AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Thirumavalavan

Thirumavalavan

திருமாவளவன்
திருமாவளவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், சாதி ஒழிப்பு இயக்கத் தலைவரும் ஆவார். 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூரில் பிறந்த அவர் தற்போது சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் படிப்பிலும் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன் , “தலித்”, “நான் தூக்கிலிடப்பட வேண்டும்” போன்ற பல தமிழ்நூல்களை எழுதி, சமூக மாற்றத்துக்கு வாசகர் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளார். திருமாவளவன் மறைந்த மாவீரன் மலைச்சாமி நடத்தி வந்த தலித் பேந்தர்ஸ் என்ற அமைப்பை, அவரது மறைவுக்குப் பின் தலைமை பொறுப்பேற்று 1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாற்றினார். சமூக நீதி, சம உரிமைகள், மதசார்பற்ற அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்து செயல்பட்டு வருகிறார். 2009ல் முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2019, 2024 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இவர் தற்போது INDIA கூட்டணியில் செயற்படுகிறார். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்பான செய்திகளை நாம் காணலாம்.

 

Read More

தொகுதி மறுசீரமைப்பு.. முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடக்கம்! திமுக- அதிமுக புறக்கணிப்பு!

Tamilnadu MPs Meeting : மக்களவை தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக எம். பி. க்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தை திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் புறக்கணித்த நிலையில், பிற கட்சிகளை சேர்ந்த 20 எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.

காவிரி விவகாரம்.. “அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடியுமா.. முடியாதா?”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

DMK Supreme Court Petition: மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடியுமா என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, சட்டமன்றத் தீர்மானத்திற்குப் பின் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளார்.

“பாஜகவின் வீழ்ச்சிக்கு Gen-Z புரட்சியே தொடக்கப்புள்ளி!”.. NTA-வை உடனடியாகக் கலைக்க திருமாவளவன் வலியுறுத்தல்!!

Thirumavalavan MP Speech in Delhi: டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய Gen-Z புரட்சியால் பாஜக அரசு பணியத் தொடங்கியுள்ளது என்றும், ஒன்றிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகப் பேசினார்.

“போலீசை மாத்தியாச்சு.. அணுகுமுறை மாறுச்சா?”.. அம்பேத்கர் சிலை சம்பவத்தை சுட்டிக்காட்டி திருமாவளவன் கொந்தளிப்பு!

திருமாவளவன் நீட் விவகாரம் காவல்துறை விமர்சனம் குறித்துப் பேசுகையில், 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளதைச் சுட்டிக்காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியதுடன், தமிழக காவல்துறையின் செயல்பாட்டையும் காரசாரமாக விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்தக் கொள்கை மற்றும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வந்தால் மட்டுமே அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறை.. வரும் 27ஆம் தேதி விசிக தரப்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..

வரும் 27ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புதுடெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் CJPக்கு ஆதரவாக போராட்ட களத்தில் திருமாவளவன்.. காயமடைந்த மாணவர்களுக்கு ஆறுதல்!!

Thirumavalavan Delhi CJP protest: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி காயமடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

முரண்படும் விசிக தலைவர்கள்.. ஆதிதிராவிடர் துறை பெயர் மாற்றத்தை எதிர்க்கும் திருமாவளவன்.. ஆதரிக்கும் அமைச்சர் வன்னி அரசு! பின்னணி என்ன?

Adi Dravidar welfare department renamed: ஆதிதிராவிடர் நலத்துறையை 'சமூக நீதித்துறை' என்று பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ள நிலையில், இத்துறை அமைச்சர் இது ஒரு தொலைநோக்குப் பார்வை என ஆதரித்துப் பேசியுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அன்புமணி உள்ளே, திருமா வெளியே?”.. எங்களை தனிமைப்படுத்த பார்க்கிறார்கள்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!!

"எனக்கு எம்.எல்.ஏ ஆகி சட்டமன்றத்திற்குப் போய் 5 ஆண்டுகள் மக்களுக்காகப் பேச வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருந்தது. அதற்காகக் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட என் பெயரை நானே அறிவித்தேன். ஆனால், கூட்டணித் தலைவர் (திமுக) என்னை வற்புறுத்தவில்லை; 'நீங்க ஒரு கட்சித் தலைவர், உங்களுக்கே தெரியும், ரீகன்சிடர் (மறுபரிசீலனை) பண்ணுங்க' என்று ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார்.

“ஒரே அணியில் திமுக – தவெக”..? திருமாவளவன் வகுத்த வியூகம்.. மாணிக்கம் தாகூர் கொடுத்த புதிய விளக்கம்!!

இதற்கிடையே, "பாஜகவை எதிர்க்க திமுக - தவெக ஒரே அணியில் இணைய வேண்டும்" என்ற விசிக தலைவர் திருமாவளவனின் கருத்து குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இது கேரளா மாடலை முன்வைத்த ஒரு தொலைநோக்கு அரசியல் பார்வை என்று விளக்கம் அளித்துள்ளார்.

அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!

பள்ளிச் சான்றிதழ் கணக்குப்படி தனக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருடனான சுவாரசிய உரையாடலை விசிக தலைவர் திருமாவளவன் பகிர்ந்துள்ளார். மேலும், கொள்கை வேறு, தனிநபர் நட்பு வேறு என்றும் திமுக கூட்டணி தொடர்வதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உரசும் விசிக.. நெருங்கும் பாமக.. தவெக கூட்டணியின் அதிரடி நகர்வுகள்.. அடுத்தடுத்த ட்விஸ்ட்!!

தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகள் தற்பொழுது அரங்கேறி வருகின்றன. பாமக தவெக-வை நோக்கித் தனது அரசியல் காய்களை நகர்த்தி வரும் சூழலில், திமுக மற்றும் தவெக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே விசிக எடுத்துள்ள நிலைப்பாடு கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதன் முழுப் பின்னணி இந்தத் தொகுப்பில்

தவெக கூட்டணியில் குழப்பம்?.. “வார்த்தைகளில் விளையாட வேண்டாம்!”.. திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!!

கூட்டணி மற்றும் ஆட்சி ஆதரவு விவகாரங்களில் வார்த்தைகளை வைத்து விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். அரசியல் நிலைப்பாடு என்பது மிகத் தெளிவானது என்று சுட்டிக்காட்டிய அவர், ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக்கட்சியின் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாகச் சட்டப்பேரவையில் வாக்களித்துவிட்டாலே, அங்கு தோழமை நிலை உருவாகிவிடுகிறது என்றார்.

“திமுகவுடன் நட்பு தொடர்கிறது.. ஆனால்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!!

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது குறித்துப் பேசிய அவர், தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில், கூட்டணி தொடர்பான எந்தவொரு இறுதி முடிவும் ஏற்படவில்லை" என்று கூறினார். மேலும், தவெக தலைமையில் இன்னும் முறையான கூட்டணி எதுவும் அதிகாரப்பூர்வமாக அமையவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தவெகவின் ‘குதிரை பேரம்’ உண்மையாக இருந்தால் ஆளுநர் நடவடிக்கை எடுக்கட்டும்”.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!!

தொடர்ந்து பேசிய அவர், "சம்பந்தப்பட்ட அதிமுக, திமுக அல்லது தவெக ஆகிய கட்சிகளின் தலைமைகளிடம் எந்த கேள்வியும் எழுப்பாமல், இடையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களிடம் கேள்வி எழுப்புவதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் கேட்க தைரியமில்லாமல், எங்களிடம் கேட்டுவிட்டு, பின்னர் 'திருமாவளவன் மழுப்புகிறார்' என்று செய்தி போடுவது அர்த்தமில்லாதது என்றார்.

திருமாவளவனை துணை முதலமைச்சராக்க வேண்டும்.. விசிக கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!

VCK Meeting Special Resolution | விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனை துணை முதலமைச்சராக்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.