AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே என்பது இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பொது ரயில்வே சேவையாகும். இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் 115,000 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 231,000 க்கும் மேற்பட்ட மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். தினமும் 3.3 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியாவின் ரயில்வே சேவை உலகின் நான்காவது பெரியது. இந்திய ரயில்வே 1.227 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பணியமர்த்துகிறது. ரயில்வே துறை என்பது இந்திய அரசின் மத்திய ரயில்வே துறையின் ஒரு பிரிவாகும், இது இந்தியாவில் உள்ள முழு ரயில்வே வலையமைப்பையும் திட்டமிடுவதற்கு பொறுப்பாகும். ரயில்வே துறையை ரயில்வே அமைச்சரவை அமைச்சர் மேற்பார்வையிடுகிறார், ரயில்வே துறைக்கான திட்டமிடல் ரயில்வே வாரியத்தால் செய்யப்படுகிறது. தற்போது, ​​இந்தியாவின் ரயில் நெட்வொர்க் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல ஆண்டுகளாக, ரயில்வேயை தனியார்மயமாக்குவது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.

Read More

கோடை விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்: திருநெல்வேலி, தூத்துக்குடி வழித்தடங்களில் கூடுதல் சேவைகள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Summer Special Trains : பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டு வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள் சேவைகள் – எங்கு தெரியுமா? ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

New Train Services : புதிய ரயில் சேவைகள் மற்றும் கூடுதல் ரயில் நிறுத்தங்களை அதிகரிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து தான் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அறிவித்துள்ளார்.

இந்த 8 ரயில்களும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Eight trains to halt at Mambalam station: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக 8 அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தைப்பூசம் – சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?

Special Trains for Thai Poosam : தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1, 2026 அன்று தை பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் பக்தர்கள் முருகர் கோவிலுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம்

Train Service Changes : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பரமாரிப்பு பணிகள் காரணமாக அங்கிருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெறும் இந்த பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் இருக்கும் என்பதால் பயணிகள் அதற்கேற்ப பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆர்வம் காட்டாத பயணிகள்: 5 பொங்கல் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து

Special Train Canceled: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக அறிவிக்கப்பட்டிருந்த 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் ஆர்வம் காட்டாததால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

ரயில் ஒன் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% தள்ளுபடி – எப்படி பெறுவது?

Rail One App : ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை ரயில் ஒன் செயலி வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

பொங்கல் ஸ்பெஷல்! இன்றிரவு சென்னை – தென்காசிக்கு சிறப்பு ரயில் – எந்தெந்த ஸ்டேஷன்களில் நிற்கும்?

Special Train for Pongal : பொங்கலை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் சென்னை - தென்காசி இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு? எப்போது?

Pongal Special Trains Announced: பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் வழக்கத்தைக் காட்டிலும் ரயில்களில் கூட்டம் அலை மோதும் என்பதால், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

இனி 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே ராமேஸ்வரம் போகலாம் – பொங்கலுக்கு வருது வந்தே பாரத் ரயில் – எந்தெந்த ஸ்டேஷனில் நிற்கும்?

Rameswaram Vande Bharat: சென்னை மற்றும் ராமேஸ்வரம் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை வருகிற பொங்கலை முன்னிட்டு துவங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த ரயில் எந்தெந்த ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என்பது குறித்து பார்க்கலாம்.

புத்தாண்டு முதல் இந்த 22 ரயில்களின் வேகம் அதிகரிப்பு…. தெற்குவே ரயில்வே அறிவிப்பு

Train Speed Increased: வருகிற புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1, 2026 ஆம் ஆண்டு முதல் பொது மக்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 22 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 85 நிமிடங்கள் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 1 முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் அதிகரிப்பு – பயணிகள் கடும் அதிருப்தி

Vaigai Express : மதுரை - சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ரயில்களில் ஒன்று. இந்த நிலையில் இந்த ரயிலின் பயண நேரம் கூடுதலாக 25 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் நாளை இந்த புறநகர் ரயில்கள் ரத்து – எந்தெந்த வழித்தடத்தில் ரயில் இயங்காது?

Chennai Train Update : சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புற நகர் ரயில் சேவைகள் டிசம்பர் 28, 2025 நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்ற விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இனி வேளச்சேரி – தாம்பரம் 10 நிமிடங்களில் செல்லலாம்- சென்னை மெட்ரோவின் புதிய திட்டம்

Chennai Metro Expansion Plan: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழித்தடத்துடன் இணைக்கப்பட்டு, கிண்டி வழியாக தாம்பரம் முதல் வேளச்சேரி வரை சுமார் 21 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

ஊருக்கு போறீங்களா? தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களின் நேரம் மாற்றம் – எப்போ தெரியுமா?

Southern Railway: உலகின் மிக நீண்ட ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.