீடு செய்யலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/how-can-a-person-getting-50000-rupees-per-month-can-invest-76219.html">ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி முதலீடு செய்யலாம்?.. இந்த விதியை பின்பற்றுங்கள்!</a>
<h3>யார் வீட்டு கடனை செலுத்தலாம்?</h3>
உங்களுக்கு வயது 50-ஐ தாண்டிவிட்டது. ஆனால், கடனை அடைக்க வேண்டிய காலம் உள்ளது. அதுவரை உங்களால் வருமானம் ஈட்ட முடியாது என்றால் நீங்கள் உங்களது போனஸ் பணத்தை வைத்து வீட்டு கடனை அடைக்கலாம். ஒவ்வொருவரும் தங்களது சூழலுக்கு ஏற்ப போனஸ் பணத்தை செலவு செய்வது சிறப்பானதாக இருக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price: தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?!!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-prices-surge-dramatically-once-again-price-of-one-sovereign-of-gold-in-chennai-today-76694.html</link>	
		<pubDate>Wed, 06 May 2026 10:28:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[esakkiraja selvarathinam]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-prices-surge-dramatically-once-again-price-of-one-sovereign-of-gold-in-chennai-today-76694.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold Prices Surge: த ங்கத்தின் விலை என்பது உள்நாட்டுத் தேவையை மட்டும் பொறுத்தது அல்ல. மாறாக சர்வதேச பொருளாதார நிலைமைகள்: உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மந்தநிலை. அமெரிக்க டாலர் மதிப்பு: டாலரின் மதிப்பு வலுவடையும்போது தங்கம் விலை மாறுபடும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-price.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price: தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?!!" /></figure>சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் <a href="https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-decreased-in-tamil-nadu-on-may-05-2026-76492.html" target="_blank" rel="noopener">தங்கம் மற்றும் வெள்ளியின் விலை</a> தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

<strong>இதையும் படிங்க:</strong> <strong><a href="https://www.tv9tamilnews.com/business/do-you-need-to-submit-pan-card-for-buying-gold-what-2026-income-tax-rules-says-75906.html">தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா?.. புதிய வருமான விதிகள் கூறுவது என்ன?</a></strong>
<h3>தங்கம் விலை உயர்வு:</h3>
சென்னையில் நேற்று தங்கம் விலையானது அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 180 குறைந்து ஒரு கிராம் 13,820 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 குறைந்து ஒரு சவரன் 1,10,560 ரூபாய்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலையானது இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 230 உயர்ந்து ஒரு கிராம் 14,050 ரூபாக்கும், சவரனுக்கு 1,840 உயர்ந்து ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
<h3>வெள்ளியின் விலை உயர்வு</h3>
தங்கத்தை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி 265க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
<h3>விலை நிர்ணயத்தின் பின்னணி:</h3>
தங்கத்தின் விலை என்பது உள்நாட்டுத் தேவையை மட்டும் பொறுத்தது அல்ல. மாறாக சர்வதேச பொருளாதார நிலைமைகள்: உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மந்தநிலை. அமெரிக்க டாலர் மதிப்பு: டாலரின் மதிப்பு வலுவடையும்போது தங்கம் விலை மாறுபடும். வட்டி விகிதங்கள்: அமெரிக்க மத்திய வங்கியின் (Fed Reserve) வட்டி விகித மாற்றங்கள். புவிசார் அரசியல் பதற்றங்கள்: போர்ச் சூழல் அல்லது நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் நோக்கித் திருப்புகின்றன.

<strong>இதையும் படிங்க:</strong> <strong><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html">கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?</a></strong>

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களே இந்த விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான சொத்தாகக் கருதி அதிகளவில் முதலீடு செய்வதால், வரும் நாட்களிலும் விலை இதேபோல் ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மினிமம் டியூ Vs டோட்டல் டியூ.. கிரெடிட் பில் கட்டணத்தை செலுத்த தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/total-due-vs-minimum-due-which-is-best-way-to-repay-credit-card-bill-76537.html</link>	
		<pubDate>Tue, 05 May 2026 17:05:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/total-due-vs-minimum-due-which-is-best-way-to-repay-credit-card-bill-76537.html</guid>
		            
			

    	<description><![CDATA[Total Due Vs Minimum Due | கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை செலுத்த மினிமம் டியூ மற்றும் டோட்டல் டியூ என இரண்டு அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், இந்த இரண்டு அம்சங்களில் எந்த அம்சத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை செலுத்துவது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/credit-card.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மினிமம் டியூ Vs டோட்டல் டியூ.. கிரெடிட் பில் கட்டணத்தை செலுத்த தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு<strong> (Credit Card)</strong> பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது. கூடுதல் நிதி தேவைக்காக பலரும் இந்த கிரெடிட் கார்டு அம்சத்தை பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தினால் அதில் இருந்து பல்வேறு சிறப்பு பலன்களை பெற முடியும். இதுவே தவறாக பயன்படுத்தினால் கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். எனவே கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தும் முறைகளான மினிமம் டியூ <strong>(Minimum Due)</strong> மற்றும் டோட்டல் டியூ<strong> (Total Due)</strong> இரண்டிற்குமான வித்தியாசம் என்ன, அதன் முக்கியத்துவங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தும் 2 முக்கிய முறைகள்</h3>
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது, கிரெடிட் கார்டு பில்லில் இரண்டு முக்கிய விஷயங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதாவது டோட்டல் டியூ மற்றும் மினமம் டியூ என்ற அம்சங்கள் தான். இவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>டோட்டல் டியூ என்றால் என்ன?</h3>
நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பயன்படுத்தி முழுத் தொகை தான் இது. இந்த தொகை முழுவதையும் செலுத்திவிட்டால் அந்த தொகைக்கு வட்டி எதுவும் விதிக்கப்படாது.
<h3>மினிமம் டியூ என்றால் என்ன?</h3>
மினிமம் டியூ என்பது நீங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த மொத்த தொகையில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த தொகைக்கான கட்டணத்தை அந்த மாதத்திற்கு தாமத கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படாது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/how-can-a-person-getting-50000-rupees-per-month-can-invest-76219.html">ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி முதலீடு செய்யலாம்?.. இந்த விதியை பின்பற்றுங்கள்!</a>
<h3>மினிமம் தொகை மட்டும் செலுத்தினால் போதுமா?</h3>
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலரும்  மாத செலவுகளை கையாளும் வகையில், மினிமம் டியூ மட்டுமே செலுத்தினால் போதும் என்று நினைப்பர். ஆனால், அவ்வாறு மினிமம் டியூ மட்டுமே செலுத்துவது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. காரணம், குறைந்தபட்ச தொகையான மினிமம் டியூ தொகையை மட்டுமே திருப்பி செலுத்தினால், மீதமுள்ள தொகைக்கு உடனடியாக வட்டி சேர தொடங்கிவிடும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/sip-vs-home-loan-man-asked-help-from-chatgpt-to-maintain-finance-75915.html">SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!</a>

பொதுவாக கிரெடிட் கார்டு கடன்களுக்கு 30 முதல் 45 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மினிமம் டியூ மட்டுமே செலுத்தும் பட்சத்தில் மீதமுள்ள தொகைக்கு 30 முதல் 45 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எஃப்டி திட்டத்தில் அதிக லாபம் பெற வேண்டுமா?.. அப்போ இப்படி முதலீடு செய்யுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/invest-in-this-way-in-fixed-deposit-scheme-to-get-high-return-photo-gallery-76608.html</link>	
		<pubDate>Tue, 05 May 2026 14:26:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/invest-in-this-way-in-fixed-deposit-scheme-to-get-high-return-photo-gallery-76608.html</guid>
		            
			    	<description><![CDATA[Best Way To Invest In FD Scheme | எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்வது பலருக்கும் முதன்மை தேர்வாக உள்ளது. இந்த நிலையில், எஃப்டி திட்டத்தில் முறையாக முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/invest-in-this-way-in-fixed-deposit-scheme-to-get-high-return-photo-gallery-76608.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/fd-11.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Fd (11)" /></a></dt><p>சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்றால் பெரும்பாலான மக்களின் முதன்மை தேர்வாக உள்ளது தான் நிலையான வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முறையாக முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். ஆனால் பலருக்கும் எப்படி முறையாக முதலீடு செய்வது என தெரியவில்லை. இந்த நிலையில், எஃப்டியில் எப்படி சிறப்பாக முதலீடு செய்யலாm என பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/invest-in-this-way-in-fixed-deposit-scheme-to-get-high-return-photo-gallery-76608.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/fd-12.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Fd (12)" /></a></dt><p>எஃப்டி திட்டத்தை பொருத்தவரை வட்டி விகிதம் அதிகரிக்க அதிகரிக்க பணம் அதிகமாக வளரும். உதாரணமாக ஒருவர் ரூ.1.5 லட்சம் பணத்தை வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். அந்த திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது என்றால் அது மொத்தம் ரூ.2,10,382 ஆக மாறி இருக்கும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/invest-in-this-way-in-fixed-deposit-scheme-to-get-high-return-photo-gallery-76608.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/fd-13.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Fd (13)" /></a></dt><p>இதுவே ரூ.1.5 லட்சம் பணத்தை  5 ஆண்டுகள் கால அளவீடு கொண்டு திட்டத்தில் 8 சதவீதம் வட்டி உள்ள திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் மொத்தமாக ரூ.2,20,399 பெற்றிருப்பீர்கள். எனவே எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு அந்த திட்டத்திற்கான வட்டி விகிதத்தை சோதனை செய்வது மிக முக்கியமானதாக உள்ளது. 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/invest-in-this-way-in-fixed-deposit-scheme-to-get-high-return-photo-gallery-76608.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/fd-14.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Fd (14)" /></a></dt><p>வட்டியை போலவே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் வட்டியை கணக்கிடும் கால அளவீடு. அதாவது, வட்டி கணக்கிடப்படும் காலவரையறை குறைய குறைய பணம் வேகமாக பெருகும். அதாவது 8 சதவீத வட்டி கொண்ட திட்டத்திற்கான பல்வேறு வித்தியாசமன வட்டி கணக்கீடு குறித்து அளவிட்டு பார்க்க வேண்டும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/invest-in-this-way-in-fixed-deposit-scheme-to-get-high-return-photo-gallery-76608.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/fd-15.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Fd (15)" /></a></dt><p>ஆண்டுக்கு வட்டி வழங்கப்படும் நிலையில், ரூ.1.5 லட்சம் முதலீடு ரூ.2,20,399 ஆக மாறியிருக்கும். அரையாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும் நிலையில் அது ரூ.2,22,036 ஆக மாறியிருக்கும். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும் நிலையில் ரூ.2,22,892 ஆக மாறியிருக்கும். இதுவே மாதம் மாதம் வட்டி வழங்கப்படுகிறது என்றால் ரூ.2,23,476 ஆக மாறியிருக்கும். </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>பணத்தை பாதுகாக்கவும், அழிக்கவும் முக்கிய ஆயுதமாக உள்ள மொபைல் எண்.. கண்டிப்பா தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/mobile-number-plays-major-role-in-safeguarding-and-risking-your-finance-know-how-76497.html</link>	
		<pubDate>Tue, 05 May 2026 11:34:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/mobile-number-plays-major-role-in-safeguarding-and-risking-your-finance-know-how-76497.html</guid>
		            
			

    	<description><![CDATA[Mobile Number Behind Finance | தற்போதைய சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், ஒருவரின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், அழிக்கப்வும் மொபைல் எண் என்ன பங்காற்றுகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/mobile.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பணத்தை பாதுகாக்கவும், அழிக்கவும் முக்கிய ஆயுதமாக உள்ள மொபைல் எண்.. கண்டிப்பா தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>தற்போதைய சூழலில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. எந்த விதமான செயல்களை செய்வதற்கும் டிஜிட்டல் செயலிகள் உள்ளன. இந்த டிஜிட்டல் செயலிகள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான முக்கிய அம்சமாக உள்ளது தான் மொபைல் எண். இந்த நிலையில், ஒருவர் தனது பணத்தை பாதுகாப்பதற்கும், இழப்பதற்கும் மொபைல் எண் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மொபைல் எண் எவ்வாறு பணத்தை பாதுகாக்கும் கருவியாகவும், ஆபத்தான அம்சமாகவும் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
<h3>மொபைல் எண்ணை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்</h3>
தற்போதைய நிலவரப்படி அனைத்திற்கு கேஒய்சி <strong>(KYC - Know Your Customer)</strong> மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாக உள்ளது. குறிப்பாக பணம் மற்றும் பண பரிவர்த்தனைகளை சார்ந்த சேவைகள் மற்றும் செயலிகளுக்கு கட்டாயமாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் விதமாக ஓடிபி முறையும் உள்ளது. இதற்கெல்லாம் முதன்மை ஆதாரமாக மொபைல் எண் உள்ளது. இந்த மொபைல் எண்ணால் ஒருவருக்கு தனது நிதியை பாதுகாக்க கூடுதல் அம்சங்களும் அதேசமயம் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/sip-vs-home-loan-man-asked-help-from-chatgpt-to-maintain-finance-75915.html">SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!</a>
<h3>பாதுகாப்பு வழங்கும் மொபைல் எண்</h3>
யுபிஐ செயலிகள் உள்ளிட்ட அனைத்து விதமான செயலிகளுக்கு மொபைல் எண் கட்டாயமாக உள்ளது. ஒருவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது பணம் செலுத்தப்பட்டாலோ அது குறித்து உரிய நபருக்கு தெரிய வந்துவிடும். ஒருவேளை அந்த பண பரிவர்த்தனையை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்றால் அந்த பயனர் அது குறித்து உடனடியாக புகார் அளித்து தங்களது பணத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/do-you-need-to-submit-pan-card-for-buying-gold-what-2026-income-tax-rules-says-75906.html">தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா?.. புதிய வருமான விதிகள் கூறுவது என்ன?</a>
<h3>மொபைல் எண் மூலம் வரும் சிக்கல்கள்</h3>
அனைத்து சேவைகள் மற்றும் செயலிகளுக்கும் மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மொபைல் எண் மூலம் ஏராளமான மோசடிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களை குறிவைக்கும் மோசடிக்காரர்கள், பிஷ்ஷிங் <strong>(Phishing)</strong> உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

ஒருவரின் மொபைல் எண் அவரது பணத்தை பாதுகாப்பதற்கான முக்கிய அம்சமாக உள்ளது. அதே சமயம் அதன் மூலம் சில சிக்கல்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி குறைவு.. மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-decreased-in-tamil-nadu-on-may-05-2026-76492.html</link>	
		<pubDate>Tue, 05 May 2026 10:18:02 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-decreased-in-tamil-nadu-on-may-05-2026-76492.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-price-17.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி குறைவு.. மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்!" /></figure><strong>சென்னை, மே 05 :</strong> மேற்கு ஆசிய போர் <strong>(West Asia War)</strong> காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை <strong>(Gold and Silver Price)</strong> தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
<h3>தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை</h3>
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இடையே பிப்ரவரி 28, 2026 முதலே தொடர் சிக்கல்கள் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோ, டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக தங்கம் கடந்த ஒரு மாதமாக மந்தமான நிலையில் உள்ளது. உதாரணமாக சில நாட்கள் உயர்வை சந்திக்கும் தங்கம், சில நாட்கள் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/sip-vs-home-loan-man-asked-help-from-chatgpt-to-maintain-finance-75915.html">SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!</a>
<h3>இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.13,820-க்கும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கு, ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கடனை அடைக்க இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/follow-these-two-simple-rules-to-clear-your-debt-photo-gallery-76351.html</link>	
		<pubDate>Mon, 04 May 2026 18:10:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/follow-these-two-simple-rules-to-clear-your-debt-photo-gallery-76351.html</guid>
		            
			    	<description><![CDATA[Two Simple Rules To Clear Your Debt | கடன் என்பது பலருக்கும் மிகப்பெரிய சவாலாகவும், சிக்கலாகவும் உள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனது கடனை மிக விரைவாக அடைக்க முடியும். அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/follow-these-two-simple-rules-to-clear-your-debt-photo-gallery-76351.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/debt-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Debt (1)" /></a></dt><p>பண தேவை என்பது அனைவருக்கும் இருக்கும் முக்கியமான சிக்கல் தான். இந்த பண தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள பலர் சேமிப்பு அல்லது முதலீடு செய்வர். அவ்வாறு சேமிப்பு அல்லது முதலீடு செய்யாதவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர். கடன் வாங்கும் நபர்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பர். இந்த நிலையில், கடனை சுலபமாக அடைக்க உள்ள சில முக்கிய வழிகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/follow-these-two-simple-rules-to-clear-your-debt-photo-gallery-76351.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/debt-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Debt (2)" /></a></dt><p>கடனை திருப்பி செலுத்துவதில் அவலாஞ்சி என்ற முக்கிய முறை ஒன்று உள்ளது. அதாவது, இந்த முறை எதை கூறுகிறது என்றால் அதிக வட்டி விகிதம் கொண்ட கடனை முதலில் அடைப்பது ஆகும். இவ்வாறு, அதிக வட்டி உள்ள கடனை விரைவில் அடைப்பதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் வட்டியை நம்மால் சேமிக்க முடியும். 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/follow-these-two-simple-rules-to-clear-your-debt-photo-gallery-76351.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/debt-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Debt (3)" /></a></dt><p>இந்த முறையை பின்பற்றி கடனை அடைக்க தொடக்கத்தில் அதிக தொகையை சேமிக்க வேண்டும். அதற்கான வருமானத்தை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். எனவே கடனை முன்கூட்டியே அடைக்க விரும்பும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை சேமித்தோ அல்லது முதலீடோ செய்து வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/follow-these-two-simple-rules-to-clear-your-debt-photo-gallery-76351.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/debt-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Debt (4)" /></a></dt><p>அடுத்ததாக உள்ள முறைதான் ஸ்னோபால். இந்த முறை எதை கூறுகிறது என்றால், குறைந்த கடன் தொகைகளை விரைவில் அடைக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் சிறிய சிறிய கடன்கள் விரைவில் அடைக்கப்படும். பிறகு அதிக தொகை கொண்ட கடன்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/business/follow-these-two-simple-rules-to-clear-your-debt-photo-gallery-76351.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/debt-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Debt (5)" /></a></dt><p>மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு முறைகளில் எந்த முறை உங்களுக்கு சிறந்ததாக உள்ளதோ அதனை தேர்வு செய்து நீங்கள் உங்கள் கடனை அடைக்கலாம். அதாவது, உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை உள்ளது, எத்தகை ஆண்டுகளுக்கான கடன் உள்ளது உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அதற்கு ஏற்ப திட்டமிடுவது சிறப்பானதாக இருக்கும்.</p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி முதலீடு செய்யலாம்?.. இந்த விதியை பின்பற்றுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/how-can-a-person-getting-50000-rupees-per-month-can-invest-76219.html</link>	
		<pubDate>Mon, 04 May 2026 14:05:05 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/how-can-a-person-getting-50000-rupees-per-month-can-invest-76219.html</guid>
		            
			

    	<description><![CDATA[Investment Plan For 50000 Rupees Salaried Person | மாத வருமானம் வாங்கும் ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்வது எதிர்காலத்தை பாதுகாக்க உதவும். இந்த நிலையில், மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் எப்படி முதலீடு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/investment-17.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி முதலீடு செய்யலாம்?.. இந்த விதியை பின்பற்றுங்கள்!" /></figure>பாதுகாப்பான பொருளாதாரத்தை பெற வேண்டும் என்றால் சேமிப்பு <strong>(Saving)</strong> அல்லது முதலீடு <strong>(Investment)</strong> மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், பெரும்பாலான மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படி முதலீடு செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இந்த நிலையில், மாதம் ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர் ஒருவர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி முதலீடு செய்யலாம்?</h3>
ரூ.15,000 மாத சம்பளம் வாங்கும் நபர்கள் கூட தங்களது எதிர்காலத்திற்காக சேமிப்பு மற்றும் முதலீடு செய்யலாம். ஆனால், பெரும்பாலான மக்கள் தங்களுக்கு மிகவும் குறைவான வருமானம் தான் உள்ளது. அதனால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முடியாது என நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. சரியான திட்டமிடல் இருக்கும் பட்சத்தில் முதலீடு செய்து பொருளாதாரத்தை மிகவும் வலிமையானதாக மாற்ற முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/petrol-diesel-price-rise-know-what-government-says-about-it-75708.html">பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?.. அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன?</a>
<h3>வருமானத்தை பிரித்து முதலீடு செய்ய வேண்டும்</h3>
சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு ஒரு சிறந்த திட்டம் ஒன்று உள்ளது. அதுதான் வருமானத்தை சதவீதமாக பிரித்து கையாள்வது. அதாவது, ஒருவர் மாதம் பெறும் வருமானத்தில் 60 முதல் 65 சதவீதம் பணத்தை தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மீதமுள்ள 20 முதல் 25 சதவீதம் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 10 முதல் 15 சதவீதம் பணத்தை இன்சூரன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html">கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?</a>

பெரும்பாலான பொதுமக்கள் தாங்கள் சேமிக்கும் மொத்த பணத்தையும் செலவு செய்து விடுவர். இதன் காரணமாக தான் அவர்களால் தங்களது பொருளாதாரத்தை பாதுகாப்பானதாக மாற்ற முடிவதில்லை. அதே சமயம் அவர்களது பொருளாதாரம் வளர்ச்சி அடையாமலே உள்ளது. எனவே ரூ.15,000 முதல் என எவ்வளவு மாத வருமானம் பெற்றாலும் அதற்கு ஏற்ப குறைந்தபட்ச தொகையையாவது முதலீட்டுக்காக எடுத்து வைக்க வேண்டும்.

சிறிய தொகையாக இருந்தாலும், அதனை நீண்ட  ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் சிறந்த லாபத்தை பெற முடியும். எனவே சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால பாதுகாப்பாக முதலீடு செய்வது மிகவும் சிறந்த நிதி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>என்பிஎஸ் பயனர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.1,000-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்படும் ஓய்வூதியம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/nps-pension-will-increase-from-1000-rupees-to-7500-rupees-under-consideration-76166.html</link>	
		<pubDate>Mon, 04 May 2026 12:20:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/nps-pension-will-increase-from-1000-rupees-to-7500-rupees-under-consideration-76166.html</guid>
		            
			

    	<description><![CDATA[National Pension Scheme Will Increase | தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், அதனை ரூ.7,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/nps-pension.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="என்பிஎஸ் பயனர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.1,000-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்படும் ஓய்வூதியம்!" /></figure>என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் <strong>(NPS - National Pension Scheme)</strong> கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஊழியர்கள் ரூ.1,000 மட்டுமே ஓய்வூதியமாக பெற்று வந்த நிலையில், அது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் ஓய்வூதியத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஓய்வூதியம் உயர்த்தப்படுவது குறித்து வெளியான முக்கிய தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>என்பிஸ் திட்டத்தில் வழங்கப்படும் மாதம் ரூ.1,000 ஓய்வூதியம்</h3>
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது மாதம்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால்,  இந்த ரூ.1,000 ஓய்வூதியம் தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்றதாக இல்லை. இதன் காரணமாக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கோரிக்கைகளின் அடிப்படையில் ஓய்வூதிய தொகையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html">கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?</a>
<h3>ரூ.7,500 ஆக உயர்த்தப்பட உள்ள பென்ஷன்</h3>
தற்போது ரூ.1,000 என்ற அளவில் என்பிஎஸ் திட்டத்தில் பென்ஷன் வழங்கப்படும் நிலையில், அதனை ரூ.7,500 ஆக உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பான நாடாளுமன்ற ஓய்வூதிய குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/gold-loan-vs-personal-loan-which-gives-low-interest-rate-75684.html"> நகை கடன் Vs தனிநபர் கடன்.. இரண்டில் குறைந்த வட்டி எதற்கு?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>
<h3>என்பிஎஸ் திட்டத்தில் பென்ஷன் வழங்கப்படுவது எப்படி?</h3>
தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது இந்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சந்தை சார்ந்த தன்னார்வ ஓவூதிய சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 70 வயதுடைய இந்திய குடிமக்கள் தாங்கள் பணிபுரியும் காலத்தில் முதலீடு செய்து, பிறகு அவர்கள் தங்களது 60 வயதிற்கு பிறகு வழக்கமான மாத ஊதியம் மற்றும் வரிச் சலுகைகள் பெற இது உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : ட்விஸ்ட் அடித்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-remain-same-in-chennai-on-may-04-2026-76138.html</link>	
		<pubDate>Mon, 04 May 2026 10:13:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-remain-same-in-chennai-on-may-04-2026-76138.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price In Chennai Today | ஈரான் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-10.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : ட்விஸ்ட் அடித்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, மே 03 :</strong> மேற்கு ஆசியா போர் <strong>(West Asia War)</strong> காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை <strong>(Gold and Silver Price)</strong> தொடர்ந்து மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் உள்ளது. இந்த நிலையில், சென்னையின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்</h3>
ஈரான் போர் காரணமாக உலக அளவில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என உலக நாடுகள் மிக கடுமையான சிக்கல்களை எதிர்க்கொண்டன. இவ்வாறு உலக அளவில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், உலக முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html">கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?</a>
<h3>இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று தங்கம் விலையில் மாற்றமிலை. இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,000-க்கும், ஒரு சவரன் ரூ.112,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/sip-vs-home-loan-man-asked-help-from-chatgpt-to-maintain-finance-75915.html</link>	
		<pubDate>Sun, 03 May 2026 12:22:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/sip-vs-home-loan-man-asked-help-from-chatgpt-to-maintain-finance-75915.html</guid>
		            
			

    	<description><![CDATA[Man Asked Help From ChatGPT To Maintain Finance | ஒருவர் தனது நிதி கையாடலை மேம்படுத்த சாட்ஜிபிடியிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு சாட்ஜிபிடி அந்த நபருக்கு அசத்தலான அறிவுரை வழங்கியுள்ளது. அது குறித்து சாட்ஜிபிடி என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/finance-management.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது எல்லா கேள்விகளுக்கும் சாட்ஜிபிடி <strong>(ChatGPT)</strong> உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு <strong>(AI - Artificial Intelligence)</strong> அம்சங்களிடம் உதவி கேட்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தனது கடன் மற்றும் முதலீடு குறித்து சாட்ஜிபிடியிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சாட்ஜிபிடி அசத்தலான அறிவுரையை வழங்கியுள்ளது. இந்த நிலையில், முதலீடு மற்றும் கடனை கையாளுவது குறித்து சாட்ஜிபிடி அளித்துள்ள விளக்கம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>முதலீடு மற்றும் கடனை கையாளுவது குறித்து சார்ஜிபிடியிடம் கேட்ட நபர்</h3>
சாட்ஜிபிடியிடம் கேட்டுள்ள அந்த நபர், எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. எனக்கு 40 வயது, எனது மனைவிக்கு 38 வயது. நாங்கள் இருவரும் இணைந்து மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கிறோம். நாங்கள் 9 சதவீதம் வட்டியுள்ள ரூ.1 கோடி வீட்டு கடன் வாங்கியுள்ளோம். கடன் 25 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் கால அளவீடு கொண்டுள்ள நிலையில், மாதம் ரூ.83,920 தவணை செலுத்துகிறோம்.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/business/epfo-minimum-pension-may-rise-to-7500-good-news-for-eps-95-pensioners-75595.html">இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ.7,500 ஆக உயரும் வாய்ப்பு? யாருக்கு நன்மை?</a>

அதுமட்டுமன்றி, நாங்கள் இருவரும் தனித்தனியாக எஸ்ஐபி முதலீடு செய்து வருகிறோம். எங்கள் குழந்தையின் மாத செலவு ரூ.30,000. கார் மாத தவணை ரூ.15,000, வீட்டு செலவுக்காக ரூ.60,000 செலவு செய்கிறோம். மீதமுள்ள பணத்தை எதிர்பாராத செலவுகளுக்காக நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை ஆண்டு போனஸ் கிடைக்கும். நாங்கள் எஸ்ஐபி முதலீட்டை தவிர்த்துவிட்டு கடனை அடைப்பது சிறப்பானதாக இருக்குமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
<h3>அசத்தலான அறிவுரை வழங்கிய சாட்ஜிபிடி</h3>
அவர் கேட்ட இந்த கேள்விக்கு சாட்ஜிபிடி அசத்தலான அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது எஸ்ஐபி முதலீட்டை முடிக்காமலே கடனை அடைக்கும் எளிதான வழியை வழங்கியுள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.2 லட்சம் போனஸ் கிடைக்கும் நிலையில், அதனை கடன் ப்ரீபேமெண்டாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அவ்வாறு செலுத்தும்போது, கடன் சுமை குறையும். அதாவது 5 முதல் 7 ஆண்டுகள் முன்கூட்டியே உங்கள் கடனை அடைத்துவிட முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/commercial-lpg-price-hike-shocks-food-street-vendors-75529.html"> வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?</a>

அதேசமயம் எஸ்ஐபியை தொடர வேண்டும் என்று சாட்ஜிபிடி அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது, எதிர்காலத்தை நிதி பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக எஸ்ஐபி முதலீட்டை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா?.. புதிய வருமான விதிகள் கூறுவது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/do-you-need-to-submit-pan-card-for-buying-gold-what-2026-income-tax-rules-says-75906.html</link>	
		<pubDate>Sun, 03 May 2026 10:50:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/do-you-need-to-submit-pan-card-for-buying-gold-what-2026-income-tax-rules-says-75906.html</guid>
		            
			

    	<description><![CDATA[PAN Card For Buying Gold | தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா, அது குறித்து புதிய வருமான வரி விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/pan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா?.. புதிய வருமான விதிகள் கூறுவது என்ன?" /></figure>இந்தியர்களுக்கான மிக முக்கிய ஆவணமாக பான் கார்டு <strong>(PAN Card)</strong> உள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனைகள், கருப்பு பணம், மோசடி உள்ளிட்டவற்றை தடுக்க சில இடங்களில் பணம் செலுத்தும்போது பான் கார்டு கட்டாயமாக உள்ளது. அந்த வகையில், நகை வாங்கும்போது பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டுமா, அது தொடர்பாக 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வருமான விதிகள் <strong>(2026 New Income Tax Rules)</strong> கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்திய குடிமக்களுக்கு மிக முக்கிய ஆவணமாக உள்ள பான் கார்டு</h3>
இந்தியாவில் ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம், எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கலாம் என்பது குறித்து எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும், எத்தனை வங்கி கணக்குகளை திறந்துக்கொள்ளலாம் என்ற நிலையில் தான் உள்ளது. பலரும், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்துள்ளனர். அவற்றின் மூலம் பல்வேறு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/epfo-minimum-pension-may-rise-to-7500-good-news-for-eps-95-pensioners-75595.html">இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ.7,500 ஆக உயரும் வாய்ப்பு? யாருக்கு நன்மை?</a>

ஒவ்வொரு வங்கி கணக்கையும் தனியாக சோதனை செய்ய முடியாது என்பதால் பான் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, பான் கார்டு வைத்திருக்கும் நபரின் அனைத்து வங்கி கணக்குகளும் அந்த ஒரே பான் கார்டின் கீழ் வந்துவிடும். இதன் மூலம் அவர்கள் என்ன வகையான பண பரிவர்த்தனை மேற்கொண்டாலும் அது அரசுக்கு தெரிய வந்துவிடும். இதன் காரணமாக தான், அதிக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது பான் கார்டு கேட்கப்படுகிறது.
<h3>நகை வாங்க பான் கார்டு கட்டாயமா?</h3>
வருமான வரி சட்டம் 2026-ன் விதி 159-ன் கீழ் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கினால் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும். அதாவாது, நீங்கள் ரூ.2 லட்சத்திற்கு குறைவான பொருட்களை வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதுவே ரூ.2 லட்சத்திற்கும் மேல் தங்கம் வாங்கினால், பான் கார்டு கட்டாயமாக உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/commercial-lpg-price-hike-shocks-food-street-vendors-75529.html">வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?</a>

தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போது 4 அரை சவரன் ரூ.61,000 ஆகும். இந்த நிலையில், ஒன்றரை சவரன் வரை நகை வாங்கும்போது நீங்கள் பான் கார்டு இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம். அதற்கு மேல் தங்கம் வாங்கினால் பான் கார்டு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?.. அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/petrol-diesel-price-rise-know-what-government-says-about-it-75708.html</link>	
		<pubDate>Sat, 02 May 2026 15:31:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/petrol-diesel-price-rise-know-what-government-says-about-it-75708.html</guid>
		            
			

    	<description><![CDATA[Petrol Diesel Price Rise | ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோ மற்றும் டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/petrol-diesel.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?.. அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன?" /></figure>மேற்கு ஆசியா போர் காரணமாக கச்சா எண்ணெய் <strong>(Crude Oil)</strong> கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை<strong> (Petrol and Diesel Price)</strong> உயரும் சூழல் உருவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பான தொடர் கேள்விகள் எழுந்து வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கடும் உச்சத்தில் இருக்கும் கச்சா எண்ணெய்</h3>
பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக ஏற்பட்ட மோதல் காரணமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக உலக நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/commercial-lpg-price-hike-shocks-food-street-vendors-75529.html">வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?</a>

அதாவது, 2025 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் வெறும் 70 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 126 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் சூழல் உருவானது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் எப்ரல் 29, 2026 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.25 முதல் ரூ.28 வரை உயர திட்டமிட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்தது.
<h3>பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?</h3>
மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக மே 01, 2026 அன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 உயர்வை சந்தித்து, ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தபடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என பரவலாக பேசப்பட்டாலும் அது குறித்து அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html</link>	
		<pubDate>Sat, 02 May 2026 13:25:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html</guid>
		            
			    	<description><![CDATA[Gas Cylinder Booking Rules Changed | மேற்கு ஆசிய போர் காரணமாக கேஸ் சிலிணர் சிக்கலை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வது குறித்த முக்கிய மாற்றங்கள் மே 01, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளன.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gas-cylinder-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (1)" /></a></dt><p>கள்ளச் சந்தையில் கேஸ் விற்பனையை தடுக்கும் வகையில், எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், என்ன என்ன மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gas-cylinder-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (4)" /></a></dt><p>மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அனைத்து பொதுமக்களுக்கும் எந்தவித தடையுமின்றி கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gas-cylinder-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (6)" /></a></dt><p>கேஸ் சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளியில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, முன்னதாக ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்ததில் இருந்து அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 21 நாட்கள் இடைவெளி இருந்த நிலையில், இந்த கால இடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது நரபுறங்களில் 21 நாட்களுக்கு பதிலாக 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களுக்கு 45 நாட்களாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gas-cylinder-7.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (7)" /></a></dt><p>அதுமட்டுமன்றி, சிலிண்டர் விநியோகத்தின் போது ஓடிபி முறை 100 சதவீதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு கேஸ் சிலிண்டர் பெற ரசீதை காட்டினால் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை டெலிவரி ஊழியரிடம் பகிர்ந்தால் மட்டுமே இனி சிலிண்டர் வழங்கப்படும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/important-changes-implemented-for-gas-cylinder-booking-photo-gallery-75715.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gas-cylinder-8.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gas Cylinder (8)" /></a></dt><p>கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கவும், அனைவருக்கும் தடையின்றி கேஸ் சிலிண்டர் கிடைப்பதற்கு இந்த விதிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் மே 01, 2026 முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>நகை கடன் Vs தனிநபர் கடன்.. இரண்டில் குறைந்த வட்டி எதற்கு?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-loan-vs-personal-loan-which-gives-low-interest-rate-75684.html</link>	
		<pubDate>Sat, 02 May 2026 11:46:17 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-loan-vs-personal-loan-which-gives-low-interest-rate-75684.html</guid>
		            
			

    	<description><![CDATA[Low Interest Loan In Banks | பெரும்பாலான பொதுமக்கள் வங்கிகளில் தனிநபர் கடன், நகை கடன் ஆகியவற்றை அதிகம் வாங்குகின்றனர். இந்த நிலையில், இந்த இரண்டு கடனில் எந்த கடனுக்கு குறைந்த வட்டி வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/loan.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நகை கடன் Vs தனிநபர் கடன்.. இரண்டில் குறைந்த வட்டி எதற்கு?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>பொதுமக்கள் தங்களது பண தேவை ஏற்படும்போதெல்லாம் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு முயற்சி செய்வர். இவ்வாறு பொதுமக்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வங்கிகள் பல வகையான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக தனிநபர் கடை <strong>(Personal Loan)</strong>, வீட்டு கடன்<strong> (Hone Loan)</strong>, நகை கடன்<strong> (Gold Loan)</strong> என சில வகையான கடன் திட்டங்கள் உள்ளன. இந்த கடன் திட்டங்களில் தங்களது பண தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள பெரும்பாலான பொதுமக்கள் தேர்வு செய்வது தனிநபர் கடன் அல்லது நகை கடன் தான். இந்த நிலையில், இவை இரண்டி எது குறைந்த வட்டியை வழங்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தங்க நகை கடன்</h3>
பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை அடகு வைத்து தங்க நகை கடன் பெறலாம். தங்கத்தை அடகு வைக்கும்போது, அன்றை தினத்தில் தங்கத்தின் விலை என்னவாக உள்ளதோ அதில் இருந்து 70 சதவீதம் தொகை பணமாக வழங்கப்படும். உதாரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்றால் ரூ.70,000 வரை கடன் கிடைக்கும். கடனை வாங்கியவர்கள், கடனை திருப்பி செலுத்தவில்லை என்றாலும் அதனை விற்று வங்கிகள் பணமாக மாற்றிக்கொள்ளும். இதன் காரணமாக வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு நகை கடன் வழங்குகின்றன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-increased-in-chennai-on-may-01-2026-75440.html">வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. ரூ.3,237-க்கு விற்பனை!</a>
<h3>தனிநபர் கடன்</h3>
தங்க நகை கடனை போல எந்த வித அடமானமும் இல்லாமல் வழங்கப்படும் கடன் தான் தனிநபர் கடன். இந்த கடன் ஒருவரின் மாத ஊதியம், கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றை மையமாக கொண்டு வழங்கப்படுகிறது. தங்க நகை கடனை போல அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படுவதன் காரணமாக இந்த கடனுக்கு வட்டி அதிகமாக விதிக்கப்படும்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/business/epfo-new-aadhaar-portal-to-access-inactive-pf-accounts-easily-75384.html"> பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம் – எப்படி பயன்படுத்துவது</a>
<h3>எந்த கடனுக்கு வட்டி அதிகம்?</h3>
தங்க கடன் அடமானம்  வைத்து வழங்கப்படுவதால் அதற்கு வட்டி அதிகம். சராசரியாக 8 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் அடமானம் இல்லாமல் வழங்கப்படுவதன் காரணமாக அதற்கு அதிக வட்டி விதிக்கப்படும். சராசரியாக 10 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-increased-in-chennai-on-may-02-2026-75679.html</link>	
		<pubDate>Sat, 02 May 2026 10:16:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-increased-in-chennai-on-may-02-2026-75679.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-price-16.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம்!" /></figure><strong>சென்னை, மே 02 :</strong> மேற்கு ஆசியா போர்<strong> (West Asia War)</strong> எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை<strong> (Gold and Silver Price)</strong> தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்</h3>
பங்குச்சந்தை, புவிசார் பதற்றம் ஆகியவை தங்கத்தின் விலை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாக உள்ளன. அந்த வகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் புவிசார் பதற்றம் நிலவி வருகிறது. இது தங்கத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-increased-in-chennai-on-may-01-2026-75440.html">வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. ரூ.3,237-க்கு விற்பனை!</a>
<h3>இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/epfo-new-aadhaar-portal-to-access-inactive-pf-accounts-easily-75384.html">பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம் – எப்படி பயன்படுத்துவது</a>
<h3>தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா?</h3>
தங்கம் என்பது சிறந்த லாபத்தை வழங்க கூடிய முதலீடாக உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். குறிப்பாக நீண்ட காலத்தை கணக்கில் கொண்டு முதலீடு செய்யும் நபர்களுக்கு தங்கம் சிறந்த லாபத்தை கொடுக்கும். குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த லாபம் கிடைக்காது. எனவே நீண்ட காலத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்பவர்கள் சிறந்த லாபத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ.7,500 ஆக உயரும் வாய்ப்பு? யாருக்கு நன்மை?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/epfo-minimum-pension-may-rise-to-7500-good-news-for-eps-95-pensioners-75595.html</link>	
		<pubDate>Fri, 01 May 2026 21:08:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/epfo-minimum-pension-may-rise-to-7500-good-news-for-eps-95-pensioners-75595.html</guid>
		            
			

    	<description><![CDATA[EPFO Big Update : ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் பணியாளர் ஓய்வூதிய திட்டம் - 95 ன் படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயரத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/epfo-eps-scheme.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ.7,500 ஆக உயரும் வாய்ப்பு? யாருக்கு நன்மை?" /></figure>இந்தியாவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், <a href="https://www.tv9tamilnews.com/business/epfo-new-aadhaar-portal-to-access-inactive-pf-accounts-easily-75384.html" target="_blank" rel="noopener">பிஎஃப்</a> திட்டத்தில் உள்ளவர்களுக்கும் மிக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி தற்போது மாதம் ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் பணியாளர் ஓய்வூதிய திட்டம் - 95ன் படி குறைந்தபட்ச <a href="https://www.tv9tamilnews.com/business/how-to-invest-in-fixed-deposit-schemes-in-a-correct-way-photo-gallery-74737.html" target="_blank" rel="noopener">ஓய்வூதியம்</a> ரூ.7,500 ஆக உயரத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது பல ஆண்டுகளாக இந்திய அளவில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த கோரிக்கையை முன் வைத்து வந்தனர். இன்றை காலகட்டத்தில் வாழ்வாதார செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் ரூ.1,000 ஓய்வூதியம் போதுமானதாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனற்.

பணியாளர் ஓய்வூதிய திட்டம் - 95ன் படி வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/epfo-new-aadhaar-portal-to-access-inactive-pf-accounts-easily-75384.html">பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம் – எப்படி பயன்படுத்துவது</a></strong>
<h3>இந்த திட்டத்தினால் யாருக்கு நன்மை?</h3>
இந்த மாற்றம் அமலுக்கு வரும் பட்சத்தில் பணியாளர் ஓய்வூதிய திட்டம் - 95ன் படி ஓய்வூதியம் பெறும் பயனர்களுக்கு நேரடி நன்மை கிடைக்கும். குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட ஓய்வூதியதாரர்களுக்கு தினசரி செலவுகள், மருத்துவ செலவுகள் மற்றும் பணவீக்கத்தை குறைக்க இது நேரடியாக உதவும் என கூறப்படுகிறது. இதுவரை ரூ.1000 வரை பெற்று வந்தவர்களுக்கு ரூ.7500 பெரிய அளவில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில் மேலும் இபிஎஃப்ஓ அமைப்பு பல புதிய மாற்றங்களையும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அந்த வகையில் பிஎஃப் சேமிப்புக்கு 8.25 சதவிகிதம் வட்டி வழங்கும் திட்டமும், பணம் பெறும் நடைமுறை மிக எளிதாக மாறும் முறையில் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இபிஎஃப்ஓ செயல்பாடுகள் முன்பை விட மிக எளிதாக மாறி வருகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/will-kalaignar-magaliri-urimai-thogai-money-credited-for-may-2026-75061.html">மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா?.. இத தெரிஞ்சுக்கோங்க!</a></strong>

இப்போது இந்த ஓய்வூதிய உயர்வு குறித்து இறுதி முடிவு எப்போது வெளியாகும் என்பது குறித்து அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரிய நிதி நிவாரணமாக இருக்கும்.

தற்போது இபிஎஃப்ஓ முழுமையாக டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. அதன் படி பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகள் முன்பைக் காட்டிலும் மிக எளிதாக மாறி வருகிறது. ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் முறைகள் விரைவில் அமலுக்கு வரவிருக்கின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வணிக சிலிண்டர் விலை உயர்வு &#8211; சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/commercial-lpg-price-hike-shocks-food-street-vendors-75529.html</link>	
		<pubDate>Fri, 01 May 2026 15:51:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/commercial-lpg-price-hike-shocks-food-street-vendors-75529.html</guid>
		            
			

    	<description><![CDATA[மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக மே 1, 2026 அன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் சாலையோர உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/lpg-gas.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வணிக சிலிண்டர் விலை உயர்வு &#8211; சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?" /></figure>மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான<a href="https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-increased-in-chennai-on-may-01-2026-75440.html" target="_blank" rel="noopener"> கேஸ் சிலிண்டர்</a> விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மே 1, 2026 அன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 விலை உயர்வை சந்தித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/in-a-major-development-chennai-metro-rail-has-announced-only-singara-chennai-card-will-be-valid-from-1st-may-75334.html" target="_blank" rel="noopener">சென்னையில்</a> 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ. 2, 246க்கு விற்கப்பட்ட நிலையில், மே 1, 2026 இன்று மேலும் ரூ. 933 உயர்த்தப்பட்டு ரூ.3,237க்கு விற்பனை செய்யப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது.
<h3>சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?</h3>
இது பெரிய ரெஸ்டாரண்ட்கள் முதல் சிறு குறு மற்றும் சாலையோர உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாலையோர உணவகங்கள் இந்த திடீர் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் தங்கி படிக்கும் மற்றும் வேலைபார்க்கும் இளைஞர்கள் பலரும் சாலையோர உணவகங்களை நம்பியே இருக்கின்றனர். தற்போது கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவுகளின் விலையும் உயரும் சூழல் இருப்பதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/new-gas-cylinder-connection-stopped-due-to-increasing-frauds-on-gas-cylinder-booking-74861.html">புதிய கேஸ் இணைப்பு வழங்குவது நிறுத்தம்.. பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்!</a></strong>

தமிழ்நாட்டில் இதுவரை உணவகங்களில் விலையேற்றம் செய்யப்படவில்லை என்றாலும் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் விலைகள் ஏற்றப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணி புரியும் ஐடி ஊழியர்கள் மாணவர்கள், தினக் கூலி பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே வணிக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் பல உணவகங்கள் பிளாக் மார்க்கெட்டில் சிலிண்டர்களை 2 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/is-important-changes-implemented-from-may-2026-for-gas-cylinder-booking-74550.html">கேஸ் சிலிண்டர் முன்பதிவில் அமலுக்கு வரும் மாற்றம்?.. வெளியான முக்கிய தகவல்!</a></strong>

இதனால் உணவுகளின் விலையும் கடந்த மார்ச் மாதத்தில் கடுமையாக அதிகரரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் விலை உயர்த்த வேண்டிய சூழலுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து சிலர் ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ள வேளையில், கடைகளை மூட வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளை நம்பியுள்ள மக்களின் எதிர்காலமும் பாதிக்கப்படா வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஷாக்.. ரூ.3,200ஐ தாண்டிய சிலிண்டர் விலை.. ஹோட்டல்கள் என்னாகும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-increased-to-3237-what-will-happen-to-hotels-75464.html</link>	
		<pubDate>Fri, 01 May 2026 11:50:30 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-increased-to-3237-what-will-happen-to-hotels-75464.html</guid>
		            
			

    	<description><![CDATA[Commercial Gas Cylinder Price Increased | மேற்கு ஆசியா போர் காரணமாக கேஸ் சிலிண்டர் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.933 உயர்வை சந்தித்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/hotels.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஷாக்.. ரூ.3,200ஐ தாண்டிய சிலிண்டர் விலை.. ஹோட்டல்கள் என்னாகும்?" /></figure><strong>சென்னை, மெ 01 :</strong> மேற்கு ஆசியா போர் <strong>(West Asia War)</strong> காரணமாக இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் <strong>(LPG Gas Cylinder)</strong> விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் <strong>(Commercial Gas Cylinder Price)</strong> ரூ.933 உயர்வை சந்தித்து ஒரு சிலிண்டர் ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வை சந்தித்துள்ள நிலையில், அது உணவகங்களை எவ்வாறு பாதிக்கும், அதன் மூலம்  பொதுமக்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள உள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் அதிரடி விலை உயர்வு</h3>
மேற்கு ஆசியா போர் காரணமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக உலக நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் விளைவாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் முன்பதிவு காலம் அதிகரிப்பு, கேஸ் சிலிண்டர்களை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-repay-30-years-home-loan-in-just-17-years-photo-gallery-74961.html">30 ஆண்டுகள் கடனை வெறும் 17 ஆண்டுகளில் அடைக்கலாம்.. எப்படி?</a>

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் இன்னும் முடிவடையாமல் உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான சிக்கல்கள் முழுவதுமாக சீரடையாமல் உள்ளது. இந்த நிலையில் தான் மத்திய அரசு வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.2,246-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.933 விலை உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
<h3>உணவகங்களின் நிலை என்ன?</h3>
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், உணவகங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஏற்கனவே கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் உணவு பட்டியல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில உணவகங்களின் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மேலும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிணடர் விலை உயர்ந்துள்ளது சிறிய உணவங்கங்கள் மூடப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, உணவகங்கள் உணவுகளின் விலையை உயர்த்தும் சூழலும் உருவாகியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gold Price : தங்கம், வெள்ளி அதிரடி விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-reduced-in-chennai-on-may-01-2026-75459.html</link>	
		<pubDate>Fri, 01 May 2026 10:10:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/gold-and-silver-price-reduced-in-chennai-on-may-01-2026-75459.html</guid>
		            
			

    	<description><![CDATA[Gold and Silver Price In Chennai | சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.50 மற்றும் வெள்ளி கிராமுக்கு ரூ.5 விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gold-price-15.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gold Price : தங்கம், வெள்ளி அதிரடி விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?" /></figure><strong>சென்னை, மே 01 :</strong> மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை <strong>(Gold and Silver Price)</strong> நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>தங்கம், வெள்ளி மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஈரான் போர்</h3>
ஈரான் போர் தொடங்கியது முதலே தங்கம் நிலையற்ற தன்மையில் இருந்து வருகிறது. அதாவது, பெரிய அளவு உயர்வையும் சந்திக்காமல், சரிவையும் சந்திக்காமல் இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக அளவில் ஏற்பட்டுள்ள பெட்ரோ, டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதன் காரணமாக தங்கம், சமீப காலமாக சிறிய அளவிலான விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/you-can-repay-30-years-home-loan-in-just-17-years-photo-gallery-74961.html">30 ஆண்டுகள் கடனை வெறும் 17 ஆண்டுகளில் அடைக்கலாம்.. எப்படி?</a>
<h3>இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்</h3>
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,050-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/will-kalaignar-magaliri-urimai-thogai-money-credited-for-may-2026-75061.html">மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா?.. இத தெரிஞ்சுக்கோங்க!</a>

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. ரூ.3,237-க்கு விற்பனை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-increased-in-chennai-on-may-01-2026-75440.html</link>	
		<pubDate>Fri, 01 May 2026 07:14:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/commercial-gas-cylinder-price-increased-in-chennai-on-may-01-2026-75440.html</guid>
		            
			

    	<description><![CDATA[Commercial Gas Cylinder Price Increased | சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் தற்போதுள்ள வீட்டு உபயோக மற்றும் வணிக கேஸ் சிலிண்டர்களுக்கான விலை நிலவரம் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/gas-cylinder-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. ரூ.3,237-க்கு விற்பனை!" /></figure><strong>சென்னை, மே 01 :</strong> ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வவகையில் மே 01, 2026 ஆன இன்று சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் <strong>(Commercial Gas Cylinder Price)</strong> விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மேற்கு ஆசிய போர் காரணமாக கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு</h3>
மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கேஸ் சிலிண்டர்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 விலை உயர்வை சந்தித்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/will-kalaignar-magaliri-urimai-thogai-money-credited-for-may-2026-75061.html">மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா?.. இத தெரிஞ்சுக்கோங்க!</a>
<h3>ரூ.933 உயர்வை சந்தித்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்</h3>
முன்னதாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.2,246-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.933 உயர்வை சந்தித்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.3,071-க்கும், கொல்கத்தாவில் ரூ.3,202-க்கும், மும்பையில் ரூ.3,024-க்கும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.
<h3>கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?</h3>
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதன் காரணமாக உலக நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த வகையில், இந்தியாவின் எண்ணெய் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிக்கொண்ட நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/waiting-reduced-to-5-days-for-lpg-gas-cylinders-says-coordinator-of-oil-companies-75031.html">கேஸ் சிலிண்டர் காத்திருப்பு காலம் 5 நாட்களுக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது.. முக்கிய அதிகாரி தகவல்!</a>

தற்போது வரை ஹோர்முஸ் நீரிணை சிக்கல் முடிவுக்கு வராத நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம் &#8211; எப்படி பயன்படுத்துவது</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/epfo-new-aadhaar-portal-to-access-inactive-pf-accounts-easily-75384.html</link>	
		<pubDate>Thu, 30 Apr 2026 20:12:24 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/epfo-new-aadhaar-portal-to-access-inactive-pf-accounts-easily-75384.html</guid>
		            
			

    	<description><![CDATA[EPFO New Aadhaar Portal : பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிஎஃப் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த ஒரு புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.இந்த புதிய தளத்திற்கு இ பிராப்தி (E PRAAPTI) என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆதார் அடிப்படையில் செயல்படும் ஒரு இணையதளமாகும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/e-praapti.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம் &#8211; எப்படி பயன்படுத்துவது" /></figure>இந்தியாவில் பணியாளர்களின் ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றை நிர்வகிக்கும்<a href="https://www.tv9tamilnews.com/business/employee-withdraw-5-lakh-rupees-in-epfo-before-5-years-got-1-5-lakh-tax-74413.html"> பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அமைப்பு</a>, இனி பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிஎஃப் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த ஒரு புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.இந்த புதிய தளத்திற்கு இ பிராப்தி (E PRAAPTI) என பெயரிடப்பட்டுள்ளது. இது <a href="https://www.tv9tamilnews.com/business/is-aadhaar-card-valid-as-proof-for-date-of-birth-what-uidai-says-74832.html" target="_blank" rel="noopener">ஆதார்</a> அடிப்படையில் செயல்படும் ஒரு இணையதளமாகும். இந்தியாவில் கோடிக்கணக்கான பணியாளர்களின் ஒய்வூதியம் மற்றும் பிஎஃப் கணக்குகளை இபிஎஃப்ஓ பராமரித்து வருகிறது. இது பணியாளர்களுக்கு பாதுகாப்பான நிதி ஆதாயத்தை வழங்குகிறது.
<h3>பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம்</h3>
அவசர காலங்களில் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்து பயன்படுத்திக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது. மேலும் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது குறிப்பிட்ட தொகை நமக்கு கிடைக்கும். இது நம் எதிர்காலத்திற்கு உதவும். இந்த நிலையில் நம் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்கு மாறும்போது, புதிதாக கணக்கு தொடங்கப்படுகிறது. பல பணியாளர்கள் தங்கள் பழைய பிஎஃப் கணக்குகளை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் அவர்கள் செலுத்திய ஓய்வூதிய தொகை அப்படியே உரிமை கோரப்படாமல் இருக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/may-2026-bank-holidays-banks-to-stay-closed-for-12-days-across-india-75019.html">வாடிக்கையாளர்கள் கவனத்துக்க… மே மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை</a></strong>

இந்த நிலையில் இபிஎஃப்ஓ புதிய இ பிராப்தி என பெயரிடப்பட்டுள்ள புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் ஆதார் அடிப்படையில் செயல்படும் ஒரு ஆன்லைன் பிளாட்ஃபார்ம் ஆகும். இந்த தளத்தின் மூலம் செயல்படாத பிஎஃப் கணக்குகளை தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அவற்றை தேவைப்பட்டால் நாம் மீண்டும் ஆக்டிவ் செய்ய முடியும். இதற்காக உங்கள் எச்ஆர் உதவி இல்லாமல் மற்றும் பிஎஃப் அலுவலகங்களுக்கு செல்லாமல் நீங்களாகவே செய்து கொள்ல முடியம்.

பலருக்கும் பயன்படுத்தப்படாத பிஎஃப் கணக்குகள் இருக்கும். வேலை மாறிய பிறகு அது பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கும். இதுபோன்ற கணக்குகளை ஆதார் மூலம் மீண்டும் ஆக்டிவ் செய்ய முடியும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/aadhaar-card-will-not-have-these-details-anymore-new-card-will-be-introduced-within-2026-75010.html">இனி ஆதாரில் இந்த விவரங்கள் இருக்காது.. புதிய தோற்றம்.. வெளியான முக்கிய தகவல்!</a></strong>

இந்த புதிய சிஎஸ்டம் மூலம் பயனர்களே தங்கள் பிஎஃப் கணக்கை நிர்வகிக்க முடியும். யுஏன் இணைக்கவும் முடியும். இதனால் பிஎஃப் அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. இபிஎஃஃப்ஓ அமைப்பு தற்போது டிஜிட்டலாக மாறி வருகிறது. இந்த 2026 ஆம் ஆண்டு மட்டும் இதுவரை 8.31 கோடி அளவுக்கு டிஜிட்டல் வழியாக பணம் எடுத்துள்ளனர். நாம் இப்போது பணம் எடுக்க கோரினால் 3 நாட்களில் நமக்கு பணம் வந்து விடும் அளவுக்கு விதி முறைகள் மாற்றப்பட்டுள்ளது. இது இபிஎஃப்ஓ 3.0 முறையில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்த மேலும் 3 நாட்கள் அவகாசம் &#8211; ஆர்பிஐயின் புதிய விதி &#8211; யாருக்கு நன்மை?</title>
		<link>https://www.tv9tamilnews.com/business/rbi-introduces-three-day-credit-card-payment-buffer-what-it-means-for-your-late-fees-and-credit-score-75325.html</link>	
		<pubDate>Thu, 30 Apr 2026 15:02:45 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[வணிகம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/business/rbi-introduces-three-day-credit-card-payment-buffer-what-it-means-for-your-late-fees-and-credit-score-75325.html</guid>
		            
			

    	<description><![CDATA[Credit Card Rule Change : இந்திய ரிசர்வ் வங்கிகளின் புதிய விதிகளின் படி,  கிரெடிட் கார்டு கட்டணத்தை பணம் செலுத்த தவறினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படாது. மேலும் 3 நாட்களுக்கு பிறகு மட்டுமே நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/04/credit-card-rule-change.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்த மேலும் 3 நாட்கள் அவகாசம் &#8211; ஆர்பிஐயின் புதிய விதி &#8211; யாருக்கு நன்மை?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/business/reserve-bank-of-india-cancelled-paytm-payments-bank-licence-74120.html" target="_blank" rel="noopener">இந்திய ரிசர்வ் வங்கி</a> கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய தளர்வை அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி , வாடிக்கையாளர்கள் <a href="https://www.tv9tamilnews.com/business/why-rs-1-is-deducted-when-you-add-a-new-card-online-73339.html" target="_blank" rel="noopener">கிரெடிட் கார்டு</a> கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த தவறினால், அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்காமல், 3 நாட்கள் வரை ஒரு கால அவகாசம் வழங்கும் வகையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழிகாட்டுதல்கள் 2026 என்ற புதிய வழிகாட்டுதல்களின் படி வாடிக்கையாளர்களுக்கு தளர்வை வழங்குகிறது. இது மாத சம்பளம் வாங்குபவர்கள், அவர்கள் அலுவலகத்தில் சம்பளம் வழங்க தாமதப்படுத்தினால் அவர்களால் உரிய நேரத்தில் கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்த முடியாமல் போகலாம். இந்த நிலையில் இந்த புதிய திருத்தம் அவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.
<h3>புதிய விதிகள் சொல்வது என்ன?</h3>
புதிய விதிகளின் படி, கிரெடிட் கார்டு கட்டத்தை சரியான நேரத்தில் செலுத்த தவறினால், அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படாது. அவருக்கு 3 நாட்கள் அவகாசம் வழஹ்கப்படும். 3 நாட்களுக்கு பிறகும் அவர் செலுத்த தவறினால் மட்டுமே, அவர் பணம் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி, 3 நாட்களுக்கு பிறகு அபராதம் விதிக்க தொடங்கப்படும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/why-rs-1-is-deducted-when-you-add-a-new-card-online-73339.html">ஆன்லைன் பரிவர்த்தனையின்போது ரூ.1 எடுக்கப்படுவது ஏன்? பாதுகாப்பானதா?</a></strong>

அதாவது நாம் கிரெடிட் கார்டு கட்டணத்தை பணம் செலுத்த தவறினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படாது. மேலும் 3 நாட்களுக்கு பிறகு மட்டுமே நடைமுறைக்கு வரும். மேலும் முன்பு அபராத கணக்கீட்டிலும் முக்கிய மாற்றம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. முன்பு முழு பில் தொகையில் பில் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது பணம் செலுத்த வேண்டிய நாட்களுக்கு பிறகு அவர் செலுத்த வேண்டிய தொகைக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது. இது நியாயமான மற்றும் சமமான கட்டண முறையை உருவாக்கும்.

ஆனாலும் இதில் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, பணம் செலுத்த வேண்டிய நாள் முதல் தாமதம் கணக்கில் கொள்ளப்படும். அதாவது கட்டணம் செலுத்த வேண்டிய நாளுக்கு பிறகு 3 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படாது. ஆனால் 3 நாட்களுக்கு பிறகும் தாமதப்படுத்தினால், அந்த 3 நாட்கள் கால அவகாசத்திற்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-the-meaning-of-black-lines-in-indian-rupee-notes-photo-gallery-74470.html">இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கோடுகளுக்கு அர்த்தம் என்ன?</a></strong>

வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டண முறையை உருவாக்கவும், வங்கிகளில் பின்பற்றும் விதிகளில் ஒற்றுமையை உருவாக்கவும் இந்த விதி அமல்படுத்தப்படுகிறது. இந்த புதிய விதி வருகிற ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரவிருக்கிறது. அதற்குள் வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு ஏற்ப விதிகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>