AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Thirumavalavan

Thirumavalavan

திருமாவளவன்
திருமாவளவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், சாதி ஒழிப்பு இயக்கத் தலைவரும் ஆவார். 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூரில் பிறந்த அவர் தற்போது சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் படிப்பிலும் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன் , “தலித்”, “நான் தூக்கிலிடப்பட வேண்டும்” போன்ற பல தமிழ்நூல்களை எழுதி, சமூக மாற்றத்துக்கு வாசகர் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளார். திருமாவளவன் மறைந்த மாவீரன் மலைச்சாமி நடத்தி வந்த தலித் பேந்தர்ஸ் என்ற அமைப்பை, அவரது மறைவுக்குப் பின் தலைமை பொறுப்பேற்று 1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாற்றினார். சமூக நீதி, சம உரிமைகள், மதசார்பற்ற அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்து செயல்பட்டு வருகிறார். 2009ல் முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2019, 2024 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இவர் தற்போது INDIA கூட்டணியில் செயற்படுகிறார். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்பான செய்திகளை நாம் காணலாம்.

 

Read More

“தமிழக அரசியலின் மைய சக்தி ‘விசிக’ மட்டுமே!”.. தவெகவுடன் கூட்டணி? திருமாவளவன் கொடுத்த விளக்கம்!!

விசிக-வை நோக்கி இத்தகைய விமர்சனங்கள் குறிவைக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல் சதியை திருமாவளவன் அம்பலப்படுத்தினார். "தமிழகத்தில் எத்தகைய புதிய அரசியல் சக்திகள் உருவெடுத்தாலும், எப்படிப்பட்ட அரசியல் சூழல் மாறினாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான் எப்போதும் அரசியலின் மையப்புள்ளியாக இருக்கிறது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

“விசிக எந்த நேரத்திலும் அமைச்சரவையிலிருந்து வெளியே வரலாம்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!

அமைச்சரவையில் நீடிப்பது தற்காலிகமானது என்பதை உணர்த்தும் வகையில் பேசிய திருமாவளவன், "எந்த நேரத்திலும் எங்களால் அமைச்சரவையில் இருந்து வெளியே வர முடியும். வர முடியாது என்று சட்டம் ஏதும் இல்லை. அப்படி டிட்டாச்சடாக இருந்து அரசியல் செய்யும் ஆற்றல் விசிக-விற்கு இருக்கிறது" என்றார்.

காங்கிரஸ் அணுகுமுறையால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி… இண்டி கூட்டணி கூட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு!

Vck Leader Thol.Thirumavalavan: காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையால் கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டை முன் வைத்தார். டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கருத்தை முன் வைத்திருந்தார்.

விசிக கேட்கும் அந்த தொகுதி.. தவெகவிடம் டீல் பேசும் திருமாவளவன்.. ரகசிய மூவ் என்ன?

VKC leader Thol Thirumavalavan: தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் இருந்து ஒரு தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யுமாறு அந்தக் கட்சியின் தலைமை வலியுறுத்தி வருகிறது. இதற்கு, தவெக தலைமை சம்மதம் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா? அவரே அளித்த பரபரப்பு விளக்கம்

Vck Leader Thol Thirumavalavan: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப்போவதாக எழுந்த பல்வேறு கருத்துக்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜயிடமும் தெரிவித்தகாக கூறியுள்ளார்.

“ராஜினாமா எம்எல்ஏக்களை சேர்ப்பது தவெக-வின் நற்பெயரைக் கெடுக்கும்”.. எச்சரித்த திருமாவளவன்!!

108 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற மக்கள் அளித்த தீர்ப்பை தவெக மதிக்க வேண்டும். "பதவியை ராஜினாமா செய்த அடுத்த 10 நிமிடங்களிலேயே அவர்களை ஆளும் கட்சியான தவெக தன்னுடன் இணைத்துக் கொள்வது ஒரு அப்பட்டமான மோசடி. இது வெறும் மோசடி மட்டுமல்ல, ஒரு ஜனநாயகப் படுகொலை என்று அன்புமணி விமர்சனம்.

“திமுகவினரின் ஆதங்கத்தில் நியாயம் உள்ளது”.. விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

தற்போதைய அரசியல் சூழலில் விசிக தோழர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று கேட்டுக்கொண்ட திருமாவளவன், பின்வரும் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆ. ராசா அவர்களை எதிர்த்து விசிகவினர் யாரும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கக் கூடாது. திமுகவுக்கு எதிராக எவ்விதமான தேவையற்ற விமர்சனங்களையோ அல்லது போராட்டங்களையோ விசிகவினர் நடத்தக் கூடாது.

தவெக ஆட்சி கவிழ்வதற்கு இடம் தர மாட்டோம்.. திருமாவளவன் உறுதி..!

கோவையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது குறித்து பேசிய அவர், “இது அரசியல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எந்த சூழ்நிலையிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு இடம் தர மாட்டோம். அந்த நம்பிக்கையோடு தவெக ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும். அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என்று தேர்தலுக்கு முன்பே கணித்திருந்தேன்” என்றார்.

இதனை ஏற்க முடியாது – தவெகவிற்கு திருமாவளவன் கண்டனம்

அதிமுக எம்எல்ஏகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வரும் நிலையில் இதனை ஏற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தவெக ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.. வி.சி.கவில் இருந்து பனையூர் பாபு விலகல்..

கொள்கையிலும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாத தலைமையின் கீழ் இனி பயணிக்க முடியாது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன்” என கனத்த இதயத்தோடு செய்யூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

தவெக போட்ட “பவர் ஷேரிங்” பிள்ளையார் சூழி.. தமிழக அரசியலில் கட்டாயமாகிறதா கூட்டணி ஆட்சி முறை!

Tamilnadu Coalition Govt And Power Sharing: தமிழகத்தில் தவெக ஆட்சியில் கூட்டணி ஆட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறை தொடரும் என்றே தமிழக அரசியில் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

பதவி ஆசையா?.. தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன்?.. திருமாவளவன் பரபர விளக்கம்!!

Thirumavalavan Explanation: தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் முடிவுகள் வந்த கையோடு காங்கிரஸ் எடுத்த முடிவைத் தடுக்கும் வலிமையோ, இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்தும் வலிமையோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிலைப்பாட்டில் தலையிடும் அதிகாரமோ எனக்கு இல்லை.

கோட்டையை ஆளும் தவெக கூட்டணி அரசு.. “அமைச்சர்கள் மற்றும் இலாகாக்கள்” முழு விவரம்!

Tamil Nadu Ministers And Portfolios Details : தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள 35 அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலாகாக்கள் குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

“அமைச்சரவையில் பங்கேற்பது விசிகவின் தனிப்பட்ட உரிமை”.. கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிரடி!!

Communist about cabinet expansion: மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிக்கவும், மற்றொரு தேர்தல் திணிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆளுநர் அதிகாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்தச் சரியான அரசியல் முடிவை எடுத்தோம். இந்த ஆதரவில் எவ்வித மாற்றமும் இல்லை" என்றனர்.

தவெக அமைச்சரவையில் பங்கேற்குமா விசிக?.. திருமாவளவன் சொல்வது என்ன?

புதிய அரசு பதவியேற்ற பிறகு, வேளச்சேரிக்கு வந்திருந்த தவெக தலைவர் விஜய், எங்களது கட்சி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தனது தனிப்பட்ட விருப்பத்தை என்னிடம் வெளிப்படுத்தினார். 'திருமாவளவன் எங்கே இருந்தாலும் அவரது உள்ளம் இங்குதான் இருக்கும்' என்று முன்பே புத்தக வெளியீட்டு விழாவிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.