AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயில் நிலையங்களில் இலவச காத்திருப்பு அறைகள் – எவ்வளவு நேரம் தங்கலாம்?

Railway Waiting Rooms: ரயில்வே பயணிகளுக்கு இலவச காத்திருப்பு அறைகள் உட்பட பல்வேறு வசதிகளை வழங்குகிறது. உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கிய ரயில் நிலையங்களில் இந்த அறைகள் உள்ளன; அவற்றின் விவரங்களைப் பார்ப்போம்.

ரயில் நிலையங்களில் இலவச காத்திருப்பு அறைகள் – எவ்வளவு நேரம் தங்கலாம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Jun 2026 19:54 PM IST

நாடு முழுவதும் உள்ள பயணிகளுக்கு ரயில்வே பல வசதிகளை வழங்குகிறது. ரயில் பயணங்களில் பெரும்பாலும் தாமதங்கள் ஏற்படலாம். இதனால் நீண்ட நேரம் நடைமேடையில் நிற்பது சிரமமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இத்தகைய சூழல் மிகுந்த சிரமத்தை அளிக்கும். இதைச் சமாளிக்க, பயணிகளின் வசதிக்காகப் பல ரயில் நிலையங்களில் காத்திருப்பு அறைகளை ரயில்வே அமைத்துள்ளது.

மக்கள் தங்கள் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC டிக்கெட் இருந்தால், ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையைப் பயன்படுத்தலாம். ரயில் வரும் வரை ஓய்வெடுக்க இந்த அறைகள் பாதுகாப்பான சூழலை வழங்குகின்றன.

இதையும் படிக்க : கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா?.. இந்த 60/30/10 ஃபார்முலாவை ட்ரை பண்ணுங்க!

காத்திருப்பு அறைக்குள் எவ்வளவு நேரத்திற்கு முன்பாக நுழையலாம்?

ரயில்வே விதிமுறைகளின்படி, உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் தங்கள் ரயில் புறப்படும் நேரத்திற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே காத்திருப்பு அறைக்குள் நுழையலாம். சில முக்கிய ரயில் நிலையங்களில், நான்கு மணி நேரத்திற்கு முன்பே உள்ளே நுழைய அனுமதி உண்டு. ரயில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ வந்தால், பல நிலையங்களில் பயணிகள் இரவு முழுவதும் காத்திருப்பு அறையில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

பயணம் முடிந்த பிறகும் தங்க முடியுமா?

ரயிலிலிருந்து இறங்கிய பிறகும் நீங்கள் காத்திருப்பு அறையைப் பயன்படுத்தலாம். பயணிகள் தங்கள் சேருமிடத்தை அடைந்த பிறகு சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருப்பு அறையில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் ஓய்வெடுக்கலாம். நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன் சிறிது நேரம் தேவைப்படுபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புப் பயணிகளுக்கும் சிறப்பு வசதிகள் உள்ளன.

இதையும் படிக்க : யுஏன் ஆக்டிவேட் செய்ய UMANG செயலி மூலம் Face Authentication செய்ய வேண்டும்.. புதிய விதி!

மேலும், 3AC, 2AC அல்லது 1AC வகுப்புகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்திருப்பவர்கள் பல நிலையங்களில் உள்ள குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகளைப் பயன்படுத்தலாம். இந்த வசதிகளைப் பெற, டிக்கெட்டுடன் செல்லுபடியாகும் அடையாளச் சான்றும் தேவை. ஒரு பயணிக்கு நிலையத்தில் 12 மணிநேரம், 24 மணிநேரம் அல்லது அதற்கும் மேலாகத் தங்க வேண்டிய தேவை இருந்தால், அவர்கள் ஐஆர்சிடிசியின் ஓய்வறைகளை அல்லது தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்யலாம்.

இது பயணிகள் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலில் அவர்களுக்கு இது பெரிதும் கைகொடுக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், முதியவர்களுக்கு இந்த வசதி பெரிதும் கைகொடுக்கும்.

Follow Us