Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Thirumavalavan

Thirumavalavan

திருமாவளவன்
திருமாவளவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், சாதி ஒழிப்பு இயக்கத் தலைவரும் ஆவார். 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூரில் பிறந்த அவர் தற்போது சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் படிப்பிலும் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன் , “தலித்”, “நான் தூக்கிலிடப்பட வேண்டும்” போன்ற பல தமிழ்நூல்களை எழுதி, சமூக மாற்றத்துக்கு வாசகர் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளார். திருமாவளவன் மறைந்த மாவீரன் மலைச்சாமி நடத்தி வந்த தலித் பேந்தர்ஸ் என்ற அமைப்பை, அவரது மறைவுக்குப் பின் தலைமை பொறுப்பேற்று 1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாற்றினார். சமூக நீதி, சம உரிமைகள், மதசார்பற்ற அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்து செயல்பட்டு வருகிறார். 2009ல் முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2019, 2024 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இவர் தற்போது INDIA கூட்டணியில் செயற்படுகிறார். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்பான செய்திகளை நாம் காணலாம்.

 

Read More

தமிழகத்தில் வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டம்…தொல். திருமா அட்டாக்!

BJP Planning To Seize Power In Tamil Nadu: வாக்கு திருட்டு மூலம் பீகாரில் ஆட்சியை பிடித்தது போல தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சி முயன்று வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்தது பாஜகவின் சித்து விளையாட்டி – திருமாவளவன் விமர்சனம்..

Thirumavalavan: கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்: “செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர் என்றாலும், தற்போதைய நிலையில் அவரது நடவடிக்கைகள் எந்தக் கட்சிக்கும் சாதகமல்ல. தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் இணைந்தது அவருடைய தனிப்பட்ட விருப்பம்" என குறிப்பிட்டுள்ளார்,

“ஆட்சியில் பங்கு வேண்டும்.. ஆனால் வேண்டாம்”… என்ன சொல்கிறது விசிக?

2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, விசிக - திமுக கூட்டணியைச் சுற்றிய அரசியல் விவாதங்கள் மீண்டும் தீவிரமாகியுள்ளன. ஆட்சிப் பங்கிற்கான விசிகவின் நீண்டநாள் கோரிக்கை குறித்து புதிய விளக்கங்கள் எழுந்துள்ள நிலையில், கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் விசிக தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்

SIR பாஜக மற்றும் RSSன் திட்டம்.. ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேச்சு!

SIRக்கு எதிராக சென்னையை அடுத்த மின்ட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “SIR வாக்காளர் பட்டியலைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இது குடியுரிமையைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாஜக மற்றும் RSSன் திட்டம். BLO-க்கள் வழங்கும் படிவங்களை நிரப்புவது எளிதல்ல. தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

தவெகவுடன் கூட்டணி… அதிமுக பரப்பும் வதந்தி.. போட்டு உடைத்த திருமாவளவன்

Thirumavalavan On AIADMK Alliance : அதிமுக தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி தான் என்றும் அப்படி கூட்டணி வைத்தால் பாஜகவை கழட்சி விட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அண்ணாமலை போன்றவர்கள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.. இது தான் நடந்தது – திருமாவளவன் விளக்கம்..

Thirumavalavan: கடந்த சில நாட்களுக்கு முன் திருமாவளவனின் கார் வழக்கறிஞர் வாகனம் மீது மோதியது தொடர்பாக பேசிய அவர், “ வண்டியில் நான் அமர்ந்திருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே வம்பு செய்ய வந்தார். கட்சியைச் சேர்ந்த ஒருவரை தள்ளிப் போகச் சொல்லி வம்பு இழுத்து பேசினார். பின்னர் விசிகவினர் அவரை ஒதுங்கச் சொல்லி ஓங்கி அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் வந்து அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுதான் நடந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? – திருமாவளவன் கேள்வி!

கரூர் சோக சம்பவத்தில் நடிகர் விஜய் மீது ஏன் வழக்குப் பதியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் விஜய்க்கும் மறைமுக தொடர்பு உள்ளதா என சந்தேகித்த அவர், விஜய் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், பாஜக அவரைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

‘சதி வலையில் சிக்கிய விஜய்’ கரூர் சம்பவம் குறித்து திருமாவளவன் விமர்சனம்!

Karur TVK Rally Stampede : கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இதில், கரூர் விவகாரத்தில் திமுகவை அவர் மறைமுகமாக குற்றச்சாட்டி இருந்தார். இதற்கு தற்போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் விஜயை விமர்சித்துள்ளார்.

விஜய் அரசியல் வருகையால் ஆட்சி மாற்றமா..? திருமாவளவன் விளக்கம்!

சென்னை விமான நிலையத்தில் இன்று அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” திமுக அரசு மீது தவெக விஜய் வைக்கும் விமர்சனங்களுக்கு திமுக உரிய நேரத்தில் பதிலளிக்கும். விஜய் அரசியல் வருகையால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடும் என்ற மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள்” என்றார்.

தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்..

VCK Leader Thirumavalavan: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்ககூடிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட சூழல் உருவாகலாம்; அதாவது வாக்கு திருட்டு முயற்சிகள் நடைபெறலாம்” என தெரிவித்துள்ளார்.

Tirunelveli Honour Killing: கவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. உதவி செய்த திருமாவளவன்..!

VCK Thirumavalavan: திருநெல்வேலியில் ஆணவக் கொலையில் பலியான கவின் செல்வகணேஷின் குடும்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். விசிக தலைவர் திருமாவளவனும் சந்திப்பில் கலந்து கொண்டார். கவின் குடும்பத்தின் பாதுகாப்பு, குற்றவாளிகளின் கைது மற்றும் அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

திமுக கூட்டணிக்குள் சிக்கி தவிக்கிறார் திருமாவளவன்.. நயினார் நாகேந்திரன் பளீச் பதில்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருமாவளவன் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், பற்றும் உள்ளது. திமுக கூட்டணிக்குள் திருமாவளவன் சிக்கி தவிக்கிறார். திமுக கூட்டணிக்குள் இருந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று திருமாவளவனின் மன வருத்தத்தின் வெளிப்பாடு இது” என்று தெரிவித்தார்.

பிறந்தநாளில் திருமாவளவன் வீட்டில் நடந்த சோகம்.. சமூக வலைதளத்தில் உருக்கம்!

VCK Leader Thol Thirumavalavan : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அவரது சிற்றன்னை மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து திருமாளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அம்மாவுக்கு எனது வீரவணக்கம் எனவும் பதிவிட்டுள்ளார். அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம் எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

திமுக கூட்டணி உடைக்க முனைப்புடன் உள்ளனர்.. இது அற்ப தனமான ஒன்று – திருமாவளவன்..

Thirumavalavan: மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு நாள் ஒன்று முதல் விசிக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்சனையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க சிலர் முனைப்புடன் செயல்பட்டு வருவது அற்ப தனமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

கூட்டணியை விட்டு வெளியேற முடியுமா? திருமாவளவனுக்கு சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!

Tamilisai Soundararajan : தூய்மை பணியாளர்கள் மீது அக்கறை இருந்தால், திமுக அரசு கருணையொடு நடந்து கொள்ளவில்லை என்றால் கூட்டணியில் வெளியேறுவோம் என்று கூற முடியும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமர் முதல்வரை விட தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளார் என தெரிவித்தார்.