AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Thirumavalavan

Thirumavalavan

திருமாவளவன்
திருமாவளவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், சாதி ஒழிப்பு இயக்கத் தலைவரும் ஆவார். 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூரில் பிறந்த அவர் தற்போது சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் படிப்பிலும் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன் , “தலித்”, “நான் தூக்கிலிடப்பட வேண்டும்” போன்ற பல தமிழ்நூல்களை எழுதி, சமூக மாற்றத்துக்கு வாசகர் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளார். திருமாவளவன் மறைந்த மாவீரன் மலைச்சாமி நடத்தி வந்த தலித் பேந்தர்ஸ் என்ற அமைப்பை, அவரது மறைவுக்குப் பின் தலைமை பொறுப்பேற்று 1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாற்றினார். சமூக நீதி, சம உரிமைகள், மதசார்பற்ற அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்து செயல்பட்டு வருகிறார். 2009ல் முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2019, 2024 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இவர் தற்போது INDIA கூட்டணியில் செயற்படுகிறார். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்பான செய்திகளை நாம் காணலாம்.

 

Read More

விஜய்க்கு ஆதரவா? மு.க.ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

TVK Vijay : தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக கட்சியின் உயர்நிலை குழுவில் ஆலோசிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

“வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?”.. விஜய் நேரில் வராதது ஏன்?.. தவெகவுக்கு விசிக சரமாரி கேள்வி!!

விஜய் தனது இரண்டாம் கட்டத் தலைவர்களின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் அவரை ஒரு 'இளவரசரைப் போல' முடக்கி வைத்துத் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். திமுகவை "மன்னராட்சி" என்று விமர்சித்துவிட்டு, ஐந்து தலைமுறை வாரிசு அரசியலைச் சுமக்கும் காங்கிரஸுடன் விஜய் கைகோர்த்திருப்பது மிகப் பெரிய நகைமுரண் என்று சிந்தனைச் செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும்… தொல்.திருமாவளவன்!

VCK Leader Thol Thirumavalavan : தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்களால் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக கடிதம்.. என்ன நிலைபாட்டில் உள்ளது இடதுசாரிகள்!

Tvk Letter To Left Parties: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுதாரி கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

“தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’யையே மக்கள் விரும்புகின்றனர்”.. புயலை கிளப்பிய திருமாவளவன்!!

பாஜக போட்டியிட்ட 27 இடங்களில் 26 இடங்களில் அக்கட்சியை மக்கள் வீழ்த்தியுள்ளனர் என்றும், தாமரைச் சின்னத்தில் போட்டியிட்ட அனைவருமே தோல்வியைத் தழுவியுள்ளது மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார். மேலும், பாஜகவுடன் கைகோர்த்த காரணத்தினாலேயே அதிமுக தனது பலத்தை 47 இடங்களாக இழந்து, மக்கள் அளித்த படிப்பினையைச் சந்தித்துள்ளதாக அவர் விமர்சித்தார்.

சிலிண்டர் விலை உயர்வு.. மே 7- இல் இடதுசாரிகள் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்!

Left Parties Announce Protest : தமிழகத்தில் சிலிண்டர் விலை உயர்வு, ரயில்வே பணியிட குறைப்பு காரணமாக மத்திய அரசை கண்டித்து வருகிற மே 7- ஆம் தேதி இடது சாரி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்காக விசிக சரியாகப் பணியாற்றவில்லை.. நிர்வாகிகளை விளாசிய திருமாவளவன்..

Tamilnadu Assembly Election: திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது என்றால் அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுதியான நிலைப்பாடும் ஒரு காரணம். கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில் நாம் வேறு ஒரு முடிவை எடுத்திருந்தால் தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறியிருக்கும்.

வாய்ப்பில்லை ராஜா.. எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே பெறுவார் விஜய் – திருமாவளவன் சொன்ன கருத்து..

இந்த நிலையில், “தமிழக வெற்றி கழகம் யாருடைய வாக்குகளைப் பெறும்?” என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “திமுக மற்றும் அதிமுகக்கு எதிரான வாக்குகளை விஜய் பெறுவார். பொதுவாகவே திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மனநிலை அரசியல் களத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது உருவாகும் மாற்று சக்திகள் அந்த வாக்குகளைப் பெறுகின்றன.

மீண்டும் திமுக ஆட்சி உறுதி.. “தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் சூழல் மாறும்”.. திருமாவளவன்

Tamilnadu Assembly Election: "தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்று நான் கூறியது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் வருகையை மட்டும் குறிக்கவில்லை. குறிப்பாக, விஜய் பெறப்போகும் வாக்கு சதவீதம் மற்றும் அது யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறது என்பதைப் பொறுத்தே எதிர்கால அரசியல் நகர்வுகள் இருக்கும்" என்று அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

“அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் விஜய்”.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!!

Tamilnadu Assembly Election: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்புகிறார் என்பது அவரின் சொந்த நிலைப்பாடு. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் யாரை அமர்த்த பார்க்கிறார்?. அவரே அந்த இடத்தில் அமர விரும்புகிறார் என்றால், இந்த தேர்தலில் அது சாத்தியமா? என்பது அவருக்கே தெரியும்.

செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டர்.. கன்னத்தில் அறைந்த விசிக தலைவர் திருமாவளவன்.. அதிர்ச்சி சம்பவம்!

VCK Leader Thirumavalavan Slapped Party Member | தேனி மாவட்டத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டர் ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமாவளவனுக்கு திமுக கூட்டணி அளித்த சிறப்பான பரிசு… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Edappadi K Palaniswami: திராவிட முன்னேற்றக் கழகத்தை தாங்கி பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அந்தக் கட்சியினர் சிறப்பான பரிசை அளித்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சனம் செய்தார். சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் போட்டியிடாதது குறித்து தெரிவித்தார்.

“திருமாவளவன் துணை முதல்வர் பதவி கேட்கத் திட்டம்”.. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!!

Tamilnadu Assembly Election: புதுச்சேரியின் முதலமைச்சர் என்.ஆர். சுவாமி அவர்கள் 'வாழும் காமராஜர்' போல ஒவ்வொரு தெருவாகச் சென்று மக்களைச் சந்தித்து வருவதையும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஜய்யை விட அதிகமுறை புதுச்சேரிக்கு வந்து திட்டங்களைத் தொடங்கி வைத்திருப்பதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை..? விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்!

026 சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடும் முடிவை பின்வாங்கினார். இதுகுறித்து பேசிய அவர், “எனது சொந்தத் தொகுதியான சிதம்பரத்திற்கு உட்பட்ட காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட நான் விரும்பினேன். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, எங்கள் கூட்டணியை எதிர்ப்பவர்கள், 'எதிர்காலத்தில் ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடனேயே நான் மாநில அரசியலுக்கு வருகிறேன்' என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். ஆனால், அது எனது நோக்கம் அல்ல. நாடாளுமன்றத்தில் நான் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை; ஏனெனில், எனது சொந்தப் பிரச்சினைகளையோ அல்லது எங்கள் மக்களின் பிரச்சினைகளையோ அங்குப் பேசிக்களைய எவ்விதமான வாய்ப்பும் இல்லை. எனவே, தமிழக மக்களுக்காகவும் — குறிப்பாக, விளிம்புநிலை மக்களுக்காகவும் — சட்டமன்றத்தில் என்னால் மிகச் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆகையால், வேறு எந்த உள்நோக்கமும் இன்றி, அத்தொகுதியில் போட்டியிட நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், எனது இந்த முடிவின் மீது எழுந்த விமர்சனங்களின் காரணமாக, அத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்.” என்றார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை… தொல்.திருமாவளவன் திடீர் முடிவு.. பின் வாங்க என்ன காரணம்!

Vck Leader Thol.Thirumavalavan : தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்றும், அந்த தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோதிமணி இளையபெருமால் போட்டியிடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் .