தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு…9000 பேர் வரை பாதிப்பு – அமைச்சர் எச்சரிக்கை
செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும் , 9000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்கி இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை, ஜூலை 22 : செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், 9000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்கி இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் ஜூலை 21, 226 வரை 9, 000 டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் தரப்பில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கொசு ஒழிப்பு பணியாளர்கள் நகர்புற மற்றும் கிராமபுறங்களில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றை அகற்றி அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொசு உற்பத்தியை தடுத்தால் டெங்கு ஒழிப்பை முழுமையாக செயல்படுத்த முடியும் என்று பேசினார்.