AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Thirumavalavan

Thirumavalavan

திருமாவளவன்
திருமாவளவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், சாதி ஒழிப்பு இயக்கத் தலைவரும் ஆவார். 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூரில் பிறந்த அவர் தற்போது சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் படிப்பிலும் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன் , “தலித்”, “நான் தூக்கிலிடப்பட வேண்டும்” போன்ற பல தமிழ்நூல்களை எழுதி, சமூக மாற்றத்துக்கு வாசகர் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளார். திருமாவளவன் மறைந்த மாவீரன் மலைச்சாமி நடத்தி வந்த தலித் பேந்தர்ஸ் என்ற அமைப்பை, அவரது மறைவுக்குப் பின் தலைமை பொறுப்பேற்று 1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாற்றினார். சமூக நீதி, சம உரிமைகள், மதசார்பற்ற அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்து செயல்பட்டு வருகிறார். 2009ல் முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2019, 2024 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இவர் தற்போது INDIA கூட்டணியில் செயற்படுகிறார். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்பான செய்திகளை நாம் காணலாம்.

 

Read More

விசிக – திமுக தொகுதி பங்கீடு.. அரும்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் படிப்படியாக நிறைவு பெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் இடையே உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். 

“10+1 சீட்கள் கேட்டு விசிக பிடிவாதம்”.. இறங்கி வருமா திமுக?.. கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி..

Tamil Nadu Assembly Election: விசிகவின் வளர்ச்சி மற்றும் 44 தனித் தொகுதிகளில் அந்தக் கட்சிக்குள்ள செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, விசிகவின் எண்ணிக்கையைக் குறைப்பது சாத்தியமில்லை என்றும், திமுக 7 முதல் 8 இடங்கள் வரை ஒதுக்க முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது.

ராமதாஸ் – சசிகலா அமைக்கும் புது கூட்டணி?… தைலாபுரத்தில் நடந்த திடீர் சந்திப்பு… பின்னணி என்ன!

PMK Ramadoss Sasikala Meet: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுடன், புதிதாக கட்சி தொடங்கி சசிகலா திடீர் சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது, திமுக-அதிமுக கூட்டணி கட்சிகள் இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகள்.. கறார் காட்டும் விசிக-கம்யூனிஸ்ட் கட்சிகள்.. காரணம் என்ன!

DMK Alliance Seat Sharing: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தேமுதிகவுக்கு ஒதுக்கும் தொகுதிகளுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்றும், அதற்கு குறைவாக ஒதுக்க கூடாது என்று விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

விசிக வலிமைக்கு ஏற்ப தொகுதிகள்.. திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் வலியுறுத்தல்.. திருமாவளவன்!

DMK-VCK Seat Sharing : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வலிமை மற்றும் பங்களிப்புக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“விசிக நினைத்தால் அதிமுக அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்க முடியும்”.. திருமாவளவன் பரபர பேச்சு..

திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது என்பது பாஜக செயல்திட்டங்களில் ஒன்று. இங்கேயும் காவிக் கொடியை பறக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தில் பாஜகவால் வாலாட்ட முடிந்தது. அவர்களால் வாலாட்ட முடியாத ஓரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று அவர் கூறினார்.

ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் – திருமாவளவன்..

ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்பது அவர்களுடைய கருத்து. இது திமுக கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1998 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்த ஒரு கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். அதில் இன்றளவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால் அதை கேட்பதற்கு இது சரியான நேரம் கிடையாது என எண்ணுகிறோம்.

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்…திருமாவளவன் வீசிய குண்டு..பாமகவை குறிப்பிட்டு பேசியதென்ன!

Thol Thirumavalavan Latest Pressmeet: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த கருத்தில் ராமதாஸ் தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சியை குறிப்பிட்டு சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

“திமுக எந்த கட்சியை கூட்டணியில் சேர்த்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்”.. திருமாவளவன்

Thirumavalavan; 1965 காலகட்டத்தில் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாக்குவதை ராஜேந்திரன் போன்றவர்கள் எதிர்த்திருக்காவிட்டால், அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து ரத்தம் சிந்தி இருக்காவிட்டால், இன்று நாம் அனைவரும் இந்தி பேசும் மக்களாக மாறியிருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தீபாவளி, பொங்கல் ஆஃபர் போல்.. ஆஃபர் அறிவித்து காத்திருக்கிறார் விஜய்.. திருமாவளவன் விமர்சனம்!

விஜய் அரசியல் சக்தியாக உருவாகி இருப்பதாக காங்கிரஸை சேர்ந்த பரிவீன் சக்கரவர்த்தி சொல்வதால் திமுக கூட்டணிக்குள் எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் ஒரு கூட்டணி என்ற வடிவத்தை முழுமையாக எட்டியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் எத்தனை கட்சிகள் சேர்த்தாலும் திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

திருமாவளவன் அடிக்கடி திமுக-வுக்கு எதிராக பேச்சு.. நடப்பு அரசியலை பேசிய செங்கோட்டையன்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளின் ஒருவரான செங்கோட்டையன் கூறுகையில், ”மலேசியாவில் தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அடிக்கடி திமுக-வுக்கு எதிராகப் பேசுவது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்துகிறது, அவரது கட்சியினர் எங்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் எண்ணங்களை சீமான் பிரதிபலிக்கிறார்…தொல்.திருமாவளவன் அட்டாக்!

Seeman Reflect The Thoughts Of RSS: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர் எஸ் எஸ்- இயக்கத்தின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். மேலும், தமிழ் தேசியம் குறித்து குறிப்பிட்டார்.

பாஜகவின் முகமூடியாக செயல்படும் சீமான்-விஜய்..சனாதனத்துக்கு ஆதரவானவர்கள்…தொல்.திருமாவளவன் தாக்கு!

Seeman And Vijay Acting Puppets Of The BJP: தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முகமூடிகளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

தமிழகத்தில் வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டம்…தொல். திருமா அட்டாக்!

BJP Planning To Seize Power In Tamil Nadu: வாக்கு திருட்டு மூலம் பீகாரில் ஆட்சியை பிடித்தது போல தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சி முயன்று வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்தது பாஜகவின் சித்து விளையாட்டி – திருமாவளவன் விமர்சனம்..

Thirumavalavan: கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்: “செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர் என்றாலும், தற்போதைய நிலையில் அவரது நடவடிக்கைகள் எந்தக் கட்சிக்கும் சாதகமல்ல. தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் இணைந்தது அவருடைய தனிப்பட்ட விருப்பம்" என குறிப்பிட்டுள்ளார்,